दानकर्ता दान कीजिए
10. போற்றிப்பஃறொடை
001 पः¤ऱॊडै वॆण्बा
 
इस मन्दिर का चलचित्र                                                                                                                   बंद करो / खोलो

 

Get Flash to see this player.


 
काणॊलित् तॊहुप्पै अऩ्बळिप्पाहत् तन्दवर्गळ्
इराम्चि नाट्टुबुऱप् पाडल् आय्वु मैयम्,
५१/२३, पाण्डिय वेळाळर् तॆरु, मदुरै ६२५ ००१.
0425 2333535, 5370535.
तेवारत् तलङ्गळुक्कु इक् काणॊलिक् काट्चिहळ् कुऱुन्दट्टाह विऱ्पऩैक्कु उण्डु.


 
पद्य : 1 2
पद्य संख्या : 1

பூமன்னு நான்முகத்தோன் புத்தேளிர் ஆங்கவர்கோன்
மாமன்னு சோதி மணிமார்பன் - நாமன்னும்
வேதம்வே தாந்தம் விளக்கஞ்செய் விந்துவுடன்
நாதம்நா தாந்தம் நடுவேதம் - போதத்தால்
ஆமளவும் தேட அளவிறந்த அப்பாலைச்
சேம ஒளிஎவருந் தேறும்வகை - மாமணிசூழ்
மன்றுள் நிறைந்து பிறவி வழக்கறுக்க
நின்ற நிருத்த நிலைபோற்றி - குன்றாத
பல்லுயிர்வெவ் வேறு படைத்தும் அவைகாத்தும் 5
எல்லை இளைப்பொழிய விட்டுவைத்துந் - தொல்லையுறும்
அந்தம் அடிநடுவென் றெண்ண அளவிறந்து
வந்த பெரிய வழிபோற்றி - முந்துற்ற
நெல்லுக் குமிதவிடு நீடுசெம்பிற் காளிதமுந்
தொல்லைக் கடல்தோன்றத் தோன்றவரும் - எல்லாம்
ஒருபுடைய யொப்பாய்த்தான் உள்ளவா றுண்டாய்
அருவமாய் எவ்வுயிரும் ஆர்த்தே - உருவுடைய
மாமணியை உள்ளடக்கும் மாநாகம் வன்னிதனைத்
தான்அடக்குங் காட்டத் தகுதியும்போல் - ஞானத்தின்
கண்ணை மறைத்த கடியதொழி லாணவத்தால் 10
எண்ணுஞ் செயல்மாண்ட எவ்வுயிர்க்கும் - உள்நாடிக்
கட்புலனாற் காணார்தம் கைக்கொடுத்த கோலேபோற்
பொற்புடைய மாயைப் புணர்ப்பின்கண் - முற்பால்
தனுகரண மும்புவன முந்தந் தவற்றால்
மனமுதலால் வந்தவிகா ரத்தால் - வினையிரண்டுங்
காட்டி அதனாற் பிறப்பாக்கிக் கைக்கொண்டும்
மீட்டறிவு காட்டும் வினைபோற்றி - நாட்டுகின்ற
எப்பிறப்பும் முற்செய் இருவினையால் நிச்சயித்துப்
பொற்புடைய தந்தைதாய் போகத்துட் - கர்ப்பமாய்ப்
புல்லிற் பனிபோற் புகுந்திவலைக் குட்படுங்கால் 15
எல்லைப் படாஉதரத் தீண்டியதீப் - பல்வகையால்
அங்கே கிடந்த அநாதியுயிர் தம்பசியால்
எங்கேனு மாக எடுக்குமென - வெங்கும்பிக்
காயக் கருக்குழியிற் காத்திருந்துங் காமியத்துக்
கேயக்கை கால்முதலாய் எவ்வுறுப்பும் - ஆசறவே
செய்து திருத்திப்பின் பியோகிருத்தி முன்புக்க
வையவழி யேகொண் டணைகின்ற - பொய்யாத
வல்லபமே போற்றியம் மாயக்கால் தான்மறைப்ப
நல்ல அறிவொழிந்து நன்குதீ - தொல்லையுறா
அக்காலந் தன்னில் பசியையறி வித்தழுவித்(து) 20
உக்காவி சோரத்தாய் உள்நடுங்கி - மிக்கோங்குஞ்
சிந்தை உருக முலையுருகுந் தீஞ்சுவைப்பால்
வந்துமடுப் பக்கண்டு வாழ்ந்திருப்பப் - பந்தித்த
பாசப் பெருங்கயிற்றாற் பல்லுயிரும் பாலிக்க
நேசத்தை வைத்த நெறிபோற்றி - ஆசற்ற
பாளைப் பசும்பதத்தும் பாலனாம் அப்பதத்தும்
நாளுக்கு நாட்சகல ஞானத்து - மூள்வித்துக்
கொண்டாள ஆளக் கருவிகொடுத் தொக்கநின்று
பண்டாரி யான படிபோற்றி - தண்டாத
புன்புலால் போர்த்த புழுக்குரம்பை மாமனையில் 25
அன்புசேர் கின்றனகட் டைந்தாக்கி - முன்புள்ள
உண்மை நிலைமை ஒருகால் அகலாது
திண்மை மலத்தாற் சிறையாக்கிக் - கண்மறைத்து
மூலஅருங் கட்டில்உயிர் மூடமாய் உட்கிடப்பக்
கால நியதி யதுகாட்டி - மேலோங்கு
முந்திவியன் கட்டில்உயிர் சேர்த்துக் கலைவித்தை
யந்த அராக மவைமுன்பு - தந்த
தொழிலறி விச்சை துணையாக மானின்
எழிலுடைய முக்குணமும் எய்தி - மருளோடு
மன்னும் இதயத்திற் சித்தத்தாற் கண்டபொருள் 30
இன்ன பொருளென் றியம்பவொண்ணா - அந்நிலைபோய்க்
கண்டவியன் கட்டிற் கருவிகள்ஈ ரைந்தொழியக்
கொண்டுநிய மித்தற்றை நாட்கொடுப்பப் - பண்டை
இருவினையால் முன்புள்ள இன்பத்துன் பங்கள்
மருவும்வகை அங்கே மருவி - உருவுடன்நின்(று)
ஓங்கு நுதலாய ஓலக்க மண்டபத்திற்
போங்கருவி யெல்லாம் புகுந்தீண்டி - நீங்காத
முன்னை மலத்திருளுள் மூடா வகையகத்துட்
டுன்னும்இருள் நீக்குஞ் சுடரேபோல் - அந்நிலையே
சூக்கஞ் சுடருருவிற் பெய்து தொழிற்குரிய 35
ராக்கிப் பணித்த அறம்போற்றி - வேட்கைமிகும்
உண்டிப் பொருட்டால் ஒருகால் அவியாது
மண்டிஎரி யும்பெருந்தீ மாற்றுதற்குத் - திண்டிறல்சேர்
வல்லார்கள் வல்ல வகையாற் றொழில்புரித
லெல்லாம் உடனே ஒருங்கிசைந்து - சொல்காலை
முட்டாமற் செய்வினைக்கு முற்செய்வினைக் குஞ்செலவு
பட்டோலை தீட்டும் படிபோற்றி - நட்டோங்கும்
இந்நிலைமை மானுடருக் கேயன்றி எண்ணிலா
மன்னுயிர்க்கும் இந்த வழக்கேயாய் - முன்னுடைய
நாள்நாள் வரையில் உடல்பிரித்து நல்வினைக்கண் 40
வாணாளின் மாலாய் அயனாகி - நீள்நாகர்
வானாடர் கோமுதலாய் வந்த பெரும்பதத்து
நானா விதத்தால் நலம்பெறுநாள் - தான்மாள
வெற்றிக் கடுந்தூதர் வேகத் துடன்வந்து
பற்றித்தம் வெங்குருவின் பாற்காட்ட - இற்றைக்கும்
இல்லையோ பாவி பிறவாமை என்றெடுத்து
நல்லதோர் இன்சொல் நடுவாகச் - சொல்லிஇவர்
செய்திக்குத் தக்க செயலுறுத்து வீர்என்று
வெய்துற் றுரைக்க விடைகொண்டு - மையல்தருஞ்
செக்கி னிடைத்திரித்துந் தீவாயி லிட்டெரித்துந் 45
தக்கநெருப் புத்தூண் தழுவுவித்தும் - மிக்கோங்கு
நாராசங் காய்ச்சிச் செவிமடுத்தும் நாஅரிந்தும்
ஈராஉன் ஊனைத்தின் என்றடித்தும் - பேராமல்
அங்காழ் நரகத் தழுத்துவித்தும் பின்னுந்தம்
வெங்கோபம் மாறாத வேட்கையராய் - இங்கொருநாள்
எண்ணிமுதற் காணாத இன்னற் கடுநரகம்
பன்னெடுநாட் செல்லும் பணிகொண்டு - முன்நாடிக்
கண்டு கடன்கழித்தல் காரியமாம் என்றெண்ணிக்
கொண்டுவரு நோயின் குறிப்பறிவார் - மண்டெரியிற்
காய்ச்சிச் சுடவறுக்கக் கண்ணுரிக்க நன்னிதியம் 50
ஈய்த்துத்தாய் தந்தைதமர் இன்புறுதல் - வாய்த்தநெறி
ஓடியதே ரின்கீழ் உயிர்போன கன்றாலே
நீடுபெரும் பாவம் இன்றே நீங்குமென - நாடித்தன்
மைந்தனையும் ஊர்ந்தோன் வழக்கே வழக்காக
நஞ்சனைய சிந்தை நமன்தூதர் - வெஞ்சினத்தால்
அல்ல லுறுத்தும் அருநரகங் கண்டுநிற்க
வல்ல கருணை மறம்போற்றி - பல்லுயிர்க்கும்
இன்ன வகையால் இருவினைக்கண் நின்றருத்தி
முன்னைமுத லென்ன முதலில்லோன் - நல்வினைக்கண்
எல்லா உலகும் எடுப்புண் டெடுப்புண்டு 55
செல்காலம் பின்நரகஞ் சேராமே - நல்லநெறி
எய்துவதோர் காலம்தன் அன்பரைக்கண் டின்புறுதல்
உய்யும் நெறிசிறிதே உண்டாக்கிப் - பையவே
மட்டாய் மலராய் வருநாளில் முன்னைநாள்
மொட்டாய் உருவாம் முறைபோலக் - கிட்டியதோர்
நல்ல பிறப்பிற் பிறப்பித்து நாடும்வினை
எல்லை யிரண்டும் இடையொப்பிற் - பல்பிறவி
அத்தமதி லன்றோ அளவென்று பார்த்திருந்து
சத்தி பதிக்கும் தரம்போற்றி - முத்திதரு
நன்னெறிவிஞ் ஞானகலர் நாடுமலம் ஒன்றினையும் 60
அந்நிலையே உள்நின் றறுத்தருளிப் - பின்அன்பு
மேவா விளங்கும் பிரளயா கலருக்குத்
தேவாய் மலகன்மந் தீர்த்தருளிப் - பூவலயந்
தன்னின்று நீங்காச் சகலர்க் கவர்போல
முன்நின்று மும்மலந்தீர்த் தாட்கொள்கை - அன்னவனுக்
காதிகுண மாதலினால் ஆடுந் திருத்தொழிலுஞ்
சோதி மணிமிடற்றுச் சுந்தரமும் - பாதியாம்
பச்சை யிடமும் பவளத் திருச்சடைமேல்
வைச்ச நதியும் மதிக்கொழுந்தும் அச்சமற
ஆடும் அரவும் அழகார் திருநுதல்மேல் 65
நீடுருவ வன்னி நெடுங்கண்ணுங் - கேடிலயங்
கூட்டுந் தமருகமுங் கோல எரியகலும்
பூட்டரவக் கச்சும் புலியதளும் - வீட்டின்ப
வெள்ளத் தழுத்தி விடுந்தாளி னும்அடியார்
உள்ளத்தி னும்பிரியா ஒண்சிலம்பும் - கள்ளவினை
வென்று பிறப்பறுக்கச் சாத்தியவீ ரக்கழலும்
ஒன்றும்உருத் தோன்றாமல் உள்ளடக்கி - என்றும்
இறவாத இன்பத் தெமைஇருத்த வேண்டிப்
பிறவா இன்பத் தெமைஇருத்த வேண்டிப்
பிறவா முதல்வன் பிறந்து - நறவாருந்
தாருலா வும்புயத்துச் சம்பந்த நாதனென்று 70
