காட்டுப்பள்ளி (திருக்காட்டுப்பள்ளி)(கீழை)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு அகிலாண்டநாயகி உடனுறை ஆரணியசுந்தரர்


குளம்: அமிர்த தீர்த்தம்

பதிகம்: செய்யருகே -1 -5 திருஞானசம்பந்தர்

முகவரி: நாகப்பட்டினம் மாவட்டம், 609114
தொபே. 04364 256273

தலம்:
சோழநாட்டில் காவிரியின் வடகரையில் விளங்கும் 12ஆவது தேவாரத்தலம். நாகைமாவட்டம் சீகாழி வட்டத்தில் உள்ளது. பூம்புகாருக்கு வடமேற்கில் திருவெண்காட்டுக்கு மேற்கே 2 கி.மீ தூரத்தில் உள்ளது. திருவெண்காடுவரை பேருந்து வசதிஉள்ளது. விருத்திராசுரனைக் கொன்ற பழி நீங்கத் தேவேந்திரன் பூசித்துத் தேவலோக ஆட்சியை மீண்டும் பெற்றதலம். இதனை `இமையோர் பெருமான் நுண்ணறிவால் வழிபாடுசெய்யும்` என இத்தலப்பதிகம் நான்காம் பாடல் தெரிவிக்கின்றது. நண்டு பூசித்த விநாயகர் சந்நிதி இருக்கிறது. சுவாமி பெயர் ஆரணியசுந்தரர்; இறைவி பெயர் அகிலாண்டநாயகி. தீர்த்தம் காவிரி.

இத்தலத்தைப்பற்றிக் கல்வெட்டு ஒன்றும் இருப்பதாக அறியக் கூடவில்லை.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி