பண் :

பாடல் எண் : 1

மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற
கன்னம் பயில்பொழில் ஆல வாயின்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்

கொருமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்கும் சேரலன் காண்க
பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்
தன்போல் என்பால் அன்பன் தன்பாற்

காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.

பொழிப்புரை :

ஓலையைத் `திருமுகம்` என்றல் அதனை விடுத்தோரது உயர்வு பற்றி. பாசுரம் - மிகுத்துரை பாட்டு. மதி - சந்திரன். மலிதல் - மகிழ்தல். முதனிலைத் தொழிற்பெயர். இது மகிழ்ந்து தவழ்தலாகிய தன் காரணம் தோற்றி நின்றது. இனி `மலி மதி` என மொழிமாற்றி, `நிறைந்த திங்கள்` என உரைப்பினும் ஆம். ``மாடக் கூடல்`` என்பதற்குப் பொதுப் பொருள் கொள்ளாது, திருவிளையாடற் புராணத்தின் வழி, `நான்மாடக் கூடல்` எனப் பொருள் கொள்ளுதல் சிறப்பு. `கூடற் பதிமிசை நிலவு ஆலவாய்` என இயைக்க. மிசை, ஏழனுருபு. கூடல், தலப்பெயர். ஆலவாய், அத்தலத்தில் உள்ள கோயிலின் பெயர். `அருட்டுறை, பூங்கோயில்` என்பன போலச் சில தலங்களில் கோயிலுக்குத் தனிப்பெயர் இருத்தல் அறியத் தக்கது. `பால் நிறச் சிறகு, வரிச் சிறகு` எனத் தனித்தனி முடிக்க. பால் நிறம் - பாலினது நிறம் போலும் பால், அதன் நிறத்தை உணர்த்தலின் ஆகு பெயராய் திருமுகத்தில் எழுதப்பட்ட வரிவடிவங்களைக் குறித்தது. பருவம் - உரிய காலம்; கார் காலம். கொண்மூ - மேகம். படி - ஒப்பு. ஒருமையின் உரிமையின் - `உதவுதல் தனக்குக் கடன் என ஒருப்பட்ட மனத்தினாலே கொண்ட உரிமையினால்`. குரு - நிறம்; அழகு. மா மதி- பெரிய சந்திரன்; பூரணச் சந்திரன். `புரை குடை; குலவிய குடை` எனத் தனித் தனி இயைக்க. புரை - ஒத்த. குலவிய - விளங்குகின்ற. `குடைக் கீழ்ச் சேரலன்` எனவும், `உகைக்கும் சேரலன்` எனவும் தனித்தனிச் சென்று இயையும். செரு மா - போர்க்கு ஏற்ற நடைகளைக் கற்ற குதிரை. உகைத்தல் - ஏறிச் செல்லுதல். பண்பால் - யாழ் இசைக்கும் தன்மை நிறைந்த நிலைமையினால். தன் போல் - தன்னை (அந்தச் சேரலனை)ப் போலவே, போந்தனன் -தன்பால் புகுந்தனன். மாண் பொருள் - மிகுந்த பொருள். வர விடுப்பது - மீண்டு வர விடை கொடுத்து அனுப்புதல்.

குறிப்புரை :

`கூடற் பதிமிசை நிலவு ஆலவாயில் மன்னிய சிவன் யான் மொழிதரும் மாற்றம் சேரலன் காண்க, அம்மாற்ற மாவன, - பாணபத்திரன் தன்னைப் போலவே என்பால் அன்பன் என்பதும், அவன் தன்னைக் காணுதலைக் கருதித் தன்பாற் புகுந்தனன் என்பதும், அவனுக்கு மிகுந்த பொருளைக் கொடுத்து மீண்டு வரும்படி விடை கொடுத்து அனுப்புதல் என்பதுமாகும் என வினை முடிக்க.
முதல் அடி தலச் சிறப்புக் கூறியது. அடுத்த இரண்டடிகள் அத் தலத்தில் உள்ள கோயிற் சிறப்புக் கூறியன. ஐந்து, ஆறாம் அடிகள் சேரலனது கொடைச் சிறப்புக் கூறியன. ஏழு, எட்டாம் அடிகள் அவனது வெற்றிச் சிறப்புக் கூறியன. ஒன்பது, பத்தாம் அடிகள் பாண பத்திரனது அன்புடைமை கூறியன. இறுதி இரண்டடிகள் ஆணை கூறியன.
`இப் பாசுரத்தில் குறிக்கப்பட்ட சேரலன் யாவன்` என்னும் ஆராய்ச்சியில் கருத்து வேறுபாடுகள் உள. பரஞ்சோதி முனிவர் தமது திருவிளையாடற் புராணத்துள் இப் பாசுரத்திற் குறிக்கப்பட்ட பாண பத்திரரை வரகுண பாண்டியன் காலத்தவராகக் கூறினார். `சுந்தரர் காலத்துப் பாண்டியன் வரகுணன்` என்பதற்கு நூற்சான்றோ, வரலாற்றுச் சான்றோ எதுவும் இல்லை.
பரஞ்சோதி முனிவர்க்கு ஏறக்குறைய நான்கு நூற்றாண்டு கட்கு முற்பட்டவராகிய சேக்கிழார், `இப்பாசுரத்தில் குறிக்கப் பட்ட சேரலன் சேரமான் பெருமாள் நாயனாரே` எனத் திட்டமாக வரையறுத்து, இத்திருமுகப் பாசுரத்தைக் கண்டு, சேரர் பெருமான் பாண பத்திரரைப் பெரும் பத்தியோடும், சிறப்போடும் வரவேற்று வழிபட்டுப் பெரும் பொருள் கொடுத்துப் பாசுரத்தில் - வரவிடுப் பதுவே - என்று இருத்தலால் பத்திரரைத் தம்மிடத்தே இருத்திக் கொள்ள மாட்டாது விடை கொடுத்து விடுத்தார்` என இப்பாசுர வரலாற்றினைக் கழறிற்றறிவார் புராணத்துள் பன்னிரண்டு பாடல்களால் விரித்துரைத்தார். `சேரமான் பெருமாள் நாயனார்` சுந்தரர்க்குத் தோழர் என்பது நன்கறியப்பட்டது.
மறைமலை அடிகளார் தமது, `மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்` என்னும் நூலில், மாணிக்கவாசகர் மூவர்க்கு முற்பட்டவர்` என்னும் தமது வாதத்தை நிலை நிறுத்தற் பொருட்டுப் `பெரிய புராணத்துள் திருமுகங் கொடுத்த வரலாற்றைக் கூறும் பாடல்கள் இடைச் செருகல்; சேக்கிழார் பாடியன அல்ல` என்றார்.
திருமுகங் கொடுத்த வரலாற்றைக் `கல்லாடம்` என்னும் இலக்கியம் குறிப்பிடுகின்றது. ஆயினும் ஞானசம்பந்தர் முதலிய மூவரில் ஒருவரைப் பற்றிய குறிப்பும் அவ் இலக்கியத்தில் இல்லை. `ஆகவே, அவ் இலக்கியம் மூவர் காலத்திற்கு முற்பட்டது` என்றும், அது மாணிக்கவாசகரைக் குறிப்பிட்டு விட்டு மூவரைக் குறியாமை யால் மாணிக்கவாசகரது காலம் மூவர் காலத்திற்கு முற்பட்டது என அடிகளார் முதலில் கூறினார். பெரிய புராணத்துள் திருமுகங் கொடுத்த வரலாறு சேரமான் பெருமாள் நாயனார் காலத்தில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுதல் அடிகளார் முதலில் கூறிய கூற்றை மாற்றுவதா கின்றது. அது பற்றி அவ்வரலாறு கூறும் பெயரிய புராணப் பாடல்களை `இடைச் செருகல்` என்றார். ஆயினும் அதனை நாம் அவ்வாறு கொள்ளுதற்கில்லை.
இத்திருமுகப் பாசுரத்தில் சேரலனைப் ``பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்கு - ஒருமையின் உரிமையின் உதவுபவன்` என அவனது கொடையை ஆலவாய்ப் பெருமான் சிறப்பித்தருளினமை காணப்படுகின்றது. பெருமான் அருளியவாறே பாண பத்திரர்க்குச் சேரர்பிரான் மிகப் பெரும் பொருள் வழங்கியதைச் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். பெருமான் திருமுகம் விடுக்கும் அளவிற்குத் திருவருள் பெற்று விளங்கிய சேரன் எவனும் சேரமான் பெருமாள் நாயனாருக்கு முன் இருந்ததாகத் தெரியவில்லை.
சுந்தரர், தனது திருத்தொண்டத் தொகையில் சேரமான் பெருமாளைக் குறிப்பிடுகையில்,
`கார்கொண்ட கொடைக் கழறிற் றறிவார்` (தி.7 ப.39 பா.6)
எனக் குறிப்பிட்டார். `கார்கொண்ட கொடை` என்பது திருமுகப் பாசுரத்தில், `பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்கு - ஒருமையின் உரிமையின் உதவி`` எனக் கூறப்பட்டதனை அப்படியே எடுத்து மொழிந்ததாய் உள்ளது. அதை வைத்துத்தான், சேக்கிழார் சேரமான் பெருமாள் நாயனார் வரலாற்றில் திருமுகம் கொடுத்த வரலாற்றை விரித்துக் கூறினார். அதை, `இடைச் செருகல்` என்று தள்ளிவிடப் பார்ப்பது முறையாகத் தோன்றவில்லை. சேரமான் பெருமாள் நாயனார் தில்லைத் தரிசனம் செய்த சிறப்பைக் கூறுமிடத்தில் சேக்கிழார்.
`சீரார் வண்ணப் பொன்வண்ணத்
திருவந்தாதி திருப்படிக்கீழ்ப்
பாரா தரிக்க எடுத்தேத்திப்
பணிந்தார், பருவ மழை பொழியும்
காரால் நிகர்க்க அரியகொடைக்
கையார் கழறிற் றறிவார்தாம்` (தி.12 கழறிற். பா.56)
எனக் கூறினார். இதில் நாயனாரது கொடைச் சிறப்பைக் கூறிய தொடர், `திருமுகப் பாசுரத்தில் உள்ள தொடரே` என்பது தெற்றென விளங்குகின்றதன்றோ! பின்னும், `சேரர் பிரான் திருவாரூர் சென்று சுந்தரரைக் கண்டு வணங்கிய பொழுது அவர் பெரிதும் மகிழ்ந்து சேரமானது கையைப்பற்றினார்` எனக் கூறும்பொழுது, `பருவ மழைச் செங்கை பற்றிக் கொண்டு` (தி.12 கழறிற். பா.67) எனக் கூறினார். இதவும் முன்னர்க் கூறியதையே பின்னரும் வலியுறுத்தி மொழிந்ததாகின்றது.
பின்பு சுந்தரர் சேரர்பிரானை அழைத்துக் கொண்டு பாண்டி நாட்டு யாத்திரை செய்ய விரும்பிச் சேரரை அழைத்ததைக் குறிப்பிடும் பொழுது,
`சேரர் பிரானும் ஆரூரர்
தம்மைப் பிரியாச் சிறப்பாலும்
ஆர்வம் பெருகத் தமக்கு அன்று
மதுரை ஆலவாய் அமர்ந்த
வீரர் அளித்த திருமுகத்தால்
விரும்பும் அன்பின் வணங்குதற்குச்
சேர எழுந்த குறிப்பாலும்
தாமும் உடனே செலத்துணிந்தார்``
(தி.12 கழறிற். பா.81)
எனக் கூறினார். இதிலும் திருமுகங் கொடுத்த வரலாற்றைச் சேக்கிழார் தெளிவாகக் குறிப்பிட்டமை காணப்படுகின்றது. பின்பு மதுரையில் சென்று தரிசித்ததைக் குறிப்பிடும் பொழுதும்,
``படியேறு புகழ்சேரர் பெருமானும் பார்மிசை வீழ்ந்து
அடியேனைப் பொருளாக அளித்த திருமுகக் கருணை
முடிவேதென் றறிந்திலேன் என மொழிகள் தடுமாற``
(தி.12 கழறிற். பா.94)
என்றார். எனவே `திருமுகங் கொடுத்த வரலாற்றைச் சேக்கிழார் ஏதோ ஓரிடத்தில் போகிற போக்கில் ஒருவாறு கூறிப் போயினார்` என்னாது, `சேரமான் பெருமாள் நாயனாரது வரலாற்றில் அஃதொரு முதன்மை யான பகுதியாகக் கருதி வலியுறுத்தினார் என்றே கூற வேண்டியுள்ளது. அதனால் தான் சுந்தரர் சேரமான் பெருமாளைக் குறிப்பிடுமிடத்து அந்தக் கொடைச் சிறப்பையே எடுத்தோதிக் குறித்தார். ஆகவே, பெரிய புராணத்துள் ஒரு சில பாடல்களை, `இடைச் செருகல்` என்று சொல்லி நீக்கிவிட முயன்றால், அம்முயற்சி பின் பல இடங்களில் தடைப்பட்டு வெற்றி பெறாது மறையும். எனவே திருமுகங் கொடுத்த வரலாறு பெரிய புராணத்துட் கூறப்பட்ட வாறே கொள்ளத்தக்கது. பரஞ்சோதி முனிவர் கூற்ரில் உள்ள காலக் கணக்கை நாம் அப்படே கொள்ளுதற்கில்லை.
இனி, ``ஆல நீழல் உகந்த திருக்கையேஎத் தொடங்கும் திருஞானசம்பந்தரது திருவாலவாய்த் திருப்பதிகத்தில்,
(தி.3 பதி.115)
`தாரம் உய்த்தது பாணற் கருளொடே`(தி.3 பதி.115 பா.6)
என்று ஒரு தொடர் வந்துள்ளது. ``தாரம் பல் பண்டம்`` என்பது நிகண்டு ஆதலின், அத்தொடர் சேரமானால் பாணற்குப் பல் பண்டம் வரச் செய்த திருவிளையாடலைக் குறித்ததாகலாம் - எனச் சிலர் கருதுவர். `தாரம்` என்பது ஏழிசைகளுள் சிறந்த தொன்று, அதனை இனிது இசைக்கப் பாணற்கு ஆலவாய்ப் பெருமான் அருளியதையே அத் தொடர் குறிப்பதாகக் கொண்டு சேக்கிழார். திருநீலகண்டப் பலகை யிட்டருளிய செயலைக் கூறினார். அதனையும் பரஞ்சோதி முனிவர் பத்திரர் பொருட்டுச் செய்த திருவிளையாடலாகவே கூறினார். பரஞ்சோதி முனிவர் பல கலை வல்லவராயினும் தமது புராணத்தை `ஆலாசிய மான்மியம்` என்னும் வடநூலைத் தழுவியே செய்ததாக அவர் கூறியிருத்தலையும் நாம் இங்கு நினைத்தல் வேண்டும். ஆலவாய்ப் பெருமானடிகள் அருளிச் செய்ய, நம்பி யாண்டார் நம்பிகள் பதினொன்றாந் திருமுறையில் முதல் திருப் பாடலாக அதனைக் கோத்து வைத்ததினூல் அத்திருப்பாடல் இத்துணை ஆராய்ச்சிக்கு இடமாயிற்று.
திருமுகப் பாசுரம் முற்றிற்று

பண் :நட்டபாடை

பாடல் எண் : 1

கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து
குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு
பரடுயர் நீள்கணைக் காலோர் வெண்பேய்
தங்கி யலறி யுலறு காட்டில்
தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள்
அப்ப னிடந்திரு ஆலங் காடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திரங்கி - வற்றி. குண்டு - ஆழம். குழி வயிறு - ஓட்டிய வயிறு. பங்கி - தலை மயிர். பரடு - புறங்கால். உலறுதல் - பசியால் உடல்மெலிதல். சில வேளைகளில் மற்றைப் பேய்கள் எங்கேனும் போய்விட ஒரு பெண் பேய் தனித்து நின்று அலறுதலும் உண்டு என்க. அங்கம் - திருமேனி. அனல் ஆடுதல் - சுற்றிலும் நெருப்பு எரிய நடுவே நின்று ஆடுதல். `இவ்வாறு ஆடுபவன் அங்கம் குளிர்ந்திருத்தல் வியப்பு` என்றபடி.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 2

கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டிக்
கடைக்கொள்ளி வாங்கி மசித்து மையை
விள்ள எழுதி வெடுவெ டென்ன
நக்கு வெருண்டு விலங்கு பார்த்துத்
துள்ளிச் சுடலைச் சுடுபி ணத்தீச்
சுட்டிய முற்றும் சுளிந்து பூழ்தி
அள்ளி அவிக்கநின் றாடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங்காடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கள்ளிக் கவடு - கள்ளி மரத்தின் கிளைகள். கடைக்கொள்ளி - எரிந்து முடிந்த கொள்ளிக் கட்டை. வாங்குதல் - எடுத்தல். மசித்தல் - மசிய அரைத்தல். `பேய்கள் கண்ணில் எழுதுகின்ற மை கரியே` என்றபடி. எனவே, `இவ்வாறு செய்வனவும் பெண் பேய்களே` என்பது விளங்கும். விள்ள - கண்ணினின்றும் வேறு தோன்ற. `வெடு, வெடு` என்பது சினக் குறிப்பு. எனவே, நகுதல் கோபச் சிரிப்பாயிற்று. (வெருளுதல், தம்மை வெருட்டும் பேய்கள் கடுந்தெய்வங்கள் முதலினவற்றை நினைத்து.) `விளக்காக` என ஆக்கம் வருவிக்க. விலங்காகப் பார்த்தல், நேரே பாராமல் வலமாகவும், இடமாகவும் திரும்பித் திரும்பிப் பார்த்தல். `பிணஞ்சுடு தீச் சுட்டிட` என்றபடி. சுளித்தல் - கோபித்தல். பூழ்தி - புழுதி. இது `பூழி` என்றும் வரும். அவித்தல், தன்னைச் சுட்ட தீயை.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 3

வாகை விரிந்துவெள் நெற்றொ லிப்ப
மயங்கிருள் கூர்நடு நாளை ஆங்கே
கூகையொ டாண்டலை பாட ஆந்தை
கோடதன் மேற்குதித் தோட வீசி
ஈகை படர்தொடர் கள்ளி நீழல்
ஈமம் இடுசுடு காட்ட கத்தே
ஆகம் குளிர்ந்தன லாடும் எங்கள்
அப்ப னிடம் திரு ஆலங் காடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வகை - காட்டு வாகை மரம். விரிந்து (விரிய) - தழைத்திருக்க. நெற்று வெண்மையாயது காய்ந்து போனமையால். மயங்கு இருள் - மாலைக் காலத்தில். பகலோடு வந்து பொருந்திய இருள். அது பின் மிகுதலின், `கூர்` என்றார். நடு நாள் - நள்ளிரவு. `நடு நாள் யாமத்தும் பகலும் துஞ்சான்`* எனப் புறப்பாட்டிலும் வந்தது. ஐ, சாரியை, ஆண்டலை, மனிதன் தலைபோலும் தலையை யுடைய ஒருவகைப் பறவை. கோடு - மரக்கிளை. கூகையும், ஆண்டலையும் கூவக் கேட்டு ஆந்தை மரக் கிளையின் மேல் இடம் பெயர்ந்து ஓடுகின்றது. வீசுதல் - எழுச்சியுறுதல். ஈகை - இண்டங் கொடி - `ஈகை வீசிப் படர்கின்ற, தொடர் கள்ளியின் நீழலையுடைய சுடுகாடு` என்க. மற்றும், `ஈமம் இடு சுடுகாடு` என்வும் கொள்க. ஈமம்- பிணஞ்சுடும் விறகு. `கூகை முதலிய பறவைகளின் செயல் ஒருபாலாக, ஈமம் ஒருபால் இடப்படுகின்றது` எனக் கொள்க. `ஆகம் குளிரந்து` என்பதற்கு, மேல், `அரங்கம் குளிர்ந்து` என்றதற்கு உரைத்தது உரைக்க. ஆகம் - உடம்பு. `நடு நாள் சுடுகாட்டகத்தே, பாட, ஓட ஆடும் எங்கள் அப்பன்` என இயைத்துக் கொள்க.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 4

குண்டில்ஓ மக்குழிச் சோற்றை வாங்கிக்
குறுநரி தின்ன அதனை முன்னே
கண்டிலோம் என்று கனன்று பேய்கள்
கையடித் தொ டிடு காட ரங்கா
மண்டலம் நின்றங் குளாளம் இட்டு,
வாதித்து, வீசி எடுத்த பாதம்
அண்டம் உறநிமிர்ந் தாடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குண்டில் ஓமக் குழி - ஆழத்தை உடைய ஓம குண்டம். இது சுடுகாட்டில் இறுதிக் கடனுக்காகச் செய்யப்படுவது. `வாங்கி` என்றது, `யாவரும் போகட விட்டுப் போனபின்பு எடுத்து` என்றதாம். முன்பு கண்டிலோம் - முன்பே பார்க்கவில்லையே. (பார்த்திருந்தால் நரிகளை வெருட்டித் தின்றிருக்கலாமே என்று) மண்டபம் - வட்டமாகச் சென்று ஆடுதல். உள்ளாலம், `ஆளத்தி` எனப்படும். அஃதாவது குரலால் இசை கூட்டுதல். வாதித்து - காளியோடும் வாதம் புரிந்து `எடுத்த பாதம்` என்க. எடுத்த பாதத்தை அண்டம் உற நிமிர்த்து ஆடினமையால், காளி நாணம் அடைந்து தோற்றாள். `நிமிர்ந்து` என்பதும் பாடம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 5

விழுது நிணத்தை விழுங்கி யிட்டு,
வெண்தலை மாலை விரவப் பூட்டிக்
கழுதுதன் பிள்ளையைக் காளி யென்று
பேரிட்டுச் சீருடைத் தாவளர்த்துப்
புழதி துடைத்து, முலைகொ டுத்துப்
போயின தாயை வரவு காணா
தழுதுறங் கும்புறங் காட்டில் ஆடும்
அப்ப னிடம்திரு ஆலங் கா டே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கழுது - பேய். விழுது நிணம் - திரட்டி எடுத்த உருண்டையாகிய கொழுப்பு. `கழுது தன் பிள்ளையை, நிணத்தை விழுங்க நிணம் - திரட்டி எடுத்து உருண்டையாகிய கொழுப்பு.
`கழுது தன் பிள்ளையை, நிறத்தை விழுங்க இட்டு, வெண் தலை மாலை பூட்டி, புழதி துடைத்து, முலைகொடுத்து, - காளி - என்று பேர் இட்டுச் சீருடைத்தா வளர்த்து, (சிறிது நேரம் விட்டுப்) போயினதாக, அத்தாயை வரவிற் காணாது, பிள்ளைப் பேய் அழுது, பின் உறங்கும் புறங் காடு` என இயைத்துக்கொள்க. `போயினதாக` எனவும், `அத்தாய்` எனச் சுட்டும் வருவித்துக்கொள்க. `விழுங்கியிட்டு` என்பது பாடம் அன்று.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 6

பட்டடி நெட்டுகிர்ப் பாறு காற்பேய்
பருந்தொடு, கூகை, பகண்டை , ஆந்தை
குட்டி யிட, முட்டை, கூகைப் பேய்கள்
குறுநரி சென்றணங் காடு காட்டில்
பிட்டடித் துப்புறங் காட்டில் இட்ட
பிணத்தினைப் பேரப் புரட்டி ஆங்கே
அட்டமே பாயநின் றாடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அணங்கு ஆடு காட்டில் கூகைப் பேய்களும், குறு நரிகளும், குட்டியை ஈன, பருந்தும், கூகையும், பகண்டையும், ஆந்தையும் முட்டையிட, பாறுகாற் பேய்கள் சென்று அவைகளைப் பிட்டு வீசிப் பின் புறங்காட்டில் இடப்பட்ட பிணத்தைப் புரளப் புரட்டி, நெடுக்கும், குறுக்குமாகப் பாயமந்து ஓட ஆடும் எங்கள் அப்பன்` என இயைக்க.
பட்ட அடி - பரந்துபட்ட பாதம். அகரம் தொகுத்தல். நெட்டுகிர் - நீண்ட நகம். பாறுதல் - வற்றுதல். பகண்டை ஒருவகைப் பறவை. கூகைப் பேய்கள், பேய்களில் கூகையாய் உள்ள பேய்கள் அணங்கு, தாக்கணங்குகள் (தீத்தெய்வங்கள்) அட்டம் - குறுக்கு.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 7

கழலும் அழல்விழிக் கொள்ளி வாய்ப்பேய்
சூழ்ந்து துணங்கையிட் டோடி, ஆடித்
தழலுள் எரியும் பிணத்தை வாங்கித்
தான் தடி தின்றணங் காடு காட்டில்
கழலொலி, ஓசைச் சிலம்பொ லிப்பக்
காலுயர் வட்டணை யிட்டு நட்டம்
அழலுமிழ்ந் தோரி கதிக்க ஆடும்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

துணங்கை - இரு கைகளையும் மடக்கி இரு விலாக்களிலும் அடித்துக் கொண்டு ஆடும் கூத்து. இது பெரு மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்ற ஒன்று. தடி - தசை. அணங்கு ஆடுதல் - தெய்வம் வந்ததுபோல ஆடுதல். `காட்டில், ஓரி கதிக்க, கால் வட்டணையிட்டு நட்டம் ஆடும் அப்பன்` என்க. ஓரி - நரி. கதிக்க - குதிக்க (நட்டம்) அழல் உமிழ்தல், வெப்பத்தை வீசுதல். `உமிழ்ந்து` என்பதை, `உமிழ` எனத் திரித்துக் கொள்க.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 8

நாடும், நகரும் திரிந்து சென்று,
நன்னெறி நாடி நயந்தவரை
மூடி முதுபிணத் திட்ட மாடே,
முன்னிய பேய்க்கணம் சூழச் சூழக்
காடும், கடலும், மலையும், மண்ணும்,
விண்ணும் சுழல அனல்கையேந்தி
ஆடும் அரவப் புயங்கன் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நயத்தல் - விரும்புதல். `பிணம்` என்றது, பிணமான நிலையை, `பிணத்து மூடி` என மாற்றி, `பிணமாய்விட்ட நிலையில் அவர்களைத் துணியால் மூடி மறைத்து` என உரைக்க. மாடு - பக்கம்; இடம் `பிணத்தை இட்ட இடம்` என்றதனால் அது, `முதுகாடு` என்றதாயிற்று. `இட்ட மாடே ஆடும் `புயங்கன்` என இயைக்க, முன்னிய - பலவற்றைக் கருதிய. அரவப் புயங்கன் - பாம்பையணிந்த கூத்தன். `புயங்கம்` என்பது ஒருவகைக் கூத்தா யினும், அஃது இங்குப் பொதுப் பொருளே தந்தது; என்னை? இறைவன் காட்டில் ஆடுவது எல்லா நடனங்களையும் ஆதலின், `காடு, கடல், மலை, மண்` என்பன, `முல்லை, நெய்தல், குறிஞ்சி, மருதம்` என்பவற்றைச் சுட்டியவாறு `நன்னெறி நாடி நயந்த வரை இட்டம் இடம்` என்றது, `தீயோர் மட்டுமன்று; நல்லோருந்தாம் அடையும் இடம் அது` என்றபடி. எனவே, `எங்கள் அப்பன் ஆடும் இடத்தை அடையாதார் எவரும் இல்லை` என்பது உணர்த்தும் முகத்தால், `அவனே அனைத்துயிர்க்கும் புகலிடம் என்பதைக் குறிப்பால் உணர்த்தியதாம். தொல்காப்பியரும், `பலர் செலச் செல்லாக் காடு` -* என்பதனான் இப்பொருளை இங்ஙனமே குறிப்பாற் சுட்டினார்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 9

துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம்,
உழை, இளி ஓசைபண் கெழுமப் பாடிச்
சச்சரி, கொக்கரை, தக்கை யோடு,
தகுணிதம் துந்துபி தாளம் வீணை
மத்தளம் கரடிகை வன்கை மென்தோல்
தமருகம், குடமுழா, மொந்தை வாசித்
தத்தனை விரவினோ டாடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஓசை` என்றதனை, `குரல்` எனக் கூறியதாகக் கொண்டு, `துத்தம்` முதலிய ஏழும் ஏழிசைகளின் பெயர் என உணர். இந்த ஏழிசைகளையும் தக்கபடி கூட்டுமாற்றால் பண்கள் பிறக்கும் ஆதலின், இவைகளை, `பண் கெழுமப் பாடி` என்றார். கெழும - பொருந்த. சச்சரி முதல் மொந்தை ஈறாகக் கூறப்பட்டவை வாத்திய வகைகள். `கைக்கிளை` என்பது விரித்தல் விகாரம் பெற்றது.
வன் கை மென்தோல் தமருகம் - வலிய இரு பக்கங்களிலும் மெல்லிய தோலையுடைய உடுக்கை. அத்தனை விரவினோடு, `அத்தனை வாத்தியங்களின் ஒத்திசையோடு ஓத்து நிகழ ஆடும் எங்கள் அப்பன்` என்க. `சச்சரி` இன எதுகை `வாசித்து` என்பதனை, `வாசிக்க` எனத்திரிக்க. இதன்கண் அம்மையார் இசைக் கலையின் சிறப்புக்களைப் புலப்படுத்தினமை காண்க. `புயங்கன்` முதலிய சொற்களால் பரதக் கலையைப் புலப்படுத்தி, `அனைத்துப் பரதங்களை யும் ஆடும் பெருமானே வல்லவன்` என்பதனைப் புலப்படுத்தலும் அம்மையாரது திருவுள்ளம் என்க.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 10

புந்தி கலங்கி, மதிம யங்கி
இறந்தவ ரைப்புறங் காட்டில் இட்டுச்
சந்தியில் வைத்துக் கடமை செய்து
தக்கவர் இட்டசெந் தீவி ளக்கா
முந்தி அமரர் முழவி னோசை
திசைகது வச்சிலம் பார்க்க ஆர்க்க,
அந்தியின் மாநடம் ஆடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

புந்தி - புத்தி, மதி - அறிவு. `கலங்கி, மயங்கி` என்றது, இறப்பு வருங்காலத்து நிகழ்வனவற்றைக் கூறியவாறு. சந்தி, உறவினர் நண்பர்களது கூட்டம். கடமை, ஈமக் கடன், தக்கவர், செய்ய உரிமையுடையவர்; புதல்வர் முதலானோர். தீ, பிணத்திற்கு இட்ட தீ. `அதுவே விறகாய் இருக்க ஆடுகின்றான்` என்க. அவ்வாட்டத்தை மக்கள் காணார் ஆகலான், அதற்கு அமரர்களே வாத்தியம் வாசிப்பா ராவர். முழவு - மத்தளம், திசை கதுவ - திசைகளை உள்ளடக்கி நிகழ. அந்தி, மாலைக் காலம், மா நடம், நெடிது நிகழும் நடனம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 11

ஒப்பினை யில்லவன் பேய்கள் கூடி,
ஒன்றினை ஒன்றடித் தொக்க லித்து,
பப்பினை யிட்டுப் பகண்டை பாட,
பாடிருந் தந்நரி யாழ மைப்ப,
அப்பனை அணிதிரு ஆலங் காட்டெம்
அடிகளைச் செடிதலைக் காரைக் காற்பேய்
செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார்
சிவகதி சேர்ந்தின்பம் எய்து வாரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஒப்பினை` என்பதில் ஐ, இரண்டாம் வேற்றுமை யுருபு. `இல்லாதனவாகிய வலி பேய்கள்` என்க. `ஒக்கக் கலித்து` என்பது, `ஒக்கலித்து` எனக் குறைந்து நின்றது. ஒரு சேரக் கூச்சலிட்டு` என்பதாம். `பகண்டை` மேலேயும் (பாட்டு -6) கூறப்பட்டது. பாடு - பக்கம். `அந்நரி` என்பதில் அகரம் பண்டறி சுட்டு. `காரைக்காலில் தோன்றியதாகிய இந்தப் பேய், மற்றைப் பேய்கள் ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டு ஆரவாரிக்கின்ற ஆரவாரத்தின் இடையே, நரியின் குரலையே யாழிசையாகக் கொண்டு பகண்டைகள் பாட, அந்தப் பாட்டோடு ஆலங்காட்டுள் அடிகளைச் செப்பிய செந்தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் முறையாகப் பாட வல்லவர்கள் சிவகதி சேர்ந்து இன்பம் எய்துவார்` என முடிக்க.
அம்மையார் தாம் உலக வாழ்வில் வாழ்ந்த காலத்திலும், `சிவபெருமானே யாவர்க்கும் உண்மை அப்பன்` என்று உணர்ந்து, `அப்பா! அப்பா!` என்று சொல்லி வந்து, கயிலையிலும் பெருமான் `அம்மையே` என்று அழைக்க, தாம், `அப்பா` என்று அழைத்தபடியே, இத்திருப்பதிகத்திலும், \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\"எங்கள் அப்பன், எங்கள் அப்பன்\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\" எனப் பலமுறை சொல்லி இன்புற்றமையைக் காணலாம்.
உலக மக்கள் எளிதில் உணரத் தக்கதாக, `சிவன் இங்குள்ள சுடுகாடுகளிலே அங்குள்ள பேய்கள் சூழ அனலிடை. ஆடுகின்றான்` எனப் பெரியோர் பலரும் ஒரு படித்தாகக் கூறிவந்த போதிலும் அதன் உண்மைப் பொருள், ஊழியிறுதிக்கண் உலகெலாம் ஓடுங்கியுள்ள பொழுது, உடம்பும், கருவிகரணங்களும் ஆகியவற்றுள் ஒன்றும் இன்றி இருளிற் கிடக்கும் உயிர்களை மீள உடம்போடும், கருவி கரணங்களோடும் கூடப் படைத்துக் காக்க வேண்டி யவற்றிற்கு ஆவன வற்றைச் செய்தலாகிய சூக்கும நடனத்தைச் செய்கின்றான்` என்பதே யாகலின், `அந்த உண்மையை உணர்ந்து இப்பதிகத்தினைப் பாட வல்லவர்கள் சிவகதி சேர்ந்து இன்பம் எய்துவார்கள்` என்பதாம். இவ் வுண்மையை உணராதவர்கள் எல்லாம், `சிவன் சுடுகாட்டில் ஆடுபவன்` எனச் சொல்லி இகழ்வார்கள் என்பதை அம்மையார் தமது அற்புதத் திருவந்தாதியில்,
`இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம்
இவரை யிகழ்வதே கண்டீர்`*
என அருளிச் செய்வார். பதிகந்தோறும் திருக்கடைக்காப்புச் செய்யும் ஞானசம்பந்தர்க்கு முன்பே அம்மையார் அது செய்தமையை அவரது திருமொழிகள் பலவற்றிலும் காணலாம்.
b

பண் :இந்தளம்

பாடல் எண் : 12

எட்டி இலவம் ஈகை
சூரை காரை படர்ந்தெங்கும்
சுட்ட சுடலை சூழ்ந்த
கள்ளி சோர்ந்த குடர்கௌவப்
பட்ட பிணங்கள் பரந்த
காட்டிற் பறைபோல் விழிகட்பேய்
கொட்ட முழவங் கூளி
பாடக் குழகன் ஆடுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எட்டியும், இலவமும் மர வகைகள். ஈகையும் சூரையும் கொடி வகைகள். காரை, செடி. `படர்ந்து` என்றது இரட்டுற மொழிதலாய், `பரவி` என்னும் பொருளையும் தந்தது. சுட்ட - பிணங்களைச் சுட்ட. `சுட்ட சுடலை எங்கும் எட்டி முதலியன பரவி, சூழ்ந்த கள்ளிகள் கழுகு முதலியவற்றின் வாயினின்றும் வீழ்ந்த குடர்களைப் பற்றி நிற்கும்படி கிடந்த பிணங்கள்` என்க. பறைபோல் விழி - அகன்ற கண்கள். `காட்டில் பேய் முழவங் கொட்ட, கூளி பாடக் குழகன் ஆடும்` என வினை முடிக்க. கூளி - பூதம். குழகன் - அழகன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 13

நிணந்தான் உருகி நிலந்தான்
நனைப்ப நெடும்பற் குழிகட்பேய்
துணங்கை யெறிந்து சூழும்
நோக்கிச்சுடலை நவிழ்த் தெங்கும்
கணங்கள் கூடிப் பிணங்கள்
மாந்திக் களித்த மனத்தவாய்
அணங்கு காட்டில் அனல்கை
யேந்தி அழகன் ஆடுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நிணம், துணங்கை இவை மேலே கூறப்பட்டன.* நிணம் உருகுதல் பிணம்சுடு தீயால், சூழும் நோக்கி - சுற்றிலும் பார்த்து. நவிழ்த்து - விரும்பி. கணங்கள் - பேய்க் கூட்டம். மாந்தி - உண்டு. களித்தல் - மயங்குதல். அணங்கு - துன்பம் தருகின்ற. `தான் இரண்டும் அசைகள்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 14

புட்கள் பொதுத்த புலால்வெண்
தலையைப் புறமே நரிகவ்வ
அட்கென் றழைப்ப ஆந்தை
வீச அருகே சிறுகூகை
உட்க விழிக்க ஊமன்
வெருட்ட ஓரி கதித்தெங்கும்
பிட்க நட்டம் பேணும்
இறைவன் பெயரும் பெருங்காடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

புட்கள் - பின்னர்க் கூறப்படுவன தவிர ஏனைய காக்கை, பருந்து முதலியன. பொதுக்கல் - குத்துதல். `அட்கு` என்பது ஒலிக்குறிப்பாதலை, அதனை அடுக்கிக் கூறியறிக. அழைத்தல், தன் இனத்தை. `சிறகை வீசை` என ஒரு சொல் வருவிக்க.
உட்க - அஞ்சும் படி. ஊமன் - பெரிய கூகை. ஓரி, நரி வகைகளில் ஒன்று. கதித்தல் - ஓடுதல். பிட்க - பிளவு செய்ய. `நட்டம் பெயரும்` என இயைக்க. பேணும் - யாவராலும் வழிபடப்படும். இறைவன் - சிவன். பெயர்தல், அடி பெயர்த்து ஆடுதல். `பெயரும் பெருங்காட்டில்` என ஏழனுருபு இறுதிக்கண் தொக்கது. `வெண் தலையை நரி கௌவுதற் பொருட்டுத் தன் இனத்தை `அட்கு` என்று கூச்சல் இட்டு அழைக்கக் கண்டு, ஆந்தை சிறிய சிறகை வீச கூகை, அச்சம் உண்டாகும்படி கண்களை விழித்துப் பார்க்க, பெரிய கூகை தனது குரலால் வெருட்ட, இந்நிலையிலும் ஓரிகள் ஓடித் தசையைப் பிட்டுத் தின்னல் நிகழுகையில் இறைவன் பெருங்காட்டில் ஆடுகின்றான்` என்றபடி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 15

செத்த பிணத்தைத் தெளியா
தொருபேய் சென்று விரல்சுட்டிக்
கத்தி உறுமிக் கனல்விட்
டெறிந்து கடக்கப் பாய்ந்துபோய்ப்
பத்தல் வயிற்றைப் பதைக்க
மோதிப் பலபேய் இரிந்தோடப்
பித்த வேடங் கொண்டு
நட்டம் பெருமான் ஆடுமே.

பொழிப்புரை :

உயிர் நீங்கியதனால் பிணமாம் நிலையை அடைந்த உடம்பை அதன் உண்மையை அறியாமல் `படுத்துக் கிடக்கின்ற ஆள்` என்று நினைத்து ஒரு பேய் அதன் அருகிற் சென்று தனது சுட்டுவிரலைக் காட்டி, உரக்கக்கத்தி, உறுமி, கொள்ளி ஒன்றை எடுத்து வீசி அப்பாற் செல்ல, அதன் கருத்தையே `மெய்` என்று நினைத்து மற்றைப் பேய்களும் அந்த ஆளுக்கு அஞ்சித் தங்கள் பெரிய வயிற்றில் அடித்துக் கொண்டு அவ்விடத்தைவிட்டு ஓட, (இத் தன்மையதாய் இருக்கின்ற காட்டில்) பெருமான்தானும் ஒரு பித்தன் போல வேடம் பூண்டு நடனம் ஆடுகின்றான்.
`பிணம்` என்றது, `உடம்பு` என்னும் அளவாய் நின்றது. விரலைக் காட்டிக் கத்தி உறுமியது கிடக்கின்ற ஆளை அச்சுறுத்தற்கு, பத்தல், வீணைத் தண்டு பொருத்தப்பட்டுள்ள குண்டுப் பகுதி `அது போலும் வயிறு` என்க. `ஒரு பேய், தெரியாது சென்று, சுட்டி, கத்தி, உறுமி, எறிந்து கடக்க, பல பேய் பாய்ந்து போய் வயிற்றை மோதி இரிந்து ஓட பெருமான் ஆடும்` என வினை முடிக்க.

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :இந்தளம்

பாடல் எண் : 16

முள்ளி தீந்து முளரி
கருகி மூளை சொரிந்துக்குக்
கள்ளி வற்றி வெள்ளில்
பிறங்கு கடுவெங் காட்டுள்ளே
புள்ளி உழைமான் தோலொன்
றுடுத்துப் புலித்தோல் பியற்கிட்டுப்
பள்ளி யிடமும் அதுவே
ஆகப் பரமன் ஆடுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முள்ளி - முள்ளையுடைய செடிகள். முளரி - தீ. அஃது இங்கு அதனையுடைய விறகைக் குறித்தது. வெள்ளில் - விளா மரம். பிறங்குதல் - விளங்குதல். முள்ளிகள் தீந்து போயதும், கள்ளி பால் வற்றியதும் பிணங்களைச் சுடுகின்ற தீயால். எரிகின்ற விறகு கரிந்து போயது, பிணங்களின் முளை சொரிதலால். உகுதல் - சிந்துதல். விளா மரம் மட்டுமே விளங்கியிருந்தது` என்க. உழை, ஒருவகை மான். உழை மான், இருபெயர் ஒட்டு.
பியல் - தோள். பியற்கு. பியலின்கண்; உருபு, மயக்கம். பள்ளி இடம் - நிலையாக இருக்கும் இடம். அதுவே - அந்தக் காடே. உம்மை, சிறப்பு. எண்ணின் கண் வந்த செய்தென் எச்சங்கள், `பிறங்கு` என்னும் ஒருவினை கொண்டு முடிந்தன.

பண் :இந்தளம்

பாடல் எண் : 17

வாளைக் கிளர வளைவாள்
எயிற்று வண்ணச் சிறுகூகை
மூளைத் தலையும் பிணமும்
விழுங்கி முரலும் முதுகாட்டில்
தாளிப் பனையின் இலைபோல்
மயிர்க்கட் டழல்வாய் அழல்கட்பேய்
கூளிக் கணங்கள் குழலோ
டியம்பக் குழகன் ஆடுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வாளை` என்பதில் ஐ - சாரியை. வாள், அதன் வடிவைக் குறித்தது. கிளர்தல் - விளங்குதல். `எயிறு` என்றது அலகினை. வளை - வளைந்த. வாள் - ஒளி. வாளின் வடிவு விளங்கு கின்ற, வளைந்த, ஒளி பொருந்திய அலகு` என்க. முரலுதல் - மூக்கால் ஒலித்தல். தாளிப்பனை, விரிந்த மடல்களையுடைய ஒருவகைப் பனை. ஓலையை, `இலை` என்றது மரபு வழுவமைதி. கட்டு அழல் மிகுந்த நெருப்பு. அழல் வாய்ப் பேய் - கொள்ளி வாய்ப் பேய். அழல் கண் பேய் - கொள்ளிக் கண் பேய். கூளி - பூதம். குழலோடு இயம்புதல் - குழலை ஊதித் தாமும் இசைத்தல். `குழகன்` மேலே சொல்லப்பட்டது.*

பண் :இந்தளம்

பாடல் எண் : 18

நொந்திக் கிடந்த சுடலை
தடவி நுகரும் புழுக்கின்றிச்
சிந்தித் திருந்தங் குறங்குஞ்
சிறுபேய் சிரமப் படுகாட்டின்
முந்தி அமரர் முழவின்
ஒசை முறைமை வழுவாமே
அந்தி நிருத்தம் அனல்கை
யேந்தி அழகன் ஆடுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நொந்திக் கிடந்த - சில நாள் ஏமம் இன்றிக் கிடந்த. தடவி - துழாவி. புழுக்கு - புழுக்கல்; சோறு. சிந்தித்து - கவலை யடைந்து. சிரமம் - துன்பம். `அந்தியில்` என ஏழாவது விரிக்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 19

வேய்கள் ஓங்கி வெண்முத்
துதிர வெடிகொள் சுடலையுள்
ஒயும் உருவில் உலறு
கூந்தல் அலறு பகுவாய
பேய்கள் கூடிப் பிணங்கள்
மாந்தி அணங்கும் பெருங்காட்டில்
மாயன் ஆட மலையான்
மகளும் மருண்டு நோக்குமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வேய்கள் - மூங்கில்கள். `ஓங்கி வெடிகொள், உதிர வெடிகொள் சுடலை` என்க. ஓய்தல் - இளைத்தல். உலறுதல் - காய்தல். பகுவாய் - பிளந்த வாய் அணங்கும் - வருந்தும் `பேய்களின் வாழ்க்கை துன்ப வாழ்க்கை` என்றபடி. மாயம் - கள்ளத் தன்மை; வேட மாத்திரத்தில் பல பெற்றியனாகத் தோன்றுதல். அப்பன் நடனத்தை அம்மை காணுதலை இத்திருப்பாட்டில் குறித்தருளினார். மருட்சி - வியப்பு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 20

கடுவன் உகளுங் கழைசூழ்
பொதும்பிற் கழுகும் பேயுமாய்
இடுவெண் டலையும் ஈமப்
புகையும் எழுந்த பெருங்காட்டில்
கொடுவெண் மழுவும் பிறையுந்
ததும்பக் கொள்ளென் றிசைபாடப்
படுவெண் துடியும் பறையுங்
கறங்கப் பரமன் ஆடுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கடுவன் - ஆண் குரங்கு. உகளும் - கிளைகளில் பாய்கின்ற. கழை - மூங்கில், பொதும்பு - புதர். இடுதல் - புதைத்தல். `புதைத்ததனால் உண்டான வெண்டலை` என்க. ஈமம் - பிணஞ் சுடும் விறகு. வெண்டலையை `எழுந்த` என்றது, `குழியினின்றும் வெளிப் போந்த` என்றபடி. மழுவுக்கு வெண்மை கூர்மையாலும், துடிக்கு வெண்மை அதன் தோலினாலும் ஆகும். ததும்ப - ஒளிவீச. கொள்ளெனல், ஒலிக் குறிப்பு. எனவே, `அங்ஙனம் பாடுவன பூதங்கள்` என்பது பெறப்பட்டது. படுதல் - ஒலித்தல். துடி - உடுக்கை. கறங்குதல் - ஒலித்தல். தடி, இறைவனது. பறை, தேவர்களது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 21

குண்டை வயிற்றுக் குறிய
சிறிய நெடிய பிறங்கற்பேய்
இண்டு படர்ந்த இருள்சூழ்
மயானத் தெரிவாய் எயிற்றுப்பேய்
கொண்டு குழவி தடவி
வெருட்டிக் கொள்ளென் றிசைபாட
மிண்டி மிளிர்ந்த சடைகள்
தாழ விமலன் ஆடுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குண்டு - ஆழம், ஐ, சாரியை. `குறியனவாயும், சிறியனவாயும், நெடியனவாயும் பிறங்குதலையுடைய பேய்` என்க. பிறங்குதல் - விளங்குதல். இண்டு இண்டை; இண்டங் கொடி. வெருட்டுதல் - அச்சுறுத்தல். `பேய்` இரண்டையும் பன்மையாகக் கொள்க. பிள்ளைப் பேய்களைத் தாய்ப் பேய்கள் இருட்காலத்தில் தடவிக் கொடுத்து, ஆயினும் அச்சுறுத்தி, அவை குறும்பு அடங்கி அமைதியுற்றிருக்க இசை பாடின என்க. முதலில் உள்ள `பேய்` என்பதில் இரண்டன் உருபு விரிக்க.
எரிவாய்ப் பேய் - கொள்ளி வாய்ப் பேய். கொள்ளென்று இசைபாடுதல் முன் பாட்டிலும் வந்தது. `குழவியாக` என ஆக்கம் வருவிக்க. மிண்டுதல் - நெருங்குதல்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 22

சூடும் மதியம் சடைமேல்
உடையார் சுழல்வார் திருநட்டம்
ஆடும் அரவம் அரையில்
ஆர்த்த அடிகள் அருளாலே
காடு மலிந்த கனல்வாய்
எயிற்றுக் காரைக் காற்பேய்தன்
பாடல் பத்தும் பாடி
யாடப் பாவம் நாசமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`திருநட்டமாகச் சுழல்வார்` என ஆக்கம் விரித்து, மாறிக் கூட்டுக. `அருளாலே பாடிய` என ஒரு சொல் வருவிக்க. இதனால் அம்மையார் பாடல்கள் அருள்வழி நின்று அருளிச் செய்தனவாதல் அறிந்துகொள்ளப்படும். காடு மலிந்த - காட்டை மகிழ்ந்து அங்கு வாழ்கின்ற. அம்மையார் தமது பணிவு தோன்ற மற்றைப் பேய்களைப் போலவே தம்மை வருணித்துக் கொண்டார். ஆடுதல், பாடற் பொருள் விளங்கச் செய்கை காட்டி நடித்தல்.

பண் :

பாடல் எண் : 1

கிளர்ந்துந்து வெந்துயர் வந்தடும்
போதஞ்சி நெஞ்சமென்பாய்த்
தளர்ந்திங் கிருத்தல் தவிர்திகண்
டாய்தள ராதுவந்தி
வளர்ந்துந்து கங்கையும் வானத்
திடைவளர் கோட்டுவெள்ளை
இளந்திங் களும்எருக் கும்இருக்
குஞ்சென்னி ஈசனுக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நெஞ்சமே ஈசனுக்கே வந்தி; வெந்துயர் வந்து அடும்போது அஞ்சி, என்பாய் இங்குத் தளர்ந்திருத்தலைத் தவிர்தி` என இயைத்துக் கொள்க.
வெந்துயர் கிளர்ந்து, வந்து அடும் போது - கொடிய துன்பம் மிகுந்து வந்து வருத்தும்போது, என்பாய்த் தளர்ந்திருத்தல் - உடம்பு எலும்பாய் இளைத்துப் போகும்படி மெலிந்திருத்தல்.
வளர்ந்து உந்து கங்கை - பெருகி மோதுகின்ற கங்கை. கோட்டுத் திங்கள் - வளைவையுடைய சந்திரன். `ஈசனுக்கு` என்பதை, `ஈசனை` எனத் திரிக்க. தளராது வந்தி - மனம் சலியாது வணங்கு.
`சிவனை மனம் சலியாது வணங்குவாரைத் துயர்வந்து அணுகாது` என்றதாம்.

பண் :

பாடல் எண் : 2

ஈசன் அவனல்லாது இல்லை எனநினைந்து
கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து - பேசி
மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும்
பிறவாமைக் காக்கும் பிரான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈசன் - ஐசுவரியம் உயைவன்; அஃதாவது, உயிர்களாகிய அறிவுடைப் பொருள்களை அடிமைகளாகவும், ஏனை அறிவிலாப் பொருள்களை உடைமைகளாகவும் உடையவன். எனவே, `முழுமுதல் தலைவன்` என்பதாயிற்று `அவன்` என்பது, முன்னைப் பாட்டிற் போந்த அந்த ஈசனைச் சுட்டிற்று. நினைதல். இங்குத் துணிதலைக் குறித்தது. கூசுதல் - தம்மையும் ஏனையோரை யும் தலைவர்களாக எண்ண நாணுதல். `அவனையே மனத்தகத்துக் கொண்டிருந்து` என்க. `கொண்டிருந்தும், பேசியும்` என எண்ணும்மை விரிக்க. `பிரான்` என்றது, `அவன்` என்னும் சுட்டளவாய் நின்றது. பிறவாமை, எதிர்மறை வினையெச்சம்.
`சிவனைப் பொது நீக்கியுணர்ந்து, மறவாது நினைவாரை அவன் பிறவாமற் காப்பான்` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 3

பிரானென்று தன்னைப்பன் னாள்பர
வித்தொழு வார்இடர்கண்
டிரான்என நிற்கின்ற ஈசன்கண்
டீர்இன வண்டுகிண்டிப்
பொராநின்ற கொன்றைப் பொதும்பர்க்
கிடந்துபொம் மென்துறைவாய்
அராநின் றிரைக்குஞ் சடைச்செம்பொன்
நீள்முடி அந்தணனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அந்தணன், தன்னைப் பன்னாள் பரவித் தொழுவாரது இடரைக் கண்டு (வாளா) இரான் என நிற்கின்ற ஈசன்` என இயைக்க. `பிரான்` என்றது சொல்லுவாரது குறிப்பால், `முழுமுதல் தலைவன்` என்னும் பொருட்டாய் நின்றது. `தன்னையே பிரான் என்று` எனப் பிரிநிலை ஏகாரம் விரித்து, முன்னே கூட்டுக. பரவுதல் - துதித்தல். `ஈசன்` என்பது இங்கு, `இறைவன்` என முன்னர்ப் பொதுமையில் நின்று, பின்னர் `இரான் என நிற்கின்ற` என்னும் அடைபெற்று, சிவனது சிறப்புணர்த்தி நின்றது. `தொழுவாரவர் துயராயின தீர்த்தல் உன தொழிலே` (தி.7 ப.1 பா.9) என நம்பியாரூரரும் அருளிச் செய்தார். கிண்டுதல் - கிளறுதல். பொருதல் - போர் செய்தல். பொதும்பர் - சோலை. பூக்களால் நிரம்பியிருத்தல் பற்றித் திரு முடியை, `சோலை` என்றார். பொம் மெனல், ஒலிக் குறிப்பு. `துறை` எனவே, `கங்கை` என்பது தானே பெறப்பட்டது. `சடையாகிய செம் பொன் முடி` என்க. `சடை, நிறத்தால் பொன்போல்கின்றது` என்பதாம். `பிற முடிதனை விரும்பாதவன்` என்பது குறிப்பு. அந்தணன் - அழகிய தட்பத்தினை (கருணையை) உடையவன்; காரணப் பெயர். கண்டீர், முன்னிலையசை.
`தன்னைப் பொது நீக்கி நினைந்து, பன்னாள் பரவித் தொழுவாரது இடரை நீக்குபவன் சிவன்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 4

அந்தணனைத் தஞ்சம்என் றாட்பட்டார் ஆழாமே
வந்தணைந்து காத்தளிக்கும் வல்லாளன் - கொந்தணைந்த
பொன்கண்டால் பூணாதே கோள்அரவம் பூண்டானே
என்கண்டாய் நெஞ்சே இனி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`முன்னைப் பாடலிற் கூறிய அவ்வந்தணன் அத்தன்மையன் ஆதலின், நெஞ்சே, இனியேனும் அவனது பெருமையைச் சொல்லி அவனைப் புகழ்` என்பது இப்பாட்டின் திரண்ட பொருள். இதன் முதல் இரண்டடிகள் முன்னைப் பாட்டிற் கூறியவற்றை மீட்டும் அநுவதித்துக் கூறியன. `துயரில் ஆழாமே` எனச் சொல்லெச்சம் வருவித்துரைக்க. கொந்து - கொத்து; என்றது தீக் கொழுந்தை. `இணர் எரி` * என்றல் வழக்கு. `கொந்தில் அணைந்த பொன்` என்க. நெருப்பில் காய்ச்சி ஓட விட்ட பொன், மாசு நீங்கி ஒளி மிக்கதாகும். பொன் ஆகுபெயராய், அதனால் ஆகிய அணி கலங்களைக் குறித்தது. கோள்- கொடுமை. `இனி` என்பதன் பின், `ஆயினும்` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது. `அந்தணன்` என்றது, `அவ்வந்தணன்` என்னும் பொருட்டாகலின் முதற்கண், `அந்தணன்` என்றே வைத்து, பின், `அவனை என்` எனக் கூட்டி முடிக்க. கண்டாய், முன்னிலையசை. `கோள் அரவம் பூண்டமையே அவன் `தஞ்சம்` என்று அடைந்தாரை ஆழாமாற் காத்தலைத் தெரிவிக்கும்` என்பது குறிப்பு.
`அறியாது` கழிந்த நாள்கள் போக, அறிந்த பின்னராயினும் தாழாது சிவனைத் துதித்தல் வேண்டும்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 5

இனிவார் சடையினில் கங்கையென்
பாளைஅங் கத்திருந்த
கனிவாய் மலைமங்கை காணில்என்
செய்திகையிற் சிலையால்
முனிவார் திரிபுரம் மூன்றும்வெந்
தன்றுசெந் தீயின்மூழ்கத்
தனிவார் கணையொன்றி னால்மிகக்
கோத்தஎம் சங்கரனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முனிவார் - கோபிப்பவர்; திரிபுரம், (வானத்தில்) திரிந்தபுரம். என வினைத்தொகை. பகைவர், `வெந்து மூழ்க` என்பதனை, `மூழ்கி வேவ` என மாற்றிவைத் துரைக்க. சிலை - வில். `சிலையால்` என்றது, `விற் போரினால்` என்றபடி. வார்கணை- நீண்ட அம்பு. `கணை ஒன்றினால்` என்பதை, `கணை ஒன்றினை` எனத் திரித்துக் கொள்க. அங்கம் - உடம்பு. `காணின் என் செய்தி` என்றது, `நாணித் தலை குனிவை போலும்` என்றபடி. எனினும், `உயிர்களின் நன்மைக்காகவன்றிப் பிறிதொன்றையும் செய்யாதவன்நீ` என்பதை அவன் அறிவான் ஆகலின், `இதுவும் ஒரு நன்மைக்கே` என்பது உணர்ந்து அவனும் முனியப் போவதில்லை; நீயும் நாணுதற்குக் காரணம் இல்லை` என்பது இப்பாட்டின் உள்ளுறைச் சிறப்பு இதனை வட நூலார் `நிந்தாத் துதி` என்றும், அதனைத் தமிழில் பெயர்த்துக் கூறுவார், `பழிப்பது போலப் புகழ்தல்`* என்றும் கூறுவர். பின்னும் இவ்வாறு வருவனவற்றை உணர்ந்து கொள்க.

பண் :

பாடல் எண் : 6

சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற்
பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை - அங்கொருநாள்
ஆவாஎன்று ஆழாமைக் காப்பானை எப்பொழுதும்
ஒவாது நெஞ்சே உரை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சங்கரன் - இன்பத்தைச் செய்பவன். தாழ்ந்த சடை - நீண்டு தொங்குகின்ற சடை. பொங்கு - சினம் மிகுகின்ற. `அங்கொருநாள்` என்றது, கூற்றுவன் வரும் நாளினை. ஆ! ஆ!, இரக்கக் குறிப்பு இடைச்சொல். என்று - என்று இரங்கி. `ஆழாமைக் காப்பான்` என்பது மேலேயும் வந்தது.* ஓவாது - ஓழியாமல். உரை - சொல்லு; துதி. எப்பொழுதும் ஓவாது துதித்தால்தான் காப்பான்` என்பது குறிப்பு. `அன்று துதித்தல் இயலாது` என்பதாம், `சாங்காலம் சங்கரா! சங்கரா என வருமோ` என்பது பழமொழி.

பண் :

பாடல் எண் : 7

உரைக்கப் படுவதும் ஒன்றுண்டு
கேட்கின்செவ் வான்தொடைமேல்
இரைக்கின்ற பாம்பினை என்றுந்
தொடேல்இழிந் தோட்டந்தெங்கும்
திரைக்கின்ற கங்கையுந் தேன்நின்ற
கொன்றையுஞ் செஞ்சடைமேல்
விரைக்கின்ற வன்னியுஞ் சென்னித்
தலைவைத்த வேதியனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உம்மை, சிறப்பு. செவ்வான் தொடை - செவ்விய உயர்ந்த மலர்மாலை; கொன்றை மாலை. இரைக்கின்ற - சீறிக்கொண்டிருக்கின்ற. தொடேல் - தொடாதே. என்றது, அது, `பிறைச் சந்திரன் வளரும்` என்று பசியோடு காத்திருக்கின்றது; அதனால் சினம் மிகுந்து கடித்துவிடலாம் - என்றபடி. இதனால், `தம்முட் பகையுடையவனவாகிய பாம்பையும், மதியையும் ஓரிடத்தில் சேர்த்து வைத்திருக்கின்றா யல்லையோ` எனக் குறிப்பாற் புகழ்ந்தவாறு. இழிந்து ஓட்டத்து - கீழே வீழ்ந்து ஓடும்பொழுது. திரைக்கின்ற - அலை வீசுகின்ற. விரைக்கின்ற - `வாசனை வீசுகின்ற கொன்றை` என இயைக்க. வன்னி - வன்னியிலை. தலை, ஏழாம் வேற்றுமையுருபு. வேதியன் - வேதம் ஓதுபவன். `சிவன் சாம வேதத்தை ஓதுபவன்` என்பர். ஓதுதல் பிறர் அறியவாம்.

பண் :

பாடல் எண் : 8

வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்
காதியனை ஆதிரைநன் னாளானைச் - சோதிப்பான்
வல்லேன மாய்ப்புக்கு மாலவனும் மாட்டாது
கில்லேன மாஎன்றான் கீழ்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வேதத்தை ஓதுபவனும், வேதத்திற்குப் பொருளாய் உள்ளவனும், வேதத்தைச் செய்தவனும் ஆகிய ஆதிரை நன்னாளானை` என்க. `சோதித்தற்கு மாலவனும் வல் ஏனமாய்க் கீழ்ப் புக்கு, மாட்டா- கில்லேன் அமா - என்றான்` என வினை முடிக்க. சோதித்தல்- அளந்தறிதல். ஏனம் - பன்றி. கில்லேன் - மாட்டேன். `அம்மா` என்னும் வியப்பிடைச்சொல் இடைக்குறைந்து நின்றது. `மாலவனும்- கில்லேன் - என்றான்` என்றதனால், `ஏனையோர் மாட்டாமை சொல்ல வேண்டுவதோ` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 9

கீழா யினதுன்ப வெள்ளக்
கடல்தள்ளி உள்ளுறப்போய்
வீழா திருந்தின்பம் வேண்டுமென் பீர்
விர வார்புரங்கள்
பாழா யிடக்கண்ட கண்டன் எண்
தோளன்பைம் பொற்கழலே
தாழா திறைஞ்சிப் பணிந்துபன்
னாளுந் தலைநின்மினே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`இழிந்த துன்பமாகிய பெரிய கடலிலே தள்ளப்பட்டு, அதன் உள்ளே அழுந்தாமல் வேறிருந்து நுகர்கின்ற இன்பம் வேண்டும்` என்று விரும்புகின்றவர்களே - என்று எடுத்து, `தலைநின்மின்` என முடிக்க. நின்றால், `அத்தகைய இன்பம் கிடைக்கும்` என்பது குறிப்பெச்சம். தள்ளுதலுக்கு `வினையால்` என்னும் வினைமுதல் வருவிக்க. `இருந்து நுகர்கின்ற` என ஒரு சொல் வருவிக்க. `துன்பக் கலப்பு இல்லாத இன்பம்` என்றபடி. அது வீட்டின்பமேயாம். விரவார் - கலவாதவர்; பகைவர். `கண்ட` என்றது `செய்த` என்றபடி. கண்டன் - வன்கண்மையுடையவன். `வன்கண்மை குற்றத்தின் மேலது` என்பது கருத்து.
தாழாது - தாமதியாமல். இறைஞ்சுதல் - தலை வணங்குதல். பணிதல் - அடியில் வீழ்தல். தலை, இடைச் சொல்லாதலின், `தலைநின் மின்` என்றது ஒருசொல் நீர்மைத்து. `அச்செயலிலே நின்மின்` என்றதாம்.

பண் :

பாடல் எண் : 10

தலையாய ஐந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து
தலையா யினவுணர்ந்தோர் காண்பர் - தலையாய
அண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்டிருண்ட
கண்டத்தான் செம்பொற் கழல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தலையாய ஐந்து - மந்திரங்களுள் தலையாய ஐந்தெழுத்து, சாதித்தல் - கடை போகப் பற்றி முயலுதல். அஃது இங்குக் கணித்தலைக் குறித்தது. தாழ்தல் - வணங்குதல். தலையாயின - மேலான நூல்கள் `அருள் நூலும், ஆரணமும், அல்லாதும், அஞ்சின்- பொருள் நூல்களே` * ஆதலின் அவற்றை உணர்ந்தோர் திருவைந் தெழுத்தையே பற்றிச் சாதிப்பர் - என்றபடி. தலையாய அண்டம் - சிவலோகம். `தலையாயின உணர்ந்தோர் சாதித்துத் தாழ்ந்து கழல் காண்பர்` என வினை முடிக்க, இதனுள் சொற்பொருள் பின்வரு நிலையணி வந்தது.

பண் :

பாடல் எண் : 11

கழற்கொண்ட சேவடி காணலுற்
றார்தம்மைப் பேணலுற்றார்
நிழற்கண்ட போழ்தத்தும் நில்லா
வினைநிகர் ஏதுமின்றித்
தழற்கொண்ட சோதிச்செம் மேனியெம்
மானைக்கைம் மாமலர்தூய்த்
தொழக்கண்டு நிற்கிற்கு மோதுன்னி
நம்அடுந் தொல்வினையே.

பொழிப்புரை :

குறிப்புரை :

`நிகர் ஏதுமின்றித் தழற்கொண்ட சோதிச் செம் மேனி எம்மான்` - சிவன். அவன் தனக்குவமையில்லாதவன்; நெருப்பினிடத்துள்ள ஒளிபோலும், சிவந்த மேனியை உடையவன். `அவனது கழலழணிந்த, சிவந்த பாதங்களைக் கண்டவர்களை வணங்குபவர்களது நிழலைக் கண்டாலே வினைகள் ஓடிவிடும் என்றால், அப்பெருமானை நாம் நமது கைகளால் மலர் தூவித் தொழுவதைப் பார்த்த பிறகு நம்மை வருத்துகின்ற நமது பழைய வினைகள் நம்மை நெருங்கி நிற்குமோ` என்க. `சிவன் அடியார்களையும், அடியார்க்கு அடியார்களையும் கண்டால் வினைகள் நிற்க மாட்டாது ஓடி விடும்` என்றபடி. `கழல், நிழல், தழல்` என்பவற்றின் ஈறு திரிந்தது செய்யுள் நோக்கி. உம்மை இரண்டனுள் முன்னது இழிவு சிறப்பு; பின்னது உயர்வு சிறப்பு. `போழ்தத்து` என்பதில் அத்து, வேண்டாவழிச் சாரியை. `வினை துன்னி நிற்குமோ` என மாறிக் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 12

தொல்லை வினைவந்து சூழாமுன் தாழாமே
ஒல்லை வணங்கி உமையென்னும் - மெல்லியலோர்
கூற்றானைக் கூற்றுருவங்காய்ந்தானை வாய்ந்திலங்கு
நீற்றானை நெஞ்சே நினை.

பொழிப்புரை :

குறிப்புரை :

தொல்லை - பழமை. தாழாமே - தாமதி யாமலே. ஒல்லை - விரைவாக. கூற்று - யமன். காய்தல். உதைத்த லாகிய தன் காரியம் தோற்றிநின்றது. வாய்ந்து - (திருமேனியில்) பொருந்தி. `வணங்கி நினை` என்பதை `நினைந்து வணங்கு` என முன் பின்னாக நிறுத்தி, விகுதி பிரித்துக் கூட்டியுரைக்க.

பண் :

பாடல் எண் : 13

நினையா தொழிதிகண் டாய்நெஞ்ச
மேஇங்கொர் தஞ்சமென்று
மனையா ளையும்மக்கள் தம்மையுந்
தேறிஓர் ஆறுபுக்கு
நனையாச் சடைமுடி நம்பன் நந்
தாதைநொந் தாதசெந்தீ
அனையான் அமரர் பிரான்அண்ட
வாணன் அடித்தலமே.

பொழிப்புரை :

குறிப்புரை :

`நெஞ்சமே, மனையாளையும் மக்கள் தம்மை யும், `இங்கு ஒர் தஞ்சம்` என்று தேறி, அண்ட வாணன் அடித்தலம் நினையாது ஒழிதியோ` என இயைத்துக்கொள்க. மனையாளும், மக்களும் அம்மையார்க்கு இல்லையாதலின், `அவர்களைத் தேறி` என்றது, `அவர்களைத் தேறும் பிறரது மனங்களைப்போலவே நீயும் ஆகி` என்றது என்க. `சிவனதாள் சிந்தியாப் பேதைமார் போல நீ வெள்கினாயே... நெஞ்சமே`1 என அருளிச்செய்தார் ஞான சம்பந்தரும். `ஒழிதியோ` என்பதில் வினாப் பொருட்டாய ஓகாரம் தொகுத்தலாயிற்று, `கடையவ னேனைக் கருணையினாற்கலந் தாண்டு கொண்ட - விடையவனே விட்டிடுதி கண்டாய்` 2 என்பதிற்போல. அவ்வோகாரத்தால், `அங்ஙனம் செய்தியாயின் கெடுவை` என்னும் குறிப்புப் போந்தது. கண்டாய், முன்னிலையசை. இங்கு - இவ்வுலகில். தஞ்சம் - புகலிடம். தேறுதல் - தெளிதல். ஓர் ஆறு, கங்கை. கங்கை யாறு புக்கது; ஆயினும் சடை நனைய வில்லை` என்றது சடைக்கு அதுபோதவில்லை என்றபடி. நொந்தாத- மிகுக்க வேண்டாத. `மிக எரிகின்ற` என்றபடி. அனையான் - போன்றவன். அண்டவாணன் - சிவலோகத்தில் வாழ்பவன். அடித்தலம் - திருவடியாகிய புகலிடம், `புகலிடம் ஆகாததை, ஆகும் என்று மயங்கிப் புகலிடம் ஆவதை விட்டொழியாதே` என அறிவுறுத்தவாறு.

பண் :

பாடல் எண் : 14

அடித்தலத்தின் அன்றரக்கன் ஐந்நான்கு தோளும்
முடித்தலமும் நீமுரித்த வாறென் - முடித்தலத்தின்
ஆறாடி ஆறாஅனலாடி அவ்வனலின்
நீறாடி நெய்யாடி நீ.

பொழிப்புரை :

குறிப்புரை :

`அடித்தலத்தின் நெரித்தவாறு` என இயையும். இன், ஐந்தாம் உருபு. அரக்கன், இராவணன். `முரித்தவாறு என்` - என்றது, `பிழை நோக்கி ஓறுத்தல் வேண்டியோ` என்றபடி. ஒறுத்தபின் இசைபாடித் துதிக்க அருள்செய்தமையும் கேட்கப்படுவதால், `பிழை செய்தவரும் அஃது உணர்ந்து பணிந்தால், பிழையை நோக்காது அருள் செய்பவன் நீ` என்பதும் குறிக்கப்பட்டதாம். `ஆடி` நான்கும் பெயர்கள். அவற்றுள் முதற்கண் உள்ளதில் இகர விகுதி செயப்படு பொருட்டாயும் ஏனையவற்றில் அது வினைமுதற் பொருட்டாயும் நின்றது. ஆறு - கங்கை. `அனலோ` என்றாயினும். `அனலின்கண்` என்றாயினும் ஏற்கும் உருபு விரித்துக்கொள்க. `நீற்றின் கண்` என ஏழாவது விரிக்க. `நீ ஆடுபவன்; நீ அரக்கனது தோளையும் முடியையும் முரிக்கக் காரணம் என்ன? என வினை முடிக்க. `தலம்` மூன்றும், `இடம்` என்னும் பொருளன. `அடிகளாகிய தலம், முடியாகிய தலம்` என்க.

பண் :

பாடல் எண் : 15

நீநின்று தானவர் மாமதில்
மூன்றும் நிரந்துடனே
தீநின்று வேவச் சிலைதொட்ட
வாறென் திரங்குவல்வாய்ப்
பேய்நின்று பாடப் பெருங்கா
டரங்காப் பெயர்ந்துநட்டம்
போய்நின்று பூதந் தொழச்செய்யும்
மொய்கழற் புண்ணியனே.

பொழிப்புரை :

குறிப்புரை :

தானவர் - அசுரர். நிரந்து - ஒருங்கே. உடனே- விரைவில். `தீயின்கண் நின்று` என உருபுவிரிக்க. சிலை - வில். தொடுதல் - வளைத்தல். இது, அம்பெய்தலாகிய தன் காரியம் தோற்றி நின்றது. திரங்கு - தசை மெலிந்து தொங்கிய. வல் வாய் - பிணத்தைத் தின்னும் வாய். பெயர்ந்து - புடை பெயர்ந்து. `நட்டம் செய்யும்` என இயைக்க. `பூதம் போய் நின்று தொழ` என மாறிக் கூட்டுக. `வந்து` என்பதனை, `போய்` என்றது இடவழுவமைதி. எனவே, `நின்பால் வந்து தொழ` என்றவாறாம். மொய் கழல் - பாதத்தைச் சூழ்ந்த கழல். புண்ணியன் - அற வடிவினன். `மதில் மூன்றும் வேவச் சிலைதொட்ட வாறு என்` என்றதற்கு முன்பாட்டில் `நீ முரித்தவாறு என்` என்றதற்கு உரைத்தவாறே உரைக்க. பின்னிரண்டடிகள் ஆசெதுகை பெற்றன.

பண் :

பாடல் எண் : 16

புண்ணியங்கள் செய்தனவும் பொய்ந்நெறிக்கட் சாராமே
எண்ணியோ ரைந்தும் இசைந்தனவால் - திண்ணிய
கைம்மாவின் ஈருரிவை மூவுருவும் போர்த்துகந்த
அம்மானுக் காட்பட்ட அன்பு.

பொழிப்புரை :

குறிப்புரை :

`(யாம்) பொய்ந்நெறிகளில் சேராமல் விலகிய துடன், செய்த செயல்களும் புண்ணியங்களே. அஃது (எவ்வாற்றால் எனின்) எண்ணப்பட்ட ஐம்பொறிகளும் அம்மானுக்கு ஆட்பட்ட அன்பிற்கு இசைந்தவாயின` என இயைத்துப் பொருள் கொள்க. உம்மை, இறந்தது தழுவிய எச்சம். எண்ணிய - `ஐந்து` என்று எண்ணப் பட்ட. ஈற்று அகரம் தொகுத்தல். ஆல், அசை. கைம்மா - யானை. `ஈர் உரிவை`, வினைத் தொகை `உரித்த தோல்` என்பது பொருள். மூவுருவம் - மும்மூர்த்தி உருவம். `அன்பிற்கு` என நான்காம் உருபு விரித்து, `அன்பு செய்தற்கு` என உரைக்க. `ஐம்பொறிகள் அன்பு செய்தற்கு இசைந்தன` என்றமையால், `இசையாது மாறிச் செல்லுதலே அவற்றின் இயல்பு` என்பதும், `அவற்றை அவ்வாறு இசையச் செய்தல் வேண்டும்` என்பதும் குறிப்பால் உணர்த்தப்பட்டன. `ஈருரிவை, மூவுருவம்` என்பது எண்ணலங்காரநயம் தோற்றி நின்றது.

பண் :

பாடல் எண் : 17

அன்பால் அடைவதெவ் வாறுகொல்
மேலதோ ராடரவம்
தன்பால் ஒருவரைச் சாரவொட்
டா ததுவேயுமன்றி
முன்பா யினதலை யோடுகள்
கோத்தவை ஆர்த்துவெள்ளை
என்பா யினவும் அணிந்தங்கோர்
ஏறுகந் தேறுவதே.

பொழிப்புரை :

குறிப்புரை :

`கொல், ஐய இடைச்சொல். அதனால், அடையு மாற்றை நீரே அருளுதல் வேண்டும்` என்பது குறிப்பெச்சமாயிற்று. `ஐயரே, நும் மேலது` என முன்னிலையை வருவித்து, `நும்மைப் பிறர் அன்பால் அடைவது எவ்வாறு கொல்` என முடிக்க. ஓர் அரவு, முடி மேல் உள்ளது. ஆடு அரவு - படமெடுத்து ஆடுகின்ற பாம்பு. `ஆகவே அது சீறுகின்றது` என்றதாம். `முன்பு ஆயின` எனப் பிரித்து, `தலை ஓடுகள்` என முடித்து, `அவை கோத்து` என வேறெடுத்துக் கொண்டு உரைக்க. `கோத்து ஆர்த்து, அணிந்து, உகந்து ஏறுவது ஏர் ஏறு` என்க. ஏறு - இடப. `அது பாய்வதால் அச்சம் உண்டாதலுடன், யானை மீதும், குதிரை மீதும் ஏறாமல், இடபத்தின்மேல் ஏறுவதால், நன்கு மதிக்கவும் இயலவில்லை` என்பதாம்.
`கடகரியும் பரிமாவும் தேரும்உகந் தேறாதே
இடபம்உகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீ`1
என்றது காண்க. உகத்தல் - விரும்புதல். `பாம்பும், இடபமும் பகையா யினாரைச் சீறுதலும், பாய்தலும் செய்யுமேயல்லது, அன்பரை ஒன்றும் செய்யா` என்பதும், `யானை குதிரைகளின் மேல் ஏறியும், மணி மாலைகளை அணிந்து யாம் பெருமை பெற வேண்டுவதில்லை` என்பதும், `எவ்வாறு கொல்` என்னும் ஐயத்தை நீக்கும் விடைகள் என்பது கருத்து. `பூணாணாவதோர் அரவங்கண் டஞ்சேன்` 2 என்று அருளிச் செய்தமை காண்க.

பண் :

பாடல் எண் : 18

ஏறலால் ஏறமற் றில்லையே எம்பெருமான்
ஆறெலாம் பாயும் அவிர்சடையார் - வேறொர்
படங்குலவு நாகமுமிழ் பண்டமரர்ச் சூழ்ந்த
தடங்கடல்நஞ் சுண்டார் தமக்கு.

பொழிப்புரை :

குறிப்புரை :

`எம்பெருமானும், அவிர் சடையாரும் ஆகிய நஞ்சுண்டார் தமக்கு ஏற, ஏறலால் மற்று இல்லையே` என முடிக்க. `பெருமான்` என்பது ஒருமையாயினும் உயர்த்துக் கூறும் சொல்லாதலின் பன்மையோடு மயங்கிற்று. `இல்லையே` என்னும் ஏகாரம் வினாப் பொருட்டாய், `உறவாகவும் விரும்பிலர்` என்னும் குறிப்பினதாய் நின்றது. `ஆறு` என்றது ஆகுபெயராய் அதன் நீரைக் குறித்தது. வேறோர் நாகம், உயர்ந்த பாம்பு, அது `வாசுகி` என்பது. `உமிழ்ந்த நஞ்சு, சூழ்ந்த நஞ்சு` எனத் தனித்தனி இயைக்க. `அமரரை` என்னும் இரண்டாம் உருபு தொகுத்தலாயிற்று. `அமரர் சூழ்ந்த` என்பது பாடம் அன்று, முன்னைப் பாட்டில் கூறியவாறு, `ஏற்றையே உகந்து ஏறுவது இல்லாமையாலன்று; விரும்பாமையால்` என்பது இங்குக் கங்கையைத் தாங்கி மண்ணுலகினரைக்காத்தமை, நஞ்சை உண்டு விண்ணோரைக் காத்தமை இவற்றைக் குறித்த குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

தமக்கென்றும் இன்பணி செய்திருப்
பேமுக்குத் தாமொருநாள்
எமக்கென்று சொன்னால் அருளுங்கொ
லாமிணை யாதுமின்றிச்
சுமக்கின்ற பிள்ளைவெள் ளேறொப்ப
தொன்றுதொண் டைக்கனிவாய்
உமைக்கென்று தேடிப் பொறாதுட
னேகொண்ட உத்தமரே.

பொழிப்புரை :

குறிப்புரை :

`இணை யாதும் இன்றி` என்றது, `காளைகளைப் பயன்படுத்துகின்றவர்கள் இரண்டை இணைத்தே பயன்படுத்துவர் ஆகலின் அவ்வாறு இணைத்தற்கு ஒன்று கிடையாமையால் ஒரு காளையையே உடையவராய் இருக்கின்றார்` என்றபடி.
`இனி ஒற்றைக் காளையையே பயன்படுத்துவதாயினும் உமாதேவி ஊர்வதற்கு மற்றொரு காளை இன்றியமையாது வேண்டும்; அஃது இல்லாமையால், அவளையும் தமது ஒரு காளையின்மேலே உடன் ஏற்றிக் கொண்டு வருகின்றார்` என மேலும் குறிகூறியபடி. `இத்தகைய இலம்பாடு (வறுமை) உடையவர், அவருக்கென்றே நாம் என்றும் பணிசெய்திருப்பினும், `எமக்கு என்று என்று ஒன்று இரந்தால், அதனை ஈய வல்லவராவரோ` - என ஐயுறுகின்றோம்` என்பது இப்பாட்டிற் கூறப்பட்ட பொருள். இதவும் நிந்தாத் துதி. `ஒருநாள் அருளுங்கொல்` என்றமையால், `எந்நாளும் அருள மாட்டாது வாளாதே இருப்பரோ` என்பதும் போந்தது. ஆம், அசை. `எமக்கு என்று` என்பதன் பின், `ஒன்று` என்பது வருவிக்க. `சொன்னால்`` என்றது, `வேண்டினால்` என்றபடி. `பிள்ளை` என்றது, இளமையைக் குறித்தது. `இணை யாதும் இன்றி` என்பது, `தனியே சுமக்கின்றது` என்பதைக் குறித்தற்கும் `வேறு ஒப்பதுஒன்று பெறாது` என்பது இணைத்தற்கு இல்லை? என்பதைக் குறித்தற்கும் கூறியன ஆகலின், கூறியது கூறல் ஆகாமை யறிக. தொண்டைக் கனி - கொவ்வைக் கனி. உத்தமர் - எல்லாரினும் மேலானவர். என்றது, `மற்றொரு காளையை இவர் கொள்ளாமைக்குக் காரணம் வறுமையன்று; உமையாளையும் ஒரு காளைமேல் உடன் கொண்டு செல்ல விரும்புதலேயாம்` என்பதை உணர்த்தி, `ஆகவே, `இவர் எம்மைத் தம் அடிமையென்று கருதியிரங்கி, வேண்டியவற்றை ஈபவரே எனவும் குறித்தவாறு. நம்பியாரூரரும் இவ்வாறே, முன்னர், `ஊர்வது ஒன்று (ஏ) உடையான்`* எனக் கூறிப் பின்னர், `உம்பர் கோன்` என அவனது பெருமையுணர்த்தியவாறு அறிக.

பண் :

பாடல் எண் : 20

உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் உற்றார்கள்
செத்த மரமடுக்கித் தீயாமுன் - உத்தமனாய்
நீளாழி நஞ்சுண்ட நெய்யாடி தன்திறமே
கேளாழி நெஞ்சே கிளர்ந்து.

பொழிப்புரை :

குறிப்புரை :

உத்தமராய் - கல்வி, செல்வம், அதிகாரம், முதலியவற்றில் ஒன்றாலேனும், பலவற்றாலேனும் உயர்ந்தவர்களாய். `வாழ்வாரும்` என்னும் உயர்வு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. உலந்தக்கால் - இறந்துவிட்டால். `உயர்ந்தவர்களாய் வாழ்ந்தவர் களாயிற்றே` என்று எண்ணுதல் இன்றி, எல்லாரோடும் ஒப்பச் செத்த மரத்தையே (காய்ந்த விறகையே) அடுக்கி, அவற்றோடு ஒன்றாகச் சேர்த்து! உறவினர்கள் தீத்து (எரித்து) விடுவார்கள் `இவ்வளவே இவ்வுலக வாழ்வு` என்றபடி. `ஆகையால் இந்த வாழ்விலே ஆழ்தலை யுடைய நெஞ்சே, உன்னையும் அவ்வாறு செய்தற்கு முன், சிவனது புகழை அறிந்தோர் சொல்லக் கேள்` என்க. `கேட்டால், `நிலையான வாழ்வைப் பெறுவாய்` என்பது குறிப்பெச்சம். `உத்தமன்` என்பதற்கு, முன்னைப்பாட்டில் `உத்தமர்` என்றதற்கு உரைத்தவாறே உரைக்க. `ஆழி` இரண்டில் முன்னது, `கடல்` என்னும் பொருட்டாயும், பின்னது `ஆழ்தல் உடையது` என்னும் பொருட்டாயும் நின்றன. `கிளர்ந்து கேள்` என முன்னே கூட்டி, `ஊக்கம் கொண்டு கேள்` என உரைக்க. இங்ஙனம் உரைக்கவே, `ஊக்கம் இன்றிக் கேட்டல் பயனுடைத்தாகாது` என்பது பெறப்பட்டது.
`இரட்டை மணி மாலை இருபது பாட்டுக்களால் அமைதல் வேண்டும்` என்பதனால் திருக்கடைக் காப்புக் கூறிற்றிலர். இப்பிரபந்தம் முழுவதும் அந்தாதியாய் வந்து மண்டலித்தவாறு காண்க.

பண் :

பாடல் எண் : 1

பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்ப திடர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பயின்ற - பயின்று நன்கு உணர்ந்த. பின் - பிற்பட்ட காலம். என்றது, `சிறு காலையே` என்றபடி. சேர்ந்தேன் - துணையாக அடைந்தேன். என்றது, தமது ஞானத்தின் இயல்பைக் குறித்தவாறு. இதனையே சேக்கிழார்,
`வண்டல்பயில் வனவெல்லாம் வளர்மதியம் புனைந்தசடை
அண்டர்பிரான் திருவார்த்தை அணையவரு வனபயின்று`*
என அருளிச் செய்தார். நிறம் - அழகு. `மணிகண்டம்` எனப்படுதல் அறிக. மை ஞான்ற - கருமை நிறம் ஓரளவில் (கண்டத்தளவில்) ஒட்டி நின்ற. இடர் - துன்பம்; பிறவித் துன்பம். `எஞ்ஞான்று தீர்ப்பது` என்றது, `அதனை யறிந்திலேன்` என்னும் குறிப்பினது, அதாவது, `இப்பிறப்பிலோ, இனி வரும் பிறப்பிலோ` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 2

இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும் - சுடருருவில்
என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்
கன்பறா தென்நெஞ் சவர்க்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

படரும் நெறி - செல்லும் கதி என்றது, நற் கதியை. பணித்தல் - உரிமை செய்தல். உம்மைகள், `அவற்றை அவர் செய்யாதொழியார்` என்பதைக் குறித்தலின், எதிர்மறை. சுடர் உரு - ஒளி வீசுகின்ற உருவம். `கோலத்தோடு` என உருபு விரிக்க. `அவர்க்கு` என்பதன் பின், `ஆயினமையால்` என ஒரு சொல் வருவிக்க. `அன்பை அறுத்துவிடாது` என்றேனும், `அன்பு அறப் பெறாது` என்றேனும் உரைக்க.

பண் :

பாடல் எண் : 3

அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்
அவர்க்கேநாம் அன்பாவ தல்லால் - பவர்ச்சடைமேற்
பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்
காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதற்கண், `அல்லால்` என்றது, அன்பாதலைக் குறித்தும், பின்னர், `அல்லால்` என்றது, போழ் சூடும் அவரைக் குறித்துமாம். அன்புடையேமை, `அன்பு` என்றது உபசாரவழக்கு. பவர் - கொடி. `பவர் போலும் சடை` என்க. பாகு - ஒரு பகுதி. பாகு ஆக - ஒரு பகுதியில் பொருந்தும்படி போழ் - பிளவு. திங்களின் பிளவு. ஆள் - ஆளாம் தன்மை. `அவர்க்கு அல்லால், எம் ஆளாம் தன்மை. எஞ்ஞான்றும் மற்றொருவர்க்கு ஆகாதே போம்` என இயைத்துக்கொள்க. `ஆகாது` என்பதில் துவ்வீறும், பின்னர்த் தேற்றேகாரமும் தொகுத்தலாயின.

பண் :

பாடல் எண் : 4

ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டாற்
கேளாத தென்கொலோ கேள்ஆமை - நீள்ஆகம்
செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம்
எம்மையாட் கொண்ட இறை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கேள் ஆமை யாக` என ஆக்கம் வருவிக்க. கேள் - உறவு. ஆமை, ஆமை ஓடு. அதனை அணியத் தகும் பொருளாக அணிந்த. ஆகம் - மார்பு. மார்பைக் கூறவே, உடல் முழுவதையும் கூறியதாயிற்று. `ஆகம் செம்மையான்` என, சினையினது பண்பு முதல்மேல் ஏற்றப்பட்டது. செம்மையைச் சுட்டிப் பின், `மற்றொன்று` என்றமையால், `கருமை` என்றதாயிற்று. `ஆம் இறை, ஆட்கொண்ட இறை` எனத் தனித்தனி இயைக்க. `கேளாதது என்கொலோ` என்றது, `இன்னும் முறையிடல் வேண்டும் போலும்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 5

இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி
இறைவனே ஈண்டிறக்கஞ் செய்வான் - இறைவனே
எந்தாய் என இரங்கும் எங்கள்மேல் வெந்துயரம்
வந்தால் அதுமாற்று வான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இறக்கம் - நீக்குதல்; அழித்தல். `இறைவன்` என்றது, `சிவன்` என்றபடி. `இறைசிவன், கடன்வேந் தன்கையிறை, யிறுப்பு. இறை சிறந்தோன்` * என்னும் நிகண்டினால், `இறைவன்` என்பது சிவனுக்கே உரிய சிறப்புப் பெயராதல் விளங்கும். `உலகம் முழுவதையும் ஆக்கி அழிப்பவனும், உயிர்களுக்குத் துன்பத்தை நீக்கி இன்பத்தை அளிப்பவனும் சிவனே` என்பது உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 6

வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்
தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான்
முன்நஞ்சத் தாலிருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான்
என்நெஞ்சத் தானென்பன் யான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வானம் - சிவலோகம். `உம்பர்கோன்` என்றது சீகண்ட உருத்திரரை- அவரது தானம் (இடம்) கயிலாயம். இருண்ட - இருள்மயமான. மொய்யொளி - செறிந்த ஒளி. `என்பாரும், என்பாரும்` என்க. யான் `ஞானத்தானும், என் நெஞ்சத்தானும்` என்பன்` என இயைத்து முடிக்க. சிவலோகத்திலும், கயிலாயத்திலும் இருத்தல் தடத்த நிலையால், ஆகலின், சிவஞானம் பெற்ற சீவன் முத்தர்களது உள்ளத்தில் இருப்பவனாக உணர்தலே அவனது உண்மை நிலையை உணர்தலாம்` என்றபடி. மூன்றாம் அடியை முதலிற் கூட்டி, அதன் இறுதியில் இரண்டாம் உருபு விரித்து, பின் வந்த `என்க` என்பதன்பின் `அவன்` எனச் சுட்டியுரைக்க.

பண் :

பாடல் எண் : 7

யானே தவமுடையேன் என்னெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானே அக்
கைம்மா வுரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற
அம்மானுக் காளாயி னேன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரண்டாம் அடி ஈற்றில் உள்ள, `யானே` என்பது முதலாகத் தொடங்கி, ஈற்றடியின் முடிவில், `ஆதலின்` என்பது வருவித்து உரைக்க. நீற்ற - நீற்றையணிந்த, ஏகாரங்கள் ஏனையோரினின்றும் பிரித்தலின் பிரிநிலை. இவற்றால், `பிறர் தம்மை இவ்வாறு கூறிக்கொள்வன எல்லாம் மயக்க உரைகளாம்` என்றபடி. சிவனுக்கு ஆளாதலின் அருமையையும், பயனையும் குறித்தவாறு. `என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து - முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை... வலஞ்சுழி வாணனை வாயாரப் - பன்னி, ஆதரித்து ஏத்தியும், பாடியும் வழிபடும் அதனாலே` 1 எனவும், `எந்த மாதவம் செய்தனை நெஞ்சமே - பந்தம் வீடவையாய பராபரன்... சிந்தையுள்ளும் சிரத்துளும் தங்கவே`, `என்ன மாதவம் செய்தனை நெஞ்சமே - மின்னு வார்சடை வேத விழுப்பொருள்.... செந்நெறி - மன்னுசோதி நம் பால் வந்து வைகவே`2 எனவும் போந்தவற்றையும் உணர்க.

பண் :

பாடல் எண் : 8

ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன்
ஆயினேன் அஃதன்றே ஆமாறு - தூய
புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான்
அனற்கங்கை ஏற்றான் அருள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஆள்வானுக்கு (ஆள் ஆயினேன்; அன்றே பெறற்கரியன் ஆயினேன்; அஃதன்றே அவன் அருள் ஆமாறு` என இயைத்து முடிக்க.
ஆள்வான் - உண்மையா ஆள்வான்; சிவன் `ஆள்வான்` என்றதனால், `ஆயினேன்` என்றது, `ஆள் ஆயினேன்` என்ற தாயிற்று. `பெறற்கு அரியன்` என்றது, `சிவன்` என்றபடி. `சிவனுக்கு ஆளாயினேன்; அன்றே யானும் சிவனா யினேன்; தன் அடியவரைத் தானாகச் செய்தலேயன்றோ சிவனது திருவருளின் சிறப்பு` என்றபடி. `திகழ்ந்த மெய்ப்பரம் பொருள் - சேர்வார் தாமே தானாகச் செயுமவன்` 3 என்றது காண்க. `தூய... போல்வான்` என்றது `சிவன்` என்றபடி. `புனலாகிய கங்கை` என்க. `அனற்கு அங்கை` என்பதை, `அங்கைக்கு அனல்` எனப் பின் முன்னாக நிறுத்தி, உருபு பிரித்துக் கூட்டி, நான்காம் உருபை ஏழாம் உருபாகத் திரித்துக் கொள்க.

பண் :

பாடல் எண் : 9

அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன்
அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
எப்பொருளும் ஆவ தெனக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஈசன் அருளே உலகெலாம் ஆள்விப்பது, பிறப்பு அறுப்பது ஆனால், அவன் அருளாலே (யான்) மெய்ப் பொருளையும் நோக்கும் விதியுடையேன்; ஆதலின், எனக்கு எஞ்ஞான்றும் எப்பொருளும் ஆவது அவன் அருளே` என இயைத்து முடிக்க. ஈசன் - சிவன். `ஆனால்` என்பது தெளிவின்கண் வந்தது, `காண்பவன் சிவனே யானால்`1 என்பதிற் போல. `மெய்ப்பொருளை யும்` என்னும் சிறப்பும், இறந்தது தழுவியதும் ஆகிய உம்மை தொகுத்தலாயிற்று. நோக்குதல் - ஆராய்தல் . அறிவிப்பதொரு துணையின்றித்தானே அறியமாட்டாத இயல்பையுடையது உயிரினது அறிவு. அத்தன்மைத்தாகிய அவ்வறிவு, குறைபாடுடைய கருவி களைத் துணையாகக் கொண்டு அறியுமிடத்து அறியப்படும் பொருள் களது இயல்பு பொதுவாக விளங்குதலன்றி, உண்மையாக விளங்காது. அதனால், குறைவிலா நிறைவாகிய இறைவனது அருளைத் துணையாகக் கொண்டு அறியுமாயின், அப்பொழுது பொருள்களின் இயல்பு உண்மையாக விளங்கும்.
இனிப் பிறபொருளைக் காட்டுகின்ற கதிரவனது ஒளியே தன்னையும் காட்டுவதாகும் அல்லது, அவனைப் பிறிதோர் ஒளி காட்டமாட்டாது. ஆகையால், கதிரவன் ஒளியைக் கொண்டே கதிரவனைக் காணுதல் போல, இறைவனது அருளால் எல்லாப் பொருள்களையும் அறிதலுடன், அவனையும் அவன் அருளாலேதான் அறிதல் வேண்டும். அது பற்றியே `அவன் அருளாலே அவன் தாள் வணங்கி` 2 என்னும் திருமொழி எழுந்தது. அதனையே இங்கு அம்மையார்,`அருளாலே மெய்ப்பொருளையும் நோக்கும் விதியுடையேன்` என்றார். விதி - முறைமை. இங்ஙனம் எப்பொருளையும் அருளாலே நோக்காது, கருவிகளாலும், நூல்களாலும் விளங்கும் தம் அறிவு கொண்டே பொருள்களை நோக்குவார்க்கு மெய்யுணர்வு தோன்றாது, திரிபுணர்வே தோன்றும் என்க.
இதனையே,
இப்படியால் இதுவன்றித் தம்மிசைவு கொண்டியலும்,
துப்புரவில் லார்துணிவு துகளாகச் சூழ்ந்தார்.1
என்று அருளிச் செய்தார் சேக்கிழார்.
அருளால் எவையும் பார்என்றான்:- அத்தை
அறியாதே சுட்டிஎன் அறிவாலே பார்த்தேன்;
இருளான பொருள்கண்ட தல்லால், - கண்ட
என்னையும் கண்டிலன் என்னேடி, தோழி 2
எனத் தாயுமான அடிகளும் கூறினார். `மெய்ப்பொருளாவது யாது` என முதற்கண் ஆராய்தல், இறைவன் உள் நின்று உணர்த்தும் முறையை நோக்கும் நோக்கினாலும், அவன் ஆசான் மூர்த்தியாய் வந்து அறிவுறுக்கும் அருள்மொழியாலுமாம் என்க. அவ்வாற்றான் நோக்குவார்க்கே உண்மை புலனாவதன்றிப் பிறவாற்றான் நோக்கு வார்க்கே உண்மை புலனாகாது என்பதை,
சாத்திரத்தை யோதினர்க்குச் சற்குருவின் தன்வசன
மாத்திரத்தே வாய்த்தவளம் வந்துறுமே - ஆர்த்தகடல்
தண்ணீர் குடித்தவர்க்குத் தாகம் தணிந்திடுமோ
தெண்ணீர்மை யாய்இதனைச் செப்பு
எனத் திருக்களிற்றுப்படியார் 3 வலியுறுத்தி ஓதிற்று.

பண் :

பாடல் எண் : 10

எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்
மனக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே எனக்கரிய தொன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஈசன் - சிவன்` என்பது முன்னைப் பாட்டின் உரையிலும் கூறப்பட்டது. `மனத்துக்கு` என்பதில் அத்துச் சாரியை தொகுக்கப்பட்டது. வைப்பு - சேம நிதி. `அவனையே பிரானாகக் கொண்டேன்` என ஏகாரம் விரித்து, மாறிக் கூட்டுக. பிரான் - தலைவன்; ஆண்டான். `கொள்வது` என்பது பொதுப்பட அத் தொழிலை உணர்த்திநின்றது. உம்மை, வினையெச்ச விகுதி. எனக்கு அரியது ஒன்று உண்டே` என்க. ஏகாரம், எதிர்மறைப் பொருட்டாய வினா.

பண் :

பாடல் எண் : 11

ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்
ஒன்றேயென் உள்ளத்தின் உள்ளடைத்தேன் - ஒன்றேகாண்
கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர்
அங்கையாற் காளாம் அது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நினைதல் - ஆராய்தல். துணிதல் - நிச்சயித்தல். `ஓழி`, துணிவுப் பொருண்மை விகுதி. உள்ளடைத்தல் - எப்போதும் மறவாது நினைதல். இறுதியில் `அவ்வொன்றே` எனச் சுட்டு வருவிக்க. ஏகாரம், எடுத்தோத்துப் பொருட்டாய், எழுவாய்த் தன்மை உணர்த்தி நின்றது. காண், முன்னிலையசை. `அவ்வொன்றே ஆளாம் அது` என முடிக்க. ஒளி - தீ; ஆகுபெயர்.

பண் :

பாடல் எண் : 12

அதுவே பிரான்ஆமா றாட்கொள்ளு மாறும்
அதுவே யினியறிந்தோ மானால் - அதுவே
பனிக்கணங்கு கண்ணியார் ஒண்ணுதலின் மேலோர்
தனிக்கணங்கு வைத்தார் தகவு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதற்கண் `அதுவே` என்றது, மேல், `உலகெலாம் ஆள்விப்பது` என்றதையும், இடைக்கண், `அதுவே` என்றது `பிறப்பறுப்பது` என்றதனையும் ஏற்புழிக் கோடாலால் சுட்டி நின்றன. இனி - இப்பொழுது. `அதுவே என அறிந்தோமானால்` என்க. `அதுவே தகவு` என முடிக்க. தகவு - தகுதி; தன்மை, பனிக்கு - பனிக்காலத்திற்கு ஆற்றாமல். அணங்குகின்ற - வாடுகின்ற. கண்ணி - முடிமாலை. `பனிக் காலத்திற்கு ஆற்றாது வாடுகின்ற` என்றது, கொன்றை மலரைக் குறித்தவாறு. அது கார்காலத்தில் மட்டுமே பூப்பது. `கண்ணி கார்நறுங் கொன்றை` * என்ற பழம் பாடலைக் காண்க. நுதல் - நெற்றி. தனிக்கண் - ஒற்றைக் கண். `அங்கும்` என, இறந்தது தழுவிய எச்ச உம்மை விரிக்க. அல்லாக்கால், `அங்கு` என்பது நின்று வற்றும். இது சிவனது தகைமையைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 13

தகவுடையார் தாமுளரேல் தாரகலஞ் சாரப்
புகவிடுதல் பொல்லாது கண்டீர் - மிகவடர
ஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச்
சார்ந்திடுமே லே பாவந் தான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தகவு - தகுதி; நடுவு; நடுவு நிலைமை. அஃதாவது, பிறர்க்கு வரும் துன்பத்தையும் தமக்கு வரும் துன்பம் போன்றதாகவே உணரும் தன்மை. `தாம்` என்றது, `யாரேனும்` என்றபடி. தார் - கொன்றைத்தார். அகலம் - மார்பு. எனவே `சிவனது மார்பு` என்றதாயிற்று. `அதனை மலைமகளைச் சாரத் தனிமையில் புகவிடுதல் பொல்லாது` என்க. பொல்லாது - தீங்கு. தீங்கிற்கு ஏதுவா வதனைத் `தீங்கு` என்றது உபசார வழக்கு. கண்டீர், முன்னிலையசை. `தீங்கிற்கு ஏதுவாவது யாது` எனின், `அவனது மார்பில் மிகத் தீங்கு செய்ய ஊர்ந்து கொண்டிருக்கின்ற பெரிய பாம்பு அவள் மேலே என்றாவது ஒரு நாள் தாவியே விடும். அதனால், தகவுடையோர்க்கு அது பெண் பாவமாய் முடியும்` என்பதாம். அடர்தல் - தீங்கு செய்தல். தான். அசை.
எல்லாம் அறிந்திருந்தும் அம்மையார் பெருமானை நகையாடிப் புகழ்தற் பொருட்டு ஒன்றும் அறியாதார்போல் நின்று இங்ஙனம் கூறினார்; பத்தி பரவசத்தால். `பாம்பு முதலியவற்றுள் எதுவும் அவனையும் ஒன்றும் செய்யாது; அவளையும் ஒன்றும் செய்யாது; அவ்விருவரது தன்மையும் உலகர் தன்மையின் முற்றிலும் வேறானதே` என்பது கருத்து. இதவும் நிந்தாத் துதி
வாள்வரி யதளதாடை; வரிகோ வணத்தர்;
மடவாள்த னோடும் உடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி, உழுவையோடு, கொலையானை, கேழல்
கொடுநாக மோடு, கரடி,
ஆளரி நல்ல நல்ல; அவைநல்ல; நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.*
என அருளிச்செய்த மெய்ம்மைத் திருமொழியைக் காண்க.

பண் :

பாடல் எண் : 14

தானே தனிநெஞ்சந் தன்னையுயக் கொள்வான்,
தானே பெருஞ்சேமஞ் செய்யுமால் - தானேயோர்
பூணாகத் தாற்பொலிந்து, பொங்கழல்சேர் நஞ்சுமிழும்
நீணாகத் தானை நினைந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நீள் நாகத்தானை நினைந்தமையால், தனி நெஞ்சம் தானே தன்னைக் கடைத்தேற்றிக் கொள்ளுதற் பொருட்டுத் தானே தனக்குப் பெருஞ்சேமத்தைச் செய்து கொள்கின்றது` என்க. `அவனை நினைப்பது ஒன்றே உயிர்க்குப் பாதுகாப்பாவது` என்பதும், `எம் நெஞ்சம் அதனைத் தானே தெரிந்து கொண்டு நினைக்கின்றது` என்பதும் கூறியவாறு.
தனி நெஞ்சம் - துணையற்ற நெஞ்சம். சேமம் - பாதுகாவல். ஆல், அசை. `ஆகம் பூணாற் பொலியாநிற்க` என்க. ஆகம் - மார்பு. பூண் - அணிகலம். `பொலியாநிற்க நீள் நாகத்தை உடையான்` என்றது, `நீள் நாகமே பூணாக ஆம் பொலிய` என்றபடி.

பண் :

பாடல் எண் : 15

நினைந்திருந்து வானவர்கள் நீள்மலராற் பாதம்
புனைந்தும் அடிபொருந்த மாட்டார் - நினைந்திருந்து
மின்செய்வான் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற்
கென்செய்வான் கொல்லோ இனி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நீள் மலர் - மிக்க மலர். புனைந்தும் - அலங்கரித் தும். `செய்`, உவம உருபு. வான் - உயர்ந்த. இனி - இப்பொழுது, `என் செய்வான்` என்பதில், `செய்தல்` என்னும் பொது வினை, `தருதல்` என்னும் சிறப்பு வினைப் பொருட்டாய் நின்றது. கொல், அசை.

பண் :

பாடல் எண் : 16

இனியோநாம் உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம்
இனியோர் இடரில்லோம், நெஞ்சே - இனியோர்
வினைக்கடலை யாக்குவிக்கும் மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`இறைவன் சிவன்` என்பது மேலேயும்* கூறப்பட்டது. `இறைவன் அருள் சேர்ந்தோம்` என்பதை முதலில் வைத்து, அதன்பின், `ஆதலால்` என்பது வருவிக்க. இனி - இப்பொழுது. ஓகாரம், சிறப்பு. `ஓர் கடல்` என இயையும். வினைக் கடல் உருவகம். வினை, இங்கு ஆகாமியம். கனைத்தல் - ஒலித்தல். கனைக்கடல் - கனைத்தலையுடைய கடல். இனிக் ககர ஒற்றை `விரித்தல்` எனக் கொண்டு, `கனை கடல் என வினைத்தொகை யாகவே உரைத்தலும் ஆம். கனைகடல், இனஅடை. காண், முன்னிலையசை. இதனால் சிவன் அவரவர் தன்மைக்கு ஏற்ப நின்று அருள்புரிதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

காண்பார்க்குங் காணலாந் தன்மையனே கைதொழுது
காண்பார்க்குங் காணலாங் காதலாற் - காண்பார்க்குச்
சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்
காதியாய் நின்ற அரன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தொல் உலகுக்கு ஆதியாய் நின்ற அரன்` என்பதை முதலிற் கொள்க. ஆதி - முதல்; முதல்வன். முதலில் உள்ள `காண்பார்` என்பது, `உலகிற்கு முதல்வன் எவனும் இல்லை` என முரணிக் கூறுவாரை. அவர்க்குக் காணலாம் தன்மையாவது, அவரவர் `மெய்` எனக் கொண்ட பொருள்களாய் நின்று அவர்க்குப் பயன் தரும் தன்மை. `அவனின்றியாதும் இல்லை` என்பது கருத்து. பின்னர், `தொழுது காண்பார்` என்றதனால், முன்னர் `காண்பார்` என்றது, தொழாதே காண்பாரையாயிற்று. கை தொழுது காண்பார், தெய்வம் உண்டு ` எனப் பொதுப்பட உணர்ந்து யாதேனும் ஓர் உருவத்தில் கண்டு வழிபடுவார். அவர்க்குக் காண்டல் கூடுவதாவது, அவரவர் வணங்கும் உருவத்தில் நின்று, அவர்க்குப் பயன்தருதல். காதலால் காண்பார், `உலகிற்கு முதல்வன் உளன்; அம்முதல்வனாம் தன்மையை உடையவன் `சிவனே` என உணர்ந்து, அதனானே அவன்பால் அன்பு மீதூரப் பெற்றுக் காண விரும்புவோர். `அவர்கட்குப் புறத்தும் அகத்தும் ஒளியாய் வெளிப்பட்டு நின்று அருளுவான்` என்க. `சிந்தையுளே` என்றே போயினாராயினும், `சோதியாய்` என்றதனால் `புறத்தும்` என்பதும் பெறப்பட்டது. `சுடர் விட்டுளன் எங்கள் சோதி`1 என்ற தற்கு, `ஆன்ற அங்கிப் புறத்தொளியாய், அன்பில் - ஊன்ற உள்ளெழும் சோதியாய் நின்றனன்` 2 எனப்பொருள் கூறியமை காண்க. தோன்றும் - தோன்றுவான். ஏகாரம் தேற்றம். அரன் - பாசத்தை அரிப்பவன்.

பண் :

பாடல் எண் : 18

அரனென்கோ நான்முகன் என்கோ அரிய
பரனென்கோ பண்புணர மாட்டேன் - முரண் அழியத்
தானவனைப் பாதத் தனிவிரலாற் செற்றானை
யானவனை எம்மானை இன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அரன் - உருத்திரன். என்கோ - என்பேனோ. பரன் - பரமபதத்தில் (வைகுந்தத்தில்) இருப்பவன்; மாயோன். `அரியாம் பரன்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். அப்பாடத்திற்கு, `பரன் - மேலானவன்` என்க. `அவன் பண்பு` எனச் சுட்டுப் பெயர். முரண் - வலிமை. தானவன், இராவணன். யான் அவன் - யானாய் நிற்கும் அவன். `முரண் அழிய` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. ஒருவனாய் நில்லாது, மூவராய் நிற்பவனை `ஒரு நாமம், ஓருருவம், ஒன்றும் இன்றி` *மெய்யறிவின்பமே உருவாய் இருத்தலாம். எனவே, சிவனது தன்னியல்பும், பொதுவியல்பும் கூறியவாறாம். பொதுவியல்பு கருணை காரணமாகக் கொள்ளப்படுவது.

பண் :

பாடல் எண் : 19

இன்று நமக்கெளிதே மாலுக்கும் நான்முகற்கும்
அன்றும் அளப்பரியன் ஆனானை - என்றும்ஒர்
மூவா மதியானை மூவே ழுலகங்கள்
ஆவானைக் காணும் அறிவு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`இன்று நமக்கு எளிதே` என்பதை இறுதியிற் கூட்டி, `எளிதே - எளிதோ` என உரைக்க. அன்றும் - முயன்று தேடிய அன்றும். எனவே, `இன்று அளப்பரியனாதல் சொல்ல வேண்டா` என்பதாம். `என்றும் மூவா ஓர் மதியான்` என்க. மூத்தல் - வளர்தல். `ஓர் மதி` என்றது, அதிசயத் திங்கள் என்றபடி, மூத்த ஏழ் உலகங்கள் என்க. மூத்த உலகு என்பதை, `தொல்லுலகம்` என்றவாறாகக் கொள்க `நமக்கு` என்றது `எளியராகிய நமக்கு` என்றவாறாதலைப் படுத்தல் ஓசையாற் கூறிக் காண்க.
`சிவனை உள்ளவாறுணரும் அறிவையடைதல் எளிதன்று` என்றபடி.

பண் :

பாடல் எண் : 20

அறிவானுந் தானே; அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற
மெய்ப்பொருளுந் தானே விரிசுடர் பார் ஆகாயம்
அப்பொருளுந் தானே அவன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அவன்` என்பதை முதலில் வைத்து, `அவனது இயல்பைக் கூறுமிடத்து` எனப் பொருள் விரிக்க. அறிவான்- உயிர்கட்குச் செய்வது காட்டும் உபகாரம் மட்டும் அன்று; காணும் உபகாரமுங்கூட` என்பதை விளக்கச் சிவஞான போதத்துப் பதினொன்றாம் சூத்திரச் சிற்றுரையில் இவ்வடிகள் எடுத்துக்காட்டப் பட்டமை காண்க. அறிகின்ற - அறியப்படுகின்ற. விரி சுடர், கதிரும், மதியும், தீயும். `அப்பொருள்` என்றது, `மெய்ப்பொருள் அல்லாது வேறு பொருள்` என்றதாம். `அவன்` என்றது, பண்டறி சுட்டாய்ச் சிவனைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 21

அவனே இருசுடர் தீ ஆகாசம் ஆவான்
அவனே புவிபுனல் காற் றாவான் - அவனே
இயமான னாய்அட்ட மூர்த்தியுமாய் ஞான
மயனாகி நின்றானும் வந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரு சுடர் கதிரும், மதியும். புவி - பிருதிவி; மண். புனல் - நீர். இயமானன் - எசமானன்; உயிர். அட்ட மூர்த்தி, எட்டுரு உடையவன். உம்மை எதிரது தழுவிய எச்சம். இஃது அவனது பொது நிலை. ஞானமயன் - அறிவே வடிவாய் உள்ளவன். இஃதே அவனது உண்மை நிலை. `உலகுயிர்கட்கு அட்டமூர்த்தியுமாய், வீட்டுயிர்கட்கு ஞானமயனாகி வந்து நின்றானும் ஆவன்` என்க. `ஆவன்` என்பது சொல்லெச்சம்.
சிவனது பொது நிலை, உண்மை நிலை இரண்டையும் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 22

வந்திதனைக் கொள்வதே யொக்குமிவ் வாளரவின்
சிந்தை யதுதெரிந்து காண்மினோ - வந்தோர்
இராநீர் இருண்டனைய கண்டத்தீர் எங்கள்
பிரானீர்உம் சென்னிப் பிறை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வந்தோர்` என்பது முதலாகத் தொடங்கி, `பிறைக்கண்` என ஏழாவது விரித்து உரைக்க. `வந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. நீர் - நீர்மை; தன்மை. கொள்வது உட் கொள்வது; விழுங்குவது. `ஒக்கும் சிந்தை` என இயையும். சிந்தை - எண்ணம். அது. பகுதிப் பொருள் விகுதி. காண்மின் - குறிக்கொண்டு நோக்குமின். ஓகாரம், சிறப்பு. `அடைக்கலமாக வந்து அடைந்த திங்களை நினையாது விட்டு விடாதீர்` என்றபடி.
சார்ந்தாரைக் காக்கும் சிவனது இயல்பை அறியாதார் போன்று அறிவித்தவாறு.

பண் :

பாடல் எண் : 23

பிறையும் புனலும் அனலரவுஞ் சூடும்
இறைவர் எமக்கிரங்கா ரேனுங் - கறைமிடற்ற
எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே
எந்தையா உள்ள மிது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அனல் அரவு - அனலுகின்ற; சீறுகின்ற பாம்பு. பிறை முதலிய அடையாளங்களைக் கூறியது. `இறைவர் சிவபிரான்` என்பது உணர்த்துதற்கு. இனி, அவை அவரது கைம்மாறு கருதாத கருணைக்கும் அடையாளங்கள் ஆதலை உணர்க. அவற்றால், `அவர்` எமக்கு இரங்காதொழியார்` என்னும் குறிப்பும் தோன்றிற்று. `இரங்காரேனும்` என்பதற்கு, மேல் `இடர்களையாரேனும்` என்புழி உரைத்தாங் குரைக்க. `கறை மிடற்ற எந்தையார்` என்றது, `அவர்` என்னும் சுட்டளவாய் நின்றதேனும், அதனாலும் அவரது கருணை மிகுதி குறிக்கப்பட்டதாம். அடுக்குப் பலகாலும் நினைத்தலைக் குறித்தது. இருக்கும் - அமைதியுற்றிருக்கும். `துள்ளித் துடியாது` என்றபடி. ......`உன் அருள்நோக்கி,
இரைதேர் கொக்கொத்து இரவு பகல்
ஏசற்றிருந்தே வேசற்றேன்`
`இரங்கும் நமக்கு அம்பலக் கூத்தன்
என்றென்று ஏமாந் திருப்பேனை.`
`நல்கா தொழியான் நமக்கென்று உன்
நாமம் பிதற்றி`*
என்னும் திருமொழிகளைக் காண்க. `தயா` என்பதில் அகரத்திற்கு ஐகாரம் போலியாய் வந்து, `தையா` என நின்றது. தயா உள்ளம் - தயவை - அருளை விரும்புகின்ற உள்ளம். `இது` என்றது, எடுத்தல் ஓசையால், `பித்துக் கொண்டதாகிய இது` எனப்பொருள் தந்தது. `உள்ளமாகிய இது, - ஆட்பட்டு விட்டோம்; இனி அவர் செய்வது `செய்க` - என்று என்று அமைதியுற்றே யிருக்கின்றது என்க.

பண் :

பாடல் எண் : 24

இதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமா
றிதுவன்றே என்றனக்கோர் சேமம் - இதுவன்றே
மின்னுஞ் சுடருருவாய் மீண்டாயென் சிந்தனைக்கே
இன்னுஞ் சுழல்கின்ற திங்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மீண்டு` என்பதை அடுக்கிக் கூறி, `மீண்டும் மீண்டும்` ஆய்கின்ற என் சிந்தனையில் மின்னும் சுடர் உருவாய் (ப் புகுந்து) இன்னும் சுழல்கின்றதாகிய இது அன்றே ஈசன் இங்குச் செய்வது! அவன் திருவுருவத்தின் இயல்பும் இதுவன்றே! என்றனக்கு ஓர் சேமம் ஆவதும் இது வன்றே!` என இயைத்துரைத்துக் கொள்க.
இடைவிடாது நினைப்பவர் உள்ளத்தையே சிவன் தனக்குக் கோயிலாகப் புகுந்து, ஒளியுருவாய் விளங்குவான்; அங்ஙனம் அவன் விளங்கப் பெறுதலே உயிர்க்கு ஆக்கமாவது` என்பதாம். `சிந்தனைக்கு` என்பது உருபு மயக்கம்.

பண் :

பாடல் எண் : 25

இங்கிருந்து சொல்லுவதென் எம்பெருமான் எண்ணாதே
எங்கும் பலிதிரியும் எத்திறமும் - பொங்கிரவில்
ஈமவனத் தாடுவதும் என்னுக்கென் றாராய்வோம்
நாமவனைக் காணலுற்ற ஞான்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`எங்கள் பெருமான், எங்கும் சென்று பிச்சை யேற்பதையும், இரவிலே சுடுகாட்டில் ஆடுவதையும், `இவை இழி வல்லவோ` என்று சிறிதும் எண்ணிப் பாராமலே செய்தற்குரிய காரணத்தை நாம் இங்கேயிருந்து கொண்டு என்ன என்று சொல்ல முடியும்? முடியாது. ஆகவே, நாம் அவனை நேரிற் காணமுடிந்த பொழுது அவனிடமே, `இவை எதற்கு` என்ற கேட்டுத் தெரிவோம். (அது வரையில் சும்மா இருப்போம்) என்பது இப்பாட்டின் பொருள். `இறைவனது செயலின் இரகசியங்களை உயிர்கள் அறிதல் அரிது. அதனால் சிலர் அவனை அவை பற்றி இகழவே செய்வர். அவர்களோடு நாம் சேர்ந்து விடுதல் கூடாது; தனியே அமைந் திருத்தலே தக்கது` என்பது குறிப்பு. பொங்குதல் - மிகுதல். அதற்கு `இருள்` என்னும் வினைமுதல் வருவிக்க. ஈமம் - பிணஞ் சுடும் விறகு. `பலி திரிதல், உலகத்தைப் பற்றி நிற்கும் உயிர்கள் அப்பற்றினை விடுதற் பொருட்டு என்பதும், `ஈம வனமாவது உலகம் முற்றும் ஒடுங்கிய நிலை` என்பதும், `அங்கு இரவில் ஆடுதல்` என்பது, `யாதொன்றும் இல்லாது மறைந்த அந்தக் காலத்தில், உலகத்தை மீளத் தோற்றுவதற்கு ஆவனவற்றைச் செய்தலாகிய சூக்கும நடனம்` என்ப தும் ஆகிய உண்மைகளை அறிந்தோர் அறிவர் என்பதும் கருத்து.

பண் :

பாடல் எண் : 26

ஞான்ற குழற்சடைகள் பொன்வரைபோல் மின்னுவன
போன்ற கறைமிடற்றான் பொன்மார்பின் - ஞான்றெங்கும்
மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே
அக்கயலே வைத்த அரவு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கறை மிடற்றான்` என்பதை முதலிற் கொள்க. ஞான்ற - நான்ற; தொங்கிய. குழல் - குழல்போலப் புரிசெய்த. வரை - கீற்று; என்றது கம்பியை. போல், அசை. போன்ற - போன்றன. `பொன் மார்பு` என்பதில் பொன் - அழகு. அக்கு - எலும்பு மாலை, `அதன் அயலிலே வைத்த அரவு (பாம்பு) அயல் (புறத்தில்) ஏனை எல்லா வற்றிலும் மிக்குத் தோன்றும் முறையில் எங்கும் ஞான்று விளங்கி மிளிரும்` என்க. விளங்கி மிளிர்தல், ஒரு பொருட் பன்மொழி. இது பெருமானது திருவுருவத்தைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 27

அரவமொன் றாகத்து நீநயந்து பூணேல்
பரவித் தொழுதிரந்தோம் பன்னாள் - முரணழிய
ஒன்னாதார் மூவெயிலும் ஒரம்பால் எய்தானே
பொன்னாரம் மற்றொன்று பூண்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஆகம் - உடம்பு. `ஒன்றும்` என முற்றும்மை விரித்து, `எதனைப் பூண்டாலும் பாம்பு ஒன்றை மட்டும் பூணாதே` என்க. `பாம்பொடு பழகேல்` * என்பார் பெரியோர் ஆதலின், அஃது என்றாயினும் தீமையாகவே முடியும் என்று இரக்கின்றோம் என்பதாம், `ஒன்று` என்பது இனங்குறித்து நின்றது. நயந்து - விரும்பி. என்றதனால், `சிவன் பாம்பை விரும்புகின்றான்` என்பது பெறப்படும். பரவுதல் - துதித்தல். முரண் - வலிமை. ஒன்னாதார் - பகைவர். `மற்றொன்று` என்பதும் மற்றோர் இனத்தையே குறித்தது. `பொன்னாரம்` என்பது, ஒருபொருள் குறித்த வேறு பெயராய் வந்தது. இஃது அன்பே காரணமாக, இறைவனது ஆற்றலை மறந்து, அவனுக்கு வரும் தீங்கிற்கு அஞ்சிக் கூறிய கூற்றாய் அமைந்தது. எனினும், `மூவெயிலும் ஓர் அம்பால் எய்தான்` என அவனது அளவிலாற்றல் குறிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின்
நாணாக மேல்மிளிர நன்கமைத்துக் - கோள்நாகம்
பொன்முடிமேற் சூடுவது மெல்லாம் பொறியிலியேற்
கென்முடிவ தாக, இவர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`இவர்` என்றது இறைவரை அண்மையில் வைத்துச் சுட்டியது. இதன் பின், `கோள் நாகம்` என்பதைக் கூட்டி, இரண்டையும் முதலில் வைத்து, `ஒன்று பூண் ஆகப் புனைந்து, ஒன்று அதளின்மேல் மிளிர நாண் ஆக நன்கு அமைத்து, (ஒன்று) முடிமேல் சூடுவதும் ஆகிய இவையெல்லாம் பொறியிலியேற்கு என முடிவதாக` என இயைத்துப் பொருள் கொள்க. கோள் - கொடுமை. பூண் - அணிகலம். பொங்கு - அழகு மிகுந்த. அதள் - புலித்தோல்; இஃது உடுக்கையாக உடுத்தப்பட்டது. நாண், அரைநாண். `பொறியிலியேற்கு` எனத் தம்மையே குறித்தாராயினும், `தம் போலியர்க்கு` என்றலே கருத்து என்க. பொன் முடி - பொன் போலும் முடி; சடைமுடி. பொறி - அறிவு. என் - என்ன பொருள். முடிவதாக - முடிதற் பொருட்டு. `ஓன்று` என்பதை, பொன்முடிக்கும் கூட்டுக. அஃதாவது, `விளங்குதற் பொருட்டு` என்றதாம். `யான் அன்புடை யேன்; ஆயினும் அறிவிலேன்; ஆகவே, இவர் செய்வன எல்லாம் என் போலியர்க்கு என்ன விளங்குதற்பொருட்டு` என்றவாறு. எனவே, `ஆன்றமைந் தடங்கிய அறிவர்க்கே இவர் செய்வன விளங்கும்.
இவ்வாறு அம்மையார் கூறுவன எல்லாம் நம்மனோரை முன்னிட்டுக் கொண்டேயாம்.

பண் :

பாடல் எண் : 29

இவரைப் பொருளுணர மாட்டாதார் எல்லாம்
இவரை யிகழ்வதே கண்டீர் - இவர்தமது
பூக்கோல மேனிப் பொடிபூசி என்பணிந்த
பேய்க்கோலங் கண்டார் பிறர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பொருள் - மெய்ப்பொருள். `பொருளாக` என ஆக்கம் விரிக்க. `இகழ்வதையே செய்வர்` என ஒருசொல் வருவித்து முடிக்க. கண்டீர், முன்னிலையசை. `இதுவே முறையாதலின், இவரது பேய்க் கோலத்தைக் கண்டு இகழ்பவர் எல்லாம், புறக்கோலத்தை மட்டுமே கண்டு, உண்மையை உணராத பிறரேயாவர்` என்க. முற் பகுதி பொது முறைமையாயும், பிற்பகுதி சிறப்பு முறைமையாயும் நின்றன. பூக்கோல மேனி - பொலிவு வாய்ந்த அழகிய மேனி. `மேனி மேல்` என ஏழாவது விரிக்க. பொடி - சாம்பல். `பூக் கோல மேனிமேல் சாம்பலைப் பூசுகின்றார்` என்பதாம். என்பு - எலும்பு. பேய்க் கோலம் பேய்போலும் கோலம், `கோலம் கண்டார்` என்பது, `கோலத்தை மட்டுமே கண்டவர்` என்னும் பொருளது. `பிறர்` என்றது, `உண்மை யுணராதவர்` என்றபடி. கண்டார், எழுவாய்; பிறர், பயனிலை.

பண் :

பாடல் எண் : 30

பிறரறிய லாகாப் பெருமையருந் தாமே
பிறரறியும் பேருணர்வுந் தாமே - பிறருடைய
என்பே அணிந்திரவில் தீயாடும் எம்மானார்
வன்பேயும் தாமும் மகிழ்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பிறருடைய என்பே அணிந்து; இரவில் பேயும் தாமுமாய் மகிழ்ந்து தீயாடும் எம்மானார்` என எடுத்துக் கொண்டு உரைக்க. பிறர், முன்னைப் பாட்டிற் கூறிய பிறர். பேருணர்வு - மெய்யுணர்வு என்றது, `அவர் மெய்யை உணர்ந்ததாக உணரும் உணர்வு` என்றபடி. `தாமே` என்பன, `பிறர் ஒருவரும் இல்லை` என்னும் பொருளவாய் நின்றன.

பண் :

பாடல் எண் : 31

மகிழ்தி மடநெஞ்சே மானுடரில் நீயும்
திகழ்தி பெருஞ்சேமஞ் சேர்ந்தாய் - இகழாதே
யாரென்பே யேனும் அணிந்துழல்வார்க் காட்பட்ட
பேரன்பே இன்னும் பெருக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மடம் - அறியாமை. மடநெஞ்சே, யார் என்பே யேனும் இகழாதே அணிந்து உழல்வார்க்கு ஆட்பட்டமையால்` என முதலில் எடுத்துக் கொண்டு, பின்பு `அங்ஙனம் ஆட்பட்ட பேரன்பையே இன்னும் பெருக்கு` என முடிக்க. `பெருக்கினால் இன்னும் பெருநலம் பெறுவாய்` என்பது குறிப்பெச்சம். மகிழ்தி - மகிழ்கின்றாய்; மானுடரில் நீயும் ஒருவனாய்த் திகழ்கின்றாய். சேமம், பாதுகாவல். `என்பே அணிந்து உழல்வார்` என்றதும் நிந்தாத் துதி. அவர்க்கு ஆட்படுதலே மானுடப் பிறப்பின் பயன்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 32

பெருகொளிய செஞ்சடைமேற் பிள்ளைப் பிறையின்
ஒருகதிரே போந்தொழுகிற் றொக்கும் - தெரியின்
முதற்கண்ணான் முப்புரங்கள் அன்றெரித்தான் மூவா
நுதற்கண்ணான் தன்மார்பின் நூல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தெரியின் முதற்கண்ணான் - அறிவு வாய்க்கப் பெற்று ஆராய்ந்தால் முதலிடத்தில் வைத்துப் போற்றுதற்கு உரியவன்; `இல்லையேல் இகழப்படுவான்` என்பதாம. இது முதலாகத் தொடங்கி யுரைக்க. `நுதற் கண்ணான்` என்பது, `சிவன்` என்னும் பெயரளவாய் நின்றது. மூவா - கெடாத; இஃது இனம் இல் அடை. ஒளிய - ஒளியை யுடைய. கதிர் - கலை.

பண் :

பாடல் எண் : 33

நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக
நீல மணிமிடற்றான் நீர்மையே - மேலுலந்த
தெக்கோலத் தெவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத் தவ்வுருவே ஆம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நீர்மையே` என்னும் தேற்றேகாரத்தைப் பிரித்து, `ஆம்` என்பதனுடன் கூட்டி, இரண்டாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. `உலந்த` என்பது பாடம் அன்று. உலந்தது - விரும்பியது; `எக்கோலத்தையுடைய எவ்வுருவினிடத்து` என்க. வாய், ஏழுனுருபு. கோலம் ஆடை அணி முதலியன. உருவு - வடிவும். `அவ்வுருவை நோக்கி` என இசை யெச்சம் வருவிக்க. `ஆமே என்னும் முற்று, சொல்லுவார் குறிப்பால், `ஆதலே` என்னும் தொழிற்பெயர்ப் பொருட்டாய் நின்றது. இதன்பின் `நுழைவு இலாதார்` - என்பதைக் கூட்டி இதனை அறிந்து இவனை அடைய மாட்டாதார் திரிக என முடிக்க. நூல், தாம் தாம் அறிந்த நூல். அவை இரணிய கருப்பம், பாஞ்சராத்திரம் முதலியன. அறிவு - அறிந்த பொருள். `தனக்கென ஓர் வடிவம் இல்லாது, கருதுவார் கருதும் வடிவமாய் நின்று அவர்கட்டு அருளுதலே இவனது இயல்பு` என்பதை யறியாதார், `பொடி பூசி, எலும்பணிந்து, சுடலையாடுதலையே இவனது உண்மை யியல்பாக மயங்கித் தாம் தாம் அறிந்தவாறு பேசுவர்; அது பற்றி எமக்கு வருவ தோர் இழுக்கில்லை` என்றபடி.
ஆர்உருவ உள்குவார் உள்ளத்துள்ளே
அவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன்றும்.
சுருதிவா னவனாம்; திருநெடு மாலாம்;
சுந்தர விசும்பில்இந் திரனாம்;
பருதிவா னவனாம்; படர்சடை முக்கட்
பகவனாம்; அகவுயிர்க் கமுதாம்;
எருதுவா கனனாம்; எயில்கள்மூன் றெரித்த
ஏறுசே வகனுமாம்; பின்னும்
கருதுவார் கருதும் பொருளுமாம் கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.
என்னும் திருமொழிகளைக் காண்க.

பண் :

பாடல் எண் : 34

ஆமா றறியாவே வல்வினைகள் அந்தரத்தே
நாம் ஆளென் றேத்தார் நகர்மூன்றும் - வேமா
றொருகணையாற் செற்றானை உள்ளத்தால் உள்ளி
அருகணையா தாரை யடும்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வல்வினைகள், அணையாதாரை அடும்; (அணைந்தார்பால்) ஆமாற்றை யறியா` என இயைத்து முடிக்க. `அணைந்தார்பால்` என்பது சொல்லெச்சம். `பிறவிப் பெருங்கடல் நீந்துவர்` 3 என்பதில், `சேர்ந்தார்` என்பது போல. அந்தரம் - ஆகாயம். `அந்தரத்தே வேமாறு` என இயையும். செற்றான் - அழித்தான். `அருகாக` என ஆக்கம் வருவிக்க. அடும் - வருத்தும்.

பண் :

பாடல் எண் : 35

அடுங்கண்டாய் வெண்மதியென் றஞ்சி இருள்போந்
திடங்கொண் டிருக்கின்ற தொக்கும் - படங்கொள்
அணிமிடற்ற பேழ்வாய் அரவசைத்தான் கோல
மணிமிடற்றின் உள்ள மறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மறு, இருள், மதி அடும்` என்று அஞ்சிப் போந்து இடம் கொண்டு இருக்கின்றதை ஒக்கும்` என இயைத்துக் கொள்க. `கண்டாய்` முன்னிலை யசை. அடும் - கொல்லும். `படங் கொள் அரவு, அணி மிடற்ற அரவு, பேழ்வாய் அரவு` எனத் தனித்தனி இயைக்க. பாம்பு படம் எடுத்து ஆடும் பொழுது அதன் கழுத்து அழகாய் இருத்தல் பற்றி. `அணிமிடற்ற அரவு` எனப்பட்டது. பேழ்வாய் - பெரிய வாய்; எலிகளை விழுங்கும் வாய். அசைத்தான் - இறுகக் கட்டினவன். கோலம் - அழகு. மணி மிடறு - நீல மணிபோலும் கழுத்து. மறு - கறை. இருளுக்கு வந்து இடம் கொள்ளுதல் இன்மையால் இல்பொருள் உவமையும், வந்தமைக்கு ஒரு காரணம் கற்பித்தமையால் தற்குறிப்பேற்றமும் கூடி வந்தமையின் இது தற்குறிப்பேற்ற உவமையணி. இதனால் இறைவனது கண்டத்தைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 36

மறுவுடைய கண்டத்தீர் வார்சடைமேல் நாகம்
தெறுமென்று தேய்ந்துழலும் ஆஆ - உறுவான்
தளரமீ தோடுமேல் தான்அதனை அஞ்சி
வளருமோ பிள்ளை மதி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நாகம், வானத்திலும் தளர மீது ஓடுமேல், `வார்சடைமேல் தெறும்` என்று அஞ்சி பிள்ளை மதி வளருமோ! அதனால்தான், ஆ!,ஆ! தேய்ந்து உழலும்` என இயைத்துப் பொருள் கொள்க. `நாகம் வானத்தில் மதியை விழுங்குதல் யாவரும் அறிந்தது` என்பது கருத்து. `நிறைவு பெற்றால், பெரிய வானத்திலே விழுங்கு கின்ற பாம்பு, சிறிய சடைக் குள்ளே விழுங்குதல் எளிதன்றோ` என்ப தாம். `வான்` என்பதில் ஏழனுருபும், உயர்வு சிறப்பும்மையும் விரிக்க, `அஞ்சி` என்பது ஓகாரத்தால் பெறப்பட்ட எதிர்மறையுடன் முடிந்தது. `பிள்ளை மதி நும் ஆணையால் வளராதிருக்கவில்லை; பாம்பிற்கு அஞ்சியே வளராதிருக்கின்றது` என மறுத்தவாறு. ஆ! ஆ!- வியப்பிடைச் சொல் அடுக்கு. இதுவும் பாம்பையும், மதியையும் பகை தீர்த்து உடன் வைத்திருப்பதைப் பழிப்பது போலப் புகழ்ந்தது.

பண் :

பாடல் எண் : 37

மதியா அடலவுணர் மாமதில்மூன் றட்ட
மதியார் வளர்சடையி னானை - மதியாலே
என்பாக்கை யாலிகழா தேத்துவரேல் இவ்வுலகில்
என்பாக்கை யாய்ப்பிறவார் ஈண்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மதியா அவுணர்` என்க. அடல் - வலிமை, மதி இரண்டில் முன்னது திங்கள்; பின்னது அறிவு. இகழாது, மதியால் ஏத்துவரேல்` என இயைக்க. என்பு ஆக்கையால் - எலும்பை அணிந்துள்ள மேனியைப் பற்றி (இகழாது). ஆதல் - அதுவாய்க் கலத்தல். `இவ்வுலகில்` என்றது, `என்பு ஆக்கைகளாய்ப் பிறப் பதற்கே இடமாய் உள்ள இவ்வுலகு` என இதன் இழிவு கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 38

ஈண்டொளிசேர் வானத் தெழுமதியை வாளரவந்
தீண்டச் சிறுகியதே போலாதே - பூண்டதோர்
தாரேறு பாம்புடையான் மார்பில் தழைந்திலங்கு
கூரேறு காரேனக் கொம்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பூண்டது ஓர்` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. `கொம்பு, போலாதே` என முடியும். ஏகாரம், எதிர்மறை வினாப் பொருட்டாய் உடன்பாட்டுப் பொருளைத் தந்தது. தார் - மார்பில் அணியும் மாலை, `தாராக ஏறிய பாம்பு` என்க. கூர் ஏறு - கூர்மை பொருந்திய. ஏனம் - பன்றி, திருமால் கொண்ட வராகாவதா ரத்தின் இறுதியில் அதனை அழித்து, அதன் கொம்பைச் சிவபிரான் மாலையில் கோத்தணிந்தமை புராணங்களில் கூறப்படுவது. `முற்றல் ஆமை, இளநாகமோடு, ஏன முளைக் கொம்பு அவை பூண்டு`* என்றமையும் காண்க. இறைவன் மார்பு வானத்திற்கும், அதில் அணியப்பட்ட பாம்பு இராகுவிற்கும், ஏனக் கொம்பு திங்களுக்கும் உவமையாகக் கூறப்பட்டன. திங்கள் சிறுகியதற்குக் காரணம் கற்பித்தது தற்குறிப்பேற்றம். எனவே, இது தற்குறிப்பேற்ற உவமையணியாதல் அறிக. இங்ஙனம் இறைவனது. மார்பணியைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 39

கொம்பினையோர் பாகத்துக் கொண்ட குழகன்தன்
அம்பவள மேனி அதுமுன்னஞ் - செம்பொன்
அணிவரையே போலும் பொடி அணிந்தால் வெள்ளி
மணிவரையே போலும் மறித்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கொம்பு, பூங்கொம்பு. அஃது உவம ஆகு பெயராய், உமாதேவியைக் குறித்தது. குழகன் - அழகன். தன், சாரியை. அம், அணி, மணி இவை அழகைக் குறிக்கும் பெயர்கள். பவள மேனி, உவமத் தொகை, அது, பகுதிப் பொருள் விகுதி. வரை - மலை, பொடி- நீறு, மறித்து - மீள, `மேனி, முன்னம் செம்பொன் வரையேபோலும்; பின்பு வெள்ளி வரையே போலும்` என்க. `இஃதோர் அதிசயம்` என்பது குறிப்பெச்சம். இறைவனது திருமேனியின் இயற்கையழகையும், செயற்கை யழகையும் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 40

மறித்து மடநெஞ்சே வாயாலுஞ் சொல்லிக்
குறித்துத் தொழுந்தொண்டர் பாதங் - குறித்தொருவர்
கொள்ளாத திங்கட் குறுங்கண்ணி கொண்டார்மாட்
டுள்ளாதார் கூட்டம் ஒருவு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நெஞ்சே, தொண்டர் பாதத்தைச் சேர்; அல்லாதார் கூட்டத்தை நீக்கு` என்க. `முன்னே நெஞ்சால் நினைத்து, மீள வாயாலும் வாழ்த்திப் பின் மெய்யாலும் வணங்குகின்ற தொண்டர்` - என்க. `முப்பொறிகளாலும் தொண்டு செய்பவர்` என்றபடி. உம்மை, இறந்ததையும், எதிரதையும் தழுவிநின்றது. `குறித்து` என்பது, முன்னர்க் காணுதலாகிய காரியத்தையும், பின்னர்ச் சேர்தலாகிய காரியத்தையும் குறித்தது. ஒருவர் கொள்ளாத திங்கள் - சிறிதாதலால் யாரும் விரும்பாத பிறை. `எவரும் விரும்பாதன எவையோ, அவையே எங்கள் பெருமானால் விரும்பப்படுவன` என்பதாம். `இதனால், இவன் ஏனையோரினின்றும் வேறுபட்டவன்; ஆகவே `இவனை, உலகம் - பித்தன் - என்று இகழ்தல் இயற்கை! என்றபடி.
`பித்தரே என்றும்மைப் பேசுவர் பிறரெல்லாம்`* என்று அருளிச் செய்தமையுங் காண்க. `ஒருவரும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று.

பண் :

பாடல் எண் : 41

ஒருபால் உலகளந்த மாலவனாம்; மற்றை
ஒருபால் உமையவளாம் என்றால் - இருபாலும்
நின்னுருவ மாக நிறந்தெரிய மாட்டோமால்
நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உலகு அளந்த மாலாதல் இடப்பாதியும், உமையவளாதல் வலப்பாதியும் என்க. `சிவன் எல்லாவற்றையும் சத்தி வழியாகவே தோற்றுவிப்பன்` என்பது முடிவாதலால் `மாயோனை இடப்பாகத்தினின்றும் தோற்றுவிக்கும் நிலைமையில் வலப்பாகம் சத்தி பாகமாய் நிற்கும். என்பது பற்றி, `ஒருபால் மாலவனாம், மற்றை ஒரு பால் உமைய வளாம்` என்றும், இந்நிலைமையில் `சிவம்` என்பதே இல்லாதது போலத் தோன்றுதலால், இருபாலில் ஒரு பாலையும் நின்னுருவமாகத் தெரிய மாட்டேம்` என்றும், இங்ஙனமாகவே, சிவமேதான் சத்தியோ? `சிவம்` என்பது வேறு இல்லையோ? என வினாவும் முறையில், `நின்னுருவே மின்னுருவுதானோ` என்றும் அருளிச்செய்தார். மின் - பெண்; உமை. சிவமும், சத்தியும் இரு பொருள்கள் அல்ல` என்பது விளங்குதற்கு இங்ஙனம் நகைச்சுவை தோன்றக் கூறினார். நிறம், `உரு` என்னும் பொருட்டாய், வடிவத்தைக் குறித்தது. `இந்நிறத்தை இரு பாலிலும் நின் உருவமாகத் தெரிய மாட்டேம்` என இயைக்க. ஒகாரம் இரண்டில் முன்னது சிறப்பு; பின்னது வினா, `நின் உருவமாக நேர்ந்து தெரிய மாட்டோம்` எனக் கூட்டுக. `நேர்ந்து தெரியமாட்டோம்` என்றாராயினும், `தெரிந்து நேரமாட்டோம்` எனப்பின்முன்னாக நிறுத்தி, விகுதி பிரித்துக் கூட்டி யுரைக்க. நேர்தல் - உடன் படுதல். சிவம் சத்திகளது இயல்பை விளக்கியவாறு.

பண் :

பாடல் எண் : 42

நேர்ந்தரவங் கொள்ளச் சிறுகிற்றோ நீயதனை
ஈர்ந்தளவே கொண்டிசைய வைத்தாயோ - பேர்ந்து
வளங்குழவித் தாய்வளர மாட்டாதோ என்னோ,
இளங்குழவித் திங்கள் இது

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அங்கு - வானத்தில். `அங்கு அரவம் நேர்ந்து (எதிர்ப்பட்டுக்) கொள்ள (விழுங்க, அதனால்) சிறுகிற்றோ? இசைய (உனக்குப் பொருந்த) அளவே ஈர்ந்து, (அளவாகப் பிளந்து எடுத்து) வைத்தாயோ? பேர்ந்து காலத்திற்கு ஏற்ப மாறி) வளர மாட்டாதோ? (மாட்டாத தன்மையை உடையதோ?) இளங் குழவித் திங்கள் இது (என்றுமே பசுங்குழவியாய் இருக்கின்ற திங்களாகிய இதன் தன்மை) என்னோ?` என இயைத்துக் கொள்க. `வளக் குழவி` என்பது மெலிந்து நின்றது. குழவித்தாய் குழவித் தன்மையுடையதாய், இளங்குழவி - பசுங்குழவி. இறைவன் அணிந்துள்ள பிறை என்றும் ஒரு பெற்றித்தாய் இருத்தலைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 43

திங்கள் இதுசூடிச் சில்பலிக்கென்று ஊர்திரியேல்
எங்கள் பெருமானே என்றிரந்து - பொங்கொளிய
வானோர் விலக்காரேல் யாம்விலக்க வல்லமே
தானே யறிவான் தனக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`எங்கள் பெருமானே` என்பதை முதலில் வைத்து உரைக்க. `இது` என்பது, எடுத்தல் ஓசையால், `இத் தன்மைத்து` எனப்பொருள் தந்து நின்றது, `இவன் எவ்வாறு அவனை வெல்ல முடியும்` எனக் கூறினால் அதில், `இவன், அவன் என்பன ஓசை வேறுபாட்டால், `இத்தன்மையன், அத்தன்மையன்` எனப் பொருள் தருதல்போல. `சிறிதாய்ப் பயன் தாராதது` என்றதாம். `பிச்சை யேற்பவன் வேடத்தாற் பொலிவுடையனாயின் அது பற்றியேனும் பிச்சையிடுவர்; அது தானும் செய்கின்றிலையே ` என்றபடி. சில் பலி `இன்னதுதான் ஏற்பது` என்பதின்றி இடுவார் இடுவனவாகிய எல்லாப் பிச்சையும், `ஊர்` என்பதன்பின், `தொறும்` என்பது தொகுக்கப்பட்டது. பொங்கொளிய - மிக்க ஒளியான உடம்பை யுடைய. `தேவர்` என்பது ஒளியுடம்பினர்` என்னும் பொருளதாதல் பற்றி, `பொங்கு ஒளிய வானோர்` என்றார். `வானோரே` என்னும் சிறப்புணர்த்தும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. `விலக்காரேல்` என்றது, விலக்க வல்லரல்லராயின்` என்றபடி. `வல்லமே` என்னும் ஏகாரம் எதிர்மறை வினாவாய் நின்று, மாட்டாமையைக் குறித்தது. ஈற்றடியைத் தனித் தொடராக வைத்து, முதற்கண், `இனி` என்பது வருவிக்க. இறுதியில் `ஆவதை` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது. ஈற்றடியால், `எம் பெருமான் தனக்கு ஆவதைப் பிறர் அறிவிக்க வேண்டாது தானே அறிவான் ஆதலின், அவன் இவ்வாறு `பலிக்கு` என்று ஊர் திரிவதில் ஒரு கருத்திருத்தல் வேண்டும்` என்றபடி. அக்கருத்தாவது, உயிர்களின் வினையை நீக்குதலாம்.

பண் :

பாடல் எண் : 44

தனக்கே அடியனாய்த் தன்னடைந்து வாழும்
எனக்கே அருளாவாறு என்கொல் - மனக்கினிய
சீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப்
பேராளன் வானோர் பிரான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அடியன்` என்பது தன்மையொருமைப் பெயர். `தன்னை` என்னும் இரண்டனுருபு தொகுத்தலாயிற்று. பிரிநிலை ஏகாரத்தை இதனுடனும் கூட்டுக. `எனக்கே` என்னும் பிரிநிலை ஏகாரம். பிறர்க்கெல்லாம் அருளினமையைக் குறித்தது. `அருளாவாறு` என்பதை நிகழ் காலத்ததாகவும், `கொல்` என்பதை ஐய இடைச் சொல்லாகவும் கொண்டு உரைப்பதும், அவற்றை முறையே எதிர்காலத்ததாகவும், அசை நிலை இடைச் சொல்லாகவும், மற்றும் `என்` என்பதை இன்மை குறித்து வந்த வினாவினைக் குறிப்புச் சொல்லாகவும் கொண்டு உரைப்பதும் ஆகிய இரு பொருளையும் கொள்க. அங்ஙனம் கொள்ளவே, பின்னர் உரைக்கும் உரையின் படி, `எனக்கு அருளாதொழியக் காரணம் இல்லை` என்னும் துணிவுப் பொருளே வலியுடைத்தாய் நிலை பெறும். பின்னை உரைக்கு `எனக்கே` என்னும் ஏகாரம் தேற்றப் பொருட்டாம். `மனத்துக்கு` என்பதில் அத்துச் சாரியை தொகுத்தலாயிற்று. சீர் - புகழ். பேராளன் பெருமையுடையவன். இனி, `செம்மேனி உடையனாதலைக் குறிக்கும் பெயரையுடையவன்; அப்பெயர் - சிவன் - என்பது` என உரைப்பினும் ஆம்; `சிவன் எனும் நாமம் தனக்கேயுடைய. செம்மேனி எம்மான்` 1 என்னும் திருமொழியையும் காண்க.

பண் :

பாடல் எண் : 45

பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப்
பிரானவன்தன் பேரருளே வேண்டிப் - பிரானவனை
எங்குற்றான் என்பீர்கள் என்போல்வார் சிந்தையினும்
இங்குற்றான் காண்பார்க் கெளிது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பேணி, வேண்டி, என்று நீவிர் தேடுகிறீர்கள்; இங்கே என்போல்வார் சிந்தையினும் உற்றான்; (அஃதறிந்து) காண் பார்க்கு (க் காண்டல்) எளிது` என்க. `அவனையே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. பெருநெறி - மேலான நெறி. நோக்கு தலையே `பெருநெறி` என்றார் ஆகலின், பெயரெச்சம் வினைப் பெயர் கொண்டதாம். `நின்முகம் காணும் மருந்தினேன்` 2 என்பதிற் போல. பேணுதல் போற்றிக் காத்தல். வேண்டுதல் - விரும்புதல். `பெருநெறி, ேபரருள்` என அடை புணர்த்தமை. `ஏனை நெறிகள் எல்லாம் ஒரு நெறி யல்ல` என்பதும், `ஏனையோர் அருளெல்லாம் பேரருள் அல்ல` என்பதும் தோன்றுதற் பொருட்டு, `பெருநெறி` எனப்படாமை, பிறப்பைக் கடத்தலாகிய பெரும் பயனைத் தாராமை பற்றியும், `பேரருள்` எனப்படாமை, சிலர்க்குச் சில சிறு பயன்களைத் தந்த அளவிலே அற்று விடுதல் பற்றியுமாம். `என்பீர்கள்` என்பது. `என்று தேடுகின்றீர்கள்` என்னும் பொருட்டாய் நிற்றலின், `பிரான் அவனை` என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று. `என் போல்வார் சிந்தையினும் உற்றான்` என்பது, `உலகியல் வகையில் எளியனாயினும் அன்புடையார் உள்ளத்தில் இருப்பவன் அவன் என்பதை விளக்கிற்று. `இங்கு` என்பது, `இங்கே` என அண்மை குறிக்க வந்தது. `அஃது அறிந்து` என்பதும், `காண்டல்` என்பதும் சொல்லெச்சமாய் எஞ்சி நின்றன. இவ்வாறன்றி, `எளி தாக` என ஆக்கம் வருவித்து, `எளிதாக உற்றான்` என முடிப்பினும் ஆம்.

பண் :

பாடல் எண் : 46

எளிய திதுஅன்றே ஏழைகாள் யாதும்
அளியீர் அறிவிலீர் ஆஆ - ஒளிகொள்மிடற்
றெந்தையராப் பூண்டுழலும் எம்மானை உள்நினைந்த
சிந்தையராய் வாழுந் திறம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஒளிகொள் மிடற்று` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. `இது எளியது அன்றே! ஏழை காள், யாதும் அறிவிலீர்; ஆஆ அளியீர்! என முடிக்க. அளியீர் - இரங்கத்தக்க நிலையை உடையீர். ஆ! ஆ!, இரக்க இடைச் சொல் அடுக்கு. ஒளி, நீல ஒளி, `அறிகிலீர்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். தனிச்சீரில் ளகர ஒற்றை நீக்கி அலகிடுக.

பண் :

பாடல் எண் : 47

திறத்தால் மடநெஞ்சே சென்றடைவ தல்லால்
பெறத்தானும் ஆதியோ பேதாய் - நிறத்த
இருவடிக்கண் ஏழைக் கொருபாகம் ஈந்தான்
திருவடிக்கட் சேருந் திரு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நெஞ்சே, திருவை, (அடையும்) திறத்தால் அடைவதல்லால், பிறவகையில் பெறவும் ஆதியோ` (உரியை ஆவையோ? ஆகாய்) என இயைத்து முடிக்க. (பிற வகையில் பெற நினைக்கும்) பேதையே, (அந்த நினைவை விடு) என்க. `அடையும்` என்பதும், `பிறவகையில்` என்பதும் `விடு` என்பதும் சொல் லெச்சங்கள். அடையும் திறமாவது, அன்பு செய்தல்.
அழுமலர்க் கண்ணிணை அடியவர்க் கல்லால்,
அறிவரிது அவன்திரு வடியிணை யிரண்டும்.*
என்றது காண்க. நிறம் - அழகு. வடிக் கண் - மாவடுவின் விளவு போலும்கண். ஏழை - பெண்.

பண் :

பாடல் எண் : 48

திருமார்பில் ஏனச் செழுமருப்பைப் பார்க்கும்
பெருமான் பிறைக்கொழுந்தை நோக்கும் - ஒருநாள்
இதுமதியென் றொன்றாக இன்றளவுந் தேரா
தது மதியொன் றில்லா அரா.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திரு - அழகு. ஏன மருப்பு - பன்றிக் கொம்பு. `பெருமான்` என்பது தாப்பிசையாய், முன்னும் சென்று, இயைந்தது. `ஒரு நாளும் ஒன்றும் என்னும் இழிவு சிறப்பும்மைகள் தொகுத்த லாயின. `மதி` இரண்டில் முன்னது திங்கள். பின்னது அறிவு. ஒன்றாக- ஒருதலையாக; நிச்சயமாக. தேராது - அறியாது. `அது யாது` எனின், மதி (அறிவு) ஒன்று இல்லா (சிறிதும் இல்லாத) அரா. இது மயக்க அணி. `மதி ஒன்று இல்லா` என்றதனால், எள்ளல் பற்றிய நகை பிறந்தது.

பண் :

பாடல் எண் : 49

அராவி வளைத்தனைய அங்குழவித் திங்கள்
விராவு கதிர்விரிய ஓடி - விராவுதலால்
பொன்னோடு வெள்ளிப் புரிபுரிந்தாற் போலாவே
தன்னோடே ஒப்பான் சடை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அராவி - அரத்தால் தேய்த்து, அம் - அழகு. விராவு கதிர் - திங்களிலே பொருந்தியுள்ள கதிர்கள். `விரிய ஓடி` - எங்கும் பரவ ஓடி. விராவுதலால் - இடை இடை செறிதலால். புரி - முறுக்கு. புரிந்தாற்போலாவே - முறுக்குண்டாற்போல இல்லையோ. ஏகாரம் எதிர் மறை வினாப் பொருட்டாய், `போல்கின்றன` எனப் பொருள் தந்தது. `தன்னோடே ஒப்பான் - தனக்குத் தானே ஒப்பானவன்.

பண் :

பாடல் எண் : 50

சடைமேல்அக் கொன்றை தருகனிகள் போந்து
புடைமேவித் தாழ்ந்தனவே போலும் - முடிமேல்
வலப்பால்அக் கோலமதி வைத்தான் தன்பங்கின்
குலப்பாவை நீலக் குழல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`முடிமேல்` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. கோல மதி - அழகிய திங்கள். பங்கு - இடப் பாகம், `பங்கின் உள்ள பாவை` என்க. குலப் பாவை - உயர் குல மடந்தை, `அவன் சடைமேல் அணிந்த` எனச் சுட்டுப் பெயரும், ஒரு வினைக் குறிப்புச் சொல்லும் வருவிக்க, கொன்றை - கொன்றைப் பூ. பூக்கள் பின்னர்க் காய்த்துப் பழத்தைத் தருதல் இயல்பாகலின், சுவை தருகனிகள்` என்றார் கூந்தலுக்குக் கொன்றைக் கனி உவமையாகச் சொல்லப்படும். புடைமேவி - சடையின் மற்றொரு பக்கத்தில் பொருந்தி. சடை வலப் பால் உள்ளது. `வலப் பக்கம் சடையும், இடப் பக்கம் கூந்தலுமாய் இரு தன்மைப்பட்டுத் தோன்றாது, சடையில் உள்ள கொன்றையின் கனியே இடப்பக்கம் உள்ளது போலும் என ஒருமை கற்பித்தவாறு. இஃது இடத்திற்கு ஏற்ற உவமை.

பண் :

பாடல் எண் : 51

குழலார் சிறுபுறத்துக் கோல்வளையைப் பாகத்து
எழிலாக வைத்தேக வேண்டா - கழலார்ப்பப்
பேரிரவில் ஈமப் பெருங்காட்டிற் பேயோடும்
ஆரழல்வாய் நீயாடும் அங்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குழல் ஆர் சிறு புறத்து - கூந்தல் புரளுகின்ற சிறிய முதுகையுடைய. கோல் வளை - திரண்ட வளை. இஃது இதனை அணிந்தவளைக் குறித்தது. எழில் - அழகு. `அழகுக்காக அவளை நீ ஆடும் அங்குக் கொண்டு செல்ல வேண்டா` என்க. இப்பாட்டிற்குப் `பெருமானே` என்னும் முன்னிலை வருவிக்க. கழல் - வீரர்கள் காலில் அணியும் அணி. ஆர்த்தல் - ஒலித்தல், ஆரழல் - அணுகுதற்கரிய நெருப்பு.

பண் :

பாடல் எண் : 52

அங்கண் முழுமதியஞ் செக்கர் அகல்வானத்
தெங்கும் இனிதெழுந்தால் ஒவ்வாதே - செங்கண்
திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த
சிரமாலை தோன்றுவதோர் சீர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`செங்கண்` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. `பங்கில்` என ஏழாவது விரிக்க. ஒவ்வாதே - போலாதே. ஏகாரத்தை வினாவாகவும், தேற்றமாகவும் கொண்டு, `ஒக்கும்` என உடன்பாட்டுப் பொருளும், `ஒவ்வாது` என எதிர்மறைப் பொருளும் இரண்டும் கொள்க. சிர மாலை - தலை மாலை. `பெருமானது சடாடவி செவ்வானம்போல விளங்க, அதில் அணியப்பட்ட வெண்டலை மாலையில் உள்ள தலைகள் பல, பல சந்திரர் செவ்வானம் எங்கும் தோன்றியது போல விளங்குகின்றன` என்பதாம். தலை மாலை அவனது நித்தியத்துவத்தை விளக்குவதாகலின் அதனைப் புகழ்ந்த வாறு. சீர் - அழகு.

பண் :

பாடல் எண் : 53

சீரார்ந்த கொன்றை மலர்தழைப்பச் சேணுலவி
நீரார்ந்த பேர்யாறு நீத்தமாய்ப் - போரார்ந்த
நாண்பாம்பு கொண்டசைத்த நம்மீசன் பொன்முடிதான்
காண்பார்க்குச் செவ்வேயோர் கார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`போரார்ந்த பாம்பு கொண்டு நாண் அசைத்த நம் ஈசன் பொன்முடி` என்று எடுத்து, முதற்றொட்டு உரைக்க, அசை, நாண் - அரை நாண். அசைத்த இறுகக் கட்டிய. பொன் - அழகு. தழைப்ப - மிகுந்திருக்க. சேண் - வானுலகம். `அங்கு உலவி நீர் மிகுந்திருந்த யாறு` என்க. நீத்தம் - வெள்ளம். `ஆய்` என்பது, `ஆயதனால்` எனக் காரணப் பொருள் தந்தது. செவ் ஏய் ஓர் கார் - செம்மை நிறம் பொருந்திய ஒரு மேகம் போலும் கொன்றை, கார் காலத்தில் பூப்பது. `கண்ணி கார் நறுங் கொன்றை` என்றது காண்க.* எனவே, `கொன்றை மலரும், நீத்தமும் மேகத்தால் விளைந்தன போலத் தோன்றுகின்றன என்றபடி. மேகம் கரிதாயினும் இஃதோர் அதிசய மேகம் என்பதாம்.

பண் :

பாடல் எண் : 54

காருருவக் கண்டத்தெங் கண்ணுதலே எங்கொளித்தாய்
ஓருருவாய் நின்னோடு உழிதருவான் - நீருருவ
மேகத்தாற் செய்தனைய மேனியான் நின்னுடைய
பாகத்தான் காணாமே பண்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மாயோன், நின்னுடைய பாகத்தானாய் நின்னோடு ஓருருவாய் உழிதருவானாகவும், அவன் பண்டொருகால் காணாதபடி நீ எங்குச் சென்று ஒளித்தாய்` என்க. `பாகத்தான்` என்றது, ஓருருவாய் நின்றவாற்றை விளக்கியது. `எங்கு ஒளித்தாய்` என்றது, `அவனுக்கு இடம் அளித்து நின்றே ஒளிக்கவும் வல்லாய்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 55

பண்டமரர் அஞ்சப் படுகடலின் நஞ்சுண்டு
கண்டங் கறுத்ததுவும் அன்றியே - உண்டு
பணியுறுவார் செஞ்சடைமேற் பால்மதியின் உள்ளே
மணிமறுவாய்த் தோன்றும் வடு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

படுகடல் - ஒலிக்கின்ற கடல். உண்டு - `உண்டமையால்` என்க. பணி உறுவார் - பாம்பை அணிகலமாகப் பொருந்தியவர். `அவர் கறுத்தமையால்` எனச் சினைவினை முதல் மேல் ஏற்றப்பட்டது. மணி மறுவாய் நீல நிறமான களங்கமாய் த் தோன்றும் வடுவும் உண்டாகும் - என உம்மையும் ஆக்கமும் விரித்து முடிக்க `யாம் களங்கமிலேம்` என்று அவர் சொல்லினும், கண்டம் கறுத்ததையேனும், `ஓர் உபகாரம் பற்றி` எனலாம்; `காரணம் இன்றி, மதியினிடத்துத் தோன்ற இருக்கும் வடுவும் ஒன்று உண்டு` என்க. `இவர் களங்கமிலாராவது எங்ஙனம்` என்றபடி. இதனை,
வார மாகித் திருவடிக்குப் பணிசெய் தொண்டர்
பெறுவ தென்னே?
ஆரம் பாம்பு; வாழ்வ தாரூர்; ஒற்றி யூரேல்
உம்ம தன்று;
........................
ஊருங் காடு; உடையும் தோலே
ஒண காந்தன் தளியு ளீரே.*
என்றதுபோல உரிமை பற்றிச் சொல்மாத்திரையால் பழித்தவாறாகக் கொள்க. நிறை மதிக்கன்றிப் பிறைக்குக் களங்கம் இன்மையால், `தோன்றும்` என்பதை எதிர்கால முற்றாகக் கொண்டு, `இப்பொழுது இல்லையேனும் பின்பு உண்டாக இருக்கின்றது` என்றவாறாகக் கொள்க.

பண் :

பாடல் எண் : 56

வடுவன் றெனக்கருதி நீமதித்தி யாயின்
சுடுவெண் பொடிநிறத்தாய் சொல்லாய் - படுவெண்
புலால்தலையின் உள்ளூண் புறம்பேசக் கேட்டோம்
நிலாத்தலையிற் சூடுவாய் நீ.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சுடு வெண்பொடி நிறத்தாய், படு வெண் புலால் தலையினுள் ஊண் (பற்றிப் பிறர்) புறம் பேசக் கேட்டோம்; (அதனை) - வடு அன்று - எனக் கருதி நீ மதித்தியாயின், (வடு வாகாமைக்குரிய காரணத்தைச்) சொல்லாய்; நீ நிலாவைத் தலையிற் சூடுபவன்` எனக் கூட்டி முடிக்க. நிறம் - மார்பு. படு - இறந்த. ஊண் - உண்டல், புறம் பேசுதல், `பழித்தல்` என்னும் பொருட்டாகலின் அது, `ஊண்` என்பதில் தொக்கு நின்ற இரண்டவதற்கு முடிபாயிற்று. வடு - குற்றம். நிலாக் கலைகட்கு அடையாளம் ஆதலின், அதனைத் தலையில் சூடுதல், `எல்லாக் கலையும் வல்லவன்` என்பதைக் காட்டும். ஆகவே, `நீ வடுவாவன செய்யாய்` என்பது குறிப்பு.

பண் :

பாடல் எண் : 57

நீயுலக மெல்லாம் இரப்பினும் நின்னுடைய
தீய அரவொழியச் செல்கண்டாய் - தூய
மடவரலார் வந்து பலியிடார் அஞ்சி
விடவரவம் மேல்ஆட மிக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`எல்லாம்` என்பதன் பின், `சென்று` என்பதும், `கண்டாய்` என்பதன்பின், `ஏன்எனில்` என்பதும் வருவிக்க. கண்டாய், முன்னிலையசை. விடம் - நஞ்சு. `விட அரவம் மிக்கு மேல் ஆடுதலால், மடவார் அஞ்சி, வந்து பலி இடார்` என்க. `எம் அன்பினால் உன்னை, அறியாதார் போல நினைத்துச் சொல்கின்றேம்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 58

மிக்க முழங்கெரியும் வீங்கிய பொங்கிருளும்
ஒக்க உடனிருந்தால் ஒவ்வாதே - செக்கர்போல்
ஆகத்தான் செஞ்சடையும் ஆங்கவன்தன் பொன்னுருவில்
பாகத்தாள் பூங்குழலும் பண்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மிக்க எரி - அளவில் மிகுந்த தீ. எரியின் முழக்கம். `தமதம` என்பது. வீங்கிய பொங்கு இருள் - பெருகிய, மிகுந்த இருள். ஒக்க உடன் இருத்தல் - சமமாக ஒருங்கிருத்தல், `ஒவ்வாதே` என்றதற்கு, மேல், `போலாதே` என்றதற்கு 1 உரைத்தவாறு உரைக்க. செக்கர் - செவ்வானம். ஆகம் - உடம்பு. பண்பு - நிறம், `பண்பினால்` என்னும் மூன்றனுருபு தொகுத்தலாயிற்று. `சடையும், குழலும் பண்பி னால் எரியும், இருளும் உடன் இருந்தால் ஒக்கும்` என்க. ஓருடம்பு இருவராய கோலத்தைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 59

பண்புணர மாட்டேன்நான் நீயே பணித்துக்காண்
கண்புணரும் நெற்றிக் கறைக்கண்டா - பெண்புணரும்
அவ்வுருவோ மாலுருவோ ஆனேற்றாய் நீறணிவ
தெவ்வுருவோ நின்னுருவம் மேல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கண்புணரும்` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. `மேல்` என்பதை, மேலே, `பண்பு` என்பதை, மேலே, `பண்பு` என்பதேனாடு இயைத்து, `மேல் பண்பு - மேலே உள்ள தன்மை` என உரைக்க. பணி - சொல்லியருள். `பணி` என்னும் ஏவல் முற்றினைப் பார்த்துக் காண்` என்றது ஒரு நாட்டு வழக்கு. ஏவல் முற்றுக்கள் அந்த வழக்கில் இவ்வாறு வரும் என்க. இதில் கூறப்பட்ட பொருளின் விளக்கத்தை, மேல், `ஒருபால் உலகளந்த` என்னும் வெண்பாக் 2 குறிப்பிற் காண்க. `நீறணிவ தாகிய நின்னுருவம் எவ் வுருவோ` என்க. `இரண்டு உருவத்திலும் நீறு காணப்படுதலால், உன் உருவம் அறியப்பட வில்லை` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 60

மேலாய மேகங்கள் கூடியோர் பொன்விலங்கல்
போலாம் ஒளிபுதைத்தால் ஒவ்வாதே - மாலாய
கைம்மா மதக்களிற்றுக் காருரிவை போர்த்தபோ
தம்மான் திருமேனி அன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மாலாய` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. மால் - மத மயக்கம். மா - காட்டு விலங்கு `கையையுடைய மாவாகிய களிறு` என்க. கார் உரிவை - கரிய தோல். அன்று, உரித்துப் போர்த்த அன்று. விலங்கல் - மலை. `ஓவ்வாதே` என்பது, மேலேயும் வந்தது. 1 யானைத் தோற் போர்வையைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 61

அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன்
இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான்
எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட்கு என்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அன்று - ஆட்படாது உலகியலில் இருந்த அன்று. இன்று - உலகியலின் நீங்கி ஆட்பட்ட பின்னதாகிய இன்று. இரு நிலைகளிலும் உன் உருவத்தை நான் காணவில்லையென்றால் எப் பொழுதுதான் நான் அதனைக் காண்பது? நீ சிவனுக்கு ஆள் என்கின் றாயே; அவன் உருவம் எத்தகையது என வினவுவார்க்கு நான் என்ன விடை சொல்லுவேன்` என்றபடி. `எவ்வுருவோ நும்பிரான்` என்பதில், உரு உடையவனை, `உரு` என்றது உபசார வழக்கு. `எவ் வுருவோ` என்னும் ஓகாரத்தை, `ஏது` என்பதனோடும் கூட்டுக. ஏது- எத்தகையது. ஆட்படாதபொழுது எந்த உருவத்தையும் காணவில்லை. ஆட்பட்ட பின் உருவத்தை ஒன்றாகக் காணவில்லை; கயிலையில் கண்டது ஓர் உருவம்; ஆலங்காட்டிற் கண்டது ஓர் உருவம்; அவரவர் கள் சொல்லக் கேட்பன பல உருவங்கள்; அவை கருதுவார் கருதும் உருவங்கள்; ஒருபால் உலகளந்த மாலும், ஒருபால் உமையவளும் ஆகும் உருவம்; அரியும், அயனும் ஆய உருவம் முதலியன. 2 `உருவ சிவன் தடத்த சிவனேயன்றிச் சொரூப சிவன் அல்லன்` என்பதும் `தடத்த சிவனே கண்ணுக்குப் புலனாவன்; சொரூப சிவன் உணர்வுக்கு மட்டுமே புலனாவன்` என்பதும் இதன் கருத்துக்களாகும்.
அருவும் உருவும் அறிஞர்க்கு அறிவாம்
உருவும் உடையான் உளன்.
என்றது காண்க. `என்றுந்தான் எவ்வுரு` என்றது, நிலையான உரு எது` என்று வினாவி அஃது இல்லை, என்றபடி.

பண் :

பாடல் எண் : 62

ஏதொக்கும் ஏதொவ்வா தேதாகும் ஏதாகா
தேதொக்கும் என்பதனை யாரறிவார் - பூதப்பால்
வில்வேட னாகி விசயனோ டேற்றநாள்
வல்வேட னான வடிவு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பூதப்பால்` என்பது முதலாகத் தொடங்கி உரைக்க. `பூதம்` என்றது மண்ணை; எனவே, `பூதப்பால்` என்றது, `மண்ணுலகில்` என்றவாறு `வேடன்` இரண்டில் முன்னது, `வேடம் பூண்டவன்` என்றும், பின்னது, `வேட சாதியினன்` என்றும் பொருள் தந்தன. விசயன் - அருச்சுனன். `போர் ஏற்ற நாள்` என ஒரு சொல் வருவிக்க. ஒக்கும் இரண்டில் முன்னது `நிகர்க்கும்` என்றும், பின்னது, `பொருந்தும்` என்றும் பொருள் தந்தன. `ஏது` ஐந்தில் முன்னிரண்டும் வினாப் பெயர்; அடுத்த இரண்டும் `எத்தன்மையது` என வினைக் குறிப்பு. ஈற்றில் உள்ளதும் வினாப் பெயரே. பின் வந்த `ஏதொக்கும்` என்பது, `எந்த விடை பொருந்தும்` என்பதாம். வினாக்கள் முதல் அடியில் வந்தன. வல்வேடனாய்த் தோன்றினும் தேவ வடிவாய் இருந்ததோ, வேட வடிவாயே இருந்ததோ? அதனை அறிந்தவர் ஆர் என்றபடி.

பண் :

பாடல் எண் : 63

வடிவுடைய செங்கதிர்க்கு மாறாய்ப் பகலே
நெடிதுலவி நின்றெறிக்குங் கொல்லோ - கடியுலவு
சொன்முடிவொன் றில்லாத சோதியாய் சொல்லாயால்
நின்முடிமேல் திங்கள் நிலா.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கடி உலவு.... சோதியாய்` என்றது விளி. அது, `சொல்லாய்` என்பதனோடு முடிந்தது. ஆல், அசை. கடி உலவு சொல் - விளக்கம் அமைந்த சொல். அத்தகைய சொல் ஒன்றை முடிவாக இல்லாத சோதி. அஃதாவது, சொல்லால் அளவிட்டுச் சொல்ல முடியாத ஒளி `அலகில் சோதியன்` * என்றது காண்க. சோதி யாய் - ஒளியை உடையவனே. `நின் முடிமேல் திங்கள், பகலே நிலா எறிக்குங் கொல்லோ` என இயைக்க. வடிவு - வட்டம் என்றது. `நின் முடிமேல் திங்கள் குறையுடையது` எனக் குறிப்பால் நகை தோற்றியவாறு. செங்கதிர் - ஞாயிறு. நெடிது உலவி நின்று - பகல் முழுதும் மறையாது உலவி நின்று. `எறிக்குங் கொல்` என்றது, சொல்லால் ஐயம் போலக் கூறினும், பொருளால் துணிவு உணர்த்தியதேயாம். ஓகாரம், சிறப்பு, `நீ அணிந்துள்ள திங்கள் உலகத் திங்களன்று; அருளுருவத் திங்களாம்` என்றபடி. `கனக மலை அருகே, போயின காக்கையும் அன்றே படைத்தது பொன் வண்ணமே` 1 என்றாற் போல, `சிவனை அடைந்த பொருள்கள் யாவும் சிவமேயாதலல்லது வேறாகா` என்பதனைக் குறிப்பால் உணர்த்தியதாம்.

பண் :

பாடல் எண் : 64

நிலாவிலங்கு வெண்மதியை நேடிக்கொள் வான்போல்
உலாவி உழிதருமா கொல்லோ - நிலாஇருந்த
செக்கரவ் வானமே ஒக்குந் திருமுடிக்கே
புக்கரவங் காலையே போன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நிலா இருந்த` என்பது தொடங்கிச் சென்று, `நிலா இலங்கு வெண்மதியை நேடிக் கொள்வான்` என்பதை, `அரவம்` என்பதன் பின்னரும். `போல்` என்பதை, `கொல்லோ` என்பதன் பின்னரும் வைத்து உரைக்க. `போல்` என்பது `போலும்` என முற்றுப் பொருள் தந்தது. `பெறுவது - கொள்வாரும் கள்வரும் நேர்` என்பதில், `நேர்` 2 என்பது போல, இனி `போன்ம்` என்பதே பாடம் எனலுமாம். கொல், அசை, ஏகாரம், சிறப்பு. கொள்வான், வான் ஈற்று வினையெச்சம். செக்கர் அவ்வானம் - செம்மை நிறம் உடைய அந்தவானம். `புக்க` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. திருமுடிக்கே - திருமுடிக்கண்ணே; உருபு மயக்கம் `காலை` என்பதில் ஐ இரண்டாம் வேற்றுமை யுருபு. கால் - காற்று. `காற்றையே போன்று உலாவி உழிதரும்` என இயையும். `அரவம் சடை முடியில் மிக விரைவாக ஊர்ந்து உழலுதல், அங்குள்ள நிலாவை, `எங்கே உள்ளது` எனத் தேடி உழல்வது போல் உள்ளது` என்றது தற்குறிப்பேற்ற அணி. `நிலா` இரண்டில் முன்னது திங்களின் ஒளி; பின்னது திங்கள்.

பண் :

பாடல் எண் : 65

காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின்
தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவற்கு
வீங்கிருளே போலும் மிடறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

காலை நேரம், அருணோதயத்தாலும், உதய சூரியனாலும் வானம்மிகச் சிவந்து தோன்றுதலால், அக்காலத்து வானம் சிவனது திருமேனிக்கும், உச்சி வேளையில் சூரியன் வெண்ணிறமாய் நிற்றலால் வானமும் வெளிது ஆதலின், அக்காலத்து வானம் அவன் அணிந்துள்ள வெண்ணீற்றிற்கும், மாலையில் மறை கின்ற ஞாயிற்றின் கதிர்கள் பல திசைகளிலும் பல கம்பிகள் போல வீசுதலால் அவற்றின் தோற்றம் அவனது விரிந்த சடைக்கும், இரவு நேரத்தில் மிகுந்துள்ள இரவு மிகக் கரிதாய்த் தோன்றலின் அஃது அவன் கறை மிடற்றிற்கும் உவமையாயின. இவை மாலையுவமை யணி. `காலை, பகல்` என்பன அக்காலத்து வானத்தையும், `மாலை` என்பதும் அக்காலத்துக் கதிர் வீச்சினையும் குறித்தன. மாலை - மயங்கும் மாலை. அந்தக் காலம். `மாலையின் உரு` என இயையும். தாங்கு உரு - தாங்கப்படும் உரு. வேலை - பொழுது. கடும் பகல் - மிக்க பகல்; நண்பகல். மற்று, அசை, `அவன்` என்பது சிவபிரானைச் சுட்டியது பண்டறி சுட்டு. வீங்குதல் - மிகுதல். சிவபிரானது திருமேனியது உறுப்பழகைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 66

மிடற்றில் விடம்உடையீர் உம்மிடற்றை நக்கி
மிடற்றில் விடங்கொண்ட வாறோ - மிடற்றகத்து
மைத்தாம் இருள்போலும் வண்ணங் கரிதாலோ
பைத்தாடும் நும்மார்பிற் பாம்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மிடற்றில் விடம் உடையீர் நும் மார்பில் பைத்து ஆடும் பாம்பு வண்ணம் (நும்) மிடற்றில் மைத்து ஆம் இருள் போலும் கரிது; (அது) உம் மிடற்றை நக்கித் (தனது) மிடற்றில் வடம் கொண்ட வாற்றாலோ?` என இயைத்துப் பொருள் கொள்க. `உமது மிடற்றின் நிறமும், நும் மார்பில் ஆடும் பாம்பின் நிறமும் ஒன்றாய் இருக் கின்றதே` என வியந்துரைத்தவாறு. பின் வந்த மிடற்றுக்கு, `தன்` என்பது வருவிக்க. `உம்` என்பதை ஈற்றில் வந்த மிடற்றுக்கும் கூட்டுக. `விடம் கொண்டவாற்றால்` என உருபு விரிக்க. ஓகாரம் தெரிநிலைப் பொருட்டு. மைத்து ஆம் - மையின் தன்மை யுடையதாகி. `பாம்பு வண்ணம் கரிது` எனப் பண்பின் வினைபண்பிமேல் நின்றது. ஆல், ஓ அசைகள். பைத்து - படத்தை உடையதாய். இது, `பை` என்னும் பெயர் அடியாகப் பிறந்த வினைச் சொல்.

பண் :

பாடல் எண் : 67

பாம்பும் மதியும் மடமானும் பாய்புலியுந்
தாம்பயின்று தாழருவி தாங்குதலால் - ஆம்பொன்
உருவடியில் ஓங்கொளிசேர் கண்ணுதலான் கோலத்
திருவடியின் மேய சிலம்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதனுள் `சிலம்பு` என்றது கழலையே குறித்தது, மாதொரு பாகமாம் வடிவில் சிவன் திருவடியில் மேயது கழலேயாகையால் `கழல் வீரம் உடையார்க்கே உரியது. முதல் இரண்டு அடிகளில் கூறியவாறு. சிவபெருமான் பகைப் பொருள்களைத் தனது மேனியில் பகைதீர்த்துப் பயில வைத்தமையாலும், தாங்கற்கரிய கங்கையைத் தலையில் தாங்கினமையாலும் அவன் கழல் அணிதல் தக்கதே `பயின்று` என்பதை, `பயில` எனத் திரிக்க. தாழ்தல் - வீழ்தல். `அருவி` என்றது கங்கையை. `பயின்று, தாங்குதலால் சிலம்பு ஆம்` என இயைக்க. ஆம் - பொருந்துவதே. உரு - நிறம். `வடிவில் ஓங்கின்ற ஒளி` என்க. சிவபிரானது எல்லாம் வல்ல தன்மையை வியந்தவாறு. பெருமான் புலித்தோலையே உடையனாயினும், மான் அதையே கண்டு, `புலி` என்று அஞ்சும் ஆகலின், `அங்ஙனம் அஞ்சவில்லை` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 68

சிலம்படியாள் ஊடலைத் தான் தவிர்ப்பான் வேண்டிச்
சிலம்படிமேற் செவ்வரத்தஞ் சேர்த்தி - நலம்பெற்
றெதிராய செக்கரினும் இக்கோலஞ் செய்தான்
முதிரா மதியான் முடி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`செந்நிறத்தால் செக்கர் வானமும், சிவ பெருமானது சடைமுடியும் ஒன்றை ஒன்று வெல்லப் பார்க்கும் நிலையில், சிவபெருமான் உமாதேவியின் ஊடலைத் தவிர்க்க வேண்டி அவளது பாதங்களில் தனது முடியைப் பல முறை சேர்த்துதலால் அப்பாதங்களில் தனது முடியைப் பல முறை சேர்த்துதலால் அப்பாதங்களில் உள்ள செம்பஞ்சுக் குழம்பு பட்டுப் பட்டுச் சடைமுடி செக்கர் வானத்தை வென்று விட்டது` என்பது இப்பாட்டின் திரண்ட பொருள். இஃது உவகைச்சுவை. இதனை, `சிருங்கார ரசம்` என்பர் வட நூலார். அனைத்துச் சுவைகளையும் பத்திச் சுவைக்குத் துணையாகவே திரு முறைகள் கொள்ளும்.
செவ்வரத்தம் - செம்பஞ்சு. `செவ்வரத்தத்தில் சேர்த்தி` என உருபு விரிக்க. `சேர்த்தி` என்றாரேனும், `சேர்த்திச் சேர்த்தி` என அடுக்கிக் கூறுதல் கருத்தென்க. நலம் - அழகு. `பெற்று` என்பதில் `பெறுவித்து` என்னும் பிறவினை விகுதி தொகுக்கப்பட்டது. செக்கர் - செவ்வானம் இதன்பின், `சிறக்க` என ஒரு சொல் வருவிக்க. `முதிரா மதியான் தனது முடியைச் செவ்வரத்தத்தில் சேர்த்து நலம் பெறுவித்து இக்கோலம் செய்தான்` என்க. மதி திங்களாயினும், `அறிவு` என்றும் பொருள்தரும் ஆதலின், `ஒரு பெண்ணின் அடிகளில் பல முறை முடி தோய வணங்குகின்றான்` என்னும் நகை நயம் தோன்ற அப்பொருள் மேற் செல்லும் குறிப்பும் உடையது.

பண் :

பாடல் எண் : 69

முடிமேற் கொடுமதியான் முக்கணான் நல்ல
அடிமேற் கொடுமதியோம் கூற்றைப் - படிமேற்
குனியவல மாம்அடிமை கொண்டாடப் பெற்றோம்
இனியவலம் உண்டோ எமக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கொடு மதி - வளைந்த பிறை. `வாலறிவான் நற்றாள்` * என்பதன் உரையில், `பிறவிப் பிணிக்கு மருந்தாகலின் `நற்றாள்` என்றார்` எனப் பரிமேலழகர் உரைத்த உரை இங்கு, `நல்ல அடி` என்பதற்குக் கொள்ளத்தக்கது. மேற் கொடு - தலைமேற் கொண்டமையால், `கூற்றை மதியோம்` என்க. கூற்று, இறப்பைத் தரும் தெய்வம்; யமன். படி - பூமி, `படிமேல் பொருந்தத் தலை குனிய வல்ல மாகிய அடிமைத் தன்மையைக் கொண்டாடப் பெற்றோம்` என்பதில் `வல்லம்` என்பது இடைக் குறைந்து நின்றது. கொண்டாடுதல் - பாராட்டுதல். அவலம் - துன்பம்.

பண் :

பாடல் எண் : 70

எமக்கிதுவோ பேராசை என்றுந் தவிரா
தெமக்கொருநாள் காட்டுதியோ எந்தாய் - அமைக்கவே
போந்தெரிபாய்ந் தன்ன புரிசடையாய் பொங்கிரவில்
ஏந்தெரிபாய்ந் தாடும் இடம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எந்தாய், சடையாய், இரவில் நீ ஆடும் இடம் எமக்கு ஒருநாள் காட்டுதியோ? இதுவோ எமக்கு ஒரு பேராசையாய் (உள்ளது) தவிராது` என்க. அமைக்கவே போந்த எரி - சிலர் செயற்கையாக அமைக்க அதனாலே உண்டான எரி, பாய்தல் - பரத்தல்; `இயற்கையேயாயினும் செயற்கைபோல அத்தனை அமைப்பாய் உள்ளது` என்பதாம். `போந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. பொங்குதல் - இருள் மிகுதல். ஏந்து எரி - ஓங்கி எரியும் எரி. `இதுவோ` என்னும் ஓகாரம் சிறப்பு. `தவிராது` என்றது. `தவிர்க் கினும் தவிராது` என்றபடி. `காட்டுதியோ` என்பதில் ஓகாரம் ஐயப் பொருட்டு ஆகலின், `மாட்டாயோ` என்பதும் கொள்ளப்படும். `சிவன் இரவில் எரியாடும் இடம் இந்தச் சுடுகாடாயின், யாவரும் அதனை எளிதிற் சென்று கண்டுவிடலாம்; `அவன் காட்ட வேண்டும்` என்பதில்லை. ஆசை தோன்றுதலும், அதனை நிரப்ப முடியாதிருத்தலும் நிகழா. அதனால், இரவாவது முற்றழிப்புக் காலமும், எரியாடும் இடமாவது சூக்குமமாகிய காரண நிலையுமாம் - என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 71

இடப்பால வானத் தெழுமதியை நீயோர்
மடப்பாவை தன்னருகே வைத்தால் - இடப்பாகங்
கொண்டாள் மலைப்பாவை கூறொன்றுங் கண்டிலங்காண்
கண்டாயே முக்கண்ணாய் கண்.

பொழிப்புரை :

குறிப்புரை :

`முக்கண்ணாய்` என்பதை முதலிற்கொண்டு `உரைக்க. இடப்பால் - `இடப் பக்கத்தில் உள்ள மதி` என்க. ஓர் மடப் பாவை, கங்கை. கங்கை தலையிலேயிருப்பதால், மதியை (பிறையை) அவள் பக்கத்தில்தான் வைக்க வேண்டியுள்ளது. அஃது உண்மைதான்; ஆயினும் அதனால் நீ அழகாகச் சூடிய பிறையில் உன் இடப் பாகத்தில் உள்ள தேவிக்குத் தொடர்பில்லாமல், அவள் மாற்றாட்கன்றோ (கங்கைக்கு) தொடர்புடையதாகின்றது? கண் கண்டாயே இனை நீ உன் கண்ணால் கண்டு கொண்டு தானே இருக்கின்றாள். (`இதற்கு என் செய்தாய்` என்பது இசை யெச்சம். `நீ, இடப்பாகத்தில் ஒருத்தியிருக்க, மற்றொருத்தியைத் தலையில் வைத்தது பிழை` என்பது குறிப்பு.) இதுவும் நிந்தாத் துதி. `கண்டிலம் காண்` என்பதில் காண், முன்லையசை. கண் கண்டாயே` என மாற்றி, `கண்ணால்` என உருபு விரிக்க. இனி, ஈற்றில் `கண்` என்பதை, `காண்` எனப் பாடம் ஓதி, `கண்டாயே; இதற்கு ஒரு வழியைக் காண்` என உரைப்பினும் ஆம்.

பண் :

பாடல் எண் : 72

கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல்
அண்டம் பெறினும் அதுவேண்டேன் - துண்டஞ்சேர்
விண்ணாறுந் திங்களாய் மிக்குலகம் ஏழினுக்குங்
கண்ணாளா ஈதென் கருத்து.

பொழிப்புரை :

குறிப்புரை :

`நின்னைக் கண்டு நினக்குப் பணி செய்யே னேல்` என்க. கைப் பணி - கையால் செய்யும் தொண்டு. சிறப்புடைமை பற்றி இதனை எடுத்தோதினார். ஆகவே, மனத்தொண்டும், வாய்த் தொண்டும் சொல்லாமே அடங்கின. `செய்யேனேல்` என்றது, `செய்யும் வாய்ப்பைப் பெறேனாயின்` என்றபடி. அண்டம் - வானுலக ஆட்சி. இதனைக் கூறவே, மண்ணுலக ஆட்சியும் அடங்கிற்று, திங்களாய் - திங்களை அணிந்தவனே. இதனையும், `கண்ணாளா` என்பதையும் முதலிற் கொள்க. `மிக்க` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `கண்` என்றது, கண்போலும் தன்மையை. அஃதா வது நன்னெறி தீநெறிகளை விளக்கும் தன்மை. ஆளன் உடையவன். கைப்பணி பிறப்பை அறுப்பதும், மண்ணுலக விண்ணுலக ஆட்சிகள் பிறப்பை மிகுவிப்பனவும் ஆதலின் அவை முறையே விரும்பப்படு வதும், வெறுக்கப்படுவனவும் ஆயின.

பண் :

பாடல் எண் : 73

கருத்தினால் நீகருதிற் றெல்லாம் உடனே
திருத்தலாஞ் சிக்கெனநான் சொன்னேன் - பருத்தரங்க
வெள்ளநீர் ஏற்றான் அடிக்கமலம் நீ விரும்பி
உள்ளமே எப்போதும் ஒது.

பொழிப்புரை :

குறிப்புரை :

`உள்ளமே` என்பதை, `பருத் தரங்கம்` என்ப தற்கு முன்னே கூட்டி, அது முதலாக உரைக்க. தரங்கம் - அலை. வெள்ள நீர் - மிக்க நீர். வாயின் தொழிலாகிய ஓதுதலை நெஞ்சிற்கு ஏற்றியது இலக்கணை. நெஞ்சிற்குக் கருத்து உள்ளதுபோலக் கூறியதும் அது. திருத்தலாம் - நிரப்பலாம். சிக்கென - உறுதியாக.

பண் :

பாடல் எண் : 74

ஒத நெடுங்கடல்கள் எத்தனையும் உய்த்தட்ட
ஏதும் நிறைந்தில்லை என்பரால் - பேதையர்கள்
எண்ணா திடும்பலியால் என்னோ நிறைந்தவா
கண்ணார் கபாலக் கலம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பொ: ஓதம் - அலை. `எத்தனை` என்பது ஆகு பெயராய் அவற்றின் நீரைக் குறித்தது. அட்டுதல் - சேர்த்தல். `அட்ட வும்` என உம்மை விரிக்க. `நிறைந்தது` என்பதில் அகரம் தொகுத்தல். அமர் நீதி நாயனார் நாட்டிய துலாக்கோல் மண்ணுலகத்ததாயினும் இறைவனது கோவணத்தை தாங்கிய தட்டு, எதிர்த் தட்டில் எத்தனைப் பொருள்களை வைப்பினும் மேல் எழாது இருந்தமை போல, கபாலம், பிரமன் தலையேயாயினும் இறைவன் கையில் இருத்தலால் எத்தனைக் கடல்களின் நீரை வார்ப்பினும் நிரம்பாதாயிற்று. பேதையர்கள் - பெண்கள். எண்ணாது - பாத்திரத்தின் பெருமையை அறியாமல். பலி- பிச்சை. `கலம் பலியால் நிறைந்தவா என்னோ? என்க. (நிறைய வில்லை, நிறைந்து விட்டதுபோல இறைவன் அப்பாற் சென்றான்` என்பது குறிப்பு. கண் ஆர் - இடம் மிகுந்த. கலம் - பாத்திரம். இறை வனை அடைந்த பொருள்களும் அவனைப் போலவே அளப்பரிதாதல் கூறியபடி.

பண் :

பாடல் எண் : 75

கலங்கு புனற்கங்கை ஊடால லாலும்
இலங்கு மதியியங்க லாலும் - நலங்கொள்
பரிசுடையான் நீள்முடிமேற் பாம்பியங்க லாலும்
விரிசடையாங் காணில் விசும்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஊடு - உள்ளே, ஆலல் - ஒலித்தல். அசைதலு மாம். பரிசு - தன்மை; இயல்பு. `நீள் முடிமேல் விரி சடை` என இயைக்க. காணில் - பார்க்கும்பொழுது. `சடை விசும்பாம்` என்க. ஆக்கம் உவமை குறித்து நின்றது. `கங்கை மழைபோலவும், பாம்பு இராகு போலவும் தோன்றுகின்றன` என்பதாம். இஃது ஏது உவமை யணி.

பண் :

பாடல் எண் : 76

விசும்பில் விதியுடைய விண்ணோர் பணிந்து,
பசும்பொன் மணிமகுடந் தேய்ப்ப - முசிந்து,
எந்தாய் தழும்பேறி யேபாவ பொல்லாவாம்
அந்தா மரைபோல் அடி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`எந்தாய்` என்பதை முதலிற் கொள்க. விசும்பின் - வானின்கண் உள்ள. விதி, இங்கு நல்வினை. விண்ணோர்` என்பது `தேவர்` என்னும் அளவாய் நின்றது. `மகுடத்தைத் தேய்ப்ப` என்க. `மகுடத்தால் தேய்ப்ப` என்றும் ஆம். முசிந்து - தேய்ந்து. ஏகாரம் பிற காரணங்களினின்று பிரித்தலின் பிரிநிலை. பொல்லா ஆம் - அழகில்லன ஆகின்றன. `நின் அடி` என வருவித்து, `தேய்ப்ப முசிந்து, தழும் பேறிப் பொல்லா ஆம்` என வினை முடிக்க. பாவம், இரக்கக் குறிப்புச் சொல். விண்ணோர் யாவரும் சிவபெருமானது திருவடிகளில் தங்கள் முடி தோய வணங்குதலைக் குறித்தவாறு.