பேரிலா நாதன்ஒரு பேர்புனைந்து - பாரோர்தம்
உண்டி உறக்கம் பயம்இன்பம் ஒத்தொழுகிக்
கொண்டு மகிழ்ந்த குணம்போற்றி - மிண்டாய
ஆறு சமயப் பொருளும்அறி வித்தவற்றிற்
பேறின்மை எங்களுக்கே பேறாக்கித் - தேறாத
சித்தந் தெளியத் திருமேனி கொண்டுவரும்
அத்தகைமை தானே அமையாமல் - வித்தகமாஞ்
சைவ நெறியிற் சமய முதலாக
எய்தும் அபிடேகம் எய்துவித்துச் - செய்யதிருக்
கண்ணருளால் நோக்கிக் கடியபிறப் பாற்பட்ட 75
புண்ணும் இருவினையும் போய்அகல - வண்ணமலர்க்
கைத்தலத்தை வைத்தருளிக் கல்லாய நெஞ்சுருக்கி
மெய்த்தகைமை யெல்லாம் விரித்தோதி - ஒத்தொழுகும்
சேண்ஆர் இருள்வடிவும் செங்கதிரோன் பால்நிற்பக்
காணா தொழியும் கணக்கேபோல் - ஆணவத்தின்
ஆதி குறையாமல் என்பால் அணுகாமல்
நீதி நிறுத்தும் நிலைபோற்றி - மேதக்கோர்
செய்யுஞ் சரியை திகழ்கிரியா யோகத்தால்
எய்துஞ்சீர் முத்திபதம் எய்துவித்து - மெய்யன்பாற்
காணத் தகுவார்கள் கண்டால் தமைப்பின்பு 80
நாணத் தகும்ஞான நன்னெறியை - வீணே
எனக்குத் தரவேண்டி எல்லாப் பொருட்கும்
மனக்கும் மலரயன்மால் வானோர் - நினைப்பினுக்குந்
தூரம்போ லேயணிய சுந்தரத்தாள் என்தலைமேல்
ஆரும் படிதந் தருள்செய்த - பேராளன்
தந்தபொருள் ஏதென்னில் தான்வேறு நான்வேறாய்
வந்து புணரா வழக்காக்கி - முந்திஎன்றன்
உள்ளம்என்றும் நீங்கா தொளித்திருந்து தோன்றிநிற்குங்
கள்ளம்இன்று காட்டும் கழல்போற்றி - வள்ளமையால்
தன்னைத் தெரிவித்துத் தன்றாளி னுட்கிடந்த 85
என்னைத் தெரிவித்த எல்லையின்கண் - மின்ஆரும்
வண்ணம் உருவம் மருவுங் குணமயக்கம்
எண்ணுங் கலைகாலம் எப்பொருளும் - முன்னம்எனக்(கு)
இல்லாமை காட்டிப்பின் பெய்தியவா காட்டிஇனிச்
செல்லாமை காட்டுஞ் செயல்போற்றி - எல்லாம்போய்த்
தம்மைத் தெளிந்தாராய்த் தாமே பொருளாகி
எம்மைப் புறங்கூறி இன்புற்றுச் - செம்மை
அவிகாரம் பேசும் அகம்பிரமக் காரர்
வெளியாம் இருளில் விடாதே - ஒளியாய்நீ
நின்ற நிலையே நிகழ்த்தி ஒருபொருள்வே 90
றின்றி யமையாமை எடுத்தோதி - ஒன்றாகச்
சாதித்துத் தம்மைச் சிவமாக்கி இப்பிறவிப்
பேதந் தனில்இன்பப் பேதமுறாப் - பாதகரோ(டு)
ஏகமாய்ப் போகாமல் எவ்விடத்துங் காட்சிதந்து
போகமாம் பொற்றாளி னுட்புணர்த்தி - ஆதியுடன்
நிற்க அழியா நிலைஇதுவே என்றருளி
ஒக்க வியாபகந்தன் னுட்காட்டி - மிக்கோங்கும்
ஆநந்த மாக்கடலில் ஆரா அமுதளித்துத்
தான்வந்து செய்யுந் தகுதியினால் - ஊன்உயிர்தான்
முன்கண்ட காலத்தும் நீங்காத முன்னோனை 95
என்கொண்டு போற்றிசைப்பேன் யான்.

