திருமாளிகைத் தேவர்
அருளிச் செய்த
திருவிசைப்பா
`திரு இசைப்பா` என்பது, `கடவுட்டன்மை பொருந்திய இசைப் பாட்டுகள்` எனப் பொருள் தரும். தேவாரத் திருப்பதிகங்கட்குப் பின்னர் அவைபோல அருளாசிரியர் சிலரால் இசைத் தமிழாக அருளிச்செய்யப்பட்ட திருப்பதிகங்களே `திரு விசைப்பா` எனப் பெயர்பெற்றன. எனினும், தேவாரத்தில் உள்ளதுபோல இவற்றுள் தாளத்தோடு அமைந்த திருப்பதிகங்கள் மிகுதியாக இல்லாமல், பண் மட்டில் அமைந்த திருப்பதிகங்களே மிகுதியாக உள்ளன. திருவிசைப்பாக்களில் முன்னிற்பவை, திருமாளிகைத்தேவர் அருளிச் செய்த திருவிசைப்பாக்கள்.