பண் :

பாடல் எண் : 77

அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகள்
முடிபேரின் மாமுகடு பேருங் - கடகம்
மறிந்தாடும் கைபேரில் வான்திசைகள் பேரும்;
அறிந்தாடும் ஆற்றா தரங்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அடிகளது` என உருபு விரித்து, முதலிற் கூட்டுக. அடிகள் - சுவாமிகள். இஃது உயர்வு குறித்து வரும் பன்மைச் சொல். முகடு - அண்டத்தின் உச்சி. அது பேர்தலாவது, உடைதல், `மறிந்து` என்பதை, `மறிய` என திரிக்க. மறிதல் - உழலுதல். வான், இங்குச் சேய்மை. `ஆகலான் அரங்கு ஆற்றாது; அதனை யறிந்து மெல்ல ஆடுமின்` என்பதாம். ஆடும், முன்னிலைப் பன்மை ஏவல், சிவபெருமானது விசுவரூபத்தினைச் சிறப்பித்தவாறு.

பண் :

பாடல் எண் : 78

அரங்கமாப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளா
இரங்குமோ எவ்வுயிர்க்கும் ஏழாய் - இரங்குமேல்
என்னாக வையான் தான் எவ்வுலகம் ஈந்தளியான்
பன்னாள் இரந்தாற் பணிந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஏழாய், ஆடுவான் எவ்வுயிர்க்கும் வாளா இரங்குமோ! பன்னாள் பணிந்து இரந்தால் (இரங்கும்), இரங்குமேல், தான், என்னாகவையான்; எவ்வுலகம் ஈந்து அளியான்!` என இயைத்துக் கொள்க. `அரங்கமாப் பேய்க் காட்டில் ஆடுவான்` என்றாரேனும், `பேய்க் காடு அரங்கமா அதன்கண் ஆடுவான்` என்றல் கருத்து என்க. எவ்வுயிர்க்கும் - எத்துணைச் சிறப்புடைய உயிர்க்கும். அவை அயன்,மால், ஏனைத் தேவர் முதலியோர். `அவரெல்லாம் அவனைப் பன்னாள் பணிந்து இரந்தே தத்தம் பதவிகளைப் பெற்றனர் என்றபடி. எனவே, `அவனைப் பன்னாள் பணிந்து இரந்தால் திருவுளம் இரங்குவான்` என்பதற்கும், `இரங்கினால் எத்தகைய சிறப்பைத் தான் அவன் தரமாட்டான்` என்பதற்கும் அவ் அயன், மால் முதலியோரே சான்று` என்றவாறு. ஏழாய் - அறிவிலியே. இது தமது நெஞ்சத்தை விளித்தது. `இரங்குமோ` என்னும் ஓகாரம் எதிர்மறை. `இரங்கு மேல்` என்ற அனுவாதத்தால், இரங்குதலும் பெறப்பட்டது. அளித்தல்- காத்தல். `எத்தகைய சிறப்பையும் எய்தச் செய்வான். எந்த உலகத்தையும் ஈந்து அளிப்பான்` எனக் கூறற்பாலதனை இங்ஙனம் வினாவாகக் கூறினார். வலியுறுத்தித் தெளிவித்தற்கு `சிவன் வாளா இரங்கான்; பன்னாள் பணிந்து இரந்தால் இரங்குவான்` என்பது உணர்த்தியவாறு.
சும்மா கிடைக்குமோ சோணாசலன்பாதம்
அம்மால் விரிஞ்சன் அறிகிலார் நம்மால்
இருந்துகதை சொன்னக்கால் என்னாகும் நெஞ்சே
பொருந்த நினையாத போது*
எனப் பிற்காலத்தவரும் கூறினார்.
சிவன்எனும் நாமம் தனக்கே உடைய
செம்மேனிஎம்மான்
அவன்எனை ஆட்கொண் டளித்திடுமாயின்
அவன்றனை யான்
பவன்எனும் நாமம் பிடித்துத் திரிந்து
பன்னாள் அழைத்தால்
இவன்எனைப் பன்னாள் அழைப்பொழியான் என்று
எதிர்ப்படுமே.
என்பது அப்பர் திருமொழி.
உழப்பின் வாரா உறுதிகள் உளவோ!
கழப்பின் வாராக் கையற வுளவோ!
என்றார் பட்டினத்தடிகள்.

பண் :

பாடல் எண் : 79

பணிந்தும் படர்சடையான் பாதங்கள் போதால்
அணிந்தும் அணிந்தவரை ஏத்தத் - துணிந்தென்றும்
எந்தையார்க் காட்செய்யப் பெற்ற இதுகொலோ
சிந்தையார்க் குள்ள செருக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`படர்சடையான் பாதங்கள்` என்பதை முதலிற் கொள்க. போது - பேரரும்பு. அணிதல் - அலங்கரித்தல். வினைக்கண் வந்த எண்ணும்மைகள் ஆட்செய்யும் வகைகளை எண்ணி நின்றது. கொல், அசை. ஓகாரம் சிறப்பு. `சிந்தையார்` என உயர்த்தற்கண் அஃறிணை உயர் திணையாய் மயங்கிற்று.
செருக்கு - பெருமிதம். அஃதாவது, `ஒருவரை மதியாது உறாமைகள் செய்தல்` 3 பெரு மிதத்தைத் தம் சிந்தைமேல் வைத்து, அதனை வேறுபோற் கூறினார். `சிவனுக்கு ஆட்செய்யப் பெறுகின்ற பேறு கிடைத்தற்கரியது` என்பதைக் குறித்தவாறு.

பண் :

பாடல் எண் : 80

செருக்கினால் வெற்பெடுத்த எத்தனையோ திண்தோள்
அரக்கனையும் முன்னின் றடர்த்த - திருத்தக்க
மாலயனுங் காணா தரற்றி மகிழ்ந்தேத்தக்
காலனையும் வென்றுதைத்த கால்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`திருத் தக்க` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. திரு - திருமகள். `திருவுக்குத் தக்க` என நான்கன் உருபு தொகுத்தலாயிற்று. திருவினால் தக்க என மூன்றன் உருபு விரிப்பின் மாலுக்குக் குறையுண்டாகும். `காணாது` என்பதை, `காணப்படாது நின்று` எனச் செயப்பாட்டு வினைப் பொருட்டாக்கி, அதனை, `ஏத்தக் காணப்பட்ட` என ஒரு சொல் வருவித்து முடிக்க. இல்லையேல், `ஏத்த` என்பதற்கு முடிபின்றாம். `காணப்பட்ட கால்` என்க. `வென்று உதைத்த` என்பதனை, `உதைத்து வென்ற` எனப்பின் முன்னாக வைத்து, விகுதி பிரித்துக் கூட்டியுரைக்க. `கால் அடர்த்த` என முடியும். அடர்த்த அடர்த்தன; ஒறுத்தன. வெற்பு - கயிலை மலை. `எத்தனையோ` என்றது, `பல` என்றவாறு. எண் வரையறை கூறாது இங்ஙனம் கூறியது. அவனது வலிமிகுதியைக் குறித்தது, அதனானே அவன் செருக்கியதன் காரணத்தை உணர்த்தற்கு. அரக்கன், இராவணன். உம்மை, பிறருக்கில்லாத அவனது தலைகளும், தோள் களும் பற்றிய சிறப்பைக் குறித்தது. முன் நிற்றல், அனைத்துறுப்புக் களும் பின் நிற்கத் தான் முன்னிற்றல். அதனால், `அஃதே, காண் பார்க்கு முதலிற் காணப்படுவது` என்பதும் பெறப்பட்டது. `அத்துணை வலியன் தோளால் முயன்று எடுத்த மலையை, தாளால் (அதனுள்ளும் ஒரு விரலால்) தடுத்து ஒறுத்தவனோடு இகலி நிற்பார் யாவர்` என அவனது அளவிலாற்றலைக் குறித்தது, அதனானே அவனது தன்வயம் உடைமையையும் குறித்தவாறு.

பண் :

பாடல் எண் : 81

காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம்
மேலை இருவினையும் வேரறுத்தோம் - கோல
அரணார் அவிந்தழிய வெந்தீஅம் பெய்தான்
சரணார விந்தங்கள் சார்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கோல அரணார்` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. கோலம் - அழகு. அரண் - மதில். முப்புரம். அரணார் - அவற்றையுடைய அசுரர். `அவிந்து அழிய` என்பது ஒரு பொருட் பன்மொழி. தீ - தீக்கடவுள் `தீக் கடவுளாகிய அம்பு` - என்க. சரண அரவிந்தங்கள் - திருவடியாகிய தாமரை மலர்கள். சார்ந்து - சார்ந்தமையால். கழன்றோம் - நீங்கினோம். கை, இடைச்சொல். மேல், இடமேல். அது காலத்தால் `கீழ்` எனப்படும்.ஐ சாரியை. மேலை வினை- முன்னே சேர்ந்து கிடக்கின்ற வினை; சஞ்சித கன்மம். `வேரோடு` என மூன்றாவது விரிக்க. சஞ்சிதம் இன்மையால், `பிறவியில்லையாயிற்று` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 82

சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே ஒத்திலங்கிச் சாராது
பேர்ந்தார்க்குத் தீக்கொழுந்தின் பெற்றியதாம் - தேர்ந்துணரில்
தாழ்சுடரோன் செங்கதிருஞ் சாயுந் தழல்வண்ணன்
வீழ்சடையே என்றுரைக்கும் மின்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தாழ் சுடரோனை` என்பது முதலாகத் தொடங்கி, `தேர்ந்து உணவில்` என்பதை ஈற்றிற் கூட்டி உரைக்க. தாழ் சுடரோன். மறைகின்ற சூரியன். எனவே, செங்கதிர், மாலை வெயிலாம். சாய்தல் - தோல்வியுறுதல். `சாயும் வண்ணன்` என இயையும். வீழ் - தொங்குகின்ற. மின் - மின்னல். `சடையே என்று உரைக்கும் மின்` என்றது உருவக அணி. `சடையே` என்னும் தேற்றேகாரம் உண்மையுவமைப் பொருட்டாய், உருவகத்தோடு இயைந்து வந்தது. `சார்ந்தார் இன்பமே பெறுதலால் அவர்க்கு அழகி தாயும், சாராதார் ஒறுத்தலே பெறுதலால் அவர்க்கு அச்சம் தருவதாயும் உள்ளது` என்க.

பண் :

பாடல் எண் : 83

மின்போலுஞ் செஞ்சடையான் மாலோடும் ஈண்டிசைந்தால்
என்போலுங் காண்பார்கட் கென்றிரேல் - தன்போலும்
பொற்குன்றும் நீல மணிக்குன்றுந் தாமுடனே
நிற்கின்ற போலும் நெடிது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`காண்பார் கட்கு என்போலும்` எனக் கூட்டுக. என் போலும் - எதைப்போல இருக்கும். `தன்போலும்` என்றது, `சிவனைப் போல இருக்கின்ற பொற்குன்று` என்றபடி. இதனை நீல மணிக்கும் கூட்டி. `திருமாலைப் போல இருக்கின்ற நீல மணிக்குன்று` என்க. உலக இலக்கியங்களில் உபயோகத்தை மிக உயர்த்துக் கூறுதற்பொருட்டு. உபமான உபமேயங்களை நிலைமாற்றிக் கூறுதல் உண்டு. அங்ஙனம் கூறியவழி அஃது, `எதிர்நிலை உவமம்` என்றும், `விபரீத உவமை` என்றும் சொல்லப்படும். அதற்குக் காரணம் உலகப் பொருள்களில் உண்மையில் உயர்ந்து நிற்பது உவமையே. அதனை, `உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை` 1 என்னும் தொல்காப்பியத் தாலும் அறியலாம். இறையிலக்கியத்தில் உபமேயமாகிய இறையே உண்மையில் உயர்ந்து நிற்பது. எனினும் இலக்கண மரபு பற்றி அங்ஙனம் கூறுதல் கூடும். `பொற்குன்றும் நீல மணிக் குன்றும் உவம மாக வேறிடத்து வைத்துக் கருதப்படாது. அவையே பொருளாகக் காட்சியில் முன்னிலையில் வைத்து உணரப்படும்` என, அரியர்த்த உருவத்தைச் சிறப்பித்தவாறு. உடன் - ஒருசேர, `இரு பாதியாக` என்ற படி. நிற்கின்ற - நிற்கின்றன. நெடிது - நெடுங்காலம். `எல்லையில் காலம்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 84

நெடிதாய பொங்கெரியுந் தண்மதியும் நேரே
கடிதாங் கடுஞ்சுடரும் போலும் - கொடிதாக
விண்டார்கள் மும்மதிலும் வெந்தீ யினிலழியக்
கண்டாலும் முக்கணாங் கண்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கொடிதாக` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்குங்கால், `வெந்தீ - இயற்கையிலே வெப்பம் உடையதாகிய தீ, மேலும் கொடிதாகி எரிக்க, அதனில்` என உரைக்க. விண்டார்கள் - பகையாகியவர்கள்; அசுரர். `ஆறும் கண்` என இயைக்க. ஆறுதல் - மகிழ்தல். காட்சியால் உள்ளம் மகிழ்தலை, `கண்களிப்பக் கண்டார்கள். 2 என்றது போல `கண் களித்தது` என்றல் வழக்கு `மூன்றாகிய கண்` என்றற்பாலதனை, `முக்கண் ஆம் கண்` என்றார். எனவே, முன் உள்ள `கண்` என்பது `பொருள்` எனப் பொதுமையில் நின்றதாம். `முக்கணான் கண்` எனப்பாடம் ஓதி. `சிவனது கண்கள்` என உரைத்தல் சிறக்கும். `நெடிது` என்பதற்கு, முன்னை வெண்பாவில் உரைத்தவாறே உரைக்க. பொங்கு எரி - எரிகின்ற நெருப்பு. நேரே போலும் - ஒப்பனவேபோலும். கடிது - மிக்கது. `கடுஞ் சுடர்` என்பதில் கடுமை வெம்மை குறித்தது. வெஞ்சுடர், ஞாயிறு. `போலும்` என்பது உரை யசை, `மங்கலம் என்பது ஓர் ஊர் உண்டுபோலும்` என்றல் போல. உவமம் அன்று. `சிவனது` மூன்று கண்களே முச்சுடர்கள்` என உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 85

கண்ணாரக் கண்டுமென் கையாரக் கூப்பியும்
எண்ணார எண்ணத்தால் எண்ணியும் - விண்ணோன்
எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ
பெரியானைக் காணப் பெறின்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியை முதலில் வைத்து உரைக்க. பெரியான் - மகாதேவன்; சிவன். `அவனை` எனச் சுட்டுப் பெயர் வருவிக்க. ஆர - நிரம்ப. எண், எண்ணம் - அதனைச் செய்வதாகிய என்றும் - என்று என்றும் சொல்லியும். கொல், அசை, ஓகாரம், ஐயப் பொருட்டு `என்` என்பது தாப்பிசையாய் முன்னும் சென்று இயைந்தது. பேரவாக் காரணமாக இங்ஙனம் ஐயுற்றவாறு. `காணப்பெறின்` என்பது, காணப்பெறலின் அருமை குறித்து நின்றது.

பண் :

பாடல் எண் : 86

பெறினும் பிறிதியாதும் வேண்டேம் எமக்கீ
துறினும் உறாதொழியு மேனுஞ் - சிறிதுணர்த்தி
மற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்றன் பேயாய
நற்கணத்தில் ஒன்றாய நாம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மற்றொரு கண் நெற்றிமேல் சிறிது உணர்த்தி வைத்தான்றன் பேய் நற்கணத்தில் ஒன்றாய நாம், (இஃது) உறினும், உறாதொழியுமேனும் பிறிதுயாதும் பெறினும் வேண்டேம்` என இயைத்து முடிக்க. நெற்றிக் கண்ணைச் சிறிது உணர்த்தலாவது, `உளது` என்னும் அளவிலே காட்டுதல். நன்கு திறப்பின் உலகம் வெந்தொழி யும். கணம் - படை. `நற்கணம்` என்றமையால், சிவகணமாகிய பேய்கள். பாவப் பிறவியாகிய பேய்களாகாமை விளங்கும். ஞானி களை உலகம் அவர்களது புறக்கோலம் பற்றி, பித்தராக நினைப்பினும் அவர் பித்தராகாமை போல்வதே இது. ஊழி முடிவில் உடம்பின்றிச் சிறிதே உணர்வு மாத்திரமாய் இருக்கும் உயிர்களே சிவப் படைகளாகக் கூறப்படுதலின் உண்மை. எனவே, பௌதிக உடம்பு நீங்கிச் சிவனைச் சார்ந்திருக்கும் உயிர்களும் அவையாகவே விளங்கும் என்க. அம்மையார் மேற்காட்டிய திருப்பதிகங்களிலும் இவ்வந்தாதியின் இறுதியிலும் தம்மை, `காரைக்காற் பேய்` எனக் குறித்தமையால், அவர் அந்நிலையராகியே இறைவனைச் சார்ந்தமை தெளிவு. அதனால் நம்பியாரூரர் இவரது வரலாற்றை, `பேயார்` என்ற ஒரு சொல்லில் அடக்கி அருளிச் செய்தார்(1) சேக்கிழார். மெய்யில் ஊனுடை வனப்பை யெல்லாம் உதறி, எற்புடம்பே யாகி, வானமும், மண்ணும் எல்லாம் வணங்குப்பேய் வடிவ மானார்.1 பொற்புடைச் செய்ய பாத புண்டரீ கங்கள் போற்றும் நற்கணத் தினில்ஒன் றானேன் நான்என்று நயந்து பாடி. 2 என விரித்தும், அருளிச் செய்தார். இத்தகைய நற்பேறு கிடக்கப் பெற்ற பெருமிதம் பற்றி அம்மையார் தம்மை `நாம்` என்றும், `வேண்டேம்` என்றும், `எமக்கு` என்றும் பன்மைச் சொல்லாற் குறித்தருளினார். `பிற பேறுகளோடு தமக்கு இயைபில்லாமையால் அவை தம்மைக் கிட்டப் போவதில்லை` என்பது தோன்ற, `பெறினும்` என எதிர்மறை உம்மை கொடுத்துக் கூறினார். `பிற பேறுகள் எல்லாம் இதன் முன் எம்மாத்திரம்` என்பது கருத்து. உறுதல் நன்மை பயத்தல்.

பண் :

பாடல் எண் : 87

நாமாலை சூடியும் நம்ஈசன் பொன்னடிக்கே
பூமாலை கொண்டு புனைந்தன்பாய் - நாமோர்
அறிவினையே பற்றினால் எற்றே தடுமே
எறிவினையே என்னும் இருள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நா மாலை - நாவால் தொடுக்கப் படும் மாலை; சொன் மாலை; பா மாலை. `நம் ஈசன் பொன் அடிக்கே` என்பதை முதலிற் கொள்க. `கொண்டு` என்பது `ஆல்` உருபின் பொருட்டாய இடைச்சொல். புனைந்து - அலங்கரித்து, ஓர் அறிவு, `அவனே நமக்கு எல்லாப் பொருளும், பிறிதொன்றும் பொருளாவதில்லை` என அறியும் அந்த ஒருமை அறிவு. `ஏ தாய், அற்றாய் அடும்` என்க. ஏது, `யாது` என்பதன் மரூஉ. எற்று - என்ன தன்மைத்து. அடும் - வருத்தும். எறி - தாக்குகின்ற. `வினையே` என்னும் ஏகாரம். அசை. `வினை யென்னும் இருள்` என்றது உருவகம். இருள் - துன்பம். துன்பம் தருவதனைத் `துன்பம்` என்றது உபசாரம். பற்றினால், இருள், ஏதாய், எற்றாய் அடும்? என முடிக்க. `வினாக்கள், யாதாயும், எற்றாயும் அடாது` என்னும் எதிர் மறைப்பொருள் குறித்து நின்றன. `சிவனுக்குப் பணி செய்து நிற்பாரை வினை அணுகமாட்டாது` என்றபடி.

பண் :

பாடல் எண் : 88

இருளின் உருவென்கோ மாமேகம் என்கோ
மருளின் மணிநீலம் என்கோ - அருளெமக்கு
நன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண்மதியம்
ஒன்றுடையாய் கண்டத் தொளி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நன்றுடையாய்` என்பது முதலாகத் தொடங்கி, `உன்னுடைய கண்டத்து ஒளியை யான் என் என்கோ! எமக்கு அருள்` என முடிக்க. `எமக்கு அருள்` என்பது வேறு தொடராதலின், ஒருமை பன்மை மயக்கம் அன்மை உணர்க. என்கோ - என்பேனோ. ஓகாரங்கள் - ஐயப் பொருள வாயினும், `எவ்வாறு கூறினும் பொருந்தும்` என்பதே. மா - கருமை. மருள் - மருட்கை; வியப்பு. `வியப்பைத் தரும் மணி` என்க. இதில் சாரியை நிற்க இரண்டன் உருபு தொக்கது, பெயர்த் தொகையாகலின். அருள் - சொல்லியருள். நன்று உடையாய் நன்று ஒன்றையே உடையவனே. `நன்றுடை யானைத் தீயதில்லானை`* என அருளிச் செய்தமை காண்க. நக்கு இலங்குதல் - ஒளிவிட்டு விளங்குதல்.

பண் :

பாடல் எண் : 89

ஒளிவிலி வன்மதனை ஒண்பொடியா நோக்கித்
தெளிவுள்ள சிந்தையினிற் சேர்வாய் - ஒளிநஞ்சம்
உண்டவாய் அஃதிருப்ப உன்னுடைய கண்டமிருள்
கொண்டவா றென்இதனைக் கூறு.

பொழிப்புரை :

பொழிப்புரை எழுதவில்லை

குறிப்புரை :

ஒளி வில் - அழகையுடைய வில்; கரும்பு வில். வில்லி - வில்லையுடையவன். இஃது இடைக்குறைந்து நின்றது. பொடியாக - சாம்பலாகும் படி, நோக்கி - (நெற்றிக் கண்ணால்) பார்த்து. இவ் எச்சம், எண்ணின் கண் வந்தது. தெளிவு - ஞானம். சேர்வாய் - சேர்பவனே, ஒளி நஞ்சம் - ஒளிக்கப்பட்ட விடம், `வாயாகிய அஃது\\\' என்க. அஃது - அவ்வுறுப்பு. இருப்ப - கறை படாமலே இருக்க. `கண்டமும் கறைபடாமல்தான் உள்ளது; ஆயினும் உள்ளிருக்கும் நஞ்சின் கறை வெளித் தோன்றுதலை உலகம் கண்டம் கறைபட்டதாக எண்ணுகின்றது\\\' என்பதாம். `எந்த ஒரு பொருளும் இறைவனை மாசுபடுத்துதல் இயலாது\\\' என்பது குறிப்பு.

பண் :

பாடல் எண் : 90

கூறெமக்கீ தெந்தாய் குளிர்சடையை மீதழித்திட்
டேற மிகப்பெருகின் என்செய்தி - சீறி
விழித்தூரும் வாளரவும் வெண்மதியும் ஈர்த்துத்
தெழித்தோடுங் கங்கைத் திரை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`எந்தாய்` எனத் தொடங்கி, `கங்கை மிகப் பெருகின், அரவும், மதியும், ஈர்த்து ஒடும்; (அப்பொழுது) நீ என் செய்வாய்? ஈது எமக்குக் கூறு` என இயைத்து முடிக்க. எந்தாய் - எம் தந்தையே. `சடையை அழித்திட்டு மீது ஏறப் பெருகின்` என்க. அழித்தல் - கட்டுக்கு அடங்காது போதல். `சீறி விழித்து ஊரும் அரவு` என்க. தெழித்து - ஆரவாரித்து. திரை - அலை. `என் செய்வாய்` என நகையாடிக் கூறியது, `கங்கை என்னும் அவ்வாறு பெருகப் போவது இல்லை` எனப் பழித்தது போலப் புகழ்ந்தது.

பண் :

பாடல் எண் : 91

திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய்
உரைமருவி யாமுணர்ந்தோங் கண்டீர் - தெரிமினோ
இம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைந்தோமே
எம்மைப் புறனுரைப்ப தென்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உரை - சிவனைப் பற்றிக் கூறும் புகழுரையும், பொருளுரையும். அவை தோத்திர சாத்திரங்களாம். உணர்ந்தோம் - உணரற்பாலனவற்றை யெல்லாம் உணர்ந்தோம். `இனி வேறு உரைகள் பற்றியாம் உணரற்பாலது யாதுமில்லை` என்பதாம். கண்டீர், முன்னிலை யசை. ஓகாரம், அசை. `அதனால், இம்மைக்கும், அம்மைக்கும் ஆவன யாவற்றாலும் அமைந்தோம்; இஃது அறியாது, நீவிர் எம்மைப் புறங்கூறுதல் ஏன்` - என வேண்டும் சொற்கள் வருவித்து முடிக்க. அமைதல் - நிரம்புதல். ஏகாரம் தேற்றம். புறன் உரைத்தல் - காணாத வழி இகழ்ந்துரைத்தல். அஃதாவது, `பித்தனைப் பேணித் திரிகின்றார்` எனக் கூறுதலாம். இங்ஙனம் கூறுவோர் புறச் சமயிகள் ஆதலின், முதற்கண், `புறச் சமயத்தீர்` என்பது வருவித்துக் கொள்க.

பண் :

பாடல் எண் : 92

என்னை உடையானும் ஏகமாய் நின்றானுந்
தன்னை அறியாத தன்மையனும் - பொன்னைச்
சுருளாகச் செய்தனைய தூச்சடையான் வானோர்க்
கருளாக வைத்த அவன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உடையான் - ஆளாக உடைய தலைவன். ஏகமாய் நிற்றல் - ஒப்பாரும், மிக்காரும் இல்லாது தனி முதல்வனாய் நிற்றல். தன்னை அறியாத தன்மையாவது, எத்துணையும் பெரியவ னாகிய தனது தன்மையைத் தான் எண்ணாமல், எத்துணையும் எளிய வனாய் வந்து அருள் புரியும் குணம். `பெறுமவற்றுள் யாம் அறிவ தில்லை` 1 என்பதிற்போல, அறிதல் இங்கு மதித்தல், `தன் பெருமை தானறியாத் தன்மையன்காண்` 2 என்று அருளிச் செய்ததும் இப் பொருட்டு. `அருளை வானோர்க்கு ஆகும்படி வைத்த அவன்` என்க.

பண் :

பாடல் எண் : 93

அவன்கண்டாய் வானோர் பிரானாவான் என்றும்
அவன்கண்டாய் அம்பவள வண்ணன் - அவன்கண்டாய்
மைத்தமர்ந்த கண்டத்தான் மற்றவன்பால் நன்னெஞ்சே
மெய்த்தமர்ந்தன் பாய்நீ விரும்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அவன்` என்றது முன்னை வெண்பாவிற் சுட்டிய அவனை. `என்றும் பிரான் ஆவான்` என்க. பிரான் - தலைவன். மைத்து அமர்ந்த - மையின் நிறத்தைக் கொண்டு பொருந்திய. இது தேவர் அமுதுண்ணத் தான் நஞ்சை உண்ட கருணையைக் குறித்தது. மற்று, அசை. `நன்னெஞேசை` என்பதை முதலிற் கூட்டுக. மெய்த்து - மெய்ம்மைப் பட்டு. அஃதாவது, `பயன் யாதும் கருதாத நிலையில் நின்று` என்றதாம். `மெய்த்து அமர்ந்த` என்பதின் ஈற்று அகரம் தொகுத் தலாயிற்று. `மெய்த்து அமர்ந்த அன்பு` என்றது சிறப்பும், `விரும்பு` என்பது பொதுவுமாய்த் தம்முள் இயைந்து நின்றன.

பண் :

பாடல் எண் : 94

விருப்பினால் நீபிரிய கில்லாயோ வேறா
இருப்பிடமற் றில்லையோ என்னோ - பொருப்பன்மகள்
மஞ்சுபோல் மால்விடையாய் நிற்பிரிந்து வேறிருக்க
அஞ்சுமோ சொல்லாய் அவள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மஞ்சுபோல் மால் விடையாய்` என்பதை முதலிற்கொள்க. மஞ்சு - மேகம். மேகம் போலும் நிறத்தையுடைய மால், திருமால். விடை - இடபம், `திருமாலாகிய இடபம்` என்பதாம். `சிவபெருமான் திரிபுரம் எரித்த காலத்தில் திருமால் அவருக்கு இடபவாகனமாய் இருந்தார்` என்பது புராண வரலாறு. தடமதில்கள் அவைமூன்றும் தழல்எரித்த அந்நாளில் இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ.* என்னும் திருவாசகத்தைக் காண்க. பொருப்பன் - மலையரையன். அவன் மகள் உமாதேவி. அவளை நீ வேறு வையாது உன் உடம்பில் ஒரு பாதியாக வைத்திருப்பதற்குக் காரணம் யாது? அவள்மீது நீ வைத் துள்ள பெருவிருப்பத்தால் அவளை விட்டு நீ வேறாய் இருக்க ஆற்றாயோ? அவளுக்கு இருக்க வேறு இடம் இல்லையோ? உன்னை விட்டுப் பிரிந்து அவள் தனியேயிருக்க அஞ்சுகின்றாளோ? என் - யாது காரணம்? - என்க. `என்னோ` ஓகாரம் அசை. இவையெல்லாம் காரணங்களல்ல; இருவரும் இருவரல்லர்; ஓருவரே` என்பதைக் குறிப்பால் உணர்த்தியவாறு. `பொருப்பன்மகள்` என்னும் சீரை, னகர ஒற்றுத் தள்ளி அலகிடுக.

பண் :

பாடல் எண் : 95

அவளோர் குலமங்கை பாகத் தகலாள்
இவளோர் சலமகளும் ஈதே - தவளநீ
றென்பணிவீர் என்றும் பிறந்தறியீர் ஈங்கிவருள்
அன்பணியார் சொல்லுமினிங் கார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`உம்முடைய ஒரு பாகத்தினின்றும் நீங்கா திருப்பவளாகிய அவள் (நீ முறைப்படி மணந்து கொண்ட) குல மங்கை` என்பது நன்கு விளங்குகின்றது. (அவள் நிற்க) இவள் ஒருத்தி யும் நீர் வடிவாய் (உமது தலையில் இருக்கின்றாள்) இவளையும் நீர் என்றும் பிரிந்தறியீர்; உம்முடைய தன்மை இதுவேயாய் உள்ளது. (இருக்கட்டும்) இவ்விருவருள் அன்பு மிகுதியால் நெருங்கிய உறவுடையவர் யார்? சொல்லுமின்` - என்க. `சொல்லுமின்` - என்றது. `பொருப்பன் மகள்தான் அன்பால் அணியளாய் இருக்க முடியும்; சலமகள் எங்ஙனம் அன்பாய் இருக்க முடியும்` எனக் குறித்தவாறு, `சலம்` என்பதற்கு, - `வஞ்சம்` - என்பதும் பொருளாகலின், அதனாலும் ஒரு சொல்நயம் தோற்றுவித்தவாறு. `பொருப்பன் மகளே உமது அங்கமும், பிரத்தியங்கமும் ஆவள்; ஏனைய வெல்லாம் உமது சாங்க உபாங்கங்களாம்` என்றபடி. பொருப்பன் மகளே சிவனது சத்தி; அவனது சம்பந்தத்தாலே சிவனது அணி, ஆடை, இடம் முதலியன சத்திகள் ஆகின்றன என்பது உணர்க. `கங்கையின் வீழ்ச்சியால் உலகம் அழிந்தொழியாதபடி அவளைச் சிவன் தன் தலையில் தாங்கிய தல்லது, காம தகனனாகிய அவனுக்கும் நம்மைப் போலக் காமம் உள தாகக் கருதுதல் மடமை யாதலின், நகைச் சுவை தோன்றவே புலவர்கள் அவனை இவ்வாறு கூறித் துதிக்கின்றனர்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 96

ஆர்வல்லார் காண அரன்அவனை அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல
தாயத்தால் நாமுந் தனிநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நாமும் சீர்வல்ல தாயத்தால்` என மாற்றி முதலிற் கூட்டி, `மாயத்தால் மறைத்து வைத்தோம்; இனி அரன் அவனை ஆர் காண வல்லார்` என இயைத்து முடிக்க. அன்பென்னும் போர்வை, உருவகம். `போர்வையது` என்பதில் அது பகுதிப்பொருள் விகுதி. அன்பினுள் அகப்படுபவனாதல் பற்றி அன்பு அவனை மறைக்கும் போர்வையாக உருவகிக்கப்பட்டது. சீர், ஆகு பெயராய்ப் பாட்டை உணர்த்திற்று. `அவனைப் பாட்டால் போற்ற வல்ல தாயத்தால் என்க. தாயம் - செல்வ உரிமை. `நாமும்` என்னும் உம்மை மற்றைத் தொண்டர்களோடு என இறந்தது தழுவி நின்றது. தனி நெஞ்சம் - அன்பு மிக்கமையால் ஒப்பற்ற மனம். மாயம் - என்ற உபாயம். `அரனாகிய அவனை` என்க. `அன்புடையவர் கூடித் தங்கள் அன்பாகிய போர்த்து வைத்திருத்தலால் அன்பில்லாத பிறர் அவனை எங்ஙனம் காண முடியும்` என நயம்படக் கூறியவாறு. `அன்பில்லாதார் அரனைக் காணுதல் இயலாது` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 97

மறைத்துலகம் ஏழினிலும் வைத்தாயோ அன்றேல்
உறைப்போடும் உன்கைக்கொண் டாயோ - நிறைத்திட்
டுளைந்தெழுந்து நீயெரிப்ப மூவுலகும் உள்புக்
களைந்தெழுந்த செந்தீ யழல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நீ நிறைத்திட்டு எரிப்ப, உளைந்து எழுந்து, மூவுலகும் உள்புக்கு, அணைந்து எழுந்த செந்தீ அழலை உலகம் ஏழினிலும் மறைத்து வைத்தாயோ? அன்றேல், உறைப்போடும் உன் கைக் கொண்டாயோ? (அஃது இன்று உலகை எரிக்கவில்லையோ,) என இயைத்து முடிக்க. ஈற்றில் வருவித்து உரைத்தது இசையெச்சம். உறைப்போடும் - வலிமையோடும். உம்மை சிறப்பு. உளைந்து - சினந்து. `மூவுலகினும்` என்பதில் சாரியை தொக்கது. அணைந்து - விரவி. அழல் - சுவாலை. `யாதொரு பொருளும் இறைவனது சங்கற்பத்தைக் கடக்கமாட்டாது` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 98

அழலாட அங்கை சிவந்ததோ அங்கை
அழகால் அழல்சிவந்த வாறோ - கழலாடப்
பேயோடு கானிற் பிறங்க அனலேந்தித்
தீயாடு வாய்இதனைச் செப்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அங்கை - அகங்கை. ஆறு - பயன். தீ ஆடுவாய் - தீயின்கண் நின்று ஆடுவாய்; விளி. அகங்கையும், தீயும் அழகால் ஒன்றனை ஒன்று விஞ்சுவனவாய் உள்ளன` எனக் கூறி, அகங்கையின் மிக்க அழகைப் புகழ்ந்தவாறு. இஃது ஏது அணியின் பாற் படும்.

பண் :

பாடல் எண் : 99

செப்பேந் திளமுலையாள் காணவோ தீப்படுகாட்
டப்பேய்க் கணமவைதாங் காணவோ - செப்பெனக்கொன்
றாகத்தான் அங்காந் தனலுமிழும் ஐவாய
நாகத்தாய் ஆடுன் நடம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தான் அங்காந்து` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. செப்பு ஏந்து. கிண்ணம்போல நிமிர்ந்த. `கணமவை` என்பதில் அவை, பகுதிப் பொருள் விகுதி. பின் வந்த, `காணவோ` என்பதன்பின், `நிகழ்கின்றது` என்னும் பயனிலை அவாய் நிலையாக எஞ்சி நின்றது. `நடம் நிகழ்கின்றது` என இயையும். `எனக்கு ஒன்றாகச் செப்பு` என்க. ஒன்றாக - திட்டமாக. இனி, `நீ ஆடும்` என எழுவாய் வருவித்து. முடிப்பினும் ஆம். `எவர் காணுதற் பொருட்டும் நீ ஆடவில்லை; உனது கருணை காரணமாகவே நீ ஆடுகின்றாய்` என்பது குறிப்பு.
`ஆடும் எனவும், அருங்கூற்றம் உதைத்து வேதம்
பாடும் எனவும்..........
..............................
நாடும் திறத்தார்க்(கு) அருளல்லது நாட்ட லாமே?* `
என அருளிச் செய்தமை காண்க. அங்காத்தல் - வாய் திறத்தல். ஐவாய - ஐந்து வாய்களை உடைய. நாகத்தாய் - பாம்பை அணிந்தவனே.

பண் :

பாடல் எண் : 100

நடக்கிற் படிநடுங்கும் நோக்கில் திசைவேம்
இடிக்கின் உலகனைத்தும் ஏங்கும் - அடுக்கல்
பொருமேறோ ஆனேறோ பொன்னொப்பாய் நின்ஏ
றுருமேறோ ஒன்றா உரை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பொன் ஒப்பாய், நின் ஏறு நடக்கில்` எனக் கூட்டி உரைக்க. படி - பூமி. நோக்கில் - கண் விழித்துப் பார்த்தால். `கண்ணினின்றும் எழும் தீயால் திசைகள் வேகும்` என்க. இடிக்கின் - கதறினால் ஏங்கும் - கதி காணாது கலங்கும். இதன்பின், `ஆதலால்` என்பது வருவிக்க. அடுக்கல் - மலை. `மலையின்கண் நின்று` என விரிக்க. பொரும் ஏறோ - இடபத்தானோ. உரும் ஏறோ - மேகத்தி னின்றும் தோன்றுகின்ற இடியேறோ, சிவனைச் சார்ந்தமையால், ஆனேறும் பிறவகை ஏறுகளினும் மிகுவலி பெற்றமையைக் கூறிய வாறு.

பண் :

பாடல் எண் : 101

உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக்
கரைவினாற் காரைக்காற் பேய்சொல் - பரவுவார்
ஆராத அன்பினோ டண்ணலைச்சென் றேத்துவார்
பேராத காதல் பிறந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`காரைக்காற் பேய் சொல் இம்மாலை அந்தாதி வெண்பாக்களை உரையினால், கரைவினாற் பரவுவார் ஆராத அன்பினோடு சென்று அண்ணலைப் பேராத காதல் பிறந்து ஏத்துவார்` என இயைத்து முடிக்க. `மாலையாய் அமைந்த வெண்பா` என்க. மாலையாதல் சொற்றொடர்நிலைச் செய்யுள் ஆதல். `உரை` என்றது, `மனம், மொழி, மெய்` என்னும் மூன்றனுள் `மொழி` என்னும் மொழியைக் குறித்தது. கரைவு - அன்பு. பரவுதல், ஏத்துதல் இரண்டும் துதித்தலைக் குறிக்கும் சொற்கள். ஆராத - நிரம்பாத. பேராத - மாறாத. காதல் - பேரன்பு. பிறந்து தோன்றப் பெற்று. `கரைவினால் பரவுவார்` என்றது இவ்வுலகத்திலும், பின் வந்தவை சிவலோகத்திலும் ஆதலின் அவை கூறியது கூறல் அல்லவாதலை அறிக. சென்று - சிவலோகத்தை அடைந்து. இது நூற் பயன் கூறியவாறு. ஈற்றில் `பிறந்து` என்றது முதல் வெண்பாவின் முதற் சீரோடு சென்று மண்டலித்தல் காண்க. அற்புதத் திருவந்தாதி முற்றிற்று.

பண் :

பாடல் எண் : 1

ஒடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும்
கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று - நாடுகின்ற
நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே
தில்லைச்சிற் றம்பலமே சேர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(இவ்வெண்பாக்கள் யாவும், `யாக்கையின் நிலையாமையை உணர்ந்து, இன்றே, இப்பொழுதே தலங்கள் தோறும் சென்று சிவனை வழிபட்டு உய்தல் வேண்டும்` என்பதையே அறி வுறுத்துகின்றன). இவ்வெண்பா, `தில்லைத் திருச்சிற்றம்பலப் பெருமானைக் கண்டு வணங்குக` எனக் கூறுகின்றது.
நீர்மை - தன்மை; `நடத்தலேயன்றி ஓடவும் இருந்த வலிமை நீங்க, மூப்பு வந்தவுடன்` என்றபடி. உற்றார் - பிறவியிலே அன்புடைய வராய்ப் பொருந்தினவர்; சுற்றத்தார்; மனைவி, மக்கள் முதலாயினார். `உற்றாரும்` என்னும் உம்மை உயர்வு சிறப்பு. கோடுகின்றார் - மனம் மாறிவிடுவர்; தெளிவினால் எதிர்காலம் நிகழ்காலமாகச் சொல்லப் பட்டது. `மூப்பும்` என்னும் உம்மை இளமையாகிய இறந்ததனைத் தழுவிற்று. `வரும்` என்று அஞ்சப்பட்ட அதுவும் வந்துவிட்டது - என்ற படி. நாடுகின்ற - மிகவும் விரும்பப்படுகின்ற. நல் அச்சு - வண்டியில் பளுவைத் தாங்குகின்ற நல்ல அச்சுப் போல்வதாகிய உடம்பு. அஃது இறுதலாவது, செயலற்று வீழ்தல். அம்பலம், யாவருக்கும் உரிய பொது இடம். அஃது மயானத்தைக் குறித்தது. `அம்பலமே` என்னும் பிரிநிலை ஏகாரம் செயலற்று வீழ்ந்த உடலுக்கு அது தவிர இடம் இன்மையைக் குறித்தது. `சிற்றம்பலமே` என்னும் பிரிநிலை ஏகாரம், `சேரத் தக்க இடம் பிறிதன்று என்பதை உணர்த்திற்று. `நல்நெஞ்சே` என்பதை முதலிற்கொள்க. `நல்வழியைப் பற்றுதற்கு உரியை` என்பது தோன்ற, `நல் நெஞ்சே` - என்றார். பின்னிரண்டடிகள் `திரிபு` என்னும் சொல்லணி பெற்றன. மேலும் இவ்வாறு வருவன காண்க.

பண் :

பாடல் எண் : 2

கடுவடுத்த நீர்கொடுவா காடிதா என்று
நடுநடுத்து நாஅடங்கா முன்னம் பொடியடுத்த
பாழ்க்கோட்டஞ் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக்
கீழ்க்கோட்டஞ் செப்பிக் கிட.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கடு - கடுக்காய்; `இது பித்தத்தைப் போக்குவது` என்பர். காடி - பழஞ்சோற்று நீர். இதுவும் அத்தன்மையாதலோடு உணவும் ஆகும். `வெடுவெடுத்தல்` என்பது போல, நடுநடுத்தல், நடுக்கத்தைக் குறித்ததோர் இரட்டைக் கிளவி.
நா அடங்குதல் - பேச்சு நீங்குதல். பொடி - சாம்பல். பாழ்க் கோட்டம் - அழிவிடம், மயானம். தென் குடந்தை - தென்னாட்டில் உள்ளதாகிய `திருக்குடமூக்கு` என்னும் தலம். தென், அழகும் ஆம், செப்பி - துதித்து. `கிட` என்றது `நிலைமாறுதலை விடுக` என்றபடி. இது முதலாக இனி வரும் வெண்பாக்களில் வேண்டும் இடங்களில் `நெஞ்சே` என்பது வருவிக்க. `முன்னம், முன்` என்பன செவ்வெண்.

பண் :

பாடல் எண் : 3

குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி,
நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குந்தி நடத்தல் - நெடுக நடந்துபோக இயலாமல் இடையிடையே குந்திக் குந்தி எழுந்து நடத்தல். `ஐ` இரண்டில் முன்னது கோழை. அது நுரைத்து, மேலே ஏறி, வெளி வந்து, ஓட்டெடுத்து வாய் ஆறு (வாய்வழியால்) பாயா முன்` என்க. ஐயாறு, சோழ நாட்டுத் தலம். தலப் பெயரைச் சொல்லுதலும் அங்குள்ள இறைவன் பெயரைச் சொல்லுதலோடே ஒக்கும். இனி, `ஐயாறு` என்பது ஆகுபெயரில் அங்கு எழுந்தருளியுள்ள இறைவனைக் குறித்தது என்றலும் ஆம், பின்னிரண்டடிகள் `மடக்கு` என்னும் சொல்லணி பெற்றன.

பண் :

பாடல் எண் : 4

காளை வடிவொழிந்து கையறவோ டையுறவாய்
நாளும் அணுகி நலியாமுன் பாளை
அவிழ்கமுகம் பூஞ்சோலை ஆரூரற் காளாய்க்
கவிழ்கமுகம் கூம்புகஎன் கை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

காளை - கட்டிளைஞன். இஃது அப் பருவத்தைக் குறித்தது. கையறவு - செயலற்ற நிலை. ஐயுறவு - சந்தேகித்தல், அஃது, `இன்றோ, நாளையோ வாழ்வு முடிவது` எனப் பலரும் நினைப்பது. நாள் - இறுதி நாள். உம்மை, முன்னர்க் கூறிய வற்றைத் தழுவிநின்றது. நலிதல் - அடர்த்தல். இதற்கு வினை முதலான `கூற்றுவன்` எனத் தனித் தனி இயைக்க. `முகம்` என்றது தலையை. அதற்கும் `என்` என்பதனைக் கூட்டி, `என் முகம் (தலை) கவிழ்க; (வணங்குக) கை (கள்) கூம்புக` என்க. இதிலும் திரிபணி வந்தது.

பண் :

பாடல் எண் : 5

வஞ்சியன நுண்ணிடையார் வாள்தடங்கண் நீர்சோரக்
குஞ்சி குறங்கின்மேற் கொண்டிருந்து கஞ்சி
அருத்தொருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சே
திருத்துருத்தி யான்பாதஞ் சேர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வஞ்சி - வஞ்சிக் கொடி. நுண்ணிடையார், தேவியார்; உயர்வுப் பன்மை. குஞ்சி - ஆடவர் தலை மயிர். அது விடாத ஆகுபெயராய், அஃது உள்ள தலையைக் குறித்தது. குறங்கு - தொடை. இது தேவியாருடையது. `தேவியார் உனது தலையைத் தமது தொடைமேற் கொண்டிருந்தது, - அருத்த ஒருத்தி கஞ்சி கொண்டு வா - என்னாமுன்` என்க. `அருத்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்த லாயிற்று. திருத்துருத்தி, சோழநாட்டுத் தலம் இது, `குத்தாலம்` என வழங்குகின்றது.

பண் :

பாடல் எண் : 6

காலைக் கரையிழையாற் கட்டித்தன் கைஆர்த்து
மாலை தலைக்கணிந்து மையெழுதி மேலோர்
பருக்கோடி மூடிப் பலரழா முன்னம்
திருக்கோடி காஅடைநீ சென்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`காலைக் கட்டி` என இயையும். கரையிழை - பழந்துணியின் ஓரத்தில் உள்ள கரையைக் கிழித்து எடுத்த நீள் வடம். இறந்தோரது இரு காற் பெருவிரல்களையும் இத்தகைய இழையாற் சேர்த்துக் கட்டுதல் வழக்கம். `தன்` என்றது. `தன் பிணத்தினது` என்ற படி. உடல் உயிருக்கு வேறாய் வீழ்ந்தமையின் பிறிதாகச் சொல்லப் பட்டது. கைகளையும் ஆட வொட்டாமல் கட்டுவர், ஆர்த்து - கட்டி. தலைக்கு மாலை சூட்டுதலும், கண்ணுக்கு மை யெழுதுதலும் பிணச் சிங்காரம். `மேல் மூடி` என்க. பருக் கோடி - பெரிய புத்தாடை. `பருக் கோடியால் மூடி` என்க. திருக்கோடிகா, சோழ நாட்டுத் தலம்.

பண் :

பாடல் எண் : 7

மாண்டு வாய் அங்காவா முன்னம் மடநெஞ்சே
வேண்டுவா யாகி விரைந்தொல்லைப் பாண்டவாய்த்
தென்னிடை வாய் மேய சிவனார் திருநாமம்
நின்னிடைவாய் வைத்து நினை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அங்காத்தல் - திறத்தல். வேண்டு வாயாகி - விரும்புதல் தன்மையை உடையையாகி. விரைந்து விரைந்து சென்று. ஒல்லை - சீக்கிரமாக. `பண்டு` என்பது முதல் நீண்டு `பாண்டு` என வந்ததாகக் கொண்டு. பண்டே அவாவி இடைவாய் மேலே சிவனார்` என்க. இனி, பாண்டத்தின் வாய் போலும் உனது வாயில் வைத்து` என்றலும் ஆம். தென் இடைவாய் - தென்னாட்டில் உள்ள `இடைவாய்` என்னும் தலம். சோழ நாட்டில் அண்மையில், `விடைவாய்` என்னும் தலத்து ஞானசம்பந்தர் திருப்பதிகம் ஒன்றைக் கல்வெட்டிலிருந்து கண்டு சென்னைச் சைவ சித்தாந்த மகாசமாசம் வெளியிட்டது. * `இடைவாய்` என்பது அத்தலத்தின் மறுபெயராகலாம். அல்லது வேறொரு வைப்புத் தலமாகவும் இருக்கலாம். இவ்வெண்பாக்களில் வைப்புத் தலங்களும் சில காணப்படுகின்றன. நின்னிடை - நின்னிடமாக. வாய் வைத்தல், வாசகமாகக் கணித்தல். நினைதல் - மானதமாகக் கணித்தல். இவை ஒன்றின் ஒன்று மிக்கது.

பண் :

பாடல் எண் : 8

தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது
பெட்டப் பிணமென்று பேரிட்டுக் - கட்டி
எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே
நெடுங்களத்தான் பாதம் நினை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

துடிப்பு - இருதயத் துடிப்பு, நாடித் துடிப்பு முதலியன. பெட்ட - முன்பெல்லாம் பலராலும் விரும்பப்பட்ட. இது பழமையை நினைவு கூர்தல் கூறியது. பகர வொற்று விரித்தல். பேர், மாற்றுப் பேர். `அப்பனைக் கண்டேன், அம்மையைக் கண்டேன்` எனற் பாலனவற்றை. `அப்பாவைக் கண்டேன், அம்மாவைக் கண்டேன்` என்னும் நாட்டு வழக்குப் போல, `அத்தனை எடுங்கள்` என்பது `அத்தாவை எடுங்கள்` என வந்ததாகக் கொண்டு, இரண்டாம் உருபு விரித்துரைக்க. அல்லது, `அத்தா` என உரியவரை விளித்தது எனின், ஒருமைப் பன்மை மயக்கமாகும். இனி `அத்தான்` எனப் பாடம் ஓதி, `அத்தன்` என்பது நீண்டு வந்தது, எனினும் ஆம். இப்பொருட்கும் இரண்டன் உருபு விரிக்கப்படும். நெடுங்களம் சோழ நாட்டுத் தலம். ஏழை மடம், ஒரு பொருட் பன்மொழி.

பண் :

பாடல் எண் : 9

அழுகு திரிகுரம்பை ஆங்கதுவிட் டாவி
ஒழுகும் பொழுதறிய ஒண்ணா கழுகு
கழித்துண் டலையாமுன் காவிரியின் தென்பாற்
குழித்தண் டலையானைக் கூறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திரி - கெட்டுப்போன. கெட்டது மூப்பினாலும், பிணியினாலும். குரம்பை - குடில். குடில் போலும் உடம்பு. ஆங்கது, ஒரு சொல் நீர்மைத்து. ஆவி - உயிர். ஒழுகுதல் - ஓட்டைக் குடத்தி னின்றும் நீர் நீங்குதல் போல நீங்குதல். இது நீங்குதலே இயல்பாதலைக் குறித்தவாறு. அறிதல், இங்கு நினைத்தல் `கழித்து உண்டு அலையா முன்` என்றாரேனும், `அலைந்து உண்டு கழியாமுன்` என்றலே கருத் தென்க. தண்டலை - `தண்டலை நீணெறி` என்னும் தலம். இது `குழித் தண்டலை` என வழங்கினமை பெறப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 10

படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பாரெலாம் ஆண்ட
முடியரசர் செல்வத்து மும்மைக் கடியிலங்கு
தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட்
டோடேந்தி யுண்ப துறும்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

படி - நிலவுலகம். `ஒரு வெண்குடை` என்பது ஆற்றலால் கொள்ளக் கிடந்தது. `கீழாக` என ஆக்கம் வருவிக்க. `படி` என முன்னர் வந்தமையின், `பாரெலாம்` என்றது, `அவற்றை யெல்லாம்` எனச் சுட்டுப் பெயரளவாய் நின்றது. `செல்வத்தின்` என ஒப்புப் பொரு, அல்லது உறழ் பொருப் பொருட்டாகிய ஐந்தாவது விரிக்க. `செல்வத்தின்` என்றே பாடம் ஓதலும் ஆம். மும்மை - மும் மடங்கு. `மும்மடங்கு உறும்` என முடியும். உறும் - நன்றாம். கடி - வாசனை. தோடு - இதழ். `கடியிலங்கு ..... உண்பது` என்பதனை முதலிற் கூட்டியுரைக்க. ஓடு ஏந்துதல், எந்தி இரத்தலாகிய தன் காரி யத்தைத் தோற்றி நின்றது. இந்நாயனார். மன்னர் எலாம் பணிசெய்ய அரசாண்ட பல்லவ மன்னராய் இருந்தும், `அரசை இன்னல்` எனத் துறந்தார் - என்று சேக்கிழார் கூறியதற்கு இவ்வெண்பாவும், இனி வரும் `தஞ்சாக மூவுலகும்` என்னும் வெண்பாவும் அகச்சான்றாய் நிற்றலையறிக.

பண் :

பாடல் எண் : 11

குழீஇயிருந்த சுற்றம் குணங்கள்பா ராட்ட
வழீஇயிருந்த அங்கங்கள் எல்லாந் தழீஇயிருந்தும்
என்னானைக் காவா இதுதகா தென்னாமுன்
தென்னானைக் காஅடைநீ சென்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எவர் ஒருவர் இறப்பினும் இறந்த அத்துக்கக் குழுவினர் இறந்தவரது குற்றங்களையெல்லாம் மறைத்து விட்டுக் குணம் சிலவேயாயினும் அவற்றை எடுத்துக் கூறிப்பாராட்டுதல் வழக்கம். வழுவுதல் - நிலைகெடுதல். அங்கங்கள் - உடல் உறுப்புக்கள். `எல்லா வற்றையும்` என இரண்டாவதன் தொகை. `இருந்தும்` என்னும் உம்மையை வேறு வைத்து, அழுகை ஒலிக் குறிப்பாகக் கொள்க. `ஆனை` என்றது, காதல் பற்றி வந்த உபசார மொழி.* ஆ ஆ - அழுகை ஒலிக் குறிப்பு. தென் ஆனைக் கா - தென்னாட்டில் உள்ள `திரு ஆனைக் கா` என்னும் தலம். சோழ நாடு.

பண் :

பாடல் எண் : 12

குயிலொத் திருள்குஞ்சி கொக்கொத் திருமல்
பயிலப் புகாமுன்னம் நெஞ்சே மயிலைத்
திருப்புன்னை யங்கானல் சிந்தியா யாகில்
இருப்பின்னை யங்காந் திளைத்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஒத்து இருண்ட குஞ்சி` என்க. `குயில் ஒத்து இருண்ட` என்பதனோடு இயைய, `கொக்கு ஒத்து வெளுத்த` என்பது வருவிக்க. பயில - அடிக்கடியாக. முதுமையில் கோழை மிகுதலால், இருமல் அடிக்கடியெழுவதாம். புன்னையங் கானல் - புன்னை மரங்கள் மிக்குள்ள கடற்ரை. மயிலை - மயிலாப்பூர், இது தொண்டை நாட்டுத் தலம். இஃது இங்குள்ள திருக்கோயிலைக் குறித்தது. இக் கோயில் `கபாலீச்சரம்` என்னும் பெயருடையது.
மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரம் அமர்ந்தான்.
என்னும் அற்புதத் திருப்பதிக அடிகளைக் காண்க. பின்னை, யாதும் இயலாத இறுதிக் காலம். அங்காந்து - (துயரத்தால்) வாயைத் திறந்து கொண்டு (உயிர் போய்விட,) `இரு - காண் போர் இரங்கக் கிட` என்ற படி `இப்பொழுதே சிந்திப்பாயாயின் இந்நிலைவாராது` என்பது குறிப்பு.

பண் :

பாடல் எண் : 13

காளையர்கள் ஈளையர்க ளாகிக் கருமயிரும்
பூளையெனப் பொங்கிப் பொலிவழிந்து சூளையர்கள்
ஓகாளஞ் செய்யாமுன் நெஞ்சமே உஞ்சேனை
மாகாளங் கைதொழுது வாழ்த்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஈளையர்கள்` என்றது, முதுமையெய் தினமையைக் குறிப்பால் உணர்த்தியது. பூளை - பூளைப் பூ. இது வெண்ணிறம் உடையது. பொங்குதல், படியாது விரிதல். சூளையர்கள்- எரிகொளுவச் சூழ்ந்திருப்பவர்கள். ஓகாளம் செய்தல், அருவருப்பால், முன் உண்டதைக் கக்குதல். உஞ்சேனை - உச்சயினி; இது வட நாட்டில் உள்ள ஒரு நகரம். இதன்கண் உள்ள கோயிலும் `மாகாளம்` எனும் பெயரினது. இஃதொரு வைப்புத் தலம். `நளிர்சோலை உஞ்சேனை மாகாளம்` 2 `உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்` 3 என்னும் தேவாரத் திருமுறைகளைக் காண்க.

பண் :

பாடல் எண் : 14

இல்லும் பொருளும் இருந்த மனையளவே
சொல்லும் அயலார் துடிப்பளவே நல்ல
கிளைகுளத்து நீரளவே கிற்றியே நெஞ்சே
வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இல் - இல்லாள். மனை - இல்லம். சொல் - இறந்தமை பற்றிய இரங்கிச் சொல்வனவும், தேற்று வனவும். துடிப்பு, வந்து கண்டு நீங்குவதில்` உள்ள கடமையுணர்ச்சி. கிளை - சுற்றம் கிற்றியே - இதனை அறிய வல்லாயோ? ஏகாரம் வினாப் பொருட்டு. வாழ் முதலாகக் கருதியிருந்த பொருள்களுள் ஒன்றேனும் (உடன் வருவதில்லை) என்பது கருத்து. `கிற்றியேல் வாழ்த்து` என்பது குறிப்பு. `கிற்றி யேல்` என்றே பாடம் ஓதுதலும் ஆம். வளைகுளம் ஒரு வைப்புத் தலம்.

பண் :

பாடல் எண் : 15

அஞ்சனஞ்சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய்க்
குஞ்சி வெளுத்துடலங் கோடாமுன் நெஞ்சமே
போய்க்காடு கூடப் புலம்பாது பூம்புகார்ச்
சாய்க்காடு கைதொழுநீ சார்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அஞ்சனம் - மை மையெழுதிய கண்ணார், மகளிர். பதம் - நிலைமை `வெளுத்து` `வெளுக்க` எனத் திரிக்க. `அரு வருக்கப்படுவதும் உடலமே` என்க. கோடுதல் - வளைதல்; கூன் விழுதல், கூடப்படுங் காடு சுடுகாடு. புலம்புதற்கு, `பலர்` என்னும் எழுவாய் வருவிக்க. காடு போய்க் கூடவிட, பின்னர்ப் பலர் இருந்து புலம்பாமுன்` என்க. `பூம்புகாரை அடுத்துள்ள சாய்க்காடு` எனக் கொள்க.

பண் :

பாடல் எண் : 16

இட்ட குடிநீர் இருநாழி ஒருழக்காச்
சட்டவொரு முட்டைநெய் தான்கலந் தட்ட
அருவாய்ச்சா றென்றங் கழாமுன்னம் பாச்சில்
திருவாச்சி ராமமே சேர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முட்டை, முட்டை வடிவமாக எண்ணெய் முகப் பதற்குச் செய்து வைக்கப்படும் சிறிய அகப்பை. ஒரு முட்டையளவான விளக்கெண்ணெயை இருநாழியளவு நீரிற் கலந்து, அதனை ஓர் உழக்களவாகச் சுவறக் காய்ச்சி யெடுத்ததை `உடலுக்கு நல்லது` என ஊற்றப் பிறர் முயலுவர்.
அட்ட - காய்ச்சி எடுக்கப்பட்ட. அருவாய்ச் சாறு - அரிய சாறு; கசாயம். வாய் - வாயில் ஊற்றச் தக்க. `சாறு` என்பதன் பின், `குடியுங்கள்` என்பது வருவிக்க. என்று சொல்லி அழுபவர்கள், சுற்றத்தார். திருப்பாச்சில் ஆச்சிராமம் சோழ நாட்டுத் தலம்.

பண் :

பாடல் எண் : 17

கழிந்தது நென்னற்றுக் கட்டுவிட்டு நாறி
ஒழிந்த துடல்இரா வண்ணம் அழிந்தது
இராமலையா கொண்டுபோ என்னாமுன் நெஞ்சே
சிராமலையான் பாதமே சேர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`உயிர் போயது நேற்றையது; அதனால் உடல், கட்டுக்களெல்லாம் தளர்ந்து நாற்றம் எடுத்து விட்டது. இனிச் சிறிது நேரமும் இருக்க முடியாதபடி அஃது அழிந்து விட்டது. ஆகவே, உறவினனான ஐயா, இனிச் சிறிது நேரமும் இருக்க முடியாதபடி அதனை அடக்கம் செய்ய வேண்டிய இடத்திற்குக் கொண்டு போ என்று அயலார் பலரும் சோல்லுவதற்குமுன், நெஞ்சே, திருச்சிராமலையில் உள்ள சிவன் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்று.
`நன்னெற்று` என்பது பாடம் அன்று. `கழிந்தது` என்பதற்கு, `உயிர்` என்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது. சிராமலை, திருச்சிராப் பள்ளிக் குன்று.

பண் :

பாடல் எண் : 18

இழவாடிச் சுற்றத்தார் எல்லாருங் கூடி
விழவாடி ஆவி விடாமுன்னம் மழபாடி
ஆண்டானை ஆரமுதை அன்றயன்மால் காணாமை
நீண்டானை நெஞ்சே நினை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இழவு ஆடுதல் - இழவு கொண்டாடுதல். விழவு ஆடுதல் - விழாக் கொண்டாடுதல். விழா, பிண விழா. `ஆடி` என்ப வற்றை `ஆட` எனத் திரித்துக் கொள்க. `இழவாடி` என்பதனை, `விழா வாடி` என்பதற்கு முன்னே கூட்டுக. மழபாடி, சோழநாட்டுத் தலம்.

பண் :

பாடல் எண் : 19

உள்ளிடத்தான் வல்லையே நெஞ்சமே ஊழ்வினைகள்
கள்ளிடத்தான் வந்து கலவாமுன் கொள்ளிடத்தின்
தென்திருவாப் பாடியான் தெய்வமறை நான்கினையும்
தன்திருவாய்ப் பாடியான் தாள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உள்ளுதல் - நினைத்தல். அதனுடன் `இடு` என்னும் அசையிடைச் சேர்ந்து, `உள்ளிடை` என வந்தது. தான், அசை. உள்ளிட வல்லையே - நினைக்க வல்லாயோ. கள் இடம் - களவான காலம். அஃதாவது உயிர் சோர்வுற்றிருக்குங்காலம், `கள் இடத்தான்` என்னும் ஆன் உருபு ஏழாவதன் பொருளில் வந்தது. `காலத்தினாற் செய்த நன்றி` * என்பதிற் போல. திருஆப்பாடி சோழ நாட்டுத் தலம். திருவாய்ப் பாடியான் - திருவாயால் பாடினவன். `தாள் உள்ளிடவல்லையே` என மேலே கூட்டுக. `கலவா முன் உள்ளிட வல்லையே எனவும் இயைக்க. `வல்லையே` என்னும் வினா, `வல்லையாயின் நன்று` என்னும் குறிப்பினது.

பண் :

பாடல் எண் : 20

என்னெஞ்சே உன்னை இரந்தும் உரைக்கின்றேன்
கன்னஞ்செய் வாயாகிற் காலத்தால் வன்னஞ்சேய்
மாகம்பத் தானை உரித்தானை வண்கச்சி
ஏகம்பத் தானை இறைஞ்சு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரத்தல், குறையிரத்தல், உம்மை, இழிவு சிறப்பு. கன்னம் - செவி. அதனைச் செய்தலாவது, செயற்படச் செய்தல்; கேட்டல் `செவிசாய்த்தல்` என்றலும் வழக்கு. `காலத்தால்` என்பதனை, மேல், `கள்ளிடத்தான்` என்றதனைக் கொண்டவாறு கொள்க. வல் நஞ்சு ஏய் - கொடிய நஞ்சு போன்ற. நஞ்சுய் ஆனை, மா ஆனை, கம்பத்து ஆனை` எனத் தனித்தனி இயையும். மா - பெரிய கம்பத்து - அசைதலையுடைய கச்சி. காஞ்சி. ஏகம்பம் அத்தலத்தில் உள்ள கோயில்.

பண் :

பாடல் எண் : 21

கரமூன்றிக் கண்ணிடுங்கிக் கால்குலைய மற்றோர்
மரமூன்றி வாய்குதட்டா முன்னம் புரம்மூன்றுந்
தீச்சரத்தாற் செற்றான் திருப்பனந்தாள் தாடகைய
ஈச்சரத்தான் பாதமே ஏத்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கரம் - கை. முதுமையில், எழும் பொழுது எழுந் திருக்க இயலாமல் கைகளை நிலத்தில் ஊன்றிக் கொண்டு எழுதலும், ஒளியை முற்ற வாங்க முடியாமல் கண் கூட இடுக்கிப் பார்ப்பதும், நடக்க முடியாமல் கால்கள் தள்ளாடுதலும், அவை தள்ளாடாமைப் பொருட்டுக் கோல் ஊன்றி நடத்தலும், பல் இல்லாமையால் வாயைக் குதட்டுதலும் இயற்கை. மரம், கோல். மற்று, வினைமாற்று. தீச்சரம் - தீக்கடவுளாகிய அம்பு. திருப்பனந்தாள், சோழ நாட்டுத்தலம். தாடகை யீச்சரம், அதில் உள்ள கோயிலின் பெயர்.

பண் :

பாடல் எண் : 22

தஞ்சாக மூவுலகும் ஆண்டு தலையளித்திட்
டெஞ்சாமை பெற்றிடினும் யான்வேண்டேன் நஞ்சங்
கரந்துண்ட கண்டர்தம் ஒற்றியூர் பற்றி
இரந்துண் டிருக்கப் பெறின்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தஞ்சம்` என்பது ஈற்று அம்முக் குறைந்து, `தஞ்சு` என நின்றது. தஞ்சம் - எளிமை. தலையளித்தல் - குடிகளை நன்கு காப்பாற்றுதல், எஞ்சாமை - அங்ஙனம் காப்பதில் இளையாமை. அத்தகைய பேற்றினைப் பெற்றாலும் அதனை வேண்டேன்` என்க. `கரந்து உண்ட` என்பதை `உண்டு கரந்த` என முன்பின்னாக வைத்து விகுதி பிரித்துக் கூட்டியுரைக்க. ஒற்றியூர் - தொண்டை நாட்டில் உள்ள கடற்கரைத் தலம். `ஓடு ஏந்தி இரந்து உண்டல்` என்பது துறவு வாழ்க்கையைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 23

நூற்றனைத்தோர் பல்லூழி நுண்வயிர வெண்குடைக்கீழ்
வீற்றிருந்த செல்வம் விழையாதே கூற்றுதைத்தான்
ஆடரவங் கச்சா அரைக்கசைத்த அம்மான்தன்
பாடரவம் கேட்ட பகல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நூற்று அனைத்து - நூற்றுக் கணக்கான. ஓர் நூற்றனைத்து` என மாற்றி, `ஓர்` என்பதனை நூற்றுக்கு அடையாக்குக. `பல் ஊழி வீற்றிருந்த` என்க. நுண்வயிரம் - நுண்ணிய ஒளியை யுடைய வயிரம் - `செல்வம்` என்பது, செல்வத்தோடு வாழ்ந்த காலம். பாடு அரவம் கேட்ட காலத்தை விழையாது` என்க. விழையாது. ஒவ்வாது. `அரவம்` இரண்டில் முன்னது பாம்பு; பின்னது ஓசை. `அம்மான் தன்னை` என்னும் இரண்டாம் உருபு தொகுக்கப்பட்டது. இதில் தலம்யாதும் குறிக்கப்படவில்லை. அதனால், `கூற்று உதைத் தான்` என்ற குறிப்பினால், `திருக்கடவூர் கூறப்பட்டது` எனலாம்.

பண் :

பாடல் எண் : 24

உய்யும் மருந்திதனை உண்மின் எனவுற்றார்
கையைப் பிடித்தெதிரே காட்டியக்காற் பைய
எழுந்திருமி யான்வேண்டேன் என்னாமுன் நெஞ்சே
செழுந்திரும யானமே சேர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உய்யும் மருந்து - இறவாமல் வாழ்வதற்கு ஏதுவான மருந்து. உற்றார் - சுற்றத்தார் கையைப் பிடித்துக் காட்ட வேண்டிய நிலை. கண் தெரியாமையால் வருவது. பைய எழுந்து - மெல்ல எழுந்து. `யான் வேண்டேன்` என்றல், உண்ண முடியாமை யால். `திருமயானம்` என்பது சில தலங்களில் உள்ள கோயில்களின் பெயராய் அமைந்துள்ளது. கச்சி மயானம், கடவூர் மயானம், நாலூர் மயானம் - இவை காண்க.
சேத்திரத் திருவெண்பா முற்றிற்று.
சேத்திரத் திருவெண்பா குறிப்பிடும் சிவதலங்கள். தில்லைச் சிற்றம்பலம், குடந்தைக் கீழ்க்கோட்டம், திருவையாறு, திருவாரூர், திருத்துருத்தி, திருக்கோடிகா, திருஇடைவாய் திருநெடுங்களம், திருத்தண்டலைநீணெறி, திருஆனைக்கா, திருமயிலை, திருஉஞ்சேனைமாகாளம், திருவளைகுளம், திருச்சாய்க்காடு, திருப்பாச்சிலாச்சிராமம், திருச்சிராப்பள்ளி திருமழபாடி, திருஆப்பாடி, திருக்கச்சியேகம்பம், திருக்கடவூர், திருப்பனந்தாள், திருவொற்றியூர், திருமயானம் (கச்சி, கடவூர், நாலூர்).

பண் :

பாடல் எண் : 1

பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
ஆகிய ஈசனுக்கே.

பொழிப்புரை :

தன்னைக் கண்ட எனது மேனியின் நிறம் அங்ஙனம் கண்டபின் எந்த நிறமாயிற்றோ அந்த நிறத்தையே தனது இயற்கை நிறமாக உடைய இறைவனுக்கு மேனி, எப்பொழுதும் பொன்னின் நிறம் என்ன நிறமோ அந்த நிறமே.
தாழ்ந்து தொங்குகின்ற சடைகள், விட்டு விளங்குகின்ற மின்னல் என்ன நிறமோ அந்த நிறமே.
பெரிய இடப ஊர்தி, வெள்ளி மலை என்ன நிறம் வடிவோ அந்த நிறம் வடிவுகளே.

குறிப்புரை :

``தன்னைக் கண்ட`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
இச்செய்யுள் தில்லைக் கூத்தப் பெருமானைக் கண்டு அவர் மேல் காதல் கொண்டு ஆற்றாமை எய்தினாள் ஒருத்தி கூற்றாகச் செய்யப்பட்டது.
காதலால் வருந்தும் தலைவியரது மேனி பொன்னிற மாகிய பசலையை அடையும் என்பது,
பசப்பித்துச் சென்றாரை உடையையோ? அன்ன
நிறத்தையோ? பீர மலர்
என்பது முதலியவற்றான் விளங்கும்.
``தன்னைக் கண்ட என் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணமாகிய ஈசன்`` என்பது இவ்வாறு வெளிப் பொருள் தருவதாயினும், `காணப்படாத இறைவனது இயல்பு.
காணப்படுகின்ற அவன் அடியவரிடத்து விளங்குதல் பற்றியே அறியப்படும்` என்பதே இதன் உட்பொருள்.

ஒன்றும் குறியே குறிஆத லால்அதனுக்கு
ஒன்றும் குறிஒன் றிலாமையினால் ஒன்றோடு
உவமிக்க லாவதுவுந் தான்இல்லை ஒவ்வாத்
தவம்மிக்கா ரேஇதற்குச் சான்று.

என்ற திருக்களிற்றுப்படியினைக் காண்க.
மால், மாயோனுமாம்

பண் :

பாடல் எண் : 2

ஈசனைக் காணப் பலிகொடு
செல்லஎற் றேஇவளோர்
பேயனைக் காமுறு பிச்சிகொ
லாமென்று பேதையர்முன்
தாயெனை ஈர்ப்பத் தமியேன்
தளர அத் தாழ்சடையோன்
வாவெனைப் புல்லவென்றான்இமை
விண்டன வாட்கண்களே.

பொழிப்புரை :

(``பிச்சை`` என்று கேட்டு வாயிலில் வந்தவன் சிவ பிரான் - என்று தெரிந்துயான்) `அவனைக் காண வேண்டும்` என்னும் ஆசையால் பிச்சையைப் பிறர் எடுத்துச் செல்வதற்கு முன் யானே விரைந்து எடுத்துச் செல்ல, என் தாய் (செவிலி) `பிறர் செல்லலாகாத இவள் மிக விரைந்து புறம் செல்கின்றாள் ஆதலின் பிச்சைக்கு வந்த இந்தப் பேய்க் கூட்டத்தான் மேல், பித்துப் பிடித்தவள் போல் இவள் காதல் கொண்டாள் போலும்` என்று அறிந்து, தோழியர் பலர்முன் தாய் என்னை, `ஏடி, உள்ளே வா` என்று பற்றி ஈர்க்க, எனக்கு உதவுவார் யாரும் இன்றி யான் சோர்தலைக் கண்டு, பிச்சைக்கு வந்த, நீண்ட சடையையுடைய அவன், `நீ என்னைக் காதலித்து விட்டபின் எவர் உன்னைத் தடுத்து என்ன பயன்.
(நீ என்னைக் காதலித்துவிட்ட பொழுதே நீ எனக்கு உரியவளாய் விட்டாய்; ஆகவே,) நீ யாவரும் அறியவே என்னைத் தழுவ வா` என்று அழைத்தான்.
அவனது பொருளை அறிய, என்னுடைய வாள் போன்ற கண்கள் பொழிந்த அன்பு நீரைத் தடுக்க மாட்டாமல் இமைகள் திறந்துவிட்டன.

குறிப்புரை :

``கண்டார் காதலிக்கும் கணநாதன் எம் காளத்தியாய்``* என்று அருளிச் செய்தபடி, ``பக்குவான்மாக்கள் சிவனது வடிவைக் கண்டவுடனே அவன்மேற் கரையிறந்த காதல் உடையனவாம்`` என்பதையும், `அதுபொழுது அவ்வான்மாவை அபக்குவான்மாக்கள் ஏசியும், இகழ்ந்தும் தம் வயப்படுத்த முயலும்` என்பதையும், `எனினும் சிவன் தன்னைக் காதலித்த ஆன்மாவைத் தன்பால் ஈர்த்துக் கொள்ளுதலை ஒருவராலும் தடுக்க இயலாது` என்பதையும் இவ்வாறு அகப் பொருள்மேல் வைத்து அருளிச் செய்தவாறாக உணர்க.
இதற்குக் கண்ணப்ப நாயனார் சிறந்த எடுத்துக்காட்டு.
அதனையே மேற்காட்டிய சுந்தரர் திருமொழி குறிப்பால் உணர்த்தியது.
பிச்சி - பித்துக் கொண்டவள்.
சகரயகரங்கள் ஒன்றற்கு ஒன்று எதுகையாய் வருதல் உண்டு.

பண் :

பாடல் எண் : 3

கண்களங் கஞ்செய்யக் கைவளை
சோரக் கலையுஞ்செல்ல
ஒண்களங் கண்ணுதல் வேர்ப்பவொண்
கொன்றையந் தார்உருவப்
பெண்களங் கம் இவள் பேதுறும்
என்பதோர் பேதைநெஞ்சம்
பண்களங் கம்இசை பாடநின்
றாடும் பரமனையே.

பொழிப்புரை :

இச்சிறுமியை, அழகிய கண்டத்தையுடைய சிவன் வெறுக்கவும் இவள் அவன்மேற் கொண்ட காதலால், கண்கள் நீர் பொழிய, கை வளைகள் கழல, துகில் நெகிழ, அவனது கொன்றை மாலை போலும் நிறத்தை எய்தியதுடன் அறியாமையுடைய மனம் பித்துக் கொண்டவளாயினாள்.
இஃது இவளது பெண்மைக்குக் குற்றமாம்.

குறிப்புரை :

இது சிவபிரானைக் காதலித்த தலைவி தன் தாய் கூற்று.

வீழப் படுவார் கெழீஇயிலர், தாம்வீழ்வார்
வீழப் படாஅ ரெனின்.
*
என்றபடி, தம்மால் காதலிக்கப்பட்ட தலைவரால் தாமும் காதலிக்கப் பட்ட மகளிரன்றோ பெருமையடைதற்கு உரியர்? இவள் அவ்வா றின்மையின் குற்றப்படுகின்றாள் - எனத் தாய் நொந்து கூறினாள் என்க.
தீவிர பக்குவம் எய்தாத ஆன்மாவின் நிலைமையை இங்ஙனம் அகப்பொருள் முறையில் வைத்துக் கூறியதாக உணர்க.
`கண்கள் அங்கு அம் செய்ய` எனப் பிரிக்க.
அம் - நீர்.
`களக் கண்ணுதல்` என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது.
வேர்த்தல் - சிதைத்தல்.
அஃது இங்கு வெறுத்தலைக் குறித்தது.
`வேர்ப்பவும்` ஓர் பேதை நெஞ்சம் அவனையே விரும்பிப் பேதுறுகின்றாள் என்பது பெண் களங்கம்` என இயைத்து முடிக்க.
களங்கம் - குற்றம்.
உருவத்தோடு` என உருபு விரித்து அதனை, ``பேதுறும்`` என்பதனோடு முடிக்க.
`பண்களுக்கு அங்கமான (உறுப்பான) இசைகளை இனிது விளங்கப் பலர் பாட ஆடும் பரமனையே விரும்பிப் பேதுறும்` என ஒரு சொல் வருவித்து முடிக்க.
இப்பாட்டுள் `திரிபு` என்னும் சொல்லணி வந்தது.

பண் :

பாடல் எண் : 4

பரமனை யே பலி தேர்ந்துநஞ்
சுண்டது பன்மலர்சேர்
பிரமனை யே சிரங் கொண்டுங்
கொடுப்பது பேரருளாம்
சரமனை யேயுடம் பட்டும்
உடம்பொடு மாதிடமாம்
வரமனை யேகிளை யாகும்முக்
கண்ணுடை மாதவனே.

பொழிப்புரை :

மூன்று கண்களையுடைய, பெரியதவக் கோலத்த னாகிய சிவபிரான் அயலார் இல்லந் தோறும் சென்று இரந்த போதிலும் அவன் உண்டது நஞ்சமே.
இதழ்களால் பன்மையைப் பெற்ற மலரின் கண் இருக்கும் பிரம தேவனைச் சிரம் கொய்ததும் அவனுக்கு வழங்கி யது பெரிய அருளே.
(படைப்புத் தொழில் தொன்மையை அளித்தது.
) மலர்க் கணைகளையுடைய மன்மதனை அழித்தபோதிலும் உடம்பில் இடப்பாதியாகக் கொண்டது பெண்ணையே.
இனி மேலாவன மனைவியாகிய அவளே அவனுக்குத் தாயும், மகளும் ஆகிய சுற்றம்.

குறிப்புரை :

`இஃது அவன் இலக்கணம்` எனப் பழித்தல் குறிப் பெச்சம்.
இது பழித்ததுபோலப் புகழ்ந்தது.
சத்திக்குச் சிவன் எவ்வெம் முறையனாம் என்பதை, ``எம்பெருமான் இமவான் மகட்குத்
தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன்,
தமையன்``.
1 என்னும் திருவாசகத்தாலும், தவளத்த நீறணி யும்தடந் தோள் அண்ணல் தன்னொருபா
லவள் அத்த னாம்; மகனாம் தில்லையான்.
2 என்னும் திருக்கோவையாராலும் அறிக.
இங்ஙனம் கூறவே, இவை உலகில் உள்ள முறைபோலத் தம் பிறப்பினால் ஆகாது தமது அருள் நாடகச் செயலால் ஆவனவாதல் விளங்கும்.
தத்துவங்களில் சுத்த தத்துவங்கள் தோன்றுமிடத்து.
பிறிதொன்றையும் நோக்காது நோக்குங்காலத்தில் `சிவன், சக்தி` என் இரு கூறாய்ப் பரநாதமாகிய சிவன் சுத்த சிவத்தினின்றும் தோன்றித் தன்னின்றும் பரவிந்துவாகிய சத்தியைத் தோற்றுவித்தலால் சத்திக்குச் சிவன் தந்தையாகின்றார்.
பின்பு பரவிந்துவாகிய சத்தியினின்றும், அபரநாதமாகிய சிவன் தோன்றுதலால் சத்திக்குச் சிவன் மகனாகின்றார்.
பின்பு அபர நாதமாகிய சிவன் அபர விந்துவாகிய சத்தியைத் தோற்றுவிக்க அச்சத்தியினின்றும் முதலில் சதாசிவனும், பின்பு மனோன்மனியும் தோன்றுதலால் சத்திக்குச் சிவன் தமையனாகின்றார்.
பின்பு அவ் விருவரும் சேர்ந்தே மகேசுரன் முதலிய தலைவர்களைத் தோற்று வித்து, அவர்கள் வழியால் உலகத்தையும் தோற்றுவித்தலால் சத்திக்குச் சிவன் கேள்வன் (கணவன்) ஆகின்றார்.
எனவே, இத்தத்துவக் குறிப்பே முறையில்லாத முறைகளாக நகைச்சுவை தோன்றச் சொல்லப் படுகின்றன என்க.
இப்பாட்டிலும், `திரிபு` என்னும் சொல்லணி வந்தது.
பர மனை - அயல் வீடு.
சரம், இங்கு பூங்கணையும், மன், மன்மதனுமாம்.
உடம்பு அட்டு - உடம்பை அழித்து.
``உடம்பொடு`` என்பதை `உடம்பின்கண்` எனத் திரிக்க.
வர மனை - மேலான மனைவி.
கிளை - சுற்றம்.
``உடம்பின் கண் இடம் ஆம்`` எனச் சினை வினை முதல்மேல் நின்றது.
கிளை ஆகும் - கிளையாக இருக்கும்.

பண் :

பாடல் எண் : 5

தவனே உலகுக்குத் தானே
முதல் தான் படைத்தவெல்லாம்
சிவனே முழுதும்என் பார்சிவ
லோகம் பெறுவர்செய்ய
அவனே அடல்விடை ஊர்தி
கடலிடை நஞ்சம்உண்ட
பவனே எனச்சொல்லு வாரும்
பெறுவரிப் பாரிடமே.

பொழிப்புரை :

`சிவபெருமானே எல்லோரிலும் மிக்கவன்; (எனவே, முதற்கடவுள் ) உலகிற்கு முதல்வனும் அவனே.
எல்லா உயிர்களும், எல்லாப் பொருள்களும் அவன் படைத்தனவே.
(உயிர்கள், பிறப்பெடுத்த உயிர்கள்).
அவன் அனைத்துப் பொருள் களிலும் அவையேயாய் நிறைத்திருக்கின்றான்` என இவ்வாறு உணர்கின்றவர்கள் சிவலோக வாழ்க்கையைப் பெறுவர்.
`அவன் திருமாலை இடபமாகக் கொண்டு ஏறி நடாத்துபவன், பாற்கடலில் தோன்றிய நஞ்சினைத் தேவர் பொருட்டு உண்டவன், நினைப்பவர் நினைத்த இடத்தில் அவர் நினைத்த வடிவில் தோன்றுபவன்` என இவ்வாறு அவனைப் புகழ்பவரும் இவ்வுலக ஆட்சியைப் பெறுவர்.

குறிப்புரை :

மிகுதியை உணர்த்தும் `தவ` என்னும் உரிச்சொல்லடி யாக, `தவன்` என்னும் பெயர் பிறந்தது.
`சால்` என்பது அடியாக, `சான்றோன்` என்பது பிறத்தல் போல.
பவன் - தோன்றுபவன்.
பெறப்படுவன வேறாயினும் இரண்டும் பேறாதல் பற்றி, ``சொல்லுவாரும்`` என இறந்தது தழுவிய எச்சவும்மை தரப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

இடம்மால் வலந்தான் இடப்பால்
துழாய்வலப் பாலொண்கொன்றை
வடமால் இடந்துகில் தோல்வலம்
ஆழி இடம்வலம்மான்
இடமால் கரிதால் வலஞ்சே
திவனுக் கெழில்நலஞ்சேர்
குடமால் இடம்வலங் கொக்கரை
யாம்எங்கள் கூத்தனுக்கே.

பொழிப்புரை :

சிவபெருமான் ஓரமையத்தில் இடப்பக்கம் திரு மாலும், வலப்பக்கம் தானுமான ஒரு வடிவத்துடன் நின்றான்.
(அது படைப்புக் காலம் என்க) அப்பொழுது இடப்பக்கம் துழாய் மாலை யும், வலப்பக்கம் கொன்றைப் பூ மாலையும் - இடப்பக்கம் பொன்னாடையும், வலப்பக்கம் தோல் ஆடையும், இடப்பக்கம் சக்கர மும், வலப்பக்கம் மானும், இப்பக்கம் கருநிறமும், வலப்பக்கம் செந் நிறமுமாய் இருந்தன.
இனி இடப்பக்கம் குடக் கூத்தும், வலப்பக்கம் கொக்கரைக் கூத்தும் ஆடின.

குறிப்புரை :

`இதோர் அதிசய வடிவம்` என்பது குறிப்பெச்சம்.
இவ் வடிவம் `அரியர்த்தேசுரவடிவம்` எனப்படும்.
``எங்கள் கூத்தனுக்கு`` என்பதை முதலில் கொண்டு உரைக்க.
வட மால் - தாமோதரன், `இடம், வடமாவது துகில்` என்க.
துகில் - உயர்ந்த ஆடை.
`வலக்கையில் மான்` என்றது இவ்வடிவத்தில் மட்டும் சிறப்பாகக் கொண்டது.
``இடம் ஆல் கரிது ஆல்`` என்னும் `ஆல்` இரண்டும் அசைகள்.
சேது - செய்யது; செந்நிறமானது.
உருவம் கூறியபின் செயல் கூறுகின்றார்.
ஆகலின், ``இவனுக்கு`` என மீட்டும் சுட்டிக் கூறினார்.
எழல் நலம், ஒருபொருட் பன்மொழி.
குடம் கொண்டு ஆடிய கூத்தைக் ``குடம்`` என்றும் 1 கொக்கரித்து ஆடிய கொடுகொட்டிக் கூத்தைக் 2 ``கொக்கரை`` என்றும் கூறினார்.

பண் :

பாடல் எண் : 7

கூத்துக் கொலாமிவர் ஆடித்
திரிவது கோல்வளைகள்
பாத்துக் கொலாம்பலி தேர்வது
மேனி பவளங்கொலாம்
ஏத்துக் கொலாமிவர் ஆதரிக்
கின்ற திமையவர்தம்
ஓத்துக் கொலாமிவர் கண்ட திண்
டைச்சடை உத்தமரே.

பொழிப்புரை :

`இண்டை` என்னும் வகை மாலையைச் சடையில் தரித்துள்ள மேலானவராகிய இவர், எங்கும் ஆடிச் செல்வது முறைப் படி அமைந்த நடனம்.
எங்கும் சென்று பிச்சை ஏற்பது தம் தேவியர் பகுத்து உண்டற்கு.
இவர் மேனி பவளம்போல்வது, இவர் எவரிடமும் விரும்புவது தம்மைப் புகழ்தலை.
இவர் நினைவு மாத்திரத்தாற் செய்தது வேதம்.

குறிப்புரை :

இஃது இறையது பொது வியல்பைக் கூறியது.
``கூத்து`` எனப் பொதுப்படக் கூறினாராயினும், ``ஆடித் திரிவது`` என எடுத் தோதினமையால், அது முறைப்படி (கூத்த நூல் முறைப்படி) அமைந்த கூத்தாயிற்று.
இது பெத்தான்மாக்களுக்கு ஊன நடனமாயும், முத்தான் மாக்களுக்கு ஞான நடனமாயும் நிகழ்தலை உண்மை விளக்க நூலால் அறிக.
* ``கோல் வளை`` என்பது `திரட்சியான வளையலை அணிந்த வள் என ஒருமையாய் நின்று, பின் `கள்` விகுதியேற்றுப் பன்மையா யிற்று.
சிவபெருமானுக்குத் தேவியர் `உமை, கங்கை` என இருவராதல் வெளிப்படை.
எனவே, `அவர்களைக் காப்பாற்றுதற்கு வழியில்லா மையால் பிச்சை எடுக்கின்றான்` என்பது வெளிப்படைப் பொருளாய் இகழ்ச்சியைத் தோற்றுவித்தது.
ஆயினும், `பிச்சையிட வரும் மகளிரது வளைகளைக் கவர்ந்துகொள்கின்றான்` என்பது உள்ளுறைப் பொரு ளாய்ப் புகழ்ச்சியைத் தோற்றுவித்தது.
இது சிலேடையணி.
தொழிற் பெயர்கள் வினையொடு முடியுங்கால் வினையெச்சத்தோடே முடிதலும் உண்டு.
ஆகையால், ``திரிவது`` என்னும் தொழிற் பயர் ``பாத்து`` என்னும் வினையெச்சத்தோடே முடிந்தது.
பாத்து - பகுத்து.
இது வெளிப்படைப் பொருளில் `பகுக்க` எனச் செயவெனெச்சப் பொருட்டாயும், உள்ளுறைப் பொருளில் `கவர்ந்து` என்னும் பொருட்டாயும் நின்றது.
ஏத்து - துதி; முதனிலைத் தொழிற்பெயர்.
ஆதரித்தல் - விரும்புதல் ``இமையவர் ஒத்து`` என்றதனால் இறைவன் திருவருட் குறிப்பினை உணரத் தேவர்களும் வேதத்தை உணர்தல் சொல்லப்பட்டது.
`பெத்தான்மாக்கள், முத்தான்மாக்கள் ஆகிய இருவகை ஆன்மாக்களுக்கும் ஏற்புடையவற்றைச் செய்து அவைகளை உய் வித்தலும், தன்னை உணராதவரையும் தக்க வழியால் உணர்வித்தலும், சிறிது உணர்ந்தாரையும் தம்மைப் புகழ்தல் வாயிலாக மிக உணர்ந்து அன்பு கூரச் செய்தலும், உயிர்களுக்கு நூல்கள் வாயிலாக நன் னெறியை உணர்த்துதலும் இறையது பொது வியல்புகள்`` என்பது கூறியவாறு.
`மேனி பவளம்` என்றது வசிகரித்தலைக் கூறியது.
``கொல், ஆம்`` என வந்தன எல்லாம் அசைநிலைகள்.

பண் :

பாடல் எண் : 8

உத்தம ராயடி யாருல
காளத் தமக்குரிய
மத்தம் அராமதி மாடம்
பதிநலஞ் சீர்மைகுன்றா
எத்தம ராயும் பணிகொள
வல்ல இறைவர்வந்தென்
சித்தம ராயக லாதுடன்
ஆடித் திரிதவரே.

பொழிப்புரை :

தம் அடியார்கள் யாவரினும் மேலானவராய், மண்ணுலகு வானுலகுகளை ஆள, ஊமத்தை மலர், பாம்பு, திங்கள், அவற்றின் அருகே நீர் இவைகளே தமக்கு உரியவாய் மிக அழகும் புகழும் குறையாதனவாய் உள்ளன.
எக்குலத்தவராயினும் தமக்கு அடியார்களாக ஆகும்படி செய்துகொள்ள வல்ல இறைவர் தமது மேல் நிலையினின்றும் இறங்கி வந்து என் உள்ளத்தில் பொருந்தி என்னோடு உடன் இயங்கியே திரியும் தன்மையுடையராகின்றனர்.

குறிப்புரை :

`இதுவும் மேற்கூறிய ஊமத்தை முதலியவற்றை உவந்து கொண்டது போல்வதுதான்` என்பது குறிப்பெச்சம்.
இக்கருத்துக் குறிப்பால் தோன்றவே இதனை இருதொடராக அருளிச் செய்தார்.
``தமக்கு உரியவாய்` என ஆக்கம் விரித்து ``சீர்மை குன்றா`` என்பதற்கு முன்னே கூட்டுக.
மத்தம் - ஊமத்தை.
மாடு - பக்கம்.
`அம்பு + அதி நலம்` எனப்பிரிக்க.
அம்பு - நீர், நலம் - அழகு.
`அதிநலமும், சீர்மை யும் குன்றா` என்க.
ஈற்றடியில், `மருவாய்` என்பது, மராய்` என வந்தது.
மருவு - மருவுதல்; முதனிலைத் தொழிற்பெயர்.
திரிதவர் - திரிதலையே தவமாக - தொழிலாக - உடையவர்.

பண் :

பாடல் எண் : 9

திரிதவர் கண்ணுள்ளும் உள்ளத்தின்
உள்ளுந் திரிதரினும்
அரிதவர் தன்மை அறிவிப்ப
தாயினும் ஆழிநஞ்சேய்
கரிதவர் கண்டம் வெளிதவர்
சாந்தம்கண் மூன்றொடொன்றாம்
பரிதவர் தாமே அருள்செய்து
கொள்வர்தம் பல்பணியே.

பொழிப்புரை :

இறைவர் மேற்கூறியவாறு என் கண்ணினுள்ளும், கருத்தினுள்ளும் என்னோடு அகலாது நின்று உடனே திரிபவராயினும், `அவரது தன்மை இதுதான்` என்று என்னால் வரையறுத்துச் சொல்லுதல் இயலாது.
ஆயினும் கடல் நஞ்சம் பொருந்திய அவரது மிடறு கறுத்தது; அவர் பூசிய சந்தனம் வெளுத்தது; (திருவெண்ணீறு) கண்களோ மூன்று, ஏந்திய வில் பிறரால் ஏந்துதற்கு அரிய ஒன்று (அஃதாவது மலை) தமக்குத் தாமே பல பணிகளைப் பணித்துக் கொள்வார்.
(பிறரால் யாதும் பணிக்கப்படுவாரல்லர்).
என இங்ஙன் ஒருவாறு அவரைப் பற்றிக் கூறலாம்.

குறிப்புரை :

ஈற்றில் வருவித்து உரைத்தது குறிப்பெச்சம்.
`கண் முன்னொரு பரி தவர் ஒன்றாம்` என்க - பரித்தல் - தாங்குதல்.
தவர் - வில்.

பண் :

பாடல் எண் : 10

பணிபதம் பாடிசை ஆடிசை
யாகப் பனிமலரால்
அணிபதங் கன்பற் கொள்அப்பனை
அத்தவற் கேயடிமை
துணிபதங் காமுறு தோலொடு
நீறுடல் தூர்த்துநல்ல
தணிபதங் காட்டிடுஞ் சஞ்சலம்
நீயென் தனிநெஞ்சமே.

பொழிப்புரை :

எனது ஒப்பற்ற மனமே, சூரியனது பல்லை உகுத்த, யாவர்க்கும் தந்தையாகிய சிவனை அடி பணி; கூத்தாடு; பொருந்தும் வகையால் பல இசைகளைப் பாடு; குளிர்ந்த மலர்களால் அலங்கரி; `அப்பெருமானுக்கேயான் அடிமை` என்னும் நிலைமையை நிச்சயமாக உணர்வதையே விரும்பு.
இச்செயல்களில் உனக்கு அவனைப் போலவே உடம்பில் தோலை உடுத்தலோடு, நீற்றை நிறையப் பூசி அமைதியுற்றிருத்தலாகிய நல்ல பதவியைக் கொடுக்கும்.
இனி உனது கவலையை விடு.

குறிப்புரை :

தம் மொழி வழி நிற்றல் வேண்டி, `ஒப்பற்ற நெஞ்சமே` என்றார்.
இனி, `துணையில்லாது தனித்து நிற்கும் நெஞ்சமே` என்றலும் ஆம்.
`பதம் பணி` என மாற்றியுரைக்க.
இசையாக - இசைவாக; பொருந்தும்படி.
`இசையாக இசை பாடு` என்க.
பதங்கன் - சூரியன்.
`அடிமைப் பதம் துணி` என இயைக்க.
பதம் - நிலைமை.
``தோலொடு.............தணிபதம்`` என்றது சாரூப பதவியை நீ - நீத்துவிடு.

பண் :

பாடல் எண் : 11

நெஞ்சந் தளிர்விடக் கண்ணீர்
அரும்ப முகம்மலர
அஞ்செங் கரதலங் கூம்பஅட்
டாங்கம் அடிபணிந்து
தஞ்சொல் மலரால் அணியவல்
லோர்கட்குத் தாழ்சடையான்
வஞ்சங் கடிந்து திருத்திவைத்
தான்பெரு வானகமே.

பொழிப்புரை :

மனம், வறட்சியால் வாடிய செடியாகாது, அன்பென்னும் நீரால் குளிர்ந்த செடியாகித் தளிர்க்க, அதினின்றும் தோன்றுகின்ற குருத்து அரும்புவதன் அறிகுறியாக அழகிய, சிவந்த கைகள் குவிந்து தோன்ற அக்கருத்தில் அன்பாகிய தேன் ததும்புவ தாகக் கண்களில் நீர் ததும்ப, அரும்பிய கருத்து மலர்வதாக முகம் மலர, மலர்ந்த கருத்துக்களை வெளிப்படத் தெரிவிக்கின்ற, தமது சொற்க ளாகிய மலர்களைத் தொடுத்த பாக்களாகிய மாலைகளை அணிவித்து, எட்டுறுப்புக்களாலும் அடிபணிய வல்லவர்க்கு என்றே நீண்ட சடையையுடையவனாகிய சிவபெருமான் சிறிதும் கர வில்லாமல் தனது பெரிய சிவலோகத்தை நன்றாகப் படைத்து வைத்தான்.

குறிப்புரை :

``தளிர்விட`` என்பது முதலியன உருவகத்தைக் குறிப் பால் உணர்த்தி நின்றன.
``கண்ணீர்`` என்பது சிலேடையாய் `கள் + நீர்` எனப் பிரித்து, `தேன்` எனப் பொருள் கொள்ள நின்றது.
எட்டுறுப் பாவன; முழங்கால் இரண்டு, மார்பு ஒன்று, தோள் இரண்டு, செவி இரண்டு, முகம் ஒன்று.
இவ் எட்டுறுப்பும் நிலத்தில் தோயப் பணிதல் அட்டாங்க நமற்காரம்` எனப்படும்.
மார்பும், தோள்களும் ஒழிந்த ஐந்துறுப்புக்கள் நிலத்தில் தோயப் பணிதல் பஞ்சாங்க நமற்காரமாகும்.
`மகளிர் அட்டாங்க நமற்காரம் செய்தல் கூடாது` என விலக்கியுள்ளது.
தலைமட்டும் தாழக் கும்பிட்டு வணங்குவது ஏகாங்க நமற்காரம்.
`இறைஞ்சுதல்` என்பதும் இதுவே.
அட்டாங்கத்தோடு கூடியது, `சாட்டாங்கம்` எனப்படும்.
ஈற்றில் வைக்கற்பாலதாய இதனைச் செய்யுள் நோக்கி இடை வைத்தார்.
`சிவபெருமானை அன்பொடு பணிந்து பணி செய்பவர்கள் தவறாமல் சிவலோகத்தை அடைவர்` என்பது உணர்த்தியவாறு.
``தம் சொல் மலரலா`` என்றமையால் தாமே பாக்களை இயற்றிப் போற்றுவார் குறிக்கப்பட்டனர்.
தம் சொல்லால் தொடுக்கப்படும் பாக்களுக்கு ஒரு தனிச் சிறப்புச் சொல்லப்படுகின்றது.
இதனால், `பாமாலைகளைப் புதிது புதிதாய்த் தொடுத்தணியும் மரபு இடையே அற்றொழியாமல், நீடு செல்லல் வேண்டும்` என்பது இறைவனது திருவுளக் குறிப்பாதல் விளங்கும்.
தேவார திருவாசகங்கட்குப் பின்னரும் அன்புடைத் தொண்டர்கள் பாமாலை சாத்திப் பரவினமை இதற்குத் தக்கச் சான்று.
`பத்திமையால் பணிந்தடியேன் றன்னைப் பன்னாள் பாமாலை பாடப் பயில்வித் தானை` 1
`பந்தமறுத் தாளாக்கிப் பணிகொண் டாங்கே
பன்னியநூல் தமிழ்மாலை பாடு வித்துஎன்
சிந்தைமயக் கறுத்ததிரு அருளினானை`.
2 `நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனை.
` 3 `நமக்கும் அன்பிற் பருகிய சிறப்பின் மிக்க
அற்சனை பாட்டேயாகும்; ஆதலால் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடுகென்றார், தூமறை பாடும் வாயார்.
` என்பன முதலிய திருவாக்குகள் இதனை வலியுறுத்தும்.

பண் :

பாடல் எண் : 12

வானகம் ஆண்டு மந் தாகினி
ஆடிநந் தாவனஞ்சூழ்
தேனக மாமலர் சூடிச்செல்
வோருஞ் சிதவல்சுற்றிக்
கானகந் தேயத் திரிந்திரப்
போருங் கனகவண்ணப்
பால்நிற நீற்றற் கடியரும்
அல்லாப் படிறருமே.

பொழிப்புரை :

சிவகங்கையில் ஆடுதல், சிவ நந்தனவனத்தில் நிறைந்த பூக்களைச் சூடுதல் முதலிய சிறப்புக்களுடன் சிவலோகத்தில் வாழ்பவரும், கிழிந்த ஆடையை அரையில் சுற்றிக்கொண்டு, கால் நகம் தேய மண்ணுலகில்`` எங்கும் திரிந்து, இரப்பவரும் யாவர் எனின், முற்பிறப்பில் திருமேனியில் பால்போலும் நிறத்தையுடைய திருநீற்றைப் பூசியுள்ள சிவபெருமானுக்குத் தொண்டு செய்தவரும், அது செய்யாது அதனை இகழ்ந்தவருமேயாவர்.

குறிப்புரை :

`சிவத் தொண்டு தூய இன்பங்களைத் தரும்` எனவும், `அதனை இகழ்தல் இவ்வுலகில் வறுமைத் துன்பத்தைத் தரும்` எனவும் உறுதிப்படக் கூறுவார் இங்ஙனம் கூறினார்.
படிறர் - பொய்யர்.
பொய் நிலையாமையை நிலைத்ததாக உணர்ந்து, நிலைத்ததை நிலையாததாக இகழ்தல்.
ஏகாரம், தேற்றம்.
ஆளுதல் - பயன் கொள்ளுதல்.
அவை மந்தாகினி ஆடுதல் முதலியன.
மந்தாகினி - கங்கை.
அஃது இங்குச் சிவலோக கங்கையைக் குறித்தது.
`நந்தவனம்` என்பது நீண்டு வந்தது.
`கெடாத வனம்` என்றலும் ஆம்.
`இவ்வாறெல்லாம் வானகத்தை ஆள்பவர்` என இறுதிக்கண் கூறற்பாலது செய்யுள் நோக்கி முதலிற் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

படிறா யினசொல்லிப் பாழுடல்
ஓம்பிப் பலகடைச்சென்
றிடறா தொழிதும் எழு நெஞ்ச
மேயெரி ஆடியெம்மான்
கடல்தா யினநஞ்சம் உண்ட
பிரான்கழல் சேர்தல்கண்டாய்
உடல்தான் உளபயன் ஆவசொன்
னேனிவ் வுலகினுள்ளே.

பொழிப்புரை :

``எள் விழுந்த இடத்தைத் தேடிக்கொண்டு, `ஈ மொய்த்தாலும் இழப்பு ஏற்படும்` என்று அது பற்றி ஈயை அடிக்கின்ற உலோபியை `வரையாது வழங்கும் வள்ளலே` எனக் கூறுவது போன்ற பல பொய்களைச் சொல்லி 1 இரந்து, பிறிதொன்றற்கும் பயன்படாத உடலைப் பாதுகாத்தலை மேற்கொண்டு, பல இல்லங்களின் வாயிற் படிகளில் ஏறி இடறுதல் நேராத படி அதனினின்றும் நீங்குவோம்; நெஞ்சமே, புறப்படு.
`எதற்கு` எனின், எரியின்கண் ஆடுபவனும், எம்பெருமானும் கடலில் பரந்து எழுந்த நஞ்சத்தை உண்டவனும் ஆகிய அவனது திருவடிகளைப் பல்லாற்றானும் சார்வனவே, இவ்வுலகத்தில் கிடைத்ததாகிய இவ்வுடலினால் உளவாம் பயன்களாகும்.
இதனை நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.
(என்மேற் பழியில்லை).

குறிப்புரை :

`எனவே, அவற்றைச் சார்தற்கே புறப்படுக` என்பதாம்.
அவற்றைச் சாராதவர் நிலை முன்னைப் பாட்டில் கூறப்பட்டமையால், `அந்நிலை நமக்கு வாராது ஒழிய முயல்வோம்` என்றபடி.
படிறு - பொய்.
`சொல்லி ஓம்பி` என இயையும்.
சொல்லுதல் அதன் காரிய மாகிய இரத்தல்.
மேலும், ஓம்புதல் அதன் காரணமாகிய மேற்கொள்ளு தல் மேலும் நின்றன.
தாயின - பரந்த.
கண்டாய், முன்னிலையசை.
மனம், மொழி, மெய் என்பவற்றால் சார்தல் பலவாகலின் பன்மையாற் கூறினார்.
தான், அசை.
``சொன்னேன்`` என்ற விதப்பு இக்கருத்துடைய தாதலைக் ``குற்றமில்லை எனமேல்; நான் கூறினேன்``.

பண் :

பாடல் எண் : 14

உலகா ளுறுவீர் தொழுமின்விண்
ணாள்வீர் பணிமின்நித்தம்
பலகா முறுவீர் நினைமின்
பரமனொ டொன்றலுற்றீர்
நலகா மலரால் அருச்சிமின்
நாள்நர கத்துநிற்கும்
அலகா முறுவீர் அரனடி
யாரை அலைமின்களே.

பொழிப்புரை :

மண்ணுலகத்தை ஆள விரும்புகின்றவர்களே, `நீவிர், உங்கள் விருப்பம் நிறைவேறச்) சிவபெருமானைக் கைகுவித்துக் கும்பிடுங்கள்.
விண்ணுலகை ஆள விரும்புகின்றவர்களே, (நீவிர், உங்கள் விருப்பம் நிறைவேறச்) சிவபெருமானது திருவடிகளில் வீழ்ந்து பணியுங்கள்.
நாள்தோறும் பற்பலவற்றை விரும்புகின்றவர்களே (நீவிர் உங்கள் விருப்பம் நிறைவேறச்) சிவபெருமானை இடையறாது நினையுங்கள்.
இவைகளையெல்லாம் விடுத்துச்) சிவபெருமானோடு இரண்டறக் கலக்க விரும்புகின்றவர்களே, (நீவிர் உங்கள் விருப்பம் நிறைவேற) அப்பெருமானை நந்தவனத்தில் உள்ள நல்ல பல மலர்களால் அருச்சனை செய்யுங்கள்.
என்றும் நரகத்தில் நிற்றலாகிய பொல்லாத விளைவை விரும்புகின்றவர்களே, (அதற்கு நீவிர்) சிவ பெருமானுடைய அடியாரை வருந்தப் பண்ணுங்கள்.

குறிப்புரை :

`சிவபெருமானை இந்த இந்த அளவில் வணங்குகின்ற வர்கள் இன்ன இன்ன பயன்களை அடைவார்கள்` என்னும் வகை முறையையும், `சிவாபராதம், சிவனடியார்க்கு அபராதம் நரகம் விளைக்கும்` என்பதையும் இவ்வாறு கூறினார்.
நித்தம் - நாள்தோறும்.
கா - சோலை; நந்தவனம்.
`நாளும்` என்னும் முற்றும்மை தொகுத்த லாயிற்று.
`அல்ல` என்பது இடைக்குறைந்து நின்றது.
நரகங்கள் பல வகையின ஆதல் பற்றி, `அல்ல` எனப் பன்மையாற் கூறினார்.
அலைத்தல் - வருத்துதல்.

பண் :

பாடல் எண் : 15

அலையார் புனலனல் ஞாயி
றவனி மதியம்விண்கால்
தொலையா உயிருடம் பாகிய
சோதியைத் தொக்குமினோ
தலையாற் சுமந்துந் தடித்துங்
கொடித்தேர் அரக்கனென்னே
கலையான் ஒருவிரல் தாங்ககில்
லான்விட்ட காரணமே.

பொழிப்புரை :

(உலகீர்) கொடியை உயர்த்திய தேரை உடைய இராவணன் பத்துத் தலையும், இருபது தோளும் உடைமையால் மிகப் பருத்திருந்தும் சிறிய மானைக் கையில் ஏந்திய சிவபெருமானது கால் விரல்களில் ஒன்றன் ஊன்றலைத் தாங்கமாட்டாது அலறிய காரணம் என்ன? (அதனை எண்ணிப் பார்த்து,) அலை பொருந்திட நீர், ஞாயிறு, நிலம், திங்கள், வானம், காற்று, அழிவற்ற உயிர் ஆகிய எட்டினையும் தனது உடம்பாகக் கொண்ட, ஒளி வடிவாகிய அந்தப் பெருமானையே அவனது திருவடிகளைத் தலையிற் சுமந்தாயினும் சேருங்கள்

குறிப்புரை :

``தலையாற் சுமந்தும்`` என்பதை, ``தொக்குமினோ`` என்பதற்கு முன்னே கூட்டுக.
தடித்தல் - பருத்தல்.
``என்னே`` என்னும் வினா, `அது நன்கு தெரிந்ததன்றோ! என்னும் தேற்றக் குறிப்பினது.
`எத்தனை பேர் எத்தனைப் பெரிய உடலும் பேராற்றலும் படைத் திருப்பினும் அவர்களது ஆற்றல்கள் எல்லாம் எங்கும் நிறைந்த பெரும் பொருள் ஆகிய சிவபெருமானது ஆற்றலின்முன் எவ்வளவு` என்றற்கு அவன் அட்ட மூர்த்தியாய் நிற்றலை எடுத்தோதினார்.
அட்ட மூர்த்தங்கள் செய்யுளுக்கேற்ப வைக்கப்பட்டன.
`அவன் சிறியதொரு மானை ஏந்துதலைக் கண்டு தவறாக உணர்ந்து விடாதீர்கள்` என்றற்கு, ``கலையான்`` என்றார்.
தொகுதல் - சேர்தல்.
``தொக்குமினோ`` என்பதில் ககரமெய் விரித்தல்.
ஓகாரம், அசை.

பண் :

பாடல் எண் : 16

காரணன் காமரம் பாடவோர்
காமர்அம் பூடுறத்தன்
தாரணங் காகத் தளர்கின்ற
தையலைத் தாங்குவார்யார்
போரணி வேற்கண் புனற்படம்
போர்த்தன பூஞ்சுணங்கார்
ஏரணி கொங்கையும் பொற்படம்
மூடி இருந்தனவே.

பொழிப்புரை :

எப்பொருட்கும் காரணனாகிய சிவபிரான் (வீணை யேந்தி) இசை பாடிக் கொண்டு வீதியிலே வர, குறும்பு செய்கின்ற ஒருவனாகிய மன்மதனது அம்பு மார்பில் தைத்து ஊடுருவுதலால் போர்க்குக் கொள்ளப்படுகின்ற வேல்போலும் கண்கள் `நீராகிய துணியால் தம்மை மூடிக்கொண்டன.
அழகோடு அணிகளைத் தாங்கி அழகு தேமலையுடைய கொங்கைகள் பொன்னாடையால் தம்மை மூடிக் கொண்டன.
அவனது கொன்றை மாலையை வேட்ட வேட்கையே தனக்குத் துன்பமாக இவ்வாறு சோர்வடைகின்ற இம் மகளைத் தாங்குவார் யார்?

குறிப்புரை :

இது தில்லைப் பெருமானைக் காதலித்து வருந்தும் தலைவியது ஆற்றாமை நோக்கித் தோழி நெஞ்சழிந்து கூறியது.
``காமர்`` என்பது இழித்தற்கண் வந்த பன்மை.
``ஓர்`` என்றதும் இழிவு பற்றி.
தன் - சிவபிரானது.
``தார்`` என்றது அதனை வேட்ட வேட்கையை.
அணங்கு - துன்பம்.
`இத்தையலை` எனச் சுட்டியுரைக்க.
``புனற்படம்,பொற்படம்`` என்பன உருவகங்கள்.
`கண்கள் நிரம்ப நீரைச் சொரிந்தன; கொங்கைகள் பசலை போர்த்தன` என்பது பொருள்.

பண் :

பாடல் எண் : 17

இருந்தனம் எய்தியும் நின்றுந்
திரிந்துங் கிடந்தலைந்தும்
வருந்திய வாழ்க்கை தவிர்த்திடு
போகநெஞ் சேமடவாள்
பொருந்திய பாகத்துப் புண்ணியன்
புண்ணியல் சூலத்தெம்மான்
திருந்திய போதவன் றானே
களையுநம் தீவினையே.

பொழிப்புரை :

நெஞ்சே, நாம் தவறு செய்யாமல் திருந்தும் பொழுது, மாதொரு பாகத்துப் பொருந்தப் பெற்ற புண்ணிய வடிவினனும்,கொடியோரை அழித்தலால் அவர் புண் பொருந்திய சூலத்தை ஏந்தியவனும் ஆகிய எம் சிவபெருமான் நமது தீவினை களை யெல்லாம் அவனே முன் வந்து நீக்கிவிடுவான்.
(ஆகையால் நீ திருந்து.
அஃதாவது,) நின்றும், திரிந்தும், கிடந்து அலைவுற்று மிக்க பொருளை ஈட்டியபோதிலும் வருத்தத்தையே தருகின்ற இவ்வுலக வாழ்க்கையை (நீ விரும்புதலை விடுத்து,) அஃது உன்னை விட்டு நீங்கும்படி நீக்கு.

குறிப்புரை :

``நெஞ்சே`` என்பது முதலாகத் தொடங்கி, `நம் தீவினையைக் களையும்` எனவும் `இருந்தனம் எய்தியும் வருந்திய` எனவும், `போகத் தவிர்த்திடு` எனவும் இயைத்து உரைக்க.
`திருந்தா நிலையாவது இது` என்பதையே வாழ்க்கையின் விளக்கமாக முதலிற் கூறினார்.
``அலைந்தும்`` என்னும் உம்மையைப் பிரித்து, ``கிடந்து`` என்பதனுடன் கூட்டுக.
`இறைவன் நமக்கு அருளாமைக்குக் காரணம் நமது குற்றமேயன்றி, அவனது குற்றம் அன்று` என்பதை விளக்கிய வாறு.
திருந்துதலுக்கு `நாம்` என்பதே தோன்றா எழுவாய் ஆதல் அறிக.
``இருந்தனம் எய்தியும் வருந்திய வாழ்க்கை`` என்றது உலக வாழ்க்கையின் இயல்புணர்த்தியது.

பண் :

பாடல் எண் : 18

தீவினை யேனைநின் றைவர்
இராப்பகல் செத்தித்தின்ன
மேவின வாழ்க்கை வெறுத்தேன்
வெறுத்துவிட் டேன்வினையும்
ஒவின துள்ளந் தெளிந்தது
கள்ளங் கடிந்தடைந்தேன்
பாவின செஞ்சடை முக்கணன்
ஆரணன் பாதங்களே.

பொழிப்புரை :

தீவினையைப் பெரிதும் உடைய என்னை ஐம்புலன் களாகிய வேடர், கருவி கொண்டு சிதைத்துத் தின்னுதல் போன்ற துன்பத்தை உறுவிக்கும்படி இதுகாறும் பொருந்திநின்ற வாழ்க்கையை இதுபொழுது நான் வெறுத்து விட்டேன்.
அதனால் எனது சஞ்சித வினைகளும் என்னை விட்டு ஒழிந்தன.
அதனால் எனது உள்ளம் சிவனை வஞ்சித்து ஒழுகுதலை விலக்கித் தெளிவடைந்தது.
நான் விரிந்த, சிவந்த சடையையும், மூன்று கண்களையும் உடையவனும், வேதப் பொருளாய் உள்ளவனும் ஆகிய அவனது திருவடிகளையே சார்பாகச் சார்ந்தேன்.

குறிப்புரை :

இருவினை ஒப்பு, மல பரிபாகம், சத்தி நிபாதம் இவை வந்தபொழுதே இவையெல்லாம் நிகழ்வன ஆகலின், `இதுபொழுது` என்பது வருவித்துரைக்கப்பட்டது.
உள்ளம் தெளியாமைக்குக் காரணம் சஞ்சித கன்மமேயாதலின் ``ஓவினது`` எனப்பட்ட வினை அதுவேயாயிற்று.
`இவ்வினை சத்தி நிபாதர்க்கு ஞான குருவால் அழிக்கப்படும்` என்பது சைவ சித்தாந்தம்.
ஆயினும், ``சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின்`` (குறள்.
, 359) * என்னும் திருக்குறளின் உரையில் பரிமேலழகர், ``அவ்வழிக் (ஞானத்தைப் பெற்றுவிட்ட பின்பு) கிடந்த துன்பங்கள் எல்லாம் என் செய்யும் - என்னும் கடாவை ஆசங்கித்து, - அவை ஞான யோகங்களின் முதிர்ச்சியுடைய உயிரைச் சாரமாட்டாமையானும், வேறு சார்பின்மையானும் கெட்டுவிடும் - என்பது இதனாற் கூறப்பட்டது``.
என்றார்.
இன்னும் அவர் இதற்குமுன் சஞ்சித கன்மத்தைப் பற்றி, ``சாரக் கடவனவாய் நின்ற துன்பங்களாவன, பிறப்பு அநாதி யாய் வருதலின் உயிரான் அளவின்றி ஈட்டப்பட்ட வினைகளின் பயன்களுள் இறந்த உடம்புகளான் அனுபவித்தனவும், பிறந்த உடம் பான் முகந்து நின்றனவும் ஒழியப் பின்னும் அனுபவிக்கக் கடவன வாய்க் கிடந்தன`` என விளக்கம் தந்தார்.
``ஐவர்`` என்றது தொகைக் குறிப்பு உருவகம்.
செத்தித் தின்னல், வினைநிலை ஒட்டு, ``கான முயல் எய்த அம்பினில் யானை - பிழைத்த வேல் ஏந்தல் இனிது`` 1 என்றது போல், இஃது ``அடையும் பொருளும் அயற்பட மொழிதல்`` 2 என்பதனானே அடை அயற்பட மொழிதலாய் அடங்கும்.
ஆயினும் பரிமேலழகரும் இது பற்றி வாளா போயினார்.

பண் :

பாடல் எண் : 19

பாதம் புவனி சுடர்நய னம்பவ
னமுயிர்ப் போங்
கோதம் உடுக்கை உயர்வான்
முடிவிசும் பேயுடம்பு
வேதம் முகம் திசை தோள் மிகு
பன்மொழி கீதமென்ன
போதம் இவற்கோர் மணிநிறந்
தோற்பது பூங்கொடியே.

பொழிப்புரை :

என் மகளால் காதலிக்கப்பட்ட இவனுக்கோ இவளால் தழுவப்படுவதோர் உடம்பில்லை.
மற்று, இவனுக்கு நிலமே பாதங்கள்; கதிரும் மதியுமே கண்கள்; காற்றே மூச்சு; பெரிய கடலே உடை; உயர்ந்த வான முகடே தலை; எங்கும் பரந்துள்ள வானமே உடல்; வேதங்களே வாய்; திசைகளே தேர்கள்; பல வகையினவாய் வழங்குகின்ற மொழிகளே இவன் பாட்டு.
இங்ஙனமாக, இவன் பொருட்டு இவள் தனது அழகிய நிறம் கெட நின்று வருந்துவது என்ன அறிவுடைமை!

குறிப்புரை :

இது செவிலிதன் இரங்கற் கூற்று.
சிவ பத்தர்களது நிலையைக் கண்டு பிறர் அறியாமையால் இரங்கிக் கூறும் கூற்றாதல் இதன் உள்ளுறைப் பொருள்.
புவனி - புவனம்; நிலம்.
சுடர் - ஞாயிறும், திங்களும், நயனம் - கண்.
பவனம் - காற்று உயிர்ப்பு - மூச்சு, ஓதம் - அலை; அது கடலுக்கு ஆகு பெயர்.
உடுக்கை - உடை.
``வான்`` என்றது அதன் முகட்டினை; அஃது ``உயர்`` என்றதனானும் விளங்கும்.
விசும்பு - வானம்.
உடம்பு - உடல்; கழுத்திற்குக் கீழும், அரைக்கு மேலும் கை, தோள்கள் அல்லாத பகுதி; மார்பும், வயிறும்.
வாயை `முகம்` என்றல் வடமொழி வழக்கு.
கீதம் - இசை; அஃது அதனையுடைய பாட்டைக் குறித்தது.
போதம் - அறிவு.
இகழ்வது போலச் சிவபெருமானது உலக உருவத்தை (விசுவ ரூபத்தை)ப் புகழ்ந்தவாறு.
மாநிலம் சேவடி யாகத், தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை யாக,
விசும்புமெய் யாகத், திசைகை யாகப்
பசுஞ்சுடர் மதியமொடு சுடர்கண் ணாக
இயன்ற வெல்லாம் பயின்றகத் தடக்கிய
வேத முதல்வன் என்ப,
தீதற விளங்கிய திகிரி யோனே.
என்னும் நற்றிணைக் கடவுள் வாழ்த்துச் செய்யுளை இதனுடன் ஒப்பு நோக்குக.
இதனுள் ``திகிரி`` என்பதைப் பொதுப்பட ஆஞ்ஞா சக்கரமாகக் கொள்வுழி இது பரம்பொருளின் தடத்தலக்கணத்தை விளக்கியதாதல் அறிக.
சேவடி முதலியவற்றை வேறு வேறு பொருளாகக் கூறிய வர்க்குச் சக்கரத்தையும் வேறுபொருளாக உடம்பொடு புணர்த்துக் கூறலே கருத்தாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 20

கொடிமேல் இடபமுங் கோவணக்
கீளுமோர் கொக்கிறகும்
அடிமேற் கழலும் அகலத்தின்
நீறும்ஐ வாய்அரவும்
முடிமேல் மதியும் முருகலர்
கொன்றையும் மூவிலைய
வடிவேல் வடிவுமென் கண்ணுள்எப்
போதும் வருகின்றவே.

பொழிப்புரை :

கொடிச் சீலையின்மேல் எழுதப்பட்டுள்ள இடபமும், கோவணத்துடன் கூடிய கீளும், முடியின்மேல் ஒப்பற்ற ஒரு கொக்கின் இறகும், திங்களும், நறுமணத்தோடு மலர்ந்த கொன்றை மலர்மாலையும், மார்பில் பூசப்பட்டுள்ள திருநீறும், அங்குத் தவழ்ந்து சென்று முடிக்கு மேலே விரிக்கின்ற படங்களையுடைய ஐந்தலை நாகமும், திருவடியில் கட்டப்பட்டுள்ள கழல்களும், தோள்மேல் சார்த்தியுள்ள இலைவடிவான, கூரிய முத்தலை வேலும் ஆகிய இவை எப்பொழுதும் என் கண்ணில் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன.

குறிப்புரை :

`இமைப் பொழுதும் நெஞ்சில் நீங்காது நிற்கின்ற சிவனது திருவுருவமும் கண்களிலும் தெரிகின்றன` என்றபடி.
செய்யுளுக்கு ஏற்ப முறை பிறழ வைக்கப்பட்டவை முறையானே வைத்து உரைக்கப்பட்டன.
கொக்குருவில் வந்த `குரண்டன்` என்னும் அசுரன் மிக்க வலியுடையன் என்பதைக் குறிக்க ``ஓர் கொக்கு`` என்றார்.
அவனை அழித்து எடுத்த சிறகை அதன் அடையாளமாகச் சிவபெருமான் தனது முடிமேற் சூடியுள்ளான்.

பண் :

பாடல் எண் : 21

வருகின்ற மூப்பொடு தீப்பிணிக்
கூற்றம்வை கற்குவைகல்
பொருகின்ற போர்க்கொன்றும் ஆற்றகில்
லேன்பொடி பூசிவந்துன்
அருகொன்றி நிற்க அருளுகண்
டாய்அழல் வாய்அரவம்
வெருகொன்ற வெண்மதி செஞ்சடை
மேல்வைத்த வேதியனே.

பொழிப்புரை :

நெருப்புப்போலும் நஞ்சினை வெளிவிடுகின்ற பாம்பைக் கண்டு அஞ்சுதலை ஒழித்து வெள்ளிய திங்களைச் சிவந்த சடை முடியின் மேல் வைத்துள்ள, வேதப் பொருளானவனே, நாளுக்கு நாள் மிகுந்து வருகின்ற மூப்பும் கொடிய நோயும் செய்கின்ற போருக்கு அடியேன் சிறிதும் ஆற்ற மாட்டாதவனாய் உள்ளேன்.
அதனால், திருநீற்றைப் பூசிக் கொண்டு உன் அருகில் வந்து நிற்கும்படி அடியேனுக்கு அருள்புரி.

குறிப்புரை :

கண்டாய், முன்னிலையசை.
கூற்றுவன் வருகைக்கு அறிகுறியானவற்றை, ``கூற்றம்`` என்றே உபசரித்துக் கூறினார்.
`விரைந்து வீடருளுக` என்பது கருத்து.
வைகல் - நாள்.
வெரு - வெருவுதல்; முதனிலைத் தொழிற் பெயர்.
``வெண்மதி செஞ்சடை`` சொல் முரண் தொடை.

பண் :

பாடல் எண் : 22

வேதியன் பாதம் பணிந்தேன்
பணிந்துமெய்ஞ் ஞானமென்னும்
சோதியென் பால்கொள்ள உற்றுநின்
றேற்கின்று தொட்டிதுதான்
நீதியென் றான் செல்வம் ஆவதென்
றேன் மேல் நினைப்பு வண்டேர்
ஒதிநின் போல்வகைத் தேயிரு
பாலும் ஒழித்ததுவே.

பொழிப்புரை :

வேதப் பொருளாகிய சிவபெருமானது பாதங் களை யான் பாவித்தேன்; பணிந்து, `ஞானம்` என்னும் ஒளி என்னிடத்தில் வந்து பொருந்துபடி இசைந்து நின்றேன்.
அங்ஙனம் நின்ற எனக்கு, `இன்று முதல் இந்த முறைமையே முறைமை` என அவன் அருளிச் செய்தான்.
ஆயினும், இதற்கு மேலும் எனக்கு ஒரு கருத்து உளது.
அஃதாவது, `உமையையும் உன்னையும் போன்ற வகையில் இருவராய் நில்லாது ஒருவராதலே பெருஞ் செல்வம் என்பதாம் - என்றேன்.

குறிப்புரை :

`அச்செல்வம் வாய்க்குங்கொல்` என்பது குறிப்பெச்சம்.
``என்றான்`` என்பதன்பின், `மேல் நினைப்பு, வண்டு ஏர் ஓதியையும், நின்னையும்போலும் வகைத்தாய் இருபாலும் ஒழித்த அதுவே செல்வம் ஆவது என்றேன்`` என இயைக்க.
``ஆவது`` என்பது, `ஆவ தாகிய நினைப்பு` என்றபடி.
ஏய்தல் - பொருந்துதல்.
`சிவன் சிவத் தொடு இரண்டறக் கலந்து நிற்பதே ஞானத்தின் பயன்.

பண் :

பாடல் எண் : 23

ஒழித்தேன் பிறவியை ஊர்ந்தேன்
அறுபகை ஒங்கிற்றுள்ளம்
இழித்தேன் உடம்பினை ஏலேன்
பிறரிடை இம்மனையும்
பழித்தேன் பழியே விளைக்கும்பஞ்
சேந்தியக் குஞ்சரமும்
தெழித்தேன் சிவனடி சேர்ந்தேன்
இனிமிகத் தெள்ளியனே.

பொழிப்புரை :

சிவனது திருவடிகளையே பற்றாகச் சேர்ந்தேன்.
அதனால் யான் இனி வரக்கடவதாகிய பிறவி யாதொன்றும் இல்லாமல் ஒழித்துவிட்டேன்.
பிறப்பிற்குக் காரணமாகிய அகப்பகை ஆறினையும் மிதித்து மேல் ஏறினேன்.
எனது உள்ளம் உயர்நிலையை அடைந்தது.
உடம்பின் இழிவை உணராது பற்றியிருந்த நிலையைவிட்டு அதன் இழிவை அறிந்து இனிப் பிறரிடம் சென்று இரத்தலைச் செய்யேன்.
எனக்கு உரியதாக என்றாலும், பிறராலும் மதிக்கப்பட்ட இந்த இல்லத்தையும் இகழ்ந்து நீங்கினேன்.
குற்றங்களையே விளைக்கின்ற பஞ்சேந்திரியங்களாகிய யானைகளை அதட்டி அடக்கினேன்.
ஆகவே, யான் இப்பொழுது மயக்கங்கள் யாவும் நீங்கித் தெளிவடைந்தேனாகியேவிட்டேன்.

குறிப்புரை :

`இல்லம்` என்பது இல்லாளையும் குறிப்பது.
அகப்பகை ஆறு - காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம்.
அடக்குதலாகிய தன் காரியம் தோற்றி நின்றது.
ஏகாரம், தேற்றம்.
சிவனடி சேர்தலின் பயனை உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 24

தெள்ளிய மாந்தரைச் சேர்ந்திலன்
தீங்கவி பாடலுற்றேன்
ஒள்ளிய சொல்லும் பொருளும்
பெறேன்உரைத் தாருரைத்த
கள்ளிய புக்காற் கவிகளொட் டார்
கடல் நஞ்சயின்றாய்
கொள்ளிய வல்லகண் டாய் புன்சொல்
ஆயினுங் கொண்டருளே.

பொழிப்புரை :

சிவபெருமானே, அடியேன் இனிய கவிகளைப் பாடவல்ல தெளிந்த அறிவடையாரை அடுத்ததும், இல்லை.
ஆயினும் ஆசையால் உன்மேல் இனிய கவிகளைப் பாடத் தொடங்கிவிட்டேன்.
அவற்றிற்கு `ஏற்ற விளக்கமான சொற்கள் இவை` என்பதையும் அச்சொற்கள் என்னென்ன பொருள்களைத் தரும் என்பதையும் அறிவினால் பெறப் பெற்றேனில்லை.
பழமையாகப் பாடினவர் களுடைய கவிகளிலிருந்து அவற்றைக் களவு செய்து கொள்ளப் புகுந்தால், அவர்களோ, அல்லது அக்கவிகளைக் கற்று வல்லவர்களோ அதற்கு இடங்கொடுக்க மாட்டார்கள்.
ஆகவே, ஆசையால் வாய்க்கு வந்ததைக் `கவி` என்று சொல்லிப் பாடுகின்ற பாடல்கள் அறிவுடை யோரால் கொள்ளத்தக்கன அல்ல.
அவை மிகப் புல்லிய சொற்களா யினும் ஏற்றருள்; நீ கடலில் தோன்றிய நஞ்சினையும் உண்ட பெருமான் அல்லையோ!

குறிப்புரை :

`அந்நஞ்சினுமா என் கவிகள் கொடியன` என்பது குறிப்பு.
கள்ளிய - களவு செய்ய.
கவிகள் - கவிபாடுவோர்.
கொள்ளிய - கொள்ளப்படுவன.
கண்டாய், முன்னிலையசை.
``நஞ்ச யின்றாய்`` என்பது உடம்பொடு புணர்த்தது ஆகலின், அதனை வேறு வைத்து, இவ்வாறு பொருள் உரைக்கப்பட்டது.
`பாடிப்பரவும் ஆசை யுடையாரை அவர்க்கு அவ்வன்மையின்மை பற்றி இகழாது, அன்பு பற்றி ஏற்றுக் கொள்ளவே செய்வான் என்பதும், `அவன் நஞ்சுண்ட செயல் இதனைக் குறிக்கும் குறிப்பும் ஆகும்` என்பதும் கருத்து.

பண் :

பாடல் எண் : 25

அருளால் வருநஞ்சம் உண்டுநின்
றாயை அமரர்குழாம்
பொருளார் கவிசொல்ல யானும்புன்
சொற்கள் புணர்க்கலுற்றேன்
இருளா சறவெழில் மாமதி
தோன்றவும் ஏன்றதென்ன
வெருளா தெதிர்சென்று மின்மினி
தானும் விரிகின்றதே.

பொழிப்புரை :

(பெருமானே) இருளாகிய குற்றம் நீங்கும்படி இரவில் அழகு பொருந்தி நிறை நிலாத் தோன்றி விளங்கினாலும், சிறிய மின்மினிப் பூச்சியும் அஞ்சாது அதன் எதிரே சென்று, `எனது ஒளியும் இருளை விழுங்கும்` எனக் கருதித் தனது ஒளியால் சிறிது விளங்கிநிற்கின்றது.
அதுபோல, பாற்கடலினின்றும் தோன்றித் தேவரைத் துரத்தி வந்த நஞ்சினை அவர்கள் மேல் வைத்த கருணை யால் உண்டும் இறவாதிருக்கின்ற உனது கருணை மிகுதியைப் பொரு ளாக நிரப்பி அத்தேவர் கூட்டம் உயர்ந்த கவிகளைப் பாட, நானும் `கவிகள்` என்ற பெயரில் சில சிறுசொற்களைக் கோக்கின்றேன்.

குறிப்புரை :

`உலகர் மின்மினியை வெறாது நகைத்து ஏற்றல்போல, நீயும் எனது கவிகளை வெறாது நகைத்து ஏற்றருள்வாய்` என்பது கருத்து.
மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க.
``பொருள்ஆர்`` என்பதற்குக் கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது.
`இறைவன் தனக்கு அர்ப்பணிக்கப்படும் பொருள்களின் தன்மையை நோக்காது, அர்ப்பணிப்பவர்களது உள்ளத்தில் நிற்கும் அன்பையே நோக்குவான்` என்பதும் இதனால் உணர்த்தப்பட்டது.
இச்செய்யுள் எடுத்துக்காட்டு உவமையணி பெற்றது.

பண் :

பாடல் எண் : 26

விரிகின்ற ஞாயிறு போன்ற
மேனியஞ் ஞாயிறுசூழ்ந்
தெரிகின்ற வெங்கதிர் ஒத்தது
செஞ்சடை அச்சடைக்கீழ்ச்
சரிகின்ற காரிருள் போன்றது
கண்டம் காரிருட்கீழ்ப்
புரிகின்ற வெண்முகில் போன்றுள
தாலெந்தை ஒண்பொடியே.

பொழிப்புரை :

என் தந்தையாகிய சிவபெருமானுடைய திரு மேனி விரிந்து விளங்குகின்ற ஞாயிற்று வட்டம் போன்றுள்ளது.
எங்கும் வீழ்ந்து சுழல்கின்ற சிவந்த சடைகள் அந்த ஞாயிற்றைச் சூழ்ந்து சுடர்விடுகின்ற வெவ்விய கதிர்களைப் போன்றுள்ளன.
அச்சடைக்குக் கீழ் உள்ள கண்டம், அந்த ஞாயிற்றின் கதிர்கட்கு அஞ்சி ஓடி ஒளிந்த கரிய இருள்போன்றுள்ளது.
கண்டத்தின் கீழ் மார்பில் பூசப்பட்டுள்ள திருநீறு, அந்த இருட்குக் கீழாய்த் தோன்றிப்படரும் வெள்ளிய முகில் கள் போன்றுள்ளது.

குறிப்புரை :

சரிதல் - தோற்று நீங்குதல்.
சடை, சாதியொருமை.
`அச் சடைக்கீழ்க் கண்டம் இருள்போன்றது` என இயைக்க.
வெண்முகில் சூல் கொள்ளாத மேகம்.
பெருமானது திருவுருவத்தை வகுத்துப் புகழ்ந்தபடி.
இது மாலை யுவமையணி.

பண் :

பாடல் எண் : 27

பொடிக்கின் றிலமுலை போந்தில
பல்சொற் பொருள்தெரியா
முடிக்கின் றிலகுழல் ஆயினும்
கேண்மின்கள் மூரிவெள்ளம்
குடிக்கொண்ட செஞ்சடைக் கொண்டலங்
கண்டன்மெய்க் கொண்டணிந்த
கடிக்கொன்றை நாறுகின் றாள்அறி
யேன்பிறர் கட்டுரையே.

பொழிப்புரை :

(என் மகளுக்கு) இன்னும் கொங்கைகள் முகிழ்ப் படையவில்லை.
பல் விழுந்து முளைக்கவில்லை.
அவளது சொற்கள் பொருள் விளங்கும் அளவிற்குத் திருந்தவில்லை.
கூந்தல் கூட்டி முடிக்க வரவில்லை.
(`பேதைப் பருவத்தினள்` என்றபடி) ஆயினும் இவள் நிலைமையைக் கேளுங்கள்; பெரிய வெள்ளநீர் எப்பொழுதும் இருக்கும் சிவந்த சடைமுடியையும், மேகம் போன்ற கண்டத்தையும் உடைய சிவபெருமான் தன்மேனியில் அணிந்துள்ள நறுமணம் உள்ள கொன்றைத் தாரின் மணம் கமழ்கின்ற உடம்புடையளாயினாள்.
`இதையறிந்தால் அயலார் சொல்லும் சொற்கள் எவையாய் இருக்கும்` என்பதையான் அறிகின்றிலேன்.

குறிப்புரை :

`பேதைப் பருவத்தே இவள் புத்தியறிந்து சிவனைத் தழுவிவிட்டாள்; இனி, இவள் பிறன் ஒருவனுக்கு உரியளல்லள்` எனப் பலரும் கூறுவார்கள் என்பதாம்.
இது கருவிலே திருவுடையராய்ச் சாமுசித்தராய்ப் பிறந்து, குழவிப் பருவத்தே சிவனையடைந்த ஞானசம்பந்தர் போன்றாரது பெருமையைக் குறிப்பால் உணர்த்தியது.
முதுக்குறைந் தனளே! முதுக்குறைந் தனளே
மலையன் ஒள்வேற் கண்ணி;
முலையும் வாரா; முதுக்குறைந் தனளே!
என்னும் பழம்பாடல் ஒன்றை இதனுடன் ஒப்பு நோக்குக.
`பிறர்க்கு உரியளல்லள்` என்பது, `கைச்சிறு மறியவன் கழல் அலாற் பேணாக் கருத்து` 1 உடையர் ஆதலையும், `அயலார்` என்பது பௌத்தர்களையும் உள்ளுறையாகக் குறிக்கும்.
``முடிக்கின்றில`` என்பது முடிக்கப் படு கின்றில` என்றபடி.
நீங்காதிருத்தலை, `குடிகொண்டிருத்தல்` என்றல் வழக்கு, ``குடிக் கொண்ட`` என்பதில் ககர ஒற்று விரித்தல்.
போக மாலையாவது மார்பிற் புரளும் தார் ஆகலானும் ``கண்ணிகார் நறுங் கொன்றை, காமர் - வண்ண மார்பில் தாரும் கொன்றை`` 2 என்ப ஆகலானும், ``மெய்க்கொண்ட கொன்றை` என்றது, கொன்றைத் தார் ஆயிற்று.
அது மும்மடி ஆகு பெயராய், அத்தாரின் மணத்தைக் குறித்தது.
நாறுதல் - கமழ்தல்.
ஒற்றுமையால் உடம்பும், உயிரும் சினையும், முதலும்போல நிற்றலால், ``நாறுகின்றாள்`` என்றது, சினைவினை முதல்மேல் நின்றதாம்.
இப்பாட்டுச் சிவபெருமானோடு களவிற் கலந்த பேதைப் பெண் ஒருத்திக்குச் செவிலியாயினாள் கூற்றாக அருளிச் செய்யப்பட்டது.
ஞானிகளது செயலை உலகர் அறியார் ஆதலின், அது களவோடு ஒப்பதாயிற்று.

பண் :

பாடல் எண் : 28

உரைவளர் நான்மறை ஓதி
உலகம் எலாந் திரியும்
விரைவளர் கொன்றை மருவிய
மார்பன் விரிசடைமேல்
திரைவளர் கங்கை நுரைவளர்
தீர்த்தம் செறியச்செய்த
கரைவளர் வொத்துள தால்சிர
மாலையெம் கண்டனுக்கே.

பொழிப்புரை :

எம் தலைவனாகிய சொற்கள் வளர்ந்து வாரா நின்ற நான்கு வேதங்களையும் பாடிக்கொண்டு உலகம் எங்கும் பிச்சைக்குத் திரிகின்ற, சிவபெருமானுக்கு அவனது சடை முடியில் அலையை அடக்கிக் கொண்டுள்ள கங்கை நீர் தீர்த்தமாய் இருக்க, அதைச் சுற்றியுள்ள தலைமாலை, அந்தத் தீர்த்தத்திற்கு உயர்த்துக் கட்டிய கரை போன்று அமைந்து பெருமையைத் தருகின்றன.

குறிப்புரை :

கண்டன் - தலைவன்.
`எம் கண்டனாகிய மார்பனுக்கு அவன் விரிசடைமேல்` எனக் கூட்டியுரைக்க.
சொற்கள்.
வளர்த லாவது, வழிவழியாக ஓதப்பட்டு வருதல்.
வினா - வாசனை.
முன் இரண்டடிகள் சிவனைச் சிறப்பித் துணர்த்த வந்தன.
``திரை வளர்`` என்றதில் வளர்தல், உள்ளே பொங்குதல்.
தீர்த்தம் - புண்ணியப் பொய்கை.
வளர்வு - வளர்ச்சி உயர்தல்.
சிவபெருமானது தலையலங் காரத்தையும் புகழ்ந்துரைத்தவாறு.

பண் :

பாடல் எண் : 29

கண்டங் கரியன் கரிஈர்
உரியன் விரிதருசீர்
அண்டங் கடந்த பெருமான்
சிறுமான் தரித்தபிரான்
பண்டன் பரம சிவனோர்
பிரமன் சிரமரிந்த
புண்தங் கயிலன் பயிலார
மார்பனெம் புண்ணியனே.

பொழிப்புரை :

எமது புண்ணியத்தின் பயனாய் விளங்கும் சிவ பெருமான் கண்டம் கரிய நிறமானவன்; யானையை உரித்த தோலைப் போர்வையாக உடையாக உடையவன்; சிறிய மானைக் கையில் ஏந்திய தலைவன்; பிரமனது தலைகளில் ஒன்றைச் சேதித்த குருதி பொருந்திய கூரிய படைக்கலத்தை உடையவன்.
ஆயினும் அவன் தனது இயற்கையில் அனைத்துலகங்களையும் கடந்த பெரியோன்; அநாதியன்; அதனால, `பரம சிவன்` என்று குறிக்கப்படுபவன்.

குறிப்புரை :

`சிவன் தனது இயற்கை நிலையில் அனைத்திற்கும் அப்பாற்பட்டு, அருவத்தையும் கடந்து, கால இட எல்லைகளில் எதுவும் இன்றியிருப்பவனாயினும் உயிர்களின் மேல் வைத்த கருணையால் பலவேறு திருமேனிகளையும், அவற்றிற்கு ஏற்ற பெயர்களையும், செயல்களையும் உடையவன் ஆகின்றான்` என்றபடி.
பரம சிவன் - சுத்த சிவன்.
அல்லது சொரூப சிவன்.
சிவன் தடத்த சிவன்.
`பிரமன் தலையைக் கை உகிரால் கிள்ளினான்` என்பதே வரலாறு.
ஆதலின் அதனை இங்கு, `படைக்கலம்` எனக் கூறினார் என்க.
`பிரமன் ஓர் சிரம் அரிந்த` எனக் கூட்டுக.
`பண்டு` என்பது ஐகாரம் பெற்று, `பண்டை` என வருவது இங்கு ஐகாரம் பெறாது வந்தது.
`ஆரம், எலும்புமாலை` என்பது ஏற்புழிக் கோடல்.

பண் :

பாடல் எண் : 30

புண்ணியன் புண்ணியல் வேலையன்
வேலைய நஞ்சனங்கக்
கண்ணியன் கண்ணியல் நெற்றியன்
காரணன் காரியங்கும்
விண்ணியன் விண்ணியல் பாணியன்
பாணி கொளவுமையாள்
பண்ணியன் பண்ணியல் பாடல
நாடற் பசுபதியே.

பொழிப்புரை :

பசுக்களாகிய உயிர்கட்கெல்லாம் பதியாகிய சிவன் நல்லோருடைய புண்ணியங்களின் பயனாய் உள்ளவன்; கொடி யோருடைய குருதி ஒழுகும் முத்தலை வேலை ஏந்திய தலைவன்; கடலில் தோன்றிய நஞ்சைக் கண்டத்திலே உடையவன்.
எலும்பு மாலையன்; கண் பொருந்திய நெற்றியை உடையவன்; ஆகாய கங்கையைத் தரித்தவன்; உமையவள் தாளம் இட ஆடுபவன்; பண் பொருந்திய பாடலைப் பாடுபவன்.
அவனையே, நெஞ்சே, நாடுக.

குறிப்புரை :

`பசுபதி` என்பதை முதலிற் கொள்க.
வேல், முத்தலை வேல், வேலை - கடல்.
அங்கம் - எலும்பு.
கண்ணி - மாலை.
`விண்ணன்` என்பது இடையே இகரம் விரித்தல் பெற்று வந்தது.
அடியார்கட்கு வெளிப்படுங்கால் விண்ணில் நின்று காட்சி வழங்குதல் பற்றி இறைவனை, `விண்ணன்` என்றார்.
``பாணி`` இரண்டில் முன்னது நீர்; பின்னது தாளம்.
`உமையாற் பாணி கொளப் பண்ணியன்` என்க.
பண்ணியன் - கூத்தாடுபவன்.
`கோயில் திருப்பண்ணியர் விருத்தம்` என்றது காண்க.
நாடல் - நாடுக.
`அல்` ஈற்று வியங்கோள்.
இதற்கு.
`அவனையே` என்னும் செயப்படுபொருள் வருவிக்கப் பட்டது.
`ஆடல்` எனப் பிரித்து, `பல்வேறான அருள் நாடகங்களை உடைய பசுபதி` என்று எடுத்துக் கொண்டு உரைப்பினும் ஆம்.
இப் பொருட்குப் பாடம், `ஆடற் பசுபதி` என்பதாகும்.

பண் :

பாடல் எண் : 31

பதியார் பலிக்கென்று வந்தார்
ஒருவர்க்குப் பாவைநல்லீர்
கதியார் விடைஉண்டு கண்மூன்
றுளகறைக் கண்டமுண்டு
கொதியார் மழுவுண்டு கொக்கரை
உண் டிறை கூத்துமுண்டு
மதியார் சடையுள மாலுள
தீவது மங்கையர்க்கே.

பொழிப்புரை :

பாவைபோலும் அழகை உடையவர்களே, நம் தில்லைப் பதியில் இருப்பவராய், பிச்சை ஏற்பதற்கென்று வந்த ஒருவருக்கு வேகமாகக் செல்லும் காலை ஊர்தி ஒன்று உண்டு; கண்கள் மூன்று உள்ளன; கறை பொருந்திய கண்டம் உண்டு; வெப்பம் மிகுந்த மழு உண்டு; `கொக்கரை` என்கின்ற வாச்சியம் உண்டு; தலைமை வாய்ந்த நடனம் உண்டு; பிறையைக் கண்ணியாகச் சூடிய முடிச் சடைகள் உள; இவையேயல்லாமல்; தம்மைக் காண்கின்ற மங்கையர்கட்குத் தருவதாக ஒரு மையலும் அவரிடம் உண்டு.

குறிப்புரை :

`அவர் யாவர் என நீவிர் அறிவீரோ? அறிவீராயின், எனக்காக அவர் பாற் சென்று, எனது மையல் நோயை உரைப்பீராக` என்பது குறிப்பெச்சம்.
இது தலைவன்பால் பாங்கியைத் தூதுவிடக் கருதியாள் கூற்று.
எனினும் உயிர்ப் பாங்கியை நோக்கிக் கூறாது, இறைவனைப் பிரிந்து ஆற்றகில்லாத அதிதீவிர பக்குவரது நிலை இதன் உள்ளுறை.
இறை - இறைமை; தலைமை.
மால் மயக்கம்.

பண் :

பாடல் எண் : 32

மங்கைகொங் கைத்தடத் திங்குமக்
குங்குமப் பங்கநுங்கி
அங்கமெங் குந்நெகச் சங்கமங்
கைத்தலத் துங்கவர்வான்
கங்கைநங் கைத்திரைப் பொங்குசெங்
கண்ணர வங்கள்பொங்கிப்
பங்கிதங் கும்மலர்த் திங்கள்தங்
கும்முடிப் பண்டங்கனே.

பொழிப்புரை :

பெண்மைத்தன்மைத்தாகிய கங்கை நதியின் அலையிடையே, சீற்றம் மிக்க சிவந்த கண்களையுடைய பாம்புகள் மிகுதியாய்ச் சடைகளின் இடையே தங்குவதும், கொன்றை முதலிய மலர்களுக்கிடையே பிறை தங்குவதும் ஆகிய முடியினையுடைய, பாண்டரங்கக் கூத்தனாகிய சிவபெருமான் இம்மங்கையின் கொங்கைச் சரிவிற்கு இடையே இங்கும் அழகிய குங்குமச் சேறு உடல் வெப்பதால் நீராகி உடம்பெங்கும் ஓட, இவள் கையில் உள்ள சங்க வளையல்களையும் கவர்ந்து அங்கே (அயலிடத்தே) செல்பவனாகின்றான்.

குறிப்புரை :

`இனிச் செய்வதென்` என்பது குறிப்பெச்சம்.
இது, நற்றாய்க்கு அறத்தொடு நிற்கக் கருதும் செவிலியது கூற்று.
இப்பாட்டு மெல்லிசை வண்ணக் கலித்துறையாய் நின்றது.
மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க.
`பாண்டரங்கன்` என்பது `பண்டங்கன்` என மருவிற்று, பாண்டரங்கம், ஒருவகைக் கூத்து.
பங்கம் - சேறு.
நுங்குதல் - முழுதும் வீழ்ந்து மறைத்தல்.
பங்கி - தலைமயிர்.
அஃது இங்குச் சடையைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 33

பண்டங்கன் வந்து பலிதாவென்
றான்பக லோற்கிடென்றேன்
அண்டங் கடந்தவன் அன்னமென்
றான்அயன் ஊர்தியென்றேன்
கொண்டிங் குன்னையம்பெய் என்றான்
கொடித்தேர் அனங்கனென்றேன்
உண்டிற் கமைந்ததென் றாற்கது
சொல்ல உணர்வுற்றதே.

பொழிப்புரை :

`பாண்டரங்கம்` என்னும் கூத்தினைச் செய்வோ னாகிய சிவபெருமான் பிச்சாடனனாய் எங்கள் கடைத்தலையில் வந்து நின்று, இருபொருள் பட `பலிதா` எனக் கூறினான்`, அவன் குறும்பாக பல்லை உடையவளே, அவற்றை எனக்குத் தா (முத்தம் கொடு) என உள்ளுறையாக வேறொரு பொருளைத் தருதலை யான் உணர்ந்து கொண்டு, அந்த வார்த்தையை நீவிர் சூரியனிடம் சொல்லுக` என்றேன்.
பின்பு அவர் `அன்னம்` என்றார்.
அது வெளிக்கு, `சோறு (தா - எனப்பொருள் தருமாயினும், உள்ளுறையாக, `நீ ஓர் அன்னப் பறவை போல நடக்கின்றாய்` எனப் பொருள் தருதலை யான் உணர்ந்து கொண்டு, `ஆம்! நீர் சொல்வது பிரமதேவனுடைய ஊர்தி` என்றேன்.
பின்பு அவர், நீ விரைவில் கொண்டு உனது ஐயம்பெய் என்றார்.
அது வெளிக்கு, `பிச்சையிடு` எனப் பொருள் தருமாயினும், உள்ளுறையாக `உன்னிடத்து உள்ள ஐந்து அம்புகளை கொண்டு வந்து எய்` எனவும் பொருள் தருதலை யான் உணர்ந்துகொண்டு, ஆம்! அதற்கு உரியவன் மன்மதன்` என்றேன்.
அவரும் `உண்மை; நீ சொல்லியன எல்லாம் பொருத்தமானவைகளே` (என்று சொல்லிவிட்டு வாயடங்கிப் போனார்).
அவரது சொல்வன்மைக்குத் தக மறுமொழி சொல்ல எனக்கும் உணர்வு உண்டானது வியப்பு.

குறிப்புரை :

வருவித் துரைத்தன இசையெச்சங்கள்.
`பாண்டரங்கன்` என வந்தது பண்டங்கன் செய்யுள் முடிபு, `பலி` என்பது உள்ளுறைப் பொருளில் `பல்லி` என்பதன் இடைக்குறை.
பல்லி - பல்லை உடைய வள்.
`ஐயம்பெய்` என்பதை, `ஐயம் பெய்` எனவும் `ஐ அம்பு எய்` எனவும் பிரித்துக் கொள்க.
அனங்கன் - மன்மதன்.
இது முன்பே தனது உள்ளம் சிவன் வயப்பட்டு அதனை மறைத்து ஒழுகும் தலைவியது நிலையை.
அவள் தன்னிடம் மறையாது வெளிப்படுத்தற் பொருட்டுத் தோழி தானும் அந் நிலை அடைந்தது போலவும், அடையாதது போலவும் இரு பொருள் பயப்பக் கூறியது.
இது, ``மெய்யினும், பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர் பொருள் நாட்டம்`` ``கயமலர் உண் கண்ணாய்`` என்னும் கலித்தொகைப் பாட்டுப்போல (கலித். - குறிஞ்.37).

பண் :

பாடல் எண் : 34

உற்றடி யாருல காளவோர்
ஊணும் உறக்குமின்றிப்
பெற்றம தாவதென் றேறும் பிரான்
பெரு வேல்நெடுங்கண்
சிற்றடி யாய்வெண்பற் செவ்வாய்
இவள்சிர மாலைக்கென்றும்
இற்றிடை யாம்படி யாகவென்
னுக்கு மெலிக்கின்றதே.

பொழிப்புரை :

தன்னைப் புகலிடமாக அடைந்த அடியார்களை (யானைமேல் உலாவந்து) உலகாள வைத்துத்தான் எருதின் மேல் ஏறிச் செல்கின்ற, அத்தகைய கருணையாளனாகிய சிவபிரான், பெரிய வேல் போன்ற, நீண்ட கண்களையும், சிறிய பாதங்களையும், வெண்மையான பற்களையும், சிவந்த வாயினையும் உடைய, என் தாயாகிய இவள் அவன் அணிந்துள்ள தலை மாலையை விரும்ப, அதனைத் தாராமல், அதன் பொருட்டு நாளும் உண்ணும், உறக்கமும் இல்லாமல், தன் இடை இயல்பிலே துவளுவது போல மேனி முழுதும் மெலிந்து போம்படி இவளை மெலியப் பண்ணவது ஏனோ!

குறிப்புரை :

`உற்ற` என்னும் பெயரெச்சத்து ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
`உறக்கம்` என்பது ஈற்று அம்முக்கெட்டு, `உறக்கு` என நின்றது.
பெற்றம் - எருது.
ஆவது - விருப்பமாவது.
தாய் மகளை, `யாய்` என்றது, காதல் பற்றி வந்த மரபு வழுவமைதி.
இது தலைவியது ஆற்றாமை கண்டு, சிவபெருமானாகிய தலைவனைச் செவிலி இயற் பழித்துக் கூறியது.
இதன் கொண்டு கூட்டினை அறிந்து கொள்க.
``இற்று இடை ஆம்படியாக`` என்பதை, `இடையாய் இற்றிடும் படியாக` என மாற்றிவைத்து உரைக்க.

பண் :

பாடல் எண் : 35

மெலிக்கின்ற வெந்தீ வெயில்வாய்
இழுதழல் வாய்மெழுகு
தலிக்கின்ற காமங் கரதலம்
மெல்லி துறக்கம்வெங்கூற்
றொலிக்கின்ற நீருறு தீயொளி
யார்முக்கண் அத்தர்மிக்க
பலிக்கென்று வந்தார் கடிக்கொன்றை
சூடிய பல்லுயிரே.

பொழிப்புரை :

நீரின்கண் விரவிய தீ வெளித்தோன்றாது நிற்றல்போல எப்பொருளினுள்ளும் நிறைந்திருப்பவரும், ஒளி பொருந்திய மேனியை உடையவரும், மூன்று கண்களையுடைய முதல்வரும் ஆகிய சிவபெருமானாகப் பிச்சை ஏற்பவராக வேடம் பூண்டு, `பிச்சை` என்று கேட்டு வீதியிலே வந்தார்.
அவர் வரவைக் கண்டதும் பல உயிர்கள் அவரது வாசனை பொருந்திய கொன்றை மாலையைப் பெற்றுத் தாம் சூடிக்கொள்ள விரும்பி, எம்பொருளையும் அழிக்கின்ற, கொடிய தீயினிடத்து வெண்ணெயும், வெயிலிடத்து மெழுகும் போல ஆகிவிட்டன.
(ஆயினும் பயன் என்ன?) தாங்கிக் கொள்கின்ற காமம் கைப்பொருளானதும், உறக்கம் அருகிப் போனதுந்தாம் கண்டது.
கால தூதுவர் வந்து தம்முள்முணு முணுக்கின்ற ஓசைகள் அவற்றின் காதுகளில் ஒலிக்கின்றன.

குறிப்புரை :

`இனி அவைகட்கு நிகழ இருப்பது இறந்து பாடே என்ப தாம்.
மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க.
சூடிய - சூடுதற்கு, `செய்யிய` என்னும் வினையெச்சம்.
பெண்டிரைப் பயனின்றி மெலிதல் நோக்கி, ``உயிர்`` என்றார்.
``வாய்`` என்னும் ஏழன் உருபை தீக்கும் கூட்டுக.
இழுது - வெண்ணெய்.
மெழுகு - அரக்கு.
இவற்றின் பின், `ஆயின` என்பது எஞ்சி நின்றது.
`தரிக்கின்ற` என்பது எதுகை நோக்கித் திரிந்து நின்றதும் கரதலப் பொருளைக் ``கரதலம்`` என்றது ஆகுபெயர்.
கரதலப்பொருளவாது, கிடைத்த பொருள்.
மெல்லிது, இங்கு மிகக் குறைந்ததைக் குறித்தது.
``கூற்றம்`` என்றது, கூற்றனின் தூதுவரை.
அஃது ஆகுபெயராய் அவர்தம் வாயொலியைக் குறித்தது.
ஒலிக்கின்ற - ஒலிக்கின்றன.
இது பெருமானது பிச்சைக் கோலத்து அழகினைப் புகழ்ந்தவாறு.
`சென்றார்` என்னாது, ``வந்தார்`` என்றது இடவழுவமைதி.
``வருவிருந்து வைகலும் ஓம்புவான்`` * என்பதிற் போல.
``நீருறு தீயே`` என்னும் திருவாசகத்தைக் காண்க.

பண் :

பாடல் எண் : 36

பல்லுயிர் பாகம் உடல் தலை
தோல்பக லோன்மறல்பெண்
வில்லியோர் வேதியன் வேழம்
நிரையே பறித்துதைத்துப்
புல்லியுஞ் சுட்டும் அறுத்தும்
உரித்துங்கொண் டான்புகழே
சொல்லியும் பாடியும் ஏத்தக்
கெடும்நங்கள் சூழ்துயரே.

பொழிப்புரை :

பகலோனது (சூரியனது) பல்லைப் பறித்தும், மறலி (யமனது) உயிரை உதைத்துப் போக்கியும், பெண் (உமா தேவியது) ஒரு பாதியினைத் தான் பொருந்தியும், வில்லி (மன் மதனது) உடலைச் சுட்டும், ஓர் வேதியனது (பிரமனது) தலையை அறுத்தும், யானையை உரித்தும் புகழைப் பெற்ற சிவபெருமானது புகழை உரையாற் சொல்லியும், பாட்டால் பாடியும் துதித்தால் நம்மைச் சூழ்ந்துள்ள துன்பங்கள் அழிந்துபோம்.

குறிப்புரை :

`இது நிரல் நிறைப் பொருள்கோள்` என்பதை ஆசிரியரே, ``நிரையே`` என்பதனாற் குறித்தார்.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
(குறள்.
, 5) என அருளிச் செய்த வழி நிற்றற்கு இறைவனது பொருள்சேர் புகழ் களைக் கிளந்தெடுத்துக் கூறியவாறு.
``துயர்`` என்றது பிறவித் துயரை யும் உள்ளடக்கியேயாம்.
`மறலி` என்பதைத் தொழிலாகு பெயராக, ``மறல்`` என்றார்.
இது முதல்நிலைத் தொழிற் பெயர்.

பண் :

பாடல் எண் : 37

துயருந் தொழுமழும் சோரும்
துகிலுங் கலையுஞ்செல்லப்
பெயரும் பிதற்றும் நகும்வெய்
துயிர்க்கும் பெரும்பணிகூர்ந்
தயரும் அமர்விக்கும் மூரி
நிமிர்க்குமந்தோ இங்ஙனே
மயரும் மறைக்காட் டிறையினுக்
காட்பட்ட வாணுதலே.

பொழிப்புரை :

(மறைக் காட்டு இறைக்கு ஆட்பட்ட வாள் நுதல்) திருமறைக்காட்டுப் பெருமானுக்கே தான் உரியளாகத் தன்னைத் தகுதிபடுத்திக் கொண்ட என் மகள், (அவன் வந்து தன்னை ஏற்றுக் கொள்ளாமையால்) துன்புறுவாள்.
தொழுவாள்.
அழுவாள்; நெகிழ்கின்ற உடையும் மேகலையும் தன்னைவிட்டு நீங்கத் தான் அலைவாள்; வாயில் வந்தவற்றைப் பிதற்றுவாள், சிலபொழுது சிரிப்பாள், பெருமூச்செறிவாள், தணிக்கலாகா நோய் மிகுந்தவளாய்ச் சோர்வாள்; போராட்டமாக விக்குள் எழ விக்குவாள்; உடல் திமிர் ஏறியது போல முரித்துக்கொள்வாள்.
அந்தோ! அவ்வா றெல்லாம் மையல் மிகுகின்றாளே; (யான் என் செய்வேன்.)

குறிப்புரை :

``துயரும், மயரும்`` என்பனவும் ஏனைய போலச் `செய்யும்` என்னும் முற்றுக்களே.
இப் பொதுவினை இங்குப் பெண் பாலில் வந்தது.
இது தலைவியது ஆற்றாமை கண்டு செவிலி கவன் றுரைத்தது.
அதிதீவிர பக்குவிகளது நிலைமை கண்டு உறவினர் கவறுதல் இதன் உள்ளுறைப் பொருள்.

பண் :

பாடல் எண் : 38

வாணுதற் கெண்ணம்நன் றன்று
வளர்சடை எந்தைவந்தால்
நாணுதற் கெண்ணாள் பலிகொடு
சென்று நகும்நயந்து
பேணுதற் கெண்ணும் பிரமன்
திருமால் அவர்க்கரிய
தாணுவுக் கென்னோ இராப்பகல்
நைந்திவள் தாழ்கின்றதே.

பொழிப்புரை :

வளர்ந்த சடைகளையுடைய, அடியார்கள் `எந்தை` என்று ஏத்தும் சிவபெருமான் பிச்சை ஏற்க வந்தால், என் மகள் `நாண வேண்டுமே` என்று எண்ணாமல், விரைவில் பிச்சையை எடுத்துக்கொண்டு சென்று, அவன் எதிரிலே சிரிக்கின்றாள்.
அவன் மேல் விருப்பங் கொண்டு அவனுடன் நட்புக் கொள்ள நினைக் கின்றாள், அந்தப் பிரம விட்டுணுக்களாலே அடைதற்கரிய தலை வனைத் தான் அடைய விரும்பி இவள் இராப்பகலாக வருந்தி நகுதற் குரியளாதல் என்ன அறிவுடைமை? இவளுக்குப் புத்தி நல்லதாய் இல்லை.

குறிப்புரை :

நல்லது, இங்குப் பயன்படுவதை விரும்புவது.
இது, தலைவியது பேதைமை பற்றிச் செவிலி இரங்கிக் கூறியது.
இறைவன் அன்பர்க்கு எளியன் ஆதலையறியாத உலகர் அல்லாதார்க்கு அவன் அரியன் ஆகின்ற அஃது ஒன்றே பற்றி அன்பு செய்வார்மேல் இரக்கங் கொள்ளுதல் இதன் உள்ளுறை.
``எந்தை`` என்பதை ஒரு சிலர் கூற்றாக்காவிடின் முறை கெடும்.

பண் :

பாடல் எண் : 39

தாழுஞ் சடைசடை மேலது
கங்கைஅக் கங்கைநங்கை
வாழுஞ் சடைசடை மேலது
திங்களத் திங்கட்பிள்ளை
போழுஞ் சடை சடை மேலது
பொங்கர வவ்வரவம்
வாழுஞ் சடைசடை மேலது
கொன்றையெம் மாமுனிக்கே.

பொழிப்புரை :

எங்கள் பெருமுனிவனாகிய சிவபெருமானுக்கு உள்ளவை நீண்டு தொங்கும் சடை.
அச்சடையின்மேல் உள்ளது கங்கை நதியாதலின் அது கங்கையாகிய நங்கை வாழும் சடையாகின்றது.
அந்தச் சடை மேல் மற்றும் உள்ளது பிள்ளைத் திங்கள் (பிறை) ஆதலின் அந்தச் சடை பிள்ளைத் திங்களால் (பிறையால்) போழப் படும் (நுழைந்து செல்லப்படும்) சடையாகின்றது.
அந்தச் சடைமேல் உள்ளது சீற்றம் மிக்க பாம்பு ஆதலின் அந்தச் சடை பாம்பு வசிக்கின்ற சடையாகின்றது.
அந்தச் சடைமேல் உள்ளது கொன்றை மாலை (ஆதலின் அதுவே அவனுக்கு அடையாள மாலையாய் உள்ளது)

குறிப்புரை :

ஈற்றில் வருவித்துரைத்தது இசையெச்சம்.
``மேலது`` என்பவற்றை அடுத்து வந்தன பலவற்றின் பின்னும் `ஆதலால்` என்பது சொல்லெச்சமாய் எஞ்சிநின்றது.
இரண்டாம் முறையாக வந்த ``சடை`` என்பவற்றிற்குச் சுட்டு வருவிக்க.
`பிள்ளை` என்பதை முன்னும் கூட்டி, `பிள்ளைத் திங்கள்` என மாற்றியுரைக்க.
புகழை மிகுத் துரைக்கின்றார் ஆதலின், சொற் பொருட் பின்வரு நிலையணி தோன்றப் பல தொடராற் கூறினார்.
எனினும், அடையாள மாலை யாகிய கொன்றையைச் சிறப்பித்தலே இப்பாட்டிற்குக் கருத்தென்க.
`சிவபிரான் பெரு முனிவன்` என்பதை விசுவாதிகோ, ருத்ரோ, மஹருஷி`` 1 என்னும் உபநிடதத் தாலும் அறியலாம்.
`பற்றற்றவன், தவக்கோலம் உடையவன்` என்பது இதற்குக் கருத்து.
``முன்னியாய் நின்ற முதல்வா போற்றி`` 2 என அப்பரும் அருளிச் செய்தார்.
இதன் பின்னும் `உள்ளது` என்னும் எழுவாய் எஞ்சி நின்றது.

பண் :

பாடல் எண் : 40

முனியே முருகலர் கொன்றையி
னாயென்னை மூப்பொழித்த
கனியே கழலடி அல்லாற்
களைகண்மற் றொன்றுமிலேன்
இனியேல் இருந்தவஞ் செய்யேன்
திருந்தவஞ் சேநினைந்து
தனியேன் படுகின்ற சங்கடம்
ஆர்க்கினிச் சாற்றுவனே.

பொழிப்புரை :

முனிவனே, நறுமணம் கமழ மலர்கின்ற கொன்றை மாலையை அணிந்தவனே, எனக்குச் சாதலைத் தவிர்த்த கனியாய் உள்ளவனே, உனது வீரக் கழல் அணிந்த திருவடிகளைத் தவிர வேறு துணை ஒன்றும் இல்லேன்; (இவ்வுடம்பொடு நிற்றலால்) பெரிய தவத்தைச் செய்ய இயலாமல் ஐம்புலன்களையே நினைந்து தமியேன் படுகின்ற இடர்ப்பாட்டினை யார்க்கு அறிவித்துத் தீர்வு காண்பேன்; இப்பொழுதே என்னை நீ ஏற்றுக்கொள்.

குறிப்புரை :

முதற்கண், `முனியேல்` எனப்பாடம் ஓதுவாரும் உளர்.
``என்னை`` என்பது உருபு மயக்கம்.
அன்றி, `மூப்பொழித்து ஆண்ட` என ஒரு சொல் வருவித்து முடிப்பினும் ஆம்.
கனி, ஔவை உண்ட நெல்லிக் கனி போன்றது.
இப்பாட்டு, பாசப் பற்று அற்றவழியும் வாதனை தாக்குதலைக் கூறியது.

பண் :

பாடல் எண் : 41

சாற்றுவன் கோயில் தலையும்
மனமுந் தவம்இவற்றால்
ஆற்றுவன் அன்பெனும் நெய்சொரிந்
தாற்றியஞ் சொல்மலரால்
ஏற்றுவன் ஈசன்வந் தென்மனத்
தானென் றெழுந்தலரே
தூற்றுவன் தோத்திரம் ஆயின
வேயினிச் சொல்லுவனே.

பொழிப்புரை :

யான் இப்பொழுது அன்பு என்னும் நெய்யைச் சொரிந்து, (அருளாகிய தீயை வளர்த்து) அதில் தலையையும், மனத்தையும் நிறுத்தித் தவம் செய்வேன்; அதனால் அவை யிரண்டையும் `சிவனுடைய கோயில்` என்றே சொல்வேன்.
அழகிய சொல் மாலைகளைச் சிவனுக்கு அணிவிப்பேன்; தோத்திரங்களாய் உள்ளவற்றைச் சொல்லுவேன்; இவ்வாற்றால், `சிவன் என் மனத்தில் தான் உள்ளான்` என்று பலரும் அறியக் கூறுவேன்.

குறிப்புரை :

`தலையும், மனமும் கோயில் எனச் சாற்றுவன் எனவும், `நெய் சொரிந்து இவற்றால் தவம் ஆற்றுவன்` எனவும் இயைக்க.
நெய்சொரிதலாகிய காரணத்தைக் கூறினமையால், தீ வளர்த்தலாகிய காரியம் கொள்ளப்பட்டது.
`என` என்பது எஞ்சி நின்றது.
ஒருகாலை ஊன்றித் தவம் செய்தலேயன்றித் தலைகீழாக நின்று தவம் செய்தலும் உண்டு என்பதை அறிந்து கொள்க.
புறத்து வளர்க்கும் அங்கியிலும், அகத்து வளர்க்கும் அங்கி சிறந்தது என்க.
``சொல் மாலை`` என்றது தாமே இயற்றுவனவற்றையும், ``தோத்திரம்`` என்றது முன்னோர் இயற்றியவற்றையும் என்க.
``மாலையால்`` என்பதை, `மாலையை` எனத் திரிக்க.
இனி - இப்பொழுது.
`தவம் செய்தல், சொல் மாலை அணிவித்தல்,தோத்திரம் சொல்லுதல்.
இவற்றைச் செய்தல் அவ்வாறு செய்பவரது உள்ளத்தில் சிவன் வந்து குடிகொள்ளுதல் உறுதி` என்பது உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 42

சொல்லா தனகொழு நாவல்ல
சோதியுட் சோதிதன்பேர்
செல்லாச் செவிமரம் தேறித்
தொழாதகை மண் திணிந்த
கல்லாம் நினையா மனம் வணங்
காத்தலை யும்பொறையும்
அல்லா அவயவந் தானும்
மனிதர்க் கசேதனமே.

பொழிப்புரை :

சோதிக்குட் சோதியாய் (ஒளிக்குள் ஒளியாய் - அறிவுக்குள் அறிவாய்) உள்ள சிவபெருமானுடைய பெயரைக் கேளாத செவிகள் செவிகள் அல்ல; ஒலி நுழையாத வன்மையை யுடைய மரங்கள்.
அதனைச் சொல்லாத நாக்கள் நாவல்ல; உழுபடை யின் நாக்கு, அவனைப் பரம்பொருளாகத் தெளிந்து தொழாத கைகள் மண்ணால் செய்து வைக்கப்பட்ட போலிக் கைகள்; மனிதக் கைகள் அல்ல; அவனை நினையாத மனங்கள் மனங்கள் அல்ல; உளியால் போழ்ந்தாலும் போழப்படாத உறுதியான கற்கள்; அவனை வணங் காத தலைகள் தலைகள் அல்ல; பிற உடற் பகுதிகளுக்கு ஏற்றி வைக்கப் பட்ட ஒரு சுமைகள்.
மக்கட்கு அமைந்த பிற உறுப்புக்களும் (கண், கால் முதலியனவும்) அவனுக்குத் தம்மால் ஆகும் பணியைச் செய்யா விடின் மனித உறுப்புக்கள் ஆகா; சடப்பொருட் பகுதிகளே ஆகும்.

குறிப்புரை :

தோத்திரமும், சாத்திரமும் 1 சிவனை, ``சோதியுட் சோதி`` எனக் கூறுதல் இங்கு நினைக்கத் தக்கது.
தான், பன்மை யொருமை மயக்கம்.
இங்குக் கூறியவாறே, கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.
(குறள்.
, 9) 2 எனத் திருவள்ளுவரும் கூறினார்.
``வன்பராய் முருடொக்கும் என் சிந்தை; மரக்கண் என் செவி; இரும்பினும் வலிது`` எனவும், ``நெஞ்சம் கல்லாம்; கண்ணிணையும் மரமாம் தீவினை யினேற்கே`` எனவும் போந்த திருவாசகத்தையும் காண்க.
3 ``திணிந்த`` என்ற விதப்பினால் அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது.
``மனிதர்க்கு`` என்றதனால், `மனித உடம்பும், அவற்றில் அமைந்த உறுப்புக்களும் சிவன் பணி செய்தற் பொருட்டே தரப்பட்டுள்ளன` என்பது விளங்கும்.
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவன்.
எனவும் 4 ``வணங்கத் தலைவைத்து வார்கழல்வாய் வாழ்த்த வைத்து`` எனவும், கால்களாற் பயன் என்! கறைக்
கண்டன் உறைகோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக்
கால்களாற் பயன் என்
ஆக்கையாற் பயன் என்! - அரன்
கோயில் வலம்வந்து
பூக்கையால் அட்டிப் போற்றி யென்னாத
இவ்வாக்கையாற் பயன் என்.
5 எனவும், ஆமாத்தூர் - அம்மானைக் - காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே
ஆமாத்தூர் - அம்மானைக் கூறாத நாவெல்லாம் கூறாத நாக்களே
ஆமாத்தூர் - அம்மானைக் கேளாச் செவியெல்லாம் கேளாச் செவிகளே
ஆமாத்தூர் - ஆம்மான்எம் வள்ளல் கழல் பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே
ஆமாத்தூர் - நிச்சல் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே.
1 எனவும்,
மானுடப் பிறவிதானும் வகுத்தது மனவாக் காயம்
ஆனிடத் தைந்தும் ஆடும் அரன்பணிக் காக அன்றோ.
2 எனவும் வருவன பலவும் கண்டுணர்க.

பண் :

பாடல் எண் : 43

தனக்குன்றம் மாவையம் சங்கரன்
தன்னருள் அன்றிப்பெற்றால்
மனக்கென்றும் நஞ்சிற் கடையா
நினைவன் மதுவிரியும்
புனக்கொன்றை யானரு ளாற்புழு
வாகிப் பிறந்திடினும்
எனக்கென்றும் வானவர் பொன்னுல
கோடொக்க எண்ணுவனே.

பொழிப்புரை :

சிவபெருமானது அருள் வழியன்றிப் பிற வழிகளால் மலைபோலும் நிதியையும், பெரிய உலகம் முழுவதையும், பெற்றாலும் அவைகளை யான் என் மனத்தின் கண் நஞ்சினும் கடைப் பட்டனவாக என்றும் நினைப்பேன்.
கொல்லையில் நிற்கும் கொன்றை மரத்தில் தேனொடு மலரும் பூக்களால் ஆகிய மாலையையணிந்துள்ள சிவபெருமானது அருள் வழிப் புழுவாய்ப் பிறக்கினும் அதனையான் எனக்குத் தேவர்களது பொன்னுலகமே கிடைத்துவிட்டது போல என்று நினைப்பேன்.

குறிப்புரை :

``சங்கரன்றன் அருளாலன்றி`` என்பதனை முதலிற் கொள்க.
``பிறந்திடினும்`` என்னும் எதிர்மறை யும்மையை``, ``பெற்றால்`` என்பதற்கும் கூட்டுக.
``மனக்கு`` என்பது உருபு மயக்கம்.
`மனத்துக்கு` என்பதில் சாரியை தொகுக்கப்பட்டது.
``எனக்கு`` என்பதன்பின் `வாய்த்ததாக` என ஒருசொல் வருவித்து முடிக்க.
திருவருளாலன்றிப் பிற வழியால் வருவன வினையின்றி வருதலால் அசுத்தமும், திருவருள் வழியால் வருவன வினையின்றி வருதலால் சுத்தமும் ஆதல் பற்றி இவ்வாறு எண்ணினார்.
திருவருளால் அன்றி வினையால் மட்டுமே வருவனயாதும் இன்மையின் ``பெற்றாலும்`` என்றும் உம்மையும், திருவருளால் புழுவாய்ப் பிறத்தல் இன்மையின் ``பிறந்திடினும்`` என்னும் உம்மையும் எதிர்மறைப்பொருள.
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
(குறள்.
, 755)
எனவும்,
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.
(குறள்.
, 657)
எனவும் திருவள்ளுவர் அறம் பற்றிக் கூறியதனை இங்கு ஒப்பு நோக்குக.

பண் :

பாடல் எண் : 44

எண்ணம் இறையே பிழைக்குங்
கொலாமிமை யோரிறைஞ்சும்
தண்ணம் பிறைசடைச் சங்கரன்
சங்கக் குழையன்வந்தென்
உண்ணன் குறைவ தறிந்தும்
ஒளிமா நிறங்கவர்வான்
கண்ணும் உறங்கா திராப்பகல்
எய்கின்ற காமனுக்கே.

பொழிப்புரை :

தேவர் பலராலும் வணங்கப்படும், குளிர்ந்த அழகிய பிறையை அணிந்த சடைமுடியை உடையவனும், சங்கால் ஆகிய குழையை அணிந்தவனும் ஆகிய சிவபெருமான் வந்து என் உள்ளத்தின்கண் நீங்காது இருத்தலை அறிந்திருந்தும் எனது அழகிய நிறத்தை அழித்தற் பொருட்டும் இரவும், பகலும் ஊணோடு உறக்கமும் இன்றித் தன் அம்புகளைத் தொடர்ந்து எய்து கொண்டிருக்கின்ற மன்மதனுக்கு, `யாம் வெல்வோம்` என்னும் எண்ணம் சிறிதாயினும் நீங்காதோ!

குறிப்புரை :

சிவபெருமானைக் கண்ட பின் காமனால் கண்ணும் உறங்காது மெலிகின்றவள் தன் மெலிவை மறைத்துக் காமனைத் தோல்வியுறுபவனாக வைத்து இகழ்ந்தாள்; மக்களிலுள்ள இவள் தோற்பதன்றித் தேவரில் உள்ள காமன் தோற்பது எங்குளது! இதனால் அவட்குப் பெருமிதம் பிறந்ததாயினும், கேட்டார்க்கு நகை பிறந்தது.
நனவினான் நம்நீத்தார் என்பர்; கனவினான்
காணார்கொல் இவ்வூரவர்.
* என்றாற் போல்வனவற்றை இங்கு நினைவு கூர்க.
`இறையேனும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்த லாயிற்று.
கொல், ஐயப்பொருட்டாய், இகழ்ச்சி குறித்து நின்றது.
ஆம், அசை.
``சங்கரன்`` என்பதைச் ``சங்கக் குழையன்`` என்பதன்பின் கூட்டுக.
கவர்தல், இங்குப் போக்குதல்.
போதல், பசலையால், தலைவி சிவனைத் தலைப்பட்டவரும், காமன் பழ அடியார்களும் ஆதல் இதன் உள்ளுறைப் பொருள்.

பண் :

பாடல் எண் : 45

காமனை முன்செற்ற தென்றாள்
அவளிவள் காலனென்னும்
தாமநன் மார்பனை முன்செற்ற
தென்றுதன் கையெறிந்தாள்
நாம்முனஞ் செற்றதன் றாரையென்
றேற்கிரு வர்க்குமஞ்சி
ஆமெனக் கிற்றிலர் அற்றெனக்
கிற்றிலர் அந்தணரே.

பொழிப்புரை :

அழகிய தட்பத்தை (கருணையை) உடையவராகிய சிவபெருமான் முன்னிலையில் ஒரு பெண் `இப்பெருமான் (காமனை எரித்தவன், காலனை உதைத்தவன்) இவ்விரு செயல்களுள் முதலிற் செய்தது காமனை எரித்தது தான்` என்று சொன்னாள்.
அவட்கு எதிராக மற்றொருத்தி, `இல்லைகாலனை உதைத்ததுதான் முதலிற்செய்தது` எனத் தன் கைகளை ஒன்றோடு ஒன்று மோதும் படி அடித்து உறுதி படக் கூறினாள்.
யான் `அச்சம் உண்டாக, அவ்விரு வரில் நீவிர் முற்காலத்தில் முதலில் கொன்றது யாரை` என வினவி னேன்.
பெருமான் அவ்விருவருக்காகவும் அஞ்சி, `எவனை முதலிற் கொன்றது` என ஒன்றைத் திட்டமாக வாய்திறந்து கூறாமல், மௌன மாய் இருந்தார்.
(யான் இவரை, `யாரிடத்தில் அன்புடையவர்` என்று நினைப்பது?)

குறிப்புரை :

`சிவபெருமானது பண்டைச் செயல்கள் பற்றி முன் பின் கால ஆராய்ச்சி செல்லாது` என்பதனை, ஓர் மகளிர் உரையாடலாக வைத்துக் கூறினார்.
``முன்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே`` 1 என்ற அப்பர் திருவாக்கையும் காண்க.
நாம், அச்சப் பொருட் டாய உரிச்சொல் 2 இறைவன் ஒருவர்க்கு மட்டும் உரியன் ஆகாமையும் இங்குக் குறிக்கப்பட்டது.
``அந்தணர்`` என்பது இங்குக் காரணப் பெயராய் நின்றது.

பண் :

பாடல் எண் : 46

அந்தண ராமிவர் ஆரூ
ருறைவதென் றேனதுவே
சந்தணை தோளியென் றார்தலை
யாயசலவர் என்றேன்
பந்தணை கையாய் அதுவுமுண்
டென்றார் உமையறியக்
கொந்தணை தாரீர் உரைமினென்
றேன்துடி கொட்டினரே.

பொழிப்புரை :

துறவிகள் போலப் பிச்சை ஏற்க வந்த இவரைப் பற்றி யான், `இவர் இருக்கும் ஊர் ஆர் ஊர்` (யார் இருக்கும் ஊர்) என்று பிறரை வினாவினேன்; இவர் தாமே முன் வந்து, `சாந்து பூசிய தோளை உடையவளே, நீ வினாவாகச் சொல்லிய அந்த ஊர்தான் (ஆரூர்தான்) நாம் இருக்கும் ஊர்` என்றார்.
பின்பு யான் இவர் முதலில் வைத்து எண்ணத் தக்க `சலவர்` (வஞ்சனைக்காரர்) என்றேன்.
அதற்கு அவர், `பந்து ஏந்தும் கையை உடையவளே, நீ இரண்டாவதாகச் சொன்னதும் உண்மைதான்` (சலத்தை - நீரை - கங்கையைத் தாங்கினவர்) என்றார்.
இப்படி அவர் நகையாடிக் கூறினமையால் `அவர் என்னைக் காதலிக்கின்றார்` என்று கருதி, யான், `மார்பில் கொத்துக் கொத்தாகப் பல மாலையை அணிந்துள்ளவரே, உமை அறிய உம்மை நான் - இன்னார் - என்று நன்கு அறியும்படி சொல்லுவீர்` என்று கேட்டேன்.
அவர் சொல் ஒன்றும் சொல்லாமல் கையில் இருந்த உடுக்கையை அடித்தார்.
(என்னை அவர் பக்கத்தில் உள்ள உமாதேவி பார்த்துத் தெரிந்து கொள்ளும்படிச் செய்தார்.)

குறிப்புரை :

`இவர் மிகவும் வல்லாளர்` என்பது குறிப்பெச்சம்.
`திருவாரூரை இடமாகக் கொண்டிருப்பவரும்.
உலகம் அழியா திருத்தற் பொருட்டுக் கங்கையைச் சடையில் தாங்கியவரும் ஆகிய சிவபெருமான் தம்மை அடைய விரும்புவோர்க்குத் தமது அருளாகிய கையைக் கொடுத்துக் காப்பார்` என்பது குறிப்புப் பொருள்.
``அந்தணர்`` என்பது இங்கு, ``அறவோரை`` * (துறவிகளை)க் குறித்தது.

பண் :

பாடல் எண் : 47

கொட்டும் சிலபல சூழநின்
ரார்க்கும்குப் புற்றெழுந்து
நட்ட மறியும் கிரீடிக்கும்
பாடும் நகும்வெருட்டும்
வட்டம் வருமருஞ் சாரணை
செல்லும் மலர்தயங்கும்
புட்டங் கிரும்பொழில் சூழ்மறைக்
காட்டான் பூதங்களே.

பொழிப்புரை :

மலர்கள் விளங்குகின்றனவும், பறவைகள் வாழ் வனவும் ஆகிய பெரிய சோலைகள் சூழ்ந்த திருமறைக்காட்டில் எழுந் தருளியுள்ள இறைவனது படையாகிய பூதங்களுட் சில (அச்சமும், துன்பமும் இன்றிக் களித்திருத்தலால்) கைகளையும், பறைகளையும் கொட்டும்.
பல சிவபெருமானைச் சூழ்ந்து நின்று ஆரவாரிக்கும்; மற்றும் சில குப்புற வீழ்ந்தும் எழுந்தும் கூத்தாடும்; பல பல விளையாட்டுக்களைச் செய்யும்; பல பாட்டுக்களைப் பாடும்; சிரிக்கும்; ஒன்றை ஒன்று அச்சுறுத்தும்; வட்டமாக ஓடி வரும்; அணி வகுத்துச் செல்லும்.

குறிப்புரை :

`சிவபெருமானுக்கு ஆட்பட்டவர் கட்கு எந்த வகையான அச்சமோ துன்பமோ, கவலையோ இல்லை, ``இன்பமே எந் நாளும்`` 1 என்பதைக் குறிப்பால் உணர்த்தியவாறு.
அச்சமிலர், பாவமிலர், கேடு மிலர், அடியார் நிச்சம்உறு நோயு மிலர், பச்சமுடை யடிகள் திருப் பாதம்பணி வாரே.
2 என்றது காண்க.
கிரீடித்தல் - விளையாடுதல்.

பண் :

பாடல் எண் : 48

பூதப் படையுடைப் புண்ணிய
ரேபுறஞ்சொற்கள் நும்மேல்
ஏதப் படவெழு கின்றன
வாலிளை யாளொடும்மைக்
காதற் படுப்பான் கணைதொட்ட
காமனைக் கண்மலராற்
சேதப் படுத்திட்ட காரணம்
நீரிறை செப்புமினே.

பொழிப்புரை :

பூதங்களையே படைகளாகக் கொண்டுள்ள புண்ணிய சொரூபரே, உம்மைப் பற்றிப் புறங் கூற்றுக்கள் நீர் குற்றப் படும்படி பலவாய் எழுகின்றன.
(அவற்றை நீர் அறிவீரோ, அறியீரோ! அவற்றுள் தலையாயது) இளையாள் ஒருத்தியின் காதலில் உம்மை அகப்படுத்தற்குத் தனது கணையாகிய மலரை எய்த மன்மதனை நீர் உமது கண்ணாகிய மலரால் அழிவுபடுத்தியது.
`அஃது ஏன்` என்ப தற்கு நீர் விடை கூறுவீர்.

குறிப்புரை :

புறங் கூற்றுக்களாவன தன் கடமையைச் செய்ய வந்த காலனைக் காலால் உதைத்தது, முப்புரத்தவரை அழித்தது; தாருகாவன முனிவரது மனைவியரின் கற்பை நிலைகுலையச் செய்தது முதலி யவை பற்றியன.
`இன்னோரன்னவற்றை நும் எதிரில் கூற மாட்டாது பலர் புறங் கூறுகின்றார்கள்` என்றபடி.
`மன்மதன் செய்தது, தனிய ராய் இருந்த உம்மை இல்வாழ்க்கையர் ஆக்குவிக்க முயன்றதே.
அவனை அழிவு செய்தமை தகுமோ` என்பதாம்.
இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம் இவரை இகழ்வதே கண்டீர் *
என அருளிச்செய்ததே என்பது கருத்து.
ஆல் அசை.
இறை - விடை.
``காரணம்`` என்பதன்பின் `என்` என்பது எஞ்சிநின்றது.

பண் :

பாடல் எண் : 49

செப்பன கொங்கைக்குத் தேமலர்க்
கொன்றை நிறம்பணித்தான்
மைப்புரை கண்ணுக்கு வார்புனற்
கங்கைவைத் தான்மனத்துக்
கொப்பன இல்லா ஒளிகிளர்
உன்மத் தமும்அமைத்தான்
அப்பனை அம்மனை நீயென்
பெறாதுநின் றார்க்கின்றதே.

பொழிப்புரை :

எல்லோரும் தங்கட்கு `அப்பன்` என்றும், `அம்மை` என்றும் சொல்லிப் போற்றுகின்ற இறைவன், கிண்ணம் போலும் தனங்களையுடைய நின்மகளுடைய தனங்களுக்குத் தான் அணிந்துள்ள கொன்றைப் பூவின் நிறத்தைக் கொடுத்தான் (தனிமை யால் உண்டாகும் பசப்பூரச் செய்தான்.
) மை தீட்டப்பட்ட சிறந்த கண்ணிற்குத் தான் தரித்துள்ள, ஒழுகுகின்ற கங்கை நீரைக் கொடுத்தான் (கண்ணீர்விட்டு அழச் செய்தான்) மனத்துக்குத் தான் அணிந்துள்ள, ஒப்பில்லாத, அழகுமிக்க ஊமத்தம் பூவைக் கொடுத்தான்.
(பித்தம் பிடிக்கச் செய்தான்) இதையறியாது, `இவள் ஏதோ தெய்வந் தீண்டப்பட்டாள்` என்று அதற்குப் பூசை போடுகின்றாயே!

குறிப்புரை :

இது வெறியெடுத்த செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது.
ஞானியரை உலகர் ஏதோ மனநோய் உள்ளவராகக் கருதி அது தீரத் தெய்வங்களை வேண்டுதல் முதலியன செய்தலும், அவர்க்கு அறிவர் அறிவுறுத்தலும் இதன் உள்ளுறை.
புரை - உயர்வு.
`ஊமத்தம் பூவைத் தலையில் சூடிக்கொண்டால் பித்தம் பிடிக்கும்` என்பது உலக வழக்கு.
``அப்பனை`` என்பதனோடு இயைய, ``அம்மனை`` என்பதிலும் இரண்டன் உருபு விரிக்க.
பெறுதல், இங்கு வரைவு உடன் படுதல்.