पूमऩ्ऩु नाऩ्मुहत्तोऩ् पुत्तेळिर् आङ्गवर्गोऩ्
मामऩ्ऩु सोदि मणिमार्बऩ् - नामऩ्ऩुम्
वेदम्वे तान्दम् विळक्कञ्जॆय् विन्दुवुडऩ्
नादम्ना तान्दम् नडुवेदम् - पोदत्ताल्
आमळवुम् तेड अळविऱन्द अप्पालैच्
सेम ऒळिऎवरुन् देऱुम्वहै - मामणिसूऴ्
मण्ड्रुळ् निऱैन्दु पिऱवि वऴक्कऱुक्क
निण्ड्र निरुत्त निलैबोट्रि - कुण्ड्राद
पल्लुयिर्वॆव् वेऱु पडैत्तुम् अवैहात्तुम् ५
ऎल्लै इळैप्पॊऴिय विट्टुवैत्तुन् - तॊल्लैयुऱुम्
अन्दम् अडिनडुवॆऩ् ऱॆण्ण अळविऱन्दु
वन्द पॆरिय वऴिबोट्रि - मुन्दुट्र
नॆल्लुक् कुमिदविडु नीडुसॆम्बिऱ् काळिदमुन्
तॊल्लैक् कडल्दोण्ड्रत् तोण्ड्रवरुम् - ऎल्लाम्
ऒरुबुडैय यॊप्पाय्त्ताऩ् उळ्ळवा ऱुण्डाय्
अरुवमाय् ऎव्वुयिरुम् आर्त्ते - उरुवुडैय
मामणियै उळ्ळडक्कुम् मानाहम् वऩ्ऩिदऩैत्
ताऩ्अडक्कुङ् काट्टत् तहुदियुम्बोल् - ञाऩत्तिऩ्
कण्णै मऱैत्त कडियदॊऴि लाणवत्ताल् १०
ऎण्णुञ् सॆयल्माण्ड ऎव्वुयिर्क्कुम् - उळ्नाडिक्
कट्पुलऩाऱ् काणार्दम् कैक्कॊडुत्त कोलेबोऱ्
पॊऱ्पुडैय मायैप् पुणर्प्पिऩ्कण् - मुऱ्पाल्
तऩुहरण मुम्बुवऩ मुन्दन् दवट्राल्
मऩमुदलाल् वन्दविहा रत्ताल् - विऩैयिरण्डुङ्
काट्टि अदऩाऱ् पिऱप्पाक्किक् कैक्कॊण्डुम्
मीट्टऱिवु काट्टुम् विऩैबोट्रि - नाट्टुहिण्ड्र
ऎप्पिऱप्पुम् मुऱ्चॆय् इरुविऩैयाल् निच्चयित्तुप्
पॊऱ्पुडैय तन्दैदाय् पोहत्तुट् - कर्प्पमाय्प्
पुल्लिऱ् पऩिबोऱ् पुहुन्दिवलैक् कुट्पडुङ्गाल् १५
ऎल्लैप् पडाउदरत् तीण्डियदीप् - पल्वहैयाल्
अङ्गे किडन्द अनादियुयिर् तम्बसियाल्
ऎङ्गेऩु माह ऎडुक्कुमॆऩ - वॆङ्गुम्बिक्
कायक् करुक्कुऴियिऱ् कात्तिरुन्दुङ् कामियत्तुक्
केयक्कै काल्मुदलाय् ऎव्वुऱुप्पुम् - आसऱवे
सॆय्दु तिरुत्तिप्पिऩ् पियोहिरुत्ति मुऩ्बुक्क
वैयवऴि येहॊण् टणैहिण्ड्र - पॊय्याद
वल्लबमे पोट्रियम् मायक्काल् ताऩ्मऱैप्प
नल्ल अऱिवॊऴिन्दु नऩ्कुदी - तॊल्लैयुऱा
अक्कालन् दऩ्ऩिल् पसियैयऱि वित्तऴुवित्(तु) २०
उक्कावि सोरत्ताय् उळ्नडुङ्गि - मिक्कोङ्गुञ्
सिन्दै उरुह मुलैयुरुहुन् दीञ्जुवैप्पाल्
वन्दुमडुप् पक्कण्डु वाऴ्न्दिरुप्पप् - पन्दित्त
पासप् पॆरुङ्गयिट्राऱ् पल्लुयिरुम् पालिक्क
नेसत्तै वैत्त नॆऱिबोट्रि - आसट्र
पाळैप् पसुम्बदत्तुम् पालऩाम् अप्पदत्तुम्
नाळुक्कु नाट्चहल ञाऩत्तु - मूळ्वित्तुक्
कॊण्डाळ आळक् करुविहॊडुत् तॊक्कनिण्ड्रु
पण्डारि याऩ पडिबोट्रि - तण्डाद
पुऩ्बुलाल् पोर्त्त पुऴुक्कुरम्बै मामऩैयिल् २५
अऩ्बुसेर् किण्ड्रऩहट् टैन्दाक्कि - मुऩ्बुळ्ळ
उण्मै निलैमै ऒरुहाल् अहलादु
तिण्मै मलत्ताऱ् सिऱैयाक्किक् - कण्मऱैत्तु
मूलअरुङ् कट्टिल्उयिर् मूडमाय् उट्किडप्पक्
काल नियदि यदुहाट्टि - मेलोङ्गु
मुन्दिवियऩ् कट्टिल्उयिर् सेर्त्तुक् कलैवित्तै
यन्द अराह मवैमुऩ्बु - तन्द
तॊऴिलऱि विच्चै तुणैयाह माऩिऩ्
ऎऴिलुडैय मुक्कुणमुम् ऎय्दि - मरुळोडु
मऩ्ऩुम् इदयत्तिऱ् सित्तत्ताऱ् कण्डबॊरुळ् ३०
इऩ्ऩ पॊरुळॆऩ् ऱियम्बवॊण्णा - अन्निलैबोय्क्
कण्डवियऩ् कट्टिऱ् करुविहळ्ई रैन्दॊऴियक्
कॊण्डुनिय मित्तट्रै नाट्कॊडुप्पप् - पण्डै
इरुविऩैयाल् मुऩ्बुळ्ळ इऩ्बत्तुऩ् पङ्गळ्
मरुवुम्वहै अङ्गे मरुवि - उरुवुडऩ्निऩ्(ऱु)
ओङ्गु नुदलाय ओलक्क मण्डबत्तिऱ्
पोङ्गरुवि यॆल्लाम् पुहुन्दीण्डि - नीङ्गाद
मुऩ्ऩै मलत्तिरुळुळ् मूडा वहैयहत्तुट्
टुऩ्ऩुम्इरुळ् नीक्कुञ् सुडरेबोल् - अन्निलैये
सूक्कञ् सुडरुरुविऱ् पॆय्दु तॊऴिऱ्कुरिय ३५
राक्किप् पणित्त अऱम्बोट्रि - वेट्कैमिहुम्
उण्डिप् पॊरुट्टाल् ऒरुहाल् अवियादु
मण्डिऎरि युम्बॆरुन्दी माट्रुदऱ्कुत् - तिण्डिऱल्सेर्
वल्लार्गळ् वल्ल वहैयाऱ् ऱॊऴिल्बुरिद
लॆल्लाम् उडऩे ऒरुङ्गिसैन्दु - सॊल्गालै
मुट्टामऱ् सॆय्विऩैक्कु मुऱ्चॆय्विऩैक् कुञ्जॆलवु
पट्टोलै तीट्टुम् पडिबोट्रि - नट्टोङ्गुम्
इन्निलैमै माऩुडरुक् केयण्ड्रि ऎण्णिला
मऩ्ऩुयिर्क्कुम् इन्द वऴक्केयाय् - मुऩ्ऩुडैय
नाळ्नाळ् वरैयिल् उडल्बिरित्तु नल्विऩैक्कण् ४०
वाणाळिऩ् मालाय् अयऩाहि - नीळ्नाहर्
वाऩाडर् कोमुदलाय् वन्द पॆरुम्बदत्तु
नाऩा विदत्ताल् नलम्बॆऱुनाळ् - ताऩ्माळ
वॆट्रिक् कडुन्दूदर् वेहत् तुडऩ्वन्दु
पट्रित्तम् वॆङ्गुरुविऩ् पाऱ्काट्ट - इट्रैक्कुम्
इल्लैयो पावि पिऱवामै ऎण्ड्रॆडुत्तु
नल्लदोर् इऩ्चॊल् नडुवाहच् - सॊल्लिइवर्
सॆय्दिक्कुत् तक्क सॆयलुऱुत्तु वीर्ऎण्ड्रु
वॆय्दुऱ् ऱुरैक्क विडैहॊण्डु - मैयल्दरुञ्
सॆक्कि ऩिडैत्तिरित्तुन् दीवायि लिट्टॆरित्तुन् ४५
तक्कनॆरुप् पुत्तूण् तऴुवुवित्तुम् - मिक्कोङ्गु
नारासङ् काय्स्चिच् चॆविमडुत्तुम् नाअरिन्दुम्
ईराउऩ् ऊऩैत्तिऩ् ऎण्ड्रडित्तुम् - पेरामल्
अङ्गाऴ् नरहत् तऴुत्तुवित्तुम् पिऩ्ऩुन्दम्
वॆङ्गोबम् माऱाद वेट्कैयराय् - इङ्गॊरुनाळ्
ऎण्णिमुदऱ् काणाद इऩ्ऩऱ् कडुनरहम्
पऩ्ऩॆडुनाट् सॆल्लुम् पणिहॊण्डु - मुऩ्नाडिक्
कण्डु कडऩ्कऴित्तल् कारियमाम् ऎण्ड्रॆण्णिक्
कॊण्डुवरु नोयिऩ् कुऱिप्पऱिवार् - मण्डॆरियिऱ्
काय्स्चिच् चुडवऱुक्कक् कण्णुरिक्क नऩ्ऩिदियम् ५०
ईय्त्तुत्ताय् तन्दैदमर् इऩ्बुऱुदल् - वाय्त्तनॆऱि