பண் :

பாடல் எண் : 50

ஆர்க்கின்ற நீரும் அனலும்
மதியும்ஐ வாயரவும்
ஓர்க்கின்ற யோகும் உமையும்
உருவும் அருவும்வென்றி
பார்க்கின்ற வேங்கையும் மானும்
பகலும் இரவுமெல்லாம்
கார்க்கொன்றை மாலையி னார்க்குடன்
ஆகிக் கலந்தனவே.

பொழிப்புரை :

கார் காலத்தில் பூக்கின்ற கொன்றைப் பூவினா லாகிய மாலையைத் தனது அடையாள மாலையாகக் கொண்ட சிவ பெருமானிடத்தில் நீர் - நெருப்பு, திங்கள் - ஐந்து தலைப் பாம்பு, யோக நிலை - இல்லாள், உருவம் - அருவம், புலி - மான், பகல் - இரவு இவ்வாறு எல்லாம் ஒன்றுக்கொன்று பகையாய பொருள்கள்.
அப்பகை நீங்கி நட்புக் கொண்டு உடன் கலந்து வாழ்கின்றன.

குறிப்புரை :

`இஃது அதிசயம்` என்பது குறிப்பெச்சம்.
ஆர்க்கின்ற- ஒலிக்கின்ற.
ஓர்க்கின்ற - தியானிக்கின்ற.
யோகு - யோகம்.
அஃது ஆகுபெயராய்.
அந்நிலையைக் குறித்தது.
`யோகம் துறவிகட்கு உரித்து` என்பது பெரும்பான்மை.
உரு - உருவத் திருமேனி.
அரு - அருவத் திருமேனி.
- முழுமையாக அமைந்த புலித்தோல் உயிருடைய புலி பார்ப்பது போலத் தோன்றுதலின் ``பார்க்கின்ற வேங்கை`` என்றார்.
`அதைக் கண்டு மான் அஞ்சவில்லை`` என்றபடி.
மான் விலங்காதலுடன் மறி (கன்று) ஆதலின், `உயிரில்லது` என அறியும் அறிவில்லதாம்.
பகல் வலக் கண்ணாகிய சூரியனாலும், இரவு இடக்கண்ணாகிய சந்திரனாலும் உளவாகின்றன.
`சிவபெருமானைச் சேர்ந்தவர்க்கு நடுவு நிலையே உளதாவதன்றி, உறவு பகைகள் உளவாவன அல்ல` என்பதைக் குறிப்பால் உணர்த்தியவாறு.
``யோகும், உமையும்`` - என்றதனை,
ஒன்றொடொன்று றொவ்வா வேடம் ஒருவனே தரித்துக் கொண்டு நின்றலால் உலகம் நீங்கி நின்றனன்.
எனவும், உருவும், அருவும்`` என்றதனை, பந்தமும் வீடும் ஆய/# பதபதார்த் தங்கள் அல்லான்;
அந்தமும், ஆதி யில்லான்/# அளப்பிலன் ஆதலாலே
எந்தைதான் `இன்னன்` எ/#ன்றும், `இன்னதாம், இன்ன தாகி
வந்திடான்` என்றும் சொல்ல/# வழக்கொடு மாற்றம் இன்றே.
1 எனவும் சிவஞான சித்தி நூல் விளக்குதல் காண்க.
`சிவபிரான் அணி யும் கொன்றை கார்க் கொன்றையே` என்பதை ``கண்ணி கார்நறுங் கொன்றை; காமர் - வண்ண மார்பில் தாரும் கொன்றை`` 2 ``கொன்றைப் பொன்னேர் புதுமலர்த் - தாரன், மாலையன், மிலைந்த கண்ணியன்`` 3 என்பவற்றானும் அறிக.

பண் :

பாடல் எண் : 51

கலந்தனக் கென்பலர் கட்டவிழ்
வார்கொன்றை கச்சரவார்
சலந்தனக் கண்ணிய கானகம்
ஆடியோர் சாணகமும்
நிலந்தனக் கில்லா அகதியன்
ஆகிய நீலகண்டத்து
அலந்தலைக் கென்னே அலந்தலை
யாகி அழிகின்றதே.

பொழிப்புரை :

இவளால் காதலிக்கப்பட்டவனுக்கு அணிகலம் ஆவன எலும்புகளே; அணியும் பூக்களாவன அரும்பவிழ்ந்த கொன்றைப் பூக்களே.
(இவை சூடும் மலர் அல்ல.
) அரைக்கச்சாவது பாம்பு.
அவனோ நீர் இல்லாமல் நீருக்கு அருகில் வெம்மை பொருந்திய காட்டில் (ஈமத்தில்) ஆடுபவன்.
ஆகவே, அவன் ஒரு சாண் அளவினதான இடமும் `தன்னுடையது` என்று இல்லாத அகதி, கழுத்தில் கறையுடை யனாய் எங்கும் திரிகின்ற அவனை நினைந்து இவள் மனம் அலைதல் என்னோ!

குறிப்புரை :

இது, தலைவியது ஆற்றாமை கண்டு செவிலி இரங்கிக் கூறியது.
ஞானிகளது நிலைமை யறியாமல் உலகர் அவர் பொருட்டு இரங்குதல் இதன் உள்ளுறை.
``ஆடி`` என்றது பெயர்.
அலந்தலை - அலமரல்.
அது முன்னர் ஆகுபெயராய் அதனை உடையவனைக் குறித்தது.
`இவள் அழிகின்றது என்னே` எனத் தோன்றா எழுவாய் வரு வித்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 52

அழிகின்ற தாருயிர் ஆகின்ற
தாகுலம் ஏறிடும்மால்
இழிகின்ற சங்கம் இருந்த
முலைமேற் கிடந்தனபீர்
பொழிகின்ற கண்ணீர் புலர்ந்தது
வாய்கலை போனவந்தார்
மொழிகின்ற தென்னினி நான்மறை
முக்கண் முறைவனுக்கே.

பொழிப்புரை :

நான்கு மறைகளையும் அருளிச் செய்த,மூன்று கண்களையுடைய அறவோன் பொருட்டு எனது அரிய உயிர் போய்க் கொண்டிருக்கின்றது.
அதுபோவதற்கு முன்னே மனக் கவலை உண்டா கின்றது; மயக்கம் ஒருகாலைக் கொருகால் மிகுகின்றது; சங்க வளையல்கள் கழன்று வீழ்கின்றன; இறுமாந்திருந்த கொங்கைகளின் மேல் பீர்க்கம்பூப் போலும் பசலைகள் வெளிப்பட்டுக் கிடந்தன; கண்கள் நீரைப் பொழிகின்றன; வாய் புலர்ந்து விட்டது; மேகலைகள் போயே விட்டன.
எனக்காக அவரிடம் தூது சென்று வந்தவர்கள் என்ன சொல்கின்றனரோ!

குறிப்புரை :

`அவர்களது வாய்ச்சொல்லைப் பொறுத்துள்ளது என் உயிரின் நிலைமை` என்பது குறிப்பெச்சம்.
இது தூது சென்றார் வந்ததையறிந்து தலைவி அவர்சொல்லைக் கேட்க விதுப்புற்றுக் கூறியது.
தூதுவிடக் கருதுதலோடு ஒழியாமல், தூதுவிட்டே நின்றமையால், இது, ``மிக்க காமத்து மிடல்`` * என்னும் பெருந்திணை.
`நன்மைகள் பலவற்றை எய்தாது கழிகின்றது` என்னும் கருத்தால் தலைவி தனது உயிரை ``ஆருயிர்`` என்றாள்.
மால் - மயக்கம்.
பீர் - பீர்க்கு.
அஃது இருமடியாகுபெயராய் முன்னர் அதன் பூவையும், பின்னர் அப்பூப்போலும் பசலையையும் குறித்தது.
மணிக்கோவைகளின் பன்மை பற்றி மேகலை பலவாகச் சொல்லப்பட்டது.
மேகலையை, `கலை` என்றது தலைக் குறை, தீவிரதர பக்குவத்தில் அடியவர் வாய்மொழிகளை நோக்கியிருத்தல் இதன் உள்ளுறை.
`இறைவன், துறைவன், துணைவன்` - முதலியன போல, `முறைவன்` வகர இடைநிலை பெற்ற பெயர்.
இருந்த - கிடந்தன, நான்மறை - முக்கண் இவை முரண்தொடை; விரோத அணி.

பண் :

பாடல் எண் : 53

முறைவனை மூப்புக்கும் நான்மறைக்
கும்முதல் ஏழ்கடலந்
துறைவனைச் சூழ்கயி லாயச்
சிலம்பனைத் தொன்மைகுன்றா
இறைவனை எண்குணத் தீசனை ஏத்தினர்
சித்தந் தம்பால்
உறைவனைப் பாம்பனை யாம்பின்னை
என்சொல்லி ஓதுவதே.

பொழிப்புரை :

அறத்தின் வடிவானவனும், காலப் பழமைக்கும், நான்கு வேதங்கட்கும் முதலாய், ஏழு கடல்களால் சூழப்பட்ட ஏழு தீவு களிலும் வழிபடப்படுபவனும், ஞானியர் சூழ்ந்துள்ள கயிலாய மலை யில் இருப்பவனும், தனது அனாதி நிலையினின்றும் என்றும் குறைவு படாத கடவுளும், எட்டுக் குணங்களையே ஐசுவரியமாக உடைய வனும், தன்னைத் துதித்தவர்களது உள்ளத்திலே என்றும் உறை பவனும் பாம்புகளையே அணிகலமாக அணிந்தவனும் ஆகிய சிவ பெருமானை யாம் இவ்வளவிலன்றி, வேறு எவற்றைச் சொல்லி ஓயாது துதிப்பது?

குறிப்புரை :

`சிவனது அளவிறந்த புகழ்களில் நாம் அறிந்தன மிகச் சிலவே` என்பது கருத்து.
``முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருள்``* ஆதலை, `மூப்புக்கு முதல்` என்றார்.
முதல் - முதல்வன்; ஆகுபெயர்.
``முதல்`` என்பதில் தொகுக்கப்பட்ட `ஆய்` என்னும் வினையெச்சம்.
``துறைவன்`` என்னும் குறிப்பு வினைப்பெயர் கொண்டது.
உலக முழுவதிலும் உள்ளாரால் வழிபடப்படுதல் பற்றி, ``ஏழ்கடல் துறைவன்`` என்றார்.
சூழ்தலுக்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது.
தொன்மை - அனாதி.
அஃதே இயற்கையாதலை அறிக.
எண் குணங்களாவன.
1.
தன்வயம்.
2.
தூய உடம்பு.
3.
இயற்கையுணர்வு 4.
முற்றுணர்வு, 5.
இயல்பாகவே பாசங்களின் நீங்கி நிற்றல் 6.
முடிவில் ஆற்றல், 7.
பேரருள், 8.
வரம்பில் இன்பம் - என்பன.
* இவையே கடவுட் குணங்கள் ஆதலை ஓர்ந்துணர்க.
தம், சாரியை.
இன் சாரியை நீக்கித் தம் சாரியை கொடுத்தார்.
``பின்னை`` என்பது `மற்று` என்னும் பொருட்டு.
``ஓதுதல்`` என்பது இங்கு இடைவிடாது துதித்தலின் மேற்று.

பண் :

பாடல் எண் : 54

ஓதவன் நாமம் உரையவன்
பல்குணம் உன்னைவிட்டேன்
போதவன் பின்னே பொருந்தவன்
வாழ்க்கை திருந்தச்சென்று
மாதவ மாகிடு மாதவ
மாளவர் புன்சடையான்
யாதவன் சொன்னான் அதுகொண்
டொழியினி ஆரணங்கே.

பொழிப்புரை :

அரிய தெய்வப்பெண் போன்றவளே, உன்னை நான் இப்பொழுது பெரிய தவக்கோலமாய் வளர்கின்ற புல்லிய சடையை உடைய சிவபெருமான்பால் அனுப்புகின்றேன்; நீ அவ னிடம் சென்று, அவனுடைய பெயர்கள் பலவற்றையும் சொல்; அவ னுடைய இறைமைக் குணங்கள் பலவற்றையும் எடுத்துப் பேசு; அவன் எங்குச் சென்றாலும் அவனைவிடாது அவன் பின்னே செல்; சென்று, அவனது வாழ்க்கைக்கு ஏற்ப உன்னைத் திருத்திக்கொண்டு அவனுக்குப் பொருந்தியவளாய் இரு.
(மற்றும் அவன் மனம் இரங்க வேண்டிப்) பெரிய தவத்தைச் செய்.
(இவ்வளவும் செய்தால் அவன் ஏதாவது ஒரு முடிவைக் கூறாமல் இருக்க மாட்டான்.) அவன் என்ன முடிவைச் சொன்னாலும் அதைக் கேட்டுக் கொண்டு வந்துவிடு.

குறிப்புரை :

இது சிவபெருமானிடம் தூது விடுப்பவள் சொல்லியது.
`சிவபெருமான் பேரிரக்க குணம் உள்ளவன்` என்பதும், `அவனைப் பலபடியாலும் வழிபட்டால் அவன் இரங்கா தொழியான்` என்பது அவரது நம்பிக்கை.
நல்கா தொழியான் நமக்கென்றுன்/# நாமம் பரவி நயனம்நீர்
மல்கா வாழ்த்தா வாய்குழறா/# வணங்கா மனத்தால் நினைந்துருகிப்
பல்கால் உன்னைப் பாவித்துப்/# பரவிப் பொன்னம் பலமென்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி/# யருளாய் என்னை உடையானே.
1 என்றாற் போலும் திருவாக்குகளைக் காண்க.
``மாதவம்`` இரண்டில் பின்னது ஆகுபெயராய்த் தவக்கோலத்தைக் குறித்தது.
``தவம் மறைந்து அல்லவை செய்தல்`` 2 என்பதிற் போல.
`வாழ்க்கையோடு`` என்னும் மூன்றன் உருபு தொகுத்தலாயிற்று.
`புன் சடையானாகிய அவன்` என்க.

பண் :

பாடல் எண் : 55

ஆரணங் கின்முகம் ஐங்கணை
யானகம் அவ்வகத்தில்
தோரணந் தோள்அவன் தேரகல்
அல்குல்தொன் மைக்கண்வந்த
பூரண கும்பம் முலையிவை
காணப் புரிசடையெம்
காரணன் தாள்தொழும் அன்போ
பகையோ கருதியதே.

பொழிப்புரை :

அரிய தெய்வப்பெண் போன்றவளாகிய இவளது முகம் மிக அழகிதாய் இருத்தலின் மன்மதன் வாழும் இல்லமாகின்றது; இவளது தோள்கள் தூங்கியசைதலால் அவ்இல்லத்தில் தூக்கப் பட்டுள்ள தோரணங்களாகின்றன.
அகன்ற அல்குல் மன்மதன் ஊரும் தேர் ஆகின்றது.
தனங்கள் பழைய மரபின்படி ஏந்தி வரும் பூரண கும்பங்களாகின்றன.
இவையெல்லாம் பலர்க்கும் தெரிய இவள் வந்து எங்கள் சிவபெருமானது திருவடிகளை வணங்குகின்றாள்.
ஆயினும் (இவள் மன்மதனது படைகளுள் ஒருத்தி யாதலின் இவள்) சிவபெரு மானை (மன்மதனையும் மறந்து) காதலித்து வரவேற்று வரவேற்று வணங்குகின்றாளா? இல்லை; பகைமை காரணமாக வெறும் நடிப்பாக வரவேற்று வணங்குகின்றாளா? இவள் மனத்தில் உள்ளது என்ன?

குறிப்புரை :

சிவபெருமான் வீதியுலா வரும்பொழுது வரவேற்று வணங்குகின்ற பலருள் காதல் பொங்க அவ்வாறு வணங்குவாள் ஒருத்தியைக் கண்டோர் ஐயுற்றுக் கூறியது.
அவனது பேரழகும், முகக் குறிப்பும் அவர்களது ஐயத்திற்குக் காரணம்.
மெய்யன்பர்களது உண்மையன்பின் பெருமையை அறியாது உலகர் அவர்களையும் தம்முட் சிலராக வைத்துக் குறைத்து எண்ணுதல் இதன் உள்ளுறை.
அனைத்து அழகிலும் முகத்தழகே தலையாயது ஆதலின் அதனை யுடைய முகமே மன்மதனது இல்லமாகச் சொல்லப்பட்டது.
ஏனைய வெளி.
உவமைகள் சுட்டிக் கூறா உவமமாய் நின்றமையின் பொதுத் தன்மைகள் விரித்துரைக்கப்பட்டன.
காரணன் - முதல்வன்.
தொழும்.
`செய்யும்` என்னும் முற்று.

பண் :

பாடல் எண் : 56

கருதிய தொன்றில்லை ஆயினுங்
கேண்மின்கள் காரிகையாள்
ஒருதின மும்உள ளாகவொட்
டாதொடுங் காரொடுங்கப்
பொருதநன் மால்விடைப் புண்ணியன்
பொங்கிளங் கொன்றையின்னே
தருதிர்நன் றாயிடும் தாரா
விடிற்கொல்லுந் தாழிருளே.

பொழிப்புரை :

ஊரவரே, நீவிர் ஆற்ற வேண்டிய கடமையாகக் கொண்டது யாதொன்றும் இல்லையாயினும், யான் சொல்வதைக் கேட்டருளுங்கள்.
இன்று வர இருக்கும் இருட்பொழுது இந்த அழகி இனி ஒரு நாளாயினும் வாழ விடாது.
ஆகையால் (நீவிர் அருள் கூர்ந்து) பகையாகிய அசுரர் பலர் அழியும்படி போர் செய்த திருமாலை இடப ஊர்தியாக உடைய புண்ணிய சொரூபனாகிய சிவபெருமான் அணிந்துள்ள அழகு மிக்க, அன்றலர்ந்த கொன்றைப் பூமாலையை இப்பொழுதே சென்று அவனிடம் விண்ணப்பித்து வாங்கி வந்து தாருங்கள்; எல்லோருக்கும் நல்லாதாயிடும்.
தாராது விடிலோ, இருட்பொழுது இவளை இன்று கொன்றுவிடும்.

குறிப்புரை :

இது, தலைவி ஆற்றாமை மிகுவது கண்டு தோழி அயலாரிடம் இரங்கிக் கூறியது.
நாணழிந்து அயலார் அறியக் கூறினமையின் இது பெருந்திணைப்பாலது.
தாழ் இருள் - இனித் தங்க வரும் இருள்; எதிர்கால வினைத்தொகை.
இருள் ஆகுபெயராய் அது வருவதற்குரிய காலத்தைக் குறித்தது.
தீவிரதர பத்தியால் சிவனை அடைய விரையும் அன்பரது நிலையை அறிந்து அவரோடு உடன் உறைபவர் அவ்வன்பரது நிலைமையை அடியார்கள் அறியக் கூறுதல் இதன் உள்ளுறை.
`தலைவன் தான் அணிந்திருக்கும் மாலையைக் கழற்றி ஒருத்தி அணிந்து கொள்ள இசைந்து தருவானாயின், அவன் அவளைக் கைவிடாது தன் துணைவியாகக் கொள்ளல் வேண்டும்` என்பது அறநெறி.
அதனால் துயர் கூருந் தலைவியரை ஆற்றுவிக்கத் தலைவன் அணிந்திருக்கும் மாலையை இரத்தல் அகப்பாட்டுக்களுள் சொல்லப்படுகின்றது.
காரிகை - அழகு.
ஒடுங்கார் - பகைவர்.

பண் :

பாடல் எண் : 57

இருளார் மிடற்றால் இராப்பகல்
தன்னால் வரைமரையால்
பொருளால் கமழ்கொன்றை யால்முல்லை
புற்றர வாடுதலால்
தெருளார் மதிவிசும் பால்பௌவந்
தெண்புனல் தாங்குதலால்
அருளாற் பலபல வண்ணமு
மாஅரன் ஆயினனே.

பொழிப்புரை :

சிவபெருமான் கறுத்த கண்டத்தையுடைமையால் இரவாய் இருக்கின்றான்; தனது திருமேனி ஒளியால் பகலாய் இருக்கின்றான்; மானைக் கொண்டிருத்தலால் குறிஞ்சி நிலமாய் இருக்கின்றான்; அடையாளமாகப் பொருந்திய, மணங்கமழும் கொன்றையை அணிந்திருப்பதால் முல்லை நிலமாய் இருக்கின்றான்; பாம்புகள் இயங்கப் பெறுதலால் புற்றாய் இருக்கின்றான்; ஒளி பொருந்திய சந்திரன் தவழப் பெறுதலால் ஆகாயமாய் இருக்கின்றான்; தெளிவாகிய நீரைத் தாங்குதலால் கடலாய் இருக்கின்றான்.
இவ்வாறு அருள் காரணமாக அவன் பலப்பல பொருள் வடிவாய்க் காட்சியளிக்கின்றான்.

குறிப்புரை :

``தன்`` என்பது ஆகுபெயராய்த் தனது உடம்பைக் குறித் தது.
மரை - மான்.
`மதியால்` என்னும் மூன்றன் உருபு தொகுத்தலா யிற்று.
``விசும்பால்`` என்னும் ஆல், அசை.
சிவபிரானது தோற்றத்தை வியந்து கூறி `இத்தனைக்கும் காரணம் அவனது அருள்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 58

ஆயின அந்தணர் வாய்மை
அரைக்கலை கைவளைகள்
போயின வாள்நிகர் கண்ணுறு
மைந்நீர் முலையிடையே
பாயின வேள்கைக் கரபத்
திரத்துக்குச் சூத்திரம்போல்
ஆயின பல்சடை யார்க்கன்பு
பட்டவெம் ஆயிழைக்கே.

பொழிப்புரை :

மன்மதனது கையில் உள்ள படைக்கலத்திற்கு (கணைகளுக்கு) அவைகளைச் செயற்படாதபடி கட்டி வைக்கின்ற கயிறுபோலத் தோன்றுகின்ற பல சடைகளையுடைய எம்பெரு மானார்க்கு அன்பு செய்த எங்கள் மகளுக்கு இடையில் உடுத்துள்ள உடையும், கையில் அணிந்துள்ள வளையல்களும் அவளை விட்டு நீங்கிப் போய்விட்டன.
வாள் போன்ற கண்களில் தீட்டப்பட்டுள்ள மையோடு வீழ்கின்ற கண்ணீர்த் துளிகள் மார்பிடையே தாரையாய்ப் பாய்கின்றன.
ஆகவே, அறவோர் கூறும் மெய்ம்மொழி இவள்பால் மெய்யாகிவிட்டது.

குறிப்புரை :

அம்மொழியாவது `பற்றற்றான் பற்றினைப் பற்றினால் மற்றைய எல்லாப்
பற்றுக்களும் அற்றுவிடும்` என்பது
பற்றை அறுப்பதோர் பற்றினைப் பற்றிஅப்
பற்றை அறுப்பர்என் றுந்தீபற
என்னும் திருவுந்தியாரையும் காண்க.
வேள் - மன்மதன்.
கர பத்திரம்- கை வாள்.
அது பொதுவே `படைக்கலம்` என்னும் பொருட்டாய்க் கணையைக் குறித்தது.
மன்மதனது குறும்பு சடையையுடைய யோகிகள்பால் செல்லாமை பற்றிச் சிவபெருமானது சடைகளை அவனது கணைகளைக் கட்டிப் போடுகின்ற கயிறாக உவமித்தார்.
``வேங்கைக் கர பத்திரத்துக்கு`` என்பது முதலாகத் தொடங்கி, `அந்தணர் வாய்மை ஆயின` என மாற்றி, இறுதியில் வைத்து உரைக்க ``அந்தணர்`` என்றது அறவோரை.
`வாய்மை` என முன்னர் வந்தமை யால் பின்னும் அதனைக் கூறாது வாளா ``ஆயின`` என்றாள்.
இது காதலால் நலிகின்ற தன் மகளது நிலைமை கண்டு செவிலி இரங்கிக் கூறியது ஆகலின், அந்தணர் வாய்மையைப் புகழ்ந்தது வஞ்சப் புகழ்ச்சியாம்.
எனினும் அடியவர் நோக்கில் உண்மையே உள்ளுறைப் பொருளில் செவிலி, உலகர்.

பண் :

பாடல் எண் : 59

இழையார் வனமுலை வீங்கி
இடையிறு கின்றதுஇற்றால்
பிழையாள் நமக்கிவை கட்டுண்க
என்பது பேச்சுக்கொலாம்
கழையார் கழுக்குன்ற வாணனைக்
கண்டனைக் காதலித்தாள்
குழையார் செவியொடு கோலக்
கயற்கண்கள் கூடியவே.

பொழிப்புரை :

மூங்கில்கள் நிறைந்துள்ள `திருக்கழுக் குன்றம்`` - என்னும் மலைமேல் வாழ்கின்றவனும், வரையறைப் படாதவனும் ஆகிய சிவபெருமானை இவள் காதலித்தாள்; அஃது எங்ஙனமெனின், இவளது அழகிய கண்கள் குழை பொருந்திய காதுகளுடன் சென்று சேர்ந்தன.
(நன்றாகத் தன் கண்களை உருட்டி இவள் சிவபெருமானை நோக்கினாள்` - என்றபடி) அதனால் அணிகள் நிறைந்த, அழகிய இவளது கொங்கைகள் மிகவும் பூரித்தலால் இவளுடைய இடை கொங்கைகளைச் சுமக்க மாட்டாது ஒடிந்து கொண்டிருக்கின்றது.
அஃது அறவே ஒடிந்துவிட்டால், இவள் பிழைக்க மாட்டாள் (என்பதைச் சொல்ல வேண்டுமோ! காதலால் இவள் உடம்பு பூரித்தலை, `நமக்குக் கட்டுப்பட்டு அடங்குவதாக` என நாம் சொல்வது வெறும் பேச்சே.

குறிப்புரை :

`அதனால் நாம் சிவபெருமானிடம் சென்று முறையிட்டுக் கொள்வதே வழி` என்பது குறிப்பெச்சம்.
இதுவும் மேற்கூறிய துறையே.
திரிபின்றி உறைத்த பத்தியுடையவரது நிலைமையை உணரும் பொழுது உலகவர் தம் செயல் அற்று அவர்வழி நிற்றல் இதன் உள்ளுறை.
கண்ணப்பர் அடைந்த நிலைமைக்கு முதலில் வருந்தித் தெரிவிக்க முயன்ற தந்தை நாகனும், பிற வேடர்களும் பின்னர்ச் செயலற்றுத் திரும்பினமை இதற்கு எடுத்துக்காட்டாகும்.
மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க.
அகண்டனை, `கண்டன்` என்றது தலைக்குறை.
``காதலித்தாள்`` என்பதன் பின், `எங்ஙனம் எனின்` என்பது வருவிக்க.
`கண்கள் செவியொடு கூடின` என்றது நன்றாகப் பார்த்தமையைக் குறிப்பால் உணர்த்தியது.
வீங்கி - வீங்குதலால்.
``பிழையாள்`` என்பதன் பின் இசையெச்சம் வருவிக்கப்பட்டது.
கொல், ஆம் அசைகள்.

பண் :

பாடல் எண் : 60

கூடிய தன்னிடத் தானுமை
யாளிடத் தானைஐயா
றீடிய பல்சடை மேற்றெரி
வண்ணம் எனப்பணிமின்
பாடிய நான்மறை பாய்ந்து
கூற்றைப் படர்புரஞ்சுட்
டாடிய நீறுசெஞ் சாந்திவை
யாமெம் அயனெனவே.

பொழிப்புரை :

உமையவளை விரும்பிக் கூடிய தன் திருமேனியில் அவளை இடப்பாகத்தில் உடையவனைத் திருவையாற்றுத் தலத்தில் சென்று, `இவன் பாடியன நான்கு வேதங்கள், வெகுண்டு கொன்றது கூற்றுவனை; எங்கும் செல்வனவாகிய கோட்டைகளை எரித்துப் பூசிக்கொண்ட சாம்பலே இவனுக்கு நல்ல சந்தனம்; ஆகலின் இவன் எங்கள் சிவபெருமானே` என அடையாளம் கண்டு, `நெருப்பினது நிறம் இவன் தலையிலே உள்ள பல சடைகளிலும் உள்ளது` எனச்சொல்லி வணங்குங்கள்.

குறிப்புரை :

`வணங்கினால் பயன் பெறுவீர்` என்பது குறிப்பெச்சம்.
``இடத்தான்`` என இரண்டில் முன்னது, ஏழாவதன் பொருளில் வந்த மூன்றன் உருபை ஏற்ற பெயர்.
அம்மூன்றன் உருபு, பின் வந்த, ``இடித்தான்`` என்னும் குறிப்பு வினையொடு முடிந்தது.
இடத்தான் - இடப்பாகத்திலே உடையவன்.
`ஐயாற்றின் கண்`- என உருபு விரிக்க.
`ஈண்டிய என்பது இடைக்குறைந்து, ``ஈடிய`` என வந்தது.
ஈண்டுதல் - நெருங்குதல்.
பின் இரண்டு அடிகள் அடையாளம் காட்டின.
ஆம் - இவன்பால் உள்ளன.
இதன்பின் `ஆகலின், இவன்` எனவும், ``எம் அயன்`` என்பதன்பின் `கண்டு` எனவும் வேண்டும் சொற்கள் வருவித்து, `எரி வண்ணம் சடை மேற்று எனப் பணிமின்`` என முடிக்க.
ஐயன், `அயன்` எனப் போலியாய் வந்தது.

பண் :

பாடல் எண் : 61

அயமே பலியிங்கு மாடுள
தாணுவோர் குக்கிக்கிடப்
பயமே மொழியும் பசுபதி
ஏறெம்மைப் பாய்ந்திடுமால்
புயமேய் குழலியர் புண்ணியர்
போமின் இரத்தல்பொல்லா
நயமே மொழியினும் நக்காம
மாவும்மை நாணுதுமே.

பொழிப்புரை :

தாணுவே, (தலைவரே) நீர் இனிய வார்த்தை களையே பேசிய போதிலும், உமது கோலம் திகம்பரமாய் (நிருவாண மாய்) உள்ளது.
அதனால் உம்மைக் காண நாங்கள் வெட்கப்படுகின் றோம்.
அதனால், உம்முடைய வயிற்றுக்கு இட வேண்டுவது போல இங்கு நீர் பிச்சை ஏற்க வந்த செயலும் ஐயத்திற்கு உரியதே.
`பிச்சையிடு மின்; இட்டால் உங்கட்குப் புண்ணியம்` என்பனபோல், `நீவிர் சொல்லும் சொற்களும் உண்மைதாமோ` என ஐயுறவேண்டியுள்ளது.
இவைகிடக்க, நீர் ஏறிவந்திருக்கின்ற, பசுக்களுக்கெல்லாம் தலையாய எருது எங்களைப் பாய வருகின்றது.
ஆகவே, தங்கள் தோள்களின் மேல் நீர் பொருந்த இசைகின்ற மகளிர்தாம் உண்மையில் புண்ணியம் செய்பவராவர் (பிச்சையிடுவோர் புண்ணியரல்லர்) இப்படி நீர் பிச்சையெடுப்பது தீதாகும்.
இவ்விடத்தை விட்டுப் போய்விடுங்கள்.

குறிப்புரை :

இது, பிச்சைக் கோலத்தவராய்ச் சென்ற பெருமானைக் கண்டு காதலித்த மடவார் கூற்று, உண்மையில் அவரைக் கண்டு அவர்கள் நாணமும், வெறுப்பும் கொண்டவராயின் பொருக்கென இல்லத்துக்குள் போய்விட வேண்டியவர் தாமே? அதை விடுத்துப் பல வார்த்தைகளை விரிப்பது ஏன்?
`தாணு` என்பது விளி.
அது பன்மையொருமை மயக்கமாய் நின்றது.
குக்கி (குட்சி) = வயிறு.
`குச்சிக்கு இட இங்குப் போந்த பலி (ஏற்றல் செயல்) ஐயமே` என்க.
ஐயம், ``அயம்`` எனப் போலி யாயிற்று.
`மாடு உளஏறு, பசுபதியாம் ஏறு` எனத் தனி இயைக்க.
மாடு- பக்கம்.
`உம் பக்கம்` என்றபடி.
பயமே - பொருள் உடையனதாமோ? (உண்மையோ` - என்றபடி.
) ``குழல் `` என்னும் விதப்பினால் `வார் குழல்` (நீண்ட கூந்தல்) எனக் கொள்க.
``ஏய குழலியர்`` என்றது, `ஏய இசையும் குழலியர்` என்றபடி.
`குழலியரே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று.
`அவரே புண்ணியர்` என்றது, `அந்தப் புண்ணியச் செயலை விரும்பித்தான் நீர் வந்தீர்; பிச்சையிடும் புண்ணியச் செயலை விரும்பி வந்தீர்` என்றபடி.
அதை, ``புண்ணியம்`` என்றது வஞ்சப் புகழ்ச்சி,.
``இரத்தல்`` என்பதன் முன், `இவ்வாறு` என்பது ஆற்றலால் வந்து இயைந்தது.
`பொல்லாது` என்பதன் ஈறு தொகுத்தலாயிற்று.
`அம்மா` என்னும் அச்சக்குறிப்பு இடைச்சொல் இடைக் குறைந்து, `அமா`` என வந்தது.
`சிவன் பிச்சை ஏற்பது, உயிர்களைத் தன்பால் சேர்த்து கொள்ளுதற் பொருட்டே` என்பது இதன் உட் கருத்து.

பண் :

பாடல் எண் : 62

நாணா நடக்க நலத்தார்க்
கிடையில்லை நாமெழுக
ஏணார் இருந்தமி ழார்மற
வேனுந் நினைமினென்றும்
பூணார் முலையீர் நிருத்தன்
புரிசடை எந்தைவந்தால்
காணா விடேன்கண் டிரவா
தொழியேன் கடிமலரே.

பொழிப்புரை :

அணிகலன்கள் பொருந்திய தனங்களையுடைய தோழியர்களே, (உங்கள் உதவியை நாடாது) `நாமே செல்வோம்` என்றால் (நாணம் தடுக்கின்றது) நாணம் உண்டாகாதபடி செல்லச் சமையம் வாய்க்கவில்லை.
நடனம் புரிபவரும் புரியாகிய சடைகளை யுடையவரும், உலகர் எல்லாராலும் `எம் தந்தை` என்று போற்றப்படு பவரும் ஆகிய சிவபெருமான் (இங்கு வருவார்) வந்தால், நான் அவரைக் காணாமல் இருந்துவிடமாட்டேன்.
கண்டு, `உம்மை யான், உம்மை அகப்படுத்தவல்ல பெரிய தமிழாற்பாடி மறவாதிருக் கின்றேன்; இதை நினைமின்` என்று சொல்லி அவர் அணிந்துள்ள வாசனை பொருந்திய மலர் மாலையை இரந்து வாங்கவும் செய்வேன்.

குறிப்புரை :

`முலையீர்`, `நாம் எழுக` என்றால் நாணாது நடக்க இடையில்லை` என மாற்றி ஒரு சொல் வருவிக்க.
`நாணாது` என்பது கடைக் குறைந்தது.
இடை - சமையம்.
எண் - வலிமை, இருமை - பெருமை அஃது இங்கு விரிவைக் குறித்தது.
`சிவபெருமான் தமிழ் விருப்பன்` என்பதை, ``நீர் தமிழோடு இசை கேட்கும் இச்சையால் காசு நித்தம் நல்கினீர்`` * என்பது முதலியவற்றால் அறிக.
`தமிழாற் பாடி` எனவும் ஒருசொல் வருவிக்க.
`உம்மை மறவேன்`` என உருபு விரித்து மாற்றுக.
``என்றும்`` என்னும் இறந்தது தழுவிய எச்ச உம்மையைப் பிரித்து, `இரவாது` என்பதனுடன் கூட்டுக.
இது தூதுவிடக் கருதிய, தோழியரோடு, புலந்து கூறியது, இது வாயிலாக, தமிழாற் பாடுவோரைச் சிவபெருமான் மிக விரும்புதல் குறிக்கப்பட்டது.
``தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்`` * என்பது முதலியவற்றையும் காண்க.

பண் :

பாடல் எண் : 63

கடிமலர்க் கொன்றை தரினும்புல்
லேன்கலை சாரலொட்டேன்
முடிமலர் தீண்டின் முனிவன்
முலைதொடு மேற்கெடுவன்
அடிமலர் வானவர் ஏத்தநின்
றாய்க் கழ கல்லவென்பேன்
தொடிமலர்த் தோள்தொடு மேல்திரு
வாணை தொடங்குவனே.

பொழிப்புரை :

(நாளை இங்கு வருகின்ற சிவபெருமான் என்னைத் துறவாமைக்கு அடையாளமாகத் தனது) வாசனை பொருந்திய கொன்றை மலர்களால் ஆன மாலையை வலிய எனக்குத் தந்தானாயினும் யான் உடல் பொருந்தத் தழுவ மாட்டேன்; எனது உடையை அவன் பற்றவரின் நெருங்க விடமாட்டேன்; என் கூந்தலில் முடிக்கப்பட்டுள்ள மலரைத் தொடும் முறையால் என்னைத் தொட முயல்வானாயின், வெகுண்டு விலக்குவேன், `கொங்கையை அவன் தொட்டு விட்டால் நான் இறந்து விடுவேன்` (என்பது தோன்றப் புறங் காட்டி நிற்பேன்) பிற குறும்புகளும் செய்வானாயின் `தேவர் பலரும் உனது திருவடிகளை வணங்க இருக்கின்ற உனக்கு இவையெல்லாம் அழகல்ல` என அறிவுரை கூறுவேன், அவைகளையும் கடந்து அவன், வளையும், மாலையும் பொருந்திய எனது தோள்களை வலாற்கார மாகப் புல்ல வருவானாயின் அவன்மீதே ஆணை வைக்க முயலுவேன்.

குறிப்புரை :

`ஆகலான் நீ கவலற்க` என்பது குறிப்பெச்சம்.
இது வரைவுகடாவ எண்ணிய தோழியைத் தலைவி உடன்பட்டுக் கூறியது.
`தலைவன் வரைவு நீட்டிப்பின் இருமுது குரவர் பிறர் வரைவுக்கு உடன்படுதல் முதலியன நேரத் தலைவி இறந்துபடுவாள்` எனத் தோழி கவன்று, தலைவனை வரைவு கடாதற்கு விரைதல் இயல்பு.
அவ்வழித் தலைவி புணர்ச்சி மறுப்பாள் என்க.
அதிதீவிர பக்குவிகள் சத்தியோ நிர்வாணத்தையை விரும்பி வேண்டுதல் இதன் உள்ளுறை.
முனிதல் அதன் காரியம் தோற்றி நின்றது.
`தான் இறந்து படின் அவனும் படுவான்` எனத் தலைவி அஞ்சுவாள் ஆதலின், ``கெடுவேன்`` என்றது, கெடுதலைக் குறிப்பித்தலையேயாம்.
ஏனையோர்மீது வைக்கும் ஆணைபோலாது சிவன்மீது வைக்கும் ஆணை தலையாயது ஆகலின் ``திரு ஆணை `` என்றார்.
ஆணை வைத்து விடின் பின்னர்க் கூட்டம் இன்றாம் ஆகலின், ``ஆணை தொடங்குவன்`` என்றாள்.

பண் :

பாடல் எண் : 64

தொடங்கிய வாழ்க்கையை வாளா
துறப்பர் துறந்தவரே
அடங்கிய வேட்கை அரன்பால்
இலர்அறு காற்பறவை
முடங்கிய செஞ்சடை முக்கண
னார்க்கன்றி இங்குமன்றிக்
கிடங்கின்றி பட்ட கராவனை
யார்பல கேவலரே.

பொழிப்புரை :

(இல்லறத்தார் கிடக்க,) துறவறத்தை மேற் கொண்டவர்களிலே பலர் அந்தத் துறவறத்தைப் பயனிலதாகப் போக்குவர்.
எங்ஙனம் எனின், உலகப் பொருள்களினின்றும் நீக்கிய தங்கள் ஆசையை அரன்பால் செலுத்தாது, வேறு எவ்வெப்பொருளிலேயோ செலுத்துதலால்.
ஆகவே, அவர்கள் சிவனிடத்து அன்பு செய்யாது பிற விடத்து அன்பு செய்தலால் அம்மைக்கும் உரியராகாது, இவ்வுலகப் பொருள்களைத் துறந்தமையால் இம்மைக்கும் உரியராகாது, அகழியுட் கிடக்கும் முதலைபோலத் துன்பத்திற் கிடத்தலல்லது, கரையேறாது தமியர் ஆகின்றனர்.

குறிப்புரை :

`இந்நிலை இரங்கத் தக்கது` என்பது குறிப்பெச்சம்.
``துறந்தவரே`` என்பதை முதலில் வைத்து, ``இலர்`` என்பதன் பின் `ஆகலின்` என்பதனைக் கூட்டுக.
அடங்கிய - உலகப் பொருள்மேல் செல்லாது அடங்கிய.
அறுகாற் பறவை, வண்டு.
அவை முடங்குதல் கொன்றை மலரிடத்து.
எனவே, `கொன்றையைச் சூடிய சடை` என்றபடி.
``அன்றி`` இரண்டில் முன்னது, `மாறுபட்டு` என்றதாம்.
பின்னது, `உரியராகாமல் எனப் பொருள் தந்தது.
``இங்கும்`` என்ற உம்மையால், `அங்கும்` என்பது பெறப்பட்டது.
`அங்கு, இங்கு` என்பன, `அம்மை, இம்மை` என்பவற்றைச் சுட்டின.
கிடங்கு - அகழி.
கரா - முதலை அது கரையேறாமைக்கு உவமை.
`கேவலர் தமியர்` என்பன ஒரு பொருளைக் குறிக்கும்.
தமியர் - துணையற்றவர்.
`உலகப் பற்றை விட்டபோதிலும், மெய்யுணர்வு இல்லையேல் துறவு பயன் இலதாம்` என்றபடி.
இதனைத் திருவள்ளுவரும்,
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.
1 என அருளிச்செய்தார்.
இத்தன்மையோரையே அப்பர் பெருமானும் ``இருப்பிறப்பும் வெறுவியர்`` 2 என்று அருளினார்.

பண் :

பாடல் எண் : 65

வலந்தான் கழலிடம் பாடகம்
பாம்பு வலமிடமே
கலந்தான் வலம்நீ றிடம்சாந்து
எரிவலம் பந்திடமென்பு
அலர்ந்தார் வலமிடம் ஆடகம்
வேல்வலம் ஆழியிடம்
சலந்தாழ் சடைவலம் தண்ணங்
குழலிடம் சங்கரற்கே.

பொழிப்புரை :

சிவபெருமானுக்கு வலப்பாதியும், இடப்பாதியும் மாறுபட்டதான வடிவம் உள்ளது.
எங்ஙனம் எனின், வலப்பாதியில் காலில் வீரக்கழல், மார்பில் பாம்பு, சாம்பல், இறந்தவர் எலும்பால் ஆகிய மாலை, கையில் மழு, சூலம், தலையில் நீர் தங்கியுள்ள சடை - இவ்வாறு உள்ளது.
இடப்பாதியில் காலில் பாடகம், மார்பில் விலை உயர்ந்த அணி கலம், சந்தனம், பொன்னரி மாலை, கையில் பந்து, மோதிரம், பூச்சூடிய கூந்தல் - இவ்வாறு உள்ளது.

குறிப்புரை :

`வலப்பாதி ஆணும், இடப்பாதி பெண்ணுமாய் உள்ளது` என்றபடி.
`இது ஒரு பெருவியப்பு` என்பது குறிப்பெச்சம்.
`சிவபெருமானது உருவம், ஏனையோரது உருவம் போன்றதன்று` என்பதாம்.
அப்பர் பெருமானும், சிவபெருமானது திருவடிகளை,
``உருவிரண்டும் ஒன்றோடொன்றொவ்வா அடி`` என்று அருளினார்.
செய்யுள் நோக்கிச் சிலவற்றை முறை பிறழ வைத்தார்.
``எரி`` என்றது மழுவை.
சலம் - நீர்.
தாழ்தல் - தங்குதல்.

பண் :

பாடல் எண் : 66

சங்கரன் சங்கக் குழையன்
சரணார விந்தந்தன்னை
அங்கரங் கூப்பித் தொழுதாட்
படுமின் தொண் டீர்நமனார்
கிங்கரர் தாம்செய்யும் கீழா
யினமிறை கேட்டலுமே
இங்கரம் ஆயிரம் ஈரவென்
நெஞ்சம் எரிகின்றதே.

பொழிப்புரை :

தொண்டு மனப்பான்மையுடைவர்களே, யம கிங்கரர்கள் (தூதுவர்கள்) சிவபெருமானுக்கு ஆட்படாதவர்கட்குச் செய்யும் இழிவான பல துன்பங்களை நூல்கள் வாயிலாகக் கேட்ட வுடன் இவ்வுலகத்திற்றானே எனது மனம் ஆயிர அரங்களால் அராவு வது போலத் துன்பத்தால் வெதும்புகின்றது.
ஆகவே, நீவிரும் பிற தொண்டுகளை விடுத்து, சுகத்தைச் செய்தலால், `சங்கரன்` எனப் பெயர் சொல்லப்படுகின்ற.
சங்கக் குழையணிந்த செவியையுடைய சிவபெருமானுடைய திருவடித் தாமரையை அகங்கைகளைக் குவித்துக் கும்பிட்டு, அவனுக்கே ஆளாகித் தொண்டு செய்யுங்கள்.

குறிப்புரை :

`செய்தால், யமகிங்கரர் அணுகார்` என்பது குறிப்பெச்சம்.
மிறை - துன்பம்.
கீழாயின மிறை.
அருவருக்கத் தக்க துன்பம்.

பண் :

பாடல் எண் : 67

எரிகின்ற தீயொத் துளசடை
ஈசற்கத் தீக்கிமையோர்
சொரிகின்ற பாற்கடல் போன்றது
சூழ்புனல் அப்புனலிற்
சரிகின்ற திங்களோர் தோணியொக்
கின்றதத் தோணியுய்ப்பான்
தெரிகின்ற திண்கழை போன்றுள
தாலத் திறலரவே.

பொழிப்புரை :

சிவபெருமானுக்கு அவனது சடை எரிகின்ற தீயைப் போலவும், அந்தச் சடையில் சுழல்கின்ற நீர் அந்தத் தீயை அணைப்பதற்காகத் தேவர்கள் ஊற்றுகின்ற பாற்கடற் பால் போலவும், அந்த நீரில் மிதந்து செல்கின்ற பிறை ஒரு தோணிபோலவும், அந்தப் பிறையைச் சூழ்கின்ற திறமையுடைய பாம்புகள் அந்தத் தோணியை இயக்குதற்குத் தெரிந்தெடுத்த உறுதியான மூங்கில் போலவும் உள்ளன.

குறிப்புரை :

மாலையுவமை.
திங்கட் கதிரால் நீர் வெண்ணிறம் பெற்றது.
இது சிவபெருமானது தலைக் கோலத்தைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 68

அரவம் உயிர்ப்ப அழலும்
அங்கங்கை வளாய்க்குளிரும்
குரவங் குழலுமை ஊடற்கு
நைந்துரு கும்அடைந்தார்
பரவும் புகழண்ணல் தீண்டலும்
பார்வா னவைவிளக்கும்
விரவும் இடரின்பம் எம்மிறை
சூடிய வெண்பிறையே.

பொழிப்புரை :

எங்கள் கடவுளாகிய சிவபெருமான் முடியில் சூடியுள்ள வெள்ளிய பிறை, அங்குள்ள பாம்பு தன்னை நோக்கிச் சீறும் பொழுது தான் கோபத்தால் தணலாய் எரியும்.
அங்குள்ள அழகிய கங்கை பாயும்பொழுது குளிர்ச்சியடையும்.
குராமலரைச் சூடியுள்ள கூந்தலையுடைய உமையவள் ஊடல் கொள்ளும் பொழுது, தன்னை அடைந்தோரால் துதிக்கப்படுகின்ற சிவபெருமான் (உமை அறியாத படி) தன்னைக் கையால் தீண்ட, தான் நைந்து உருகி உமையவள்மேல் தனது கதிர்களைப் பொழியும்.
மற்றைய நேரங்களில் நிலத்தையும், வானத்தையும் இருள் நீங்க ஒளி பெற்று விளங்கச் செய்யும்.
ஆகவே, அது துன்பத்தையும், இன்பத்தையும் மாறி மாறி அடைவதாகின்றது.

குறிப்புரை :

திங்களின் கதிர்கள் காதலை மிகுவித்தலால் உமையவள் ஊடல் தணிவாளாவள்.
அதன் பொருட்டுத் திங்களைத் தூண்டச் சில சொற்களைச் சொல்லின் உமை மேலும் வெகுள்வாள் ஆதலின், குறிப்பால் தூண்டச் சிவபெருமான் தனது கையால் தீண்டுவான் என்க.
இவ்வாறு செய்தல் உலக வழக்கம்.
இது சிவபெருமானது தலைக் கோலத்துள் பிறை ஒன்றனையும் புகழ்ந்தவாறு.
``வளாய்`` என்பதனை `வளாவ` எனத் திரிக்க.

பண் :

பாடல் எண் : 69

பிறைத்துண்டஞ் சூடலுற் றோபிச்சை
கொண்டனல் ஆடலுற்றோ
மறைக்கண்டம் பாடலுற் றோவென்பும்
நீறும் மருவலுற்றோ
கறைக்கண்டம் புல்லலுற் றோகடு
வாயர வாடலுற்றோ
குறைக்கொண் டிவளரன் பின்செல்வ
தென்னுக்குக் கூறுமினே.

பொழிப்புரை :

(மகளிர்) இவள் (தலைவி) சிவன் பின்னே குறையிரந்து செல்லத் துணிந்தது அவன் சூடியுள்ள பிறையைத் தான் சூட விரும்பியோ? (அவனுடன் சென்று) பிச்சை ஏற்றுப்பின் அவ னோடு கூடத் தீயில் நின்று ஆட விரும்பியோ? அவனோடு இணைந்து கண்டத்தினின்றும் சாமவேதம் பாடவிரும்பியோ? அவன் அணிகின்ற எலும்பு மாலையையும், பூசுகின்ற சாம்பலையும் தானும் அணியவும், பூசவும் விரும்பியோ? அவனுடைய கருமையான கழுத்தைக் கட்டித் தழுவ விரும்பியோ? அவன் தன்மேல் ஆடவிட்டுள்ள நஞ்சு பொருந்திய வாயினையுடைய பாம்புகளைத் தன்மேலும் ஆட விட்டுக்கொள்ள விரும்பியோ? `எதனை விரும்பி` என்பதை எனக்கு நீவிர் கூறுமின்.

குறிப்புரை :

இது, செவிலி தலைவியது வேறுபாடு கண்டு இரங்கி ஆயத்தாருடன் கூறியது.
அவளால் காதலிக்கப்பட்ட சிவனைச் செவிலி தலைவியை ஆற்றுவித்தற்கு இயற்பழித்துக் கூறினாள்.
மெய்யுணர்வில்லாதார் சிவனது கோலங்களை இகழ்தலைக் குறித்தல் இதன் உள்ளுறை.
இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம்
இவரை இகழ்வதே கண்டீர்.
* என மேல் வந்த அம்மை திருவாக்கினைக் காண்க.
``செல்வது`` என்பது எதிர்காலம்.
ஆதலின் அது செல்லத் துணிந்தமையையே குறித்தது.
பின் செல்லல், வழிப்படுதலைக் குறித்த குறிப்பு மொழி.
`இது துணிந்தவள் உடன் போக்கிற்கும் உடன் படுவாள்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 70

கூறுமின் ஈசனைச் செய்ம்மின்குற்
றேவல் குளிர்மின்கண்கள்
தேறுமின் சித்தம் தெளிமின்
சிவனைச் செறுமின்செற்றம்
ஆறுமின் வேட்கை அறுமின்
அவலம் இவைநெரியா
ஏறுமின் வானத் திருமின்
விருந்தாய் இமையவர்க்கே.

பொழிப்புரை :

(உலகீர்; நீவிர் நும்செயல்களை விடுத்து,) சிவனைத் துதியுங்கள்; அவனுக்கு அணுக்கராய் நின்று சிறிய பணி விடைகளைச் செய்யுங்கள்.
(அன்பினால் நீர் துளித்தலால்) கண்கள் குளிர்ச்சியடையுங்கள்; மனத்தை ஒரு நிலையில் நிறுத்துங்கள்; `சிவனே முதல்வன்` - என அவனைத் தெளியுங்கள்; எவரிடத்தும் பகைமை கொள்ளுதலைத் தடுங்கள்; ஆசையை அடக்குங்கள்; துன்பத்தினின்றும் நீங்குங்கள்; இவைகளையே வழியாகப் பற்றி வானுலகில் ஏறுங்கள்; ஏறியவராய் அங்கு வானத்தவர்க்கு எய்தற் கரிய விருந்தினராய் அங்கு அவர் உபசரிக்க வீற்றிருங்கள்.

குறிப்புரை :

குற்றேவலே கிரியா பூசையாகச் சொல்லப்படுகின்றது.
``ஏறுமின்`` என்றது குறிப்புருவகம்.
உலகியலில் நிற்போரை நோக்கிக் கூறினார்.
ஆகலின், `அவரது விருப்பமும் இவற்றால் நிறைவுறும்` என்றற்கு.
``வானத்து விருந்தாய் இருமின்`` என்றார்.
`சிவ வழிபாடே எல்லாப் பயன்களையும் தரும்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 71

இமையோர் கொணர்ந்திங் கிழித்திட
நீர்மைகெட் டேந்தல்பின்போய்
அமையா நெறிச்சென்றோர் ஆழ்ந்த
சலமக ளாயணைந்தே
எமையா ளுடையான் தலை
மகளாவங் கிருப்பவென்னே
உமையா ளவள்கீழ் உறைவிடம்
பெற்றோ உறைகின்றதே.

பொழிப்புரை :

(கங்கையானவள் தான் வானுலகத்திலே இருக்கவும்) தேவர்கள் கொணர்ந்து நிலத்திலே இறக்கிவிடத் தன் தன்மை கேட்டு, (ஆகாயகங்கை` என்னும் சிறப்பு நீங்கி,) ஓர் அரசன் பின்னேசென்று, தனக்கு ஏற்புடைத்தாகாத வழியிலே நடந்து, பின்பு ஓர் ஆழமான ஆற்றுவடிவத்தை அடைந்து, தனது கரையில் எம்மை ஆளுடையானாகிய சிவன் தலைவனாய் வீற்றிருக்க.
அதனால் அவன் தேவி உமையவள் தலைவியாய் இருத்தலால் அவருக்குக் கீழே ஓர் உறைவிடம் பெற்றோ இருப்பது! (இஃது என்ன முறை!)

குறிப்புரை :

சிவன் ஆகாய கங்கை மண்ணில் வந்து காசியில் சிறந்த புண்ணிய நதியாய் இருக்கச் செய்து, அதன் கரையில் தானும், தன் தேவியும் வீற்றிருந்து அங்குச் சென்று அந்த கங்கையில் முழுகித் தன்னை வழிபட்டவர்களது பாவங்களைப் போக்குதலும், இறந்தவர் களுக்கு வீடுபேற்றைத் தருதலும் ஆகிய அருட் செயல்களைக் கங்கை யின் பொருட்டு இரங்குவார் போலக் கூறியவாறு.
காசிக் கங்கை நதியின் பெருமையும் இதனால் குறிக்கப்பட்டது.
``ஏந்தல்`` என்றது பகீரதனை.
அமையா நெறி, தரை வழி.
பகீரதன் கங்கையைக் கொணர்ந்த வரலாற்றினை இராமாயணம் முதலியவற்றிற் காண்க.
``இமையோர்`` என்பது பிரமன் ஆணையைப் பெற்ற தேவர்களை.
`கெட்டு, ஆய் அணைந்து, உறைகின்றது` - என்பவற்றிற்கு, `கங்கை` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க.
``சலமகளாய்`` என்றது, `நதி வடிவாய்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 72

உறைகின் றனரைவர் ஒன்பது
வாயிலோர் மூன்றுளவால்
மறைகின்ற என்பு நரம்போ
டிறைச்சி உதிரம்மச்சை
பறைகின்ற தோல்போர் குரம்பை
பயனில்லை போயடைமின்
அறைகின்ற தெண்புனல் செஞ்சடைக்
கொண்டோன் மலரடிக்கே.

பொழிப்புரை :

(உலகீர்) விரிந்து கிடக்கின்ற தோலாகிய கூரை வேய்ந்த சிறு குடிலாகிய இந்த உடம்பில் அக்கூரையால் எலும்பும், நரம்பும், இறைச்சியும், குருதியும், மச்சையுமாகிய கட்டுப் பொருள்கள் வெளித்தோன்றாது மறைந்து கிடக்கின்றன.
(வெளித் தோன்றினால் அருவருப்பைத் தரும்.
) இந்தச் சிறுகுடிலுக்கு வாயில்களோ ஒன்பது உள்ளன.
(ஆகவே பாதுகாப்பில்லை.
) இதில் பண்டங்கள் மூன்றே உள்ளன.
அவைகளை முன்னிட்டு இதில் ஐந்துபேர் வாழ்கின்றனர்.
(ஆகவே, இதில் உங்கட்குப் பயன் எப்படிக் கிடைக்கும்?) கிடையாது, ஆகையால், ஒலிக்கின்ற, தெளிவாகிய நீரைச் சிவந்த சடையிலே வைத்துள்ள சிவபெருமானது மலர்போலும் திருவடிகளை நோக்கிச் சென்று, அவற்றையே அடைமின்கள்.

குறிப்புரை :

ஐவர் - ஐம்புல ஆசைகள்.
மூன்று - வாத பித்த சிலேத்து மங்கள்.
மச்சை - பித்த நீர் ``போர் குரம்பை``, இறந்தகால வினைத் தொகை.
குரம்பையில்` என உருபு விரித்து, `என்பு முதலியன மறை கின்ற` என்க.
மறைகின்ற, அன்பெறா அகர ஈற்றுப் பலவின்பால் வினை முற்று.
`யாக்கையது நிலையாமையையும், துன்ப மிகுதியையும் உணர்ந்து இதன்மேல் உள்ள பற்றினை விடுத்துச் சிவனது திருவடிகளைப் பற்றல் வேண்டும் என்றபடி.
போதல் பற்று விடுதலையும், அடைதல் பற்றுதலையும் குறித்தன.
`உடம்பினால் வரும் துன்பத்தினை எண்ணாமல் அதன்மேல் மக்கள் பற்றுச் செய்கின்றனர்` என்பதைத் திருவள்ளுவர், இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர்.
* என்பதனால் உணர்த்தினார்.

பண் :

பாடல் எண் : 73

அடிக்கண்ணி கைதொழு தார்க்ககன்
ஞாலங் கொடுத்தடிநாய்
வடிக்கண்ணி நின்னைத் தொழவளை
கொண்டனை வண்டுண்கொன்றைக்
கடிக்கண்ணி யாயெமக்கோரூர்
இரண்டகங் காட்டினையால்
கொடிக்கண்ணி மேல்நல்ல கொல்லே
றுயர்த்த குணக்குன்றமே.

பொழிப்புரை :

வண்டுகள் தேனை உண்கின்ற கொன்றை மலரால் ஆகிய, நறுமணம் பொருந்திய கண்ணியைச் சூடியுள்ளவனே, நீ, உனது திருவடியை விரும்பி உன்னைக் கையால் தொழுதவர்கட்கெல்லாம் பெரிய இவ்வுலகத்தையே பரிசிலாகக் கொடுத்து, உனது அடிக்கீழ் கிடக்கும் நாய்போன்ற, மாவடு ஒத்த கண்களையுடைய இவள் நின்னைத் தொழ, (இவட்கு ஏதும் கொடாமல்) இவள் அணிந்திருந்த வளையல்களையும் கொண்டுவிட்டாய்.
கொடியை உயர்த்துக் கட்டும் கயிற்றில் அறமாகிய இடபக் குறியை உயர்த்துள்ள குணமலை போல்பவனே, எங்களைப் பொறுத்தமட்டில் ஓர் ஊரில் இரண்டு இல்லங்களைக் காட்டுதல் போலும் செயலைச் செய்தால்; (இது நீதியோ!)

குறிப்புரை :

``அடிக்கண்ணி`` என்பதில் ககர ஒற்று எதுகை நோக்கி விரிந்தது.
``கண்ணி`` - நான்கில் முதலாவது `கருதி` என்றும், இரண்டா வது, `கண்களையுடையவள்` என்றும், மூன்றாவது, `முடியில் அணி யும் மாலை` என்றும், இறுதியது `கயிற்று முடி` என்றும் பொருள் தந்தன.
ஓர் ஊரில் இரண்டு சுகம் - `வேண்டுபவர்க்கு` என்று எல்லா நலங்களும் நிறைந்த ஓர் இல்லமும், `வேண்டாதவர்க்கு` என்று ஒன்றும் இல்லாத ஓர் இல்லமுமாக அமைத்தல்.
ஓர் இல்லமேயிருப்பின் வேற்றுமையில்லை.
அதனால், `இரண்டகம்` என்று சொன்னாலே, `வேண்டாதவர்கட்கு` என்று வேறு இல்லம் அமைப்பதையே குறித்தல் வழக்கு.
`உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யாதே` என்பர்.
நன்மை, அறம்.
``கொல்லேறு`` என்றது இன அடை.
`ஏனையோர்க்கெல்லாம் அருள்செய்து, இவளைக் காதலால் வருந்தவிட்டாய்` என்பது கருத்து.
இது தலைவியது ஆற்றாமை கண்டு செவிலி இரங்கிக் கூறியது.
`மாணிக்க வாசகர் போலச் சிவனை அடைதலில் வேட்கை மிக்காரைச் சிவன் இவ்வுலகத்தில் வைத்தல் என்னை` என உலகத்தார் இரங்கி ஆராய்தல் இதன் உள்ளுறை.

பண் :

பாடல் எண் : 74

குன்றெடுத் தான்செவி கண்வாய்
சிரங்கள் நெரிந்தலற
அன்றடர்த் தற்றுகச் செற்றவன்
அற்றவர்க் கற்றசிவன்
மன்றிடைத் தோன்றிய நெல்லிக்
கனிநிற்ப மானுடர்போய்
ஒன்றெடுத் தோதிப் புகுவர் நரகத்
துறுகுழியே.

பொழிப்புரை :

தான் வீற்றிருக்கும் மலையைப் பெயர்த்த இராவணனை அன்று அவன் தனது காது, கண், வாய், தலை எல்லாம் நெரிந்து அவன் `ஓ` என்று அலறும்படி அடர்த்து, அவனது அகங்காரம் முழுதும் அற்றொழிய அவனை ஒறுத்தவனும், மற்றுப் பற்றுக்கள் எல்லாவற்றையும் விட்டுத் தன்னையே பற்றாகப் பற்றுவோர்க்குத் தானும் தன் பெருமைகளையெல்லாம் விட்டு அவர்க்கு இரங்கி வந்து எவ்வகையிலும் நலம் புரிபவனும் ஆகிய `சிவன்` என்னும் அரு நெல்லிக்கனி வெளியிடத்திலே தோன்றி நிற்க.
மக்கள் அதனை உண்ணாமல் தமக்கு எளிதில் தெரிந்ததை எடுத்துச் சொல்லி இறப்பிற்கு ஆளாகிப் பின்பு மிக ஆழ்ந்த குழியாகிய நரகத்திலும் வீழ்கின்றனர்.

குறிப்புரை :

`இஃது அவரது அறியாமையின் நிலை` என்பது குறிப் பெச்சம் `நிக்கிரகமும், அநுக்கிரகமும் செய்யவல்ல முழுமுதல்` என்பதை முதல் இரண்டடிகள் குறித்தன.
``அற்றவர்க்கு அற்ற சிவன் உறைகின்ற ஆலவாய்`` * என்ற திருஞானசம்பந்தர் திருமொழி காண்க.
சிவன் அற்றவர்க்கு அற்றவன் ஆதலை, வன்றொண்டருக்கு இருமுறை தூது நடந்தமை முதலியன பற்றி அறிக.
செவி, கண் முதலிய வற்றை விதந்தோதியது.
அவை அளவின் மிக்கிருந்தமை குறித்தற்கு.
நெல்லிகனி, ஔவை உண்ட நெல்லிக்கனி போல்வது.
`சிவனை அடைந்தால் இறப்பில்லை` என்பதை அது குறித்தது.
ஒன்று - எளிதாகிய ஒன்று.
அது சிவனது கோலம்.
`அந்தக் கோலத்தின் மெய்ம்மையறியாது இகழ்ந்து, நரகுறுகின்றனர்` என்றபடி.
`உறுகுழி` நரகத்துப் புகுவர்` என மாற்றியுரைக்க.
உறு - மிகுதி.

பண் :

பாடல் எண் : 75

குழிகண் கொடுநடைக் கூன்பற்
கவட்டடி நெட்டிடையூன்
உழுவைத் தழைசெவித் தோல்முலைச்
சூறை மயிர்ப்பகுவாய்த்
தெழிகட் டிரைகுரல் தேம்பல்
வயிற்றுத் திருக்குவிரற்
கழுதுக் குறைவிடம் போல் கண்டன்
ஆடும் கடியரங்கே.

பொழிப்புரை :

யாவர்க்கும் தலைவனாகிய சிவன் ஆடுகின்ற விளக்கமான அரங்கமாவது, ஆழமான கண்களையும், வேகமான நடையினையும், வளைவான பிளவுபட்ட பாதங்களையும் நீண்ட இடையினையும், ஊன் தின்னும் புலி தொங்குகின்ற விரிந்த செவிகளையும், வெறுந் தோலாய்த் திரைந்த கொங்கைகளையும், பரட்டை மயிரினையும், பிளந்த வாயினையும், `கட்டு, உதை` என்று அதட்டி இரைகின்ற குரலையும், ஒட்டிய வயிற்றையும், முறுக்கிய விரல்களையும் உடைய பேய்களுக்கு உரிய உறைவிடந்தான் போலும்!

குறிப்புரை :

`வேறு இடம் இல்லையோ` என்பது குறிப் பெச்சம்`இங்குக் குறிக்கப்பட்ட இடம் முதுகாடு` என்பது தெளிவு.
`முதுகாடு` என்பது உண்மையில் அனைத்தும் ஒடுங்கிய முற்றொடுக்க நிலையையும், `பேய்கள்` என்பது அந்நிலையில் நிகழும் மூன்று வகையான கேவல நிலையில் நிற்கும் ஆன்மாக்களையும் குறிக்கும்.
அக்கேவலங்களைச் சிவஞான யோகிகளது சிவஞான போத ஆறாஞ் சூத்திரச் சிற்றுரையால் அறிக.
இந்நுட்பம் உணரமாட்டாதார் சிவனை உலக முதுகாட்டில் ஆடுபவனாகவே வைத்து இகழ்வர்.
அவர் அவ்வாறு இகழ்தலையே தாம் இகழ்வதுபோலக் கூறினார்.
``போல்`` என்றதனால், அவனுக்குப் பொன், வெள்ளி, மணி முதலிய நல்லரங்கு களும் உள என்பதனைக் குறிப்பால் உணர்த்துதலும் செய்தார்.
`சிவன் ஆடுவது சுடுகாட்டில் என, யார் அக்காட்டினை எத்துணை இகழினும் அனைவரும் இறுதியிற் செல்லும் இடம் அதுவேயாதல் அறியத் தக்கது.
இறப்பிற்கு அஞ்சுவோர் யாவரும் சுடுகாட்டை நினைப்பினும் துணுக்குறுவர்; இறவாதவன் ஏன் அதற்கு அஞ்சப் போகின்றான்? ``கட்டு`` என்பது கூறினமையால் அதற்கு இனமான `உதை` என்பதும் வருவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 76

அரம்கா மணியன்றில் தென்றலோர்
கூற்றம் மதியம்அந்தீச்
சரம்காமன் எய்யஞ்சு சந்துட் பகையால்
இவள் தளர்ந்தாள்
இரங்கா மனத்தவர் இல்லை
இரங்கான் இமையவர்தம்
சிரம்கா முறுவான் எலும்புகொள்
வானென்றன் தேமொழிக்கே.

பொழிப்புரை :

தேன்போலும் மொழியையுடைய என் மகளுக்குச் சோலைகளில் உள்ள அழகிய அன்றிலின் குரலாகிய அரம், தென்ற லாகிய ஓர் யமன், திங்களாகிய அழகிய நெருப்பு, மன்மதன் எய்கின்ற ஐந்து மலர்களாகிய அம்பு, பூசப்படுகின்ற சந்தனம் மேலுக்குக் குளிர் வதுபோலக் காட்டி உண்மையில் வெதுப்புகின்ற உட்பகை ஆகிய வற்றால் இவள் உயிர் தளர்ந்தாள்.
இதைக் கண்டு மனம் இரங்காதவர் இல்லை.
ஆயினும், தேவர்களது தலைகளையும், எலும்புகளையும் மாலையாகவும், அணிகலமாகவும் அணிய விரும்புகின்ற அவன் மனம் இரங்கவில்லை.

குறிப்புரை :

`அவனைக் காதலித்தே இவள் இந்நிலையை அடை கின்றாள்` என்றபடி.
இதுவும் செவிலியின் இரங்கற் கூற்றே.
உள்ளுறை யும், ``அடிக்கண்ணி`` என்னும் பாட்டில் கொண்டவாறே கொள்க.
`அழகிய தீ` என்றது.
`பார்ப்பதற்கு அழகாய்த் தோன்றிச் செயலால் வருத்தம் செய்கின்றது` என்றபடி.
அன்றில் தன் துணையை அழைத்து வருந்தும் குரல் தனிமைப்பட்ட காதலர்க்கு வருத்தத்தை மிகுவிக்கும்.
``உட்பகை`` என்பதன்பின், `இவற்றால்` என்று `இவை` என்பது தொகுத்தலாயிற்று.

பண் :

பாடல் எண் : 77

மொழியக்கண் டான்பழி மூளக்கண்
டான்பிணி முன்கைச்சங்கம்
அழியக்கண் டானன்றில் ஈரக்கண்
டான்தென்றல் என்னுயிர்மேற்
கழியக்கண் டான்துயர் கூரக்கண்
டான்துகில் சூழ்கலையும்
கழியக்கண் டான்தில்லைக் கண்ணுத
லான்கண்ட கள்ளங்களே.

பொழிப்புரை :

தில்லையில் உள்ள சிவபெருமான், என்னைப் பலரும் பழி தூற்றவும், எனக்கு வருத்தம் ஒரு காலைக் கொருகால் மிகவும், முன்கையில் உண்ட சங்க வளையல்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகவும், அன்றிலின் குரல் என்னையும் என் உயிரையும் வேறுபடும்படி பிளக்கவும், தென்றல் எனது உயிர்மேல் சினந்து நோக்கவும், இன்ன பல இன்னல்கள் மிகுதிப்படவும், உடை யும், மேகலையும் நீங்கிப் போகவும் செய்தான்.
இவை என்னிடத்துச் செய்த கள்ளச் செயல்கள்.

குறிப்புரை :

தலைவி தானும் அறியாதவாறு இவை நிகழ்ந்தமையின், ``கள்ளங்கள்`` என்றாள்.
இதன்பின் `இவை` என்பது எஞ்சி பக்குவி களைச் சிவன் அவர்களையறியாமலே அவர்களைத் தன்வயம் ஆக்கல் இதன் உள்ளுறை.

பண் :

பாடல் எண் : 78

கள்ள வளாகங் கடிந்தடி
மைப்படக் கற்றவர்தம்
உள்ள வளாகத் துறுகின்ற
உத்தமன் நீள்முடிமேல்
வெள்ள வளாகத்து வெண்ணுரை சூடி
வியன்பிறையைக்
கொள்ள வளாய்கின்ற பாம்பொன் றுளது
குறிக்கொண்மினே.

பொழிப்புரை :

(உலகீர்) மனத்தில் வஞ்சனைக்கு இடம் அளிக்கா மல் போக்கி, உண்மையாக அடிமைப்படத் தெரிந்தவர்களுடைய உள்ளமாகிய வரைவிடத்தல் வீற்றிருக்கின்ற, மேலானவனாகிய சிவ பெருமான் தனது நீண்ட முடியின்மேல் பெருவெள்ளப் பரப்பின் நுரையிலே சூடிய வெள்ளிய பிறையைக் கொள்ளுதற்குச் சூழ்கின்ற பாம்பு ஒன்று இருத்தலைக் கருத்துட் கொள்ளுங்கள்.

குறிப்புரை :

`அஃது, ஒன்றற்கு ஒன்று பகையாகியவற்றைப் பகை யின்றி வாழச் செய்யும் குறிப்பினது ஆதலின், அவனை யடைந்தால் நீங்களும் பகை முதலிய இடர் இன்றி வாழ்வீர்` - என்றபடி.
வளாகம்- பரந்த வரைவிடம் `நுரைக்கண்` என ஏழாவது விரிக்க.
`சூடிய` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
வளாவுதல் - சூழ்தல், `வளாவுகின்ற` என்பது, ``வளாய்கின்ற`` எனத் திரிந்து வந்தது.

பண் :

பாடல் எண் : 79

குறிக்கொண் டிவள்பெய்த கோல்வளை
யேவந்து கோளிழைத்தீர்
வெறிக்கொண்ட வெள்ளிலம் போதோ
எலும்போ விரிசடைமேல்
உறைக்கொன்றை யோவுடைத் தோலோ
பொடியோ உடைகலனோ
கறைக்கண்ட ரேநுமக் கென்னோ
சிறுமி கடவியதே.

பொழிப்புரை :

நீல கண்டத்தை உடையவரே, உமக்கு இவள், ஒன்றைக் கருத்திலே கொண்டு இட்டன தான் அணிந்திருந்த வளையல் களையே.
அவைகளை நீர் வந்து கொண்டும் விட்டீர்.
ஆயினும் இச் சிறுமி உம்மை இரக்கக் கருதியது உம்மிடத்துள்ள மணம் பொருந்திய விளாம் பூவோ? எலும்போ? விரிந்த சடைமேல் இருக்கின்ற கொன்றை மாலையோ? உடையாகப் பொருந்திய தோலோ? சாம்பலோ? உடைந்து போன பிச்சைப் பாத்திரமோ?

குறிப்புரை :

`இவை தவிர உம்மிடத்தில் வேறு என்ன இருக்கின்றது` எனச் சொல்லி நகையாடித் தன் தலைவியின் அறியாமைக்குத் தோழி இரங்கியவாறு.
``சிறுமி`` என்றது பேதைமை குறித்ததே.
`இப் பேதைமையுடையாளை நீ கைவிடலாகாது` என ஓம்படுத்தினாள் என்க.
வெறி - நறு நாற்றம்.
வெள்ளில் - விளா.
`உறைதலை யுடைய கொன்றை` - என்க.
உடை கலன், வினைத்தொகை.
`நுமக்குப் பெய்தது` என மேலே கூட்டுக.
கடவியது - கடாவியது.
கேட்டது.

பண் :

பாடல் எண் : 80

கடவிய தொன்றில்லை ஆயினும்
கேண்மின்கள் காரிகையாள்
மடவிய வாறுகண் டாம்பிறை
வார்சடை எந்தைவந்தாற்
கிடவிய நெஞ்சம் இடங்கொடுத்
தாட்கவ லங்கொடுத்தான்
தடவிய கொம்பதன் தாள்மேல்
இருந்து தறிக்குறுமே.

பொழிப்புரை :

இவள் இங்கு வந்த நீண்ட சடையையுடைய, பலரும் `எம் தந்தை` எனப் போற்றுகின்ற சிவபெருமானிடம் எதனையும் இரக்கவில்லையாயினும் அவன் செய்ததைக் கேளுங்கள்; அவனுக்குத் தனது விரிந்த நெஞ்சத்தை இடமாகக் கொடுத்த ஒன்று தான் இவள் செய்தது.
ஆயினும், அதற்குக் கைம்மாறாக அவன் இவளுக்குத் துன்பத்தைக் கொடுத்தான்.
பெரிய கிளைகள் அடிமரத்தின் மேலே இருக்கும் பொழுது அந்த அடிமரம் நிற்கக் கிளை வெட்டப்படுவது உலக இயல்புதானே?

குறிப்புரை :

`அதுபோல, இவட்குப் பற்றுக்கோடாயினார் பலர் இருக்கவும் இவள் இறந்துபடுகின்றாள்` என்பதாம்.
ஈற்றடி ஒட்டணி யாய் நின்றது `ஆகவே, இவளது அறியாமையின் நிலையை யாம் கண்டோம்` என முடிக்க.
கடவியது - கடாவியது கேட்டது.
``காரிகையாள்`` என்பதை முதலிற் கூட்டுக.
மடவியவாறு.
மடமையாளாகிய வகை.
இடவிய - இடம் பரந்த.
தடவிய - பெரிய; `தட` என்னும் உரியடியாகப் பிறந்த பெயரெச்சம்.
கொம்பு - கிளை.
தாள் - அடிமனம்.
தறிக்குறும் - வெட்டப்படும்.

பண் :

பாடல் எண் : 81

தறித்தாய் அயன்தலை சாய்த்தாய்
சலந்தர னைத்தழலாப்
பொறித்தாய் அனங்கனைச் சுட்டாய்
புரம்புன லுஞ்சடைமேற்
செறித்தாய்க் கிவைபுகழ் ஆகின்ற
கண்டிவள் சில்வளையும்
பறித்தாய்க் கிதுபழி ஆகுங்கொ
லாமென்று பாவிப்பனே.

பொழிப்புரை :

(எங்கள் பெருமானே, நீ பிரமன் தலையைக் கிள்ளி னாய்; சலந்தராசுரனைக் கொன்று வீழ்த்தினாய்; காமனைப் பொறிக் கறிபோல ஆகும்படி நெருப்பாக்கினாய்; இவையெல்லாம் உனக்குப் புகழாதலைக் கண்டு, `இவளுடைய சில வளையல்களை நீ கவர்ந்தது உனக்குப் பழியாகும்` என்று கருதி நான் வருந்துகின்றேன்.

குறிப்புரை :

கொல், ஆம் அசை.
பாவித்தல் - கருதுதல்.
``வளையைக் கவர்ந்தாய்` என்றது, `மெலியப் பண்ணினாய்` என்றபடி.
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி.
1 என்ப ஆதலின், `அவ்வாறு அருளாமை புகழுடைய நினக்கு ஆகாது` என்பதாம்.
இது தோழி தலைவனை இரந்து பின்னிற்றல் ஆகலின் பெண்பாற் கைக்கிளை.
சாம்பலைப் பூசித் தரையிற் புரண்டுநின் தாள்பரவி ஏம்பலிப் பார்கட்கு இரங்கு கண்டாய்.
2 நின்னடியார் இடர்களையாய்.
3 என்றாற்போல, அன்பர் பொருட்டு அருளாளர் விண்ணப்பித்தல் இதன் - உள்ளுறை.

பண் :

பாடல் எண் : 82

பாவிக்கும் பண்டையள் அல்லள்
பரிசறி யாள்சிறுமி
ஆவிக்கும் குற்குலு நாறும்
அகம்நெக அங்கமெங்கும்
காவிக்கண் சோரும்பொச் சாப்புங்
கறைமிடற் றானைக் கண்ணில்
தாவிக்கும் வெண்ணகை யாளம்மெல்
லோதிக்குச் சந்தித்தவே.

பொழிப்புரை :

எம் சிறுமி, செய்வது அறிகின்றிலள்; கொட்டாவி விடுகின்றாள்; மனம் நெகிழ இவள் உடம்பெங்கும் குங்குலியம் போன்ற மணம் வீசநின்றது.
குவளை மலர் போலும் கண்கள் நீரைச் சொரியாநின்றன.
தன்னை மறக்கின்றாள்; நீல கண்டனைத் தன் கண்களில் நிறுவுகின்றாள்.
இவையெல்லாம் வெண்மையான பற்களையும், மென்மையான கூந்தலையும் உடைய இவளை வந்து பொருந்தின.
ஆகலான் இவள் நாம் முன்பெல்லாம் அறிகின்ற பழைய பெண் அல்லள்.

குறிப்புரை :

`சிவனுக்கு உரியளாய புதியள்` என்பதாம், இது, நாற்றம் தோற்றம் முதலியவற்றால் பாங்கி மதியுடம் பட்டது.
சிவஞானிகளது நிலைமையை அவர்பால் நிகழும் சில மெய்ப்பாடுகள் பற்றி உலகத்தார் ஊகித் துணர்தல் இதன் உள்ளுறை, `செய்யும்` என்னும் வினைகள் பலவற்றுள் முதலதாகிய ``பாவிக்கும்`` என்பது ஒன்றும் எச்சம்; ஏனைய வெல்லாம் முற்று.
``சிறுமி பரிசறியாள்`` என்பது முதலாகத் தொடங்கி உரைக்க.
`அகம் நெக, அங்கம் எங்கும் குற்குலு நாறும்` என்க.
இது சிவனைத் தழுவியதால் உண்டாயது.
சோர்த லாகிய, இடத்தின்மேல் நின்ற வினைக்கு, `நீர்` என்னும் வினைமுதல் வருவிக்க.
தாவிக்கும் - தாபிக்கும், ஓதி - ஓதியை உடையாள்.
``ஓதிக்கு`` என்னும் நான்காவதை இரண்டாவதாகத் திரிக்க.

பண் :

பாடல் எண் : 83

சந்தித்த கூற்றுக்குக் கூற்றாம்
பிணிக்குத் தனிமருந்தாம்
சிந்திக்கிற் சிந்தா மணியாகித்
தித்தித் தமுதமுமாம்
வந்திக்கில் வந்தென்னை மால்செய்யும்
வானோர் வணங்கநின்ற
அந்திக்கண் ஆடியி னானடி
யார்களுக் காவனவே.

பொழிப்புரை :

வந்து எதிர்நின்ற நமனுக்கு நமன் ஆவான்; நோய்கட்கு ஒப்பற்ற மருந்தாவான்; நினைத்தால் சிந்தாமணிபோல, நினைப்பவற்றைக் கொடுப்பான்; இனிக்கின்ற அமுதம்போல இனிமையைத் தருவான்; வணங்கினால் எதிர்ப்பட்டுத் தன்வயம் ஆக்கிக் கொள்வான்; தேவர்களும் வணங்க நிற்கின்ற, இரவில் காட்டில் ஆடுகின்ற சிவன் தன் அடியார்களுக்கு ஆகின்ற பொருள்கள் இவைகளாகும்.

குறிப்புரை :

`தித்தித்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
என்னை, `எவன்` என்னும் வினாப் பெயரின் திரிபு.
அஃது இங்கு `எத் துணை` என்னும் பொருட்டாய் மிகுதியைக் குறித்தது.
மால் - மயக்கம்.
அஃது இங்குவசப்படுத்துதலைக் குறித்தது.
`காட்டில்` என்பது ஆற்றலால் வந்தது.
`ஆவன இவை` என ஒரு சொல் வருவித்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 84

ஆவன யாரே அழிக்கவல்
லாரமை யாவுலகில்
போவன யாரே பொதியகிற்
புராபுரம் மூன்றெரித்த
தேவனைத் தில்லைச் சிவனைத்
திருந்தடி கைதொழுது
தீவினை யேனிழந் தேன்கலை
யோடு செறிவளையே.

பொழிப்புரை :

முப்புரத்தை எரித்த கடவுளாகிய தில்லையிலே எழுந்தருளியுள்ள சிவபெருமானை அடிதொழுதமையால் (நல்லோர் பலரும் பல நன்மைகளைப் பெற) யான் தீவினை செய்தேன் ஆகலின் எனது உடையோடு.
செறிந்த வளையல்களையும் இழந்தேன்.
ஒரு நெறிப்படாத இந்த உலகத்தில் ஊழ் வலியால் மேன்மேல் நன்றாய் வளர்வனவற்றை - அழிக்க வல்லவர் யாவர்! சிறிது சிறிதாய்த் தேய்ந்து போவனவற்றை அவ்வாறு தேயாமல் கட்டிக் காக்க வல்லவர் யாவர்! (ஒருவரும் இல்லை)

குறிப்புரை :

இது, சிவபெருமானைக் காதலித்தாள் அக்காதல் நிறை வெய்தாமை பற்றி ஆற்றாது கூறியது.
பக்குவ மிகுதியால் சிவனை அடைய விரும்பினார் அதற்குத் தடையாய் நிற்கும் பிராரத்தம் பற்றி வருந்திக் கூறுதல் இதன் உள்ளுறை.
ஊழ் வலியாகிய பொதுப் பொருளால் கலை வளையல்களை இழந்த சிறப்புப் பொருளைச் சாதித் தமையால் இது வேற்றுப் பொருள் வைப்பணி ``சிவனை அடியைத் தொழுது`` என்றதை, `கள்வனைக் கையைக் குறைத்தான்`` என்பது போலக் கொள்க.
திருந்து அடி செவ்வியவாய பாதங்கள்.

பண் :

பாடல் எண் : 85

செறிவளை யாய்நீ வரையல்
குலநலம் கல்விமெய்யாம்
இறையவன் தாமரைச் சேவடிப்
போதென்றெல் லோருமேத்தும்
நிறையுடை நெஞ்சிது வேண்டிற்று
வேண்டிய நீசர்தம்பால்
கறைவளர் கண்டனைக் காணப்
பெரிதுங் கலங்கியதே.

பொழிப்புரை :

செறிக்கப்பட்டவளைகளை உடையவளே `சிவனது செவ்விய பாதங்களாகிய தாமரை மலர்களே குடிப்பிறப்பு, கல்வி, மெய்ப்பொருள் எல்லாமாகும்! என யாவரும் புகழ்கின்ற அத் தன்மையையே நிலைபேறாக உடைய உனது மனம், `அந்தச் சிவனைத் தாம் விரும்பியதையே விரும்புகின்ற கீழ்மக்கள் கூட்டத்திற் சென்று காண்பேன்` என்று இப்பொழுது கலக்கமடைந்து விட்டதே; இஃது என்! அந்த மனத்தின்வழி நீ விரைந்து செல்லாதே.

குறிப்புரை :

இது, தலைவியை ஆற்றுவிக்க வேண்டி, `தலைவனை யான் விடர்கள் கூட்டத்திற் சென்று கழற்றுரை கூறி நின்னைச் சேர்விப்பேன்` எனத் தலைவனை இயற்பழித்த வழி, தலைவி, `அவர் விடர்களது கூட்டத்தில் சேர்பவர் அல்லர்` எனத் தலைவனை இயற்பட மொழிந்தது, பக்குவிகள் பால், `சிவஞானம் இன்றியும் வீடு பெறலாம்` என மயங்கிக் கூறுகின்றவர்களைப் பக்குவிகள் `அது கூடாது` எனத் தெருட்டுதல் இதன் உள்ளுறை.
`சேவடித் தாமரைப் போது` என மாற்றுக.
நிறை - வழுவாது நிறுத்துதல்.
``நெஞ்சு இது`` என்றது.
`தான் அவள்` என்னும் வேற்றுமையின்மையால் தோழியது நெஞ்சத்தை.
``கலங்கியதே`` என்பதன்பின் வருவித்தது சொல்லெச்சம்.
விரையல் - விரையாதே.
``வேண்டிற்று வேண்டிய நீசர்`` என்பதனை, ``காணா தான் - கண்டானாம் தான்கண்டவாறு`` 1 ``பெற்றவா பெற்ற பயனது நுகர்ந்திடும் பித்தர்`` 2 முதலியவற்றோடு ஒப்பிட்டு உணர்க.
`அக்கறை வளர் கண்டனை` எனச் சுட்டு வருவிக்க.

பண் :

பாடல் எண் : 86

கலங்கின மால்கடல் வீழ்ந்தன
கார்வரை ஆழ்ந்ததுமண்
மலங்கின நாகம் மருண்டன
பல்கணம் வானங்கைபோய்
இலங்கின மின்னொடு நீண்ட
சடைஇமை யோர்அவிந்தார்
அலங்கல்நன் மாநடம் ஆர்க்கினி
ஆடுவ தெம்மிறையே.

பொழிப்புரை :

எங்கள் பெருமானே, கடல்கள் யாவும் தீயால் கொதித்து வற்றிவிட்டன.
கரிய மலைகள் பெருவெள்ளத்தில் மூழ்கி விட்டன.
பூவுலகங்களும் அவ்வெள்ளத்தில் ஆழ்ந்து மறைந்து விட்டன.
வானுலகங்களும் நிலை குலைந்து போயின.
பலவாகிய உமது கணங்களும் `என்ன செய்வது` என்று தோன்றாமல் மயங்கி விட்டன.
`இறவாதவர்` எனப்படுகின்ற தேவர்களும் இறந்துவிட்டனர்.
இந்த நிலையில், ஆகாயம் எங்கும் போய் விட்டுவிளங்குகின்ற மின்னலோடு மின்னலாய் ஒளிர்கின்ற உமது நீண்ட சடைகள் சுழல நல்லதொரு சிறந்த நடனத்தை யார் பார்ப்பதற்கு ஆடுகின்றீர்?

குறிப்புரை :

`பார்ப்பதற்கு ஒருவருந்தாம் இல்லையே என்றபடி.
இது `சிவன் சுடுகாட்டில் ஆடுபவன்` எனக் கூறப்படுவதன் உண்மையை விளக்கியது.
`சுடுகாடு` என்பது எல்லாம் ஒடுங்கிய நிலை.
இது முற்றழிப்பு, அல்லது `சருவ சங்காரம்` - எனப்படும்.
`இந் நிலையில் சிவன் ஆடுகின்றான்` என்பது, புனர் உற்பவத்திற்கு (மறு முறைப் படைப்பிற்கு) ஆவனவற்றைச் செய்தலைக் குறிக்கும்.
அச் செயல் `சூக்கும பஞ்ச கிருத்தியம்` - எனப்படும்.
இந்நிலையில் ஆன்மாக்கள் `சேகல கேவலம்` - என்னும் நிலையில் நிற்கும்.
அந்த ஒரு கேவலத்திற்குள்ளே `பிரளய கேவலம், விஞ்ஞான கேவலம் - என்னும் இருகேவலங்கள் உளவாகும், இவற்றைச் சிவஞானபோத ஆறாம் சூத்திரத்துச் சிவஞான யோகிகளது சிற்றுரையால் அறிக.
இக்கேவலங்களை உடைய ஆன்மாக்களே சிவனோடு உடன் நிற்கும் பேய்களாகச் சொல்லப்படுகின்றன.
இஃது உணராதார், `சிவன் ஆடும் சுடுகாடு உலகில் பல இடங்களில் உள்ள சுடுகாடுகளே` என்றும், `பேய்கள் அங்கு வாழும் பேய்களே` என்றும் கருதிவிடுகின்றனர் என்பது கருத்து.
நாகம் - சுவர்க்க லோகம்.
``இமையோர் அவிந்தார்`` என்பதை, ``பல்கணம்`` என்பதன் பின்னர்க் கூட்டுக.
``இமையோர் வியந்தார் என்பது பாடம் அன்று, அலங்கல் - அசைதல்.

பண் :

பாடல் எண் : 87

எம்மிறை வன்னிமை யோர்தலை
வன்உமை யாள்கணவன்
மும்முறை யாலும் வணங்கப்
படுகின்ற முக்கண்நக்கற்
கெம்முறை யாளிவள் என்பிழைத்
தாட்கிறை என்பிழைத்தான்
இம்முறை யாலே கவரக்
கருதிற் றெழிற்கலையே.

பொழிப்புரை :

எமக்கு இறைவனும், தேவர்கட்குத் தலைவனும், உமைக்குக் கணவனும், யாவராலும் மனம், மொழி, மெய் ஆகியவற்றால் வணங்கப்படுபவனும், மூன்று கண்களை உடைய வனும், திகம்பரனும் ஆகிய சிவனுக்கு என்னை வஞ்சித்து இவள் என்ன முறை உடையவள் ஆயினான்? (`மனைவி ஆயினளோ` - என்றபடி - அது நிற்க,) என்னை வஞ்சித்த இவளுக்குச் சிவன் இவள் தன்னை விரும்பியதை அறிந்தும் இவளுக்கு மெலிவை நீக்காமல் மெலிவை விளைவித்து, இவளது அழகிய உடையை அகன்று போகும்படி இவ்வாறு தவறு செய்தது ஏன்?

குறிப்புரை :

`அதனை யான் அறிகின்றிலேன்` என்பதாம்.
`இறை பிழைத்தான்; என்` என மாறிக் கூட்டுக.
`எழிற் கலை கவரக் கருதிய தாகிய இம்முறையாலே பிழைத்தான்` என்க.
இது, செவிலி தலைவி யது ஆற்றாமை கண்டு தலைவனை இயற் பழித்தது.
இறைவனைச் சார்ந்தார்க்கு ஆற்றாமை உளதாதலைக் கண்டு உலகர் இறைவனை இயற் பழித்தல் இதன் உள்ளுறை.

பண் :

பாடல் எண் : 88

கலைதலைச் சூலம் மழுக்கனல்
கண்டைகட் டங்கம்கொடி
சிலையிவை ஏந்திய எண்டோட்
சிவற்கு மனஞ்சொல்செய்கை
நிலைபிழை யாதுகுற் றேவல்செய்
தார்நின்ற மேருவென்னும்
மலைபிழை யாரென்ப ராலறிந்
தோர் இந்த மாநிலத்தே.

பொழிப்புரை :

`எட்டுக் கைகளில் மான், முத்தலைச் சூலம், மழு, நெருப்பு, மணி, மழுவிற் சிறிது வேறுபட்ட கட்டங்கம், கொடி, வில் - என்னும் இவற்றை ஏந்தியுள்ள சிவபெருமானுக்கு மனம், மொழி, மெய் மூன்றும் பிற வழிகளில் செல்லாது பணிவிடை செய்தவர்கள் நிலையாய் உள்ள மகாமேருமலையைப் போன்ற உயர்ந்த குறிக்கோள்களைக் கொள்ளினும் தவறாமல் பெறுவார்கள்` - என்று, அறிவுடையோர் இந்தப் பெரிய பூமியில் எங்குள்ளவரும் அறியக் கூறுவர்.

குறிப்புரை :

``உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்`` எனக் கூறிய திருவள்ளுவர் `அஃது எய்துதல் அரிது` என்னும் கருத்தால், ``மற்றது- தள்ளினும் தள்ளாமை நீர்த்து`` என்றார் ஆகலின், `சிவனடியார்கள் அத்தகைய குறிக்கோள்களைத் தவறாமல் எய்துவர்` என்றார்.
`மேரு வும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று.

பண் :

பாடல் எண் : 89

மாநிலத் தோர்கட்குத் தேவர்
அனையவத் தேவரெல்லாம்
ஆநலத் தாற்றொழும் அஞ்சடை
ஈசன் அவன்பெருமை
தேனலர்த் தாமரை யோன்திரு
மாலவர் தேர்ந்துணரார்
பாநலத் தாற்கவி யாமெங்ங
னேயினிப் பாடுவதே.

பொழிப்புரை :

பெரிய பூமியில் உள்ள மக்களினும் மேம்பட்ட பெருமையுடையவர் தேவர்.
அத்தேவர் யாவரும் தம்மால் ஆன மட்டும் நன்முறையில் வணங்கும் சிவபெருமான் பெருமையுடைய வன், அவனது பெருமையைத் தேன் பொருந்திய தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரம தேவனும், திருமாலும் ஆகிய அவரே ஆராய்ந்து முற்றும் உணரவல்லரல்லர் என்றால், அவனது பெருமையை நாம் எங்ஙனம் முற்ற உணர்ந்து பாநயத்தோடு கூடிய கவிகளால் பாடுவது!

குறிப்புரை :

`இயலாது ஆகையால் அறிந்த அளவில் பாடுவேம்` - என்பது குறிப்பெச்சம்.
``யான் அறி அளவையின் ஏத்தி` என்றார் முருகாற்றுப் படையிலும் தேவரது பெருமையை உணர்த்தற்கு, ``மாநிலத் தோர்கட்குத் தேவர்`` என்றார்.
``தேவர்`` என்பதன் பின்னும், ``ஈசன்`` என்பதன் பின்னும் `பெருமையுடையர், பெருமையுடையன்` என்பன எஞ்சி நின்றன.

பண் :

பாடல் எண் : 90

பாடிய வண்டுறை கொன்றையி
னான்படப் பாம்புயிர்ப்ப
ஓடிய தீயால் உருகிய
திங்களின் ஊறலொத்த
தாடிய நீறது கங்கையுந்
தெண்ணீர் யமுனையுமே
கூடிய கோப்பொத்த தாலுமை
பாகமெம் கொற்றவற்கே.

பொழிப்புரை :

எம் தலைவனாகிய சிவபெருமானுக்கு அவன் பூசியுள்ள திருநீறு அவன் அணிந்துள்ள படத்தையுடைய பாம்பு பெருமூச்சு எறிதலால் கையில் ஏந்தியுள்ள நெருப்பு ஓங்கி எரிய, அதனால் அவன் முடியில் அணிந்துள்ள பிறை உருகி ஒழுகுவது போன்று உள்ளது.
பின்பு அந்நீறும், உமையாளது பாகமும் ஒன்று சேர்வது, கங்கை நதியும், தெளிவாகிய நீரையுடைய யமுனை நதியும் ஒன்று சேர்ந்தது போன்று உள்ளது.

குறிப்புரை :

கங்கை நீர் வெண்மை நிறத்தையும், யமுனை நீர் கருமை நிறத்தையும் உடையன.
``பாடிய வண்டு உறை கொன்றையினான்`` என்பது, ``எம் கொற்றவன்`` எனப்பட்டவனை.
`அவன் எனச் சுட்டும் அளவாய் நின்றது.
`அதுவும், உமை பாகமும் கூடியது, கங்கையும், தெண்ணீர் யமுனையும் கூடிய கோப்பு ஒத்தது` என வேண்டும் சொற்கள் வருவித்து இயைத்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 91

கொற்றவ னேயென்றுங் கோவணத்
தாயென்றும் ஆவணத்தால்
நற்றவ னேயென்றும் நஞ்சுண்டி
யென்றும் அஞ்சமைக்கப்
பெற்றவ னேயென்றும் பிஞ்ஞக
னேயென்றும் மன்மதனைச்
செற்றவ னேயென்றும் நாளும்
பரவுமென் சிந்தனையே.

பொழிப்புரை :

என்னுடைய சித்தம் எந்நாளும், யாவர்க்கும் என்றும், `கோவணமாக உடுத்த உடையை உடையவனே` என்றும், `புனைந்துள்ள கோலத்தால் நல்ல தவசியே` என்றும், `நஞ்சை உண்டவனே` என்றும், அஞ்செழுத்தை நெஞ்சில் அமைத்தவர்களால் பெறப்பட்டவனே` என்றும், `தலைக்கோலம் உடையவனே` என்றும், `மன்மதனை அழித்தவனே` என்றும் இவ்வாறே சொல்லித் துதிக்கும்.

குறிப்புரை :

`வேறொன்றையும் செய்யாது` எனத் தமது உள்ளத்தின் உறைப்பை வெளியிட்டவாறு.
சிந்தித்தல் அன்றித் துதித்தல் சித்தத் திற்கு இல்லையாயினும், `சிந்தித்தலே துதித்தலாம்` என்னும் கருத்தால் `துதிக்கும்` என்றார்.
ஆவணம், `ஆய வண்ணம்` என இறந்தகால வினைத்தொகை.
உண்டி - உணவு.
உண்டியை உடையவனை, `உண்டி` என்றது ஆகுபெயர்.

பண் :

பாடல் எண் : 92

சிந்தனை செய்ய மனமமைத்
தேன்செப்ப நாவமைத்தேன்
வந்தனை செய்யத் தலையமைத்
தேன்கை தொழவமைத்தேன்
பந்தனை செய்வதற் கன்பமைத்
தேன்மெய் அரும்பவைத்தேன்
வெந்தவெண் ணீறணி ஈசற்
கிவையான் விதித்தனவே.

பொழிப்புரை :

என்னுடைய மனத்தை இடையறாது உன்னுதற்கு வைத்தேன்; நாவைப் புகழ்சொல்லுதற்கு வைத்தேன்; தலையை வணங்குதற்கு வைத்தேன்; கைகளைக் கும்பிடுதற்கு வைத்தேன்; அன்பை அகப்படுத்தற்கு வைத்தேன்.
உடம்பை மயர்க்கூச்சு எறிவ தற்கு வைத்தேன்; வெந்து தணிந்த வெள்ளிய நீற்றைப் பூசுகின்ற இறை வனுக்கு யான் நேர்ந்தன இவை.

குறிப்புரை :

`என்னால் ஆயின இவை; இனி அவனது திருவுள்ளம்` என்பதாம்.
`மனம் முதலியவற்றை வேறொன்றற்கு வைத்திலேன்` என்றபடி.
``ஈசற்கு`` என இறுதியிற் கூறியமையால், முன்னர்க் கூறியன பலவும் அவனுக்கேயாதல் தெளிவு.

பண் :

பாடல் எண் : 93

விதித்தன வாழ்நாள் பெரும்பிணி
விச்சைகள் கொண்டுபண்டே
கொதிப்பினில் ஒன்றும் குறைவில்லை
குங்குமக் குன்றனைய
பதித்தனங் கண்டனம் குன்றம்வெண்
சந்தனம் பட்டனைய
மதித்தனங் கண்டனம் நெஞ்சினி
என்செய்யும் வஞ்சனையே.

பொழிப்புரை :

நன்மை தீமைகளை அறிகின்ற பலவகையான அறிவுகளைக் கொண்டு பிரமன் எமக்கு வகுத்த வாழ்நாள்களிலே பெரிய நோய்கள் வந்து வெதுப்புவதில் சிறிதும் குறைவில்லை.
மகளிரது குங்கும மலைபோலும், மார்பில் அழுந்துதலையுடைய தனங் களை முன்னே கண்டோம், பின்பு அத்தனங்கள் தாமே மலைகளில் வெள்ளிய சந்தனம் பூசப்பட்டனபோல் ஆயினமையை உணர்ந்து பார்த்தோம், (இவ்வளவும் செய்துவிட்டமையால்) எமது மனம் இனிச் செய்வதற்கு என்ன வஞ்சனை உள்ளது?

குறிப்புரை :

`செய்யக் கூடிய வஞ்சனைகள் அனைத்தும் செய்தாகி விட்டன` என்றபடி.
`இங்கு கூறியன எல்லாம் எமது மனம் எம் வழிநின்று சிவனை நினையாமல் தப்பி ஓடிச் செய்த வஞ்சனைகளால் விளைந்தன` என்பதாம்.
`சிவனை நினையாது மனம் போன போக்கிலே போகின்றவர் இவ்வாறு கெடுவர்` என்பது கருத்து.
`மகளிரது தனங்கள் முதலில் குங்குமக் குன்று போலக் காணப்பட்டது` என்றது கலவிக்கு முன்னுள்ள நிலையையும், `அவை வெண்சந்தனம் பூசப் பட்ட குன்று போலக் காணப்பட்டன` என்றது கலவிக்குப் பின்னுள்ள நிலையையும் குறித்தது.
தலைவரது மார்பில் சந்தனக் குழம்பு இருத்தல் இயல்பு.
இன்ப நோக்கில் இன்பமாய்த் தோன்றினும் துறவு நோக்கில் இவை இடர் ஆதல் அறிக.
`பட்டனையவாக` என ஆக்கம் விரிக்க.
`மதித்தனம்` என்பது முற்றெச்சம்.
`விச்சைகள் கொண்டு பண்டே விதித்தனவாகிய வாழ் நாளில் பெரும்பிணி கொதிப்பினில் ஒன்றும் குறைவில்லை` என இயைக்க.
விதித்தன - விதிக்கப்பட்டன.

பண் :

பாடல் எண் : 94

வஞ்சனை யாலே வரிவளை
கொண்டுள்ள மால்பனிப்பத்
துஞ்சும் பொழுதும் உறத்தொழு
தேன்சொரி மாலருவி
அஞ்சன மால்வரை வெண்பிறை
கவ்வியண் ணாந்தனைய
வெஞ்சின ஆனையின் ஈருரி
மூடிய வீரனையே.

பொழிப்புரை :

என்னுடைய மனத்தில் மயக்கம் நிறைந்து ததும்பும்படி, யான் அறியாமலே எனது கீற்றுப் பொருந்திய வளையல் களைக் கவர்ந்து கொண்டு, யானைத் தோலைப் போர்த்துக் கொண்டு இருக்கின்ற வீரனை நான் உறங்கும் பொழுதும் மிக வணங்கினேன்.

குறிப்புரை :

`வணங்கியும் அவன் எனக்கு அருள் செய்திலன்` என்பது குறிப்பெச்சம்.
வஞ்சனையாலே கவர்ந்து கொண்டவன் தன்னை `வீரன்` என்று சொல்லிக் கொள்வதுவெட்கம் - என்பது கருத்து.
`மால் பனிப்பக் கொண்டு` என்க, ``கொண்டு`` என்னும் செய் தென் எச்சம், ``மூடிய`` என்பதனோடு முடிந்தது.
துஞ்சும் பொழுதும் தொழுதல், இடைவிடாத பழக்கத்தால் நிகழ்வது.
``நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே`` * என்று அருளிச் செய்தது காண்க.
``மால்`` மூன்றில் முன்னவை மயக்கம்; ஏனையது பெருமை.
பனித்தல் - ததும்புதல்.
`அருவியை யுடைய வரை` என்க.
வரை - மலை.
`மயக்க அருவி` என்பதில் மயக்கம், அதற்கு ஏதுவாகிய மத நீரைக் குறித்தது.
அஞ்சனம் - மை; அஃது அதன் நிறத்தைக் குறித்தது.
வெள்ளிய தந்தங் களை வாயில் கொண்டு நிமிர்கின்ற கரிய யானைக்கு, வெண்பிறை கௌவி அண்ணாக்கின்ற அஞ்சன மலையை உவமையாகக் கூறியது இல் பொருள் உவமம்.
ஈர் உரி - உரித்த தோல்; இறந்தகால வினைத் தொகை.

பண் :

பாடல் எண் : 95

வீரன் அயனரி, வெற்பலர்
நீரெரி பொன்னெழிலார்
காரொண் கடுக்கை கமலம்
துழாய்விடை தொல்பறவை
பேரொண் பதிநிறம் தாரிவர்
ஊர்திவெவ் வேறென்பரால்
ஆரும் அறியா வகையெங்கள்
ஈசர் பரிசுகளே.

பொழிப்புரை :

எங்கள் இறைவரது தன்மைகள் யாராலும் ஒரு நிலையாக அறிந்து சொல்லுதற்கு இயலாதன.
ஏன் எனில், அவர் பெயர் ஒன்றாகாது, `உருத்திரன், பிரமன், விட்டுணு` - என மூன்று என்றும், அவருக்கு இடம் ஆவதும் ஒன்றாகாது, `மலை, மலர், நீர்` என மூன்று என்றும், அவரது நிறமும் ஒன்றாகாது, `தீ வண்ணம், பொன் வண்ணம், அழகு நிறைந்த மேக வண்ணம்` என மூன்று என்றும், அவரது அடையாள மாலையும் ஒன்றாகாது, `கொன்றை மலர், தாமரை மலர், துளசி` என மூன்று என்றும், அவர் ஏறிச் செல்கின்ற ஊர்தியும் ஒன்றாகாது, `இடபம், அன்னம், கலுழன்` என மூன்று என்றும் இவ்வாறு அனைத்தையும் மூன்று மூன்றாகவே, அறிந்தோர் கூறுகின்றனர்.

குறிப்புரை :

இஃது, ஒருவனாகிய சிவனே `படைத்தல், காத்தல், அழித்தல்` என்னும் தொழிலை நோக்கி `அயன், அரி, அரன்` என மூவராய் நிற்கின்றான் - என உணர்த்தியவாறு.
ஓர் உருவாயினை மான் ஆங்காரத்து ஈரியல்பாய், ஒரு விண்முதற் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்தளித் தழிப்பமும் மூர்த்திகள் ஆயினை``.
* என்று அருளிச் செய்ததது காண்க.
சம்பு பட்சமாகப் பார்க்கும் பொழுது மூவரும் ஒருவனே.
அணுபட்சமாகப் பார்க்கின் வேறுவேறாம்.
சம்பு பட்ச அணுபட்சங்களின் இயல்பைச் சித்தாந்த நூல்களுட் காண்க.
இறைவனது தொழிலை மூன்றாகக் கூறும் பொழுது மறைத்தல் காத்தலிலும் அருளல் அழித்தலிலும் அடங்கும் என்க.
தொழில்களை ஐந்தாக விரிக்குமிடத்துச் சிவன் `அயன், அரி, அரன்` என்பவரோடு `மகேசுரன், சதாசிவன்` - என மேலும் இருவராய், ஐவராய் நிற்பன் பேர், பதி, நிறம், தார், ஊர்தி - என்பவற்றுள் ஒவ்வொன்றையும் வீரன் முதலிய மும்மூன்றனோடு முறை நிரல் நிறையாகப் பொருத்திக் கொள்க.
இவர்தல் - ஏறுதல்.
இவர் ஊர்தி, வினைத்தொகை, அன்னமும், கலுழனும் ``பறவை`` என அடங்கின.
`வகையின` என்பதில் சாரியையும், இறுதி நிலையும் தொகுத்தலாயின.
அன்றி, `வகை, ஆகுபெயர்` - என்றலும் ஆம், ``வீரன்`` என்றது ``அரன்`` என்னும் பொருட்டு.

பண் :

பாடல் எண் : 96

பரியா தனவந்த பாவமும்
பற்றும்மற் றும்பணிந்தார்க்
குரியான் எனச்சொல்லி உன்னுட
னாவன் எனவடியார்க்
கரியான் இவனென்று காட்டுவன்
என்றென் றிவையிவையே
பிரியா துறையுஞ் சடையான்
அடிக்கென்றும் பேசுதுமே.

பொழிப்புரை :

``அடியார்களைப் பிரியாது அவர்களோடு உடன் உறைபவனாகிய சிவபெருமான், பிறர்க்கு அரியவனாயினும், `யான் என்னைப் பணிந்தவர்கட்கு உரியவன்` என்று, சொல்லி உன்னோடு உடன் உறைவான் என்று அவன் அடியவர் சொல்ல, யாம், அவனுடைய அடியவர்களை விட்டு அகலாது வந்து பற்றுகின்ற பாவமும், பற்றும், மற்றும் பழி முதலியனவும் ஆகிய இவை இவை, `அவன் அடியார்க்கு எளியனல்லன்; அவர்கட்கும் அரியவனே` எனக் காட்டுவன்` என்று என்று அவன் திருவடிக்கு என்றும் விண்ணப்பிப்போம்.

குறிப்புரை :

இது, வீர, என்றன்னை விடுதிகண் டாய், விடில்,/# என்னை மிக்கார்
`ஆரடியான்` என்னின், `உத்தரகோச/# மங்கைக்கரசின்
சீரடியார் அடியான்` என்று நின்னைச்/# சிரிப்பிப்பனே.
* என்றது போலப் பிராரத்தத்தை விரைய விலக்காமை பற்றி வருந்திக் கூறியது.
பரிதல் - நீங்குதல்.
`பரியாதனவாய் வந்த` - என ஆக்கம் விரிக்க.
``பணிந்தார்க்கு உரியான் - எனச் சொல்லி, - உன்னுடன் ஆவன் - என`` என்பதை முதலிலும், ``இவை, இவை`` என்பதை ``மற்றும்`` என்பதன் பின்னும் கூட்டியுரைக்க.
`என - என்று அடியவர் சொல்ல` என்க.
``உன்னுடன்`` என்பது வேறு முடிபு ஆகலின் பன்மை யொருமை மயக்கம் இன்று.
`இவன் என்று காட்டுவன்` என்பது பாடம் அன்று.
அடுக்கு, பன்மை குறித்து நின்றது.

பண் :

பாடல் எண் : 97

பேசுவ தெல்லாம் அரன்திரு
நாமம்அப் பேதைநல்லாள்
காய்சின வேட்கை அரன்பா
லதுவறு காற்பறவை
மூசின கொன்றை முடிமே
லதுமுலை மேல்முயங்கப்
பூசின சாந்தம் தொழுமால்
இவையொன்றும் பொய்யலவே.

பொழிப்புரை :

அந்தச் சிறுமியாகிய அழகி பேசுகின்ற பேச்சு முழுதும் சிவன் திருப்பெயர்களேயாய் உள்ளன.
காய்கின்ற சினத்திற்கு முதலாய் உள்ள அவளது வேட்கை, சிவனிடத்தில் உள்ளதான, வண்டுகள் மொய்க்கும் கொன்றையை உடைய அவனது முடியின் மேலது.
அவள் தன் தனங்களின்மேல் பொருந்திய பூசியுள்ள சந்தனக் குழம்பை (`நீயேனும் சிவனை அடையத் தவம் செய்` என்று) அதனைக் கும்பிடுவாள்.
யான் சொல்லிய இவைகள் சிறிதும் பொய்யல்ல.
(மெய்)

குறிப்புரை :

`ஆகவே, இனி இவளை நாம் சிவனுக்கு வரைவு நேர்தலே செய்யத் தக்கது` என்பது குறிப்பெச்சம்.
இது செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்றது.
பக்குவிகளது நிலைமையை அறிவர் அவர்தம் சுற்றத்தார்க்கு உணர்த்துதல் இதன் உள்ளுறை.
``எல்லாம்`` என்பது எஞ்சாமையைக் குறித்தது.
தலைவி அருகில் இல்லாமையால் ``அப்பேதை நல்லாள்`` எனச் சேய்மைச் சுட்டாகச் சுட்டினாள்.

பண் :

பாடல் எண் : 98

பொய்யா நரகம் புகினுந்
துறக்கம் புகினும்புக்கிங்
குய்யா உடம்பினோ டூர்வ
நடப்ப பறப்பவென்று
நையா விளியினும் நானிலம்
ஆளினும் நான்மறைசேர்
மையார் மிடற்றான் அடிமற
வாவரம் வேண்டுவனே.

பொழிப்புரை :

பாவிகட்குத் தப்பாது கிடைக்கின்ற நரகத்திலே நான் புகுந்தாலும், அதைவிட்டுச் சுவர்க்கத்தை அடைந்தாலும், இப்பூமியில் வந்து, வெறுப்பைத்தரினும் விட இயலாத உடம்புகளோடு கூடி, `ஊர்வன` என்றும் `நடப்பன` என்றும், `பறப்பன` என்றும் பிறப்புக்களை எடுத்து வருந்தி வாழ்ந்து இறக்கினும், (யாதேனும் ஒரு பிறப்பில்) பேரரசனாகி நிலம் முழுவதையும் ஆளினும் நான் வேண்டுவன எல்லாம் நான்கு வேதங்களில் ஒலி பொருந்திய நீல கண்டத்தினை உடைய சிவபெருமானது திருவடிகளை மறவாதிருக் கின்ற அந்த ஒருவரமேயாகும்.

குறிப்புரை :

``புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என் மனத்தே - வழுவாதிருக்க வரந்தர வேண்டும்`` * என அப்பர் பெருமான் அருளிச் செய்ததும் காண்க.

பண் :

பாடல் எண் : 99

வேண்டிய நாள்களிற் பாதியும்
கங்குல் மிகவவற்றுள்
ஈண்டிய வெந்நோய் முதலது
பிள்ளைமை மேலதுமூப்
பாண்டின அச்சம் வெகுளி
அவா வழுக் காறிங்ஙனே
மாண்டன சேர்தும் வளர்புன்
சடைமுக்கண் மாயனையே.

பொழிப்புரை :

(படைப்போன் ஆகிய நான்முகக் கடவுள்) மக்களைப் படைக்கும் பொழுது `ஒவ்வொருவரும் இவ்வுடம்போடு கூடி இத்துணை ஆண்டுகள் வாழ்க` என வேண்டி வரையறுக் கின்றான்.
அவ் ஆண்டுகள் அனைத்தும் மக்களுக்கு வாழும் நாளாக அமைவதில்லை.
பொதுவாக ஒரு பாதி ஆண்டுகள் இரவுப் பொழு தாகி விடுகின்றன.
(இரவு வாழ்க்கை வாழ்க்கையன்று) மற்றொரு பாதி ஆண்டுகளே பகலாய் மிஞ்ச, அவைகளிலும் பலவாய்த் திரண்ட கொடிய நோய்கள் உளவாகும்.
இனி, வரையறுக்கப்பட்ட ஆண்டு களில் தொடக்கப்பகுதி குழவிப் பருவமாய்க் கழிகின்றது.
முடிவுப் பகுதி முதுமைப் பருவமாய்க் கழிகின்றது.
(இடையில் எஞ்சும் ஒருசில ஆண்டுகளில் என்ன செய்ய இயலும்!) அவைகளிலும் `அச்சம், வெகுளி, அவா அழுக்காறு` என இப்படி ஆண்டுகள் கழிந்தோடிப் போகின்றன.
ஆகையால் (யாம் மிக இளைய பருவத்திற்றானே வேறு எதனையும் பொருட்படுத்தாமல்) நீண்ட, புல்லிய சடையையும், மூன்று கண்களையும் உடைய கள்வனைக் கண்டறிந்து, அவன் திருவடிகளையே புகலிடமாக அடைவோம்.

குறிப்புரை :

வேண்டுதல் - விரும்புதல்.
அஃது அதன்படி வரை யறுத்தலாகிய தன் காரியம் தோற்றி நின்றது.
இதற்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது.
``பாதியும்`` என்னும் உம்மை சிறப்பு.
கங்குல் இரவு.
`கங்குல் ஆம், பிள்ளைமை ஆம், மூப்பும் ஆம்` என்க.
மிகுதல்- எஞ்சுதல்.
ஈண்டுதல் - திரளுதல்.
ஆண்டின - `ஆண்டு` எனப்படும் காலங்கள்.
`கள்வன்` என்றது, எளிதில் அகப்படாமை பற்றி.

பண் :

பாடல் எண் : 100

மாயன்நன் மாமணி கண்டன்
வளர்சடை யாற்கடிமை
ஆயின தொண்டர் துறக்கம்
பெறுவது சொல்லுடைத்தே
காய்சின ஆனை வளரும்
கனக மலையருகே
போயின காக்கையும் அன்றே
படைத்தது பொன்வண்ணமே.

பொழிப்புரை :

எளிதில் அகப்படாமை பற்றி, `கள்வன்` எனப் படுகின்ற, நல்ல, உயர்ந்த நீலமணி போலும் கண்டத்தையுடைய வனும், நீண்ட சடையை உடையவனுமாகிய சிவனுக்குத் தொண்டு பூண்ட அடியார்கள் யாதோர் உடம்பினையும் பற்றா நிலையாகிய வீட்டைப் பெறுதல் உண்மையே.
எங்ஙனம் எனில், பொன் மலையை அடுத்த காக்கையும் அப்பொழுதே பொன்னிறத்தைப் பெற்று விடுகின்றது.

குறிப்புரை :

இஃது எடுத்துக்காட்டுவமை.
தன்னைச் சார்ந்த பொருளைத் தன் வண்ணம் ஆக்குதல், சிவனுக்கும், செம்பொன் மலைக்கும் இடையேயுள்ள பொதுத் தன்மை.
சேர்வார் தாமே தானாகச் செயுமவன் என ஞானசம்பந்தர் அருளிச் செய்தது காண்க.
செம்மைச் சிவமேரு சேர்கொடி யாமே என்பது திருமந்திரம்.
கொடி - காக்கை.
``சொல்`` என்றது பொருளை.
``காய்சின ஆனை வளரும்`` என்றது கனக மலைக்கு அடைமொழி.

பண் :

பாடல் எண் : 101

அன்றுவெள் ளானையின் மீதிமை
யோர்சுற் றணுகுறச்செல்
வன்றொண்டர் பின்பரி மேற்கொண்டு
வெள்ளி மலைஅரன்முன்
சென்றெழில் ஆதி உலாஅரங்
கேற்றிய சேரர்பிரான்
மன்றிடை ஓதுபொன் வண்ணத்
தந்தாதி வழங்கிதுவே.

பொழிப்புரை :

இதிற் குறிக்கப்பட்ட வரலாற்றைத் திருத் தொண்டர் புராணத்துக் கழறிற்றறிவார் நாயனார் புராணத்தால் அறிக.
இது பிற்காலத்து ஆன்றோரால் செய்யப்பட்டது.

குறிப்புரை :

சுற்று - எப்பக்கத்திலும்.
மன்று - தில்லையம்பலம், பொன்வண்ணத் தந்தாதியாவது, இவ்வாறு வழங்குகின்ற இதுவே` என முடிக்க.
பொன்வண்ணத் தந்தாதி முற்றிற்று.

பண் :

பாடல் எண் : 1

விரிகடல் பருகி அளறுபட் டன்ன
கருநிற மேகம் கல்முக டேறி
நுண்துளி பொழிய நோக்கி ஒண்தொடி
பொலங்குழை மின்னப் புருவ வில்லிட்
டிலங்கெழிற் செவ்வாய்க் கோபம் ஊர்தரக்
கைத்தலம் என்னும் காந்தள் மலர
முத்திலங் கெயிறெனும் முல்லை அரும்பக்
குழலுஞ் சுணங்குங் கொன்றை காட்ட
எழிலுடைச் சாயல் இளமயில் படைப்ப
உள்நிறை உயிர்ப்பெனும் ஊதை ஊர்தரக்
கண்ணீர்ப் பெருமழை பொழிதலின் ஒண்ணிறத்
தஞ்சனக் கொழுஞ்சே றலம்பி யெஞ்சா
மணியும் பொன்னும் மாசறு வயிரமும்
அணிகிளர் அகிலும் ஆரமும் உரிஞ்சிக்
கொங்கை யென்னுங் குவட்டிடை இழிதரப்
பொங்குபுயல் காட்டி யோளே கங்கை
வருவிசை தவிர்த்த வார்சடைக் கடவுள்
அரிவை பாகத் தண்ணல் ஆரூர்
எல்லையில் இரும்பலி சொரியும்
கல்லோ சென்ற காதலர் மனமே.

பொழிப்புரை :

பொருள்வயிற் சென்ற தலைவர் குறித்த கார்ப் பருவமும் யாவரும் அறிய வந்திறுத்தது.
அதனால் ஆற்றாமை காரண மாக இவளும் (தலைவியும்) மற்றொரு முகிலின் தன்மையை எய்தி னாள்; தலைவர் தலைவியிடத்து மாறாக் காதலராயினும் (குறித்தபடி வாராமையால்) அவர் மனம் கல்லுப்போல வலிதாகிவிட்டதோ!

குறிப்புரை :

``விரிந்த கடல் நீரைத் தான் முற்றப் பருகியதனால் அது சேறாயிற்றுப் போலத் தோன்றுதற்கு ஏதுவான கரிய மேகம் மலை முகட்டில் ஏறி நுண் துளி பொழிய, அதனை நேரே கண்டு, தலைவி தானும் தனது காதணியாகிய மின்னல் மின்ன, புருவமாகிய வான வில்லைத் தோற்றுவித்து, விளங்குகின்ற எழிலையுடைய தனது சிவந்த வாயாகிய, `இந்திரகோபம்` என்னும் வண்டு ஊர்தர, `அகங்கைகள்` என்னும் காந்தட் பூக்கள் விரிய, முத்துப்போல விளங்குகின்ற பற்க ளாகிய முல்லை அரும்புகள் அரும்ப, கூந்தல் கொன்றைக் காயையும், தேமல் கொன்றைப் பூவையும், எழுச்சியையுடைய சாயல் மயிலையும் தோற்றுவிக்க, உள்ளிருந்து வெளிவரும் நெட்டுயிர்ப்பாகிய காற்று உடன் வீச, தனது கண்ணீராகிய பெருமழையைப் பொழிந்து, அத னானே கண்ணில் உள்ள மையாகிய கொழுவிய சேறு அலம்பப்பட்டு, அந்நீராகிய அருவி தன் கொங்கைகளாகிய மலைகளுக்கு இடையே, மாணிக்கம், பொன், குற்றம் அற்ற வைரம், அழகுமிகுந்த அகில், சந்தனம் இவைகளைத் தேய்த்து ஒழுகுதலால் மற்றொரு மேகமாம் தன்மையை விளக்கினாள்.
தலைவர் காதலுடை யாராயினும், (வந்து சேராமையால் அவர் மனம் இப்பொழுது கல்லாகிவிட்டதோ!`` எனப் பொருள் உரைத்துக் கொள்க.
``தவிர்த்த`` என்னும் பெயரெச்சம், ``சடை`` என்பதனோடு முடிந்தது.
`அண்ணலுக்கு` என நான்காவது விரிக்க.
பலி சொரியும் கல், பலிபீடம்.
பலி சொரியப்படும் கல் வலிதாதலோடு, பலியொன்றற்கன்றி பிறிதொன்றற்கு இடமாகாமையால் அதுவே கைப்பொருளுக்கன்றிப் பிறிதொன்றற்கு இடமாகாத மனத்திற்கு உவமையாயிற்று.
பொருளே காதலர் காதல்
அருளே காதல் என்றி நீயே
என்னும் அகப்பாட்டினையும் காண்க.
இப்பாட்டு உரிப் பொருளாற் பாலையாயிற்று.
இது நேரிசையாசிரியப்பா.

பண் :

பாடல் எண் : 2

மனம்மால் உறாதேமற் றென்செய்யும் வாய்ந்த
கனமால் விடையுடையான் கண்டத் - தினமாகித்
தோன்றினகார் தோன்றிலதேர் சோர்ந்தனசங் கூர்ந்தனபீர்;
கான்றனநீர் ஏந்திழையாள் கண்.

பொழிப்புரை :

(தலைவர் குறித்துச் சென்ற கார்ப் பருவம் வந்து விட்டமையால்) பெருமை பொருந்திய திருமாலாகிய இடபவாகனத்தையுடை சிவபெருமானது கண்டத்திற்கு ஒத்த வகையினையுடையவாய் முகில்கள் கண் முன்னே தோன்றிவிட்டன.
ஆயினும் தலைவர் ஊர்ந்து சென்றதும், சேமமாகக் கொண்டு சென்றவும் ஆகிய தேர்கள் எம் கண் முன் தோன்றவில்லை.
ஆகவே, இவளுடைய (தலைவியுடைய) மனம் மயக்கம் கொள்ளாது என் செய்யும்! (ஒன்றையும் செய்ய மாட்டாது.
ஆகையால்) இவள் கையில் உள்ள சங்க வளையல்கள் கழன்று வீழ்ந்தன; மேனி முழுவதும் பசலைகள் போர்த்தன; கண்கள் நீரைப் பொழிந்தன.

குறிப்புரை :

`இனி இறந்துபடுவாள் போலும்` என்பது குறிப்பெச்சம்.
இது பருவங்கண்டு ஆற்றாளாய தலைவியது நிலை கண்டு தோழி வருந்திக் கூறியது.
இதுவும் உரிப் பொருளாற் பாலையே.
`கனம் வாய்ந்த மால்` என மாற்றிக் கொள்க.

பண் :

பாடல் எண் : 3

கண்ணார் நுதல்எந்தை காமரு
கண்டம் எனவிருண்ட
விண்ணால் உருமொடு மேலது
கீழது கொண்டல்விண்ட
மண்ணார் மலைமேல் இளமயில்
ஆல்மட மான் அனைய
பெண்ணாம் இவள்இனி என்னாய்க்
கழியும் பிரிந்துறைவே.

பொழிப்புரை :

மேகம், `கண் பொருந்திய நெற்றியையுடைய எம் தந்தையாகிய சிவபெருமானது அழகிய கண்டம்` என்று சொல்லும்படி இருண்டு, தனக்கு இடமாகிய விண்ணின்கண் இடியுடன் மேலே உளதாயிற்று.
விசாலித்த நிலத்தின்கண் மலையிடத்து இளமையான மயிலின் ஆட்டம் கீழே உளதாயிற்று.
(எனவே,) விண்ணும், மண்ணும் கார்ப் பருவம் வந்ததைத் தெளிவாகக் காட்டி நிற்றலால்) இளைய மான் போலும் பெண்ணாகிய இவள் தலைவனைப் பிரிந்து உறையும் தனிமை இனி என்னாய்க் கழியுமோ!

குறிப்புரை :

`இறந்துபாடாய்க் கழியுமோ` என்றபடி ``இருண்ட`` என்னும் பெயரெச்சம் ``விண்`` என்னும் இடப் பெயர் கொண்டது.
`இருண்டு` என்றே பாடம் ஓதலும் ஆம்.
விண்ட - அகன்ற.
ஆல் - ஆலுதல்; முதனிலைத் தொழிற் பெயர்.
`கொண்டல் மேலது; மயில் ஆலுதல் கீழது; இனி என்னாய்க் கழியும்` என்க.
இதன் திணையும், துறையும் மேலனவே.

பண் :

பாடல் எண் : 4

உறைகழி ஒள்வாள் மின்னி உருமெனும்
அறைகுரல் முரசம் ஆர்ப்பக் கைபோய்
வெஞ்சிலை கோலி விரிதுளி என்னும்
மின்சரந் துரந்தது வானே நிலனே
கடிய வாகிய களவநன் மலரொடு
கொடிய வாகிய தளவமும் அந்தண்
குலைமேம் பட்ட கோடலுங் கோபமோ
டலைமேம் பட்ட காந்தளும் இவற்றொடு
காயா வெந்துயர் தருமே அவரே
பொங்கிரும் புரிசை போக்கற வளைஇக்
கங்குலும் பகலும் காவல் மேவி
மாசறு வேந்தன் பாசறை யோரே
யானே இன்னே
அலகில் ஆற்றல் அருச்சுனற் கஞ்ஞான்
றுலவா நல்வரம் அருளிய உத்தமன்
அந்தண் ஆரூர் சிந்தித்து மகிழா
மயரிய மாக்களைப் போலத்
துயருழந் தழியக் கண்துயி லாவே.

பொழிப்புரை :

வானம்; தன்னிடத்து உள்ள மேகங்களின்வழி மின்னலாகிய ஒளி பொருந்திய வாளை உறையினின்றும் உருவி வீசி, இடி முழக்கமாகிய போர்முரசம் ஒலிக்க, எவ்விடமும் அகப்படக் கொடிய வில்லை (வானவில்லை) வளைத்து, எங்கும் நிறைந்த மழைத் தாரைகளாகிய வெள்ளிய அம்புகளை ஏவிப் போர்புரியாநின்றது; நிலம், கடிய களாமலர், கொடிய முல்லை மலர், குலையாக மேம்பட்ட அழகிய, குளிர்ந்த வெண்காந்தள் மலர், அலைவால் மேம்பட்ட செங்காந்தள் மலர், `இந்திர கோபம்` என்னும் வண்டு காயா மலர் இவைகளுடன் கூடி கொடிய துன்பத்தைத் தாராநின்றது.
அவரோ (தலைவரோ) பகை மன்னரது காவல் மிக்க அரணை, வெளி வருவாரையும், உட்புகுவாரையும் அவற்றைச் செய்யாதவாறு தடுத்து முற்றுகையிட்டு, இரவும் பகலும் காவல் புரிதலை விரும்பிக்குற்றம் அற்றவனாகிய அரசன் பாசறைக்கண்ணே இருத்தலால் (எம்மையும், எமக்கு அவர் சொல்லிச் சென்ற சொல்லையும் நினைப்பாரல்லர்; ஆதலின்) யானோ இவ்விடத்திலே, அளவற்ற ஆற்றல் வாய்ந்த அருச்சுனனுக்கு அக்காலத்தில் அவன் போரில் இறந்து படாது வெற்றி பெறும்படி நல்ல வரத்தைக் கொடுத்த மேலோனாகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள, அழகிய, குளிர்ச்சி மிக்க திருவாரூரை நினைத்து மகிழும் நல் ஊழ் இல்லாது, உலக மயக்கத்திற் கிடக்கும் மாக்களைப் போலத் துயரத்தையே நுகர்ந்து இறந்துபடும்படி என்னுடைய கண்கள் உறங்குகின்றில.

குறிப்புரை :

`இனியான் என் செய்வேன்` என்பது குறிப்பெச்சம்.
இதுவும் உரிப்பொருளாற் பாலை.
வினைவயிற் பிரிந்த தலைவன் நீடத் தலைவி பருவங் கண்டு ஆற்றாமை துறை.
மயரிய - மயங்கிய.
``கடிய, கொடிய`` என்பன, `மணம் பொருந்திய, கொடியில் உள்ள என்னும் பொருளவாயினும் `கடுமையுடைய, கொடுமையுடைய` பிற நயங் களையுந் தந்தன.
இதனுள் இயைபுருவகம் வந்தமை காண்க.
இஃது இடையே குறளடி பெற்றமையால் இணைக்குறள் ஆசிரியப்பா.

பண் :

பாடல் எண் : 5

துயிலாநோய் யாம்தோன்றத் தோன்றித்தீத் தோன்ற
மயிலால வந்ததால் மாதோ - அயலாய
அண்டத்துக் கப்பாலான் அந்திங்கட் கண்ணியான்
கண்டத்துக் கொப்பாய கார்.

பொழிப்புரை :

துயிலாமைக்கு ஏதுவாகிய துன்பம் எம்மிடத்திலே தோன்றுமாறு தோன்றிப் பூவாகிய நெருப்புத் தோன்றும்படியும், மயில்கள் ஆடும்படியும் அடுக்கடுக்காய் உள்ள பல அண்டங்கட்கும் அப்பால் உள்ள பல அண்டங்கட்கும் அப்பால் உள்ளவனும், அழகிய திங்களாகிய கண்ணியைச் சூடினவனும் ஆகிய சிவபெருமானது கண்டத்துக்கு ஒப்பாய் உள்ள முகில் வந்துவிட்டது.

குறிப்புரை :

`இனித் தலைவர் வருவார்` என்பது குறிப்பெச்சம்.
`வாராராயின் யாம் துயிலேம் என்பதை அவர் அறிவார்` என்றற்கு, `துயிலாநோய் யாம் தோன்றக் கார் வந்தது` என்றாள்.
இது, `பருவம் கண்டு தலைவி ஆற்றாள்` எனக் கருதி ஆற்றுவித்தற் பொருட்டுத் தலைவனை இயற் பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது.
``நோய் யாம் தோன்ற`` என இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத் தின் மேல் நின்றது.
தோன்றித் தீ, உருவகம்.
ஆல், மாது, ஓ அசைகள்.

பண் :

பாடல் எண் : 6

காரும் முழக்கொடு மின்னொடு
வந்தது காதலர்தம்
தேருந் தெருவுஞ் சிலம்பப்
புகுந்தது சில்வளைகள்
சோருஞ் சிலபல அங்கே
நெரிந்தன துன்னருநஞ்
சாரும் மிடற்றண்ணல் ஆரூரன்
ஐய அணங்கினுக்கே.

பொழிப்புரை :

மேகமும் இடியோடும், மின்னலோடும் வந்தது.
தலைவர் சொல்லியபடி அவரது தேரும், தெருவும் ஆரவாரிக்கும் படி புகுந்தது.
நினைத்தற்கரிய விடத்தை உண்ட கண்டத்தினை உடைய முதல்வராகிய சிவபெருமானது ஆரூரை ஒத்தவளாகிய அழகிய தலைவி தன் கைவளைகள் மெலிவால் கழல்வனவாய் இருந்தவை இப்பொழுது பூரிப்பால் நெரிவனவாயின.

குறிப்புரை :

இது, பிரிந்திருந்த தலைவன் தான் குறித்தபடி வந்தமை யறிந்து கண்டோர் கூறியது.
``காரும், தேரும்`` என்னும் உம்மைகள் எதிரது தழுவியதும், இறந்தது தழுவியதுமாய எச்ச உம்மைகள்.
``தெரு வும்`` என்னும் உம்மை உயர்வு சிறப்பு.
`அன்ன` என்பது கடைக் குறைந்து நின்றது.

பண் :

பாடல் எண் : 7

அணங்குறை நெடுவரை அருமைபே ணாது
மணங்கமழ் தெரியல் சூடி வைகலும்
விடுசுடர் நெடுவேல் முன்னடி விளக்காக்
கடுவிசைக் கான்யாற்று நெடுநீர் நீந்தி
ஒருதனி பெயரும் பொழுதில் புரிகுழல்
வான்அர மகளிர்நின் மல்வழங் ககலத்
தானாக் காத லாகுவர் என்று
புலவி உள்ளமொடு பொருந்தாக் கண்ணள்
கலைபிணை திரியக் கையற வெய்தி
மெல்விரல் நெரித்து விம்மி வெய்துயிர்த்து
அல்லியங் கோதை அழலுற் றாஅங்
கெல்லையில் இருந்துயர் எய்தினள் புல்லார்
திரிபுரம் எரிய ஒருகணை தெரிந்த
அரிவை பாகத் தண்ண லாரூர்
வளமலி கமல வாள்முகத்
திளமயிற் சாயல் ஏந்திழை தானே.

பொழிப்புரை :

தலைவ, தெய்வம் தங்கும் பெரிய மலைகளை `அவை அத்தன்மைய` என்றும், `ஏறுதற்கு அரியன` என்றும் எண் ணாது, நறுமணம் கமழும் மலையைச் சூடிக் கொண்டு, நாள்தோறும், வீசுகின்ற ஒளியையுடைய நீண்ட உனது வேற்படையே உனக்கு முன்னே வழியை விளக்கும் விளக்காய் அமைய, மிக்க வேகத்தை யுடைய கான்யாற்று நீண்ட நீரை நீந்திக் கடந்து, நீ ஒருவனே தனியாய் வரும்பொழுது, `பின்னப்பட்ட கூந்தலையுடைய தேவ மகளிர் உன்னை, `தேவன்` என மருண்டு, திண்மை வாய்ந்த உனது மார்பின் கண் பொருந்துதற்கு நீங்காக் காதல் மிகுகின்றவராய் உன் குணத்தை வேறுபடுத்திவிடுவர்` என்று, பகைவரது மூன்று ஊர்களும் ஒருங்கே எரிந்தொழியும்படி ஓர் அம்பையே ஆராய்ந்து எடுத்து எய்த, மாதொரு பாகனாகிய இறைவனது திருவாரூரில் நீர் வளத்தாற் சிறந்த பொய்கையிற் பூத்த தாமரை மலர் போலும் ஒளி பொருந்திய முகத்தை யும், இளைய மயிலினது சாயல்போலும் சாயலினையும், ஏந்திய அணிகலங்களையும் உடைய என் தோழி உன்னை வெறுக்கும் உள்ளத்துடன் இமை குவியாத கண்களையுடையவளாய், எங்கள் குடில்களையடுத்து ஆண்மான்கள் பெண்மான்களோடே பிரியாது திரிதலைக் கண்டு செயலற்று, ஆற்றாமையால் கையிலுள்ள மெல்லிய விரல்களை நெரித்துக் கொண்டு, விம்மி வெப்பமாக மூச்செறிந்து, அக இதழோடு கூடிய பலவகை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை ஒன்று கண்ணீர் விட்டு அழுதல்போல (இரவு முழுதும்) எல்லையில்லாத பெருந்துயரை எய்தி அழாநின்றாள்; (அவளை யான் ஆற்றுவிப்பது எங்ஙனம்?)

குறிப்புரை :

ஈற்றில் வருவித்துரைத்தது குறிப்பெச்சம்.
இது தலைவன் களவொழுக்கத்தை நீட்டியாது வரைதலை வேண்டித் தோழி இரவு வருவானை `வாரற்க` என இரவுக் குறி விலக்கியது.
இது முதல் கரு, உரி முப்பொருளாலும் குறிஞ்சி.
``கலை பிணை திரிய`` என்றது, `நீயும் அதுபோல இவளை வரைந்து கொண்டு பிரியாதிருத்தல் வேண்டும்`` என்பதைக் குறித்த உள்ளுறை யுவமம்.
`மணங்கமழ் தெரியல் சூடி`` என்றது, அவரது மருட்சிக்கு மற்றுமொரு காரணம் உண்மை கூறியது.

பண் :

பாடல் எண் : 8

இழையார் வனமுலை யீர்இத்தண் புனத்தின்
உழையாகப் போந்ததொன் றுண்டோ - பிழையாச்சீர்
அம்மான் அனலாடி ஆரூர்க்கோன் அன்றுரித்த
கைம்மாநேர் அன்ன களிறு.

பொழிப்புரை :

அணிகலன்கள் நிறைந்த, அழகிய தனங்களை யுடையவர்களே, வறிது படாத புகழையுடைய பெரியோனும், தீயில் நின்று ஆடுவோனும், திருவாரூரில் உள்ள முதல்வனும் ஆகிய சிவபெருமான் முற்காலத்தில் உரித்த யானையே போன்ற அந்த யானை இந்தக் குளிர்ச்சியான புனத்தின் பக்கமாகப் போந்ததொரு செயலை நீவிர் கண்டது உண்டோ?

குறிப்புரை :

இஃது, இயற்கைப் புணர்ச்சியிலும், இடந்தலைப் பாட்டிலும், பாங்கற் கூட்டத்திலும் தலைவியைக் கூடி இன்புற்ற தலை வன் பாங்கியிற் கூட்டத்தின் பொருட்டு அவளை மதியுடம்படுத்தற்கு அவர் இருவரும் உள்வழிச் சென்று வேழம் வினாயது.
``அன்ன`` என்பது சுட்டு.

பண் :

பாடல் எண் : 9

களிறு வழங்க வழங்கா
அதர்கதிர் வேல்துணையா
வெளிறு விரவ வருதிகண்
டாய்விண்ணினின் றிழிந்து
பிளிறு குரற்கங்கை தாங்கிய
பிஞ்ஞகன் பூங்கழல்மாட்
டொளிறு மணிக்கொடும் பூண்இமை
யோர்செல்லும் ஓங்கிருளே.

பொழிப்புரை :

யானைகள் உலாவுதலால் மக்கள் செல்லாத வழியில் கையில் உள்ள வேல் ஒன்றே துணையாக, ஆகாயத்தினின்றும் இறங்கிய, ஒலிக்கும் ஒலியையுடைய கங்கையைச் சடையில் தாங்கிய தலைக் கோலத்தையுடைய சிவபெருமானது அழகிய திருவடிகளை வணங்குதற்பொருட்டு அவற்றை நோக்கி, ஒளிவீசுகின்ற இரத்தினங்களால் ஆயவளைந்த அணிகலன்களை அணிந்த தேவர் மட்டுமே செல்கின்ற மிகுந்த இருட் காலத்தில் நீ அத்தேவர்காண இங்கு வருகின்றாய்!

குறிப்புரை :

`இது தகாது` என்பது குறிப்பெச்சம்.
இதன் திணையும், துறையும் மேல், ``அணங்குறை நெடுவரை`` எனப் போந்த பாட்டின வேயாம்.
`அர்த்த யாம பூசையில் தேவர் சிவபெருமானைச் சென்று வணங்குவர்` என்பது பற்றி ``பிஞ்ஞகன் பூங்கழல் மாட்டு இமையோர் செல்லும் இருள்`` என்றார்.
கண்டாய், முன்னிலை அசை.

பண் :

பாடல் எண் : 10

இருள்புரி கூந்தலும் எழில்நலம் சிதைந்தது
மருள்புரி வண்டறை மாலையும் பரிந்தது
ஒண்ணுதல் திலகமும் அழிந்தது கண்ணும்
மைந்நிறம் ஒழிந்து செந்நிறம் எய்தி
உள்நிறை கொடுமை உரைப்ப போன்றன
சேதகம் பரந்தது செவ்வாய் மேதகு
குழைகெழு திருமுகம் வியர்ப்புள் ளுறுத்தி
இழைகெழு கொங்கையும் இன்சாந் தழீஇக்
கலையுந் துகிலும் நிலையிற் கலங்கி
என்னிது விளைந்த வாறென மற்றி
தன்னது அறிகிலம் யாமே செறிபொழில்
அருகுடை ஆரூர் அமர்ந்துறை அமுதன்
முருகுவிரி தெரியல் முக்கண் மூர்த்தி
மராமரச் சோலைச் சிராமலைச் சாரல்
சுரும்பிவர் நறும்போது கொய்யப்
பெருஞ்செறு வனத்தில்யான் பிரிந்ததிப் பொழுதே.

பொழிப்புரை :

நெருங்கிய சோலைகளைப் பக்கத்தே உடைய திருவாரூரில் விரும்பி உறைகின்ற அமுதமாய் உள்ளவனும், நறுமணத்தோடு மலர்கின்ற மாலையை அணிந்தவனும், மூன்று கண்களையுடையவனும் ஆகிய இறைவனது மராமரச் சோலையையுடைய திருச்சிராமலைச் சாரலில், வண்டுகள் வீழும் நறிய போது சிலவற்றைக் கொய்து வருதற் பொருட்டு, அடர்த்தியான காட்டில் இவளை யான் இப்பொழுதுதான் பிரிந்து போய்வந்தேன்.
(நெடும்பொழுது தாழ்த்திலேன்; வந்து பார்க்கும் பொழுது) இவளுடைய இருள் போன்ற கூந்தல் எழுச்சியுடைய அழகு சிதைந்து குலைந்துள்ளது; வியப்பைத் தரும், வண்டுகள் ஒலிக்கும் மாலை அலங்கோலமாகக் கசங்கியுள்ளது, ஒளிபொருந்திய நெற்றியில் இட்டதிலகம் அழிந்துவிட்டது.
கண்களில் தீட்டிய மை கலைய, கண்கள் சிவந்து, எவையோ சில கொடுமையைக் கூறுவனபோல்வன போன்றன; சிவந்த வாய் அந்நிலை குலைந்தது; காதில் குழையணிந்தமையால் அழகிதாய்த் தோன்றும் முகம் வெயர்ப்புடையதாக, அணிகலம் பொருந்திய தனங்களில் பூசப்பட்ட சந்தனம் அழிந்து, மேகலையும் தனங்களில் பூசப்பட்ட சந்தனம் அழிந்து, மேகலையும், உடையும் நெகிழ்ந்தமையால் `இவ்வாறான இந்நிலை எத்தன்மையின் விளைவு` என அறிய யாம் இயலேம்.

குறிப்புரை :

இது, தலைவி தலைவனது களவொழுக்கத்துக்குட்பட்ட மையைத் தலைவியது தோற்றம் பற்றித் தோழி குறிப்பால் உணர்ந்தது, திணை குறிஞ்சி.
``செறி பொழில்`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.

பண் :

பாடல் எண் : 11

பொழுது கழிந்தாலும் பூம்புனங்காத் தெள்க
எழுது கொடியிடையாய் ஏகான் - தொழுதமரர்
முன்னஞ்சேர் மொய்கழலான் முக்கணான் நான்மறையான்
மன்னுஞ்சேய் போல்ஒருவன் வந்து.

பொழிப்புரை :

தேவர்கள் வணங்கித் தனது சந்நிதியை அடைகின்ற, நெருங்கிய கழல் அணிந்த திருவடியை உடையவனும், மூன்று கண்களை உடையவனும், நான்கு வேதங்களின் முதல்வனும் ஆகிய சிவபெருமான்தன் மைந்தனாகிய முருகன்போன்ற ஒருவன் நமது அழகிய புனத்திலே வந்து, பொழுது போய்விட்டாலும் தான் போகாது, யாவரும் இகழும்படி காத்து நிற்கின்றான்; ஓவியத்தில் எழுதப்பட்டது, போன்ற அழகுடைய கொடிபோலும் இடையை உடையவளே!

குறிப்புரை :

`அவனுக்கு நான் என்ன சொல்வது` என்பது குறிப் பெச்சம்.
இது, தலைவனை மடல் விலக்கி அவனுக்குக் குறைநேர்ந்த தோழி தலைவியிடம் சென்று மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தது.
இதுவும் குறிஞ்சியே.

பண் :

பாடல் எண் : 12

வந்தார் எதிர்சென்று நின்றேற்கு
ஒளிரும்வண் தார்தழைகள்
தந்தார் அவையொன்றும் மாற்றகில்
லேன் தக்கன் வேள்விசெற்ற
செந்தா மரைவண்ணன் தீர்த்தச்
சடையன் சிராமலைவாய்க்
கொந்தார் பொழிலணி நந்தா
வனத்துக் குளிர்புனத்தே.

பொழிப்புரை :

(தோழீ!) தக்கன் வேள்வியை அழித்த, செந்தாமரை மலர்போலும் நிறத்தையும், கங்கையைத் தரித்த சடையையும் உடைய சிவபெருமானது திருச்சிராமலையின் கண், பூங்கொத்துக்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்டு, நமக்கே உரித்தாய் நாம் சென்று விளையாடுகின்ற நந்தவனத்தின் நடுவிலே நாம் இருக்கின்ற புனத்தின் கண் ஆடவர் ஒருவர் தனியே வந்தார்.
(`இஃது என்` என்று வினாவ) யான் அவர் எதிரே சென்றபொழுது அவர் அழகிய மாலையையும், தழையையும் (`இவை எங்கும் கிடைத்தற்கு அரிய` என்று சொல்லித்) தந்தார்.
அவற்றுள் ஒன்றையும் யான் மறுக்க மாட்டாதவளாய் வாங்கிக் கொண்டேன்.

குறிப்புரை :

இதுவும் மேற்கூறிய வகையில் தழை ஏற்பித்தது.

பண் :

பாடல் எண் : 13

புனமயிற் சாயற் பூங்குழல் மடந்தை
மனைமலி செல்வம் மகிழா ளாகி
ஏதிலன் ஒருவன் காதலன் ஆக
விடுசுடர் நடுவண்நின் றடுதலின் நிழலும்
அடியகத் தொளிக்கும் ஆரழற் கானத்து
வெவ்வினை வேடர் துடிக்குரல் வெரீஇ
மெய்விதிர் எறியுஞ் செவ்விய ளாகி
முள்ளிலை யீந்தும் முளிதாள் இலவமும்
வெள்ளிலும் பரந்த வெள்ளிடை மருங்கில்
கடுங்குரற் கதநாய் நெடுந்தொடர் பிணித்துப்
பாசந் தின்ற தேய்கால் உம்பர்
மரையதள் வேய்ந்து மயிர்ப்புன் குரம்பை
விரிநரைக் கூந்தல் வெள்வாய் மறத்தியர்
விருந்தா யினள்கொல் தானே திருந்தாக்
கூற்றெனப் பெயரிய கொடுந்தொழில் ஒருவன்
ஆற்றல் செற்ற அண்ணல் ஆரூர்ச்
செய்வளர் கமலச் சீறடிக்
கொவ்வைச் செவ்வாய்க் குயில்மொழிக் கொடியே.

பொழிப்புரை :

முறைமையறியாத, `யமன்` என்னும் பெயரையும், கொடிய தொழிலையும் உடைய ஒருவனது வலிமையை அழித்த பெருமான் எழுந்தருளியுள்ள திருவாரூர் வயல்களில் பூத்துள்ள தாமரை மலர் போலும் சிறிய பாதங்களையும் கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயையும், குயிலின் குரலைப் போன்ற குரலையும், அழகிய மயில்போன்ற சாயலையும், பூவையணிந்த கூந்தலையும் உடையவள் ஆகிய, பூங்கொடி போல்பவளாகிய என் மகள், இந்த இல்லத்தில் நிறைந்த செல்வத்தில் திளைத்தலை விரும்பாதவளாய், அயலான் ஒருவனைத் தன் காதலனாகக் கொண்டு, (அவன்பின்னே போய்) ஒளியை வீசுகின்ற செங்கதிர் வானத்தின் உச்சியில் நின்று காய்தலால் நிலத்தில் உள்ளோரது நிழல்களும் அவர் அவர் அடிக்கீழ் வந்து ஒடுங்குகின்ற (எனவே, எந்த நிழலும் இல்லாத) பொறுத்தற்கரிய வெப்பத்தையுடைய சுரத்தின்கண் கொடுந்தொழிலை உடைய மறவர் கள் முழக்குகின்ற பறைகளின் ஓசையைக் கேட்டு உடம்பு நடுங்கும் நிலையை உடையவளாய் முள்போன்ற இலையை யுடைய ஈச்ச மரமும், அடிமரமும் உலர்ந்துபோன இலவ மரமும், (இலையுதிர்ந்த) விளா மரமும் ஆங்காங்கு உள்ள, மறைவு யாதும் இன்றி வெட்ட வெளியாகிய இடத்தில், கடுமையான குரலையுடைய, சினம் பொருந்திய நாய்களை நீண்ட சங்கிலியாற் கட்டிவைத் திருத்தலால் அந்தச் சங்கிலியால் தேய்ந்து போன கால்களின் மேல் மான்தோலை வேய்ந்து, அதனால் அதன் மயிர்கள் தோன்றும் கூரையையுடைய சிறிய குடில்களில் வாழும், பரட்டையாய் நரைத்துப்போன தலை மயிரையும், பாசடை இன்மையின் வெளுத்த வாயினையும் உடைய மறத்தியர்களுக்கு விருந்தாய்ப் போய்த் தங்கினாளோ!

குறிப்புரை :

`ஒன்றும் தெரியவில்லை` என்பது குறிப்பெச்சம் இது தலைவி தலைவனோடு உடன்போயினமை யறிந்து செவிலி பின் தேடிச் சென்றது.

பண் :

பாடல் எண் : 14

கொடியேர் நுடங்கிடையாள் கொய்தாரான் பின்னே
அடியால் நடந்தடைந்தாள் ஆவாக - பொடியாக
நண்ணார்ஊர் மூன்றெரித்த நாகஞ்சேர் திண்சிலையான்
தண்ணாரூர் சூழ்ந்த தடம்.

பொழிப்புரை :

பகைவரது முப்புரத்தைச் சாம்பல் ஆகும்படி எரித்த.
பாம்பே நாணாகச் சேர்ந்த வலிய வில்லை உடைய பெருமானது குளிர்ந்த திருவாரூர்க்கு அயலாக உள்ள கொடிய வழியிலே கொடிபோலத் துவளுகின்ற இடையினையுடைய என் மகள் கத்தரியால் மட்டம் செய்யப்பட்ட மாலையை அணிந்த ஓர் அயலான்பின்னே காலால் நடந்தே சென்றாள்; இஃது இரங்கத் தக்கது.

குறிப்புரை :

`அடைந்தாளாக` என்பது பாடமன்று.
``கொய்தார்`` என்பதனைச் சினைவினை முதல்மேல் ஏற்றப்பட்டதாகக் கொண்டு, `கொய்யப்பட்ட மலரால் ஆகிய மாலை` என்றலும் ஆம்.
இதுவும் முன்னைப் பாட்டின் துறையே.
``திண்சிலை`` என்றது, `மலையாகிய வில்` என்பதனைக் குறிப்பால் உணர்த்தியது.

பண் :

பாடல் எண் : 15

தடப்பாற் புனற்சடைச் சங்கரன்
தண்மதி போல்முகத்து
மடப்பால் மடந்தை மலரணைச்
சேக்கையிற் பாசம்பிரீஇ
இடப்பால் திரியின் வெருவும்
இருஞ்சுரஞ் சென்றனளால்
படப்பா லனஅல்ல வால்தமி
யேன்தையல் பட்டனவே.

பொழிப்புரை :

தீர்த்தங்களில் ஒன்றாய் இருக்கற்பாலதாய நீரை சடையிலே உடைய சிவபெருமான் அணிந்துள்ள பிறை போலும் நெற்றியையுடைய, பேதைமைப்பாலளாகிய என் மகள் இயல்பாக மலர் அணையாகிய படுக்கையினின்றும் சிறிது வெறுத்து நீங்கி இடம் மாறினாலும் அஞ்சி வருந்துவாள்.
அத்தகையவள் இப்பொழுது பெரிய பாலை நிலத்திலே நடந்து சென்றாள்.
தமியேன் %

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 16

பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி
நட்ட கல்லும் மூதூர் நத்தமும்
பரல்முரம் பதரும் அல்லது படுமழை
வரல்முறை அறியா வல்வெயிற் கானத்துத்
தேன்இவர் கோதை செல்ல மானினம்
அம்சில் ஓதி நோக்கிற்கு அழிந்து
நெஞ்செரி வுடைமையின் விலக்காது விடுக
கொங்கைக் கழிந்து குன்றிடை அடைந்த
கொங்கிவர் கோங்கமுஞ் செலவுடன் படுக
மென்றோட் குடைந்து வெயில்நிலை நின்ற
குன்ற வேய்களும் கூற்றடைந் தொழிக
மாயிருங் கடற்றிடை வைகல் ஆயிரம்
பாவையை வளர்ப்போய் நீநனி பாவையை
விலக்காது பிழைத்தனை மாதோ நலத்தகும்
அலைபுனல் ஆரூர் அமர்ந்துறை அமுதன்
கலையமர் கையன் கண்ணுதல் எந்தை
தொங்கலஞ் சடைமுடிக் கணிந்த
கொங்கலர் கண்ணி யாயின குரவே.

பொழிப்புரை :

நலத்தால் தகுதிப் பட்ட, அலையும் நீரையுடைய திருவாரூரில் விரும்பி உறைகின்ற அமுதமாகியவனும், மான் பொருந்திய கையை உடையவனும், கண் பொருந்திய நெற்றியை உடையவனும் ஆகிய எம் தந்தை கொன்றை மாலையோடு ஒக்க அணிந்த கண்ணியாதற்கு அமைந்த நறுமணத்தொடு கூடிய மலர்களை யுடைய குராமரமே, போரில் இறந்து பட்டோரது பெயர்களையும், அவர் செய்த வீரச் செயல்களையும் எழுதி நடப்பட்ட கற்களும், பழையனவாகிய குடில்களையுடைய சீறூர்களும், பரற்கற்கள் நிறைந்த அருவழிகளும் அல்லது, வானின்றும் வீழ்கின்ற பெய்தலை ஒரு காலத்தும் கண்டிராத மிக்க வெயிலையுடைய சுரத்தில்; தேன் ததும்பும் மாலையை அணிந்த என் மகள் செல்லும் பொழுதும் மான் கூட்டம் அவளது பார்வைக்குத் தோற்றுப் போன பகைமையால் மனம் வெதும்பி விலக்காதுபோகட்டும்; அவளது கொங்கைகளுக்குத் தோற்றுப் போய் மலையிடத்தே ஓடி நின்ற, மணம் மிக்க மலர்களை யுடைய கோங்க மரங்கள் அவளை விலக்காமல் பார்த்துக் கொண் டிருக்கட்டும்; அவளது மெல்லிய தோள்களுக்குத் தோற்றுப் போய் வெயிலிலே நின்று வருந்துகின்ற மூங்கில்கள் அவளை விலக்காமல் ஓரிடத்தில் ஒதுங்கியிருக்கட்டும்; பெரிய சுரத்திடையிலே நாள்தோறும் ஆயிரம் பாவைகளைப் பெற்று வளர்க்கின்ற நீ அவளை விலக்காது குற்றத்திற்கு மிகவும் ஆளாயினை.

குறிப்புரை :

`இது நன்றோ` என்றபடி குராமலர் பாவை போலத் தோன்றுதலின், அது பாவையைப் பெற்று வளர்ப்பதாக இலக்கியங் களில் கூறப்படும்.
`பாவையைப் பெற்று வளர்க்கும் அன்பின்மேலும், உனது மலரைச் சிலர் விரும்பியணியும் தகுதியையும் உடையை யன்றோ` என்றற்கு, ``எந்தை அணிந்த கண்ணியாயின குரவே`` என்றாள்.
`அணிந்த கண்ணிக் கொங்கலர் குரவே` என மாற்றியுரைக்க.
``குரா மலரோடு அரா மதியம் சடைமேற் கொண்டார்`` என்னும் திரு முறையால் (திருமுறை 6-96-11)குராமலர் இறைவனுக்கு இனிதாதல் அறிக.
இது மேலைத் துறையில் குரவொடு புலம்பல்.

பண் :

பாடல் எண் : 17

குரவங் கமழ்கோதை கோதைவே லோன்பின்
விரவுங் கடுங்கானம் வெவ்வாய் - அரவம்
சடைக்கணிந்த சங்கரன் தார்மதனன் றன்னைக்
கடைக்கணித்த தீயிற் கடிது.

பொழிப்புரை :

குரா மலர் மணம் கமழ்கின்ற மாலையை அணிந்த என் மகள் மாலை யணிந்த வேலை ஏந்தியவன் பின்னே சென்ற கடிய சுரம், கொடிய நஞ்சு பொருந்திய வாயையுடைய பாம்பைச் சடை யிலே அணிந்த சிவபெருமான், மாலையணிந்த மன்மதனை நெற்றிக் கண்ணால் சிறிதே நோக்கிய பொழுது எழுந்த தீயினும் கொடியது.

குறிப்புரை :

`அதில் அவள் எப்படிச் சென்றாள்` என்றபடி.
இதுவும் செவிலி புலம்பல்.

பண் :

பாடல் எண் : 18

கடிமலர்க் கொன்றையுஞ் திங்களுஞ்
செங்கண் அரவும்அங்கண்
முடிமலர் ஆக்கிய முக்கணக்
கன்மிக்க செக்கரொக்கும்
படிமலர் மேனிப் பரமன்
அடிபர வாதவர்போல்
அடிமலர் நோவ நடந்தோ
கடந்ததெம் அம்மனையே.

பொழிப்புரை :

எம் தாய் (மகள்) சுரத்தைக் கடந்தது, வாசனை பொருந்திய கொன்றையோடு திங்கள், சிவந்த கண்களையுடைய பாம்பு இவைகளையும் முடியில் அணியும் மலராகக் கொண்டு அணிந் துள்ள, மூன்று கண்களையுடைய திகம்பரனும், செவ்வானம் போலும் மெல்லிய மேனியை உடையவனும் ஆகிய சிவபெருமானது திருவடி மலர்களைத் துதியாதவர்கள் போலப் பாதங்களாகிய தாமரை மலர்கள் நோகும்படி நடந்தேயோ!

குறிப்புரை :

இதுவும் மேலைத் துறை.

பண் :

பாடல் எண் : 19

மனையுறைக் குருவி வளைவாய்ச் சேவல்
சினைமுதிர் பேடைச் செவ்வி நோக்கி
ஈன்இல் இழைக்க வேண்டி ஆனா
அன்புபொறை கூர மேன்மேல் முயங்கிக்
கண்ணுடைக் கரும்பின் நுண்தோடு கவரும்
பெருவளந் தழீஇய பீடுசால் கிடக்கை
வருபுனல் ஊரன் பார்வை யாகி
மடக்கொடி மாதர்க்கு வலையாய்த் தோன்றிப்
படிற்று வாய்மொழி பலபா ராட்டி
உள்ளத் துள்ளது தெள்ளிதின் கரந்து
கள்ள நோக்கமொடு கைதொழு திறைஞ்சி
எம்மில் லோயே பாண அவனேல்
அமரரும் அறியா ஆதிமூர்த்தி
குமரன் தாதை குளிர்சடை இறைவன்
அறைகழல் எந்தை ஆரூர் ஆவணத்
துறையில் தூக்கும் எழில்மென் காட்சிக்
கண்ணடி அனைய நீர்மைப்
பண்ணுடைச் சொல்லியர் தம்பா லோனே.

பொழிப்புரை :

பாணனே, இல்லங்களில் வாழும் குருவிகளில் வளைந்த அலகினையுடைய ஆண் குருவி ஒன்று தன் பெட்டைக் குருவி கரு முதிர்ந்து முட்டையிடும் காலத்தை அடைந்திருப்பதை உணர்ந்து அது தங்கி முட்டையிடுவதற்கு உரிய கூடு ஒன்றைக் கட்ட வேண்டி, அப்பெட்டையின் மேல் உளதாகிய அன்பு மிகுந்து தனக்குச் சுமையாதலால், பெட்டை மனம் வருந்தாதபடி அதனை அடிக்கடி தழுவி மகிழ்ச்சி உண்டாக்கிக் கொண்டு பக்கத்து வயலில் கணு முற்றி வளர்ந்திருக்கின்ற கரும்பின் சிறிய சோனைகளில் நார் உரிக்கின்ற வயல் வளம் மிகப் பொருந்திய, பெருமை நிறைந்த இல்லங்களையும், எப்பொழுதும்வற்றாது வரும் நீரினையும் உடைய ஊரை உடையவன் உன் தலைவன்.
அவன் கட்டிவைக்கும் பார்வை மிருகமாய், இளைய கொடிபோல்பவராகிய மகளிரை அவன் வலையில் வீழ்க்க வந்து, வஞ்சக வார்த்தைகள் பலவற்றை இனிமையாகச் சொல்லி, உள்ளத்தில் உள்ள உண்மையை முற்றிலுமாக மறைத்துத் திருட்டுப் பார்வை பார்த்துக் கொண்டு, கள்ளக் கும்பிடு போட்டு, (தலைவர் இங்கு உள்ளாரோ` எனப் பொய்யாக வினவிக் கொண்டு) எங்கள் இல்லத்திலே வந்து நிற்கின்றாய்.
(அவன் செய்தியை நீ அறியாயோ? அவன் இங்கா இருப்பான்?) அவனோ அமரரும் அறியா ஆதி மூர்த்தியும், முருகன் தந்தையும், நீரால் குளிர்ந்த சடையை உடைய இறைவனும், ஒலிக்கும் கழலை அணிந்தவனும், எம் தந்தையும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருவாரூர்க் கடைத் தெருவில் கடை களில் தொங்க விடப்பட்டுள்ள அழகிய தோற்றத்தையுடை கண்ணாடி களைப் போன்ற தன்மையை உடைய, பண்போல இனிமையாகப் பேசுகின்ற அத்தகைய பெண்டிர் இல்லங்களில் இருக்கின்றான்.

குறிப்புரை :

கண்ணாடி போன்ற தன்மையாவது அருகில் வந்தோர் யாராயினும், `இன்னார், இனியார்` என்னும் வரையறையின்றி உடனே அகத்திட்டுக் கொள்ளுதல்.
எனவே, `இந்நீர்மையுடையோர் வரை வின் மகளிர்` என்பது உணர்த்தியவாறு.
இது, தலைவியை வாயில் வேண்டிய பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது.
திணை, மருதம்.
``மனை வாய்ச் சேவற்குருவிதன் பெடையை அடிக்கடி தழுவித் தலையளி செய்து, ஈன் இல் இழைக்கக் கரும்பின் நுண்தோடு கவரும் ஊரன்`` என்றது, `அக்குருவியின் அன்பு தானும் உன் தலைவனுக்கு இல்லை` எனத் தலைவி உள்ளுறையாகக் கழற்றுரை கூறினாள்.
அவ் வுள்ளுறைக்கண் பொதியப்பட்ட பொருளானே தலைவி புதல் வனைப் பெறும் நிலையில் இருத்தலும், தலைவன் அதனையும் நோக்காது புறத்தொழுக்கினன் ஆயதும் பெறப்பட்டன.
ஈன் இல், வினைத்தொகை.

பண் :

பாடல் எண் : 20

பாலாய சொல்லியர்க்கே சொல்லுபோய்ப் பாண்மகனே
ஏலா இங் கென்னுக் கிடுகின்றாய் - மேலாய
தேந்தண் கமழ்கொன்றைச் செஞ்சடையான் தாள்சூடும்
பூந்தண் புனலூரன் பொய்.

பொழிப்புரை :

ஏ பாண்மகனே, `மேலாய, இனிய, தண்ணிய கொன்றை மலரைச் சூடியுள்ள சிவபெருமானது திருவடிகளை யான் தலைமேற்கொள்பவன்; பொய்கூறேன்; உண்மையில் என்மேல் தவறு ஒன்றும் இல்லை` என்று தலைவன் கூறிய பொய்களையெல்லாம் இங்கே வந்து எதற்குக் `கொட்டுகின்றாய்? இங்கே அவைகள் ஏலா.
யாருடைய சொல் தலைவனுக்குப் பால்போல இனிக்கின்றதோ அவர் களிடத்தில் போய் அவைகளைச் சொல்லு; (கேட்டுக் கொள்வார்கள்.)

குறிப்புரை :

இதுவும் மேலைத் திணை; துறை.
``சூடும்`` என்றது, `சூடுவேன்` எனச் சொல்வானது சொற் பற்றிக் கூறியது.

பண் :

பாடல் எண் : 21

பொய்யால் தொழவும் அருளும்
இறைகண்டம் போல்இருண்ட
மையார் தடங்கண் மடந்தையர்
கேட்கிற்பொல் லாதுவந்துன்
கையால் அடிதொடல் செல்வனில்
புல்லல் கலையளையல்
ஐயா இவைநன்கு கற்றாய்
பெரிதும் அழகியவே.

பொழிப்புரை :

தலைவனே, இங்கே உன் கையினால் எம் காலைத் தொட்டு வணங்க வேண்டா.
மகனை அன்போடு அணைப்பது போலக் காட்டி, அவ்வழியாக வந்து எம்மைச் சார வேண்டா எம் உடையைப் பற்றி அலைக்கழிக்க வேண்டா ஏனெனில் பொய்யாக வணங்கி னாலும் அதற்கு அருள்செய்கின்ற சிவபெருமானது கண்டம் போலக் கறுத்த மைதீட்டிய, அகன்ற கண்களையுடைய உன் காதலிகள் இவற்றைக் கேள்விப்பட்டால் உனக்கு இடராய் முடியும்.
காதல் இன்றி யும் உடையவன்போல நடித்தற்கு இச்செயல்களையெல்லாம் நன்கு கற்றிருக்கின்றாய்.
இம்முறைமை உனக்கு மிகவும் அழகியவாய் உள்ளன.

குறிப்புரை :

இது, பள்ளியிடத்து ஊடலில் புதல்வன் வாயிலாகத் தலைவன் ஊடல் தணிவிக்கத் தலைவி ஊடல் தணியாளாய்க் கூறியது.
இதுவும் மருதத் திணை.

பண் :

பாடல் எண் : 22

அழகுறு கிண்கிணி அடிமிசை அரற்றத்
தொழிலுடைச் சிறுபறை பூண்டு தேர்ஈர்த்
தொருகளி றுருட்டி ஒண்பொடி ஆடிப்
பொருகளி றனைய பொக்கமொடு பிற்றாழ்ந்த
பூங்குழற் சிறாரொடு தூங்குநடை பயிற்றி
அக்கரை உடுத்தி ஐம்படை கட்டி
ஒக்கரை இருக்கும் ஒளிர்புன் குஞ்சிக்
குதலையங் கிளவிப் புதல்வன் தன்னை
உள்ளச் சொரிந்த வெள்ளத் தீம்பால்
உடைய வாகிய தடமென் கொங்கை
வேண்டாது பிரிந்த விரிபுனல் ஊரன்
பூண்தாங் ககலம் புல்குவன் எனப்போய்ப்
பெருமடம் உடையை வாழி வார்சடைக்
கொடுவெண் திங்கட் கொழுநில வேய்க்கும்
சுடுபொடி யணிந்த துளங்கொளி அகலத்
தண்ணல் ஆரூர் திண்ணிதிற் செய்த
சிறைகெழு செழும்புனல் போல
நிறையொடு நீங்காய் நெஞ்சம் நீயே.

பொழிப்புரை :

நெஞ்சே, அழகுடையவாகிய கிண்கிணிகள் அடி மேல் ஒலிக்க, அடிக்கத் தக்கதாகிய சிறுபறையைத் தோளில் மாட்டிக் கொண்டு, சிறுதேரை இழுத்துக் கொண்டும், யானையாகச் செய்யப் பட்ட அதனை உருட்டிக்கொண்டும், தெருப் புழுதியிலே முழுகி, போர்செய்தற்குரிய ஆண் யானை தன் பெண்யானையினிடத்துக் கொள்ளும் இன்பம் போலும் இன்பத்தை உள்ளத்தில் எய்தி, தன்னைப் பின்பற்றிவரும் அழகிய கால் அணிகளை அணிந்த மற்றைச் சிறுவர் களுடன் சாய்ந்து சாய்ந்து நடக்கும் நடை பழகி, ஓரங்களில் கரையை உடைய சிறுதுண்டை இடையிலே சுற்றிக்கொண்டு, கழுத்திலே ஐம்படைத்தாலி அணிந்து, பின் எனது ஒக்கலிலே வந்து அமரும், விளங்குகின்ற, சிறிதே வளர்ந்த தலைமயிரையும், மழலைச் சொல்லையும் உடைய என் பிள்ளையை யான் நினைத்ததனால் சுரந்து பொழிந்த வெள்ளம்போலும் இனிய பாலை உடையனவாய்விட்ட என் பருத்த, மெல்லிய கொங்கைகளை வெறுத்து பிரிந்து போய்விட்ட, மிக்க நீரையுடைய ஊரையுடைய தலைவனது அணிகலம் பொருந்திய மார்பினை, `யான் வலியச் சென்று தழுவுவேன்` என்று முயன்று, (அஃது இயலாமையால்) பெரிதும் பேதைமை யுடையை ஆயினாய்; நீ வாழ்வாயாக.
(இனி அது வேண்டா) தான் தனது நீண்ட சடையிலே அணிந்துள்ள, வளைந்த, வெள்ளிய திங்களினது செழித்த நிலவோடொக்கும் சுடுவெண் பொடியை அணிந்து ஒளிவிடுகின்ற மார்பினையுடைய பெருமானது திருவாரூரில் வாய்க்கால்களில் உறுதியாகக் கட்டப்பட்ட மடைகளில் அப்பாற் செல்லாமல் தன் மேகம் தடையுண்டு நிற்கின்ற மிக்க நீர்போல, உறுதிப்பாட்டுடன் என்னிடத் திற்றானே நீங்காது நில்.

குறிப்புரை :

இது புதல்வற் பயந்து தன்தலைக்கடன் இறுத்து வாழும் தலைவி, தலைவன் பரத்தையிற் பிரிந்த வழி ஆற்றாமையால் அவன் உள்வழிச் செல்ல நினைத்து, நாண் தடுத்தலால் அஃது இயலாது நின்ற நெஞ்சினைக் கழறிக் கூறியது.
இது, ``புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு அகன்ற கிழவனைப் புலம்பு நனி காட்டி இயன்ற நெஞ்சம் தலைப்பெயர்த்து அருக்கி எதிர்பெய்து மறுத்த ஈரம்` (தொல்.
கற்பு.
6) என்பதன் பகுதியாம்.
இதுவும் மருதத் திணை.
தாழ்தல் தங்குதல்.

பண் :

பாடல் எண் : 23

நீயிருந்திங் கென்போது நெஞ்சமே, நீளிருட்கண்
ஆயிரங்கை வட்டித் தனலாடித் - தீயரங்கத்
தைவாய் அரவசைத்தான் நன்பணைத்தோட் கன்பமைத்த
செய்வான தூரன் திறம்.

பொழிப்புரை :

நெஞ்சே, நம் தலைவனது செயற்கூறு, நெடிய இருளிடத்து தீ எரிகின்ற அரங்கத்தின்கண், தீயின் நடுவே நின்று கைகள் ஆயிரத்தைச் சுழற்றி ஆடி, ஐந்தலை நாகத்தைக் கட்டியுள்ள சிவபெருமானது அழகிய தோள்களினிடத்து அன்பை அமைத்த செயல்களைச் செய்வதாயிற்று நீ இங்கு இருந்து பெறுவது என்! என்னுடன் வா, போவோம்.

குறிப்புரை :

`நெஞ்சமே, ஊரன் திறம் அரவு அசைத்தான் தோட்கு அன்பு அமைத்த செய்வு ஆனது; நீ இங்கு இருந்து என்! போது` என இயைத்து முடிக்க.
`தோட்கு, தோட் கண்` என உருபு மயக்கம்.
அமைத்த - அமைத்தன.
அமைத்தனவாகிய செயல்கள்.
செய்வு - செய்தல்; தொழிற் பெயர்.
இஃது அறப்புறம் காவற் பிரிவில் ஆற்றா ளாய தலைவி தலைவன் உள்வழிச் செல்ல நினைந்து நெஞ்சத்தொடு கூறியது.
இதுவும் பாலைத் திணையே.

பண் :

பாடல் எண் : 24

திறமலி சின்மொழிச் செந்துவர்
வாயின எங்கையர்க்கே
மறவலி வேலோன் அருளுக
வார்சடை யான்கடவூர்த்
துறைமலி ஆம்பல்பல் லாயிரத்
துத்தமி யேயெழினும்
நறைமலி தாமரை தன்னதன்
றோசொல்லும் நற்கயமே.

பொழிப்புரை :

நீண்ட சடையை உடைய சிவபெருமானது திருக் கடவூரில் உள்ள குளத்தில் அதன் துறைகளில் நிறைய பல ஆயிரம் ஆம்பல் மலர்கள் பூத்திருக்க, அவற்றின் இடையில் மணம் மிக்க தாமரை மலர் ஒன்றே பூத்திருப்பினும் அந்தக் குளம் `தாமரைக் குளம், என்றுதானே புகழப்படும்? ஆகையால் வீரம் அமைந்த வேலை ஏந்திய தலைவன் எமக்கு அருள் பண்ணாமல், திறமை நிறைந்த சில சொற்களையும் சிவந்த வாயினையும் உடைய எம் தங்கைமார்க்கே அருள் பண்ணட்டும்; (தலைவனாதல் எமக்குத்தானே? அவர்கட்கு ஏது?)

குறிப்புரை :

குளத்திற்குச் சிறப்புத் தருவது தாமரை மலரே ஆகையால் அதைக் குறித்துத் தான் குளத்தை, `தாமரைக் குளம்` எனப் பெருமையாகக் கூறுவார்கள்.
அதுபோல இல்லறத்திற்குத் துணை யாகின்றவள் தலைவியே ஆகையால் `அவளுக்குத் தலைவன்` எனச் சொல்லியே தலைவனை யாவரும் பாராட்டுவர் - என்றபடி.
எனவே, இப்பாட்டில், ``வார்சடையான்`` என்பது முதலாக உள்ள பகுதி ஒட்டணியாம்.
இது, பரத்தையிற் பிரிவில் `தலைவி ஆற்றாள்` எனக் கவன்ற தோழிக்குத் தலைவி `ஆற்றுவல்` என்பதுபடக் கூறியது.
எனவே இது முல்லைத் திணையாம்.
``தன்னது`` என்பதில் தன், சாரியை.
அதில் ஒற்று இரட்டியது செய்யுள் விகாரம்.
`தனதாக` என ஆக்கம் விரிக்க.
``சொல்லும்`` என்பது `சொல்லப்படும்` எனச் செயப் பாட்டுவினைப் பொருள் தந்தது.

பண் :

பாடல் எண் : 25

கயங்கெழு கருங்கடல் முதுகுதெரு மரலுற
இயங்குதிமில் கடவி எறிஇளி நுளையர்
நெய்ம்மீன் கவரல் வேண்டிக் கைம்மிகுத்
தால வட்டம் ஏய்ப்ப மீமிசை
முடிகெழு தருவலை வீசி முந்நீர்க்
குடரென வாங்கிக் கொள்ளை கொண்ட
சுரிமுகச் சங்கும் சுடர்விடு பவளமும்
எரிகதிர் நித்திலத் தொகுதியுங் கூடி
விரிகதிர் நிலவுஞ் செக்கருந் தாரகை
உருவது காட்டும் உலவாக் காட்சித்
தண்ணந் துறைவன் தடவரை அகலம்
கண்ணுறக் கண்டது முதலா ஒண்ணிறக்
காள மாசுணங் கதிர்மதிக் குழவியைக்
கோளிழைத் திருக்குங் கொள்கை போல
மணிதிகழ் மிடற்று வானவன் மருவும்
அணிதிகழ் அகலத் தண்ணல் ஆரூர்
ஆர்கலி விழவின் அன்னதோர்
பேர்செலச் சிறந்தது சிறுநல் லூரே.

பொழிப்புரை :

ஆழம் பொருந்திய கரிய கடலின் முதுகு அலையும்படி அலைத்துச் செல்கின்ற ஓடங்களைச் செலுத்திய `இளி` என்னும் ஒருவகை ஒலியை வாயினின்றும் எழுப்புகின்ற வலைஞர் கள், `நெய்ம்மீன்` என்னும் ஒருவகை மீனைப் பிடிக்க வேண்டிக் கைமிகுந்து முடிச்சுகள் பொருந்திய வலையை ஆலவட்டம் போலத் தோன்றும்படி மிக உயரத்திலே சென்று வீழ வீசி, வீசிய வலைகள் கடலின் குடர்போலத் தோன்றும்படி வெளியே இழுத்து வாங்கும் பொழுது அவ்வலையில் அகப்பட்ட குவிந்த முனையையுடைய சங்கும், ஒளி வீசுகின்ற பவளமும், பொற்கதிரைப் பரப்புகின்ற முத்துக்களும் ஆகிய இவற்றின் தொகுதிகள் ஒருங்கு தொக்கு, வெள்ளொளியைப் பரப்புகின்ற திங்களும், செவ்வானமும், விண்மீன்களும் ஆகிய இவைகளின் உருவத்தைத் தோற்றுவிக்கின்ற, கெடாத காட்சியையுடைய, குளிர்ந்த, அழகிய துறையையுடைய தலைவனது அகன்ற மார்பினை ஒருமுறை கண்ணுறக் கண்டு, அங்ஙனம் கண்டது முதலாக இந்தச் சிறிய நல்ல ஊர், ஒளிபொருந்திய நிறத்தையுடைய கரும்பாம்பு இளந்திங்களை, `அது முதிரட்டும், முதிரட்டும்`, என்று விடாது பார்த்துக்கொண்டிருப்பது போல என்னைப் பற்றி விடாது எவற்றையேனும் சொல்லி, நீலமணிபோல விளங்குகின்ற கண்டத்தையுடைய பெருமான் எழுந்தருளியுள்ள, அழகு விளங்கும் விசாலித்த திருவாரூரில், நிறைந்த ஆரவாரத்தோடு கூடிய திருவிழாவில் அத்தலப் பெருமானது ஒருபெயரே எங்கும் ஒலித்தல்போலத் துறைவனது ஒரு பெயரே எங்கும் ஒலிக்கின்ற சிறப்பினை உடையதாயிற்று.

குறிப்புரை :

``இவ்வூரவர்க்குத் தொழில் வேறு இல்லை போலும்` என்பது குறிப்பெச்சம்.
இது வரையா நாளின் வந்தோன் முட்டிடக் கண்ட ஆயத்தார் அலர் கூறுதல் அறிந்த தலைவி முன்னிலைப் புறமொழியாற் கழறிக் கூறியது.
இதன் பயன் உடன்போக்காதலின் இது நெய்தலிற் பாலையாயிற்று.
நிலவு, செக்கர், தாரகை என்பவற்றைச் சங்கு முதலிய மூன்றனோடு நிரலே இயைக்க.
``தண்ணந் துறைவன் .
.
.
.
.
கொள்கைபோல`` என்றதனை, கண்டது மன்னும் ஒருநாள்; அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று.
* என்பதனோடு ஒப்பு நோக்கு.
`போலச் சிறந்தது` என்பது பாடம் அன்று.

பண் :

பாடல் எண் : 26

ஊரெலாந் துஞ்சி உலகெலாம் நள்ளென்று
பாரெலாம் பாடவிந்த பாயிருட்கண் - சீருலாம்
மாந்துறைவாய் ஈசன் மணிநீர் மறைக்காட்டுப்
பூந்துறைவாய் மேய்ந்துறங்கா புள்.

பொழிப்புரை :

ஊர் முழுதும் உறங்கி, உலகம் முழுதும் நள்ளிரவு நிலையை அடைந்து, மண் முழுதிலும் உள்ள உயிர்கள் அனைத்தும் ஒலி அடங்கிய இப்பரந்த இருளிடத்து, (தோழீ! என்னை காரணமோ) அழகு பொருந்திய திருமாந்துறையில் உள்ள ஈசனுக்கு உரித்தாய் உள்ள திருமறைக் காட்டில் உள்ள நீலமணிபோலும் நீரினது துறையில் நிரம்ப இரைமேய்ந்த பின்னும் அதில் உள்ள பறவைகள் உறங்காமல் ஆரவாரிக்கின்றன.

குறிப்புரை :

செய்தென் எச்சங்கள் எண்ணின்கண் வந்தன.
இஃது இரவுக் குறிக்கண் தலைவன் வந்தமையைத் தோழி தலைவிக்கு அவள் அறியுமாற்றாற் கூறியது.
புட்கள் உறங்காமல் எழுந்து ஆரவாரித்தல் தலைவன் தான் வந்தமை குறிக்கும் குறியாக எழுப்புதலினாலேயாம் இது குறிஞ்சித் திணை.

பண் :

பாடல் எண் : 27

புள்ளுந் துயின்று பொழுதிறு
மாந்து கழுதுறங்கி
நள்நென்ற கங்குல் இருள்வாய்ப்
பெருகிய வார்பனிநாள்
துள்ளுங் கலைக்கைச் சுடர்வண்
ணனைத்தொழு வார்மனம்போன்
றுள்ளும் உருக ஒருவர்திண்
தேர்வந் துலாத்தருமே.

பொழிப்புரை :

பறவைகளும் துயின்று, ஞாயிறு தன் கதிரும் தோன்றாமல் மறைந்து, பேயும் உறங்கி, இவ்வாறு `பாதி` என உணரப்படுகின்ற இரவில், இருளிலே, மிக்கு ஒழுகும் பனிக் காலத்தில், நினைத்தால் மனம் நெகிழ்ந்துருகும்படி, துள்ளுகின்றமானைக் கையில் ஏந்திய, தீ வண்ணனாகிய சிவபெருமானை வணங்குகின்றவர் களுடைய மனம் அப்பெருமானிடத்தே எவ்வாறு ஓய்வின்றி உலவுமோ அதுபோல ஒருவருடைய திண்ணிய தேர்வந்து வந்து உலவாநின்றது.

குறிப்புரை :

`ஊழது நிலை இவ்வாறாயிற்று` என்பது குறிப்பெச்சம்.
இஃது இரவுக் குறிக்கண் அல்ல குறிப்பட்டுத் தலைவனை எய்தாளாய தலைவி பின், வந்தவன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித் தன் பிழைப் பாகத் தழீஇத் தேறிக் கூறியது.
இது குறிஞ்சித் திணை.
இறுமாத்தல், இங்குச் செயலின்றி மடிந்திருத்தல்.
`உள்ளும்` என்னும் உம்மை, உயர்வு சிறப்பு.

பண் :

பாடல் எண் : 28

உலாநீர்க் கங்கை ஒருசடைக் கரந்து
புலால்நீர் ஒழுகப் பொருகளி றுரித்த
பூத நாதன் ஆதி மூர்த்தி
திருமட மலைமகட் கொருகூறு கொடுத்துத்தன்
அன்பின் அமைத்தவன் ஆரூர் நன்பகல்
வலம்புரி அடுப்பா மாமுத் தரிசி
சலஞ்சலம் நிறைய ஏற்றி நலந்திகழ்
பவளச் செந்தீ மூட்டிப் பொலம்பட
இப்பியந் துடுப்பால் ஒப்பத் துழாவி
அடாஅ தட்ட அமுதம் வாய்மடுத்
திடாஅ ஆயமோடு உண்ணும் பொழுதில்
திருந்திழைப் பணைத்தோள் தேமொழி மாதே
விருந்தின் அடியேற் கருளுதி யோஎன
முலைமுகம் நோக்கி முறுவலித் திறைஞ்சலின்
நறைகமழ் வெண்ணெய்ச் சிறுநுண் துள்ளி
பொங்குபுனல் உற்றது போலஎன்
அங்க மெல்லாந் தானா யினனே.

பொழிப்புரை :

(தோழீ, கேள்) பாய்ந்து செல்வதாகிய கங்கை நீரை ஒரு சடையிலே ஒளித்துவைத்தும், போர் செய்வதாகிய ஆண் யானை ஒன்றை உதிரம் ஒழுக உரித்தும் தன் ஆற்றலைப் புலப்படுத்திய, பூதப் படைத் தலைவனும், யாவர்க்கும் முன்னேயுள்ள மூர்த்தியும், அழகிய, இளைய மலைமகட்கும் தனது திருமேனியில் பாதியைத் தந்து அன்பினாலே அவளை உடன் கொண்டு இருப்பவனும் ஆகிய சிவபெருமானது இத்திருவாரூரிலே (நாம் தெருவில் விளையாடுகின்ற பருவத்திலே நீ ஒருநாள் அன்னையோடு இருக்க நான் ஆயத்தாருடன் தெருவில்) வலம்புரிச் சங்குகளை அடுப்பாகக் கூட்டி, சலஞ்சலச் சங்கினைப் பானையாக ஏற்றி, அது நிறையச் சிறந்த முத்துக்களை அரிசியாக இட்டு, பவழங்களை: சிவந்த தீயாக மூட்டி அழகு உண்டாக இப்பியை அகப்பையாக இட்டு நன்றாகத் துழாவி இவ்வாறு உண்மையாகச் சமைக்காமல் பொய்யாகச் சமைத்த சோற்றினை வாயில் இடாமலே நான் ஆயத்தாருடன் உண்ணப் போகும் பொழுது (சிறான் ஒருவன் வந்து) `திருத்தமான அணிகளையும், பருத்த தோள்களையும், தேன்போன்ற சொற்களையும் உடைய மாதே, உங்கள் சிற்றில் அயர்வின்கண் விருந்து ஒன்று இல்லாத குறையை யான் நிரப்புதற்கு அருள்செய்வாயோ`` என்று வினவி, என் கொங்கையின் முகங்களை நோக்கி, உள்ளத்து ஆசை வெளிப்படும்படி சிரித்து, என் அடிகளில் வீழ்ந்து வணங்கினான்.
அவனது செயல், நறுமணம் கமழும்படி காய்ச்சப்படுகின்ற வெண்ணெயிலே சிறிய, நுண்ணிய நீர்த்துளி ஒன்று வீழின் அந்நெய் முழுவதும் அதனாலே ஆரவாரித்துப் பொங்குதல் போல யான் என் உடம்பு முழுதும் அவனாகி விட்டது போலும் உணர்ச்சியை அடைந்தேன்.

குறிப்புரை :

`இஃது இளமைக் காலத்தில் நிகழ்ந்தது` என்பது இசை யெச்சம்.
`இதனை நம் தாய்க்கு நீ சொல்லுதல் வேண்டும்` என்பது குறிப்பு.
இது களவொழுக்கத்தில் அது வெளிப்படாத வகையில் ஒழுகிய தலைவி தமர் வேற்று வரைவிற்கு முயல்வதை அறிந்து தானே தன் தோழிக்குப் படைத்து மொழியால் அறத்தொடு நின்றது.
இதுவும் குறிஞ்சித் திணை.
``பூத நாதன்`` என்பதற்கு, `உயிர்கட்கு முதல்வன்` என உரைத்தலும் ஆம்.
தனது ஊரையே வேறுபோலக் கூறினார்.
ஆதலின், ``இவ் ஆரூர்`` எனச் சுட்டுவருவித்துக் கண்ணுருபு விரிக்க `நல்லதொரு விளையாட்டு நிகழ்ந்த பகல்` என்பாள் பகலை, ``நன் பகல்`` எனச் சிறப்பித்துக் கூறினார்.
``துடுப்பு`` என்றாராயினும் சோற்றைத் துழாவுவது அகப்பையேயாதல்பற்றி அதற்கு அவ்வாறு உரைக்கப்பட்டது.
`வாய் மடுத்திடா` என்பது ஒரு சொல்.
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
`துளி` என்பது ``துள்ளி`` என விரித்தல் பெற்றது.
தான் - அவன் ``ஆயினன்`` என்பது தன்மை யொருமை வினைமுற்று.

பண் :

பாடல் எண் : 29

ஆயினஅன் பாரே அழிப்பர் அனலாடி
பேயினவன் பார்ஓம்பும் பேரருளான் - தீயினவன்
கண்ணாளன் ஆரூர்க் கடலார் மடப்பாவை
தண்ணாருங் கொங்கைக்கே தாழ்ந்து.

பொழிப்புரை :

தீயில் நின்று ஆடுபவனும், பேய்க் கூட்டத்தை உடையவனும், உலகத்தைக் காக்கும் பேரருளாளனும், நெருப்புப் பொருந்திய கண்ணை உடையவனும் ஆகிய சிவபெருமானது திருவாரூரோடு ஒத்த, கடற்கரைக் கண் உள்ள, இளையபரவை போல் வாளது குளிர்ச்சி நிறைந்த கொங்கையின் கண்ணே தங்கிவிட்ட அன் பினை இனி அழிப்பவர் யார்?

குறிப்புரை :

இது, குற்றம் காட்டிய வாயில் பெட்ப (கழற்றுரை கூறிய பாங்கன் பின் தன்னை விரும்பும்படி) தலைவன் தன் ஆற்றாமை கூறிக் கழற்றெதிர் மறுத்தது.
இது நெய்தலிற் குறிஞ்சி மயங்கியது.
``ஆடி`` என்பது பெயர்.
``பேயினவன்`` என்பதில் `இன்` சாரியை; அகரம் பெயரெச்ச விகுதி `வன்கண்` என்க.
`ஆரூர் போலும் மடப்பாவை` என்க.
கொங்கைக்கு , `கொங்கைக்கண்` என உருபு மயக்கம்.
தாழ்ந்து `ஆயின அன்பு` என மேலே கூட்டுக.
தாழ்தல் - தங்குதல்.

பண் :

பாடல் எண் : 30

தாழ்ந்து கிடந்த சடைமுடிச்
சங்கரன் தாள்பணியா
தாழ்ந்து கிடந்துநை வார்கிளை
போல்அயர் வேற்கிரங்கிச்
சூழ்ந்து கிடந்த கரைமேல்
திரையென்னும் கையெறிந்து
வீழ்ந்து கிடந்தல றித்துயி
லாதிவ் விரிகடலே.

பொழிப்புரை :

தாழ்ந்து தொங்குகின்ற சடைமுடியை உடைய, `சங்கரன்` என்னும் பெயரினன் ஆகிய சிவபெருமானது திருவடிகளை வணங்காமையால் துன்பத்தில் ஆழ்ந்து கிடந்து வருந்துவாரது சுற்றம் போல வருந்துகின்ற என்பொருட்டு இரங்கி இந்த அகன்ற கடல் தன்னைச் சூழ்ந்து கிடக்கின்ற கரைமேல் அலைகளாகிய கையை அடித்து அடித்து, தரைமேல் வீழ்ந்து, வாய்விட்டு அலறிக் கொண்டு உறங்காமல் உள்ளது.

குறிப்புரை :

`பிறர் ஒருவரும் என்பொருட்டு இரங்குவார் இல்லை` என்பது கருத்து.
இது, `தாளாண் எதிரும் பக்கம்` எனப்படும்.
பொருள் வயிற் பிரிவின்கண் தலைவன் நீட ஆற்றாளாய தலைவி தூது செல்லாத பாங்கியைப் புலந்து கடலை முன்னிலைப்படுத்துக் கூறி இரங்கியது.
இதனை, `காமம் மிக்க கழிபடர் கிளவி` என்பர்.
இது நெய்தல் திணை, பணியாதவரே யன்றி அவர் சுற்றமும் வருந்தும் நிலையை உடைத்தாதல் பற்றி, ``நைவார் கிளைபோல் அயர்வேற்கு`` என்றாள்.
திருவாரூர் மும்மணிக் கோவை முற்றிற்று.

பண் :

பாடல் எண் : 1

திருமாலும் நான்முகனும் தேர்ந்துணராதங்கண்
அருமால் உற அழலாய் நின்ற பெருமான்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அரு மால் - போக்குதற்கு அரிய மயக்கம்.
அழலாய் - அக்கினிப் பிழம்பாய்.
மாலும், அயனும் அடிமுடி தேடிய சிவபுராண வரலாறு பலவிடத்தும் பரவலாக வழங்கும்.

பண் :

பாடல் எண் : 2

பிறவாதே தோன்றினான் காணாதே காண்பான்
துறவாதே யாக்கை துறந்தான் முறைமையால்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பகுதியில் சிவபெருமானது பெருமைகள் விரித்துரைக்கப்படுகின்றன.
`பிறர் செயற்கையால் அடையும் பெருமைகளைச் சிவபெருமான் இயற்கையாகப் பெற்றுள்ளான்` என்பது பலவகையில் கூறப்படுகின்றது.
தோன்றுதல் - உளன் ஆதல், பிறர் எல்லாம் கால வயப்பட்டு ஒரு காலத்தில் பிறத்தலால் உளர் ஆகின்றனர்; சிவபெருமான் அவ்வாறின்றி, என்றுமே உளனாய் இருக்கின்றான்.
எனவே, காலம் அவனுக்கு உட்படுகின்றதேயன்றி அவன் காலத்திற்கு உட்படுகின்றானில்லை.
பிறர் எல்லாம் கண்ணைக் கருவியாகக் கொண்டு அது வழி யாகவே பொருள்களைக் காண்கின்றனர்; சிவபெருமான் அவ் வாறின்றிப் பொருள்களை நேரே காண்கின்றான்.
`பிறர் எல்லாம் பொருள்களைக் கண் காட்டும் அளவில், அது காட்டியவாறு காண்பர்` என்பதும், `சிவபெருமான் அவ்வாறின்றி, எல்லாவற்றையும் உள்ள படி காண்பான்` என்பதும் விளங்கும்.
கட்புலத்திற்குச் சொல்லியது ஏனைச் செவிப்புலம் முதலிய வற்றிற்கும் ஒப்பதே.
பிறர்க்கெல்லாம் உடம்பு அறிவு இச்சை செயல்கட்கு இன்றி யமையாதது ஆதலின் வேண்டப்படுவதாயினும் அதனால் நிகழும் அறிவு முதலியன பிறவிக்குக் காரணமாதலின் பந்தமாய், அவரால் முயன்று துறக்கப்படுவதாக, சிவனது அறிவு இச்சை செயல்கட்கு உடம்பு வேண்டாமையின் அவன் உடம்போடு கூடிநின்றே அதனாற் பந்தம் உறாது இருக்கின்றான்.

பண் :

பாடல் எண் : 3

ஆழாதே ஆழ்ந்தான் அகலா தகலியான்
ஊழால் உயராதே ஓங்கினான் சூழொளிநூல்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சிவபெருமான் எப்பக்கத்திலும் வரம்பின்றிப் பரந்துள்ளவன் ஆதலின், `ஆழம், அகலம், உயரம்` என்பவைகளில் இயல்பாகவே எந்த வகையிலும் ஓர் அளவு இல்லாதவன்.
`பிறர் எல்லாம் மேற்குறித்த அளவுகளில் சிறியராய்த் தோன்றிப் பெரியராய் வளர்வர்.
சிவபெருமான் அன்ன தன்மையில்லாதவன் என்பது, ``ஆழாது, அகலாது, ஊழால் உயராது`` என்னும் சொற்களால் குறிக்கப்பட்டது.
ஊழ் - முறைமை.
விரிந்து பரந்த அறிவைத் தரும் நூல்களை அவன் அவை தோன்றியபின் ஓதி உணராமல் என்றுமே உணர்ந்திருக்கின்றான்.
என்றது.
`அவற்றின் பொருளை அவன் தானே இயல்பாக உணர்ந் திருக்கின்றான்` என்றபடி.
எனவே, `அனைத்துப் பொருள்கட்கும் முதல் நூலைச் செய்தவன் அவனே` என்றதாயிற்று.

பண் :

பாடல் எண் : 4

ஓதா துணர்ந்தான் நுணுகாது நுண்ணியான்
யாதும் அணுகாது அணுகியான் ஆதி

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சிவபெருமான் முன்பு பரியனாய் இருந்து பின்பு நுணுகி நுணுகித் தீர நுணுகுதல் இன்றி, இயல்பிலே தீர நுணுகியிருப்பவன்.
எனவே, `அவனிலும் நுணுகிய பொருள் ஒன்று இல்லை` என்ப தாயிற்று.
`அவனிலும் பரிய பொருளும் எதுவும் இல்லை` என்பது மூன்றாம் கண்ணியில் சொல்லப்பட்டது.
எந்தப் பொருளையும் புதிதாக ஒருகாலத்தில் அணுகாது, இயல்பாகவே எல்லாப் பொருளிலும் அது அதுவாய்க் கலந்து நிற்கின்றான்.

பண் :

பாடல் எண் : 5

அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான்
அரனாய் அழிப்பவனுந் தானே பரனாய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சிவபெருமான் சுத்த மாயையில், தானே, `அயன், அரி, அரன்` - என்னும் மும்மூர்த்திகளாய் நின்று, படைத்தல் காத்தல் அழித்தல்களைச் செய்வான்.
எனவே, `அசுத்த மாயை பிரகிருதி மாயைகளில் தன் அருள்பெற்றவரை அயன்முதலிய பதவியினராகச் செய்து, அவர்கள் வழியாகப் படைத்தல் முதலிய தொழில்களைச் செய்விப்பன்` என்பது போந்தது.

பண் :

பாடல் எண் : 6

தேவர் அறியாத தோற்றத்தான் தேவரைத்தான்
மேவிய வாறே விதித்தமைத்தான் ஓவாதே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சிவபெருமான் தானே கொள்ளும் வடிவங்கள் `சம்பு பக்கத்தின` என்றும், பிறருக்கு அவனால் தரப்படும் அவ்வடிவங்கள் `அணு பக்கத்தின` என்றும், சொல்லப்படும்.

பண் :

பாடல் எண் : 7

எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்
அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் எவ்வுருவும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சிவபெருமான் எல்லாரினும் மேலாய்த் தேவர்களாலும் அறியப்படாத காட்சியை உடையவன்.
தேவரையெல்லாம் தான் விரும்பிய வண்ணம் படைத்து அவ்வத்தொழிலில் நிறுத்தினான்.

பண் :

பாடல் எண் : 8

தானேயாய் நின்றளிப்பான் தன்னிற் பிறிதுருவம்
ஏனோர்க்குக் காண்பரிய எம்பெருமான் ஆனாத

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எவர் ஒருவர் எந்த உருவத்தில் வைத்து உள்ளத்தில் இடை யறாது தியானிக்கின்றார்களோ அவருக்கு அந்த உருவமாய்த் தோன்றியே அதன்வழி அருளற்பாலதாய அருளைச் சிவபெருமானே அருளுவான்.
இங்ஙனம் எந்த உருவத்தையும் தனது உருவமாகவே கொண்டு அருள்புரிகின்ற சிவபெருமான் பிறர் தனது உருவமாய் நின்றாராக எவரும் கண்டிலாத, காண வாராத நிலையை உடையவன்.
அத்தகைய அவனே எம் கடவுள்.
இவற்றால் எல்லாம், மூவரும், பிறரும் ஆகிய தேவர் பலரும் `பசு` எனப்படும் உயிர்வருக்கத்தினரேயாகச் சிவபெருமான் ஒருவனே அனைவர்க்கும் தலைவனாகிய பதி - என்பது பல்லாற்றானும் விளக்கப்பட்டது.
`ஏனோர்க்கும்`` என்னும் உம்மை, `சிவநெறி யாளர்க்கேயன்றிப் பிற சமயத்தார்க்கும்` என இறந்தது தழுவிற்று.

பண் :

பாடல் எண் : 9

சீரார் சிவலோகந் தன்னுள் சிவபுரத்தில்
ஏரார் திருக்கோயி லுள்ளிருப்ப ஆராய்ந்து

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அவன் என்றும் நீங்காத சிறப்பினையுடைய சிவலோகத்தில், தன்னுடைய வளாகமாகிய சிவபுரத்தில் அழகு நிறைந்த திருக்கோயிலுள் ஓலக்கமாக வீற்றிருக்கும் பொழுதில் செந் தாமரை போலும் கண்களையுடைய தேவர்கள் செவ்வியறிந்து திருவணுக்கன் திருவாயிலை அடைந்து குழுமி, `பெருமானே, திரு வோலக்க மேயல்லாமல் தேவரீரது திருவுலாக் காட்சியையும் எங்கட்கு வழங்கியருளல் வேண்டும்` என்று பலநாட்கள் குறையிரந்த நிலைமையில் ஒருநாள்.
பொதுவாக, `ஆடவர்க்குக் கண்கள் செந்தாமரை போன் றிருத்தல் விரும்பத் தக்கது` என்னும் கருத்தால் ``செங்கண்`` என்றார்.

பண் :

பாடல் எண் : 10

செங்கண் அமரர் புறங்கடைக்கண் சென்றீண்டி
எங்கட்குக் காட்சிஅருள் என்றிரப்ப அங்கொருநாள்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அவன் என்றும் நீங்காத சிறப்பினையுடைய சிவலோகத்தில், தன்னுடைய வளாகமாகிய சிவபுரத்தில் அழகு நிறைந்த திருக்கோயிலுள் ஓலக்கமாக வீற்றிருக்கும் பொழுதில் செந் தாமரை போலும் கண்களையுடைய தேவர்கள் செவ்வியறிந்து திருவணுக்கன் திருவாயிலை அடைந்து குழுமி, `பெருமானே, திரு வோலக்க மேயல்லாமல் தேவரீரது திருவுலாக் காட்சியையும் எங்கட்கு வழங்கியருளல் வேண்டும்` என்று பலநாட்கள் குறையிரந்த நிலைமையில் ஒருநாள்.
பொதுவாக, `ஆடவர்க்குக் கண்கள் செந்தாமரை போன் றிருத்தல் விரும்பத் தக்கது` என்னும் கருத்தால் ``செங்கண்`` என்றார்.

பண் :

பாடல் எண் : 11

பூமங்கை, பொய்தீர் தரணி புகழ்மங்கை,
நாமங்கை என்றிவர்கள் நன்கமைத்த சேமங்கொள்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பூ மங்கை - இலக்குமி.
புகழ், பெற்றியால் வரும் புகழ்.
எனவே, புகழ் மங்கை கொற்றவையாம்.
நாமங்கை - கலைமகள்.
`இம்மூவரும் நன்கு செய்தமைத்த பாதுகாப்பில் இருக்கின்ற மலைமகள்` என்க.
ஞானக் கொழுந்து, மலைமகள், அவள் ஞானத்தின் முடிநிலையாதல் பற்றி அங்ஙனம் கூறப்பட்டாள்.
நகராசன் - மலையரையன்.
நகம் - மலை.
சிவபெருமான் புறப்படும் பொழுது மலைமகளே அவனைத் தீண்டி அலங்கரிக்கத் தக்கவள் ஆதலின் அவள் அவனுக்குத் தலைக்கோலம் செய்தாள்.
தேன் மொய்த்த குஞ்சி - `தேன் என்னும் வண்டுகள் மொய்த்த தலைமுடி.
நறுமணம் பொருந்திய மலர்கள் நிறைந்திருத்தலால் வண்டுகள் மொய்ப்பவாயின.
ஊனம் - குறை.
சீர் - அழகு.

பண் :

பாடல் எண் : 12

ஞானக் கொழுந்து நகராசன் தன்மடந்தை
தேன்மொய்த்த குஞ்சியின்மேல் சித்திரிப்ப ஊனமில்சீர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பூ மங்கை - இலக்குமி.
புகழ், பெற்றியால் வரும் புகழ்.
எனவே, புகழ் மங்கை கொற்றவையாம்.
நாமங்கை - கலைமகள்.
`இம்மூவரும் நன்கு செய்தமைத்த பாதுகாப்பில் இருக்கின்ற மலைமகள்` என்க.
ஞானக் கொழுந்து, மலைமகள், அவள் ஞானத்தின் முடிநிலையாதல் பற்றி அங்ஙனம் கூறப்பட்டாள்.
நகராசன் - மலையரையன்.
நகம் - மலை.
சிவபெருமான் புறப்படும் பொழுது மலைமகளே அவனைத் தீண்டி அலங்கரிக்கத் தக்கவள் ஆதலின் அவள் அவனுக்குத் தலைக்கோலம் செய்தாள்.
தேன் மொய்த்த குஞ்சி - `தேன் என்னும் வண்டுகள் மொய்த்த தலைமுடி.
நறுமணம் பொருந்திய மலர்கள் நிறைந்திருத்தலால் வண்டுகள் மொய்ப்பவாயின.
ஊனம் - குறை.
சீர் - அழகு.

பண் :

பாடல் எண் : 13

நந்தா வனமலரும் மந்தா கினித்தடஞ்சேர்
செந்தா மரைமலர்நூ றாயிரத்தால் நொந்தா

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நந்தா - கெடாத.
வனம் - பூஞ்சோலை `அதன்கண் மலரும் செந்தாமரை, தடம் சேர் செந்தாமரை` - என்க மந்தாகினித் தடம் - ஆகாய கங்கையாகிய தீர்த்தம்.
நூறாயிரம் - இலட்சம்.
நொந்தா - கெடாத.
வயந்தன் - வசந்தன்.
இவன் மன்மதனுக்குத் தோழன், இவன் ஆகாயகங்கையிற் பூத்த செந்தாமரை மலர் நூறாயிரத்தால் தொடுத்து வனைந்த திருவாசிகையைச் சிவ பெருமானது திருமுடிக்கு மேல் விளங்கும்படி சூட்டினான்.

பண் :

பாடல் எண் : 14

வயந்தன் தொடுத்தமைத்த வாசிகை சூட்டி
நயந்திகழும் நல்லுறுப்புக் கூட்டிப் பயன்கொள்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நந்தா - கெடாத.
வனம் - பூஞ்சோலை `அதன்கண் மலரும் செந்தாமரை, தடம் சேர் செந்தாமரை` - என்க மந்தாகினித் தடம் - ஆகாய கங்கையாகிய தீர்த்தம்.
நூறாயிரம் - இலட்சம்.
நொந்தா - கெடாத.
வயந்தன் - வசந்தன்.
இவன் மன்மதனுக்குத் தோழன், இவன் ஆகாயகங்கையிற் பூத்த செந்தாமரை மலர் நூறாயிரத்தால் தொடுத்து வனைந்த திருவாசிகையைச் சிவ பெருமானது திருமுடிக்கு மேல் விளங்கும்படி சூட்டினான்.
பச்சைக் கருப்பூரம், குங்குமப் பூ.
பனி நீர் முதலிய கலவை உறுப்புக்களைச் சேர்த்து உயர்குலப் பெண்டிர் உரு வாக்கிய செழுமையான சந்தனக் குழம்பால் பெருமானது மார்பிடம் முழுதும் பூசி.

பண் :

பாடல் எண் : 15

குலமகளிர் செய்த கொழுஞ்சாந்தம் கொண்டு
தலமலிய ஆகந் தழீஇக் கலைமலிந்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பச்சைக் கருப்பூரம், குங்குமப் பூ.
பனி நீர் முதலிய கலவை உறுப்புக்களைச் சேர்த்து உயர்குலப் பெண்டிர் உரு வாக்கிய செழுமையான சந்தனக் குழம்பால் பெருமானது மார்பிடம் முழுதும் பூசி.
கற்பகதருவால் தரப்பட்ட, செயற்பாடு நிறைந்த நறுமணம் கமழும் பட்டு உடையை உடுத்து, பொன்னால் ஆகிய வீரக்கழல்களைப் பாதங்களில் விளங்கக் கட்டி.
செயற்பாடு கை வன்மை ஆதலின் ``கலை`` என்றார்.
உடைகளும் மணம் ஊட்டி வைக்கப்படுதல் அறிக.

பண் :

பாடல் எண் : 16

கற்பகம் ஈன்ற கமழ்பட் டினையுடுத்துப்
பொற்கழல்கள் கால்மேற் பொலிவித்து விற்பகரும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கற்பகதருவால் தரப்பட்ட, செயற்பாடு நிறைந்த நறுமணம் கமழும் பட்டு உடையை உடுத்து, பொன்னால் ஆகிய வீரக்கழல்களைப் பாதங்களில் விளங்கக் கட்டி.
செயற்பாடு கை வன்மை ஆதலின் ``கலை`` என்றார்.
உடைகளும் மணம் ஊட்டி வைக்கப்படுதல் அறிக.
ஒளியை வீசுகின்ற சூளாமணி பதிக்கப்பெற்ற மணிமுடியைச் சென்னியிலே கவித்து, உச்சியினின்றும் போந்து நெற்றியில் தொங்குகின்ற சுட்டியைச் சேர்ந்த, ஒளி நிறைந்த நெற்றிப் பட்டத்தை நிலையாக அணிவித்து,

பண் :

பாடல் எண் : 17

சூளா மணிசேர் முடிகவித்துச் சுட்டிசேர்
வாளார் நுதற்பட்டம் மன்னுவித்துத் தோளா

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஒளியை வீசுகின்ற சூளாமணி பதிக்கப்பெற்ற மணிமுடியைச் சென்னியிலே கவித்து, உச்சியினின்றும் போந்து நெற்றியில் தொங்குகின்ற சுட்டியைச் சேர்ந்த, ஒளி நிறைந்த நெற்றிப் பட்டத்தை நிலையாக அணிவித்து, துளையிடப்படாத மணிகள் அழுத்திய, சுறா மீன் வடிவமாகச் செய்யப்பட்ட வளையங்களைக் காதுகளில் அணிவித்து.

பண் :

பாடல் எண் : 18

மணிமகர குண்டலங்கள் காதுக் கணிந்தாங்
கணிவயிரக் கண்டிகை பொன்னாண் பணிபெரிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

துளையிடப்படாத மணிகள் அழுத்திய, சுறா மீன் வடிவமாகச் செய்யப்பட்ட வளையங்களைக் காதுகளில் அணிவித்து.
அப்பொழுதே, அழகு பொருந்திய வயிரத்தால் ஆகிய கண்டிகை, பொன் இழை கோத்த பெரிய முத்தாரம், இவை களுடன் அழகிய சன்னவீரம் அழகிய மார்பில் ஒளிவிட, `பூட்டி` என ஒரு சொல் வருவிக்க,

பண் :

பாடல் எண் : 19

ஆரம் அவைபூண் டணிதிக ழும்சன்ன
வீரந் திருமார்பில் வில்இலக ஏருடைய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அப்பொழுதே, அழகு பொருந்திய வயிரத்தால் ஆகிய கண்டிகை, பொன் இழை கோத்த பெரிய முத்தாரம், இவை களுடன் அழகிய சன்னவீரம் அழகிய மார்பில் ஒளிவிட, `பூட்டி` என ஒரு சொல் வருவிக்க, அழகுடைய எட்டுத் தோள்களிலும் தோள் வளைகளைப் பொருத்தி, (தோள்வளை - வாகு வலயம்).
பார்த்தவர் மனம் மகிழும்படி கச்சினை இறுகக்கட்டி.

பண் :

பாடல் எண் : 20

எண்தோட்கும் கேயூரம் பெய்துஉதர பந்தனமும்
கண்டோர் மனம்மகிழக் கட்டுறீஇக் கொண்டு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அழகுடைய எட்டுத் தோள்களிலும் தோள் வளைகளைப் பொருத்தி, (தோள்வளை - வாகு வலயம்).
பார்த்தவர் மனம் மகிழும்படி கச்சினை இறுகக்கட்டி.
கடி சூத்திரம் - அரை நாண்.
இஃது அழகிற்காக உடைமேல் கட்டப்படுவது.
`கடிசூத்திரம் கொண்டு புனைந்து` என மாற்றியுரைக்க.
கங்கணம் - காப்பு.
திருமேனி முழுதும் பொருந்திய புனையப்படுவன யாவற்றையும் புனைந்து.
ஆங்கு - அதன்பின், அடிநிலை - பாதுகை.
`அடிநிலைமேல் நிற்பித்து` என ஒரு சொல் வரு வித்து, அதனை, `நந்தி மாகாளர் கடைகழிந்த போழ்தத்து` என்பத னோடு முடிக்க.
மேற்கூறிய கோலங்களை எல்லாம் புனைவித்தவர் நந்தி மாகாளர் என்க.
கடை - முதல்வாயில்.
``போழ்தத்து`` என்பதில் அத்து, வேண்டாவழிச் சாரியை.

பண் :

பாடல் எண் : 21

கடிசூத் திரம்புனைந்து கங்கணம்கைப் பெய்து
வடிவுடைய கோலம் புனைந்தாங்கு அடிநிலைமேல்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 22

நந்திமா காளர் கடைகழிந்த போழ்தத்து
வந்து வசுக்கள் இருக்குரைப்ப அந்தமில்சீர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கடி சூத்திரம் - அரை நாண்.
இஃது அழகிற்காக உடைமேல் கட்டப்படுவது.
`கடிசூத்திரம் கொண்டு புனைந்து` என மாற்றியுரைக்க.
கங்கணம் - காப்பு.
திருமேனி முழுதும் பொருந்திய புனையப்படுவன யாவற்றையும் புனைந்து.
ஆங்கு - அதன்பின், அடிநிலை - பாதுகை.
`அடிநிலைமேல் நிற்பித்து` என ஒரு சொல் வரு வித்து, அதனை, `நந்தி மாகாளர் கடைகழிந்த போழ்தத்து` என்பத னோடு முடிக்க.
மேற்கூறிய கோலங்களை எல்லாம் புனைவித்தவர் நந்தி மாகாளர் என்க.
கடை - முதல்வாயில்.
``போழ்தத்து`` என்பதில் அத்து, வேண்டாவழிச் சாரியை.
வசுக்கள் - `முப்பத்து மூவர்` எனத் தொகை பெற்ற தேவர்களுள்.
எண்மராய ஒரு குழுவினர்.
இருக்கு - மந்திரங்கள்.
எண்ணருங் கீர்த்தி - அளவிட இயலாத புகழ், எழுவர் இருடிகள் - சத்த இருடிகள் அகத்தியர், புலத்தியர், அங்கிரா.
கௌதமர், வசிட்டர், காசிபர், மார்க்கண்டேயர்.
அண்ணல் - தலைவன்; சிவபெருமான் ஆசிகள் வாழ்த்துக்கள்.
அவை, ``நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க``! 1 என்றாற் போலக் கூறப்படுவன், `வெல்க` என்றும், `சயசய` என்றும் சொல்லப் படுவனவும் வாழ்த்துக்களே.
`இவ்வாறு இறைவனை உயிர் வருக்கத் தினர் வாழ்த்துதல் உலகம் வாழ்தற் பொருட்டு` என்பதை, வாழ்த்து வதும் வானவர்கள் தாம்வாழ்வான்`` 2 என்பதனான் அறிக.

பண் :

பாடல் எண் : 23

எண்ணருங் கீர்த்தி எழுவர் இருடிகளும்
அண்ணல்மேல் ஆசிகள் தாம் உணர்த்த ஒண்ணிறத்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எண்ணருங் கீர்த்தி - அளவிட இயலாத புகழ், எழுவர் இருடிகள் - சத்த இருடிகள் அகத்தியர், புலத்தியர், அங்கிரா.
கௌதமர், வசிட்டர், காசிபர், மார்க்கண்டேயர்.
அண்ணல் - தலைவன்; சிவபெருமான் ஆசிகள் வாழ்த்துக்கள்.
அவை, ``நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க``! 1 என்றாற் போலக் கூறப்படுவன், `வெல்க` என்றும், `சயசய` என்றும் சொல்லப் படுவனவும் வாழ்த்துக்களே.
`இவ்வாறு இறைவனை உயிர் வருக்கத் தினர் வாழ்த்துதல் உலகம் வாழ்தற் பொருட்டு` என்பதை, வாழ்த்து வதும் வானவர்கள் தாம்வாழ்வான்`` 2 என்பதனான் அறிக.
ஒள் நிறத்த - ஒளி பொருந்திய நிறத்தையுடைய.
ஆதித்தர் - சூரியர்.
முப்பத்து மூவர் தேவரில் சூரியர் பன்னிரு வராவர்.
``பல்லாண்டு`` என்பதும் `பல் யாண்டு` எண்ணில்லாத யாண்டுகள் - வாழ்க` என்னும் குறிப்பினதேயாகும்.
மகதி - `மகதி` என்னும் யாழை ஏந்திய முனிவன்; நாரதன்.

பண் :

பாடல் எண் : 24

பன்னிருவர் ஆதித்தர் பல்லாண் டெடுத்திசைப்ப
மன்னும் மகதியன்யாழ் வாசிப்பப் பொன்னியலும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஒள் நிறத்த - ஒளி பொருந்திய நிறத்தையுடைய.
ஆதித்தர் - சூரியர்.
முப்பத்து மூவர் தேவரில் சூரியர் பன்னிரு வராவர்.
``பல்லாண்டு`` என்பதும் `பல் யாண்டு` எண்ணில்லாத யாண்டுகள் - வாழ்க` என்னும் குறிப்பினதேயாகும்.
மகதி - `மகதி` என்னும் யாழை ஏந்திய முனிவன்; நாரதன்.
பொன் இயலும் பொன்போல ஒளிவிடுகின்ற.
அங்கி - தீக்கடவுள்.
கமழ் தூபம் - நறுமணப் புகை, சத்த இருடிகள் கூறிய ஆசிகள் முன்பே வேதம் முதலியவற்றில் அமைந்து, மரபாகச் சொல்லப்பட்டு வருவன.
`அவை தம் பயனைத் தப்பாமல் தரும்` என்பது கொள்கை.
இங்கு யமன் வந்து மங்கல மொழிகளால் வாழ்த்தி யது தனது பணிவைப் புலப்படுத்திக்கொள்ளும் உபசார வார்த்தை.
`இவை தம்முள் வேறுபாடு` என்க.

பண் :

பாடல் எண் : 25

அங்கி கமழ்தூபம் ஏந்த யமன்வந்து
மங்கல வாசகத்தால் வாழ்த்துரைப்பச் செங்கண்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பொன் இயலும் பொன்போல ஒளிவிடுகின்ற.
அங்கி - தீக்கடவுள்.
கமழ் தூபம் - நறுமணப் புகை, சத்த இருடிகள் கூறிய ஆசிகள் முன்பே வேதம் முதலியவற்றில் அமைந்து, மரபாகச் சொல்லப்பட்டு வருவன.
`அவை தம் பயனைத் தப்பாமல் தரும்` என்பது கொள்கை.
இங்கு யமன் வந்து மங்கல மொழிகளால் வாழ்த்தி யது தனது பணிவைப் புலப்படுத்திக்கொள்ளும் உபசார வார்த்தை.
`இவை தம்முள் வேறுபாடு` என்க.
நிருதி - தென்மேற்குத் திசைக்குக் காவலன்.
`இவன் அரக்கன்` என்பது பற்றிச் சிவந்த கண்களையுடையவனாகக் கூறினார்.
முதலோர் - நிருதியின் பரிவாரங்கள், நிழல் - ஒளி.
கலன்கள் - அணிகலன்கள்.
இவை உலா இடையில் எந்த அணிகல மாயினும் பழுதுபடின் உடனே மாற்றிப் பூட்டுதற்கு அமைவன.
வருணன் - மேற்றிசைக் காவலன் கலசம் - நீர்ப் பாத்திரம்.

பண் :

பாடல் எண் : 26

நிருதி முதலோர் நிகழ்கலன்கள் ஏந்த
வருணன் மணிக்கலசந் தாங்கத் தெருவெலாம்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நிருதி - தென்மேற்குத் திசைக்குக் காவலன்.
`இவன் அரக்கன்` என்பது பற்றிச் சிவந்த கண்களையுடையவனாகக் கூறினார்.
முதலோர் - நிருதியின் பரிவாரங்கள், நிழல் - ஒளி.
கலன்கள் - அணிகலன்கள்.
இவை உலா இடையில் எந்த அணிகல மாயினும் பழுதுபடின் உடனே மாற்றிப் பூட்டுதற்கு அமைவன.
வருணன் - மேற்றிசைக் காவலன் கலசம் - நீர்ப் பாத்திரம்.
வாயு தேவன்.
`தெருவெலாம் விளக்க` என்க.
விளக்குதல், குப்பைகளைப் போக்கி அழகு விளங்கச் செய்தல்.
மழை- மேகம்.
மேகத்திற்குத் தலைவன் இந்திரன் ஆதலின் அவனே மேகங் களைக் கொண்டு தெருக்களில் நீர் தெளிப்பித்தான் என்க.
சோமன் - சந்திரன்.
குபேரனோடு கூட இவனும் வட திசையைக் காக்கின்றான்.
சீர் - புகழ்.

பண் :

பாடல் எண் : 27

வாயு நனிவிளக்க மாமழை நீர்தெளிப்பத்
தூயசீர்ச் சோமன் குடையேடுப்ப மேவியசீர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வாயு தேவன்.
`தெருவெலாம் விளக்க` என்க.
விளக்குதல், குப்பைகளைப் போக்கி அழகு விளங்கச் செய்தல்.
மழை- மேகம்.
மேகத்திற்குத் தலைவன் இந்திரன் ஆதலின் அவனே மேகங் களைக் கொண்டு தெருக்களில் நீர் தெளிப்பித்தான் என்க.
சோமன் - சந்திரன்.
குபேரனோடு கூட இவனும் வட திசையைக் காக்கின்றான்.
சீர் - புகழ்.

பண் :

பாடல் எண் : 28

ஈசானன் வந்தடைப்பை கைக்கொள்ள அச்சுனிகள்
வாயார்ந்த மந்திரத்தால் வாழ்த்துரைப்பத் தூய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈசானன், வடகீழ்த்திசைக் காவலன்.
இவன் உருத்திரர் வகையைச் சேர்ந்தவன்.
அடை - வெற்றிலை.
அதனையுடைய பை அடைப்பை.
எட்டுத் திக்குப் பாலகர்களில் ஒவ்வொருவனும் ஒவ்வொரு பணியை மேற்கொண்டமை யறிக.
வடதிசையில் குபேரனுக்கு ஈடாகச் சந்திரன் சொல்லப்பட்டான்.
குபேரன் பின்பு சொல்லப்படுவான்.
அச்சுனிகள் - அச்சுவினி தேவர்கள்.
இவர்கள் தேவ மருத்துவர்கள்.
முப்பத்து மூவரில் இவர்கள் இருவராவர்.
வாய் ஆர்ந்த - வாய் நிறைந்த.
இவர்கள் வாழ்த்துரைத்தல், `தம்மால் சிவபெருமான் அடையத் தக்க உடல் நலம் ஒன்றில்லை; அவன் நிராமயன்; (இயல்பாகவே நோயிலி என்பது பற்றியாம்,

பண் :

பாடல் எண் : 29

உருத்திரர்கள் தோத்திரங்கள் சொல்லக் குபேரன்
திருத்தகு மாநிதியஞ் சிந்தக் கருத்தமைந்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இங்கு ``உருத்திரர்கள்`` என்றது ஏகாதச ருத்திரரை.
முப்பத்து மூவரில் இவர் பதினொருவராவர்.
இங்ஙனம் தேவர் முப்பத்து மூவரும் திரண்டமையறிக.
`இவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோடி பரிவாரம்` என்பதால் தேவர் முப்பத்து முக் கோடியினர் ஆவர், குபேரன் இத்திருவுலாவில் தக்கார்க்கும், வேண்டுவார்க்கும் பொன் மழையும், மணி மழையும் பொழிந்து வந்தான் என்க.
கருத்து - உள்ளன்பு.
தீர்த்தங்கள் - தீர்த்தங்களின் அதிதேவதைகள்.
கவரி - சாமரை.
புடை - இருபக்கத்திலும் இரட்டுதல் - மாறி மாறி வீசுதல்.

பண் :

பாடல் எண் : 30

கங்கா நதியமுனை உள்ளுறுத்த தீர்த்தங்கள்
பொங்கு கவரி புடைஇரட்டத் தங்கிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கருத்து - உள்ளன்பு.
தீர்த்தங்கள் - தீர்த்தங்களின் அதிதேவதைகள்.
கவரி - சாமரை.
புடை - இருபக்கத்திலும் இரட்டுதல் - மாறி மாறி வீசுதல்.
தங்கிய - எட்டுத் திசைகளிலும் தங்கியிருக் கின்ற பைந்நாகம் - படத்தையுடைய பாம்பு.
சுடர் - விளக்கு.
அவை தம் தம்மிடத்திலுள்ள மாணிக்கங்களையே விளக்காக எடுத்தன.
கைந் நாகம் - கையையுடைய யானை.
அவை கால்களை மண்டியிட்டு, கைகளைத் தலைமேல் வைத்து வணங்கின.

பண் :

பாடல் எண் : 31

பைந்நாகம் எட்டும் சுடரெடுப்பப் பைந்தறுகண்
கைந்நாகம் எட்டும் கழல்வணங்க மெய்ந்நாக

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தங்கிய - எட்டுத் திசைகளிலும் தங்கியிருக் கின்ற பைந்நாகம் - படத்தையுடைய பாம்பு.
சுடர் - விளக்கு.
அவை தம் தம்மிடத்திலுள்ள மாணிக்கங்களையே விளக்காக எடுத்தன.
கைந் நாகம் - கையையுடைய யானை.
அவை கால்களை மண்டியிட்டு, கைகளைத் தலைமேல் வைத்து வணங்கின.
மெய் - இறைவனுக்குத் திருமேனியாய் உள்ள.
நாகம் - ஆகாயம்.
விதானம் - மேற்கட்டி.
கொடி - துகிற் கொடியாகிய மின்னல் - தோன்றித் தோன்றி மறைதலால் அது காற்றால் மாறி மாறி வீசுகின்ற கொடியாயிற்று.
மோகம் - மயக்கம்.
முரசின் ஓசையால் சிலர்க்கும், சில உயிர்கட்கும் மயக்கம் உண்டாயிற்று.
என்க.
அன்றி, `உலாவைக் காண விருப்பத்தை உண்டாக்கிற்று`` என்றலும் ஆம்.
இங்கும், `மேகம்` எனல்பாடம் அன்று.
உருமு - இடி.
விதானம், கொடி, முரசு இவைகள் உண்மையாகவே பல இருப்பினும், இவை ஒப்புமையால் அவையாய் அழகுசெய்தன.

பண் :

பாடல் எண் : 32

மேகம் விதானமாய் மின்னெலாஞ் சூழ்கொடியாய்
மோகத் துருமு முரசறையப் போகம்சேர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மெய் - இறைவனுக்குத் திருமேனியாய் உள்ள.
நாகம் - ஆகாயம்.
விதானம் - மேற்கட்டி.
கொடி - துகிற் கொடியாகிய மின்னல் - தோன்றித் தோன்றி மறைதலால் அது காற்றால் மாறி மாறி வீசுகின்ற கொடியாயிற்று.
மோகம் - மயக்கம்.
முரசின் ஓசையால் சிலர்க்கும், சில உயிர்கட்கும் மயக்கம் உண்டாயிற்று.
என்க.
அன்றி, `உலாவைக் காண விருப்பத்தை உண்டாக்கிற்று`` என்றலும் ஆம்.
இங்கும், `மேகம்` எனல்பாடம் அன்று.
உருமு - இடி.
விதானம், கொடி, முரசு இவைகள் உண்மையாகவே பல இருப்பினும், இவை ஒப்புமையால் அவையாய் அழகுசெய்தன.
தும்புரு நாரதர்கள், உம்மைத் தொகை.
`போகம் சேர் நுண்ணிடையார்` என இயைக்க.
இதுகாறும் வந்த `செய` என் எச்சங்கள் நிகழ் காலத்தன.

பண் :

பாடல் எண் : 33

தும்புரு நாரதர்கள் பாடத் தொடர்ந்தெங்கும்
கொம்புருவ நுண்ணிடையார் கூத்தாட எம்பெருமான்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தும்புரு நாரதர்கள், உம்மைத் தொகை.
`போகம் சேர் நுண்ணிடையார்` என இயைக்க.
இதுகாறும் வந்த `செய` என் எச்சங்கள் நிகழ் காலத்தன.

பண் :

பாடல் எண் : 34

விண்ணார் பணிய உயர்ந்த விளங்கொளிசேர்
வெண்ணார் மழவிடையை மேல்கொண்டாங்கு எண்ணார்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பணிய - பணியும்படி.
இவ்வெச்சம் எதிர் காலத்தது.
இது ``மேல்கொண்டு`` என்பதனோடு முடியும்.
`வெண்நார்` எனப்பிரித்து, `நார் - தனது அன்பிற்கு இடமாகிய விடை` என உரைக்க.
`மேல் கொள்ளல்` என்பது, `ஊர்தல்` என்னும் பொருட்டாக லின் அது ``விடையை`` என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று.
மழ விடை - இளமையான இடபம்.
எண் ஆர் - எண் நிறைந்த; எண்ணால் மிகுதிப் பட்ட.
கருத்துடைய - அன்புடைய, பாரிடங்கள் - கூளிச் சுற்றம்; பூத கணங்கள்.
`ஒத்துக் காப்புச் செய்ய` என்க.
ஒத்து - இணங்கி.
காப்பு - காவல்.
கடைகள் - வாயில்கள்.

பண் :

பாடல் எண் : 35

கருத்துடைய பாரிடங்கள் காப்பொத்துச் செய்யத்
திருக்கடைகள் ஏழ்கடந்த போதில் செருக்குடைய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எண் ஆர் - எண் நிறைந்த; எண்ணால் மிகுதிப் பட்ட.
கருத்துடைய - அன்புடைய, பாரிடங்கள் - கூளிச் சுற்றம்; பூத கணங்கள்.
`ஒத்துக் காப்புச் செய்ய` என்க.
ஒத்து - இணங்கி.
காப்பு - காவல்.
கடைகள் - வாயில்கள்.
செருக்கு - பெருமிதம்; வீரம்.
சேனாபதி - தேவ சேனாபதி; முருகன்.
யானை - ஐராவதம்.
ஆனா - நீங்காத.
போர், அசுரர்மேற் செய்யும் போர், முன் செல்வது தூசிப்படை பின்செல்வது கூழைப்படை.

பண் :

பாடல் எண் : 36

சேனா பதிமயில்மேல் முன்செல்ல யானைமேல்
ஆனாப்போர் இந்திரன் பின்படர ஆனாத

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

செருக்கு - பெருமிதம்; வீரம்.
சேனாபதி - தேவ சேனாபதி; முருகன்.
யானை - ஐராவதம்.
ஆனா - நீங்காத.
போர், அசுரர்மேற் செய்யும் போர், முன் செல்வது தூசிப்படை பின்செல்வது கூழைப்படை.

பண் :

பாடல் எண் : 37

அன்னத்தே ஏறி அயன்வலப்பால் கைபோதக்
கன்னவிலும் திண்டோள் கருடன்மேல் மன்னிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கைபோத - பக்கத் துணையாய் வர.
கல் - வலிய கல்.
நவிலும், உவம உருபு.
மேல் இட - மேற்பட்டுத் தோன்ற.
கரும்பு வில் இடப்பால் ஏல்வுடைய - கரும்புவில்லை இடப்பக்கத்தில் ஏற்றலை உடைய காமன்.
ஏல்வு, தொழிற் பெயர்.
``பால் மென் கரும்பு`` என்பதில் பால், `சாறு` என்னும் பொருட்டாய்க் கரும்பிற்கு அடையாயிற்று.
எய்வான் - எய்தற் பொருட்டு.
கொங்கு - தேன்.
நறுமணமு மாம், வில் மேலே கூறப்பட்டமையால், `வாளியை அதன் கண் கோத்து அமைத்த` என்க.
வாளி - அம்பு.
கணை ஐந்து மேலே கூறப்பட்டதாயினும் `காமனுக்கு உள்ள சிறப்பு ஐங்கணைகளை எய்வதே` என்பது தோன்றுதற்கு.
``ஐங்கணை யான் காமன்`` எனப் பெயர்த்துங் கூறினார்.
காமனது கொடி மீனக் கொடி.
அவனுடை படைகள் மகளிர் குழாம்.
அவர்கள் ஆடவர்மேல் போர்க்குச் செல்லக் காமன் அப்படைக்குத் தலைவனாய் வில்லும், அம்பும் கொண்டு செல்வான் - ஆயினும் இப்பொழுது அந்தப் படை சிவபெருமான் மேல் வரக் காமன் அச்சத்தால் சிவபெருமானுக்கே துணைசெய்பவனாய்த் தன் குறிப்பறியாது எதிர்த்து வரும் தன் படைகள் மேலேயே தன் அம்புகளை எய்ய வருகின்றான்.
`காமன் தன் கொடிப் படைக்கு எதிராய்ப் போத` என்க.
காரி - ஐயனார்.
கதம் - கோபம்.
வாமம் - அழகு.
`காரியாகிய வாமன்` என்க.

பண் :

பாடல் எண் : 38

மால்இடப்பாற் செல்ல மலரார் கணைஐந்து
மேல்இடப்பால் மென்கருப்பு வில்இடப்பால் ஏல்வுடைய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 39

சங்கணையும் முன்கைத் தடமுலையார் மேல்எய்வான்
கொங்கணையும் பூவாளி கோத்தமைத்த ஐங்கணையான்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 40

காமன் கொடிப்படைமுன் போதக் கதக்காரி
வாமன் புரவிமேல் வந்தணைய நாமஞ்சேர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கைபோத - பக்கத் துணையாய் வர.
கல் - வலிய கல்.
நவிலும், உவம உருபு.
மேல் இட - மேற்பட்டுத் தோன்ற.
கரும்பு வில் இடப்பால் ஏல்வுடைய - கரும்புவில்லை இடப்பக்கத்தில் ஏற்றலை உடைய காமன்.
ஏல்வு, தொழிற் பெயர்.
``பால் மென் கரும்பு`` என்பதில் பால், `சாறு` என்னும் பொருட்டாய்க் கரும்பிற்கு அடையாயிற்று.
எய்வான் - எய்தற் பொருட்டு.
கொங்கு - தேன்.
நறுமணமு மாம், வில் மேலே கூறப்பட்டமையால், `வாளியை அதன் கண் கோத்து அமைத்த` என்க.
வாளி - அம்பு.
கணை ஐந்து மேலே கூறப்பட்டதாயினும் `காமனுக்கு உள்ள சிறப்பு ஐங்கணைகளை எய்வதே` என்பது தோன்றுதற்கு.
``ஐங்கணை யான் காமன்`` எனப் பெயர்த்துங் கூறினார்.
காமனது கொடி மீனக் கொடி.
அவனுடை படைகள் மகளிர் குழாம்.
அவர்கள் ஆடவர்மேல் போர்க்குச் செல்லக் காமன் அப்படைக்குத் தலைவனாய் வில்லும், அம்பும் கொண்டு செல்வான் - ஆயினும் இப்பொழுது அந்தப் படை சிவபெருமான் மேல் வரக் காமன் அச்சத்தால் சிவபெருமானுக்கே துணைசெய்பவனாய்த் தன் குறிப்பறியாது எதிர்த்து வரும் தன் படைகள் மேலேயே தன் அம்புகளை எய்ய வருகின்றான்.
`காமன் தன் கொடிப் படைக்கு எதிராய்ப் போத` என்க.
காரி - ஐயனார்.
கதம் - கோபம்.
வாமம் - அழகு.
`காரியாகிய வாமன்` என்க.

பண் :

பாடல் எண் : 41

வேழ முகத்து விநாயகனை உள்ளுறுத்துச்
சூழ்வளைக்கைத் தொண்டைவாய்க் கெண்டையொண்கண் தாழ்கூந்தல்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 42

மங்கை எழுவருஞ் சூழ மடநீலி
சிங்க அடலேற்றின் மேற்செல்லத் தங்கிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நாமம் - அச்சம்.
`விநாயகனை உள்ளுறுத்துக் கதக் காரி செல்ல` என மேலே கூட்டுக.
``மங்கை`` என்பது அப்பருவத்தைக் குறித்தது.
எழுவர் - சத்தமாதர்.
இவருள் காளியும் ஒருத்தியாயினும் அவளைத் தலைவி யாக வேறு பிரித்துக் கூறுதலின் அவளுக்கு ஈடாகத் துர்க்கையைக் கொள்க.
எழுவர் மாதராவார் பிராம்மி, வைணவி, மாகேசுவரி, கௌமாரி, இந்திராணி, வாராகி, காளி.
பிராம்மி, `அபிராமி` என்றும், வைணவி `நாராயணி` என்றும் சொல்லப்படுவர்.
நீலி - காளி.
மடம் - இளமை.

பண் :

பாடல் எண் : 43

விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர்
அச்சா ரணர்அரக்க ரோடுஅசுரர் எச்சார்வும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

விச்சாதரர் முதல் அசுரர் ஈறாகச் சொல்லப் பட்டவர்கள் தேவ சாதியினர்.
இவர் முதலாகப் பதினெண்கணங்கள் சில இடங்களில் சொல்லப்படும்.
விச்சாதரர் வித்தியாதரர்.
`கந்திருவர்` என்றும் சொல்லப்படுவர்.
இயக்கர் - யட்சர்.
யட்சனுக்குப் பெண்பால் யட்சிணி தேவ சாதியினருள் யட்சர் பேரழகுடையவர்களாகச் சொல்லப்படுவர்.
``அச்சாரணர்`` என்பதில் அகரம் பண்டறி சுட்டு.
எச்சார்வும் - எவ்விடத்திலும்.
சல்லரி முதல் முருடு ஈறாகச் சொல்லப்பட்டவை வாத்திய வகைகள்.
அவற்றுட் பெரும்பாலன தத்தம் ஓசை காரணமாகப் பெயர் பெற்றன.
கல்லவடம்- இரத்தின மாலை.
இதனை மொந்தைக்கு அடையாக்குக.
இலயத்தட்டு, தாள அறுதி தோன்றத் தட்டுதல்.
சங்கு, அத்தட்டினைக் கடந்து ஒலித்தலால், ``தட்டு அழி சங்கம்`` என்றார்.
`சலஞ்சலம்` என்பதும் ஒருவகைச் சங்கே.
தாளம் - பிரம்ம தாளம்.
கட்டு அழியாப் பேரி - வார்க்கட்டுத் தளராத பேரிகை.
கர தாளம் - கைத்தாளம்.
இது சிறிய அளவினதும், குவிந்த வடிவினதுமாய்ச் சிறிய அளவில் ஒலிப்பது.
மகளிர் தனங்கட்கு உவமையாகச் சொல்லப்படும் தாளம் இதுவே.
முன்னர்ச் சொல்லியது பெரிய அளவினதாய்ப் பேரோசையைத் தருவது.
இயம்ப - ஒலிக்க.

பண் :

பாடல் எண் : 44

சல்லரி தாளம் தகுணிதம் தத்தளகம்
கல்லலகு கல்ல வடமொந்தை நல்லிலயத்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

விச்சாதரர் முதல் அசுரர் ஈறாகச் சொல்லப் பட்டவர்கள் தேவ சாதியினர்.
இவர் முதலாகப் பதினெண்கணங்கள் சில இடங்களில் சொல்லப்படும்.
விச்சாதரர் வித்தியாதரர்.
`கந்திருவர்` என்றும் சொல்லப்படுவர்.
இயக்கர் - யட்சர்.
யட்சனுக்குப் பெண்பால் யட்சிணி தேவ சாதியினருள் யட்சர் பேரழகுடையவர்களாகச் சொல்லப்படுவர்.
``அச்சாரணர்`` என்பதில் அகரம் பண்டறி சுட்டு.

பண் :

பாடல் எண் : 45

தட்டழி சங்கம் சலஞ்சலந் தண்ணுமை
கட்டழியாப் பேரி கரதாளம் கொட்டும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 46

குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ்
இடமாம் தடாரி படகம் இடவிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 47

மத்தளம் துந்துபி வாய்ந்த முரு டிவற்றால்
எத்திசை தோறும் எழுந்தியம்ப ஒத்துடனே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எச்சார்வும் - எவ்விடத்திலும்.
சல்லரி முதல் முருடு ஈறாகச் சொல்லப்பட்டவை வாத்திய வகைகள்.
அவற்றுட் பெரும்பாலன தத்தம் ஓசை காரணமாகப் பெயர் பெற்றன.
கல்லவடம்- இரத்தின மாலை.
இதனை மொந்தைக்கு அடையாக்குக.
இலயத்தட்டு, தாள அறுதி தோன்றத் தட்டுதல்.
சங்கு, அத்தட்டினைக் கடந்து ஒலித்தலால், ``தட்டு அழி சங்கம்`` என்றார்.
`சலஞ்சலம்` என்பதும் ஒருவகைச் சங்கே.
தாளம் - பிரம்ம தாளம்.
கட்டு அழியாப் பேரி - வார்க்கட்டுத் தளராத பேரிகை.
கர தாளம் - கைத்தாளம்.
இது சிறிய அளவினதும், குவிந்த வடிவினதுமாய்ச் சிறிய அளவில் ஒலிப்பது.
மகளிர் தனங்கட்கு உவமையாகச் சொல்லப்படும் தாளம் இதுவே.
முன்னர்ச் சொல்லியது பெரிய அளவினதாய்ப் பேரோசையைத் தருவது.
இயம்ப - ஒலிக்க.
மங்கலம் பாடுவார்; சூதரும், மாகதரும், இவர் கள் முறையே திருவோலக்கத்தில் நின்றேத்துவாரும், இருந்தேத்து வாரும் ஆவர்.
மல்லர் - மெய்க்காப்பாளர்.
கிங்கரர் - தூதுவர், இவ ரெல்லாம் சிவ கணத்தவராவர்.
கிலுகிலுத்தல் - முணுமுணுத்தலும், அதட்டுதலும்,

பண் :

பாடல் எண் : 48

மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும்
கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் தங்கிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மங்கலம் பாடுவார்; சூதரும், மாகதரும், இவர் கள் முறையே திருவோலக்கத்தில் நின்றேத்துவாரும், இருந்தேத்து வாரும் ஆவர்.
மல்லர் - மெய்க்காப்பாளர்.
கிங்கரர் - தூதுவர், இவ ரெல்லாம் சிவ கணத்தவராவர்.
கிலுகிலுத்தல் - முணுமுணுத்தலும், அதட்டுதலும்,

பண் :

பாடல் எண் : 49

ஆறாம் இருதுவும் யோகும் அருந்தவமும்
மாறாத முத்திரையும் மந்திரமும் ஈறார்ந்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இருது - ருது.
இது தமிழில் `பெரும் பொழுது` எனப்படும்.
அவற்றைக் கார் முதலாக (ஆவணி முதலாக` வைத்து எண்ணுதல் தமிழ் மரபு.
வசந்தம் முதலாக வைத்து எண்ணுதல் வடநூல் வழக்கு.
(வசந்தம், கிரீஷ்மம், வர்ஷம், சரத், ஹேமந்தம், சிசிரம்.
) வசந்தம் முதலிய ஆறும் சித்திரை முதல் இரண்டிரண்டு மாதங்களை யுடையன.
பெரும் பொழுது கூறியதனானே சிறுபொழுதுகளும் கொள்ளப்படும்.
யோகு - யோகம்.
முத்திரை - சின்முத்திரை முதலிய கைக்குறிகள்.
கணம் (க்ஷணம்) - நொடி இதனைக் கூறவே உபலக் கணத்தால் துடி, இலவம் முதலிய பிற நுட்பக்காலங்களும் கொள்ளப் படும்.
இருது முதலாக இதுகாறும் கூறப்பட்டன அவற்றின் அதி தேவர்களையாம்.
வாலகிலியர் - பிரமனது மானச புத்திரனாகிய `கிருது` என்பவனுக்கும், `கிரியை` என்பவளுக்கும் பிறந்த அறுபதினா யிரவர்.
இவர் அங்குட்ட அளவினராய், வானப்பிரத்தர்களாய்ச் சிவநெறியில் நிற்பவர்கள் என்பர்.
ஈண்டி - நெருங்கி.

பண் :

பாடல் எண் : 50

காலங்கள் மூன்றும் கணமும் குணங்களும்
வால கிலியரும் வந்தீண்டி மேலை

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இருது - ருது.
இது தமிழில் `பெரும் பொழுது` எனப்படும்.
அவற்றைக் கார் முதலாக (ஆவணி முதலாக` வைத்து எண்ணுதல் தமிழ் மரபு.
வசந்தம் முதலாக வைத்து எண்ணுதல் வடநூல் வழக்கு.
(வசந்தம், கிரீஷ்மம், வர்ஷம், சரத், ஹேமந்தம், சிசிரம்.
) வசந்தம் முதலிய ஆறும் சித்திரை முதல் இரண்டிரண்டு மாதங்களை யுடையன.
பெரும் பொழுது கூறியதனானே சிறுபொழுதுகளும் கொள்ளப்படும்.
யோகு - யோகம்.
முத்திரை - சின்முத்திரை முதலிய கைக்குறிகள்.
கணம் (க்ஷணம்) - நொடி இதனைக் கூறவே உபலக் கணத்தால் துடி, இலவம் முதலிய பிற நுட்பக்காலங்களும் கொள்ளப் படும்.
இருது முதலாக இதுகாறும் கூறப்பட்டன அவற்றின் அதி தேவர்களையாம்.
வாலகிலியர் - பிரமனது மானச புத்திரனாகிய `கிருது` என்பவனுக்கும், `கிரியை` என்பவளுக்கும் பிறந்த அறுபதினா யிரவர்.
இவர் அங்குட்ட அளவினராய், வானப்பிரத்தர்களாய்ச் சிவநெறியில் நிற்பவர்கள் என்பர்.
ஈண்டி - நெருங்கி.

பண் :

பாடல் எண் : 51

இமையோர் பெருமானே போற்றி எழில்சேர்
உமையாள் மணவாளா போற்றி எமைஆளும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தேவர் பலரும் பெருமான் புறப்பாட்டின் பொழுது அவனைப் பலவகையால் போற்றி செய்து ஆரவாரித்துப் பூமழையைப் பொழிந்தமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 52

தீயாடி போற்றி சிவனே அடிபோற்றி
ஈசனே எந்தாய் இறைபோற்றி தூயசீர்ச்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 53

சங்கரனே போற்றி சடாமகுடத் தாய்போற்றி
பொங்கரவா பொன்னங் கழல்போற்றி அங்கொருநாள்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பொங்கு அரவா - சீற்றம் மிக்க பாம்பினை அணிந்தவனே.

பண் :

பாடல் எண் : 54

ஆய விழுப்போர் அருச்சுனன் ஆற்றற்குப்
பாசுபதம் ஈந்த பதம்போற்றி தூய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஆற்றல் - தவ வலிமை.
பதம் - திருவடி.
திரு வருளைத் திருவடியாகக் கூறுதல் வழக்கு.
தூய மலை - வெண்மலை; கயிலாயம், மயானம், ஊழிமுடிந்த இடம், நிலை, நித்தியத்துவம்.

பண் :

பாடல் எண் : 55

மலைமேலாய் போற்றி மயானத்தாய் வானோர்
தலைமேலாய் போற்றிதாள் போற்றி நிலைபோற்றி

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தேவர் பலரும் பெருமான் புறப்பாட்டின் பொழுது அவனைப் பலவகையால் போற்றி செய்து ஆரவாரித்துப் பூமழையைப் பொழிந்தமை கூறப்பட்டது.
தூய மலை - வெண்மலை; கயிலாயம், மயானம், ஊழிமுடிந்த இடம், நிலை, நித்தியத்துவம்.

பண் :

பாடல் எண் : 56

போற்றிஎனப் பூமாரி பெய்து புலன்கலங்க
நாற்றிசையும் எங்கும் நலம்பெருக ஏற்றுக்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நாற்றிசையும் எங்கும்`` என்றது, `எந்தப் பக்கத்திலும், எந்த இடத்திலும்` என்றபடி.
ஏற்றுக் கொடி - இடபக் கொடி.
இது சிவபெரு மானுக்கு உரியது.
பதாகை - கொடி.
பொதுப்படக் கூறியதனால் உடன் வந்த மால், அயன், இந்திரன் மற்றும் முருகன் முதலியோரது கொடி களைக் கொள்க.
வடிவு - அழகு.
தொங்கல் - மாலை.
கடி - நறுமணம்.

பண் :

பாடல் எண் : 57

கொடியும் பதாகையும் கொற்றக் குடையும்
வடிவுடைய தொங்கலுஞ் சூழக் கடிகமழும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஏற்றுக் கொடி - இடபக் கொடி.
இது சிவபெரு மானுக்கு உரியது.
பதாகை - கொடி.
பொதுப்படக் கூறியதனால் உடன் வந்த மால், அயன், இந்திரன் மற்றும் முருகன் முதலியோரது கொடி களைக் கொள்க.
வடிவு - அழகு.
தொங்கல் - மாலை.
கடி - நறுமணம்.

பண் :

பாடல் எண் : 58

பூமாண் கருங்குழலார் உள்ளம் புதிதுண்பான்
வாமான ஈசன் வரும்போழ்திற் சேமேலே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பூ மாண் கருங் குழலார் - பூவையணிந்த, மாட்சிமைப்பட்ட, கரிய கூந்தலையுடைய மகளிர்.
`புதிதாக உண்ண` என ஆக்கம் வருவித்துரைக்க.
உண்ணல் - கவர்தல்.
`புதிதாக` என்றது இதுகாறும் இது நிகழாமையைக் குறித்தது.
எனவே, `மகளிர் உள்ளங்கள் எளிதில் உண்ணப்படும்` என்பது குறித்ததாயிற்று.
`வாம மான` என்பது ``வாமான`` எனக் குறைந்து நின்றது.
வாமம் - அழகு.
மானம் - பெருமை.

பண் :

பாடல் எண் : 59

வாமான ஈசன் மறுவில்சீர் வானவர்தம்
கோமான் படைமுழக்கம் கேட்டலுமே தூமாண்பில்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மறு இல் சீர் வானவர் - குற்றம் இல்லாத புகழை யுடைய தேவர்.

பண் :

பாடல் எண் : 60

வானநீர் தாங்கி மறைஓம்பி வான்பிறையோ
டூனமில் சூலம் உடையவாய் ஈனமிலா

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மாளிகைக்கும், சிவபெருமானுக்கும் சிலேடை.
வான நீர் - ஆகாய கங்கை, மறை - சிவபெருமான் வேதங் களை அழியாமல் காக்கின்றான்.
மாளிகைகள் தம்முள் நிகழும் இரகசியங்களை வெளித் தோன்றாமல் காக்கின்றன.
இருவரும் முடியில் பிறையை அணிகின்றனர்.
சூலம் - சிவபெருமான் சூலம் ஏந்தியுள்ளான்.
மாளிகைகள் (சூல் ஆம்) கருக்கொண்ட மேகங்களைத் தாங்குகின்றன.
அம் - நீர்.
அஃது ஆகுபெயராய் மேகத்தைக் குறித்தது.
ஈனம் - தாழ்வு.
வெள்ளை - திருநீறு; சுதை வேழத்து உரி போர்த்த வள்ளல்.
சிவபெருமான்.
வடிவு - தோற்றம்.
ஒள்ளிய - ஒளி பொருந்திய.
மாடம் - மேல் மாடம்.
அமளி - படுக்கை.
அக்காலத்தில் அரசர்கள் போர் தொடங்கும் பொழுது.
நாளை `இன்ன நாள்` என்றும், களத்தை, `இன்ன இடம்` முன்பே குறித்துக் கொள்வர்.
அவற்றுள் இடம் குறித்தலை, `களம் குறித்தல்` எனக் கூறும் வழக்கம் பற்றி, ``போர்க்களமாக் குறித்து`` என்றார்.
போர், ஆடவரோடு ஆடும் கலவிப் போர்.
சிவபெருமான் உலாப் போதுங்கால் பல திறக்குழாங்கள் குழுமி நிற்குமாயினும், உலாவால் மகளிர் குழாம் பட்ட பாட்டினை எடுத்துக் கூறுவதே இப்பிரபந்தம் ஆதலின், அவை பற்றியே குறிக்கின்றார்.

பண் :

பாடல் எண் : 61

வெள்ளை யணிதலால் வேழத் துரிபோர்த்த
வள்ளலே போலும் வடிவுடைய ஒள்ளிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 62

மாட நடுவில் மலர்ஆர் அமளியே
கூடிய போர்க்கள மாக்குறித்துக் கேடில்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மாளிகைக்கும், சிவபெருமானுக்கும் சிலேடை.
வான நீர் - ஆகாய கங்கை, மறை - சிவபெருமான் வேதங் களை அழியாமல் காக்கின்றான்.
மாளிகைகள் தம்முள் நிகழும் இரகசியங்களை வெளித் தோன்றாமல் காக்கின்றன.
இருவரும் முடியில் பிறையை அணிகின்றனர்.
சூலம் - சிவபெருமான் சூலம் ஏந்தியுள்ளான்.
மாளிகைகள் (சூல் ஆம்) கருக்கொண்ட மேகங்களைத் தாங்குகின்றன.
அம் - நீர்.
அஃது ஆகுபெயராய் மேகத்தைக் குறித்தது.
ஈனம் - தாழ்வு.
வெள்ளை - திருநீறு; சுதை வேழத்து உரி போர்த்த வள்ளல்.
சிவபெருமான்.
வடிவு - தோற்றம்.
ஒள்ளிய - ஒளி பொருந்திய.
மாடம் - மேல் மாடம்.
அமளி - படுக்கை.
அக்காலத்தில் அரசர்கள் போர் தொடங்கும் பொழுது.
நாளை `இன்ன நாள்` என்றும், களத்தை, `இன்ன இடம்` முன்பே குறித்துக் கொள்வர்.
அவற்றுள் இடம் குறித்தலை, `களம் குறித்தல்` எனக் கூறும் வழக்கம் பற்றி, ``போர்க்களமாக் குறித்து`` என்றார்.
போர், ஆடவரோடு ஆடும் கலவிப் போர்.
சிவபெருமான் உலாப் போதுங்கால் பல திறக்குழாங்கள் குழுமி நிற்குமாயினும், உலாவால் மகளிர் குழாம் பட்ட பாட்டினை எடுத்துக் கூறுவதே இப்பிரபந்தம் ஆதலின், அவை பற்றியே குறிக்கின்றார்.

பண் :

பாடல் எண் : 63

சிலம்பு பறையாகச் சேயரிக்கண் அம்பா
விலங்கு கொடும்புருவம் வில்லா நலந்திகழும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மகளிர் ஆடவரோடு ஆடும் கலவியாகிய போருக்கு அவர்தம் காலில் அணிந்துள்ள சிலம்புகளே போர்ப் பறை.
அவை அப்போர்க்காலத்து ஒலித்தல் இயல்பு.
விலங்கு கொடும் புருவம் - விலங்குபோல வளைவான புருவங்கள்.
அவைகளே வில், அவை அப்போர்க் காலத்தில் வளைதல் (நெறிதல்) இயல்பு.
கூழை, வளை இவை சிலேடை.
கூழை - கூந்தல்; கூழைப் (பின்னணிப்) படை.
தாழ அவிழ்ந்து அலைய கலவிக் காலத்துக் கூந்தல் அலைதல் இயல்பு.
அது பினன்ணிப் படை முன்னணிப் படைக் கேற்பச் செயற்படுதலை ஒக்கின்றது.
வளை - கை வளையல்; சங்கு.
இவை இரண்டும் ஒலித்தலைச் செய்யும்.
கை - பக்கம் போதரலாவது போர் செய்வார் வலஞ்செல்லு தலும் இடம் செல்லுதலும் இந்நிலை கலவியிடத்தும் பொருந்தும்.
கேழ் கிளரும் - நிறம் மிக்க.
`நிறம்` என்றது `திதலை` எனப்படும் நிறத்தினை.
அல்குல் - பிருட்டம்.
`துடி இடை` எனக் கூறுதற்கு ஏற்ப, நடுவில் இடை சுருங்கியிருக்க, மேலே ஆகமும், கீழே பிருட்டமும் அகன்றிருக்கும் நிலையில் பிருட்டம் தேர்த்தட்டோடு உவமிக்கப் படுதல் வழக்கமாயிற்று.
உந்தி - செலுத்தி.
மா - யானை.
யானைத் தந்தத்தோடு உவமிக்கப்படுதல் பற்றி யானையாயின.
பொங்க - சினம் மிக; புளகிக்க.
``கொழுநர்`` என்றது, அப்பொழுது உரிமை பெற்றோரை.
அல்லாக்கால் கலவியாலே அவர் மனத்தைக் கவர்தல் வேண்டா என்க.
பொருது - போர் செய்து.
`பொருது அங்கம் அசைந்த` என்க.
அங்கம் - உறுப்புக்கள்.
அசைந்த - சோர்ந்த.

பண் :

பாடல் எண் : 64

கூழைபின் தாழ வளைஆர்ப்பக் கைபோந்து
கேழ்கிளரும் அல்குலாம் தேர்உந்திச் சூழொளிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 65

கொங்கைமாப் பொங்கக் கொழுநர் மனம்கவர
அங்கம் பொருதசைந்த ஆயிழையார் செங்கேழ்நற்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மகளிர் ஆடவரோடு ஆடும் கலவியாகிய போருக்கு அவர்தம் காலில் அணிந்துள்ள சிலம்புகளே போர்ப் பறை.
அவை அப்போர்க்காலத்து ஒலித்தல் இயல்பு.
விலங்கு கொடும் புருவம் - விலங்குபோல வளைவான புருவங்கள்.
அவைகளே வில், அவை அப்போர்க் காலத்தில் வளைதல் (நெறிதல்) இயல்பு.
கூழை, வளை இவை சிலேடை.
கூழை - கூந்தல்; கூழைப் (பின்னணிப்) படை.
தாழ அவிழ்ந்து அலைய கலவிக் காலத்துக் கூந்தல் அலைதல் இயல்பு.
அது பினன்ணிப் படை முன்னணிப் படைக் கேற்பச் செயற்படுதலை ஒக்கின்றது.
வளை - கை வளையல்; சங்கு.
இவை இரண்டும் ஒலித்தலைச் செய்யும்.
கை - பக்கம் போதரலாவது போர் செய்வார் வலஞ்செல்லு தலும் இடம் செல்லுதலும் இந்நிலை கலவியிடத்தும் பொருந்தும்.
கேழ் கிளரும் - நிறம் மிக்க.
`நிறம்` என்றது `திதலை` எனப்படும் நிறத்தினை.
அல்குல் - பிருட்டம்.
`துடி இடை` எனக் கூறுதற்கு ஏற்ப, நடுவில் இடை சுருங்கியிருக்க, மேலே ஆகமும், கீழே பிருட்டமும் அகன்றிருக்கும் நிலையில் பிருட்டம் தேர்த்தட்டோடு உவமிக்கப் படுதல் வழக்கமாயிற்று.
உந்தி - செலுத்தி.
மா - யானை.
யானைத் தந்தத்தோடு உவமிக்கப்படுதல் பற்றி யானையாயின.
பொங்க - சினம் மிக; புளகிக்க.
``கொழுநர்`` என்றது, அப்பொழுது உரிமை பெற்றோரை.
அல்லாக்கால் கலவியாலே அவர் மனத்தைக் கவர்தல் வேண்டா என்க.
பொருது - போர் செய்து.
`பொருது அங்கம் அசைந்த` என்க.
அங்கம் - உறுப்புக்கள்.
அசைந்த - சோர்ந்த.

பண் :

பாடல் எண் : 66

பொற்கலசத் துள்ளால் மணிநீர் முகம்சேர்த்தி
நற்பெருங் கோலம் மிகப்புனைந்து பொற்புடைய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரவு கலவிப்போரால் சோர்வுற்ற மகளிர் காலையில் குளித்து ஒப்பனை செய்கின்றனர்.
`மணி நீரைப் பொற்கலசத்துள்ளால் எடுத்து முகம் சேர்த்தி` என மாற்றியும், ஒருசொல் வருவித்து என உரைக்க.
``நீர் முகம் சேர்த்தி`` என்றது, `தலை முழுகி` என்றபடி.
மணி நீர் - தெளிந்த நீர்.

பண் :

பாடல் எண் : 67

பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாக
மாதரவர் சொல்லார் மகிழ்ந்தீண்டிச் சோதிசேர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பேதை முதலாகப் பேரிளம் பெண் ஈறாக மகளிரது பருவம் ஏழாகச் சொல்லப்படும்.
அவை பற்றி வரும் பகுதிகளில் காண்க.
மாது - அழகு; இனிமை.
இவர்தல் - மீதூர்தல்.

பண் :

பாடல் எண் : 68

சூளிகையும் சூட்டும் சுளிகையும் கட்டிகையும்
வாளிகையும் பொற்றோடும் மின்விலக மாளிகையின்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சூளிகை - மேல் மாடத்தின் நெற்றி.
சூட்டு - சிகரம்.
`இங்கெல்லாம் மின்னல்போல ஒளிவீ\\\\u2970?` என்க.
சுளிகை, சுட்டிகை, இவை மகளிர் நெற்றியில் அணியும் அணி வகைகள்.
வாளிகை - ஒருவகைக் காதணி.
`இவை மின் விலக` என்க.

பண் :

பாடல் எண் : 69

மேல்ஏறி நின்று தொழுவார் துயர்கொண்டு
மால்ஏறி நின்று மயங்குவார் நூலேறு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மால் - மயக்கம்.
நூல் ஏறு தாமம் - அருள் நூல்களில் எல்லாம் புகழ் இடம் பெற்று விளங்கும் கொன்றை மலர் மாலை.
சடாதாரி - சடையை உடைய சிவபெருமான்.
யாமம் - இரவுப் பொழுது.
அடும் - (எம்மைக்) கொல்லும்.

பண் :

பாடல் எண் : 70

தாமமே தந்து சடாதாரி நல்கானேல்
யாமமேல் எம்மை அடும்என்பார் காமவேள்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நூல் ஏறு தாமம் - அருள் நூல்களில் எல்லாம் புகழ் இடம் பெற்று விளங்கும் கொன்றை மலர் மாலை.
சடாதாரி - சடையை உடைய சிவபெருமான்.
யாமம் - இரவுப் பொழுது.
அடும் - (எம்மைக்) கொல்லும்.

பண் :

பாடல் எண் : 71

ஆம்என்பார் அன்றென்பார் ஐயுறுவார் கையெறிவார்
தாம்முன்னை நாணோடு சங்கிழப்பார் பூமன்னும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சிலர், (அழகால்) `இவன் மன்மதனே` என்பார்.
சிலர் அதனை மறுத்து, அங்ஙனம் கூறுவது பொருந்துவதன்று; (இவனது அழகு காமனுக்கு இல்லை - காமன் கரியன்; இவன் செய்யன்) என்பர்.
சிலர் `இவன் வேறு யாவன்` என ஐயுறுவர்.
சிலர் ஆற்றாமையால் கையோடு கையை எறிவார்.
பலரும் முன்பே போய் விட்ட நாணத்தோடு, பின்பு தாம் அணிந்திருந்த சங்க வளையல் களையும் இழப்பர்.
பூ மன்னும் - அழகு நின்ற.
பொன் அரி மாலை பல அணிகலங்களுள் ஒன்றாக மகளிர் கழுத்தில் அணியப்படுவது.
அதனையே இப்பொழுது அவர்கள் மயக்கம் மிகுதியால் சிவபிரான் தம்மைத் தனக்கு உரியர் ஆக்கிக்கொள்ளக் கட்டும் மாங்கல்ய சூத்திர மாக (தாலிக்கயிறாக) நினைத்துத் தாங்களே எடுத்துப் புனைந்து கொள்வார்கள்.
`துன் மாலை, அரி மாலை` எனத் தனித் தனி இயைக்க.
துன் மாலை - இருவரும் ஒன்றுபடுதற்கு ஏதுவான மாலைத்தாலி, அரிமாலை அழகிய மாலை.
அரி - அரித்தல் செய்யப்படுவது.

பண் :

பாடல் எண் : 72

பொன்னரி மாலையைப் பூண்பார்அப் பூண்கொண்டு
துன்னரி மாலையாச் சூடுவார் முன்னம்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பூ மன்னும் - அழகு நின்ற.
பொன் அரி மாலை பல அணிகலங்களுள் ஒன்றாக மகளிர் கழுத்தில் அணியப்படுவது.
அதனையே இப்பொழுது அவர்கள் மயக்கம் மிகுதியால் சிவபிரான் தம்மைத் தனக்கு உரியர் ஆக்கிக்கொள்ளக் கட்டும் மாங்கல்ய சூத்திர மாக (தாலிக்கயிறாக) நினைத்துத் தாங்களே எடுத்துப் புனைந்து கொள்வார்கள்.
`துன் மாலை, அரி மாலை` எனத் தனித் தனி இயைக்க.
துன் மாலை - இருவரும் ஒன்றுபடுதற்கு ஏதுவான மாலைத்தாலி, அரிமாலை அழகிய மாலை.
அரி - அரித்தல் செய்யப்படுவது.

பண் :

பாடல் எண் : 73

ஒருகண் எழுதிவிட் டொன்றெழுதா தோடித்
தெருவம் புகுவார் திகைப்பார் அருகிருந்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்களில் மைதீட்டத் தொடங்கித் தீட்டியவர்கள் ஒரு கண்ணிற்கு மட்டும் தீட்டி.
பொழுது உலா ஒலி கேட்டு அதனை விட்டுவிட்டு ஓடித் தெருவிலே வந்து நின்றார்கள்.
`தெருவம்` என்பதில் அம், சாரியை.

பண் :

பாடல் எண் : 74

கண்ணாடி மேற்பஞ்சு பெய்வார் கிளியென்று
பண்ணாடிச் சொற்பந்துக் குற்றுரைப்பார் அண்ணல்மேற்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மயக்கத்தால் நிலைக் கண்ணாடியை, `படுக்கை` என்று நினைத்து, அதன்மேல் பஞ்சைச் சொரிந்தார்கள்.
பந்தினை, `கிளி` என்று நினைத்து அதற்கு, `சிவா, முக்கண்ணா, பிறை சூடீ` என்றாற்போலும் சொற்களைச் சொல்லும்படி தங்கள் இசைபோலும் சொற்களைச் சொல்லிப் பயிற்றுவிப்பார்.
அண்ணல், சிவபெருமான்.
மாசாலம் - பெருங் கூட்டம்.
கோலுதல் - குவித்தல்.
`மகளிருடைய அனைத்துக் கண்களும் சிவபெருமான் ஒருவன்மேலே சென்று குவிந்தன` என்றபடி.
திண்ணம் நிறைந்தார் - `இவனைப் பற்றி யல்லது தனியே மீளோம்` என்னும் உறுதியுடன் கூடி நின்றார்கள்.
`திண்ணத்தோடு` என ஓடுருபு விரிக்க.
அவர்கள் கருதியது கூடாமையால் திகைத்தார்கள்.

பண் :

பாடல் எண் : 75

கண்ணென்னும் மாசாலங் கோலிக் கருங்குழலார்
திண்ணம் நிறைந்தார் திறந்திட்டார் ஒண்ணிறத்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அண்ணல், சிவபெருமான்.
மாசாலம் - பெருங் கூட்டம்.
கோலுதல் - குவித்தல்.
`மகளிருடைய அனைத்துக் கண்களும் சிவபெருமான் ஒருவன்மேலே சென்று குவிந்தன` என்றபடி.
திண்ணம் நிறைந்தார் - `இவனைப் பற்றி யல்லது தனியே மீளோம்` என்னும் உறுதியுடன் கூடி நின்றார்கள்.
`திண்ணத்தோடு` என ஓடுருபு விரிக்க.
அவர்கள் கருதியது கூடாமையால் திகைத்தார்கள்.

பண் :

பாடல் எண் : 76

பேதைப் பருவம் பிழையாதாள் வெண்மணலால்
தூதைச் சிறுசோ றடுதொழிலாள் தீதில்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஐந்துமுதல் ஏழ் ஆண்டு முடியப் பேதைப் பருவம்.
இப்பருவத்தில் காமக் குறிப்புத் தோன்றாதாயினும் உலாப் பிரபந்தத்தில் மற்றைப் பருவ மகளிரோடு இப்பருவ மகளிரையும் கூட்டி நிரப்புதல் வழக்கு.
இப்பிரபந்தம் பட்டாங் குரைப்பதின்றிப் புனைந்துரை வகையால் தலைவனைச் சிறப்பிப்பதேயாகலின்.
பிழையாமை - கடவாமை.
தூதை - சிறுமட்கலம்.
`பேதை சிற்றில் இழைத்துச் சிறுசோறட்டு விளையாடுவாள்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 77

இடையாலும் ஏக்கழுத்தம் மாட்டாள் நலஞ்சேர்
உடையாலும் உள்உருக்க கில்லாள் நடையாலும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உம்மைகள் எச்சப் பொருள.
ஏக்கழுத்தம் - செருக்கு; தன் பெண்மை நலத்தைத் தானே வியந்து செருக்குதல்.
இது முதலியன பேதைப் பருவத்தாளிடத்து இல்லாமை யறிக.
நலம் - அழகு.
உடையால் உள் உருக்குதல்.
பொன்னும், மணி யும் பொருந்திய உடைகளின்வழி உண்டாகும் செயற்கை அழகால் ஆடவரது உள்ளங்களை உருகச் செய்தல்.

பண் :

பாடல் எண் : 78

கௌவைநோய் காளையரைச் செய்யாள் கதிர்முலைகள்
வெவ்வநோய் செய்யுந் தொழில்பூணாள் செவ்வன்நேர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கௌவை - பழிச்சொல்.
அஃது, இவன், `தான் யார், இவள் யார்` என்று எண்ணாமல், பலருங்காண இவளை உற்று நோக்குகின்றான் - எனப் பலராலும் பழிக்கப்படுதல்.
`கௌவையால் என உருபு விரித்து, `நோய் செய்யாள்` என இயைக்க.
நோய் செய்தல்- வருத்துதல் ``காளையரை`` என்பதை எல்லாவற்றோடும் கூட்டுக.
`கதிராகிய முலைகள்` என்க.
கதிராதல், உண்மை தெரிக்கும் அளவாய் இருத்தல்.
``முலைகள் தொழில் பூணாள்`` எனச் சினை வினை முதல்மேல் நின்றது.
வெவ்வ நோய் - கொடிய வருத்தம்.
செவ்வன் - செவ்வையாக.
நேர் நோக்கிலும் - ஆடவர் நேர்நின்று பார்த்தபோதிலும், நோய் நோக்கம் நோக்காள் - அவர்கள் உள்ளத்தில் காம நோய் உண்டாக நோக்கும் நோக்கமாக நோக்க அறியாள்.
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
* என்னும் குறளில், ``நோய் நோக்கு`` என்பதற்குப் பரிமேலழகர் உரைத்த உரையை நோக்குக.
நோய் நோக்கம் - நோயை உண்டாக்கும் நோக்கம்.
``நோக்கமாக நோக்காள்`` என ஆக்கம் வருவித்துரைக்க.
வாக்கின் - சொல்லால்.
சொல்லால் பிறர் மனத்து வஞ்சித்தலா வது, ஆடவன் ஒருவன் தேர், அல்லது குதிரை மேல் செல்லுதலைக் கண்டபொழுது அவனைக் காதலித்த காதல் காரணமாகக் கண் கலுழ்ந்து நின்றாளைத் தாயர் நோக்கி, `ஏடி, என்ன கண் கலுழ் கின்றாய்` என்று உருத்து வினாயபொழுது `அன்னாய், ஒன்றும் இல்லை; தேர், அல்லது குதிரை சென்ற வேகத்தால் எழுந்த தூசு கண் களில் வீழ்ந்து விட்டன.
கண்கள் கலுழ்கின்றன` என விடையிறுக்க, அவர்கள் உள்ளத்தில், `இவள் நம்மை வஞ்சிக்கின்றாள்` என்னும் எண்ணம் தோன்றச் செய்தல்.
பிறர் மனத்தும் வஞ்சியாள் என்னும் உம்மை, `தன் மனத்தும் வஞ்சனையிலள்` என இறந்தது தழுவிற்று.

பண் :

பாடல் எண் : 79

நோக்கிலும் நோய்நோக்கம் நோக்காள் தன் செவ்வாயின்
வாக்கிற் பிறர்மனத்தும் வஞ்சியாள் பூக்குழலும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

செவ்வன் - செவ்வையாக.
நேர் நோக்கிலும் - ஆடவர் நேர்நின்று பார்த்தபோதிலும், நோய் நோக்கம் நோக்காள் - அவர்கள் உள்ளத்தில் காம நோய் உண்டாக நோக்கும் நோக்கமாக நோக்க அறியாள்.
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
* என்னும் குறளில், ``நோய் நோக்கு`` என்பதற்குப் பரிமேலழகர் உரைத்த உரையை நோக்குக.
நோய் நோக்கம் - நோயை உண்டாக்கும் நோக்கம்.
``நோக்கமாக நோக்காள்`` என ஆக்கம் வருவித்துரைக்க.
வாக்கின் - சொல்லால்.
சொல்லால் பிறர் மனத்து வஞ்சித்தலா வது, ஆடவன் ஒருவன் தேர், அல்லது குதிரை மேல் செல்லுதலைக் கண்டபொழுது அவனைக் காதலித்த காதல் காரணமாகக் கண் கலுழ்ந்து நின்றாளைத் தாயர் நோக்கி, `ஏடி, என்ன கண் கலுழ் கின்றாய்` என்று உருத்து வினாயபொழுது `அன்னாய், ஒன்றும் இல்லை; தேர், அல்லது குதிரை சென்ற வேகத்தால் எழுந்த தூசு கண் களில் வீழ்ந்து விட்டன.
கண்கள் கலுழ்கின்றன` என விடையிறுக்க, அவர்கள் உள்ளத்தில், `இவள் நம்மை வஞ்சிக்கின்றாள்` என்னும் எண்ணம் தோன்றச் செய்தல்.
பிறர் மனத்தும் வஞ்சியாள் என்னும் உம்மை, `தன் மனத்தும் வஞ்சனையிலள்` என இறந்தது தழுவிற்று.
`குழலை முடியாள்` என்க.
முடியாமைக்குக் காரணம் அவை முடிக்க வாராமை.
பேதைப் பருவத்தாளை, `முடி கூடாதவள்` என்றல் வழக்கு.
பாடவம் - ஆரவாரம்; பகட்டு.
இள வேய் - முற்றா, முளையாகிய மூங்கில்.
தோள்கள் அன்ன சிறிய ஆகலின் ஆடவர்க்கு விருப்பம் தாரா ஆயின.

பண் :

பாடல் எண் : 80

பாடவம் தோன்ற முடியாள் இளவேய்த்தோள்
ஆடவர் தம்மை அயர்வுசெய்யாள் நாடோறும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`குழலை முடியாள்` என்க.
முடியாமைக்குக் காரணம் அவை முடிக்க வாராமை.
பேதைப் பருவத்தாளை, `முடி கூடாதவள்` என்றல் வழக்கு.
பாடவம் - ஆரவாரம்; பகட்டு.
இள வேய் - முற்றா, முளையாகிய மூங்கில்.
தோள்கள் அன்ன சிறிய ஆகலின் ஆடவர்க்கு விருப்பம் தாரா ஆயின.
`சொல்வது ஒன்று, நினைப்பது ஒன்று, அடுத்து விரும்புவது ஒன்று; இவ்வாறு நிலையாக ஒன்றிலும் நில்லாமை பேதைப் பருவத்து இயல்பு என்றபடி.

பண் :

பாடல் எண் : 81

ஒன்றுரைத் தொன்றுன்னி ஒன்றுசெய் தொன்றின்கண்
சென்ற மனத்தினாளாஞ் சேயிழையாள் நன்றாகத்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சொல்வது ஒன்று, நினைப்பது ஒன்று, அடுத்து விரும்புவது ஒன்று; இவ்வாறு நிலையாக ஒன்றிலும் நில்லாமை பேதைப் பருவத்து இயல்பு என்றபடி.

பண் :

பாடல் எண் : 82

தாலி கழுத்தணிந்து சந்தனத்தால் மெய்பூசி
நீல அறுவை விரித்துடுத்துக் கோலஞ்சேர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தாலி - நாபி அளவும் தொங்கவிடும் அணிகலன்.
அறுவை - துணி.
பேதைப் பருவத்தாள் தெருப் புழுதியில் விளையாடு தல் பற்றி நீலத் துணியை உடுத்து விடுப்பர்.
`அதுவும் ஒரு சுற்றாகவே இருக்கும்` என்றற்கு, ``விரித்துடுத்து`` என்றார்.
கோலம் - அழகு.

பண் :

பாடல் எண் : 83

பந்தரில் பாவைகொண் டாடுமிப் பாவைக்குத்
தந்தையார் என்றொருத்தி தான்வினவ அந்தமில்சீர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பாவை கொண்டு`` என்பதை, `பாவை கொள்ள` எனத் திரிக்க.
கொள்ளுதல், கொண்டு விளையாடுதல்.
ஒருத்தி, ஊராருள் ஒருத்தி.
தான், அசை.
வினவ - குறும்பாகக் கேட்க.
பேதைதன் தாய்.
`இப்பாவைக்குத் தந்தை சிவபெருமான்தான்` அஃதாவது, `கடவுள்தான்` என்று அவளும் குறும்பாக விடையிறுக்க, அந்தச் சிவபெருமான் அப்பொழுது; தற்செயலாய் ஒரு பெரிய இடப வாகனத்தின் மேல் அங்கு வந்தான்.
காய் சினம், விடைக்கு இன அடை.
பேதைப் பருவத்தாள் அவனைக் கண்ணாரக் கண்டாள்.

பண் :

பாடல் எண் : 84

ஈசன் எரியாடி என்ன அவனைஓர்
காய்சின மால்விடைமேல் கண்ணுற்றுத் தாய்சொன்ன

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பாவை கொண்டு`` என்பதை, `பாவை கொள்ள` எனத் திரிக்க.
கொள்ளுதல், கொண்டு விளையாடுதல்.
ஒருத்தி, ஊராருள் ஒருத்தி.
தான், அசை.
வினவ - குறும்பாகக் கேட்க.
பேதைதன் தாய்.
`இப்பாவைக்குத் தந்தை சிவபெருமான்தான்` அஃதாவது, `கடவுள்தான்` என்று அவளும் குறும்பாக விடையிறுக்க, அந்தச் சிவபெருமான் அப்பொழுது; தற்செயலாய் ஒரு பெரிய இடப வாகனத்தின் மேல் அங்கு வந்தான்.
காய் சினம், விடைக்கு இன அடை.
பேதைப் பருவத்தாள் அவனைக் கண்ணாரக் கண்டாள்.
ஆயினும் தாய் சொல்லிய சொல்லின் முறைமையை முழுமையாக அறிதல் இவளைப்போன்ற பேதைப் பருவப் பெண்களுக்கு இயலாது.
அஃதாவது, இல்லத்தில் தன் தாய் தன்னையும், மற்றும் குழவிகளையும் சீராட்டிப் பாராட்டுதலைப் பார்த்துத் தானும் ஒருபாவையைத் தன்னுடைய மகவாகக் கொண்டு அவ்வாறு சீராட்டி விளையாடுகின்ற பேதைப் பெண், `ஒரு மகவிற்குத் தாயாயினாள் என்றால், அதற்கு முன்னே அதற்குத் தங்கையாகக் கூடிய ஒருவனை மணந்திருக்க வேண்டுமன்றோ` என்னும் ஆழ்ந்த பொருளில் அயலாள் ஒருத்தி, `இப்பாவைக்குத் தந்தை யார்` என்று குறும்பாகக் கேட்டாள்.
இந்தப் பேதைப் பெண்ணுக்கு இதற்குள் மணவாளன் ஏது` என்பதுபடத் தாய், `கடவுள்தான் இப்பாவைக்குத் தந்தை` எனக் குறும்பாக விடையிறுத்தாள்.
இந்த நுட்பங்களைப் பேதை அறியமாட்டாள்.
ஆயினும் தாய் சொன்னபடி தெய்வச் செயலாகச் சிவபெருமான் அங்கு உலாப்போந்தாள்.
பேதை மற்றவர்போலத் தானும் அவனைக் கண்டாள்.
`இவள் போல்வாள் நோக்காள்` என மாறிக் கூட்டி, `ஆயினும் என்பது வருவிக்க.
`தன் பாவைக்குத் தந்தை வேண்டும்` என்றும் `அந்தத் தந்தை சிவபெருமான்தான்` என்று, தாய் கூறிவிட்டாள் - என்றும் இந்த முறைமைகளுக்காகப் பேதை சிவபெருமானை விரும்பவில்லை.
(அந்த முறைமையெல்லாம் அறியும் பருவம் அன்று அவள் பருவம்.
) ஆயினும் தன்னியல்பால் தானே சிவபெருமானைக் காதலிக்கின்ற முறைமையில் காதல் செய்வதற்கு நல்ல நேரத்தில் தொடக்கம் செய்தாள்.
`கணக்கு` இரண்டில் முன்னது முறைமை; பின்னது நூல்.
நாட் செய்தல்- நாள் கொள்ளுதல்; தொடங்குதல்.
பேதையின் காதல் நல்ல முறையில் நல்ல நேரத்தில் தொடங்கியது என்க.
இதற்குமுன் இவள் `காதல்` என்பதையே அறியாள் என்பதைக் குறித்தபடி.
காதல் என்பதையே அறியாதவளும் காதல் தோன்றப் பெற்றாள்; சிவபெருமானது திருவுலா அத்தன்மைத் தாய் இருந்தது.
அவ்வுலாப் `பத்தி` என்பதையே அறியாதவர்க்கும் பத்தியைத் தோற்றுவிக்கும் தன்மையது` என்பது இதன் உள்ளுறை.

பண் :

பாடல் எண் : 85

இக்கணக்கு நோக்காள் இவள்போல்வாள் காமநூல்
நற்கணக்கின் மேற்சிறிதே நாட்செய்தாள் பொற்புடைய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 86

பேரொளிசேர் காட்சிப் பெதும்பைப் பிராயத்தாள்
காரொளிசேர் மஞ்ஞைக் கவினியலாள் சீரொளிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எட்டு முதல் பதினோர் ஆண்டு முடியப் பெதும்மைப் பருவம்.
பேரொளி - மிக்க அழகு.
சேர்தல் - ஒரு காலைக் கொருகால் மிகுதல்.
கார் ஒளி சேர் மஞ்ஞைக் கவின் இயலாள்- நீல ஒளி வளரப் பெறுகின்ற மயிலைப் போலும் அழகு வளர்தலையுடையவள்.

பண் :

பாடல் எண் : 87

தாமரை ஒன்றின் இரண்டு குழைஇரண்டு
காமருவு கெண்டைஓர் செந்தொண்டை தூமருவு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஒரு தாமரை மலரிலே இருதளிர், இரு அழகிய கெண்டைமீன், ஒரு சிவந்த கொவ்வைக் கனி, முத்துக்கள், வளைந்த வில், `சுட்டி` என்னும் அணிகலம், சிவந்த பவளம் இவைகளை ஒருங்கு வைத்தது போலும் நன்கு மதிக்கத்தக்க முகத்தையுடையவள்.
தளிர் காது; கெண்டை கண்கள்; கொவ்வைக் கனி இதழ்; முத்துக்கள் பற்கள்; வில் புருவம்; இவையெல்லாம் உருவக வகையால் கூறப்பட்டன.
சுட்டியும்.
பவளமும் உவமையாற் கூறப்பட்டன.
பவள படமும் அணிகலமாகக் கொள்க.

பண் :

பாடல் எண் : 88

முத்தம் முரிவெஞ் சிலைசுட்டி செம்பவளம்
வைத்தது போலும் மதிமுகத்தாள் ஒத்தமைந்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஒரு தாமரை மலரிலே இருதளிர், இரு அழகிய கெண்டைமீன், ஒரு சிவந்த கொவ்வைக் கனி, முத்துக்கள், வளைந்த வில், `சுட்டி` என்னும் அணிகலம், சிவந்த பவளம் இவைகளை ஒருங்கு வைத்தது போலும் நன்கு மதிக்கத்தக்க முகத்தையுடையவள்.
தளிர் காது; கெண்டை கண்கள்; கொவ்வைக் கனி இதழ்; முத்துக்கள் பற்கள்; வில் புருவம்; இவையெல்லாம் உருவக வகையால் கூறப்பட்டன.
சுட்டியும்.
பவளமும் உவமையாற் கூறப்பட்டன.
பவள படமும் அணிகலமாகக் கொள்க.
ஒத்து அமைந்த - கைக்குப் பொருந்தி அமைந்த.
கங்கணம் - காப்பு.
பெதும்பை ஆதலின் வளை அணியாது, காப்பு அணிந்தாள்.
கதிர் மணி - ஒளி பொருந்திய இரத்தினம்.
கிங்கிணி - சதங்கை.
இதுவும் பெதும்பைக்கு உரியது.

பண் :

பாடல் எண் : 89

கங்கணம் சேர்ந்திலங்கு கையாள் கதிர்மணியின்
கிங்கிணி சேர்ந்த திருந்தடியாள் ஒண்கேழ்நல்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஒண் கேழ் - ஒளி பொருந்திய நிறம்.
மேகலை யணியாது, துகில் மாத்திரமே உடுத்தாள்.
அசைதல் - இறுகக் கட்டப்படுதல்.
பேதை இவ்வாறு கட்டுதல் இல்லை.
ஆய் பொதியில் - தமிழை ஆராய்ந்த இடமாகிய பொதியில் மலை.
`அதன்கண் உண்டான சந்தன மரத்தின் தேய்வை` என்க.
சந்தனத்தைத் தொய்யிலாக எழுதாமல் வாளா பூசிக் கொண்டாள்.

பண் :

பாடல் எண் : 90

அந்துகில் சூழ்ந்தசைந்த அல்குலாள் ஆய்பொதியில்
சந்தனம் தோய்ந்த தடந்தோளாள் வந்து

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஒண் கேழ் - ஒளி பொருந்திய நிறம்.
மேகலை யணியாது, துகில் மாத்திரமே உடுத்தாள்.
அசைதல் - இறுகக் கட்டப்படுதல்.
பேதை இவ்வாறு கட்டுதல் இல்லை.
ஆய் பொதியில் - தமிழை ஆராய்ந்த இடமாகிய பொதியில் மலை.
`அதன்கண் உண்டான சந்தன மரத்தின் தேய்வை` என்க.
சந்தனத்தைத் தொய்யிலாக எழுதாமல் வாளா பூசிக் கொண்டாள்.
தம் இடத்தை விட்டு வந்து இங்கு எழுவதற்கு ஒளிந்துள்ள மலைகள் தாம் எழுவதற்குரிய காலத்தை எதிர் நோக்கிச் சிறிதே எட்டிப் பார்ப்பது போலும் கொங்கைகளையுடையவள்.
திடர் இடுதல் - மண்ணில் மறைந்திருத்தல்.
`அது போன்ற நிலையினை யுடைய மலைகள்` என்க.
கண் செய்தல் - எட்டிப் பார்த்தல்.
வழி கோலுதலும் ஆம்.
கடல் பட்ட இன்னமுதம் - பாற்கடலில் உருவாகிக் காணப் பட்ட இனிய அமுதம்.

பண் :

பாடல் எண் : 91

திடரிட்ட திண்வரைக்கண் செய்த முலையாள்
கடல்பட்ட இன்னமுதம் அன்னாள் மடல்பட்ட

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தம் இடத்தை விட்டு வந்து இங்கு எழுவதற்கு ஒளிந்துள்ள மலைகள் தாம் எழுவதற்குரிய காலத்தை எதிர் நோக்கிச் சிறிதே எட்டிப் பார்ப்பது போலும் கொங்கைகளையுடையவள்.
திடர் இடுதல் - மண்ணில் மறைந்திருத்தல்.
`அது போன்ற நிலையினை யுடைய மலைகள்` என்க.
கண் செய்தல் - எட்டிப் பார்த்தல்.
வழி கோலுதலும் ஆம்.
கடல் பட்ட இன்னமுதம் - பாற்கடலில் உருவாகிக் காணப் பட்ட இனிய அமுதம்.
மடல் பட்ட - பூவின் இதழ்கள் பொருந்திய.
மாலையால் சுற்றிக் கட்டப்பட்ட கூந்தலையுடையவள்.
இளங் கிளி - நன்கு முதிராத கிளி.
தூமொழி - வஞ்சனை கலவாத சொல்.

பண் :

பாடல் எண் : 92

மாலை வளாய குழலாள் மணம்நாறு
சோலை இளங்கிளிபோல் தூமொழியாள் சாலவும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மடல் பட்ட - பூவின் இதழ்கள் பொருந்திய.
மாலையால் சுற்றிக் கட்டப்பட்ட கூந்தலையுடையவள்.
இளங் கிளி - நன்கு முதிராத கிளி.
தூமொழி - வஞ்சனை கலவாத சொல்.

பண் :

பாடல் எண் : 93

வஞ்சனை செய்து மனங்கவரும் வாட்கண்ணுக்
கஞ்சனத்தை யிட்டங் கழகாக்கி எஞ்சா

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்கள் தம்மியல்பில் தாம் நின்றனவாயினும், காணும் காளையருள் சிலர் தம்மை அவள் விரும்பி நோக்குகின்றா ளாகக் கருத நிற்றலை இங்கு, ``வஞ்சனை`` என்றார்.
இயல்பிலே கவர்ச்சியில்லாதவற்றை அஞ்சனம் தீட்டி அழகாக்கினாள் எஞ்சா - அணிய வேண்டுவனவற்றுள் எதுவும் குறையாத.
மணி - நவமணி, ஆழி - மோதிரம்.
வளை - தோள் வளை.
தான் மங்கைப் பருவத்தள் அல்லளாயினும் அப்பருவத்தாரோடு ஒப்பத் தோன்றும் ஆசையால் அவர்தம் அணிகலங்களையெல்லாம் தானும் அணிந்து ஒப்பனை செய்து கொண்டாள்.

பண் :

பாடல் எண் : 94

மணிஆரம் பூண்டாழி மெல்விரலிற் சேர்த்தி
அணிஆர் வளைதோள்மேல் மின்ன மணியார்ந்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எஞ்சா - அணிய வேண்டுவனவற்றுள் எதுவும் குறையாத.
மணி - நவமணி, ஆழி - மோதிரம்.
வளை - தோள் வளை.
தான் மங்கைப் பருவத்தள் அல்லளாயினும் அப்பருவத்தாரோடு ஒப்பத் தோன்றும் ஆசையால் அவர்தம் அணிகலங்களையெல்லாம் தானும் அணிந்து ஒப்பனை செய்து கொண்டாள்.
மணி ஆர்ந்த - அழகு நிறைந்த.
`வெண்மணலை இடமாகக் கொண்டு, அதன்கண் எழுதினாள்` என்க.
மங்கையர்போல நன்கு ஒப்பனை செய்து கொண்டு தோழியருடன் தெருவில் வந்தவள், `தனது அழகுக்கு ஏற்ற காதலன் மன்மதன் ஒருவனே` என்னும் எண்ணத்தினால் அவன் உருவத்தை இவள் வெண்மணலிலே எழுதிப் பார்க்க எழுதிக் கொண்டிருந்தாள்.
அதுபொழுது சிவபெருமான் தன் இயல்பிலே தான் இடப வாகனத்தின்மேல் அங்கு உலாப்போந்தான்.
அவனைக் கண்டதும் இப்பெதும்பை அவன் காமனிலும் மிக்க அழகுடையனாய் இருந்தலைக் கண்டு கரை கடந்த காதலை உடையளாய் நிலையழிந்து நின்றுவிட்டாள்.
கரும்பு + சிலை = கருப்புச் சிலை.
சிலை - வில்.
மன்மதனுடைய தேர் தென்றற் காற்று.
அஃது உருவம் இல்லதாயினும் அதன் போக்கினைச் சில கீறல்களால் எழுதிக் காட்டுதல் உண்டு.
ஒருப்பட்டு - காதலனாக ஏற்றுக் கொண்டு.
உடன்- அவனுக்குரிய பொருள்கள் பலவற்றையும் தொகுத்து.
ஊர்தல் - மீதூர்தல், `மீதூர்தற்கு ஏதுவான தீர்த்தன்` என்க.
தீர்த்தன் - பரிசுத்தன்.
வான மால் ஏறு - வானவருள் ஒருவனாகிய மாயோனாம் விடை.
வானம் - உயர்வும் ஆம்.
தான் - பெதும்பை.
`நன்று அறிவார் அமரச் சொன்ன` என்க.
அமர - யாவரும் விரும்பும் வண்ணம்.
நலம் - மகளிர்க்கு உரியன வாகச் சொல்லப்பட்ட உறுப்பிலக்கணங்கள்.
நிறை - மனம்.
தன் இயல்பில் ஓடாதவாறு நிறுத்தும் ஆற்றல்.
கை வண்டு - வளையல்.
இது முன்னர்க் கூறப்படாமையால் இப் பொழுது மற்றை அணிகலங்களுடன் அணிந்து வந்தாள் என்க.
கண் வண்டு, உருவகம்.
கலை - உடை.
நெய் விண்ட - மண நெய் பூசப்பட்ட ``நின்றொழிந்தாள்`` என்பது ஒரு சொல்.

பண் :

பாடல் எண் : 95

தூவெண் மணற்கொண்டு தோழியரும் தானுமாய்க்
காமன் உருவம் வரவெழுதிக் காமன்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 96

கருப்புச் சிலையும் மலர் அம்பும் தேரும்
ஒருப்பட்டு உடன்எழுதும் போழ்தில் விருப்பூரும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மணி ஆர்ந்த - அழகு நிறைந்த.
`வெண்மணலை இடமாகக் கொண்டு, அதன்கண் எழுதினாள்` என்க.
மங்கையர்போல நன்கு ஒப்பனை செய்து கொண்டு தோழியருடன் தெருவில் வந்தவள், `தனது அழகுக்கு ஏற்ற காதலன் மன்மதன் ஒருவனே` என்னும் எண்ணத்தினால் அவன் உருவத்தை இவள் வெண்மணலிலே எழுதிப் பார்க்க எழுதிக் கொண்டிருந்தாள்.
அதுபொழுது சிவபெருமான் தன் இயல்பிலே தான் இடப வாகனத்தின்மேல் அங்கு உலாப்போந்தான்.
அவனைக் கண்டதும் இப்பெதும்பை அவன் காமனிலும் மிக்க அழகுடையனாய் இருந்தலைக் கண்டு கரை கடந்த காதலை உடையளாய் நிலையழிந்து நின்றுவிட்டாள்.
கரும்பு + சிலை = கருப்புச் சிலை.
சிலை - வில்.
மன்மதனுடைய தேர் தென்றற் காற்று.
அஃது உருவம் இல்லதாயினும் அதன் போக்கினைச் சில கீறல்களால் எழுதிக் காட்டுதல் உண்டு.
ஒருப்பட்டு - காதலனாக ஏற்றுக் கொண்டு.
உடன்- அவனுக்குரிய பொருள்கள் பலவற்றையும் தொகுத்து.
ஊர்தல் - மீதூர்தல், `மீதூர்தற்கு ஏதுவான தீர்த்தன்` என்க.
தீர்த்தன் - பரிசுத்தன்.
வான மால் ஏறு - வானவருள் ஒருவனாகிய மாயோனாம் விடை.
வானம் - உயர்வும் ஆம்.
தான் - பெதும்பை.
`நன்று அறிவார் அமரச் சொன்ன` என்க.
அமர - யாவரும் விரும்பும் வண்ணம்.
நலம் - மகளிர்க்கு உரியன வாகச் சொல்லப்பட்ட உறுப்பிலக்கணங்கள்.
நிறை - மனம்.
தன் இயல்பில் ஓடாதவாறு நிறுத்தும் ஆற்றல்.
கை வண்டு - வளையல்.
இது முன்னர்க் கூறப்படாமையால் இப் பொழுது மற்றை அணிகலங்களுடன் அணிந்து வந்தாள் என்க.
கண் வண்டு, உருவகம்.
கலை - உடை.
நெய் விண்ட - மண நெய் பூசப்பட்ட ``நின்றொழிந்தாள்`` என்பது ஒரு சொல்.

பண் :

பாடல் எண் : 97

தேனமருங் கொன்றையந்தார்த் தீர்த்தன் சிவலோகன்
வானமால் ஏற்றின்மேல் வந்தணையத் தானமர

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 98

நன்றறிவார் சொன்ன நலந்தோற்றும் நாண்தோற்றும்
நின்றறிவு தோற்றும் நிறைதோற்றும் நன்றாகக்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 99

கைவண்டும் கண்வண்டும் ஓடக் கலைஓட
நெய்விண்ட பூங்குழலாள் நின்றொழிந்தாள் மொய்கொண்ட

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பன்னிரண்டு பதின்மூன்றாம் ஆண்டுகள் மங்கைப் பருவம், மங்கை இடம் - மங்கைப் பருவத்தை அடைந்தவள் இருக்க வேண்டிய இடம்.

பண் :

பாடல் எண் : 100

மங்கை இடம்கடவா மாண்பினாள் வானிழிந்த
கங்கைச் சுழியனைய உந்தியாள் தங்கிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பன்னிரண்டு பதின்மூன்றாம் ஆண்டுகள் மங்கைப் பருவம், மங்கை இடம் - மங்கைப் பருவத்தை அடைந்தவள் இருக்க வேண்டிய இடம்.

பண் :

பாடல் எண் : 101

அங்கை கமலம் அடிகமலம் மான்நோக்கி
கொங்கை கமலம் முகம்கமலம் பொங்கெழிலார்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மங்கையது உறுப்புக்களின் வருணனை.
நோக்கு - பார்வை.
இட்டிடை - சிறிய இடை.
வஞ்சி - கொடி.
பணைத் தோள் - பருத்த தோள்.
வேய் - மூங்கில்.
அல்குல் - (கண்ணி - 64, உரை பார்க்க) மட்டு விரி தேனோடு பூக்கள் மலர்கின்ற.
அறல் - கருமணல்.

பண் :

பாடல் எண் : 102

இட்டிடையும் வஞ்சி இரும்பணைத்தோள் வேய்எழிலார்
பட்டுடைய அல்குலும் தேர்த்தட்டு மட்டுவிரி

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 103

கூந்தல் அறல்பவளம் செய்யவாய் அவ்வாயில்
ஏய்ந்த மணிமுறுவல் இன்முத்தம் வாய்ந்தசீர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மங்கையது உறுப்புக்களின் வருணனை.
நோக்கு - பார்வை.
இட்டிடை - சிறிய இடை.
வஞ்சி - கொடி.
பணைத் தோள் - பருத்த தோள்.
வேய் - மூங்கில்.
அல்குல் - (கண்ணி - 64, உரை பார்க்க) மட்டு விரி தேனோடு பூக்கள் மலர்கின்ற.
அறல் - கருமணல்.

பண் :

பாடல் எண் : 104

வண்டு வளாய வளர்வா சிகைசூட்டிக்
கண்டி கழுத்திற் கவின்சேர்த்திக் குண்டலங்கள்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வாசிகை, வாசிகைபோல வளைத்துத் தலையில் சூடும் மாலை.
கண்டி - கழுத்தணி.

பண் :

பாடல் எண் : 105

காதுக் கணிந்து கனமே கலைதிருத்தித்
தீதில் செழுங்கோலஞ் சித்திரித்து மாதராள்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 106

பொற்கூட்டிற் பூவையை வாங்கி அதனோடும்
சொற்கோட்டி கொண்டிருந்த ஏல்வைக்கண் நற்கோட்டு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பூவை நாகணவாய்ப் புள்.
கோட்டி கொள்ளுதல்- திறம்படப் பேசுதலை மேற்கொள்ளல்.
ஏல்வை - பொழுது, கோடு - சிகரம்.

பண் :

பாடல் எண் : 107

வெள்ளி விலங்கல்மேல் வீற்றிருந்த ஞாயிறுபோல்
ஒள்ளிய மால்விடையை மேல்கொண்டு தெள்ளியநீர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

விலங்கல் - மலை.

பண் :

பாடல் எண் : 108

தாழுஞ் சடையான் சடாமகுடம் தோன்றுதலும்
வாழுமே மம்மர் மனத்தளாய்ச் சூழொளியான்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தாழ்தல் - தங்குதல்.
வாழுமே - உயிர் வாழ்வாளே! மம்மர் - மயக்கம்.

பண் :

பாடல் எண் : 109

தார்நோக்கும் தன்தாரும் நோக்கும் அவனுடைய
ஏர்நோக்கும் தன்ன தெழில்நோக்கும் பேரருளான்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அவனுடைய அழகுக்கு ஒத்த அழகுடைய வளாய் நான் இருக்கின்றேனா` என்பதை இருவர் தோற்றத்தையும் ஒப்பு நோக்கும் முறையால் ஆராய்கின்றாள்.
ஆடவர் போகமாலையே `தார்` எனப்பட, மகளிர் போகமாலை `மாலை` எனப்படுமாயினும் அதனையும் பொதுப்பட இங்கு, ``தார்`` என்றார்.
ஏர், எழில் இவை ஒருபொருட் சொற்கள்.
ஒப்பு நோக்கியபின் ஒப்புத் துணிந்தவளாய், அவன் மார்பை அணைய விரைந்து, அது கூடாமையால் பெருமூச் செறிந்தாள்.

பண் :

பாடல் எண் : 110

தோள்நோக்கும் தன்தோளும் நோக்கும் அவன்மார்பின்
நீள்நோக்கம் வைத்து நெடிதுயிர்த்து நாண்நோக்காது

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அவனுடைய அழகுக்கு ஒத்த அழகுடைய வளாய் நான் இருக்கின்றேனா` என்பதை இருவர் தோற்றத்தையும் ஒப்பு நோக்கும் முறையால் ஆராய்கின்றாள்.
ஆடவர் போகமாலையே `தார்` எனப்பட, மகளிர் போகமாலை `மாலை` எனப்படுமாயினும் அதனையும் பொதுப்பட இங்கு, ``தார்`` என்றார்.
ஏர், எழில் இவை ஒருபொருட் சொற்கள்.
ஒப்பு நோக்கியபின் ஒப்புத் துணிந்தவளாய், அவன் மார்பை அணைய விரைந்து, அது கூடாமையால் பெருமூச் செறிந்தாள்.

பண் :

பாடல் எண் : 111

உள்ளம் உருக ஒழியாத வேட்கையாம்
வெள்ளத் திடையழுந்தி வெய்துயிர்த்தாள் ஒள்ளிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

காதல் வெள்ளம் கரையிறந்ததாக அதனிடையே அகப்பட்டு ஆற்ற மாட்டாது வெப்பமாக மூச் செறிந்தாள்.

பண் :

பாடல் எண் : 112

தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்தியசீர்
வாய்ந்த மடந்தைப் பிராயத்தாள் ஏய்ந்தசீர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பதினான்காம் ஆண்டு முதல் பத்தொன்பதாம் ஆண்டு முடிய மடந்தைப் பருவம்.
தமிழின் தெய்வம் - தமிழ்த் தெய்வம்.
இஃது இனிமையும், அழகும் பற்றி வந்த உவமை.
`இன்` வேண்டா வழிச் சாரியை.
திருந்திய - பெண்மை நலம் நன்கமைந்த.
சீர் - சிறப்பு.
``ஏய்ந்த சீர்`` என்பதனைச் சிலைக்கு அடையாக்குக.

பண் :

பாடல் எண் : 113

ஈசன் சிலையும் எழில்வான் பவளமும்
சேய்வலங்கை வேலும் திரள்முத்தும் பாசிலைய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சிலை - வில், `சிறந்த வில்` என்றற்கு ``ஈசன் சிலை`` என்றார்.
``சேய் வலங்கை வேல்`` என்றதும் இது பற்றி.
சேய் - முருகன்.
வலம் - வெற்றி.
வெற்றியைத் தருவதனை `வெற்றி` என்றே உபசரித்தார்.
இனி `வலக்கை` என்பது மெலிந்து நின்றதாக உரைத்த லும் ஆம்.
மஞ்சு - மேகம்.
``மேகத்தோடு வரும் மதி`` என்றது கூந்தலைக் குறித்தற்கு.
மாமதி - நிறைமதி.
போல் அசை.
சிலை, பவளம், வேல் முத்து, வஞ்சி (கொடி), வேய் (மூங்கில்), தாமரை மொட்டு, மாமதி இவைகளை நிரலே புருவம், செவ்வாய், கண், எயிறு (பல்), நுசுப்பு (இடை), தோள், கொங்கை, முகம் இவற்றுடன் பொருத்திக் கொள்க.
சிலை முதலாக அனைத்திலும் இரண்டன் உருபு விரிக்க.
உருவம் - அழகு.
பங்கயப் போது - தாமரை மலர்.
சேவடி - சிவந்த பாதங்கள்.

பண் :

பாடல் எண் : 114

வஞ்சியும் வேயும் வளர்தா மரைமொட்டும்
மஞ்சில்வரும் மாமதிபோல் மண்டலமும் எஞ்சாப்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 115

புருவமும் செவ்வாயும் கண்ணும் எயிறும்
உருவ நுசுப்பும்மென் தோளும் மருவினிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 116

கொங்கையும் வாண்முகமு மாக்கொண்டாள் கோலஞ்சேர்
பங்கயப் போதனைய சேவடியாள் ஒண்கேழல்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சிலை - வில், `சிறந்த வில்` என்றற்கு ``ஈசன் சிலை`` என்றார்.
``சேய் வலங்கை வேல்`` என்றதும் இது பற்றி.
சேய் - முருகன்.
வலம் - வெற்றி.
வெற்றியைத் தருவதனை `வெற்றி` என்றே உபசரித்தார்.
இனி `வலக்கை` என்பது மெலிந்து நின்றதாக உரைத்த லும் ஆம்.
மஞ்சு - மேகம்.
``மேகத்தோடு வரும் மதி`` என்றது கூந்தலைக் குறித்தற்கு.
மாமதி - நிறைமதி.
போல் அசை.
சிலை, பவளம், வேல் முத்து, வஞ்சி (கொடி), வேய் (மூங்கில்), தாமரை மொட்டு, மாமதி இவைகளை நிரலே புருவம், செவ்வாய், கண், எயிறு (பல்), நுசுப்பு (இடை), தோள், கொங்கை, முகம் இவற்றுடன் பொருத்திக் கொள்க.
சிலை முதலாக அனைத்திலும் இரண்டன் உருபு விரிக்க.
உருவம் - அழகு.
பங்கயப் போது - தாமரை மலர்.
சேவடி - சிவந்த பாதங்கள்.

பண் :

பாடல் எண் : 117

வாழைத்தண் டன்ன குறங்கினாள் வாய்ந்தசீர்
ஆழித்தேர்த் தட்டனைய அல்குலாள் ஊழித்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறங்கு - துடை; ஆழித்தேர் - சக்கரத்தையுடையதேர்.
அல்குல் - (கண்ணி. 64 உரை பார்க்க.)

பண் :

பாடல் எண் : 118

திருமதியம் மற்றொன்றாம் என்று முகத்தை
உருவுடைய நாண்மீன்சூழ்ந் தாற்போல் பெருகொளிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திரு - அழகு.
மற்றொரு மதியம் - வானத்தில் இயல்பாய் உள்ள சந்திரனுக்கு வேறான மற்றொரு சந்திரன்.
இது மயக்க அணி.
நாள் மீன் - அசுவினி, பரணி முதலிய நட்சத்திரங்கள்.
`அவைகட்குக் கணவன் சந்திரன்` என்பது புராணம்.
அதனால், `அவை அங்ஙனம் மயங்கிச் சூழ்ந் தாற்போல்` என்றது தற்குறிப்பேற்ற அணி.
கண்டம் - கழுத்து.
`அணிகலங்கள் மொய்த்தமையால் (நிறைந்தமையால்) ஆரவாரம் (புகழுரை) மிகப் பெருகி` என்க.

பண் :

பாடல் எண் : 119

முத்தாரம் கண்டத் தணிந்தாள் அணிகலங்கள்
மொய்த்தார வாரம் மிகப்பெருகி வித்தகத்தால்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திரு - அழகு.
மற்றொரு மதியம் - வானத்தில் இயல்பாய் உள்ள சந்திரனுக்கு வேறான மற்றொரு சந்திரன்.
இது மயக்க அணி.
நாள் மீன் - அசுவினி, பரணி முதலிய நட்சத்திரங்கள்.
`அவைகட்குக் கணவன் சந்திரன்` என்பது புராணம்.
அதனால், `அவை அங்ஙனம் மயங்கிச் சூழ்ந் தாற்போல்` என்றது தற்குறிப்பேற்ற அணி.
கண்டம் - கழுத்து.
`அணிகலங்கள் மொய்த்தமையால் (நிறைந்தமையால்) ஆரவாரம் (புகழுரை) மிகப் பெருகி` என்க.
வித்தகம் - சதுரப்பாடு; திறமை, கள் - தேன்.
அது பூ மாலையைக் குறித்தது.
கடாம், இங்குக் கத்தூரி, இவை வேறு பொருளாம் நயம் தோற்றி நின்றன.
கலவை - சந்தனக் கலவை - கைபோதரல் - தோழியர்களால் கொண்டு வரப்படுதல்.
அவைகளைக் கொண்டு வரும் தோழியர் இவளது அருகிலும், சேய்மையிலும் நின்றதை `உள்ளும், புறம்பும் செறிவு` என்றார்.
அவர் அங்ஙனம் நின்றது இவளை நோக்கியாகலின் ``அமைத்து`` என்றார்.
காளிங்கம் - நீலமணி.
தாள் - அடிப்பாகம்.
`தாளை யுடைய தாமம்` என்க.
தாமம் - மாலை.
நெற்றியிலும் ஓர் இரத்தினமாலை கட்டுவர்.
நுதல் - நெற்றி.
`தோள் எங்கும் அப்பி` என்க.
தண் - குளிர்ச்சி.
சதுர் - பெருமை.
அது `சதிர்` என மருவி வழங்கும்.
``வண்ணம் பெற`` என்றதனால்.
சாந்து, `செஞ்சாந்து` என்க.
மட்டித்தல் - பூசுதல்.

பண் :

பாடல் எண் : 120

கள்ளும் கடாமுங் கலவையுங் கைபோந்திட்டு
உள்ளும் புறமுஞ் செறிவமைத்துத் தெள்ளொளிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 121

காளிங்கம் சோதி கிடப்பத் தொடுத்தமைத்த
தாளின்பத் தாமம் நுதல்சேர்த்தித் தோளெங்கும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 122

தண்ணறுஞ் சந்தனம்கொண் டப்பிச் சதிர்சாந்தை
வண்ணம் பெறமிசையே மட்டித்தாங் கொண்ணுதலாள்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வித்தகம் - சதுரப்பாடு; திறமை, கள் - தேன்.
அது பூ மாலையைக் குறித்தது.
கடாம், இங்குக் கத்தூரி, இவை வேறு பொருளாம் நயம் தோற்றி நின்றன.
கலவை - சந்தனக் கலவை - கைபோதரல் - தோழியர்களால் கொண்டு வரப்படுதல்.
அவைகளைக் கொண்டு வரும் தோழியர் இவளது அருகிலும், சேய்மையிலும் நின்றதை `உள்ளும், புறம்பும் செறிவு` என்றார்.
அவர் அங்ஙனம் நின்றது இவளை நோக்கியாகலின் ``அமைத்து`` என்றார்.
காளிங்கம் - நீலமணி.
தாள் - அடிப்பாகம்.
`தாளை யுடைய தாமம்` என்க.
தாமம் - மாலை.
நெற்றியிலும் ஓர் இரத்தினமாலை கட்டுவர்.
நுதல் - நெற்றி.
`தோள் எங்கும் அப்பி` என்க.
தண் - குளிர்ச்சி.
சதுர் - பெருமை.
அது `சதிர்` என மருவி வழங்கும்.
``வண்ணம் பெற`` என்றதனால்.
சாந்து, `செஞ்சாந்து` என்க.
மட்டித்தல் - பூசுதல்.
`தன் தோழியர்கள், அமர் தோழியர்கள்` என்க.
அமர்தல் - விரும்புதல்.
தவிசு - ஆசனம்.
பின்னும் ஓர் காமரம்- முன் பாடியது போகப் பின்னும் ஓர் பண்ணினை `யாழின்கண் அமைத்து` என்க.
விரும்பும் பண்கள் தோற்றுமாறு இசைகள் வேறு வேறு வகையாக எழும்படி நரம்புகளைக் கட்டுதல் வேண்டும் ஆதலின் அதனை ``அமைத்து`` என்றார்.
மன்னும் விடம் - நிலைபெற்றுள்ள விடத்தைக் கொண்டுள்ள.
வண்ணக் கண்டம் - கரிய கண்டம்.
வேதியன் - வேதத்தை ஓதுபவன்; சிவபெருமான்.
மகளிர் மடல் பாடுதல் இல்லையெனினும் பலர் அறியப் பாடாமல் தான் இருக்குமிடத்திலே தோழியர் இடையே நகை உண்டாகும்படி தான் சிவபெருமான்மேல் கொண்ட காதலால் நாண் இறந்து பாடுவாள்போலப் பொய்யாகப் பாடத் தொடங்கினாள்.
மடலாவது, ஆடவன் ஒருவன் தான் காதலித்த கன்னிகை தனக்குக் கிட்டாமையால் ஆற்றாது தான் உயிர்விடும் நிலையில் உள்ளதைத் தெருக்கள் தோறும் சென்று தெரிவித்துப் பாடுதல்.
அது நாணத்தையே அணிகலமாகக் கொண்ட மகளிர்க்கு இயல்வதில்லை.
அதனால் மகளிர் மடல் பாடியதாகத் தமிழில் இலக்கியம் இல்லை.
ஆயினும் இவள் தன் இல்லத்திற்குள் தன் தோழியர்முன் வேடிக்கை யாகச் சிவபெருமானை முன் வைத்து மடல் பாடத் தொடங்கினாள்.

பண் :

பாடல் எண் : 123

தன்அமர் தோழியர்கள் சூழத் தவிசேறிப்
பின்னும்ஓர் காமரம் யாழமைத்து மன்னும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 124

விடவண்ணக் கண்டத்து வேதியன்மேல் இட்ட
மடல்வண்ணம் பாடும் பொழுதுஈண்டு அடல்வல்ல

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈண்டு - `அவள் பாடுகின்றாள்` என்றது `இந்த நேரத்தில் கேட்டு` என்க.
அடல் - பகைவரை வெல்லுதல்.
வேல், இங்கு முத்தலை வேல்; சூலம்.
வில் மேரு மலையாகில் வில், மால் வல்லான் - மயக்கத்தைத் தர வல்லவன்.
கோலம் - அழகு - மணி - தன் கழுத்தில் உள்ள மணி - அதன் கழுத்தில் உள்ள மணி.
ஏறு - அந்த மணியினின்றும் எழுந்து எங்கும் பரவுகின்ற ஓசை.
ஆங்கு நோக்கு வாள் - அந்த ஓசை வந்த வழியைப் பார்க்கின்றவள்.
அணி - அழகு.
ஆங்கு - அப்பொழுதே.
அணி ஆர்ந்த கோட்டி - வரிசை வரிசையாய் அமர்ந்திருந்த தோழியர் கூட்டம்.

பண் :

பாடல் எண் : 125

வேல்வல்லான் வில்வல்லான் மெல்லியலார்க் கெஞ்ஞான்றும்
மால்வல்லான் ஊர்கின்ற மால்விடையின் கோல

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 126

மணியேறு கேட்டாங்கு நோக்குவாள் சால
அணிஏறு தோளானைக் கண்டாங் கணியார்ந்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தன் தோழியர்கள், அமர் தோழியர்கள்` என்க.
அமர்தல் - விரும்புதல்.
தவிசு - ஆசனம்.
பின்னும் ஓர் காமரம்- முன் பாடியது போகப் பின்னும் ஓர் பண்ணினை `யாழின்கண் அமைத்து` என்க.
விரும்பும் பண்கள் தோற்றுமாறு இசைகள் வேறு வேறு வகையாக எழும்படி நரம்புகளைக் கட்டுதல் வேண்டும் ஆதலின் அதனை ``அமைத்து`` என்றார்.
மன்னும் விடம் - நிலைபெற்றுள்ள விடத்தைக் கொண்டுள்ள.
வண்ணக் கண்டம் - கரிய கண்டம்.
வேதியன் - வேதத்தை ஓதுபவன்; சிவபெருமான்.
மகளிர் மடல் பாடுதல் இல்லையெனினும் பலர் அறியப் பாடாமல் தான் இருக்குமிடத்திலே தோழியர் இடையே நகை உண்டாகும்படி தான் சிவபெருமான்மேல் கொண்ட காதலால் நாண் இறந்து பாடுவாள்போலப் பொய்யாகப் பாடத் தொடங்கினாள்.
மடலாவது, ஆடவன் ஒருவன் தான் காதலித்த கன்னிகை தனக்குக் கிட்டாமையால் ஆற்றாது தான் உயிர்விடும் நிலையில் உள்ளதைத் தெருக்கள் தோறும் சென்று தெரிவித்துப் பாடுதல்.
அது நாணத்தையே அணிகலமாகக் கொண்ட மகளிர்க்கு இயல்வதில்லை.
அதனால் மகளிர் மடல் பாடியதாகத் தமிழில் இலக்கியம் இல்லை.
ஆயினும் இவள் தன் இல்லத்திற்குள் தன் தோழியர்முன் வேடிக்கை யாகச் சிவபெருமானை முன் வைத்து மடல் பாடத் தொடங்கினாள்.
ஈண்டு - `அவள் பாடுகின்றாள்` என்றது `இந்த நேரத்தில் கேட்டு` என்க.
அடல் - பகைவரை வெல்லுதல்.
வேல், இங்கு முத்தலை வேல்; சூலம்.
வில் மேரு மலையாகில் வில், மால் வல்லான் - மயக்கத்தைத் தர வல்லவன்.
கோலம் - அழகு - மணி - தன் கழுத்தில் உள்ள மணி - அதன் கழுத்தில் உள்ள மணி.
ஏறு - அந்த மணியினின்றும் எழுந்து எங்கும் பரவுகின்ற ஓசை.
ஆங்கு நோக்கு வாள் - அந்த ஓசை வந்த வழியைப் பார்க்கின்றவள்.
அணி - அழகு.
ஆங்கு - அப்பொழுதே.
அணி ஆர்ந்த கோட்டி - வரிசை வரிசையாய் அமர்ந்திருந்த தோழியர் கூட்டம்.

பண் :

பாடல் எண் : 127

கோட்டி ஒழிய எழுந்து குழைமுகத்தைக்
காட்டி நுதல்சிவப்ப வாய்துலக்கி நாட்டார்கள்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குழை - காதணி.
வாய் துலக்குதல் - இயல் பாகவே சிவந்திருக்கின்ற வாயை மேலும் சிவக்கும்படி தம்பலந் தின்னல்.
நுதல் - நெற்றி, அது முன்பே குங்குமத்தால் சிவந்துள்ளது.
எனவே, `நுதல் சிவப்ப வாய் துலக்கி முகத்தைக் காட்டி` என்க.
இவையெல்லாம் தனது காதற் குறிப்புத் தோன்றச் செய்தாள் ஆகலின், ``நாட்டார்கள் எல்லாரும் கண்டார்`` என்றார்.
பலரும் அறியத் தான் சிவபெருமானைக் காதலித்து நின்றமை யால், `அவன் பேரருளாளன் ஆதலின் அவனும் எனது கருத்திற்கு உட்படுவான்; ஆயினும் என் ஆயத்தார் அதற்குத் தடையாய் இல்லாமல் இசைதல் வேண்டுதல்` என்பாள், ``இங்கு ஆயம் நல்லாய்ப் படுமேற்படும்`` என்றார்.
`நல்லவாய்` என்பது ``நல்லாய்`` எனக் குறைந்து நின்றது.

பண் :

பாடல் எண் : 128

எல்லாரும் கண்டார் எனக்கடவுள் இக்காயம்
நல்லாய் படுமேற் படுமென்று மெல்லவே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குழை - காதணி.
வாய் துலக்குதல் - இயல் பாகவே சிவந்திருக்கின்ற வாயை மேலும் சிவக்கும்படி தம்பலந் தின்னல்.
நுதல் - நெற்றி, அது முன்பே குங்குமத்தால் சிவந்துள்ளது.
எனவே, `நுதல் சிவப்ப வாய் துலக்கி முகத்தைக் காட்டி` என்க.
இவையெல்லாம் தனது காதற் குறிப்புத் தோன்றச் செய்தாள் ஆகலின், ``நாட்டார்கள் எல்லாரும் கண்டார்`` என்றார்.
பலரும் அறியத் தான் சிவபெருமானைக் காதலித்து நின்றமை யால், `அவன் பேரருளாளன் ஆதலின் அவனும் எனது கருத்திற்கு உட்படுவான்; ஆயினும் என் ஆயத்தார் அதற்குத் தடையாய் இல்லாமல் இசைதல் வேண்டுதல்` என்பாள், ``இங்கு ஆயம் நல்லாய்ப் படுமேற்படும்`` என்றார்.
`நல்லவாய்` என்பது ``நல்லாய்`` எனக் குறைந்து நின்றது.

பண் :

பாடல் எண் : 129

செல்ல லுறும்சரணம் கம்பிக்கும் தன்னுறுநோய்
சொல்லலுறும் சொல்லி உடைசெறிக்கும் நல்லாகம்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``உறும்`` என்பது முதலிய பலவற்றிற்கும் `உறுவாள்` என்பதுபோலப் பொருள் உரைக்க.
சரணம் கம்பிக்கும் - கால் நடுங்குவாள்; இஃது அவன் நிலை தளர்ந்தமையைக் குறித்தது.
செறித்தல் - சரிந்து வீழாதபடி இறுகக் கட்டுதல்.
ஆகம் - மார்பு.
சிவனுடைய மார்பு.

பண் :

பாடல் எண் : 130

காண லுறும்கண்கள் நீர்மல்கும் காண்பார்முன்
நாண லுறும்நெஞ்சம் ஒட்டாது பூணாகம்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``உறும்`` என்பது முதலிய பலவற்றிற்கும் `உறுவாள்` என்பதுபோலப் பொருள் உரைக்க.
சரணம் கம்பிக்கும் - கால் நடுங்குவாள்; இஃது அவன் நிலை தளர்ந்தமையைக் குறித்தது.
செறித்தல் - சரிந்து வீழாதபடி இறுகக் கட்டுதல்.
ஆகம் - மார்பு.
சிவனுடைய மார்பு.
``நாணல் உறும் நெஞ்சம்`` பெயரெச்சத் தொடர்.
நெஞ்சம் ஒட்டாமையால் (தடுத்தலால்) தன் மார்பிலேயே தன் கையைத் தான் அணைத்துச் சிவனைத் தழுவியது பொய்யாய் இருத்த லால் `இவன் என் கைக்கு அகப்படவில்லையே` என்று சொல்லி இவ் வாறு பெரிதும் அல்லற்படுவாள்.

பண் :

பாடல் எண் : 131

புல்லலுறும் அண்ணல்கை வாரான் என் றிவ்வகையே
அல்ல லுறும்அழுந்தும் ஆழ்துயரால் மெல்லியலாள்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நாணல் உறும் நெஞ்சம்`` பெயரெச்சத் தொடர்.
நெஞ்சம் ஒட்டாமையால் (தடுத்தலால்) தன் மார்பிலேயே தன் கையைத் தான் அணைத்துச் சிவனைத் தழுவியது பொய்யாய் இருத்த லால் `இவன் என் கைக்கு அகப்படவில்லையே` என்று சொல்லி இவ் வாறு பெரிதும் அல்லற்படுவாள்.
இவ்வாறு மூழ்கு பெருந்துயரத்தால் அவள் தன்னுடைய மேனியே பொன்பூத்தமையால் கொன்றை மாலை போல ஆய்விட, தான் சிவபெருமான் அணிந்துள்ள கொன்றை மாலை யாகிய அந்தப் பொன் போலும் பொருளைப் பெறவிரும்பும் காரணத் தால் புலம்பலாயினாள்.
``கொண்டு`` என்பது மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு.

பண் :

பாடல் எண் : 132

தன்உருவம் பூங்கொன்றைத் தார்கொள்ளத் தான்கொன்றைப்
பொன்உருவங் கொண்டு புலம்புற்றாள் பின்னொருத்தி

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இவ்வாறு மூழ்கு பெருந்துயரத்தால் அவள் தன்னுடைய மேனியே பொன்பூத்தமையால் கொன்றை மாலை போல ஆய்விட, தான் சிவபெருமான் அணிந்துள்ள கொன்றை மாலை யாகிய அந்தப் பொன் போலும் பொருளைப் பெறவிரும்பும் காரணத் தால் புலம்பலாயினாள்.
``கொண்டு`` என்பது மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு.

பண் :

பாடல் எண் : 133

செங்கேழ்நல் தாமரைபோல் சீறடியாள் தீதிலா
அங்கேழ் அரிவைப் பிராயத்தாள் ஒண்கேழ்நல்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இருபது முதல் இருபத்தைந்தாம் ஆண்டு முடிய அரிவைப் பருவம்.
சீறடி - சிறிய பாதம்.
அம் - கேழ் - அழகிய நிறம்.
அஃதாவது, `நிறத்தால் அழகு பெற்றவள்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 134

திங்களும் தாரகையும் வில்லும் செழும்புயலும்
தங்கொளிசேர் செவ்வாயும் உண்மையால் பொங்கொளிசேர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திங்கள் முகம்; தாரகை (விண்மீன் நெற்றியில் அணிந்துள்ள முத்துப் பட்டம்; வில் புருவம்; புயல் (மேகம்) கூந்தல்; செவ்வாய் சிலேடை.
`செவ்வாய்` என்னும் கிரகம்; சிவந்த வாய்.
இவைகளால் வானத்தைத் தன்னிடமே விளங்கக் காட்டுவாள்.
மின் ஆர் - மின்னல் பொருந்திய; இதனை வானுக்கு அடை யாகக் கொள்க.
தன் ஆவார் - தன்னை யொப்பவர்.

பண் :

பாடல் எண் : 135

மின்ஆர்வான் காட்டும் முகவொளியாள் மெய்ம்மையே
தன்ஆவார் இல்லாத் தகைமையாள் எந்நாளும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திங்கள் முகம்; தாரகை (விண்மீன் நெற்றியில் அணிந்துள்ள முத்துப் பட்டம்; வில் புருவம்; புயல் (மேகம்) கூந்தல்; செவ்வாய் சிலேடை.
`செவ்வாய்` என்னும் கிரகம்; சிவந்த வாய்.
இவைகளால் வானத்தைத் தன்னிடமே விளங்கக் காட்டுவாள்.
மின் ஆர் - மின்னல் பொருந்திய; இதனை வானுக்கு அடை யாகக் கொள்க.
தன் ஆவார் - தன்னை யொப்பவர்.

பண் :

பாடல் எண் : 136

இல்லாரை எல்லாரும் எள்குவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பென்னும் சொல்லாலே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சொல், திருக்குறள்.
சொல்லால் - சொல் சொல்லப்படுதலால்.
இயற்கை அழகு இருப்பினும் ஆடை அணிகலங் களாகிய செயற்கையழகு இல்லாவிடில் மற்றை மகளிர் இகழ்ச்சி செய்வார்கள்` என்று கருதி அவைகளை அணிந்தாள் என்க.

பண் :

பாடல் எண் : 137

அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல்
மல்கிய சாந்தொடு பூண்புனைந்து நல்கூர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அல்குல் (கண்ணி - 64 உரை பார்க்க.) நல்கூர்தல், வறுமை எய்தல்.
அஃது இங்கே சிறுகுதலைக் குறித்தது.
இடையே - மேலும், கீழும் உள்ள உறுப்புக்கள் செழித்திருக்க அவைகளுக்கு இடையே துவண்டு மெலிய.
கண்டாள்- செய்தாள்.
என்றது, இயற்கையைச் செயற்கை போலக் கூறியது.

பண் :

பாடல் எண் : 138

இடைஇடையே உள்ளுருகக் கண்டாள் எழிலார்
நடைபெடை அன்னத்தை வென்றாள் அடியிணைமேல்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நல்கூர்தல், வறுமை எய்தல்.
அஃது இங்கே சிறுகுதலைக் குறித்தது.
இடையே - மேலும், கீழும் உள்ள உறுப்புக்கள் செழித்திருக்க அவைகளுக்கு இடையே துவண்டு மெலிய.
கண்டாள்- செய்தாள்.
என்றது, இயற்கையைச் செயற்கை போலக் கூறியது.

பண் :

பாடல் எண் : 139

பாடகம் கொண்டு பரிசமைத்தாள் பன்மணிசேர்
சூடகம் முன்கை தொடர்வித்தாள் கேடில்சீர்ப்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பரிசு அமைத்தாள் - தக்கபடி அமைத்தாள்.

பண் :

பாடல் எண் : 140

பொன்அரி மாலை தலைக்கணிந்து பூண்கொண்டு
மன்னும் கழுத்தை மகிழ்வித்தாள் பொன்னனாள்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பொன் அரி மாலை - பொன்னால் அரிப்புத் தொழில் அமையச் செய்த மாலை.
இது பெரும்பான்மை மார்பில் தொங்கவிடுவது.
சிறுபான்மை தலையிலும் சுற்றப்படும்.
கழுத்துக்கு மகிழ்ச்சியில்லையாயினும் அதனைப் பொலிவித்தலை மகிழ் வித்ததாகக் கூறினார்.
பொன் அன்னாள் - இலக்குமி போன்றவள்.

பண் :

பாடல் எண் : 141

இன்னிசை வீணையை வாங்கி இமையவர்தம்
அண்ணல்மேல் தான்இட்ட ஆசையால் முன்னமே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வாங்கியது தோழியரிடமிருந்து.
இமையவர்தம் அண்ணல் சிவபெருமான்.
`அவன்மேல் தான் முன்னமே இட்ட ஆசையால்` என்க.
இட்ட - வைத்த.

பண் :

பாடல் எண் : 142

பாடல் தொடங்கும் பொழுதில் பரஞ்சோதி
கேடிலா மால்விடைமேல் தோன்றுதலும் கூடிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 143

இன்னிசையும் இப்பிறப்பும் பேணும் இருந்தமிழும்
மன்னிய வீணையையுங் கைவிட்டுப் பொன்னனையீர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பிறப்பைக் கைவிட்டமையாவது, தன் மாட்டு வந்தவனை ஏற்றல் அல்லது, தான் பிறனிடம் செல்லாமையாகிய தனது வழக்கத்தைக் கைவிட்டமை.
``தமிழ்`` என்றது தமிழ் இசையை.

பண் :

பாடல் எண் : 144

இன்றன்றே காண்ப தெழில்நலங் கொள்ளேனேல்
நன்றன்றே பெண்மை நமக்கென்று சென்றவன்தன்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எழில் நலம் காண்பது இன்றன்றே - எழுச்சியுள்ள எனது அழகின் சிறப்பை அளந்தறியும் நாள் இன்றன்றோ? அஃதாவது, `எனது அழகு சிவபெருமானது உள்ளத்தைக் கவரும் ஆற்றலுடையதா, இல்லையா - என்பதை அளந்தறிய வேண்டிய நாள் இன்றேயாம்` என்றாள்.
கொள்ளேனேல் - அவனது உள்ளத்தை யான் கவர்ந்து கொள்ளாவிடில்.
பெண்மை நமக்கு நன்று அன்று - நம்முடைய பெண்மை நலம் நமக்கு உதவுவதன்று.
சென்றவன் - உலாப் போந்தவன் சிவபெருமான்.

பண் :

பாடல் எண் : 145

ஒண்களபம் ஆடும் ஒளிவாள் முகத்திரண்டு
கண்களபம் ஆடுவபோல் கட்டுரைத்தும் ஒண்கேழ்நல்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஒண்களபம் - சிவபெருமானது திருமேனி யிலிருந்து காற்றிற் பறந்து திருநீறும் சந்தனச் சாந்தின் துகளும், `இவற் றில் ஆடும்` என்க.
ஆடும் - மூழ்குவாள்.
கண், அரிவை தன் கண்கள்.
(களவு) என்பது அம் பெற்று `களவம்` என வருவது எதுகை நோக்கி, ``களபம்`` எனத் திரிந்து நின்றது.
களவு ஆடுவதுபோல் - நோக்கியும் நோக்காதது போல, ``கண் களவு கொள்ளுதல் சிறு நோக்கம்`` * என்றார் திருவள்ளுவரும்.
கட்டுரைத்தல் - தன் குறிப்பினை வெளிப்படுத்தல்.

பண் :

பாடல் எண் : 146

கூந்தல் அவிழ்க்கும் முடிக்கும் கலைதிருத்தும்
சாந்தம் திமிரும் முலையார்க்கும் பூந்துகிலைச்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கலை - உடை.
திமிர்தல் - பூசுதல்.
ஆர்த்தல் - கச்சினால் இறுகக் கட்டுதல்.
துகில் - உயர்ந்த உடை.

பண் :

பாடல் எண் : 147

சூழும் அவிழ்க்கும் தொழும்அழும் சோர்துயருற்
றாழும் அழுந்தும் அயாவுயிர்க்கும் சூழொளிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சூழும் - சுற்றுவாள்.
அயாவுயிர்தத்தல் - பெரு மூச்செறிதல்.

பண் :

பாடல் எண் : 148

அங்கை வளைதொழுது காத்தாள் கலைகாவாள்
நங்கை இவளும் நலம்தோற்றாள் அங்கொருத்தி

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அங்கை தொழுது வளை காத்தாள் - மற்ற வருடன் கூடத் தானும் அகங்கைகளைக் குவித்துக் கும்பிட்டமையால் வளைகள் `கழன்று வீழாதபடி காத்துக் கொண்டாள்.
ஆயினும் உடையை வீழாமல் காத்தாள் இல்லை.
நலம் தோற்றாள் - அழகினை இழந்தாள்.

பண் :

பாடல் எண் : 149

ஆரா அமுதம் அவயவம் பெற்றனைய
சீரார் தெரிவைப் பிராயத்தாள் ஓரா

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இருபத்தாறாவது முதல் முப்பத்தொன்றாம் ஆண்டு முடியத் தெரிவைப் பருவம்.
ஆர்தல் - நிரம்புதல்.
ஆரா அமுதம் - சுவை மிகுதியால் தெவிட்டாத அமுதம்.
அவயவம், உறுப்புக்கள் பலவும் நல்லனவாய் அமைந்த உடம்பு.
இஃது ஆகுபெயர், உடம்பு, பெண் உடம்பு, `அமுதம் உடம்பு பெற்றது போல்வாள்` என்றது இல் பொருள் உவமை.
சீர்மை- செம்மை.
ஓரா - பொருள் உணர வாராத மழலை - என்க.
`மழலையின் மருள் ஓசை வாய்ச் சொல்` என மாறுக.
அஃதா வது, `மழலை போலும் ஓசையையுடைய வாய்ச் சொல்` என்பதாம்.
இஃது இனிது பொருள் விளங்குதல் இன்மையும் இனிமை யுடைமையும் பற்றி வந்த உவமை.
`மங்கையரும், மடந்தையரும் வாய் திறந்து பேச மாட்டார்கள்.
பேரிளம் பெண் இனிது விளங்க எடுத்துப் பேசுவாள்.
தெரிவை இரண்டும் இன்றி இடைநிலையதாகப் பேசுவாள்` என்பதாம்.
``மருள்``, உவம உருபு.
`இத்தன்மைத்தான சொல் விடியற் காலத்தை ஒக்கும்; அஃதாவது பொருள் விளங்கியும், விளங்காதும் நிற்கும்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 150

மருளோசை யின்மழலை வாய்ச்சொலால் என்றும்
இருள்சீர் புலரியே ஒப்பாள் அருளாலே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஓரா - பொருள் உணர வாராத மழலை - என்க.
`மழலையின் மருள் ஓசை வாய்ச் சொல்` என மாறுக.
அஃதா வது, `மழலை போலும் ஓசையையுடைய வாய்ச் சொல்` என்பதாம்.
இஃது இனிது பொருள் விளங்குதல் இன்மையும் இனிமை யுடைமையும் பற்றி வந்த உவமை.
`மங்கையரும், மடந்தையரும் வாய் திறந்து பேச மாட்டார்கள்.
பேரிளம் பெண் இனிது விளங்க எடுத்துப் பேசுவாள்.
தெரிவை இரண்டும் இன்றி இடைநிலையதாகப் பேசுவாள்` என்பதாம்.
``மருள்``, உவம உருபு.
`இத்தன்மைத்தான சொல் விடியற் காலத்தை ஒக்கும்; அஃதாவது பொருள் விளங்கியும், விளங்காதும் நிற்கும்` என்பதாம்.
அருள், இங்குக் காதற் குறிப்பு.
உச்சி - உச்சிப் போது; நண்பகல்.
உருவம் - சாயல் ``வெப்பம் தீர்ந்து`` என்பது, அதன் எதிர்மறையாகி `குளிர்ச்சியைத் தந்து` எனப் பொருள் தந்தது.
இவ்வெச்சம் ``செம்மை`` என்புழித் தொக்கு நின்ற `உடைமை` என்னும் வினைக் குறிப்புப் பெயர் கொண்டது.

பண் :

பாடல் எண் : 151

வெப்பம் இளையவர்கட் காக்குதலால் உச்சியோ
டொப்பமையக் கொள்ளும் உருவத்தாள் வெப்பந்தீர்ந்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அருள், இங்குக் காதற் குறிப்பு.
உச்சி - உச்சிப் போது; நண்பகல்.
உருவம் - சாயல் ``வெப்பம் தீர்ந்து`` என்பது, அதன் எதிர்மறையாகி `குளிர்ச்சியைத் தந்து` எனப் பொருள் தந்தது.
இவ்வெச்சம் ``செம்மை`` என்புழித் தொக்கு நின்ற `உடைமை` என்னும் வினைக் குறிப்புப் பெயர் கொண்டது.

பண் :

பாடல் எண் : 152

தந்தளிர்போற் சேவடியும் அங்கையும் செம்மையால்
அந்திவான் காட்டும் அழகினாள் அந்தமில்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பாதமும், அகங்கையும் தளிர் போன்றுள்ளன` என்பதாம்.
செம்மை - செம்மை நிறம்.
அந்தம் - எல்லை.
சீர் - அழகு.
இதுகாறும் ஒருத்தியே பல சிறுபொழுதுகளைப் போலத் தோன்றுதலைக் கூறினார்; இனிப் பெரும் பொழுதுகளைப் போலத் தோன்றுதலைக் கூறுவார்.

பண் :

பாடல் எண் : 153

சீரார் முகம்மதியம் ஆதலால் சேயிழையாள்
ஏரார் இரவின் எழில்கொண்டாள் சீராரும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அந்தம் - எல்லை.
சீர் - அழகு.
இதுகாறும் ஒருத்தியே பல சிறுபொழுதுகளைப் போலத் தோன்றுதலைக் கூறினார்; இனிப் பெரும் பொழுதுகளைப் போலத் தோன்றுதலைக் கூறுவார்.

பண் :

பாடல் எண் : 154

கண்ணார் பயோதரமும் நுண்ணிடையும் உண்மையால்
தண்ணிளங் காரின் சவிகொண்டாள் வண்ணஞ்சேர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பயோதரம்`` என்பது `கொங்கை` எனவும், `மேகம்` எனவும் இருபொருளைத் தரும் ஆதலால் அது சிலேடையா யிற்று.
ஆகவே, ``கண் ஆர்`` என்பதை, `வானமாகிய இடத்து நிறைந்த` என மேகத்திற்கும், `கண்ணிற்கு நிறைந்த`, அல்லது `மார்பிடம் நிறைந்த` எனக் கொங்கைக்கும் பொருத்திக்கொள்க.
கண், கொங்கை யின் கண்ணுமாம்.
``இடை`` என்பதற்கு, `மின்னல்போலும் இடை` என உரைக்க.
கார் - கார்ப்பருவம்.
அதற்கு இளமையாவது தொடக்க மும், நடுவும்.
சவி - ஒளி; என்றது தோற்றத்தை.
வண்ணம் - அழகு.

பண் :

பாடல் எண் : 155

மாந்தளிர் மேனி முருக்கிதழ்வாய் ஆதலால்
வாய்ந்த இளவேனில் வண்மையாள் மாந்தர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மேனி மாந்தளிர்; வாய் முருக்கிதழ்` என மாற்றி யுரைக்க.
இவை இரண்டும் இளவேனிற் பருவத்து உருவாவன.
சிறு பொழுதுகள் பலவும் பெரும்பான்மை பற்றிக் காரும், வேனிலுமாக அடக்கப்பட்டன.
`மாந்தருள்` என உருபு விரிக்க.

பண் :

பாடல் எண் : 156

அறிவுடையீர் நின்மின்கள் அல்லார்போம் என்று
பறையறைவ போலும் சிலம்பு முறைமையால்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அறிவுடையோராயின் ஆவி காப்பர் ஆதலின், அவர்களை ``நின்மின்`` எனவும், அல்லாதார் ஆவி விடுவர் ஆதலின், அவர்களை, ``போம்`` எனவும் பறையறைவதாகக் கூறினார்.
இது தற்குறிப்பேற்றம் `அறைவ போலும் சிலம்பினைச் சேர்த்தினாள்` என்க.
தேர் அல்குல் - தேர் போலும் அல்குல்.
ஓராது - (அளவு கடந்து அகலின் இடம் இன்றாம்` என்பதனை) ஆராயாது, அகலல் உறாது என்று - `அகலல் தகாது ஆதலின் அடங்குக` என்று கருதித் துகிலையும் மேகலையும் சுற்றிக் கட்டினாள் - என்க.

பண் :

பாடல் எண் : 157

சீரார் திருந்தடிமேல் சேர்த்தினாள் தேர்அல்குல்
ஓரா தகலல் உறாதென்று சீராலே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 158

அந்துகிலும் மேகலையும் சூழ்ந்தாள் அணிமுலைகள்
மைந்தர் மனங்கவரும் என்பதனால் முந்துறவே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அறிவுடையோராயின் ஆவி காப்பர் ஆதலின், அவர்களை ``நின்மின்`` எனவும், அல்லாதார் ஆவி விடுவர் ஆதலின், அவர்களை, ``போம்`` எனவும் பறையறைவதாகக் கூறினார்.
இது தற்குறிப்பேற்றம் `அறைவ போலும் சிலம்பினைச் சேர்த்தினாள்` என்க.
தேர் அல்குல் - தேர் போலும் அல்குல்.
ஓராது - (அளவு கடந்து அகலின் இடம் இன்றாம்` என்பதனை) ஆராயாது, அகலல் உறாது என்று - `அகலல் தகாது ஆதலின் அடங்குக` என்று கருதித் துகிலையும் மேகலையும் சுற்றிக் கட்டினாள் - என்க.
முந்துறவே - இவைகட்கெல்லாம் முன்ன தாகவே.
அடைய - முழுதும்.
பூட்டு உறீஇ - உள் அடக்கி நிறுத்துதலை உறுவித்து.
தொடி - தோள்வளை.
ஏவி - செய்வித்து.
`தோள்களை மெலிய ஒட்டாமல் செய்ய மாட்டாத தொடிகளை, `செய்யும்` என அறியாமையாற் கருதி ஏவினாள்` என்றபடி.
தோள்கள் மெலிந்தவழி அவை கழன்றொழிவன அல்லது காக்க மாட்டாமை அறிக.

பண் :

பாடல் எண் : 159

பூங்கச்சி னால்அடையப் பூட்டுறீஇப் பொற்றொடியால்
காம்பொத்த தோளிணையைக் காப்பேவி வாய்ந்தசீர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முந்துறவே - இவைகட்கெல்லாம் முன்ன தாகவே.
அடைய - முழுதும்.
பூட்டு உறீஇ - உள் அடக்கி நிறுத்துதலை உறுவித்து.
தொடி - தோள்வளை.
ஏவி - செய்வித்து.
`தோள்களை மெலிய ஒட்டாமல் செய்ய மாட்டாத தொடிகளை, `செய்யும்` என அறியாமையாற் கருதி ஏவினாள்` என்றபடி.
தோள்கள் மெலிந்தவழி அவை கழன்றொழிவன அல்லது காக்க மாட்டாமை அறிக.

பண் :

பாடல் எண் : 160

நற்கழுத்தை நல்ஆரத் தால்மறைத்துக் காதுக்கு
விற்பகரும் குண்டலங்கள் மேவுவித்து மைப்பகரும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஆரம் - கண்ட சரம்.
மறைத்தது, ஆடவர் வருந் தாமைப் பொருட்டு.
வில் பகர்தல் - ஒளி தருதல்.
`மை யாகப் பகரும்` என ஆக்கம் விரித்து, `மழை (மேகம்) என்று சொல்லப்படும் கண்` என உரைக்க.
காவி - குவளை மலர்.
கதம் - கோபம்.
தாவிய அஞ்சனம் - பரந்த மை.
``அகலல் உறாதென்று சூழ்ந்தாள், மனம் கவரும் என்பதனால் பூட்டுறீஇ, காப்பு ஏவி, மறைத்து, கதம் தணிப்பாள் போல`` என்பன வும் தற்குறிப்பேற்றங்கள்.

பண் :

பாடல் எண் : 161

காவியங் கண்ணைக் கதம்தணிப்பாள் போலத்தன்
தாவிய அஞ்சனத்தை முன்னூட்டி யாவரையும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மை யாகப் பகரும்` என ஆக்கம் விரித்து, `மழை (மேகம்) என்று சொல்லப்படும் கண்` என உரைக்க.
காவி - குவளை மலர்.
கதம் - கோபம்.
தாவிய அஞ்சனம் - பரந்த மை.
``அகலல் உறாதென்று சூழ்ந்தாள், மனம் கவரும் என்பதனால் பூட்டுறீஇ, காப்பு ஏவி, மறைத்து, கதம் தணிப்பாள் போல`` என்பன வும் தற்குறிப்பேற்றங்கள்.

பண் :

பாடல் எண் : 162

ஆகுலம் ஆக்கும் அழகினாள் அன்னமும்
கோகிலமும் போலும் குணத்தினா ளாகிப்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஆகுலம் - மனக் கவலை.
``குணம்`` என்றது நடையையும், குரலையும்.

பண் :

பாடல் எண் : 163

பலகருதிக் கட்டிக் கரியவாய்க் கோடி
அலர்சுமந்து கூழைய வாகிக் கலைகரந்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பல கருதிக் கட்டுதல் - குழல், பனிச்சை, அளகம் முதலிய பல வடிவங்களாகக் கட்டுதல்.
கோடி - மிகப் பல.
கூழை - கடைகுவிதல்.
கலை - கை வினைத் திறம்.
உள் யாதும் இன்றிப் புறம்.
கமழ்தல் - கமழும் பொருள் எதுவும் இல்லாமல் தானே இயற்கையில் கமழ்தல்.
கீழ்த் தாழ்தல் - நீண்டு தொங்குதல்.
கள் - தேன்.
ஆவி - அகிற்புகை.

பண் :

பாடல் எண் : 164

துள்யாதும் இன்றிப் புறங்கமழ்ந்து கீழ்த்தாழ்ந்து
கள்ஆவி நாறும் கருங்குழலாள் தெள்ளொளிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பல கருதிக் கட்டுதல் - குழல், பனிச்சை, அளகம் முதலிய பல வடிவங்களாகக் கட்டுதல்.
கோடி - மிகப் பல.
கூழை - கடைகுவிதல்.
கலை - கை வினைத் திறம்.
உள் யாதும் இன்றிப் புறம்.
கமழ்தல் - கமழும் பொருள் எதுவும் இல்லாமல் தானே இயற்கையில் கமழ்தல்.
கீழ்த் தாழ்தல் - நீண்டு தொங்குதல்.
கள் - தேன்.
ஆவி - அகிற்புகை.

பண் :

பாடல் எண் : 165

செங்கழுநீர்ப் பட்டுடுத்துச் செங்குங் குமம்எழுதி
அங்கழுநீர்த் தாமம் நுதல்சேர்த்திப் பொங்கெழிலார்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

செங்கழுநீர்ப் பட்டு - செங்கழுநீர்ப் பூப்போலும் பட்டு.
குங்குமத்தால் எழுதுதல் மார்பிலும், தோளிலும்.
தாமம் - மாலை.
நுதல் - நெற்றி.

பண் :

பாடல் எண் : 166

பொற்கவற்றின் வெள்ளிப் பலகை மணிச்சூது
நற்கமைய நாட்டிப் பொரும்பொழுதில் விற்பகரும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கவறு - சூதாடு கருவி.
மணி - சூதுக்கு உரிய காய்கள்.
நற்கு - நன்கு பொருது - சூது போர் ஆடுதல்.

பண் :

பாடல் எண் : 167

தோளான் நிலைபேறு தோற்றம் கேடாய்நின்ற
தாளான் சடாமகுடம் தோன்றுதலும் கேளாய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நிலைபேறு - காத்தல் தொழில்.
தோற்றம் - படைத்தல் தொழில்.
கேடு - அழித்தல் தொழில்.
`இம்மூன்றையும் சிவனது திருவடியே செய்யும்` என்பது பற்றி.
`இவையாய் நின்ற தாளான்`` என்றார்.
``போற்றி யருளுக நின் ஆதியாம் பாத மலர்`` * என்னும் திருவாசகத்தையும் காண்க.
சிவனது சத்தியை அவனது திருவடியாக உபசரித்தல் வழக்கு.
கண்ணி - 169, 170 - இல் உள்ள ``சொலற்கரிய தேவாதி தேவன் சிவனாயின், தேன் கொன்றைப் பூவார் அலங்கல் அருளாது போவானேல்`` என்பதை இங்குக் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 168

நாணார் நடக்க நலத்தார்க் கிடையில்லை
ஏணார் ஒழிக எழிலொழிக பேணும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நாண், `ஏண்` - என்னும் அஃறிணைப் பொருள்கள் `ஆர்` புணர்ந்து உயர்திணை போலச் சொல்லப்பட்டன.
கேளாய நாண் - மகளிர்க்குச் சிறந்த நட்பாகிய நாண், ஏண் - வலிமை.
நலத்தார் - அழகினை உடைய மகளிர் என இவ்வாறு தன்னையே பிறர்போலக் கூறினார்.
அழகுடைய மகளிர்க்கு இடையில்லாமை இயல்பாதலின் எழுந்து சென்று அவனைக் காண இயலாது.
அதனால் அவனே வலிந்து தனது கொன்றை மாலையை எனக்கு ஈயக்கடவன்.
அங்ஙனம் அவன் தான் கடவதை உணர்ந்து கொன்றை மாலையை ஈயாதே அப்பாற் போய் விடுவானாயின், எனது நாண் ஒழியட்டும்; வலிமை ஒழியட்டும் அழகு ஒழியட்டும்; `இவைகளை யெல்லாம் ஒழியாது காப்பாற்றும் குலமகளிர்கள் நாங்கள்` என்று சொல்லிக் கொள்பவர்கள் எனக்கு உறவாகாது ஒழியட்டும்; அந்தக் குல மகளி ரால் குற்றம் உடையவர்களாகச் சொல்லப்படுகின்ற என் போன்ற மகளிரே, என்னுடன் வாருங்கள்; `போதும், போதும்` என்று துயரத் தால் வருந்துகின்றவர்களே, அத்துயரம் நீங்க வேண்டுமாயின் அவனை நினையுங்கள் - என்று இன்ன பல சொல்லி அங்கலாய்த்து அலம் - போதும் அலத்தீர் - போதும் என்று சொல்கின்றவர்களே.
`அலந்தீர்` என்பதும் பாடம்.

பண் :

பாடல் எண் : 169

குலத்தார் அகன்றிடுக குற்றத்தார் வம்மின்
நலத்தீர் நினைமின்நீர் என்று சொலற்கரிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நாண், `ஏண்` - என்னும் அஃறிணைப் பொருள்கள் `ஆர்` புணர்ந்து உயர்திணை போலச் சொல்லப்பட்டன.
கேளாய நாண் - மகளிர்க்குச் சிறந்த நட்பாகிய நாண், ஏண் - வலிமை.
நலத்தார் - அழகினை உடைய மகளிர் என இவ்வாறு தன்னையே பிறர்போலக் கூறினார்.
அழகுடைய மகளிர்க்கு இடையில்லாமை இயல்பாதலின் எழுந்து சென்று அவனைக் காண இயலாது.
அதனால் அவனே வலிந்து தனது கொன்றை மாலையை எனக்கு ஈயக்கடவன்.
அங்ஙனம் அவன் தான் கடவதை உணர்ந்து கொன்றை மாலையை ஈயாதே அப்பாற் போய் விடுவானாயின், எனது நாண் ஒழியட்டும்; வலிமை ஒழியட்டும் அழகு ஒழியட்டும்; `இவைகளை யெல்லாம் ஒழியாது காப்பாற்றும் குலமகளிர்கள் நாங்கள்` என்று சொல்லிக் கொள்பவர்கள் எனக்கு உறவாகாது ஒழியட்டும்; அந்தக் குல மகளி ரால் குற்றம் உடையவர்களாகச் சொல்லப்படுகின்ற என் போன்ற மகளிரே, என்னுடன் வாருங்கள்; `போதும், போதும்` என்று துயரத் தால் வருந்துகின்றவர்களே, அத்துயரம் நீங்க வேண்டுமாயின் அவனை நினையுங்கள் - என்று இன்ன பல சொல்லி அங்கலாய்த்து அலம் - போதும் அலத்தீர் - போதும் என்று சொல்கின்றவர்களே.
`அலந்தீர்` என்பதும் பாடம்.

பண் :

பாடல் எண் : 170

தேவாதி தேவன் சிவனாயின் தேன்கொன்றைப்
பூவார் அலங்கல் அருளாது போவானேல்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 171

கண்டால் அறிவன் எனச்சொல்லிக் கைசோர்ந்து
வண்டார்பூங் கோதை வளந்தோற்றாள் ஒண்டாங்கு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்டால் - (பின்பு ஒருஞான்று அவனை நான் காணாமலா போய்விடுவேன்?) கண்டால்.
அறிவன் - அவன் இவ் வாறு கடவது கடந்த பழிக்குத் தீர்வு காணும் வழியை நான் அறிவேன்.
என்று இவ்வாறெல்லாம் வாய்ப் பறைசாற்றினாளே யன்றி, உண்மையில்.
கை சோர்ந்து வளம் தோற்றாள் - செயலற்று வீழ்ந்து, தன் பெண்மை வளத்தை யெல்லாம் முற்ற இழந்துவிட்டாள்.
முப்பத்திரண்டு முதல் நாற்பதாவது ஆண்டு முடியப் பேரிளம்பெண் பருவம்.
ஒள் தாங்கு - அழகைக் கொண்டிருக் கின்ற.
பணி மொழி - பணிந்த மொழி.

பண் :

பாடல் எண் : 172

பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள்
பண்ணமரும் இன்சொற் பணிமொழியாள் மண்ணின்மேல்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முப்பத்திரண்டு முதல் நாற்பதாவது ஆண்டு முடியப் பேரிளம்பெண் பருவம்.
ஒள் தாங்கு - அழகைக் கொண்டிருக் கின்ற.
பணி மொழி - பணிந்த மொழி.

பண் :

பாடல் எண் : 173

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே வுளவென்று பண்டையோர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கட்டுரை`` * என்றது திருக்குறளை மேம் படுத்தமை, அவ்வுரைக்கு இலக்கியமாய் இலங்கினமை.
மண்டலம் - வட்டம்.
உகிர் - நகம்.
`அவை கண்ணாடிபோல விளங்கின` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 174

கட்டுரையை மேம்படுத்தாள் கண்ணாடி மண்டலம்போல்
விட்டிலங்கு நல்லுகிர்சேர் மெல்விரலாள் கட்டரவம்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கட்டுரை`` * என்றது திருக்குறளை மேம் படுத்தமை, அவ்வுரைக்கு இலக்கியமாய் இலங்கினமை.
மண்டலம் - வட்டம்.
உகிர் - நகம்.
`அவை கண்ணாடிபோல விளங்கின` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 175

அஞ்சப் பரந்தகன்ற அல்குலாள் ஆய்நலத்த
வஞ்சிக் கொடிநுடங்கு நுண்ணிடையாள் எஞ்சாத

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அரவம் அஞ்சியது, தனது படத்தை வெல்லுதல் பற்றி ``பரந்தகன்ற`` என்பது மீமிசைச் சொல்.
`கொடிபோல நுடங்கும் இடை` என்க.
நுடங்குதல் - துவளுதல்.
எஞ்சாத - மாற்றுக் குறையாத.

பண் :

பாடல் எண் : 176

பொற்செப் பிரண்டு முகடு மணிஅழுத்தி
வைத்தன போல வளர்ந்தே நீதி ஒத்துச்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

செப்பு - கிண்ணம்.
முகடு - உச்சி.
கிண்ணத்தைக் கவிழ்த்து வைக்கும்பொழுது அதன் அடிப்புறம் உச்சி யாய் விளங்கும்.
`அதன்கண் மணி அழுத்தி வைத்தன போல` என்க.
மணி - நீலமணி.
ஏந்தி - அண்ணாந்து.
ஒத்து - இரண்டும் இணை யொத்து.
சுணங்கு, திதலை.
இவை தேமலின் வகை.
சூழ்போந்து - முழுதும் படர்ந்து.
``கண்டார்`` என்றது ஆடவரை.
அணங்கு - நோய்.
காதல் நோய்.
``அமுதம்`` என்பதற்கு.
`அமுதக் குடம்` என உரைக்க.
அதுகண்டார்க்கு மகிழ்ச்சியைத் தருவது.
இணங்கு ஒத்து - ஆடவர் இணங்குதற்குப் பொருந்தி.
கோலங்கட்கெல்லாம் கோலம் - அழகுகட் கெல்லாம் அழகு.
``நாகிள`` என்பது மீமிசைச் சொல்.
வேய் - மூங்கில்.
அங்கை - அகங்கை.

பண் :

பாடல் எண் : 177

சுணங்கும் சிதலையுஞ் சூழ்போந்து கண்டார்க்
கணங்கும் அமுதமுமாய்த் தோன்றி இணங்கொத்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 178

கொங்கையாள் கோலங்கட் கெல்லாம்ஓர் கோலமாம்
நங்கையாள் நாகிளவேய்த் தோளினாள் அங்கையால்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

செப்பு - கிண்ணம்.
முகடு - உச்சி.
கிண்ணத்தைக் கவிழ்த்து வைக்கும்பொழுது அதன் அடிப்புறம் உச்சி யாய் விளங்கும்.
`அதன்கண் மணி அழுத்தி வைத்தன போல` என்க.
மணி - நீலமணி.
ஏந்தி - அண்ணாந்து.
ஒத்து - இரண்டும் இணை யொத்து.
சுணங்கு, திதலை.
இவை தேமலின் வகை.
சூழ்போந்து - முழுதும் படர்ந்து.
``கண்டார்`` என்றது ஆடவரை.
அணங்கு - நோய்.
காதல் நோய்.
``அமுதம்`` என்பதற்கு.
`அமுதக் குடம்` என உரைக்க.
அதுகண்டார்க்கு மகிழ்ச்சியைத் தருவது.
இணங்கு ஒத்து - ஆடவர் இணங்குதற்குப் பொருந்தி.
கோலங்கட்கெல்லாம் கோலம் - அழகுகட் கெல்லாம் அழகு.
``நாகிள`` என்பது மீமிசைச் சொல்.
வேய் - மூங்கில்.
அங்கை - அகங்கை.

பண் :

பாடல் எண் : 179

காந்தட் குலம்பழித்தாள் காமவேள் காதலாள்
சாந்தம் இலங்கும் அகலத்தாள் வாய்ந்துடனே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

காந்தள் - காந்தள் மலர்.
ஒரு மலரை மட்டுமன்று.
அம்மலரின் குலம் முழுவதையுமே பழித்தாள்.
காதலாள் - காதலுக்கு ஏற்றவள்.
சாந்தம் - சந்தனம்.
அகலம் - மார்பு.

பண் :

பாடல் எண் : 180

ஏய்ந்து குவிந்து திரண்டு மறிந்திருபால்
தேய்ந்து துடித்தச் செழும்பவளம் காய்ந்திலங்கு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரண்டும் ஏய்ந்து குவிந்து - இரண்டு இதழ்களும் ஒன்று சேர்ந்து குவிந்து.
மறிந்து - பின் நீங்கி.
(இங்ஙனம் செயற்பட்டு) திரண்டு - நடுவிடம் திரண்டு.
இருபால் தேய்ந்து - கடையிருபக்கமும் சிறுகி.
துடித்து - துடித்தலைச் செய்து.
செழும் பவளம் காய்ந்து இலங்கி - செம்மையான பவழத்தைக் கோபித்து விளங்கி.
முத்தமும் - பற்களும்.
தேனும் - மொழியும்.
(இவையிரண் டும் உருவகம்) பொதிந்து - நிரம்பி.
திறை - கப்பம்.
`திறைகொள்ளல்` என்பது.
`தன்வழிப்படுத்தல்` என்னும் பொருட்டாய், ``முனிவரை`` என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று.
உம்மை சிறப்பு.
இதனால் ஏனை ஆடவரைத் திறை கொள்ளல் சொல்ல வேண்டாவாயிற்று.

பண் :

பாடல் எண் : 181

முத்தமும் தேனும் பொதிந்து முனிவரையும்
சித்தம் திறைகொள்ளும் செவ்வாயாள் ஒத்து

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரண்டும் ஏய்ந்து குவிந்து - இரண்டு இதழ்களும் ஒன்று சேர்ந்து குவிந்து.
மறிந்து - பின் நீங்கி.
(இங்ஙனம் செயற்பட்டு) திரண்டு - நடுவிடம் திரண்டு.
இருபால் தேய்ந்து - கடையிருபக்கமும் சிறுகி.
துடித்து - துடித்தலைச் செய்து.
செழும் பவளம் காய்ந்து இலங்கி - செம்மையான பவழத்தைக் கோபித்து விளங்கி.
முத்தமும் - பற்களும்.
தேனும் - மொழியும்.
(இவையிரண் டும் உருவகம்) பொதிந்து - நிரம்பி.
திறை - கப்பம்.
`திறைகொள்ளல்` என்பது.
`தன்வழிப்படுத்தல்` என்னும் பொருட்டாய், ``முனிவரை`` என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று.
உம்மை சிறப்பு.
இதனால் ஏனை ஆடவரைத் திறை கொள்ளல் சொல்ல வேண்டாவாயிற்று.

பண் :

பாடல் எண் : 182

வரிகிடந் தஞ்சனம் ஆடி மணிகள்
உருவம் நடுவுடைய வாகிப் பெருகிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வரி - செவ்வரிகள்.
அஞ்சனம் ஆடி - மையி னுள் முழுகி.
மணிகள் - கண்மணிகள்.
`மணிகளின் உருவம்` என்க.
``சலஞ்சலம்`` என்பது `சலம் + சலம்` என இரு மொழியாய் முறையே `நீர், வஞ்சனை` என இருபொருளையும் `சலஞ்சலம்` என ஒருமொழி யாய் `ஒருவகைச் சங்கு` என வேறு ஒரு பொருளையும் தருதலால் சிலேடை.
வஞ்சனை, ஆடவரை நோக்காதது போல நோக்குதல்.
மகளிர் கண்களைக் கருமையும் விசாலமும், அலைவும் பற்றிக் கட லோடு ஒப்புமை கூறுதற்கு ஏற்ப, அவை சலஞ்சலமும் உடையவாயின என நயம்படக் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 183

தண்ணங் கயலுஞ் சலஞ்சலமும் தோன்றுதலால்
வண்ணங் கடலனைய வாட்கண்ணாள் ஒண்ணிறத்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வரி - செவ்வரிகள்.
அஞ்சனம் ஆடி - மையி னுள் முழுகி.
மணிகள் - கண்மணிகள்.
`மணிகளின் உருவம்` என்க.
``சலஞ்சலம்`` என்பது `சலம் + சலம்` என இரு மொழியாய் முறையே `நீர், வஞ்சனை` என இருபொருளையும் `சலஞ்சலம்` என ஒருமொழி யாய் `ஒருவகைச் சங்கு` என வேறு ஒரு பொருளையும் தருதலால் சிலேடை.
வஞ்சனை, ஆடவரை நோக்காதது போல நோக்குதல்.
மகளிர் கண்களைக் கருமையும் விசாலமும், அலைவும் பற்றிக் கட லோடு ஒப்புமை கூறுதற்கு ஏற்ப, அவை சலஞ்சலமும் உடையவாயின என நயம்படக் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 184

குண்டலஞ்சேர் காதினாள் கோலக் குளிர்மதிய
மண்டலமே போலும் மதிமுகத்தாள் வண்டலம்ப

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மதிமுகம், வினைத்தொகை.
அலம்ப - ஒலிக்க.
நாறுதல் - இயற்கையில் நாறுதல்.
வாசிகை - நெற்றிப் பட்டம்.

பண் :

பாடல் எண் : 185

யோசனை நாறும் குழலாள் ஒளிநுதல்மேல்
வாசிகை கொண்டு வடிவமைத்தாள் மாசில்சீர்ப்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மதிமுகம், வினைத்தொகை.
அலம்ப - ஒலிக்க.
நாறுதல் - இயற்கையில் நாறுதல்.
வாசிகை - நெற்றிப் பட்டம்.

பண் :

பாடல் எண் : 186

பாதாதி கேசம் பழிப்பிலாள் பாங்கமைந்த
சீதாரி கொண்டுதன் மெய்புகைத்தாள் மாதார்ந்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பாதாதி கேசம் - அடிமுதல் முடிவரையில், ``கேசம்`` என்பதன் பின் `அந்தம்` என்பது தொகுக்கப்பட்டது.
பழிப்பின்மை, அதன் எதிர்மறையாகிய புகழ் உடைமையைக் குறித்தது.
சீத அரி - குளிர்ந்த புகை.
குளிர்ச்சி.
இங்கு நறுமணத்தின் மேற்று.

பண் :

பாடல் எண் : 187

பண்கவரும் சொல்லார்பல் லாண்டேத்தப் பாயொளிசேர்
வெண்கவரி வெள்ளத் திடையிருந்து ஒண்கேழ்நல்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மாது ஆர்ந்த - அழகு நிறைந்த.
இதனை, ``சொல்லார்`` என்பதன் பொருளாகிய தோழியர்க்கு அடையாக்குக.
`பல்லாண்டினால் ஏத்த` என்க.
``பல்லாண்டு`` என்பது காரிய ஆகுபெயராய், அதனை உணர்த்தும் சொல்லைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 188

கண்அவனை அல்லாது காணா செவியவன
தெண்ணருஞ்சீர் அல்ல திசைகேளா அண்ணல்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இந்த இரு கண்ணிகளையும் ஒன்றிணைக்க ஒரு நேரிசை வெண்பாவாம்.
இவ்வெண்பாவை இவள் தானே பாடினாளாக நாயனார் அருளிச் செய்தார்.
`அழல் அங்கை கொண்டான் மாட்டு அன்பு அஃது` என இயைத்து முடிக்க.
``அஃது`` என்பது அத்தன்மைத் தாய் இருத்தலைக் குறித்தது.
ஆல், அசை.
`அஃதான்று` என்பது பாடம் அன்று.
`இசையின் கண்கேளா என உருபு விரித்துரைக்க.

பண் :

பாடல் எண் : 189

கழலடி யல்லது கைதொழா அஃதால்
அழலங்கைக் கொண்டான்மாட் டன்புஎன் றெழிலுடைய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இந்த இரு கண்ணிகளையும் ஒன்றிணைக்க ஒரு நேரிசை வெண்பாவாம்.
இவ்வெண்பாவை இவள் தானே பாடினாளாக நாயனார் அருளிச் செய்தார்.
`அழல் அங்கை கொண்டான் மாட்டு அன்பு அஃது` என இயைத்து முடிக்க.
``அஃது`` என்பது அத்தன்மைத் தாய் இருத்தலைக் குறித்தது.
ஆல், அசை.
`அஃதான்று` என்பது பாடம் அன்று.
`இசையின் கண்கேளா என உருபு விரித்துரைக்க.

பண் :

பாடல் எண் : 190

வெண்பா விரித்துரைக்கும் போழ்தில் விளங்கொளிசேர்
கண்பாவு நெற்றிக் கறைக்கண்டன் விண்பால்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 191

அரிஅரணஞ் செற்றாங் கலைபுனலும் பாம்பும்
புரிசடைமேல் வைத்த புராணன் எரிஇரவில்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அரி - காற்று `விண்பால் காற்றுப் போல விரைந்து செல்கின்ற அரணம்` என்க.
இவை திரிபுரம்.
ஆங்கு - அது போல.
`இரவில் எரி ஆடும் இறைவன்` என்க.

பண் :

பாடல் எண் : 192

ஆடும் இறைவன் அமரர்குழாம் தற்சூழ
மாட மறுகில் வரக்கண்டு கேடில்சீர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அரி - காற்று `விண்பால் காற்றுப் போல விரைந்து செல்கின்ற அரணம்` என்க.
இவை திரிபுரம்.
ஆங்கு - அது போல.
`இரவில் எரி ஆடும் இறைவன்` என்க.

பண் :

பாடல் எண் : 193

வண்ணச் சிலம்படி மாதரார் தாம்உண்ட
கண்ணெச்சில் எம்மையே ஊட்டுவான் அண்ணலே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சிலம்படியையுடைய மாதாரார்` என்க.
மால் - மயக்கம்.
நொந்தாள் போல் - வெறுத்தாள் போல.
``கை சோர்ந்து`` என்பதில் கை, இடைச் சொல்.
மட்டு - தேன்.
இவரும் - கொப்புளிக்கின்ற.

பண் :

பாடல் எண் : 194

வந்தாய் வளைகவர்ந்தாய் மாலும் அருந்துயரும்
தந்தாய் இதுவோ தகவுஎன்று நொந்தாள்போல்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 195

கட்டுரைத்துக் கைசோர்ந்து அகமுருகி மெய்வெளுத்து
மட்டிவரும் பூங்கோதை மால்கொண்டாள் கொட்டிமைசேர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சிலம்படியையுடைய மாதாரார்` என்க.
மால் - மயக்கம்.
நொந்தாள் போல் - வெறுத்தாள் போல.
``கை சோர்ந்து`` என்பதில் கை, இடைச் சொல்.
மட்டு - தேன்.
இவரும் - கொப்புளிக்கின்ற.
``கொட்டு இமை சேர் பெண்`` என்றது, `மானுடப் பெண் இனம்` என்றபடி.
மஞ்சு - மேகம்.
குடுமி, மாளிகைகளின் சிகரம்.
`வீற்றிருந்த.
போந்த` என்னும் பெயரெச்சங்கள் அடுக்கி, ``தெரு`` என்னும் ஒரு பெயர் கொண்டன.
``தெரு ஆரவாரம் பெரிது`` என இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது.
ஈற்றில் நிற்கும் இவ்வெண்பாப் பிற்காலத்தவரால் சேர்க்கப் பட்டதாகக் கருதப்படுகின்றது.
(சென்னைச் சைவ சித்தாந்த சமாசப் பதிப்பு - 1940.)
`பக்குவ வேறு பாட்டாற் பலவகைப்படும் நல்லோர் யாவரும் பெருமானது காட்சியால் தம் வசம் இழப்பர்` என்பது இப்பிரபந்தத்தின் உள்ளுறை.
திருக்கைலாய ஞான உலா முற்றிற்று.

பண் :

பாடல் எண் : 196

பண்ணாரும் இன்சொற் பணைப்பெருந்தோள் செந்துவர்வாய்ப்
பெண்ஆர வாரம் பெரிதன்றே விண்ணோங்கி

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 197

மஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலா வீற்றிருந்த
செஞ்சடையான் போந்த தெரு.

பெண்ணீர்மை காமின் பெருந்தோளி ணைகாமின்
உண்ணீர்மை மேகலையும் உள்படுமின் - தெண்ணீர்க்
காரேறு கொன்றையந்தார்க் காவாலி கட்டங்கன்
ஊரேறு போந்த துலா.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கொட்டு இமை சேர் பெண்`` என்றது, `மானுடப் பெண் இனம்` என்றபடி.
மஞ்சு - மேகம்.
குடுமி, மாளிகைகளின் சிகரம்.
`வீற்றிருந்த.
போந்த` என்னும் பெயரெச்சங்கள் அடுக்கி, ``தெரு`` என்னும் ஒரு பெயர் கொண்டன.
``தெரு ஆரவாரம் பெரிது`` என இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது.
ஈற்றில் நிற்கும் இவ்வெண்பாப் பிற்காலத்தவரால் சேர்க்கப் பட்டதாகக் கருதப்படுகின்றது.
(சென்னைச் சைவ சித்தாந்த சமாசப் பதிப்பு - 1940.)
`பக்குவ வேறு பாட்டாற் பலவகைப்படும் நல்லோர் யாவரும் பெருமானது காட்சியால் தம் வசம் இழப்பர்` என்பது இப்பிரபந்தத்தின் உள்ளுறை.
திருக்கைலாய ஞான உலா முற்றிற்று.

பண் :

பாடல் எண் : 1

சொல்லும் பொருளுமே தூத்திரியும் நெய்யுமா
நல்லிடிஞ்சில் என்னுடைய நாவாகச் - சொல்லரிய
வெண்பா விளக்கா வியன்கயிலை மேலிருந்த
பெண்பாகற் கேற்றினேன் பெற்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பெற்று`` என்பதை ``விளக்கா`` என்பதன்பின் கூட்டுக.
`ஆக` என்னும் உருவக உருபு ஈறு குறைந்து நின்றது.
வெண்பாவை விளக்காகக் கூறியது புற இருளைப் போக்கும் விளக்குப் போல் அக இருளாகிய அஞ்ஞானத்தை நீக்குதல் பற்றி.
அதனால், இப்பிரபந்தத்தால் பெறும் பயன் அஞ்ஞான இருள் நீங்க, மெய்ஞ்ஞான ஒளியைப் பெறுதலாயிற்று.
இடிஞ்சில் - அகல்.
எரிகின்ற திரிக்கு முதல் நெய்யாதல்போல விளங்குகின்ற சொல்லுதல் முதல் பொருளாதல் பற்றி அவற்றை முறையே திரி நெய்களாகவும், நெய்யிற் பொருந்தி எரியும் திரிக்கு நிலைக்களன் அகலாதல் போலப் பொருளை விளக்கும் சொல்லுக்குநிலைக்களன் நாவாதல் பற்றி அதனை அகலாகவும் திரி, நெய், அகல் இம்மூன்றா னும் தோன்றுவது (ஒளிர்வது) விளக்காதல் போலச் சொல், பொருள், நா இம்மூன்றானும் தோன்றுவது இப்பிரபந்த வெண்பாக்கள் ஆதல் பற்றி அவற்றை விளக்காகவும் உருவகித்தார்.
சிவனுக்குச் செய்யும் திருப்பணிகளுள் திருவிளக்கேற்றும் பணி சிறப்புடைத்து.
எனினும் புற இருளை நீக்கும் விளக்கை ஏற்றுதலிலும் அகஇருளை நீக்கும் இவ்விளக்கை ஏற்றியது மிகச் சிறந்த பணியாதலையறிக.
வியல் - அகலம்.
அஃது உரிச் சொல் ஆதலின், அதன் ஈற்று லகரம் னகரமாய்த் திரிதல் புறநடையாற் பெறப்படும்.

பண் :

பாடல் எண் : 2

பெற்ற பயன்இதுவே யன்றே பிறந்தியான்
கற்றவர்கள் ஏத்துஞ்சீர்க் காளத்திக் - கொற்றவர்க்குத்
தோளாகத் தாடரவம் சூழ்ந்தணிந்த அம்மானுக்
காளாகப் பெற்றேன் அடைந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`யான் பிறந்து பெற்ற பயன் இதுவே` என மாற்றி, அதனை இறுதியிற் கூட்டுக.
`அம்மானையடைந்து அவனுக்கு ஆளாகப் பெற்றேன்` என்க.
கொற்றவர் - அரசர்; உடையவர்.
``ஆடு அரவம்``, வினைத்தொகை.
``சூழ்ந்து`` என்பதன்பின் `இருக்க` என ஒரு சொல் வருவிக்க.
அன்றி, ``சூழ்ந்து`` என்பதனைப் பிறவினை யாகக் கோடலும் ஆம்.
ஆகம் - உடம்பு.
அது முதலாகு பெயராய் அதன் உறுப்பைக் குறித்தது.
`ஆடு அரவத்தைத் தோளாகிய ஆகத்தில் சூழ்ந்து இருக்க அணிந்த அம்மான்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 3

அடைந்துய்ம்மின் அம்மானை உம்ஆவி தன்னைக்
குடைந்துண்ண எண்ணியவெங் கூற்றங்கு - அடைந்துநும்
கண்ணுளே பார்க்கும் பொழுது கயிலாயத்
தண்ணலே கண்டீர் அரண்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அவ்வம்மானை அடைந்து, உய்ம்மின்` எனச் சுட்டு வருவித்து மாற்றி, இறுதிக்கண் கூட்டி யுரைக்க.
``அடைந்து`` என்றது, `அதற்கு முன்னே அடைந்து` என்றபடி.
எனவே, `அதற்குமுன்னே` என்பது சொல்லெச்சமாம்.
குடைதல் உள்ளகத்துப் பற்றின்றி நீங்க வாங்குதல்.
உண்ணுதல், அழித்தலைக் குறிக்கும் இலக்கணைச் சொல் அங்கு - உண்ணுதற்குரிய காலத்தில்.
``நுங்கண்` என்பதில் கண், ஏழன் உருபு.
`எண்ணிய கூற்று, எண்ணியதனை முடிக்க உள்ளிடத்தைப் பார்க்கும் என்க.
கண்டீர், முன்னிலையசை.
அரண் - பாதுகாப்பு.

பண் :

பாடல் எண் : 4

அரணம் ஒருமூன்றும் ஆரழலாய் வீழ
முரணம்பு கோத்த முதல்வன் - சரணமே
காணுமால் உற்றவன்றன் காளத்தி கைதொழுது
பேணுமால் உள்ளம் பெரிது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஆர் அழல் - தணித்தற்கு அரிய நெருப்பு.
முரண் - வலிமை.
சரணம் - பாதம்.
காணும் மால் - காண எழுந்த மயக்கம் - பித்து; பேரவா பேணும் - மறவாது நினைக்கும்.
`உள்ளம் பெரிது பேணும்` என இயைக்க ஆல், அசை.

பண் :

பாடல் எண் : 5

பெரியவர் காணீர்என் உள்ளத்தின் பெற்றி
தெரிவரிய தேவாதி தேவன் - பெரிதும்
திருத்தக்கோர் ஏத்தும் திருக்கயிலைக் கோனை
இருத்தத்தான் போந்த திடம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பெரியவர் - பெரியவர்களே, (சிவனடியார்களே) இஃது அண்மை விளி.
காணீர் - அறிமின் இதனை இறுதிக்கண் கூட்டுக.
இருத்துதல் - இருக்கவைத்தல் ``இடம் போந்தது`` என மாற்றுக.
போந்தது - அமையப் பெற்றது.
`திருக்கயிலைக் கோனை இருத்துதற்கு மட்டுமே இடம் அமையப் பெற்றது; மற்றொன்றை இருத்த இடம் அமையப் பெறவில்லை; இஃது என் உள்ளத்தின் பெற்றி; காணீர்` என வினை முடிக்க.
பெற்றி - தன்மை.
`சிவபெருமானைத் தவிரப் பிறிதொன்ற நினையாத தன்மையுடைத்து` என நெஞ்சின் தன்மையைக் குறிப்பால் வியந்தவாறு.
பிறிதொன்றற்கு இடம் அமையப் பெறாமையைக் குறை போலக் கூறினமையின்.
இது பழிப்பதுபோலப் புகழ்த்திறம் புனைந்ததாம்.
பெரிதும் தக்கோர் - மிகவும் தக வாய்க்கப் பெற்றவர்.
திரு - திருவருள்.
`திரு பெரிதும் தக்கோர்` என மாறிக் கூட்டுக.
``திருத்தக்கோர் ஏத்தும்`` என்றமையால், முன்னர், ``தெரிவரிய`` என்றது.
திருவாய்க்கப் பெறாதவரை நோக்கியாயிற்று.

பண் :

பாடல் எண் : 6

இடப்பாகம் நீள்கோட் டிமவான் பயந்த
மடப்பாவை தன்வடிவே யானால் - விடப்பாற்
கருவடிசேர் கண்டத்தெம் காளத்தி ஆள்வார்க்
கொருவடிவே அன்றால் உரு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

விடப்பால் - நஞ்சு பொருந்திய பகுதி.
`விடப் பாலாய்` என ஆக்கம் வருவிக்க.
வடி - வடிவு; கடைக் குறை.
``பாகம்`` என்பது ஆகுபெயராய், பாகமாகிய வடிவையே குறித்தது.
`இடப்பாகமாகிய வடிவம் பாவை வடிவேயானால், காளத்தி ஆள்வார்க்கு உரு ஒருவடிவே யன்று` (இருவடிவு) என்பதாம்.
இமம் - பனி.
அஃது ஆகு பெயராய், அதனை உடைய மலையைக் குறித்தது.
நீள் கோடு - உயர்ந்த சிகரங்கள்.
இது `பனி` என்னும் ஆகுபெயரைச் சிறப்பியாது, அதன் பொருளைச் சிறப்பித்தலின், ``நீள் கோட்டு இமம்`` என்றது, இரு பெயரொட்டு ஆகுபெயர், அல்லது பின்மொழியாகுபெயர்.
இம வான் - இமமலையைத் தனதாக உடையவன்; மலையரையன்.
மடம்- இளமை.
தன், சாரியை.
``ஆனால்`` என்பது தெளிவின்கண் வந்தது.

பண் :

பாடல் எண் : 7

உருவு பலகொண் டுணர்வரிதாய் நிற்கும்
ஒருவன் ஒருபால் இருக்கை - மருவினிய
பூக்கையிற்கொண் டெப்பொழுதும் புத்தேளிர் வந்திறைஞ்சும்
மாக்கயிலை என்னும் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கொண்டு`` - என்பது, `கொள்ளுதலால்` எனக் காரணப் பொருளில் வந்த செய்தென் எச்சம் ``அரிது`` என்பது அப் பண்பின்மேல் நின்று ஆகுபெயராய் அதனை உடையானைக் குறித்தது.
பல்வேறு நிலைகளில் பல்வேறு வடிவங்களுடன் தோன்றுதலால், அவனை, இன்ன உரு உடையன்` என அறுதியிட்டுணர்தல் அரிது` என்பதாம்.
பால் - இடம்.
`ஒருபால் ஆக` என ஆக்கம் விரிக்க.
இருக்கை - இருக்குமிடம்.
ஒருபாலாக இருக்கை - என்றும் நீங்காது நிலையாய் இருக்குமிடம்.
மரு - நறுமணம்.
`கையில்` என்பது `கயில்` எனப் போலியாய் வந்தது.