ओडियदे रिऩ्कीऴ् उयिर्बोऩ कण्ड्राले
नीडुबॆरुम् पावम् इण्ड्रे नीङ्गुमॆऩ - नाडित्तऩ्
मैन्दऩैयुम् ऊर्न्दोऩ् वऴक्के वऴक्काह
नञ्जऩैय सिन्दै नमऩ्तूदर् - वॆञ्जिऩत्ताल्
अल्ल लुऱुत्तुम् अरुनरहङ् कण्डुनिऱ्क
वल्ल करुणै मऱम्बोट्रि - पल्लुयिर्क्कुम्
इऩ्ऩ वहैयाल् इरुविऩैक्कण् निण्ड्ररुत्ति
मुऩ्ऩैमुद लॆऩ्ऩ मुदलिल्लोऩ् - नल्विऩैक्कण्
ऎल्ला उलहुम् ऎडुप्पुण् टॆडुप्पुण्डु ५५
सॆल्गालम् पिऩ्नरहञ् सेरामे - नल्लनॆऱि
ऎय्दुवदोर् कालम्तऩ् अऩ्बरैक्कण् टिऩ्बुऱुदल्
उय्युम् नॆऱिसिऱिदे उण्डाक्किप् - पैयवे
मट्टाय् मलराय् वरुनाळिल् मुऩ्ऩैनाळ्
मॊट्टाय् उरुवाम् मुऱैबोलक् - किट्टियदोर्
नल्ल पिऱप्पिऱ् पिऱप्पित्तु नाडुम्विऩै
ऎल्लै यिरण्डुम् इडैयॊप्पिऱ् - पल्बिऱवि
अत्तमदि लण्ड्रो अळवॆण्ड्रु पार्त्तिरुन्दु
सत्ति पदिक्कुम् तरम्बोट्रि - मुत्तिदरु
नऩ्ऩॆऱिविञ् ञाऩहलर् नाडुमलम् ऒण्ड्रिऩैयुम् ६०
अन्निलैये उळ्निऩ् ऱऱुत्तरुळिप् - पिऩ्अऩ्बु
मेवा विळङ्गुम् पिरळया कलरुक्कुत्
तेवाय् मलहऩ्मन् दीर्त्तरुळिप् - पूवलयन्
तऩ्ऩिण्ड्रु नीङ्गाच् चहलर्क् कवर्बोल
मुऩ्निण्ड्रु मुम्मलन्दीर्त् ताट्कॊळ्गै - अऩ्ऩवऩुक्
कादिहुण मादलिऩाल् आडुन् दिरुत्तॊऴिलुञ्
सोदि मणिमिडट्रुच् चुन्दरमुम् - पादियाम्
पच्चै यिडमुम् पवळत् तिरुच्चडैमेल्
वैच्च नदियुम् मदिक्कॊऴुन्दुम् अच्चमऱ
आडुम् अरवुम् अऴहार् तिरुनुदल्मेल् ६५
नीडुरुव वऩ्ऩि नॆडुङ्गण्णुङ् - केडिलयङ्
कूट्टुन् दमरुहमुङ् कोल ऎरियहलुम्
पूट्टरवक् कच्चुम् पुलियदळुम् - वीट्टिऩ्ब
वॆळ्ळत् तऴुत्ति विडुन्दाळि ऩुम्अडियार्
उळ्ळत्ति ऩुम्बिरिया ऒण्सिलम्बुम् - कळ्ळविऩै
वॆण्ड्रु पिऱप्पऱुक्कच् चात्तियवी रक्कऴलुम्
ऒण्ड्रुम्उरुत् तोण्ड्रामल् उळ्ळडक्कि - ऎण्ड्रुम्
इऱवाद इऩ्बत् तॆमैइरुत्त वेण्डिप्
पिऱवा इऩ्बत् तॆमैइरुत्त वेण्डिप्
पिऱवा मुदल्वऩ् पिऱन्दु - नऱवारुन्
तारुला वुम्बुयत्तुच् चम्बन्द नादऩॆण्ड्रु ७०
पेरिला नादऩ्ऒरु पेर्बुऩैन्दु - पारोर्दम्
उण्डि उऱक्कम् पयम्इऩ्बम् ऒत्तॊऴुहिक्
कॊण्डु महिऴ्न्द कुणम्बोट्रि - मिण्डाय
आऱु समयप् पॊरुळुम्अऱि वित्तवट्रिऱ्
पेऱिऩ्मै ऎङ्गळुक्के पेऱाक्कित् - तेऱाद
सित्तन् दॆळियत् तिरुमेऩि कॊण्डुवरुम्
अत्तहैमै ताऩे अमैयामल् - वित्तहमाञ्
सैव नॆऱियिऱ् समय मुदलाह
ऎय्दुम् अबिडेहम् ऎय्दुवित्तुच् - सॆय्यदिरुक्
कण्णरुळाल् नोक्किक् कडियबिऱप् पाऱ्पट्ट ७५
पुण्णुम् इरुविऩैयुम् पोय्अहल - वण्णमलर्क्