பண் :

பாடல் எண் : 8

மலைவரும்போல் வானவரும் தானவரும் எல்லாம்
அலைகடல்வாய் நஞ்செழல்கண் டஞ்சி - நிலைதளரக்
கண்டமையால் தண்சாரற் காளத்தி ஆள்வார்நஞ்
சுண்டமையால் உண்டிவ் வுலகு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மலைவு அரும்போர் - வேறு இரு திறத்தினர் செய்தற் கரிய போர்.
அதனையுடையார் வானவரும், தானவரும்.
`மாலை வரும் போல்` என்பது பாடம் அன்று.
`வானவரும், தானவரும் ஆகிய எல்லாரும்` என்க.
எனவே எஞ்சினார் ஒருவரும் இல்லையாயிற்று.
``எல்லாம் அஞ்சி நிலை தளர` என்றது, உலகம் நிலையாது அழியும் நிலையாமையைக் கண்ட காரணத்தால் அவர்கள்மேல் அருள் மீக்கூரச் சிவபெருமான் நஞ்சினை உண்டான்` என்றற்கு, ``கண்டமையால் நஞ்சு உண்டமையால்`` என்றார்.
`காளத்தி ஆள்வார் நஞ்சு உண்டமையாலே இவ்வுலகு உளதாயிற்று` என்பது இனிது விளங்குதற்பொருட்டு முன் இரண்டு அடிகளைக் கூறினார்.
``உலகு`` என்றது உயிர்த் தொகுதியை `உண்டாயிற்று` என ஆக்கம் வருவிக்க.
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.
என உலகத்தின் நிலைபேற்றிற்கு கண்ணோட்டத்தினைக் காரணமாகக் கூறிய திருவள்ளுவர்,
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண்.
எனக் கண்ணோட்டத்தினைச் சால்பாகிய பாரத்தைத் தாங்கும் தூண்களுள் ஒன்றாகக் கூறி,
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.
என, `சான்றோர் தனது சான்றாண்மையைக் கைவடின் உலகம் நிலை கலங்கிவிடும்` எனக் கூறியதையும், `கண்ணோட்டத்தின் மேல் எல்லை நண்பர் பெயக் கண்டும் நஞ்சினை உண்டு அமைதலே` எனக் கூறியதையும் ஊன்றியுணர்வார்க்கு இவ்வாசிரியர், ``காளத்தி ஆள்வார் நஞ்சு உண்டமையால் உண்டிவ் வுலகு`` எனக் கூறியது சிறிதும் வியப்பினைத் தராது.
`சிவபெருமானது திருவருளானே உலகம் உள்ளது` என்பது இவ்வெண்பாவின் ஆழ்ந்த பொருள்.

பண் :

பாடல் எண் : 9

உலக மனைத்தினுக்கும் ஒண்ணுதல்மேல் இட்ட
திலக மெனப்பெறினும் சீசீ - இலகியசீர்
ஈசா திருக்கயிலை எம்பெருமான் என்றென்றே
பேசா திருப்பார் பிறப்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``எம்பெருமான்`` என்றதும், ``ஈசா`` என்றதுபோல `எம்பெருமானே` என விளியேயாம்.
அடுக்குப் பன்மை பற்றி வந்தது.
பேசுதல், இங்குத் துதித்தல்.
`துதியா திருப்பார் பிறப்புப் பிறவகையில் எல்லாம் உலகில் சிறந்து விளங்கிற்றாயினும் கண்ணிலா முகம்போல அருவருக்கப் படுவதேயாம்` என்றபடி.
`சீசீ எனப்படுவதே` என ஒரு சொல் வருவித்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 10

பிறப்புடையர் கற்றோர் பெருஞ்செல்வர் மற்றும்
சிறப்புடைய ரானாலும் சீசீ - இறப்பில்
கடியார் நறுஞ்சோலைக் காளத்தி ஆள்வார்
அடியாரைப் பேணா தவர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பிறப்பு - குலம்.
அது தலைமை பற்றி மேற் குலத்தைக் குறித்தது.
கற்றோர் - மிகக் கற்றவர்.
``சீசீ`` என்பதற்கு, மேல் உரைத்த வாறு உரைக்க.
இறப்பு - உயர்வு.
`தன்னின் உயர்ந்ததில்லாத காளத்தி யாகிய தலம்` என்க.
கடி - நறுமணம்.
நறு - நல்ல.

பண் :

பாடல் எண் : 11

அவரும் பிறந்தாராய்ப் போவார்கொல் ஆவி
எவரும் தொழுதேத்தும் எந்தை - சிவமன்னு
தேக்குவார் சோலைத் திருக்கயிலை ஏத்தாதே
போக்குவார் வாளா பொழுது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சிலர்` என்னும் தோன்றா எழுவாய் வருவித்து, `பொழுது வாளா போக்குவார்; அவரும் பிறந்தாராய், ஆவிபோவார் கொல்`- என இயைத்து முடிக்க.
``ஆவி போவார்`` என்றது, ``இறப்பர்` என்னும் பொருட்டாய், `இறத்தற்கே பிறந்தான்போலும்` எனப் பொருள் தந்தது.
``பெயர்த்தும் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி இறக் கின்றாரே`` என்னும் அப்பர் திருமொழியை இங்கு ஒப்பிட்டு நோக்குக.
கொல், ஐயம் இன்றாயினும் உள்ளது போலக் கூறினமை யின் ஐயப் பொருட்டு.
``அவரும்`` என்னும் உம்மை, `ஏத்துவாரோடு` என இறந்தது தழுவிற்று.
சிவம் - மங்கலம்.
தேக்கு, ஒரு வகை மரம்.
வார் நீண்ட.

பண் :

பாடல் எண் : 12

வாளா பொழுது கழிக்கின்றார் மானுடவர்
கோளர்கொல் அந்தோ கிறிபட்டார் - கீளாடை
அண்ணற் கணுக்கராய்க் காளத்தி யுள்நின்ற
கண்ணப்ப ராவார் கதை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மானுடவர்`` என்பதை முதலிற் கொள்க.
பொழுது- கிடைக்கப் பெற்றுள்ள காலம், `அதனை வாளா கழிக்கின்றார்; அந்தோ! கிறிப்பட்டார்; கண்ணப்பராவார் கதை கேளார்கொல்` என இயைத்து முடிக்க.
காலம் இல்லாமற் போகவில்லை; கேட்டலைச் செய்தல் அரிதன்று; ஆயினும் கேட்டுப் பயனடைகின்றிலர்; கிறி - பொய்; உலக வாழ்க்கை.
`கிறிக்கண்பட்டார்` என ஏழாவது விரிக்க.
அந்தோ, இரக்க இடைச் சொல், ``ஆவார்`` என்பது எழுவாய் வேற்றுமைச் சொல் லுருபு.
``ஆவார்`` என்ற எதிர்காலம் முக்காலத்திற்கும் பொதுவாய் நின்றது.
`ஒருபோதும் கேளார்போலும்` எனப் பொருள் தந்து நிற்ற லின், ஐயப் பொருட்டு, `கண்ணப்பர் கதையைக் கேட்டலாகிய சிறு முயற்சியைச் செய்து பெரும்பயன் பெறலாய் இருக்க.
ஆறறிவு படைத்த மக்களிற் பலர் அதனைச் செய்யாது காலத்தை வீணே கழிக்கின்றனர்` என இரங்கியவாறு.
கீள் - அரைநாண் அளவாகக் கட்டும் சீலை.
`கீளாகிய ஆடை` என்க.

பண் :

பாடல் எண் : 13

கதையிலே கேளீர் கயிலாயம் நோக்கிப்
புதையிருட்கண் மாலோடும் சென்று - சிதையாச்சீர்த்
தீர்த்தன்பால் பாசுபதம் பெற்றுச் செருக்களத்தில்
பார்த்தன்போர் வென்றிலனோ பண்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பண்டு பார்த்தன் இருட்கண் கயிலாயம் நோக்கி மாலோடும் போய்த் தீர்த்தன்பால் பாசுபதம் பெற்றுச் செருக்களத்தில் வென்றிலனோ! (அதனைக்) கதையிலே கேளீர் என இயைத்து முடிக்க.
கதை, பாரதக் கதை.
பார்த்தன் (அருச்சுனன்) முதற்கண் பெற்ற பாசுபதாத்திரத்தை இந்திரன் பொருட்டாக, `நிவாத கவசர், கால கேயர்` - என்னும் அசுரர்மேல் ஏவி அவர்களை அழித்ததனால் அவ் அத்திரம் மீண்டு கயிலாயத்திற்குச் சென்றுவிட, மறுபடியும் அவன் பதின்மூன்றாம் நாட்போர் முடிந்தபின் இரவில் கண்ணனுடன் கயிலைக்குச் சென்று சிவபெருமானை வணங்கி அவ்அத்திரத்தைப் பெற்று வந்து, பதின்மூன்றாம் நாட்போரில் தான் செய்த சபதப்படியே, தன்மகன் அபிமன்னுவைக் கொன்ற சயத்திரதனைப் பதினாலாம் நாள் சூரியன் மறைவதற்குள் கொன்று வெற்றி பெற்றான்.
இக்கதையே இவ் வெண்பாவிற் குறிக்கப்பட்டது.
அருச்சுனன் சயத்திரதனைக் கொன்றதில் ஓர் அதிசயம் உண்டு.
அருச்சுனன் செய்த சபதத்தைக் கேட்டுச் சயத்திரதன் தந்தை, `தன் மகனை நாளைப் பகலுக்குள் எப்படியும் அருச்சுனன் கொன்று விடுவான்; அவனுக்குச் சிவன், மால் இருவர் துணைகளும் உண்டு` என்று அஞ்சி, சமந்த பஞ்சக மடுவில் இறங்கி, `என் மகன் தலையைத் தரையில் எவன் வீழ்த்துகின்றானோ அவன் தலை அப்பொழுதே சுக்கு நூறாய் வெடித்துச் சிதறுக` என மந்திரம் செபித்துக் கொண்டிருந்தான் இறுதி நிலையில் அருச்சுனன் சயத்திரதன் தலையை அம்பினால் வீழ்த்த முயன்ற பொழுது, கண்ணன், `இவன் தலையை வீழ்த்துதல் மட்டும் உனக்கு வெற்றியாகாது; அந்தத் தலை மடுவில் செபம் செய்து கொண்டிருக்கும் இவன் தந்தை கையில் போய்ச் சேர வேண்டும்` என்றான்.
அருச்சுனன் அப்பொழுது பாசுபதாத்திரத்தை எடுத்து மந்திரித்துத் தன் கருத்தை முடிக்க வேண்டி ஏவ, அது சயத்திரன் தலையைக் கொய்து கொண்டுபோய் கண்ணைமூடிக் கொண்டு செபம் செய்யும் அவன் தந்தை கையில் சேர்த்தது.
அவன் `ஏதோ பொருள்` என்று அந்தத் தலையைத் தரையிலே விடுத்தான்.
அதனால், அவனது மந்திர செபம் அவனுக்கே பலிக்க, அவன் தலை சுக்கு நூறாய் வெடித்துச் சிதறியது.
இச்செயல் பாசுபதம் இல்லையேல் அருச்சுன னால் செய்திருக்க முடியாது அதனையே, ``பாசுபதம் பெற்றுப் பார்த்தன் போர் வென்றிலனோ பண்டு`` என இவ்வாசிரியர் சிறந் தெடுத்து மொழிந்தார்.
`பெருமானை வணங்குவோர் செயற்கரிய செயலையும் செய்ய வல்லராவர்` என்பது இதன் கருத்து.
புதை யிருள் - மிக்க இருள்.
மால், கண்ணன்.
தீர்த்தன் - பரிசுத்தன்; சிவபெருமான்.
பார்த்தன் - அருச்சுனன்.

பண் :

பாடல் எண் : 14

பண்டு தொடங்கியும் பாவித்தும் நின்கழற்கே
தொண்டு படுவான் தொடர்வேனைக் - கண்டுகொண்
டாளத் தயாஉண்டோ இல்லையோ சொல்லாயே
காளத்தி யாய்உன் கருத்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பண்டு`` என்றது இளமைக் காலத்தை.
`தொடர்ந்து பாவித்தும்` என ஒருசொல் வருவிக்க.
பாவித்தல் - நினைத்தல்.
இளமை தொட்டே இடைவிடாது நினைத்து வருதலை இவ்வாறு கூறினார்.
உம்மைகள் எண்ணும்மைகள்.
தொடர்தல் - பற்றி நிற்றல்.
``கண்டுகொண்டு`` என்பதில் கொள்.
தற்பொருட்டுப் பொருண்மை விகுதி - அதனால், `பிறர் வலிந்து காட்டாது, நீயே கண்டு` என்றாதா யிற்று `வலிந்து காட்டின் தயா இல்லையாகும்` என்பது பற்றி, `நீயே கண்டு கொண்டு ஆள வேண்டு` என்றார்.
``சொல்லாயே`` என்பதை இறுதியிற் கூட்டுக.
ஏகாரம் இரண்டனுள் முன்னது பிரிநிலை.
பின்னது அசை.

பண் :

பாடல் எண் : 15

கருத்துக்குச் சேயையாய்க் காண்தக்கோர் காண
இருத்தி திருக்கயிலை என்றால் - ஒருத்தர்
அறிவான் உறுவார்க் கறியுமா றுண்டோ
நெறிவார் சடையாய் நிலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``காண் தக்கோர் காண`` எனப் பின்னர் வருதலால், முன்னர், ``கருத்துக்கு`` என்றது `காணத் தகாதார் கருத்துக்கு` என்றதா யிற்று.
தகுதி அன்பு.
``காண்டற் கரிய கடவுள் கண்டாய்;
கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்.
`` * என்ற அப்பர் திருமொழியையும் காண்க.
இருத்தி - இருக்கின்றாய் `திருக்கயிலைக்கண்` என ஏழாவது இறுதிக்கண் தொக்கது.
`அறிவான் உறுவார் ஒருத்தர்க்கு` எனப் பின்முன்னாக வைத்து, உருபினை மாறிக் கூட்டுக.
அறிவான் - அறிதற்கு.
உறுவார் - முயல்வார், ``நிலை அறியு மாறு உண்டோ` என முன்னே கூட்டி முடிக்க.
``நெறி`` என்பது, ``சடை`` என்பதனோடு, `நெறித்த` என இறந்தகால வினைத்தொகைப் பொருட்டாய்த் தொக்கது.
நெறித்தல் - மேடும், பள்ளமுமாய், நீண்டு வளர்தல்.
வார் - நீண்ட, உரிச்சொல்.
``கடையாய்`` என்பது, முன்னிலை வினைக் குறிப்புப் பெயர்.
`சடையாயது நிலை` என ஆறாவது விரிக்க.
`நிலையை` என இரண்டாவது இறுதிக்கண் தொக்கது.
தகுதியில்லார்க்கு ஓரிடத்தும் காணப்படாது, தகுதியுடை யார்க்கும் திருக்கயிலையிலே காணப்படுகின்றாய்.
என்றால், `இவ்வுலகிலே உன்னைக் கண்டுவிடலாம்` என நினைதல் எங்ஙனம் கூடும் - என்பதாம்.

பண் :

பாடல் எண் : 16

நிலையில் பிறவி நெடுஞ்சுழியிற் பட்டுத்
தலைவ தடுமாறு கின்றேன் - தொலைவின்றிப்
போந்தேறக் கைதாராய் காளத்திப் புத்தேளிர்
வேந்தேஇப் பாசத்தை விட்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``புத்தேளிர் வேந்து`` என்பது, `சிவன்` என்னும் ஒரு சொல் தன்மைத்தாய் நின்றது.
``தலைவ`` என்பதனையும் ``வேந்தே`` என்பதன் பின்னர்க் கூட்டுக.
நிலை இல் பிறவி - ஒன்றாய் நில்லாது, பலவாய் விரைவில் மாறுபட்டு வரும் பிறவி.
நெடுமை, பெருமை குறித்தது.
சுழி - சுழல்.
தொலைவு இன்றி - அழிவு இல்லையாம்படி.
`கரை` என்பது வருவித்து, `கரை போந்து ஏற` என்க.
நீரில் வீழ்ந் தாரைக் கரையில் நிற்போர் கைகொடுத்தே கரையேற்றுவர்.
ஆதலின், ``கை தாராய்`` என்றார்.
`இப்பாசத்தை விட்டுப் போந்து ஏற` என்க.
இப்பாசம், உலக வாழ்ககை.

பண் :

பாடல் எண் : 17

பாசத்தை விட்டுநின் பாதத்தின் கீழேஎன்
நேசத்தை வைக்க நினைகண்டாய் - பாசத்தை
நீக்குமா வல்ல கயிலாயா நீஎன்னைக்
காக்குமா றித்தனையே காண்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நேசம் - அன்பு.
``பாசத்தை விட்டு`` என்றது, `பாசத்தின்மேல் நேசத்தை வைத்தலை விடுத்து` என்றபடி.
எனவே, ``பாசம்`` என்றது உடம்பினையும், அதனோடு தொடர்புபட்ட பொருள்களையும் ஆயிற்று.
``கீழ்`` என்றது ஆகுபெயராய்.
`நிழல்` எனப் பொருள் தந்தது.
`கீழின் கண்ணே` என ஏழாவது விரிக்க.
ஏகாரம், பிரிநிலை.
`நீக்குமாறு` என்பது கடைக்குறைந்தது செய்யுள் முடிபு.
`நினை` என்றதனால்.
`நீ நினையாவிடில் அது கூடாது` என்பதும், `நினையின் தப்பாது கூடும்` என்பதும் பெறப்பட்டன.
``இத் தனையே`` என்றது, `இஃது ஒன்றே அனைத்தையும் தரும்` என்பது பற்றி காண், முன்னிலை யசை.

பண் :

பாடல் எண் : 18

காணா தலக்கின்றார் வானோர்கள் காளத்திப்
பூணார மார்பன்றன் பொற்பாதம் - நாணாதே
கண்டிடுவான் யான்இருந்தேன் காணீர் கடல்நஞ்சை
உண்டிடுவான் றன்னை ஒருங்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இவ்வெண்பாவினை, ``அன்பரீர்`` என, அடியவரை முன்னிலைப்படுத்து உரைக்க.
`காளத்தியான் பாதம் காணாது வானோர்கள் அலக்கின்றார்` யான் நாணாதே அவனை ஒருங்கு காண இருக்கின்றேன்` என இயைத்து உரைக்க.
காணீர், முன்னிலையசை.
அலக்கின்றார் - அலமருகின்றார்.
ஆரம், பாம்பாகிய ஆரம், பொற் பாதம், உவமத் தொகை.
நாணுதலினின்றும் பிரித்தலின் ஏகாரம் பிரி நிலை.
``உண்டிடுவான்`` என்றது, `உண்ண வல்லவன்` என்றபடி மேல், ``பூண் ஆர மார்பன்`` என்றமையால், ``கடல் நஞ்சை உண்டிடு வான்`` என்றது `அவன்` என மேலே கூட்டி முடிக்க.
கண்டிடுவான், வான் ஈற்று வினையெச்சம்.
``இருந்தேன்`` என, முக்கால வினை இறந்த காலத்தில் வைத்துச் சொல்லப்பட்டது.
`வானவர் பாதத்தையே காணாது அலக்கின்றார்; யான் நாணாதே முற்றுங்காண இருக்கின் றேன்` என்றதனால், `இஃது என் அவா இருந்தவாறு` என்பது குறிப் பெச்சமாயிற்று.
`ஆசை வெட்கம் அறியாது` என்பது பழமொழி.

பண் :

பாடல் எண் : 19

ஒருங்கா துடனேநின் றோர்ஐவர் எம்மை
நெருங்காமல் நித்தம் ஒருகால் - நெருங்கிக்
கருங்கலோங் கும்பற் கயிலாயம் மேயான்
வருங்கொலோ நம்பால் மதித்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஒருங்காது - ஒரு முகப்படாமல் (அவரவர் விரும் பியபடியே) உடனே - கூடவே.
ஐவர், ஐம்புல வேடர்.
``நெருங்குதல்`` இரண்டில் முன்னது வலிசெய்து வருத்துதல்; பின்னது கிட்டுதல்.
நித்தம் - நாள்தோறும்.
கருங்கல் - கரிய மலை.
`கருங்கல் போல ஓங்கும் உம்பல்களையுடைய கயிலாயம்` என்க.
உம்பல் - யானை.
`ஓர் ஐவர்(எம்) உடனே நின்று, எம்மை நித்தம், ஒருங்காது நெருங்காமல், கயிலாயம் மேயான் நம்பால் (நம்மை) மதித்து ஒருகால் நெருங்கி வருங்கொலோ` என இயைத்து முடிக்க.
ஒருங்காது வருத்துதலாவது.
ஐவரும் ஒரு பெற்றியாக வருத் தாது, அவரவர் வேறு வேறு வகையாக வருத்துதல்.
``நெருங்காமல்`` என்பது, `நெருங்க` என எதிர்காலப் பொருட்டாய் வரும் செயவென் எச்சத்தின் மறை, `நெருங்காதபடி` என்பது பொருள்.
கொல், ஐய இடைச் சொல்.
ஓகாரம் அசை.
``உடனே`` என்னும் ஏகாரம் வேறு நிற்றலினின்றும் பிரித்தலின் பிரிநிலை.
மதித்து - பொருட் படுத்துதலைச் செய்து.

பண் :

பாடல் எண் : 20

நம்பால் மதித்துறையும் காளத்தி நண்ணாதே
வம்பார் மலர்தூய் வணங்காதே - நம்பாநின்
சீலங்கள் ஏத்தாதே தீவினையேன் யானிருந்தேன்
காலங்கள் போன கழிந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நம்பால்`` என்பது `எம்பால்` என்னும் பொருட்டாய் நின்றது.
``மதித்து`` என்பதற்கு, மேல் உரைத்தது உரைக்க.
`நீ உறையும் காளத்தி` என்க.
வம்பு ஆர் - மணம் நிறைந்த.
சீலங்கள் - குணங்களும், செயல்களும்.
ஏத்துதல் - புகழ்தல் `தீவினையேனாகிய யான்` என்க.
இருந்தேன் - வாளா இருந்தேன்.
காலங்கள், நாள்கள், `போயின` என்பது இடைக் குறைந்து நின்றது.
`கழிந்து போயின` என்க.
`இனி இரங்கிப் பயன் என்` என்பது குறிப்பெச்சம் `மேற் கூறியன பலவும் காலம் உள்ள பொழுதே செய்யத் தக்கன` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 21

கழிந்த கழிகிடாய் நெஞ்சே கழியாது
ஒழிந்தநாள் மேற்பட் டுயர்ந்தோர் - மொழிந்தசீர்க்
கண்ணுதலான் எந்தை கயிலாய மால்வரையே
நண்ணுதலாம் நன்மை நமக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கழிந்த கழிகிலாய்`` என்பதை இறுதியிற் கூட்டுக.
கழியாது ஒழிந்தநாள் - வாளா கழியாது; உறுதி செயச் சென்ற நாள்கள்.
`நாள்களில் ` என ஏழாவது விரிக்க.
``மேற்பட்டு உயர்ந்தோர்`` என்பது ஒரு சொல் நீர்மைத்தாய் நின்றது.
`கயிலாய மால்வரையை நண்ணுதல் நமக்கு நன்மையாம்; ஆயினும் நாள்கள் கழிந்தன.
நீ இருந்த இடத்தை விட்டுப் பெயர்ந்திலை` என்க.

பண் :

பாடல் எண் : 22

நமக்கிசைந்த வாநாமும் ஏத்தினால் நம்பர்
தமக்கழகு தாமே யறிவார் - அமைப்பொதும்பிற்
கல்லவாம் நீடருவிக் காளத்தி யாள்வாரை
வல்லவா நெஞ்சமே வாழ்த்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நெஞ்சே, அமைப் பொதும்பின்` எனத் தொடங்கி யுரைக்க.
அமை - மூங்கில்.
பொதும்பு - மரச் செறிவு.
`மூங்கிலை யுடைய மரச் செறிவையுடைய காளத்தி` என்க.
இன், சாரியை; கல்லவாம் `கல்` என்னும் ஓசையை உடைய அருவி, வல்லவா - இயன்ற அளவு.
(ஏன் எனில்,) நம்பர் தமக்கு அழகு தாமே அறிவார் - சிவபெருமான் தாம் செய்யத் தக்கதைத் தாமேயறிவார்; நாம் அவருக்குத் சொல்லத் தேவையில்லை.
அஃது, `இவரால் இயன்றது இவ்வளவு தான்.
ஆகவே, இவர்க்கு வேண்டுவதை நாம் அருள வேண்டுவது தான்` என்பது.
``இசைந்தவா`` என்பதும், `இயன்ற அளவு` என்றதே யாம்.
``நமக்கு இசைந்தவா நாமும் ஏத்தினால்`` என்றது அனுவாதம்.
உம்மை, `அவரும் அறிந்து செய்வார்` என எதிரது தழுவிற்று, `தன் கடன் அடியேனையும் தாங்குதல்``* என அருளிச் செய்தமை காண்க.
`இறைவனது பெருமையை முற்ற அறிந்து வாழ்த்துவார் ஒருவரும் இல்லை.
அதனால், அவரவரும் தாம் தாம் அறிந்த அளவில் வாழ்த்துதல் வேண்டும்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 23

வாழ்த்துவாய் வாழ்த்தா தொழிவாய் மறுசுழியிட்டு
ஆழ்த்துவாய் அஃதறிவாய் நீயன்றே - யாழ்த்தகைய
வண்டார் பொழிற்கயிலை வாழ்கென் றிருப்பதே
கண்டாய் அடியேன் கடன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வாழ்த்துதல் - வாழப் பண்ணுதல்.
வாழ்த்தா தொழிதல் - வாழப் பண்ணுதலைச் செய்யாமை.
சுழி - சுழல்.
மறு சுழி- ஒன்றின்மேல் மற்றொன்றாய் வரும் சுழல்.
`சுழியின்கண்` என ஏழாவது விரிக்க.
அஃது மேற் கூறிய மூன்றனுள் செய்யத்தக்கது.
அறி வாய் நீ அன்றே - அறிபவன் நீயேயல்லது, பிறர் யார்! `பிறர் ஒருவரும் இல்லையாதலின், உனக்கு அதனை அறிவிப்பாரும் இல்லை` என்பது கருத்து.
ஒன்றனைச் `செய்தல்.
செய்யாமை, வேறொன்று செய்தல்` என்னும் இம் மூன்றனுள் ஒன்றைத் தான் விரும்பிய வண்ணம் செய்பவனே முதல்வன் (கருத்தா) ஆவன்; அத்தகைய முதல்வன் நீயே - என்பார் இங்ஙனம் மூன்று வகையாகக் கூறினார்.
இம்மூன்றும் முறையே, `கர்த்திருத்தவம், அகர்த்திருத்தவம், அந்யதாகர்த் திருத்தவம்` - என வடமொழியில் சொல்லப்படும்.
இம்மூன்றனையும் குறிக்கும் முறையில்தான் ஔவையார், `ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும்; - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனை ஆளும் ஈசன் செயல்.
` 1 எனக் கூறினார்.
`உலகியல் என்னும் வெள்ளத்திலிருந்து என்னை எடுத்துக் கரையேற்று`` என்றோ, `வேண்டா; கரை யெற்றாதே` என்றோ, `மேலும் ஆழத்தில் அமிழ்த்திவிடு` என்றோ உனக்கு விதிக்க நான் யார்? தக்கதை நீயே அறிந்து செய்வாயன்றோ- என்பது கருத்து.
`யாழ்த் தகைய ஆக` என ஆக்கம் வருவிக்க.
`வண்டு ஆர்க்கும் பொழில்` என்க.
ஆர்த்தல் - ஒலித்தல்.
(உன்கடனை நீ அறி வாய்) `கயிலை வாழ்க! கயிலாயன் வாழ்க!!` - என்பன போல இயன்ற அளவு உன்னை வாழ்த்தியிருத்தலே எனது கடன்.
அதனை நான் செய்தல் வேண்டும் என்றபடி ``என் கடன் பணி செய்து கிடப்பதே`` 2 என்றமை காண்க.
கண்டாய், முன்னிலை யசை.

பண் :

பாடல் எண் : 24

கடநாகம் ஊடாடும் காளத்திக் கோனைக்
கடனாகக் கைதொழுவார்க் கில்லை - இடம்நாடி
இந்நாட்டிற் கேவந்திங் தீண்டிற்றுக் கொண்டுபோய்
அந்நாட்டில் உண்டுழலு மாறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``இல்லை`` என்பதை இறுதிக்கண் கூட்டுக.
கடநாகம் - மதத்தையுடைய யானை.
ஊடு ஆடும் - உள்ள இடங்களில் உலாவுகின்ற காளத்தி.
கடனாக - கடமையாக; நியமமாக.
இடம் - பிறப்பெடுக்கும் இடம்.
இந்நாடு.
மண்ணுலகம்.
ஈண்டிற்று - திரண்டது, வினைக் கூட்டம்.
வினையாலணையும் பெயர்; சாதியொருமை, `ஈண்டிற்றை` என இரண்டாவது விரிக்க.
அந்நாடு, சுவர்க்க நரகங்கள்.

பண் :

பாடல் எண் : 25

மாறிப் பிறந்து வழியிடை யாற்றிடை
ஏறி யிழியும் இதுவல்லால் - தேறித்
திருக்கயிலை ஏத்தீரேல் சேமத்தால் யார்க்கும்
இருக்கையிலை கண்டீர் இனிது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`உலகீர்` என முன்னிலை வருவித்து, `தேறித் திருக் கயிலை ஏத்திரேல்` என்பதை முதற்கண் கூட்டியும், `யார்க்கும் சேமத் தால் இனிது இருக்கை இலை` என மாற்றியும் உரைக்க.
தேறி - (உயர்ந்தோர் சொல்லைத்) தெளிந்து.
`இடை` இரண்டும் ஏழன் உருபு.
மாறிப் பிறத்தல், உயர் பிறவியிலும், தாழ்பிறவியிலும் மாறி மாறிப் பிறத்தல்.
வழி - இனிது செல்லும் வழி.
யாறு- வெள்ளத்தில் அகப்பட்டு அல்லல் உறும் யாறு, `வழியிடை ஏறி, யாற்றிடை, இழியும்` என நிரல்நிறையாகக் கொள்க.
முன்னது உயர் பிறப்பிற் பிறத்தலையும், பின்னது தாழ் பிறப்பிற் பிறத்தலையும் குறித்தன.
வெள்ளத்தில் அகப்பட்டவர்க்கேயன்றி.
இருக்கும் இடம் இன்றி, ஓயாது வழி நடப்பார்க்கும் உளதாவது அல்லலேயன்றி அமைதியன்று.
அதனால் இரண்டுமே துன்பமாம்.
சேமம் - பாதுகாவ லோடு கூடிய, வாழும் இடம்.
``காலத்தினாற் செய்த நன்றி`` 1 என்பது போல, ``சேமத்தால்`` என்பது வேற்றுமை மயக்கம் இருக்கை - அமைதியுடன் இருத்தல்; தொழிற் பெயர்.
கண்டீர், முன்னிலை யசை.
`சிவபெருமானைத் துதிப்பார்க்கல்லது அமைதி கிட்டாது` என்றபடி.
`தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தாற்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது`
என்னும் பொது மறையையும் காண்க.

பண் :

பாடல் எண் : 26

இனிதே பிறவி இனமரங்கள் ஏறிக்
கனிதேர் கடுவன்கள் தம்மில் - முனிவாய்ப்
பிணங்கிவரும் தண்சாரல் காளத்தி பேணி
வணங்கவல்ல ராயின் மகிழ்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பிறவியே இனிது` என ஏகாரத்தை மாற்றி வைத்து, இறுதிக்கண் கூட்டுக.
வீட்டினின்றும் பிரித்தலின் ஏகாரம், பிரிநிலை.
இனம் - பல்வேறு இனம்.
`தேர் கடுவன்கள் ஏறித் தம்மில் பிணங்கி வரும் சாரல் காளத்தி` என்க.
கடுவன் - ஆண் குரங்கு.
முனிவு - கோபம் (மக்கள்) காளத்தி பேணி மகிழ்ந்து வணங்க வல்லாராயின் (அவர்கட்கு) அப்பிறவியே இனிது - என்க.
`வீடு வேண்டா` என்பதாம்.
`வீட்டின் பயன் அப்பிறப்பிலே உள்ளது` என்றபடி.
`தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன்
திருநடம் கும்பிடப் பெற்று,
மண்ணிலே வந்த பிறவியே எனக்கு
வாலிதாம் இன்பமாம்.
* என்றது காண்க.

பண் :

பாடல் எண் : 27

மகிழ்ந்தலரும் வண்கொன்றை மேலே மனமாய்
நெகிழ்ந்து நெகிழ்ந்துள்ளே நெக்குத் - திகழ்ந்திலங்கும்
விண்ணுறங்கா வோங்கும் வியன்கயிலை மேயாய்என்
பெண்ணுறங்காள் என்செய்கேன் பேசு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`திகழ்ந்திலங்கும்.
.
.
என் பெண்` என்பதை முதலிற் கூட்டுக.
மகிழ்தல், இங்கு விரும்புதலைக் குறித்தது.
`விண் நிறத்தோடு` என்று ஓடுருபு தொகுக்கப்பட்டது.
விண்ணின் நிறம் புகைமை.
அஃது இங்கு இருளைக் குறித்தது.
கா - சோலை.
இது கயிலைப் பெருமான்மேல் காதல் கொண்டாள் ஒருத்திதன் செவிலித் தாய் கூற்று.

பண் :

பாடல் எண் : 28

பேசும் பரிசறியாள் பேதை பிறர்க்கெல்லாம்
ஏசும் பரிசானா ளேபாவம் - மாசுனைநீர்
காம்பையலைத் தாலிக்கும் காளத்தி என்றென்று
பூம்பசலை மெய்ம்முழுதும் போர்த்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மா சுனை நீர்` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.
காம்பு - மூங்கில்.
ஆலித்தல் - ஒலித்தல்.
பூம் பசலை - பூப் போலும் பசலை.
`பூ, பீர்க்கம் பூ` என்பது மரபு பற்றிக் கொள்ளப்படும்.
போர்த்து - போர்க்கப்பட்டு.
பேசும் பரிசு - வேறொன்றைப் பற்றியும் பேசும் தன்மை.
``பேதை`` என்றது சிலேடை.
பரிசு - தன்மை.
`தன்மை யுடையளாயினார்` என்க.
ஏகாரம், தேற்றம் ``பாவம்`` என்பது, இரக்கம் பற்றி வந்தது.
இதவும் மேலைத் துறை.

பண் :

பாடல் எண் : 29

போர்த்த களிற்றுரியும் பூண்ட பொறியரவும்
தீர்த்த மகளிருந்த செஞ்சடையும் - மூர்த்தி
குயிலாய மென்மொழியாள் கூறாய வாறும்
கயிலாயா யான்காணக் காட்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`போர்வையாகப் போர்த்த` எனவும், `பூணாகப் பூண்ட` எனவும் உரைக்க.
உரி - தோல், பொறி - புள்ளி.
தீர்த்த மகள், கங்கை.
மூர்த்தி - வடிவம்.
இதனை முதற்கண் வைத்து, `கூறும் ஆய வாறு` என உம்மையை மாறிக் கூட்டி, `ஆயவாறு காட்டு` என முடிக்க.
இது சிவபெருமானது உருவத்தை நினையும் பாட்டாய் அமைதலை யறிக.

பண் :

பாடல் எண் : 30

காட்டில் நடம்ஆடிக் கங்காளர் ஆகிப்போய்
நாட்டிற் பலிதிரிந்து நாள்தோறும் - ஓட்டுண்பார்
ஆனாலும் என்கொலோ காளத்தி ஆள்வாரை
வானோர் வணங்குமா வந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கங்காளர் - எலும்புக் கூட்டைத் தோளில் கொண்ட வர்.
`நாட்டில் போய்த் திரிந்து` என்க.
பலி - பிச்சை.
`பிச்சைக்கு` என நான்காவது விரிக்க.
`நாள்தோறும் போய்` எனக் கூட்டுக.
ஓட்டு - ஓட்டின்கண், ஓடு, தலைஓடு.
`வணங்குமாறு` `வணங்குமா` எனச் செய்யுள் முடிபு எய்தி நின்றது.
``என்கொலோ`` என்றது, `இவரது செயலின் உண்மையை உணர்ந்ததனால்` என்பதனைக் குறிப்பாற் புலப்படுத்தியது.
`அவனும்ஓர் ஐயம்உண்ணி; அதள்ஆடை யாவ
ததன்மேல்ஒரு ஆட லரவம்;
கவணளவுள்ள வுள்கு கரிகாடு கோயில்;
கலனாவது ஓடு; கருதில்
அவனது பெற்றி கண்டும், அவன்நீர்மை கண்டும்
அகன்நேர்வர் தேவ ரவரே`.
* என அப்பர் பெருமானும் அருளிச் செய்தமை காண்க.
கங்காளம் தாங்கியது முதலியவற்றின் உண்மைகளை.
`நங்காய்,இ தென்னதவம்! நரம்போ டெலும்பணிந்து
கங்காளம் தோள்மேலே காதலித்தான் காணேடீ,
கங்காளம் ஆமாகேள்; காலாந் தரத்திருவர்
தங்காலம் செய்யத் தரித்தனன்காண் சாழலோ`
(திருவாசகம் சாழல்.
11) என்பது முதலியவற்றான் அறிக.
`வானோர் வணங்குவர்` என்றத னால், உண்மை யுணராதவரெல்லாம் இவரது செயலைக் கண்டு இவரை, `பித்தர்` என்று இகழவே செய்வர் என்பது போந்தது.
`பித்தரே என்றும்மைப் பேசுவர் பிறரெல்லாம்`
என்றார் ஆளுடைய நம்பிகள்.
`இவரைப்பொருள்உணர மாட்டாதா ரெல்லாம்
இவரை இகழ்வதே கண்டீர்.
` என்றார் காரைக்கால் அம்மையார்.

பண் :

பாடல் எண் : 31

வந்தமரர் ஏத்தும் மடைகூழும் வார்சடைமேல்
கொந்தவிழு மாலை கொடுத்தார்கொல் - வந்தித்து
வால்உகுத்த வண்கயிலைக் கோமான் மாமுடிமேல்
பால்உகுத்த மாணிக்குப் பண்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மடை`` என்பது, `நிவேதனம்` எனச் சிறப்புப் பெயராயும், ``கூழ்`` என்பது `உணவு` என்னும் பொதுப் பெயராயும் நின்று, இருபெயர் ஒட்டாய் வந்தன.
``மாலை`` என்பதிலும் எண்ணும்மை விரிக்க.
கொல், அசை.
வால் உகுத்த - வெள்ளொளியை எங்கும் வீசு கின்ற.
மாணி - பிரமசாரி.
இதில் சண்டேசுர நாயனாரது வரலாறு குறிக்கப்பட்டது.
அதனைத் திருத்தொண்டர் புராணத்துட் காண்க.

பண் :

பாடல் எண் : 32

பண்டிதுவே அன்றா கில் கேளீர்கொல் பல்சருகு
கொண்டிலிங்கத் தும்பினூற் கூடிழைப்பக் - கண்டு
நலந்திக் கெலாம்ஏத்தும் காளத்தி நாதர்
சிலந்திக்குச் செய்த சிறப்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பல் சருகு`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.
கொண்டு - மேற்கூரையாகக் கொண்டு.
இலிங்கம் - திருவானைக்கா வெண்ணாவலின்கீழ் உள்ள இலிங்கம்.
பின் நூல் - பின்னுகின்ற நூலால் கூடு.
பக்தர் நலம் - நலம் செய்வதாகிய கருணை.
`அதனை திக்கெலாம் ஏத்தும் காளத்தி நாதன்` என்க.
சிலந்திக்குச் செய்த சிறப் பாவது சோழ மன்னனாகப் பிறக்கச் செய்தமை.
அம்மன்னனே திருவானைக்கா முதலான எழுபது தலங்களில் சிவபிரானுக்கு மாடக் கோயில் எடுத்த கோச்செங்கணான்.
``பண்டு இதுவே`` என்பதை `இது பண்டே` என மாற்றி ஏகாரத்தைப் பிரித்துக் கூட்டுக.
`பண்டு` என்பது பெயர்த் தன்மைப்பட்டு, பண்டு நிகழ்ந்த செயலைக் குறித்தது.
`சிறப்பாகிய இது` என இயைக்க அன்றாகில் - `அவ்வாறு ஒன்று நிகழ்ந்ததில்லை` என்று எவரேனும் கூறுவீராயின்.
கேளீர்கொல் - செவிப்பொறி இல்லீர் போலும்! கொல், ஐய இடைச்சொல்.
`இந் நிகழ்ச்சி நாடறிந்த பெருவழக்காய் இருக்க, அதனை, `இல்லை` எனச் சொல்லிப்பிணங்குவார் உளராயின் அவர் செவிப் பொறி இல்லா தவரேயாவர்` என்றபடி.
`சிவபிரானுக்கு அன்புடன் சிறு பணி செய்யி னும் அவன் பெரும்பயன் தருவன்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 33

செய்த சிறப்பெண்ணில் எங்குலக்கும் சென்றடைந்து
கைதொழுவார்க் கெந்தை கயிலாயர் - நொய்தளவில்
காலற்காய்ந் தாரன்றே காணீர் கழல்தொழுத
பாலற்காய் அன்று பரிந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கழல் தொழது பாலற்காய் அன்று பரிந்து நொய்தள வில் காலற் காய்ந்தாரன்றே! சென்று அடைந்து கைதொழுவார்க்கு எந்தை கயிலாயர் செய்த சிறப்பு எண்ணில் எங்கு உலக்கும்? என இயைத்துக் கொள்க.
காணீர், முன்னிலையசை.
இதில் மார்க்கண்டே யருக்கு அருள்செய்த வரலாறு குறிக்கப்பட்டது.
எண்ணில் - எண்ணால் கூறி வரையறுக்கப்புகின்.
எங்கு உலக்கும் - எங்கே போய் முடியும்? `ஓரிடத்தும் முடியாது, எண்ணிலவாய் மிகும்` என்றாம்.
மேல், சண்டேசர், கோச்செங்கணான் இவர்கட்குச் செய்த சிறப்பையும், இங்கு மார்க்கண்டேயர்க்குச் செய்த சிறப்பையும் கூறினார்` `இப்படி எத்தனைப் பேருக்கு என்னென்ன சிறப்புச் செய்தார்` என வினாவு வார்க்கு விடையும் இதிலே கூறினார்.
``எந்தை கயிலாயர்`` என்பது பன்மை யொருமை மயக்கம்.
நொய்தளவில் - சிறிது நேரத்திற்குள்.
பரிந்து - அருள் கூர்ந்து.

பண் :

பாடல் எண் : 34

பரிந்துரைப்பார் சொற்கேளாள் எம்பெருமான் பாதம்
பிரிந்திருக்க கில்லாமை பேசும் - புரிந்தமரர்
நாதாவா காளத்தி நம்பாவா என்றென்றென்று
மாதாவா உற்ற மயல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``என் மாது`` என்பதை முதலிலும், ``பேசும்`` என்பதை ``என்றென்று`` என்பதன் பின்னும் கூட்டி (இவள்) `உற்ற மயல், ஆஆ` என முடிக்க.
பரிந்து - அன்பு கொண்டு உரைப்பார் சொல்லாவன, `அவன் உனக்கு எளியனல்லன்; அவனை நீ அடைதல் இயலாது` என்றல் போல்வன.
`பிரிந்திருக்ககில்லாமையால்` என உருபு விரிக்க.
பேசும் - பேசுவாள்.
`பிரிந்த` என்பதன் இறுதிநிலை தொகுத்தலாயிற்று.
புரிதல் - விரும்புதல்.
``ஆஆ`` என்பதன்பின் `என இரங்கத் தக்கது` என ஒரு சொல் வருவித்து முடிக்க.
இதுவும் மேற்போந்தன போலச் செவிலி கூற்று.
`சிவனிடத்து அன்பு கொண்டோர் அதனை விலக்கச் சொல்வார் கூற்றைக் கேளார்` என்பது இதன் உள்ளுறை.

பண் :

பாடல் எண் : 35

மயலைத் தவிர்க்கநீ வாராய் ஒருமூன்
றெயிலைப் பொடியாக எய்தாய் - கயிலைப்
பருப்பதவா நின்னுடைய பாதத்தின் கீழே
யிருப்பதவா வுற்றாள் இவள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கயிலைப் பருப்பதவா`` என்பது முதலாகத் தொடங்கி, இறுதியில், ``மயலைத் தவிர்க்க வாராய்`` என முடிக்க.
பருப்பதம் - மலை.
அஃது அடியாகப் பிறந்த `பருப்பதன்` என்னும் பெயர் ஓரு அகரம் விரித்தல் பெற்று, `பருப்பதவன்` என வந்தது, உன் பக்கத்திலே கூட இருக்க விரும்பினாள்` என்க.
``நீ ஒருமூன்று எயிலைப் பொடிய எய்தாய்`` என்றது, `தேவர் பொருட்டு அதனைச் செய்த அருளுடையயையன்றோ? இவட்கு இது நீ செய்யலாகாதோ` என்றபடி.
`இருப்பது` என்பது தொழிற்பெயர்.
`இருப்பதற்கு` என நான்காவது விரித்து, அதனை, `அவாவைப் பொருந்தினாள்` என்க.
இவ்வாறன்றி, `அவா உற்றார்`` என்பதனை `அவாவினாள்` என ஒரு சொல் நீர்மைத்தாகக் கொண்டு, `அவாவை` என இரண்டாவது விரிப் பினும் ஆம்.
இதுவும் செவிலி கூற்றே.

பண் :

பாடல் எண் : 36

இவளுக்கு நல்லவா றெண்ணுதிரேல் இன்றே
தவளப் பொடியிவள்மேல் சாத்தி - இவளுக்குக்
காட்டுமின்கள் காளத்தி காட்டிக் கமழ்கொன்றை
சூட்டுமின்கள் தீரும் துயர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இன்றே - இப்பொழுதே.
தவளப்பொடி - வெண் பொடி; திருநீறு.
`சந்தனத்தைப் பூசி இவள் உடல் வெப்பத்தைத் தணிக்க நினையாதீர்கள்` என்பதாம்.
`அது இவளுக்கு மேலும் வெம்மையைத் தரும்` என்பது குறிப்பு.
`காளத்தி காட்டுமின்கள்` என்க.
இப்பாட்டு தலைவிதன் வேற்றுமைக்குக் காரணம் அறியாது செவிலியும், நற்றாயும் அதனைப் பரிகரிக்க முயல்கையில் பாங்கி அறத்தொடு நின்றது.
சிவனடியார்கட்குச் சிவன்பணி கூடாமையால் உளதாகும் வருத்தம் பிறிதொன்றால் தீராமை இதன் உள்ளுறை.

பண் :

பாடல் எண் : 37

துயர்க்கெலாம் கூடாய தோற்குரம்பை புக்கு
மயக்கில் வழிகாண மாட்டேன் - வியற்கொடும்பேர்
ஏற்றானே வண்கயிலை எம்மானே என்கொலோ
மேற்றான் இதற்கு விளைவு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``வியற் கொடும் பேர்.....எம்மானே`` என்பது தொடங்கி, `இதற்கு, மேல் விளைவு என்கொலோ` என முடிக்க.
வியல் - பெரிய.
``வியல் கொடும் பேர்` என்பது ஏற்றிற்கு இன அடை.
ஏறு - இடபம்.
குரம்பை - குடில்.
தோற் குரம்பை - தோலால் மூடப்பட்ட குடில்.
உடம்பு.
மயக்கில் - மயக்கத்தால், வழி - செல்லத்தக்க வழி ``இது`` என்றது மாட்டாமையை.
``இதற்கு விளைவு`` என்பதில் நான்காவது, `அவர்க்கு ஆகும் அக்காரியம்`` என்பதுபோல மூன்றாவதன் பொருட்டு.
மேல் விளைவு - பின் விளைவு.
தான், அசை.
கொல், ஐயம்.
ஓ, அசை.
`இவ் அறியாமை அறியாமையேயாகப் பிறவியே விளையுமோ! உனது அருளால் இது நீங்கி அறிவு தோன்ற, உனது திருவடிப்பேறு விளையுமோ! அறிகின்றிலேன்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 38

விளையும் வினைஅரவின் வெய்ய விடத்தைக்
களைமினோ காளத்தி ஆள்வார் - வளைவில்
திருந்தியசீர் ஈசன் திருநாமம் என்னும்
மருந்தினைநீர் வாயிலே வைத்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``வினை அரவு``, ``திருநாமம் என்னும் மருந்து`` - இவை உருவகங்கள்.
விளையும் வினை, பிராரத்த வினை.
அதனை ``அரவு`` என்றதனால், ``அதன் விடம்`` என்றது, அது விளையும் பொழுது உளவாகின்ற இன்பத் துன்ப அனுபவங்களால் தோன்றும் ஆகாமியத்தையாம்.
``திருவாஞ்சியத்துறையும் - ஒருவனார் அடியாரை ஊழ்வினை நலிய ஓட்டாரே`` 1 என்று அருளிச்செய்தது இது நோக்கி.
``களைமின்`` என்பதை இறுதிக்கண் கூட்டுக.
ஓகாரம், அசை.
`ஆள்வாரது` என ஆறாவது விரிக்க.
வளைவு - கோட்டம்; அஃதாவது, மெய்யான.
சீர் - புகழ்.
`சீரை விளக்கும் திருநாமம்` என்க.
`ஈசன் ஆம் திருநாமம்` என ஒற்றுமைப் பொருட்டாகிய ஆக்கம் விரிக்க.
ஈசன் - ஐசுவரியத்தையுடையவன்.
இஃது உபலக்கணமாய் ஏனை பல பெயர்களையும் குறிக்கும்.
`சிவபெருமானது பொருள் சேர்ந்த புகழை எப்பொழுதும் சொல்லுதலே வினை நீக்கத்திற்கு வழி` என்றபடி.
`இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
` 2 என்னும் பொது மறையையும் காண்க.
`மருந்துகள் யாவும் உள் விழுங்கவே நோயைத் தீர்க்கும்.
இஃது அவ்வாறின்றி, வாயில் வைத்த அளவே நோயைத் தீர்ப்பதோர் அதிசய மருந்து என்னும் நயத்தைத் தோற்றுவித்தமையறிக.
புகழ்கள் சொல்லப்படுதல் வாயினாலே யன்றோ! இவ்வாறே, வருகின்ற வெண்பாவில், ``வாயிலே வைக்கு மளவில் மருந்தாகி`` என ஓதுதல் காண்க.

பண் :

பாடல் எண் : 39

வாயிலே வைக்கு மளவில் மருந்தாகித்
தீய பிறவிநோய் தீர்க்குமே - தூயவே
கம்பெருமா தேவியொடு மன்னு கயிலாயத்
தெம்பெருமான் ஓர்அஞ் செழுத்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``தூய`` என்பது, வேறுபடுதல் இன்மையைக் குறித்தது.
`பெருமாதேவியொடு தூய ஏகமாய்மன்னு எம் பெருமான்` என ஆக்கம் வருவித்துரைக்க.
தலைவராயினார்க்குத் தேவியாயினாரை `மாதேவி` என்றல் வழக்காதலின் தலைவர்க்கெல்லாம் தலைவனுக்குத் தேவியாயினாளை, ``பெருமாதேவி`` என்றார்.
`அஞ்செழுத்து ஆகித் தீர்க்கும்` என முடிக்க.
``அஞ்செழுத்து`` என்பது தொகைக் குறிப்பாய், ``நமச்சிவாய`` என்பவற்றைக் குறித்தல் மரபு வழியால் பெறப்பட்டது.
மரபு சைவாகம மரபு.
பிறவியை நோயாக உருவகித்தற்கு ஏற்ப அஞ்செழுத்தை மருந்தாக உருவகிக்கின்றார்.
ஆகலின் அதற்கேற்ப, `வாயாலே சொல்லுமளவில்` என்னாது, ``வாயிலே வைக்குமளவில்`` என்றார்.
வாயிலே வைத்த அளவில் நோய் நீங்குதல் கூறப்பட்டமையால், பின்னும் பின்னும் பேணி ஒழுக ஒழுகப் பேரின்பம் பெருகுதல் பெறப்பட்டது.
இவ்வஞ்செழுத்தின் பெருமையே திருமுறைகளில் எங்கும் விரித்துப் பேசப்படுதல் வெளிப் படை.
அவ்வாற்றானே இங்கும் பேசப்பட்டது.
`பிறவி நோயாதல் தெளிவாதல் போல, அஞ்செழுத்தே அந்நோய்க்கு மருந்தாதல் தெளிவு` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 40

அஞ்செழுத்துங் கண்டீர் அருமறைகா ளாவனவும்
அஞ்செழுத்தும் கற்க அணித்தாகும் - நஞ்சவித்த
காளத்தியார் யார்க்கும் காண்டற் கரிதாய்ப்போய்
நீளத்தே நின்ற நெறி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அஞ்செழுத்தும் ஏற்ற பெற்றியால் சொற்களுக்கு உறுப்பாதலேயன்றி, இறைவனது அருளாணையால் அஞ்சு பதங்களு மாதல் பற்றி, ``அஞ்செழுத்தும் என முற்றும்மை கொடுத்தார்.
துஞ்ச லும் துஞ்சலிலாத போழ்தினும்` 1 என்னும் திருப்பதிகத்திலும், `ஏதும் ஒன்றும் அறிவில ராயினும்
ஓதி அஞ்செழுத் தும்உணர் வார்கட்குப்
பேத மின்றி அவரவ ருள்ளத்தே
மாதும் தாமும் மகிழ்வர்மாற் பேறரே.
` 2 என்றாற்போலும் இடங்களிலும் `அஞ்செழுத்தும்` என உம்மை கொடுத்தே ஓதப்பட்டன.
``அந்தியும் நண்பகலும்`` அஞ்சு பதம் சொல்லி3 என்பதில் அஞ்செழுத்தும் அஞ்சு பதங்களாதல் குறித்தருளப்பட்டது.
இனி, இங்கு மேலை வெண்பாவிலும், அஞ்சினால் உய்க்கும் வண்ணம் காட்டினாய்க் கச்சம் தீர்ந்தேன்`` 4 அஞ்செழுத்து - ஓதி ஏறினார் உய்ய உலகெலாம்`` 5 என்றாற் போலும் இடங்களிலும் உம்மையின்றியே ஓதப்பட்டது.
அஞ்செழுத்தும் சொற்கு உறுப்பாய் நிற்க அதனாலாம் தொடர்மொழி, `சிவனுக்கு வணக்கம்` என்னும் ஒரு பொருளையே தந்து, சிவன் வணங்கப்படுபவனும், உயிர்கள் அவனை வணங்குவனவும் ஆகின்ற முறைமையை உணர்த்தி நிற்கும்.
இது பொதுவாக யாவராலும் ஓதத் தக்கதாதல் பற்றி, `தூல பஞ்சாக்கரம்` (பருவைந்தெழுத்து) எனவும், அஞ்செழுத்தும் அஞ்சு பதங்களாய் நின்று அஞ்சு பொருளை உணர்த்துதல் உபதேச முறையால் பெற்றுச் சிறந்தாரால் ஓதப்படுதலின் `சூக்கும பஞ்சாக்கரம்` (நுண்ணைந்தெழுத்து) எனவும் சொல்லப்படும்.
முன்னது நகாரம் முதலாகவும், பின்னது சிகாரம் முதலாகவும் வரும்.
அஞ்செழுத்தும் அஞ்சு பதம் ஆதல் ஆணையாற்கொள்வ தல்லது, வழக்கினாற் கொள்வதன்று.
அதனால், `இவை போல்வன வழக்குநூல் வரையறைக்கு உட்படா` என்பதை ஆசிரியர் தொல்காப்பியனார், `மந்திரப் பொருள்வயின் ஆஅ குநவும்
அன்றி அனைத்தும் கடப்பா டிலவே.
` 1 எனப் புறடுத்தோதினார்.
அருமறைகள் - பொருள் உணர்தற்கு அரிய இறைவன் நூல்கள்.
அந்நூல்களில் பரக்க வரும் பொருள் அனைத்தையும் இவ் அஞ்செழுத்து அடக்கி நிற்றலின் ``அஞ்செழுத்துமே அருமறைகள் ஆம்`` என்றார்.
`அஞ்செழுத்தே ஆகமமும் அண்ணல் அருமறையும்
அஞ்செழுத்தே ஆதிபுராணம் அனைத்தும்.
` 2 எனவும்,
`அருள்நூலும் ஆரணமும் அல்லாதும் ஐந்தின்
பொருள் நூல் தெரியப் புகின்.
` 3 எனவும் வரும் சாத்திர மொழிகளையும் காண்க.
கற்றல் - ஓதியுணர்தல்.
``போய்`` என்றது, `நீங்கி` என்றபடி.
`நிறத்தொடு` என ஒடு உருபு விரிக்க.
ஏகாரம், அசை.
``ஆவனவும்`` என்றதனோடு இயைய, `அஞ்செழுத்தும் கற்க, நெறி அணித்தாதலும்` என எண்ணும்மை விரித்து, `இரண்டும் ஆகும்` என்க.
ஆகும் முடியும்.
காளத்தியாருக்கும் காண்டற்கு அரிதாய், நீளத்தே நின்ற நெறியாவது, பகலவன் தனது கதிர்களைப் பரக்க வீசிய போதிலும் அவற்றை ஏற்க மாட்டாது இருளில் மூழ்கியிருக்கும் படலம் படர்ந்த கண்போலக் காளத்தி நாதர் தமது திருவருள் நோக்கினைச் செலுத்திய போதிலும் அதனை எய்த மாட்டாது அறியாமையில் அழுந்தியிருக்கும் பெத்தான்ம நிலை.
அந் நெறியும் அணித்தாதலாவது அவ்வாறான அறியாமை நீங்க, காளத்தி நாதரது திருவருளை எய்துதல்.
`இந்நிலை அஞ்செழுத்தை ஓதி உணர்தலால் உளதாம்` என்றபடி.
கண்டீர், முன்னிலை யசை.

பண் :

பாடல் எண் : 41

நெறிவார் சடையாய் நிலையின்மை நீஒன்
றறியாய்கொல் அந்தோ அயர்ந்தாள் - நெறியில்
கனைத்தருவி தூங்கும் கயிலாயா நின்னை
நினைத்தருவி கண்சோர நின்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நெறி வார் சடை`` என்பதற்கு, மேல் * உரைக்கப் பட்டது.
`இவளது நிலையின்மை` என ஒருசொல் வருவிக்க.
நிலை - நிலைபேறு.
அஃது இன்மையாவது இறந்துபாடு, ஒன்று - சிறிது.
`ஒன்றும்` என இழிவு சிறப்பும்மை விரிக்க.
நெறியில் - வழியில்.
`நெறி யில் தூங்கும்` என இயையும்.
`கண் அருவி சோர நின்று அயர்ந்தாள்` எனக் கூட்டி முடிக்க.
அயர்தல் - சோர்தல்.
இதுவும் செவிலி கூற்று.

பண் :

பாடல் எண் : 42

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்யாம்
என்றும் நினைந்தாலும் என்கொலோ - சென்றுதன்
தாள்வா னவர்இறைஞ்சும் தண்சாரற் காளத்தி
ஆள்வான் அருளாத வாறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``என் கொலோ`` என்பதனை இறுதிக் கண் கூட்டுக.
நிற்றல் முதலியன அத்தொழில் நிகழும் காலத்தைக் குறித்தன.
`தன் தாள் வானவர் சென்று இறைஞ்சும் காளத்தி ஆள்வான்` என இயைக்க; ஆறு - காரணம்.
கொல், ஐயம், ஓ அசை.
``அருளாதவாறு என்கொல்`` என்றது, அருளைப் பெறுதற்கண் எழுந்த வேட்கை மிகுதியால்.
அங்ஙனம் கூறியதனானே, `நினைந்தார்க்கு அவன் அருளாமை இல்லை.
என்பது பெறப்பட்டது.
அருளும் காலத்தை அவன் அறிதலன்றிப் பிறர் அறியுமாறில்லை.

பண் :

பாடல் எண் : 43

அருளாத வாறுண்டே யார்க்கேனும் ஆக
இருளார் கறைமிடற்றெம் ஈசன் - பொருளாய்ந்து
மெய்ம்மையே உன்னில் வியன்கயிலை மேயான்வந்
திம்மையே தீர்க்கும் இடர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பொருள் - பொருளியல்பு.
அஃதாவது, அவனது இயல்பு, ஆய்தல், ஆய்ந்து உணர்தலாகிய தன் காரியம் தோற்றி நின்றது.
இதனை முதலிலும், ``யார்க்கேனும் ஆக என்பதை உன்னில் என்பதன் பின்னும் வைத்து, `எம் ஈசன் அருளாதவாறு உண்டே` என முடிக்க.
`எமக்கு அருளாதவாறு` என ஒருசொல் வருவிக்க.
``யார்க்கேனும்`` என்றது, `உயர்வு தாழ்வு நோக்காது` என்றபடி.
எனவே, `எமக்கு அருளா தொழிதல் இல்லை` என்றதாம்.
மேலை வெண்பாவால் ஆற்றாமை கூறிய நாயனார் இவ்வெண்பாவில் ஆற்றினமை கூறினார்.
``எம் ஈசன்`` என்றது.
`அவன்` என்னும் அளவாய் நின்றது.

பண் :

பாடல் எண் : 44

இடரீர் உமக்கோர் இடம்நாடிக் கொண்டு
நடவீரோ காலத்தால் நாங்கள் - கடல்வாய்க்
கருப்பட்டோங் கொண்முகில்சேர் காளத்தி காண
ஒருப்பட்டோம் கண்டீர் உணர்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``உமக்கு ஓர் இடம் நாடிக்கொண்டு காலத்தால் நடவீர்`` என்பதனை இறுதிக்கண் வைத்துரைக்க.
``இடரீர்`` என உயர் திணையாகக் கூறியது இகழ்ச்சிக் குறிப்பு.
இடராவன பலவற்றையும் நோக்கிப் பன்மையாற் கூறினார்.
``நாடிக்கொண்டு`` என்பது ஒரு சொல்.
``காலத்தால்`` என்பது வேற்றுமை மயக்கம்.
கருப்படுதல் - நீரை நிரம்ப முகத்தல் ஒருப்படுதல் - மனம் இசைதல்.
கண்டீர், முன்னிலை யசை.
`உணர்ந்து நடவீர்` என இயையும்.
இடராவனவற்றிற்கு இடம் காளத்தி காணாதாரேயன்றிக் கண்டவரல்லர்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 45

உணருங்கால் ஒன்றை உருத்தெரியக் காட்டாய்
புணருங்கால் ஆரமுதே போன்று - இணரில்
கனியவாம் சோலைக் கயிலாயம் மேயாய்,
இனியவா காண்நின் இயல்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இணரில் கனிய - கொத்துக்களில் கனிகளையுடைய.
உணருங்கள் - நினைக்குப் புகும் பொழுதும்.
`உரு ஒன்றைத் தெரியக் காட்டாய்` என்க.
(உரு இன்றியே உன்னைப் புணர வல்லவர்) உணருங்கால் நின்.
இயல்பு ஆரமுதே போலும், (ஆதலின்) இனியவா காண்.
(நின் இயல்புகள்) மிக இனியயவாமாற்றை நீ அறிவாயாக.
`இனியவாறு` என்பது ஈறு குறைந்து செய்யுள் முடிபு எய்தி நின்றது.
ஆறு - தன்மை அஃது அதனை உடையவற்றைக் குறித்தது.
``இனியவா`` என்றது உண்மையேயாயினும், ``உருத்தெரியக் காட்டாய்`` என்றதனால், நகையாடல்போலக் கூறப்பட்டது.
புணர்தல் - தழுவுதல்.
`புணருங்கால் இன்பம் தரும் பொருள்கள் யாதோர் உருவும் இன்றியே, புணருங்கால் பேரின்பம் தருபவனாய் உள்ளாய்` என வியந்துகூறியவாறு.
`சிவனது இன்பம் ஐம்புல இன்பம் போலாது, அவற்றின் வேறு பட்டதோர் இயல்பிற்று` என்பதாம்.
``காண்`` என்றது, புதிதாகக் கண்டவர் அதனை முன்னமே கண்டவர்க்கு அறிவித்தல் போன்றதொரு வழக்கு.
`போல்வாய்` எனப்பாடம் ஓதுதலும் ஆம்.

பண் :

பாடல் எண் : 46

நின்னியல்பை யாரே அறிவார் நினையுங்கால்
மன்னியசீர்க் காளத்தி மன்னவனே - நின்னில்
வெளிப்படுவ தேழுலகும் மீண்டே ஒருகால்
ஒளிப்பதுவுமா னால் உரை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மன்னிய சீர்`` என்பது முதலாகத் தொடங்கி, `நினையுங்கால் நின்னியல்பை அறிவார் யாரே? உரை` என முடிக்க.
மன்னியசீர் - நிலைபெற்ற புகழ்.
`என்றும் நிலைபெற்றிருத்தலால் பெற்ற புகழ்` என்க.
`நின்னினின்றும் வெளிப்படுவனாகிய ஏழுலகும்` என உரைக்க.
நின்னில், நீக்கப் பொருட்கண் வந்த ஐந்தாம் வேற்றுமை.
இதனை ஏழாம் வேற்றுமையாக்கி, ``ஒளிப்பதுவும்`` என்பதனோடும் கூட்டுக.
``மீண்டே ஒருகால்`` என்றதனால், `முன்பு ஒருகால் வெளிப் படுவ` என்பது வருவிக்க.
`ஏழுலகும் முன்பு ஒருகால் நின்னின்று வெளிப்பட்டு, மீண்டு ஒருகால் நின்னிடமே வெளிப்படுவ ஆனால்` என ஓதற்பாலதனைச் செய்யுள் நோக்கி இவ்வாறு ஓதினார்.
``நின்னில் வெளிப்படு ஏழுலகும்` என்பது உடம்பொடு புணர்த்தது.
``ஒளிப்பது`` என்பது தொழிற்பெயர்.
அஃது ஆகுபெயராய் அதனையுடைய உலகங்களின்மேல் நின்றது.
உம்மை.
இறந்தது தழுவியது.
``ஆனால்`` என்பது தெளிவின்கண் வந்தது.
தோன்றி ஒடுங்குவனவாகிய அனைத்துப் பொருள்கட்கும் இறைவன் நிலைக்களமாய் இருத்தலின், அவனது அளவை அத்தோன்றி ஒடுங்கும் பொருள்களில் ஒருவராய் உள்ள எவர் அறிதல் கூடும்? ஒருவரும் அறிதல் கூடாது` என்பதாம்.
`தோன்றி ஒடுங்கும் பொருள்கள் அனைத்திற்கும் இறைவன் நிலைக் களம்` என்பதை மெய்கண்ட தேவர், ``வித்துண்டா மூலம் முளைத்தவா`` 1 என விளக்கினார்.
இதனையே பிற்காலத்தில் பட்டினத்து அடிகளும், `நுரையும், திரையும், நொப்புறு கொட்பும்
வரையில் சீகா வாரியும் குரைகடல்
பெருத்தும், சிறுத்தும் பிறங்குவ தோன்றி
எண்ணில வாகி யிருங்கடல் அடங்கும்
நின்னிடைத் தோன்றி, நின்னிடை அடங்கும், நீ
ஒன்றினும் தோன்றாய், ஒன்றினும் அடங்காய்`.
2 என அருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 47

உரையும் பொருளும் உடலும் உயிரும்
விரையும் மலரும்போல் விம்மிப் - புரையின்றிச்
சென்றவா றோங்கும் திருக்கயிலை எம்பெருமான்
நின்றவா றெங்கும் நிறைந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

புரை - குற்றம்.
அஃது இங்கு , `தடை எனப்பொருள் தந்தது.
விம்மி - பருத்து.
``சென்றவாறு`` என்பது `தான் வேண்டிய வாறு` என்றபடி.
ஓங்குதல்.
உயர்தல்.
`விம்மி.
.
.
ஓங்கும் திருக்கயிலை எம்பெருமான் எங்கும் நிறைந்து நின்றவாறு, உரையும் பொருளும்.
.
.
போல்` என இயைத்து முடிக்க.
``எங்கும்`` என்பதன்பின் `எல்லாப் பொருளிலும்` என ஒருசொல் வருவிக்க.
உரை - சொல், விரை - மணம், ``போல்`` என்னும் முதல் நிலை, `போல்வது` என முற்றுப் பொருள் தந்தது, ``பெறுவது கொள்வாரும், கள்வரும் நேர்`` 3 என்பதில் ``நேர்`` என்றது போல, இறைவன் எல்லாப் பொருளிலும் அது அதுவாய்; வேற்றுமையின்றிக் கலந்து நிற்றற்கு ``சொல்லும் பொருளும் முதலிய மூன்று உவமைகளைக் கூறினார்.
அவை பொதுப் படப் பிரிப்பற்றதாம் நிலையை உணர்த்தி நின்றன.
`இறைவன் இவ்வாறு நிற்கும் நிலையே உபநிடதங்களில் `அத்துவிதம்` எனப்படு கின்றது` என்பதைப் பிற்காலத்தில் மெய்கண்ட தேவர் தமது சிவஞான போத நூலாலும், அதன் வார்த்திகத்தாலும் விளக்கினார்.

பண் :

பாடல் எண் : 48

நிறைந்தெங்கும் நீயேயாய் நின்றாலும் ஒன்றின்
மறைந்தைம் புலன்காண வாராய் - சிறந்த
கணியாரும் தண்சாரற் காளத்தி ஆள்வாய்
பணியாயால் என்முன் பரிசு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``சிறந்த.....ஆள்வாய்`` என்பதை முதலிற் கொண்டு, இறுதியில் `முன் பரிசு என்? பணியாய்` என மாற்றி முடிக்க.
``பார் அவன் காண்; பாரதனில் பயில் ஆனான்காண்; பயிர் வளர்க்கும் துளி அவன்காண்; துளியில் நின்ற - நீர் அவன்காண்`` * என்றாற்போலப் பல இடங்களிலும் `எல்லாப் பொருளும் அவனே` என்றல், மேலை வெண்பாவிற் கூறியவாறு, எங்கும், எல்லாப் பொருளிலும் உடலில் உயிர்போல வேற்றுமையின்றி அது அதுவேயாய்க் கலந்து நிற்கும் கலப்பு நோக்கியே என்பது, ``நிறைந்தெங்கும் நீ யேயாய் நின்றாலும்`` என்றமையால் விளங்கும் உயிர் எங்கும் நிறைந்து நிற்பினும் ஐம் பொறியில் ஒன்றிற்கும் புலனாகாது மறைந்து நிற்றல் போல, எல்லாப் பொருளிலும் நீ நிறைந்து நிற்பினும் ஐம்பொறிகளில் ஒன்றிற் புலனாகாதே மறைந்து நிற்கின்றாய்; உன்னை முன் பரிசு (நாங்கள் நினைக்கும் முறைமை) யாது? பணித்தருள்` என்பது இவ்வெண்பா வின் சிறந்த பொருள்.
நினைத்தல் மனத்தின் தொழிலாயினும் அஃது ஐம்பொறிகள் உணர்ந்தவற்றையே நினைத்தல்லது, அவற்றிற்கு உணர வராத பொருளை நினைக்கவல்லது அன்று ஆதலின், ``ஐம்புலன் ஒன்றின் காணவாராய்; உன்னை நாங்கள் நினைக்கும் பரிசு என்`` என்றார்.
`கருவிகள் வழியாக நினைக்க முயலாமல் அருள் வழி யாக நினைக்க முயலாமல் அருள் வழியால் நினைக்கின் காணப்படு வான்- என்பது, ``பணியாய்`` என்றதனாற் போதரும் குறிப்புப் பொருள்.
புலன், பொறிகளை உணர்த்தலின் ஆகுபெயர்.
காண்டல் - புலப்பட உணர்தல்.
கணிவேங்கை மரம், ஆல் , அசை.

பண் :

பாடல் எண் : 49

பரிசறியேன் பற்றிலேன் கற்றிலேன் முற்றும்
கரியுரியாய் பாதமே கண்டாய் - திரியும்
புரம்மாளச் செற்றவனே பொற்கயிலை மன்னும்
பரமா அடியேற்குப் பற்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``திரியும் புரம்`` என்பது முதலாகத் தொடங்கி இறுதியில் `அடியேற்குப் பற்றுக் கண்டாய்` என முடிக்க.
பரிசு - பொருள்களின் நன்மை தீமை `அவற்றைப் பகுத்தறியும் அறிவிலேன் என்றபடி.
அறிவில்லாமையால் பற்றத் தகுவதனைப் பற்றிலேன்.
கற்றிலேன் - அறிந்து பற்றினவர்களை அடைந்து கேட்டும் உணர்ந் திலேன்.
`கரி உரியாய் பாதமே அடியேற்கு முற்றும் பற்று` என இயைக்க.
முற்றும் பற்ற - முற்றுமான (முழுமையான) துணை.
`வேறு துணை ஒன்றும் இன்று` என்பதாம்.
``பரிசறியேன்`` என்பது முதலாகக் கூறியன, ``யானாக அத்தன்மையைப் பெறும் ஆற்றல் இலேன்` என்றபடி.
உன் பாதமே துணை என அடைந்தேன்` என்பதாம்.
இனி உன் திருவுள்ளம் இருந்தவாறு செய்க` என்பது குறிப்பெச்சம்.
``கரி உரியாய்`` என்பது முன்னிலை வினைக்குறிப்புப் பெயர்.
கண்டாய், முன்னிலையசை.
``திரிபுரம்`` என்பது, ``திரியும் புரம்`` என வினைத்தொகையும் ஆம் என்பது இது போலும் திருமுறை ஆட்சியால் அறிக.
திரியும் புரம்வானத்தில் உலாவுகின்ற கோட்டை மதில்கள்.

பண் :

பாடல் எண் : 50

பற்றாவான் எவ்வுயிர்க்கும் எந்தை பசுபதியே
முற்றாவெண் திங்கள் முளைசூடி - வற்றாவாம்
கங்கைசேர் செஞ்சடையான் காளத்தி யுள்நின்ற
மங்கைசேர் பாகத்து மன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`எவ்வுயிர்க்கும் பற்றாவான்` என எடுத்துக் கொண்டு.
``பசுபதி`` முதலிய பெயர்கள் பலவற்றோடும் முடிக்க.
பற்று - துணை.
பெத்தம், முத்தி என்னும் இரு நிலைகளிலும் எஞ்ஞான்றும் துணையாவான் பசுபதி முதலிய வகையிற் சொல்லப்படும் சிவன் ஒருவனே` என்பதாம்.
பசுபதி - உயிர்கள் எல்லாவற்றிற்கும் தலைவன்.
இப்பெயர் சிவன் ஒருவனுக்கே உரியதாதலை நோக்குக.
ஆதல் - பெருகுதல் ``வற்றா`` என்னும் பன்மை காலம் பற்றி வந்தது.
`காலந்தோறும் பெருகும்` என்க, மன் - உடையவன்.

பண் :

பாடல் எண் : 51

மன்னா கயிலாயா மாமுத்தம் மாணிக்கம்
பொன்னார மாக்கொண்டு பூணாதே - எந்நாளும்
மின்செய்வார் செஞ்சடையாய் வெள்ளெலும்பு பூண்கின்ற
தென்செய்வான் எந்தாய் இயம்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மன்னன் - அனைத்துயிரையும் ஆள்பவன்.
மாமுத்தம், மாணிக்கம்`` என்பவற்றின் `இவைகளை` என ஒருசொல் வருவிக்க.
பொன் - அழகு ``மின் செய்`` என்பதில் செய், உவம உருபு.
செய்வான், வான் ஈற்று வினையெச்சம்.
செய்தல், பயன் தருதல் `பூணாமைக்குக் காரணம், அவைகளால் தான் சிறக்க வேண்டுவதொரு குறையில்லாமை` என்பதும், `பூணுதல், தனது நித்தியத் தன்மையை உணர்த்துதற் பயன் நோக்கி` என்பதும் குறிப்புக்கள்.
``முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா; யாரே அழகுக்கு அழகு செய்வார்`` * எனப் பிற்காலத்து ஆசிரியரும் கூறினார்.

பண் :

பாடல் எண் : 52

இயம்பாய் மடநெஞ்சே ஏனோர்பால் என்ன
பயம்பார்த்துப் பற்றுவான் உற்றாய் - புயம்பாம்பால்
ஆர்த்தானே காளத்தி அம்மானே என்றென்றே
ஏத்தாதே வாளா இருந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மட நெஞ்சே, புயம் பாம்பால்.... இருந்து ஏனோர் பால்...உற்றாய்? இயம்பாய், என இயைத்துக் கொள்க.
பயம் - பயன்.
பார்த்து - எதிர் நோக்கி, பற்றுவான் - பற்றுதற் பொருட்டு புயம் - தோள் ஆர்த்தல் - கட்டுதல்.
`புயத்தைப் பாம்பாலே ஆர்த்தானே` என்க.
``என்ன பயம் பார்த்து உற்றாய்`` என்னும் வினா, `அவரால் கிடைப்பது யாதும் இல்லை` என்னும் குறிப்புடைத்தாய் நின்றது.
`காளத்தி அம் மான் பணியில் வாளா இருந்து, ஏனோர்பால் பயம் பார்த்து உற்றமை யால் நீ அறிவினை இழந்தாய்` என்பது தோன்ற ``மட நெஞ்சே`` என்றார்.

பண் :

பாடல் எண் : 53

இருந்தவா காணீர் இதுவென்ன மாயம்
அருந்தண் கயிலாயத் தண்ணல் - வருந்திப்போய்த்
தானாளும் பிச்சை புகும்போலும் தன்அடியார்
வானாள மண்ணாள வைத்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கயிலாயத்து அண்ணல், தன் அடியார் வான் ஆளவும், மண் ஆளவும் வைத்து, தான் நாளும் வருந்திப் போய்ப் பிச்சை புகும்போலும்! இது என்ன மாயம்! ஆயினும் இருந்தவா காணீர்` என இயைத்து முடிக்க.
முதற்கண், `தொண்டர்காள்` என முன்னிலை வருவிக்க.
`இருந்தவாறு` என்பது குறைந்து நின்றது.
மாயம் - அதிசயம், `ஆயினும் நிகழலே செய்கின்றது` என்பதை ``இருந்தவா`` என்வறார்.
``ஆள`` இரண்டும் வினைக்கண் வந்த செவ்வெண்.
வான் ஆள வைத்தலும், மண் ஆள வைத்தலும் அவரவர் செய்த தவத்திற்கு ஏற்பவாம்.
`வேண்டுவார் வேண்டும் பயனை வழங்குபவன் பிச்சை புகுகின்றான்` என்றால், அஃது அதிசயமே யாயினும், ஊன்றி நோக்கின் அது தன்பொருட்டாகாது பிறர் பொருட்டாய், இயற்கையாய்விடும் - என்பது கருத்து.
இவற்குப் பிச்சையிடுவார்.
`தந்தவன் தண்டல் செய்கின்றான்` என்னும் உணர்வு தோன்றப் பற்றறுதல் பயன் என்க.

பண் :

பாடல் எண் : 54

வைத்த இருநிதியே என்னுடைய வாழ்முதலே
நித்திலமே காளத்தி நீள்சுடரே - மொய்த்தொளிசேர்
அக்காலத் தாசை அடிநாயேன் காணுங்கால்
எக்காலத் தெப்பிறவி யான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வைத்த.....சுடரே, யான் காணுங்கால் எக்காலத்து, எப்பிறவி, ஒளி மொய்த்துச் சேர் அக்காலத்து அடிநாயேன் ஆை\\\\\\\\u2970?` என இயைத்து முடிக்க.
வைத்த - சேமித்து வைத்த.
இரு - பெரிய.
வாழ் முதல் - வாழ்விற்கு முதல்.
நித்திலம் - முத்து.
வைத்த நிதி, இளைத்த காலத்தில் உதவும்.
வாழ்விற்கு முதலாலேதான் வாழ்வு உளதாகின்றது.
நித்திலம் - அழகைத் தரும்.
`இறைவன் இம்மூன்றும் போல்பவனாய் உள்ளான்` என்பதாம்.
`காலம்` என்பது அம்முக்குறைந்து, ``கால்`` என நின்றது.
``பிறவி`` என்பதும் ஆகுபெயராய், அஃது உள்ள காலத்தையே குறித்தது.
``ஆை\\\\\\\\u2970?`` என்பதன் பின் `உள்ளது` என்னும் பயனிலை எஞ்சி நின்றது.
`யான் உன்னை நேரே காணுங்காலம், எந்தக் காலத்தில் உளதாகின்ற எனது பிறவிக் காலமோ அந்தக் காலத்தையே அடியேன் அவாவிநிற்கின்றேன்` என்பது இவ்வெண்பாவின் திரண்ட பொருள்.
`அந்தக் காலமே எனக்கு ஒளி மிக்க காலமாகும்` என்பதும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 55

யானென்றும் தானென்று இரண்டில்லை என்பதனை
யானென்றுங் கொண்டிருப்பனா னாலும் - தேனுண்
டளிகள்தாம் பாடும் அகன்கயிலை மேயான்
தெளிகொடான் மாயங்கள் செய்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``தானென்று`` என்பதில் ``யானென்றும்`` என்பதிற் போல எண்ணும்மை விரிக்க.
இரண்டு இல்லை - வேறு வேறாய்ப் பிரிந்து நிற்றல் இல்லை.
`உடலும், உயிரும் போல் இருவரும் ஒன்றியே உள்ளேம்` என்றபடி.
`இவ்வாறு நாங்கள் இருவரும் ஒன்றியிருப்பினும் அவர் என்னோடு இருக்கும்.
இருப்பினை யான் உணராதபடி அவன் எனது அறிவை மறைத்தல் செய்கின்றான்` என்பது பிற்கூற்றின் பொருள்.
தெளி - தெளிவு.
மாயம் - மறைத்தல் `இரண்டில்லை` என்பது கலைஞானத்தால் உணர வருகின்றது.
அவ்வுணர்வு பேதைப் பெண் காம நூற்பொருளை உணர்வது போல்வதே யன்றி, அனுபவ உணர்வு அன்றாகலானும், அனுபவ உணர்வு அவன் அருளவே வரும் ஆகலானும், ............. இரண்டில்லை என்பதனை
யான் என்றும் கண்டிருப்பன் ஆனாலும், -
கயிலை மேயான்
மாயங்கள் செய்து தெளிகொடான்
என்றார்.
எனவே, ``கண்டிருப்பன்`` என்பது கலைஞானத்தையும் ``தெளி`` என்றது அநுபவ ஞானத்தையும் ஆயின.
இறுதியில், `யான் செய்வது என்` என்னும் குறிப்பெச்சம் வருவிக்க.
தெளிவித்தலே இறைவனுக்கு இயல்பாவதன்றி, மறைத்தல் அவனுக்கு இயல்பன்று ஆயினும், உடல் நலத்தையே செய்கின்ற மருத்துவன் கழலையைப்போக்கக் கருவியாற் கீறி அழ வைப்பது போல, அவன் (இறைவன்) ஆணவத்தை மெலிவித்தற்கு அதனது மறைக்கும் ஆற்றலைச் செயற்படுத்தலையே, அவனே மறைத்தலைச் செய்வதாக நூல்கள் கூறும்.
அவனது ஆற்றல் (சக்தி) ஆணவம் முதலிய மலங்களைச் செயற்படுத்தி மறைப்பினை உண்டாக்கும் பொழுது, `திரோதான சத்தி` என்றும், மலம் நீங்கியபின் தன்னைக் காட்டியருளும் பொழுது `அருட் சத்தி` என்றும் பெயர் பெறும்.
இரண்டும் செயலால் வேறாவன அல்லது பொருளால் வேறல்ல; ஒன்றேயாம்.
இரண்டும் கருணையே யன்றி, எதுவும் கொடிதன்று, திரோதான சத்தி மறக் கருணை; அருட் சத்தி அறக் கருணை, மறக் கருணையாவது, செயலால் வன்கண்மையுடையது போன்று, பயனால் நலம் செய்வது; அறக் கருணையாவது, செயல், பயன் இரண்டினாலும் இனிதாவது.

பண் :

பாடல் எண் : 56

மாயங்கள் செய்துஐவர் சொன்ன வழிநின்று
காயங்கொண் டாடல் கணக்கன்று - காயமே
நிற்பதன் றாதலால் காளத்தி நின்மலர்சீர்
கற்பதே கண்டீர் கணக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதற்கண், `உலகீர்` என்னும் முன்னிலை வருவிக்க.
``ஐவர்`` என்பதை முதலிற் கொள்க.
ஐவர் - ஐம்புலக் கள்வர்.
மாயம் - வஞ்சனை; அஃதாவது நல்லவர்போல் காட்டித் தீமையில் வீழ்த்துதல்.
`கள்வர்` என்றதற்கு ஏற்ப.
``சொன்ன`` என்றாராயினும் `செலுத்தியது` என்பதே பொருள் காயம் - உடம்பு.
`காயத்தை` என உருபு விரிக்க.
கொண்டாடுதல் - பாராட்டுதல், அது இயன்ற மட்டும் பேணிக் காத்த லாகிய தன் காரியம் தோற்றி நின்றது.
கணக்கு முறைமை.
``கணக்கு அன்று`` என்பதன்பின்.
`ஏன் எனில்` என்பது வருவிக்க.
காயமே - காயமோ.
சீர் - புகழ் கற்பது - பலகாலும் சொல்லுதல்.
கண்டீர், முன்னிலை யசை.

பண் :

பாடல் எண் : 57

கணக்கிட்டுக் கொண்டிருந்து காலனார் நம்மை
வணக்கி வலைப்படா முன்னம் - பிணக்கின்றிக்
காலத்தால் நெஞ்சே கயிலாயம் மேவியநற்
சூலத்தான் பாதம் தொழு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வணக்கி - தாம் சொன்ன படி கேட்க வைத்து, `படுத்தல்` என்பதில் பிறவினை விகுதி தொகுக்கப்பட்டு, ``படா`` என வந்தது பிணக்கு மாறுபாடான எண்ணம்.
காலத்தால் காலத்தின்கண், `இளமையிலே` என்றபடி, வேற்றுமை மயக்கம்.

பண் :

பாடல் எண் : 58

தொழுவாள் பெறாளே தோள்வளையும் தோற்றாள்
மழுவாளன் காளத்தி வாழ்த்தி - எழுவாள்
நறுமா மலர்க்கொன்றை நம்முன்னே நாளைப்
பெறுமாறு காணீர்என் பெண்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`எண் பெண் மழுவாளன் காளத்தி வாழ்த்தி எழுவாள்; தொழுவாள்; தன் தோள்வளையும் தோற்றாள்.
ஆயினும் நறுமாமலர்க்கொன்றை பெறாளே; (இன்று இல்லை என்றாலும்) நாளை நம் முன்னே (அதனைப்) பெறுமாறு காணீர்` எனக் கூட்டிப் பொருள் கொள்க.
``பொருளே`` என்னும் ஏகாரம் தேற்றம்.
எழுவாள்- துயில் ஒழிவாள்.
இதுவும் செவிலி கூற்று.
காப்பு மிகுதி முதலியவற்றுள் யாதானும் ஒரு காரணத்தால் தலைவி வேறுபட்டவழி, `இஃது எற்றி னான் ஆயிற்று` எனத்தாயர் ஆராய்வுழித் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றவாறே செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்றது.
செவிலி தலைவியை ``என் பெண்`` என்று எடுத்துக் கூறியது, அவள் மாட்டுத் தனக்கு உள்ள அன்பின் மிகுதி தோன்றுதற்கு.
செவிலி ஆயத்தாரையும் உளப்படுத்து, ``காணீர்`` என்றாள்.
சிவபெருமானை வாழ்த்தியெழுதலும், தொழுதலும் உடையராய்ப் பேரன்பு செய்வார் என்றாயினும் ஒருநாள் அவனைத் தலைப்படவே செய்தல் இதன் உள்ளுறை.

பண் :

பாடல் எண் : 59

பெண்இன் றயலார்முன் பேதை பிறைசூடி
கண்நின்ற நெற்றிக் கயிலைக்கோன் - உண்ணின்ற
காமந்தான் மீதூர நைவாட்குன் கார்க்கொன்றைத்
தாமம்தா மற்றிவளைச் சார்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பிறை சூடியே, கயிலைக் கோனே` என இரு விளி களையும் முதற்கண் வைத்து, ``பெண்`` என்பதன்முன் `என்` என்பதும், ``பேதை`` என்பதன்பின் `ஆயினாள்` என்பதும் வருவிக்க.
தான், அசை.
மீதூர்தல் - புறத்தார்க்குப் புலனாகுமாறு மிகுதல்.
எனவே, நாணழிந்தாளாம்.
தாமம் - மாலை.
மற்று.
அசை.
சார்தல் - பக்கத்தே வருதல்.
இது ``மாலையிரத்தல்`` என்னும் துறை.
தோழிமேல் வருவது இங்குச் செவிலி மேலாதாய் வந்தது.
இது தூதிடையாடலின் * வகை.
எனவே, பெருந்திணையாம்.
மெய்யுணர்வாசிரியர் மெய்யுணர் மாணாக்கர் பொருட்டு இறைவனையிரத்தல் இதன் உள்ளுறை.

பண் :

பாடல் எண் : 60

சார்ந்தாரை எவ்விடத்தும் காப்பனவும் சார்ந்தன்பு
கூர்ந்தார்க்கு முத்தி கொடுப்பனவும் - கூர்ந்துள்ளே
மூளத் தியானிப்பார் முன்வந்து நிற்பனவும்
காளத்தி யார்தம் கழல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அன்பு`` என்றதை, `அன்பு கூர்ந்து` என மீட்டும் கூட்டுக.
மூளத்தியானித்தல் - ஆழத் தியானித்தல்.

பண் :

பாடல் எண் : 61

தங்கழல்கள் ஆர்ப்ப விளக்குச் சலன்சலன்என்
றங்கழல்கள் ஆர்ப்ப அனலேந்திப் - பொங்ககலத்
தார்த்தா டரவம் அகன்கயிலை மேயாய்நீ
கூத்தாடல் மேவியவா கூறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அகன் கயிலை மேயாய்`` என்பதனை முதலிற் கொள்க.
தங்கு அழல்கள் ஆர்ப்ப ஆங்காங்கு எரியும் நெருப்புக்கள் தம் ஒலியை எழுப்ப ``சலன்சலன்`` என்பது ஒலிக்குறிப்பு.
அம் - அழகிய.
``விளக்குப் போலும் அனலை ஏந்தி` என இயைக்க.
பொங்கு அகலத்து ஆடு அரவம் ஆர்த்தது - அழகு மிகுந்த மார்பின்கண் படம் எடுத்து ஆடுகின்ற பாம்பைக் கட்டி, மேவியவா - விரும்பியவாறு.
`அரசர் முதலியோரை மகிழ்வித்துப் பொருளும், புகழும் பெற வேண்டுவார் செய்யும் செயலை நீ மேற்கொண்டவாறு என்? அதனை நீ கூறு` என்பதாம்.
`உனது இயல்புகளைக் கூத்துச் செய்கைகளால் உணர்த்திப் பக்குவிகளை ஆட்கொள்ளவே மேற்கொண்டாய் போலும்` என்பது குறிப்பு.
`ஆடும் எனவும் அருங்கூற்றம் உதைத்து வேதம்
பாடும் எனவும் புகழ் அல்லது பாவம் நீங்கக்
கேடும் பிறப்பும் அறுக்கும் எனக் கேட்டீ ராகில்
நாடுந் தொழிலார்க் கருளல்லது நாட்டலாமே.
` * எனத் திருஞானசம்பந்தர் அருளிச்செய்தமை காண்க.

பண் :

பாடல் எண் : 62

கூறாய்நின் பொன்வாயால் கோலச் சிறுகிளியே
வேறாக வந்திருந்து மெல்லெனவே - நீறாவும்
மஞ்சடையும் நீள்குடுமி வாளருவிக் காளத்திச்
செஞ்சடைஎம் ஈசன் திறம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கோலச் சிறுகிளியே, (நீ) வேறாக வந்திருந்து, நின் பொன்வாயால், எம் ஈசன் திறம் மெல்லெனவே கூறாய்` என இயைத்துக் கொள்க.
பொன் - அருமை இதனைப் பேசுதல் பற்றிக் கொள்க.
கோலம் - அழகு.
வேறாக - தனியாக.
வந்து இருந்து - யான் இருக்கும் இடத்திற்கு வந்து இருந்து.
நீறாவும் + நீல் தாவும் - நீல நிறம் பொருந்திய.
மஞ்சு - மேகம்.
குடுமி - சிகரம்.
வாள் - ஒளி.
இது காளத்திப் பெருமான் மேல் காதல் கொண்டாள் ஒருத்தி தனது ஆற்றாமையால் தான் வளர்க்கும் கிளியை நோக்கிக் கூறி இரங்கியது.
`ஈசன் வாராவிடினும் அவன் திறத்தை பிறர் சொல்லக் கேட்பின் ஆற்றுதல் உண்டாகும்` என்பது கருத்து.
திறம் - குணம்.
தன் சொல்லைக் கேட்டலும், கேட்டு மறுமொழி கூறுதலும் இல்லாதனவற்றைத் தனது ஆற்றாமையால் அவற்றையுடையனபோல வைத்து இங்ஙனம் கூறுவனவற்றை, `காமம் மிக்க கழிபடர் கிளவி` என்பர்.
இறைவனிடத்தில் பேரன்பு.
கொண்டவர்களும் அஃறிணைப் பொருள்களை நோக்கி இவ்வாறு கூறுதல் உண்டு.

பண் :

பாடல் எண் : 63

ஈசன் திறமே நினைந்துருகும் எம்மைப்போல்
மாசில் நிறத்த மடக்குருகே - கூசி
இருத்தியாய் நீயும் இருங்கயிலை மேயாற்
கருத்தியாய்க் காமுற்றா யாம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மாசில் நிறத்த மடக் குருகே`` என்பதனை முதலிற் கொள்க.
மாசில் நிறம் - வெண்ணிறம்.
மடம் - இளமை.
குருகு - பறவை அஃது இங்கு நீர்நிலையைச் சார்ந்து வாழும் பறவையைக் குறித்தது.
`நீயும் எம்மைப்போல் கூசி இருத்தியாய்` என இயைக்க.
கூசியிருத்தல் - ஒடுங்கியிருத்தல்.
`இருத்தி` என்னும் முன்னிலை வினையாலணையும் பெயர், `ஆயினமையால்` என்னும் காரணப் பொருளில் வந்த ``ஆய்`` என்னும் செய்தென் எச்சத்தை ஏற்று, ``ஆம்`` என்பதனோடு முடிந்தது.
அருத்தி - விருப்பம்.
அருத்தியுடையதனை ``அருத்தி`` என்றது உபசார வழக்கு `காமம் உற்றாய்` என்பது `காமுற்றாய்` எனக் குறைந்து நின்றது.
``ஆம்`` என்பது, `அவன் கொடுத்தானாம்; நான் வாங்கினேனாம்` என்றல்போல மேவாமைப் பொருளில் வந்தது.
எனவே, ஈற்றடி, நகையுள்ளுறுத்த கூற்றாம்.
அங்ஙனமாயினும் தனது நிலைமையை அதன் மேல் ஏற்றிக் கூறியத னால், ஆற்றாமை மிக்க தலைவிக்கு ஓர் ஆற்றுதல் பிறந்தது.
இதுவும் காமம் மிக்க கழிபடர் கிளவி.

பண் :

பாடல் எண் : 64

காமுற்றா யாமன்றே காளத்தி யான்கழற்கே
யாமுற்ற துற்றாய் இருங்கடலே - யாமத்து
ஞாலத் துயிரெல்லாம் கண்துஞ்சும் நள்ளிருள்கூர்
காலத்தும் துஞ்சாதுன் கண்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`இருங் கடலே.
.
.
இருள்கூர் யாமக் காலத்தும் உன் கண் துஞ்சாது.
(ஆகலின் நீயும்) யாம் உள்ளது உற்றாய்.
(அதனால் நீயும்) காளத்தியான் கழற்கே காமுற்றாயாமன்றே` எனக் கூட்டி முடிக்க.
கழற்கு - கழலைப் பெறுதற்கு.
இரு - பெரிய.
யாமம் - இடையாமம்.
அது துயிலுக்குச் சிறந்த காலம் ஆதலின் உம்மை உயர்வு சிறப்பு.
``யாமத்து`` என்பதில் அத்து, வேண்டாவழிச் சாரியை.
``காலத்தும்`` என்பதன் பின் `ஓலிக்கின்றாய் ஆதலின்` என்பது வருவிக்க.
உற்றது- உற்ற துன்பம்.

பண் :

பாடல் எண் : 65

கண்ணும் கருத்துங் கயிலாய ரேஎமக்கென்
றெண்ணி யிருப்பவன்யான் எப்பொழுதும் - நண்ணும்
பொறியா டரவசைத்த பூதப் படையார்
அறியார்கொல் நெஞ்சே அவர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நெஞ்சே, யான் எப்பொழுதும்` என்று எடுத்துக் கொண்டு, `படையராகிய அவர் அறியார்கொல்` என முடிக்க.
கொல்.
ஐயம்.
ஐயத்திற்குக் காரணம் எதிர்ப்படாமை.
பொறி - புள்ளி.

பண் :

பாடல் எண் : 66

நெஞ்சே அவர்கண்டாய் நேரே நினைவாரை
அஞ்சேல்என் றாட்கொண் டருள்செய்வார் - நஞ்சேயும்
கண்டத்தார் காளத்தி ஆள்வார் கழல்கண்டீர்
அண்டத்தார் சூடும் அலர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முற்பகுதியை; தம் நெஞ்சை நோக்கியும், பிற் பகுதியை உலகரை நோக்கியும் கூறியவாறாகக் கொள்க.
`நினைவாரை, ேநரே `அஞ்சேல்` என்று ஆட்கொண்டு அருள் செய்வார் - எனவும், `அண்டத்தார் சூடும் அலர் காளத்தி ஆள்வார் கழல்` எனவும் இயைக்க.
``அஞ்சேல்`` என்பது வேறு முடிபு ஆகலின் இட வழுவின்று.
சூடுதல்- தலைமேற் கொள்ளல்.
கண்டாய், கண்டீர், முன்னிலை யசைகள்.

பண் :

பாடல் எண் : 67

அலரோன் நெடுமால் அமரர்கோன் மற்றும்
பலராய்ப் படைத்துக்காத் தாண்டு - புலர்காலத்
தொன்றாகி மீண்டு பலவாகி நிற்கின்றான்
குன்றாத சீர்க்கயிலைக் கோ.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியை முதலிற் கொள்க.
``அலரோன்`` முதலிய மூவர்க்கும் படைத்தல் முதலிய மூன்றனையும் நிரலே கொள்க.
`ஆளுதல், அமரரை` என்க.
``மற்றும் பலர்`` என்றதற்கு தேவர் பலருள் அவரவர்க்கு உரியதொழிலைக் கொள்க.
`தேவரை அணு பக்கமாக நோக்கின் பலராயினும், சம்பு பக்கமாக நோக்கின் சிவன் ஒருவனே யாம்` என்பது கருத்து.
இதனால், `தேவராவார் அதிகாரக மூர்த்திகள்` என்பது விளங்கும்.
புலர் காலம் - ஒடுக்கக் காலம், `அப்பொழுது செயல் இன்மையின் தான் மட்டுமே உளன்` என்பதும், `மீண்டு` என்றது, `மறுபடைப்புக் காலத்தில்` என்றபடி.
`பரம்பொருள் ஒன்றோ, பலவோ` என ஐயுறுவார்க்கு, `ஒடுக்கக் காலத்து ஒன்றாகித் தோற்றக் காலத்தில் பலவாகும்` எனவும், `அவ்வாறாகின்றவன் சிவனே` எனவும் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 68

கோத்த மலர்வாளி கொண்டனங்கன் காளத்திக்
கூத்தன்மேல் அன்று குறித்தெய்யப் - பார்த்தலுமே
பண்பொழியாக் கோபத்தீச் சுற்றுதலும் பற்றற்று
வெண்பொடியாய் வீழ்ந்திலனோ வெந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`எத்துணைப் பேரையோ வென்றவர் எத் துணையோ பேர் இருப்பினும் காமனை வென்றவர் ஒருவரும் இலர்; அவனை வென்றவன் சிவன் ஒருவனே` என்பது உணர்த்தியவாறு.
`சிவனடியார்களும் காமனை வென்றார் எனின், அவரும் சிவனது அருளாலே வெல்லுதலின், அவர் வெற்றியும் சிவன் வெற்றியேயாம் என்க.
பண்பு, குற்றம் செய்தாரை ஒறுத்துத் திருத்தும் குணம்.
`அக் குணத்தோடு கூடியதே சிவனது கோபம்` என்றபடி.
அனங்கன் - உருவிலி; மன்மதன்.
பற்று அற்று - துணையில்லாமல்.
அஃதாவது `காப்பவர் இல்லாமல்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 69

வெந்திறல்வேல் பார்த்தற் கருள்செய்வான் வேண்டிஒர்
செந்தறுகண் கேழல் திறம்புரிந்து - வந்தருளும்
கானவனாம் கோலமியான் காணக் கயிலாயா
வானவர்தம் கோமானே வா.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அஞ்சாமை` என்னும் பொருட்டாகிய ``தறுகண்`` என்பது ஒரு சொல்லாயினும் பிரித்துக் கூட்டல் முறைமையால் ``கண்`` என்பதனைத் தனிச்சொல்லாகப் பிரித்து, ``செம்மை`` என்பதனோடும் கூட்டுக.
கேழல் - பன்றி.
கேழல் திறம் - கேழலைக் கொல்லும் செயல் திறம்.
புரிந்து - செய்து.
கானவன் - வேடன்.
கோலம் - வேடம்.
பார்த் தனைக் கொல்லச் சென்ற பன்றியைக் கொல்லும் முகத்தால் சிவ பெருமான் அவனோடு போர்புரியும் திருவிளையாடலைச் செய்து அவனுக்குப் பாசுபதம் அளித்த வரலாற்றைப் பாரதம் கூறும் அச்செயல் அப்பெருமானது எளிவந்த கருணையை இனிது விளக்கி நிற்றலின், அந்த வடிவத்தைக் காண்பதில் இவ்வாசிரியர் அவாமிக்குடையாரா யினார் என்க.
பார்த்தன் - அருச்சுனன்.

பண் :

பாடல் எண் : 70

வாமான்தேர் வல்ல வயப்போர் விசயனைப்போல்
தாமார் உலகில் தவமுடையார் - தாம்யார்க்கும்
காண்டற் கரியராய்க் காளத்தி யாள்வாரைத்
தீண்டத்தாம் பெற்றமையாற் சென்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வா மான் - தாவிச் செல்லுகின்ற குதிரை.
வயம் - வெற்றி.
விசயன் - அருச்சுனன்.
``தாம்`` இரண்டில் முன்னது சாரியை `தவம் உடையார்தாம் உலகில் ஆர்` என மாற்றி யுரைக்க.
தாம் - படர்க்கைப் பன்மை இருதிணைப் பொதுப் பெயர்.
அஃது எழு வாயாய் நின்று பின் வந்த ``அரியராய்`` என்னும் பயனிலை கொண்டு முடிந்தது.
`தான் சென்று தீண்டப் பெற்றமையால், விசயனைப்போல் தவம் உடையார் உலகில் ஆர்` என்க.
சிவபெருமான் பலருக்கு அருள் புரியினும், மெய் தீண்டல் மிக அரிதாம்.
நாயன் மாருள்ளும் அப்பேறு மிகச் சிலர்க்கே கிடைத்தது.
`பார்த்தன் சிவபெருமானோடு மற்போர் தொடங்கிக் கட்டிப் புரண்டான்` என்றால், அவன் செய்த தவம் மிக மிகப் பெரிதேயாம்.
அதனால்தான் திருமுறைகளில் அவன் பல இடங் களில் எடுத்துப் பாராட்டப்படுகின்றான்.
``அருச்சுனற்குப் பாசுபதம் கொடுத்தானை.
.
.
என்மனத்தே வைத்தேனே`` 1 ``பார்த்தனுக் கன்று நல்கிப் பாசுபதத்தை யீந்தாய்.
.
.
.
தீர்த்தனே நின்றன் பாதத் திறமலால் திறம் இலேனே`` 2 என்றாற்போல வருவன பலவும் காண்க.

பண் :

பாடல் எண் : 71

சென்றிறைஞ்சும் வானோர்தம் சிந்தைக்கும் சேயராய்
என்றும் அடியார்க்கு முன்னிற்பர் - நன்று
கனியவாம் சோலைக் கயிலாயம் மேயார்
இனியவா பத்தர்க் கிவர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கனியவாம் சோலைக் கயிலாயம் மேயார்` என்பதை முதலில் வைத்து, ``இவர் பத்தர்க்கு இனியவா நன்று`` என முடிக்க.
``கனியவாம் சோலைக் கயிலாயம்`` என்பதற்குப் பொருள் மேலே உரைக்கப்பட்டது.
``சிவபெருமான் பலர்க்கும் மிகச் சேயனாயினும், அடியார்க்கு மிக அணியனாயிருத்தல் மிக நல்லதாகின்றது என்றபடி.
(1)``ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்`` எனத் தொடங்கும் புறப்பாடலில் ஔவையார் அதியமானைப் பாராட்டியது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

பண் :

பாடல் எண் : 72

இவரே முதல்தேவர் எல்லார்க்கும் மிக்கார்
இவர்அல்லர் என்றிருக்க வேண்டா - கவராதே
காதலித்தின் றேத்துதிரேல் காளத்தி யாள்வார்நீர்
ஆதரித்த தெய்வமே யாம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`திருக்காளத்தி மலையைத் தமதாகக் கொண்டு ஆளும் தேவராகிய இவரே` என எடுத்துக்கொண்டு உரைக்க.
செய்யு ளாகலின் சுட்டுப் பெயர் முன்வந்தது.
முதல் தேவர் - தலைமைக் கடவுள்.
எனவே, `தேவர் பிறர் யாவரும் இவர்தம் பணிக் கடவுளர் என்பது போந்தது.
`இங்ஙனமாகவே - இவர் எல்லாரினும் மேலானவர்- என்பது சொல்ல வேண்டா` என்பது கருத்தாகலின்` ``எல்லார்க்கும் மிக்கார்`` என்றது முடிந்தது முடித்தலாம்.
`அன்னரல்லர்` என வருவிக்க.
இருத்தல் - அறியாமையுட் பட்டிருத்தல்.
``இவர் அல்லர் என்று இருக்க வேண்டா`` என்றது, மேலதனை எதிர்மறை முகத்தால் வலியுறுத்தியதேயாம்.
கவர்தல் - இரண்டு படுதல்; ஐயுறுதல்.
(2) ``கவராதே தொழும் அடியார்`` என அப்பரும் அருளிச் செய்தார்.
தரித்தல் - விரும்புதல்.
ஆதரித்த தெய்வம் - இட்ட தெய்வம்.
வேறு வேறு தெய்வங்களை விரும்புதல், `வேறு வேறு பயன்களை அது அதுவே தரும்` என்னும் எண்ணத்தினாலேயாம்.
`அனைத்துப் பயனையும் இவர் ஒருவரே தருதல் உண்மையாகலின், அனைத்துத் தெய்வங்களும் இவர் ஒருவரேயாவர்` என்றார்.
`ஆம்` என்பது உயர்தினை ஒருமையாய் நின்றமையின் பன்மையொருமை மயக்கமாம்.

பண் :

பாடல் எண் : 73

ஆம்என்று நாளை உளஎன்று வாழ்விலே
தாம்இன்று வீழ்தல் தவமன்று - யாமென்றும்
இம்மாய வாழ்வினையே பேணா திருங்கயிலை
அம்மானைச் சேர்வ தறிவு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நாளை உள என்று`` என்பதை முதலிலே கொள்க.
`நாளை - நாளை - என்று தொடர்ந்து வரும் நாள்கள் பல உள; ஆகையால், நாம் செய்ய வேண்டுவதை நாளைச் செய்து கொள்ள முடியும் என்று எண்ணி, (தாம்) மக்கள் பலரும், `இன்று` என எண்ணப் படும் நாள்களில் உலக மயக்கிலே வீழ்தல் அறிவுடைமையன்று.
(ஏனெனில், ``இன்றைக்கு இருந்தாரை நாளைக் கிருப்பர் என்று எண்ணவோ திடம் இல்லை`` 1 ஆதலின், மனமே,) நாம் எந்த ஒரு நாளிலும் இந்த நிலையற்ற வாழ்வை விரும்பாமல், பெரிய கயிலாய மலையில் வீற்றிருக்கும் தலைவனைப் புகலிடமாக அடைந்திருத்தலே அறிவுடைமையாகும் - என வேண்டும் சொற்கள் வருவித்து உரைத்துக் கொள்க.
`தவம் ஒன்றே தக்கது` என்பார், தக்கதனை இங்கு ``தவம்`` என்றார் அஃது இங்கு அதற்குக் காரணமாகிய அறியாமை மேல் நின்றதைப் பின் ``அறிவு`` என்றது பற்றி அறிக.
அன்றறிவாம் என்னாது அறம் செய்க
என்ற திருவள்ளுவர் வாய்மொழியும் காண்க.
`தகவன்று` எனப் பாடம் ஓதுதலும் ஆம்.

பண் :

பாடல் எண் : 74

அறியாம லேனும் அறிந்தேனும் செய்து
செறிகின்ற தீவினைகள் எல்லாம் - நெறிநின்று
நன்முகில்சேர் காளத்தி நாதன் அடிபணிந்து
பொன்முகலி ஆடுதலும் போம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அறியாது செய்யும் வினை `அபுத்தி பூர்வ வினை` என்றும், அறிந்து செய்யும் வினை, `புத்தி பூர்வ வினை` என்றும் சொல்லப்படும்.
செய்து - செய்தலால்.
செறிதல் - திரளுதல்.
கொடுமை மிகுதி பற்றித் தீவினையையே கூறினாராயினும் நல்வினையும் உடன் கொள்ளப்படும்.
பொன்முகலி, திருக்காளத்தி மலையைச் சார ஓடும் யாறு.
திருக்காளத்திப் பெருமானது திருவருளால் அவ்வாறு பெற் றுள்ள சிறப்பை உணர்த்தியவாறு.
`நெறிநின்று ஆடுதல்` என இயையும் நெறி நிற்றல், திருமுழுக்காடும் முறைவழி நிற்றல்.
`அம்முறைகளுள் தலையாயது சிவவணக்கம்` என்றற்கு, ``காளத்திநாதன் அடிபணிந்து ஆடுதல்` என்றார்.

பண் :

பாடல் எண் : 75

போகின்ற மாமுகிலே பொற்கயிலை வெற்பளவும்
ஏகின் றெமக்காக எம்பெருமான் - ஏகினால்
உண்ணப் படாநஞ்சம் உண்டாற்கென் உள்ளுறுநோய்
விண்ணப்பஞ் செய்கண்டாய் வேறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கயிலை வெற்பளவும்`` என்பதனால், `வடக்கு நோக்கிப் போகின்ற மாமுகிலே` என்க.
எனவே இது வேனிற் காலத்துத் தென்றலால் வருந்தினவள் கூற்றாம்.
காலத்தால் இது பாலைத் திணை.
``எமக்காக இன்று கயிலை வெற்பளவும் ஏகு; ஏகினால்` என்க.
``எமக்கு`` என்பது ஒருமைப் பன்மை மயக்கம்.
எம் பெருமானாகிய உண்டாற்கு என் நோயை வேறு விண்ணப்பம் செய்` என இயைத்து முடிக்க.
வேறு - சிறப்பாக `பொதுவாக நீ விண்ணப்பிக்க வேண்டிய வற்றை விண்ணப்பித்தபின், தனியாகச் சிறந்தெடுத்து விண்ணப்பம் செய்` என்றபடி.
உள் உறு நோய் - பிறர்க்கு வெளிப்படுத்தலாகாது, உள்ளே மறைத்து வைக்கப்படுகின்ற நோய், கண்டாய், முன்னிலை யசை.
இது மேகவிடு தூது.
`உண்ணப்படா நஞ்சை உண்டாற்கு என்னை ஏற்றுக் கொள்ளுதல் ஏலாததன்று` என்பதைக் கூறுக - என்பது குறிப்பு.
இஃது உடம்பொடு புணர்த்தல்.

பண் :

பாடல் எண் : 76

வேறேயும் காக்கத் தகுவேனை மெல்லியலாள்
கூறேயும் காளத்திக் கொற்றவனே - ஏறேறும்
அன்பா அடியேற் கருளா தொழிகின்ற
தென்பாவ மேயன்றோ இன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கொற்றவனே, அன்பா`` என்னும் விளிகளை முதலிற் கொள்க.
``தகுவேனே`` என்னும் ஏகாரம் தேற்றம்.
இதன்பின், `ஆயினும்` என சொல் வருவிக்க.
வேறே - சிறப்பாக இஃது அளியளாம் காரணத்தால் அமைந்தது.
உம்மை சிறப்பு.
`தகுவேனை` என்பது பாடம் அன்று.
மெல்லியலாள், உமை.
ஏறு - இடபம்.
`இன்று அருளாது ஒழிகின்றது` எனக் கூட்டுக.
``இன்று`` என்பது, `அருளு வதே உனக்கு என்றும் இயல்பு` என்பதைக் குறித்து நின்றது.
ஒழிகின்ற தன் காரணத்தை.
``ஒழிகின்றது`` எனக் காரியமாக உபசரித்தார்.
இது தலைவி தனது வேட்கையைத் தானே தலைவனிடம் கூறி.
`வேட்கை முந்துறத்தல்` என்னும் பெருந்திணைத் துறை.

பண் :

பாடல் எண் : 77

இன்று தொடங்கிப் பணிசெய்வேன் யானுனக்
கென்றும் இளமதியே எம்பெருமான் - என்றும்என்
னுட்காதல் உண்மை உயர்கயிலை மேயாற்குத்
திட்காதே விண்ணப்பஞ் செய்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(இளமதி, பெருமான் அணிந்த பிறை பலர், பெருமான் ஊறும் விடையை நோக்கி, `நீ எம்பக்கல் வருங்கால்மெல்ல நட` என வேண்டிக் கொள்ளுதல்போல, இவள், பெருமான் அணிந் துள்ள பிறையை நோக்கி வேண்டுகின்றாள்,) `இளமதியே, இன்று தொடங்கி, யான் உனக்கு என்றும் பணிசெய்வேன்; என்றும் என்னுள் காதல் உண்மையினை எம்பெருமானாகிய கயிலை மேயாற்கு விண்ணப்பம் செய்` என இயைத்து முடிக்க.
``உள்`` என்பது இடப் பெயர்.
அஃது ஆகுபெயராய் ஆங்கு உள்ள நெஞ்சத்தைக் குறித்தது.
திட்குதல் - நாத்தடைப்படுதல்.
இது, `திக்குதல்` என வழங்குகின்றது.
பிறைநுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே.
(புறநானூறு- கடவுள் வாழ்த்து) என்ப ஆகலின், அப்பிறைக்கு என்றும் பணிசெய்வதாகக் கூறியதில் புதிது ஒன்றும் இல்லை.

பண் :

பாடல் எண் : 78

செய்ய சடைமுடிஎன் செல்வனையான் கண்டெனது
கையறவும் உள்மெலிவும் யான்காட்டப் - பையவே
காரேறு பூஞ்சோலைக் காளத்தி யாள்வார்தம்
போரேறே இத்தெருவே போது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கையறவு - செயலற்ற நிலை.
உள் மெலிவு - மனச் சோர்வு.
யான் காட்ட - நான் நேரே புலப்படுத்தற் பொருட்டு.
`இத் தெருவே பையவே போது` என்க.
கார் - மேகம் `தெருவின்கண்ணே` என உருபு விரிக்க.
மேலை வெண்பாவின் உரையிற் கூறியபடி இவள் பெருமான் ஊர்ந்துவரும் விடையை நோக்கி வேண்டினாள்.
போது - வா; இது `புகுது` என்பதன் மரூஉ.

பண் :

பாடல் எண் : 79

போது நெறியனவே பேசிநின் பொன்வாயால்
ஊதத் தருவன் ஒளிவண்டே - காதலால்
கண்டார் வணங்கும் கயிலாயத் தெம்பெருமான்
வண்தார்மோந் தென்குழற்கே வா.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஒளி வண்டே`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
குழற்கு - குழற்கண்; வேற்றுமை மயக்கம்.
`பெருமான் தாரினை மோந்து மீண்டு குழற்கண் வந்தால், குழலும் அத்தாரின் மணத்தினைப் பெற்று, அத்தாரினைச் சூடியதுபோல் ஆகும்` என்னும் கருத்தால் அவ்வாறு செய்யுமாறு கூறினாள்.
இதுவும் அவளது ஆற்றாமையால் சொல்லிய சொல்லேயாகும்.
ஆகவே, `அது பயனுடைய செயல்தானா` என்னும் வினா எழவில்லை.
போது நெறியான - சென்று திரும்பிய வகையில் நிகழ்ந்த செயல்கள்.
`பேசி ஊத` என்க.
பொன், ஒளி இவை `அழகு` என்னும் பொருளன.
`பொன் போலும் வாய்` என உவமையாக்கலும் ஆம்.
`ஊதுதற்குரிய பக்குவத்தில் பல மலர்களைப் பறித்துப் பரிசாகத் தருவேன்` என்க.
`உண்ணத் தருவன், தின்னத் தருவன்` என்பன போல, ``ஊதத் தருவன்`` என்பது செயப்படுபொருள் தொக்கு நிற்க வந்தது.

பண் :

பாடல் எண் : 80

வாவா மணிவாயால் மாவின் தளிர்கோதிக்
கூவா திருந்த குயிற்பிள்ளாய் - ஒவாதே
பூமாம் பொழில்உடுத்த பொன்மதில்சூழ் காளத்திக்
கோமான்வர ஒருகாற் கூவு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``வா வா`` என்னும் அடுக்குத் தொடரை, ``பிள்ளாய்`` என்பதன்பின் கூட்டியுரைக்க.
`மணிவாயால் ஓவாதே தளிர்கோதிக் கொண்டு` என்க.
பூ - அழகு.
அன்றி, `பூம்பொழில், மாம் பொழில்` என இயைத்துரைப்பினும் ஆம்.
வர - வருமாறு.
அஃதாவது.
`நின்பொருட்டாக இறந்து படுவாள் ஒருத்தியைக் காக்க வா எனல்.
கூவு என்பதன்பின் அமையும் என்பது வருவித்து முடிக்க.
`அவன் பேரருளாளன் ஆதலின் ஒருகாற் கூடவே அமையும்` என்பதாம்.
அடுக்கு, விரைவு பற்றி வந்தது.
பிள்ளைப் பிராணிகளில் குயிலும் ஒன்றாதல் பற்றி, ``பிள்ளாய்`` என்றாள்.
``வா இங்கே நீ குயிற் பிள்ளாய்`` * எனத் திருவாசகத்தும் வந்தது.

பண் :

பாடல் எண் : 81

கூவுதலும் பாற்கடலே சென்றவனைக் கூடுகஎன்
றேவினான் பொற்கயிலை எம்பெருமான் - மேவியசீர்
அன்பால் புலிக்காலன் பாலன்பால் ஆசையினால்
தன்பால்பால் வேண்டுதலும் தான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கூவுதல் - அழைத்தல்.
``கூவுதலும்`` என்பதன்பின், `வர` என ஒரு சொல் வருவிக்க.
``மேவிய சீர்`` என்பது முதலாகத் தொடங்கி, ``எம்பெருமான்`` என்பதை, ``வேண்டுதலும்`` என்பதன் பின்னர்க் கூட்டியுரைக்க.
புலிக்காலன் - வியாக்கிர பாத முனிவர்.
பாலன் - அவர் மகன் உபமன்னிய முனிவர் ``பாலன்பால் தன்பால்`` என்பவற்றில் ``பால்`` ஏழன் உருபு.
`பாலன் பசிக்குப் பால் வேண்டப் பாற்கடலையே அழைத்துக் கொடுத்த பெருமான் கயிலைப் பெருமான்` என அவனது அருளையும், ஆற்றலையும் வியந்து கூறிய வாறு.
உபமன்னிய முனிவர்க்காகச் சிவபெருமான் பாற்கடலை அழைத்து கொடுக்க, அதனை அவர் உண்டு மகிழ்ந்த வரலாற்றைக் கோயிற் புராணத்துட் 1 காண்க.
``பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான்`` 2 என்னும் திருப்பல்லாண்டினை யும், ``அத்தர் தந்த அருட்பாற் கடல் உண்டு - சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன்`` 3 என்னும் திருத்தொண்டர் புராணத்தையும் காண்க.

பண் :

பாடல் எண் : 82

தானே உலகாள்வான் தான்கண்ட வாவழக்கம்
ஆனான்மற் றார்இதனை அன்றென்பார் - வானோர்
களைகண்தா னாய்நின்ற காளத்தி யாள்வார்
வளைகொண்டார் மால்தந்தார் வந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``வானோர்`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.
களைகண்- பற்றுக்கோடு, முன்னர்ப் பன்மையாகக் கொள்ள வைத்துப் பின் மூன்று இடங்களில் ``தான்`` என ஒருமையாகக் கூறியது.
`இப் பெருந்தகைமை யுடையார் தமக்கு அடாதது செய்தார்` என்பது தோன்றுதற்கு, `எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்`. (குறள்.,144)
என்பதிற்போந்த பால் மயக்கம்போல.
தான் கண்ட வா - தான் கருதிய வாறே.
வழக்கம் - தனது இயற்கை.
ஆனான் - நீங்கான் `அன்று` எனல்.
`இது தகாது` என இடித்துரைத்தல்.

பண் :

பாடல் எண் : 83

வந்தோர் அரக்கனார் வண்கயிலை மால்வரையைத்
தந்தோள் வலியினையே தாம்கருதி - அந்தோ
இடந்தார் இடந்திட் டிடார்க்கீழ் எலிபோற்
கிடந்தார் வலியெலாங் கெட்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஓர் அரக்கனார், இராவணன்.
ஆர் விகுதி இழிவு குறித்து நின்றது.
இடந்தார் - பெயர்த்தார்.
`அடார்` என்பது இங்கு ``இடார்`` என வந்தது.
`பாறங்கல்` என்பது பொருள்.
முன்னதற்கு முன் வெண்பாவில், வணங்கினார்க்குக் அருளல் சொல்லப்பட்டது.
இவ் வெண்பாவில் தருக்கினாரைத் தெறல் சொல்லப்பட்டது.
அந்தோ, இரக்கக் குறிப்பு.

பண் :

பாடல் எண் : 84

கெட்ட அரக்கரே வேதியரே கேளீர்கொல்
பட்டதுவும் ஓராது பண்டொருநாள் - ஒட்டக்
கலந்தரனார் காளத்தி யாள்வார்மேற் சென்று
சலந்தரனார் பட்டதுவும் தாம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கெட்ட - தீமையை மிக உடைமையால், பெருமையை முற்ற இழந்த.
வேதியர்.
மீமாஞ்சை மதத்தவர்.
அவர் தாருகாவன முனிவர் போன்றவர்.
பட்டது - அசுரர் பலர் அழிந்தமை.
`பண்டு ஒருநாள் சலந்தரனால், (முன்பு பலர்) பட்டதுவும் ஓராது, அரனால் மேல் ஒட்டக் கலந்து சென்று தாம் பட்டதுவும் கேளீர் கொல்? என இயைத்து முடிக்க.
ஒட்டுதல் - வஞ்சினம் கூறிப் போர் தொடங்குதல், கலந்து - உடன்பட்டு, `சலந்தரன்` எனும் அசுரன் பட்டதாவது, சக்கரத்தால் தலை அறுபட்டு வீழ்ந்தது, எல்லாரையும் வென்று செருக்கு மிக்க சலந்தராசுரன் சிவபெருமானை வெல்லக் கருதி அவர் மேல் சென்றபொழுது, அவர் மண்ணிற் கீறிய சக்கரத்தை எடுத்துத் தலையறுப்புண்டு அழிந்த வரலாற்றைக் கந்த புராணத்துட் காண்க.
சிவ பெருமானை - இயல்பாகவே ஏலாது எதிர்க்கும் வேதியரை நோக்கிக் கூற வந்தவர், அசுரருட் சிலரும் அத்தன்மையர் ஆதல் பற்றி, அவர் களையும் உடன் நோக்கிக் கூறினார்.
அரனாராகிய `காளத்தி ஆள்வார் மேல்` என்க.

பண் :

பாடல் எண் : 85

தாம்பட்டது ஒன்றும் அறியார்கொல் சார்வரே
காம்புற்ற செந்நெற் கயிலைக்கோன் - பாம்புற்ற
ஆரத்தான் பத்தர்க் கருகணையார் காலனார்
தூரத்தே போவார் தொழுது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியை இறுதியிற் கூட்டுக.
அங்ஙனம் கூட்டு தற்குமுன் `காலனார் பத்தர்க்கு அருகு அணையார்; தொழுது தூரத்தே போவார்` என இயைத்துக்கொள்க.
காம்பு - மூங்கில்.
`அதினின்றும் விளைந்த நல்ல நெல்லையுடைய கயிலை` என்க.
``போவார்`` என்பதன்பின், `ஆம்! முன்பு தான் பட்டதைச் சிறிதாயினும் அறியாது போவாரல்லர்; அதனால் அருகு சார்வாரோ` என ஏதுக் கூறி முடிக்க.
முன்புபட்டது, மார்கண்டேயர்மேற் சென்று உதையுண்டது இவ் வரலாறும் கந்தபுராணத்துட் கூறப்பட்டது.
`கொல்` என்னும் ஐய இடைச் சொல் எதிர்மறை வினையோடு பொருந்த உடன்பாடாய தேற்றத்தை உணர்த்திற்று.
``சார்வரே`` என்னும் ஏகாரம் வினாப் பொருட்டாய், எதிர்மறைப் பொருளைத் தந்தது.
``காலனார்`` என்னும் பன்மை இழிவு குறித்து நின்றது.
இழிவாவது மார்க்கண்டேயர் மேல் தன் நிலைமையறியாது சென்று கெட்டது.

பண் :

பாடல் எண் : 86

தொழுது நமனுந்தன் தூதுவர்க்குச் சொல்லும்
வழுவில்சீர்க் காளத்தி மன்னன் - பழுதிலாப்
பத்தர்களைக் கண்டால் பணிந்தகலப் போமின்கள்
எத்தனையும் சேய்த்தாக என்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நமனும்`` என்பதை முதலிலும், ``சொல்லும்`` என்பதை ஈற்றிலும் வைத்துரைக்க.
அங்ஙனம் உரைக்குங்கால் ``பணிந்து எத்தனையும் சேய்த்தாக அகலப் போமின்கள்` என்க.
``நமனும்`` என்னும் உம்மை, உயர்வு சிறப்பு.
தொழுதல்.
பத்தரைத் திசை நோக்கியாம்.
எத்தனையும் சேய்த்து ஆக - நீவீர் செல்லுமிடம் எவ்வளவு தொலைவாக முடியுமோ அவ்வளவு தொலைவு ஆகும்படி.
``சிவனடியரை நமன் தூதுவர் அணுகார்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 87

வென்றைந்தும் காமாதி வேரறுத்து மெல்லவே
ஒன்ற நினைதிரேல் ஒன்றலாம் - சென்றங்கை
மானுடையான் என்னை உடையான் வடகயிலை
தானுடையான் தன்னுடைய தாள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஐந்தும் வென்று` என்க.
ஐன்து, ஐம்புலன்.
காமாதி- காமம் முதலிய அறு பகைகள்.
அவை காமம், குரோதம்.
உலோபம், மோகம், மதம் மாற்சரியம் - என்பன.
இவை அவா, வெகுளி, இவறன்மை, மயக்கம், செருக்கு, அழுக்காறு என்பனவாம்.
`இவை களை வேரறுத்து` என்க.
ஒன்ற - பொருந்த.
`தாளில் ஒன்ற` எனவும் `சென்று ஒன்றலாம்` எனவும் இயையும், ``தான்`` எழுவாய் வேற்றுமை.
``உடையான்`` என்னும் குறிப்பு வினைப் பயனிலையைக் கொண்டது.

பண் :

பாடல் எண் : 88

தாளொன்றால் பாதாளம் ஊடுருவத் தண்விசும்பில்
தாளொன்றால் அண்டம் கடந்துருவித் - தோளொன்றால்
திக்கனைத்தும் போர்க்கும் திறற்காளி காளத்தி
நக்கனைத்தான் கண்ட நடம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``திறல் காளி`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.
``கண்ட`` என்பது, `உண்டாக்கிய` என்னும் பொருட்டாய், `செய்வித்த`` எனப் பொருள் தந்து, ``நக்கனை`` என்னும் இரண்டா வதற்கு முடிபாயிற்று.
செய்வித்தமையாவது, செய்ததற்கு ஏதுவாய் நின்றமை, `தாருகன்` என்னும் அசுரனை அழித்த காளி, அதனால், செருக்கி உலகத்திற்கு ஊறு உண்டாக்கச் சிவபெருமான் அவளோடு நடனப் போர் செய்து, அவள் நாணிச் செருக்கொழியப் பண்ணினான் என்பது புராணம்.
``தாருகன் - பேருரங் கிழித்த பெண்ணும் அல்லள்``* என இளங்கோவடிகளும் கூறினார்.
அப்பர் தமது தச புராணத் திருப் பதிகத்து நான்காவது திருப்பாடலில் இவ்வரலாற்றைக் குறித்தருளி னார்.
`இந்நடனம் ஊர்த்துவ தாண்டவம்` என்பதை ``தண் விசும்பில் - தாள் ஒன்றால் அண்டம் கடந்துருவி`` எனக் குறித்தருளினார்.
அஃதாவது ஒருகால் ஆகாயம் நோக்கிச் செல்ல உயரத் தூக்கி ஆடிய நடனம்.
`இந்நடனம் திருவாலங் காட்டில் நிகழ்ந்தது` என்பது ஐதிகம்.
முதற்கண் இறைவன் மேல் வைத்து ``ஊடுருவ`` என்றார்.
போர்க்கும்- மறைக்கும்.
இறைவன் பாதாளம் ஊடுருவும்படி தான் அண்டம் கடந்து உருவித்திக்கனைத்தும் போர்க்கும்` - என இயைத்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 89

நடம்ஆடும் சங்கரன்தாள் நான்முகனும் காணான்
படம்ஆடும் பாம்பணையான் காணான் - விடம்மேவும்
காரேறு கண்டன் கயிலாயன் றன்உருவை
யாரே அறிவார் இசைந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நான்முகன் (பிரமன்) `முன்னே முடியைக் கண்டு விட்டுப் பின்னே அடியைக் காண்பேன்` என முயன்று, முதல் முயற்சியிலே தோல்வியுற்றமை பற்றி ``தாள் நான்முகனும் காணான்`` என்றார்.
தாளைப் பாம்பணையான் (மாயோன்) தேடிக்காணாது எய்த்தமை வெளிப்படை.
காணாமைக் குறை இனிது புலப்பட வேண்டித் தனித்தனித் தொடராகக் கூறினார்.
தன், சாரியை, `இசைந்து அறிவார்` என மாற்றுக.
இசைதல் - தம் இச்சையாகத் தாமே காண நினைத்தல்.
``யாரே அறிவார்`` - என்னும் வினா, அறிவார் ஒருவரும் இன்மையைக் குறித்தது.
`அவனே காட்டினாலன்றித் தாமாக ஒருவரும் காண மாட்டார்` என்பது கருத்து.
காண்பார் ஆர்? கண்ணுதலாய்க்
காட்டாக் காலே.
* என்னும் அருட்டிரு மொழியைக் காண்க.
இக்கருத்தினை வரும் வெண்பாவில் வெளிப்பட எடுத்துக் கூறுவார்.

பண் :

பாடல் எண் : 90

இசையும்தன் கோலத்தை யான்காண வேண்டி
வசையில்சீர்க் காளத்தி மன்னன் - அசைவின்றிக்
காட்டுமேல் காட்டிக் கலந்தென்னைத் தன்னோடும்
கூட்டுமேல் கூடவே கூடு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இசையும் - தானே தன் இச்சைப்படி ஏற்கின்ற.
கோலம் - வடிவம்.
எனவே, தனக்கு உருவத்தைப் பிறர் படைத்துத் தர வேண்டாமை விளங்கிற்று.
``வேண்டி`` என்பதற்கு, `தான் வேண்டி` என உரைக்க.
வசை - தளர்ச்சி அஃதாவது, அருள் பண்ணாமை, ``கூடலே`` என்பதை முதலிற் கொள்க.
``காட்டி`` என்றது அனுவாதம்.
கலத்தல் - எதிர்ப்படுதல்.
``காட்டுமேல், கூட்டுமேல்`` என்பன, `அவைகளை அவன் செய்தல் உண்டாகும் எனின்` என்னும் பொருள.
அகப்பொருள் நிகழ்ச்சிகளில் தலைவனைப் பிரிந்து ஆற்றாத தலைவி தலைவனது வருகை குறித்துப் பார்க்கும் குறிகளுள் கூடல் இழைத்தல் ஒன்று.
அஃதாவது, கண்ணை மூடியிருந்து நிலத்தில் வரைந்துவிட்டு விழித்துப் பார்க்கும் பொழுது வட்டத்தின் இரு முனை களும் ஒன்று கூட, வட்டம் குறையின்றி நன்கு அமைந்திருப்பின் `தலைவன் விரைவில் வந்து சேர்வான்` என்பதும், இருமுனைகளும் வேறு வேறாய்ப் போய்விட்டிருப்பின் `தலைவன் அண்மையில் வாரான்` என்பதும் முடிவுகளாகும்.
இம்முடிவுகளில் அக்கால மக்கட்கு முழு நம்பிக்கையிருந்தது.
இருமுனைகளும் ஒன்று கூடும்படி வரைதலால் அந்த வட்டத்திற்கே `கூடல்` என்பதும், அதனை வரைதற்கு, `கூடல் இழைத்தல்` என்பதும், பெயர்களாயின.
`நீடு நெஞ்சுள் நினைந்து, கண் நீர்மல்கும்
ஓடும் மாலினொடு, ஒண்கொடி மதராள்
மாடம் நீள்மரு கற்பெரு மான்வரின்
கூடு நீஎன்று கூடல் இழைக்குமே.
` * என அப்பர் பெருமானும் அருளிச் செய்தார்.
ஆகவே, இப்பாட்டு காளத்திப் பெருமான் மேல் காதல் கொண்டு ஆற்றாளாய தலைமகள் ஒருத்தி, `அவன் முற்றறிவும், பேரருளும் உடையன் ஆதலின் தன்னைக் காதலித்தார் முன் தான் விரைய வந்து அருள் பண்ணுவான்`- என்னும் உறுதிப்பாடு உடையளாய், `ஆயினும் அதனைக் கூடல் இழைத்துக் காண்போம்` எனக் கருதி அங்ஙனம் இழைக்கின்றாள் கூற்றாயிற்று.
ஆயினும், உண்மையில் இஃது ஆசிரியரது பேரன்பினை.
இம்முறையால் வெளிப்படுத்திய கூற்றேயாதல் தெளிவு.
இருவேறிடங்களில் விலகியுள்ளவர் விரைய ஓரிடத்தில் ஒன்று கூடுதலை அறிவித்தற்கு, இருமுனைகள் வேற்றுமை தோன்றாது ஒன்று கூடும் வட்டம் மிகச் சிறந்த குறியாயிற்று.

பண் :

பாடல் எண் : 91

கூடி யிருந்து பிறர்செய்யுங் குற்றங்கள்
நாடித்தம் குற்றங்கள் நாடாதே - வாடி
வடகயிலை ஏத்தாதே வாழ்ந்திடுவான் வேண்டில்
அடகயில ஆரமுதை விட்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``இருந்து, நாடி`` என்னும் எச்ச வினைகளால் புறங்கூறுவாரது இயல்பினை விளக்கியவாறு.
``தம் குற்றங்கள் நாடாதே`` என்பதனை முதற்கண் வைத்து உரைக்க.
`ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு`.
1 என்னும் குறளுக்குப் பரிமேலழகர், `தம் குற்றங்களில் பிற குற்றங் களைக் காணாது, புறங்கூறலாகிய அந்தக் குற்றத்தைக் கண்டாலே போதும்` என்பது பட உரைத்தமையும் இங்கு நோக்கத்தக்கது.
நாடுதல் - ஆராய்தல்.
ஆராயுங்கால் சிலரைப் பற்றிப் புறங்கூறப் பொருள் கிடைக்காமலே போகலாம்.
அப்பொழுது அவர்கட்கு அது பற்றித் துன்பமும் உண்டாகலாம் என்பது பற்றி ``நாடி பாடி`` என்றார்.
``ஏத்தாதே வாழ்ந்திடுவான்`` என்றது, காலம் முழுவதையும் இப்படிப் பட்ட செயல்களிலே கழித்தலைக் குறித்தது.
வான் ஈற்று வினையெச்சம் இங்குத் தொழிற் பெயர்ப் பொருட்டாய் நின்றது.
வேண்டுதல் - விரும்புதல்.
அடகு - இலை.
அயிலுதல் - உண்ணுதல்.
`அமுதை விட்டு அடகு அயிலல்` என்பது, `கனியிருப்பக் காய் கவர்தல்` என்பதனோடு ஒத்த ஒரு பழமொழி ``அயில`` என்பது `உண்பார்களாக` என அகர ஈற்று வியங்கோள்.
``அயில்வார்களாக`` என்றது, `அயில்கின்றவர்களோடு ஒத்த அறிவனர்தாம்` என்றபடி `ஏத்தாதே வாழ்ந்திடச் சிலர் விரும்புவார்களாயின், அவர் அமுதை விட்டு அடகு அயில்வார்களாக` என்க.
இதனால், `திருவருள்வழி வாராத இன்பம் இன்பமன்று` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 92

விட்டாவி போக உடல்கிடந்து வெந்தீயிற்
பட்டாங்கு வேமாறு பார்த்திருந்தும் - ஒட்டாவாம்
கள்அலைக்கும் பூஞ்சோலைக் காளத்தி யுள்நின்ற
வள்ளலைச்சென் றேத்த மனம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஆவி விட்டுப் போக` என மாற்றிக் கொள்க.
``உடல்`` எனப் பின்னர் வருதலால், விடுதல், உடலை விடுதலாயிற்று.
பட்டு - பொருந்தி.
ஆங்கு - அதன்கண், பார்த்தல், பல இடங்களில் பல முறை நிகழக் காண்டல்.
`பார்த்திருந்தும் (மக்களுடைய) மனங்கள் சென்று வள்ளலை ஏத்த ஓட்டா` என இயைக்க.
ஒட்டுதல் - ஒருப்படுதல்.
ஆம்.
அசை.
`இஃது அவர்களது வினையிருந்தவாறு` என்பது குறிப்பெச்சம்.
இவ் எச்சத்தால், இரங்குதல் பெறப்பட்டது.
``பார்த் திருந்தும்`` என்றது, `காட்சியளவையானே உணர்ந்தும்` என்றபடி.
``சுடலை சேர்வது சொற்பிரமாணமே`` என அருளிச் செய்தார் அப்பர்.

பண் :

பாடல் எண் : 93

மனம்முற்றும் மையலாய் மாதரார் தங்கள்
கனம்உற்றும் காமத்தே வீழ்வர் - புனமுற்
றினக்குறவர் ஏத்தும் இருங்கயிலை மேயான்
றனக்குறவு செய்கலார் தாழ்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``புனம் முற்றும்`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
அங்ஙனம் உரைக்குங்கால் ``தாழ்ந்து`` என்பதை ``மைய லாய்`` என்பதன் பின் கூட்டி அவ்விரண்டையும் ``வீழ்வர்`` என்பதற்கு முன்னே கூட்டுக.
புனம் முற்று இனக் குறவர் - தினைப் புனங்களில் நிறைந்துள்ள, கூட்டமான குறவர், தான்.
சாரியை - உறசெய்தல், தங்களை ஆளாக்கிக் கொள்ளுதல்.
கனம் - சுமை.
`சுமையாக உற்றும்` என ஆக்கம் விரிக்க, சுமையாக உறுதலாவது உண்டியும், உறையுளும், மருந்தும் ஆகியவற்றால் புறந்தருதலேயன்றி, ஆடை அணிகலங்களால் சிறப்புச் செய்தலும் கடமையாகி விடுதல்.
`மாதாரர் கனம் ஆக` என இயையும்.
``தங்கள்`` என்றது உறவு செய்கலாதாரை.
`தங்கட்கு` என நான்காவது விரிக்க.
தாழ்தல் - அழுந்துதல்.
``மனம் முற்றும் மையலாய்`` என்றது, `அறிவை முற்றிலும் இழந்து` என்றபடி.
`மக்களே மணந்த தாரம் அவ்வயிற் றவரை ஓம்பும்
சிக்குளே அழுந்தி, ஈசன் திறம்படேன்.
` * என்னும் அப்பர் திருமொழியைக் காண்க.
`அஃது உலகியலின் இயல் பினை விரித்தது` என்பது உணரமாட்டாதார், `அவர் தாமே மக்களை யும், தாரத்தையும் உடையராய் இருந்தார்` எனக் கூறிக் குற்றப்படுவர்.
`உலகியலை யான் மேற் கொள்ளா தொழியினும் உடல் ஓம்பலை ஒழிய மாட்டாமையின் உலகியலில் நின்றாரோடு ஒத்தவனாகின்றேன்` என்ற படி.
``இனக் குறவர் ஏத்தும்`` என்றது, கல்லா மாக்களாகிய குறவராயினும் முன்னைத் தவத்தால் கயிலை யருகில் வாழப் பெற்றுச் சிவனை ஏத்துகின்றனர்; `கற்றறிந்தேம்; நல்லொழுக்கம் உடையேம்` எனச் செருக்குவார் அது செய்யாது.
காமத்தே வீழ்கின்றார் - என்பது தோன்றுதற்கு.

பண் :

பாடல் எண் : 94

தாழ்ந்த சடையும் தவளத் திருநீறும்
சூழ்ந்த புலிஅதளும் சூழ்அரவும் - சேர்ந்து
நெருக்கி வானோர்இறைஞ்சும் காளத்தி ஆள்வார்க்
கிருக்கும்மா கோலங்கள் ஏற்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சடை முதலியன காளத்தி ஆள்வார்க்கு மாகோலங் களாக ஏற்று இருக்கும்` என இயைத்து முடிக்க.
`வானோர் (தம்முள்) நெருக்கிச் சேர்ந்து இறைஞ்சும்` என்க.
`கோலங்களாக` என ஆக்கம் விரிக்க.
ஏற்று - ஏற்கப்பட்டு, சிவபிரானது திருக்கோலத்தை வருணித்த வாறு.
தவளம் - வெண்மை.
அதள் - தோல்.

பண் :

பாடல் எண் : 95

ஏற்றின் மணியே அமையாதோ ஈர்ஞ்சடைமேல்
வீற்றிருந்த வெண்மதியும் வேண்டுமோ - ஆற்றருவி
கன்மேற்பட் டார்க்கும் கயிலாயத் தெம்பெருமான்
என்மேற் படைவிடுப்பாற் கீங்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியை முதலிலே கொண்டு, அதன்பின், `ஆற்று அருவி.
.
.
எம்பெருமான்` என்பதை வைத்து உரைக்க.
ஏறு - இடபம்.
பகற் காலத்தில் வெளியே சென்று மேய்கின்ற ஆன் நிரைகள் மாலைக் காலத்தில் ஊரை அடையும் பொழுது எருதுகளின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள மணிகள் ஒலிக்கும்.
அவ்வொலி இராக்காலத்தின் வருகையை அறிவிக்கும் அறிகுறிகள் ஆதலின், தலைவரைப் பிரிந்து தனித்திருக்கும் தலைவியர்க்கு அது வருத்தத்தை மிகுவிக்கும்.
அதனால், ஆற்றாமையுடைய தலைவியரால் வெறுக்கப்படும் பொருள்களுள் காளைகளின் கழுத்தில் உள்ள மணியும் ஒன்றாம்.
அம் முறைமை பற்றி, வீதியில் திருவுலாப் போதுகின்ற சிவபெருமானது இடபத்தின் கழுத்தில் ஒலிக்கும் மணியையும் அவர்மேற் கொண்ட காதலால் வருந்தும் தலைவி வெறுத்துக் கூறினாள்.
`எம்பெருமானது ஏற்றின்` என ஆறாவது விரித்தும்.
`அவனது ஈர்ஞ் சடைமேல்` என ஒரு சொல் வருவித்தும் உரைக்க.
``மணியே`` என்னும் ஏகாரம் பிறவற்றினின்றும் பிரித்தலின் பிரிநிலை.
அமையாதோ - போதாதோ.
கங்கை நீரால் சடை ஈர்ஞ்சடை (குளிர்ந்த சடை) யாயிற்று.
ஏற்றின் மணியைவிட வெண்மதியையே பெரிதும் வெறுத்தாள்.
படை - ஐங்கணை.
அவற்றை விடுப்பவன் மன்மதன்.
அவனுக்கு உதவி செய்வன ஏற்றின் மணியும், ஈர்ஞ்சடைமேல் வெண்மதியும்.
``ஈங்கு`` என்றது, `வாழ் இடமே மன்மதனது போர்க்களமாகி விட்ட இந்த இடத்தில்` என்றபடி.
ஆற்று அருவி - ஆறுபோலப் பாய்கின்ற அருவிகள்.
கல் - பாறைகள்.
ஆர்த்தல் - ஒலித்தல்.
``எம்பெருமான்`` என்பதை ஆறன் உருபேற்றதாகக் கொள் ளாது, விரியாகக் கொண்டு, `நும் ஏற்றின்` எனவும், `நும் சடைமேல்` எனவும் உரைப்பினும் ஆம்.

பண் :

பாடல் எண் : 96

ஈங்கேவா என்றருளி என்மனத்தில் எப்பொழுதும்
நீங்காமல் நீவந்து நின்றாலும் - தீங்கை
அடுகின்ற காளத்தி ஆள்வாய் நான்நல்ல
பணிகின்ற வண்ணம் பணி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தீங்கை அடுகின்ற காளத்தி ஆள்வாய், நீ என் மனத்தில் எப்பொழுதும் நீங்காமல் (நின்று,) - ஈங்கே வா - என்று அருளி வந்து நின்றாலும், நான் நல்லவாறு பணிகின்ற வண்ணம் பணி` எனக் கூட்டி ஓரோர் சொல் வருவித்து முடிக்க.
அடுதல் - போக்குதல்.
``அருளி`` என்னும் எச்சம், `நடந்து வந்தான், ஓடி வந்தான்` என்பவற்றிற்போல வருதல் தொழிலோடு உடன் நிகழும் அடையாய் வந்தது.
வந்து - எதிர் வந்து.
மனத்தில் நீங்காமல் நிற்றல்.
இடையறாது நினைத்தலால் ஆம் நினைவும் பாவனையாகலின், நேர்வருதல் உண்மையாகக் கொள்ளப்படும்.
`கருணை மிகுதியால் நீ நேர்வந்து நிற்பினும், அங்ஙனம் நிற்கும் பொழுது பணிய வேண்டிய முறைகளை நான் அறியேன்.
அதனால், அதனையும் நீயே அறிவித்தருளல் வேண்டும்` என்றபடி.
``தொண்ட னேன் பணியுமா பணியே`` 1 என்றது இப்பொருட்டாயும் நிற்கும்.
``காண்பார் ஆர் கண்ணுதலாய் காட்டாக்காலே`` 2 என்றமையும் அறியற் பாற்று.
ஈற்றடி, மூன்றாம் எழுத்தெதுகை பெற்றது.
`படுகின்ற` எனப் பாடம் ஏதி, `நல்ல செயல்களைப் பொருந்துகின்ற வண்ணம்` என உரைப்பினும் ஆம்.

பண் :

பாடல் எண் : 97

பணியாது முன்இவனைப் பாவியேன் வாளா
கணியாது காலங் கழித்தேன் - அணியும்
கருமா மிடற்றெம் கயிலாயத் தெங்கள்
பெருமான தில்லை பிழை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பாவியேன், இவனை முன் பணியாது, கணியாது வாளா காலங் கழித்தேன்.
அதனால், எங்கள் பெருமானது பிழை இல்லை` என இயைத்து முடிக்க.
கணித்தல் - எண்ணுதல்; பலமுறை நினைத்தல்.
செய்யுளாகலின், ``இவன்`` என்னும் சுட்டுப் பெயர் முன் வந்தது அணிதல் - அழகு செய்தல், `பெருமானது பிழையாக ஒன்றேனும் இல்லை` என்றதனால், `எல்லாம் எனது பிழையே` என்றதாயிற்று.
இக்கருத்தினைப் பட்டினத்து அடிகள், ``பாவிகள் தமதே பாவம்`` எனவும், ``அறுசுவை அடிசில் அட்டினி திருப்பப் புசியா தொருவான் பசியால் வருந்துதல் - அயினியின் குற்றம் அன்று`` 1 என்பது முதலிய உவமைகளாலும் விளக்கியருளுதல் காண்க.

பண் :

பாடல் எண் : 98

பிழைப்புவாய்ப் பொன்றறியேன் பித்தேறி னாற்போல்
அழைப்பதே கண்டாய் அடியேன் - அழைத்தாலும்
என்னா தரவேகொண் டின்பொழில்சூழ் காளத்தி
மன்னா தருவாய் வரம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பிழைப்பு - குற்றம் செய்தல்.
இது, `பிழைத்தல்` எனவும் வரும், வாய்ப்பு - பொருந்துதல்.
இவை இரண்டும் ஒன்றற்கு ஒன்று மறுதலையாய் நேர்மையினின்று விலகுதலையும், நேர்மையில் நிற்றலையும் குறிக்கும்.
இத்தொழிற் பெயர்கள் `ஆகுபெயராய், அச்செயல்களால் விளையும் செயப்படு பொருள்களை உணர்த்தும்.
இவை, நூல்களில் சொல்லப்பட்ட விதி விலக்குக்களை இங்குக் குறித்தன.
`பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன்``
என ஆளுடை அடிகளும் அருளிச் செய்தார்.
`இவற்றுள் ஒன்றையும் அறியேன் என்க.
அழைத்தல் - விரித்தல்.
அஃதாவது `அப்பா, ஐயா, ஆண்டானே, கடவுளே` என்றாற் போலக் கூப்பிடுதல், `அஃதொன்றை மட்டுமே நான் அறிவேன்` என்பதாம்.
`அடியேன் செய்வது அழைப்பதே` என ஒரு சொல்வருவிக்க.
``அழைத்தாலும்`` என்றது, `அஃது ஒன்றையே நான் செய்தாலும்` என்றபடி.
ஆதரவு - அன்பு.
`அறிவிலனாயினும், அன்புடையன்` எனக் கொண்டு இரங்கியருளல் வேண்டும் என்றபடி.
கண்டாய், முன்னிலையசை.

பண் :

பாடல் எண் : 99

வரமாவ தெல்லாம் வடகயிலை மன்னும்
பரமாஉன் பாதார விந்தம் - சிரம்ஆர
ஏத்திடும்போ தாகவந் தென்மனத்தில் எப்பொழுதும்
வாய்த்திடுநீ வேண்டேன்யான் மற்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`யான் வேண்டும் வரமாவதெல்லாம்` என்க.
``வட கயிலை மன்னும் பரமா`` என்பதை முதலிற் கொள்க.
``ஆவ தெல்லாம்`` என்பது ஒருமைப் பன்மை மயக்கம்.
சிரம் ஆர - தலை ஆர; என்றதனால்.
`வணங்கி` என்பது வருவிக்க.
ஆர்தல் - பயனால் நிரம்புதல்.
``தலையாரக் கும்பிட்டு``(1) என அப்பர் பெருமானும் அருளிச் செய்தார்.
``ஆக`` என்னும் செயவென் எச்சம், `பொழுது சாய வந்தான்` என்பது போல அக்காலத்தை உணர்த்தி நின்றது.
``எப் பொழுதும்`` என்றது.
`எத்தனை முறையாயினும்` என்றபடி, ``நீ`` என்பதன்பின், ``எல்லாம்`` என்ற எழுவாய்க்குப் பயனிலையாகிய `அதுவே` என்பது வருவிக்க.
மற்று - பிற வரங்கள்.
`மாற்றுயான் வேண்டேன்` என மாற்றுக.
வாய்த்தல் - நேர்படுதல் `வைத்திடு` என்பது பாடம் அன்று.

பண் :

பாடல் எண் : 100

மற்றுப் பலிபிதற்ற வேண்டா மடநெஞ்சே
கற்றைச் சடையண்ணல் காளத்தி - நெற்றிக்கண்
ஆரா அமுதின் திருநாமம் அஞ்செழுத்தும்
சோராமல் எப்பொழுதுஞ் சொல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மற்றுப் பல பிதற்ற வேண்டா`` என்பதை இறுதிக் கண் கூட்டியுரைக்க.
மடமை - அறியாமை.
அஃதாவது, `பிறவற்றைச் சொல்லுதலால் பயன் உண்டாகும்` எனக் கருதுதல்.
அது பிழையாதல் பற்றி அவற்றை, பிதற்றுதலாகக் கூறினார்.
`காளத்தி அமுது` என இயையும்.
அமுது போல்வானை ``அமுது`` என்றது உவம ஆகு பெயர்.
ஆராமை - நிரம்பாமை; தெவிட்டாமை அஞ்செழுத்தின் சிறப்பு.
மேல் இரு வெண்பாக்களில்(2) சொல்லப்பட்டது.
சொல்லும் பொருளுமே தூத்திரியும் நெய்யுமா`` என்று தொடங்கியவர்.
திருநாம அஞ்செழுத்தைச் சோராமல் எப்பொழுதும் சொல்வதில் முடித்தருளிய அருமை அறிந்து பயன் கொள்ளத்தக்கது.

பண் :

பாடல் எண் : 1

அடியும் முடியும் அரியும் அயனும்
படியும் விசும்பும்பாய்ந் தேறி - நொடியுங்கால்,
இன்ன தெனவறியா ஈங்கோயே ஓங்காரம்
மன்னதென நின்றான் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஈங்கோயே` என்பதனை இறுதிக்கண் கூட்டியுரைக்க. இது இதனுள் வரும் அனைத்து வெண்பாக்கட்கும் பொருந்தும். நொடியில் - சொல்லுமிடத்து, இதனை முதலிற் கொள்க. படி - பூமி. விசும்பு - ஆகாயம். இன்னது - இன்ன தன்மையது. ``இன்னதென`` என்பதை `அடி, முடி` என்பவற்றோடு தனித் தனிக் கூட்டுக. ``மன் அது`` என்பதில் அது, ``பகுதிப்பொருள் விகுதி. மன் - முதல். அது தன்னியல்பில் அஃறிணையாதலின் `அது` என்னும் விகுதி பெற்றுப் பின் பண்பாகுபெயராய், ``நின்றான்`` என்பதனோடு இயைந்தது. அரியும், அயனும் அனற் பிழம்பாய் நின்ற சிவபெருமானது வடிவின் அடியையும், முடியையும் தேடிக் காணாது எய்த்த சிவமகாபுராண வரலாறு சைவ நூல்களில் பெரும்பான்மையாக எங்கும் சொல்லப் படுவது. `அத்தகைய பெருமான் இருக்கும் மலை திருஈங்கோய்மலை` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 2

அந்தவிள மாக்குழவி ஆயம் பிரிந்ததற்குக்
கொந்தவிழ்தேன் தோய்த்துக் குறமகளிர் சந்தின்
இலைவளைக்கை யாற்கொடுக்கும் ஈங்கோயே மேரு
மலைவளைக்கை வில்லி மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வில்லி மலை ஈங்கோயே` என முடிக்க. அந்தம் - அழகு. மாக் குழவி - மான் கன்று. ஆயம் - தன் இனம். பிரிந்து - பிரிந்து நின்றமையால். கொந்து அவிழ்தேன் - கொத்தாகிய பூக்கள் மலர்ந்து ஊற்றிய தேன். சந்து - சந்தன மரம். `இலையை உண்ணக் கொடுக்கும்` என்க. `ஈங்கோய் மலையில் குறவரும் அருளுடையராய் உள்ளார்` என்பதாம். `மேரு மலையாகிய, வளைவை யுடைய கைவில்` என்க. கைவில் - கையிற் பிடிக்கும் வில்; இஃது இனம் இல் அடை. வில்லி - வில்லை யுடையவன்.

பண் :

பாடல் எண் : 3

அம்பவள வாய்மகளிர் அம்மனைக்குத் தம்மனையைச்
செம்பவளந் தாவென்னச் சீர்க்குறத்தி கொம்பின்
இறுதலையினாற் கிளைக்கும் ஈங்கோயே நம்மேல்
மறுதலைநோய் தீர்ப்பான் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அம் - அழகு. மகளிர் - சிறுமியர். அம்மனைக்கு - அம்மானை ஆடுதற்கு. `தம் அன்னையை` என்பது இடைக் குறைந்து. ``தம் அனையை`` என வந்தது. `ஒருத்திக்கு மகளிர் பலர்` என்க. குறத்தி - தாய்க் குறத்தி. ``கொம்பு`` என்றது யானைக் கொம்பினை. இறுதலை - அறுக்கப்பட்ட முனை. கிளைக்கும் - நிலத்தை அகழ்கின்ற. அகழ்ந்தது பவளத்தைப் பெறுதற்பொருட்டு. அருவிகளால் வீழ்த்தப்பட்ட பவளங்கள் நிலத்தில் புதைந்து கிடத்தல் பற்றி அகழ்வாளாயினாள். `அத்துணை வளம் உடையது ஈங்கோய் மலை என்றபடி.
மறுதலை நோய் - சிவானந்தத்தைப் பெற ஒட்டாது மறுதலைக் கின்ற வினைகள். அவை பிராரத்துவமும், ஆகாமியமுமாம். `நம்நோய், மேல் வரும் நோய்` என்க. மேல் - இனி.

பண் :

பாடல் எண் : 4

அரிகரியக் கண்டவிடத் தச்சலிப்பாய் ஓடப்
பிரிவரிய தன் பிடியைப் பேணிக் கரிபெரிதும்
கையெடுத்து நீட்டிக் கதஞ்சிறக்கும் ஈங்கோயே
மையடுத்த கண்டன் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அரி - சிங்கம். ``கரி`` இரண்டும் களிற்றி யானை. சலிப்பாய் - இயங்குதல் உடைத்தாய். எனவே, முன்பு இயங்காது கிடந்தமை பெற்றாம். அகரம், அதன் இயல்பினைக் குறித்த பண்டறி சுட்டு. யானையைக் கண்டவிடத்து அதன் மேற் பாய்தல். சிங்கத்திற்கு இயல்பு. களிற்றியானை தன் பிடிமேற் கொண்ட அன்பினால் சிங்கத் தின் வருகைக்கு அஞ்சாது, துதிக்கையை நீட்டிக் கோபத்தால் பிளிறுவ தாயிற்று. `அன்பின்முன் அச்சம் நில்லாது` என்பதை, ``அச்சம் - தாய் தலையன்பின் முன்பு நிற்குமே`` * என்னும் பெரியபுராணத்தாலும் அறிக. கதம் - கோபம், `ஈங்கோய் மலை வாழ் அஃறிணை யுயிர்களும் அன்பு வாழ்க்கை வாழ்கின்றன` என்பதாம், மை அடுத்த - கருமை நிறம் பொருந்திய.

பண் :

பாடல் எண் : 5

அரியும் உழுவையுமே ஆளியுமே ஈண்டிப்
பரியிட்டுப் பன்மலர்கொண் டேறிச் சொரிய
எரியாடி கண்டுகக்கும் ஈங்கோயே கூற்றம்
திரியாமற் செற்றான் சிலம்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உழுவை - புலி, ஈண்டுதல் - திரளுதல். பரி இடுதல் - நடத்தல். நடத்தலைக் கூறியது, அவை வன்குணம் இன்றி அன்புடையன ஆதலைக் குறித்தற்கு. எனவே, ``பரிஇட்டு`` என்றது, `மெல்ல நடந்து` என்றதாம். சொரிதல் இலிங்கத்தின்மேல். எரி ஆடி, சிவன். உகத்தல் - விரும்புதல். `ஈங்கோய் மலையில் கொடு விலங்கு களும் தம் தன்மை நீங்கி சிவபத்தியுடன் திகழ்கின்றன` என்பதாம். கூற்றம் - யமன். திரியாமல் - தன் அடியார்மேற் செல்லாதபடி செற்றான் - அழித்தான், `அத்தகையோன் இடம் ஈங்கோய் மலை என்றார். சிலம்பு - மலை. ``செற்றான்`` என்றாராயினும், `செற்ற அவன்` என்பது கருத்தாகக் கொள்க.

பண் :

பாடல் எண் : 6

ஆளி தொடர அரிதொடர ஆங்குடனே
வாளி கொடு தொடரும் மாக்குறவர் கோளின்
இடுசிலையி னாற்புடைக்கும் ஈங்கோயே நம்மேற்
கொடுவினைகள் வீட்டுவிப்பான் குன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஆளியைத் தொடர்ந்து போய்ப் பற்றுதற் பொருட்டு அதனை அரி தொடர` என்க. அரி - சிங்கம். சிங்கத்தைக் குறவர் தொடர்ந்தனர். தொலைவில் இருந்து அம்பால் எய்யக் கருதியவர் அருகிலே சென்று வில்லாலே புடைத்தனர். இஃது அவர்தம் ஆற்றல் மிகுதியால் ஆயது. இடு சிலை - கீழே போகடும் வில். கோள் - அகப்படுத்துதல்.

பண் :

பாடல் எண் : 7

இடுதினைதின் வேழங் கடியக் குறவர்
வெடிபடு வெங்கவண்கல் ஊன்ற நெடுநெடென
நீண்டகழை முத்துதிர்க்கும் ஈங்கோயே ஏங்குமணி
பூண்டகழை யேறி பொருப்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இடு தினை - பயிரிடப்பட்ட தினை, வேழம் - யானை. `வெடிபடு கல்` என இயையும். வெடிபடுதல் - வேகமாக வெளிப்போதல். `வெடிபடுத்த` எனப் பிறவினை யாக்குக. ``நெடு நெடென`` என்பது ஒலிக்குறிப்பு. கழை - மூங்கில். `ஈண்டு கழை` என்பதும் பாடமாகலாம். ஏங்குதல் - ஒலித்தல். `காளை` என்பது எதுகை நோக்கிக் குறுக்கலும், திரிதலும் பெற்று, ``கழை`` என வந்தது.

பண் :

பாடல் எண் : 8

ஈன்ற குறமகளிர்க் கேழை முதுகுறத்தி
நான்றகறிக் கேறசலை நற்கிழங்கை ஊன்றவைத்
தென்அன்னை உண்ணென் றெடுத்துரைக்கும் எங்கோயே
மின்னன்ன செஞ்சடையான் வெற்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈன்ற மகளிர் - மகவை ஈன்ற பெண்டிர். ஏழை - எளியவர். நான்ற - முன்பே அதற்கென்று கொண்டு வந்து கோத்து வைத்த. கறிக்கு ஏறு - கறிக்குப் பொருத்தமான. அசலை - ஒருவகைக் கிழங்கு. ஊன்ற வைத்து - நிலையாக வைத்து. முதுகுறத்தி இளை யாளை, `என் அன்னையே` என்றது அன்பினால்.

பண் :

பாடல் எண் : 9

ஈன்ற குழவிக்கு மந்தி இருவரைமேல்
நான்ற நறவத்தைத் தான்நணுகித் தோன்ற
விரலால்தேன் தோய்த்தூட்டும் ஈங்கோயே நம்மேல்
வரலாம்நோய் தீர்ப்பான் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மந்தி`` என்பதை முதலில் வைத்து, `தான் ஈன்ற குழுவிக்கு` என்க.
`குரங்கும் முசுவும் ஊகமும் மூன்றும்
நிரம்ப நாடின் அப்பெயர்க் குரிய`
என்பதனால், இங்கு, `குழவி` என்பது குரங்கில் இளமைப் பெயராய் வந்தது. இரு வரை - பெரிய மலை. நறவம் - தேன்; அஃது அதன் அடையைக் குறித்தது. `சுவை தோன்ற` என ஒரு சொல் வருவிக்க. வரல் ஆம் - வருதற்குரிய.

பண் :

பாடல் எண் : 10

உண்டிருந்த தேனை அறுபதங்கள் ஊடிப்போய்ப்
பண்டிருந்த யாழ்முரலப் பைம்பொழில்வாய்க் கண்டிருந்த
மாமயில்கள் ஆடி மருங்குவரும் ஈங்கோயே
பூமயிலி தாதை பொருப்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அறு பதங்கள் - வண்டுகள்; இதனை முதலிற் கொண்டு, `தாம் உண்டிருந்த` என்க. ஊடுதல், இங்கே, வெறுத்தல். நிரம்ப உண்டமையால் வெறுப்பு உண்டாயிற்று. `பண்டு இருந்த பொழில்வாய் முரல` என்க. யாழ் முரல - யாழின் இசைபோல ஒலிக்க. இது வினையுவமத் தொகை. யாழ் ஆகுபெயர். கண்டு - அவ்வண்டுகளின் செயலைப் பார்த்து. மருங்கு - வண்டுகளின் பக்கத்தில். பூ - அழகு. மயிலி - மயில் வாகனத்தையுடையவன்.

பண் :

பாடல் எண் : 11

ஊடிப் பிடிஉறங்க ஒண்கதலி வண்கனிகள்
நாடிக் களிறு நயந்தெடுத்துக் கூடிக்
குணம்மருட்டிக் கொண்டாடும் ஈங்கோயே வானோர்
குணமருட்டுங் கோளரவன் குன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பிடி ஊடி உறங்க` என மாற்றிக் கொள்க. ``ஊடி உறங்க`` என்றதனால். உறங்குதல், பொய்யாக உறங்குதலாயிற்று. ``களிறு`` என்பதை, ``உறங்க`` என்பதன் பின்னர்க் கூட்டுக. `நாடிக் கொணர்ந்து` என, நாடுதல், அதன் காரியமும் உடன்தோற்றி நின்றது. நயந்து - இனிமை காட்டி. குணத்தால் மருட்டிக் கொண்டாடும்` என உருபு விரித்துரைக்க. குணத்தால் மருட்டுதலாவது, `நின்னிற் சிறந்த பிடியில்லை` என்பது போல அதன் இயல்பைப் புகழ்ந்து, அப்புகழ்ச்சி யில் அதனை மயங்கச் செய்தல். ``வானோர் குணம்`` என்பதில் ``குணம்`` என்றது அவர்கட்கு இயல்பாய் உள்ள அறிவினை. அதனை மருட்டுதலாவது, அவர்களால் அளந்தறியலாகாத அளவு, ஆற்றல் முதலியவற்றை அறிந்து வியக்கச்செய்தல். கோள் அரவம் - கொடிய பாம்பு. `அதனை அணியாக அணிந்தவன்` என்க.

பண் :

பாடல் எண் : 12

எய்யத் தொடுத்தோன் குறத்திநோக் குற்றதெனக்
கையிற் கணைகளைந்து கன்னிமான் பையப்போ
என்கின்ற பாவனைசெய் ஈங்கோயே தூங்கெயில்கள்
சென்றன்று வென்றான் சிலம்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கன்னி மான்`` என்பதில் இரண்டன் உருபு விரித்து அதனை முதலிற் கூட்டிப் பின்னரும் `கன்னி மானே` என விளி யாக்குக. கன்னி - இளமை, பைய - மெல்ல. ``பாலனை` என்றது கைச் செய்கையை. தூங்கு எயில்கள் - இயங்கும் கோட்டைகள்; அவை முப்புரங்கள். சென்று - வினை மேற் சென்று, மானைக் கொல்லக் கணையை வில்லில் வைத்துத் தொடுத்த குறவன் அதன் பார்வை தன் இல்லக் கிழத்தியின் பார்வைபோலத் தோன்றுதலைக் கண்டு அதன் மேல் அன்பு உண்டாகப் பெற்று அதனை இன்சொற் சொல்லிப் போக விடுத்தான். இது தலைவனிடத்துத் தோன்றிய. `ஒப்புவழி யுவத்தல்` * என்னும் மெய்ப்பாடு.

பண் :

பாடல் எண் : 13

ஏழை இளமாதே என்னொடுநீ போதென்று
கூழை முதுவேடன் கொண்டுபோய் வேழ
வினைக்குவால் வீட்டுவிக்கும் ஈங்கோயே நந்தம்
வினைக்குவால் வீட்டுவிப்பான் வெற்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஏழை இள மாது - யாதும் அறியா இளம்பெண். இவள் விளையாடும் சிறுமி. `இவள் யானை வருதலைக் கண்டு நடுங்கினாள்; அப்பொழுது முதுவேடன் இவளது நடுக்கத்தைத் தீர்த்தான் என்க. கூழை - நிமிர்ந்து நிற்கலாற்றாது மெலிந்து குனிந்து நடக்கும் தன்மை. `இத்துணை முதியனாயினும் யானையை அடக்கினான்` என்பது கருத்து. வேழம் - யானை. வால் வீட்டுதல். வாலையறுத்துல். குறும்பு செய்தலை `வாலாட்டுதல்` என்றும், குறும்பை அடக்குதலை, `வாலையறுத்தல்` என்றும் கூறுதல் உலக வழக்கு. வேழ வினை; மதத்துத் திரிதல். அதற்கு வாலையறுத்தலைச் செய்தல், அதனை நிகழ வொட்டாமற் செய்தல், `உடன் கொண்டு போய்` என ஒருசொல் வருவிக்க. உடன் கொண்டு சென்றது, அவள் நேரில் காணுதற்பொருட்டு. வினைக் குவால் - கன்மக் குவியல்; இது சஞ்சிதம். அதனை வீட்டுவித்தலாவது, தனது திருநோக்கால் எரித்தல். பின்னிரண்டடிகள் `மடக்கு` என்னும் சொல்லணி பெற்றன.

பண் :

பாடல் எண் : 14

ஏனம் உழுத புழுதி இன மணியைக்
கானவர்தம் மக்கள் கனலென்னக் கூனல்
இறுக்கங் கதிர்வெதுப்பும் ஈங்கோயே நம்மேல்
மறுக்கங்கள் தீர்ப்பான் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`புழுதியில் கிடக்கும் மணி` என்க. மணி - மாணிக்கம். ``இன மணி`` என்பதை `மணி இனம்` என மாற்றிக் கொள்க. இனம் - கூட்டம். என்ன - என்றே மருளும் படி. கூனல் இறுக்கம் - முகமும், முழங்காலும் ஒருங்கு சேரும்படி உடல் வளைந்து கையால் கட்டிக் கொண்ட இறுக்கம். இது குளிரால் நேர்ந்தது. கதிர் - பகலவன் கதிர்கள். பகலவன் கதிர் வெதுப்புதலால் தங்கள் குளிர் நீங்குதலை யறியாத குறச்சிறுவர்கள், காட்டுப் பன்றி நிலத்தைக் கிளறியதால் உண்டான மாணிக்கங்களின் திரளை `நெருப்பு` என்றே மருள்கின்றார்கள் என்பதாம். இஃது, உதாத்த அணியும், திரிபதிசய அணியும் சேர்ந்த சேர்வை யணி. மறுக்கம் - துன்பம்.

பண் :

பாடல் எண் : 15

ஏனங்கிளைத்த இனபவள மாமணிகள்
கானல் எரிபரப்பக் கண்டஞ்சி யானை
இனமிரிய முல்லைநகும் ஈங்கோயே நம்மேல்
வினையிரியச் செற்றுகந்தான் வெற்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஏனம் கிளைத்த - பன்றிகள் உழுததனால் வெளிப் பட்ட. கான் - காட்டில். அல் - இரவிலே. எரி - நெருப்புப் போலும் ஒளியை. அஞ்சி - `நெருப்பு` எனக் கருதி அஞ்சி. இரிய - ஓட. முல்லை - முல்லை அரும்புகள், ``யானை இனம் இரிய`` எனத் திரிபதிசய அணியும். ``முல்லை நகும்`` எனத் தற்குறிப்பேற்ற அணியும் சேர்ந்து வந்தது சேர்வையணி. எரி, உவமையாகுபெயர். முல்லை, முதலாகுபெயர்.

பண் :

பாடல் எண் : 16

ஒருகணையும் கேழல் உயிர்செகுத்துக் கையில்
இருகணையும் ஆனைமேல் எய்ய அருகணையும்
ஆளரிதான் ஓட அரிவெருவும் ஈங்கோயே
கோளரிக்கும் காண்பரியான் குன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கேழல் - பன்றியை. இது காட்டுப் பன்றி. உயிர் செகுத்தல் - கொல்லுதல். கேழல் சிறிதாகலின் ஒருகணையே போதியா தாயிற்று. யானை பெரிதாதலின் அதற்கு இருகணைகள் வேண்டப் பட்டன. ஆளரி - ஆளி; யாளி. அஃது யானையோடு ஒருபுடை ஒப்பது ஆதலின் யானை எய்யப் பட்டதைக் கண்டு தான் அஞ்சி ஓடுவதாயிற்று. அஃது ஓடுதலைக் கண்டு சிங்கமும் அஞ்சிற்று. அரி - சிங்கம். கோளரி, இங்கு, நரசிங்கம். ``ஒருகணையும்`` என்னும் உம்மை முற்று, ``இருகணையும்`` என்னும் உம்மை சிறப்பு. ``செகுத்து`` என்றது, `செகுத்தபின்` என்றபடி. `வேடன் எய்ய` எனத் தோன்றா எழுவாய் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 17

ஓங்கிப் பரந்தெழுந்த ஒள்ளிலவந் தண்போதைத்
தூங்குவதோர் கொள்ளி எனக்கடுவன் மூங்கில்
தழையிறுத்துக் கொண்டோச்சும் ஈங்கோயே சங்கக்
குழையிறுத்த காதுடையான் குன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தூங்குவது - தொங்குவது. கடுவன் - ஆண் குரங்கு. இறுத்துக்கொண்டு - ஓடித்துக்கொண்டு. ஓச்சுதல் - ஓங்குதல். தழையால் அடிப்பினும் கொள்ளி அணைவதாகும். மக்களோடு ஒத்திருக்கும் தன்மையால், நெருப்பைக் கண்டால் குரங்கிற்கும் அஞ்சி அதனை அணைக்க முயலும் இயல்பும் குரங்கிற்கும் உளதாகக் கூறப்பட்டது. இலவம் பூவை `நெருப்பு` என மருண்டது என்றது திரிபதிசய அணி. இறுத்த - தங்கிய.

பண் :

பாடல் எண் : 18

ஓடும் முகிலை உகிரால் இறஊன்றி
மாடுபுக வான்கை மிகமடுத்து நீடருவி
மாச்சீயம் உண்டு மனங்களிக்கும் ஈங்கோயே
கோச்சீயம் காண்பரியான் குன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உகிர் - நகம். இற - பிளக்கும்படி. மாடு புக - பிளந்த தனால் ஒழுகிய நீர் இம்மலையிடத்தை அடைய (அதனால் உண்டான) `நீடு அருவியை மாச்சீயம் வான் கையால் மிக மடுத்து மனங் களிக்கும்` என்க. சீயம் - சிங்கம். அதன் முன்னங்கால்கள் அதற்குக் கையாகவும் உதவும். கோச் சீயம் - தலைமைச் சிங்கம்; நரசிங்கம். இனி, `கோ மாயோன்` என வைத்து, `மாயோனாகிய சீயம்` எனினும் ஆம்.

பண் :

பாடல் எண் : 19

கண்ட கனிநுகர்ந்த மந்தி கருஞ்சுனைநீர்
உண்டு குளிர்ந்திலவென் றூடிப்போய்க் கொண்டல்
இறைக்கீறி வாய்மடுக்கும் ஈங்கோயே நான்கு
மறைக்கீறு கண்டான் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ட கனி - கண்ணில்பட்ட கனிகளையெல்லாம். கருமை, ஆழம் மிகுதியால் உண்டாயிற்று. `கருநீர்` என இயையும். குளிர்தல் - தாகம் தணிதல். மந்திகளின் பன்மையால் தாகமும் பல வாயின. ஊடுதல் - வெறுத்தல். `கொண்டலை` எனவும், `இறையால்` எனவும் ஏற்கும் உருபுகள் விரிக்க. இறை - கை அஃது ஆகுபெயராய், நகத்தை உணர்த்திற்று. ஈறு கண்டான் - முற்ற உணர்ந்தவன். உணரப் பட்டன அவற்றின் பொருள். அதனை முன்னே தான் உணர்ந்தாலன்றி உலகிற்கு அதனைச் சொல்லுதல் கூடாமையறிக. ஒரு நூலின் பொருளை அதன் உரையாசிரியர் எவ்வளவு உணரினும் நூலை ஆக்கிய ஆசிரியன் கருத்தை முற்ற உணர மாட்டுவாரல்லர். அதனால், ``மறைக்கு ஈறு கண்டான்`` என்றது, `அதனை உலகிற்கு அளித்த ஆசிரியன்` எனக் கூறியவாறேயாம்.

பண் :

பாடல் எண் : 20

கருங்களிற்றின் வெண்கொம்பாற் கல்லுரல்வாய் நல்லார்
பெருந்தினைவெண் பிண்டி இடிப்ப வருங்குறவன்
கைக்கொணருஞ் செந்தேன் கலந்துண்ணும் ஈங்கோயே
மைக்கொணருங் கண்டன் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நல்லார் - அழகுடைய பெண்கள். `தினையைப் பிண்டியாக இடிப்ப` என்க. பிண்டி - மா. வரும் - வெளிச்சென்று வருகின்ற. மை - மேகம் ``மைக் கொணரும்`` என்பதில் கொணரும். உவம உருபு, இனி, `மை கருமை`` எனக் கொண்டு, `அதனைத் தன் பால் கொணர்ந்த கண்டன்` என்றலும் ஆம். இருவழியும் ககர ஒற்று விரித்தல். ``கருங்களிற்றின் வெண்கொம்பு`` என்பது முரண்தொடை யும், விரோத அணியுமாம்.

பண் :

பாடல் எண் : 21

கனைய பலாங்கனிகள் கல்லிலையர் தொக்க
நனைய கலத்துரத்தில் ஏந்தி மனைகள்
வரவிரும்பி ஆய்பார்க்கும் ஈங்கோயே பாங்கார்
குரவரும்பு செஞ்சடையான் குன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கனைதல் - செறிதல். அதனை, `கனை யிருள்` என்பதனானும் அறிக. கனைய - செறிதலை உடைய. பல ஆம் கனிகள் - பலவாகிய பழங்கள். `கனிகளை ஏந்தி` என இயையும். கல் இலையர் - கற்ற இலைத் தொழிலர். அவராவார், இலைகளைக் கல்லை யாகச் செய்தல், தழையாகக் கோத்தல் முதலியவற்றைக் கற்றவர். `இலையரால்` என்னும் மூன்றன் உருபு தொகுக்கப்பட்டது. தொக்க - தொகுக்கப்பட்ட. நனைய - தேனை உடைய. இலையரால் தொகுக்கப் பட்ட கலம் தொன்னை. உரத்தில் - மார்பிற்கு நேராக. `கலத்தில், மனை களில்` என ஏழாவது விரிக்க. ஆய் - தாய்; பழம் விற்பவள். இவளை, `தாய்` என்றது நாட்டு வழக்கு. `பலவகைக் கனிகளை யாவரும் எளிதில் காணத் தேனோடு கலந்து மார்பிற்கு நேராகக் தொன்னை களில் ஏந்தி விற்பவள் தன்னை அழைக்கும் மனைகளில் செல்ல விரும்பி அவற்றை உற்று நோக்குகின்ற ஈங்கோய்` என்றபடி. ``வா`` என்றது இட வழுவமைதி. குரவு - குரா மரத்தின் அரும்பு.

பண் :

பாடல் எண் : 22

கடக்களிறு கண்வளரக் கார்நிறவண் டார்ப்பச்
சுடர்க்குழையார் பாட்டெழவு கேட்டு மடக்கிளிகள்
கீதம் தெரிந்துரைக்கும் ஈங்கோயே ஆல்கீழ்நால்
வேதந் தெரிந்துரைப்பான் வெற்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கடக் களிறு - மதத்தினையுடைய ஆண் யானை. கண்வளர்தல், உறங்குதல். ஆர்த்தல் - ஆரவாரித்தல். மதயானை உறங்கும் பொழுது வண்டுகள் ஆராவாரித்தல், அதன் மத நீரைத் தான் வேண்டியபடி உண்ணுதலாலாம். உழுதல், `உழவு` ஆயினாற்போல, எழுதல், `எழவு` ஆயிற்று. மடம் - இளமை. இனி, `சொல்லியதைச் சொல்லுதல்` என்றும் ஆம், கீதம் தெரிந்து உரைக்கும் - இசையையும் உணர்ந்து. அம்முறையிலே பாட்டினையும் பாடுதல், ``ஆர்ப்ப உரைக்கும்`` என்றது. `இரண்டும் ஒருங்கு நிகழ்கின்றன` என்பதாம். நால் வேதத்தை நால்வர் முனிவர்க்குச் சிவன் அறிவுறுத்தமை திருமுறைகளிற் பல இடத்தும் சொல்லப்படுவது. ``உரைப்பான்`` என எதிர்காலத்தாற் கூறியது, `இது கற்பந் தோறும் நிகழ்வது`` என்றற்கு.

பண் :

பாடல் எண் : 23

கறுத்தமுலைச் சூற்பிடிக்குக் கார்யானை சந்தம்
இறுத்துக்கைந் நீட்டும்ஈங் கோயே செறுத்த
கடதடத்த தோலுரிவைக் காப்பமையப் போர்த்த
விடமிடற்றி னான்மருவும் வெற்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கருவுற்ற காலத்தில் மகளிர்தம் கொங்கை நுனி கறுப்பாகும்` என்னும் வழக்குப் பற்றி, ``கறுத்த முலைச் சூற் பிடிக்கு`` என்றார். சூல் - கருப்பம். பிடி - பெண் யானை. ``பிடிக்கு`` என்றத னால், ``யானை`` என்றது களிற்றியானை யாயிற்று. கார் யானை - கரிய யானை. இஃது இனம் இல் அடை. சந்தம் - சந்தனம் மரம். அஃது ஆகுபெயராய், அதன் தழையைக் குறித்தது. இறுத்தல் - ஒடித்தல் ``கை நீட்டும்`` என்றது, `கையை நீட்டிக் கொடுக்கும்` என்றபடி. செறுத்த - கொல்லப்பட்ட. கடம் - மதநீர். அஃது ஆகுபெயராய், யானையைக் குறித்தது. தடத்த - பெரிய. உரிவை - தோல். `யானைத் தோலாகிய தோல்` என இருபெயர் ஒட்டாகக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 24

கங்குல் இரைதேருங் காகோ தரங்கேழற்
கொம்பி னிடைக்கிடந்த கூர்மணியைப் பொங்கும்
உருமென்று புற்றடையும் ஈங்கோயே காமன்
வெருவொன்றக் கண்சிவந்தான் வெற்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கங்குல் - இரவு. காகோதரம் - பாம்பு. கேழல் - காட்டுப் பன்றி. கொம்பின் இடைக்கிடந்த மணி - நிலத்தைக் கிளறும் பொழுது அக்கொம்பினிடையே வெளிப்பட்ட மாணிக்கம். கூர் - ஒளி மிகுந்த. உரு - மேகத்தின் இடி. அஃது ஆகுபெயராய் அதனோடு உடன் தோன்றும் மின்னலைக் குறித்தது. `மின்னலுக்குப்பின் இடி விழும்` என்னும் அச்சத்தால் பாம்பு புற்றை அடைவதாயிற்று. மின்னல் `திடீர்` எனத் தோன்றுதல் போலப் பன்றி உழுதமையால் அதன் கொம்புகளினிடையே மாணிக்கம் தோன்றிற்று. `அதனைப் பாம்பு - மின்னல் - என மருண்டது` என்றது திரிபதிசய அணி. காமன் - மன்மதன். வெருவு ஒன்ற - அச்சத்தைப் பொருத்த. ``கண் சிவந்தான்`` என்றது, இலக்கணையால், `சினந்தான்` எனப் பொருள் தந்தது. அது வும், `எரித்தான்` எனத் தன் காரியம் தோற்றிநின்றது. ``கொம்பின்`` என்றது இன எதுகை.

பண் :

பாடல் எண் : 25

கலவிக் களிறசைந்த காற்றெங்குங் காணா
திலைகைக்கொண் டேந்திக்கால் வீச உலவிச்சென்
றொண்பிடிகாற் றேற்றுகக்கும் ஈங்கோயே பாங்காய
வெண்பொடிநீற் றான்மருவும் வெற்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அசைந்த - இளைத்த. அசைந்த காற்று - முன்பெல் லாம் கலவிக்குப் பின் அவ் இளைப்புத் தீர ஏற்ற காற்று. காணாது - அப்பொழுது காணாமையால். இலை. பலவகையான இலைகள். கால் வீச - காற்றை வீச. `களிறு காற்றை வீசப் பிடி தன் இளைப்பு நீங்கும்படி அதனை உலவிச் சென்று ஏற்கும் ஈங்கோய்` என்க. வெண்பொடி நீறு- இருபெயரொட்டு.

பண் :

பாடல் எண் : 26

கன்னிப் பிடிமுதுகிற் கப்புருவம் உட்பருகி
அன்னைக் குடிவரலா றஞ்சியே பின்னரே
ஏன்றருக்கி மாதவஞ்செய் ஈங்கோயே நீங்காத
மான் தரித்த கையான் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கன்னிப் பிடி - களிற்றியானையோடு சேர்தல் இல்லாத பிடி யானை. `முதுகில் கப்பு உருவம்` என்றது இடக்கர் அடக்கல். அதனை உட்பருகுதலாவது, தான் பூப்படைந்தமையை மனத்தில் எண்ணுதல். அன்னைக் குடி வரலாறு - தன் தாய், தாய்க்குத் தாய் இப்படிப் பெண்யானைகள் யாவும் கன்றுகளை ஈன்று இனத்தைப் பெருக்கி, வாளாதே இறந்தொழிந்த வரலாறு. (அதனை அறிந்த ஒரு பிடி யானை) அஞ்சி - அவ்வாறு தானும் துன்புற்று வாளா மாய்தற்கு அஞ்சி மாதவும் ஏன்று அருக்கிச் செய் ஈங்கோய் - பெரிய தவத்தை மேற்கொண்டு உண்டி முதலியவைகளை மறுத்து நோற்கின்ற ஈங்கோய் மலை, அருக்குதல் மறுத்தல்.

பண் :

பாடல் எண் : 27

கள்ள முதுமறவர் காட்டகத்து மாவேட்டை
கொள்ளென் றழைத்த குரல்கேட்டுத் துள்ளி
இனக்கவலை பாய்ந்தோடும் ஈங்கோயே நந்தம்
மனக்கவலை தீர்ப்பான் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கள்ள - வஞ்சனையையுடைய. அஃதாவது ஒளிந் திருந்து மாக்களைப் பிடிக்கின்ற. முது மறவர் - கிழ வேடர். மாவேட்டை - விலங்கு வேட்டை. கொள் என்று - பிடியுங்கள் என்று. இனம் - பல்வேறு வகையான. கவ் வலை - சிக்க யாக்கின்ற வலை களைக் கடந்து. பாய்ந்து ஓடுவன மேற் கூறப்பட்ட மாக்கள். `கவ் வலை` என்பது இடைக் குறைந்து நின்றது.

பண் :

பாடல் எண் : 28

கல்லைப் புனம்மேய்ந்து கார்க்கொன்றைத் தார்போர்த்துக்
கொல்லை எழுந்த கொழும்புறவின் முல்லை அங்கண்
பல்லரும்ப மொய்த்தீனும் ஈங்கோயே மூவெயிலும்
கொல்லரும்பக் கோல்கோத்தான் குன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கல் - சிறு பாறைகள், `அவற்றை உடைய புனம் என்க. ஐ, சாரியை. படர்தல், இங்கு மேய்தலாகச் சொல்லப்பட்டது. தார் - மாலை. அதனை, ``போர்த்த`` என்றது. `நிரம்பத் தாங்கி` என்றபடி. புனம், கொல்லை, புறவு - யாவும் முல்லை நிலப்பெயர்கள். புறவின் முல்லை - முல்லை நிலத்துக்கே சிறப்பாக உரிய முல்லைக் கொடிகள். பல் அரும்பு, பற்கள் போன்ற அரும்புகள். ``மொய்த்து`` என்பதை, `மொய்ப்ப` எனத் திரிக்க. கொல் அரும்ப - கொலைத் தொழில் தோன்றும் படி. கோல் - அம்பு, ``மேய்ந்து, போர்த்து, ஈனும்`` என்றது சில சொல் நயங்கள்.

பண் :

பாடல் எண் : 29

கல்லாக் குரங்கு பளிங்கிற் கனிகாட்ட
எல்லாக் குரங்கும் உடன்ஈண்டி வல்லே
இருந்துகிராற் கற்கிளைக்கும் ஈங்கோயே மேனிப்
பொருந்தஅராப் பூண்டான் பொருப்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பின், ``எல்லாக் குரங்கும்`` என வருதலின் முதற்கண், `ஒருகல்லாக் குரங்கு` என உரைக்க. கல்லாமை, யாதும் அறியாமை. பளிங்கு - பளிக்குப் பாறை. கனி - அதனுள் தோன்றும் கனியினது நிழலை. ஈண்டி - நெருங்கி. இருந்து - அமர்ந்து கொண்டு `இருந்து, வல்லே உகிரால் கல் கிளைக்கும்` என்க. வல்லே - விரைவாக. உகிர் - நகம். கிளைக்கும் - கிள்ளுகின்ற. இதுவும் திரிபதிசய அணி.

பண் :

பாடல் எண் : 30

கண்கொண் டவிர்மணியின் நாப்பண் கருங்கேழல்
வெண்கோடு வீழ்ந்த வியன்சாரல் தண்கோ
டிளம்பிறைசேர் வான்கடுக்கும் ஈங்கோயே வேதம்
விளம்பிறைசேர் வான்கடுக்கும் வெற்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண் - கண்ணொளி; ஆகுபெயர். ``கொண்டு`` என்பதை, `கொள்ள` எனத் திரிக்க. அவிர்தல். ஒளி வீசுதல். மணி - நீலமணி. நாப்பண்- நடுவில். கேழல் - பன்றி, ``கடுக்கும்`` இரண்டில் முன்னது, `ஒக்கின்ற` என்னும் பொருளையும், பின்னது, `மிக்குறை கின்ற` என்னும் பொருளையும் உடையன. இளம் பிறை சேர்வான் - இளம் பிறை பொருந்திய ஆகாயம். வேதம் விளம்பு இறை - வேதத்தால் சொல்லப்பட்ட இறைமைக் குணங்கள். நீலமணிக் குவியல் இடையே பன்றிக் கொம்பு காணப்படுதலால், அக்குவியல் பிறை பொருந்திய ஆகாயம் போலத் தோன்றுவதாயிற்று. பின் இரண்டடிகள், திரிபணி.

பண் :

பாடல் எண் : 31

காந்தள்அங் கைத்தலங்கள் காட்டக் களிமஞ்ஞை
கூந்தல் விரித்துடனே கூத்தாடச் சாய்ந்திரங்கி
ஏர்க்கொன்றை பொன்கொடுக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல்
கார்க்கொன்றை ஏன்றான் கடறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கைத்தலங்கள் காட்ட`` என்றது, கைகாட்டி, `வருக` என்று அழைக்க என்றபடி. காந்தள் மலர் கைக்கு உவமையாகச் சொல்லப்படுவது ஆதலின் அதன் அசைவு கையை அசைத்தலாகச் சொல்லப்படுவது. இது தற்குறிப்பேற்றம். கூந்தல் - தோகை. ஏர் - அழகு. கொன்றை மலர் பொன்போல்வது ஆதலின், அதனை உதிர்ப்பது, நடனமாடும் நாடகமகளுக்குப் பரிசாகப் பொன்னைச் சொரிவதாகக் கூறப்பட்டது. இதுவும் தற்குறிப்பேற்றம். சாய்தல். வளைதல். இரங்குதல் - மனம் இரங்குதல். இஃது இலக்கணை என்றதனால் மஞ்ஞை (மயில்) நாடக மகளாதலைப் பெற வைத்தது குறிப்புருவகம். களி - களிப்பு; மகிழ்ச்சி ``கை காட்ட, பொன் கொடுக்கும்`` என்பன இயைபுருவகம் ``கடறு`` என்ப காடாயினும், இஃது ஆகுபெயராய், ஆங்குள்ள மலையைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 32

குறமகளிர் கூடிக் கொழுந்தினைகள் குற்றி
நறவமாக் கஞ்சகங்கள் நாடிச் சிறுகுறவர்
கைந்நீட்டி உண்ணக் களித்துவக்கும் ஈங்கோயே
மைந்நீட்டுங் கண்டன் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நறவம் - தேன். நறவத்தோடு கூட்டி. `ஆக்க`, என்பதன் ஈற்று அகரம் தொகுக்கப்பட்டது. அன்றி, `ஆக்கு அகங்கள்` என வினைத்தொகையாக்கலும் ஆம். ஆகம் - இல்லம். ``அஞ்சு அகங்கள்` என்றதில் அஞ்சு, பன்மை குறித்தது. `அஞ்சு வீடு நுழைந்தேன்` என்பது நாட்டு வழக்கு. `நாடிச் சென்று` எனவும், `கைந்நீட்டி வாங்கி` எனவும் ஒரோர் சொல் வருவிக்க. உவப்பவர் குறவர்கள். களித்துவக்க, ஒருபொருட் பன்மொழி. மை நீட்டு - கருமையைக் காட்டுகின்ற.

பண் :

பாடல் எண் : 33

கூழை முதுமந்தி கோல்கொண்டுதேன்பாய
ஏழை யிளமந்தி சென்றிருந்து வாழை
இலையால்தேன் உண்டுவக்கும் ஈங்கோயே இஞ்சி
சிலையால்தான் செற்றான் சிலம்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கூழை - உடல் வளைந்த. முது மந்தி - கிழப்பெண் குரங்கு. இது தாய். `கோல் கொண்டு தாக்க` என ஒருசொல் வருவிக்க. தாக்கப்பட்டது தேன் கூடு. ஏழை - அறிவில்லாத; திறமையற்ற. இளமந்தி, இது மகள். ``இலையால் உண்ணும்`` என்றதனால், இலை யால் ஏற்றமை பெறப்பட்டது. இஞ்சி - மதில்; முப்புரம். சிலை - வில். தான். அசை.

பண் :

பாடல் எண் : 34

கொல்லை இளவேங்கைக் கொத்திறுத்துக் கொண்டுசுனை
மல்லைநீர் மஞ்சனமா நாட்டிக்கொண் டொல்லை
இருங்கைக் களிறேறும் ஈங்கோயே மேல்நோய்
வருங்கைக் களைவான் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கொத்து, பூங்கொத்து, இறுத்துக்கொண்டு, `ஓடித்துக் கொண்டு` என ஒரு சொல். இனி, `குண்டு சுனை` எனப்பாடம் ஓதலும் ஆம். குண்டு - ஆழம். வேங்கைப் பூ தாம் ஆடும் நீரில் நறுமணத்திற் காக இடுவது. `சுனை நீர்` என இயையும். மல், `மல்லை` என ஐகாரம் பெற்றது. `வளப்பம்` என்பது பொருள். நாட்டிக் கொண்டு - மனத்தில் உறுதி செய்து கொண்டு. ஏறுதல். சுனை உள்ள இடத்தை நோக்கி ஏறுதல். `மேல் கை வரும் நோய்` என மாற்றுக. மேல் - வருங்காலம். கை வருதல் - நெருங்கி வருதல்.

பண் :

பாடல் எண் : 35

கொவ்வைக் கனிவாய்க் குறமகளிர் கூந்தல்சேர்
கவ்வைக் கடிபிடிக்குங் காதன்மையால் செவ்வை
எறித்தமலர் கொண்டுவிடும் ஈங்கோயே அன்பர்
குறித்தவரந் தான்கொடுப்பான் குன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கூந்தலில் சேர்க்கின்ற கடி` என்க. கடி - வாசனை. கவ்வை - அலர் தூற்றுதல். அஃது இங்குச் சேய்மையினும் சென்று கமழ்ந்து கூந்தலின் இருப்பை அறிவித்தலைக் குறித்தது. ``ஆர்வலர் - புன்கணீர் பூசல் தரும்`` என்றார் திருவள்ளுவ நாயனாரும். கடி பிடித்தல் - வாசனையேற்றுதல். ``காதன்மை`` என்பதில், மை பகுதிப் பொருள் விகுதி. இதில் னகர ஒற்று நீக்கி அலகிடுக. செவ்வை எறித்த. மலர் - நன்றாகப் பூத்துப் பொலிகின்ற மலர்கள். பொதுப்படக் கூறியதனால், ஏற்கும் மலர்களையெல்லாம் கொள்க. ``கொண்டு விடும்`` என்பதில், விடு, துணிவுப் பொருண்மை விகுதி.

பண் :

பாடல் எண் : 36

கொடுவிற் சிலைவேடர் கொல்லை புகாமல்
படுகுழிகள் கல்லுதல்பார்த் தஞ்சி நெடுநாகம்
தண்டூன்றிச் செல்லுஞ்சீர் ஈங்கோயே தாழ்சடைமேல்
வண்டூன்றுந் தாரான் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கொல்லை - தினை, சோளம் முதலியவைகளை விளைவிக்கும் புன்செய் நிலம். அவற்றுள் யானை புகாமல் தடுக்கக் குறவர்கள் அப்பால் உள்ள இடங்களில் படுகுழிகள் தோண்டி, கழிக ளாலும், இலைகளாலும் அக்குழிகள் தெரியாதபடி மூடிவைப்பர். அதனையுணர்ந்து யானைகள் மரக் கிளைகளை முரித்துத் தண்டாக முன்னே ஊன்றிப் பார்த்துச் செல்லும். நாகம் - யானை. ``வண்டு ஊன்றும்`` என்பதில் ஊன்றுதல், கிளறுதல்.

பண் :

பாடல் எண் : 37

கோங்கின் அரும்பழித்த கொங்கைக் குறமகளிர்
வேங்கைமணி நீழல் விளையாடி வேங்கை
வரவதனைக் கண்டிரியும் ஈங்கோயே தீங்கு
வரவதனைக் காப்பான் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அழித்த - தோற்கச் செய்த. ``வேங்கை`` இரண்டில் முன்னது வேங்கை மரம்; பின்னது புலி, இது சொற்பின் வருநிலையணி. மணி - அழகு. `புலி வர, அதனைக் கண்டு இரியும்` என்க. இரிதல் - அஞ்சி நீங்குதல். ஈற்றடியில் ``வரவதனை`` என்பதில் அது, பகுதிப் பொருள் விகுதி. வரவைக் காத்தலாவது, வாராமற் காத்தல்.

பண் :

பாடல் எண் : 38

சந்தனப்பூம் பைந்தழையைச் செந்தேனில் தோய்த்தியானை
மந்தண் மடப்பிடியின் வாய்க்கொடுப்ப வந்ததன்
கண்களிக்கத் தான்களிக்கும் ஈங்கோயே தேங்காதே
விண்களிக்க நஞ்சுண்டான் வெற்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பூ - அழகு. யானை, களிற்றியானை. `மந்தம்` என்பது ஈற்று அம்முக்கெட்டு நின்றது. மந்தம் - மெல்லிய நடை. தண் - குளிர்ச்சி. களிற்றுக்குத் தரப்படும் குளிர்ச்சி. மடம் - இளமை. ``கொடுப்ப`` என்றது, `கொடுக்க முயல` என்றபடி. தன் - அதனது. கண் களித்தல், கண்ணில் உவகை நீர் ததும்புதல். களிற்றின் அன்பு நோக்கிப் பிடி கண்களித்தது. பிடி கண்களித்ததைக் கண்டு களிறு ஆரவாரித்தது. கலித்தல் ஆரவாரித்தல், ``தான்`` என்றது களிற்றியானையை. தேங்குதல் - திகைத்தல். விண் - விண்ணோர், ஆகுபெயர்.

பண் :

பாடல் எண் : 39

சந்தின் இலையதனுள் தண்பிண்டி தேன்கலந்து
கொந்தியினி துண்ணக் குறமகளிர் மந்தி
இளமகளிர் வாய்க்கொடுத்துண் ஈங்கோயே வெற்பின்
வளமகளிர் பாகன் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``குறமகளிர்`` என்பதை முதலில் வைத்தும், ``இளமகளிர் மந்திவாய்க் கொடுத்து`` என மாற்றி வைத்தும் உரைக்க. தண் - மென்மை. பிண்டி - தினை மா. கொந்தி - அளைந்து. குறமகளிர் அங்குள்ள மந்திகளுக்குக் கொடுத்து உண்கின்றார்கள்; இஃது அவர் களது முதுக்குறைவாகும். `வெற்பின் மகள்` என்பதை, ``வெற்பின் மகளிர்`` என்றது உயர்வு பற்றி வந்த பன்மை. அன்றிக் கங்கையும், இமவான் மகளாய், `ஐமவதி` எனப்படுகின்றாள் ஆதலின், அவ்விரு வரையும் குறித்ததுமாம். இப்பொருட்கு. `பாகன், ஒரு பகுதியிற் கொண்டவன்` என உரைக்க.

பண் :

பாடல் எண் : 40

சாரற் குறத்தியர்கள் தண்மருப்பால் வெண்பிண்டி
சேரத் தருக்கி மதுக்கலந்து வீரத்
தமரினிதா உண்ணுஞ்சீர் ஈங்கோயே வெற்பின்
குமரன்முது தாதையார் குன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சாரல் - இம்மலையின் பக்கம். தண் - குளிர்ச்சி. அஃதாவது, கண்ணிற்குத் தரும் குளிர்ச்சி. அது வெண்மை, எனவே, மருப்பு யானைத் தந்தமாயிற்று. பிண்டி - மா. இது தினை மா, சேர நன்கு மசிந்து ஒன்றுபட. தருக்கி - மகிழ்ந்து. மது - தேன். வீரத் தமர் - வீரம் உடைய உறவினர்; என்றது, ஆடவரை. இனிது ஆக - மகிழ்ச்சி அடையும்படி. மகளிர் தங்கள் உதவியை நாடாது அவர்களே முயன்று இனிய உணவைப் பெற்று உண்ணுதலைக் கண்டு ஆடவர் மகிழ்வாரா யினர் என்க. இன்பம் - இருவர் தேவியருடன் இன்புற்றிருப்பான். குமரன்- மருகன், `அவன் மிக இளையனாயினும் அவனைப் பெற்ற தந்தை மிக முதியன்` என்னும் நயம் தோன்றுதற்கு. ``முதுதாதையார்`` என்றார் சிவபெருமானை. நன்றாய்ந்த நீணிமிர்சடை - முதுமுதல்வன்`` எனச் சங்கத்துச் சான்றோரும் (புறம்.166) கூறினார். ``குமரன் முது`` என்னும் சீரினை னகர ஒற்று நீக்கி அலகிடுக.

பண் :

பாடல் எண் : 41

தாயோங்கித் தாமடருந் தண்சாரல் ஒண்கானம்
வேயோங்கி முத்தம் எதிர்பிதுங்கித் தீயோங்கிக்
கண்கன்றித் தீவிளைக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல்
வண்கொன்றைத் தாரான் வரை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தண் சாரல் ஒண்கானத்தில் தாய் ஓங்கி அடரும் வேய் ஓங்கிக் கண் கன்றி, முத்தம் எதிர் பிதுங்கித் தீ ஓங்கித் தீ விளைக்கும் ஈங்கோய்` என இயைத்துக் கொள்க. வேய் - மூங்கில் தாய் - பல பக்கங்களிலும் தாவி. தாம், அசை. ``தாய் ஓங்கி அடரும் வேய்`` எனக் கூறியது முன்னர் அதன் வளர்ச்சியையும், பின்னரும் ``ஓங்கி`` என்பது முதலாகக் கூறியன அதன் விளைவுகளையும் விளக்கியவாறு. கண் - கணுக்கள். கன்றுதல், உறுதிப்படுதல். கன்றி - கன்றுதலால். பிதுங்கி - பிதுங்கப் பெற்று. முன்னர், ``தீ ஓங்கி`` என்றது, ``கன்றி, பிதுங்கி`` என்றவற்றோடு ஒருங்கு நிகழ்ந்ததையும், பின்னும் `தீவிளைக்கும்` என்றது, வேய்கள் சாரலில் விளைக்கும் விளைவையும் குறித்தன.

பண் :

பாடல் எண் : 42

செடிமுட்டச் சிங்கத்தின் சீற்றத்தீக் கஞ்சிப்
பிடிபட்ட மாக்களிறு போந்து கடம்முட்டி
என்னேசீ என்னுஞ்சீர் ஈங்கோயே ஏந்தழலிற்
பொன்னேர் அனையான் நெபாருப்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சிங்கத்தின் சீற்றத்தீக்கு அஞ்சிப் பிடி செடி முட்ட, மாக்களிறு அட்டம் போந்து கடம் முட்டி, என்னே சீ என்னும் ஈங் கோய்` எனக் கூட்டுக. முட்ட - சேர; சேர்ந்து மறைய முயல, அட்டம் போந்து - குறுக்காகப் புகுந்து. அஃதாவது பிடியைக் காக்கும் முறை யில் புகுந்து. கடம் - காட்டில்; அஃதாவது சிங்கம் வாழும் இடத்தில். முட்டி - சேர்ந்து. அங்குச் சிங்கம் காணப்படாமையால் அதனைக் களிறு `என்னே! சீ!` என்று இகழ்ந்தது. ஏந்து அழல் - எரிகின்ற நெருப்பு. நேர் ``அனையான்`` என்பது ஒருபொருட் பன்மொழி.

பண் :

பாடல் எண் : 43

சுனைநீடு தாமரையின் தாதளைந்து சோதிப்
புனைநீடு பொன்னிறத்த வண்டு மனைநீடி
மன்னி மணம்புணரும் ஈங்கோயே மாமதியம்
சென்னி அணிந்தான் சிலம்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தாது - மகரந்தம். சோதிப் புனை - ஒளியாகிய அழகு. ``மனை`` என்றது முதற்கண் கூறிய தாமரை மலரே.

பண் :

பாடல் எண் : 44

செந்தினையின் வெண்பிண்டி பச்சைத்தே னாற்குழைத்து
வந்தவிருந் தூட்டும் மணிக்குறத்தி பந்தியாத்
தேக்கிலைக ளிட்டுச் சிறப்புரைக்கும் ஈங்கோயே
மாக்கலைகள் வைத்தான் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பிண்டி - மா, பச்சை - காய்ச்சப்படாதது. மணி - அழகு. சிறப்பு - உபசாரம். மாக்கலைகள் - உயர்ந்த நூல்கள். வைத்தான் - உலகர் பொருட்டு ஆக்கி வைத்தவன். முதல் அடி முரண்தொடையும், விரோத அணியும் பெற்றது.

பண் :

பாடல் எண் : 45

தடங்குடைந்த கொங்கைக் குறமகளிர் தங்கள்
இடம்புகுத்தங் கின்நறவம் மாந்தி உடன்கலந்து
மாக்குரவை ஆடி மகிழ்ந்துவரும் ஈங்கோயே
கோக்குரவை ஆடிகொழுங் குன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தடம் - சுனை. குடைந்த - முழுகிய. ``கொங்கை மகளிர்`` என்றது மங்கைப் பருவத்தினர் ஆதல் குறிக்கும்படி. நறவம் - தேன். உடன் - பலர் திரண்டு. ``கோக் குரவை`` என்பதில், குரவை, `கூத்து` எனப் பொதுப் பொருள் தந்தது. கோக் குரவை - தலையாய கூத்து. பின் வந்த ``ஆடி`` என்பது பெயர்.

பண் :

பாடல் எண் : 46

தாமரையின் தாள்தகைத்த தாமரைகள் தாள் தகையத்
தாமரையிற் பாய்ந்துகளுந் தண்புறவில் தாமரையின்
ஈட்டம் புலிசிதறும் ஈங்கோயே எவ்வுயிர்க்கும்
வாட்டங்கள் தீர்ப்பான் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தாமரையின் தாள் தகைத்த தாமர் - தாமரை மலரில் தாள்களை இணைத்துக் கட்டிய மாலையை அணிந்தவர்கள்; அந்தணர் கள். ஐ - அழகு. இஃது ஆகுபெயராய், அழகையுடைய இளஞ்சிறார் களைக் குறித்தது. தாமர்தம் ஐகள், அந்தணச்சிறார்கள். தாள் தகைய - தங்கள் கால்கள் வலிக்கும்படி. அரையில். பாய்ந்து - `அரை` என்னும் ஒருவகை மரத்தின்மேற் பாய்ந்து. உகளும் புறவு - விளையாடுகின்ற காடு. தா மரையின் ஈட்டம் - தாவி ஓடுகின்ற `மரை` என்னும் மானின் கூட்டத்தை. சிதறும் - அழிக்கின்ற. வாட்டம் - மெலிவு. ஈங்கோய் மலையைச் சூழ அந்தணர்கள் இருக்கையுள்ளதைக் குறித்தவாறு. இவ்வெண்பா, சொற்பின் வருநிலையணி பெற்றது.

பண் :

பாடல் எண் : 47

தெள்ளகட்ட பூஞ்சுனைய தாமரையின் தேமலர்வாய்
வள்ளவட்டப்பாழி மடலேறி வெள்ளகட்ட
காராமை கண் படுக்கும் ஈங்கோயே வெங்கூற்றைச்
சேராமைச் செற்றான் சிலம்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அகடு - நடுவிடம். தெள் அகட்ட சுனை - தெளிவான நடுவிடத்தையுடைய சுனை. தேன் + மலர் = தேமலர். `வாயாகிய வட்டம்` என்க. வள்ள வட்டம் - கிண்ணம் போலும் வட்டம். பாழி - உள் ஆழ்ந்த. கடல் - இதழ் வெள் அகட்ட காராமை - வெண்மையான வயிற்றையுடைய கரிய ஆமை. குறிப்பு: பழம் பதிப்புக்களில் காணப்படாதனவாகிய இப் பதினைந்து பாடல்களும் திருப்பனந்தாள் ஷ்ரீகாசி மடத்துப் பதிப்பில் கண்டு, பின் இணைப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

பண் :

பாடல் எண் : 48

தேன்பலவின் வான்சுளைகள் செம்முகத்த பைங்குரங்கு
தான்கொணர்ந்து மக்கள்கை யிற்கொடுத்து வான்குணங்கள்
பாராட்டி யூட்டுஞ்சீர் ஈங்கோயே பாங்கமரர்
சீராட்ட நின்றான் சிலம்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பாங்கு அமரர் சீராட்ட நின்றான் சிலம்பு, குரங்கு பலவின் சுளைகளை மக்கள் கையில் கொடுத்து ஊட்டும் ஈங்கோயே` எனக் கூட்டுக. தேன் - இனிமை, பலா - பலாமரம். கருங்குரங்கு என்பது இங்கு பைங்குரங்கு எனப்பட்டது. வான் குணங்கள் - மக்க ளுடைய சிறப்புப் பண்புகள். சீராட்டுதல் என்பது ஒரு சொல். புகழ்தல் என்பது அதன் பொருள். பாங்கு - பக்கம். சந்நிதி என்பது பொருள்.

பண் :

பாடல் எண் : 49

தேன்மருவு பூஞ்சுனைகள் புக்குச் செழுஞ்சந்தின்
கானமர்கற் பேரழுகு கண்குளிர மேனின்
றருவிகள்தாம் வந்திழியும் ஈங்கோயே வானோர்
வெருவுகடல் நஞ்சுண்டான் வெற்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சுனைகள் புக்கு என்பதன் பின் `ஆடும் மகளிர்` என ஒரு சொல் வருவிக்க. சுனை ஆடும் மகளிர் காட்டின் அழகை கண் குளிரக் காணும்படி அருவிகள் வந்து இழியும் ஈங்கோய் என்க. சந்தது - சந்தன மரம். கான் - காடு. சந்தனக் காட்டின் பேரழகு என்க.

பண் :

பாடல் எண் : 50

தோகை மயிலினங்கள் சூழந்து மணிவரைமேல்
ஒகை செறிஆயத் தோடாட நாகம்
இனவளையிற் புக்கொளிக்கும் ஈங்கோயே நம்மேல்
வினைவளையச் செற்றுகந்தான் வெற்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஓகை செறி ஆயம் - உவகை மிகுந்த மகளிர் கூட்டம் இனவளை - கூட்டமாய் உள்ள புற்று. வினை வளையைச் செற்று - முன் செய்த வினை வந்து பற்றும் பொழுது அவற்றை அழித்து.

பண் :

பாடல் எண் : 51

நறவம் நனிமாந்தி நள்ளிருட்கண் ஏனம்
இறவி லியங்குவான் பார்த்துக் குறவர்
இறைத்துவலை தைத்திருக்கும் ஈங்கோயே நங்கை
விரைத்துவலைச் செஞ்சடையான் வெற்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நறவம் - தேன். ஏனம் - பன்றி. இனத்து வலை தைத் திருக்கும் - பலவாய வலைகளை அமைத்திருக்கின்ற (ஈங்கோய்). நங்கை - கங்கை. விரை - துவலை, மணம் பொருந்திய நீர்த்துளிகள். இரவு என்பது எதுகை நோக்கி இறவு எனத் திரிந்தது.

பண் :

பாடல் எண் : 52

நாக முழைநுழைந்த நாகம்போம் நல்வனத்தில்
நாகம் விழுங்க நடுக்குற்று நாகந்தான்
மாக்கையால் மஞ்சுரிஞ்சும் ஈங்கோயே ஓங்கிசெந்
தீக்கையால் ஏந்தி சிலம்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நாகமுழை நுழைந்த நாகம் - மலைக் குகையில் நுழைந்த மலைப்பாம்பு. போய் - வெளியே புறப்பட்டுச் சென்று. நாகம் விழுங்க - குரங்கை விழுங்க. நாகம் மாக்கையால் மஞ்சு உரிஞ்சும் - யானை தனது பெரிய கையால் மேகத்தைத் தடவுகின்ற. இது சொற்பின் வருநிலையணி.

பண் :

பாடல் எண் : 53

நாகங் களிறுநுங்க நல்லுழுவை தாமரையின்
ஆகந் தழுவி அசைவெய்த மேகங்
கருவிடைக்க ணீர்சோரும் ஈங்கோயே ஓங்கு
பொருவிடைக்க ணூர்வான் பொருப்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நாகம் களிறு நுங்க - மலைப்பாம்பு யானையை விழுங்க. உழுவை - புலி. தாமரையின் ஆகம் தழுவிட - தாவிச் செல்லு கின்ற மானின் உடம்பைத் தழுவி. அசைவு எய்த - தங்கியிருக்க. மேகம் கருவிடைக் கண் நீர் சொரியும் - சூல் கொண்ட மேகம் அச் சூலினின்றும் மழையைப் பொழிய. மழை பெய்யும்பொழுது பாம்பு யானையை விழுங்குதல் முதலியவை நிகழ்கின்றன என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 54

பணவநிலைப் புற்றின் பழஞ்சோற் றமலை
கணவனிடந்திட்ட கட்டி உணவேண்டி
எண்கங்கை ஏற்றிருக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல்
வண்கங்கை ஏற்றான் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பணவம் - பாம்பு. புற்றின் பழஞ்சோறு - புற்றாஞ் சோறு என வழங்கும். கணவன் - ஆண் கரடி. இடந்து - பெயர்த்துக் கொணர்ந்து. இட்டகட்டி - இட்ட சோற்றுத்திரள். எண்கு - பெண் கரடி.

பண் :

பாடல் எண் : 55

பன்றிபருக்கோட்டாற் பாருழுத பைம்புழுதித்
தென்றி மணிகிடப்பத் தீயென்று கன்றிக்
கரிவெருவிக் கான்படரும் ஈங்கோயே வானோர்
மருவரியான் மன்னும் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பன்றி, காட்டுப் பன்றி. பருக்கோடு - பருத்த கொம்பு. புழுதித் தென்றி - மண்மேடு. மணி - மாணிக்கம். கன்றி - மனம் நைந்து. கரி - யானை.

பண் :

பாடல் எண் : 56

பாறைமிசைத் தன்நிழலைக் கண்டு பகடென்று
சீறி மருப்பொசித்த செம்முகமாத் தேறிக்கொண்
டெல்லே பிடியென்னும் ஈங்கோயே மூவெயிலும்
வில்லே கொடுவெகுண்டான் வெற்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நிழல் - வெயில் காரணமாகத் தோன்றுகின்ற நிழல். பகடு - வேறோர் யானை. மருப்பு ஒசித்த - பாறை மேலே முட்டித் தன் கொம்பை ஒடித்துக் கொண்ட -செம்முகமா- உதிரம் ஒழுகுகின்ற முகத்தை உடைய யானை. எல்லே - அந்தப் பகற்பொழுதிலே. பிடி என்னும் - பெண் யானை என்று மகிழ்கின்ற.

பண் :

பாடல் எண் : 57

பிடிபிரிந்த வேழம் பெருந்திசைநான் கோடிப்
படிமுகிலைப் பல்காலும் பார்த்திட் டிடரா
இருமருப்பைக் கைகாட்டும் ஈங்கோயே வானோர்
குருவருட்குன் றாய்நின்றான் குன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பிடி - பெண் யானை. வேழம் - ஆண் யானை. இடரா - துன்பம் உடையதாய். இருமருப்பைக் கை காட்டும் - தனது இரு தந்தங்களையும் தும்பிக்கையையும் காட்டி அழைக்கின்ற. குரு அருட் குன்று - குரு மூர்த்தியாகிய அருள்மலை.

பண் :

பாடல் எண் : 58

பொருத கரியின் முரிமருப்பிற் போந்து
சொரிமுத்தைத் தூநீரென் றெண்ணிக் கருமந்தி
முக்கிவிக்கி நக்கிருக்கும் ஈங்கோயே மூவெயிலும்
திக்குகக்கச் செற்றான் சிலம்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முரி மருப்பிற் போந்து - முரிந்த மருப்பினின்றும் வெளிப்பட்டு தூ நீர் என்று - மழைநீர் என்று நினைத்து. கருமந்தி - கருங் குரங்கு (பெண்) முக்கி விக்கி நக்கு இருக்கும் - முழுகியும் பருகியும் பிற குரங்குகள் நகைக்க இருக்கின்ற. ஒக என்பது ஒக்கு எனத் திரிந்து வந்தது. திக்கு உகக்க - எட்டுத் திக்கிலும் உள்ளவர்கள் விரும்பும்படி.

பண் :

பாடல் எண் : 59

மறவெங் களிற்றின் மருப்புகுத்த முத்தம்
குறவர் சிறார்குடங்கைக் கொண்டு நறவம்
இளவெயில்தீ யட்டுண்ணும் ஈங்கோயே மூன்று
வளவெயில்தீ யீட்டான் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மறம் - வீரம். குடங்கை - உள்ளங்கை. கொண்டு - எடுத்துக்கொண்ட பின்பு. முத்துக்களை வாரிய குறங்கினார் தேனை இளவெயிலாகிய நீரில் காய்ச்சி உண்கின்றனர் என்க.

பண் :

பாடல் எண் : 60

மலைதிரிந்த மாக்குறவன் மான்கொணர நோக்கிச்
சிலைநுதலி சீறிச் சிலைத்துக் கலைபிரிய
இம்மான் கொணர்தல் இழுக்கென்னும் ஈங்கோயே
மெய்ம்மான் புணர்ந்தகையான் வெற்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சிலைநுதலி - வில் போன்ற நெற்றியினை உடைய குறத்தி. சிலைத்து - கடிந்து பேசி. கலை - ஆண் மான். குறவன் பெண் மானைப் பிடித்து வந்ததற்கு குறத்தி சினம் கொண்டு பேச ஆண் மான் விலகிச் சென்றது.

பண் :

பாடல் எண் : 61

மரையதளும் ஆடும் மயிலிறகும் வேய்ந்த
புரையிதணம் பூங்கொடியார்புக்கு நுரைசிறந்த
இன்நறவுண் டாடி இசைமுரலும் ஈங்கோயே
பொன்நிறவெண் ணீற்றான் பொருப்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மரை அதள் - மான் தோல். புரை இதணம் - உயர்ந்த பரண். இன் நறவு - இனிய தேன்.

பண் :

பாடல் எண் : 62

மலையர் கிளிகடிய மற்றப் புறமே
கலைகள் வருவனகள் கண்டு சிலையை
இருந்தெடுத்துக் கோல்தெரியும் ஈங்கோயே மாதைப்
புரிந்திடத்துக் கொண்டான் பொருப்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மலையர் - மலையிலே உள்ள வேடர். கலைகள் - மான்கள். சிலை - வில். கோல் - அம்பு.

பண் :

பாடல் எண் : 63

மத்தக் கரிமுகத்தை வாளரிகள் பீறவொளிர்
முத்தம் பனிநிகர்க்கும் மொய்ம்பிற்றால் அத்தகைய
ஏனற் புனம்நீடும் ஈங்கோயே தேங்குபுனல்
கூனற் பிறையணிந்தான் குன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மதக் கரி` என்பது, ``மத்தக் கரி`` என விரித்தல் பெற்றது. கரி - யானை. வாள் அரிகள் - கொடிய சிங்கங்கள். முத்தம் - முத்து. இவை யானையின் மத்தகத்திலிருந்து உதிர்ந்தவை. பனி - பனித்துளிகள், மொய்ம்பு - வலிமை. அஃது இங்கு `சிறப்பு எனப் பொருள் தந்தது. `மொய்ம்பிற்றாம் ஏனற் புனம்` என ஒரு தொடராக ஓதற்பாலதனை ``மொய்ம்பிற்று; அத்தகைய ஏனற் புனம்`` என இரு தொடராக ஓதினார், அச்சிறப்பை வலியுறுத்தற்கு. ஆல், அசை. ஏனல்- தினை. `புனலையும், பிறையையும் அணிந்தான்` என்க.

பண் :

பாடல் எண் : 64

மந்தி இனங்கள் மணிவரையின் உச்சிமேல்
முந்தி இருந்து முறைமுறையே நந்தி
அளைந்தாடி ஆலிக்கும் ஈங்கோயே கூற்றம்
வளைந்தோடச் செற்றான் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மணி வரை - இரத்தின மலை. இஃது இம்மலையின் ஒரு பகுதியில் உள்ளதாகக் கூறப்பட்டது. `முறை முறையே முந்தி` - என மாற்றிக்கொள்க. முறைமுறையே முந்துதலாவது, `நான் முன்னே, நான் முன்னே` என ஒன்றை ஒன்று நந்தி - மகிழ்ந்து முந்து அணைதல் - ஒன்றை ஒன்று தழுவுதல். ஆலிக்கும் - ஆரவாரிக்கும் வளைந்து ஓடுதல் - மறைந்து ஓடுதல்.

பண் :

பாடல் எண் : 65

மந்தி மகவினங்கள் வண்பலவின் ஒண்சுளைக்கண்
முந்திப் பறித்த முறியதனுள் சிந்திப்போய்த்
தேனாறு பாயுஞ்சீர் ஈங்கோயே செஞ்சடைமேல்
வானாறு வைத்தான் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மக இனங்கள் - குட்டிக் கூட்டங்கள். பறித்த - பிளந்து எடுத்த. முறி - சிறு துண்டுகள். ``உள்`` என்னும் ஏழன் உருபை. `இன்` என்னும் ஐந்தன் உருபாகத் திரிக்க. போய் - பல இடங்களிலும். தேன் - பலாச்சுளைச் சாறு `ஆறாகப் பாயும்` என ஆக்கம் வருவிக்க. ``உள்`` என்பதனைத் திரியாமலே, `சுளைத் துண்டுகளுக்குள்ளே தேனாகிய ஆறு பாயும்` என உரைத்தலும் ஆம்.

பண் :

பாடல் எண் : 66

முள்ளார்ந்த வெள்ளிலவம் ஏறி வெறியாது
கள்ளார்ந்த பூப்படியுங் கார்மயில்தான் ஒள்ளார்
எரிநடுவுட் பெண்கொடியார் ஏய்க்கும்ஈங் கோயே
புரிநெடுநூல் மார்பன் பொருப்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முள்ளிலவின் பூச் சிவந்து நெருப்புப் போலக் காணப் படும். அதனால் அவற்றின் நடுவே நிற்கும் மயில் தீயின் நடுவில் தீங்கின்றி நிற்கும் கற்புடை மகளிர் போலத் தோன்றாநின்றது. ``வெள்ளிலவு`` என்றது அம்மரத்தின் நிறம் வெண்மையாய் இருத்தல் பற்றி. வெறித்தல் - வெற்றிடத்தில் நிற்றல். வெறியாது - வெற்றிடத்தில் செல்லுதல். கள் - தேன். பூப் படிதல் - பூக்களுக்கு நடுவே மூழ்குவது போல நிற்றல். கார் மயில் - கரிய மயில், தான், அசை. ஒள் எரி - ஒளி பொருந்திய தீ. ஆரெரி - தீண்டுதற்கரிய நெருப்பு.

பண் :

பாடல் எண் : 67

வளர்ந்த இளங்கன்னி மாங்கொம்பின் கொங்கை
அளைந்து வடுப்படுப்பான் வேண்டி இளந்தென்றல்
எல்லிப் புகநுழையும் ஈங்கோயே தீங்கருப்பு
வில்லிக்குக் கூற்றானான் வெற்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கன்னி மாங்கொம்பின் கொங்கை அணைந்து`` என்பது கன்னிப் பெண்ணுக்கும், மாங்கொம்பிற்கும் ஆய சிலேடை. பெண்மேற் செல்லுங்கால், மாங்கொம்பு - மாந்தளிர்போலும் மேனியை உடைமையால் மாங்கொம்பு போல்பவள். கொங்கை - தனம். வடுப்படுத்தல் - குற்றம் உண்டாக்குதல். மாங்கொம்பின் மேற் செல்லுங்கால், கன்னி - புதுமை. கொங்கை = கொங்கு + ஐ. வாசனையை வடுப்படுத்தல் - மாவடுவை உதிர்த்தல். `அளைதல் - அளவளாவிக் கலத்தல். எல்லி - இரவு` இவை இரண்டிற்கும் பொது. இதில், தற்குறிப்பேற்றத்தோடு சிலேடை சேர்ந்து வந்தது. சேர்வையணி. கருப்பு வில்லி - கரும்பை வில்லாக உடைய மன்மதன்.

பண் :

பாடல் எண் : 68

வான மதிதடவல் உற்ற இளமந்தி
கான முதுவேயின் கண்ணேறித் தானங்
கிருந்துயரக் கைநாட்டும் ஈங்கோயே நம்மேல்
வருந்துயரம் தீர்ப்பான் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உற்ற - விரும்பி. ``கண்`` என்றது உச்சியிடத்தை. சந்திரனை மூங்கிலின் உச்சியில் இருப்பதாக மயங்கி. அதன் அழகைக் கண்டு அதனைக் கையால் தடவிப் பார்க்க விரும்பிய இள மந்தி, அங்குச் சென்று இல்லாமையால் தன் ஆசையால் மேலே கையை நீட்டிப் பார்ப்பதாயிற்று. இதில் மயக்க அணியும், தொடர்புயர்வு நவிற்சியணியும் சேர்ந்து வந்தமையால் சேர்வை யணி.

பண் :

பாடல் எண் : 69

வேய்வனத்துள் யானை தினைகவர வேறிருந்து
காய்வனத்தே வேடன் கணைவிசைப்ப வேயணைத்து
மாப்பிடிமுன் ஒட்டும்ஈங் கோயே மறைகலிக்கும்
பூப்பிடிபொற் றாளான் பொருப்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வேய் வனம் - மூங்கிற் காடு. அதனிடையே தினை விதைக்கப்பட்டிருந்தது என்க. யானை, களிற்றியானை. வேறு - மறை வான ஒரு தனியிடம். காய் வனம் - வெயில் கடுமையாகக் காய்கின்ற காடு. விசைப்ப - வேகமாக ஏவ. பிடி வேய் அணைத்து முன் ஓட்டும்- பெண் யானை மூங்கிலை வளைத்து களிற்றியானை. வேறு - மறைவன ஒரு தனியிடம். காய் வனம் - வெயில் கடுமையாகக் காய்கின்ற காடு. விசைப்ப - வேகமா ஏவ. பிடி வேய் அணைத்து முன் ஓட்டும் - பெண் யானை மூங்கிலை வளைத்து அக்கிளை களிற்றின்மேல் படாதபடி விலகி ஓடச் செய்கின்ற. மறை கலிக்கும் தாள் - வேதமாகிய சிலம்பு ஒலிக்கின்ற திருவடி. பூப்பிடி - பூவின் தன்மையைக் கொண்ட. பொன்- அழகு.

பண் :

பாடல் எண் : 70

வழகிதழ்க் காந்தள்மேல் வண்டிருப்ப ஒண்தீ
முழுகியதென் றஞ்சிமுது மந்தி பழகி
எழுந்தெழுந்து கைநெரிக்கும் ஈங்கோயே திங்கட்
கொழுந்தெழுந்த செஞ்சடையான் குன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வழகு - வழுவழுக்கின்ற. அஃதாவது, மெத்தென்ற. காந்தள், செங்காந்தள் மலர். `தீயின்கண்` என ஏழாவது விரிக்க. பழகி- பன்முறையாக. இது திரிபதிசய அணி. திருஈங்கோய் மலை எழுபது முற்றிற்று

பண் :

பாடல் எண் : 1

வணங்குதும் வாழி நெஞ்சே புணர்ந்துடன்
பொருகடல் முகந்து கருமுகிற் கணம்நற்
படஅர வொடுங்க மின்னிக் குடவரைப்
பொழிந்து கொழித்திழி அருவி குணகடல்
மடுக்குங் காவிரி மடந்தை வார்புனல்
உடுத்த மணிநீர் வலஞ்சுழி
அணிநீர்க் கொன்றை அண்ணல தடியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திருவலஞ்சுழி காவிரியின் தென்கரையில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் ஒன்று. `நெஞ்சே வலஞ்சுழி அண்ணலது அடியே வணங்குதும்; வாழி` என இயைத்து முடிக்க. கருமுகிற் கணம் உடன் புணர்ந்து பொரு கடல் முகந்து மின்னிக் குடவரைப் பொழிந்து கொழித்து இழி அருவி குண கடல் மடுக்கும் காவிரி` எனவும் இயைக்க.
உடன் புணர்ந்து - ஒரு சேரச் சேர்ந்து. பொரு கடல் - அலை யால் கரையைத் தாக்குகின்ற கடல். கடல், அதன் நீரைக் குறித்தமை யால் ஆகுபெயர். மின்னல் தோன்றிய உடன் இடி முழக்கம் கேட்கும் ஆதலால் அதனை அறிந்த பாம்புகள் புற்றில் ஒடுங்குபவாயின. குடவரை - மேற்கு மலை; சைய மலை. பொழிந்து - பொழிதலால். `மணிகளைக் கொழித்து` எனக் கொழித்தற்குச் செயப்படு பொருள் வருவிக்க. குண கடல் - கீழ்க்கடல். `கடலை மடுப்பிக்கும் - உட்கொள் விக்கும் காவிரி` என்க. ``காவிரி`` என்றது அவ்யாற்றினை. அதனை அறம் வளர்க்கும் மடந்தையாக உருவகித்து, கடலைப் பசித்து நிற்கும் இரவலனாக உருவகம் செய்யாமையால் இஃது ஏகதேச உருவகம். காவிரியினது நீரால் சூழப்பட்டமையின் மணி நீரை உடைய வலஞ்சுழி யாயிற்று`` மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சூழி`` 1 என ஞானசம்பந்தரும் அருளிச் செய்தார். காவிரியாறு இத்தலத்துக்கு அருகில் ஓடி வந்து பாதலத்தில் வீழ்ந்து விட்டதை `ஏரண்டர்` என்னும் முனிவர் இறங்கி வெளிப்படச் செய்யக் காவிரி மேலே வலம் சுழித்து எழுந்தமையால் `வலஞ்சுழி` எனப் பெயர்பெற்றது. என்பது தலபுராணம். அணி நீர் - அழகிய தன்மை. கொன்றை, முன்னர் அதன் மலரையும், பின்னர் அம்மலரால் ஆகிய மாலையையும் குறித்தலால் இருமடியாகுபெயர். `எனது வேண்டுகோளுக்கு இணங்கினமையால் நீ வாழ்வாயாக` என்க.

பண் :

பாடல் எண் : 2

அடிப்போது தம் தலைவைத் தவ்வடிகள் உன்னிக்
கடிப்போது கைக்கொண்டார் கண்டார் முடிப்போதா
வாணாகஞ் சூடும் வலஞ்சுழியான் வானோரும்
காணாத செம்பொற் கழல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வானோரும் காணாத, வலஞ்சுழியான் செம்பொற் கழலை அவ் அடிப் போதினைத் தம் தலைமேல் வைத்து, அவ்அடி களை (மனத்தில்) உன்னிக் கடிப்போது (மணம் மிக்க மலர்களைக்) கைக்கொண்டாரே (கைக்கொண்டு தூவி வழிபட்டவர்களே) கண்டார்; (ஏனையோர் கண்டிலர்) எனக் கூட்டி முடிக்க.
``தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான்`` 2 எனச் சேக் கிழாரும் அருளிச் செய்தார். போதாக - சூடும் பூவாக. வாள் நாகம் - கொடிய பாம்பு.

பண் :

பாடல் எண் : 3

கழல்வண்ண மும்சடைக் கற்றையும் மற்றவர் காணகில்லாத்
தழல்வண்ணங் கண்டே தளர்ந்தார் இருவர் அந் தாமரையின்
நிழல்வண்ணம் பொன்வண்ணம் நீர்நிற வண்ணம் நெடியவண்ணம்
அழல்வண்ணம் முந்நீர் வலஞ்சுழி ஆள்கின்ற அண்ணலையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அம் தாமரையின் நிழல் வண்ணம்... அழல் வண்ணம் இவற்றோடு வலஞ்சுழியை ஆள்கின்ற அண்ணலை இருவர் தாம் கழல் வண்ணமும், சடைக் கற்றையும் காணகில்லாத் தழல் வண்ணராகக் கண்டே தளர்ந்தார்` என இயைத்துமுடிக்க. தாமரை வண்ணம் முதலாகக் கூறியன சிவபெருமான் எவ்வண்ணமும் உடையன் ஆதலைக் குறித்தது.
......வெளியாய், கரியாய்,
பச்சையனே செய்ய மேனியனே *
எனத் திருவாசகத்திலும் வந்தது. முந்நீர் - கடல்; `கடல் போலும் காவிரியின் வலஞ்சுழி` என்க.

பண் :

பாடல் எண் : 4

அண்ணலது பெருமை கண்டனம் கண்ணுதற்
கடவுள் மன்னிய தடம்மல்கு வலஞ்சுழிப்
பனிப்பொருட் பயந்து பல்லவம் பழிக்கும்
திகழொளி முறுவல் தேமொழிச் செவ்வாய்த்
திருந்திருங் குழலியைக் கண்டு
வருந்திஎன் உள்ளம் வந்தஅப் போதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`குழலியைக் கண்டு என் உள்ளம் வருந்தி வந்த அப்போதே அண்ணலது பெருமை கண்டனம்` என இயைத்து முடிக்க. இது தோழி வெறி விலக்கிக் கூறியது. அண்ணல், தலைவன். தடம் மல்கு - பொய்கைகள் மிக்க. வைசேடிகர் பண்பு, தொழில் முதலிய அனைத்தையும் `பொருள்` எனக் கூறும் முறைபற்றிப் பண்பினை இங்கு, ``பொருள்`` என்றார். பனி - குளிர்ச்சி. குளிர்ச்சியாகிய பண்பு. காவிரி வலஞ்சுழித்து ஓடுதலால் அதனைச் சார்ந்து விளங்கும் தலம் குளிர்ச்சியைத் தருவதாயிற்று. `வலஞ்சுழிப் பொருள்` என இயையும். பயத்தலுக்கும், பழித்தலுக்கும் கருவியாய `மேனியால்` என்பது வருவிக்க. `மேனி தரும் குளிர்ச்சி மனத்திற்கு மாம் என்க. பல்லவம் - தளிர், திருந்துதல், நன்கு சீவிமுடித்தல். தலைவனோடு களவில் இயற்கைப் புணர்ச்சி எய்தி தலைவி வந்த காலத்தில் தோழி அவளது வேறுபாட்டைக் கண்டு வருந்தினளாயினும், `எட்டியும், சுட்டியும் காட்டப்படாத குலத்தையுடையவளாகிய இவளது உள்ளத்தைப் புதுவதாக ஒருமுறை கண்டபொழுதே முற்றிலும் கொள்ளை கொண்டவன் பல்லாற்றானும் ஒப்புயர்வற்ற தலைவனே யாவன்` என உய்த்துணர்ந்து மகிழ்ந்தாளாதலின், அதனைத் தலைவிதன் வேறுபாடு தெய்வத்தான் ஆயதாகக் கருதி வெறியாடத் தொடங்கியோர்முன் செவிலி கேட்பக் கூறினாள் என்க.

பண் :

பாடல் எண் : 5

போதெலாம் பூங்கொன்றை கொண்டிருந்த பூங்கொன்றைத்
தாதெலாம் தன்மேனி தைவருமால் தீதில்
மறைக்கண்டன் வானோன் வலஞ்சுழியான் சென்னிப்
பிறைக்கண்டங் கண்டணைந்த பெண்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பூங் கொன்றை`` இரண்டில் முன்னது அழகிய கொன்றை மரம்; பின்னது `கொன்றைப் பூ` எனப் பின் முன்னாக மாற்றிக் கொளற்பாலது. போது - பொழுது. போதெலாம் - `எப் பொழுதும் தைவரும்` என முடிக்க. ``பெண்`` என்றது, `என் பெண்` என்றபடி. `என் பெண் பிறைக் கண்டம் கண்டு அணைந்த பின், கொன்றை மரம் கொண்டிருக்கின்ற கொன்றப் பூவைப் பறித்து அதன் மகரந்தத்தை உடம்பு முழுதிலும் எப்பொழுதும் பூசிக்கொண்டே யிருக்கின்றாள் என்க. தைவருதல் - தடவுதல். மறைக்கண்டன் - வேதம் முழங்கு மிடற்றினை உடையவன். வானோன் - தேவன். கண்டம் - துண்டம். அணைதல் - மீளுதல். இது, தலைவியது ஆற்றாமைக்குச் செவிலி நொந்து கூறியது.

பண் :

பாடல் எண் : 6

பெண்கொண் டிருந்து வருந்துங்கொ லாம் பெரு மான்திருமால்
வண்கொண்ட சோலை வலஞ்சுழி யான் மதி சூடிநெற்றிக்
கண்கொண்ட கோபங் கலந்தன போல்மின்னிக் கார்ப்புனத்துப்
பண்கொண்டு வண்டினம் பாடநின் றார்த்தன

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`புனத்து வண்டினம் பாடப் பன்முகில் மின்னி ஆர்த்தன; பெண் கொண்டிருந்து வருந்தும்` என இயைத்து, `என்செய்கேன்` என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க. பெண் தலைமை பற்றித் தலைவியையே குறித்தது. `திருமாலின் வண்ணம் கொண்ட சோலை என்க. திருமாலின் வண்ணம் கருமை. கொண்டு - இவற்றை நினைத்துக்கொண்டு. கொல், ஆம் அசைகள். ``கோபம்`` என்பது, கோபத்தால் தோன்றும் தீயைக் குறித்தமையால் கருவியாகுபெயர். கார்ப்புனம் - இருளால் கருமையுடைத்தாகிய புனம், ``வண்டுகள் பாட`` என்றது. ``கார்ப் பருவத்தில் பூக்கள் பூத்தன`` என்பதைக் குறித்தவாறு. இது, தலைவன் நீடக் கார்ப்பருவம் கண்டு, ``தலைவி ஆற்றாள்`` எனத் தோழி நொந்து தன்னுள்ளே சொல்லியது.

பண் :

பாடல் எண் : 7

முகிற்கணம் முழங்க முனிந்த வேழம்
எயிற்றிடை அடக்கிய வெகுளி ஆற்ற
அணிநடை மடப்பிடி அருகுவந் தணைதரும்
சாரல் தண்பொழில் அணைந்து சேரும்
தடம்மாசு தழீஇய தகலிடம் துடைத்த
தேனுகு தண்தழை தெய்வம் நாறும்
சருவரி வாரல்எம் பெருமநீர் மல்கு
சடைமுடி ஒருவன் மருவிய வலஞ்சுழி
அணிதிகழ் தோற்றத் தங்கயத் தெழுந்த
மணிநீர்க் குவளை அன்ன
அணிநீர்க் கருங்கண் ஆயிழை பொருட்டே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`எம் பெரும, ஆயிழை பொருட்டு, (நீ) சரு வரி வாரல்` என இயைத்து முடிக்க. `இடி முழக்கத்தைச் செய்த முகிற் கூட்டத்தைக் களிற்றியானை. `வேறு யானை` என்று கருதிச் சினந்து அதனைத் தன் தந்தங்களுக்கிடையே கோத்துக் கொள்ள, தவறாகக் கொண்ட அதன் சினத்தை ஆற்றுதற்குப் பிடியானை அதன் அருகு வந்து அணையும் தண்பொழிலில் தானும் வந்து சினம் தணிந்த களிற்றின் மதம் ஒழுகப் பெறும் வழி மாசுபட்டதாக அதனைத் தம்மேல் ஒழுகிய தேனைச் சிந்தித்தூய்மைப் படுத்துகின்ற தண்ணிய தழைகள் தெய்வ மணம் கமழ்கின்ற, தேவர் உண்டாட்டுச் செய்கின்ற வழியிலே வருதல் வேண்டா` எனப் பொருள் காண்க. சரு -தேவர் உண்ணும் உணவு. வரி - இசை. அஃது அதனையுடைய வழியைக் குறித்தது. இது இரவுக் குறி வரும் தலைவனை `அது வேண்டா` என விலக்கியது. இதன் பயன், அவன் களவு நீட்டியாது வரைவு முயலல்.

பண் :

பாடல் எண் : 8

பொருள்தக்கீர் சில்பலிக்கென் றில்புகுந்தீ ரேனும்
அருள்தக்கீர் யாதுநும்ஊர் என்றேன் மருள்தக்க
மாமறையம் என்றார் வலஞ்சுழிநம் வாழ்வென்றார்
தாம்மறைந்தார் காணேன்கைச் சங்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பொருள் தக்கீர் - பொருள்கள் பலவற்றுள்ளும் `பொருள்` என்று உணரத் தக்கவரே. நீர் சில பொருள்களைப் பிச்சை யாக ஏற்றற்கு இல்லங்களில் புகுந்தீராயினும், அருள் தக்கீர் - கருணை யால் பெரிதும் தகுதி வாய்ந்திருக்கின்றீர். ஆகவே, `நும் ஊர் யாது` என அறிய விரும்புகின்றேன் - என்றேன். அவர் `மறையம்`என்றார். `நம் வாழ்வு வலஞ்சுழி` என்றார். இவ்வாறு சொல்லி மறைந்து விட்டார். அப்பொழுதே என் கையில் இருந்த சங்கவளையலை நான் காணவில்லை. மருள் தக்க - வியக்தத் தக்க. மறை - மறைக்காடு. மறையம்- அதன்கண் உள்ளேம் ``வாழ்வு`` என்க. அதற்கு உரிய இடத்தைக் குறித்த ஆகுபெயர். பின்பு அவரைக் காணாது காதல் மிகுதியால் உடல் மெலிந்தாளாகலின் அவள் கையிலிருந்த வளை அவளை யறியாமல் கழன்று ஒழிந்தது. இது நொதுமலர் வரைவு நோக்கித் தலைவி தோழிக்கு அறத்தொடு நின்றது.

பண் :

பாடல் எண் : 9

சங்கம் புரளத் திரைசுமந் தேறுங் கழியருகே
வங்கம் மலியுந் துறையிடைக் காண்டிர் வலஞ்சுழியா
றங்கம் புலன்ஐந்தும் ஆகிய நான்மறை முக்கண்நக்கன்
பங்கன் றிருவர்க் கொருவடி வாகிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திரை, சங்கங்களைப் புரளச் சுமந்து ஏறும் கழி` என்க. வங்கம் - மரக்கலம். ஆறு அங்கம் - வேதத்திற்கும் அங்கமான ஆறு நூல்கள். அவற்றில் சொல்லப்பட்ட முறைமைகளை உடைமையால், நான்மறையை அவையேயாகக் கூறினார். ``புலன் ஐந்து`` என்பது உபலக்கணத்தால் அனைத்துத் தத்துவங்களையும் குறித்தது. `இவை யான நான்மறை` என்றதற்கும் அங்கங்கட்கு உரைத்தவாறே கொள்க. `நான்மறையை அருளிச் செய்த முக்கண் நக்கன்` என்க. `அவனது பங்கில் அன்றே இருவர்க்கும் ஒருவடிவேயாகும்படி ஒன்றியிருக் கின்ற பாவையை (தேவியை) வலஞ்சுழி வழிச் சென்று கழியருகே துறையிடைக் காணுதிர், என இயைத்து முடிக்க. ``பாவையைக் காண்டிர்`` என்றாராயினும் `முக்கண் நக்கர் பாவை யோடு ஒன்றாய், ஒருவடிவாய் இருக்கும் கோலத்தைக் காண்மின் என்பதே கருத் தென்க. இஃது இறைவரது அர்த்தநாரீசுர வடிவத்தை வியந்தவாறு.

பண் :

பாடல் எண் : 10

பாவை ஆடிய துறையும் பாவை
மருவொடு வளர்ந்த வன்னமும் மருவித்
திருவடி அடியேன் தீண்டிய திறனும்
கொடியேன் உளங்கொண்ட சூழலுங் கள்ளக்
கருங்கண் போன்ற காவியும் நெருங்கி
அவளே போன்ற தன்றே தவளச்
சாம்பல் அம்பொடி சாந்தெனத் தைவந்து
தேம்பல் வெண்பிறை சென்னிமிசை வைத்த
வெள்ளேற் றுழவன் வீங்குபுனல் வலஞ்சுழி
வண்டினம் பாடுஞ் சோலைக்
கண்ட அம்மஅக் கடிபொழில் தானே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வலஞ்சுழியில் வண்டினம் பாடும் சோலையாகக் கண்ட அக் கடிபொழில்தானே, துறையும், வன்னமும், திறனும், சூழலும், காவியும் நெருங்கி அவளே போன்றதன்றே` - என இயைத்து முடிக்க.
பாவை ஆடுதல், மகளிர் பாவையைக் கையில் குழந்தையாக ஏந்தி அது பேசுவது போல வைத்து அதனுடனே பேசி நீரில் மூழ்கியாடுதல். `ஆடாநின்ற` என்னும் நிகழ்காலம், `ஆடிய` என இறந்த காலமாகச் சொல்லப்பட்டது. `பாவையை மருவுதலோடு வளர்ந்த வன்னமும்` என்க. வன்னம் - அழகு. கடல் நீர் பாவையோடு பொலிதலால் ஓர் அழகு பெற்று விளங்குவதாயிற்று, ``அடியேன், கொடியேன்`` என்பன தன்னை வெறுத்துக் கூறிக்கொண்டன. தலைவி தன் பாதங்களை, ``திருவடி`` என்றான். திரு - அழகு, அதனைத் தலைவன் தீண்டியது, வணங்கியது. ``திறன்`` என்றது, அதன் அடையாளமாகப் பதிந்த சுவட்டினை. உள்ளத்தைக் கவர்ந்தவள் தலைவி. கவர்ந்த இடத்தைக் காணும் பொழுது, கவர்ந்த நிலைமை உள்ளத்தில் தோன்றுகின்றது. காவி - குவளை மலர். துறை, வன்னம், திறன், சூழல் இவை அனைத்தினாலும் கடற்றுறை தலைவனுக்குத் தான் முன்பு அங்குக் கண்ட தலைவிபோலவே தோன்ற அவன் இவ்வாறு வருந்திக் கூறினான். எனவே இது, களவொழுக்கத்தில் தலைவன் வறுங்களம் நாடி மறுகியதாம்.
தவளம் - வெண்மை. சாந்தென - சந்தனமாக, தைவந்து - உடம்பெங்கும் பூசிக் கொண்டு. தேம்பல் - இளைத்தல். சிறிதாதல். `ஏற்றை (எருதை) உடையவன் உழவன்` என்னும் முறையில் ``உழவன்`` என்க. கூறினார். `ஏற்றை ஊர்ந்து வந்து அடியவர்க்கு அருள் செய்பவன்` என்பது கருத்து.
சோலை, கடற்கரைச் சோலை. `சோலையாக` என ஆக்கம் வருவிக்க. `கண்ட பொழில்` என இயைக்க. `தான்` என்பது. கட்டுரைச் சுவைபட வந்தது. அம்ம, வியப்பிடைச் சொல். இது `நோக்குவ எல்லாம் அவையேபோறல்` என்னும் நிலைமையாம்.

பண் :

பாடல் எண் : 11

தானேறும் ஆனேறு கைதொழேன் தன்சடைமேல்
தேனேறு கொன்றைத் திறம்பேசேன் - வானேறு
மையாருஞ் சோலை வலஞ்சுழியான் என்கொல்என்
கையார் வளைகவர்ந்த வாறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வான் ஏறும் மை ஆரும் சோலை - வானத்தில் செல்கின்ற மேகங்கள் நிறைந்த சோலை, `கண்டு தொழுதபின் வளையைக் கவராது, கண்ட பொழுதே கவர்ந்தான்` என இமைப்பில் காதல் மிக்கமையை வியந்து கூறினாள். இது வியப்போடு கூடிய அவலம், அவலம் அணையாமையால் உண்டாயது. இது பெண்பாற் கைக்கிளை.

பண் :

பாடல் எண் : 12

ஆறுகற் றைச்சடைக் கொண்டொரொற் றைப்பிறை சூடிமற்றைக்
கூறுபெண் ணாயவன் கண்ணார் வலஞ்சுழிக் கொங்குதங்கு
நாறுதண் கொம்பரன் னீர்கள்இன் னேநடந் தேகடந்தார்
சீறுவென் றிச்சிலைக் கானவர் வாழ்கின்ற சேண்நெறியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண் ஆர் - கண்ணுக்கு நிறைந்த, அஃதாவது அழகிய. `வலஞ்சுழியில் கொம்பர்` என இயையும். வலஞ்சுழியில் உள்ள கொம்பர். கொங்கு - தேன், இன்னே - இப்பொழுதே. சேண் நெறி - நீண்ட வழி. `கொம்பர் அன்னீர், `இன்னே, கானவர் வாழ்கின்ற சேண் நெறி, (ஒருவனும், ஒருத்தியும்) நடந்தே கடந்தார்` என இயைத்து முடிக்க. இது, புணர்ந்துடன் போய் தலைமகளைப் பின் தேடிச் சென்ற செவிலி ஆற்றிடை (வழியிடை)க் கண்டோரை வினவ, அவர் கூறியது. ``கடந்தார்`` என்பதற்கு எழுவாய் தோன்றாது நின்றது.

பண் :

பாடல் எண் : 13

நெறிதரு குழலி விறலியொடு புணர்ந்த
செறிதரு தமிழ்நூற் சீறியாழ்ப் பாண
பொய்கை யூரன் புதுமணம் புணர்தர
மூவோம் மூன்று பயன்பெற் றனமே
நீ அவன்
புனைதார் மாலை பொருந்தப் பாடி
இல்லதும் உள்ளதும் சொல்லிக் கள்ள
வாசகம் வழாமற் பேச வன்மையில்
வான்அர மகளிர் வான்பொருள் பெற்றனை
அவரேல்
எங்கையர் கொங்கைக் குங்குமந் தழீஇ
விழையா இன்பம் பெற்றனர் யானேல்
அரன்அமர்ந் துறையும் அணிநீர் வலஞ்சுழிச்
சுரும்பிவர் நறவயற் சூழ்ந்தெழு கரும்பின்
தீநீர் அன்ன வாய்நீர் சோரும்
சிலம்புகுரற் சிறுபறை பூண்ட
அலம்புகுரற் கிண்கிணிக் களிறுபெற் றனனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நெறிதரு குழல் - நெறிந்த கூந்தல். விறலி - பாணிச்சி; பாணன் மனைவி. தமிழ். இசைத்தமிழ், அதன் நூலிற் சொல்லப்பட்ட இலக்கணப்படி அமைந்த சீறியாழ் பேரியாழ் வேறுளதாகலின், இதனை, ``சீறியாழ்`` என்றாள். ஊரன் - மருதநிலத்துத் தலைவன். பொய்கை ஊருக்கு அடை. ஊரன் பழைய மணத்தை வெறுத்துப் புதுமணம் செய்து கொண்ட நிலையில். மூவோம் - நாங்கள் மூன்றுபேர். யாவரெனில், நானும், என் தோழியும், என் மகனும். மூன்று பயன் பெற்றனம் ஒவ்வொருவர் ஒவ்வொரு பயனைப் பெற்றோம். எங்ஙனம் எனில், யான் இல்லக் கிழத்தியான நிலையில் நன்மகனை ஈன்று புறந்தருதலாகிய தலைக்கடனை இறுத்தேன். என் தோழி அதற்கு உறுதுணையாய் இருந்து தன் கடமையை ஆற்றினாள். என் மகன் தான் தாயைக் கடனாளியாய் இருப்பதினின்றும் நீக்கிக் கடன் நிரப்பினான். நீ இல்லது பாதியும், உள்ளது பாதியுமாகப் பொய்களைச் சொல்லிப் பிறரை மகிழ்விக்க வல்ல வல்லமையினால் அந்த புதுமணப் பெண்டிராகிய தேவமாதரால் மிகப் பெரும் பொருள் களை அடைந்தாய். அவரோ (தலைவனோ) என் தங்கைமார்களது கொங்கைகளைத் தழுவி, உள்ளத்தில் அவர்கள் விரும்பாத இன்பத்தைத் தாம் விரும்பிப் பெற்றார். (அவர்கள் விரும்பியது பொருளேயன்றி இவரது இன்பத்தையன்று என்பதாம்) `ஆகவே, அவர் அவர்களோடே இருத்தற்கு உரியர்; யான் என் மகனோடே யிருத்தற்குரியேன்; இங்கு அவருக்கு என்ன தொடர்பு? என தலைவி தான் புதல்வற் பெற்று நெய்யாடியதறிந்து தலைவன் ஏவ வந்து வாயில் வேண்டிய பாணனுக்கு வாயில் மறுத்தாள். ஈற்றில் உரைத்த மறுப்புரை குறிப்பெச்சம் `தார்` என்பது போக காலத்தில் அணியும் மாலையாகலின், ``தார் மாலை`` என்றது இருபெயர் ஒட்டு. ஊடிக் கூறுகின்றார் ஆதலின் `வான் அர மகளிர்` என்றது இகழ்ச்சி தோற்றி நின்றது. ``என் தங்கைமார்கள்`` என்றதும் அன்னது. சுரும்பு இவர் நறவு - வண்டுகள் மொய்க்கக் கரும்பினின்றும் ஒழுகுகின்ற சாறு. `நறா` என்பது, ஈறு குறுகி உகரம் பெறாது நின்றது. இது வயலுக்கு அடை. `கருப்பஞ் சாறு போன்ற வாய் ஊறல் ஒழுகும் புதல்வன்` என்க. இதனால் மக்களால் பெறும் இன்பம் பெரிதாதலைத் தலைவி குறிப்பால் உணர்த்தி, `இஃது அவர்க்குக் கிடையாதாயிற்று` என்பதையும் குறித்தாள். சிலம்பு குரல் - ஒலிக்கும் குரல் ``அலம்பு குரல்`` என்றதும் அன்னது. கையில் கொண்ட `பூண்ட களிறு`, கிண்கிணிக் களிறு` எனத் தனித்தனி முடிக்க. கிண்கிணி - சதங்கை. புதல்வனை அளவற்ற அன்பால் ``களிறு`` என்றாள். பாணன் விறவியொடு கூடி வந்ததைக் குறித்தது, `இத்தகைய அன்பைத் துறந்தவனுக்காக நீ பரிந்து பேசுதல் தகுதியோ` என்றற்கு. இது பரத்தையிற் பிரிவு நிகழ்ச்சி. இவ் அகவற்பா இடையிடையே கூன் பெற்று வந்தது.

பண் :

பாடல் எண் : 14

தனமேறிப் பீர்பொங்கித் தன்அங்கம் வேறாய்
மனம்வேறு பட்டொழிந்தாள் மாதோ இனமேறிப்
பாடாலம் வண்டலம்பும் பாய்நீர் வலஞ்சுழியான்
கோடாலம் கண்டணைந்த கொம்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வண்டு இனம் ஏறிப் பாடலம் அலம்பும்` எனத் தொடங்கியுரைக்க. `பாடலம்` என்பது நீட்டல் பெற்றது. பெற்றது. பாடலம் - பாதிரி. சிவபெருமானுக்கு உரிய சில சிறந்த மலர்களுள் பாதிரியும் ஒன்றாகலால் அதனை விதந்து கூறினார், கோடாலம் - கொம்பு - பூங்கொம்பு போல்வாராய பெண்; என்றது தலைவியை. இஃது உவம ஆகுபெயர். `பீர் தனம் ஏறிப் பொங்கி` என மாற்றிக் கொள்க. பீர் - பசலை. தனம் - கொங்கை. பொங்கி - பொங்கப்பட்டு. அங்கம் - உடம்பு. ``வேறாய்`` என உடையாள் மேல் ஏற்றப்பட்டது. மனம் - மனத்தில் தோன்றும் எண்ணம் வேறுபடுதலாவது, அன்னை, அத்தன் முதலாயினாரை நீப்ப நினைத்தல். ஒழி துணிவுப் பொருண்மை விகுதி. மாது, ஓ அசைகள். இது தலைவியது வேறுபாடு கண்டு வினவிய செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது.

பண் :

பாடல் எண் : 15

கொம்பார் குளிர்மறைக் காடனை வானவர் கூடிநின்று
நம்பா என வணங் கப்பெறு வானை நகர்எரிய
அம்பாய்ந் தவனை வலஞ்சுழி யானையண் ணாமலைமேல்
வம்பார் நறுங்கொன்றைத் தாருடை யானை வணங்குதுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கொம்பு ஆர் குளிர் மறைக்காடு - பூங்கொம்புகளில் நிறைந்த குளிர்ச்சியை யுடைய திருமறைக்காடு. நம்பன் - பழை யோன்; விரும்பப்படுபவன்` என்றும் ஆம். அம்பு ஆய்ந்தவன் - அம்பை ஆராய்ந்து எடுத்து எய்தவன். வம்பு - புதுமை. நறு - மணம். ``கொன்றைத் தார் உடையான்`` என்பது, `சிவன்` என்னும் ஒரு பெயராய், ``அண்ணாமலை மேல்`` என்பதற்கு முடிபாயிற்று. இதனுள் ``மேல்`` என்றது மேலிடத்துள்ள கோயிலை. ``அண்ணா மலைமேல் அணிமலையை``* எனச் சேக்கிழாரும் கூறினார். அக்கோயில் இன்று நமக்குத் தரை மட்டத்தில் இருப்பதாகத் தெரிகின்றது. குறிப்பு: மும்மணிக் கோவை முப்பது பாடல்களை உடையதாய் வருதல் மரபாயினும், இது பதினைந்து பாடலோடே முற்றுப் பெற்றது. அஃது ஆசிரியர் கோட்பாடு. திருவலஞ்சுழி மும்மணிக்கோவை முற்றிற்று

பண் :

பாடல் எண் : 1

ஒருடம் பீருரு வாயினை ஒன்றுபுரிந்
தொன்றின் ஈரிதழ்க் கொன்றை சூடினை
மூவிலைச் சூலம் ஏந்தினை
சுடருஞ் சென்னி மீமிசை
இருகோட் டொருமதி எழில்பெற மிலைச்சினை:
ஒருகணை இருதோள் செவியுற வாங்கி
மூவெயில் நாற்றிசை முரணரண் செகுத்தனை
ஆற்ற முன்னெறி பயந்தனை
செறிய இரண்டும் நீக்கி
ஒன்று நினைவார்க் குறுதி ஆயினை
அந்நெறி ஒன்று
மனம்வைத் திரண்டு நினைவிலோர்க்கு
முன்னெறி உலகங் காட்டினை அந்நெறி
நான்கென ஊழிதோற்றினை
சொல்லும் ஐந்தலை அரவசைத் தசைந்தனை

நான்முகன் மேல்முகக் கபாலம் ஏந்தினை
நூன்முக முப்புரி மார்பில்
இருவர் அங்கம் ஒருங்குடன் ஏந்திய
ஒருவநின் ஆதி காணா திருவர்
மூவுல குழன்று நாற்றிசை ஊழிதர

ஐம்பெருங் குன்றத் தழலாய்த் தோன்றினை
ஆறுநின் சடையது ஐந்துநின் நிலையது
நான்குநின் வாய்மொழி மூன்றுநின் கண்ணே
இரண்டுநின் குழையே ஒன்றுநின் ஏறே
ஒன்றிய காட்சி உமையவள் நடுங்க

இருங்களிற் றுரிவை போர்த்தனை நெருங்கி
முத்தீ நான்மறை ஐம்புலன் அடக்கிய
அறுதொழி லாளர்க் குறுதி பயந்தனை
ஏழில் இன்னரம் பிசைத்தனை
ஆறில் அமுதம் பயந்தனை ஐந்தில்
விறலியர்கொட்டும் அழுத்த ஏந்தினை
ஆல நீழல் அன்றிருந் தறநெறி
நால்வர் கேட்க நன்கினி துரைத்தனை
நன்றி இல்லா முந்நீர்ச் சூர்மாக்
கொன்றங் கிருவரை எறிந்த ஒருவன்

தாதை ஒருமிடற்று இருவடி வாயினை
தருமம் மூவகை உலகம் உணரக்
கூறுவை நால்வகை
இலக்கண இலக்கியம் நலத்தக மொழிந்தனை
ஐங்கணை யவனொடு காலனை அடர்த்தனை அறுவகைச் சமயமும் நெறிமையில் வகுத்தனை
ஏழின் ஓசை இராவணன் பாடத்
தாழ்வாய்க் கேட்டவன் தலையளி பொருந்தினை
ஆறிய சிந்தை யாகி ஐங்கதித்
தேரொடு திசைசெல விடுத்தோன்
நாற்றோள் நலனே நந்திபிங் கிருடியென்
றேற்ற பூதம் மூன்றுடன் பாட
இருகண் மொந்தை ஒருகணம் கொட்ட
மட்டுவிரி அலங்கல் மலைமகள் காண
நட்டம் ஆடிய நம்ப அதனால்

சிறியேன் சொன்ன அறிவில் வாசகம்
வறிதெனக் கொள்ளா யாகல் வேண்டும்
வெறிகமழ் கொன்றையொடு வெண்ணில வணிந்து
கீதம் பாடிய அண்ணல்
பாதம் சென்னியிற் பரவுவன் பணிந்தே.

பணிந்தேன்நின் பாதம் பரமேட்டீ பால்நீ
றணிந்தால வாயில் அமர்ந்தாய் தணிந்தென்மேல்
மெய்யெரிவு தீரப் பணித்தருளு வேதியனே
ஐயுறவொன் றின்றி அமர்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(அடி-1) ஒன்று புரிந்து - வீடு பேற்றினை விரும்பி. (உயிர்கள் அடைய வேண்டும் என்று கொன்றை சூடினை என்க.) கொன்றைப் பிரணவ வடிவினது ஆதலால், பிரணவத்தின் பொருள் தானே என்பதை உயிர்கள் உணர்ந்து வீடடையவே அம்மாலையை அடையாள மாலையாகச் சிவன் சூடியுள்ளான்` என்றபடி. (அடி-2) ஒன்றின் - `ஓரு காம்பிலே ஐந்து இதழ்` என்க. ஈர் இதழ் - குளிர்ந்த இதழ் (அடி-5) இரு கோடு - இரண்டு முனை. (அடி-7) `மூவெயிலது அரண்` என்க. முரண், நாற்றிசையிலும் செல்லும் முரண், முரண் - வலிமை. அரண் பாதுகாத்தல். `முரணுடைய அரண்` என்க. (அடி-8) ஆற்ற - மிகவும், ஆற்றப் பயத்தல் - முற்ற விளக்குதல். முன் நெறி முதல் நெறி ``முன்னெறியாகிய, முதல்வன் முக்கணன் தன்னெறி`` 2 என அப்பரும் அருளிச் செய்தார். ``முன்னெறி`` என்பது ஓசை வகையில் `முந்நெறி` என்பதனோடு ஒத்து, `மூன்று` என்னும் எண்ணலங் காரமாய் நின்றது. இவ்வாறு மேலும் வருவனவற்றை அறிந்து கொள்க.
(அடி-9) இரண்டு - விருப்பு வெறுப்புக்கள் (அடி-10) ஒன்று, திருவருள். உறுதி - நல்ல துணை. (அடி-11,12) `அந்நெறி ஒன்றையே மனத்துள் வைத்து` என்க. இரண்டு நினைவு - ஐயம் (அடி - 13) முன் ஏழாவது விரிக்க (அடி -14) ஊழி - யுகம். `ஊழி நான்கு எனத் தோற் றினை` (படைத்தனை) என்க. (அடி-15) சொல்லும் - சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற. அசைத்து - உறுப்புக்களில் கட்டி. அசைந்தனை - ஆடினை (அடி -16) மேல் முகம் உச்சி முகம். கபாலம் - தலை ஓடு. (அடி-17) ``நூல் முகப் புரி` என்க. தோளில் ஏந்திய அங்கத்தை மார்பில் ஏந்தியதாகக் கூறினார். (அடி-18) இருவர், அயனும், மாலும். அங்கம் எலும்புக் கூடு. இது `கங்காளம்` எனப்படும். (அடி-19) `ஒருவனாகிய நினது` என்க. ``ஆதி`` என்றதனானே அந்தமும் கொள்க.
ஐ - அழகு. இஃது `ஐந்து` என்பதுபோல நின்றது. (அடி-22) ஆறு - யாறு; கங்கை. இதுவும் எண்ணுப் பெயர்போல நின்றது, ஐந்து நிலைகளாவன படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் (அடி-23) வாய்மொழி, வேதம். (அடி-25) இரண்டு - இரண்டு வகை. ``குழை`` என்பது பொதுப்பட, `காதணி` என்னும் பொருட்டாய் நின்றது. (அடி-26) இரு - பெரிய. இதுவும் எண்ணுப் பெயர்போல வந்தது (அடி -28) உறுதி, அறம் முதலிய பொருள்கள். ஆறில் அமுதம் - அறுசுவையில் உணவு. ஐந்து - ஐந்து வகையான இசைக் கருவிகள். (தோல், துளை, நரம்பு, கஞ்சம், மிடறு.) (அடி -31) கொட்டு - வாச்சியம். உம்மை, எச்சப் பொருட்டு. `எல்லா வாச்சியங்களையும் இறைவன் உடையவன்` என்றபடி, (அடி-34) முந்நீர் - கடல். `முந்நீரில் நின்ற` என்க. சூர் மா - சூரபதுமனாகிய மாமரம். (அடி-35) இருவரை - பெரிய மலை; கிரௌஞ்சம். (அடி - 36) மிடல் வடிவம் - விசுவ ரூபம். மிடல் வலிமை, (அடி-37,38) `தருமம் கூறுவை` என இயையும். (அடி - 38,39) `நால்வகை இலக்கணங்களையும், அவற்றையுடைய இலக்கியங்களையும் மொழிந்தனை` என்க. நால் வகை இலக்கணமாவன `எழுத்து, சொல்,பொருள், செய்யுள்` என்பன பற்றியவை, அணியிலக்கணம் வடநூற் கொள்கை. (அடி-41) நெறிமையில் நெறியாம் வகையில்.
(அடி-42)`ஏழ் இன் ஓசை` என்க. ஓசை - இசை. (அடி-43) தாழ்வு - இரக்கம். ``அவன்தலை`` என்பதில் தலை ஏழன் உருபு. அளி- அருள், (அடி-44) ஆறிய - தணிந்த. சிந்தையனை, ``சிந்தை`` என்றது. ஆகுபெயர். (அடி - 45) ஐங்கதி குதிரைகளின் ஓட்டத்தின் வகை. `ஐங்கதியொடு தேர் திசை செலவிடுத்தோன்` பிரமன். (அடி- 46,47) அவனுக்கு முகம் நான்காயினும் தோளும் நான்கே. நலன். இங்குத் திறமை. `அதனைப் பாட` என்க. நந்தி பிங்கிருடி - நந்தி கணத்ததாகிய பிங்கிருடி. ``பூதம் மூன்று`` என்றதனால், தண்டி, குண்டோதரன் இவர் கொள்ளப்பட்டனர், (அடி-48) கண் - பக்கம். மொந்தை, ஒருவகை வாச்சியம். ஒரு கணம் - ஒப்பற்ற கணங்கள். மட்டு விரி - தேனோடு மலரும் (அடி -50) ``அதனால்`` என்றது, கூறிவந்தவை அனைத்தை யும் தொகுத்துக் குறித்தது. ஆகையால் இப்பாட்டினை, `நம்ப, நீ ஓர் உடம்பு ஈருருவாயினை; கொன்றை சூடினை;....அளி பொருந்தினை, அதனால், சிறியேன் சொன்ன வாசகம் வறிதெனக் கொள்ளா யாதல் வேண்டும்; (அதன் பொருட்டு) அண்ணலாகிய நின் பாதம் சென்னி யிற் பணிந்து பரவுவன்` என இயைத்து முடிக்கற் பாற்று. (அடி-52) வறிது - பொருளற்றது.
வெளி - நறுமணம். `சிவபெருமான் ஊழியிறுதியில் வீணை வாசித்திருப்பன்` என்பதை,
`பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போய்,
இருங்கடல்மூடியிறக்கும்; இறந்தான் களேபரமும்,
கருங்கடல் வண்ணன் களேபர முங்கொண்டு கங்காளராய்
வருங்கடல் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே`*
என்னும் அப்பர் திருமொழியால் அறிக. முக்காலத்தும் நிகழற் பாலதனை, ``பாடிய`` என இறந்த காலத்தில் வைத்துக் கூறினார்.
திருஎழுகூற்றிருக்கை முற்றிற்று.

பண் :

பாடல் எண் : 1

சூல பாணியை சுடர்தரு வடிவனை
நீலகண்டனை நெற்றியோர் கண்ணனை
பால்வெண் ணீற்றனை பரம யோகியை
காலனைக் காய்ந்த கறைமிடற் றண்ணலை
நூலணி மார்பனை நுண்ணிய கேள்வியை

கோல மேனியை கொக்கரைப் பாடலை
வேலுடைக் கையனை விண்தோய் முடியனை
ஞாலத் தீயினை நாத்தனைக் காய்ந்தனை
தேவ தேவனை திருமறு மார்பனை
கால மாகிய கடிகமழ் தாரனை
வேத கீதனை வெண்தலை ஏந்தியை
பாவ நாசனை பரமேச் சுவரனை
கீதம் பாடியை கிளர்பொறி அரவனை
போதணி கொன்றைஎம் புண்ணிய ஒருவனை
ஆதி மூர்த்தியை அமரர்கள் தலைவனை

சாதி வானவர் தம்பெரு மான்தனை
வேத விச்சையை விடையுடை அண்ணலை
ஓத வண்ணனை உலகத் தொருவனை
நாத னாகிய நன்னெறிப் பொருளினை
மாலை தானெரி மயானத் தாடியை
வேலை நஞ்சினை மிகவமு தாக்கியை
வேத வேள்வியை விண்ணவர் தலைவனை
ஆதி மூர்த்தியை அருந்தவ முதல்வனை
ஆயிர நூற்றுக் கறி வரியானை
பேயுருவு தந்த பிறையணி சடையனை

மாசறு சோதியை மலைமகள் கொழுநனை
கூரிய மழுவனை கொலற்கருங் காலனைச்
சீரிய அடியாற் செற்றருள் சிவனை
பூதிப் பையனை புண்ணிய மூர்த்தியை
பீடுடை யாற்றை பிராணி தலைவனை

நீடிய நிமலனை நிறைமறைப் பொருளினை
ஈசனை இறைவனை ஈறில் பெருமையை
நேசனை நினைப்பவர் நெஞ்சத் துள்ளனை
தாதணி மலரனை தருமனை பிரமனை
காதணி குழையனை களிற்றின் உரியனை
சூழ்சடைப் புனலனை சுந்தர விடங்கனை
தார்மலர்க் கொன்றை தயங்கு மார்பனை
வித்தக விதியனை
தீதமர் செய்கைத் திரிபுரம் எரித்தனை
பிரமன் பெருந்தலை நிறைவ தாகக்
கருமன் செந்நீர் கபாலம் நிறைத்தனை
நிறைத்த கபாலச் செந்நீர் நின்றும்
உறைத்த உருவார் ஐயனைத் தோற்றினை
தேவரும் அசுரரும் திறம்படக் கடைந்த
ஆவமுண் நஞ்சம் அமுத மாக்கினை

ஈரமில் நெஞ்சத் திராவணன் தன்னை
வீரம் அழித்து விறல்வாள் கொடுத்தனை
திக்கமர் தேவரும் திருந்தாச் செய்கைத்
தக்கன் வேள்வியைத் தளரச் சாடினை
வேதமும் நீயே வேள்வியும் நீயே

நீதியும் நீயே நிமலன் நீயே
புண்ணியம் நீயே புனிதன் நீயே
பண்ணியன் நீயே பழம்பொருள் நீயே
ஊழியும் நீயே உலகமும் நீயே
வாழியும் நீயே வரதனும் நீயே

தேவரும் நீயே தீர்த்தமும் நீயே
மூவரும் நீயே முன்னெறி நீயே
மால்வரை நீயே மறிகடல் நீயே
இன்பமும் நீயே துன்பமும் நீயே
தாயும் நீயே தந்தையும் நீயே
விண்முதற்பூதம் ஐந்தவை நீயே
புத்தியும் நீயே முத்தியும் நீயே
சொலற்கருந் தன்மைத் தொல்லோய் நீயே
கூடல் ஆலவாய்க் குழகன் ஆவ
தறியா தருந்தமிழ் பழித்தனன் அடியேன்

ஈண்டிய சிறப்பின் இணையடிக் கீழ்நின்று
வேண்டும் அதுஇனி வேண்டுவன் விரைந்தே.

விரைந்தேன்மற் றெம்பெருமான் வேண்டியது வேண்டா
திகழ்ந்தேன் பிழைத்தேன் அடியேன் விரைந்தென்மேல்
சீற்றத்தைத் தீர்த்தருளும் தேவாதி தேவனே
ஆற்றவும்நீ செய்யும் அருள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(அடி - 1) சூல பாணியை - சூலம் ஏந்திய கையினை உடையாய். சுடர்தரு வடிவனை - ஒளியைத் தருகின்ற திருமேனியை உடையாய். (அடி - 3) பரம யோகியை - யோகியர்க்கெல்லாம் மேலான யோகியாம் தன்மை உடையாய். (அடி - 6) கொக்கரை - சங்கு. `அதன் ஒலியோடு கூடிய பாடலை உடையாய்` என்ப (அடி - 7) வேல் - வேறு படைக்கலம்; மழுமுதலியன (அடி - 8) ``நாத்தனை`` என்பதில் தன், சாரியை. எனவே, `நாவைக் காய்ந்தனை` என்க. தக்கன் வேள்வியழிப்பில் அக்கினி தேவனது கையையன்றி. நாவை அறுத்ததாகவும் சொல்லப்படும். ``தீயினை நாவினைக் காய்ந்தனை`` என்பதை, `யானையைக் காலை வெட்டினான்` என்பது போலக் கொள்க. (அடி - 9) ``திருமறு மார்பனை`` என்றது, `நீயே திருமாலாக வும் இருக்கின்றாய்` என்றபடி. (அடி - 10) காலமாகிய தாரனை - கால மாகிய மாலையை உடையாய்; என்றது, `காலத்தால் தாக்குண்ணாது நின்றாய்` என்றபடி. `காளமாகிய` எனப்பாடம் ஓதி, `நஞ்சு பொருந்திய பாம்பை மாலையாக உடையாய்` என்றலும் ஆம். (அடி- 12) பரமேச்சுவரனை - பரமேச்சுவரனாம் தன்மையை உடையை. ஈச்சுரன் - ஐசுவரியத்தை உடையவன். பரமேச்சுவரம் - மேலான ஐசுவரியம். அஃதாவது, எல்லா உயிர்களையும், எல்லாப் பொருள் களையும் தன்னவாக உடைமை. (அடி - 16) சாதி வானவர் பல இனத்தவராகிய தேவர்கள். அவர்கள் தம் பெருமான், இந்திரன். ``பெருமான்`` என்பது உயர்திணைச் சொல்லாதலின், `பெருமானினை என இன்சாரியை கொடாது தன் சாரியை கொடுத்து, ``பெருமான் றனை`` என்றார். `அவனை உடையை` என்றபடி. (அடி - 18) ஓதம் - கடல். ஒரு பாதி அம்மை, அல்லது திருமால் ஆதலின் சிவபெருமான் கடல் வண்ணத்தையும் உடையவன். (அடி - 19) நாதன் - குரு (அடி - 20) எரியும் தீ இருள் வந்த பின்பே விளங்கித் தோன்றுதல் பற்றி, `மாலையில் எரியும் மயானம்` - என்றார். தான், அசை, (அடி - 22) அமரர்களை மேலே கூறினார். ஆகலின், இங்கு ``விண்ணவர்`` என்றது சிவலோகத்தில் வாழ்பவர்களை (அடி - 23) `ஆதி` என்பது எப்பொருட்கும் முதலாம் தன்மையையும், காலத்தால் எவருக்கும் முதலாதலையும் குறிக்கும் ஆதலின் மேலேயும், இவ்விடத்திலும் ``ஆதி`` என இருமுறை கூறியவற்றிற்கு இவ்விரு பொருளையும் ஏற்ற பெற்றியாற் கொள்க (அடி - 24) ஆயிரம் நூற்றுக்கு அறிவரிதலாவது அன்ன பல பேரெண்களிலும் அடங்காமை. எனவே, ``ஏகன், அநேகன்`` என்றவற்றுள் ``அநேகன்`` * என்ற நிலையைக் குறித்ததாம். (அடி - 25) ``பேய் உருவு`` என்றது பிறர் கூறும். தந்த - தனக்குத் தானே செய்து கொண்ட (அடி - 30) ஆறு - வழி `அதன் பயனாய் நின்றாய்`. உயிர்களை, ``பிராணி`` என்றார். `பிராணிகள்` எனப் பாடம் ஓதுதலும் ஆம், (அடி - 31) ``நீடிய`` என்றது, `காலத்தைக் கடந்த` என்றபடி. (அடி - 32) ஈசனை - எல்லாரையும், எல்லாவற்றையும் ஆளுதல் உடையாய். இறைவனை - எல்லாப் பொருளிலும் அது அதுவாய் வேறறக் கலந்துள்ளனை. (அடி - 33) நேசனை - அருளுடையாய். (அடி - 35) மலரனை - தாமரை மலரை இருக்கையாக இருத்தலை உடையாய். தருமனை - அறத்தை நடாத்துதல் உடையாய், பிரமனை - பிரமனை உடையாய் (அடி - 35) ``குழையனை`` என்பது முதலான ஏழும் ஆடூஉவறிசொல்லின் அன் விகுதிமேல் ஐகார விகுதிபெற்று வருதலால் அவற்றிற்கு, `குழையனாய் உள்ளாய், உரியனாய் உள்ளாய்` என்பனபோல உரைக்க. உரி - தோல். சுந்தரம் - அழகு. விடங்கன் - உளியாற் போழ்ந்து செய்யப்படாமல் தானே முளைத்த இலிங்க வடிவினன். இதனை. `சுயம்பு லிங்கம்` என்பர். `சுந்தர விடங்கன்` என்பது மதுரைத் திருவாலவாய்ப் பெருமானுக்கு உரிய பெயராகவே சொல்லப்படுதலால் இப்பாட்டு அப்பெருமானை, வழுத்திப் பாடியதாகின்றது. மேல் பொதுப்படக் கூறிய கொன்றையை இங்கு, ``தார்`` எனச் சிறப்பாகக் கூறினார். தார் - மார்பில் அணியும் மாலை. (அடி - 38) வித்தகம் - திறமை. விதி - நேர்மை. `நேர்மையாள னாய் நிற்க வல்லாய்` என்றபடி (அடி - 41) கருமன் - கரிய நிறத்தை யுடைய திருமால். செந்நீர் - இரத்தம். `பிரமன் தலையைக் கிள்ளிய வயிரவர் அவன் கொண்ட செருக்கை ஒழித்து ஏனைத் தேவர்களும் அவனைப் போலச் செருக்குக் கொள்ளாதபடி ஒழிக்க வேண்டி எல்லாரிடமும் சென்று அக்கபாலமாகிய கலத்தில் இரத்த பிச்சை ஏற்றுக் கடைசியாகத் திருமாலின் இரத்தத்தை ஏற்றார்` என்பது வரலாறு. `திருமாலின் இரத்தத்துடன் கபாலம் நிறைந்துவிட்டது` என்பது ஒருவரலாறு. இதனையே வைணவர்கள் `திருமால் சிவனுக்குப் பிச்சையிட்டு, அவனது பிச்சையெடுக்கும் தொழிலை ஒழித்தருளினான்` எனப் பெருமையாகப் பேசுவர். எனினும், `அப்பொழுதும் கபாலம் நிறையவில்லை என்பதும் ஒருவரலாறு.
காதி ஆயிர மால்களைப் பிழிந்துமாங் கனிபோல்
கோது வீசினும் கடல்கவிழ்த் தனையசெங் குருதி
பாதி யாயினும் நிரம்புறாக் கபாலபா ணியனாய்
மாது பாதியன் அவையிடை வந்தனன் வடுகன்.*
என்றார் சிவப்பிரகாச அடிகள் ( அடி - 42, 43) திருமால் இரத்த பிச்சை தருகையில் ஆவி சோரும் நிலையை அடையத் திருமகள், நிலமகள் இவர்கள் வேண்டுகோளுக்கு இரங்கி வயிரவர் திருமாலை முன்போல அருள் புரிந்து சென்றார் என்பது வரலாறு ஆதலின், திருமால் கொண்ட மோகினி வடிவத்திலிருந்து சிவபிரான் ஐயனாரை (அரிகர புத்திரரை)த் தோற்றுவித்தமையை, வயிரவரது கபாலத்தில் திருமால் சொரிந்த குருதியினின்றும் தோற்றுவித்ததாக நகைச்சுவை படக் கூறினார் இனி அன்னதொரு புராணபேதம் பற்றி அவ்வாறு கூறினார் என்றலும் ஆம். உறைத்த உரு - வளர்ச்சியடைந்த உருவம். (அடி - 45) ஆவம் - ஆவி; உயிர் (அடி - 48) திக்கு அமர் தேவர் - திக்குப் பாலகர். (அடி - 53) பண்ணியன் - எல்லாவற்றையும் ஆக்கியவன் (அடி - 55) வாழி - கால எல்லையின்றி வாழ்பவன். (அடி - 57) முன் நெறி - எல்லா நெறி கட்கும் முன்னதாய நெறி. (அடி - 62) புத்தி - போகம். முத்தி - மோட்சம் (அடி - 64) குழகன் - அழகன் (அடி - 64) ஆவது - பின் விளைவது (அடி - 64,65) `ஆவது அறியாது குழகனாகிய நினது அருந்தமிழைப் பழித்தனன்` என மொழி மாற்றி யுரைக்க (அடி - 66) ஈண்டிய சிறப்பின் இணையடி - இங்குச் சொல்லப் பட்டவற்றுடன் மற்றும் பலவாகத் திரண்ட சிறப்புக்களையுடைய இணையடி. (அடி - 66, 67) இனி - இப்பொழுது. இதனை மேல் (அடி- 65) ``அடியேன்`` என்றதற்கு முன்னே கூட்டுக. (அடி - 67) வேண்டும் அது - எனக்கு வேண்டுவனவற்றை வேண்டிப் பெறுதலாகிய அதனையே. விரைந்து வேண்டுவன் - சற்றும் தாழாது விரும்பு கின்றேன் `தாழாது விரும்புகின்றேன்` என்றது. `முன்பு இருந்த நிலையினின்றும் நான் மாறிவிட்ேடன்` என்பதைக் குறித்தபடி.
வெண்பா: `அடியேன், எம்பெருமான் வேண்டியது வேண்டாது விரைந்தேன் இகழ்ந்தேன்; பிழைத்தேன்; தேவாதி தேவனே, (இனி நீ) என்மேல் ஆற்றவும் செய்யும் அருள், என்மேல் (நீ கொண்ட) சீற்றத்தைத் தீர்த்தருளும்` என இயைத்து முடிக்க. நீ வேண்டியது - நீ விரும்பியதை (நான் விரும்புவதே கடப்பாடாய் இருக்க அவ்வாறு செய்யாது அதனை நான்) விரும்பாது இகழ்ந்தேன். (எனது அறியாமையால் எண்ணிப் பாராமல்) பதறிவிட்டேன். என்க. ``தீர்த் தருளும்`` என்றது, `தீர்த்தருளுவதாக` என்றபடி.
இத்திருமுறையில் திருமுருகாற்றுப்படை தவிர, நக்கீரர் அருளிச் செய்தனவாய் உள்ள பிரபந்தங்கள் பலவும் ஆலவாய்ப் பெருமானது அருந்தமிழை இகழ்ந்த குற்றத்தைப் பொறுத்தருள வேண்டிப் பாடப்பட்டனவாகச் சொல்லப்பட்ட போதிலும் இந்த ஒரு பாட்டில்தான் அதற்கு அகச் சான்று காணப்படுகின்றது.
பெருந்தேவபாணி முற்றிற்று.

பண் :

பாடல் எண் : 1

தவறுபெரி துடைத்தே தவறுபெரி துடைத்தே
வெண்திரைக் கருங்கடல் மேல்துயில் கொள்ளும்
அண்ட வாணனுக் காழிஅன் றருளியும்
உலகம் மூன்றும் ஒருங்குடன் படைத்த
மலரோன் தன்னை வான்சிரம் அரிந்தும்

கான வேடுவன் கண்பரிந் தப்ப
வான நாடு மற்றவற் கருளியம்
கடிபடி பூங்கணைக் காம னாருடல்
பொடிபட விழித்தும் பூதலத் திசைந்த
மானுட னாகிய சண்டியை
வானவன் ஆக்கியும்
மறிகடல் உலகின் மன்னுயிர் கவரும்
கூற்றுவன் தனக்கோர் கூற்றுவ னாகியும்
கடல்படு நஞ்சங் கண்டத் தடக்கியும்
பருவரை சிலையாப் பாந்தள் நாணாத்

திரிபுரம் எரிய ஒருகணை துரந்தும்
கற்கொண் டெறிந்த சாக்கியன் அன்பு
தற்கொண் டின்னருள் தான்மிக அளித்தும்
கூற்றெனத் தோன்றியுங் கோளரி போன்றும்
தோற்றிய வாரணத் தீருரி போர்த்தும்
நெற்றிக் கண்ணும் நீள்புயம் நான்கும்
நற்றா நந்தீச் சுவரற் கருளியும்
அறிவினை ஓரா அரக்க னாருடல்
நெறுநெற இறுதர ஒருவிரல் ஊன்றியும்
திருவுரு வத்தொடு செங்கண் ஏறும்

அரியன திண்திறல் அசுரனுக் கருளியும்
பல்கதிர் உரவோன் பற்கெடப் பாய்ந்து
மல்குபிருங் கிருடிக்கு மாவரம் ஈந்தும்
தக்கன் வேள்வி தகைகெடச் சிதைத்து
மிக்கவரம் நந்தி மாகாளர்க் கருளியும்

செந்தீக் கடவுள்தன் கரதலஞ் செற்றும்
பைந்தார் நெடும்படை பார்த்தற் கருளியும்
கதிர்மதி தனையோர் காற்பயன் கெடுத்தும்
நிதிபயில் குபேரற்கு நீள்நகர் ஈந்தும்
சலந்தரன் உடலந் தான்மிகத் தடிந்தும்
மறைபயில் மார்க்கண் டேயனுக் கருளியும்
தாருகற் கொல்லமுன் காளியைப் படைத்தும்
சீர்மலி சிலந்திக் கின்னர சளித்தும்
கார்மலி உருவக் கருடனைக் காய்ந்தும்
ஆலின் கீழிருந் தறநெறி அருளியும்

இன்னவை பிறவும் எங்கள் ஈசன்
கோபப் பிரசாதங் கூறுங் காலைக்
கடிமலர் இருந்தோன் கார்க்கடற் கிடந்தோன்
புடமுறு சோலைப் பொன்னகர் காப்போன்
உரைப்போ ராகிலும் ஒண்கடல் மாநீர்

அங்கைகொண் டிறைக்கும் ஆதர் போன்றுளர்
ஒடுங்காப் பெருமை உம்பர் கோனை
அடங்கா ஐம்புலத் தறிவில் சிந்தைக்
கிருமி நாவாற் கிளத்தும் தரமே அதாஅன்று
ஒருவகைத் தேவரும் இருவகைத் திறமும்
மூவகைக் குணமும் நால்வகை வேதமும்
ஐவகைப் பூதமும் அறுவகை இரதமும்
எழுவகை ஓசையும் எண்வகை ஞானமும்
ஒன்பதின் வகையாம் ஒண்மலர்ச் சிறப்பும்
பத்தின் வகையும் ஆகிய பரமனை

இன்பனை நினைவோர்க் கென்னிடை அமுதினைச்
செம்பொனை மணியினைத் தேனினைப்பாலினைத்
தஞ்சமென் றொழுகுந் தன்னடி யார்தம்
நெஞ்சம் பிரியா நிமலனை நீடுயர்
செந்தழற் பவளச் சேணுறு வரையனை

முக்கட் செல்வனை முதல்வனை மூர்த்தியைக்
கள்ளங் கைவிட் டுள்ளம துருகிக்
கலந்து கசிந்துதன் கழலினை யவையே
நினைந்திட ஆங்கே தோன்றும் நிமலனைத்
தேவ தேவனைத் திகழ்சிவ லோகனைப்

பாவ நாசனைப் படரொளி உருவனை
வேயார் தோளி மெல்லியல் கூறனைத்
தாயாய் மன்னுயிர் தாங்குந் தந்தையைச்
சொல்லும் பொருளும் ஆகிய சோதியைக்
கல்லுங் கடலும் ஆகிய கண்டனைத்
தோற்றம் நிலைஈ றாகிய தொன்மையை
நீற்றிடைத் திகழும் நித்தனை முத்தனை
வாக்கும் மனமும் இறந்த மறையனைப்
பூக்கமழ் சடையனைப் புண்ணிய நாதனை
இனைய தன்மையன் என்றறி வரியவன்

தனைமுன் விட்டுத் தாம்மற்று நினைப்போர்
மாமுயல் விட்டுக்
காக்கைப் பின்போம் கலவர் போலவும்
விளக்கங் கிருக்க மின்மினி கவரும்
அளப்பருஞ் சிறப்பில் ஆதர் போலவும்

கச்சங் கொண்டு கடுந்தொழில் முடியாக்
கொச்சைத் தேவரைத் தேவரென் றெண்ணிப்
பிச்சரைப் போலஓர்
ஆரியப் புத்தகப் பேய்கொண்டு புலம்புற்று
வட்டணை பேசுவர் மானுடம் போன்று
பெட்டினை உரைப்போர் பேதையர் நிலத்துன்
தலைமீன் தலைஎண் பலமென்றால் அதனை
அறுத்து நிறுப்போர் ஒருத்தர் இன்மையின்
மத்திர மாகுவர் மாநெறி கிடப்பவோர்
சித்திரம் பேசுவர் தேவ ராகில்

இன்னோர்க் காய்ந்தனர் இன்னோர்க் கருளினர்
என்றறிய உலகின்
முன்னே உரைப்ப தில்லை ஆகிலும்
மாடு போலக் கூடிநின் றழைத்தும்
மாக்கள் போல வேட்கையீ டுண்டும்
இப்படி ஞானம் அப்படி அமைத்தும்
இன்ன தன்மையன் என்றிரு நிலத்து
முன்னே அறியா மூர்க்க மாக்களை
இன்னேகொண் டேகாக் கூற்றம்
தவறுபெரி துடைத்தே தவறுபெரி துடைத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(அடி - 1) ஈற்றயல் அடியில் வரும் ``கூற்றம்`` என்பதை முதல் அடிக்கும் கூட்டி, `என்னை` என்னும் வினாவருவிக்க. (அடி - 3) அண்ட வாணன் - தேவன். கடல் மேல் துயில் கொள்ளும் தேவன் திருமால். ஆழி - சக்கரம். மலரோன் - பிரமன். பிரமனைச் சிரம் அரிந்த வரலாறு மேல் பெருந்தேவ பாணி உரையில் கூறப்பட்டது. (அடி - 6) வேடுவன், கண்ணப்ப நாயனார். இவர் வரலாறு இத்திருமுறையில் வேறு பாடல்களிலும், பெரியபுராணத்திலும் விளங்கக் கூறப்பட்டது. பரிந்து - பெயர்த்து. மற்று, அசை (அடி - 8) கடி படு நறுமணம் பொருந்திய. காமனார் - மன்மதன். ஆர் விகுதி இழிவு குறித்தது. பொடி பட - சாம்பலாகும்படி. (அடி - 10) சண்டி - சண்டேசுர நாயனார். இவரது வரலாறும் பெரியபுராணத்துட் காணத்தக்கது. (அடி - 12, 13) `சிவபெருமான் கூற்றுவனுக்குக் கூற்றுவனாய் யமனை உதைத்தது மார்க்கண்டேயருக்காக` என்பது நன்கறியப்பட்டது. (அடி - 14) தேவாசுரர் பாற்கடலைக் கடைந்தபொழுது அவர்கள் நினைத்தபடி அமுதம் எழாமல் ஆலகால விடம் தோன்றினமையால் அவர்கள் வேண்டு கோளுக்கு இரங்கிச் சிவபெருமான் தான் அதனை யுண்டு கண்டத்தில் நிறுத்தினான். அதனால் கண்டம் நீலகண்டம் ஆயது. (அடி - 15, 16) மேரு மலையை வில்லாகவும், `வாசுகி` என்னும் பாம்பினை நாணாகவும் கொண்டு ஒரு கணையால் முப் புரத்தை அழித்தமை சங்க இலக்கியத்திற்றானே சொல்லப்பட்டது.* (அடி - 17, 18) சாக்கிய நாயனார் கல் எறிந்து பேறு பெற்ற வரலாறும் பெரியபுராணத்துள்ளே காணத்தக்கது. தற் கொண்டு - தனக்கு ஏற்புடைத்தாகக் கொண்டு (அடி - 19, 20) கூற்றென - யமன்போல, கோளரி - சிங்கம். யானைக்குப் பகை சிங்கம். வாரணத்து ஈர் உரி - யானையினின்றும் உரித்த தோல், யானையாய் வந்து எதிர்த்தவன் கயாதரன் (அடி - 21, 22) நந்தீச்சுவரன், நந்திதேவர். இவர் செய்த தவத்திற்காக இவருக்குச் சிவபெருமான் தனது உருவைக் கொடுத்தலாகிய சாரூப பதவியைத் தந்தருளினான். நற்றா - நல்லதாக; நல்லது உண்டாக. (அடி - 23, 24) அறிவு - அறியத்தக்க பொருள். ஓரார் - ஆராய்ந்துணராத அரக்கனார், இராவணன். இங்கும் ஆர் விகுதி இழிவு குறித்து நின்றது. ``நெறு நெற`` என்பது ஒலிக் குறிப்பு. (அடி - 25, 26) அசுரன், வாணன். இவன் செய்த பூசைக்காக இவனுக்குச் சிவபெருமான் தனது சாரூபத்தை வழங்கித் தான் நடனம் புரியும் பொழுது குடமுழா வாசிக்கப் பணித்தருளினான். சாரூபம் பெற்றமையால் அவனுக்கு ஊர்தியும் இடபமாயிற்று. ஏறு - இடபம் (அடி - 27) பல் கதிர் உரவோன், சூரியன். இவன் பல்லைத் தகர்த்தது தக்கன் வேள்வி அழிப்பில். அதனைக் கந்தபுராணத்துட் காண்க. (அடி - 28) பிருங்கிருடி, கணங்களில் ஒருவர். ``தண்டி குண்டோதரன் பிங்கிருடி`` * என அப்பரும் அருளிச் செய்தார் (அடி - 29) தக்கன் வேள்வியை அழித்தது கந்தபுராணத்துள் விரித்துக் கூறப்பட்டது. (அடி - 30) நந்திமாகாளர், திருக்கயிலைக் காவலருள் தலைவர். அத்தலைமை அளித்தது மிக்க வரம் ஆதல் அறிக. (அடி - 31) தீக்கடவுள் - அக்கினி தேவன். இவனது கையை அறுத்தது தக்கன் வேள்வியில் (அடி - 32) `நெடும்படை பைந்தார்ப் பார்த்தற்கு அருளியும்` என மாற்றியுரைக்க. நெடும் படை - பெரிய அத்திரம். பார்த்தன் - அருச்சுனன். (அடி - 33) `கதிர்`` என்றது நிலவை. `காலால் பயன் கெடுத்து` என்க. பயன் கெடுத்தது, கீழே தேய்த்து வலியிழக்கச் செய்தது. இதுவும் தக்கன் வேள்வியில் (அடி - 34) நீள் நகர், அளகாபுரி (அடி - 37) தாருகன், இவன் கந்தபுராணத்தில் சொல்லப்பட்ட தாரகன் அல்லன், அவனின் வேறானவன். ``கானகம் உகந்த காளி தாருகன் - பேருரங் கிழித்த பெண்ணும் அல்லள்``* எனச் சிலப்பதிகாரத்து கூறப்பட்டது காண்க. (அடி - 38) சிலந்திக்கு அரசளித்ததைப் பெரியபுராணம் கோச்செங்கட் சோழர் வரலாற்றில் காண்க. (அடி - 39) கார்- கருமை; அழகு. திருமாலின் ஊர்தியாகிய கருடனை இடபத்தின் மூச்சுக் காற்றில் அகப்பட்டு உழலச் செய்ததைக் காஞ்சிப் புராணம் தழுவக் குழைந்த படலத்தில் காண்க. (அடி - 44) புடம் - மறைப்பு; நிழல் (அடி - 46) ஆதர் - அறிவிலார். `உளர் ஆவர்` ஆக்கம் வருவித் துரைக்க. (அடி - 47) ஒடுங்கா - முடிவு பெறாத. உம்பர்கோன். சிவபெருமான் (அடி - 49) ``கிருமி`` என்றது ஆசிரியர் தம்மையே குறித்தது. பரம் - அளவு. ஏகாரம், எதிர் மறைவினா. (அடி - 50) ஒருவகைத் தேவர், சுவர்க்க லோகவாசிகள். திறம் - கூறுபாடு. இருவகைக் கூறுபாடு புண்ணியம் பாவம் (அடி - 52) இரதம், நாவால் நுகரப்படும் சுவை. (அடி - 53) ஓசை - இசை. ஞானம், புத்திகுணபாவகங்கள் எட்டில் ஒன்று. இஃது எண் வகைப்படுதலைச் சிவஞான போதம் 2 ஆம் சூத்திர பாடியத்தால் உணர்க. (அடி - 54) நவரத்தினங்கள் போல ஒன்பது வகையான நிறம் உடைய மலர்கள் விரும்பப்படுகின்றன. (அடி - 55) ``பத்தின் வகை`` என்பதனை, ``பத்துக் கொலாம் அடியார் செய்கை தானே`` * என்னும் அப்பர் திருமொழியால் உணர்க. (அடி - 56) `நினைவோர்க்கு இன்பனை` என மாற்றிக் கொள்க. (அடி - 60) (அடி - 70) கல் - மலை. கண்டன் - அளவுட்படுபொருள்களாய் உள்ளான். (அடி - 71) தொன்மை, தொன்மைத்தான பொருள்; ஆகுபெயர். (அடி - 72) நித்தன் - அழிவில்லாதவன். முத்தன் - பாசம் இல்லாதவன். (அடி - 73) மறையன் - வேதப் பொருளாய் உள்ளவன். (அடி - 77, 78) `முயல் விட்டுக் காக்கைப்பின் போவது போல` என்பது ஒரு பழமொழி, அப்பர் திருமொழியிலும் வந்துள்ளது.* வேட்டையாடுபவன் முயலின்பின் விடாது சென்றால் பயன் பெறுவான்; அதை இடையில் விட்டுவிட்டுக் காக்கைப்பின் போனால் யாது பெறுவான்? ஒன்றையும் பெறான். இது பயன் தருவதை விட்டுப் பயன் தாராததைத் தொடர்வதற்கு உவமையாகும். கலவர் - படைக் கலம் எந்தியவர்; வேட்டையாடுபவர். (அடி - 79) ``விளக்கிருக்க மின்மினித் தீக் காய்தல்` என்பதும் முன் கூறியது போன்ற ஒரு பழமொழி. இதுவும் மேற்குறித்த அப்பர்திருமொழியில் வந்துள்ளது (அடி - 80) அளப் பரும் சிறப்பு, அறியாமையின் மிகுதி. (அடி - 81, 82) கச்சம் - அளவு; எல்லை. எல்லைக்கு உட்பட்ட ஆற்றல் உடையவர்களாய்ப் பெருஞ் செயலை முடிக்கமாட்டாத சிறிய தேவர்கள். கொச்சை - நிரம்பாமை; அரை குறை. (அடி - 83) பிச்சர் - பித்தர். ஓர் - சிறுமையுடைய (அடி - 84) ஆரியப் புத்தகம், பல தெய்வ வழிபாட்டைக் கூறும் ஆரிய நூல், அத்தகைய நூல் தமிழில் இல்லாமையால், `ஆரியப் புத்தகம்` என்றே கூறினார். அது வீணே அலையப் பண்ணுதலால் அதனை, ``பேய்`` என்றார். (அடி - 85) வட்டணை - சுற்றிச் சுற்றி முடிவில்லாது வரப் பேசுதல். மானுடராயினும் மானுடப் பண்பு இல்லாமையால் ``மானுடம் போன்று`` என்றார். ``மக்களே போல்வர் கயவர்`` என்னும் திருக்குறளைக் காண்க. (அடி - 86) பெட்டு - பொய், (அடி - 87, 88) குறும்பன் ஒருவன் வேறு ஒருவனைப் பார்த்து, ``உனது தலை. மனிதர் தலையாய் இல்லை; மீன் தலையாய் உள்ளது; அதன் எடை எட்டுப் பலமே`` என்று சொன்னால் உடனே தன் தலையை வெட்டி எடுத்து நிறுத்துப் பார்ப்பவர் உலகில் ஒருவரும் இல்லை. ஒருத்தர், பொதுமை பற்றி வந்த பன்மை; `ஒருத்தரும்` என்னும் இழிவு சிறப்பும்மை விரிக்க. (அடி - 89) மத்திரம் ஆகுவர் - அவ்வாறு சொன்னவர்மேல் சினங் கொள்வர். மாநெறி, எல்லா நெறிகளையும் தன்னுள் அடக்கி நிற்கும் நெறி; அது சிவ நெறி. மத்திர மாகுவர் - அதன் மேல் காழ்ப்புக் கொள்பவர். (அடி - 90) சித்திரம் - சொல்லளவில் அழகாய்த் தெரியும் சொற்கள். பேசுவர் - பேசப்படுபவர் தேவராகில் அவரால் குறிக்கப் படுவோர் பெருந்தேவராயின் (அடி - 91, 92, 93) ``இன்ன தீயோரைக் காய்ந்தனர்; இன்ன நல்லோர்க்கு அருள் புரிந்தனர்`` என்பது எங்கேனும் சொல்லப்படுகின்றதா? இல்லையே - என்க. இங்ஙனம் கூறியது, `புராண இதிகாசக் கதைகளாய் இல்லாமல் சண்டேசுரர், கண்ணப்பர், கோச்செங்கட் சோழர், மூர்த்தியார் முதலியோர் வரலாறுபோல வரலாற்று முறையில் சொல்லக் கேட்கின்றோமா` என்னும் கருத்தினாற் கூறியதாகும். (அடி - 94) அழைத்தல் - கூப்பீடு செய்தல். (அடி - 95) ஈடுண்டல் - உட்படுதல் (அடி - 96) இப்படி ஞானம் - இங்கே சொல்லப்பட்ட ஞானம். அப்படி அமைத்தல் - மேல் வட்டணை பேசுவோர் கூறும் ஞானமாகத் திரித்து அமைத்தல். (அடி - 97) மேற்கூறிய பூக்கமழ் சடையனும் புண்ணிய நாதனும் ஆகிய இறைவனை இன்ன தன்மையன் என்று இருநிலத்து முன்னே (இளமை யிற்றானே) அறியாமாக்களை` என்க. (அடி - 99) இன்னே - இப் பொழுதே. `அவர்களைக் கூற்றம் கொளல் வேண்டும்` என்றது அவர்கள் மேல் எழுந்த சீற்றத்தால் அன்று; பயனில் உழப்புச் செய்தல் பற்றிய. பரிதாபத்தினாலாம்.
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்
துப்புரவு இல்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் சாகடிக்கும் கூற்று*
என்னும் திருக்குறள் போல்பவற்றைக் காண்க. (அடி - 100) தவறு - கடமையைச் செய்யாமை, `கூற்றம்` என்பது சொல்லால் அஃறிணை யாதலின், ``உடைத்து`` என அஃறிணையாகக் கூறினார். கோபப் பிரசாதம் முற்றிற்று.

பண் :

பாடல் எண் : 1

அரவம் அரைக்கசைத்த அண்ணல் சடைபோல்
விரவி எழுந்தெங்கும் மின்னி அரவினங்கள்
அச்சங்கொண் டோடி அணைய அடைவுற்றே
கைச்சங்கம் போல்முழங்குங் கார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எல்லா வெண்பாக்களிலும் ``கார்`` என்பதை முதலிற் கொண்டு உரைக்க. `எங்கும் விரவி எழுந்து சடைபோல் மின்னி அடை வுற்றே சங்கம் போல் முழங்கும்` என இயைத்து முடிக்க. `அரவினங்கள் அணைய` என இயையும்.
``அரைக்கு`` என்பதை `அரைக்கண்` எனத் திரிக்க. இஃது உருபு மயக்கம். அசைத்த - கட்டிய. `புற்றில் அணைய` எனச் சொல்லெச்சம் வருவிக்க. சங்கு திருமாலுக்குச் சிறப்பாக உரித்தாயினும், `பிறர் அதனைக் கொள்ளலாகாது` என்பது இல்லை. வெற்றிச் சங்குத் தீயோரைக் காய்வார் பலரும் கொள்வதே. அதனால் இங்குச் சிவபெருமான் சங்கு உடைமையைக் கூறினார். `அவன் கைச்சங்கம் போல்` எனச் சுட்டுப் பெயர் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 2

மையார் மணிமிடறு போற்கருகி மற்றவன்தன்
கையார் சிலை விலகிக் காட்டிற்றே ஐவாய்
அழலரவம் பூண்டான் அவிர்சடைபோல் மின்னிக்
கழலரவம் காண்புற்ற கார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஐ வாய்`` என்பது முதலாகத் தொடங்கி உரைக்க. அழல் அரவம் - அழலும் அரவம். அழலும் - சீறுகின்ற; வினைத் தொகை. கழல் அரவம் - காலில் அணிந்த `கழல்` என்னும் அணி கலத்தின் ஒலி. காண்பு உள்ள - அவ்வொலி புலப்படுதற்கு இடமான; அஃதாவது இடி முழக்கத்தைச் செய்கின்ற. ``அவன்றன்`` என்பதை, ``மைஆர் மணி மிடறு`` என்பதற்கு முன்னே கூட்டுக. மை ஆர் - கருமை நிறம் பொருந்திய. மணி, நீ. மணில மற்று - அசை `சிலையைக் காட்டிற்று` என்க. சிலை - வில். விலகி - குறுக்கிட்டு.

பண் :

பாடல் எண் : 3

ஆலமர் கண்டத் தரன்தன் மணிமிடறும்
கோலக் குழற்சடையும் கொல்லேறும் போல்வ
இருண்டொன்று மின்தோன்றி அம்பொன்றவ் வானம்
கருண்டொன்று கூடுதலின் கார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கார், அம்பு ஒன்று அவ்வானம் இருண்டு, ஒன்று மின் தோன்றி, கருண்டு ஒன்றுதலின். மிடறும், சடையும், ஏறும் போல்வ` என இயைக்க. அம்பு ஒன்று - மழை நீர் பொருந்திய `வானத்தில்` என ஏழாவது விரிக்க. ஒன்று மின் - பொருந்திய மின்னல். தோன்றி - தோன்றப் பெற்று. இயம்புதல் - ஒலித்தல். கருண்டு - மயங்கி; அஃதாவது பல்வேறு வகைய வாய். ஏறு - இடபம், இருளுதலால் மிடறு போல்வனவும், மின்னுதலால் சடை போல்வனவும், இடி முழக்கம் செய்தலால் இடபம் போல்வனவும் ஆயின. இவ்வெண்பாவின் பாடம் பெரிதும் பிழைபட்டுக் காணப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 4

இருள்கொண்ட கண்டத் திறைவன்தன் சென்னிக்
குருள்கொண்ட செஞ்சடைபோல் மின்னிச் சுருள்கொண்டு
பாம்பினங்கள் அஞ்சிப் படம்ஒடுங்க ஆர்த்ததே
காம்பினங்கள் தோள்ஈயக் கார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குருள் - தளிர். காம்பு - மூங்கில். மூங்கில் தோளுக்கு உவமையாகச் சொல்லப்படுதலால், அவற்றின் மேல் தங்கும் மேகங் களுக்கு அவை ஏறியிருக்கத் தோளைத் தந்ததாகக் கூறினார். `கார், காம்பினங்கள் தோள் ஈய (அவற்றின் மேல் தங்கி) மின்னிப் பாம்பினங்கள் அஞ்சி சுருள் கொண்டு பாடம் ஒடுங்க ஆர்த்தது` என்க.

பண் :

பாடல் எண் : 5

கோடரவங் கோடல் அரும்பக் குருமணிகான்
றாடரவம் எல்லாம் அளையடைய நீடரவப்
பொற்பகலம் பூண்டான் புரிசடைபோல் மின்னிற்றே
கற்பகலம் காண்புற்ற கார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கோடல் - காந்தள். அதன் அரும்பு பாம்பு போலும் தோற்றத்தை உடையது ஆகலின் `கோடல் கோடு அரவம் அரும்ப` என்றார். கோடு - வளைந்த. `அரவம் போல அரும்ப` என்க. மழைக் காலத்தில் காந்தள் அரும்பெடுத்து மலரும். குரு - நிறம். மணி, நவ மணிகள். கான்று - உமிழ்ந்து. அணை - புற்று. பொற்பு அகலம் - அழகிய மார்பு. கல் - மலை. அதனது தனது தன்மை. கற்பு, `கல்லினது தன்மையாகிய அகன்ற இடத்தில் காணப்பட்ட கார்` என்க.

பண் :

பாடல் எண் : 6

பாரும் பனிவிசும்பும் பாசுபதன் பல்சடையும்
ஆரும் இருள்கீண்டு மின்விலகி ஊரும்
அரவம் செலஅஞ்சும் அஞ்சொலார் காண்பார்
கரவிந்தம் என்பார்அக் கார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதலிலும் `கார்` என்பது வருவித்து, `மின் விலகி, இருள் கீண்டு ஊரும்` என்க. பார் - நிலத்தின் கீழ் இடம். பனி விசும்பு. குளிர்ந்த ஆகாயம். பாசுபதன் சடை - சிவபெருமானது சடை. `இம் மூன்றிடங்களும் இருள் தங்கியிருக்கும் இடம்` என்றார். ஆரும் - பொருந்தும். சிவபெருமானது சடை முடி `அடவி` (சடாடவி) எனப் படுதலால், அதனையும் இருள் தங்கும் இடமாகக் கூறினார். விலகி - குறுக்கிட விட்டு. ஊரும் - தவழும் (அது பொழுது) `அரவம் வெளியே செல்ல அஞ்சும். `ஆயினும் அம் சொல்லார் (அழகிய சொற்களை யுடைய பெண்கள் பிரிந்து சென்ற கணவர் மீண்டு வருவார் என மகிழ்ந்து) அக் கார் காண்பார்கள். கண்டு, கர இந்து அம் (இவற்றுள்ளே மறைந்து நிற்கின்ற நிலவு அழகிது) என்பார்கள் இங்ஙனமெல்லாம் மகிழ்வார்கள்` என்றபடி. கர இந்து, இறந்தகால வினைத்தொகை.

பண் :

பாடல் எண் : 7

செழுந்தழல் வண்ணன் செஞ்சடைபோல் மின்னி
அழுந்தி அலர்போல் உயர எழுந்தெங்கும்
ஆவிசோர் நெஞ்சினரை அன்பளக்க உற்றதே
காவிசேர் கண்ணாய்அக் கார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

காவி - கருங் குவளைப் பூ `அதன் தன்மை சேர்ந்த கண்களையுடைய தோழீ` என்க. அக்கார் - அஃதோ தோன்றுகின்ற மேகம்; `அன்பை அளத்தற் பொருட்டு, மின்னி, அழுந்தி, உயர எழுந்து, எங்கும் உற்றது; (யான் ஆற்றுமாறு எவன்) என முடிக்க. ஈற்றில் வருவிக்கப்படுவது குறிப்பெச்சம். அழுந்துதல் - இறுகுதல். `எனது ஆற்றாமையைப் பலரும் இகழ்கின்றார்கள் என்பதை நீ சொல்ல வேண்டாமலே யான் அறிவேன்` என்றற்கு, இடையே, ``அவர்போல் உயர எழுந்து`` என்றாள். ஆற்றாமையால் ஆவி சோர்தலைக் கண்டும் நீங்காமையால், `உயிர்விடுகின்றாளா, பார்ப்போம்` என்று இருக் கின்றது` என்பாள். ``ஆவி சோர் நெஞ்சினரை அன்பு அளக்க உற்றது`` என்றாள்; இரண்டன் உருபை ஆறன் உருபாகத் திரிக்க. இது தலைவனது பிரிவு நீட்டிக்க ஆற்றாளாய தலைமகளை, `ஆடவர் பிரிந்த செயலை முடித்து வருங்காறும் ஆற்றியிருத்தல் மகளிர் செயற்பாலது; அது நீ செய்கின்றிலை` என வற்புறுத்திய தோழிக்குத் தலைவி, `அன்பிலார் ஆற்றியிருப்பர்; யான் ஆற்றேன்` என வன்புறை எதிரழிந்து கூறியது.

பண் :

பாடல் எண் : 8

காந்தள் மலரக் கமழ்கொன்றை பொன்சொரியப்
பூந்தளவம் ஆரப் புகுந்தின்றே ஏந்தொளிசேர்
அண்டம்போல் மீதிருண்ட ஆதியான் ஆய்மணிசேர்
கண்டம்போல் மீதிருண்ட கார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அண்டம் - ஆகாயம். அது நீல நிறத்தை உடையது ஆதலின் சிவபெருமானுடைய கண்டத்திற்கு உவமையாயிற்று. ``அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே`` என உவமைக்கு உவமை கூறலை விலக்கியது, உவமையால் பொருளைச் சிறப்பிப்பதாகிய நேர்நிலை உவமத்திற்கே யாம். அதில் உவமைக்குக் கூறும் உவமை ஆகவே அதற்கு அது விலக்கப்பட்டது. பொருளால் உவமையைச் சிறப்பிப்பதாகிய எதிர்நிலை உவமத்தில் உவமைக்கு உவமை கூறினால் இரண்டானும் பொருள் சிறப்பெய்துதலின் அதற்கு அவ் விலக்கு இன்றாம். `அண்டம்போல் மீதிருண்ட கண்டம் போல்` என இயைக்க. ``ஆதியான்`` என்பதும் ``கண்டம்`` என்பதனோடே முடியும். ஆதியான், சிவபெருமான். ஆய் மணி - ஆராய்ந்தெடுக்கப் பட்ட நீல மணி. `அதன் தன்மை சேர்ந்த கண்டம்` என்க. தளவம் - முல்லை. `தளவம் பூ ஆர` என மாற்றியுரைக்க. ஆர - நிறைய. மலரவும், `சொரியவும், ஆரவும் புகுந்தின்று` என்க. புகுந்தின்று - புகுந்தது. இன், சாரியை. இச்சாரியை ஈறு திரியாது வருதல் பண்டைய வழக்கம். `கூயிற்று, போயிற்று` என்றாற்போல ஈறு திரிந்தே வருதல் பிற்கால வழக்கம். அதனால் பிற்காலத்தில் இச்சாரியை ஏற்ற இடத்தே வருவதாம். ``புகுந்தின்று`` என்பதில் தகர ஒற்று இறந்த காலம் காட்டிற்று. `கூயிற்று, போயிற்று` என்பவற்றில் யகர ஒற்றே இறந்த காலம் காட்டுதலை, `ஆயது, போயது` முதலிய வற்றான் அறிக. கார் எட்டு முற்றிற்று.

பண் :

பாடல் எண் : 1

திருத்தங்கு மார்பின் திருமால் வரைபோல்
எருத்தத் திலங்கியவெண் கோட்டுப் - பருத்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திருமால் வராக வடிவம் கொண்டு திரு வடியைத் தேடிக் காணாமை இவற்றால் கூறப்பட்டது. முதற்கண் உள்ள திரு. இலக்குமி. `எருத்தத்து இலங்கிய, வெண் கோடு முதலாக நீல நிறம் முடிவான இவற்றால் பொலிந்து வரைபோலும் பன்றி` என்க. வரை - மலை. எருத்தம் - பிடரி `எருத்தத்தால்` என உருபு. விரிக்க.

பண் :

பாடல் எண் : 2

குறுத்தாள் நெடுமூக்கிற் குன்றிக்கண் நீல
நிறத்தாற் பொலிந்து நிலம்ஏழ் - உறத்தாழ்ந்து

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`குறுந்தாள்` என்பது வலிந்து நின்றது. தாள் - கால். குன்றிக் கண் - குன்றி மணிபோலும் கண்கள். `பன்றித் திருஉருவாய் நிலம் ஏழ் உறத் தாழ்ந்து காணாத பாதங்கள்` என இயைக்க.

பண் :

பாடல் எண் : 3

பன்றித் திருவுருவாய்க் காணாத பாதங்கள்
நின்றவா நின்ற நிலைபோற்றி - அன்றியும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பன்றித் திருஉருவாய் நிலம் ஏழ் உறத் தாழ்ந்து காணாத பாதங்கள்` என இயைக்க. நிலம், இங்குப் பாதல உலகங்கள். நின்றவா நின்ற நிலை - என்றும் ஒரு பெற்றியனவாய்த் திரிபின்றி நிற்கும் நிலை. (இதற்குப்) போற்றி - வணக்கம்

பண் :

பாடல் எண் : 4

புண்டரிகத் துள்ளிருந்த புத்தேள் கழுகுருவாய்
அண்டரண்டம் ஊடுருவ ஆங்கோடிப் - பண்டொருநாள்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

புண்டரிகம் - தாமரை மலர். அதனுள் இருந்த புத்தேள், பிரம தேவன். `பறவை` என்னும் சாதி பற்றி அன்னத்தை, ``கழுகு`` என்றார். அன்றிப் புராண பேதம் பற்றிக் கூறினார் எனினும் ஆம். அண்டர் அண்டம் தேவர் உலகம். ஊடுருவியது கழுகுருவம். ``பண்டொருநாள்`` என்பதை முதலிற் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 5

காணான் இழியக் கனக முடிகவித்துக்
கோணாது நின்ற குறிபோற்றி - நாணாளும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``காணான்`` என்பது, `காணானாய்` என முற்றெச்சம். இழிய - (முன் இருந்த இடத்திற்கு) இறங்கிவிட, சிவனுக்கு முடி சடையேயாயினும் கனக (பொன்) முடி விலக்கன்று. ``முடி கவித்து`` என்றதனால். `காணப்படாது நின்றது முடி` என்பது போந்தது. கோணாது - வளையாமல் `நிமிர்ந்து` என்றபடி.

பண் :

பாடல் எண் : 6

பேணிக்கா லங்கள் பிரியாமைப் பூசித்த
மாணிக்கா அன்று மதிற்கடவூர்க் - காண

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பேணி - பாதுகாத்து `காலங்கள் தோறும்` என. `தோறும்` என்பது வருவிக்க. மாணி - பிரமசாரி. மார்க்கண்டேயர். கடவூர் - திருக்கடவூர். அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்று. ஊரில் உள்ளவர்களை ``ஊர்`` என்றார். `வரத்தின் பெற்ற பெரிய வலி` என்க. உரம் - மார்பு.

பண் :

பாடல் எண் : 7

வரத்திற் பெரிய வலிதொலையக் காலன்
உரத்தில் உதைத்தஉதை போற்றி - கரத்தாமே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வரத்தின் பெற்ற பெரிய வலி` என்க. உரம் - மார்பு. ``கரத்தான் மே`` என்றதனை, ``குங்குமத்தின்`` என்பதற்கு முன்னே கூட்டுக.

பண் :

பாடல் எண் : 8

வெற்பன் மடப்பாவை கொங்கைமேற் குங்குமத்தின்
கற்பழியும் வண்ணங் கசிவிப்பான் - பொற்புடைய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கரத்தான் மே`` என்றதனை, ``குங்குமத்தின்`` என்பதற்கு முன்னே கூட்டுக. கற்பு - கற்றல். அஃதாவது இங்குக் கோலம் எழுதக் கற்றுக் கொள்ளுதல். அஃது ஆகுபெயராய் அக்கல்வி வன்மையால் எழுதப்படும் கோலத்தைக் குறித்தது. எனவே, `கொங்கைமேல், கரத்தான் மேவு குங்குமத்தின் கோலம் அழியும் வண்ணம்` - அஃதாவது, `கொங்கைமேற் சேரும் வண்ணம்` எனக் கூறியதாம். கசிவித்தல் - மனத்தை இளகச் செய்தல், `யோகத்தில் இருந்த தன்னை (சிவனை)ப் போகத்தில் இச்சையுடையனாக்கும் பொருட்டு` என்றவாறு. அழகுடைமை பற்றித் திருமாலும் `வாமன்` எனப்படுவான். பொற்பு - அழகு. எனவே, ``வாமன்`` என்பது வாளா பெயராய் நின்றது.

பண் :

பாடல் எண் : 9

வாமன் மகனாய் மலர்க்கணையொன் றோட்டியஅக்
காமன் அழகழித்த கண்போற்றி - தூமப்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அழகுடைமை பற்றித் திருமாலும் `வாமன்` எனப்படுவான். பொற்பு - அழகு. எனவே, ``வாமன்`` என்பது வாளா பெயராய் நின்றது. தூமம் - தாருகாவனமுனிவர் செய்த வேள்வியின் புகை நடுவிலே. படம் எடுத்து வந்த பாம்புகள் வெகுண்டு பார்த்து தீங்கு செய்யவர அவைகளைப் பற்றி அணியாக அணிந்து.

பண் :

பாடல் எண் : 10

படமெடுத்த வாளரவம் பார்த்தாடப் பற்றி
விடமெடுத்த வேகத்தான் மிக்குச் - சடலம்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தூமம் - தாருகாவனமுனிவர் செய்த வேள்வியின் புகை நடுவிலே. படம் எடுத்து வந்த பாம்புகள் வெகுண்டு பார்த்து தீங்கு செய்யவர அவைகளைப் பற்றி அணியாக அணிந்து.
இவற்றில் முயலகன் வரலாறு சொல்லப்படு கின்றது. வேறு இடங்களில் இது பெறப்படவில்லை.

பண் :

பாடல் எண் : 11

முடங்க வலிக்கும் முயலகன்தன் மொய்ம்பை
அடங்க மிதித்தவடர் போற்றி - நடுங்கத்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இவற்றில் முயலகன் வரலாறு சொல்லப்படு கின்றது. வேறு இடங்களில் இது பெறப்படவில்லை. `தாருகாவன இருடிகளால் அனுப்பப்பட்ட ஓர் அசுரன்` என்னும் அளவில் சொல்லப்பட்டது.) உடன் தோன்றிய பாம்புகள் உமிழ்ந்த விடவேகத்தைத் தானும் உடையவனாய், அப்பாம்புகளைப் போலத் தானும் உடலை வளைத்துத் திருமேனியைச் சுற்றி வளைத்து வலித்த (இழுத்த) முயலகனுடைய மொய்ம்பை (வலிமையை) அடங்க மிதித்த திருவடிக்கு வணக்கம். ``நடுங்க`` என்பதை, ``குருமாற`` என்பதன் பின் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 12

திருமால் முதலாய தேவா சுரர்கள்
கருமால் கடல்நாகம் பற்றிக் - குருமாற

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நடுங்க`` என்பதை, ``குருமாற`` என்பதன் பின் கூட்டுக. குரு - பாரம். அஃது ஆகுபெயராய் மலையைக் குறித்தது. மலை, மந்தரமலை. மாற - மாறி. மாறிக் கடைய. `அவர்கள் நடுங்க வந்தெழுந்த ஆலம்` என இயையும். மால் கடல் - பெரிய கடல் `நாகத்தையும் பற்றி மாற` என்க. நாகம், `வாசுகி` என்னும் பாம்பு.

பண் :

பாடல் எண் : 13

நீலமுண்ட நீள்முகில்போல் நெஞ்சழல வந்தெழுந்த
ஆலமுண்ட கண்டம் அதுபோற்றி - சாலமண்டிப்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நீலம் - நீல நிறத்தையுடைய கடல் நீர். ஆகுபெயர் `நீர் முகில்போல் வந்தெழுந்த ஆலம்` என்பதாம். அழல - துன்பத்தால் வருந்த. கண்ட மாகிய அதற்கு வணக்கம். ``சால மண்டி`` என்பதை ``மிக்கடர்க்கும்`` என்பதற்குமுன்னே கூட்டுக. உகந்த - விரும்பிய. சால மண்டி - மிகவும் நெருங்கி.

பண் :

பாடல் எண் : 14

போருகந்த வானவர்கள் புக்கொடுங்க மிக்கடர்க்கும்
தாருகன்தன் மார்பில் தனிச்சூலம் - வீரம்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடர்க்கும் - வருத்துகின்ற. தாருகன், ஓர் அசுரன். இவன் முருகக் கடவுளால் அழிக்கப்பட்ட தாரகனின் வேறானவன். `அதற்கு வீரம் கொடுத்து` என்க.

பண் :

பாடல் எண் : 15

கொடுத்தெறியும் மாகாளி கோபந் தவிர
எடுத்த நடத்தியல்பு போற்றி - தடுத்து

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மாகாளி - வீர மாகாளி. `அவள் தான் கொண்ட கோபம் தணியாது உலகிற்கு இடர் புரிந்தமையால், அவளை நடனப் போரினால் சிவபெருமான் நாணம் அடையச் செய்து வென்றான்` என்பது வரலாறு. இந்நடனப் போர் நிகழ்ந்த இடமாகக் கூறப்படுவது திருவாலங்காடு.

பண் :

பாடல் எண் : 16

வரையெடுத்த வாளரக்கன் வாயா றுதிரம்
நிரையெடுத்து நெக்குடலம் இற்றுப் - புரையெடுத்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வாளரக்கனைத் தடுத்து அவன் வாய் ஆறு உதிரம் நிலை எடுத்து` என உருபு விரித்தும், சுட்டுப் பெயர் வருவித் தும் உரைக்க. வரை, கைலாயமலை, அதனை எடுத்த அரக்கன் இராவணன். நிரை, தாரைகளின் வரிசை. எடுத்து - தோன்றி. இற்று - முரிந்து. இரு செய்தென் எச்சங்களும் எண்ணின்கண் வந்து, ``நெரிய`` என்பதனோடு முடிந்தன. புரை எடுத்த - `குற்றத்தை மேற் கொண்ட முடியும், தோளும்` என்க.

பண் :

பாடல் எண் : 17

பத்தனைய பொன்முடியும் தோளிருப தும்நெரிய
மெத்தெனவே வைத்த விரல்போற்றி - அத்தகைத்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பத்து அனைய - `பத்து` என்னும் அவ் எண்ணிக்கையை உடைய. முடி. ஆகுபெயராய் அதனை அணிந்த தலையை உணர்த்திற்று. வலி பொறுக்கமாட்டாது அழும் அளவிற்கு ஊன்றியதன்றி, இறந்தொழியும்படி ஊன்றாமையால் ``மெத்தெனவே வைத்த விரல்`` என்றார். (இவற்றில் பிரமன் தலையை வெட்டிய வரலாறு வேறு வகையாகக் கூறப்படுகின்றது. ``நாமகள் நாசி, சிரம்பிரமன் பட`` திருவாசகத்தில் பிரமன் சிரம் தக்கன் வேள்வியில் வெட்டப்பட்டதாகக் கூறப்பட்டது. ``அரி அயன் தலை வெட்டி வட்டாடினார்``* என்பது அப்பர் திருமொழி.) ``தகைத்த`` என்பது `தகை` என்பது அடியாகப் பிறந்த தெரிநிலைப் பெயரெச்சம்.

பண் :

பாடல் எண் : 18

வானவர்கள் தாம்கூடி மந்திரித்த மந்திரத்தை
மேனவில ஓடி விதிர்விதிர்த்துத் - தானவருக்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மந்திரித்தல் - மந்திராலோசனை செய்தல், மந்திரம் - மந்திராலோசனை செய்து முடிக்கப்பட்ட பொருள். இஃது இரகசியமானது. விதிர் விதிர்த்தல். அஞ்சுதல் - நடுங்குதல். பிரமன் அஞ்சியது, `இம்முடிவு தன்னால் ஏற்பட்டது எனக் கொண்டு அசுரர்கள் தனக்குக் கேடு சூழ்வர் என நினைத்தமையாலாம். மேல் - பின்பு. தானவர் - அசுரர்.

பண் :

பாடல் எண் : 19

கொட்டிக் குறளை உரைத்த அயன்சிரத்தை
வெட்டிச் சிரித்த விறல்போற்றி - மட்டித்து

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`விதிர் விதிர்த்து, மேல் தானவருக்கு நவில ஓடி, ஒட்டிக் குறளை உரைத்த அயன்` என்க. குறளை உரைத்தல் - கோள் சொல்லல், ஒட்டி- அவர்களோடு பொருந்தி. `இது பற்றித் தேவர்கள் முறையிடச் சிவ பெருமான் அயனது சிரசை அறுத்தான்` என்க. மட்டித்தல் - பூசுதல்.

பண் :

பாடல் எண் : 20

வாலுகத்தால் நல்லிலிங்க மாவகுத்து மற்றதன்மேல்
பாலுகுப்பக் கண்டு பதைத்தோடி - மேலுதைத்தங்கு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மட்டித்தல் - பூசுதல். அது நன்கு அமையச் செய்தலைக் குறித்தது. வாலுகம் - வெண்மணல் குவை. வகுத்து - செய்து. உகைத்து - அப்புறப்படுத்தி.

பண் :

பாடல் எண் : 21

ஒட்டியவன் தாதை இருதாள் எறிந்துயிரை
வீட்டிய சண்டிக்கு வேறாக - நாட்டின்கண்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஓட்டிய - தன்னையும் வெருட்டிய. வன்தாதை - கொடிய தகப்பன், `தகப்பன்` எனக் கருதுதற்கு உரியன் அல்லாதவன்` என்றபடி. சண்டி - சண்டேசுர நாயனார். வேறாக - தனியாக. `வேறாக இருத்தி` என்க.

பண் :

பாடல் எண் : 22

பொற்கோயில் உள்ளிருத்திப் பூமாலை போனகமும்
நற்கோலம் ஈந்த நலம்போற்றி - நிற்க

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பூ மாலை தான் சாத்தி எடுத்த பூ மாலை. போனகம் - நிவேதனம். இதுவும் நிவேதித்து. நற்கோலம் - சிவ வடிவு. ``நற்கோலம்`` என்பதிலும் உம்மை விரிக்க. இவற்றையெல்லாம் கொடுத்தது. மகன்மையுரிமை மிக்குத் தோன்றவாம்.

பண் :

பாடல் எண் : 23

வலந்தருமால் நான்முகனும் வானவரும் கூடி
அலந்தருமால் கொள்ள அடர்க்கும் - சலந்தரனைச்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வலம் தரும் மால் - வெற்றியைத் தருகின்ற திருமால். அலந்து அரு மால் கொள்ள - அலமந்து, நீக்குதற்கரிய மயக்கத்தைக் கொள்ள. அடர்க்கும் - துன்புறுத்தும். சலந்தரன் - சலந்தராசுரன்.

பண் :

பாடல் எண் : 24

சக்கரத்தால் ஈர்ந் தரிதன் தாமரைக்கண் சாத்துதலும்
மிக்கஃதன் றீந்த விறல்போற்றி - அக்கணமே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அரி - திருமால். விறல் - வெற்றி. நக்கு இருந்த - பொருட்படுத்தாது சிரித்துக் கொண்டிருந்த. `அக்கணமே மூக்கரிந்து` என்க.

பண் :

பாடல் எண் : 25

நக்கிருந்த நாமகளை மூக்கரிந்து நால்வேதம்
தொக்கிருந்த வண்ணம் துதிசெய்ய - மிக்கிருந்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நக்கு இருந்த - பொருட்படுத்தாது சிரித்துக் கொண்டிருந்த. `அக்கணமே மூக்கரிந்து` என்க. தொக்கு இருந்த - தொகை மிக்கு இருந்த. வண்ணம் - வகை; புகழ்;

பண் :

பாடல் எண் : 26

அங்கைத் தலத்தே அணிமாலை ஆங்களித்த
செங்கைத் திறத்த திறல்போற்றி - திங்களைத்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அங்கைத் தலத்தே அணி மாலை - உள்ளங்கையில் வைத்திருத்தற்குரிய செபமாலை, ஆங்கு அளித்த - அப்பொழுதே கொடுத்த. `அணி மானை` என்பதும், `ஆங்கணிந்த` என்பதும் பாடங்கள் அல்ல.
திங்கள் - சந்திரன்.

பண் :

பாடல் எண் : 27

தேய்த்ததுவே செம்பொற் செழுஞ்சடைமேற் சேர்வித்து
வாய்த்திமையோர் தம்மைஎல்லாம் வான்சிறையில் - பாய்த்திப்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திங்கள் - சந்திரன். தக்கன் வேள்வியில் சந்திரன் தரையில் வைத்துத் தேய்க்கப்பட்டான். ``அதுவே`` என்ப தனை, `அதனையே` என உருபுவிரித்துரைக்க. `வாய்த்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. வாய்த்த - தக்கன் வேள்வியில் சென்றிருந்த தேவர்களை மடிவித்துப் பின் எழுப்பியதாகக் கூறப்பட்ட செய்தி இங்குச் சிறையில் அடைத்துப் பின்பு விடுவித்ததாகச் சொல்லப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

பிரமன் குறையிரப்பப் பின்னும் அவற்கு
வரமன் றளித்தவலி போற்றி - புரமெரித்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திரிபுரத்தையெரித்த பொழுது அவற்றுள் இருந்த பலருள் சிவபத்தியினின்றும் மாறாது உறைத்து நின்ற, `சுதன்மன், சுசீலன், சுபுத்தி` - என்னும் மூவர் திருவருளால் உய்தி பெற்றிருந்தனர். திரிபுரத்தசுராகிய தாரகாக்கன், கமலாக்கன், வித்யுன்மாலி - இவரும், மற்றையோரும் அழிந்தொழிந்தனர். உய்ந்த மூவரில் இருவர் கோயில் வாயில் காவலராகும் வரத்தையும், ஒருவன் முழவு வாசிக்கும் வரத்தையும் பெற்றனர்.
மூவார் புரங்கள் எரித்த அன்று
மூவர்க் கருள் செய்தார்;
மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்
காவ லாளரென் றேவிய பின்னை
ஒருவன் நீ கரி காடரங் காக
மானை நோக்கிஓர் மாநடம் மகிழ
மணிமுழா முழக்க அருள் செய்த
தேவ தேவ
உய்யவல்லார் ஒரு மூவரைக் காவல் கொண்டு
எய்யவல் லானுக்கே உந்தீபற
என்னும் திருமுறைகளைக் காண்க.

பண் :

பாடல் எண் : 29

அன்றுய்ந்த மூவர்க் கமர்ந்து வரமளித்து
நின்றுய்ந்த வண்ணம் நிகழ்வித்து - நன்று

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அமர்ந்து - விரும்பி. நிகழ்வித்து - யாவரும் அறியச் செய்து.

பண் :

பாடல் எண் : 30

நடைகாவல் மிக்க அருள்கொடுத்துக் கோயில்
கடைகாவல் கொண்டவா போற்றி - விடைகாவல்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நடை காவலால்` என உருபு விரிக்க. நடை- ஒழுக்கம். காவல் - அதனைக் காத்துக் கொள்ளுதல். காத்துக் கொண்டவர் அம்மூவர். கடை - வாயில்.
`காவல் விடை` என மாற்றி, `வாயில் காவலர் பால் விடை பெற்று அடைந்த வானவர்கள்` என உரைக்க.

பண் :

பாடல் எண் : 31

தானவர்கட் காற்றாது தன்னடைந்த நன்மைவிறல்
வானவர்கள் வேண்ட மயிலூரும் - கோனவனைச்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`காவல் விடை` என மாற்றி, `வாயில் காவலர் பால் விடை பெற்று அடைந்த வானவர்கள்` என உரைக்க. தானவர்கள் - அசுரர்கள். மயில் ஊரும் கோன், முருகன். முருகனை வான் ஆள வைத்தமையால் அவன் அசுரரை அழித்து வானவரை வாழச் செய்தான் என்க.

பண் :

பாடல் எண் : 32

சேனா பதியாகச் செம்பொன் முடிகவித்து
வானாள வைத்த வரம்போற்றி - மேனாள்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முருகனை வான் ஆள வைத்தமையால் அவன் அசுரரை அழித்து வானவரை வாழச் செய்தான் என்க.

பண் :

பாடல் எண் : 33

அதிர்த்தெழுந்த அந்தகனை அண்டரண்டம் உய்யக்
கொதித்தெழுந்த சூலத்தாற் கோத்துத் - துதித்தங்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அந்தகன் - அந்தகாசுரன். அண்டர் அண்டம் - தேவர் உலகம். `அந்தகாசுரனை வைரவர் சூலத்தாற் குத்தி எடுத்து உயரத் தூக்கி வைத்திருக்க, அவன் அகந்தை அடங்கிப் பல நாள் துதிசெய்தமையால் கீழே விடுத்து முத்தியடையச் செய்தார்` என்பது புராணம்.

பண் :

பாடல் எண் : 34

கவனிருக்கும் வண்ணம் அருள்கொடுத்தங் கேழேழ்
பவமறுத்த பாவனைகள் போற்றி - கவைமுகத்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பவம் - பிறப்பு. பாவனை - நினைவு; சங்கற்பம்.
(இவற்றுள் கயாசுர வதம் கூறப்படுகின்றது. கயாசுரன் - யானை வடிவம் உடைய அசுரன். கயமுகாசுரன் இவனின் வேறாவன்.)

பண் :

பாடல் எண் : 35

பொற்பா கரைப்பிறந்து கூறிரண்டாப் போகட்டு
மெற்பா சறைப்போக மேல்விலகி - நிற்பால

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பொன் - இரும்பு. கவை முகத்த பொன் - பல கிளைகளாகிய முகத்தையுடைய, இரும்பால் ஆன கருவி. அங்குசம் முதலியன. தன்னை அடக்க வந்த பாகர்களைக் கயாசுரன் கொன்று விட்டான். `மேல்` என்பது `மெல்` எனக்குறுகி நின்றது. பாசறைக்குப் போவதற்குத் தடையாகத் தன்மேல் வந்தவர்களை விலகப்பண்ணி. `விலகு வித்து` என்பது விகுதி தொக, ``விலகி`` என்று ஆயிற்று. நில் பால - நின்ற பான்மையையுடைய.

பண் :

பாடல் எண் : 36

மும்மதத்து வெண்கோட்டுக் கார்நிறத்துப் பைந்தறுகண்
வெம்மதத்த வேகத்தால் மிக்கோடி - விம்மி

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தறுகண் - அஞ்சாமை; அதற்குப் `பசுமை` என்னும் அடை கொடுத்தது, கெடாது நிற்றலைக் குறித்தவாறு. கண்ணி - 36இன் முதலடியில் முரண்தொடை, அல்லது விரோத அணி வந்தது.

பண் :

பாடல் எண் : 37

அடர்த்திரைத்துப் பாயும் அடுகளிற்றைப் போக
எடுத்துரித்துப் போர்த்தவிசை போற்றி - தொடுத்தமைத்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 38

நாள்மாலை கொண்டணிந்த நால்வர்க்கன் றால்நிழற்கீழ்
வாள்மாலை ஆகும் வகையருளித் - தோள்மாலை

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நாள் மாலை - நாள் மலர் மாலை; அஃதாவது அன்றலர்ந்த பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை. நால்வர்- முனிவரர் நால்வர். `சனகர், சனந்தனர். சனாதனர், சனற்குமாரர்` என்பர். வாள் - ஒளி; ஞானம். மாலை - தன்மை. `ஞானத்தின் இயல்பு விளங்கும் வண்ணம் அருளிச் செய்து` என்க.

பண் :

பாடல் எண் : 39

விட்டிலங்கத் தக்கிணமே நோக்கி வியந்தகுணம்
எட்டிலங்க வைத்த இறைபோற்றி - ஒட்டி

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

விட்டு - ஒளிவீசி. தக்கிணம் - தெற்கு. குணம் எட்டு, சைவாகமங்களில் சொல்லப்பட்ட தன்வயத்தனாதல் முதலிய எண்குணங்கள். இலங்க - அம்முனிவரர் கட்கு விளங்கும்படி. இறை - இறைத்தன்மை; அது முதல் நூல் செய்தல். எனவே, இஃது அறம் முதலிய நாற்பொருள்களைக் கூறிய பழைய தமிழ் நான்மறைகளை அருளிச் செய்ததைக் குறித்ததாம். ஒட்டி - வலிமை பேசி.

பண் :

பாடல் எண் : 40

விசையன் விசையளப்பான் வேடுருவம் ஆகி
அசையா உடல்திரியா நின்று - வசையினால்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`விசயன்` என்பது, ``விசையன்`` எனப் போலியாயிற்று. விசயன் - அருச்சுனன். விசை - வேகம்; போராற்றல். `வேடன்` என்பது `வேடு` என்னும் சாதிப் பெயரால் கூறப்பட்டது. அசைய - அவன் தளர்ச்சியடையும்படி. உடல் திரியாநின்று - உடம்பைக் குப்புறக் கீழ்மேலாக விழச்செய்து. வசையினால் - வசை வகையில் அமையும்படி.

பண் :

பாடல் எண் : 41

பேசுபதப் பான பிழைபொறுத்து மற்றவற்குப்
பாசுபதம் ஈந்த பதம்போற்றி - நேசத்தால்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பதைப்பு` என்பது, எதுகை நோக்கி, ``பதப்பு`` எனத் திரிந்து நின்றது, மற்று, வினைமாற்று, பதம் - திருவடி. திருவருளை, `திருவடி` என்றல் வழக்கு.

பண் :

பாடல் எண் : 42

வாயில்நீர் கொண்டு மகுடத் துமிழ்ந் திறைச்சி
ஆயசீர்ப் போனகமா அங்கமைத்துக்த் - தூயசீர்க்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மகுடம் - தலை; ஆகுபெயர். `சிவ பெருமானை, `வேடர்` என்று இகழ்ந்த அருச்சுனனே பின்பு வேடர் குலத்தில் கண்ணப்ப நாயனாராக அவதரித்துக் காளத்தியில் சிவ பெருமானை வேடுவராயே இருந்து வழிபட்டு முத்தி பெற்றான்` எனச் சீகாளத்திப் புராணம் கூறும்.

பண் :

பாடல் எண் : 43

கண்ணிடந்த கண்ணப்பர் தம்மைமிகக் காதலித்து
விண்ணுலகம் ஈந்த விறல்போற்றி - மண்ணின்மேல்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அதற்கேற்ப இங்குக் கண்ணப்ப நாயனார் செய்தி அருச்சுனன் செய்தியை அடுத்துக் கூறப்பட்டது. வட கயிலை யில் சிவபெருமானோடு போராடிய அருச்சுனன், மறுபிறப்பில் தென் கயிலாயத்தில் சிவபெருமானை வழிபட்டு ஆறே நாளில் முத்தி பெற்றான் போலும்!

பண் :

பாடல் எண் : 44

காளத்தி போற்றி கயிலைமலை போற்றி யென
நீளத்தினால் நினைந்து நிற்பார்கள் - தாளத்தோடு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நீளத்தினால் - கால வரையறையின்றி. `ஆங்குச் சேர்வார்கள்` என்க.

பண் :

பாடல் எண் : 45

எத்திசையும் பன்முரசம் ஆர்த்திமையோர் போற்றிசைப்ப
அத்தனடி சேர்வார்கள் ஆங்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஆங்குச் சேர்வார்கள்` என்க. ஆங்கு - சிவலோகத்தில். எனவே, இங்கு `இமையோர்` எனப்பட்டவர் சிவகணங்கள் ஆவர். `இவ் வுலகில் சிவபெருமானை அவனது திருப்புகழ் பலவற்றையும் எடுத் தோதிப் போற்றி செய்தவர்கள் அவ்வுலகில் இமையோர் போற்றி செய்ய விளங்குவர்` என்றபடி.

போற்றித் திருக்கலிவெண்பா முற்றிற்று

பண் :

பாடல் எண் : 1

உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்
கோவற இமைக்குஞ் சேண்விளங் கவிரொளி
உறுநர்த் தாங்கிய மதன்உடை நோன்தாள்
செறுநர்த் தேய்த்த செல்உறழ் தடக்கை 5
மறுவில் கற்பின் வாள்நுதல் கணவன்
கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை
வாள்போழ் விசும்பின் உள்உறை சிதறித்
தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்
திருள்படப் பொதுளிய பராஅரை மராஅத் 10
துருள்பூந் தண்தார் புரளும் மார்பினன்
மால்வரை நிவந்த சேண்உயர் வெற்பில்
கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடிக்
கணைக்கால் வாங்கிய நுசுப்பின் பணைத்தோள்
கோபத் தன்ன தோயாப் பூந்துகில் 15
பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல்
கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழைச்
சேண்இகந்து விளங்கும் செயிர்தீர் மேனித்
துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதிச் 20
செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு
பைந்தாள் குவளைத் தூஇதழ் கிள்ளித்
தெய்வ உத்தியொடு வலம்புரிவயின் வைத்துத்
திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல்
மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத் 25
துவர முடித்த துகள்அறு முச்சிப்
பெருந்தண் சண்பகம் செரீஇக் கருந்தகட்
டுளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக்
கிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்
பிணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக 30
வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர்
நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ்
நறுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
தேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின்
குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர் 35
வேங்கை நுண்தா தப்பிக் காண்வர
வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக்
கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி
வாழிய பெரிதென் றேத்திப் பலருடன்
சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடிச் 40
சூர்அர மகளிர் ஆடும் சோலை
மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச்
சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்
பார்முதர் பனிக்கடல் கலங்கஉள் புக்குச் 45
சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்
உலறிய கதுப்பின் பிறழ்பல் பேழ்வாய்ச்
சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின்
கழல்கண் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்
பெருமுலை அலைக்கும் காதின் பிணர்மோட் 50
டுருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதி ஆடிய கூருகிர்க் கொடுவிரல்
கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்தொடித் தடக்கையின் ஏந்தி வெருவர
வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா 55
நிணம்தின் வாயள் துணங்கை தூங்க
இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ்இணர்
மாமுதல் தடிந்த மறுஇல் கொற்றத் 60
தெய்யா நல்லிசைச் செவ்வேல் சேஎய்

இரவலன் நிலை

சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம்பிரிந் துறையும்
செவ்வநீ நயந்தனை ஆயின் பலவுடன்
நன்னர் நெஞ்சத் தின்நசை வாய்ப்ப 65
இன்னே பெறுதிநீ முன்னிய வினையே

திருப்பரங்குன்றம்

செருப்புகன் றெடுத்த சேண்உயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த போரரு வாயில்
திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து 70
மாடம்மலி மறுகின் கூடற் குடவயின்
இருஞ்சேற் றகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த
முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கள்கமழ் நெய்தல் ஊதி எற்படக்
கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர் 75
அம்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன் றமர்ந் துறைதலும் உரியன்
அதாஅன்று.

திருச்சீரலைவாய்

வைந்நுதி பொருத வடுஆழ் வரிநுதல்
வாடா மாலை ஒடையொடு துயல்வரப் 80
படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக்
கூற்றத் தன்ன மாற்றரும் மொய்ம்பின்
கால்கிளர்ந் தன்ன வேழம்மேல் கொண்
டைவேறு உருவின் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி 85
மின்உறழ் இமைப்பில் சென்னிப் பொற்ப
நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை
சேண்விளங் கியற்கை வாள்மதி கவைஇ
அகலா மீனின் அவிர்வன இமைப்பத்
தாவில் கொள்கைத் தம்தொழில் முடிமார் 90
மனன்நேர் பெழுதரு வாள்நிற முகனே
மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம் ஒருமுகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்
காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே ஒருமுகம் 95
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வியோர்க் கும்மே ஒருமுகம்
எஞ்சிய பொருள்களை ஏம்உற நாடித்
திங்கள் போலத் திசைவிளக் கும்மே ஒருமுகம்
செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் 100
கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே ஒருமுகம்
குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே ஆங்குஅம்
மூவிரு முகனும் முறைநவின் றொழுகலின்
ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பில் 105
செம்பொறி வாங்கிய மொய்ம்பில் சுடர்விடுபு
வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்
விண்செலல் மரபின் ஐயர்க் கேந்தியது ஒருகை
உக்கம் சேர்த்தியது ஒருகை
நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை 110
அசைஇய தொருகை
அங்குசம் கடாவ ஒருகை இருகை
ஐயிரு வட்டமொடு எஃகுவலம் திரிப்ப
ஒருகை மார்பொடு விளங்க
ஒருகை தாரொடு பொலிய ஒருகை 115
கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப
ஒருகை பாடின் படுமணி இரட்ட
ஒருகை நீல்நிற விசும்பின் மலிதுளி பொழிய
ஒருகை வான்அர மகளிர்க்கு வதுவை சூட்ட
ஆங்கப் 120
பன்னிரு கையும் பாற்பட இயற்றி
அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ்
வயிர்எழுந் திசைப்ப வால்வளை ஞரல
உரம்தலைக் கொண்ட உரும்இடி முரசமொடு
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ 125
விசும் பாறாக விரைசெலல் முன்னி
உலகம் புகழ்ந்த ஒங்குயர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே
அதாஅன்று

திருஆவினன்குடி

சீரை தைஇய உடுக்கையர் சீரொடு 130
வலம்புரி புரையும் வால்நரை முடியினர்
மாசற விளங்கும் உருவினர் மானின்
உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்பெழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல்
பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு 135
செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவனர் கற்றோர்க்குத்
தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு
கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை
யாவதும் அறியா இயல்பினர் மேவரத் 140
துனியில் காட்சி முனிவர் முன்புகப்
புகைமுகந் தன்ன மாசில் தூவுடை
முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச்
செவிநேர்பு வைத்துச்செய்வுறு திவவின்
நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின் 145
மென்மொழி மேவலர் இன்னரம் புளர
நோயின் றியன்ற யாக்கையர் மாவின்
அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்
பொன்னுரை கடுக்குந் திதலையர் இன்னகைப்
பருமம் தாங்கிய பணிந்தேந் தல்குல் 150
மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்கக்
கடுவொ டொடுங்கிய தூம்புடை வாலெயிற்
றழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பாம்புபடப் புடைக்கும் பலவரிக் கொழுஞ்சிறைப்
புள்ளணி நீள்கொடிச் செல்வனும் வெள்ளேறு 155
வலவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்
உமைஅமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்
நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல்
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத் 160
தீரிரண் டேந்திய மருப்பின் எழில்நடைத்
தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்
நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய
உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப் 165
பலர்புகழ் மூவரும் தலைவர்ஆக
ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றித்
தாமரை பயந்த தாவில் ஊழி
நான்முக ஒருவற் சுட்டிக் காண்வரப்
பகலில் தோன்றும் இகலில் காட்சி 170
நால்வே றியற்கைப் பதினொரு மூவரோ
டொன்பதிற் றிரட்டி உயர்நிலை பெறீஇயர்
மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு
வளிகிளர்ந்த தன்ன செலவினர் வளியிடைத்
தீயெழுந் தன்ன திறலினர் தீப்பட 175
உரும்இடித் தன்ன குரலினர் விழுமிய
உறுகுறை மருங்கில்தம் பெறுமுறை கொண்மார்
அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத்
தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள்
ஆவி னன்குடி அசைதலும் உரியன் 180
அதா அன்று

திருஏரகம்

இருமூன் றெய்திய இயல்பினின் வழாஅ
திருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான் கிரட்டி இளமை நல்லியாண்
டாறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை 185
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்
திருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புல உடீஇ
உச்சி கூப்பிய கையினர் தற்புகழ்ந் 190
தாறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுவந்
தேரகத் துறைதலும் உரியன்
அதாஅன்று

குன்றுதோறாடல்

பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன் 195
அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு
வெண்கூ தாளந் தொடுத்த கண்ணியன்
நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பின்
கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர்
நீடமை விளைந்த தேக்கள் தேறல் 200
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர
விரல்உளர்ப் பவிழ்ந்த வேறுபடு நறுங்கான்
குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி
இணைத்த கோதை அணைத்த கூந்தல் 205
முடித்த குல்லை இலையுடை நறும்பூச்
செங்கால் மராஅத்த வால்இணர் இடையிடுபு
சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை
திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ
மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு 210
செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்
செயலைத் தண்தளிர் துயல்வரும் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும்பல் இயத்தன்
தகரன் மஞ்ஞையன் புகரில் சேவல்அம் 215
கொடியன் நெடியன் தொடியணி தோளன்
நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு
குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்
மருங்கில் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்
முழவுறழ் தடக்கையின் இயல ஏந்தி 220
மென்தோள் பல்பிணை தழீஇத் தலைத்தந்து
குன்றுதோ றாடலும் நின்றதன் பண்பே
அதா அன்று

பழமுதிர்சோலை

சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ 225
ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்
வேலன் தைஇய வெறி அயர் களனும்
காடும் காவும் கவின்பெறு துருத்தியும்
யாறுங் குளனும் வேறுபல் வைப்பும் 230
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினும்
மாண்தலைக் கொடியொடு மண்ணி அமைவர
நெய்யோடு ஐயவி அப்பி ஐதுரைத்துக்
குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி 235
முரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇச்
செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி
மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக்
குருதியொ விரைஇய தூவெள் அரிசி
சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇச் 240
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப்
பெருந்தண் கணவீரம் நறுந்தண் மாலை
துணையற அறுத்துத் தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி 245
இமிழிசை அருவியோ டின்னியம் கறங்க
உருவப் பல்பூத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள்
முருகியம் நிறுத்து முரணினர் உட்க
முருகாற்றுப் படுத்த உருகெழு வியல்நகர் 250
ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன்
கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி
ஒடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட
ஆண்டாண் டுறைதலும் அறிந்த வாறே 255
ஆண்டாண் டாயினும் ஆக காண்தக
முந்துநீ கண்டுழி முகனமர்ந் தேத்திக்
கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி
நெடும்பெரும் சிமையத்து நீலப் பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப 260
அறுவர் பயந்த ஆறமர் செல்வ
ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை
மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ
இழையணி சிறப்பிற் பழையோள் குழவி 265
வானோர் வணங்குவில் தானைத் தலைவ
மாலை மார்ப நூலறி புலவ
செருவில் ஒருவ பொருவிறல் மள்ள
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை
மங்கையர் கணவ மைந்தர் ஏறே 270
வேல்கெழு தடக்கைச் சால்பெரும் செல்வ
குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ
பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே
அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக 275
நசையுநர்க் கார்த்தும் இசைபேர் ஆள
அலந்தோர்க் களிக்கும் பொலம்பூண் சேஎய்
மண்டமர் கடந்தநின் வென்ற டகலத்துப்
பரிசிலர்த் தாங்கும் உருகெஎழு நெடுவேள்
பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள் 280
சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி
போர்மிகு பொருந குரிசில் எனப்பல
யான்அறி அளவையின் ஏத்தி ஆனாது
நின்அளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்
நின்னடி உள்ளி வந்தனன் நின்னொடு 285
புரையுநர் இல்லாப் புலமை யோய்எனக்
குறித்தது மொழியா அளவையில் குறித்துடன்
வேறுபல் உருவில் குறும்பல் கூளியர்
சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி
அளியன் தானே முதுவாய் இரவலன் 290
வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்தென
இனியவும் நல்லவும் நனிபல ஏத்தித்
தெய்வம் சான்ற திறல்விளங் குருவின்
வான்தோய் நிவப்பின் தான்வந் தெய்தி
அணங்குசால் உயர்நிலை தழீஇப் பண்டைத்தன் 295
மணங்கமழ் தெய்வத் திளநலம் காட்டி
அஞ்சல் ஓம்புமதி அறிவல்நின் வரவென
அன்புடை நன்மொழி அளைஇ விளிவுஇன்
றிருள்நிற முந்நீர் வளைஇய உலகத்
தொருநீ யாகித் தோன்ற விழுமிய 300
பெறலரும் பரிசில் நல்கும்மதி பலவுடன்
வேறுபல் துகிலின் நுடங்கி அகில்சுமந்
தாரம் முழுமுதல் உருட்டி வேரல்
பூவுடை அலங்குசினை புலம்ப வேர்கீண்டு
விண்பொரு நெடுவரைப் பரிதியில் தொடுத்த 305
தண்கமழ் அலர்இறால் சிதைய நன்பல
ஆசினி முதுசுளை கலாவ மீமிசை
நாக நறுமலர் உதிர ஊகமொடு
மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்
இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று 310
முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று
நன்பொன் மணிநிறம் கிளரப் பொன்கொழியா
வாழை முழுமுதல் துமியத் தாழை
இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக்
கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற 315
மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக்
கோழி வயப்பெடை இரியக் கேழலொ
டிரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன
குரூஉமயிர் யாக்கைக் குடா அடி உளியம்
பெருங்கல் விடர்அளைச் செறியக் கருங்கோட் 320
டாமா நல்ஏறு சிலைப்பச் சேண்நின்
றிழுமென இழிதரும் அருவிப்
பழமுதிர் சோலை மலைகிழ வோனே. 323

பொழிப்புரை :

குறிப்புரை :