कैत्तलत्तै वैत्तरुळिक् कल्लाय नॆञ्जुरुक्कि
मॆय्त्तहैमै यॆल्लाम् विरित्तोदि - ऒत्तॊऴुहुम्
सेण्आर् इरुळ्वडिवुम् सॆङ्गदिरोऩ् पाल्निऱ्पक्
काणा तॊऴियुम् कणक्केबोल् - आणवत्तिऩ्
आदि कुऱैयामल् ऎऩ्बाल् अणुहामल्
नीदि निऱुत्तुम् निलैबोट्रि - मेदक्कोर्
सॆय्युञ् सरियै तिहऴ्गिरिया योहत्ताल्
ऎय्दुञ्जीर् मुत्तिबदम् ऎय्दुवित्तु - मॆय्यऩ्बाऱ्
काणत् तहुवार्गळ् कण्डाल् तमैप्पिऩ्बु ८०
नाणत् तहुम्ञाऩ नऩ्ऩॆऱियै - वीणे
ऎऩक्कुत् तरवेण्डि ऎल्लाप् पॊरुट्कुम्
मऩक्कुम् मलरयऩ्माल् वाऩोर् - निऩैप्पिऩुक्कुन्
तूरम्बो लेयणिय सुन्दरत्ताळ् ऎऩ्तलैमेल्
आरुम् पडिदन् दरुळ्सॆय्द - पेराळऩ्
तन्दबॊरुळ् एदॆऩ्ऩिल् ताऩ्वेऱु नाऩ्वेऱाय्
वन्दु पुणरा वऴक्काक्कि - मुन्दिऎण्ड्रऩ्
उळ्ळम्ऎण्ड्रुम् नीङ्गा तॊळित्तिरुन्दु तोण्ड्रिनिऱ्कुङ्
कळ्ळम्इण्ड्रु काट्टुम् कऴल्बोट्रि - वळ्ळमैयाल्
तऩ्ऩैत् तॆरिवित्तुत् तण्ड्राळि ऩुट्किडन्द ८५
ऎऩ्ऩैत् तॆरिवित्त ऎल्लैयिऩ्कण् - मिऩ्आरुम्
वण्णम् उरुवम् मरुवुङ् कुणमयक्कम्
ऎण्णुङ् कलैहालम् ऎप्पॊरुळुम् - मुऩ्ऩम्ऎऩक्(कु)
इल्लामै काट्टिप्पिऩ् पॆय्दियवा काट्टिइऩिच्
सॆल्लामै काट्टुञ् सॆयल्बोट्रि - ऎल्लाम्बोय्त्
तम्मैत् तॆळिन्दाराय्त् तामे पॊरुळाहि
ऎम्मैप् पुऱङ्गूऱि इऩ्बुट्रुच् - सॆम्मै
अविहारम् पेसुम् अहम्बिरमक् कारर्
वॆळियाम् इरुळिल् विडादे - ऒळियाय्नी
निण्ड्र निलैये निहऴ्त्ति ऒरुबॊरुळ्वे ९०
ऱिण्ड्रि यमैयामै ऎडुत्तोदि - ऒण्ड्राहच्
सादित्तुत् तम्मैच् चिवमाक्कि इप्पिऱविप्
पेदन् दऩिल्इऩ्बप् पेदमुऱाप् - पादहरो(टु)
एहमाय्प् पोहामल् ऎव्विडत्तुङ् काट्चिदन्दु
पोहमाम् पॊट्राळि ऩुट्पुणर्त्ति - आदियुडऩ्
निऱ्क अऴिया निलैइदुवे ऎण्ड्ररुळि
ऒक्क वियाबहन्दऩ् ऩुट्काट्टि - मिक्कोङ्गुम्
आनन्द माक्कडलिल् आरा अमुदळित्तुत्
ताऩ्वन्दु सॆय्युन् दहुदियिऩाल् - ऊऩ्उयिर्दाऩ्
मुऩ्कण्ड कालत्तुम् नीङ्गाद मुऩ्ऩोऩै ९५
ऎऩ्कॊण्डु पोट्रिसैप्पेऩ् याऩ्.
 
इस मन्दिर का गीत                                                                                                                     बंद करो / खोलो

Get the Flash Player to see this player.

 
इस मन्दिर का चित्र                                                                                                                                   बंद करो / खोलो
   

अनुवाद:

Under construction. Contributions welcome.
சிற்பி