அடி.1-
உலகம் - உயிர்த் தொகுதி.
`உவப்ப ஏர்பு வலன் திரிதரு` - என இயைக்க. ஏற்பு - எழுந்து; புறப்பட்டு. `வலன் ஆக` என ஆக்கம் வருவிக்க.
வலமாதல் மேரு மலைக்கு ஆதலின் அதனையும் சொல்லெச்சமாக வருவிக்க.
அடி. 2-
`திரிதரு ஞாயிறு`, பலர்புகழ் ஞாயிறு எனத் தனித்தனி இயைக்க. `பலரும்` என உம்மை விரித்து, `எல்லாச் சமயத்தாரும்` என்பர் நச்சினார்க்கினியர். `ஞாயிற்றைக் கடலிலே கண்டாங்கு`,
அடி. 3-
இமைக்கும் ஒளி என்க. கடல், இங்கே கீழ்க்கடல். எனவே, ஞாயிறு இள ஞாயிறாயிற்று. இமைக்கும் ஒளி - இமைத்துப் பார்க்கப்படும் ஒளி. இமையாது பார்க்கும் சிற்றொளியன்று ஆதலின், இமைத்துப் பார்த்தல் வேண்டுவதாயிற்று.
ஓவு அறச் சேண் விளங்கு அவிர் ஒளி - எவ்விடமும் எஞ்சாத படி, நெடுந்தொலைவான பரப்பு இடத்தும் சென்று விட்டு விட்டு விளங்குகின்ற ஒளி. என்றது முருகனது திருமேனி ஒளியை. `ஒவுஅற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி` ஞாயிறாகிய உவமைக்கும் முருகனாகிய பொருளுக்கும் உரிய பொதுத் தன்மை. `கடல்` என்னும் உவமை மயில் ஊர்தியைக் கருதிக் கூறினமையால் அதன்மேல் இருந்த திருமேனியின் ஒளி` என உரைக்க. அங்ஙனம் உரையாக்கால், வாளா `கண்டாங்கு` என்னாது, `கடற்கண் டாங்கு` என்றதனால் பயன் இன்றாம்.
அடி. 4-
உறுநர் - அடைக்கலமாக அடைந்தோரையெல்லாம். தாங்கிய நோன்தாள் - துன்பக் குழியில் வீழாது தாங்கின வலிய திருவடி. மதன் உடை நோன்தாள் - அறியாமையை உடைத்தெறிகின்ற வலிய திருவடி.
அடி. 5-
செறுநர்த் தேய்த்த கை - அழித்தற்கு உரியவரை அழித்த கை. செல் உறழ்கை - (கைம்மாறு கருதாது வழங்குதலில்) மேகத்தை வென்ற கை. தடக்கை - (முழந்தாள் அளவும்) நீண்ட கை.
அடி. 6-
மறு இல் கற்பின் வாள் நுதல் கணவன் - (பின்முறை வதுவைப் பெருங்குலக் குழத்தியாராகிய வள்ளி நாயகியார்மேல் பொறாமை கொள்ளுதலாகிய) குற்றம் சிறிதும் இல்லாத கற்பினையும், (பொறாமையில்லாமையால் வெகுண்டு வேர்த்தல் இல்லாது எப்பொழுதும் மகிழ்ந்தே பார்த்தலால்) ஒளி மழுங்குதல் இல்லாத நெற்றியினையும் உடைய தெய்வயானையார்க்குக் கணவன்.
(`மறுஇல்` என்றதனானே, வள்ளி நாயகியார்க்குக் கணவன்` என்பது பெற வைத்தமையால் முருகன் தனது இச்சா சத்தி கிரியா சத்திகளால் உலகை ஐந்தொழிற்படுத்தருளுதல் குறிப்பால் உணர்த்தப் பட்டதாம்.)
அடி. 7 -
கார் கோள் முகந்த கமஞ்சூல் மா மழை (9 - தலைப் பெயல் தலைஇய) கடல் நீரை முகந்து நிரம்பிய கருப்பத்தைக் கொண்ட கரிய மேகங்கள் (முதல் மழையைப் பொழிந்து விட்ட).
அடி. 8 -
வாள் போழ் விசும்பு - ஞாயிறு, திங்கள் முதலியவற்றின் ஒளிகள் இருளைக் கிழிக்கின்ற வானம்.
அடி. 8, 9 -
விசும்பில் வள் உறை சிதறி தலைப்பெயல் தலைஇய - வானத்தின்கண் வளமான துளிகளைச் சிதறி, முதல் மழை பொழிந்து விட்ட.
அடி. 9 -
தலைப் பெயல் தலைஇய கானம் - முதல் மழை பொழிந்து விட்டகாடு. தண் நறுங் கானம் - குளிர்ந்த நறுமணம் கமழ்கின்ற காடு.
அடி. 9, 10 -
கானத்து இருள்படப் பொதுளிய மரா - காட்டிடத்து இருள் உண்டாகும்படி தழைத்த மரா மரம்.
அடி. 10, 11-
மராஅத்து பூந்தண்தார் புரளும் மார்பினன் - செங்கடப்ப மரத்தினது பூவால் ஆகிய, குளிர்ந்த தார் புரளுகின்ற மார்பினை உடையவன். பராரை - பருத்த அடிமரம், உருள் - தேரினது உருளைப் போலும் (தார்.)
அடி. 12 -
மால் வரை நிவந்த வெற்பில் - பெரிய மூங்கில் வளர்ந்த மலையில் (உள்ள 41 சோலை), சேண் உயர் - வானுலகளவும் உயர்ந்த (மலை).
அடி. 13 -
கிண்கிணி கவைஇய சீறடி - சிறு சதங்கை சூழ அணிந்த சிறிய பாதங்களை உடைய (41- மகளிர்) ஒள் - ஒளி பொருந்திய (பாதம்) செ- செம்மை நிறத்தவனாகிய ( பாதம்).
அடி. 14-
கணைக்கால் - திரண்ட கால்களையுடைய (41- மகளிர்). வாங்கிய நுசுப்பின் - வளைந்து துவளும் இடையினை யுடைய (41-மகளிர்). பணைத் தோள் - பருத்த தோளினையுடைய (41- மகளிர்). `மூங்கில்போலும் தோள்` என்றும் ஆம்.
அடி. 15-
கோபத்து அன்ன துகில் - `இந்திர கோபம்` என்னும் பூச்சியினது நிறத்தோடு ஒத்த சிவந்த நிறத்தையுடைய உயர்ந்த புடைவையை உடைய (41-மகளிர்). தோயா (த் துகில்) - செயற்கையாக ஏற்றப்படாது இயல்பாகவே சிவந்த (துகில்) பூ (பூக்கள் பொறிக்கப்பட்ட (துகில்)
அடி. 16
பல் காசு நிரைத்த சில்காழ் அல்குல் - பல மணிகளைக் கோத்த வடம் ஏழால் அமைந்த `மேகலை` என்னும் அணிகலனை யுடைய பிருட்டங்களையுடைய (41-மகளிர்). முன்னழகிற்கு வேறுபல இடப்படும் ஆகலின் மேகலை பின் அழகிற்கே இடப்படுவது ஆகும். இம் மணிவடக் கோப்பு வடத்தின் எண்ணிக்கை பற்றி வேறு வேறு பெயரால் சொல்லப்படுகின்றன. அதனை,
எண்கோவை காஞ்சி; எழுகோவை மேகலை;
பண்கொள் கலாபம் பதினாறு - கண்கொள்
பருமம் பதினெட்டு; முப்பத் திரண்டு
விரிசிகை என்றுணரற் பாற்று.
என்னும் வெண்பாவால் விளக்கினார் நச்சினார்க்கினியர். இப் பொருள் சேந்தன் திவாகரம், பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு களில் சொல்லப்பட்டது.
அடி. 17-
கை புனைந்து இயற்றாக் கவின் பெறு வனப்பின் - சிலர் தம் கைவன்மையால் புனைந்து தோற்றுவியாத அழகாக, இயல்பாற் பெற்ற அழகினையுடைய (41-மகளிர்). `தெய்வ மகளிரது அழகு இயற்கையானது` என்றபடி. `கவினாக` என ஆக்கம் வருவிக்க.
அடி. 18-
நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை - நாவலோடு பொருந்தி பொன்னால் (நாவல் - சம்பு. அதனைப் பொருந்திய பெயர் சாம்பூநதம், `பொன் நால்வகைத்து` என வகுத்து, `அவற்றுள் இப்பொன் சிறந்தது` என்பர். `பூவிற்குத் தாமரையே; பொன்னுக்குச் சாம்புநதம்* என்றதும் காண்க.) செய்யப்பட்டன போன்று மிக்கு விளங்குகின்ற அணிகலன்களையுடைய (41- மகளிர்)
அடி. 19-
சேண் இகந்து விளங்கும் மேனி - நெடுந் தொலைவு கடந்தும் விளங்குகின்ற நிறத்தையுடைய (41-மகளிர்) செயிர்தீர் - குற்றம் அற்ற (மறு வற்ற மேனி.)
அடி. 20-
துணையோர் ஆய்ந்த ஓதி - ஆயத்தார் உற்று நோக்கி மெச்சும் தலை மயிரில். இணை - எல்லாம் ஒன்று போல முனை ஒத்துக் கூடிய (தலைமயிர்). ஈர் - இயற்கையில் நெய்ப்பசையையுடைய (தலைமயிர்.)
அடி. 21-
செங்கால் வெட்சிச் சிறு இதழிடை இடுபு - சிவந்த காம்பையுடைய வெட்சிப் பூக்களின் இடையே இட்டு. (சீறிதழ் - ஆகுபெயர்.)
அடி. 22-
பைந் தாள் குவளை தூ இதழ் கிள்ளி - பசுமையான காம்பை உடைய குவளைப் பூவினது இதழ்களைத் தனித் தனியாகக் கிள்ளி எடுத்து.
அடி. 23
தெய்வ உத்தியொடு வலம்புரி வயின் வைத்து - திருமகள் வடிவாகச் செய்யப்பட்ட `உத்தி` என்னும் தலைக்கோலத் துடனே, வலம் புரிச் சங்கு வடிவாகச் செய்யப்பட்ட தலைக்கோலத்தை யும் வைத்தற்குரிய இடத்திலே வைத்து.
அடி. 24, 25
திலகம் தையஇய பகுவாய் மகரம் தாழ மண்ணுறுத்து - திலகம் இட்டு அழகுபடுத்தப்பட்ட நெற்றியிலே, பிளந்த வாயையுடைய சுறாமீன் வடிவாகச் செய்யப்பட்ட தலைக் கோலத்தைத் தொங்கவிட்டு அழகுபடுத்தி. தேம் கமழ் - மணம் கமழ்கின்ற (திருநுதல்)
அடி. 26-
துவர முடித்த முச்சி - முற்றப் பின்னிப் பின் முடியாக முடித் கொண்டையில். துகள் அறும் - குற்றம் அற்ற (முச்சி)
அடி. 27-
சண்பகம் செரீஇ - சண்பகப் பூவைச் செருகி. பெருந்தண் - பெரிய, குளிர்ந்த (சண்பகம்)
அடி. 27, 28-
மருதின் பூ இணர் அட்டி - மருத மரத்தினது பூக்கொத்தினை (ச் சண்பகத்தின் மேலே தோன்ற) வைத்து. கருந் தகட்டு உளைப்பூ - புறத்தில் கரிய புற இதழினையும், அகத்தில் கேசரத்தினையும் உடைய பூக்களை உடைய (மருது). ஒள் - ஒளி பொருந்திய (இணர்).
அடி. 29, 30-
கிளைக் கவின்று எழுதரு செவ்வரும்பு இணைப் புறு பிணையல் வளைஇ - காம்பினின்றும் அழகாய் எழுகின்ற (அம் மருத) சிவந்த அரும்புகளை இணைத்துக் கட்டிய மாலையை (க் கொண்டையைச் சூழ) வளைத்து. கீழ்நீர் - நீர்க்கீழ் (இட்டுவைத்து எடுத்த அரும்பு. பறித்த அரும்பை நீரில் இட்டு வைப்பின் சிவப்புப் பின்னும் மிக அழகு மிகும்.)
அடி. 30, 31, 32-
வண் காது துணைத் தக நிறைந்த பிண்டித் தளிர் ஆகம் திளைப்ப - வளமான காதுகளில் இரண்டும் ஒருபடியாய் ஒத்துத் தோன்றும்படி வைக்கப்பட்டு நிறைந்த அந்த அசோகந்தளிரே மார்பிலும் அணிகலங்களுக்கு இடையே பொருந்தி அசையச் சேர்த்து. (`சேர்த்து` என ஒரு சொல் வருவிக்க. `அந்த` என்றது சாதி பற்றி.)
அடி. 32, 33-
திண் காழ் நறுங் குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை - திண்ணிய, வயிரத்தையுடைய, நறிய சந்தனக் கட்டையை உரைத்ததனால் உண்டாகிய அழகிய நிறத்தையுடைய சாந்தினை.
அடி. 34-
தேம் கமழ் மருது இணர் கடுப்ப - மணம் கமழ்கின்ற மருதம் பூவின் கொத்துப்போலத் தோன்றும்படி (கொட்டி).
அடி. 34, 35-
கோங்கின் குவி முகிழ் - கோங்க மரத்தினது குவித்த அரும்புபோலும் (முலை) இள - இளமையான (முலை).
அடி. 35-
முலைக் கொட்டி - கொங்கைகளின்மேல் அள்ளியிட்டு.
அடி. 35, 36-
வேங்கை விரி மலர் நுண் தாது அப்பி - (சந்தனச் சாந்து புலர்வதற்கு அதன்மேலே) வேங்கை மரத்தில் மலர்ந்த மலரினது நுண்ணிய மகரந்தத்தை அப்பி.
அடி. 37-
வெள்ளில் குறு முறி கிள்ளுபு காண் வரத் தெறியா - விளா மரத்தினது குறுந்தளிரைக் கிள்ளி அழகு உண்டாக (விளை யாட்டாக) ஒருவர்மேல் ஒருவர் வீசி.
`வெற்பின்கண் உள்ள சோலை` எனவும், `சூர் அர மகளிர் ஆடும் சோலை` எனவும் இயைத்து, `சோலையையுடைய அடுக்கத்துப் பூத்த காந்தள் கண்ணி மிலைந்த சென்னியன்` என முடிக்க.
`13, சீறடியையும், 14. கணைக் காலையும் நுசுப்பையும், பணைத் தோளையும், 15. துகிலையும், 16. அல்குலையும், 17. வனப்பையும், 18. இழையையும், 19. மேனியையும் உடைய, 41. சூர் அர மகளிர் 39. பலர் உடனாகி, 20. ஓதியில், 21. வெட்சி இதழின் இடையில், 22. குவளை இதழ்களை இட்டு, 23. (தலையில்)தெய்வ உத்தியொடு வலம்புரி வைத்து, 25. நுதலில் மகரம் தாழ மண்ணுறுத்து, 26. முச்சியில் 27. சண்பகம் செரீஇ, 28. மருதின் இணர் அட்டி, 30. பிணையல் வளைஇ, 32. திளைப்பச் செய்து, 34. தேய்வை 35. முலைக் கொட்டி அப்பி, 37. தெறியா, 39. ஏத்தி, 40. ஆடும் சோலை` என்க.
அடி. 38
கோழி ஓங்கிய (கொடி) - கோழியோடு உயர்ந்த தோன்றும் (கொடி; முருகன் கொடி,) அட்டு வெல் விறல் (கொடி) - கரவாது எதிர் நின்று பொருது வென்று எடுத்த, வெற்றியைக் குறிக்கும் (கொடி,)
அடி. 40-
சீர் திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடி (ஆடும் சோலை)- அழகு விளங்குகின்ற மலையகத்து ஒலியெழும்படி பாடி (விளை யாடும் சோலை). `அம்மகளிரது உருவம் ஈண்டுள்ளார்க்குக் கட்புல னாகாவிடினும் அவர்கள் பாடும் பாட்டின் ஒலி செவிப் புலன் ஆகும்` என்பது கருத்து.
அடி. 41, -
சூர் அர மகளிர் பலர் உடன் ஆடும் சோலை (அடுக்கம்) - மக்களாய் உள்ளார்க்கு அச்சம் தோன்றும் தெய்வ மகளிர் பலர் ஒன்று சேர்ந்து விளையாடுகின்ற சோலையினையுடைய (சாரல்)
அடி. 42-
மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து(க் காந்தட் பூ) - மிக உயர்ந்திருத்தலின் மரம் ஏறுதலில் வல்ல குரங்குகளும் உச்சி வரையில் ஏறி அறியாத மரங்கள் நிறைந்த சாரலின்கண் (பூத்த காந்தட் பூ)
அடி. 43, 44-
காந்தட் பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன் - காந்தட் பூவால் ஆகிய பெரிய, குளிர்ந்த முடி மாலையைச் சூடிய தலையை உடையவன். சுடர்க் காந்தட் பூ - நெருப்புப் போலும் செங்காந்தட் பூ. சுரும்பும் மூசாக் காந்தட் பூ - நெருப்புப் போறலின் வண்டும் மொய்க்காத காந்தட் பூ. உம்மை, `பிற குற்றங்கள் அணுகாமையே யன்றி` என இறந்தது தழுவிற்று. இனி, `பிற குற்றங்களை விலக்குதல் கூடுமாயினும் வண்டு மூசுதலை விலக்குதல் அரிதாகலின் அக்குற்றமும் இல்லது` எனச் சிறப்பும்மையாகக் கொள்ளுதலும் ஆம்.
அடி. 45, 46-
கடல் கலங்க உள்புக்குத் தடிந்த வேல் - கடல் கலங்கும்படி அதனுள்ளே புகுந்து அழித்த வேற்படையாகிய (61 செவ் வேல்) சூரபன்மா கடலுள் ஒளித்தானாகலின் வேல் கடலுள்ளே புகுந்து அவனை அழித்தது.
அடி. 46-
சூர் முதல் - சூரபன்மாவாகிய தலைவனை.
அடி. 47-
உலறிய கதுப்பின் - எண்ணெய் இன்றிக் காய்ந்த தலைமயிரினையும். பிறழ் பல் பேழ்வாய் - ஒழுங்கில்லாது பல வாறாகப் பிறழ்ந்து காணப்படும் பற்களையுடைய பெரிய வாயையும்.
அடி. 48-
சுழல் விழிப்பசுங்கண் - (எத்திசையையும் வெகுண்டு நோக்குதலால்) சுழலுகின்ற விழியினையுடைய பசிய கண்ணினையும் (`கண்` என்னும் உறுப்பில் உருவத்தைக் கவர்வதே `விழி` எனப் படும்). சூர்த்த நோக்கின் - (அக்கண்களால்) யாவரையும் அச்சுறுத்து கின்ற பார்வையினையும்,
அடி. 49,50-
கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்கப் பெரு முலை அலைக்கும் காதின் - பிதுங்கிய கண்களையுடைய கூகைகளை (கோட்டான்களை) முடிந்து விட்டுத் தூங்குதலால் பெரிய கொங்கைகளை வருந்தப் பண்ணுகின்ற காதினையும், பிணர் மோட்டு- `சொர சொர` என்னும் உடம்பினையும்,
அடி. 51-
உரு கெழு செலவின் - கண்டவர்கள் அஞ்சுதல் பொருந்திய நடையினையும் உடைய (51- பேய்மகள்.) அஞ்சு வரு - கண்டவர்க்கு அஞ்சுதல் வருதற்குக் காரணமான (பேய் மகள்)
அடி. 51-
பேய் மகள்.
அடி.52, 53-
குருதி ஆடிய கூர் உகிர்க்கொடு விரல் கண் தொட்டு உண்ட கழி முடை - இரத்தத்திலே தோய்ந்த, கூர்மையான நகங்களையுடைய வளைந்த விரலாலே கண்களை அவள் தோண்டி உண்ட, மிக்க முடை நாற்றத்தையுடைய (கருந்தலை) `3. சேண் விளங்கு அவிர் ஒளியையும், 4. நோன் தாளையும், 5. தடக்கையையும் உடைய கணவனும், 10,11. மராத்துப் பூந்தளிர்தார் புரளும் மார்பினனும், 12. சேண் உயர் வெற்பில் உள்ள, 41. அர மகளிர் ஆடும் சோலையை உடைய 42. அடுக்கத்து 43. காந்தள் 44. கண்ணி மிலைந்த சென்னியனும், 46. சூர் முதல் தடிந்த நெடிய வேலாகிய, 51. பேய் மகள் 56. துணங்கை தூங்கும்படி 59. அவுணர் வலம் அடங்க 60. மா முதல் தடிந்த 61. நல் இசையினையும் உடையவனும் ஆகிய சேய்` என இயைத்துக் கொள்க.
`3. சேண் விளங்கு அவிர் ஒளியையும், 4. நோன் தாளையும், 5. தடக்கையையும் உடைய கணவனும், 10,11. மராத்துப் பூந்தளிர்தார் புரளும் மார்பினனும், 12. சேண் உயர் வெற்பில் உள்ள, 41. அர மகளிர் ஆடும் சோலையை உடைய 42. அடுக்கத்து 43. காந்தள் 44. கண்ணி மிலைந்த சென்னியனும், 46. சூர் முதல் தடிந்த நெடிய வேலாகிய, 51. பேய் மகள் 56. துணங்கை தூங்கும்படி 59. அவுணர் வலம் அடங்க 60. மா முதல் தடிந்த 61. நல் இசையினையும் உடையவனும் ஆகிய சேய்` என இயைத்துக் கொள்க.
அடி. 53-
கருந்தலை.
அடி. 54-
கையின்ஏந்தி,
அடி. 55-
தோள் பெயரா (பெயர்த்து)
அடி. 56-
துணங்கை தூங்க - `துணங்கை` என்னும் கூத்தினை ஆடும்படி (60. மா முதல் தடிந்த) நிணந்தின் வாயள் - (பிணங்களின்) நிணங்களை எடுத்துத் தின்கின்ற வாயினை உடையளாய் (தூங்க) வாயார், முற்றெச்சம்.
அடி. 57, 58, 59-
இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை அறுவேறு வகையின் அவுணர் அஞ்சு வர மண்டி - இருவகையை பெரிய உருவத்தினாலே அத்தன்மையைக் குறிக்கும் ஒரு பெயரை உடைய அவுணர்களது உடம்புகள் அற்று வேறாரும்படி அவர்கட்கு அஞ்சுதல் வர நெருங்கிச் சென்று.
அடி. 59-
நல் வலம் அடங்க - அவர்களது மிக்க வலிமை அற்றுப் போம்படி.
அடி. 59-
-
கவிழ் இணர் - கீழ் நோக்கிய பூக்களின் கொத்துகளை யுடைய (60 - மாமரம்.)
சூரபதுமனுடைய படைகளில் குதிரை முகத்தை உடைய அசுரர்கள் சிறப்புப் பெற்று இருந்தனர்` என்பதும், `அசுரர் அனை வர்க்கும் பாதுகாவலாகத் தென்கடலில் மாமரம் ஒன்று இருந்தது` என்பதும் பழமையான சிவபுராண வரலாறுகள். இவ் அசுரர்களது உடம்பே இங்கு `இருவே றுருவின் ஒருபேர் யாக்கை` எனக் குறிக்கப்பட்டது. இவை கந்த புராணத்தில் காணப்படவில்லை. `குதிரை முகம் உடைய அசுரர்கள்` என்றதை ஒட்டி, `அவ்வாறான உடல் அமைப்பை யுடைய ஒரு பூதம் நக்கீரரை மலைக்குகையில் அடைத்தபொழுது அதனினின்றும்` விடுபட வேண்டியே அவர் திருமுருகாற்றுப் படையைப் பாடினார், என்ற வரலாறு சீகாளத்திப் புராணத்தில் கூறப் பட்டது. அப்பூதத்தின் பெயர் `கற்கி முகாசுரன்` என்பதாகச் சொல்வது உண்டு, கற்கி - குதிரை.
அடி. 60-
மறு இல் கொற்றத்து - குற்றம் இல்லாத வெற்றியையும். (`கொடியோரை அழித்தல் குற்றம் அன்று` என்பது குறித்தபடி.)
அடி. 60, 61-
மா முதல் தடிந்த செவ்வேல் - மா மரத்தை அடியோடு அழித்த சிவந்த வேலையும்.
அடி. 61-
எய்யா நல் இசைசேய் -ஒருவராலும் அளந்தறியப் படாத நல்ல புகழையும் உடைய சேயோன். (முருகன்.)
அடி. 61,62, 64-
சேய் சேவடி படரும் உள்ளமொடு. செலவ - முருகனையே எப்பொழுதும் நினைத்தலால் தலைமை பெற்ற உள்ளத் தோடே செல்லும் செலவை உடைய புலவனே. செம்மல் - தலைமை பெற்ற (உள்ளம்)
அடி. 63, 64-
நலம் புரி கொள்கைப் புலம் பிரிந்து உறையும் - நன்மையை விரும்பும் கோட்பாட்டினால், (அலைவைத் தரும்) புலன் இன்பங்களினின்றும் நீங்கி, (நிலைப்பைத் தரும் இன்பத்திலே) தங்குதலைப் பயனாக உடைய (64 செலவ)
அடி. 64-
நீ நயந்தனையாயின் - அங்ஙனம் உறைதலாகிய பயனை நீ விரும்பியே விட்டாயாயின். பலவுடன் - அப்பயனே யன்றி ஏனைப் பல பயன்களுடனும். (`பலவற்றுடன்` - என்பதில் சாரியை தொகுத்தலாயிற்று.)
அடி. 65, 66-
நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப நீ முன்னிய வினை இன்னே பெறுதி - நன்றான உனது நெஞ்சத்திலே எழுந்த இனிய விருப்பம் நிறைவுறுதற்பொருட்டு நீ கருதி மேற்கொண்ட வினையாகிய செலவின் பயனை இப்பொழுதே பெறுவாய். (அஃது எங்ஙனம் எனில், முருகனை அவன் இருக்கும் இடத்தில் சென்று பணிதலால், பணிதற்கு அவன் இருக்கும் இடம் எது எனின், ஏனையோர் போல அவன் இருக்குமிடம் ஒன்றன்று; பல. அவை யாவையெனின், ) `வினை` என்றது செலவை. அஃது ஆகுபெயராய் அதன் பயனைக் குறித்து நின்றது.
அடி. 67-
செரு புகன்று எடுத்த சேண் உயர் நெடுங் கொடி - (மாற்றரசர் வந்து புரியும்) போரினை ஏற்க விரும்பி, (அதற்கு அடையாளமாக) உயரத் தூக்கிய, வானளாவ உயர்ந்து பறக்கும். நீண்ட கொடியின் பக்கத்திலே கட்டப்பட்ட. (`கொடி` என்பது 68 `பாவை` என்பதனுடன் ஏழாம் வேற்றுமைத் தொகைபடத் தொக்கது)
அடி. 68-
வரிப் புனை பந்தொடு பாவை தூங்க - நூலால் வரிந்து செய்த பந்தையுடைய பாவை (அறுப்பார் இன்மையால்) தூங்கியே கிடக்க. (மாற்று வேந்தரை மகளிராக வைத்து இகழ்தலைக் காட்டும் அடையாளமாகக் கொடியின் பக்கத்தில் பந்தாடுவாளைப் போலப் புனையப்பட்ட பாவை ஒன்று தூங்க விடப்படும். மாற்று வேந்தர் வந்து முற்றுகையிடக் கருதினாராயின் அந்தப் பாவையை முதலிலே அறுத்து வீழ்த்துதல் வேண்டும்.) அங்ஙனம் ஒருவரும் வந்து அதனை அறுத்து வீழ்த்தாமையால் அது தூங்கிக் கொண்டேயிருக்கின்றது. ஆகவே,
அடி. 69-
பொருநர் தேய்த்த போர் அரு வாயில் - போர் செய் பவரை இல்லையாக்கிய காரணத்தால் போர் இல்லாத வாயிலையும்.
அடி. 70-
திரு வீற்றிருந்த - திருமகள் சிறப்புடன் இருக்கப் பெற்றதும். தீது தீர் நியமத்து - குற்றம் அற்ற கடைத் தெருக்களையும்.
அடி. 70-
இரு சேற்று அகல் வயல் - கரிய சேற்றினையுடைய அகன்ற வயல்களில். விரிந்து வாய் அவிழ்ந்த - முறுக்கு நீங்கி மலர்ந்து, பின்பு வாய் நன்கு மலர்ந்த.
அடி. 71, 72-
மாடம் மலி மறுகின் மேல் மாடங்களோடு கூடின மாளிகைகள் நிறைந்த மற்றைத் தெருக்களையும் உடைய. கூடல் குடவாயின் - மதுரை மாநகரத்திற்கு மேற்கில் உள்ள (77 குன்று)
அடி. 71, -
கூடற் குடவயின் குன்று அமர்ந்து உறைதலும் உரியன் - மதுரை நகரத்திற்கு மேற்கில் உள்ள திருப்பரங்குன்றத்தில் விரும்பி உறைதலையும் அவன் தனக்கு உரிமையாக உடையன். (எனவே, `அங்குச் சென்றாலும் அவனைக் காணலாம்` என்பதாம்.
அடி. 73-
தாமரைத் துஞ்சி - தாமரை மலர்களில் (பகலில் வீழ்ந்து, மாலையில்) அவை கூம்பிவிட்டமையால் இரவெல்லாம் அவற்றினுள்ளே) உறங்கிக் கிடந்த. முள் தாள் - முள்ளையுடைய தண்டினை உடைய (தாமரை)
அடி. 73, 74-
வைகறை நெய்தல் ஊதி - விடியற் காலையில் (பறந்து சென்று) நெய்தற் பூவில் வீழ்ந்து ஊதி. கள் கமழ் - தேன் மணக் கின்ற (நெய்தல்). எல் பட - ஞாயிறு தோன்றியவுடன்.
அடி. 75, 76, 77-
சுனை மலர் ஒலிக்கும் குன்று - சுனையின் கண் மலர்ந்த மலர்களிலே வீழ்ந்து ஆரவாரிக்கின்ற திருப்பரங்குன்றம். கண்போல் மலர்ந்த - சுனைகளினுடைய கண்களைப் போல விளங்க மலர்ந்த (மலர் எனவே, `இவை நீலப்பூ` என்பது பெறப்படும்.) காமர்- (காண்பாரது) விருப்பம் பொருந்துகின்ற (மலர்). (`காமம் மரு` என்பது `காமர்` என மருவிற்று.
அடி. 76-
அம் சிறை வண்டின் அரிக்கணம் - அழகிய சிறகினை யுடைய வண்டுகளாகிய இசைபாடும் கூட்டம்.
அடி. 78-
அதாஅன்று - அதுவன்றியும் இனி `அம்முருகன் தனது ஆறு முகங்களும், பன்னிரண்டு தோள்களும், `கைகளும் விளங்க யானைமேல் ஏறி, வானில் பல வாச்சியங்கள் ஒலிக்கத் திருச்சீரலைவாயை நோக்கி வான் வழியாக செல்லலும் உரியன்` என்பது கூறப்படுகின்றது.
அடி. 79-
வை நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் - கூரிய நுனியை உடைய அங்குசம் குத்தின வடு சூழ்ந்து காணப்படுகின்ற, பல புள்ளிகளையுடைய நெற்றியில். அடி. 80-
வாடா மாலை ஓடையொடு துயல்வர - வாடுதல் இல்லாத பூவாகிய பொன்னால் ஆகிய அரிமாலை நெற்றிப் பட்டத்துடன் இருந்து அசைய.
அடி. 81-
படு மணி இரட்டும் மருங்கின் - இரு பக்கமும் பொருந்தின மணிகள் மாறி மாறி ஒலிக்கின்ற பக்கங்களையும். கடு நடை - வேகமாக நடக்கும் நடையினையும்.
அடி. 82-
கூற்றத்து அன்ன மாற்றரு மொய்ம்பின் வேழம் மேல் கொண்டு - கூற்றுவனைப் போலத் தடுக்க இயலாத வலிமையினையும் உடைய யானையை ஏறி.
அடி. 83-
கால் கிளர்ந்து அன்ன - (ஓடும் வேகத்தால்) காற்று எழுந்தாற் போலக் காணப்படுகின்ற (வேழம்).
அடி. 84, 85-
ஐ வேறு உருவின் செய்வினை முற்றிய முடியொடு விளங்கிய முரண் மிகு திருமணி - ஐந்து வகையான வேறுபட்ட உருவம் உடையனவாகச் செய்யப்பட்ட செயற்பாடுகளெல்லாம் முற்ற முடிந்த முடிகளோடு கூடி விளங்குகின்ற, மாறுபாடு மிக்க நிறங்களை யுடைய மணிகள். (ஐவேறு உரு - தாமம், முகுடம், பதுமம், கிம்புரி, கோடகம் என்பன.)
அடி. 86-
மின் உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப- மின்ன லொடு மாறுபட்டு விளங்கும் விளக்கத்துடன் தலையிலே பொலிவு பெற.
அடி. 87-
நகை தாழ்பு துயல் வரூஉம் வகை அமை பொலம் குழை - ஒளியோடு தாழ்ந்து அசைதல் வரும் வகையாக அமைந்த, பொன்னால் இயன்ற மகரக் குழைகள்.
அடி. 88, 89-
சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவைஇ அகலா மீனின் அவிர்வன இமைப்ப - நெடுந் தொலைவு சென்று விளங்கும் இயல்பினையுடைய ஒளியையுடைய திங்களைச் சூழ்ந்து நீங்காதுள்ள மீன்களைப் போல விட்டு விட்டு விளங்குவனவாய் ஒளியை வீச.
அடி. 90, 91-
தா இல் கொள்கைத் தம் தொழில் முடிமார் மனம் நேர்பு எழுதரு வாள் நிற முகன் - குற்றம் இல்லாத கொள்கையையுடைய தங்கள் தொழிலை முடிப்பவரது மனத்தை ஏற்று அவண் தோன்றுகின்ற ஒளிவீசும் நிறத்தையுடைய முகங்களில் (குற்றம் இல்லாத கொள்கையையுடைய தொழிலாவது தவம். `தவத்தோர் மனத்தை இருத்தற் குரிய இடமாக ஏற்று, அங்கு விளங்கும் முகங்கள்` - என்றபடி. இஃது ஆறு முகங்களையும் பொதுவாகச் சுட்டிச் சொல்லியது).
அடி. 92,93-
ஒரு முகம் மா ஞாலம் இருள் மறு இன்றி விளங்கப் பல் கதிர் விரிந்தன்று - ஒரு முகம் - பெரிய உலகம் இருளாகிய குற்றம் தீர்ந்து ஒளியைப் பெறும்படி பல கதிர்களைப் பரப்புதலை உடைத்தாயிற்று. (`எல்லாச் சுடர்களின் ஒளிகளும் முருகன் அருளிய ஒளியை யுடையனவே` என்றபடி.)
அடி. 93, 94, 95-
ஒரு முகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகிக் காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே - மற்றொரு முகம், அன்பர்கள் துதிக்க, அத்துதியை விரும்பி ஏற்று அவர்க்கு ஏற்ப இயங்குதலை உடைத்தாய், அவர்கள் விரும்பிய பொருளை முடிப்பனவாகிய மெய்ம்மொழியை வழங்கியே இருந்தது. (வரம் - விரும்பிய பொருள். அஃது ஆகுபெயராய், அதனை முடிப்பதாகிய சொல்லைக் குறித்தது. ஏகாரத் தேற்றம். இனி வருவனவும் அவை.)
அடி. 95, 96, 97-
ஒரு முகம் மந்திர விதியின் மரபுளி வழா வேள்வி ஓர்க்குமே - மற்றொரு முகம், மந்திரத்தோடு, கூடிய விதி முறைகளினின்றும் வழுவாத வேள்விகள் இனிது முடியும் வண்ணம் நினைந்து நோக்கியே இருக்கும். அந்தணர் வேள்வி. அம் தணர் - அழகிய தட்பத்தை - கருணையை - உடையவர். அக்கருணை காரண மாகச் செய்யப்படும் வேள்வி உலக நலத்தைப் பயக்கும் ஆகலின், அவற்றை முருகன், இனிது முடிய வேண்டுவானாவன். பல வகை வழிபாடுகளும் வேள்விகளே. கருணை காரணமாக உலக நலத்தின் பொருட்டுச் செய்யும் வழிபாடு, `பரார்த்த பூசை` எனப்படும். அவன் ஆன்மார்த்த பூசையைக் காத்தல் இதற்கு முன் கூறிய அதனுள்ளே அடங்கிற்று.
அடி. 97, 98, 99-
ஒரு முகம் எஞ்சிய பொருள்களை ஏம் உற நாடித் திங்கள் போலத் திசை விளக்குமே - மற்றொரு முகம், வேள்வி யொழிந்த பிற பொருள்களையும் அவை பாதுகாவல் பெறும்படி நினைந்து, திங்களைப் போல எல்லாத் திசைகளையும் இடரின்றி விளங்கச் செய்தே இருக்கும்.
அடி. 99, 100, 101-
ஒரு முகம் செறுநர் தேய்த்துச் செல் சமம் முருக்கிக் கறுவுகொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே - மற்றொரு முகம். பகைவரை அழித்து நிகழாநின்ற போரினை வெற்றியாக முடித்துப் பின்னும் பகைவர் தோன்றாதவாறு. வெகுள்கின்ற நெஞ்சத் தோடே கள வேள்வி வேட்டேயிருக்கும். (கறுவு - நீடு நிற்கின்ற பகைமை யுணர்வு அது கொடியார் மேலதாதலின் அறமாயிற்று. `தேய்த்து` என்னும் செய்தென் எச்சம் பின் வரும் செல்லுதல் வினைக்கு நிகழ்காலம் உணர்த்தி நின்றது.
அடி. 101, 102, 103-
ஒரு முகம் குறவர் மடமகள் வள்ளியொடு நகை அமர்ந்தன்று - மற்றொரு முகம், குறவர்தம் இளைய மகளாகிய வள்ளியோடு மகிழ்ந்திருத்தலை விரும்பியே இருந்தது. கொடிபோல் நுசுப்பின் - கொடிபோலத் துவள்கின்ற இடையினையுடைய (வள்ளி), மட வரல் - `மடம்` என்னும் குணத்தினது வருகையைப் பொருந்திய வள்ளி. மடமாவது, கொளுத்தக் கொண்டு, கொண்டது விடாமை. இதுபெண்மைகளுள் ஒன்று.)
அடி. 103, 104, 105-
அம்மூவிரு முகனும் ஆங்கு முறை நவின்று ஒழுகலின் - அந்த ஆறு முகங்களும் அவ்வாறான முறைகளில் பயின்று நிகழ்தலால். (119 பன்னிரு கையும் இயற்றி.)
அடி. 105,106-
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின் செம்பொறி வாங்கிய - பொன்னரி மாலை தங்கி, அழகிய, விளக்கமான மார்பின் கண் உள்ள செவ்வையான கீற்றுக்களைத் தம்மிடத்தே வருமாறு வாங்கி வைத்துக் கொண்ட (107 தோள் மார்பில் மூன்று கீற்றுக்கள் தோன்றித் தோளளவும் சென்றிருத்தல் சிறந்த ஆடவர்க்கு உள்ள இயல்பாகக் கூறப்படுகின்றது.)
அடி. 106, 107, 108-
மொய்ம்பின் வண்புகழ் நிறைந்து - வலிமை யினாலே வளவிய புகழ் நிறையப் பெற்று. சுடர் விடுபு வாங்கு - ஒளி பொருந்திய படைக்கலங்களை ஏவிப் பகைவர்களது மார்பைப் பிளந்த பின்பு வாங்கிக் கொள்கின்ற (107 தோள்) நிமிர் தோள் - பருத்த தோள்களில் உள்ள. (சுடர், ஆகுபெயர்.)
அடி. 108, 109, 110-
ஒரு கை விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது. ஒருகை, (உலகம் ஞாயிற்றின் வெம்மையால் அழியாதபடி அதனைத் தாங்கி) எப்பொழுதும் வானத்தில் உலாவிக் கொண்டிருக்கின்ற அறவோர்களைத் தாங்கி உயரச் சென்றது. (நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத் - தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக் கால் உணவாகச் சுடரொடு கொட்கும் - `அவிர்சடை முனிவர்` என்றது காண்க.) ஒரு கை உக்கம் சேர்த்தியது - அந்தக் கைக்கு இணையான மற்றொருகை இடையின்கண் வைக்கப்பட்டது. (அதற்குத் தொழில் இன்மையால் வாளா இடையின்கண் வைக்கப்பட்டது. இந்த இருகைகளும் மேல், `மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன்று` எனக் கூறிய முகத்திற்கு உரியன.)
அடி. 111, 112, 113-
ஒருகை அங்குசம் கடாவ ஒரு கை நலம் பெறு கலிங்கத்துக் குறங்கின் மிசைஅசைஇயது - மற்றொருவகை யானையைச் செலுத்துதற்கு அங்குசத்தைப் பயன்படுத்த, அதற்கு இணையான மற்றொரு கை அழகைப் பெற்ற உடையின் மேலாய் துடையின்கண் இருத்தப்பட்டது. (வரம் வேண்டினார்க்கு அதனை வழங்கவருமிடத்து யானை மேல் வருவானாகலின், இந்த இருகை களும் காதலின் உவந்து வரங்கொடுக்கும் முகத்திற்கு உரியனவாம்.)
அடி. 114, 115-
ஒரு கை மார்பொடு விளங்க, ஒரு கை தாரொடு பொலிய - மற்றொரு கை, மெய்யுணர்வு வேண்டினார்க்கு, அதனைச் சொல்லாமல் சொல்லும் வகையில் குறிக்கும் அடையாள மாக மார்பின்கண் பொருந்தி விளங்க, அதற்கு இணையான மற்றொரு கை மார்பில் புரளும் தாரொடு சேர்ந்து பொலிந்தது. (மெய்யுணர்வா வது `எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு` ஆதலின், இந்த இருகைகளும் `எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித் திங்கள் போலத் திசை விளங்கும் முகத் திற்கு உரியன.)
அடி. 115, 116, 117-
ஒரு கை கீழ் வீழ் தொடியொடு மீ மிசைக் கொட்ப, ஒருகை இன்பாடு படுமணி இரட்ட - மற்றொரு கை, தோளில் அணிந்த வளை மேல் நின்று கீழே கழன்று வீழ்வதுபோல விழ வேள்வித் தீக்கு மேலே உயர்த்தி ஆகுதி பண்ணுதலாலும், முத்திரை கொடுத்தலாலும் சுழல, அதற்கு இணையான மற்றொரு கை இனிய ஓசை தோன்றுகின்ற பூசை மணியை இடையிடையே எடுத்து அடிக்கின்றது. (எனவே, இந்த இரண்டு கைகளும் கள வேள்வி வேட்கும் முகத்திற்கு உரிய ஆதலை அறிந்துகொள்க.)
அடி. 118-
ஒரு கை நீல நிற விசும்பின் மலி துளி பொழிய - மற்றொரு கை நீல நிறத்தை உடையனவாகிய மேகங்களைத் தூண்டி மிகுந்த மழைத்துளிகளைப் பெய்விக்க. (`பொழிவிக்க` என்பதில் பிற வினை விகுதி தொகுக்கப்பட்டது. ஒரு கை வான் அரமகளிர்க்கு வதுவை சூட்ட - அதற்கு இணையான மற்றொரு கை தேவ மாதர்கட்கு மண மாலையைச் சூட்ட. (இது தன்னை வாழ்க்கைத் தலைவனாகக் கொள்ள விழைந்த மகளிர்க்கு அவரது கருத்து நிரம்புமாறு அருளுதலைக் குறித்தது. எனவே, வதுவை சூட்டுங் கை வள்ளியொடு நகையமர்ந்த முகத்திற்கு ஏற்புடைத்தாதல் தெளிவு. இனி மழை பொழிவிக்கின்ற கையும் மண வாழ்க்கையை ஏற்றோர் இல்லறம் நடத்துதற்கு முதற்கண் வேண்டப்படும் மழை வளத்தைத் தருவதாதலும் தெள்ளிதேயாம்.
அடி. 120, 121-
ஆங்கு அப்பன்னிரு கையும் பாற்பட இயற்றி - அவ்வாறு அப்பன்னிரண்டு கைகளும் ஆறு முகங்களின் வகையில் பொருந்தும்படி பல தொழிகளைச் செய்து.
அடி. 122-
அந்தரப் பல் இயம் கறங்க - வானுலக வாச்சியங்கள் பலவும் ஒலிக்க.
அடி. 122, 123-
திண் காழ் வயிர் எழுந்த இசைப்ப - திண்ணிய வயிரத்தையுடைய கொம்பு ஒலி நன்கு எழுந்து ஒலிக்க. (`கொம்பு` எனப்படுவது தாரை, இதன் ஓசை வடமொழியில் `சிருங்க நாதம்` எனப்படும்` வால் வளை ஞரல - வெண்மையான சங்கு முழங்க.
அடி. 124-
உரம் தலைக் கொண்ட உரும் இடிமுரசமொடு - வலிமையைத் தன்னகத்துக்கொண்டு இடி இடித்தாற்போலும் முரசொலியுடன்.
அடி. 125-
வெல்கொடி பல் பொறி மஞ்ஞை அகவ - வெல்லென்று எடுத்த கொடியிலே பல புள்ளிகளையுடைய தோகையை உடைய மயில் அகவாநிற்க.
அடி. 126-
விரை செலல் முன்னி - விரையச் செல்லுதலைக் கருதி. விசும்பு ஆறாக - வான் வழியாக.
அடி. 127-
உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழுச் சீர் - உயர்ந் தோர் புகழ்ந்த மிக உயர்ந்த மேலான புகழையுடைய. அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பு - (கடல் அலை மோதும் இடம் ஆதலின்) `அலைவாய்` என்னும் பெயருடைய திருத்தலத்திற்கு அவ்வப் பொழுது சென்று தங்குதலும் அவனுக்கு நிலை பெற்ற குணமாகும் (ஆகவே, அங்குச் சென்றும் அவனைக் காணலாம். 83. `வேழம் மேல்கொண்டு, 85 முடியொடு விளங்கிய திரு மணி 86 சென்னிப் பொற்ப, 88 பொலம் குழை 89 இமைப்ப, 104 மூவிரு முகனும் முறை நவின்று ஒழுகலின், 119 பன்னிருகையும் பாற் பட இயற்றி, 120 பல் இயம் கறங்க, 121 வயிர் இசைப்ப, வளை ஞரல, 122 முரசமொடு 123 மஞ்ஞை அகவ 124 விரை செலல் முன்னி விசும்பு ஆறாக அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பு` என இயைத்து முடிக்க.
அடி. 129-
அதாஅன்று - அதுவன்றியும்.
அடி. 130-
சீரை - மரவுரியை. தைஇய உடுக்கையர் - உடையாக அமைக்கப்பட்டதனை உடுத்தலை உடையவர்களும்.
அடி. 130, 131-
சீரொடு - அழகோடு கூடியதாக. வலம்புரி புரையும் வால் நரை முடியினர் - நிறத்தால் சங்கினோடு ஒப்ப நரைத்த வெள்ளிய நரையான முடியை, வடிவாலும் சங்கு போலத் தோன்றும் படி முடிந்த முடியினை உடையவர்களும்.
அடி. 132-
மாசு அற இமைக்கும் உருவினர் - (பன்முறை நீரின் கண் மூழ்குதலால்) அழுக்குப் போக விளங்கும் மேனியை உடையவர்களும். (`மாண்டார் நீராடி`* என்றார் திருவள்ளுவரும். சமண் முனிவர் இதற்கு மாறாக உடம்பில் மாசு பூசுபவர்கள்)
அடி. 132, 133, 134-
மானின் உரிவை தங்கிய ஊன் கெடு மார்பின் என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் - மான் தோலால் போர்க்கப்பட்டதும், தசை வற்றியதும் ஆகிய மார்பில் எலும்புகள் வெளித் தோன்றி அசையும் உடம்பினை உடையவரும்.
அடி. 134, 135-
நன்பகல் பல உடன் கழிந்த உண்டியர் - நோன்பினால் `நல்ல நாள்` எனப்படும் நாள்கள் பல தொடர்ந்து சென்று பின்னர் உண்ணும் உணவை உடையவர்களும். (எனவே, `பல நாள் உண்ணாதவர்கள்` என்றதாம். பட்டினி விட்டுப் பின்பு உண்டல் `பௌர்ணை` எனப்படும்.
அடி. 135, 136-
இகலோடு செற்றம் நீக்கிய மனத்தினர் - யாரிடத்தும் மாறுபாட்டினையும், அது காரணமாக உள்ளத்தில் நிற்கும் பகைமை உணர்வையும் நீக்கின மனத்தை உடையவர்களும்.
அடி. 137-
கற்றோர் யாவதும் அறியா அறிவினர் - கல்வியை முற்றக் கற்றவர்கள் சிறிதும் அறியாத மெய்யறிவினை உடையவர் களும்.
அடி. 137, 138-
கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையர் - `கற்றோர்` என்பவரது பெருமைகட்கெல்லாம் தாம் மேல்வரம்பாகிய தலைமைப்பாட்டினை உடையவர்களும். (`கல்வியைக் கரை கண்டவர்` என்றபடி.)
அடி. 138, 139-
காமமொடு கடுஞ்சினம் கடிந்த காட்சியர் - பலவகை ஆசைகளையும், கடிதாகிய வெகுளியையும் அறவே போக்கின அறிவையுடையவர்களும்.
அடி. 139, 140-
இடும்பை யாவதும் அறியா இயல்பினர் (`இன்பம் விழையாது, இடும்பையை - இது வருதல் இயற்கை 1 - என்று எண்ணி அமைதலால்) உள்ளத்தில் சிறிதா யினும் துன்பம் தோன்றியறியாத இயல்பினை உடையவர்களும்.
அடி. 140, 141-
மேவர துனி இல்காட்சி - யாவருடைய உள்ளமும் விரும்புதல் உண்டாகத் தாம், `எந்நாளும் இன்பமே யன்றித் துன்பம் இல்லை` 2 என மகிழ்ந்திருக்கும் தோற்றத்தினை உடையவர்களும் ஆகிய (முனிவர்கள்)
அடி. 141-
முனிவர் முன்புக - (தங்கள் வேண்டுகோளின் படி) முனிவர்கள் முன்னே புகுத (வருகையை முருகன் மறுக்கா திருத்தற் காக முனிவர்களை முன்னே விடுத்தனர்.)
அடி. 142-
புகை முகந்தன்ன மாசில் தூவுடை - (மென்மையால்) புகையை ஒருங்கியையச் சேர்த்து வைத்தாற் போலும், அழுக்கில்லாத தூய உடையையும்.
அடி. 143-
முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து - (கட்டிய பின்) அரும்புகள் வாய் மலர்கின்ற மாலை சூழ்ந்த மார்பினையும் உடைய (கந்தருவர்) தகைதல் - கட்டுதல். அஃது ஆகுபெயராய், கட்டப்பட்ட மாலையைக் குறித்தது.
அடி. 145, 146-
நல் யாழ் நவின்ற நயன் உடைய நெஞ்சின் மெல்மொழி மேவலர் இன் நரம்பு உளர - நல்லதாகிய யாழினது இசையிலே பயின்ற பயிற்சியால் இளகிய மனத்திலே (வன்சொல்லை விரும்பாது) மென்சொல்லையே விரும்புகின்ற கந்திருவர்கள் இனிய இசையைத் தோற்றுவிக்கின்ற யாழின் நரம்புகளைத் தடவி இசையை இசைத்துக் கொண்டு வரவும்.
அடி. 147-
நோய் இன்று இயன்ற யாக்கையர் - (தேவர் ஆதலின்) மக்கள் யாக்கை போல நோய் உடையன ஆகாது, நோய் இல்லனவாய் அமைந்த உடம்பினையும்.
அடி. 147, 148-
மாவின் அவிர் தளிர் புரையும் மேனியர் - மா மரத்தினது விளக்கமான தளிர்களை ஒத்த நிறத்தினையுடையவரும்.
அடி. 148, 149-
அவிர்தொறும் பொன் உரை கடுக்கும் திதலையர் - விளங்குந்தோறும் பொன்னை உரைத்த உரை விளங்குதல் போலக் காணப்படுகின்ற தேமலையுடையவரும.
அடி. 149,150-
இன் நகைப் பருமம் தாங்கிய அல்குல் - இனிய ஒளியை உடைய பதினெண் கோவை மணிவடங்களைத் தாங்கிய பிருட்டத்தினை உடையவரும் (ஆகிய மகளிர்) பணிந்து ஏந்து அல்குல் - தாழ வேண்டிய பகுதி தாழ்ந்தும், உயர வேண்டும் இடம் உயர்ந்தும் உள்ள (அல்குல் - பிருட்டம்)
அடி. 151-
மாசு இல் மகளிரொடு - (உடம்பிலும், குணத்திலும்) யாதொரு குற்றமும் இல்லாத கந்தருவ மாதரோடு கூடி (இன் நரம்பு உளர` என மேலே கூட்டக)
அடி. 151-
மறு இன்றி விளங்க - (பண்கள் பலவும்) குற்றம் இன்றி வெளிப்படும்படி. `இன் நரம்பு உளர` என மேலே கூட்டுக.
அடி. 152-
கடுவொடு ஒடுங்கிய - நஞ்சுடனே ஒளிந்துள்ள. தூம்பு உடைய எயிறு - உள்துளையில் பொருந்திய பல், வால் - வெள்ளிய எயிறு (எயிற்றினை யுடைய பாம்பு.)
அடி. 154-
அழல் என உயிர்க்கும் - நெருப்புப் போலப் பெரு மூச்செறியும் (பாம்பு) அஞ்சு வரு கடுந் திறல் - கண்டார்க்கு அஞ்சுதல் வருதற்கு ஏதுவாகிய கடுமையான கொலை வன்மையையுடைய (பாம்பு)
அடி. 154-
பாம்பு படப் புடைக்கும் கொடுஞ் சிறை - பாம்புகள் இறக்கும்படி அவைகளை அடிக்கின்ற வளைந்த சிறகு. பல் வரி - பல கோடுகளைப் பொருந்திய. சிறகு (இத்தகைய சிறகினையுடைய புள், கருடன்.)
அடி. 155-
புள் அணி நீள் கொடிச் செல்வனும் - பறவையை அணிந்த நீண்ட கொடியையுடைய தேவனாகிய திருமாலும்.
அடி.155, 156-
வெள் ஏறு வலவயின் உயரிய - வெள்ளிய இடபத்தையுடைய கொடியை வலப்பக்கத்து உயர்த்திக் கொண்ட (செல்வன்) பலர் புகழ் திணி தோள் - (கணபதியும், முருகனும் ஏறி விளையாட இருத்தல் பற்றிப்) பலரும் புகழ்கின்ற `திண்` என்ற தோள்களையுடைய (செல்வன்)
அடி. 157-
உமை அமர்ந்து விளங்கும் - உமையம்மை உடனாக எழுந்தருளி விளங்கும் (செல்வன்) இமையா முக்கண் - இமைத்தல் இல்லாத மூன்று கண்களையுடைய (செல்வன்)
அடி. 158-
மூ எயில் முருக்கிய முரண் மிகு செல்வனும் - திரிபுரத்தை அழித்த ஆற்றல் மிக்க சீகண்ட உருத்திரனும் இப்பெருமான் திருக்கயிலையில் எழுந்தருளியிருப்பவன்.
அடி. 159-
நூற்றுப் பத்து அடுக்கிய நாட்டத்து - நூற்றைப் பத்தாக அடுக்கிய (ஆயிரம் ஆன ) கண்களையுடைய (163 செல்வன்.)
அடி. 159, 160-
நூறு பல் வேள்வி முற்றி - `நூறு` என்னும் எண்ணிக்கையையுடைய பலவாகிய வேள்விகளை வேட்டு முடித்ததனால் பெற்ற (செல்வன் - செல்வத்தையுடையவன். இது பற்றி இவன் `சதமகன்` எனச் சொல்லப்படுவான்.)
அடி. 160-
அட்டு வெல் கொற்றத்து - அசுரர்களை அழித்து வெல்கின்ற வெற்றியையுடைய (செல்வன்)
அடி. 161, 162, 163-
ஏந்திய ஈர் இரண்டு மருப்பின் - வாயில் ஏந்தியுள்ள நான்கு கொம்புகளையும். எழில் நடை - அழகிய நடையினையும். தாழ் பெருந் தடக்கை - நிலத்தளவும், தாழ்கின்ற. பெரிய , வளைந்த கையையும் (தும்பிக்கையையும்) உடைய. உயர்த்த யானை எருத்தம் ஏறிய - யாவராலும் உயர்த்துச் சொல்லப்பட்ட யானையின் பிடரியில் ஏறிவரும் (செல்வன்) திருக்கிளர் செல்வனும்- நல்லூழால் மிகுகின்ற செல்வத்தையுடையவனும். (இந்திரனும்)
அடி. 164-
நால் பெருந் தெய்வத்து - நான்கு திசைகளும் ஞாயிறு, நடுவன், வருணன், திங்கள் ஆகிய பெரிய தேவர்களையுடைய (உலகம்) நல் நகர் நிலைஇய - நல்ல நகரங்கள் பல நிலை பெற்றிருக்கும் (உலகம்).
அடி. 165, 166-
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கைப் பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக - உலகத்தைச் செவ்வன் நடத்துதலாகிய ஒன்றையே விரும்புகின்ற கொள்கை காரணமாகப் பலராலும் போற்றப் படும் `அயன், அரி, அரன்` - என்னும் மூவரும் ஒத்த தலைவாராய் இருக்கவும்.
அடி. 167, 169-
ஞாலம் தன்னில் தோன்றி ஏம் உறும் நான்முக ஒருவன் சுட்டி - (அத்தலைமையை இழந்து) மண்ணுலகில் பிறந்து மயங்குகின்ற பிரமனாகிய ஒருவனை மீட்டல் கருதியே சென்று. (`சென்று` என்பது சொல்லெச்சம்.)
அடி. 168-
தாமரை பயந்த தாஇல் ஊழி - `தாமரை` என்னும் எண்ணினைத் தருகின்ற வருத்தம் இல்லாத ஊழிகளைத் தன் வாழ்நாளாக உடைய நான்முகன் (தாமரை - `பதுமம்` எனப் பெயர் பெற்ற ஒரு பேரெண். நான்முகன் தன் தலைமையையிழந்து மண்ணில் சென்று மயங்கக் காரணம் முருகன் இட்ட சாபம்.
அஃது, அசுரரை அழித்துத் தனது அரசினை நிலைபெறுத்தினமைக்கு நன்றிக் கடனாக இந்திரன் தன் மகளார் தெய்வயானையாரை மணம்புரிவித்த ஞான்று முருகன், `இச் சிறப்பெல்லாம் நமக்கு இவ் வேலால் வந்தன` என்று சொல்லி வேலினைப் பார்க்க, அங்கிருந்த நான்முகன், `இவ்வேலிற்கு இவ்வாற்றல் என்னால் தரப்பட்டது` என்றான். அங்ஙனம் அவன் கூறியது, `எல்லாவற்றையும் படைப்பவன் தான்` - என்னும் செருக்கினாலாம், அதனால் முருகன், `இவன் இத்தலைமையைப் பெற்றது எவ்வாறு` என்பதை மறந்து செருக்குகின்றான் எனச் சினந்து, `நீ உனது சத்திய லோகத்தை விட்டு மண்ணுலகில் புகக்கடவாய்` எனச் சபித்ததே யாம். இது பழம் புராணமாகச் சொல்லப்படுகின்றது.)
அடி. 170-
பகலின் தோன்றும் இகல் இல் காட்சி - பகுத்துக் காண்டலால் காணப்படுகின்ற, தம்முள் மாறுபாடு இல்லாத அறிவினை யுடைய (பதினொருமூவர்.)
அடி. 171-
நால் வேறு இயற்கைப் பதினொரு மூவரோடு - `கதிரவர், உருத்திரர், வசுக்கள், மருத்துவர்` என்னும் நான்கு வேறுபட்ட இயல்பினையுடைய முப்பத்து மூவரும். (`கதிரவர் பன்னிருவர், உருத்திரர் பதினொருவர், வசுக்கள் எண்மர், மருத்துவர் இருவர் ஆக முப்பத்து மூவர்` என்றபடி. இவர்களைப் பரிவாரங் களொடு கூட்டி, `முப்பது முக்கோடியினர்` என்பர்.)
அடி. 172-
ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெறீஇயர் - `பதினெட்டு` என்னும் எண்ணளவாக, உயர்ந்த நிலைகளைப் பெற்ற வரும். `பதினெண் கணத்தவர்` என்றபடி. அவராவார், `தேவர், அசுரர், தானவர், கருடர், கின்னார், கிம்புருடர், யட்சர், வித்தியாதார், அரக்கர், கந்தருவர், சித்தர் சாரணர், பூதர், பைசாசர், தாரகையர், நாகர், ஆகாச வாசிகள், போக பூமியர்` என்பர். இவ்வகை சிறிது வேறுபடவும் கூறப்படும்.
அடி. 173-
மீன் பூத்தன்ன தோன்றலர் - விண்மீன்கள் வெளிப் பட்டு விளங்கினாற்போலும் தோற்றத்தை உடையராயும்.
அடி. 173, 174-
மீன்சேர்பு வளி கிளர்ந்தன்ன செலவினர் - அம்மீன்களை யெல்லாம் பொருந்திக் காற்று எழுந்து வீசினாற் போலும் போக்கினை உடையராயும்.
அடி. 174, 175-
வளியிடைத் தீ எழுந்தன்ன திறலினர் - அக் காற்றினிடையே நெருப்பு ஓங்கினால் ஒத்த வலிமையினை யுடையராயும்.
அடி. 175,176-
தீப் பட உரும் இடித்தன்ன குரலினர் - நெருப்புத் தோன்ற இடி இடித்தாற்போலும் குரலினை உடையராயும்.
அடி. 176,177-
தம் விழுமிய உறுகுறை மருங்கின் பெருமுறை கொண்மார் காண - தங்கள் விழுமிதாகிய பெரிய குறையை இவனிடத் திலே பெறும் முறையாலே பெற்றுக் கொள்வாராய்க் காணும்படி (குறையாவது, நான்முகனோடு முன்புபோலக் கூடி முத்தொழிலை இயற்ற வேண்டுதல்)
அடி. 178-
அந்தரக் கொட்பினர் உடன் வர. வானத்தில் சுழலும் சுழற்சியினை உடையராய் உடன்வர (`வந்து` என்பதனை, `வர` எனத் திரிக்க.
அடி. 179, 180-
ஆவினன்குடி சின்னாள் தா இல் கொள்கை மடந்தையொடு அசைதலும் உரியன் - `திரு ஆவினன்முடி` என்னும் தலத்தில் சில நாள், கெடுதல் இல்லாத கோட்பாட்டினை யுடைய தெய்வயானையாரோடு தங்கியிருத்தலையும் தனக்கு உரித்தாக உடையன். மேற் கூறியவாறு, `முருகனது சாபத்தால் மண்ணிடைப் போந்து மயங்கிக் கிடக்கின்ற. நான்முகனைச் சாப விடுதி செய்து முன்பு போலத் தங்களுடன் இருக்கும்படி மீட்டுக்கொள்ள வேண்டித் திருமாலும், உருத்திரனும், இந்திரனும் முருகனைத் திருவாவினன் குடியில் சென்று, தெய்வயானையாருடன் இருக்கக் கண்டார்` என்க. `நான்முக ஒருவனைச் சுட்டி, புள்ளணி நீள் கொடிச் செல்வனும், மூவெயில் முருக்கிய செல்வனும், நூற்றுப் பத்து அடுக்கிய நாட்டத்துச் செல்வனும், முனிவர் முன்புக, யாழ் நவின்ற நயனுடைய நெஞ்சின் மென்மொழி, மேவலர், மாசில் மகளிரொடு மறு இன்றி விளங்க இன் நரம்பு உளர, நால் வேறு இயற்கைப் பதினொருமூவரும், ஒன்பதிற்றிரட்டி உயர்நிலை பெறீஇயரும். தோன்றலராயும், செலவினராயும், குரலினராயும் கொட்பினராயும் உடன் வர, தம் உறு குறை கொண்மார் காண அசைதலும் உரியன்` என இயைத்து முடிக்க. (எனவே, `அப்பொழுது அங்குச் செல்லினும் அவனைக் காணலாம் என்பதாம். நான்முகனை வீடு செய்த பின்பும் அன்பர் பொருட்டாக முருகன் முன் இருந்த குலத்துடன் ஆவினன் குடியில் இருத்தல் பற்றி, `அங்குச் செல்லினும் காணலாம்` என்பது கூறப்பட்டது.
அடி. 181-
அதாஅன்று - அதுவன்றியும்.
அடி 182,183-
இரு மூன்று எய்திய இயல்பினின் வழாது இருவர் சுட்டிய பல்வேறு தொல்குடி - ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என ஆறாகப் பொருந்திய ஒழுக்கத்தி னின்னும் வழுவாமையால், `தாய், தந்தை` என்னும் இருவராலும் உயர்த்துக் கூறப்பட்ட, பலவாய் வேறுபட்ட பழைய குடிகளில் பிறந்த (187 இருபிறப்பாளர்.)
அடி. 184-185-
அறு நான்கு இரட்டி இளமை நல்யாண்டு ஆறினில் கழிப்பிய - ஆறாகிய நான்கின் இரட்டியாகிய நாற்பத்தெட்டாகிய, இளமைப் பருவத்தையுடைய நல்ல யாண்டுகளை நன்முறையிலே கழித்த (187 இருபிறப்பாளர்) `நன்முறை` என்றது பிரமசரிய ஒழுக்கத்தை.
அடி. 185-
அறன் நவில் கொள்கை - அறநூல்களில் சொல்லப் பட்ட கொள்கைகளையே தம் தம் கொள்கையாக உடைய (187 இருபிறப்பாளர்)
அடி. 186-
மூன்று வகைக் குறித்த முத் தீச் செல்வத்து - ஆகவனீயம், காருக பத்தியம், தக்கிணாக்கினி` - என மூன்றாகப் பகுக்கப்பட்ட வேள்வித் தீயாகிய செல்வத்தையுடைய.
அடி. 187-
இருபிறப்பாளர். ஆகவனீயம், முதலிய மூன்று தீக்களும் முறையே சதுரம், முக்கோணம், வில் வளைவு ஆகிய வடிவில் அமைக்கப்படும் குண்டங்களில் வளர்க்கப்படும். அவ்வடிவங்கள் முறையே நிலம், நெருப்பு, நீர் என்னும் பூதங்களின் வடிவமாகும், காற்றும், வானமும் கட்புலனாகாப் பொருள்கள் ஆதலின் அவற்றின் வடிவில் தீ யெழாது.)
அடி. 188-187-
ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண் இருபிறப்பாளர் பொழுது அறிந்து - மூன்று நூல்களை ஒன்றாகப் புரித்துப் பின்பு அந்த புரி மூன்றினை ஒன்றாகப் புரித்தமையால் ஒன்பது இழைகளைக் கொண்டபுரி மூன்றினையுடைய நுண்ணிய பூணுலை அணிந்த, உபநயனத்திற்கு முன்னே ஒரு பிறப்பும், உபநயனத்திற்குப் பின்னே ஒரு பிறப்பும் ஆக இருபிறப்புக்களை யுடைய அந்தணர்கள் வழிபாட்டிற்குரிய காலங்களைத் தெரிந்து. அடி. 189-
புலராக் காழகம் புலர உடீஇ - நீரில் தோய்த்து எடுக்கப்பட்டு ஈரம் புலராத உடை, உடம்பிற்றானே புலரும்படி உடுத்து. (உலர்ந்த உடையை உடுத்தலே ஆசாரமாயினும், ஈர உடையை உடுத்தலை ஆசாரமாகக் கொள்ளுதல் மலை நாட்டு வழக்கமாகுதலைக் குறித்தது.)
அடி. 190-
உச்சிக் கூப்பிய கையினர் - தலைமேலே குவித்து வைத்த கைகளை உடையவர்களாய்.
அடி. 191-
ஆறு எழுத்து அடக்கிய கேள்வி - `நமக் குமாராய` என்னும் ஆறு எழுத்துக்களைத் தன்னுள். அடக்கியுள்ள மந்திரத்தை. (ஆறெழுத்து மந்திரத்தை வேறாகச் சிலர் கூறவர். `நாதா குமார நம` என அருணகிரி நாதரும் இம்மந்திரத்தையே வேறோராற்றால் குறித்தார்.)
அடி. 191-
அரு மறை - கேட்டற்கு; அரிதாய்; (மறைத்துச் சொல்லப்படும் கேள்வி)
அடி. 192-
நா இயல் மருங்கில் நவிலப் பாடி (190) தற்புகழ்ந்து (16) நுவல - நாப் புடைபெயரும் அளவாகப் பல முறை கூறித் தன்னைப் புகழ்ந்து தோத்திரங்கள் சொல்ல.
அடி. 193-
விரை உறு நறு மலர் ஏந்தி - மணம் மிக்க நல்ல பூக்களைத் தாங்கி.
அடி. 193-
பெரிது உவந்து (194) ஏரகத்து உறைதலும் உரியன்- அவற்றிற்கெல்லாம் பெரிதும் மகிழ்ந்து `திருவேரகம்` என்னும் தலத்தில் எழுந்தருளியிருத்தலையும் தனக்கு உரிமையாக உடையன். (எனவே, `அங்குச் சென்றாலும் அவனைக் காணலாம்` என்பதாம்). `இருபிறப்பாளர், பொழுதறிந்து, புலராக்காழகம் உடீஇ, நறுமலர் ஏந்தி, உச்சிக் கூப்பிய கையினராய் ஆறு எழுத்து அடக்கி கேள்வியை நா இயல் மருங்கின் பாடித் தற்புகழ்ந்து நுவலப் பெரிது உவந்து ஏரகத்து உறைதலும் உரியன்` என இயைத்து முடிக்க.
அடி. 194-
அதாஅன்று - அதுவன்றியும்.
அடி. 195, 196, 197-
வேலன் - குறிஞ்சி நிலத்துப் பூசாரி. (இவன் `முருகனுடைய வேல்` என்று சொல்லி எப்பொழுதும் வேல் ஒன்றைக் கையில் வைத்திருத்தலால் - வேலன் - எனப் பெயர் பெற்றான். பைங் கொடி நறைக் காய் இடை இடுபு அம்பொதி புட்டில் விரைஇக் குளவி யொடு வெண் கூதாளம் தொடுத்த கண்ணியன் - பச்சைக் கொடியாலே நறிய சாதிக் காய்களை இடையிடையே யிட்டு, அழகிய, உள்ளே பொதிவுடையது போலத் தோன்றும் புட்டில் வடிவாகிய ஏலக்காயையும் கலந்து, காட்டு மல்லிகையுடன் சேர்த்து வெண் தாளி மலரைத் தொடுத்த கண்ணியை உடையவனாய் (கண்ணி - தலையில் அணியும் மாலை.)
அடி. 199-
கொடுந் தொழில் வல்வில் கொலைஇய கானவர் - கொடிய தொழிலை உடைய வலிய வில்லாலே பல விலங்குகளைக் கொன்ற வேட்டுவர்கள்.
அடி. 200-
நீடு அமை விளைந்த தேன்கள் தேறல் - நீண்ட மூங்கிற் குழாய்களில் ஊற்றிப் புதைத்து வைத்ததனால் நன்கு புளிப்பேறின, (அவர்கட்குத்) தேன் போல்வதாகிய கள்ளின் வடித்தெடுத்த தெளிவை.
அடி. 201-
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து - சிறு குன்றுகளின் இடையே உள்ள `சிறுகுடி` எனப் பெயர் பெற்ற ஊரின் கண் தங்கள் சுற்றத்தாருடனே உண்டு மகிழ்ந்து.
அடி. 202-
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர - `தொண்டகம்` என்னும் அந்நிலத்துச் சிறிய பறையைக் கொட்டி, அக்கொட்டுக்கு ஏற்ப, `குரவை` என்னும் கூத்தினை ஒருபக்கத்திலே ஆட, (பலர் கைகோத்து நின்று ஆடுவது குரவைக் கூத்து.) அடி. 203-
விரல் உளர்ப்ப அவிழ்ந்த வேறுபடு நறுங்கான் - விரலாலே வலிய மலர்த்தினமையால் வேறுபட்ட நறுமணத்தை யுடைய.
அடி. 204-
குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி - ஆழ்ந்த சுனையிலே பூத்த பூக்களால் தொடுக்கப்பட்டு வண்டுகள் மொய்க் கின்ற தலைமாலையையும்.
அடி. 205-
இணைத்த கோதை அணைத்த கூந்தல் - பூக்களை இணைத்துக் கட்டிய மாலையையும் முடித்த கூந்தலினையும்.
அடி. 206-
முடித்த குல்லை - பலகாலும் முடித்துப் பழகிய கஞ்சங் குல்லையினையும். இலை உடை நறும் பூ - இலைகளையுடைய வேறு பல பூக்களையும்.
அடி. 207-
செங்கால் மராத்த வால் இணர் இடை இடுபு - சிவந்த காம்புகளையுடைய, மராமரத்தில் உள்ளனவாகிய, வெண்மையான பூங்கொத்துக்களை இடையிடையே வைத்து.
அடி. 208-
தொடுத்த தழை - தொடுக்கப்பட்ட `தழை` என்னும் உடை, சுரும்பு உண - வண்டுகள் தேனை உண்ணும் படி (தொடுத்த தழை) பெரு தண் மா - பெரிய, குளிர்ந்த, அழகிய (தழை)
அடி. 209-
திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ - திருத்தமான மணி வடங்களையுடைய பிருட்டத்தினிடத்தே பொருந்தி அசையும்படி உடுத்து.
அடி. 210-
மயில் கண்டன்ன மகளிரொடு - சாயலால் மயிலைக் கண்டாற் போலும் பெண் அடியார்களோடும். மடநடை பெண்மை ஒழுக்கத்தினை உடைய (மகளிர்)
அடி. 211-
செய்யன் - செஞ்சாந்து பூசிச் சிவந்தவனாயும், சிவந்த ஆடையன் - சிவப்பான உடையை உடுத்தவனாயும்,
அடி. 211, 212-
செ அரைச் செயலைத் தண் தளிர் துயல் வரும் காதினன் - சிவந்த அடி மரத்தையுடைய அசோக மரத்தினது குளிர்ந்த தளிர்கள் அசையும் காதுகளையுடையவனாயும்.
அடி. 213-
கச்சினன் - உடையின்மேல் இறுகக் கட்டிய கச்சினை உடையவனாயும். கழலினன் - வீரர் அணியும் கழலினைக் காலில் கட்டியவனாயும் செச்சைக் கண்ணியன் - வெட்சி மாலையை அணிந்தவனாயும். (இங்கு மாலை `கண்ணி` எனப்பட்டது.)
அடி. 214-
குழலன் கோட்டன் குறும் பல் இயத்தன் - குழலையும், கொம்பையும், மற்றும் சில சிறு வாச்சியங்களையும் ஒலிப்பிக்கின்றவனாயும்.
அடி. 215-
தகரன் - ஆட்டுக் கிடாயைப் பின்னே உடையவ னாயும். (இது பலியிடப்படுவது. அன்றி, முருகன் ஊர்தி அடையாளமுமாம்.) மஞ்ஞையன் - மயிலை ஊர்பவனாயும். (இம்மயில், செயல் வல்லோரால் செய்து தரப்பட்டது.)
அடி. 215, 216-
புகர் இல் சேவல் அம் கொடியன் - (ஊர்திக்கு மேலலே பறக்க எடுத்த) குற்றம் இல்லாத கோழிக் கொடியை உடையவ னாயும். நெடியன் - உயரத் துள்ளி ஆடுதலால் நீண்ட உருவம் உடையவனாயும். தொடி அணி தோளன் - தோள்வளையை அணிந்த தோள்களையுடையவனாயும்.
அடி. 217-
நரம்பு ஆர்த்தன்ன இன் குரல் தொகுதியொடு - யாழின் நரம்பு ஒலித்தாற் போல ஒலிக்கும் இனிய குரலைடைய பாடல் மகளிர் கூட்டத்தோடும்.
அடி. 218, 219-
மருங்கின் கட்டிய குறும்பொறிக் கொண்ட நிலன் நேர்பு துகிலனன் - இடையிலே புரளக் கட்டிய, சிறிய புள்ளிகளைக் கொண்ட, நிலத்திற் பொருந்துதலையுடைய துகிலை உடையவனாயும், நறுந் தண் சாயல் - நல்ல மென்மைத் தன்மையை உடைய (துகில், நேர்பு, தொழிற் பெயர்)
அடி. 220-
முழவு உறழ் தடக்கையின் ஏந்தித் தழீஇத் தலைத் தந்து - மத்தளம் போலும் தோளோடு கூடிய பெரிய கைகளில் அவர்களை ஏந்தித் தழுவி முதற்கை கொடுத்து. (முதற் கை கொடுத்தலாவது, முன்னே இவன் கை கொடுக்கப் பின்னே அம்மகளிர் அதனைப் பற்றிக் கொண்டு ஆடுதல்)
அடி. 221-
மெல் தோள் பல் பிணை இயல - மெல்லிய தோள்களையுடைய, மான்போலும் மகளிர் பலர் குரவை யாடி வர.
அடி. 222-
குன்று தோறு ஆடலும் நின்ற தன் பண்பு - மலைகள்தோறும் ஆடும் அவ் ஆடலில் தான் பொருந்தி நிற்றலும் நிலையான அவனது பண்பு. (எனவே, `அவ்வாடல்களிலும் அவனைக் காணலாம்` என்பதாம்.)
கானவர்கள் தேறலை கிளையுடன் மகிழ்ந்து குகரவை அயர, வேலன் கண்ணியனாய், மடநடை மகளிரோடும், இன்குரல் தொகுதி யோடும், செய்யனாயும், ஆடையனாயும், காதினனாயும், கண்ணிய னாயும், குழலனாயும், கோட்டனாயும், இயத்தனாயும், தகரனாயும், மஞ்ஞையனாயும், கொடியனாயும், நெடியனாயும், தோளனாயும், துகிலினனாயும் பல் பிணை இயலத் தடக் கையின் ஏந்தித் தழீஇத் தலைத் தந்து ஆடலும் தன் பண்பு` என இயைத்து முடிக்க.
தன்னை முருகனாகவே எண்ணும் எண்ண வலிமையால் வேலன் ஆடும் ஆடல்களை முருகன் தன்னுடைய ஆடலாகவே ஏற்று அந்நிலத்து மக்களுக்கு அருள்புரிந்து வருதலின், `அந்நிலத்துச் சென்று அவன் வழியாகவும் நீ கருதியதைப் பெறலாம்` என முன்பே அப்பேற்றைப் பெற்ற புலவன் கூறினான்.
அடி. 223-
அதா அன்று - அதுவன்றியும்.
அடி. 224-
சிறு தினை மலரொடு விரைஇ - சிறிய தினை அரிசியைப் பூக்களோடே கலந்து (பரப்பி, இதன்மேல் பிரம்பை, மஞ்சள் பூசிக் குங்குமம் இட்டுப் பூச்சூட்டி நாட்டி வைப்பர். அதனால் இதன் கீழ் பரப்பப்படும் அரிசி `பிரப்பரிசி` எனப்படும் `விரைஇ` என்பதன்பின், `பரப்பி` என்னும் சொல்லெச்சம் வருவிக்க.) மறி அறுத்து - செம்மறியாட்டுக் கிடாயைப் பலியிட்டு. (இவை தீய தெய்வங்களை மகிழ்வித்தற் பொருட்டுச் செய்யப்படுவன.
அடி. 225-
வாரணக் கொடியொடு வயின்பட நிறீஇ - கோழிக் கொடியைக் கோயிலின் முன் உயர்த்துக் கட்டி, அதனையுடைய அவ் விடத்திலே பொருந்தத் தன்னை (முருகனை மந்திரங்களால்) நிறுவி.
அடி. 226-
ஊர் ஊர் கொண்ட சீர் கெழு விழவினும் - ஊர்கள் தோறும் எடுத்த சிறப்புப் பொருந்திய விழாக்களிலும் (அவன் உறைவான்)
அடி. 227-
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும் - அன்பர்கள் துதிக்க. அதற்குத் தான் விரும்புதல் வருகின்ற இடங்களிலும் (அவன் உறைவான்)
அடி. 228-
வேலன் தைஇய வெறி அயர் களனும் - வேலன் * அணி செய்த வெறியாடு களத்திலும் (வேலன் வேண்டுதலுக்காக அப்பொழுது உறைவான். வெறி - செம்மறியாட்டுக் கிடாய், அதனைப் பலியிட்டு ஆடும் வழிபாடு வெறியாடுதலாகும். அயர்தல் - கொண்டாடுதல். வெறியாடுதல் பெரும்பாலும் அகத்திணை நிகழ்ச்சிக் குரியதாய் வரும். அஃதாவது களவொழுக்கத்தில் தலைவனைக் காண்டல் அருமையால் தலைவி வேறுபாடுற, அதனைச் செவிலியும், நற்றாயும் தெய்வத்தான் ஆயதாகக் கருதி வேலனை அழைத்து வெறியாடுவித்துக் குறிகேட்டல் முதலியன செய்வர். எனினும் சிறுபான்மை வெட்சியாகிய புறத்திணையிலும் வருதல், `வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டயர்ந்த காந்தளும்`* என்னும் தொல்காப்பியக் கட்டளையால் விளங்கும். வீரர் போர்க்குச் செல்லுங்கால் வெற்றி வேண்டிக் கொற்றவையையும், முருகனையும் பரவத்தேவராட்டியைக் கொண்டு வழிபடுதல் பெரும்பான்மை. அதனைக் கண்ணப்ப நாயனார் புராணத்தாலும் அறியலாம்.)
அடி. 229-
காடும் - முல்லை நிலத்திலும் (அவ்விடத்து வேண்டினார் பொருட்டு அவன் உறைவன்.) காவும் - சோலைகளிலும் (அங்கு நிறுவினார் வேண்ட உறைவன்) கவின் பெறு துருத்தியும் - அழகு பெற்ற. யாறு பிளவுபட்டு ஓட அவற்றிடை அமைந்த திடல்களிலும் அவன் விரும்பி உறைவன்)
அடி. 230-
யாறும் - ஆற்றங்கரைகளிலும். (அவன் உறைவான்) குளனும் - குளத்தங் கரைகளிலும் (அவன் உறைவான். வேறு பல் வைப்பும் - தன்மையால் வேறுபட்ட பல சிற்றூர்களிலும் (அவன் உறைவன்)
அடி. 231-
சதுக்கமும் - நான்கு தெருக்கள் ஒன்று கூடுகின்ற சந்திகளிலும் (அவன் உறைவன்) சந்தியும் - (மூன்று தெரு, ஐந்து தெரு கூடுகின்ற) மற்றைச் சந்திகளிலும் (அவன் உறைவான்) புதுப் பூ கடம்பும் - (அவனுக்கு மிக விருப்பமாகிய புதிய பூக்களைப் பூத்துக் குலாவுகின்ற கடப்ப மரங்களின் அடிகளிலும் (அவன் உறைவான்)
அடி. 232-
மன்றமும் - அவை கூடுகின்ற அம்பலமாகிய மர நிழலிலும் (அவன் உறைவான்) பொதியிலும் - வழிப் போவார் தங்குதற் பொருட்டு அறமாக அமைக்கப்பட்ட பொது இல்லங்களிலும் (அவன் உறைவான்) கந்து உடை நிலையிலும் - (தறியை உடைய நிலையங்களிலும்) அவன் உறைவான். தறியாவது சிவலிங்கம். இது வட மொழியில் `தாணு` எனப்படும் இஃது உள்ள நிலையங்களில் முருகன் அம்மை அப்பர்க்குப் பிள்ளையாய் இருப்பான். தறி சிவலிங்கம் ஆதலை `கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே` என்னும் அப்பர் திருமொழியால் அறிக. ஆதீண்டு குற்றியுள்ள இடத்தில் முருகனை வழிபடுதல் காணப்படாமையால் `தறி` என்பதற்கு, `ஆ தீண்டு குற்றி` என உரைத்தல் பொருந்துவதன்று,)
அடி. 233-
மாண் தலைக் கொடியொடு அமை வர மண்ணி. மாட்சிமைப்பட்ட, தலைமையையுடைய கோழிக் கொடியோடு பொருந்துதல் வரத் தூய்மை செய்து. (`ஆண்டலை` எனப் பாடம் ஓதி, `ஆண்டலையாவது கோழி` என்று உரைப்பாரும் உளர்.)
அடி. 234-
ஐயவி நெய்யோடு அப்பி - வெண்சிறு கடுகை (மணம் மிகுதற் பொருட்டு) நெய்யோடு கலந்து நிரம்பப் பொருத்தி.
அடி. 234, 235-
ஐது உரைத்துக் குடந்தம் பட்டு - அழகிதாகிய முகமனுரை கூறி உடல் வளைந்து கும்பிட்டு.
அடி. 235-
கொழு மலர் சிதறி - செழிப்பான மலர்களை எங்கும் இறைத்து.
அடி. 236-
முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ - மாறுபட்ட நிறத்தையுடைய இரண்டு ஆடைகளை (ஒன்றை உடையாக வும், மற்றொன்றை வல்லவாட்டாகவும்) ஒருங்கு உடுத்து.
அடி. 237-
செந்நூல் யாத்து - சிவப்பு நூலைக் கையில் காப்பாகக் கட்டி.
அடி. 237-
வெண் பொரி சிதறி - வெண்மையான பொரிகளை யும் இறைத்து.
அடி. 239, 239, 240-
மத வலி நிலைஇய மா தாள் கொழுவிடைக் குருதியொடு விரைஇய தூவெள் அரிசி சில் பலிச் செய்து - செருக்கும், வலிமையும் நிலை பெற்ற, பருத்த கால்களையுடைய செம்மறியாட்டுக் கிடாயினது இரத்தத்தோடு சேர்த்துப் பிசைந்து, தூய, வெண்மையான அரிசியைச் சிறு படையலாக வைத்து. பல் பிரம்பு இரீஇ - பல இடங்களில் பிரம்புகளை நாட்டி. (பிரம்பு, பிரப்பங் கூடைகளும் ஆம்). அவற்றில் பண்டங்கள் நிரம்பியிருக்கும்.
அடி. 241-
சிறு பசுமஞ்சளொடு நறு விரை தெளித்து - (அரைத்த, சிறிய, பாடம் செய்யப்படாத பச்சை மஞ்சளோடே நல்ல மணம் கலந்த நீரை எங்கும் தெளித்து.
அடி. 242, 243-
பெரு தண் கணவீர நறு தம் மாலை துணை அற அறுத்துத் தூங்க நாற்றி - பெரிய குளிர்ந்த செவ்வலரிப் பூவால் ஆகிய, மணம் கமழும் குளிர்ந்த மாலைகளை ஓர் அளவாக அறும்படி அறுத்து, எங்கும் தூங்கும் படி தூங்க விட்டு. (`துணையாக` என ஆக்கம் வருவிக்க).
அடி. 244-
நளி மலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி - செறிந்த மலைகளின் எதிரொலியை உடைய தங்கள் நல்ல ஊர்களை, `அவை வாழ்வனவாக` என வாழ்த்தி.
அடி. 245-
நறும் புகை எடுத்து - நறுமணம் கமழும் புகையை உயர எடுத்து.
அடி. 245-
குறிஞ்சி பாடி - குறிஞ்சி, வியாழக் குறிஞ்சி, மேகராகக் குறிஞ்சி, அந்தாளிக் குறிஞ்சி ஆகிய அந்நிலத்துப் பண்களில் பாட்டுக்களைப் பாடி.
அடி. 246-
இமிழ் இசை அருவியோடு இன் இயம் கறங்க `இழும்` என்னும் ஓசையைத் தருகின்ற அருவிகளோடு கூடி இனிய வாச்சியங்களும் ஒலிக்க.
அடி. 247-
பல் உருவப் பூத் தூஉய் - பல நிறங்களையுடைய பூக்களை நிரம்ப இறைத்து.
அடி. 247, 248-
வெருவரக் குருதிச் செந்தினை பரப்பி - கண்டார்க்கு அச்சம் வருமாறு, இரத்தத்தோடு கலந்த செம்மையான தினையைப் பரப்பி வைத்து.
அடி. 248-
குற மகள் - இளையளாகிய குறத்தி. (முதியளாயின் `மூதாட்டி` எனப்படுவாளல்லது வாளா `மகள்` எனப்படாள்.)
அடி. 249-
முருகு இயம் நிறுத்து - முருகனுக்கே உரிய வாச்சியங்களை நிலையாக ஒலிப்பித்து.
அடி. 249, 250-
முரணினர் உட்க முருகாற்றுப் படுத்த உரு கெழுவியல் நகர் - (`தெய்வம் இல்லை` என்று) முரணிக் கூறினவர்கள் நெஞ்சு நடுங்க முருகனை அவ்வழியில் வந்து பொருந்தச் செய்த, (பல வகையாலும்) அச்சம் பொருந்திய, அகன்ற கோயிலின்கண்.
`குறமகள், கொடியொடு அமை வர மண்ணி, அப்பி, சிதறி, சிதறி, பலிச் செய்து, பிரப்பு இரீஇ, விரை தெளித்து, மாலை தூங்க நாற்றி, பூத்தூஉய், தினை பரப்பி, அருவியோடு இயம் கறங்கக் குறிஞ்சி பாடி, நன்னகர் வாழ்த்தி, ஐது உரைத்துக் குடந்தம் பட்டு, உட்க முருகு ஆற்றுப்படுத்த நகர் என இயைத்துக் கொள்க. முருகனை ஆற்றுப் படுத்தலாவது, அவன் அருளால் குறிபார்த்துக் கூறுதலும் ஆவேசிக்க ஆடிக் குறிசொல்லுதலும் போல்வனவற்றால் அவனை மெய்யாகக் காட்டல்.
அடி. 251-
ஆடு களம் சிலம்ப - வெறியாடுகளம் ஒலிக்க. பாடி - அவ்வொலிக்கு இயையத் தாமும் பல பாட்டுக்களைப் பாடி. அடி. 251, 252-
கோடு பல உடன் வாய் வைத்து - கொம்புகள் பலவற்றை ஒரு சேர வாய் வைத்து ஊதி, (`ஊதி` என்பது சொல் லெச்சம்.) கொடு மணி இயக்கி - பேரோசையை உடைய மணியை அடித்து.
அடி. 253, 254-
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி வழிபட - பின்னிடாத வலியினையுடைய, `பிணிமுகம்` என்னும் பெயரின தாகிய யானை ஊர்தியை, `அது வாழ்வதாக` என்று வாழ்த்தி (அவ் விடத்தும் அவன் உறைதலும் உரியன் வழிபாடு செய்ய.)
மணிமயில் உயரிய மாறா வென்றிப்
பிணிமுக ஊர்தி ஒண்செய் யோனும்
எனப் புறத்திலும் முருகனுக்கு மயிற்கொடியும், `பிணிமுகம்` என்னும் யானை ஊர்தியும் சொல்லப்பட்டன. இனி, `பிணிமுகமாவது மயல்` என்றே கொள்ளலும் ஆம். மேற்கூறிய `சீர் கெழு விழவு` முதலிய இடங்களிலும் (வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் சென்று வழிபடு வாராயினும், பெரும் பான்மை பற்றிக் குறமகள் முருகாற்றுப்படுத்த கோயிலையே அதற்கு உரித்தாகக் கூறினார்.)
அடி. 254-
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் - பயன்களை விரும்புபவர்கள் விரும்பிய பயன்களை விரும்பியபடியே பெற்றமையால் (சென்று நேர்ச்சிக் கடன் செலுத்துவாராய்)
அடி. 255-
ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்த ஆறே - மேற் கூறியவாறு, ஊர் ஊர் கொண்ட சீர் கெழு விழா முதலிய பல இடங் களிலும் அவன் உறைதலை உரியனாதல் நன்கறியப் பட்ட முறைமையே யாம்.
(`வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபடுதலை இறுதியிற் குறித்த உரு கெழு வியல் நகருக்கே உரித்தாகக் கூறினமை யின், மேற் கூறிய அவை இகந்து படாமைப் பொருட்டு. `ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்தவாறே` என வலியுறுத்து ஓதினார்.)
அடி. 256-
ஆண்டு ஆண்டு ஆயினும் ஆக - கூடற் குடவயின் குன்று முதலாக இதுகாறும் கூறி வந்து அவ்வவ்விடங்களிலே யாயினும் ஆக; (உம்மையால், `பிற இடங்களிலே யாயினும் ஆக` இதனால் அவன் உறையும் இடங்களை வரையறுத்துக் கூறுதல் இயலாமை பெறப்பட்டது.)
அடி. 257-
கண்டுழி, முந்து முகன் காண் தக அமர்ந்து ஏத்தி - நீ சென்று கண்ட பொழுது, முதலில் உனது முகம் அவனால் நோக்கப் படத்தக்கதாகும்படி உவகையால் மலர்ந்து, ஒரு துதியைச் சொல்லிப் பின்பு.
அடி. 258-
கை தொழூஉ - கைகளைக் குவித்துக் கும்பிட்டு - பரவி பல துதிகளைப் பாடி. கால் உற வணங்கி - அவனது திருவடிகளிலே உனது தலை பொருந்தும்படி நிலத்திலே வீழ்ந்து பணிந்து.
அடி. 259, 261-
நெடும் பெருஞ் சிமயத்து நீலப் பைஞ்சுனை பயந்த ஆறு அமர் செல்வ - இமைய மலையின்) நெடிய பெரிய சிகரங் கட்கு இடையே உள்ள நீல நிறத்தை உடைய, நாணற் புதர்களால் பசுமை மிக்க சுனையிடத்தே (`சரவணப் பொய்கையில்` என்றபடி.) பெறப்பட்ட, ஆறு உருவம் பொருந்திய செல்வ.
(முருகன் அவதாரம் பழைய புராணங்களில், `உமை வயிற்றில் கரு உண்டாயின் அதனால் உலகிற்குத் தீமை பல உளவாம் - என்று இந்திரன் கருதி, - அது வேண்டா - என்று சிவபெருமானை வேண்டிக் கொண்டமையால், அப்பெருமானது வீரியத்தை இருடியர் எழுவரும் ஏற்று வேள்வித் தீயில் இட்டு அதனை வேள்விப் பிரசாதமாக வாங்கித் தம் மனைவியரிடம் கொடுக்க நினைக்கும் பொழுது அருந்ததி அப்பாற் சென்றமையால், அதனை ஆறு கூறு செய்து ஏனை அறுவர்க்கும் கொடுக்க, அவர்கள் அதனை விழுங்கிச் சூல் முதிர்ந்தவர்களாய்ச் சரவணப் பொய்கையில் ஈன்றமைால் ஆறு குழந்தைகளாய் முருகன் அப்பொய்கையில் தோன்றி, விளையாட்டயர்ந்து இருக்க, அதனையறியாது இந்திரன் வந்து போர் தொடுக்க, முருகன் ஆறு முகங்களும், பன்னிரண்டு கைகளும் கொண்ட ஓர் உருவினனாய் அவனை வென்று, பின்னும் அவ்வுருவத்தையே உடையனாயினான்` எனக் கூறப்பட்டது. அதனால், இங்கும், பரிபாடலிலும் அவ்வாறே கூறப்பட்டது. `இவையெல்லாம் பொருத்தம் அற்றன` என்று, பிற் காலத்தில், `முருகன் அவதாரம் வேறு வகையாகப் புராணங்களில் கூறப்பட்டது` என்பதைக் கந்த புராணத்தால் அறிகின்றோம்.)
அடி. 260-
ஐவருள் ஒருவன் அகம்கை ஏற்ப - ஐம்பூதங்களின் தலைவர்களில் ஒருவனாகிய தீக் கடவுள் சிவபெருமானது வீரியத்தைத் தனது அகங்கையிலே ஏற்றலால்.
அடி. 261-
அறுவர் - இருடியர் பத்தினியர் எழுவருள் அருந்ததி யொழிந்த ஏனை அறுவர்.
அடி. 262-
ஆல் கெழு கடவுள் புதல்வ - ஆல நிழலில் அமர்ந் திருக்கும் கடவுளுக்கு (சிவபெருமானுக்கு) மைந்த!
அடி. 262, 263-
மால் வரை மலைமகள் மகனே - மலைகளி லெல்லாம் மிகப் பெரிய மலையாகிய இமயமலைக்கு மகளான உமைக்கு மகனே! மாற்றோர் கூற்றே - அசுரராகிய பகைவர்க்குக் கூற்றுவனே!
அடி. 264-
வெற்றி வெல் போர்க் கொற்றவை சிறுவ - வேந்தர்க்கு வெற்றியைத் தருபவளும், எப்பொழுதும் வெல்லும் போரையே மேற்கொள்பவளும் ஆகிய கொற்றவைக்கு (துர்க்கைக்கு) மைந்த!
அடி. 265-
இழை அணி சிறப்பின் பழையோள் குழவி - அணிகலங்களை அணிந்த சிறப்பினையுடைய காடுகிழாளுக்கு மைந்த (இவள் `மாயோள்` எனப்படுதல் பற்றி இவளை வடமொழியாளர், `காளி` என்றனர். (வனதுர்க்கையாவாள் இவளே` என்னாது, நச்சினார்க்கினியர் கொற்றவையை `வன துர்க்கை` என்றார்.)
அடி. 266-
வணங்குவில் வானோர் தானைத் தலைவ - தேவர் பொருட்டு. வளைந்த வில்லுடன், அவர்தம் சேனைக்குத் தலைமை பூண்டவ (`தேவ சேனாபதி` என்றதாம்.)
அடி. 267-
மாலை மார்ப - (போர்க் காலத்திலும் அதனால் வருந்துதல் இன்மையால்) இன்பத்திற்கு உரிய தாரினை அணிந் திருக்கும் மார்பை உடையவ, நூல் அறி புலவ - எல்லா நூற்பொருள் களையும் இயல்பிலே அறிந்த அறிவ, அடி. 268-
செருவில் ஒருவ - போர்க்களத்தில் ஈடாவார் இன்றி யிருப்பவ. பொருவிறல் மள்ள - போர் பொருமிடத்து வெற்றியே பெறும் வீர.
அடி. 269-
அந்தணர் வெறுக்கை - அந்தணர்க்கு அவர் பெறும் செல்வமாம் தன்மைய. அறிந்தோர் சொல் மலை - அறிந்தோர் புகழ்ந்து சொல்லும் சொற்களின் திரட்சியானவ.
அடி. 270-
மங்கையர் கணவ - ஒருவரன்றி மங்கையர் இருவர்க்குக் கணவ.
அடி. 270-
மைந்தர் ஏறே - வீரருள் அரியேறு ஒப்பவனே!
அடி.271-
வேல் கெழு தடக்கைச் சால் பெருஞ் செல்வ -வேல் பொருந்திய பெரிய கையால் வந்து நிறையும் பெரிய வெற்றிச் செல்வத்தை உடையவ.
அடி. 272, 273-
குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்துக் குறிஞ்சி கிழவ - `கிரௌஞ்சம்` என்னும் மலையை அழித்த குறையாத வெற்றியையுடைய குறிஞ்சிக் கிழவ. விண் பொரு நெடு வரைக் குறிஞ்சி கிழவ - வானத்தை அளாவும் உயர்ந்த மலைகளை யுடைத்தாகிய குறிஞ்சி நிலத்தை உரிமையாக உடையவ. `குறிஞ்சிக் கிழவ` - என்பதில் ககர ஒற்று விரித்தல்.)
அடி. 274-
பலர் புகழ் நல்மொழிப் புலவர் ஏறே - பலரும் புகழ்ந்து சொல்லும் நல்ல சொல்வன்மையையுடைய புலவர்களில் ஆனேறு போல்பவனே! (ஆனேறு புகழும், பெருமிதமும் உடையது.)
அடி. 275-
பெறல் அரு மரபின் முருக - யாவராலும் பெறுதற் கரிய முறைமையினையுடைய முருக. (`முருகன்` என்னும் பெயர்க் காரணத்தை மேல் விளக்குவார்) பெரும் பெயர் - ஒரு மொழிப் பொருளாய் உள்ள (முருக. ஒரு மொழி யாவது, வேதம் முதலிய அனைத்து நூல்களின் பொருள்களையும் அடக்கி நிற்கும் ஒரு சொல். அச்சொல் முருகன் மேலதாயது மேல், `ஆறு எழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி` என்பதில் சொல்லப்பட்டது.
அடி. 276-
நசையுநர்க்கு ஆர்த்தும் பேர் இசை ஆள - நினது இன்பத்தை நுகர்தலை விரும்பி நின்பால் வந்தவர்க்கு அதனை அருகாதே நுகர்விக்கின்ற பெரும்புகழை ஆளுதலுடையவ.
அடி. 277-
அலந்தோர்க்கு அளிக்கும் சேஎய் - களைகண் காணாது அலமந்து வந்தோர்க்கு இரங்கும் சேஎய்! (அளபெடை விளிப்பொருட்டு.)
அடி. 278, 277-
மண்டு அமர் கடந்த வென்று ஆடு நின் அகலத்துப் பொலம் பூண் - மிகுந்த போர்களைத் தொலைத்த எப்பொழுதும் வென்றே செல்கின்ற நின் மார்பிடத்துப் பொன்னாலாகிய அணிகளையுடைய (சேஎய்.)`
அடி. 279-
பரிசிலர்த் தாங்கும் நெடு வேஎள் - இரவலரை அவர் வேண்டுவன கொடுத்துத் துன்பம் தீர்த்துப் புரக்கின்ற நெடிய வேஎள். (இங்கும் அளபெடை விளிப்பொருட்டு.) உரு கெழு - பகைத்தவர்க்கு அச்சம் தோன்ற நிற்கின்ற (வேஎள்) என இவ்வாறு முதற்கண் சேயனாக வைத்து விளித்தும், பின்பு,
அடி. 280-
பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள் - உயர்ந்தோர் எடுத்துச் சொல்லித் துதிக்கின்ற எண் மிகுந்த பெயர்களை யுடைய இயவுள். (எண் மிகுந்த பெயர்களை `ஆயிரம் பேர்` என்பர். `இயவுள்` என்பதும் `கடவுள்` என்பதனோடு ஒத்த ஒரு பெயர். `இயக்குதலையுடைய பொருள்` என்பது இதன் பொருள். இதற்கு, `தலைவன்` எனப் பொருள் கூறினார் நச்சினார்க்கினியர்.)
அடி. 281, 282-
சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மத வலி போர் மிகு பொருந - சூரபன்மனது கிளையை அழித்த வலிமையாலே, எப்பொழுதம் செருக்கினால் வலிய எழும் போரில் வெற்றியால் மேம்பட்டு விளங்குகின்ற போர் வீர. குரிசில் - தலைவ. என - இவ்வாறு அணியனாக விளித்தும் (ஏத்தி) ஆனாது - அவ்வளவின் அமையாது.
அடி. 282, 283-
யான் அறி அளவையின் பல ஏத்தி - நான் அறிந்த அளவு உனக்குக் கூறிய பலவற்றைச் சொல்லித் (மலர்தூவி) துதித்து (பலவாவன).
அடி. 284, 285-
நின் னளந்தறிதல் மன் உயிர்க்கு அருமையின் நின்அடி உள்ளி வந்தனென் - நினது பெருமையை அளவிட்டு அறிதல் பலவாகிய உயிர்கட்கு இயல்வதன்று ஆகையால் (யானும் நின்னை அளந்தறிய வாராது) நினது திருவடிக்கீழ் உறைதலையே விரும்பி வந்தேன்.
அடி. 285, 286-
நின்னொடு புரையுநர் இல்லாப் புலமை யோய்- நீ நின்னோடு ஒப்பார் இல்லாத பேரறிவினை யுடையாய் (ஆயின்)
அடி. 286, 287-
எனக் குறித்தது மொழியா அளவையின் - என்று இவ்வாறு, நீ கருதிச் சென்ற காரியத்தை எடுத்துச் சொல்லி விண்ணப் பித்தற்கு முன்பே.
அடி. 288, 287-
வேறு பல் உருவின் குறு பல் கூளியர் உடன் குறித்து - வேறு வேறான பலவகைப்பட்ட வடிவங்களையுடைய, குறளாராகிய கூளிச் சுற்றத்தவர் (பூத கணங்கள்) பலர் தாமும் நீ கருதியதையே உடன் கருதி.
அடி. 289-
சாறு அயர் களத்து வீறு பெறத் தோன்றி - (முருகன் இருக்கும் இடம் எல்லாம் விழாக் கொண்டாடும் களமாகவே யிருக்கும் ஆதலால் அவ்வாறு) விழாக் கொண்டாடும் களத்தில் (உனக்காக முருகன் முன்பு) பெருமிதம் பெறத் தோன்றி.
அடி. 290-
முது வாய் இரவலன் - புலமை முதிர்ந்த, வாய்மையை யுடையனாகிய இரவலன் ஒருவன்.
அடி. 290-
தான் அளியனே - அவன் நின்னால் அருள் பண்ணத் தக்கவனே.
அடி. 291-
என - என்று விண்ணப்பிக்க. (`இவ்வாறு அவர் வழியாக அன்றி நீ அவனை நேரே பெறுதல் அரிது` என்றற்கு இது கூறினான்.
அடி. 291-
பெரும - பெருமானே.
அடி. 291-
நின் வள் புகழ் நயந்து - நினது வளவிய புகழைக் கூறுதலையே விரும்பி.
அடி. 292, 291-
இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி வந்தோன் - கேட்டார்க்கு இனிமை பயப்பனவும், உறுதி பயப்பனவும் ஆகிய அப்புகழ்களைச்சொல்லி நின்னைத் துதித்து வந்துள்ளான்.
அடி. 293, 294-
திறல் தெய்வம் சான்ற விளங்கு உருவம் வான் தோய் நிரப்பின் வந்து எய்தி - (யாவரும் வழிபடும் வழிபாட்டு வடிவத்தில் அவனைக் கண்டு நிற்கின்ற உன் முன்னே, தன்னை நீ நேரே கண்டு, `அவனே` எனத் தெளிதற் பொருட்டு, முதலில்,) தெய்வத்திறம் நிரம்பிய பேரொளியுடன் விளங்குகின்ற வடிவம் வானத்தை அளாவும் உயரத்தொடு கூடியதாய்த் தோன்ற உன்முன் எதிர்வந்து நின்று. (பின்னர்).
அடி. 294-
தான் - தானே.
அடி. 295-
அணங்கு சால் உயர் நிலை தழீஇ - (அச்சத்தால் உனக்குத்) துன்பம் நிறைந்ததாகின்ற அந்தப் பெருநிலையைத் தன்னுள் அடக்கி.
அடி. 295, 296-
பண்டைத் தன் தெய்வத்து மணம் கமழ் இளநலம் காட்டி - தான் அவதரித்த அன்று உளதாகிய, இயல்பாகவே தெய்வ மணம் கமழ்கின்ற, இளமையோடு கூடிய, அழகிய அந்த வடிவத்தையே (நீகண்டு நிற்க) நெடு நேரம் காட்டி. (`முருகு` என்னும் சொல் தரும் மணம், இளமை, அழகு - என்னும் இம்மூன்று பொருளையும் இங்கு எடுத்துக் கூறி, முருகன் அப்பெயர் பெற்ற காரணத்தை விளக்கினார்.)
(மக்கள் யாக்கை இயல்பாகவே முடை நாற்றம் உடைத்தாதல் போலத் தேவ யாக்கை இயல்பாகவே மணம் உடையது. அது பற்றியே சிவபிரான் நக்கீரர் தொடுத்த வழக்கில் `தேவ மாதர் கூந்தலுக்கும் இயற்கையில் மணம் இல்லையோ` என வினாவினார். நக்கீரர் தாம் பிடித்தது பிடியாக, `இல்லை; தேவமாதர் கூந்தலுக்கும் இயற்கை மணம் இல்லை` எனச் சாதித்தார். அப்பால் சிவபெருமான் நீ நாள் தோறும் வழிபடும் , அருளே திருமேனியாகிய ஞானப் பூங்கோதைதன் கூந்தலுக்கும் இயற்கை மணம் இல்லையோ` என்றார். `இல்லை., அவ்வம்பிகைதன் கூந்தலுக்கும் செயற்கை மணம் அன்றி, இயற்கை மணம் இல்லை` எனப் பிடிவாதம் பேசினார். `அருளே திருமேனியான அம்பிகை கூந்தலுக்கு, அசுத்தத்திலும் அசுத்தமாய பிரகிருதியில் தோன்றும் மலர்களே நறுமணத்தைத் தரும்` என்றது எத்துணைப் பிடிவாதமான பேச்சு! அவ்வாறு பிடிவாதம் பேசிய நக்கீரர் பிற்காலத்தவர். இத்திருமுருகாற்றுப்படை செய்த நக்கீரர் முற்காலத்தவர். இவர், `முருகன் திருமேனி இயற்கையாகவே தெய்வ மணங் கமழ்வது` என உண்மையைக் கூறினார். இவ்வாறு அன்றி, `பிடிவாதம் பேசிய நக்கீரரே பின்பு திருந்திக் கயிலை யாத்திரை செய்யும் வழியில் திருமுருகாற்றுப் படையை இயற்றினார்` என்றலும் உண்டு.)
அடி. 297, 298-
அறிவல் நின் வரவு; அஞ்சல் ஓம்பு என அன்புடை நன்மொழி அளைஇ - (நின்னை நோக்கி, புலவனே!) `நின் வரவு இன்னது பற்றியது` என்பதனை யான் முன்பே அறிவேன்; அது நினக்குக் கிடைக்குங்கொல், கிடையாதுகொல் என அஞ்சுதலை இனி நீ ஒழிவாயாக` என இவ்வாறான அன்புடைய நல்ல மொழிகளை, உனக்கு வீடுபேற்றை வழங்கும் மொழியோடு கலந்து கூறிப் பின், `கூறி` என்பது சொல்லெச்சம்.
அடி. 299, 300,298-
இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து நீ ஒருவன் ஆகி விளிவின்று தோன்ற - இருளின் நிறம் போலும் நிறத்தை யுடைய கடல் நீரால் சூழப்பட்ட நிலவுலகத்தில், வீடு பெற்றமையால் நின்னோடு, ஒப்பார் பிறர் இன்றி நீ ஒருவனுமேயாய் இறப்பின்றித் தோன்றும்படி. (`நீ ஒருவன்` என்பது பின் முன்னாக மாறி நின்றது. இறப்பாவது, சூக்கும தேகம் நிற்கத் தூல தேகம் மாத்திரையே நீங்குவது. வீடெய்துவார்க்குச் சூக்கும தேகமும் தூல தேகத்தோடு ஒரு சேர நீங்குமாகலின் முன்னர்க் கூறிய இறப்பு எய்தாமையை `விளி வின்று` என்றும், அவர் அத்தன்மையராதல் தேகம் உள்ள பொழுதே நிகழும் சில நிகழ்ச்சிகளால் வெளிப்படுதல் பற்றி, `நீ ஒருவனுமேயாகித் தோன்ற` என்றும் கூறினார்.
அடி. 301-
பெறலரும் விழுமிய பரிசில் நல்கும் - (நீ கருதிய,) பலர் பெறுதற்கரிய சீரிய பரிசிலை, (அஃதாவது வீடு பேற்றினை) உனக்கு நல்கியருளுவன். (`மதி` என்னும் முன்னிலை யசை. இங்குப் படர்க்கைக் கண் வந்தது.)
அடி. 302-
பல்வேறு பல உடன் துகிலின் நுடங்கி - வகை பலவாய் வேறுபட்டன பல சேர்ந்த துகிற் கொடிகள் அசைவன போல அசைந்து. (`உடன்` என்பதன் பின் `ஆய` என்பது வருவிக்க.) அகில் சுமந்து - அகிற் கட்டைகளை மேலே கொண்டு.
அடி. 303-
ஆர முதல் முழுது உருட்டி - சந்தன மரமாகிய முதலினை முழுதாக உருட்டிக் கொண்டு.
அடி. 303, 304-
வேரல் பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு - குறு மூங்கில்களின் பூவையுடைய முனைகள் வளர்க்கும் முதல் இன்றித் தனித்து வாடும்படி, (புதருட் சென்று) அவற்றின் வேர்களைப் பெயர்த்துவிட்டு.
அடி. 305, 306-
விண்பொரு நெடு வரைப் பரிதியின் தொடுத்த தண் கமழ் அலர் இறால் சிதைய - வானத்தைக் குத்தும் நெடுமூங்கில் களில் ஞாயிற்று வட்டத்தைப் போல ஈக்களால் தொடுத்துக் கட்டப்பட்ட குளிர்ந்த, மணக்கின்ற விரிந்த தேன் கூடுகள் சிதையவும்.
அடி. 306, 307-
நல் பல ஆசினி முது சுளை கலாவ - நல்ல, பல ஈரப் பலாக்களின் முதிர்ந்த பழம் (வெடித்து உதிர்தலால் அவற்றின்) சுளைகள் வீழ்ந்து உடன் கலக்கவும்.
அடி. 307, 308-
மீமிசை நாக நறு மலர் உதிர - உச்சியில் உள்ள சுரபுன்னை மரங்கள் அதிர்தலால் அவற்றின் நறிய மலர்கள் உதிரவும்.
அடி. 308,309-
ஊகமொடு மா முக முசுக் கலை பனிப்ப- (அங்கு உலாவுகின்ற) கருங்குரங்கின் ஆண்களோடு, கரிய முகத்தையுடைய முசுக் குரங்கின் ஆண்களும் நடுங்கவும்.
அடி. 309, 310-
பூ நுதல் இரும்பிடி குளிர்ப்ப வீசி - அழகிய நெற்றியையுடைய பிடி யானை மெய் குளிரும்படி நீரை இறைத்து.
அடி. 310, 311-
பெருங் களிற்று வான் கோடு தழிஇ - பெரிய ஆண் யானைகளின் வெள்ளிய கொம்புகளை உள் அடக்கி. முத்து, உடை- முத்தினை உடைய (கோடு)
அடி. 312, 311-
நல் பொன் மணி நிறம் கிளர தத்துற்று - நல்ல பொன்னும், மணியும் தம் நிறம் கிளர்ந்து தோன்றக் குதித்துக்கொண்டு பொன் கொழியா - பொற்பொடிகளை அரித்தெடுத்து.
அடி. 313, 314-
வாழை முழு முதல் துமிய தாழை இளநீர் விழுக் குலை உதிர தாக்கி - மலை வாழையாகிய முழுமையான முதல் ஓடியவும், தென்னையது இளநீர்கள் சிறந்த குலைகளினின்று உதிரவும் அவ்விரண்டனையும் மோதி.
அடி. 315-
கறிக் கொடிக் கருந்துணர் சாய - மிளகு கொடியில் உள்ள கரிய கொத்துக்கள் மடியவும்.
அடி. 315, 316, 317-
பொறிப் புற மட நடை மஞ்ஞை பல உடன் வெரீஇ கோழி வயப் பெடை இரிய - புள்ளிகளையுடைய தோகையையும், இளமை தோன்றும் நடையையும் உடைய மயில்கள் பலவும் ஒருங்கு சேர்ந்து அஞ்சிக் கானங் கோழியின் ஓடுதல் வல்ல பெடைகளோடு இடம் தேடி நீங்கவும். (`பெடையோடு`) என உருபு விரிக்க.
அடி. 317, 320-
கேழலோடு வெளிற்றின் இரு, பனை புன் சாய் அன்ன கூரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம் பெருங் கல் விடர் அளைச் செறிய - காட்டுப் பன்றியின் ஆண்களோடு, உள்ளே வெளிற்றை யுடைய கரிய பனைமரத்தினது புல்லிய துறும்புகளை ஒத்த, நிறம் வாய்ந்த மயிரினை உடைய உடம்பையும், வளைந்த பாதங்களையும் உடைய கரடிகளும் பெரிய கல் பிளந்துள்ள முழையில் போய் ஒளியவும்.
அடி. 320 321-
கரு கோட்டு ஆமா நல் ஏறு சிலைப்ப - கரிய கொம்புகளையுடைய, ஆமா இனத்து நல்ல எருதுகள் சினந்து முழங்கவும் (321, 322 - சேண் நின்று இழிதரும் அருவி)
`சோய் சேவடி படரும் செம்மல் உள்ளமொடு செல்லும் செலவ, நயந்தனையாயின், அவன் கூடற் குடவயின் குன்று அமர்ந்து உறைதலும் உரியன்; அதாஅன்று, விழுச் சீரலைவாய்ச் சேறலும் உரியன்; அதாஅன்று, ஆவினன் குடி அசைதலும் உரியன்; அதாஅன்று, ஏரகத்து உறைதலும் உரியன்; அதாஅன்று, குன்றுதோறாடலும் நின்ற தன் பண்பு; அதாஅன்று; ஊர் ஊர் கொண்ட சீர் கெழு விழவு முதலிய இடங்களில் உறைதலும் உரியன், குறமகள் முருகாற்றுப்படுத்த நகரில் வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட உறைதலும் உரியன் இவற்றோடு அவன் ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்த ஆறே; ஆண்டு ஆண்டு ஆயினும் ஆக; பிற இடங்களிலாயினும் ஆக; நீ சென்று கண்டுழி, முந்து முகன் அமர்ந்து ஏத்தி, பின் கை தொழூஉப் பரவி, கால் உற வணங்கி, யான் அறிந்து கூறிய அளவான பல பெயர்களால் சேயனாக விளித்தும், அணியனாக விளித்தும் மலர் தூவி ஏத்தி, முடிவில் நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின் நின் அடி யுள்ளி வந்தனென் - என்று சொல்லி, நீ கருதிச் சென்றதை விண்ணப்பி. அவ்வாறு நீ விண்ணப்பிக்கும் முன்பே கூளியர் களத்துத்தோன்றி, - பெரும ,முது வாய் இரவலன் நின் புகழ் நயந்து ஏத்தி வந்துள்ளான்; தான் அளியனே என்று கூறப் பழமுதிர் சோலை மலை கிழவோன் முதற்கண் வான் தோய் நிவப்பின் வந்து எய்தி, பின் அணங்கு சால் உயர் நிலை தழீஇப் பண்டைத் தன் இநலங்காட்டி அன்புடை நன்மொழி அளைஇ, முந்நீர் வளைஇய உலகத்து விளிவின்று நீ ஒருவனே யாகித் தோன்றும்படி பெறவலரும் பரிசில் நல்கும்` என இங்ஙனம் முருகன்பால் சென்று வணங்கித் திருவருள் பெற்றான் ஒரு புலவன் அது பெற விரும்பிச் செல்லும் மற்றொரு புலவனை எதிர்ப்பட்டு அவனை முருகனிடத்தில் ஆற்றுப்படுத்தியவாறாக இயைத்து முடிக்க.
இத்தனி வெண்பாக்கள் பிற்காலத்தவரால் செய்து சேர்க்கப் பட்டவை.
அடி. 321, 322-
சேண் நின்று இழும் என இழிதரும் அருவி - உச்சியினின்றும் `இழும்` என்னும் ஓசை தோன்ற வீழ்கின்ற அருவிகளையுடைய (சோலை மலை.)
அடி. 323-
பழமுதிர் சோலை மலை கிழவோன் - (மேற்கூறிய இடங்களோடு) பழம் முற்றின சோலைகளை மிக உடைமையால், `பழமுதிர் சோலை மலை` என்றே பெயர் பெற்ற மலையையும் தனக்கு உரிமையாக உடைய அம்முருகன் (கூளியர் கூறியவற்றைக் கேட்டு.)
இவற்றின் பொருள் வெளிப்படை.
திருமுருகாற்றுப்படை முற்றிற்று.

பண் :

பாடல் எண் : 2

குன்றம் எறிந்தாய் குரை கடலில் சூர்தடிந்தாய்
புன்தலைய பூதப் பொருபடையாய் என்றும்
இளையாய் அழகியாய் ஏறூர்ந்தான் ஏறே
உளையாய்என் உள்ளத் துறை. 1

குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும்
அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும் இன்றென்னைக்
கைவிடா நின்றதுவும் கற்பொதும்பில் காத்ததுவும்
மெய்விடா வீரன்கை வேல். 2

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை. 3

இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்குக்
கொன்னவில்வேற் சூர்தடிந்த கொற்றவா - முன்னம்
பனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட
தனிவேலை வாங்கத் தகும். 4

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன் பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்திவாழ் வே. 5

அஞ்சு முகம்தோன்றில் ஆறு முகம்தோன்றும்
வெஞ்ச மரில்அஞ்சல்என வேல்தோன்றும் நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகாஎன் றோதுவார் முன். 6

முருகனே செந்தி முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான். 7

காக்கக் கடவியநீ காவா திருந்தக்கால்
ஆர்க்குப் பரமாம் அறுமுகவா பூக்கும்
கடம்பா முருகா கதிர்வேலா நல்ல
இடங்காண் இரங்காய் இனி. 8

பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்தன் பாதம்
கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு சுருங்காமல்
ஆசையால் நெஞ்சே அணிமுருகாற் றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல். 9

நக்கீரர் தாமுரைத்த நன்முருகாற் றுப்படையைத்
தற்கோல நாள்தோறும் சாற்றினால் முற்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித்
தான்நினைத்த எல்லாம் தரும். 10

பொழிப்புரை :

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 1

திருக்கண் ணப்பன் செய்தவத் திறத்து
விருப்புடைத் தம்ம விரிகடல் உலகே பிறந்தது
தேன்அழித் தூனுண் கானவர் குலத்தே திரிவது
பொருபுலி குமுறும் பொருப்பிடைக் காடே வளர்ப்பது
செங்கண் நாயொடு தீவகம் பலவே பயில்வது
வெந்திறற் சிலையொடு வேல்வாள் முதலிய
அந்தமில் படைக்கலம் அவையே உறைவது
குறைதசை பயின்று குடம்பல நிரைத்துக்
கறைமலி படைக்கலங் கலந்த புல்லொடு
பீலி மேய்ந்தவை பிரிந்த வெள்ளிடை

வாலிய புலித்தோல் மறைப்ப வெள்வார்
இரவும் பகலும் இகழா முயற்றியொடும்
அடைத்த தேனும் வல்நாய் விட்டும்
சிலைவிடு கணையிலும் திண்சுரி கையிலும்
பலகிளை யவையொடும் பதைப்பப் படுத்துத்
தொல்லுயிர் கொல்லுந் தொழிலே வடிவே
மறப்புலி கடித்த வன்திரள் முன்கை
திறற்படை கிழித்த திண்வரை அகலம்
எயிற்றெண்கு கவர்ந்த இருந்தண் நெற்றி
அயிற்கோட் டேனம் எடுத்தெழு குறங்கு

செடித்தெழு குஞ்சி செந்நிறத் துறுகண்
கடுத்தெழும் வெவ்வுரை அவ்வாய்க் கருநிறத்
தடுபடை பிரியாக் கொடுவிற லதுவே மனமே
மிகக்கொலை புரியும் வேட்டையில் உயிர்கள்
அகப்படு துயருக் ககனமர்ந் ததுவே இதுவக்
கானத் தலைவன் தன்மை கண்ணுதல்
வானத் தலைவன் மலைமகள் பங்கன்
எண்ணரும் பெருமை இமையவர் இறைஞ்சும்
புண்ணிய பாதப் பொற்பார் மலரிணை
தாய்க்கண் கன்றெனச் சென்றுகண் டல்லது

வாய்க்கிடும் உண்டி வழக்கறி யானே அதாஅன்று
கட்டழல் விரித்த கனற்கதிர் உச்சியிற்
சுட்டடி இடுந்தொறுஞ் சுறுக்கொளும் சுரத்து
முதுமரம் நிரந்த முட்பயில் வளாகத்து
எதிரினங் கடவிய வேட்டையில் விரும்பி
எழுப்பிய விருகத் தினங்களை மறுக்குறத்
தன்நாய் கடித்திரித் திடவடிக் கணைதொடுத்து
எய்து துணித்திடும் துணித்த விடக்கினை
விறகினிற் கடைந்த வெங்கனல் காய்ச்சி
நறுவிய இறைச்சி நல்லது சுவைகண்டு

அண்ணற் கமிர்தென்று அதுவேறு அமைத்துத்
தண்ணறுஞ் சுனைநீர் தன்வாய்க் குடத்தால்
மஞ்சன மாக முகந்து மலரெனக்
குஞ்சியில் துவர்க்குலை செருகிக் குனிசிலை
கடுங்கணை அதனொடும் ஏந்திக் கனல்விழிக்
கடுங்குரல் நாய்பின் தொடர யாவரும்
வெருக்கோ ளுற்ற வெங்கடும் பகலில்
திருக்கா ளத்தி எய்தி சிவற்கு
வழிபடக் கடவ மறையோன் முன்னம்
துகிலிடைச் சுற்றியில் தூநீர் ஆட்டி

நல்லன விரைமலர் நறும்புகை விளக்கவி
சொல்லின பரிசிற் சுருங்கலன் பூவும்
பட்ட மாலையும் தூக்கமும் அலங்கரித்
தருச்சனை செய்தாங் கவனடி இறைஞ்சித்
திருந்த முத்திரை சிறப்பொடும் காட்டி
மந்திரம் எண்ணி வலம்இடம் வந்து
விடைகொண் டேகின பின்தொழில்
பூசனை தன்னைப் புக்கொரு காலில்
தொடுசெருப் படியால் நீக்கி வாயில்
இடுபுனல் மேனியில் ஆட்டித் தன்தலைத்

தங்கிய துவர்ப்பூ ஏற்றி இறைச்சியில்
பெரிதும் போனகம் படைத்துப் பிரானைக்
கண்டுகண் டுள்ளங் கசிந்து காதலில்
கொண்டதோர் கூத்துமுன் ஆடிக் குரைகழல்
அன்பொடும் இறுக இறைஞ்சி ஆரா
அன்பொடு கானகம் அடையும் அடைந்த
அற்றை அயலினிற் கழித்தாங் கிரவியும்
உதித்த போழ்தத் துள்நீர் மூழ்கி
ஆத ரிக்கும் அந்தணன் வந்து
சீரார் சிவற்குத் தான்முன் செய்வதோர்

பொற்புடைப் பூசனை காணான் முடிமிசை
ஏற்றிய துவர்கண் டொழியான் மறித்தும்
இவ்வா றருச்சனை செய்பவர் யாவர்கொல் என்று
கரந்திருந்து அவன்அக் கானவன் வரவினைப்
பரந்த காட்டிடைப் பார்த்து நடுக்குற்று
வந்தவன் செய்து போயின வண்ணம்
சிந்தையிற் பொறாது சேர்விடம் புக்கு
மற்றை நாளுமவ் வழிப்பட் டிறைவ
உற்றது கேட்டருள் உன்தனக் கழகா
நாடொறும் நான்செய் பூசனை தன்னை

ஈங்கொரு வேடுவன்
நாயொடும் புகுந்து மிதித் துழக்கித்
தொடுசெருப் படியால் நீக்கி வாயில்
இடுபுனல் மேனியில் ஆட்டித் தன்தலை
தங்கிய சருகிலை உதிர்த்தோர் இறைச்சியை
நின்திருக் கோயிலில் இட்டுப் போமது
என்றும் உன்தனக் கினிதே எனையுருக்
காணில் கொன்றிடும் யாவ ராலும்
விலக்குறுங் குணத்தன் அல்லன் என்உன்
திருக்குறிப் பென்றவன் சென்ற அல்லிடைக்

கனவில் ஆதரிக்கும் அந்தணன் தனக்குச்
சீரார் திருக்கா ளத்தியுள் அப்பன்
பிறையணி இலங்கு பின்னுபுன் சடைமுடிக்
கறையணி மிடற்றுக் கனல்மழுத் தடக்கை
நெற்றி நாட்டத்து நிறைநீற் றாக
ஒற்றை மால்விடை உமையொரு மருங்கில்
திருவுருக் காட்டி அருளிப்
புரிவொடு பூசனை செய்யும்
குனிசிலை வேடன் குணமவை ஆவன
உரிமையிற் சிறந்தநன் மாதவன் என்றுணர்

அவனுகந் தியங்கிய இடம்முனி வனமதுவே அவன்
செருப்படி யாவன விருப்புறு துவலே
எழிலவன் வாயது தூயபொற் குடமே
அதனில் தங்குநீர் கங்கையின் புனலே
புனற்கிடு மாமணி அவன் நிறைப் பல்லே
அதற்கிடு தூமலர் அவனது நாவே
உப்புனல் விடும்பொழு துரிஞ்சிய மீசைப்
புன்மயிர் குசையினும் நம்முடிக் கினிதே அவன்தலை
தங்கிய சருகிலை தருப்பையிற் பொதிந்த
அங்குலி கற்பகத் தலரே அவனுகந்

திட்ட இறைச்சி எனக்குநன் மாதவர்
இட்ட நெய்பால் அவியே
இதுவெனக் குனக்கவன்
கலந்ததோர் அன்பு காட்டுவன் நாளை
நலந்திகழ் அருச்சனை செய்தாங் கிருவென்று
இறைவன் எழுந் தருளினன்
அருளலும் மறையவன் அறிவுற் றெழுந்து
மனமிகக் கூசி வைகறைக் குளித்துத்
தான்முன் செய்வதோர்
பொற்புடைப் பூசனை புகழ்தரச் செய்து

தோன்றா வண்ணம் இருந்தன னாக இரவியும்
வான்தனி முகட்டில் வந்தழல் சிந்தக்
கடும்பகல் வேட்டையிற் காதலித் தடிந்த
உடம்பொடு சிலைகணை உடைத்தோல் செருப்புத்
தொடர்ந்த நாயொடு தோன்றினன் தோன்றலும்
செல்வன் திருக்கா ளத்தியுள் அப்பன்
திருமேனியின் மூன்று கண்ணாய்
ஆங்கொரு கண்ணில் உதிரம்
ஒழியா தொழுக இருந்தன னாகப்
பார்த்து நடுக்குற்றுப் பதைத்து மனஞ்சுழன்று

வாய்ப்புனல் சிந்தக் கண்ணீர் அருவக்
கையில் ஊனொடு கணைசிலை சிந்த
நிலம்படப் புரண்டு நெடிதினில் தேறிச்
சிலைக்கொடும் படைகடி தெடுத்திது படுத்தவர்
அடுத்தவிவ் வனத்துளர் எனத்திரிந் தாஅங்கு
இன்மை கண்டு நன்மையில்
தக்கன மருந்துகள் பிழியவும் பிழிதொறும்
நெக்கிழி குருதியைக் கண்டுநிலை தளர்ந்தென்
அத்தனுக் கடுத்ததென் அத்தனுக் கடுத்ததென் என்
றன்பொடுங் கனற்றி

இத்தனை தரிக்கிலன் இதுதனைக் கண்டஎன்
கண்தனை இடந்து கடவுள்தன் கண்ணுறு
புண்ணில் அப்பியும் காண்பன் என்றொரு கண்ணிடைக்
கணையது மடுத்துக் கையில் வாங்கி
அணைதர அப்பினன் அப்பலுங் குருதி
நிற்பதொத் துருப்பெறக் கண்டுநெஞ் சுகந்து
மற்றைக் கண்ணிலும் வடிக்கணை மடுத்தனன் மடுத்தலும்
நில்லுகண் ணப்ப நில்லுகண் ணப்பஎன்
அன்புடைத் தோன்றல் நில்லுகண் ணப்பஎன்
றின்னுரை அதனொடும் எழிற்சிவ லிங்கம்

தன்னிடைப் பிறந்த தடமலர்க் கையால்
அன்னவன் தன்கை அம்பொடும் அகப்படப்பிடித்
தருளினன் அருளலும்
விண்மிசை வானவர்
மலர்மழை பொழிந்தனர் வளையொலி படகம்
துந்துபி கறங்கின தொல்சீர் முனிவரும்
ஏத்தினர் இன்னிசை வல்லே
சிவகதி பெற்றனன் திருக்கண் ணப்பனே.

தனி வெண்பா

தத்தையாம் தாய்தந்தை நாகனாம் தன்பிறப்புப்
பொத்தப்பி நாட்டுடுப்பூர் வேடுவனாம் - தித்திக்கும்
திண்ணப்ப னாஞ்சிறுபேர் செய்தவத்தாற் காளத்திக்
கண்ணப்ப னாய்நின்றான் காண்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மறம் - வீரம்.
இது மறக்குடியில் பிறந்தவர்கட்கு இயல்பாக உளதாகும்.
ஆயினும் அந்த மறம் பெரும் பான்மையும் பொருளாகிய அரசுரிமை பற்றியும், சிறுபான்மை அறம் பற்றியும் பலரிடம் நிகழ்ந்தமை, நிகழ்கின்றமை கண்கூடு.
ஆயினும் மறக் குடியில் பிறந்த கண்ணப்ப தேவர் மேற்காட்டிய அனைத்தினும் மேலான பத்தித்துறையில் இணையில்லாத மறம் உடையராய் இருந் தமையைச் சிறப்பித்தலால் இப்பாடல் `திருக்கண்ணப்ப தேவர் திருமறம்`- எனப்பட்டது.
அடுத்து வரும் கல்லாட தேவ நாயனார் அருளிச்செய்த திருமறத்திற்கும் இது பொருந்தும்.
அடி - 1, 2: `திறத்து உலகே விருப்புடைத்து` என இயைக்க உலகு - உயிர்த் தொகை.
`சில பகுதிகள் மட்டும் அல்ல, முழுதும் என்பது விளக்கலின் ஏகாரம், தேற்றப் பொருட்டாய் தவத் திறத்தது பெருமையை விளக்கி நின்றது.
அம்ம, வியப்பிடைச் சொல்.
அடி - 2, 3, 4: ``பிறந்தது`` என்பது அத்தொழில் மேலும், ``திரிவது`` என்பது அதற்குரிய இடத்தின்மேலும் நின்றன.
பொருப்பு- மலை.
`பொருப்புக்களை இடையிலே உடைய காடு` என்க.
அடி - 4, 5, 6, 7: ``வளர்ப்பது, பயில்வது`` என்னும் ஒருமைகள் அவ்வத்தொழில்மேல் நின்றன.
எனவே, நாய் முதலாகக் கூறியன செயப்படுபொருள் வினை முதல்போலக் கூறப்பட்டனவாம்.
தீவகம்- பார்வை மிருகம்.
சிலை - வில்.
அடி - 7, 10: `உறைவது வெள்ளிடை` என்க.
வெள்ளிடை - வெளியான இடம்: பொத்தற் குடிசை.
``உறைவது`` என்பது, அதற் குரிய இடத்தின்மேல் நின்றது.
அடி - 8: பயிலல் - பலவிடத்து இருத்தல்.
குடம் - கட்குடம்.
பல நிறைத்து, கலந்த வெள்ளிடை` என்க.
அடி - 10: பீலி - மயில் இறகு.
மேய்ந்து - வேயப்பட்டு `பின்பு அவை பிரிந்துபோன வெள்ளிடை` என்க.
அடி - 11: ``மறைப்ப`` என்றது, `அற்றம் மறைப்ப` என்றபடி.
எனவே, `புலித்தோலே உடை` என்றதாம்.
வாலிய - தூய.
(அதன்மேல் மாசுபடியாது` என்பதாம்.
``வார்`` என்பது ஆகுபெயராய், வலையைக் குறித்தது.
அடி - 11, 12: `வாரினை இகழாது, இரவும், பகலும் முயலும் முயற்றி` என்க.
முயற்றி - முயற்சி.
அடி - 13: அடைத்த - மூங்கிற் குழாய் முதலியவற்றில் நிறைத்த.
``அடைத் தேனும்`` என்றார் பின்னும், `தேன் அடைத்தலும்` என்பதே கருத்தென்க.
அடி - 14: சுரிகை - உடைவாள்.
அடி - 15: கிளை, விலங்குகளின் சுற்றம்.
`கிளையாகிய அவை` என்க.
`அவற்றொடும்` என்பதில் சாரியை தொகுக்கப்பட்டது.
படுத்து - வீழ்த்து.
அடி - 16: தொன்மறைக் காட்டில் வாழும் வாழ்வு பற்றிக் கூறப் பட்டது.
`தேன் அடைத்தலும், கொல்லலும் தொழிலே` என்க.
`கொல்லுக தொழிலே` என்பது பாடம் அன்று.
``வடிவே`` என்னும் பிரிநிலை ஏகாரம், எழுவாய்ப் பொருள் தோற்றி நின்றது.
அடி 17, 21: முன்கை முதலிய சினைகளையே `வடிவு` என்னும் முதலாக உபசரித்துக் கூறினார்.
அவையும் அவ்வாறு கூறற்கு இயைபுடைமை பற்றி.
மறம் - வீரம்.
`கடித்த முன்கை.
திரள் முன்கை` என்க.
படை - படைக்கலம்.
அவை வெட்சிக் காலத்தில் கரந்தையார் விடுத்தனவும்.
கரந்தைக் காலத்தில் வெட்சியார் விடுத்தனவுமாம்.
இவற்றைக் கண்ணப்பர் அறியார் ஆயினும் இனம் குறித்தற்கு இவற்றைக் கூறினார்.
திண் வரை அகலம் - தெளிவாக ஆழ்ந்து விளங்கும் கீற்றுக்களையுடைய மார்பு.
எயிற்று - எயிற்றால்.
எண்கு - கரடி.
கவர்ந்த - கடிந்த.
இரு - பெரிய.
தண்மை வியர்வையால் வந்தது.
அன்ன - அந்தக் கரடிகளே, அயில் கோட்டு - கூர்மையான பற்களால்.
எடுத்து எழு குறங்கு - குத்தி யெடுத்த துடை.
செடித்து எழு குஞ்சி - செடிகளின் தன்மையை உடையனவாய், (அடர்ந்து, குறுகி) வளர்ந்த தலைமயிர்.
`செந் நிறத்தை உறு கண்` என்க.
ஐயுருபு சாரியை நிற்கத் தான் தொகுத்தலை இலேசினால் கொள்க.
* அடி - 22: கடுத்து - சினந்து.
`கரு நிற அவ்வாய்` - என்னும் இரண்டாவதன் தொகை பின் முன்னாக மாறி நின்றது.
`உரையை யுடைய அந்த வாய்` என்க.
அடி - 23: அடு படை - கொல்லும் படைஞர்.
பிரியா விறல் - பிரிந்து போகாமைக்கு ஏதுவான விறற் சொல்.
விறல் - வெற்றி.
அஃது ஆகுபெயராய் அதனையுடைய சொல்லைக் குறித்தது.
விறலது - விறலையுடையது.
`அவ்வாய் விறலது` என்க.
இங்ஙனமாயினும் விறலதுவாகிய வாய்` என்றதே.
இதுகாறும் வடிவே கூறப்பட்டது.
கருத்து, இவற்றால் எஞ்ஞான்றும் வேட்டையே தொழிலாய் ஈடுபடுதல் குறிக்கப்பட்டது.
இதன்பின் `ஆகியன` என்பது வருவிக்க.
அடி - 23, 24, 25: அகப்படுதுயர் - அகப்படுதலால் உண்டாகும் துன்பம்.
அகன் அமர்தல் - உள்ளுற விரும்புதல்.
அமர்ந்தது - வினை யாலணையும் பெயர்.
இது வடிவியல்பு கூறிய பின் வேட்டை யொழிந்தபொழுதும் மனத்தியல்பு அது வேயாதல் கூறியது.
அடி - 25, 26: ``இது அக் கானகத் தலைவன் தன்மை`` என்றது, `கண்ணப்ப தேவரது பிறப்பும், அவருக்கு வாய்த்த சூழ் நிலைகளும் திருவருளோடு சிறிதும் இயைபில்லனவாயினமை மேலும், அதற்கு மாறானவையாயும் இருந்தன` என்பதனை முடித்துக் கூறியவாறு.
கானம் - காடு.
காட்டில் வாழும் வேடுவர்களைக் `காடு` என உபச ரித்துக் கூறினார்.
``அக்கானத் தலைவன்`` எனச் சுட்டிக் கூறிய அவ் அனுவாதத்தானே, முதற்கண், `கானத் தலைவன் ஒருவன் இருந்தான்; அவன் பிறந்தது` என எடுத்தக் கொண்டு உரைத்தல் கருத்தாதல் பெறப் பட்டது.
அடி - 26, 27: ``கண்ணுதல்`` முதலிய மூன்றும் ஒரு பொருள் மேல் வந்த பல பெயர்களாய்ச் `சிவன்` என்னும் அளவாய் நின்றன.
`பங்கன் பாதம்` (29) என இயையும்.
இங்கும், ``கண்ணுதல்`` என்ப தற்கு முன்னே, `அவன்` என்னும் எழுவாய் வருவித்துக்கொள்க.
அடி - 28, 29: `பெருமைப் பாதம், இறைஞ்சும் பாதம் புண்ணியப் பாதம்` என்றபடி.
பொற்பு ஆர் - அழகு நிறைந்த.
`மலரிணையைக் (30) கண்டல்லது` என இயையும்.
அடி - 30, 31: தாய்க்கண் கன்று - தாய்ப் பசுவினிடம் செல்லும் கன்று.
இஃது ஆரா அன்பினால் விரைந்தோடிச் செல்லுதலாகிய பண்பும், தொழிலும் பற்றி வந்த உவமை.
கண்டல்லது உண்டி வழக்கறி யான்`` என்றதனால், `கண்டு வழிபட்ட பின்பே உண்ணும் நியமம் உடையரானார்` என்பது பெறப்பட்டது.
ஆயினும் சேக்கிழார், `கண்ணப்பர் காளத்தி நாதரைக் கண்டபின் ஊண் உறக்கம் இன்றியே யிருந்தார்` என்பது படக் கூறினார்.
அடி - 32-41: இப்பகுதி கண்ணப்பர் வேட்டையாடி ஊன் அமுது அமைத்தலைக் கூறியது.
கட்டு அழல் - வலுவான தீ.
கனற் கதிர் - ஞாயிறு.
சுட்டு - சுடுதலால்.
`உச்சியில் நின்று சுடுதலால்` என்க.
சுறுக்கொள்ளுதல் - சுறுக்கெனக் கால்கள் வெம்மை கொள்ளுதல்.
சுரம் - பாலை நிலம்.
நிரந்தரம் - எப்பொழுதும்.
பயில் - நிறைந்த.
வளாகம் - ஓர் இடம்.
எதிர் இனம் கடவிய - எதிர்ப்படுகின்ற விலங்கினத்தை நாள்தோறும் வெருட்டிப் பழகிய.
எழுப்பிய - நாயைக் குரைப்பித்தும், தாம் அதட்டியும் அவை உள்ள இடத்தினின்றும் வெளிப்பட்டு ஓடும்படி எழுப்பிய.
விருகம் - மிருகம்.
மறுக்கு உற - வருத்தம் எய்தும்படி.
`மறுகு` என்னும் முதனிலை `மறுக்கு` எனத் திரிந்து பெயராயிற்று.
இஃது அம்முப் பெற்று, மறுக்கம்` என வரும்.
இரித்திட - துரத்திட.
வடிக் கணை - கூராக வடித்தலைப் பெற்ற அம்பு.
துணித்திடும் - துண்டாக்க வெட்டுவான்.
நறுவிய - நன்றாகத் திருத்திய.
`சுவை கண்டு, நல்லது தெரிந்து அது வேறு அமைத்து` என ஒருசொல் வருவித்து இயைக்க.
நல்லது, சாதியொருமை.
`நல்லது வேறு அமைத்து` என்றதனால், `நல்லது அல்லாததைத் தனக்கு வைத்தான்` என்பது பெறப்பட்டது.
அடி - 42, 43, 44: இப்பகுதி கண்ணப்பர் வழிபாட்டிற்கு ஆவன வற்றை அமைத்துகொண்டவாற்றைக் கூறியது.
``வாய்க் குடம்`` என்றது, `வாய்தானே பயனால் குடமாயிற்று` என்றபடி.
இஃது உருவகம் அன்று.
குஞ்சி - தலைமயிர்.
துவர்க் குலை - சிவந்த தளிர்க் கொத்து.
``மலர் என`` என்றதனால், இலையே கொண்டு சென்றமை பெறப்படும்.
`சிலை (45) ஏந்தி`` என்க.
அடி - 45, 46: விழியையும், குரலையும் உடைய நாய்` என்க.
கரு - பெரிய.
அடி - 46, 47, 48: `தொடரக் கடும் பகலில் திருக்காளத்தி எய்தி என்க.
``காளத்தி`` என்றது அங்குள்ள மலையையும்.
``அச் சிவன்`` என்றது, அம்மலையில் உள்ள சிவலிங்கத்தையு மாம்.
`எய்திய சிவன்` என்பது பாடம் அன்று.
அடி - 48-57: இப்பகுதி அருச்சகர் பூசை செய்த முறைகளைக் கூறியது.
`மறையோன் சிவற்கு ஆட்டி, அருங்கலன், அலங்கரித்து, செய்து, இறைஞ்சி, காட்டி, வந்து, விடை கொண்டு ஏகினபின்` என்க.
வழிபடக் கடவ மறையோன் - வழிபாட்டினைக் கடமையாகக் கொண்ட அந்தணன்; அருச்சகன்.
இவர் பெயர் `சிவகோசரியார்` என்பதாகப் பெரியபுராணத்தில் அறிகின்றோம்.
அதற்கு மேற்கோள் அடுத்துவரும் திருமறம்.
துகிலை - வத்திரத்தை.
இடை சுற்றியது - நீரை வடித்தெடுத்தற்பொருட்டு.
`சுற்றி` என்பது பாடம் அன்று.
`மலர், புகை, விளக்கு, அவி இவைகள் ஆகமங்களில் சொல்லிய முறையிற் சிறிதும் சுருங்கலனாய்` என்க.
அவி - நிவேதனம்.
பொருள்களது சுருக்கம் அவற்றைப் படைப்பான்மேல் ஏற்றப்பட்டது.
பரிசு - தன்மை.
பூ - விடுபூக்கள்.
பட்ட மாலை - நெற்றியில் விளங்கச் சாத்தும் இண்டை.
தூக்கம் - தொங்கவிடும் மாலை.
`ஆகியவற்றால் அலங்கரித்து` என ஒரு சொல் வருவிக்க.
``முத்திரை காட்டி`` என்றதனால், செய்யப்பட்ட வழிபாடு ஆகம முறை வழிபாடாதல் குறிக்கப்பட்டது.
ஆகவே, ``மந்திரம்`` என்றதும் ஆகம மந்திரங்களேயாயின.
இவற்றால் `அருச்சகர் ஆதிசைவர்` என்பதும், அவரை, `மறையோர்` என்றல் வழக்கு என்பதும் கொள்ளக் கிடந்தன.
`வலமாகவும், இடமாகவும்` என ஆக்கம் விரிக்க.
வலமாக வருதல் போகத்தையும், இடமாக வருதல் மோட்சத்தையும் தருவன ஆதல் பற்றி, இரண்டையும் செய்தார் என்க.
``விடைகொண்டு எகின பின்`` என்றதனால், பெருமானிடம் அருச்சகர் வழிபாடு முடித்து இல்லம் செல்லும் பொழுது விடை பெறுதலும் மரபாயிற்று.
விடையை, `உத்தரவு` என்பர், ``விடை கொண்டு``* எனச் சேக்கிழாரும் கூறினார்.
அடி - 57, 66: புக்கு - புகுந்து.
இதனை மேல் ``பின்`` (57) என்றதன் பின்னர்க் கூட்டுக.
இதனால், மேல், ``எய்தி`` (48) என்றது,- அருச்சகர் போயின பின் எய்தி என்றதாம் என விளக்கியவாறு.
தொழிற் பூசனை - நாள்தோறும் நடைபெறக் கடவதாக அமைக்கப்பட்ட வழிபாடு.
`வழிபாடு` என்பது இங்கு அதனால் தோன்றிக் காணப்பட்ட பொருள்களைக் குறித்தது.
தொடு - தொட்ட; அணிந்த.
அடி - அடிப்புறம்.
``துவர்ப் பூ`` என்றதற்கு, மேல் , (39) ``துவர்க் குலை`` என்றது பார்க்க.
`இறைச்சியின் போனகம் பெரிதும் படைத்து` என இயைக்க.
``பெரிதும்`` என்றது, `வேண்டுமளவும்` என்றபடி.
``பிரானைக் கண்டு`` `தரிசித்து` என்றபடி.
``கண்டு கண்டு`` என்னும் அடுக்கு.
ஆராமையால் நெடு நேரம் தரிசித்தமையைக் குறித்தது.
கொண்டது - தான் அறிந்தது.
அன்பு மீதூரப் பெற்றவழிக் கூத்துத் தானே நிகழும் ஆதலின், ``தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடி`` * என்றாற்போலக் கூறக் கேட்டிலாராயினும் ஆடினார் என்க.
ஆரா அன்பு - நிரம்பாத (தமது செயல்களை `இவ்வளவு போதும்` என்று நினையாத) அன்பு.
``இறைஞ்சிக் கானகம் அடையும்`` என்றதனால்.
`இராப் பொழுதில் காட்டில் ஓரிடத்தில் இருப்பார்`` என்றதாயிற்று.
எனவே, `இங்ஙனம் சில நாள்கள் சென்றன` என்பது போதர சேக்கிழார், `இரவெல்லாம் இறைவற்குக் காவல் புரிந்தார்` என்றார்.
அதுவும் அடுத்துவரும் திருமறத்தில் குறிப்பால் பெறப்படுகின்றது.
அடி - 69: ஆதரிக்கும் அந்தணன் - அன்பு செய்யும் அந்தணன்; `அவ் அந்தணன்` எனச் சுட்டு வருவித்துரைக்க.
`இனி அவ்வந்தணன் செய்தன ஆவன` என எடுத்துக்கொண்டு உரைத்தல் கருத்து என்க.
அடி - 66-90: அடைந்த அற்றை - தாம் (அருச்சகர்) திரும்பித் தம் இடத்தை அடைந்த அந்த நாளை, (இரவுப் பொழுதை).
``அயல்`` என்றது, அந்தக் காட்டில் அவர் கொண்டிருந்த தவச் சாலையை.
``தணிந்த மனத் திருமுனிவர் தபோவனத்தினிடைச் சார்ந்தார்`` * என்ற சேக்கிழார் திருமொழியைக் காண்க.
உதித்த போழ்தத்துள் - உதயமான அந்த நேரத்திற்கு முன்பே.
பொற்பு - அழகு.
அஃதாவது முறை தவறாது செய்யப்பட்டது.
இங்கும் ``பூசனை`` என்றது அது நிகழ்ந்தமையை உணர்த்தும் அடையாளங்களை.
துவர் - தளிர்களை.
`சாத்தினவன் அன்பினால்தான் செய்திருக்க வேண்டும்` என்னும் கருத்தால் அவற்றை உடனே எடுத்தெறியவில்லை.
மறித்தும் - நாம் பூசைசெய்து போன பின்பும்.
`இவ்வாறு செய்தவன் யாவன்` என அறிவாராய்ச் சிறிது நேரம் ஒளிந்திருந்து பார்த்தவர் கண்ணப்பர் வருகையைக் கண்டு நடுங்கிப் பின் அவர் செய்தவற்றையெல்லாம் பார்த்துவிட்டுத் தம் இடத்திற்குச் சென்று விட்டார்.
செல்லும் முன் பவித்திர பூசையைச் செய்ய வேண்டுவது தம் கடமை` எனக் கொண்டு அவ்வாறு செய்து சென்றார் என்பது பின்பு அவர், ``நாள் தொறும் நான்செய் பூசனை தன்னை`` எனக் கூறினமையால் விளங்கும்.
``போயின வண்ணம்`` என்பதன்பின் `கண்டு` என ஒருசொல் வருவிக்க.
`ஈங்கொரு வேடுவன்` என்பது முதல் ``இட்டுப்போம் அது`` என்பது முடிய உள்ளவை சிவகோசரியார் கண்ணப்பர் செய்தவைகளையெல்லாம்.
ஊகித்தறிந்து இறைவன்பால் எடுத்துக் கூறி முறையிட்டுக் கொண்டது.
`உனக்கு அழகா இவை?` என்க.
``என்றும்`` என்பதற்கு, `என்றாயினும்` என உரைக்க.
`இவ்வாறான செயல் என்றா யினும் உனக்கு இனிதாகுமோ` என்றபடி.
``இனிதே`` என்னும் ஏகாரம் வினாப் பொருட்டு.
`என் உன் திருக்குறிப்பு` என்க.
`என்னுந் திருக் குறிப்பு` என்பது பாடம் அன்று.
``என்று அவன் சென்ற`` என்ற அநு வாதத்தால், `என்று முறையிட்டுவிட்டு அவன் சென்றான்` என்பது பெறப்பட்டது.
அடி - 90-116: அல் - இரவு `அந்தணன் தனக்குக் கனவில்` என்க.
``பிறை யணி`` என்பது முதல், ``மருங்கின்`` என்பது முடிய உள்ள பகுதி இறைவன் திருவுரு வருணனை ``முடி மிடற்றுக் கை நாட்டத்து ஆக விடை மருங்கு`` என்பன பலபெயர் உம்மைத் தொகையாய் ஒரு சொல் நீர்மைப்பட்டு, ``திருவுரு`` என்பதனோடு இரண்டாவதன் உருவும் பயனும் உடன் தொக்க தொகையாகத் தொக்கன.
இரண்டாவதன் பெயர்த் தொகையாகலின், சிலவிடத்துச் சாரியை களையும் பெற்றது.
ஆகம் - மார்பு.
அஃது உம்மைத் தொகை நிலைப் புணர்ச்சியில் மகர ஈறு கெட்டு நின்றது.
``உமையொடு`` என்பதில், கூடிய` என ஒருசொல் வருவிக்க.
மருங்கு - பக்கம்.
``காட்டியருளி`` என்பது ஒருசொல்.
புரிவு - விருப்பம்; கருணை `குணம்` என அடை யின்றிக் கூறியவழி அது நற்குணத்தையே குறிக்கும்.
அஃது இங்கு ஆகுபெயராய் அதனால் விளைந்த சிறப்புக்களைக் குறித்தது.
`அவன் வேடன் அல்லன்; மா தவன்` என்க.
முனி வனம் - முனிவனுக்கு உரித்தாயவனம்.
அது, பகுதிப் பொருள் விகுதி.
துவல் - தளிர்.
புனற்கு - புனற்கண்; உருபு மயக்கம்.
மா மணி - உயர்ந்த இரத்தினங்கள்.
அதற்கு - புனற்கு.
``உப்புனல்`` என்பதில் உகரச் சுட்டு மேலிடம் பற்றி வந்தது.
உரிஞ்சுதல் - உராய்தல், `உரிநுதல்` என்றல் பழைய வழக்கு.
புன் மயர் - கீழ்மையையுடைய மயிர்.
குசை - தருப்பை.
வழிபாட்டினை ஏற்பவற்றில் சிறப்புடையன திருவடிகளேயாதலின்.
``நம் அடிக்கு`` என அவற்றையே கூறினார்.
தருப்பையின் பொதிந்த - தருப்பையால் நிரம்பிய.
`செய்யப்பட்டு முடிந்த` என்றபடி.
அங்குலி- மோதிரம்; பவித்திரம், `பவித்திரத்தோடு பொருந்த எடுத்துத் தூவப் பட்ட அலர்; மலர்` என்க.
நல் மாதவர் - சைவ முனிவர்.
அவர் செய்யும் வேள்வியில் அவிசாய் அமைவன நெய், பால், தயிர் அல்லது ஊனாகாமை பற்றி.
``நல் மா தவர் இட்ட அவி ஊன் அவையே`` என்னாது, ``நெய் பால் அவியே`` - என்றார்.
``இது`` என்றது, கூறப் பட்ட அனைத்தையும் தொகுத்து, `இந்நிலைமை` என்றவாறு.
`எனக்கு இந்நிலைமை` என இறைவன் கூறியதனால், `ஏனையோர் பலர்க்கும் அவையெல்லாம் மிக இழிந்தனவாம்` என்றதாயிற்று.
எனவே, `அன்போடு கூடிய வழி எவையும் பூசையாம்` என்பதும், `அன்போடு கூடாதவழி எதுவும் பூசையாகாது` என்பதும் கூறப்பட்டனவாம்.
இவை பற்றியே.
நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்;
பொக்கம் மிக்கவர் பூவும்நீ ரும் கண்டு
நக்கு நிற்கும் அவர்தம்மை நாணியே
உள்ளம் உள்கலந் தேத்தவல் லார்க்கலால்
கள்ளம் உள்ளவ ருக்கருள் வான்அலன்;
வெள்ள மும்அர வும்விர வும்சடை
வள்ள லாகிய வான்மியூ ரீசனே
யாவ ராயினும் அன்ப ரன்றி
அறியொ ணாமலர்ச் சோதியான்
ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண்
ஆரேனும் காணா அரன்
அன்பேஎன் அன்பேஎன்று அன்பால் அழுதரற்றி
அன்பே அன்பாக அறிவழியும் - அன்பன்றித்
தீர்த்தம், தியானம், சிவார்ச்சனைகள் செய்வனவும்
சாத்தும் பழமன்றே தான்
என்றாற்போலும் தோத்திர சாத்திரங்கள் எழுந்தன.
இவ்வாற்றால் கண்ணப்பர் இட்ட பொருள்கள் பொருளால் இழிந்தனவே யாயினும் அவரது அன்பாகிய தகுதியால் அவை திவ்வியப் பொருள்கள் தரும் இனிமையை இறைவற்குத் தந்தன.
இதனானே அன்பின்றி யிடுவன திவ்வியமேயாயினும் இறைவற்கு அவை மிக இழிந்தனவேயாய் வெறுப்பைத் தருதல் பெறப்படும்.
இம்முறை உலகியலிலும் உள ஆதலை நினைக.
அடி - 117, 121: இப்பகுதி கனவு கண்ட பின் சிவகோசரியார் செய்தவற்றைக் கூறியது.
கூசியது.
தாம் உண்மையறியாது வெறுத்ததை நினைந்து.
``குளித்து`` என்றது உபலக்கணம் ஆதலின், `பிற கடன்களை முடித்து` என்பதும் கொள்க.
இதன் பின் `சென்று` என ஒருசொல் வருவிக்க.
அடி - 121, 125: இப்பகுதி கண்ணப்பர் காளத்தியப்பர்பால் வந்த நிலைமையைக் கூறியது.
``இரவி அழல் சிந்த`` என்றது, உச்சிப்போது ஆயினமையைக் குறித்தது.
தடிந்த உடும்பு - கொல்லப்பட்ட உடும்பு.
அது பாகமாக்கப்படவில்லை.
இறைவற்கு நகை தோற்றுவிக்க அன்பினால் கொண்டு வரப்பட்டது.
அடி - 125, 129: ``தான்`` என்பதை ஒழித்து ஓதுவதும், ஒரு கண்ணிலும் உம்மை சேர்த்து ஓதுவதும் பாடங்கள் அல்ல.
அடி - 130-147: இப்பகுதி இறைவன் கண்ணப்பரது அன்பைச் சிவகோசரியார்க்குக் காட்டுதற் பொருட்டுச் செய்ததையும், அதனால் கண்ணப்பர்பால் நிகழ்ந்த அருஞ் செயல்களையும் கூறியது.
நெக்கு நெக்கு இழிதல் - தடைகளைக் கடந்து கடந்து ஒழுகுதல்.
கனற்றி - துயரத்தால் மனம் புழுங்கி அரற்றி.
இத்தனை தரிக்கிலன் - இவ்வளவு பெருந் துன்பத்தைக் காண இனி நான் பொறேன், ``அப்பியும்`` என்னும் உம்மை, இதுவே இப்பொழுது இதற்கு இதுவே முடிவான மருந்து என்று எண்ணியதையும், ``காண்பன்`` என்றது `செய்து பார்ப் போம்; பின்பு ஆகட்டும்` என்று துணிவு கொண்டதையும் குறித்தன.
ஐயமாயவழியும் செய்யத் துணிந்தது, அவரது அளவிலா ஆர்வத்தைக் காட்டுகின்றது.
நிற்பது ஒத்து - நிற்பது போன்று.
என்றது, `கண்ணை அப்பியதனால் குருதி நிற்கவில்லை; ஒழுகவிட்ட குருதியை இதனை அடுத்து `நாயனார் தமது மற்றைக் கண்ணிலும் வடிக்கணை மடுத்தார்` எனக் கூறியதனால், `இறைவன் குருதி நின்ற கண் நிற்க.
தனது மற்றைக் கண்ணில் குருதியை ஒழுக விட்டான்` என்பது உய்த்துணர வைக்கப்பட்டதாம்.
அங்ஙனம் அல்லாக்கால் முன்பு, ``ஆங்கு ஒருகண் உதிரம் ஒழுக நின்றனன்`` என்றது பழுதாம் ஆகலின்.
அடி - 148-158: இவ் இறுதிப் பகுதி இறைவன் கண்ணப்பரது அரிய செயலை ஆற்றமாட்டாது விரைந்து அவருக்கு அருள் புரிந்தமையைக் கூறியது.
அன்புடைத் தோன்றல் - அன்பராயினார் எல்லாரினும் தலையாயவன்.
``தோன்றல்`` என்றதும் விளி.
இறுதியிலும், ``திருக்கண்ணப்பனே`` என்றது, தொடக்கத்திற் குறித்த அப்பெயரை அதற்குரிய காரணத்தை விளக்கிக் கூறி முடித்தவாறு.
தனி வெண்பா, பெரியபுராணத்தை ஓதி உணர்ந்த பிற்காலத் தவரால் செய்து சேர்க்கப்பட்டது.
நக்கீரதேவ நாயனார் அருளிய
திருக்கண்ணப்ப தேவர் திருமறம் முற்றிற்று.

பண் :

பாடல் எண் : 1

பரிவின் தன்மை உருவுகொண் டனையவன்
போழ்வார் போர்த்த தாழகச் செருப்பினன்
குருதி புலராச் சுரிகை எஃகம்
அரையிற் கட்டிய உடைதோற் கச்சையன்
தோல்நெடும் பையில் குறுமயிர் திணித்து

வாரில் வீக்கிய வரிகைக் கட்டியன்
உழுவைக் கூனுகிர்க் கேழல்வெண் மருப்பு
மாறுபடத் தொடுத்த மாலையுத் தரியன்
நீலப் பீலி நெற்றி சூழ்ந்த
கானக் குஞ்சிக் கவடி புல்லினன்
முடுகு நாறு குடிலை யாக்கையன்
வேங்கை வென்று வாகை சூடிய
சங்கரன் றன்இனத் தலைவன் ஒங்கிய
வில்லும் அம்பும் நல்லன ஏந்தி
ஏற்றுக் கல்வனம் காற்றில் இயங்கி
கணையில் வீழ்த்துக் கருமா அறுத்து
கோலின் ஏற்றிக் கொழுந்தீக் காய்ச்சி
நாவில் வைத்த நாட்போ னகமும்
தன்தலைச் செருக்கிய தண்பளித் தாமும்
வாய்க்கல சத்து மஞ்சன நீரும்
கொண்டு கானப் பேருறை கண்ணுதல்
முடியிற் பூசை அடியால் நீக்கி
நீங்காக் குணத்துக்
கோசரிக் கன்றவன் நேசங் காட்ட
முக்கண் அப்பனுக் கொருகணில் உதிரம்

தக்கி ணத்திடை இழிதர அக்கணம்
அழுது விழுந்து தொழு தெழுந் தரற்றிப்
புன்மருந் தாற்றப் போகா தென்று
தன்னை மருந்தென்று மலர்க்கண் அப்ப
ஒழிந்தது மற்றை ஒண்திரு நயனம்
பொழிந்த கண்ணீர்க் கலுழி பொங்க
அற்ற தென்று மற்றக் கண்ணையும்
பகழித் தலையால் அகழ ஆண்டகை
ஒருகை யாலும் இருகை பிடித்து
ஒல்லை நம்புண் ஒழிந்தது பாராய்

நல்லை நல்லை எனப்பெறும்
திருவேட் டுவர்தந் திருவடி கைதொழக்
கருவேட் டுழல்வினைக் காரியங் கெடுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி -1: பரிவு - அன்பு, பரிவின் தன்மை - பரிவாகிய பண்பு, இன், வேண்டாவழிச் சாரியை.
இவ்அடியையே பற்றிச் சேக்கிழார் ``அன்பு பிழம்பாய்த் திரிவார்`` எனவும், ``அவனுடைய வடிவெல்லாம் நமபக்கல் அன்பு`` எனவும் அருளினமை காண்க.
அடி-2: போழ் வார் போர்த்த - தோலை வாரால் தைத்த. `போழ்` என்னும் முதனிலைத் தொழிற் பெயர் ஆகுபெயராய்ச் செயப்படு பொருளைக் குறித்தது. போழ்தல் - உரித்தல். தாழ் அகச் செருப்பு - தாழ்ந்த உள்ளிடத்தையுடைய செருப்பு.
அடி- 3: சுரிகை எஃகம் - குற்றுடைவாளாகிய படைக்கலம். எஃகம் - கூர்மை. அதுவும் ஆகுபெயராய், அதனையுடைய படைக் கலத்தைக் குறித்தது. `எஃகத்தோடு கட்டிய` என உருபு விரித்துரைக்க.
அடி - 4: `உடையாகிய தோலின்மேல் கச்சையை உடையன்` என்க. `உடைத் தோல்` என்பதில் தகர ஒற்றுத் தொகுத்தலாயிற்று.
அடி-6: `வீக்கிய வாரின் வரி` என மாற்றிக் கொள்க. வீக்கிய - கட்டி முடிந்த, வாரின் வரி - வாரால் திரிக்கப்பட்ட கயிறு. கட்டியன் - கட்டினவன்; கட்டியிருப்பவன்.
அடி-7: உழுவைக் கூர்ன் உகிர் - புலியினது வளைந்த நகம் கேழல் வெண் மருப்பு - பன்றியின் வெள்ளிய கொம்பு(பல்). இவைகளைத் தொடுத்த மாலை` என்க.
அடி-8: மாறுபடத் தொடுத்தல் - ஒன்றையிடையிட்டு மற்றொன்றைத் தொடுத்தல். `மாலையோடு உத்தரியத்தை யுடைய வன்` என்க. உத்தரியம் - மேலாடை. `அது புலித் தோல்` என்பது, மேல், ``உழுவைக் கூன் உகிர்` என்ற குறிப்பாற் பெறப்பட்டது.
அடி-10: கானக் குஞ்சி - காடுபோன்ற தலை மயிர். கவடி- பல கறை; அஃது அவை பல கோத்த மாலை. புல்லினன்- பொருந்தியவன்.
அடி-11: முடுகு - முடை நாற்றம்; ``முடுகு நாறிய வடுகர்``* என்றார் சுந்தரரும். குடிலம் - வளைவு. குடிலை - வளைந்துள்ளது; `கூன்` என்றபடி. வலை முதலியவற்றைச் சுமந்து, முதுகு கூனா யிற்றாம்.
அடி- 12,13: வேங்கை - புலி. `புலிகளை அஞ்சாது சென்று கொன்று வெல்லுதலால் வேடுவர் சிவன் குலத்தவர்` என நகை தோன்றக் கூறியவாறு. தலைவன், அக்குலத்தார்க்கு அரசன், ``தலைவன்`` என்றது, `தலைவனாயினான் ஒருவன்` என்றபடி. இஃதே எழுவாய். எனவே, மேற் போந்தன எல்லாம் இவ் ஒரு பொருள்மேல் வந்த வினைப் பெயர்களும், வினைக் குறிப்புப் பெயர்களுமாய், இவனது நிலையை வருணித்த வருணனைகளாயின. இனி, இவன் செய்த செயல்கள் கூறப்படும்.
அடி-14: இவன் தாங்கிய வில்லும், அம்பும் கொலைக் கருவிகளே யாயினும் இறை வழிபாட்டிற்குத் துணையாய் அமைந்தமை பற்றி, ``நல்லன்`` என்றார்.
அடி- 15: ஏற்றுக் கல் - உயரமான மலை. காற்றுப் போலும் உடல் விரைவு. `நாதனார் பசி மிகுதற்கு முன்பு விரைந்து சென்று ஊட்டுதல் வேண்டும்` என்னும் உள்ள விரைவினால் நிகழ்ந்தது. அடி-16: கரு மா - பன்றி. ``இழிவாய கரு விலங்கு``* எனச் சேக்கிழாரும் கூறினார்.
அடி-17: கோல் - அம்பு.
அடி-18: நாட் போனகம் - அன்றைய உணவு. `புதிது புதிதாக அமைக்கும் உணவு` என்பதாம்.
அடி-19: பள்ளித் தாமம் - பூ மாலை. அஃது இடைக் குறைந்து நின்றது. இங்குப் பள்ளித் தாமம் சருகுகள்.
அடி-20: `வாய் கலசம்`` என்றது `வாயே கலசமாயிற்று`` என்பதாம். உருவகம் அன்று.
அடி-21: `கொண்டு சென்று` என ஒரு சொல் வருவிக்க. வினை முதனிலைகள் திரிந்து பெயராதல் போல. இங்கு `பெரு` என்னும் பண்புப் பகுதி `பேர்` எனத் திரிந்து பெயராகி பெரிதாகிய இடத்தைக் குறித்தது. கானப் பேர் - காடாகிய பெரிய இடம். அது காளத்தி மலை.
அடி- 22: செருப்பினை, ``அடி`` என்றது தகுதி வழக்குப் பற்றி.
அடி-23: நீங்காக் குணம் - நீங்காமையாகிய பண்பு. எனவே, பெயரெச்சம் பண்புப் பொருட்டாய் வந்ததாம்.
அடி - 26: கோசரி, `சிவகோசரியார்` என்னும் அந்தணர். காட்ட- காட்டுதற்கு.
அடி-25: ``அப்பனுக்கு`` என்பதன் பின்னும் `அவன் செயலால்` என்பது வருவிக்க.
அடி- 26: தக்கிணர் - வலப்பக்கம். ``ஒரு கண்`` என்றது `வலக் கண்` என்றபடி.
அடி- 28: புன் மருந்து, நோயின் வலிமையை நோக்க மெலிவுடைத்தான அயல் மருந்து. - சாதி யொருமை. `புண் மருந்து` எனப் பாடம் ஓதுதல் ஆம். ஆற்றப் போகாது. கண்ணிற் புண்ணினை ஆற்ற வல்லது ஆகாது.
அடி- 29: `தன்னையே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்த லாயிற்று. ``தான்`` என்றது தனது உடம்பினை. ``மலர்க்கண்`` என்பதில் மலர், மென்மை பற்றி வந்த உவமை. உறுப்புக்கள் பலவற்றினும் கண்ணினது மென்மையை விதந்த படி. ``பகழித் தலையால் அகழ`` எனப் பின்னர் வருதலின், ``அப்ப`` என்றது அம்பாற் பெயர்த்து அப்பியதாயிற்று.
அடி- 30: உதிரம் இழிதல் ஒழிந்தது` என்க.
அடி- 31: `பொழிந்த கலுழி, கண்ணீர் போலும் கலுழி` எனத் தனித் தனி இயைக்க. `கண்ணீர் போலும் கலுழி` என்றதனால் அது மேற் கூறிப் போந்த உதிரக் கலுழியாயிற்று. பொங்க - ஒரு காலைக்கு ஒரு கால் மிகுவதாக.
அடி- 32: அற்றது - கை கண்டு. அறுதியிட்டு உணர்ந்த மருந்து என்று - என்று தெளிந்த.
அடி- 33: ஆண் தகை - எல்லாம் வல்ல தன்மையை உடையவன்; இறைவன்.
அடி-34: ``ஒரு கையாலும்`` என்னும் முற்றும்மை, முயன்று பிடித்தமை குறித்தது. `இருகையும்` என்பதே பாடம் போலும்!
அடி-35: ஒல்லை - நீ அப்பும் முன்பே.
அடி-36: ``நல்லை! நல்லை!!`` எனப் புகழப் பெற்றார் என்றது, `புகழ்ந்து உயர் பதம் அருளினார்` என்னும் குறிப்பினது. `அப்பத மாவது, தம் அருகிலே இருத்திக் கொண்டது` எனப் பெரியபுராணம் கூறிற்று.
அடி-37: ``திருவேட்டுவர்`` என்பது உயர்வு பற்றி வந்த ஒருமைப் பன்மை மயக்கம். திருவேட்டுவர் - திருவருளுக்கு உரியவரான வேட்டுவர்.
அடி-38: கரு - பிறவி. வேட்டு - மேலும் மேலும் விரும்பி. உழல் காரியம் - உழல்வதாகிய செயல். எனவே, இது தொழில் மேல் தொக்க வினைத் தொகையாம். கருவி இன்றிக் காரியம் கூடாது ஆகலானும், உலகப் பயன்கள் பிறவியைக் கருவியாக உடைமையானும் `உலகப் பயனை விரும்புவோர் யாவரும் பிறவியை விரும்புவோரேயாவர்` என்னும் கருத்தினால், உலகப் பயனை விரும்புவோரைப் பிறவியை விரும்புவோராகவே கூறினார். `கண்ணப்ப நாயனாரை வணங்கு பவர்க்கு உலகப் பற்று நிகழாது, திருவருட் பற்றே நிகழும் என்றபடி.
இவ் இரு திருமறங்களும் பின்னர்ச் சேக்கிழார் கண்ணப்பரது வரலாற்றை விளங்கக் கூறுதற்குத் துணையாய் நின்றமையறிக.
கல்லாடதேவ நாயனார் அருளிய
திருக்கண்ணப்ப தேவர் திருமறம் முற்றிற்று.

பண் :

பாடல் எண் : 1

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மூத்த நாயனார் - மூத்த பிள்ளையார் (ஆனை முகத்தான்). திரு ஆக்கும்; செஞ்சொற் பெருவாக்கும், பீடும் பெருக்கும்; உரு ஆக்கும்; ஆதலால் அவனைக் காதலால், வானோரும் தம் கை கூப்புவர் - எனக் கூட்டுக.
திரு - செல்வம். செய் கருமம் - செய்யத் தொடங்கும் செயல், கை கூட்டும் - இடையூறின்றி இனிது முடியச் செய்வான். செஞ்சொல் பெருவாக்கு - குற்றமற்ற சொற்களை வழங்கும் உயர்ந்த சொல் வன்மை. பீடு - பெருமை; புகழ். உரு - அழகு. ``வானோரும்`` என்னும் உம்மை உயர்வு சிறப்பு. அதனால் ஏனையோர் கைகூப்புதல் தானே அமைந்தது. ``கை கூப்புவர்`` என்பது `தொழுவார்` என்னும் பொருளது ஆதலின், அஃது ``ஆனை முகத்தானை`` என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று.
`செய் கருமம் கை கூட்டும்; ஆதலால் கைகூப்புவர்` என்று, `பிள்ளையாரைத் தொழாதபொழுது செய் கருமம் கை கூடுதல் அரிது` என்னும் குறிப்பினது.
இத்திருப்பாடலையே பற்றிப் பிற்காலத்தில் ஔவையார்,
வாக்குண்டாம்; நல்ல மனம் உண்டாம்; மாமலராள்
நோக்குண்டாம்; மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு*
என அருளிச் செய்தமை அறியத் தக்கது.

பண் :

பாடல் எண் : 2

கைக்கும் பிணியொடு கான் தலைப்படும் ஏல்வையினில்
எய்க்கும் கவலைக் கிடைந்தடைந் தேன்வெம்மை நாவளைக்கும்
பைக்கும் அரவரை யான்தந்த பாய்மத யானைபத்துத்
திக்கும் பணிநுதற் கண்திரு வாளன் திருவடியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பிணியொடு, கவலைக்கு இடைந்து (யான்) அரவு அரையான் தந்த யானையாகிய நுதற்கண் திருவாளனது திருவடி களையே (புகலிடமாக) அடைந்தேன்` எனக் கூட்டுக. `அதனால், யான் பிணியும் கவலையும் இலனாயினேன். ஆதலால் நீவிரும் அவனது அடிகளையே புகலிடமாக அடைமின்` - என்பது குறிப் பெச்சம்.
கைத்தல் - கசத்தல்; அஃது இங்கு, வெறுக்கப்படுதலைக் குறித் தது. பிணி - நோய். ஒடு, எண் ஒடு. மேற்காட்டிய ஔவையார் பாட்டி லும், ``மேனி நுடங்காது`` என வந்தமை காண்க. தலைப்படுதல் - சந்தித்தல். ஏல்வை - பொழுது. எய்த்தல் - இளைத்துச் செயல் அறுதல். எய்க்கும் கவலை - எய்த்தலால் உண்டாகும் கவலை. எனவே, ``எய்க்கும்`` என்னும் பெயரெச்சம் காரணப் பொருளில் வந்ததாம். இடைந்து - தோற்று. வெம்மை - சீற்றம். `வெம்மையோடு` என உருபு விரிக்க. பைக்கும் - படம் எடுத்து ஆடும். `பணி திருவாளன்` என இயையும்.

பண் :

பாடல் எண் : 3

அடியமர்ந்து கொள்வாயே நெஞ்சமே அப்பம்
இடிஅவலோ டெள்உண்டை கன்னல் வடிசுவையில்
தாழ்வானை ஆழ்வானைத் தன்னடியார் உள்ளத்தே
வாழ்வானை வாழ்த்தியே வாழ்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அடி அமர்ந்து கொள்வாயே`` என்பதை இறுதிக்கண் கூட்டுக. இடி - மா. கன்னல் - கரும்பு. வடிசுவை - இவைகளினின்றும் ஒழுகுகின்ற (மிகுகின்ற) சுவை. தாழ்வான் - உள்ளம் தங்குகின்றவன். ஆழ்வான் - அழுந்தி நுகர்வான். பணியாரங்களை மிக விரும்புவர் மூத்த பிள்ளையார். ``அவனை வாழ்த்தியே வாழ்`` என்றது. `வாழ்த் தினால் அல்லது வாழ்வு உண்டாகாது` என்றதாம். ஆகையால், `நெஞ்சமே, அவனுடைய அடிகளை விரும்பி உன்னுள் இருத்திக் கொள்வாயோ` என்க. அமர்தல் - விரும்புதல், ஏகாரம், வினாப் பொருட்டு. ஏகாரத்தைத் தேற்றப் பொருட்டாக்கி, `கொள்வாய்` என ஏவல் முற்றாக உரைப்பினும் அமையும்.

பண் :

பாடல் எண் : 4

வாழைக் கனிபல வின்கனி மாங்கனி தாஞ்சிறந்த
கூழைச் சுருள்குழை அப்பம்எள் ளுண்டையெல் லாந்துறுத்தும்
பேழைப் பெருவயிற் றோடும் புகுந்தென் உளம்பிரியான்
வேழத் திருமுகத் துச்செக்கர் மேனி விநாயகனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பல - பலா. கூழைச் சுருள் - இரு முனைகள் குவிந்த, உள்ளே பூரணம் இடப்பட்ட கொழுக்கட்டை. குழை - குழைவு; பாயசம். துறுத்தல் - திணித்தல். `துறுத்தும் வயிறு` என இயையும். ேபழைப் பெருவயிறு - பெட்டகம் போலும் பெரிதாகிய வயிறு. ``வயிற்றோடும்`` என்னும் இறந்தது தழுவிய எச்ச உம்மை, நன்கு புகுந்தமையைக் குறித்தது. `என்றன் உளம் புகுந்து பிரியான்` என மாற்றிக் கொள்க. வேழம் - யானை. செக்கர் - சிவப்பு. `செக்கர் வானம்` எனினும் ஆம்.

பண் :

பாடல் எண் : 5

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கைதணி விப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியை, `கண்ணின் கண்டு` என ஒரு சொல் வரு வித்து, `கண்டு, கனிந்து பணிமின்` என மாற்றிக் கொள்க. வேட்கை - ஆசை. ``தணிவிப்பான்`` என்பதற்கு, `நிரப்புவான் போக்குவான்` என இரு பொருளும் கொள்க. கனிதல் - மகிழ்தல். அஃது அரும்பொருள் எதிர்ப்பட்டமை பற்றித் தோன்றுவது. `பணிந்தால், மேற்கூறிய பயன்களைப் பெறலாம்` என்பது கருத்து, ``விநாயகனே`` என்னும் சொல் ஒரு பொருளிலே பலமுறை வந்தது. இது சொற்பொருள் பின்வருநிலையணி.

பண் :

பாடல் எண் : 6

கனிய நினைவொடு நாடொறும் காதற் படும்அடியார்க்
கினியன் இனியொ ரின்னாங் கிலம்எவ ரும்வணங்கும்
பனிவெண் பிறைநறுங் கொன்றைச் சடைப்பலி தேரியற்கை
முனிவன் சிறுவன் பெருவெங்கொல் யானை முகத்தவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``எவரும் வணங்கும்`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. `எவரும் வணங்கும் முனிவன்` என இயையும். முனிவன், சிவபெருமான். `பிறைச் சடை, கொன்றைச் சடை` என்க. பலி தேர்தல், பிச்சையைப் பலவிடத்தும் சென்று பெறுதல். இயற்கை - இயல்பு. ``பெரு வெங் கொல்`` என்பது யானைக்கு எய்திய இன அடை. கொல் யானை - கொல்லும் தன்மை வாய்ந்த யானை. ``நினைவு`` என்றது அதனைச் செய்யும் நெஞ்சினை. `நினைவு கனிய, அதனொடும் காதற்படும் அடியார்க்கு` என்க. ``இனி`` என்பது, வினைமாற்றின் கண் வந்தது. ஒருவுதல் - நீங்குதல். ஆம் - உண்டாகும். `கிலம்` `குறை` என்னும் பொருளதாகிய வடசொல். இதன் மறுதலையே `அகிலம்` என்பது `அவனை ஒருவின் கிலம் ஆம்` என்க. `அது, சிவனது தேர் அச்சு முரிந்தமை முதலியவற்றால் அறியப்படும்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 7

யானை முகத்தான் பொருவிடையான் சேய்அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேல்நிகழும்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன்என்
உள்ளக் கருத்தின் உளன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பொரு விடை - போர் புரியும் இடபம். சேய் - மகன். மானம் - பெருமை. மணி - நீலமணி. நீல மணியின் வண்ணம்போலும் வண்ணத்தை உடையவன். மாயோன். மா - பெருமை, மருகன், உடன்பிறந்தாள் மகன். நிகழும் - வழிந்து ஓடுகின்ற (மதம்) `குமிழி வெள்ளம்` என மாற்றுக. வெள்ள மதம் - வெள்ளம் போலும் மத நீர். உள்ளக் கருத்து - உள்ளத்தில் எழுகின்ற கருத்து. அதன்கண் உளனாதலாவது, கருதப்படும் பொருள் அவனேயாய் இருத்தல்.

பண் :

பாடல் எண் : 8

உளதள வில்லதொர் காதல்என் நெஞ்சில்வன் நஞ்சமுண்ட
வளரிள மாமணி கண்டன்வண் டாடுவண் கோதைபங்கத்
திளவளர் மாமதிக் கண்ணியெம் மான்மகன் கைம்முகத்துக்
களகள மாமதஞ் சேர்களி யானைக் கணபதியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`என் நெஞ்சில், கணபதிகண் அளவில்லதோர் காதல் உளது` என இயைத்து முடிக்க. இளமை, இங்கு அதன் கண் உள்ள அழகைக் குறித்தது. ``வளர் இள`` என்றது, `பின்னும் வரும் இளமை` என்றவாறு. மா மணி - நீல மணி. `நஞ்சம் உண்ட கண்டம்` என இயையும். கோதை - மாலை. அஃது அதனை உடைய உமாதேவியைக் குறித்தது. `பங்கத்து எம்மான்` என இயையும். அத்து, வேண்டா வழிச் சாரியை. அஃது இரண்டாவதன் பொருள் குறித்து நின்றது. கண்ணி, முடியில் அணியும் மாலை. கை - தும்பிக்கை. `களகள` என்பது ஒலிக் குறிப்பு. `சோர் மாமதம்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். மா மதம் - கரிய மதம். களிமதம் - மத மயக்கம். ``யானைக் கணபதி`` என்பது `செஞ்ஞாயிறு` என்பதுபோல இயைபின்மை நீக்கிய விசேடணத்தையுடைய இருபெயர் ஒட்டு.

பண் :

பாடல் எண் : 9

கணங்கொண்ட வல்வினைகள் கண்கொண்ட நெற்றிப்
பணங்கொண்ட பாந்தட் சடைமேல் மணங்கொண்ட
தாதகத்த தேன்முரலுங் கொன்றையான் தந்தளித்த
போதகத்தின் தாள்பணியப் போம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கண் கொண்ட நெற்றியையும், சடைமேல் கொன்றையையும் உடையவன். தந்தளித்த போதகத்தின் தாள் பணிய, கணங்கொண்ட வல்வினைகள் போம்` என இயைத்து முடிக்க. கணம் கொண்ட - கூட்டமாகத் திரண்ட. வல்வினைகள் - வலியனவாகிய வினைகள்; சஞ்சிதம். பணம் - பாம்பின் படம். பாந்தள் - பாம்பு. `பாந்தளையுடைய சடை` என்க. தாது அகத்த - மகரந்தத்தை உள்ளே உடைய. `தாதகத்த கொன்றை, தேன் முரலுங் கொன்றை` என்க. தேன், ஒருவகை வண்டு. முரலுதல் - ஊதுதல். அளித்த - தேவர் முதலியோரைக் காத்த, ``அளித்த போதகம்`` எனப் பெயரெச்சம் கருவிப் பெயர் கொண்டது. போதகம் - யானை.
கைவேழ முகத்தவனைப் படைத்தான் போலும்!
கயாசுரனை அவனால்கொல் வித்தார் போலும்!*
என அப்பரும் அருளிச் செய்தார்.
அல்லல்போம்; வல்வினைபோம்; அன்னைவயிற் றிற்பிறந்த
தொல்லைபோம்; போகாத் துயரம்போம்; - நல்ல
குணம்அதிக மாம்அருணைக் கோபுரத்தின் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்
எனப் பிற்காலத்து வெண்பா ஒன்றும் கூறிற்று.

பண் :

பாடல் எண் : 10

போகபந் தத்தந்தம் இன்றிநிற் பீர்புனை தார்முடிமேல்
நாகபந் தத்தந்த நாள்அம் பிறையிறை யான்பயந்த
மாகபந் தத்தந்த மாமழை போல்மதத் துக்கதப்போர்
ஏகதந் தத்துஎந்தை செந்தாள் இணைபணிந் தேத்துமினே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

போக பந்தம் - உலக இன்பமாகிய கட்டு. (அதில்) அந்தம் இன்றி நிற்பீர் - முடிவு இல்லாமல் இருந்து கொண்டே இருப்பவர்களே! இது விளி. நாக பந்தம் - பாம்பாகிய கட்டு. அதனை யுடைய இறையான் சிவன். அந்த, பண்டறி சுட்டு. `அந்த இறையான்` என இயையும். நாள் அம் பிறை - முதல்முதலாகத் தோன்றுகின்ற மூன்றாம் நாட் பிறை. கபந்தம் - கழுத்து. கன்ன மதம் கழுத்து வழியாக மழைபோல ஒழுகுகின்றமதம். அந்த மா மழை - உலக முடிவுக் காலத்தில் பெய்கின்ற பெருமழை. கதம் - கோபம். கதப் போர், யானை இனம் பற்றிக் கூறியது. ``ஏத்துமின்`` என்றது, `ஏத்தினால் போக பந்தத் தில் அந்தம் இன்றி நில்லாது, அதற்கு அந்தம் (முடிவு) உளதாகும்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 11

ஏத்தியே என்னுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனிவெண் கோட்டு மதமுகத்துத் தூத்தழல்போல்
செக்கர்த் திருமேனிச் செம்பொற் கழல்ஐங்கை
முக்கட் கடாயானை முன்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`என் உள்ளம் எப்பொழுதும் யானைமுன் ஏத்தியே நிற்கும்` என இயைத்து முடிக்க. ஆல், அசை. மா - பெருமை. தனி - ஒற்றை. செக்கர் - சிவப்பு. முன்னர் `மதம்` கூறினமையால், பின்னர். ``கடாம்`` என்றது, களிற்றினைக் குறிக்கும் குறிப்பாய் நின்றது. தனிக் கோடு, செக்கர் மேனி, கழல், ஐங் கை இவை பிற யானைகளினின்று பிரித்த, பிறிதின் இயைபு நீக்கிய விசேடணங்கள். `அங்கை` என்பது பாடம் அன்றாம்.

பண் :

பாடல் எண் : 12

முன்னிளங் காலத்தி லேபற்றி னேன்வெற்றி மீன்உயர்த்த
மன்னிளங் காமன்தன் மைத்துன னேமணி நீலகண்டத்
தென்னிளங் காய்களி றேஇமை யோர்சிங்க மே,உமையாள்
தன்னிளங் காதல னேசர ணாவுன் சரணங்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`உன் சரணங்களே சரணா முன் இளங் காலத்திலே பற்றினேன்` என முடிக்க. மீன் - மீன் எழுதப்பட்ட கொடி உயர்த்த - உயர்த்துக் கட்டிய. மன் - தலைவன். இரண்டாவதான இளமை அழகைக் குறித்தது. விநாயகருக்கு மன்மதன் அம்மான் மகன் ஆதல் பற்றி அவரை, `அவனுக்கு மைத்துனன்` என்றார். மணி நீலகண்டம் - நீல மணிபோலும் நீலகண்டம். விநாயகருக்கும் நீலகண்டம் உண்மை,
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் *
என்னும் ஔவையார் வாக்காலும் அறிக. என் - எனது. இங்ஙனம் உரிமை பாராட்டியது அன்பினால், `இளங் களிறு, காய் களிறு` என்க. காய்தல் - இனம் பற்றி வந்த அடை. ``சிங்கமே`` என்றது, ``வடிவத்தில் யானையாய் இருப்பினும், வீரத்தில் சிங்கம்` என்றபடி. ஈற்றில் நின்ற இளமை பருவம் உணர்த்தியதன்றி, பிறப்புமுறை குறித்ததன்று.
காதலன் - மகன். இளமையிலேயே விடுவன விடுத்துப் பற்றுவன பற்றுதல் முற்றவம் உடையார்கன்றி ஆகாது. இவ்வாசிரியர், ``முன் இளங்காலத்திலே பற்றினேன்`` என்றமையால் அத்தகைய தவம் உடையாராதல் விளங்கும். முன் இளங்காலம் - பருவங்களில் முதலதாகிய இளமைப் பருவம். முன்னாயதனை ``முன்`` என்றது ஆகுபெயர். ``சரண்`` இரண்டில் முன்னது அடைக்கலம்; பின்னது திருவடி.

பண் :

பாடல் எண் : 13

சரணுடை யேன்என்று தலைதொட் டிருக்க
முரண்உடையேன் அல்லேன் நான்முன்னம் திரள்நெடுங்கோட்
டண்டத்தான் அப்புறத்தான் ஆனைமுகத் தான்அமரர்
பண்டத்தான் தாள்பணியாய் பண்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`முன்னம் திரள் நெடுங்கோட்டு ஆனை முகத்தான், அண்டத்தான், அப்புறத்தான், அமரர் பண்டத்தான் தாள் நான் பண்டு பணியா, - சரண் உடையேன் - என்று தலை தொட்டிருக்க முரண் உடையேன் அல்லேன்` என இயைத்து முடிக்க. முன்னம் திரள் - முகத்திற்கு முன்னே திரண்டு தோன்றுகின்ற. அண்டத்தான் - அனைத்து அண்டங்களிலும் உள்ளவன், (ஆயினும்) அப்புறத்தான் - அனைத்து அண்டங்கட்கும் அப்பாலும் உள்ளவன். பண்டத்தான் - அடையத்தக்க பொருளாய் உள்ளவன். சரண் - புகலிடம். முரண் - வலிமை. ``பண்டமாப் படுத்து என்னை`` 1 என்னும் அப்பர் திரு மொழியையும் காண்க.
பணிய - பணிந்து. `தலை தொடுதல்` என்பது சூளுரைத் தலைக் குறிப்பதொரு வழக்கு மொழி. `பண்டே பணிந்தேனாயினும், அந்நிலையில் - உன்னையே நான் சரணாக (புகலிடமாக) உடையேன் - என்று சூள் உரைக்கும் அளவிற்கு நான் உறுதி யுடையேன் அல்லேன்` என்பதாம். `அத்தகைய உறுதியை எனக்கு நீ அருளல் வேண்டும்` என்பது கருத்து.
நின்றன் வார்கழற்கு அன்பு எனக்கும் -
நிரந்தரமாய் அருளாய் 2
எனவும்,
``இறவாத இன்ப அன்பு வேண்டி`` எனவும் போந்தனவும் இக்கருத்தே பற்றியாம். 3

பண் :

பாடல் எண் : 14

பண்டம்தம் ஆதரத் தான்என் றினியன வேபலவும்
கொண்டந்த நாள்குறு காமைக் குறுகுவர் கூர்உணர்வில்
கண்டந்த நீண்முடிக் கார்மத வார்சடைக் கற்றைஒற்றை
வெண்தந்த வேழ முகத்தெம் பிரானடி வேட்கையரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கூர் உணர்வில்`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. கூர் உணர்வு - நுணுகிய ஞானம் `உணர்வில் கண்டு` என்க. ``அந்த`` என்பது பண்டறி சுட்டு. `அந்த எம் பிரான்` என இயையும். கார் மதம் - கரிய மத நீர். `மேகம் போலப் பொழியும் மதம்` என்றலும் ஆம். விநாயகருக்கும் சடைமுடி உள்ளது. `ஒற்றைத் தந்தம்` என இயையும். அடி வேட்கையார் - அடிக்கண் அன்பு செய்பவர். ``பண்டம்`` என்றும், ``தம் ஆதரத்தான்`` என்றும் உணர்ந்து குறுகலர் - என்க. பண்டம் - தமக்குப் பொருளாய் உள்ளவன். ஆதரத்தான் - அன்பிற்கு உரியவன். இனியன - இனிய சுவையுடைய பண்ணியங்கள். `கொண்டு குறுகுவர்` என்க. அந்த நாள் குறுகாமை - முடிவு நாள் உண்டாகாதபடி; `என்றும் நிரந்தரமாக` என்பதாம். குறுகுவர் - அடைவர்.

பண் :

பாடல் எண் : 15

வேட்கை வினைமுடித்து மெய்யடியார்க் கின்பஞ்செய்து
ஆட்கொண் டருளும் அரன்சேயை வாட்கதிர்கொள்
காந்தார, மார்பிற் கமழ்தார்க் கணபதியை
வேந்தா உடைத்தமரர் விண்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மெய்யடியார்க்கு வினை முடித்து இன்பம் செய் சேய்` என இயைக்க. வேட்கை வினை - விரும்பிய விருப்பத்தை ஏற்ற ெசயல். என்றது, `விரும்பிய செயல்` என்றபடி. சேய் - மகன். வாட் கதிர்- ஒளிக் கதிர். கதிராவது - எங்கும் பரந்து செல்வது. `கதிர் மார்பில் காந் தாரத்தார், கமழ் தார்` என்க. காந்தாரம் - (வண்டுகளின்) இசை. விண்- இங்குச் சிவலோகம். எனவே, அமரர், பதமுத்தி பெற்றவர் களாவார். `பத முத்தி பெற்றவர்கள் விநாயகரை வணங்கி வாழ்வர்` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 16

விண்ணுதல் நுங்கிய விண்ணும்மண் ணும்செய் வினைப்பயனும்
பண்ணுதல் நுங்கடன் என்பர்மெய் அன்பர்கள் பாய்மதமாக்
கண்ணுதல் நுங்கிய நஞ்சமுண் டார்கரு மாமிடற்றுப்
பெண்ணுதல் நும்பிரி யாஒரு பாகன் பெருமகனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

விண்ணுதல் - `விண்` என ஒலித்தல். நுங்கிய விண்- அங்ஙனம் ஒலிக்கும் ஒலியைத் தன்னுட் கொண்ட ஆகாயம். ``விண்`` என்பது அதன்கண் உள்ள உலகத்தையும், ``மண்`` என்பது அதனால் ஆகிய உலகத்தையும் முன்னர்க் குறித்துப் பின்னர் அவ்வுலகங்களில் வாழும் தேவரையும், மக்களையும் குறித்தலால் இருமடி யாகுபெயர். வினைப் பயனைப் பண்ணுதல் - தொடங்கிய செயலின் பயனை விளைவித்தல். அஃதாவது, அச்செயல் இடையூறின்றி இனிது முற்றுப் பெறச் செய்தல். பெண் தநுப் பிரியா ஒரு பாகன் - பெண்ணைத் தனது உடம்பினுள் பிரியாதவாறு ஒரு பாகத்தில் கொண்ட சிவபெருமான். `பிரியாது` என்னும் எதிர்மறை வினையெச்சத்தின் ஈறு தொகுத்தலா யிற்று. அவ்வெச்சம், ``பாகன்`` என்னும் வினைக்குறிப்புப் பெயரோடு முடிந்தது. பெருமகன் - மூத்த மகன். மெய் அன்பர்கள் - கண் நுதலை யும், கருமாமிடற்றையும், பெண் தநுப் பிரியா ஒரு பாகத்தையும் உடையவனுக்குப் பெருமகனாய்த் தோன்றியவனே! தேவரும், மக்களும் தொடங்கிய செயல்களை இடையூறின்றி இனிது முற்று வித்தலே உனது கடன் - என்பார்கள் என இயைத்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 17

பெருங்காதல் என்னோடு பென்னோடை நெற்றி
மருங்கார வார்செவிகள் வீசி ஒருங்கே
திருவார்ந்த செம்முகத்துக் கார்மதங்கள் சோர
வருவான்தன் நாமம் வரும்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`காதலையுடைய என்னோடு` என இரண்டாவது விரிக்க. ஓடை - நெற்றிப் பட்டம். நெற்றி மருங்கு ஆர - நெற்றியின் இரு பக்கங்களிலும் பொருந்தும்படி. வார் - நீண்ட. திரு - அழகு. `நெற்றி மருங்கு ஆரச் செவிகளை வீசி. முகத்தில் மதங்கள் சோர வருவான் தன் நாமம் என்னோடு வரும்` என இயைத்து முடிக்க. நாமம் உடன் வருதலாவது, ஓரிடத்தில் நில்லாது நடந்து சென்றாலும் நாமங்களை உச்சரித்துக் கொண்ட நடத்தலாம். ``செம்முகத்துக் கார்மதம்`` என்பது முரண் தொடை.

பண் :

பாடல் எண் : 18

வருகோள் தருபெருந் தீமையும் காலன் தமரவர்கள்
அரு கோட் டருமவ ராண்மையும் காய்பவன் கூர்ந்தன்பு
தருகோள் தருமர பிற்பத்தர் சித்தத் தறியணையும்
ஒருகோட் டிருசெவி முக்கண்செம் மேனிய ஒண்களிறே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வரு கோள் - தசா புத்திகளாகவும், பிறவாறாகவும் வந்து பற்றுகின்ற கிரகங்கள். அருகு ஓட்டரும் - அருகினின்றும் அப்பாற்போகும்படி துரத்த இயலாத. அரும், பண்படியாகப் பிறந்த குறிப்பு வினைப் பெயரெச்சம். அவர் காலன் தமர் (தூதுவர்). அன்பு தருகோள் தரும் மரபின் பத்தர் - அன்பினால் தரப்படும் கொள்கை யால் தரப்படும் நெறிமுறைகளையுடைய அடியார். `அன்பு காரண மாகவே வழிபடும் அடியார்கள்` என்றபடி. சித்தத் தறி - உள்ளமாகிய தறி; ``தறி`` என்றது அவர் கருது கோள் பற்றி, உருவகம் அன்று. `தறியை அணையும் களிறு` என இயையும். ``ஒரு கோட்டுச் செம் மேனிய களிறு`` என்றது, `இஃதோர் அதிசயக் களிறு` என்றபடி. களிறு- முகத்தால் யானையாகியவன். எனவே, ``களிறு`` என்றது `யானை போல்பவன்` என உவமை யாகுபெயர். ஆகுபெயர் அல்லாக்கால். ``காய்பவன்`` என உயர்திணை வினையோடு இயையாது. ஏகரம் பிரிநிலை. `களிறே தீமையும். ஆண்மையும் காய்பவன்` என இயைத்து முடிக்க. `ஆதலின் அவனையே அடைக` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 19

களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

களி - மதக் களிப்பு. மதம், இங்கு அருள். ``யானைக் கன்று`` என்பது, `கன்றாகிய யானை` என்னும் பண்புத் தொகை. முன்பின்னாகிய புணர்ச்சி. ``யானை`` என்பது பிறிதின் இயைபு நீக்க வரின், ஆறாம் வேற்றுமைத் தொகைப் புணர்ச்சியாம். இங்கு அவ்வா றில்லை. செம்பொன் ஒளியான் - செவ்விய பொன்னினது ஒளி போலும் ஒளியையுடையவன், அளியான் - அருளாளன். கண்ணல் - கருதல். மற்று, அசை, நல்லார் கடன் - நல்லொழுக்கம் உடையவர்கட்கு இன்றியமையாக் கடமைகள். `கடன் கணபதியைக் கண்ணுவதும்` கைத் தலங்கல் கூப்புவதும், அவன்தாள் நண்ணுவதும் என இயைத்து முடிக்க. நல்லார்க்கு இவைகளைக் கடனாகக் கூறியது, நல்லார் எண்ணியவற்றை இடையூறின்றி இனிது முடித்தற் பொருட்டும், தீயார் எண்ணியவற்றை இடை முரிவித்தற் பொருட்டுமே இறைவனால் தந்தருளப்பட்ட கடவுளாதல் பற்றி. இதனைத் ``தனதடி வழிபடு மவர்இடர் - கணபதி வர அருளினன்... ... இறையே`` என ஆளுடைய பிள்ளையார் அருளிச் செய்தமையான் அறிக.

பண் :

பாடல் எண் : 20

நல்லார் பழிப்பில் எழிற்செம் பவளத்தை நாணநின்ற
பொல்லா முகத்தெங்கள் போதக மேபுரம் மூன்றெரித்த
வில்லான் அளித்த விநாயக னேயென்று மெய்ம்மகிழ
வல்லார் மனத்தன்றி மாட்டாள் இருக்க மலர்த்திருவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நல்லார், இங்கு இரத்தின பரீட்சையில் வல்லவர், அவரால், `குற்றம் உடைத்து` என்று பழித்தல் இல்லாத பவளம் என்க. பவளத்து ஐ - பவளத்தினது அழகு. `நாண நின்ற போதகம்` என இயை யும். `பொற்` என்பது எதுகை நோக்கி, `போல்` எனத் திரிந்து நின்றது. பொள் - பொள்ளல்; புழை. புழை ஆம் முகம் - உள்துளை பொருந்திய தும்பி முகம். போதகம் - யானை. எங்கள் போதகமே, விநாயகனே - என்று துதித்து, அதனால் உள்ளமே யன்றி உடம்பும் மகிழ்வடைய வல்லாரது மனத்திலின்றி (ஏனையோர் மனங்களில்) மலர்த் திரு இருக்க மாட்டாள்` என இயைத்து முடிக்க. முன் தவம் உடையார்க் கன்றி இது கூடாமையின் ``வல்லார்`` என்றார். மெய் மகிழ்தலாவது, புளகம் போர்த்தல்.
மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை முற்றிற்று.

பண் :

பாடல் எண் : 1

அந்தி மதிமுகிழான் அந்தியஞ் செந்நிறத்தான்
அந்தியே போலும் அவிர்சடையான் அந்தியின்
தூங்கிருள்சேர் யாமமே போலும் சுடுநீற்றான்
வீங்கிருள்சேர் நீல மிடறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இங்கு, `இரட்டை மணி மாலை` என்று இருப்பது `இணைமணி மாலை` என்று இருத்தல் வேண்டும். ஏனெனில், இப்பொழுது இதில் கிடைத்துள்ள பாடல்கள் - 37.37 ஆவது பாடல் இப்பிரபந்தத்தின் இறுதிப்பாடல், முதற் பாடல் தொடங்கிய அந்தச் சொல்லால் முடிய வேண்டும். அவ்வாறு முடியவில்லை. வெண்பா வும், கட்டளைக் கலித்துறையும் மாறி மாறி அந்தாதியாக வந்து, 20 பாடல்களில் முடிவது இரட்டை மணி மாலை. அவை அவ்வாறு வந்து, 100 பாடல்களில் முடிவது இணைமணி மாலை. எனவே இதில் எஞ்சிய பாடல்கள் கிடைத்தில. பதிப்புக்களில், `இரட்டை மணிமாலை` என்று இருப்பதால், இங்கும் அவ்வாறே சொல்லப்பட்டது.
இப்பாட்டில், ``அந்தி`` என்னும் சொல் ஒரு பொருளிலே பின்னும் பின்னும் வந்தது சொற்பொருட் பின்வருநிலையணி. அந்தி- மாலைக் காலம். மதி முகிழ் - முகிழ் மதி; இளந்திங்கள்; மூன்றாம் பிறை. அந்திச் செந்நிறம், உவமத் தொகை. அவிர் - ஒளிவிடுகின்ற. ``அந்தியில்`` என்பதில், ``இல்`` என்பது `பின்` என்னும் பொருட் டாகிய ஏழன் உருபு. இல்லின் பின் உள்ளதை. `இல்லில் உள்ளது` என்றல் போல. தூங்கு இருள் - திணிந்த இருள். யாமம், இடையாமம். வீங்கு இருள் - மிகுந்த இருள். இதில் ``இருள்`` என்றது கருமையை. `சுடு நீற்றான் மிடறு யாமமே போலும்; அவன் மதி முகிழான்; செந்நிறத் தான்; அவிர் சடையான்` என இயைத்து முடிக்க. இது சிவபெருமானது திருவுருவை வியந்தது.

பண் :

பாடல் எண் : 2

மிடற்றாழ் கடல்நஞ்சம் வைக்கின்ற ஞான்று மெல் லோதிநல்லாள்
மடற்றா மரைக்கைகள் காத்தில வேமழு வாளதனால்
அடற்றா தையைஅன்று தாளெறிந் தாற்கருள் செய்தகொள்கைக்
கடற்றாழ் வயற்செந்நெல் ஏறும்வெண் காட்டெங் கரும்பினையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வெண்காட்டு எம் கரும்பு போல்வானை (அவன் தனது) மிடற்றில் நஞ்சம் வைக்கின்ற ஞான நல்லாள் தாமரைக் கைகள் காத்திலவே; (தடுத்திலவே; அஃது ஏன்?) என இயைத்து முடிக்க. மெல் ஓதி - மென்மையான கூந்தல். நல்லாள் - அழகுடையவள்; உமை. மடல் - இதழ்கள். மழுவாளால் அன்று தாதையைத் தாள் எறிந்தான் - சண்டேசுர நாயனார். `கொள்கைக் கரும்பு` என இயையும். கடல் - கடலைச் சார்ந்த நிலம். தாழ் வயல் - பள்ளமான வயல்கள். நெல் - நெற்பயிர். ஏறும் - வளர்க்கின்ற. வெண்காடு. `திருவெண்காடு` என்னும் தலம். `வெண்காட்டின்கண் உள்ள கரும்பு` என்க. கரும்பு உவமையாகு பெயர் . `தடாமைக்குக் காரணம், இதனால் இவற்கு விளைவதொரு தீங்கில்லை என அறிந்திருந்தமையே` என்பது குறிப்பு. இங்ஙனம் இறைவியது அறிவைப் புகழும் முகத்தால், இறைவனது ஆற்றலைப் புகழ்ந்தவாறு. பல தலங்களுள் ஒன்றில் வைத்துப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 3

கருப்புச் சிலை அநங்கன் கட்டழகு சுட்ட
நெருப்புத் திருநெற்றி நாட்டம் திருச்சடையில்
திங்கள் புரையும் திரள்பொன் திருமேனி
எங்கள் இமையோர் இறைக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`எங்கள் இறைக்குத் திருநெற்றி நாட்டம் சுட்ட நெருப்பு; திருமேனி திங்கள் புரையும்` என இயைத்து முடிக்க. நாட்டம் - கண். திருமேனி திங்களை ஒத்தல் திருவெண்ணீற்றால், `திருச்சடை மட்டும் திங்களால் விளங்குவதன்று; திருமேனி முழுதுமே திங்களைப் போல விளங்கும்` என்றற்குத் திருச்சடைமேல் திங்களையே உவமை கூறினார். திரள் பொன் - பொன்திரள், பொன் திருமேனி, உவமத் தொகை. இதுவும் திருவுருவின் சிறப்பையே புகழ்ந்தவாறு. ``இமையோர் இறை`` என்பது `கடவுள்` என்னும் பொருட்டாய், ``எங்கள்`` என்பதனோடு ஆறாவதன் தொகை படத்தொக்கது.

பண் :

பாடல் எண் : 4

இறைக்கோ குறைவில்லை உண்டிறை யேஎழி லார்எருக்கு
நறைக்கோ மளக்கொன்றை துன்றும் சடைமுடி நக்கர்சென்றிப்
பிறைக்கோர் பிளவும் பெறுவிளிக் கொண்டெம் பிரான்உடுக்கும்
குறைக்கோ வணமொழிந் தாற்பின்னை ஏதுங் குறைவில்லையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(`எல்லார்க்கும் குறைகள் உண்டு; இறைவனுக்கு யாதும் குறையில்லை` எனக் கூறினால்.) `இறைக்கோ குறைவில்லை? உண்டு. (ஆயினும்) இறையே. சிறிதே (அஃது யாது எனின்,) எம்பிரான் (தான் சூடியுள்ள) ஒருபாதியாகிய பிறைக்கு மற்றொரு பாதி பெறவேண்டிய இளிவரலைக் கருத்திற்கொண்டு, தான் உடையின்றிக் கோவணம் மட்டும் உடுத்திருத்தலை நீங்கினால், அதற்குப்பின் அவனுக்கு ஏதும் குறையில்லை` என இவ்வாறு இயைத்துரைக்க. `இறைக்கு யாதும் குறையில்லை` என்பாரை மறுப்பார்போல இவற்றைச் சில குறைகளாகக் கூறியது, அவர் கூறியதையே மறை முகமாக வலியுறுத்தியதாம். இது பழிப்பதுபோலப் புகழ்ந்தது.நறை - தேன். கோமளம் - அழகு. `சடைச் சென்னி நக்கு ஆர் பிறை` என மாற்றிக் கொள்க. `நக்கார் என்பது குறுக்கல் பெற்றது. நக்கு- ஒளிவீசி. ``பிளவு`` என்பது `பாதி` என்றபடி. இளி - இளிவரல். ``கருத்திற் கொண்டு` என்பது, கருத்திற் கொண்டு ஆவன செய்தலாகிய தன் காரியம் தோற்றி நின்றது.

பண் :

பாடல் எண் : 5

இல்லை பிறவிக் கடலேறல் இன்புறவில்
முல்லை கமழும் முதுகுன்றில் கொல்லை
விடையானை வேதியனை வெண்மதிசேர் செம்பொற்
சடையானைச் சாராதார் தாம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இன் புறவு - இனிய காடு. முதுகுன்று - திரு முதுகுன்றத் தலம். `முதுகுன்றில் உள்ள` என்க. `கொல்` என்பது ஐகாரம் பெற்று. ``கொல்லை`` என வந்தது. `கொல் விடை` என்பது இன அடையாய். ஆற்றல் மாத்திரையே விளக்கிற்று. `போர் விடை` என்றபடி. ``விடையானை... சாராதார் தாம் பிறவிக் கடல் ஏறல் இல்லை`` என்க. இதனால், `பிறவி நீங்குமாறு சிவபத்தியன்றி வேறு இல்லை` என்பது கூறப்பட்டதாம். ``யதா சர்மவ தாகாசம் வேஷ்ட யிஷ்யந்தி மாநவா; ததாசிவ மவிஜ்ஞாய துக்கஸ்யாந்தோ பவிஷ்யதி!!`` என்னும் சுருதியையும் 1அதனை மொழி பெயர்த்து, பரசிவ னுணர்ச்சி யின்றிப்
பல்லுயிர்த் தொகையு மென்றும்
விரவிய துயர்க்கீ றெய்தி
வீடுபே றடைது மென்றல்,
உருவமில் விசும்பிற் றோலை
உரித்துடுப் பதற்கொப் பென்றே
பெருமறை பேசிற் றென்னில்.
பின்னும்ஓர் சான்று முண்டோ 2
எனக் கந்த புராணமும்,
மானுடன் விசும்பைத் தோல்போற்
சுருட்டுதல் வல்ல னாயின்
ஈனமில் சிவனைக் காணாது
இடும்பைதீர் வீடும் எய்தும்;
மானமார் சுருதி கூறும்
வழக்கிவை யாத லாலே
ஆனமர் இறையைக் காணும்
உபாயமே அறிதல் வேண்டும்
எனக் காஞ்சிப்புராணமும் 3 கூறுவனவற்றையும், மற்றும்
அவனவ ளதுவெனு மனைவதொ றொன்றும்இச்
சிவனலால் முத்தியில் சேர்த்து வார் இலை;
துவளரும் இம்முறை சுருதி கூறுமால்;
இவனடி வழிபடின் முத்தி எய்துவாய்
என அக்காஞ்சிப் புராணமும் 1 கூறுதலையும் காண்க.

பண் :

பாடல் எண் : 6

தாமரைக் கோவும்நன் மாலும் வணங்கத் தலையிடத்துத்
தாம்அரைக் கோவணத் தோடிரந் துண்ணினுஞ் சார்ந்தவர்க்குத்
தாமரைக் கோமளத் தோடுஉல காளத் தருவர்கண்டீர்
தாமரைக் கோமளக் கைத்தவ ளப்பொடிச் சங்கரரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியை முதலிற் கூட்டியுரைக்க. தாமரைக்கோ - பிரமன். தலையிடம் - வாயிற் படியிடம். `தாம் அரையிலே கோவணத் தோடு இரந்து உண்ணினும்` என்க. ``கோவணத்தோடு`` என்றது, `கோவணத்தை மாத்திரமே உடுத்து` என்றபடி.
தாமரைக் கோமளம் - திருமகள். கண்டீர், முன்னிலையசை. தாமரைக் கோமளக் கை - தாவுகின்ற மானையேந்திய அழகிய கை. தவளப்பொடி - வெண் பொடி; திருநீறு. `தாம் கோவணத்தோடு இரந்து உண்ணினும், தம்மைச் சார்ந்தவர்க்கு உலகாளத் தருவர்` என்க.
தான்நாளும் பிச்சை புகும்போலும் தன்அடியார்
வான்ஆள, மண் ஆள வைத்து
என நக்கீர தேவரும் கூறினார். 2 இப்பாட்டு யமகம் என்னும் சொல்லணி பெற்றது.

பண் :

பாடல் எண் : 7

சங்குகோள் எண்ணுவரே பாவையரைத் தம்அங்கம்
பங்குபோய் நின்றாலும் பாய்கலுழிக் கங்கை
வரியராப் போதும் வளர்சடையாய் நின்போல்
பெரியர்ஆ வாரோ பிறர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பாய் கலுழி... வளர் சடையாய், தம் அங்கம் பங்கு போய் நின்றாலும் பாவையரைச் சங்கு கோள் எண்ணுவரே; (ஆயினும்) பிறர் நின்போல் பெரியர் ஆவாரோ? (ஆகார்.) - எனக் கூட்டியுரைக்க. அங்கம் - உடம்பு. பாவையர் - மகளிர். ``சங்கு கோள் எண்ணுவர்`` என்றது, `தம்மைக் காதலிக்கச் செய்ய விரும்புவர்` என்றபடி.
காதல் மீக்கூரப் பெற்ற மகளிர்க்கு அவர் தம் சங்க வளைகள் கழன்று வீழ்தல் இயல்பு. அதனை நிகழ்விக்கச் சிலர் எண்ணுதலையே, ``சங்கு கோள் எண்ணுவர்`` என்றார். ஏகாரம் தேற்றம். ``பிறர், அங்கம் பங்கு போய் நின்றாலும் சங்கு கோள் எண்ணுவரே ஆனாலும் நின்போல் பெரியவர் ஆவரோ`` என்றது, `நீ அங்கம் பங்குபோய் நின்றாலும் பாவையரைச் சங்கு கொண்டு பெரியவன் ஆகின்றாய்; அது மற்றவர்களுக்குக் கூடுமோ` என்றபடி. அங்கம் பங்குபோதல் சிவனுக்கு, உமாதேவிக்கு ஒருபாகத்தைக் கொடுத்ததனாலும், பிறர்க்கு, உடம்பு நரை திரை மூப்புப் பிணிகளால் மெலிதலாலும் பொருந்துகின்றது. பாவையரைச் சங்கு கொள்ளுதல் சிவனுக்குத் தாருகாவனத்து இருடியர் பத்தினிகளை மையல் செய்வித்ததனாலும், பிறர்க்கு, மகளிரை மையல் செய்விக்க எண்ணுதலாலும் பொருந்து கின்றது.
எனவே, மேற்போக்கில் ஏனையோரும் சிவன் செய்த வற்றையே செய்வார் போலக் காணப்பட்டாலும், சிவன் தனக்குப் பற்று யாதுமின்றி அருள் காரணமாக எல்லாவற்றையும், பிறர் பொருட் டாகவே செய்து பெரியன் ஆதல்போல ஆதல் பிறர்க்குக் கூடாது` என விளக்கியவாறு.
கலுழிக் கங்கை - (சடைக் காட்டின் இடையே பாய்தலால்) கான்யாற்றைப் போலும் கங்கை. `கங்கையிலே அரா (பாம்பு) போதும் (புகும்) சடை` என்க.

பண் :

பாடல் எண் : 8

பிறப்பாழ் குழியிடை வீழ்ந்துநை வேற்குநின் பேரருளின்
சிறப்பார் திருக்கை தரக்கிற்றியேதிரி யும்புரமூன்
றறப்பாய் எரியுற வான்வரை வில்வளைத் தாய்இரவாய்
மறப்பா வரியர நாணிடைக் கோத்தகை வானவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``திரியும் புரம் மூன்று`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க, திரியும் புரம் - வானத்தில் உலாவும் கோட்டைகள். இங்ஙனம் கூறியதனால் `திரிபுரம்` என்பது வினைத்தொகையாகவும் கொள்ளுதற்கு உரித்தாதல் அறியப்படும். ``திரியும் புரம்`` என்றே திருமுறைகளில் பல இடங்களில் வருதல் காணலாம்.
அறப் பாய் எரி- முற்றும் அழியும்படி பற்றும் தீ. உற - பொருந்தும்படி. வான் வரை - சிறந்த மலை; மகாமேரு. இனி, `உறுவான்` என வான் ஈற்று வினையெச்சமாகப் பாடம் ஓதலும் ஆம். `வில்லாக` என ஆக்கம் வருவிக்க. ஆயிர வாய், மற, பாவரி அர - ஆயிரம் வாய்களையும், கொடுமையையும், பரவியவரிகளையும் உடைய பாம்பு. செய்யுளாதலின், `அர` என்பதில் குறிற்கீழ் ஆகாரம் உகரம் செலாது குறுகிமட்டும் நின்றது. இடை - வில்லின் கண். வானவன் - தேவன். `பிறப்பாகிய ஆழ் குழி` எனவும், `அருளாகிய சிறப்பு` எனவும் உரைக்க. சிறப்புத் தருவதனைச் ``சிறப்பு`` எனவும் உரைக்க. சிறப்புத் தருவதனைச் ``சிறப்பு`` என உபசரித்தார். சிறப் பாவது வீடாதலைச் ``சிறப்பீனும் செல்வமும் ஈனும்``, ``சிறப்பென் னும் செம்பொருள்`` என்னும் திருக்குறள்களால் * அறிக. ``அருளின்`` என்பதில் இன், தவிர்வழி வந்த சாரியை. `சிறப்பைத் தருவதாகிய அருள் நிறைந்த திருக்கை` என்றபடி. ஆழ் குழியில் வீழ்ந்தாரை எடுப் போர் கைதர வேண்டியிருத்தலை நினைக. கிற்றியே - வல்லையோ? `என்னைப் பற்றியுள்ள மலங்கள் மிக வலியன என்பார், `வல்லையோ` என்றார்.

பண் :

பாடல் எண் : 9

வானம் மணிமுகடா மால்வரையே தூணாக
ஆன பெரும்பார் அரங்காகக் கானகத்தில்
அம்மா முழவதிர ஆடும் பொழுதாரூர்
எம்மானுக் கெய்தா திடம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மணி முகடு - அழகிய மேற் கூரை. மால் வரை - பெரிய அட்டதிசை மலைகள். பார் - பூவுலகம். அரங்கு - ஆடும் மண்டபம். அம் மா முழவு - அழகிய, பெரிய மத்தளம். இது வாசிப்பாரால் வாசிக்கப்படும். எய்தாது - போதாது. இங்குக் கூறிய ஆட்டம். பிரம தேவனுடைய நித்திய கற்பங்களின் முடிவில் செய்யப்படும் நடனம். ``கானகம்`` என்றது உயிர்கள் ஒடுங்கிய நிலையில் உள்ள உலகத்தை. `அப்பொழுதும் சிவபெருமானது அருளிலே உயிர்கள் பிழைக்கின்றன` என்பதாம். `முகடா, தூணா, அரங்காக ஆடும் பொழுது ஆரூர் எம்மானுக்கு இடம் எய்தாது` என்க. `இங்ஙனம் ஆகலின், அவன் ஊர்தோறும் உள்ள சுடுகாட்டில் ஆடுவதாக நினைப் பாரது நிலைமை எத்தன்மையது` என்பது கருத்து. சிவபெருமானது பெரு நிலையை எடுத்தோதியவாறு.

பண் :

பாடல் எண் : 10

இடப்பா கமுமுடை யாள்வரை யின்இள வஞ்சியன்ன
மடப்பால் மொழியென்பர் நின்வலப் பாகத்து மான்மழுவும்
விடப்பா சனக்கச்சும் இச்சைப் படநீ றணிந்துமிக்க
கடப்பார் களிற்றுரி கொண்டுஎங்கும் மூடும்எங் கண்ணுதலே.

பொழிப்புரை :

`தனது இடப்பாகத்தில் உடையாளாகிய, வரை ஈன் பால்மொழி உள்ளாள்` என்பர்; அங்கும், `வலப்பாகத்தில் மானுக்கு நேராக மழு உள்ளது` என்பர்; அங்கும், `வயிற்றில், நஞ்சுள்ள பாத்திர மாகிய பாம்பாகிய கச்சு உள்ளது` என்பர்; அங்கும், விருப்பம் உண்டாதலால் திருநீற்றை நிறையப் பூசியிருந்தும் எங்கள் சிவ பெருமான், மிக்க மதம் பொருந்திய பரிய யானையின் தோலை அந்த எல்லா இடங்களும் மறையும்படி போர்த்துள்ளான்.

குறிப்புரை :

`இஃது எதற்கு` என்பது குறிப்பெச்சம். மலைமகள், மழு, பாம்பு, திருநீறு இவற்றின்மேல் உள்ள ஆசையால் இவற்றைத் தன் திருமேனியில் கொண்டுள்ள சிவபெருமான் அந்தக் கோலம் சிறிதும் தோன்றாதபடி யானைத் தோலால் மூடியிருப்பது ஏன்` என்றபடி. `திருநீறே கவசமாய் எங்கும் பொதிந்திருக்க, மற்றும் ஓர் கவசம் மிகை` என்பதும் கருத்து. ``இடப்பாகம்`` முதலியவற்றைச் சொல் பல்காமைப் பொருட்டு இருமுறை கூறாது ஒருமுறையே கூறினார் ஆகலின், அதற்கு இவ்வாறுரைத்தலே கருத்தாதல் அறிக. ``என்பர்`` என்பது பிற இடங்களிலும் சென்று இயைவது. உடையாள் - அனைத்தையும் உடையவள். வரை ஈன் - மலை பெற்ற. இள வஞ்சி அன்ன - இளைய வஞ்சிக் கொடி போன்ற. மடம் - மகளிர் குணம் நான்கனுள் ஒன்று. பால் மொழி, பால் போலும் சொற்களை உடையவள். ``மழுவும்`` என்னும் உம்மையை ``வலப் பாகத்து`` என்பதனோடு கூட்டுக. ``கச்சு`` என்றதனால், `வயிறு` என்பது வருவிக்கப்பட்டது. கடம் - மதம். `யானையை உரித்துப் போர்த்தது பிறர்மேல் வைத்த கருணையால்` என்பதே இங்குப் புலப்படுத்தக் கருதியது.

பண் :

பாடல் எண் : 11

கண்ணி இளம்பிறையும் காய்சினத்த மாசுணமும்
நண்ணி இருந்தால் நலம்இல்லை தண்அலங்கல்
பூங்கொன்றை யின்தேன் பொதியுஞ் சடைப்புனிதா
வாங்கொன்றை இன்றே மதித்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``தண் அலங்கல்.... புனிதா`` - என்பதை முதலிற் கூட்டி, `மதித்து, இன்றே வாங்கு` என மாற்றி வைத்து உரைக்க. கண்ணி - முடியில் அணியும் மாலை. `கண்ணியாகிய பிறை` என்க. மாசுணம் - பாம்பு. `பிறையும், பாம்பும் பகைப் பொருள்கள். ஆகையால், அந்த இரண்டையும் உனது சடையில் சேர்ந்து இருக்க வைத்தால் நன்மை யில்லையாம். (தீமை விளையும்.) ஆகையால், இதனைப் பொருட்படுத்தி உணர்ந்து, அந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை இப்பொழுதே நீக்கிவிடு` என்க. இஃது, இறைவனது அருளாற்றலின் சிறப்பை உணராதவர் போல அச்சம் உற்றுக் கூறியது. இங்ஙனம் கூறும் முகத்தால், பகைப் பொருள்களும் சிவபெருமானை அடைந்தால் பகை நீங்கி நட்புற்று வாழ்தலை உணர்த்தியவாறு.
`ஒற்றி ஊரும் ஒளிமதி பாம்பினை
ஒற்றி ஊரும்அப் பாம்பும் அதனையே;
ஒற்றி ஊர ஒருசடை வைத்தவன்
ஒற்றி யூர்தொழ நம்வினை ஒயுமே` 1
என்பதும்,
`பாம்பும், மதியும், புனலும் தம்மிற்
பகைதீர்த் துடன்வைத்த பண்பா போற்றி`` 2
என்பதும் அப்பர் திருமொழிகள்.

பண் :

பாடல் எண் : 12

மதிமயங் கப்பொங்கு கோழிருள் கண்டவ விண்டவர்தம்
பதிமயங் கச்செற்ற கொற்றவில் வானவ நற்றவர்சூழ்
அதிகைமங் கைத்திரு வீரட்ட வாரிட்ட தேனுமுண்டு
கதிமயங் கச்செல்வ தேசெல்வ மாகக் கருதுவதே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மதி - உயிர்களின் அறிவு. கோழிருள் கண்டவ - திணிந்த இருள்போலும் மிடற்றை உடையவனே. `கண்டன்` என்னும் சினையடியாகப் பிறந்த பெயர் இடையே அகரத்தை வேண்டாவழி சாரியையாகப் பெற்று, ``கண்டவன்`` என நின்றது. இனி, `இருள் கண்டவ` எனப் பாடம் ஓதி, `ஊழிக் காலத்து இருளைக் கண்டவனே` என உரைப்பினும் அமையும். விண்டவர் - பகையால் நீங்கினவர். பதி - ஊர், அதிகை மங்கை - திருவதிகைத் தலம். ``அதியரைய மங்கை அமர்ந்தார் போலும்`` 3 என அப்பரும் அருளிச் செய்தார். கதி மயங்க - வழி பலவாய்க்கூட. `பல ஊர்களுக்குச் சென்று` என்றபடி. `கண்டல், வானவ, வீரட்ட, ஆர் இட்டதேனும் உண்டு கதி மயங்கச் செய்வதையே செல்வமாக நீ கருதலாமோ?` (இஃது உனக்குத் தகுதியா?) என முடிக்க. இதுவும் பழித்தது போலப் புகழ்ந்தது. சிவ பெருமான் வைரவரைத் தோற்றுவித்துப் பிரம கபாலத்தில் இரத்த பிச்சை ஏற்கச் செய்தது தேவர்களது அகங்காரங்களை அடக்குதற் பொருட்டும், பிட்சாடனராய்ச் சென்று பிச்சை ஏற்றது தாருகாவன இருடியரது அறியாமையைப் போக்குதற் பொருட்டும் ஆதலைச் சொல்லாமற் சொல்லி வியந்தவாறு.

பண் :

பாடல் எண் : 13

கருதுங் கருத்துடையேன் கையுடையேன் கூப்பப்
பெரிதும் பிறதிறத்துப் பேசேன் அரிதன்றே
யாகப் பிறையான் இனியென் அகம்புகுந்து
போகப் பெறுமோ புறம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கருதுதல் - நினைத்தல். கருத்து - மனம் ``கருதும்`` என்றதும், `கருதுதற்கு` என்றவாறேயாம். `கூப்பக் கையுடையேன்` என்க. எனவே, `யான் அவனைக் கருதுதற்கும், தொழுதற்கும் தடை என்னை` என்றபடி. அரிது அன்றே - (தடையில்லையாகவே) அவை யியல்வது அரிதாதலே இல்லை. ஏகாரத் தேற்றம். `அவை யியல்வது அரிதன்று ஆதலால், பிறையான் என் அகம் (மனம்) புகுந்து புறம் போகப் பெறுமோ` என்க. புகுந்து - பின் புகுந்தபின். ``இனிப் புறம் போகலொட்டேனே`` என மாணிக்கவாசகரும் அருளிச் செய்தார்.*

பண் :

பாடல் எண் : 14

புறமறையப்புரி புன்சடை விட்டெரி பொன்திகழும்
நிறமறையத்திரு நீறு துதைந்தது நீள் கடல்நஞ்
சுறமறை யக்கொண்ட கண்டமும் சால உறைப்புடைத்தால்
அறமறையச்சொல்லி வைத்தையம் வேண்டும் அடிகளுக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியை முதலிற் கூட்டியுரைக்க. அறம் மறையைச் சொல்லி - அறத்தை மறைபொருளாய் நிற்கும்படி (மறைகளின் உள்ளேயிருக்கும்படி) சொல்லி வைத்து, ஐயம் வேண்டும் (அது நடைமுறையில் நிகழவேண்டித்)தானே பிச்சைவேண்டி நிற்கின்ற. புறம் - முதுகு. விட்டு - தாழ விடப்பட்டு. இஃது எண்ணின் கண் வந்த வினையெச்சம். எரி பொன் திகழும் - நெருப்பில் காய்கின்ற பொன்போலும் நிறம். துதைந்தது - நிறையப் பூசப்பட்டது. உற மறைய - முற்றிலும் மறையும்படி. ``கண்டமும்`` என்னும் உம்மை சிறப்பு. உறைப்பு - உரம்; வலிமை. ஆல், அசை. இதுவும் திரு மேனியை வருணித்துப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 15

அடியோமைத் தாங்கியோ ஆடை யுடுத்தோ
குடியோம்ப மாநிதியங் கொண்டோ பொடியாடும்
நெற்றியூர் வாளரவ நீள் சடையாய் நின்ஊரை
ஒற்றியூர் ஆக்கிற் றுரை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பொடி ஆடும்` என்பது முதலாகத் தொடங்கி, ``உரை`` என்பதை, ``கொண்டோ`` என்பதன் பின்னர் வைத்து உரைக்க. தாங்குதல் - புரத்தல். குடி - மனைவியும், மக்களும். ஆடையே இல்லாதவனை ``ஆடை உடுத்தோ`` என்றது, அவனது நிலையைச் சுட்டிக்காட்டி நகைத்தவாறு. ``அடியோமைத் தாங்கியோ`` என்றதும், ``குடிஓம்பவோ`` என்றதுங்கூட அவ்வாறு தாங்காமையை யும், ஓம்பாமையையும் மறுதலை முகத்தாற் கூறி நகையாடினவேயாம். `உன் அடியார்கள் ஒன்றும் அற்றவர்கள்தாமே? உன்னுடைய மனைவியும், மக்களும் தங்கள் தங்கள் திறமையால்தானே மக்களிடம் வழிபாடு பெறுகின்றார்கள்?` என்பது கருத்து. `அதனால், நீ உன் ஊரை ஒற்றியாக்கியது வீணேயன்றோ` என்றபடி. பொடு ஆடும் - திருநீற்றில் மூழ்குகின்ற. `பொடி ஆடும் நெற்றியையும், ஊர்கின்ற வாளரவத்தையுடைய சடையையும், உடையவனே` என்க. கடல் அலைகள் வந்து ஒற்றுதல் பற்றி, `ஒற்றியூர்` எனப் பெற்ற பெயரைச் சிலேடையால் ஆசிரியர் பலரும் இங்ஙனம் நகைதோன்றக் கூறுவர். ``ஒற்றியூரேல், உம்மதன்று`` சுந்தரம் - தி.7 ப.5 பா.9 என்றது முதலியன காண்க. ஒற்றியூரை ஊராகக் கொண்டதனைக் குறித்து நயம்படப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 16

உரைவந் துறும்பதத் தேயுரை மின்கள்அன் றாயினிப்பால்
நரைவந் துறும்பின்னை வந்துறுங் காலன்நன் முத்திடறித்
திரைவந் துறுங்கரைக் கேகலம் வந்துறத் திண்கைவன்றாள்
வரைந் துறுங்கடல் மாமறைக் காட்டெம் மணியினையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நன் முத்து இடறி`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. உரை வந்து உறும் பதம் - பேச்சுக்கள் தடையின்றி வந்து பொருந்த (நன்றாய்ப் பேச முடிகின்ற) அந்தப் பருவத்தில் தானே (துதியுங்கள்). கலம் - மரக் கலம், வந்து உற - வந்து சேரும்படி. கை - கைபோன்றவனும். தாள் - முயற்சி; செயற்பாடு, முயற்சியை, முன் ``கை`` என்றதற்கு ஏற்ப, ``தாள்`` (கால்) என்றது சொல் நயம். வரை - மலை. ``திரை வந்துறும்`` என்பது கரைக்கு அடையாய், வேறுமுடி பாயிற்று. மலை போலும் அலைகள்; உவமையாகுபெயர். மணி - மாணிக்கம். இது காதற் சொல், `மணியினை உரைமின்கள்` என்க.

பண் :

பாடல் எண் : 17

மணியமரும் மாமாட வாய்மூரான் தன்னை
அணியமர ரோடயனும் மாலும் துணிசினத்த
செஞ்சூட்ட சேவற் கொடியானு மாய்நின்று
நஞ்சூட்ட எண்ணியவா நன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மணி அமரும் மாடம் - மணிகளை வைத்து இழைத் தமையால் அவை பொருந்தியுள்ள மாடங்கள். வாய்மூர் - திருவாய் மூர்த்தலம். அணி - வரிசை; கூட்டம். செஞ்சூட்ட சேவல் - சிவந்த கொண்டையையுடைய சேவற் கோழி. அதனைக் கொடியாக உடைய வன் முருகன். `இவர்கள் எல்லாரும் ஒருங்கு சேர்ந்து நின்ற நஞ்சு ஊட்ட எண்ணம் இட்டவாறு நன்று` எனப் பழித்தவாறு (அமரரும், அயனும், மாலும் தாங்கள் பிழைக்க நினைத்து எண்ணம் இட்டார்கள்; முருகன் ஏன் அதற்கு இசைய வேண்டும்` என்பது கருத்து. `இவர்கள் யாவராலும் சிவபெருமானது நித்திய (அழிவிலா)த் தன்மை நன்கறியப்பட்டது) என்பது இதன் உண்மைப் பொருள். மேலேயும்,
மிடற்று ஆழ்கடல் நஞ்சம் வைக்கின்ற ஞான்று
மெல்லோதி நல்லாள்
மடற் றாமரைக் கைகள் காத்திலவே.*
என இரங்கும் முகத்தால் இதனை விளக்கினார்.

பண் :

பாடல் எண் : 18

நன்றைக் குறும்இரு மல்பெரு மூச்சுநண் ணாதமுன்னம்
குன்றைக் குறுவது கொண்டழி யாதறி வீர்செறிமின்
கொன்றைக் குறுநறுங் கண்ணியி னான்றன்கொய் பூங்கயிலைக்
குன்றைக் குறுகரி தேனும்உள் ளத்திடைக் கொள்மின்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``குன்றைக் குறுவது... அறிவீர்`` என்னும் தொடரை முதற்கண் கூட்டி உரைக்க. ஐக்கு நன்று உறும் இருமல் - கோழையை வெளிப்படுத்தற்கு நன்கு பொருந்துவதாகிய இருமல். இருமலும், பெருமூச்சும் நண்ணுதல் முதுமைக் காலத்தில். எனவே, ``அவை நண் ணும் முன்னம்`` என்றது, `இளமையிற்றானே` என்றதாம். `குறியது` என்பது. எதுகை நயம் நோக்கி, ``குறுவது` என வந்தது. `குறுவதாக` என ஆக்கம் வருவிக்க. குன்றைக் குறுவதாகக் கொண்டு அழியாது அறிவீர் - மலையை (மலை போலப் பெரிதாகிய பயனை)ச் சிறியதாக நினைத்து இழந்து கெடாதவாறு. ஆவனவற்றை அறியும் அறிவுடைய வர்களே, கயிலாயத்தை அடைதல் அரியதொன்றாயினும் (`அரிது` என்று விட்டொழியாது) கயிலை நாயகனை உள்ளத்தில் நினையுங் கள்; அதன் பயனாகப் பின் கயிலாயத்தில் செறியுங்கள். (சேருங்கள்)

பண் :

பாடல் எண் : 19

கொண்ட பலிநுமக்கும் கொய்தார்க் குமரர்க்கும்
புண்டரிக மாதினுக்கும் போதுமே மண்டி
உயிரிழந்தார் சேர்புறங்காட் டோரிவாய் ஈர்ப்ப
மயிரிழந்த வெண்டலைவாய் வந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பெருமானே` என்பதை வருவித்து, ``மயிரிழந்த`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. பலி - பிச்சை. புண்டரிகம் - புலி. அது சாதி பற்றிச் சிங்கத்தைக் குறித்தது. சிங்க வாகனத்தை யுடைய மாது காளி. இனி, `அன்பர் இதயத் தாமரை` எனினும் ஆம். குமரர் - பிள்ளைகள் விநாயகனும், முருகனும் `உயிர் இழந்தார் மண்டிச் சேர் புறங்காடு` என்க. மண்டி - நெருங்கி. வெண்தலைவாய்- வெண்தலையின்கண் (கொண்ட பலி) `பெருமானே, ஒரு தலையோட்டளவில் நீர் கொண்டு செல்கின்ற பிச்சை உமக்கும், உம் பிள்ளைகள் இருவருக்கும், அம்மைக்கும் ஆக நால்வருக்கும் போதுமோ` என்க. `எடுப்பதுதான் பிச்சையாயிற்றே; அதையாவது எல்லாருக்கும் ஆகும்படி பெரிய பாத்திரத்தைக் கொண்டு எடுக்கலா காதோ` என்றபடி. இதனால், `உங்களில் யாருக்கும் இந்தப் பிச்சை தேவையில்லாமை தெரிகின்றது` என்பதைக் குறிப்பாய் உணர்த்திப் பழிப்பது போலப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 20

வந்தா றலைக்கும் வலஞ்சுழி வானவ வானவர்தம்
அந்தார் மகுடத் தடுத்தபைம் போதில்அந் தேனுழக்கிச்
செந்தா மரைச்செல்வி காட்டும் திருவடிக் குஞ்செல்லுமே
எந்தாய் அடித்தொண்டர் ஒடிப் பிடித்திட்ட இன்மலரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஆறு - காவிரியாறு.`ஆறு வந்து அலைக்கும் வலஞ்சுழி` என்க. வானவ - கடவுளே `போதினின்றும் ஒழுகும் அழகிய. தேன்`` என உரைக்க. ``திருவடிகளை, `தாமரை` எனக் கூறுதல் தேனோடு பொலிதலால் உண்மையாகின்றது`` - என்றபடி. எந்தாய் அடி- எந்தையாகிய உனது திருவடி. செல்லுமே - ஏற்குமோ. பிடித்தல்- கண்டறிந்து பறித்தல். `பறிந்திட்ட` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். `தேவர்களது கற்பக மலரைப் பொருந்தி விளங்கும் உனது திருவடிகட்கு இங்கு மக்கள் தேடிக் கண்டு பறித்து இடுகின்ற சில மலர்கள் ஏற்புடைய வாகுமோ` என்றபடி. `இன்மலர் செல்லுமே` என முடிக்க.

பண் :

பாடல் எண் : 21

மலர்ந்த மலர்தூவி மாமனத்தைக் கூப்பிப்
புலர்ந்தும் புலராத போதும் கலந்திருந்து
கண்ணீர் அரும்பக் கசிவார்க்குக் காண்பெளியன்
தெண்ணீர் சடைக்கரந்த தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கூப்பி`` என்பதனோடு இயைத்து முரண் நயம் தோன்றுதற்பொருட்டு ``மலர்ந்த`` என்றாராகலின் அதற்கு. `மலரும் நிலையில் உள்ள` என்பதே பொருளாதல் அறிக. மா - குதிரை. கூப்பி- குவியப் பண்ணி. `போது` என்பது, ``புலர்ந்த`` என்பதனோடும் இயையும் ஆதலின், ``புலர்ந்ததும்`` என்றதற்கும், `புலர்ந்தபோதும்` என்பதே பொருள். புலர்ந்தபோது காலை நேரம். புலராத போது - மாலை நேரம். கலந்து - அன்பால் உள்ளம் பொருந்தி. `தே, தூவி, கூப்பி, கலந்திருந்த கண் நீர் அரும்பக் கசிவார்க் காண்பு எளியன்` என இயைத்து முடிக்க. `அல்லாதார்க்கு எளியனல்லன்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 22

தேவனைப் பூதப் படையனைக் கோதைத் திருஇதழிப்
பூவனைக் காய்சினப் போர்விடை தன்னொடும் போற்றநின்ற
மூவனை ஈருரு வாயமுக் கண்ணனை முன்னுமறை
நாவனை நான்மற வேன் இவை நான்வல்ல ஞானங்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``தேவன்`` என்றது, தலைமை பற்றி, `தேவ தேவன்; மகாதேவன்` என்னும் பொருட்டாய் நின்றது. கோதை - மாலை `கோதையின் கண்` என ஏழாவது விரித்து, அதனை, ``பூவன்`` குறிப்பு வினைப்பெயரோடு முடிக்க. இதழி - கொன்றை. அடையாளப் பூவா தலின் ``திருஇதழி`` என்றார். விடை - இடபம். அதற்குக் காய் சினமும், போரும் இன அடையாய் வந்தன. ``போற்ற`` என்றது, `யாவரும் போற்ற` என்றபடி. மூவன் - மூப்பவன். `மூத்தவன்` என இறந்த காலத் தாற் கூறற்பாலதனை எதிர்காலத்தாற் கூறினார். எதிர் காலம் உணர்த்து வதில் வகரமெய் பகர மெய்யோடு ஒக்கும் ஆதலின், ஈண்டு எதுகை நோக்கி வகரமெய் வந்தது. மூத்தவன் - பெரியோன். `முத்தானே, மூவாத முதலானே`
`விண்ணோர்க் கெல்லாம் மூப்பாய்` *
என ஆளுடைய அடிகளும் அருளிச் செய்தார். ``ஈருருவாய முக்கண்ணன்`` என்றது எண்ணலங்காரம். சிவபெருமானை, `தேவன்` முதலிய பல பெயர்களால் கூறி, ``நான் மறவேன்`` என்றதனால், `இன்னோரன்ன அவனது பெயர்களை மறவேன்` என்பதே பொருளாம். பெயர்கள் பலவாதல் பற்றி அவற்றை உணரும் ஞானங் களும் பலவாகக் கூறப்பட்டன. பிரித்துக் கூட்ட, ``இவையே`` என வரும் பிரிநிலை ஏகாரத்தால், ``பிற ஞானங்களை நான் வல்லே னல்லேன்`` என்பதைப் பிரிநிலை எச்சத்தால் உணர்த்தி, `பிற ஞானங்கள் வேண்டுவதில்லை` எனக் குறிப்பாற் புலப்படுத்தியவாறு.

பண் :

பாடல் எண் : 23

நானுமென் நல்குரவும் நல்காதார் பல்கடையில்
கானிநிமிர்த்து நின்றிரப்பக் கண்டிருக்கும் வானவர்கள்
தம்பெருமான் மூவெயிலும் வேவச் சரந்தூற்றல்
எம்பெருமான் என்னா இயல்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``வானவர்கள் தம் பெருமான்`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. நல்குரவு - வறுமை. அஃது எங்குச் சென்றாலும் நீங்காமை நோக்கி, அது தனி நிற்பதொன்றாய் உடன் வந்து நிற்பது போலப் பான்மை வழக்காற் கூறினார். கடை - வாயில். கால் நிமிர்த்தல் - வலி தாங்காமையால் வளைத்தும், நிமிர்த்தியும் நிற்றல். ``எம்பெருமான்`` என்பதன் பின், `துணை` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது. என்னா, என்று நினையாமை. அவ் எம்பெருமான் என்பதில் சுட்டு, `அத்தன்மையன்` எனப் பொருள் தந்தது. `எம் பெருமான் என்னாத அந்த இயல்பே இப்படி இரந்து நிற்கும் நிலைமையைத் தந்தது` என்பதனை, `இயல்பு நாங்கள் இரத்தலைக் கண்டு, மகிழ்ந்துகொண்டிருக்கின்றது` என்றார். `சிவபெருமானை ஏத்தாதவரே வறுமையாளராய் இரப்பர்` என்றல் கருத்து.
வானகம் ஆண்டு,மந் தாகினி ஆடி, நந்
தாவனம்சூழ்
தேனக மாமலர் சூடிச்செல் வோரும், -
சிதவல்சுற்றிக்
கால்நகம் தேயத் திரிந் திரப்போரும்
கனக வண்ணப்
பால்நிற நீற்றற் கடியரும், அல்லாப்
படிறருமே. *
எனச் சேரமான் பெருமாள் நாயனாரும் அருளிச் செய்தார்.
``இயல்பு, கண்டிருக்கும்` என்றதும் பான்மை வழக்கு.

பண் :

பாடல் எண் : 24

இயல் இசை நாடக மாய் எழு வேலைக ளாய்வழுவாப்
புயலியல் விண்ணொடு மண்முழு தாய்ப்பொழு தாகிநின்ற
மயிலியல் மாமறைக் காடர்வெண் காடர்வண் தில்லைமல்கு
கயலியல் கண்ணியங் காரன்பர் சித்தத் தடங்குவரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பின்னர், `எழு கடலாய்` எனக் கூற இருப்பவர் அதற்கியைய முன்னர் `முத்தமிழாய்` எனக் கூறுகின்றவர் அம்முத் தமிழ்களையும் விதந்தோதினார். வேலை - கடல். வழுவா- எஞ்சாத (விண்ணும், மண்ணும்). புயல் இயல் விண் - மேகங்கள் உலவுகின்ற ஆகாயம். பொழுது - கால தத்துவம். ``கடல் `` என்றது உபலக்கண மாய் ஏனைக் கருப்பொருள் பலவற்றையும் குறித்தது. `தமிழ்ச் சொற்களையும் அவற்றின் பொருள்களையும் குறித்தது. எனவே, இறைவர் முதல், கரு, உரி ஆகிய அனைத்துப் பொருளுமாய் நிற்றல் கூறப்பட்டதாம். ஆகவே, `இங்ஙனம் விசுவத்திற்கு அந்தரியாமியாய் நிற்கும் பெரியோனாகிய பெருமான் அன்பர் சித்தத்தில் அடங்குவன்` என வியந்தருளிச் செய்தவாறு. இப்பாட்டில் திருமறைக்காடு, திருவெண்காடு, திருத்தில்லை என்னும் தலங்கள் எடுத்தோதப் பட்டன. மயில் இயல் - மயில்கள் நடமாடுகின்ற. மா - பெருமை. `கயல் இயல் மல்கு கண்ணி` என மாற்றி, `மீனின் இயல்பு நிறைந்த கண்ணையுடைய உமாதேவி` என உரைக்க. `பங்கர்` என்பதில் `அர்` விகுதி நீக்கி, ஆர் விகுதி புணர்த்து. `பங்கார்` என்றார். `பங்கினார்` என்பதில், `இன்` சாரியை தொகுக்கப்பட்டது எனினும் ஆம்.

பண் :

பாடல் எண் : 25

அடங்காதார் ஆரொருவர் அங்கொன்றை துன்று
மடங்காதல் என்வளைகொள் வார்த்தை நுடங்கிடையீர்
ஊருரன் சென்றக்கால் உண்பலிக்கென் றங்ஙனே
ஆரூரன் செல்லுமா றங்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நுடங்கிடையீர்; ஆரூரன், - உண் பலிக்கு - என்று அங்ஙனே ஊர் ஊரனாய்ச் சென்றக்கால், (அவன்) செல்லும் ஆறாகிய அங்கு காதலையுடைய என் வளைகளை (அவன்) கொண்ட வார்த்தையினுள் அடங்காதாராக யார் ஒரு மகளிர் உளராவர்? (ஒருவரும் உளராகார்) என இயைத்து முடிக்க. `அவன் பலிக்குச் செல்லும் எவ்விடத்திலும் உள்ள மகளிர் யாவரும் அவன் மீது, கொள்ளும் காதலால் தங்கள் வளைகளை இழக்கவே செய்வர்` என்றவாறு. `நிலைமை இதுவாகலின், யான் என் வளைகளை இழந் தமை பற்றித் தாய் முனிதல் தகுமா` எனத் தனது வேறுபாடு கண்டு கழறிய தோழியரைக் கழற்றெதிர் மறுத்தாள். இன்னோரன்ன துறைகள் கைக்கிளை பெருந்திணைகளில் வருதல் இயல்பு.
அடங்குதல் - உட்படுதல். கொன்றைதுன்று மடம் காதல் என்வளை - கொன்றை மாலையைப் பெற வேண்டிய மடமையையும், காதலையும் உடைய எனது வளைகள். ``வார்த்தை`` என்பதில், `உள்` என்னும் பொருளில் வந்த கண் உருபு விரித்து, வார்த்தைக்கண் அடங்காதார் ஆர் ஒருவர்` என மேலே கூட்டி முடிக்க. நுடங்கு துவள்கின்ற. `ஊர் ஊரனாய்` என ஆக்கம் விரிக்க. ஆறு - வழி.

பண் :

பாடல் எண் : 26

அங்கை மறித்தவ ராலவி உண்ணுமவ் வானவர்கள்
தங்கை மறித்தறி யார்தொழு தேநிற்பர் தாழ்சடையின்
கங்கை மறித்தண வப்பண மாசுணக் கங்கணத்தின்
செங்கை மறித்திர விற்சிவன் ஆடுந் திருநட்டமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அங்கை மறித்தவர் - வேள்வித் தீயில் ஆகுதி பண்ணுதற்குக் கைகளை மூடி விரிப்பவர்கள் அந்தணர்கள். அவி - அவிப் பாகம். தம் கை மறித்து அறியாதவர் - விரித்து இணைத்துக் குவித்த கைகளை மீட்க அறியாதவர். `அறியாதவராய்` என ஆக்கம் விரிக்க. `எப்பொழுதும் கும்பிட்டுக்கொண்டேயிருப்பவராய்` என்ற படி. கங்கை மறித்து - கங்கை நீரைத் தடுத்து வைத்து. அணவாப் பண மாசுணம் - சுருக்கிச் சுருக்கி உயர எடாமல், (எப்பொழுதும் உயர எடுத்து ஆடிக்கொண்டே) இருக்கின்ற படத்தையுடைய பாம்பு. செங்கை மறித்து - சிவந்த கையை (அஞ்சலீர் என) அமைப்பதாகக் காட்டி `தாழ் சடையில் கங்கையை மறித்து வைத்து, மாசுணக் கங்கணத்தின் கையை மறித்துச் சிவபெருமான் இரவில் ஆடும் திருநட்டம் வானவர்கள் தம் கை மறித்தறியாராய்த் தொழுதே நிற்பர்` என இயைத்து முடிக்க. இரவாவது, ஊழி யிறுதிக் காலம். நட்டம், புனர் உற்பவத்திற்கு ஆவனவற்றைப் புரியும் சூக்கும நடனம். ``வானவர்கள்`` என்றத னால், இங்கு `இரவு` என்றது நில உலகத்து ஊழியை.

பண் :

பாடல் எண் : 27

நட்டம்நீ ஆடும் பொழுதத்து நல்லிலயம்
கொட்டக் குழிந்தொழிந்த வாகொல்லோ அட்டுக்
கடுங்குன்ற மால்யானைக் காருரிவை போர்த்த
கொடுங்குன்ற பேயின் கொடிறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அட்டு`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. ``பொழுது`` என்பதில் அத்து வேண்டாவழிச் சாரியை. இலயம் கொடுத்தல் - தாள அறுதிக்கு ஏற்ப முழக்குதல். ஒழி, துணிவுப் பொருண்மை விகுதி. கொல், அசை. ஓகாரம், ஐயப் பொருட்டு. அட்டு - கொன்று. கடுங்குன்ற மால் யானை - பெரிய மலைபோலும் மத யானை. கார் உரிவை - கறுத்த தோல். கொடுங் குன்றம், பாண்டி நாட்டுத் தலங்களுள் ஒன்று. ``கொடுங்குன்ற`` என்பது விளி. `உன்னுடைய பேயின் கொடிறு` என்க. கொடிறு - தாடை. முழவு முதலியவற்றைத் தாள அறுதி தோன்ற முழக்கும் பொழுது வாய்ச் செய்கையால் தாடை குழிதல் உண்டு.
பேய்கட்கு இயற்கையாய் உள்ள தாடைக் குழியை இங்ஙனம் செயற்கையால் நேர்ந்தன போலக்கூறி நகைத்தவாறு. `உனது கூத்திற்குக் கொட்டி முழக்கப் பேய்கள் தவிரப் பிறர் இல்லையோ` என நகை தோன்றக் கூறியதாம். `ஒடுக்கக் காலத்தில் இறைவனைச் சார்ந்து நிற்கும் உயிர்களே அவ்விடத்து உள்ளன` என்பது இதன் உண்மைப் பொருள்.

பண் :

பாடல் எண் : 28

கொடிறு முரித்தனன் கூறாளன் நல்லன் குருகினஞ்சென்
றிடறுங் கழனிப் பழனத் தரசை எழிலிமையோர்
படிறு மொழிந்து பருகக் கொடுத்துப் பரவைநஞ்சம்
மிடறு தடுத்தது வும்மடி யேங்கள் விதிவசமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கூறாளன் - ஒரு பாதியில் இருப்பவனும், நல்லன் - நற்குணம் (சாத்துவிக குணம்) உடையவனும் ஆகிய திருமால் (அவ்வாறு இருந்துகொண்டே) கொடிறு முரித்தனன் - எங்கள் பெருமானுடைய கழுத்தை முரித்து விட்டான். (`இது, கூடவேயிருந்து கொண்டு குழிபறித்தான்` என்னும் பழமொழிக்கு ஒப்பாயிற்று - என்பதாம்.) கொடிறு, ஆகுபெயர். குருகு - நீர்ப் பறவை. பழனம், `திருப்பழனம்` என்னும் சோழ நாட்டுத் தலம். `பழனத் தாரசைக் கொடிறு முரித்தனன்` என்பதை, `யானையைக் கோட்டைக் குறைத் தான்` என்பது போலக் கொள்க.
படிறு மொழிந்து - கபட்டுரை கூறியது. அது, `தேவ யாகத்தில் முதற் பங்கு உம்முடையதே யன்றோ? அதனால், தேவ காரியமாகப் பாற்கடலைக் கடைந்ததில் முதலில் தோன்றியது உமக்குத் தானே ஆக வேண்டும்?`` எனக் கூறியது. விதி, இங்கு நல் ஊழ். `மிடறு தடுத்திராது விடில் நாங்கள் எங்கள் தலைவனை இழந்திருப்போமன்றோ` என்றபடி. இவ்வாறு, தேவர்களது தந்நலத் தன்மையையும், அநித்தியத் தன்மையையும், சிவபிரானது பெருங்கருணைத் திறத்தையும், நித்தியத் தன்மையையும் குறிப்பாற் கூறிவியந்தவாறு. பரவை - கடல்.

பண் :

பாடல் எண் : 29

விதிகரந்த வெவ்வினையேன் மென்குழற்கே வாளா
மதுகரமே எத்துக்கு வந்தாய் நதிகரந்த
கொட்டுக்காட் டான்சடைமேர் கொன்றைக் குறுந்தெரியல்
தொட்டுக்காட் டாய்கழல்வாய் தொக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மதுகரமே, கொட்டுக்கு ஆட்டான் சடைமேல் கொன்றைத் தெரியல் தொட்டுக் காட்டாய்; தொக்குச் சுழல்வாய்; வாளா, எத்துக்கு வினையேன் மென் குழற்கே வந்தாய்?` என இயைத்து முடிக்க. விதி - பிரமதேவன். கரந்த வினை - மறைந்து வகுத்த பிராரத்துவ கன்மம். குழற்கே - கூந்தலின்கண்; உருபு மயக்கம். மதுகரம் - வண்டு. `எற்றுக்கு` என்பது, `எத்துக்கு` என மருவி வந்தது. `நதி கரந்த சடை` என இயையும். கொட்டுக்கு ஆட்டு, மத்தளம் முதலிய கொட்டுக்களுக்கு இயைய ஆடும் நடனம்.
தெரியல் - மாலை. தொட்டு - கிளறி. `அதன் நறுமணத்தைக் கொண்டுவந்து காட்ட மாட்டாய் என்க. `மாலையைப் பெறாவிடினும் மணத்தையேனும் பெற்றால் `ஆற்றலாம்` என்பது கருத்து. தொக்கு - வேறு பல வண்டுகளோடு கூடி. இஃது ஆற்றாமை மீதூர்வால் தலைவி வண்டினை நோக்கிக் கூறிய, காமம் மிக்க கழிபடர் கிளவி.

பண் :

பாடல் எண் : 30

தொக்கு வருங்கணம் பாடத்தொல் நீறணிந் தேநிலவு
நக்கு வருங்கண்ணி குடிவந் தார்நறும் புன்னைமுன்னம்
அக்கு வருங்கழிக் கானல்ஐ யாறரைக் காணஅன்பு
மிக்கு வரும்அரும் போதரைக் காண வெள்குவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஐயாறரைக் காண அன்புமிக்கு வாழும்; (அவர் வந்தார்; காண வெள்குவன்` என இயைத்து முடிக்க. தொக்கு - கூடி. கணம் - பூத கணம். `நிலவாகிய கண்ணி, நக்கு வரும் கண்ணி` எனத் தனித்தனி இயைக்க.
நக்கு - ஒளி வீசி. கண்ணி - முடியில் அணியும் மாலை. புன்னை - புன்னை மலர்; ஆகுபெயர். அக்கு - சங்கு. கானல் - கடற்கரைச் சோலை. ஐயாறு, சோழ நாட்டுத் தலங்களில் ஒன்று. அரும் போதர் - அரியஞான சொரூபர், இஃது இங்கு, `அவர்` என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது. இது தலைவி தன் நாண் அழிவு கூறித் தோழியை வரைவு கடாவுவித்தது.

பண் :

பாடல் எண் : 31

வெள்காதே உண்பலிக்கு வெண்டலைகொண் டூர்திரிந்தால்
எள்காரே வானவர்கள் எம்பெருமான் வள்கூர்
வடதிருவீ ரட்டானத் தென்னதிகை மங்கைக்
குடதிருவீ ரட்டானங் கூறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``எம்பெருமான்`` என்பது விளி. அது முதலாகத் தொடங்கி, `வானவர்கள் எள்காரே`` என முடிக்க. `வல்` என்பது அடி யாக `வல்கு` எனப் பிறந்த பண்புப் பெயர், `வள்கு` எனத் திரிந்து `ஊர்` என்பதனோடு புணர்ந்து, கோவலூரை உணர்த்திற்று. அவ்வூர் வீரட்டமே, ``வடதிருவீரட்டானம்`` எனப்பட்டது. தென் - தென்திரு வீரட்டம்; திருவதிகை. குட திருவீரட்டானம் - மேற்கேயுள்ள வீரட்டானம்; திருக்கண்டியூர். கூறு - பங்கு. `இவை போல எத்தனையோ வீரட்டானம் உம்முடைய பங்காய் இருக்க, நீர் `பிச்சைக்கு` என்று வெண்தலை கொண்டு ஊர் திரிந்தால், வானவர்கள் ஏற்காரே?` என்க. `வானவர்கள் நீர் இரப்பதன் உண்மையை அறிவார் கள் ஆகையால் எள்கிற்றிலராய், உம்மை வணங்குவர்` என்பது குறிப்பு. ``அவனும் ஓர் ஐயம் உண்ணி; அதள் ஆடையாவது, கலனா வது ஓடு. கருதில் - அவனது பெற்றி கண்டும், அவன் நீர்மை கண்டும் அகன் நேர்வர் தேவரவரே``* என்னும் அப்பர் திருமொழியையும் காண்க.

பண் :

பாடல் எண் : 32

கூறு பெறுங்கன்னி சேர்கருங் கூந்தல்சுண் ணந்துதைந்து
நீறு பெறுந்திரு மேனி நெருப்புப் புரைபொருப்பொத்
தாறு பெறுஞ்சடை அங்கொன்றை யந்தேன் துவலைசிந்த
வீறு பெறுஞ்சென்று சென்றெம் பிரானுக்கு வெண்ணிறமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`எம்பிரானுக்கு வெண்ணிறம், துதைந்து, ஒத்து, சிந்த வீறு பெறும்` என இயைத்து முடிக்க. கூறு பெருங்கன்னி, திருமேனியில் ஒரு கூற்றைப் பெற்று விளங்கும் கன்னிகை; உமை. சுண்ணம் - பொடி; திருநீறு. துதைந்து - மூழ்கப் பெறுதலாலும், `நீறு பெறும் நெருப்புப் புரை திருமேனி நெருப்பு ஓத்து` என மாற்றி. `நீறு பூத்த நெருப்பை ஒத்த திருமேனி மலைபோலத் தோன்றுதலாலும்` என உரைக்க. `கொன்றை அம் தேன் திவலையைச் சிந்தவும்` என்க. கொன்றை - கொன்றைப் பூ; ஆகுபெயர். சென்று சென்று வீறு பெறும். தொடர்ச்சியாக விளங்கி விளங்கிப் பெருமை பெறும். `கண்ணி, பெருஞ்சடை` என்பன பாடம் அல்ல. செய்தென் எச்சங்கள் எண்ணின் கண் வந்து, காரணப் பொருளவாய் நின்றன. `பெருமானது பெரிய திருமேனி முழுதும் திருநீற்றால் விளங்குகின்ற வெண்ணிறம், அதன்மேல் உமாதேவி தன் கூந்தல் விழுதலால் கரு நிறத்தைச் சிறிது பொருந்தியும், சடையினின்றும் தேன் துளித் துளியாகச் சிந்துதலால் பல புள்ளிகளைப் பெற்றும் மேலும் மேலும் அழகு பெறுகின்றது` என அதனை வியந்துவாறு. பல நிறங்கள் ஒன்று கூடுதலை அழுகுடையதாக மதிப்பர்.

பண் :

பாடல் எண் : 33

நிறம்பிறிதாய் உள்மெலிந்து நெஞ்சுருகி வாளா
புறம்புறமே நாள்போக்கு வாளோ நறுந்தேன்
படுமுடியாய்ப்பாய்நீர் பரந்தொழுகும் பாண்டிக்
கொடுமுடியாய் என்றன் கொடி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நறுந்தேன்`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. தேன்படும் முடியாய் - மலர்கள் தேனைச் சிந்துகின்ற முடியினை (தலையை) உடையதாய். பாண்டிக்கொடுமுடி, கொங்கு நாட்டுத் தலங்களுள் ஒன்று.
கொடி - கொடி போல்வாளாகிய பெண்; உவமையாகு பெயர். வாளா - யாதொரு பயனையும் பெறாது. புறம் புறமே - பெரிதும் தொலைவில் நின்று; அடுக்கு, மிகுதி பற்றி வந்தது. ஓகாரம் இரக்கப் பொருட்டு. அதனால், `நீ இரங்காயோ` என்பது பெறப்படும். இது தலைவியது நிலைமை பற்றித் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்ற பின்பு செவிலி இறைவனாகிய தலைவனை எதிர்பெய்துகொண்டு, இரங்கிக் கூறியது.

பண் :

பாடல் எண் : 34

கொடிக்குல வும்மதிற் கோவலூர் வீரட்ட கோளரவம்
பிடிக்கில அம்முடிப் பூணலை யத்தொடு மால்விடையின்
இடிக்குரல் கேட்டிடி என்றிறு கக்கடி வாளெயிற்றால்
கடிக்க லுறுமஞ்சி நஞ்சம் இருந்தநின் கண்டத்தையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வீரட்ட, அரவம் அம் முடிப் பிடிக்கில்; அத்தொடு விடையின் குரல்கேட்டு இடி - என்று அஞ்சி நின் கண்டத்தை அடிக்கடி இறுகக் கடித்தலுறும். (ஆகையால் அவற்றைப்) பூணலை` என இயைத்து முடிக்க. `கொடியையுடைய மதில், குலம் மதில்` எனத் தனித் தனி இயைக்க. குலவுதல் - விளங்குதல். ``குலவும் மதில்`` என்பதில் மகர ஒற்று விரித்தல். பிடித்தல் - போதுமானதாக அமைதல். முடி பெரிதாய் `இருத்தலின் அதை முழுவதுமாகச் சுற்றுதற்குச் சிறிதான பாம்பு, போதவில்லை` என்றபடி. `அதனோடு` என்பு, அத்தோடு` என மருவிற்று. `இவ் இருகாரணம் பற்றியேனும் அரவம் பூணுதலை விடு` என வேண்டியதாம்.

பண் :

பாடல் எண் : 35

கண்டம் நிறங்கறுப்பக் கவ்வைக் கருங்கடல்நஞ்
சுண்டல் புரிந்துகந்த உத்தமற்குத் தொண்டடைந்தார்
கூசுவரே கூற்றைக் குறுகு வரேதீக்கொடுமை
பேசுவரே மற்றொருவர் பேச்சு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`உத்தமற்குத் தொண்டு அடைந்தார் கூற்றைக் கூசுவரே? தீக் கொடுமை. குறுகுவரே? மற்றொருவர் பேச்சுப் பேசுவரே? என வினாப் பொருளில்வந்த ஏகாரங்கள் அவை நிகழா மையைக் குறித்தன. கவ்வை - ஆரவாரம். `புரிந்தும்` என்னும் உம்மை தொகுக்கப்பட்டது. உகந்த (அதனை உண்பித்தவர்களை வெறாமல்) விரும்பிய. உத்தமன் - மேலானவன். `தொண்டாய் அடைந்தார்` என ஆக்கம் விரிக்க. கூசுதல் - நாணுதல். அஃது இங்கு அஞ்சுதலின் மேற்று. தீ - தீமை அது துன்பத்தைக் குறித்தது. கொடுமை - அடைய லாகாதவை. `தீயவையாகிய கொடுமையைக் குறுகுவரே` - என்க. மற்றொருவர் பேச்சு - பிறர் ஒருவரைப் பற்றிய பேச்சு, `உத்தமன் பேச்சையன்றிப் பிறர் பேச்சைப் பேசார்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 36

பேய்ச்சுற்றம் வந்திசை பாடப் பிணமிடு காட்டயலே
தீச்சுற்ற வந்துநின் றாடலென் னாம்செப்பு முப்பொழுதும்
கோச்சுற்ற மாக்குடை வானவர்கோன் அயன் மால்முதலா
மாச்சுற்றம் வந்திறைஞ் சுந்திருப் பொற்சடை மன்னவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``முப்பொழுதும்`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. கோச் சுற்றம் ஆ - அரசனுக்குரிய பரிவாரங்கள்போல. `இடு காட்டு ஆடல்` என இயையும். `இந்திரன், அயன், மால் முதலிய மேலான தேவர்களும் முப்போது வந்து வணங்க நிற்கின்ற நீ இடு காட்டில் ஆடல் என்? செப்பு என வினை முடிபு செய்க. ஆம், அசை. `இடுகாடு` எனப்படுவது, உலகர் தம் கிளைஞரை இடுகின்ற காடு அன்று; உலகம் அனைத்தும் ஒடுங்கிய நிலையில் காரணமாத்திரை யாய் நிற்கின்ற மாயையே - என்பது கருத்து. அதனால், ``பேய்`` எனப் படுவனவும் ஒடுக்கக் காலத்து யாதோர் உடம்பும் இன்றி, மாயையில், பிரளய கேவல நிலையில் இருக்கும் உயிர்களே - என்பதும் பெறப்படும்.

பண் :

பாடல் எண் : 37

மன்னும் பிறப்பறுக்கும் மாமருந்து வாளரக்கன்
துன்னுஞ் சுடர்முடிகள் தோள்நெரியத் தன்னைத்
திருச்சத்தி முற்றத்தான் சித்தத்துள் வைத்தான்
திருச்சத்தி முற்றாத்தான் தேசு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மன்னும் பிறப்பறுக்கும் மாமருந்து`` என்பதை யிறுதியிற் கூட்டியுரைக்க. வாள் அரக்கன் கொடிய இராக்கதன்; என்றது இராவணனை. ``சுடர் முடிகள்`` என்பது அடையடுத்த ஆகுபெயராய், அவற்றை யணிந்த தலைகளைக் குறித்தன. முடிகள், தோள்கள் செவ்வெண். ``திருச்சத்தி`` இரண்டில். ஈற்றடியில் உள்ள ``திருச்சத்தி முற்றம்``, சோழநாட்டுத் தலங்களில் ஒன்று. ``தன்னைத் திருச்சத்தி முற்ற என்றது, `தன்னை (அவ் அரக்கன்) என்றும் நிலையான பேராற் றலை உடையவனாக நன்கு உணருமாறு` என்றபடி. சித்தத்துள் வைத்தான் திருவுள்ளத்தில் நினைத்தவன். என்றது, நினைத்துக் கால் விரலால் ஊன்றியான்` என்றதாம். தேசு - ஒளி; அருள். `அரக்கனைத் தன்னை உணருமாறு செய்தவனும். திருச்சத்திமுற்றத்தில் உள்ளவனும் ஆகிய அவனது அருளே, பலகாலமாய் நீங்காதிருக்கின்ற பிறவியாகிய நோயை நீக்கும் பெரிய மருந்து` என முடிக்க. சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை முற்றிற்று.
சிவபெருமான் திருஇரட்டை மணிமாலையில் குறிக்கப் பெற்றுள்ள தலங்கள்
திருவெண்காடு, திருமுதுகுன்றம், திருவாரூர், திருவதிகை, திருவொற்றியூர், திருமறைக்காடு,
திருவாய்மூர், திருவலஞ்சுழி, தில்லை, திருக்கொடுங்குன்றம், திருப்பழனம், திருவையாறு,
திருக்கண்டியூர், திருப்பாண்டிக்கொடுமுடி, திருக்கோவலூர், திருச்சத்தி முற்றம்.

பண் :

பாடல் எண் : 1

ஒன்று முதலாக நூறளவும் ஆண்டுகள்வாழ்ந்
தொன்றும் மனிதர் உயிரையுண் டொன்றும்
மதியாத கூற்றுதைத்த சேவடியான் வாய்ந்த
மதியான் இடப்பக்கம் மால்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஒன்று முதலாக நூறளவும் ஆண்டுகள்`` என்றது, `இடைப்பட்ட எந்த ஆண்டிலும் கூற்றுவன் வருவான்; அதற்குத் தடை யில்லை` என்றபடி. `மக்கள் வாழ்நாளின் மேல் எல்லை நூறு ஆண்டு` என்பதையும் பெரும்பான்மை பற்றிக் குறித்தார்.
ஒன்றும் மனிதர் - உலகில் பொருந்தியுள்ள மனிதர். `ஒன்றையும் மதியாத` என உருபு விரிக்க. இதில் ``ஒன்று`` என்றது, `உயர்ந்ததாயினும், அன்றி, இழிந்த தாயினும்` என்றபடி. ``ஒன்று`` என்னும் எண்ணுப் பெயர் எண்ணப் படும் காரணத்தின் மேல் நின்றது. உம்மை, முற்று. அடியையும், இடப்பக்கத்தையும் கூறியதனால், மதி, முடியில் உள்ள மதியாயிற்று. ``இடப்பக்கம் மால்`` என்றது, அரியர்த்தேசுர வடிவம், அல்லது சங்கர நாராயண வடிவத்தை. கற்பத் தொடக்கங்கள் பலவற்றில் சிவபெருமான் சிலபொழுது தனது இடப்பக்கத்தில் மாயோனைத் தோற்றுவித்து, அதன் வழியாகப் பிரமனைத் தோற்றுவித்து உலகத்தைப் படைக்கச் செய்வான். சில பொழுது இடப்பக்கத்தில் மாயோனோடு கூடவே வலப்பக்கத்தில் பிரமனையும் தோற்றுவிப்பான். சிலபொழுது வலப்பக்கத்தில் பிரமனைத் தோற்றுவித்து அவனைக் கொண்டே மாயோனைப் படைப்பிப்பான். அவற்றுள் ``இடப் பக்கம் மால்`` என்று மட்டும் கூறிப் போயினமையால் இது, பின்பு மாயோனைக் கொண்டு பிரமனைத் தோற்றுவிக்கும் முறையைக் குறித்தது. இங்குக் கூறியவைகளை.
அயனைமுன் படைத்திடும் ஒருகற்பத்
தரியைமுன் படைத்திடும் ஒருகற்பத்
துயர் உருத்திரன் றனைமுனம் படைப்பன்
ஒருகற்பம் மற்றொருகற் பந்தன்னில்
முயலும் மூவரை ஒருங்குடன் படைப்பன்
முன்பி றந்தவர் மற்றிரு வரையும்
செயலி னாற்படைக் கவும் அருள் புரிவன்
சிவபிரான் எனில், ஏற்றமிங் கெவனோ
என்னும் சிவதத்துவ விவேகத்தால் 1 உணர்க. ``முன்பிறந்தார் மற்றிரு வரையும் ... .... படைக்கவும் அருள்புரிவன்`` என்றதனால், `அஃதே நியதியன்று; ஒருகற்பத்தில் சிவபிரான் தானே மூவரையும் படைத்தல் உண்டு` என்பது போந்தது. இங்கு `அயன், மால்` என்பவரோடுகூட உருத்திரனையும் குறித்தமையை உணர்பவர்க்கு,
நான்முகனை நாரா யணன்படைத்தான்; நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் 2
என்றது ஒரே ஒரு கற்பத்தில் நிகழும் நிகழ்ச்சி. என்பதும், அதுதானும் மூவருள் ஒருவனாகிய உருத்திரனைக் குறிப்பதன்றி, மூவர்க்கும் மேலான நான்காமவனாகிய சிவபிரானைக் குறியாது. ஒருகற்பத்தில் பிரமனுக்குப் படைத்தல் தொழிலைச் செம்மையாக உணர்த்துதற் பொருட்டு அவனது நெற்றியினின்றும் தோன்றிய நீலலோகிதன் முதலிய உருத்திரர் பதினொருவரே எங்கும் `ஏகாதச ருத்திரர்` எனக் குறிக்கப்படுகின்றனர். `இங்ஙனம் சிவ புண்ணிய மிகுதியால் சிவ பிரானது உருவம், பெயர், தொழில் இவைகளைப் பெற்று நிற்கின்ற உருத்திரர்களே சிற்சில இடங்களில் பிரம விட்டுணுக்களினும் கீழ்ப் பட்டவர்களாகக் கூறப்படுகின்றனர்`` என்பதையறியாமல் சிவனையே பிரம விட்டுணுக்களுக்குக் கீழ்ப்பட்டவனாக எண்ணுதல் தவறுடையதாதல் அறிக. பிரமனை, `சாக்கிர மூர்த்தி` என்றும், விட்டுணுவை, `சொப்பன மூர்த்தி` என்றும் கூறுதல் பலர்க்கும் உடன்பாடு. அந்நிலையில் சைவாகமங்கள் சிவனை இம்மூவர்க்கும் அப்பாற்பட்ட `துரிய மூர்த்தி` என்றே கூறுதல் குறிக்கொளத்தக்கது. ``மால்`` என்னும் எழுவாய், `உளன்` என எஞ்சி நின்ற பயனிலையோடு முடிந்தது. இவ்வந்தாதியின் எல்லாப் பாடல்களும் சொற் பின்வருநிலையணி பெற்று வருதல் காண்க.

பண் :

பாடல் எண் : 2

மாலை ஒருபால் மகிழ்ந்தானை வண்கொன்றை
மாலை ஒருபால் முடியானை மாலை
ஒளியானை உத்தமனை உண்ணாநஞ் சுண்டற்
கொளியானை ஏத்தி உளம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரண்டாவதாக வந்த ``ஒருபால்``, இடப்பக்கம். `அப்பக்கத்தில் கொன்றை மாலையைச் சூடான்` என்றது, அஃது அம்மையது பாகம் ஆதலைக் குறித்தது. இறுதிக்கண் வந்த மாலை, அந்திக் காலம். அது கால ஆகுபெயராய். அது பொழுது தோன்றும் செவ்வானத்தைக் குறித்தது.
உண்ணா - உண்ணப்படாத, ஒளியான் - பின் வாங்கி மறையாதவன். ``ஏத்தி`` என்பது தகர ஒற்றுப் பெறாது வந்த இகர ஈற்று ஏவல் வினைமுற்று. `துதிப்பாயாக` என்பது பொருள். ``உளம்`` என்பதை முதலிற் கூட்டி முடிக்க. `உண்ணா நஞ்சு உண்டல்` என்றது முரண்தொடை.

பண் :

பாடல் எண் : 3

உளம்மால்கொண் டோடி ஒழியாது யாமும்
உளமாகில் ஏத்தாவா றுண்டோ உளம்மாசற்
றங்கமலம் இல்லா அடல்வெள்ளே றூர்ந்துழலும்
அங்கமல வண்ணன் அடி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``யாமும்`` என்பதை முதலிலும், ``ஏத்தாவாறு உண்டே`` என்பதை இறுதியிலும் கூட்டி யுரைக்க. ``உளம்`` மூன்றில் இடையது தன்மைப் பன்மைக் குறிப்பு வினைமுற்று; ஏனையவை, `மனம்` எனப்பெயர். ``ஆகில்`` என்பது தெளிவின்கண் வந்தது, `நாமும் மற்றவர்கள் போல மன மயக்கங்கொண்டு ஓடி ஒழியாது, நிலைபெற்றிருக்கின்றோம் என்றால், நாம் (முற்பிறப்பில்) சிவபெருமானது, திருவடிகளை துதியாதிருந்தது உண்டோ` என்பது இதன் திரண்ட பொருள். ஏகார வினா, எதிர்மறையைக் குறித்தது.
அங்கம் - உடம்பு, `மலம் - மாசு. உள்ளமும் மாசற்று, உடம்பும் மாசற்று விளங்கும் ஏறு` என்க, அறக் கடவுளே விடையா தலையும், அதன் நிறம் வெண்மை யாதலையும் இவ்வாறு குறித்தார். அம் கமலம் - அழகிய தாமரை மலர். இது செந்தாமரை மலர்.

பண் :

பாடல் எண் : 4

அடியார்தம் ஆருயிரை அட்டழிக்குங் கூற்றை
அடியால் அருவாகச் செற்றான் அடியார்தம்
அந்தரத்தால் ஏத்தி அகங்குழைந்து மெய்யரும்பி
அந்தரத்தார் சூடும் அலர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மார்க்கண்டேயர் வரலாற்றைக் குறிப்பிடுகின்றவர் அதில் உள்ள சிவபெருமானது நேர்மையை விளக்குதற்கு, `அடியான்` என ஒருமையாற் கூறாது, ``அடியார்`` எனப்பன்மையாற் கூறினார். அட்டு - கொன்று. அழித்தல் - செயற்படாதபடி செய்தல். ``அந்தரத் தார்`` என்பதை மூன்றா வதாய் உள்ள ``அடியார்`` என்பதற்கு முன்னே கூட்டி, `அதன் கண், `அடியாராய்` என ஆக்கம் விரித்து, `சூடும் அவர் களையுடைய அடியால் செற்றான்` என முடிக்க. ``அருவாக`` என்றது, `தூலஉடம்பை இழக்கும்படி` என்றதாம். அம்தரத்தால் ஏத்தி - அழகிய, மேலான குணத்தால் துதித்து. `மந்திரத்தால்` என்பது பாடம் ஆயின் மடக்கணிக்குச் சிறிதும் இடம் இல்லாது போதலால் அது பாடம் அன்று.

பண் :

பாடல் எண் : 5

அலராளுங் கொன்றை அணியல்ஆ ரூரற்
கலராகி யானும் அணிவன் அலராகி
ஓதத்தான் ஒட்டினேன் ஓதுவன்யான் ஓங்கொலிநீர்
ஓதத்தான் நஞ்சுண்டான் ஊர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, திருவாரூர்ப் பெருமான்மேல் காதல் கொண்டாள் ஒருத்திதன் கூற்று. ``அலர் ஆளும் கொன்றை`` என்பதை, `கொன்றை ஆளும் அலர்` என மாற்றிக் கொள்க. கொன்றை - கொன்றை மரம். அதனால் ஆளப்படுதல், பூத்து அசையச் செய்தல். அணியல் - அணிதலை உடைய. `அலர் அணிந்த ஆரூரனைக் காதலித்ததனால் யானும் எங்கும் அலர் உடையேனாயினேன்` எனச் சொல் நயம்படக் கூறி இரங்கியவாறு. இவ் அலர் இரண்டனுள் முன்னது மலர்; பின்னது, ஊரார் கூறும் பழிச்சொல். மூன்றாவதாகிய அலர் - பரந்து செல்லுதல். `நாண் இழந்து, எங்கும் பரந்து செல்லும் செல வினை உடையேனாய்` என்க. ``ஓதத்தான்`` இரண்டில் முன்னதில் தான், அசை, ஓத ஒட்டினேன் - நிகழ்ச்சியை வெளிப்படுத்தத் துணிந்து விட்டேன் `அதன்படி இனி யான் நஞ்சுண்டாவது ஊரைப் பலர்க்கும் ஓதுவன்` (வெளிப்படச் சொல்வன்) என முடிக்க. ஓதம், பின்னது அலை, அஃது ஆகுபெயராய்க் கடலைக் குறித்தது. அதன்பின் வந்த `ஆன்` உருபு ஏழாவதன் பொருட்டாய் நின்றது.

பண் :

பாடல் எண் : 6

ஊரும தொற்றியூர் உண்கலனும் வெண்தலையே
ஊரும் விடையொன் றுடைதோலே ஊரும்
படநாகம் மட்டார் பணமாலை ஈதோ
படநாகம் அட்டார் பரிசு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இவ்வெண்பாவும் பழிப்பது போலப் புகழ்ந்தது. ``ஊரும் விடை`` என்பதில் பெயரெச்சம் செயப்படுபொருட்டாயும், ``ஊரும் நாகம்`` என்பதில் பெயரெச்சம் வினைமுதற் பொருட்டாயும் நின்றன. ``ஊரும் விடை ஒன்று`` என்றது, `ஊர்தியாகக் கொள்ளப் பட்டது யானை, குதிரை முதலியன அல்ல; காளையே, அதுவும் ஒன்று தவிர, இரண்டாவதில்லை` என்றபடி. ``தோலே`` என்னும் பிரிநிலை ஏகாரங்களால் நற்கலங்களும் நல் உடைகளும் பிரிக்கப்பட்டன. பட நாகம் மட்டு ஆர் பண் அம் மாலை - படத்தையுடைய பாம்பும், தேன் பொருந்திய அத்தியமே அழகாகச் செய்யப்பட்ட மாலைகள். நாகம் பட அட்டார் - யானை (கயாசுரன்) அழியும்படி அழித்தவர். பரிசு தன்மை `அவர் தன்மை இதுதானோ` என்க ஓகரம் இழிவு சிறப்பு.

பண் :

பாடல் எண் : 7

பரியானை ஊராது பைங்கண் ஏறூரும்
பரியானைப் பாவிக்க லாகாப் பரியானைக்
கட்டங்கம் ஏந்தியாக் கண்டுவாழ் நன்னெஞ்சே
கட்டங்கம் ஏந்தியாக் கண்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதற்கண் உள்ள ``பரியானை`` என்பதில் `பரிய` என அகரம் தொகுக்கப்பட்டது. இரண்டாம் அடியில் முதற்கண் நின்ற பரி- ஊர்தி. பாவித்தல் - நினைத்தல். நினைத்தல் செய்யாதவர்க்குப் பரியான் - அருளான். ``கட்டங்கம்`` இரண்டில் முன்னது `கட்வாங்கம்` என்பதின் திரிபு. `மழு` என்பது பொருள். பின்னது, கட்டு அங்கம் - மாலையாகக் கட்டப்பட்ட எலும்பு, நெஞ்சே பரியானை கட்டங்கம் ஏந்தியாகக் கண்டும், கட்டு அங்கம் ஏந்தியாகக் கண்டும் வாழ்` என முடிக்க.

பண் :

பாடல் எண் : 8

கண்டங் கரியன் உமைபாலுந் தன்பாலும்
கண்டங் கரியன் கரிகாடன் கண்டங்கள்
பாடியாட் டாடும் பரஞ்சோதிக் கென்னுள்ளம்
பாடியாக் கொண்ட பதி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கண்டங்கள் பாடி ஆட்டாடும்`` என்பது முதலாகத் தொடங்கி, ``சோதிக்கு`` என்பதனோடு இயைய, ``பதி`` என்பதிலும் `பதிக்கு` என, தொகுக்கப்பட்ட நான்காவது விரித்துரைக்க, முதற்கண் நின்ற கண்டம் கழுத்து; மிடறு. `உமை பாலினையும், தன் பாலினையும் கண்டு` என இரண்டிடத்தும் இரண்டாவது விரிக்க. ``கண்டு`` என்னும் எச்சத்திற்கு முடிவாகிய `உணர` என்பது தொகுத்தலாயிற்று. அங்கு - அவனிடத்து `உமையொரு பாகமாகிய திருமேனியை யுடையனா யினும் அவனருள் பெற்றார்க்கன்றிக் காண இயலாதவன்` என்பதாம். இறுதியில் நின்ற கண்டம், `குரல்` என்னும் பொருளது. `இக்குரல், பூத கணங்களின் குரல்` என்க. ஆட்டு ஆடும் - பலவகை ஆட்டங்களை ஆடுகின்ற. பின் நின்ற பாடி - பாசறை; தங்குமிடம். பதி - தலைவன்.

பண் :

பாடல் எண் : 9

பதியார் பழிதீரா பைங்கொன்றை தாவென்
பதியான பலநாள் இரக்கப் பதியாய
அம்மானார் கையார் வளைகவர்ந்தார் அஃதேகொல்
அம்மானார் கையார் அறம்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பதியார் பழி - ஊரில் உள்ளவர்கள் தூற்றும் அலர்கள். தீரா - ஒழிகின்றில. `என்பது` என்னும் சொல்லின் ஈற்றுக் குற்றிய லுகரம் யகரம் வரக் குற்றிய லிகரமாய்த் திரிந்து முற்றியலுகரம் போல அலகு பெற்றது. `என்பது சொல்லி யான் இரக்கும்படி` என, `சொல்லி` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. பதி ஆய - தலைவர் ஆகிய. அம் மான் ஆர் கையார் - (தாருகாவன முனிவர்கள் விடுத்த) அந்த மான் பொருந்திய கையை உடையவர். அகரம், பண்டறி சுட்டு. `அம் - அழகு` என்றலும் ஆம். அஃதே கொல் அத்தன்மையது தானோ! அம்மானார் - யாவரினும் பெரியோராயினார். கையார் - ஒழுக்கம் உடையார். ``வளை கவர்ந்தார். அம்மானார், கையார் அறம் அஃதே கொல்` என முடிக்க. இதுவும் கைக்கிளைப் பாற்பட்ட தலைவி ஒருத்தி யது கூற்று.

பண் :

பாடல் எண் : 10

அறமான நோக்கா தநங்கனையும் செற்றங்
கறமாநஞ் சுண்ட அமுதன் அறல்மானும்
ஓதியாள் பாகம் அமர்ந்தான் உயர்புகழே
ஓதியான் தோற்றேன் ஒளி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அறம் ஆன நோக்காது - தனக்கு அறமாவனவற்றை எண்ணாமல், (இரக்கம் இல்லாமல்` என்றபடி. இதுவும் பழித்ததுபோல் புகழ் புலப்படுத்தியது. அநங்கன் - மன்மதன். `மா நஞ்சு அற உண்ட அமுதன்` என மாற்றிக்கொள்க. அற - முற்றிலும். அறல் மானும் ஓதியாள் - கருமணல் போலும் கூந்தலை உடையவள்; உமை. `அறமான` என்பது பாடம் அன்று. அமர்ந்தான் - விரும்பினான். புகழே ஓதி - புகழையே சொல்லி. `ஒளி தோற்றேன்` என மாற்றி, `அழகினை இழந்தேன்` என உரைக்க. இதுவும் கைக்கிளைப் பாற்பட்ட தலைவி ஒருத்தியது கூற்று.

பண் :

பாடல் எண் : 11

ஒளியார் சுடர்மூன்றும் கண்மூன்றாக் கோடற்
கொளியான் உலகெல்லாம் ஏத்த ஒளியாய
கள்ளேற்றான் கொன்றையான் காப்பிகந்தான் நன்னெஞ்சே
கள்ளேற்றான் கொன்றை கடிது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கோடற்கு ஒளியான் - கொள்ளுதலுக்குப் பின்னிடாதவன். ``ஒளியாயகள்`` என்பதில் கள், விகுதிமேல் விகுதி. `ஒளியானவைகள்` என்றபடி - இங்கு ஒளி - புகழ். `உலகம்` ஏத்துதற்கு உரிய புகழ்கள் பலவற்றையும் ஏற்றவன்` என்க. இரண்டிடத்தும் ``கொன்றை`` என்பது கொன்றை மாலையையே குறித்தது. ``காப்பு இகழ்ந்தான் - என்னை இறவாமல் காத்தலைக் கைவிட்டான். இதன் பின் `ஆயினும்` என்பது வருவிக்க. `தான் கொன்றையைக் கடிது ஈயக் கள்ளேல்` என இயைத்து முடிக்க. `ஈய என்பது சொல்லெச்சம் கள்ளேல் - (என்னால் இயலாது` என்று சொல்லிக்) கரவு செய்யாதே. `விரைந்து சென்று இரந்து வாங்கி வா` என்றபடி. இப்பாட்டின் துறையும் முன்பாட்டின் துறையே.

பண் :

பாடல் எண் : 12

கடியரவர் அக்கர் இனிதாடு கோயில்
கடியரவர் கையதுமோர் சூலம் கடியரவ
ஆனேற்றார்க் காட்பட்ட நெஞ்சமே அஞ்சல்நீ
ஆனேற்றார்க் காட்பட்டேம் யாம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கடி அரவர் - கடிக்கும் குணத்தையுடைய பாம்பை அணிந்தவர். அக்கர் - எலும்பை அணிந்தவர். ஆடு கோயில் கடியர் - ஆடுமிடத்தைக் கடிதாக (சுடுகாடாக)க் கொண்டவர். `கடிய கோயி லார்` எனற்பாலது, இடத்தின் தன்மையை இடத்து நிகழ்பொருள்மேல் ஏற்றி, ``கடியர்`` எனப்பட்டது. ``கையதும்``என்னும் உம்மை, `அதுவும் கடிது`` என இறந்தது தழுவிற்று. கடி அரவ ஆன் ஏறு - கடுமையான குரல் ஓசையை உடைய இடபம், `கடியரவர் ஆனேறு` என்பது பாடம் அன்று. ஆன் ஏற்றார்க்கு ஆட்பட்டோம். அவ்விடத்துத் தகுதி வாய்ந்த தலைவர்க்கே ஆட்பட்டோம். ஈற்றடி, அஞ்ச வேண்டாமைக்குக் காரணத்தை விளக்கிற்று. ஆன் - அவ்விடம். அஃது, ``ஆன்வந்தியையும் வினைநிலை யானும்`` என்னும் தொல்காப்பியத்தாலும் * அறியப்படும். `அவ்விடம்` என்பது ஆட்பட்ட நிலையைக் குறித்தது. ஏற்றான் - ஏற்றவன்; ஏற்புடையவன். இதனால், பிறரெல்லாம் ஏற்புடையர் ஆகாமையும் குறிக்கப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 13

யாமானம் நோக்கா தலர்கொன்றைத் தார்வேண்ட
யாமானங் கொண்டங் கலர்தந்தார் யாமாவா
ஆவூரா ஊரும் அழகா அனலாடி
ஆவூரார்க் கென்னுரைக்கேன் யான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

யாம் மானம் நோக்காது - நாம் நாணத்தைப் பொருட்படுத்தாமல், யா மானம் கொண்டு அங்கு யா மாவா ஆவூரா ஊரும் அழகா அனலாடி அலர் தந்தார் - என்ன பெருமை பற்றி அவ் விடத்து எந்த வகைக் குதிரையாகவோ இடபத்தை ஊர்பவரும், அழகாகத் தீயில் ஆடுபவரும் ஆகிய பெருமான் (கொன்றை மாலையைத் தாராமல்) பழிச் சொல்லையே தந்தார்? ஆ - ஐயோ! `யான் (அலர்தூற்றும்) ஊரார்க்கு என் உரைப்பேன்` என்க. ``ஆடி`` என்பது பன்மை யொருமை மயக்கம். அன்றி, `தந்தான்` என்றே பாடம் ஓதலுமாம். `என்னுரைக்கோம் யாம்` என்பது பாடம் ஆகாமையறிக. மூன்றாம் அடியில், ``ஊரா`` என்றது, `ஊர்தியாக` என்றபடி. இதுவும் காதற்பட்ட தலைவி கூற்று.

பண் :

பாடல் எண் : 14

யானென்றங் கண்ணா மலையான் அகம்புகுந்து
யானென்றங் கையறிவும் குன்றுவித்து யானென்றங்
கார்த்தானே யாயிடினும் அம்பரன்மேல் அங்கொன்றை
ஆர்த்தானேல் உய்வ தரிது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அண்ணாமலையான், அம் பரன்`` என்பவற்றை முதற்கண் கூட்டியுரைக்க. அன்பான் - அழகிய இறைவன். ``யான்`` மூன்றில் முன்னது இறைவன் தான் தன்னை அறிமுகப்படுத்தியது, இடையது, `யான்` என்னும் செருக்கு. `என்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ஐயறிவு - ஐம்புல அறிவு. இறுதியது, இறைவன், `எல்லாவற்றிற்கும் முதல்வன் யானே` என அறிவித்தது. மூன்றாம் அடியில் உள்ள ஆர்த்தல் ஆரவாரித்தல். ஈற்றடியில் உள்ள ஆர்த்தல் இறுகக் கட்டுதல்; சூடியிருத்தல். `கொன்றை மாலையை எனக்குத் தாராமல் தானே சூடியிருப்பானாயின், யான் உய்வது அரிது` என்க. இதுவும் முன்னைத் துறை.

பண் :

பாடல் எண் : 15

அரியாரும் பூம்பொழில்சூழ் ஆமாத்தூர் அம்மான்
அரியாரும் பாகத் தமுதன் அரியாரும்
வேங்கடத்து மேயானை மேவா உயிரெல்லாம்
வேங்கடத்து நோயால் வியந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அரி`` மூன்றில் முதலது வண்டு; இடையது திருமால்; இறுதியது சிங்கம், மூன்றாம் அடியில் ``வேங்கடம்`` திருவேங்கட மலை (மேவா உயிரெல்லாம் வியந்து கடத்து நோயால் வேம்) என்க. மேவுதல் - விரும்புதல். கடம் - உடல். வியத்தல், உடலை, `இளையது` என்றும், `அழகிது` என்றும் புகழ்தல். வேம் - வேகும்; அழியும். இப்பாட்டால் திருவேங்கட மலையில் எழுந்தருளியிருப்பவர் அரியர்த்தேசுரர் (சங்கர நாராயணர் ஆதல் விளங்கும். முதலாழ்வார் பாடலும் * இக்கருத்தை வலியுறுத்தும்.

பண் :

பாடல் எண் : 16

வியந்தாழி நன்னெஞ்சே மெல்லியலார்க் காளாய்
வியந்தாசை யுள்மெலிய வேண்டா வியந்தாய
கண்ணுதலான் எந்தைகா பாலி கழலடிப்பூக்
கண்ணுதலாம் நம்பாற் கடன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வியம் தாழி - எனது ஏவலிற் பொருந்து. இந்த ஏவல் வினைமுற்றில் இகரவிகுதி தகர ஒற்றுப் பெறாமல் வந்தது. `தாழ்தி` என்றே பாடம் ஓதலுமாம், தாழ்தல் - தங்குதல். இதனை இறுதிக்கண் கூட்டுக. வியந்து - (அவர்களைப்) புகழ்ந்து. வியம்தாய - அகன்ற இடமுழுதும் நிறைந்த. கண் நுதலான் - கண் பொருந்திய நெற்றியை உடையவன். அடிப்பூ - திருவடியாகிய மலர். கண்ணுதல் - நினைதல். `நம்மால் உள்ள கடன்` என ஒரு சொல் வருவிக்க. கடன் - கடமை. ``என்கடன் பணிசெய்து கிடப்பதே`` * என அப்பரும் அருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 17

கடனாகம் ஊராத காரணமும் கங்கை
கடனாக நீகவர்ந்த வாறும் கடனாகப்
பாரிடந்தான் மேவிப் பயிலும் பரஞ்சோதி
பாரிடந்தான் மேயாய் பணி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கடன்`` இரண்டில் முன்னது மதம்; அது, `கடம்` என்பதன் இறுதிப் போலி. பின்னது கடமை, ``பாரிடம்`` இரண்டில் முன்னது பூதகணம்; பின்னது பூமியாகிய இடம், பணி - சொல்லி யருள். இரண்டாம் அடியில் உள்ள ``கடனாகம்`` என்பதை. `கடல் நாகம்` - எனப் பிரிக்க இதில் நாகம் - விண்ணுலகம் `நாகக் கடல் கங்கை` என மாற்றி, விண்ணுலகத்தில் இருந்த கடல்போலும் கங்கையை` என உரைக்க. முதலில் உள்ள நாகம், யானை. மேவி - விரும்பி. பயிலும் - சூழ்கின்ற. மேயாய் எழுந்தருளியிருப்பவனே பரஞ்சோதி மேயாய் யானையை ஊராமல், எருதை ஊரும் காரணத்தையும், ஆகாய கங்கையை உன்சடைமுடியில் கவர்ந்து வைத்த காரணத்தையும், பணி` என முடிக்க. ``முன்னதன் காரணம் அறத்தை நடத்துதலும், பின்னதன் காரணம் பகீரதன் தவமும்` என்பது கருத்து. ``தான்`` இரண்டும் அசைகள்.

பண் :

பாடல் எண் : 18

பணியாய் மடநெஞ்சே பல்சடையான் பாதம்
பணியாத பத்தர்க்குஞ் சேயன் பணியாய
ஆகத்தான் செய்துமேல் நம்மை அமரர்கோன்
ஆகத்தான் செய்யும் அரன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பணி ஆதபத்தர் - இடையறாத பணியை (தொழிலை) உடைய வெயிலவர். (ஆதபம் வெயில்) ஆதித்தர். சேயன் - சிவந்த ஒளியை உடையவன். `சூரியர் பலர் ஒன்று கூடினால் உண்டாகும் ஒளியைவிடமேலான ஒளியை உடையவன்` என்றபடி. பணி ஆய ஆகம் - பாம்புகள் பொருந்திய உடம்பை உடையவன். செய்துமேல் - செய்வோ மாயின். தான், அசை. `நெஞ்சே, பல் சடையான் பாதம் பணியாய்; செய்துமேல் சேயனும் ஆகத்தானும் ஆகிய அரன் நம்மை அமரர் கோனாகச் செய்யும்` - என இயைத்து முடிக்க. ``ஆதபத்தர்க்கு`` என்னும் நான்கன் உருபு, `ஆதபத்தரினும்` என ஐந்தாவதன் பொருளில் வந்தது. ``செய்தும்`` என்பது வேறு முடிபாகலிற் பால் இடம்வழுவிய `நம்மை அமரர் கோன் ஆக` என்பது பன்மையொருமை மயக்கம்.

பண் :

பாடல் எண் : 19

அரன்காய நைவேற் கநங்கவேள் அம்பும்
அரன்காயும் அந்தியுமற் றந்தோ அரங்காய
வெள்ளில்சேர் காட்டாடி வேண்டான் களிறுண்ட
வெள்ளில்போன் றுள்ளம் வெறிது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அரன் காய - சிவன் (என்னை விரும்பாமல்) வெறுத்தலால், ``அம்பும் அரன்`` என்பதில் அரம், ``அரன்`` எனப் போலியாய் வந்தது. அது காரிய ஆகுபெயராய் அரத்தால் அராவி உண்டாக்கப்பட்ட கூர்மையைக் குறித்தது. உம்மையை மாற்றி, `அநங்க வேள் அம்பின் அரனும் காயும்` என்க. மற்று, அசை ``வெள்ளில்`` இரண்டில் முன்னது வெற்றிடம்; பின்னது விளாமரம். ஆடி, பெயர். மேற்புறம் அழகாய் இருந்து உள்ளே ஒன்றும் இல்லாததை, `வேழம் உண்ட விளாங்கனிபோல்வது` என்றல் வழக்கு. `வேழம் உண்டல்` என்பது விளாங்கனிக்கு இயற்கையில் ஏற்படுகின்ற ஒரு நோய். `தேரை மோந்த தேங்காய்` என்றலும் இது போல்வதே, இப்பழமொழிகளால் யானையும், தேரையும் உண்ணாமலே பழியைச் சுமத்தலால் உண்ணாமலே வரும் பழிக்கு இவைகளை உவமையாக உலகத்தார் கூறுவர். `அரங்கு ஆய காட்டின்கண் ஆடி (என்னை) வேண்டான். (அதனால்) என் உள்ளம் களிறு உண்ட வெள்ளில் போன்று வெறிதாயிற்று. (இங்ஙனம்) அரன் காய நைவேற்கு அநங்க வேள் அம்பின் அரமும் காயாநின்றது. அந்திக் காலமும் அந்தோ!` என இயைத்து முடிக்க. ``அந்தோ`` என்பதன் பின் `கொடிது` என்பது எஞ்சிநின்றது. இதுவும் கைக்கிளைப்பட்டாள் ஒருத்திதன் கூற்று.

பண் :

பாடல் எண் : 20

வெறியானை ஊர்வேந்தர் பின்செல்லும் வேட்கை
வெறியார்பூந் தாரார் விமலன் வெறியார்தம்
அல்லல்நோய் தீர்க்கும் அருமருந்தாம் ஆரூர்க்கோன்
அல்லனோ நெஞ்சே அயன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வெறி யானை ஊர் - மதத்தை உடைய யானையை ஊர்தியாகக் கொண்டு ஊர்கின்ற வேந்தர்பின் செல்லும் வேட்கை வெறியார் - (பரிசில் வேண்டி) அரசர் பின்னே திரிகின்ற ஆசை யில்லாதவர்கள். விமலன் வெறியார் - மலம் இல்லாதவனாகிய இறைவன்மேல் பித்துக் (பேரன்பு) கொண்டவர்கள். `ஐயன்` என்பது `அயன்` எனப் போலியாய் வந்தது. ஐயன் - தலைவன். `நெஞ்சே, யாவர்க்கும் தலைவனாவான் வேட்கை வெறியாரும், விமலன் வெறியாரும் ஆகிய அடியார்களது நோயைத் தீர்க்கும் அருமருந்தாம் ஆரூர்க்கோன் அல்லனோ` என இயைத்து முடிக்க. `அங்ஙனமாக, நீ பிறரை நாடியலைதல் எற்றுக்கு` என்பது குறிப்பெச்சம் இனி, ``அயன்`` என்பதைப் போலியாக்காமல், `அயன் முதலாகிய காரணக் கடவுளர்களும் அவனே யன்றோ` என முடிப்பினும் ஆம்.

பண் :

பாடல் எண் : 21

அயமால்ஊண் ஆடரவம் நாண ததள தாடை
அயமாவ தானேறார் ஆரூர் அயமாய
என்னக்கன் தாழ்சடையன் நீற்றன் எரியாடி
என்னக்கன் றாழும் இவள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அயம் ஆல் ஊண்`` என்பதில், ``ஊண்`` என்பதை முதலிற் கூட்டுக. ஆல், அசை. `ஐயம்`, எனப்போலியாய் வந்தது. ஐயம் - பிச்சை. அதள் - தோல். ``அயமாவது`` என்பதில், குதிரையை உணர்த்துவதாய ``அயம்`` என்னும் பெயர் இங்குப் பொதுப்பட `ஊர்தி` என்னும் பொருட்டாய் நின்றது. இரண்டாம் அடியின் இறுதியிலும், `ஐயம்` என்பது போலியாய் ``அயம்`` என வந்தது. ஐயம், இங்கு, சந்தேகம். ஐயம் மாய சந்தேகம் நீங்க. இதனை, ``ஆழும்`` என்பதற்குமுன் கூட்டுக. நக்கன். உடை உடாதவன். உரிமை பற்றி, ``என் நக்கன்`` எனத் தம் தமனாக்கிக் கூறினார். `ஆடிபால்` என ஏழாவது விரிக்க. `இவள் என் நக்கு அன்று ஆழும்` என இயைத்து முடிக்க.
நகுதல் - மகிழ்தல்; விரும்புதல். அன்று - அவனைக் கண்ட அன்றே. ஆழும் - காதல் வெள்ளத்தில் ஆழ்வாள். `என் நக்கனுக்கு ஊண் ஐயம்; நாண் அரவு; ஆடை அதள்; அயமாவது ஆனேறு; ஊர் ஆரூர்; (அங்ஙனமாக, அவன்பால்) இவள் என் நக்கு அன்று முதலாக ஐயம் மாய ஆழும்` என இயைத்து முடிக்க. இதுவும் பழிப்பது போலச் சிவபெருமானது வசிகரத்தைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 22

ஆழும் இவளையுங் கையலஆற் றேனென்
றாழும் இவளை அயராதே ஆழும்
சலமுடியாய் சங்கரனே சங்கக் குழையாய்
சலமுடியா தின்றருள்வாய் தார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஆழும் சல முடியாய் - வீழ்வார் அமிழ்ந்து போதற் குரிய நீரையணிந்த முடியை உடையவனே. இதனுடன் பிறவற்றையும் முதலிற் கூட்டுக. முதற்கண் உள்ள, ``ஆழும் இவ்வளையும் கை அல; ஆற்றேன்`` என்பது காதல் கொண்டாள் ஒருத்தியது கூற்று. ``வளை`` என்பது ஆகு பெயராய், நிலத்தை வளைத்துள்ள கடல் அலைகளைக் குறித்தது. கை - ஒழுக்கம். அஃதாவது, பிறர்மாட்டு இரக்கம். ஒழுக்கம் உடையவற்றை `ஒழுக்கம்` என்றே கூறினார். கடல் அலை எழுப்பும் ஓசை காதலால் இரவெல்லாம் தூங்காது துன்புறுபவர்களை மேலும் தூங்க ஒட்டாது ஒலித்து வருத்துவன கடல் அலைகள். அவைகளை, ``கை அல`` என்றாள், ``இவ்வளை`` என்பதில் வகர ஒற்றுத் தொகுக்கப்பட்டது. அயராதே - மறந்து விடாதே. ஈற்றடியில் உள்ள ``சலம்`` - வஞ்சனை. முடியாய் - இப்பொழுது கொண்டுள்ள இந்த வஞ்சனையை இறுதி வரையில் கொள்ளாதே. தார் - மாலை. `தார் அருள்வாய்` என்க. இதுவும் காதல் கொண்டாள் ஒருத்தி கூற்று.

பண் :

பாடல் எண் : 23

தாராய தண்கொன்றை யானிரப்பத் தானிதனைத்
தாராதே சங்கஞ் சரிவித்தான் தாராவல்
லானைமேல் வைகும் அணிவயல்ஆ ரூர்க்கோன்நல்
லானையும் வானோர்க் கரசு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரண்டாம் அடி இறுதியில் உள்ள ``தாரா`` - தாராக் கோழி; அது வயலுக்கு அடையாதலின், ``அணிவாய்`` என்பதற்கு முன்னே செல்லக் கூட்டுக. ஆன்ஐ - எருதை. மேல் வைகும் - `மேற் பொருந்தி ஊர்கின்ற அரசு` என்க. நல்லான் - நல்லவன். நையும் - வானோர் - பல துன்பங்களால் வருந்துகின்ற தேவர். அரசு - தலைவன். இதுவும் கைக்கிளைத் தலைவி கூற்று.

பண் :

பாடல் எண் : 24

அரசுமாய் ஆள்விக்கும் ஆட்பட்டார்க் கம்மான்
அரசுமாம் அங்கொன்றும் மாலுக் கரசுமான்
ஊர்தி எரித்தான் உணருஞ் செவிக்கினியன்
ஊர்தி எரித்தான் உறா.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அம் மான் - அழகிய பெண்; இலக்குமி, அவளுக்கு அரசு (கணவன்) ``அரசும் ஆம்`` என்றாராயினும், `அரசு ஆகின்றவனும்` என்றலே கருத்து என்க. அங்கு ஒன்றும் - இலக்குமி யாகின்ற அப்பொழுதே தனது ஒருபாகத்தில் பொருந்துகின்ற அப் பொழுதே தனது ஒருபாகத்தில் பொருந்துகின்ற. அரசும் - தலைவன் ஆகின்றவனும். ஆன் ஊர்தி - இடபத்தை ஊர்பவன். எரி - எரி போலும் உருவம் உடையவன். `தான் கண்ணுக்கு எரிபோலத் தோன்றினும் செவிக்கு இன்பம்` என்க. செவிக்கு இன்பத்தைத் தருபவனாதல். ``தான்`` என்பதன்பின், `ஆயினும்` என்பது எஞ்சி நின்றது. ஈற்றடியில், `தீ யெரித்தான்` என்பது `தி எரித்தான்` எனக் குறுகி நின்றது. அதற்கு முன் உள்ள `ஊர்` திரிபுரம். `தீயால்` என உருபு விரிக்க. உறுதல் - விரும்புதல். ``உறார் போன்று உற்றார் குறிப்பு * `உறாது` என்பது ஈறு குறைந்து நின்றது. `ஊரை உறாது தீயால் எரித்தான்` என்க. ``ஆட்பட்டார்க்கு`` என்னும் நான்கன் உருபை இரண்டன் உருபாகத் திரிக்க. `அம்மானுக்கு அரசு ஆகின்றவனும், அப்பொழுதே தனது ஒருபாகத்தில் பொருந்துகின்றவனும் ஆகிய மாலுக்குத் தலைவன் ஆகின்றவனும், ஆன் ஊர்தியும், தான் எரியாயினும் செவிக்கு இன்பனும் ஊர் உறாது எரித்தவனும் ஆகிய சிவபெருமான் தனக்கு ஆட்பட்டவரை அரசுமாய் ஆள்விக்கும்` என இயைத்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 25

உறாவேயென் சொற்கள் ஒளிவளைநின் உள்ளத்
துறாவேதீ உற்றனகள் எல்லாம் உறாவேபோய்க்
காவாலி தார்நினைந்து கைசோர்ந்து மெய்சோர்ந்தாள்
காவாலி தாம்நின் கலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஒளி வளை, தலைவி. `ஒளிவளை நினைந்து சோர்ந்தாள்` என்க. மூன்றாம் அடியில் உள்ள ``காவாலி`` என்பது `காபாலி` என்பதாம். `காபாலியாகிய நின் தார் (மாலையை) நினைந்து (நினைதலால்) இரண்டாம் அடி முதலில் உள்ள ``உறா`` என்பது, `உற்று` என, `மிகுந்து` என்னும் பொருட்டாயிற்று. வே தீ - `வேகின்ற தீ` என வினைத்தொகை. `தீயைப்போல உற்றனகள் எல்லாம்` என்க. `கள்`, விகுதி மேல் விகுதியாய் வந்தது. ஏகாரத்தை மாற்றி வைத்து `உறா போயே, கைசோர்ந்து மெய் சோர்ந்தாள்` என்க. உறா - பற்றி. ஏகாரம் தேற்றம். கைசோர்தல் செயல் அறுதல். மெய்சோர்தல் நினைவிழத்தல். (இது பற்றி எழுந்த என் சொற்கள் (காபாலி) நின் உள்ளத்து உருவோ? வாலிதாம் நின் கலை கா` என்க. கலை - பிறை. `பிறை இனியும் தனது நிலவை வீசுமாயின் உன்னைப் பெண் பழி சாரும்` என்றபடி. வாலிது - வெள்ளிது. கா - தடைக்காவல் செய். இது தலைவியது ஆற்றாமை குறித்துச் செவிலி வேண்டியது.

பண் :

பாடல் எண் : 26

கலைகாமின் ஏர்காமின் கைவளைகள் காமின்
கலைசேர் நுதலிர்நாண் காமின் கலையாய
பால்மதியன் பண்டரங்கன் பாரோம்பு நான்மறையன்
பால்மதியன் போந்தான் பலிக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கலைசேர் நுதலிர்`` என்பது முதலாகத் தொடங்கி, ``நாண் காமின்`` என்பதை இறுதியில் வைத்து உரைக்க. கலை சேர் - பிறை சேர்ந்தது போலும். கலையாய பால் - நூல்களாய பகுதிகள். மதியன் - அவற்றால் விளங்கப்பெறும் அறிவாய் உள்ளவன். `பாண்டரங்கன்` என்பது குறுகி நின்றது. பாண்டரங்கம், ஒருவகைக் கூத்து, பால் மதியன் - பால்போலும் பிறையை அணிந்தவன். பலி - பிச்சை. `பலிக்குப் போந்தான்` என்க `தானே மகளிரை மெலியச் செய்தல் போகப் பிறையையும் அணிந்துவந்தான்` என்றபடி முதற்கண் உள்ள கலை - ஆடை. காமின் - இழவாது காப்பாற்றுங்கள். ஏர் - அழகு. இது தோழியர் தலைவியர்க்குக் கூறியது.

பண் :

பாடல் எண் : 27

பலிக்குத் தலையேந்திப் பாரிடங்கள் சூழப்
பலிக்கு மனைபுகுந்து பாவாய் பலிக்குநீ
ஐயம்பெய் என்றானுக் கையம்பெய் கின்றேன்மேல்
ஐயம்பெய் தான்அநங்கன் ஆய்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பலிக்கு - பிச்சைக்கு. பலிக்கும் மனை - பயன் விளையும் இல்லம். பாவாய் - பெண்ணே `பல்லி` என்பது இடைக் குறைந்து ``பலி`` என வந்தது. பல்லிக்கு - பல்லைக் காட்டிக் கொண்டிருக்கின்ற இந்தப் பாத்திரத்தில். ஐயம் பெய் - பிச்சையிடு. ஐ அம்பு - ஐந்து அம்புகள். அநங்கன் - மன்மதன். இது தலைவி தோழிக்கு அறத்தொடு நின்றது.

பண் :

பாடல் எண் : 28

ஆயம் அழிய அலர்கொறைத் தார்வேண்டி
ஆயம் அழிய அயர்வேன்மேல் ஆயன்வாய்த்
தீங்குழலும் தென்றலும் தேய்கோட் டிளம்பிறையும்
தீங்குழலும் என்னையே தேர்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஆய் அம் - நுணுகிய அழகு. ஆயம் - தோழியர் கூட்டம். அவர் அழிதலாவது வருந்தி இரத்தல். `தோழியர் வருந்திக் கொண்டிருக்கச் சோர் வடைகின்ற என்மேல்` என்க. `ஆயன் குழல்` என இயையும் ஆயர் ஊதும் குழல் மாலைக் காலம் நெருங்குதலைத் தெரிவித்தலால் தனிமையால் வாடுவார்க்கு அதனால் துன்பம் மிகும். தேய் கோடு - கூரிய முனைகள். `இவை வருத்துதல் சொல்ல வேண்டுமோ` என்பதாம். தீங்கு உழலும் - தீமை செய்து கொண்டு திரிகின்றன. இதுவும் கைக்கிளைத் தலைவி கூற்று.

பண் :

பாடல் எண் : 29

தேரோன் கதிரென்னுஞ் செந்தழலால்வெந்தெழுபேய்த்
தேரோன் கதிரென்னுஞ் செய்பொருள்நீ தேராதே
கூடற்கா வாலி குரைகழற்கா நன்னெஞ்சே
கூடற்கா வாலிதரக் கூர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நன்னெஞ்சை என்பதை முதலில் வைத்தும், ``கழற்கு ஆ`` என்பதில் உள்ள ``ஆ`` என்பதை இறுதியில் வைத்தும் உரைக்க. தேரோன் - வியத்தகுதேரை உடையவன்; சூரியன். வெந்து, (மணல்கள்) வேதலால். பேய்த் தேர் - கானல். அதனையும் ஒரு தேவனாக வைத்து ``பேய்த் தேரோன்`` என உயர்திணையாகக் கூறினார். அதன் இழிவு தோன்றுதற்கு, `இளமையார் போவார்; முதுமையார் வருவார்` என்றல் போல, கதிர் - ஒளி. பேய்த் தேரின் ஒளி நிலையாது நீங்குவது போல நில்லாது நீங்கும் பொருள்` என்க. ``என்னும்`` என்பன உருவக உருபும், உவம உருபுமாய் வந்தன. தேராது - அதனை அடையும் வழியை ஆராயாமல், கூடல் காவாலி - மதுரையில் உள்ள கபாலி. அவன் கழலைக் கூடுதற்காக. ஆலிதர - கண்ணீர் மழை போல வார. கூர் ஆ - மிகுந்த அன்பை உடையை ஆகு.

பண் :

பாடல் எண் : 30

கூராலம் மேயாக் குருகோடு நைவேற்குக்
கூரார்வேற் கையார்க்காய்க் கொல்லாமே கூரார்
பனிச்சங்காட் டார்சடைமேற் பால்மதியைப் பாம்பே
பனிச்சங்காட் டாய்கடிக்கப் பாய்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கூர் ஆலம் - மிக்க நீர். (அதன்கண் சென்று) மேயாக் குருகு - இரையை உண்ணாமல் (ஏதோ காரணத்தால் வாடியிருக் கின்ற) நீர்ப் பறவையோடு. நைவேற்கு - (உன்னையும் உன் துணை விட்டுச் செல்ல) `வாடுகின்றாயோ` என்று சொல்லி வருந்துகின்ற என் பொருட்டு, `பாம்பே, பால் மதியைப் பனிச்சு அங்கு ஆட்டாய்` என இயைத்து முடிக்க. `பனிப்பித்து` என்பது பிறவினை விகுதி தொக்கு, `பனிச்சு` எனப் போலியாயிற்று. `நடுங்குவித்து` என்பது பொருள். அங்கு ஆட்டாய் - அந்தச் சடையிலே அலைக்கழி. தமக்குத் துன்பம் செய்பவர்களைத் தம்மால் துன்புறுவிக்க இயலாதபொழுது, அதற்கு ஏற்புடையவர்களைக் கொண்டு துன்புறுவித்தலாகிய உலகியல்பு பற்றி, தன்னை வருத்தும் பால்மதியை வருத்தும் படி பாம்பை வேண்டிக் கொண்டாள் காதல் நோயால் வருந்துகின்ற தலைவி, கடிக்கப் பாய்ந்து. கடிக்கப் போவதுபோல் பாய்ந்து (ஆட்டு). `கடித்துக் கொன்று விட்டால் சிவபெருமான் உன்னை ஒறுப்பார் ஆதலின், அது வேண்டா` என்பாள். ``கூரார் வேல் கையார்க்காய்க் கொல்லாமே`` என்றாள். வேல் - மூவிலை வேல், மூன்றாம் அடியில், கூந்தலைக் குறிப்பதாகிய `பனிச்சை என்பது, ஈற்றில் அம்முப் பெற்று, ``பனிச்சம்`` எனவந்தது. கூர் ஆர் பனிச்சம் - அடர்த்தி மிகுந்த கூந்தல். இஃது உமாதேவிதன் பாகத்தைக் குறித்தது. காட்டு ஆர் சடை - காடு போலும் சடை. இதுவும் காதற் பட்டாள் ஒருத்தியது கூற்று.

பண் :

பாடல் எண் : 31

பாயும் விடையூர்தி பாசுபதன் வந்தெனது
பாயிற் புகுதப் பணை முலைமேல் பாயிலன்நற்
கொன்றாய் குளிர்சடையாற் கென்நிலைமை கூறாதே
கொன்றாய் இதுவோ குணம்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(கொன்றை என்பது விளியேற்குமிடத்து, `கொன்றாய்` என நிற்கும்.) நற்கொன்றாய் - நல்ல கொன்றை மலரே. இதனை முதலிற் கொள்க. பாயில் புகுத - படுக்கையில் புகவும். பணை முலை மேல் பாய் - பருத்த தனங்களின் மேல் படுக்கவும் (இலன்) ``பாய்`` - பரவி. இது `படுத்து` என்னும் பொருட்டாய் நின்றது. இதனைச் செயவென் எச்சமாகத் திரிக்க. (அதனால் நீயாயினும்) என் நிலைமைகள் குளிர் சடையாற்குக் (கூறினால் உய்வேன்.) கூறாமை யால் என்னைக் கொன்றுவிட்டாய் (பெரிய இடத்தில் உள்ளவர்கட்கு) இதுவோ குணம்! (நன்மை) இது கொன்றையோடிரங்கிய காமம் மிக்க கழிபடர் கிளவி.

பண் :

பாடல் எண் : 32

குணக்கோடி கோடாக் குளிர்சடையான் வில்லின்
குணக்கோடிக் குன்றஞ்சூழ் போகிக் குணக்கோடித்
தேரிரவில் வாரான் சிவற்காளாஞ் சிந்தனையே
தேரிரவில் வாழும் திறம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குணக் கோடி - கோடிகுணம்; `அளவற்ற நன்மைகள்` என்றபடி. கோடா - அவற்றினின்றும் மாறுபடாத. வில்லின் குணம் - வில்லின் நாண், `குணத்துக்கு என்பதில் அத்துச் சாரியை தொகுக்கப்பட்டது. சிவபெருமானது வில்லின் நாண் பாம்பு. அஃது பாம்புகள் வாழும் நாக லோகத்தைக் குறித்தது. குன்றம், மேருமலை. குணக்கு கிழக்கு. ``கிழக்கே ஓடி, இல் வாரான் என்க. மூன்றாம் அடியில் `இரவி` என்பதன் ஈற்று இகரம் தொகுக்கப்பட்டது. ஈற்றடியில் உள்ள ``தேர்``, அறிவாயாக` என ஏவல் வினை முற்று. `நெஞ்சை என்பது வருவித்துக் கொள்க.
`நெஞ்சே, இரவி, சிவபெருமானது வில்லின் நாணாகிய பாம்பு வாழும் உலகத்திற்கு ஓடி, அதன் பின்பு மேருவைச் சுற்றி வந்து, கீழ்த்திசையை அடைந்து, தனது தேரில் எனது இல்லத்திற்கு நேராக வரவேண்டும். அவ்வாறு அவன் வரவில்லை. ஆகையால் நாம் இரவில் (இறந்துபடாது) உயிர்வாழும் முறை சிவபெருமானுக்கு அடிமையாகும் நிலைமையைச் சிந்தித்திருப்பதே. இதனை நீ அறிவாயாக - என்பது இதன் பொருள். இதுவும் பெண்பாற் கைக்கிளை.

பண் :

பாடல் எண் : 33

திறங்காட்டுஞ் சேயாள் சிறுகிளியைத் தான்தன்
திறங்காட்டுந் தீவண்ணன் என்னும் திறங்காட்டின்
ஊரரவம் ஆர்த்தானோ டென்னை யுடன்கூட்டின்
ஊரரவஞ் சால உடைத்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திறம் காட்டும் சேயாள் - அழகினால் யாவர்க்கும் ஒன்றுபடுத்திக் காட்டப்படும் இலக்குமி. `அழகினால் யாவராலும் `இலக்குமி` என்றே எண்ணப்படுபவள்` என்றபடி. என்றது தலைவியை. ``சிறுகிளியை`` என்பதன் பின் `நோக்கி` என ஒருசொல் வருவிக்க. `சேயாள் சிறு கிளியை (நோக்கி) ஊர் அரவம் உடைத்து என்னை அரவம் ஆர்த்தானோடு கூட்டின், தீவண்ணன் தன் திறம் காட்டும்` என இயைத்து முடிக்க. தன் திறம் - திருவருள். காட்டும் - உனக்கு எந்தவகையி லாவது விளங்கச் செய்வான். மூன்றாவதாய் வந்த ``திறம்`` என்பதில் ஆக்கம் விரித்து, திறமாகக் காட்டில் ஊர்கின்ற அரவம் (பாம்பு) என்க. ஊர் அரவம் - ஊரார் தூற்றும் அலர். சால உடைத்து - முற்றிலும் போக்கி. `எனக்காக நீ தீவண்ணனிடத்தில் தூது செல்ல வேண்டும்` என வேண்டிக் கொண்டபடி.

பண் :

பாடல் எண் : 34

உடைஓடு காடாடி ஊர்ஐயம் உண்ணி
உடைஆடை தோல்பொடிசந் தென்னை உடையானை
உன்மத் தகமுடிமேல் உய்த்தானை நன்னெஞ்சே
உன்மத் தகமுடிமேல் உய்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(எப்பொழுதும்) உடைந்த ஓடுகளையுடைய காட்டில் ஆடிக்கொண்டு, ஊரார் இடுகின்ற ஐயத்தையே உண்பவனாய், தோலையே` உடையும் ஆடையும் ஆகவும், சாம்பலையே சந்தனமாகவும், என்னை ஆளாகவும் உடையவனும், உன்மத்தத்தை உண்டாக்குகின்ற பூவை (ஊமத்தையை) முடிமேல் அணிந்தவனும், ஆகிய சிவபெருமானை, நல்ல நெஞ்சமே, உனது மத்தகத்தின் மேல் (தலையின்மேல்) உள்ள குடுமிக்கு மேலே இருக்கச் செலுத்து. உடை, அரையில் உடுப்பது. ஆடை, தோள்மேல் இடுவது. இதனை `உத்தரியம்` என்பர். சந்து - சந்தனம். ஆடி அசைவதால், `ஆடை` எனப்பட்டது. வேண்டும் இடங்களில் ஆக்கம் விரிக்க. ``அப்பூதி - குஞ்சிப் பூவாய் நின்ற சேவடியாய்`` * என்பதனாலும் இறைவனுடைய திருவடிகள் அடியார்களது குடுமிகளில் சூடிக்கொள்ளும் பூவாதல் விளங்கும்.

பண் :

பாடல் எண் : 35

உய்யாதென் ஆவி ஒளிவளையும் மேகலையும்
உய்யா உடம்பழிக்கும் ஒண்திதலை உய்யாம்
இறையானே ஈசனே எம்மானே நின்னை
இறையானும் காண்கிடாய் இன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரண்டாம் அடியில், ``உய்யா`` என்றது, `கழல விடுத்து` என்றதாம். `திதலை உடம்பை அழிக்கும் என மாற்றிக் கொள்ள. ``உடம்பு`` என்றது, உடம்பில் உள்ள அழகை. தேமலைக் குறிப்பதாகிய `திதலை` என்பது இங்கு பசலையைக் குறித்தது. தனிச் சீரில் உள்ள, ``உய் ஆம்`` என்றது, `உயிர்கட்கெல்லாம் உய்தியாய் உள்ள` என்றபடி. உய், முதனிலைத் தொழிற் பெயர். இறையானும் - சிறிதாகிலும் காண் கிடாய் - காணக் கிடத்து. உன்னைக் காண என்னைக் கிடத்து` என்க. இதுவும் கைக்கிளைத் தலைவி கூற்று.

பண் :

பாடல் எண் : 36

இன்றியாம் உற்ற இடரும் இருந்துயரும்
இன்றியாம் தீர்தும் எழில்நெஞ்சே இன்றியாம்
காட்டாநஞ் சேற்றான் காமரு வெண்காட்டான்
காட்டானஞ் சேற்றான் கலந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``எழில் நெஞ்சைஎன்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. எழில் - எழுச்சி; ஊக்கம் யாம் காட்டாஇன்றி நஞ்சு ஏற்றான்- யாம் சான்றாக இல்லாமல் விடத்தை உண்டான். (தேவர்கள் நஞ்சு ஊட்டும் பொழுது நாம் இருந்திருந்தால் தடுத்திருப்போம் என்றபடி.) காட்டான் அஞ்செழுத்து. உணர்வை விளக்கும் விளக்காக அஞ்செழுத்தை ஏற்ற பெருமான், காட்டு காட்டுவது; விளக்கு, ஆன், மூன்றன் உருபு.
``காட்டான்`` - என்றது, காட்டாய் இருத்தலால்` என்றபடி. கலந்து - நம்மிடம் வந்து கலந்தமையால். இடர் - இடையூறுகள்.

பண் :

பாடல் எண் : 37

கலம்பெரியார்க் காஞ்சிரம்காய் வின்மேரு என்னும்,
கலம்பெரிய ஆற்கீழ் இருக்கை கலம்பிரியா
மாக்கடல்நஞ் சுண்டார் கழல்தொழார்க் குண்டாமோ
மாக்கடனஞ் சேரும் வகை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதற்கண் உள்ள ``கலம்`` - அணிகலம். பெரியார்க்கு ஆம் சிரம் - பெரிய தேவர்களுக்கு ஆன தலையால் ஆகிய மாலை, காய் வில் - பகைவர்களை அழிக்கும் வில். என்னும் - என்று சொல்லப்படும். இரண்டாம் அடி முதலில் `களம்` என்பது எதுகை நோக்கி, ``கலம்`` எனத் திரிந்து நின்றது. களம் பெரிதாதலாவது, நிழலால் நிலத்தில் பேரிடத்தைக் கவர்தல். இறுதியில் நின்ற ``கலம்`` - மரக் கலம். ஈற்றடியில், `ஆன்மாக்கள்` என்பது முதற் குறைந்து, ``மாக்கள்`` என நின்றது.
தனம் - பொருள். ஆன்மாக்கள் யாவும் அடையத்தக்க பொருள் வீடு பேறு, `அது, நித்தியத்துவத்தை உணர்த்தும் தலைமாலை களையும், எல்லாம் வல்ல தன்மையை உணர்த்தும் மேரு வில்லையும், ஞானோபதேசத்தைக் குறிக்கும் ஆல் நிழலையும் உடையோனாகிய சிவபெருமானை முதல்வனாக உணர்ந்து போற்றாதவர்க்குக் கிடைக்க மாட்டாது` என்றபடி.

பண் :

பாடல் எண் : 38

கையா றவாவெகுளி அச்சங் கழிகாமம்
கையாறு செஞ்சடையான் காப்பென்னும் கையாறு
மற்றிரண்ட தோளானைச் சேர்நெஞ்சே சேரப்போய்
மற்றிரண்ட தோளான் மனை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நெஞ்சைஎன்பதை முதலிலும், ``சேரப் போய்`` என்பதை, ``மனை`` என்பதற்குப் பின்னும் கூட்டியுரைக்க. ``கையாறு`` இரண்டில் முன்னது செயல் அறுதி. அது மிகுதுயரைக் குறிக்கும். கழிகாமம் - அளவிறந்த காமம். கை ஆறு செஞ்சடை - பல பக்கங் களிலும் சுழலுகின்ற சிவந்த சடை. `கையாறு முதலிய ஐந்தும் சிவ பெருமானால் தடுக்கப்படும் - என நூல்களில் சொல்லப்படும்` என்பது முதல் இரண்டடியின் பொருள். கை ஆறு மல் திரண்ட தோளான் - வெகுண்டு வந்த கங்கையின் வலிமை பொருந்திய பல அலைகளால் துளைக்கப்படாதவன். `ஆகாயத்தினின்றும் வீழ்ந்த கங்கையை வருத்தம் இன்றித் தாங்கினான்` என்றபடி. மற்று இரண்ட தோளான் - (தேவர் பலர்க்கும் பொதுவாய் அமைந்த நான்கு தோள்களினும் வேறு பட்ட இரட்டிப்பான தோள்களை (எட்டுத் தோள்களை) உடையவன். அவனது மனையாவன திருக்கோயில்கள். `சிவபெருமானது திருக் கோயிலை அடைந்து அவனை வணங்கினால், கையாறு முதலியவை களுக்கு அஞ்ச வேண்டா` என்பதாம். மூன்றாம் அடியில் ``திரண்ட`` என்பதும், ஈற்றடியில் ``இரண்ட`` என்பதும் அன்பெறா அகர ஈற்று அஃறிணைப் பன்மை வினையாலணையும் பெயர்கள்.

பண் :

பாடல் எண் : 39

மனைஆய் பலிக்கென்று வந்தான்வண் காமன்
மனைஆ சறச்செற்ற வானோன் மனைஆய
என்பாவாய் என்றேனுக் யானல்லேன் நீதிருவே
என்பாவாய் என்றான் இறை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வண் காமன் மன் ஐ ஆசு அறச் செற்ற வானோன் - வளவிய, மன்மதனது அழகிய உடம்பை, அவனது குற்றம் நீங்குதற் பொருட்டு அழித்த இறைவன். மனை - எனது இல்லத்தில். ஆய் பலிக்கு என்று வந்தான் - `பல இடங்களிலும் சென்று ஏற்கும் பிச்சைக்கு` என்று சொல்லி வந்தான் (அவனை யான் கண்டு) `மன் ஐயாய என்பாவாய்` என்றேன் - (உன் உடம்பு முழுதும்) `நிலையான தலைமையை உணர்த்து வனவாகிய என்பாய் உள்ளவனே` என்றேன். (அதற்கு) இறை - அவன். திருவே என் பாவாய் - `திருமகளே` என்று சொல்லத்தக்க பாவையே. (பெண்ணே `என்பு ஆவாய்` என நான் கூறியதை, `என் பாவாய்` எனக் கூறியதாக வைத்து,) யான் அல்லேன்; நீ; என்றான் - நான் பாவையல்லேன்; (பெண்ணல்லேன்; ஆண்.) `நீதான் பாவை` என்றான். `என்னே அவனது சொல்திறம்` என்பது குறிப்பெச்சம். குற்றமாவது சிவாபராதம். `முன்னர்த் திருமேனியழகில் ஈடுபட்ட வளாய்த் தன் உள்ளத்தைப் பறிகொடுத்தவள், பின்பு அவன் சொல் திறத்தில் ஆழ்ந்துவிட்டாள்` என்பது கருத்து இதுவும் காதலித்தாள் ஒருத்தியது கூற்று.

பண் :

பாடல் எண் : 40

இறையாய வெண்சங் கிவைதருவேன் என்னும்
இறைஆகம் இன்றருளாய் என்னும் இறையாய்
மறைக்காட்டாய் மாதவனே நின்னுருவம் இங்கே
மறைக்காட்டாய் என்னும்இம் மாது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``இம் மாது`` என்பதை, தனிச் சீரில் உள்ள ``இறையாய்`` என்பதற்கு முன்னர்க் கூட்டிப் பின்பு அது முதலாக, ``மாதவனே`` என்பது ஈறாக உள்ளவற்றை முதலில் வைத்து உரைக்க. ``இறை`` - இரண்டில் முன்னது கை; பின்னது சிறிது. ஆகம் - மார்பு. `இறையான்` என்பது விளியேற்று, ``இறையாய்`` என வந்தது. மறைக் காடு தலம். மாதவன் - பெண்ணை உடம்பிலே உடையவன். இங்கே மறைக் காட்டாய் - இவ்விடத்தில் மறைவான ஓர் இடத்தில் காட்டு, ``என்னும்`` என்பதைப் பல முறை கூறியது. `இவ்வாறு இவள் பிதற்றுகின்றாள்` என்றற்கு. இதுவும் காதற்பட்டாள் ஒருத்தி கூற்று.

பண் :

பாடல் எண் : 41

மாதரங்கம் தன்ன ங்கஞ் சேர்த்தி வளர்சடைமேல்
மாதரங்கக் கங்கைநீர் மன்னுவித்து மாதரங்கத்
தேரானை யூரான் சிவற்காளாஞ் சிந்தனையே
தேரானை யூரானைத் தேர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மாதர் அங்கம் - உமாதேவியது உடம்பு. மா தரங்கம் - பெரிய அலைகளையுடைய. மாது அரங்கத் தேர் ஆனை ஊரான். அழகிய பொது இடங்களில் ஊர்தியாக யானையை ஊராதவன். (இடபத்தையே ஊர்பவன்) என்றபடி. `தேராக என ஆக்கம் வருவிக்க. ஈற்றடியில் உள்ள ``தேர்`` இரண்டில் முன்னது, `தெளி` என்னும் பொருட்டு. `சிவனுக்கு ஆளாக எண்ணுகின்ற எண்ணமே நல்லெண்ணம்` எனத் தெளிவாயாக - என்றபடி. பின்னது, (தெளிந்த வண்ணமே) `சிந்தனை செய்` என்பதாம். இரண்டும் ஏவல் வினைமுற்றுக்கள். ஈற்றடியில் உள்ள ``ஆனை ஊரான்`` என்றது, `திருவானைக்கா` என்னும் தலத்தில் இருப்பவன் என்றதாம்.

பண் :

பாடல் எண் : 42

தெருளிலார் என்னாவார் காவிரிவந் தேறும்
அருகில் சிராமலையெங் கோமான் விரியுலகில்
செல்லுமதில் மூன்றெரித்தான் சேவடியே யாம்பரவின்
செல்லுமெழில் நெஞ்சே தெளி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(`தேர்` என்பது குறுக்கம் பெறின் `தெரு` எனவரும் ஆகலின் `தெருள்`` என்பது அந்தாதியாயிற்று.) அருகு - அண்மை யிடம். விரி உலகம் செல்லும் மதில் - விரிந்த உலகம் எங்கும் செல்லக் கூடிய மதில்கள். ஈற்றடியில் ``செல்லும்`` என்றது. `நமது ஒழுக்கம் பெரியோர்களது அவையில் ஏற்கப்படும்` என்றதாம். ``எழில் நெஞ்சைஎன்பதை முதலிற் கொள்க.

பண் :

பாடல் எண் : 43

தெளியாய் மடநெஞ்சே செஞ்சடையான் பாதம்
தெளியாதார் தீநெறிக்கண் செல்வர் தெளியாய
பூவார் சடைமுடியான் பொன்னடிக்கே ஏத்துவன்நற்
பூவாய வாசம் புனைந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தனிச் சீரில், ``தெளி ஆய்`` என்பதில் `தெளி என்னும் முதனிலைத் தொழிற்பெயர் ஆகுபெயராய், அதனையுடைய நீரைக் குறித்தது. ``பூ`` இரண்டில் முன்னது அழகு; பின்னது மலர். ``பாசம்`` என்பது ஆகுபெயராய் அதனையுடைய பொருளைக் குறித்தது. ``அடிக்கே`` என்னும் நான்கனுருபை இரண்ட னுருபாகத் திரிக்க. புனைதல் - சூட்டுதல். `புனைந்து ஏத்துவன்` என்க.

பண் :

பாடல் எண் : 44

புனைகடற்குப் பொன்கொடுக்கும் பூம்புகார் மேயான்
புனைகடுக்கை மாலைப் புராணன் புனைகடத்து
நட்டங்கம் ஆட்டயரும் நம்பன் திருநாமம்
நட்டங்க மாட்டினேன் நக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதல் அடியில், `புன்னை` என்பது இடைக்குறைந்து `புனை` என வந்தது. இது நெய்தல் நிலக் கருப்பொருள். இதன் பூவின் மகரந்தம் பொன்போலுதலால், இதனை உதிர்த்தல். கடலுக்குப் பொன் சொரிதல்போல உள்ளதாம். கடுக்கை - கொன்றை. புராணன் - பழையோன். புனை கடத்து - அழகிய குடமுழா ஓசையுடன். நட்டம் கம் ஆடும். நடனத்தை சிதாகாசத்தில் ஆடுதலைச் செய்யும். சிதாகாசம் சிதம்பரமாகிய தலத்தையும் குறிக்கும். திருநாமம் நட்டு - திருப்பெயரை (உள்ளத்திலும், நாவிலும்) இருத்தி. நக்கு - மகிழ்ந்து. அங்கம் ஆட்டினேன் - உடம்பை ஆனந்தக் கூத்து ஆடச் செய்தேன். `இனி எனக்கென்ன குறை` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 45

நக்கரை சாளும் நடுநாளை நாரையூர்
நக்கரை வக்கரையோம் நாமென்ன நக்குரையோம்
வண்டாழங் கொன்றையான் மால்பணித்தான் மற்றவர்க்காய்
வண்டாழங் கொண்டாள் மதி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நக்கு அரைசு ஆளும் நடுநாளை - (பேய்கள்) சிரித்துக் கொண்டு ஆட்சி புரிகின்ற பாதியிரவில். இதன்பின் `வந்து` என ஒரு சொல் வருவிக்க. நாரையூர் நக்கர் - `திருநாரையூர்` என்னும் தலத்தில் உள்ள சிவபெருமான் (உண்மையைக் கூறாமல்) நாம் ஐவக்கரை யோம் என்ன நக்கு - `நாம் அழகிய `திருவக்கரை` என்னும் தலத்தில் உள்ளோம்` என்று (பொய்யாக கூறி) நகைக்கவும். உரையாம் - அவரை நாம் ஒன்றும் இகழவில்லை. (அங்ஙனமாகவும்) வண்டு ஆழ் அம் கொன்றையான் மால் பணித்தான் - வண்டுகள் தேனில் மூழ்கிக் கிடக்கின்ற கொன்றை மாலையை அணிந்த நாரையூரான் (அம் மாலையைத் தாராமல்) மயக்கத்தைக் கொடுத்துப் போயினான். (அதனால் இவள்) மதிவண் தாழம் கொண்டாள் - அறிவு அவனிடத்தை தங்குதலை அடைந்தாள். `கொண்டான்` என்பது பாடமன்று. தாழ்தல் - தங்குதல். ``தாழம்``, அம் ஈற்றுத் தொழிற் பெயர். எள்ளல் பற்றிப் பன்மையில் ஒருமை மயங்கிற்று. இது செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்றது.

பண் :

பாடல் எண் : 46

மதியால் அடுகின்ற தென்னும்மால் கூரும்
மதியாதே வைதுரைப்பர் என்னும் மதியாதே
மாதெய்வம் ஏத்தும் மறைக்காடா ஈதேகொல்
மாதெய்வங் கொண்ட வனப்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மறைக்காடா`` என்பதை முதலிலும், ``ஈதேகொல்`` என்பதை இறுதியிலும் கூட்டியுரைக்க. முதற்கண் உள்ள மதி`, சந்திரன். ஆல், அசை. தனிச்சீரில் `அஃதியாதே` என்பது, ஆய்தம் தொகுக்கப் பட்டு, `அதியாதே` எனவந்தது. `வைது உரைப்பர்; அஃதியாதே` எனக் கூட்டுக. வைதுரைப்பார் செவிலியும், நற்றாயும். அஃதியாதே - அஃது ``ஏத்தும்`` என்னும் பெயரெச்சம், என்ன முறைமை. ``மறைக்காடன்`` என்பதனோடு முடிந்தது. ``ஈற்றடியில் உள்ள மாது, தலைவி. அதன் பின், `எய்ப்பு` என்பது, ``எய்வு`` என வந்தது. `இவளது எய்ப்புக்குக் காரணமான உனது வனப்பின் தன்மை ஈதோ` என்க `இனி நீ வரைதல் இன்றியமையாதது` என்பது குறிப்பெச்சம். ஏகாரம் வினாப் பொருட்டு. கொல், அடை. அம் கொண்ட வனப்பு - இவளது அழகைக் கொள்ளை கொண்ட உனது அழகு. இது தோழி வரைவு கடாயது.

பண் :

பாடல் எண் : 47

வனப்பார் நிறமும் வரிவளையும் நாணும்
வனப்பார் வளர்சடையான் கொள்ள வனப்பால்
கடற்றிரையும் ஈரும்இக் கங்குல்வாய் ஆன்கட்
கடற்றிரையும் ஈருங் கனன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதற்கண் உள்ள வனப்பு, அழகு. இரண்டாம் அடியில் வனம், காடு. `பரிய` எனப் பொருள் தரும். ``பார்`` என்பது `திரண்ட` என்னும் பொருளைத் தந்தது. வனப்பால் - நீரின்கண் உள்ள (திரை) என்க. ஈற்றடியை, `கடற்று + இரை` எனப்பிரித்து, `கடற்று ஆன்கண் இரையும் ஈரும்` என இயைக்க. கடறு - காடு; என்றது முல்லை நிலத்தை. ஆன் - ஆனிரை. இரை - இரைச்சல், `இக்கங்குல் வாய்க் கடல் வனப்பால் திரையும் ஈரும்; கடற்று ஆன்கண் இரையும் கனன்று ஈரும்` என முடிக்க. இது கைக்கிளைத் தலைவி மாலைப் பொழுதின்கண் தனிப்படர் மிக்குக் கூறியது. கங்குல், இங்கு மாலைக் காலத்தைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 48

கனன்றாழி நன்னெஞ்சே கண்ணுதலார்க் காளாய்க்
கனன்றார் களிற்றுரிமால் காட்டக் கனன்றார்
உடம்பட்ட நாட்டத்தன் என்னையுந்தன் ஆளா
உடம்பட்ட நாட்டன் உரு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதற்கண் உள்ள ``கனன்று`` என்பதை, `கல் + நன்று` எனப் பிரித்து, `நன்று கல்` என மாற்றி, இறுதியில் வைத்து உரைக்க. ஆழி - (கவலையில்) ஆழ்தலை உடையது. கனன்று ஆர் களிறு - கோபித்து ஆர்ப்பரித்த யானை; கயாசுரன். (யானைத் தோலின் போர்வை தன்னிடத்தில்) மால் காட்ட - மாயானது நிறத்தைக் காட்ட. கனன்றோர் - மற்றும் பகைவர் சிலர். உடம்பு அட்ட நாட்டத்தன் - உடம்பை அழித்த நாட்டத்தன், ``நாட்டம்`` என்பது இரட்டுற மொழித லாய், `கண்` எனவும், `கருத்து` எனவும் இருபொருள் தந்து. மன்மதன், திருபுரத்தசுரர் ஆகிய இரு திறத்தினர்க்குப் பொருந்திற்று. ``கனன்றார்`` என்பது பொதுப்பட, `பகைத்தவர்` என்னும் அளவாய் நின்றது. ஆளா உடம்பட்ட நாள் - தொண்டனாக ஏற்றுக் கொண்ட நாள். `நாளில் காட்டிய தன் உரு` என விரித்து. `அதனை நன்று கல்` என முடிக்க. நன்று கற்றலாவது, வருணிக்கவும், புகழவும் வன்மை எய்துதல், ``உடம்பட்ட நாள் தன் உரு`` என்றதனால், இவ்வாசிரியர் இறைவனால் எவ்வகையிலோ ஆட்கொள்ளப்பட்டமை விளங்கும்.

பண் :

பாடல் எண் : 49

உருவியலுஞ் செம்பவளம் ஒன்னார் உடம்பில்
உருவியலுஞ் சூலம் உடையன் உருவியலும்
மாலேற்றான் நான்முகனும் மண்ணோடு விண்ணும்போய்
மாலேற்றாற் கீதோ வடிவு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உரு இயலும் - உடம்பின் நிறமும்; உம்மை சிறப்பு. இரண்டாம் அடியில் `இயலும்` முதற் குறைந்து வந்தது. இயலும் - போகின்ற. உரு இயலும் மால் ஏற்றான் - அழகாக நடக்கின்ற பெரிய இடப உருவத்தை உடையவன்; திருமால், இங்கும் எண்ணும்மை விரிக்க, மால் ஏற்றாற்கு - மயக்கத்தை ஏற்பதற்குக் காரணமாய் இருந்த வனுக்கு; இருந்தவன் சிவபெருமான். `வடிவு ஈதோ` என்க. ஓகாரம் வியப்பு.

பண் :

பாடல் எண் : 50

வடிவார் அறப்பொங்கி வண்ணக்கச் சுந்தி
வடிவார் வடம்புனைந்தும் பொல்லா வடிவார்வேல்
முற்கூடல் அம்மான் முருகமருங் கொன்றையந்தார்
முற்கூட மாட்டா முலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உந்தி வடி வார் அறப் பொங்கு வண் கச்சு (புனைந் தும்) - உந்தியின்மேல், நீண்டு தொங்குகின்ற வார்போலவே மிக விளங்குகின்ற கச்சினை ( பாம்பாகிய கச்சினை)ப் புனைந்தும் பின்னர், ``புனைந்தும்`` என்றதற்கு, மார்பில் புனைந்தும்` என உரைக்க. வடம் - தலைமாலை. வடிவு ஆர் வடம் - அழகு நிறைந்த வடம், ``புனைந்தும்`` என்பது முன்னரும் சென்றியைந்தது. வடிவு ஆர் வேல் - கூர்மை பொருந்திய படைக்கலம்; சூலம், முற் கூடல் - தலங் களில் முன்னிற்பதாகிய மதுரை, இதனை, ``முளைத்தானை எல்லார்க் கும் முன்னே தோன்றி`` * என்னும் அப்பர் வாக்கினாலும் அறிக, இனி மடக்கணி கருதாது, `முக்கூடல்` என்பது பாடமாயின், `திரிகூடமலை` என்க. அவ்வாறன்றி, `முக்கூடல் வேர்திரிசூலம்` என்றலும் ஆம். தார்- போக காலத்தில் மார்பில் அணியும் மாலை, `அதனைக் கூட மாட்டா` என்றதனால், `மார்பை அணையப் பெற வில்லை` என்றதாயிற்று. முருகு - நறுமணம். தேனும்` ஆம் முலை கூடமாட்டா` என்க. ``மாட்டா`` என்ற, `மாட்டாமை யுடையனவாய் வருந்துகின்றன` என்றபடி. `இவைகளைப் பெருமையால் பெண்மை நலம் வாயாதோர் பலர் இருக்க. யாம் இவைகளைப் பெற்றும் பயன் என்னை` என்பது குறிப்பெச்சம் இதுவும் கைக்கிளைப் பட்ட தலைவி கூற்று.

பண் :

பாடல் எண் : 51

முலைநலஞ்சேர் கானப்பேர் முக்கணான் என்னும்
முலைநலஞ்சேர் மொய்சடையான் என்னும் முலைநலஞ்சேர்
மாதேவா என்று வளர்கொன்றை வாய்சோர
மாதேவா சோரல் வளை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``முலை`` மூன்றில் முன் இரண்டில் `முல்லை` என்பதன் இடைக்குறை. அவற்றுள் முன்னது முல்லை நிலம், `கானப் பேர்த்தலம் முல்லை நிலத்தில் உள்ளது` என்றபடி. பின்னது கற்பு, `கற்பு நலம்` என்பது அதனையுடைய பெண்ணை - கங்கா தேவியைக் குறித்தது. ``மாதேவா`` இரண்டில் முன்னது இருமொழித் தொடர். `பெண்ணே, வா` என்பது அதன் பொருள் பின்னது சிவபிரானை `மாதேவா` என விளிக்கும் விளி. இவற்றுள் பின்னின்ற ``மாதேவா`` என்பதை முதலிற் கொள்க. ``என்னும்; என்னும்`` என்பன, `என்று பிதற்றுகின்றான்` என்னும் பொருளன. வாய்சோர்தல் - வாய் தன்னை யறியாமலே பலவற்றைச் சொல்லுதல். `வாய் சோர என்னும், என இயைக்க. இவளை நீ, `நலம் சேர் மாத, வா` என்று அழைத்து, நின் வளர் கொன்றை காரணமாக வளை சோர்தலை நீக்கு` என முடிக்க. ``கொன்றை`` என்பதில் தொக்கு நின்ற `ஆன்` உருபு. `அது காரணமாக` என்னும் பொருளது. தன்வினை. பிறவினை இரண்டிற் கும் பொதுவாம் ``சோரல்`` என்பது இங்குப் பிறவினைக் கண் வந்தது. இது தோழி மாலை யிரந்தது. ``முலைநலஞ்சேர்`` என்னுந் தொடர் மீள மீள வந்து, பொருள் வேறுபட்டது சொற் பின்வருநிலையணி.

பண் :

பாடல் எண் : 52

வளையாழி யோடகல மால்தந்தான் என்னும்
வளையாழி நன்னெஞ்சே காணில் வளையாழி
வன்னஞ்சைக் கண்டமரர் வாய்சோர வந்தெதிர்ந்த
வன்னஞ்சக் கண்டன் வரில்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஆழி நன்னெஞ்சே, வளை ஆழி வன்னஞ்சைக் கண்டு அமரர் வாய்சோர வந்து எதிர்ந்த வன்னஞ் சக்கு அண்டன் காணில் ஆழி வளையோடு அகல மால் தந்தான்; வரில் வளை` - என்னும் - என இயைத்து முடிக்க. ``ஆழி`` மூன்றில் முதலது மோதிரம்; இடையது, துன்பத்துள் ஆழ்தலையுடையது, இறுதியது கடல், ``வளை`` மூன்றில் முதலது மோதிரம்; இடையது, துன்பத்துள் ஆழ்தலையுடையது, இறுதியது கடல், ``வளை`` மூன்றில் முதலது வளையல் இடையது, ``வளைத்துக் கொள்`` என முற்று, இறுதியது `வளைந்த` (பூமியைச் சூழ்ந்த) என வினைத் தொகை. காணில் - காட்சியளவில் வன்னம் - ஒளி. சக்கு (சட்சு) - கண், ஒளியான கண் - `ஞாயிறு திங்கள், தீ` என்பனவாய் அமைந்த கண்கள். அண்டன் - தேவன் `வந்தெதிர்ந்த அண்டன்` என்க. என்னும் - என்று என் தோழி பிதற்றுகின்றாள். இது தலைவியை ஆற்றுவிக்கும் தோழி கூறியது.

பண் :

பாடல் எண் : 53

வரிநீல வண்டலம்பு மாமறைக்காட் டங்கேழ்
வரிநீர் வலம்புரிகள் உந்தி வரிநீர்
இடுமணல்மேல் அந்நலங்கொண் டின்னாநோய் செய்தான்
இடுமணல்மேல் ஈசன் எமக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியை முதலிற் கொள்க. அந்த அடியில், ``மேல் ஈசன்`` என்பது `மேலாய சிவன்` என்னும் பொருளது, இடும் அணல் ஈசன் - (எமக்கு எல்லாவற்றையும்) தருபவனாகிய ஈசன்; `இது பொழுது நோய் செய்தான்` என்பதாம். ``வரி`` மூன்றில் முன்னது அழகு. இடையது, கீற்று. இறுதியது `வாரி` என்பது குறுகிநின்றது, வாரி - கடல். ``நீர்`` இரண்டில் முன்னது நீர்மை; பின்னது தண்ணீர். அம் நலம் - அழகினால் உண்டாகின்ற இன்பம். `இடு மணல் மேல் நலங் கொண்டான்` என்பது கைக்கிளைத் தலைவி தான் கண்ட கனவைத் தோழிக்குக் கூறியது.

பண் :

பாடல் எண் : 54

அக்காரம் ஆடரவம் நாண்அறுவை தோல்பொடிசாந்
தக்காரந் தீர்ந்தேன் அடியேனுக் கக்காரம்
பண்டரங்கன் எந்தை படுபிணஞ்சேர் வெங்காட்டுப்
பண்டரங்கன் எங்கள் பவன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதல் அடியில் உள்ள ``அக்கு`` - எலும்பு ஆரம் - ஒளிமணிவடம். நாண் - அரைநாண். அறுவை - துணி; உடை. பொடி- சாம்பல். சாந்து - சந்தனம். `ஆரம் அக்கு; நாண் அரவம்; அறுவை தோல்; சாந்து பொடி` என்க. இரண்டாம் அடியில் உள்ள அக்காரம் - அத வெறுப்பு. அஃதாவது, `மாலை எலும்பு, சாந்து சாம்பல்` என்பன போல இகழ்தல். `காரம் தீர்ந்தேன் ஆகையால், அடியேனுக்கு அவன் அக்காரம் (சருக்கரை) என்க. ``சாந்து`` என்பதன்பின். `என்னும்` என ஒருசொல் வருவிக்க. ``பண்டரங்கன்`` இரண்டில் முன்னது, ஒருவகைக் கூத்து. பின்னது, பழமையான நடன அரங்கம். `வெங்காடாகிய பழைய அரங்கினை உடையவன்` என்க. ``பவன்`` என்பது சிவபெருமானது திருப்பெயர்களுள் ஒன்று.

பண் :

பாடல் எண் : 55

பவனடிபார் விண்நீர் பகலோன் மதிதீப்
பவனஞ்சேர் ஆரமுதம் பெண்ஆண் பவனஞ்சேர்
காலங்கள் ஊழி அவனே கரிகாட்டில்
காலங்கை ஏந்தினான் காண்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கரி காடு - கரிந்த காடு; சுடுகாடு. ``கால் அங்கை ஏந்தினான்`` என்றது, `ஊர்த்துவ தாண்டவம் ஆடினான்` என்றபடி. ``அவனே`` என்பதை இதன்பின் பின்னும் முதல் அடியில் ``பவனடி`` ஒழிந்தவற்றை அதற்குப் பின்னும் கூட்டி, ``காண்`` என்பதை அசையாக்கியும், ``பவன் அடி பார்`` என்பதை வேறு முடிபாக வைத்தும் உரைக்க. பவன் - சிவன். சிவபெருமான் அனைத்துப் பொருள்களும் தானாகியும், பூமியே திருவடியாகக் கொண்டும் விளங்குதலைக் கூறியவாறு. இரண்டாம் அடி முதற்கண் உள்ள பவனம், தேவலோகம், ஈற்றில் உள்ள பவனம், மேடம், இடபம் முதலிய இராசிகள்.

பண் :

பாடல் எண் : 56

காணங்கை இன்மை கருதிக் கவலாதே
காணங்கை யாற்றொழுது நன்னெஞ்சே காணங்கை
பாவனையாய் நின்றான் பயிலும் பரஞ்சோதி
பாவனையாய் நின்ற பதம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

காணம் - பொற்காசு. கவலாது - கவலைப்படாமல். ஏகாரம் தேற்றம். `அங்கையால் தொழுது காண்` என மாற்றுக. காண் நங்கை - தன்னைக் கண்டு வழிபட்ட உமாதேவி. `அவள்பாவிக்கப் படும் பொருளாய் நின்றான்` என்க. ஈற்றடியில் உள்ள ``பாவனை`` என்பதை, `பா + வனை` எனப்பிரிக்க. பா - பாமாலை. வனைதல் - ஆக்குதல். `பதத்துக் கண்` என ஏழாவது இறுதிக்கண் தொக்கது. நின்ற பதம் - நிலையான பாதங்கள். நிலையாவது, அடைந்தார் பின் நீங்காமை.

பண் :

பாடல் எண் : 57

பதங்க வரையுயர்ந்தான் பான்மகிழ்ந்தான் பண்டு
பதங்கன் எயிறு பறித்தான் பதங்கையால்
அஞ்சலிகள் அன்பாலும் ஆக்குதிகாண் நெஞ்சேகூர்ந்
தஞ்சலிகள் என்பாலும் ஆக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பதங்கம் - பறவை. அது கருடனைக் குறித்தது. வரை - மலை, கருடனாகிய மலைமேல். உயர்ந்தான் - ஏறி வருபவன்; மாயோன். பால் - அவனது பாகத்தை. மகிழ்ந்தான் - தன்பாகத்தில் இருக்க விரும்பினவன். பதங்கன் - சூரியன். சூரியன் தக்கன் வேள்வி யில் பல் உதிர்க்கப்பட்டான் அவனது பதம் - பாதங்களில், நெஞ்சே, அன்பாலும் கூர்ந்து அஞ்சலிகள் (கும்பிடுகள்) ஆக்குதி; (அதனால்) என்பாலும் நீ அஞ்சலிகள் (அஞ்சாமைத் தன்மைகளை) ஆக்கு. அஞ்சப்படும் பொருள்கள் பலவாகச் சொல்லப்பட்டன. `சிவ பெருமானைத் தொழுதால் நாம் எதற்கும் அஞ்ச வேண்டுவதில்லை` என்பது கருத்து, ``சுண்ணவெண் சந்தனச் சாந்தும். உடையார் ஒருவர் தமர் நாம் - அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை`` 1, ``நாம் ஆர்க்கும் குடியல்லோம்; நமனை யஞ்சோம்`` 2 என்னும் அப்பர் திருமொழிகளையும் ``அச்சம் இலர்; பாவம் இலர்; கேடும் இலர் ... ... கொன்றை நயந்தாளும் - பச்சம்முடை அடிகள் திருப்பாதம் பணிவாரே``* என்னும் திருஞானசம்பந்தர் திருமொழியையும் காண்க. காண், முன்னிலையசை. என்பாலும் - என்னிடத்திலும்.

பண் :

பாடல் எண் : 58

ஆக்கூர் பனிவாடா ஆவிசோர்ந் தாழ்கின்றேன்
ஆக்கூர் அலர்தான் அழகிதா ஆக்கூர்
மறையோம்பு மாடத்து மாமறையோன் நான்கு
மறையோம்பு மாதவர்க்காய் வந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஆக்கூர்`` மூன்றில் முதலது, ``ஆக்கு ஊர் பனி`` எனப் பிரித்து, `பொழிகின்ற, உலகை மறைக்கின்ற பனி` எனப் பொருள் கொள்ளுதற்கு உரியது. இடையது, ஊர் ஆக்கு அவர் - ஊரார் தூற்று பழி. இறுதியது. `திரு ஆக்கூர்`த் தலம். மாடம் - மாடக் கோயில். மறை ஓம்பு மாடம் - காவல் செய்கின்ற மாடம். மா மறையோன், சிவபெருமான், ஈற்றடியில் உள்ள மறை, வேதம். மாதவர், அந்தணர். வந்து - வந்ததனால் `திருஆக்கூர்ப் பெருமான் அங்குள்ள அந்தணர்களுக்கு அருள்புரிய வேண்டி வீதியில் வந்ததனால் நான் பனியால் வாடி ஆவி சோர்ந்து ஆழ்கின்றேன்` எனக் கைக்கிளைத் தலைவி கூற்றாக உரைத்துக் கொள்க.

பண் :

பாடல் எண் : 59

வந்தியான் சீறினும் வாழி மடநெஞ்சே
வந்தியா உள்ளத்து வைத்திராய் வந்தியாய்
நம்பரனை யாடும் நளிர்புன் சடையானை
நம்பரனை நாள்தோறும் நட்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மூன்றாம் அடியில் `நம்பு + அரனை` எனப்பிரிக்க. நம்புதல். அரனை, சடையானை, பரனை (அவன்) வந்தியாய் வந்த பொழுது யான் சீறினும் நெஞ்சே (நீ அவனை) நாள்தோறும் நட்டு நட்புக் கொண்டு வந்தியா (வந்தித்து - வணங்கி) உள்ளத்து வைத் திராய்` என இயைத்து முடிக்க. தனிச் சீரில் உள்ள ``வந்தி`` - மங்கல மாகப்படுபவன். `வந்தியாய் வந்து` என முன்னே கூட்டுக. ``வந்து`` என்பதனை, `வர` எனத்திரித்துக் கொள்க. `ஆற்றாமை காரணமாக எனக்குச் சீற்றம் எழலாம்; ஆயினும் நீ அவனை வெறாதே` எனத் தலைவி தன் நெஞ்சிற்கு அறிவுறுத்தினாள். வாழி, முன்னிலை யசை.

பண் :

பாடல் எண் : 60

நட்டமா கின்றன வொண்சங்கம் நானவன்பால்
நட்டமா நன்னீர்மை வாடினேன் நட்டமா
டீயான் எரியாடி எம்மான் இருங்கொன்றை
ஈயானேல் உய்வ திலம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நட்டம் ஆகின்றன - இழப்பு ஆகின்றன. சங்கம் - சங்க வளையல். நட்ட மா நன்னீர்மை - நட்புக் கொண்ட பெரிய, நல்ல இயல்பு, `நன்னீர்மையால்` என உருபு விரிக்க. நட்டம் ஆடியான் - நடனம் ஆடுபவன். `ஆடியான்` என்பது நீட்டல் பெற்றது. ``இலம்`` என்னும் பன்மை இரக்கக் குறிப்புணர்த்தி, ``நான்`` என்ற ஒருமை யோடு மயங்கிற்று. இதுவும் கைக்கிளைத் தலைவி தோழியை மாலையிரக்க வேண்டியது.

பண் :

பாடல் எண் : 61

இலமலரஞ் சேவடியார் ஏகப் பெறாரே
இலமலரே ஆயினும் ஆக இலமலரும்
ஆம்பல்சேர் செவ்வாயார்க்கு ஆடாதே ஆடினேன்
ஆம்பல்சேர் வெண்தலையர்க் காள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, ``ஆடினேன்`` என்பதை இறுதிக்கண்ணும், ``இலமலரே ஆயினும் ஆக`` என்பதை அதன்பின்னும் கூட்டியுரைக்க. மூன்றாம் அடியில் உள்ள ``ஆம்பல்`` என்பது ஆம்பல் மலரின் நிறத்தைக் குறித்தது. ``செவ்வாயார்`` என்றதும், ``சேவடியார்`` என்றதும் தோழியரை. ஏகாரம் வினாப் பொருட்டு. ஆடுதல் - உரையாடுதல். இரண்டில் முன்னது வெளிப் படுத்துதலையும், பின்னது அளவளாவுதலையும் குறித்தன. ஈற்றடியில் ``ஆம்`` என்பதில் `ஆளாய்` என ஆக்கம் விரிக்க. முதலடியின் முதலில் `இலவு` என்பது உகரம் இன்றி வந்தது. இலவ மலர். சிவப்பு நிறம் உடையது ஆதலின் சேவடிக்கு உவமையாயிற்று. இரண்டாம் அடியில் உள்ள ``இலம்`` - இல்லம்; அஃதாவது குடிமை.
அலர் ஆதல் - பழிச் சொல்லுக்கு உள்ளாதல். `தோழியர்க்கு உரையாமலே யான் வெண்டலையர்க்கு ஆளாய் அளவளாவினேன்; அதன்மேலும் நமது குடி பழிச் சொல்லுக்கு உள்ளாவதாயினும் ஆகுக. சேவடியார் (இறைவர் பால்) தூது ஏகப்பெறாரோ? (பெற்றால் யாதும் உய்வேன்.) யாவரும் பிறர் தூற்றும் பழியை இலமாவோம்` என இயைத்து முடிக்க. இதுவும் மேலைத் துறை.

பண் :

பாடல் எண் : 62

ஆளானம் சேர்களிலும் தேரும் அடல்மாவும்
ஆளானால் ஊரத்தான் ஏறூறூர்ந்தே ஆளான்போய்
நாடகங்க ளாட்டயரும் நம்பன் திருநாமம்
நாடகங்கள் ஆடி நயந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஆளான் அஞ்சு ஏர் களிறு - மனிதரால் அஞ்சப் படுகின்ற, அழகிய யானை. மா - குதிரை. ஆள் ஆனார் - தனக்கு அடியர் ஆயினார். பொய் ஆளான் - ஒரு ஞான்றும் பொய்யைப் பயன்படுத்தாதவன்; `வாய்மையையே உடையவன்` என்றபடி. நாடகங்கள் - பலவகை நடனங்கள். நாடு அகங்கள் - நினைக்கின்ற மனங்கள். ஆடி - கண்ணாடி போலத் தூய்மையைப் பெறும். `ஆடி ஆம்` என ஒரு சொல் வருவிக்க. நயந்து - விரும்பி. நயந்து `நாடு அகங்கள்` எனக் கூட்டுக. `ஏறூருந் தாளான்` என்பது பாடம் அன்று.
தான்நாளும் பிச்சை புகும்போலும், தன்அடியார்
வான்ஆள, மண்ஆள வைத்து *
என நக்கீர தேவரும் அருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 63

நயந்தநாள் யானிரப்ப நற்சடையான் கொன்றை
நயந்தநாள் நன்னீர்மை வாட நயந்தநாள்
அம்பகலஞ் செற்றான் அருளான் அநங்கவேள்
அம்பகலன் பாயும் அலர்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நய் அந்த நாள் நன்னீர்மை வாட - வருந்துகின்ற அந்த நாட்களில் எனது நல்ல அழகெல்லாம் வாடிப் போதலால், நய் அந்த நாள் நற் சடையான் கொன்றை யான் இரப்ப - இறந்துபடுகின்ற இறுதி நாள் வந்தது போன்ற நிலையில் யான் நல்ல சடைகளையுடைய சிவபெருமானது கொன்றை மாலையை இரக்கவும். நயந்த நாள் அம் பகல் அம் செற்றான் அருளான் - அவனைக் கண்டு நான் விரும்பிய நாளாகிய அழகிய நாளில் எனது அழகை அழித்துச் சென்றவன் அதனை எனக்கு ஈயவில்லை. அநங்க வேள் அம்பு அலர்ந்து அகலம் பாயும் - காமவேளது அம்புகள் எங்கும் பரந்து வந்து என் மார்பிற் பாயாநின்றன; (யான் இனிச் செய்வது என்!) `நை` என்பது, `நய்` எனப் போலியாய் வந்தது. ``அந்த`` இரண்டில் பின்னது சுட்டு; முன்னது `அந்தம்` என்பதன் புணர்ச்சி விகாரம். இதுவும் கைக்கிளைத் தலைவி ஆற்றாமை கூறியது.

பண் :

பாடல் எண் : 64

அலங்காரம் ஆடரவம் என்புதோல் ஆடை
அலங்கார வண்ணற் கழகார் அலங்காரம்
மெய்காட்டும் வார்குழலார் என்னாவார் வெள்ளேற்றான்
மெய்காட்டும் வீடாம் விரைந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அலங்காரம்`` மூன்றில், முதலது அலங்கு ஆரம் - (மார்பில்) அசையும் மாலைகள். அவை அரவமும், எலும்புமாம். இடையது அழகு. வண்ணற்கு - நிறத்தையுடையவன் (சிவ பெருமான்) பொருட்டாக. அழகு ஆர் அலங்கு ஆர மெய் காட்டும் வார் குழலார் - தங்களது மேனி யழகு, நிறைந்த ஒளியை வீசுகின்ற முத்தின் நிறத்தைக் காட்டி நிற்கும் நீண்ட கூந்தலையுடைய மகளிர் (உடல் வெளுத்துப் போன மகளிர்` என்றதாம்.) இனி என்னாவாரோ! (இவர்கட்கு இனி) ஏற்றான் மெய்காட்டும் வீடு விரைந்து ஆம் - இடப வாகனத்தையுடையவன் தனது உண்மையை விளக்குகின்ற வீடு விரைவில் கிடைத்துவிடும்போலும்! (`இறந்துபடுவர் போலும்` என்றபடி.)

பண் :

பாடல் எண் : 65

விரையார் புனற்கங்கை சேர்சடையான் பொன்னா
விரையார் பொழிலுறந்தை மேயான் விரையாநீ
றென்பணிந்தான் ஈசன் இறையான் எரியாடி
என்பணிந்தான் ஈசன் எனக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

விரை ஆர் புனல் - விரைந்த (வேகமாய்) ஆர்க்கின்ற (ஒலிக்கின்ற) நீர். பொன்னாவிரை - பொன் போலும் ஆவிரம் பூ. ஆர் - நிறைந்த. உறந்தை - உறையூர்; முக்கீச்சரம். நீறு விரையா அணிந்தான் - திருநீற்றை வாசனை பொருந்திய சந்தனமாக அணிந்தவன். `விரைவாக` என்றதற் கேற்ப, `மாலையாக` என்பது வருவித்து, `மாலையாக என்பை அணிந்தான்`` என்க. ஈற்றடியில் ``ஈசன்`` என்பது `அவன்` எனச் சுட்டளவாய் நின்ற `அவன் எனக்குப் பணிந்தான்; என்` - என்க. எனக்கு - என் அளவிற்கு. பணிந்தான் - இறங்கி வந்து அருள் செய்தான். என் - என்ன வியப்பு.

பண் :

பாடல் எண் : 66

எனக்குவளை நில்லா எழிலிழந்தேன் என்னும்
எனக்குவளை நில்லாநோய் செய்தான் இனக்குவளைக்
கண்டத்தான் நால்வேதன் காரோணத் தெம்மானைக்
கண்டத்தால் நெஞ்சேகாக் கை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`இனக் குவளைக் கண்டத்தான் ... ... எம்மானைக் கண்ட அத்தால், (அவன்) நக்கு, வளை நில்லா நோய் என் செய்தான்? (இவள்) `எனக்கு வளை நில்லா; எழில் இழந்தேன் என்னும்; (இனி இவளைக் காக்கை நெஞ்
என இயைத்து உரைக்க. இனக் குவளைக் கண்டத்தான் - கூட்டமான நீலோற்பலப் பூப்போலும் கரிய கண்டத்தை யுடையவன். கண்ட அத்தால் - அவனைக் கண்ட அதனாலே, `கண்ட` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `அதனால்` என்பது `அத்தால்` என மருவிற்று. நக்கு - சிரித்து; `அன்பு காட்டி` என்றபடி வளை நில்லா நோய் - தாழ்ந்து நில்லாது உயர்ந்து எழுகின்ற நோய், காக்கை - காத்தலைச் செய்வது. நெஞ்சு காத்தலாவது, அவனை நினையாது மறத்தல், என்னும் - என்று சொல்லி இரங்குகின்றாள்.

பண் :

பாடல் எண் : 67

காக்கைவளை என்பார்ப்பார்க் கன்பாய்ப்பால் நையாதே
காக்கைவளை யென்பார்ப்பான் ஊர்குரக்குக் காக்கைவளை
ஆடானை ஈருரியன் ஆண்பெண் அவிர்சடையன்
ஆடானை யான தமைவு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதலடியில் ``காக்கைவளை`` என்பதை, `கை வளை கா` என மாற்றுக. ``கா`` - கழன்று வீழாமல் காப்பாற்று. ஏவல் வினை முற்றின்முன் வல்லொற்று மிக்கது, என்பு - என்றல்; புகர ஈற்றுத் தொழிற் பெயர். என்பு ஆர்ப்பார்க்கு அன்பாய் - என்பதாகச் சொல்ல ஆரவாரிக்கின்றவர்கள் மேல் அன்பாய். தலைவி தன்னைப் பிறர் போலக் கூறினாள் ஆதலின், ``ஆர்ப்பார்`` எனப் பன்மையாற் கூறினாள்; பால் நையாது - அவர்கள்பால் மனம் இரங்காமல் ஏகாரம் தேற்றம். காக்கை வளை என்பு ஆர்ப்பான் - காக்கைகள் சூழ்கின்ற எலும்புகளை (`புறங்காட்டில் உள்ள எலும்புகளை` என்றபடி) மாலையாக அணிந்தவன்; சிவபெருமான். ``குரக்குக் கா`` என்பதும் ஈற்றடியில் உள்ள ``ஆடானை`` என்பதும் தலங்கள். கை வளை ஆடு ஆனை ஈர் உரியன் - தும்பிக்கை வளைந்து அசைகின்ற யானையை உரித்த தோலையுடையவன். ஆண் பெண் - ஆணும் பெண்ணுமாய உருவம் உடையவன். அமைவு - பொருந்தும். `காதல் மிக்கு மெலி கின்ற மகளிர், - எங்கள் கை வளைகளைக் கா - என்று முறையிடு கின்றவர்கள்மேல் அன்பாய், அவர்பால்இரக்கங் கொள்ளாமலே சிவன் குரக்குக்கா, ஆடானை ஆகிய தலங்களில் வாளா அமர்ந் திருத்தல் பொருந்துவதொன்றே` எனத் தலைவி இரங்கினாள். `பொருந்துவது` என்றது எதிர்மறைக் குறிப்பு.

பண் :

பாடல் எண் : 68

அமையாமென் தோள்மெலிவித் தம்மாமை கொண்டிங்
கமையாநோய் செய்தான் அணங்கே எமையாளும்
சாமத்த கண்டன் சடைசேர் இளம்பிறையன்
சாமத்தன் இந்நோய்செய் தான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அமை - மூங்கில். அம் மாமை - அழகிய, மாந்தளிர்போலும் நிறம், அமையா நோய் - தீரா நோய், சாமத்த - சாமவேதம் பொருந்திய. `சாமத்தனாய்` என ஆக்கம் விரிக்க. சாமத்தன் - இடாயாமத்திலே வந்தவன். ``அணங்கே`` எனத் தோழியை தலைவி விளித்தாள். ஆகவே, இது தோழியைத் தூது செல்ல வேண்டிக்கொண்ட தலைவி கூற்றாயிற்று.

பண் :

பாடல் எண் : 69

தானக்கன் நக்க பிறையன் பிறைக்கோட்டுத்
தானக் களிற்றுரியன் தண்பழனன் தானத்
தரையன் அரவரையன் ஆயிழைக்கும் மாற்கும்
அரையன் உடையான் அருள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தான் + நக்கன்` எனப் பிரிக்க. நக்கன் - உடை யில்லாதவன்; திகம்பரன்; திக்குகளையே ஆடையாக உடையவன். நக்க பிறையன். ஒளி வீசுகின்ற பிறையை அணிந்தவன். கோடு - தந்தம், தானக் களிறு - மத நீரையுடைய யானை தானத்து அரையன் - தானம் செய்தற்கு வேண்டப்படும் சற்பாத்திரங்களுள் முதலாவதான வன். `சிவனை நோக்கிச் செய்யும் தானங்களை விடச் சிறந்த தானம் பிறிதில்லை` என்றபடி. ஆயிழை - உமை. மால் - மாயோன். அரையன் - இவர்களைப் பாதி உடலிற் கொண்டவன் `அருள் உடையான்` எனமாற்றி, `இங்ஙனம் கூறப்பட்ட இவன் உயிர்கள் மாட்டுப் பேரருள் உடையவன்` என்க.

பண் :

பாடல் எண் : 70

அருள்நம்பாற் செஞ்சடையன் ஆமாத்தூர் அம்மான்
அருள்நம்பால் நல்கும் அமுதம் அருள்நம்பால்
ஓராழித் தேரான் எயிறட்ட உத்தமனை
ஓராழி நெஞ்சே உவ.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதலடியிலும், இரண்டாம் அடியீற்றிலும் உள்ள ``அருணம்`` - சிவப்பு. அஃது ஆகுபெயராய், முதற்கண் நெருப்பினை யும், பின்னர் சூரியனது கிரணங்களையும் குறித்தன. பால் - பான்மை; தன்மை. ஆமாத்தூர், ஒருதலம். இரண்டாம் அடியில் உள்ள ``அருணம் பால்`` என்பதை, `அருள் + நம்பால்` பிரித்து உரைக்க. `ஆழி நெஞ்சே ஓர்; உவ` என மாற்றி, `துன்பத்தில் ஆழ்கின்ற நெஞ்சே, நினை; அதன் பயனாக மகிழ்ச்சியடை` என உரைக்க.

பண் :

பாடல் எண் : 71

உவவா நறுமலர்கொண் டுத்தமனை உள்கி
உவவா மனமகிழும் வேட்கை உவவா
றெழுமதிபோல் வாள்முகத் தீசனார்க் கென்னே
எழுமதிபோல் ஈசன் இடம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஈசனார்க்கு ஈசன் இடம், உத்தமனை மலர் கொண்டு உள்கி மகிழும் வேட்கை எழுமதி போல் என்` என இயைத்து முடிக்க. ஏகாரம் தேற்றம். ``உத்தமன்`` என்பது ``ஈசனார்`` எனப்பட்ட வனையே குறித்தலால் `அவன்` என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது. உவவா உள்கி - மகிழ்ந்து நினைத்து, இரண்டாம் அடியில் `உவ்வவா` என்பது வகரமெய் குறைந்து ``உவவா`` என வந்தது. உகரம் சுட்டு. `உந்த அவாவால் மனம் மகிழ்கின்ற வேட்கை எழும் மதி` என்க. மதி - புத்தி. உவவு ஆறு - உவா நாளில் (பௌர்ணிமையில்) எழுகின்ற திங்கள். என் - என்று அறி, ஈற்றடியில் உள்ள ஈசன் - தலைமை; `ஈசனார்க்கே, நறுமலர் கொண்டு உள்கி மகிழும் வேட்கை எழுகின்ற புத்தியே சிறப்புடைய இடம்` என்றபடி உயர்த்தற் கண் ஒருமையோடு பன்மை மயங்கிற்று.

பண் :

பாடல் எண் : 72

இடமால் வலமாலை வண்ணமே தம்பம்
இடமால் வலமானஞ் சேர்த்தி இடமாய
மூவா மதிபுரையும் முன்னிலங்கு மொய்சடையான்
மூவா மதியான் முனி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதல் அடியில், இடம் - இடப்பக்கம். மால் - மாயோன், மாலை - அந்தி வானம். தம்பம் இட - நிலைநிற்றலை இடும் படி. மால் வல மான் அம் சேர்த்தி - மருளுதலை மிக உடைய மானை அழகாக ஏந்தி. `அதற்கு (மதிக்கு) இடமாய சடை` என இயைக்க. புரைய - உயர்ந்து விளங்க. மூவா மதியான் - கெடாத அறிவை உடையவன்; `நித்தியன்` என்றபடி. முனி - தவக் கோலத்தையுடைய வன். இடப்பக்கத்தில் மாயோனை உடையனாய் இருத்தல் முதலிய வற்றைக் கூறி, இறுதியில் அவனது தவக்கோலத்தைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 73

முனிவன்மால் செஞ்சடையான் முக்கணான் என்னுமர்
முனிவன்மால் செய்துமுன் நிற்கும் முனிவன்மால்
போற்றார் புரமெரித்த புண்ணியன்தன் பொன்னடிகள்
போற்றாநாள் இன்று புலர்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முனிவன் - தவக் கோலத்தையுடையவன். மால் சடை - பெரிய சடை. என்னும் - என்று சொல்வாள். முனி வன்மால் செய்து - யாவரும் வெறுத்தற்குரிய வலியமையலைக் கொண்டு. முன் நிற்கும் - அவன் எதிரில் போய் நிற்பாள். முனிவன்மால் போற்றார் - கோபிக் கின்ற, வலிய அஞ்ஞானத்தையுடைய பகைவர். அடிகள் போற்றா நாள் இன்று. பாதங்கள் இவளைக் காப்பாற்றாது கைவிட்ட நாளாகிய இன்று புலர்ந்து - மெலிந்து `இவள்` என்னும் எழுவாய் வருவித்து, `இன்று புலர்ந்து என்னும், `நிற்கும்` என முடிக்க. இது தலைவியது ஆற்றாமை கண்டு செவிலி நொந்து கூறியது.

பண் :

பாடல் எண் : 74

புலர்ந்தால்யான் ஆற்றேன் புறனுரையும் அஃதே
புலர்ந்தானூர் புன்கூரான் என்னும் புலர்ந்தாய
மண்டளியன் அம்மான் அவர்தம் அடியார்தம்
மண்டளியன் பின்போம் மனம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரண்டாம் அடியில் தனிச்சீர் முதலாகத் தொடங்கி யுரைக்க. `கல் தளி`, `கற்றளி` ஆதல்போல, `மண் தளி`, `மண்டளி` யாயிற்று. `மண்ணால் (சுடுமண்ணால் - செங்கற்களால்) ஆகிய கோயில்` என்பது பொருள். பல கோயில்கள் இவ்வாறு அமைந்தன. `திருவாரூர்ப் பரவையுள் மண்டளி` என்பதும் எண்ணற்பாற்று. இங்குக் குறிக்கப்பட்டதும் அதுவேயாகலாம். புலர்ந்து ஆய மண் - சுடப்பட்டு அமைந்த மண். ஈற்றடியில் `மண்டு` + அளியன் - எனப் பிரித்து, `மிக்க அன்பில் விளங்குபவன்` என உரைக்க. `அம்மானவன்` என்பதில் `அவன்`, பகுதிப் பொருள் விகுதி. (பொழுது, பயனின்றி வீணே) வீணே விடியுமாயின். புறன் உரை - அலர். அஃதே - முன்னிருந்த நிலையினதே. `புல் ஆர்ந்த ஆன்` என்பதில் ``ஆர்ந்த`` என்பது முதல் குறுகியும், ஈற்று அகரம் தொகுக்கப்பட்டும் நின்றது - `புல்லை உண்கின்ற இடபம்` - என்பது பொருள். புன்கூர் - திருப்புன்கூர்த் தலம், `மனம் என்னும்` என முடிக்க. என்னும் - என்று பதைக்கும். கைக்கிளைத் தலைவி கூற்று.

பண் :

பாடல் எண் : 75

மனமாய நோய்செய்தான் வண்கொன்றை தாரான்
மனமாய உள்ளார வாரான் மனமாயப்
பொன்மாலை சேரப் புனைந்தான் புனைதருப்பைப்
பொன்மாலை சேர்சடையான் போந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரண்டாம் அடியின் தனிச் சீரில் ``மனமாய`` என்பதை, `மன் அம் ஆய் அ` எனப் பிரித்து, `நிலை யான அழகாக அந்த` எனப் பொருள் கொண்டு, `அப் பொன் மாலை` என இயைத்து, `அந்தப் பொன்போலும் கொன்றை மாலையை` என உரைக்க. ஈற்றடியில் உள்ள மாலை - தன்மை. `தருப்பை பொன் மாலை` என்பதை, பொன் தருப்பை மாலை` என மாற்றி, `பொன்னாலாகிய தருப்பையின் தன்மையை உடைய சடை` என்க. மனம் மாய நோய் செய்தான் - மனம் அழியும்படி துன்பத்தை உண்டாக்கினான். தாரான்- தாமாட்டான். மனம் ஆய உள் ஆர வாரன் - எனது மனநிலையை உள்ளபடி உணர்தற்கு என் இருப்பிடத்தினுள்ளும் வரமாட்டான். `என் செய்வது` என்பது குறிப்பெச்சம். இதுவும் மேலைத் துறை.

பண் :

பாடல் எண் : 76

போந்தார் புகவணைந்தார் பொன்னேர்ந்தார் பொன்னாமை
போந்தார் ஒழியார் புரமெரித்தார் போந்தார்
இலங்கோல வாள்முகத் தீசனார்க் கெல்லே
இலங்கோலந் தோற்ப தினி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``புரம் எரித்தார்`` என்பதை முதலிற் கொள்க. போந்தார் - வீதி வழியே வந்தார். புக அணைந்தார் - என் இல்லத்துள் புகுவார் போல அணுகிவந்தார். பொன் நேர்ந்தார் பெற்றோர்க்குப் பொன் தரவும் இசைந்தார் (ஆயினும்) பொன் ஆம் ஐ போம் தார் ஒழியார் - பொன் போலும் அழகு பொருந்திய கொன்றைமாலைய விடார்; (தாரார்) போந்தார் - மறைந்துவிட்டார். எல்லே, இரக்கச் சொல், இனி, `எல் - பகல்` எனக் கொண்டு, `எல்லே போந்தார்` என மேலே கூட்டி உரைப்பினும் ஆம் மூன்றாம் அடியில் ``இலங்கு ஓலம்`` என்பதை `ஓலம் இலங்கு` என மாற்றி, `பலரது முறையீடுகளை யடைய முகத்தை யுடைய ஈசனார்` என்க. ஈசனார்க்கு - ஈசனார் பொருட்டு. கோலம் தோற்பது இனி இலம் - அழகை இழப்பதை இனி யாம் செய்ய மாட்டோம். இஃது அருளாமை நோக்கி ஊடி யுரைத்தாள் கூற்று.

பண் :

பாடல் எண் : 77

இனியாரும் ஆளாக எண்ணுவர்கொல் எண்ணார்
இனியானஞ் சூணிருக்கைக் குள்ளான் இனியானைத்
தாளங்கை யாற்பாடித் தாழ்சடையான் தானுடைய
தாளங்கை யால்தொழுவார் தாம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரண்டாம் அடி முதலாகத் தோடங்கி, ``தாம்`` என்பதை, ``ஆளாக`` என்பதற்கு முன்னே கூட்டியுரைக்க. இனியா நஞ்சு - இனிப்பை (விருப்பத்தை) உண்டாக்காத நஞ்சு. நஞ்சு ஊண் இருக்கைக்கு உள்ளான் இனியான் - நஞ்சினை உண்டு, அதனை உள்ளே அடக்கியதனால் தானும் அதுவே போன்று இனித்தல் இல்லாத வன். `கையால் தாளம் பாடி` - என மாற்றி, `தாளத்தோடு` என உருபு விரிக்க. முதல் அடியில், ``இனி`` என்றது, `அவன் சிறிதும் அருளான் ஆனபின்பு` என்றபடி. இஃது ஆசிரியர் ஊடிக் கூறியது. ``உங்களுக்கு ஆள் செய்ய மாட்டோம்; ஓணகாந்தன் தளியுளீரே`` என்றாற் போல்வன காண்க.

பண் :

பாடல் எண் : 78

தாமரைசேர் நான்முகற்கும் மாற்கும் அறிவரியார்
தாமரைசேர் பாம்பர் சாடமகுடர் தாமரைசேர்
பாணியார் தீர்ந்தளிப்பர் பாரோம்பு நான்மறையார்
பாணியார் தீர்ந்தளிப்பர் பார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தாம் அரை சேர் பாம்பர் - (நான்முகற்கும், மாற்கும் அரியாராகிய) அவர் தமது இடையிலே (கச்சாகச்) சேர்ந்த பாம்பினை உடையவர். தா மரைசேர் பாணியார் - தாவுகின்ற மான் பொருந்திய கையை உடையவர். தார்ந்து அளிப்பர் பார் ஓம்பு - பாசம் நீங்கி, அது நீங்காதாரை ஆள்பவர்களது தூய உலகத்தை (சுத்த மாயா புவனங்களை)க் காக்கின்ற (பரமசிவனார்) பாணித்தல் - தாமதித்தல். பாணியார் - தாமதியாராய் தீர்ந்து அளிப்பர் - விரைந்து தமது உலகத்தி னின்றும் நீங்கி வந்து அருள் வழங்குவார்` பார் - இதனை (நெஞ்சே) நீ அறிவாயாக.

பண் :

பாடல் எண் : 79

பார்கால்வான் நீர்தீப்ப பகலோன் பனிமதியன்
பார்கோல மேனிப் பரனடிக்கே பார்கோலக்
கோகரணத் தானறியக் கூறுதியே நன்னெஞ்சே
கோகரணத் தானாய கோ.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதல் அடியில் அட்ட மூர்த்தங்களில் இயமானன் (ஆன்மா) தவிர, ஏனைய ஏழும் கூறப்பட்டன. இரண்டாம் அடியில், `பார் மேனி` என இயைத்து, `பார்க்கத் தக்க திருமேனி` என உரைக்க. தனிச்சீரில் உள்ள பார் - நில உலகம் - கோகரணம், துளுவ நாட்டுத் தலம். ஆன் - அவ்விடம் `அவ்விடத்துச் சென்று` என்க. ஈற்றடியில், கோகு - ஆகாயம். கரணம் - உடம்பு. ஆகாயம் போலும் உடம்பை உடைய கோ (தலைவன்) அநங்கன்; மன்மதன் என்றது, அவனால் உண்டாகின்ற துன்பம். `நெஞ்சே, கோ கரணத்தான் ஆய கோவினால் உண்டாகின்ற துன்பத்தைப் பரனடிக்கே கூறுதியோ` என இயைத்து முடிக்க. கூறுதல் - விண்ணப்பித்தல். இதுவும் கைக்கிளைத் தலைவி கூற்று.

பண் :

பாடல் எண் : 80

கோப்பாடி ஓடாதே நெஞ்சே மொழி கூத்தன்
கோப்பாடிக் கோகரணங் குற்றம் கோப்பாடிப்
பின்னைக்காய் நின்றாற் கிடம்கொடுக்கும் பேரருளான்
பின்னைக்காம் எம்பெருமான் பேர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நெஞ்சே, கோப்பாடி ஓடாதே` என மாற்றி முதலிலும், `கூத்தன் கோப்பாடிக் கோகரணம், குற்றாலம் கூறு` என மாற்றி, இறுதியிலும் வைத்து உரைக்க கோப்பாடி ஓடாதே - அரசரைப் பாடிக்கொண்டு அவர்கள்பால் ஓடாதே. `கோ` என்பது சொல்லால் அஃறிணையாதலின், அஃது இங்குப் பன்மையதாயிற்று, கோப் பாடிக் கோகரணம் - தலைவனது (சிவபெருமானது) இடமாகிய, பின்னைக்காய்க் கோப்பு ஆடி நின்றாற்கு - நப்பின்னைக்கு அன்பனாய் ஆயர்மகளிரோடு கைகோத்துக் குரவையாடி நின்ற மாயோனுக்கு. இடம் கொடுக்கும் - இடப்பாகத்தைக் கொடுத்த. எம்பெருமான் பேர் பின்னைக்கு ஆம். எமக்குப் பெருமானாகிய சிவபெருமானது திருநாமத்தைச் சொன்னால் அது, வருகின்ற பிறப்பிற்கு உறுதுணையாய் வந்து உதவும்.

பண் :

பாடல் எண் : 81

பேரானை ஈருரிவை போர்த்தானை ஆயிரத்தெண்
பேரானை ஈருருவம் பெற்றானைப் பேராநஞ்
சுண்டானை உத்தமனை உள்காதார்க் கெஞ்ஞான்றும்
உண்டாம்நா ளல்ல உயிர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பேரானை ஈர் உரிவை - பெரிய யானையை உரித்த தோல். ``ஆயிரத்தெண் பேர்`` என்பதை வடமொழியில், `அட்டோத்தர சகத்திர நாமம்` என்பர். ஈர் உருவம் - பெண்ணும், ஆணும் ஆய இருதிற உருவம். பேரா நஞ்சு - பிறரால் விலக்கலாகாத நஞ்சு. எஞ்ஞான்றும் - எந்த ஒரு நாளும் `உயிர் உண்டாம் நாள் அல்ல` (இறந்த நாளேயாம்) என்க. `ஞான்று` என்பது இங்குப் பெயர்த் தன்மைப்பட்டு, எழுவாயாய் நின்றது. ``பெரும்பற்றப் புலியூரானைப் - பேசாத நாளெல்லாம் பிறவா நாளே`` என்ற அப்பர் திருமொழியையும் நோக்குக.

பண் :

பாடல் எண் : 82

உயிராய மூன்றொடுக்கி ஐந்தடக்கி உள்ளத்
துயிராய ஒண்மலர்த்தால் ஊடே உயிரான்
பகர்மனத்தான் பாசுபதன் பாதம் பணியப்
பகர்மனமே ஆசைக்கட் பட்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``உயிர்`` மூன்றனுள் முதலது உயிர்ப்பு; மூச்சு - மூன்று மூச்சாவன இடநாடி மூச்சு, வலநாடி மூச்சு, நடுநாடி மூச்சு. ஒடுக்கி - அடக்கி; கும்பித்து. ஐந்து - ஐம்புல ஆசை. `ஐம்புல ஆசையைப் பிராணாயாமத்தில் அடக்கி` என்றபடி. `பிராணாயாமம்` என்றது உபலக்கணம் ஆதலின், அஃது ஏனைய ஏழ் உறுப்புக்களையும் தழுவி, `யோகம்` எனப் பொருள் தந்தது. ``உள்ளம்`` என்றதும், `உயிர்க்கு உயிர்` என்றவாறாம். சத்தியை, `தாள்` என்றல் மரபு. உயிரான். உயிராய் இருப்பவன். `உயிருக்கு உயிராய் உள்ளது சத்தி; சத்திக்கு உயிராய் உள்ளது சிவம்` - என்றபடி. ``பகர்`` இரண்டனுள் முன்னது, `அறுகுணங்களின் தொகுதியாகிய பகத்தை யுடையவர்` என்னும் பொருட்டு. அறுகுணங்களாவன ஐசுவரியம். திரு, புகழ், ஞானம், வீரம், வைராக்கியம்` என்பன. (திருவாவது நன்மை) இது `பகைவர்` என வருதல் பெரும்பான்மை. ``முக்கோற்பகவர்`` * முதலியன காண்க. பகர் - (அவன் பெயர்களைச்) சொல், `மனமே, பாசுபதன் பாதம் பணிய ஆசைக்கட்பட்டு, ஐந்து அடக்கிப் பகர்` என இயைத்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 83

பட்டாரண் பட்டரங்கன் அம்மான் பரஞ்சோதி
பட்டார் எலும்பணியும் பாசுபதன் பட்டார்ந்த
கோவணத்தான் கொல்லேற்றன் என்றென்று நெஞ்சமே
கோவணத்து நம்பனையே கூறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பட்டார் அண் - அன்பு பட்டவர் அணைகின்ற. பட்ட அரங்கன் - பெயர் பெற்ற அம்பலவன். அகரம் தொகுத்தல்) பட்டார் எலும்பு - இறந்தவர்களது எலும்பு. பட்டு ஆர்ந்த கோவணத்தன் - பட்டு இழைகள் பொருந்திய கோவணத்தை அணிந்தவன். கோ வண்ணத்து நம்பன் - ஆகாயத்தை வடிவமாக உடைய பழையோன், (ணகர ஒற்றுத் தொகுத்தல் பெற்றது.)

பண் :

பாடல் எண் : 84

கூற்றம் பொருளும்போற் காட்டியெற் கோல்வளையைக்
கூற்றின் பொருள்முயன்ற குற்றாலன் கூற்றின்
செருக்கழியச் செற்ற சிவற்கடிமை நெஞ்சே
செருக்கழியா முன்னமே செய்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எல் கோல் வளை - ஒளி பொருந்தினவும், ஒழுங்காய் அமைந்தனவும் ஆகிய வளையல்களை அணிந்தவள்; உமாதேவி. (அவளை) கூற்றின் - தனது திருமேனியின் ஒரு கூற்றில் இருக்கத்தக்க. பொருள் - பொருளாக. (ஆக்கம் வருவிக்க) கூற்றும் பொருளும் போல் காட்டி முயன்ற - சொல்லும், அதன் பொருளும் போலப் பிரிவற்றுத்தோன்றும்படி காட்சிப்படுத்து இருக்கச் செய்த. மூன்றாம் அடியில் `செரு + கழிய` எனப் பிரித்து, `போர் ஒழியும்படி` என உரைக்க. இரண்டாம் அடியில் ``செருக்கு`` என்பது, உடல் வலிமையைக் குறித்தது. `என் கோல் வளை` என்பது பாடம் அன்று.

பண் :

பாடல் எண் : 85

செய்யான் கருமிடற்றான் செஞ்சடையான் தேன்பொழில்சூழ்
செய்யான் பழனத்தான் மூவுலகும் செய்யாமுன்
நாட்டூணாய் நின்றானை நாடுதும்போய் நன்னெஞ்சே
நாட்டூணாய் நின்றானை நாம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதலடியில் `செய்யான்` - செம்மை நிறத்தை யுடையவன். இரண்டாம் அடியில் `செய்யான்` - செப்பம் (நடுவு நிலைமை) உடையவன்; இதனை, ``செஞ்சடையான்`` என்பதன்பின் கூட்டுக. பழனம் ஒருதலம். செய்யா - படைத்து. முன்நாள் தூணாய் நின்றான் - படைத்த காலம் முதலாகவே உலகத்தைத் தாங்கி நிலை பெறுத்து வோனாய் நின்றான். நாட்டு ஊணாய் நின்றான் - உலக போகமாய் நின்றான். பின் இரண்டடிகள் `நாட்டுணாய்` என ஓதுவன பாடம் அல்ல.

பண் :

பாடல் எண் : 86

நாவாய் அகத்துளதே நாமுளமே நம்மீசன்
நாவாய்போல் நன்னெறிக்கண் உய்க்குமே நாவாயால்
துய்க்கப் படும்பொருளைக் கூட்டுதும் மற்றவர்க்காள்
துய்க்கப் படுவதாஞ் சூது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வாயகத்து உளதே` என மாற்றுக. `வாழ்த்த நா உளதாகவும், அதைக் கொண்டு நாம் உளேமாகவும், பிறவியாகிய கடலை` மரக்கலம் போல நின்று கடப்பித்து, நன்னெறியின் பயனாகிய வீடுபேறாம் கரையை அடைவிக்க இறைவன் இருக்கவும் (நாம் அவனை வாழ்த்துதலைச் செய்யாமல்) வாயில் உள்ள அந்த நாவால் சுவைத்து உண்ணுதற்குரியன திரட்டுவதிலே காலம் கழிக்கின்றோம். (அது நாம் உய்தற்குரிய உபாயம் அன்று.) இறைவனுக்கு ஆளாகிப் பணிசெய்து அதனால் நுகரப்படும் இன்பத்தை இன்பமாகக் கருதி முயலுதலே உபாயமாகும்` என்க. சூது - உபாயம். `கற்றுக் கொள்வன வாயுள; நாவுள;
இட்டுக் கொள்வன பூவுள; நீருள;
கற்றைச் செஞ்சடை யானுளன்; நாமுளோம்;
ஏற்றுக் கோ,நம னால்முனி வுண்பதே`
என்னும் அப்பர் திருமொழியை இங்கு ஒப்பிட்டுக் காண்க.

பண் :

பாடல் எண் : 87

சூதொன் றுனக்கறியச் சொல்லினேன் நன்னெஞ்சே
சூதன் சொலற்கரிய சோதியான் சூதின்
கொழுந்தேன் கமழ்சோலைக் குற்றாலம் பாடிக்
கொழுந்தே இழந்தேன் குருகு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சூது - வஞ்சனை. அஃதாவது தலையளி செய்வான் போலக் காட்டிச் செய்யாது போனமை. சூதன் - சூத முனிவர். இவர் வேத வியாத முனிவர்க்கு மாணாக்கராயவருள் ஒருவர். தம் ஆசிரியர் பால் கேட்ட புராணங்கள் பதினெட்டினையும் நைமிசாரணிய முனிவர்கட்குக் கூறியவர். `இவரால் சொலற்கரிய` என்றது, `புராணங்களால் முடித்துக் கூறப்படாத புகழை யுடையவன்` என்றபடி. குற்றாலம், ஒரு தலம். சூதின் - மாமரத்தின். `சூதம்` என்பது அம்முக் குறைந்து ``சூது`` எனவந்தது. கொழுந்தே கொழுந்து - போலும் கையினின்றே. குருகு - வளையல். இது நெஞ்சினைத் தூது விடக் கருதியவள் அதனை நோக்கிக் கூறியது.

பண் :

பாடல் எண் : 88

குருகிளவேய்த் தோள்மெலியக் கொங்கைமார் பொல்கிக்
குருகிளையார் கோடு கொடாமே குருகிளரும்
போதார் கழனிப் புகலூர் அமர்ந்துறையும்
போதாநின் பொன்முடிக்கட் போது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கொடாமே`` என்பதை இறுதிக்கண் கூட்டி, மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. போது - பூக்கள். புகலூர், ஒருதலம். போதா - ஞான சொரூபனே. பொன்முடிக்கண் உள்ள போது (மலர்) கொன்றை. கொடாமே - கொடாமையாலே, `குருகு` என்பது கைவளைக்குப் பெயராயினும் இங்குத் தோள்வளையைக் குறித்து நின்றது. `மார்பின்கண்` என உருபு விரிக்க. ஒல்கி - தளர்ந்து `மார்புல்கி` என்பது பாடம் அன்று. குருகு இணையார் - அன்னப் பறவை போலும் இளைய மகளிர். `இணையாது` என ஆறாவது விரித்து. ``குருகிள வேய்த் தோள்`` என்பதற்கு முன்னே கூட்டுக. கோடு - யானைத் தந்தம். மேற்போந்த கொங்கையைச் சுட்டுவதாகிய சுட்டினை விரித்து, `அக்கோடு` என்க. குரு - நிறம்; பொன்னிறம், பசலை, கிளரும் - மிகும். `ஆதலின் நின் முடிக்கட் போதினைத் தந்தருள்` என்பது குறிப்பெச்சம். இது தோழி தலைவனை மாலை யிரந்தது. தன் தலைவியது மெலிவு கூறுவாள் அதனைப் பலர்மேலும் இட்டுப் பொதுப் பட, ``இளையார்`` என்றாள். `குருக்கிளரும்` என்பதில் ககரஒற்று எதுகை நோக்கித் தொகுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 89

போதரங்க வார்குழலார் என்னாவார் நன்னெஞ்சே
போதங்க நீர்கரந்த புண்ணியற்குப் போதரங்கக்
கானகஞ்சேர் சோதியே கைவிளக்கா நின்றாடும்
கானகஞ்சேர் வாற்கடிமை கல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

போது அரங்க வார் குழலார் - பூக்களுக்கு அரங்கு போல் உள்ள நீண்ட கூந்தலையுடைய மகளிர். என் ஆவார் - அவர் உனக்கு என்ன பயனைச் செய்வார்? இரண்டாம் அடியில், ``போ`` என்பதைத் தனியே பிரித்து, இறுதிக்கண் கூட்டுக. தரங்கம் - அலை, `போதுவர்` என்பது உகரம் தொகுத்தலாய் `போதர்` எனவந்தது. `கொண்டு வரப்பட்டவர்` என்பது பொருள். அங்கம் - உடம்பு. கானகம், முதுகாடு. `ஆடும் கால்களையுடைய நகம் சேர்வான்` என்க, நகம் - கயிலாய மலை, கல் - கற்றுச் செய். ``போ`` என்றது வலியுறுத்தற் பொருட்டு.

பண் :

பாடல் எண் : 90

கற்றானஞ் சாடுகா வாலி களந்தைக்கோன்
கற்றானைக் கல்லாத நாளெல்லாம் கற்றான்
அமரர்க் கமரர் அரக்கடிமை பூண்டார்
அமரர்க் கமரரா வார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கற்று ஆன் அஞ்சு ஆடு - கன்றையுடைய பசுவினின்றும் உண்டாகின்ற ஐந்து பொருள்களில் (பஞ்ச கௌவியங் களில்) முழுகுகின்ற. காவாலி - காபாலி. களந்தை - களத்தூர். வேட் களம், நெடுங்களம் முதலாக, `களம்` எனப் பெயர் பெற்ற தலங்கள் பல. கல் தானை - கல்லாடை. தானை - ஆடை. இதனை, ``களந்தைக் கோன்`` என்பதற்கு முன்னே கூட்டி, `கோனை` என இரண்டாவது விரிக்க. கல்லாமை - அறியாமை . ஒருவாறு அறியினும் போற்ற அறியாமை, ``கல்தான்`` என்பதில், ``கல்`` என்பது உவமையாகு பெயராய் உயிர் இல் பொருளைக் குறித்து, அதற்குரிய காலத்தை யுணர்த்திற்று உயிர் இப்பொருளின் காலம், யாதொரு பயனையும் தராது செல்வதாதலையறிக. `தான்` என்பது தேற்றப் பொருட்டு. அஃறிணை பன்மை யொருமை மயக்கம். ``அமரர் - விரும்புவோரினும் மேலாய் மிக விரும்புவோர், `விரும்புவோராய்` என ஆக்கம் விரிக்க. அமரர்க்கு அமரர் - தேவர்கட்கெல்லாம் தேவர்.

பண் :

பாடல் எண் : 91

ஆவா மனிதர் அறிவிலரே யாதொன்றும்
ஆவார்போற் காட்டி அழிகின்றார் ஆவா
பகல்நாடிப் பாடிப் படர்சடைக்குப் பல்பூப்
பகல்நாடி ஏத்தார் பகர்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதற்கண் `அவா` என்பது நீண்டு ``ஆவா`` என வந்தது. `யாதொன்றும் அறிவிலர்` என மாற்றுக. ஆவார்போல் காட்டி அழிகின்றார் - தாங்கள் மேல்மேல் உயர்வது போலக்காட்டி (உலகியலிலே மூழ்கிநின்று, உண்மையில்) அடியோடு அழிந்தொழி கின்றார்கள். ஆவா - இஃது இரங்கத்தக்கது. மூன்றாம் அடியில், `பகவன்` என்பது இடைக் குறைந்து, ``பாகன்`` என வந்தது `பகனை` என இரண்டாவது விரித்து, `பாடி ஆடி` என மாற்றியுரைக்க. `அவனது படர் சடைக்கு` என்க. பகல் நாடி - நாள்தோறும் தேடிக் கொணர்ந்து. தூவி - (அவன் நாமங்களைப்) `பகர்ந்து ஏத்தார்` என்க.

பண் :

பாடல் எண் : 92

பகனாட்டம் பாட்டயரும் பாட்டோடாட் டெல்லி
பகனாட்டம் பாழ்படுக்கும் உச்சி பகனாட்டந்
தாங்கால் தொழுதெழுவான் தாழ்சடையான் தம்முடைய
தாங்கால் தொழுதல் தலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பகல் நாட்டம் பாட்டு அயரும் - பகற் காலத்தில் அன்பர்கள் பாடும் பாட்டைக் கேட்பதிற் செல்லும். எல்லி - இரவில். பாட்டோடு பொருந்த ஆகுதலைச் செய்யும். (இங்கு `பகல்` என்பது உலகம் நிலைத்துள்ள காலத்தையும், `இரவு` என்பது அஃது ஒடுங்கிய காலத்தையும் குறித்து நின்றன.) பகன் - `பகன்` என்னும் பெயரை உடைய சூரியன். நாட்டம் - அவனது கண். நாள் உச்சிப் பகல் தந்து ஆங்கால் - நாளானது நண்பகலைத் தந்து பொருந்தும் பொழுது. (அஃதாவது, உச்சி வேளையில்) தொழுது எழுவான் - பிச்சையிடு வாரைக் கும்பிட்டுச் சொல்வான். `தாழ்சடையான்`` என்பதை முதலிற் கொள்க. தன்னுடையது ஆம் கால் (பாதம்) தொழுதல் தலையாய செயலாம், `தொழுவார், சடையார்` எனப் பன்மைப் பாடமாயின. ``அயரும், படுக்கும்`` என்பன பன்மை ஒருமை மயக்கமாம். `தன்னுடையது ஆம் கால்` என்றது சாதியொருமை. அன்றி, `அது உருபு பன்மைக்கண் வந்தது` எனினும் ஆம்.

பண் :

பாடல் எண் : 93

தலையாலங் காட்டிப் பலிதிரிவர் என்னும்
தலையாலங் காடர்தாம் என்னும் தலையாய
பாகீ ரதிவளரும் பல்சடையீர் வல்விடையீர்
பாகீ ரதிவளரும் பண்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``தலையாய`` என்பது முதலாகத் தொடங்கி, இகரம் தொகுக்கப்பட்ட, `ரதிவளரும் பண்பு பாகீர்` என மாறிக் காட்டி, `அதனால் என்மகள்` என்பது வருவித்து உரைக்க. முதல் அடியில், `அம் காட்டித் தலையால் பலி திரிவர்` என மாற்றி, தமது அழகைக் காட்டிக் கொண்டு தலையால் ஏற்கும் பலிக்கு (பிச்சைக்கு)த் திரிவர்` என உரைக்க. தலையாலங்காடு, ஒருதலம், `தாம் தலையாலங்காடர்` என்க. தாம் - என்னை மெலிவித்தவர், என்னும் - என்று பிதற்றுவாள். பாகீரது - பகீரதனால் கொண்டுவரப்பட்ட கங்கை. ஈற்றடியில் `பகீர்` என்பது முதல் நீண்டு, ``பாகீர்`` என வந்தது. பகீர் - பகிர்ந்தளிக்க மாட்டீர். `இரதி` என்பது எதுகை நோக்கி முதர் குறைந்து நின்றது. `விருப்பம் (ஆசை) என்பது. வளரும் பண்பு - வளர்தற்கு ஏதுவாகிய குணத்தையுடைய திருமேனி. `பண்பு பகீர்` என்க. இது வீதியுலாவில் செவிலி இறைவனைக் குறையிரந்தது.

பண் :

பாடல் எண் : 94

பண்பாய நான்மறையான் சென்னிப் பலிதேர்வான்
பண்பாய பைங்கொன்றைத் தாரருளான் பண்பால்
திருமாலு மங்கைச் சிவற்கடிமை செய்வான்
திருமாலு மங்கைச் சிவன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பண் மறை, பாய மறை` எனத் தனித்தனி இயைக்க. பண் - செய்யப்பட்ட பாய - பரந்த; விரிந்த. நான்மறையான் - பிரமன், `சென்னிக்கண்` என ஏழாவது விரிக்க. பண் பாய கொன்றை- வண்டுகளின் இசை பரவிய கொன்றை மலர். ``அருளான்`` என்பதன் பின். `ஆயினும்` என்பது வருவிக்க. பண்பால் - தனது இயல்பாய் குணத்தினால். (``மாலும்`` என ஈற்றடியிற் சேர்த்து முடிக்க மூன்றாம் அடியில், ``திருமாலும்`` என்பதனோடு இயைய, `மங்கையும்` என என்னும்மையும், `ஆய` என்பது விரித்து `அவ்விருவரும் ஆய சிவற்கு` என்க. மங்கை, உமாதேவி `அச்சிவற்கு` எனச் சுட்டு வருவித் துரைக்க. ஈற்றடியில் ``மங்கை`` என்றது காதற்பட்ட தலைவியை. மடக்களிப் பயன் வேண்டி, `சீவன்` என்பது குறுக்கப்பட்டது. அதற்கு முன் நின்ற சகர ஒற்று விரித்தல். ஈற்றடியில் உள்ள திரு - அழகு. அதன்பின் வந்த, `மயங்கும்` என்னும் குறுக்கப்பட்டது. அதற்குமுன் நின்ற சகர ஒற்று விரித்தல். ஈற்றடியில் உள்ள திரு - அழகு. அதன்பின் வந்த, `மயங்கும்` என்னும் பொருட்டாகிய ``மாலும்`` என்பது, `மயங்கிக் கெடும்` எனத் தன் காரியம் தோற்றி நின்றது. ``சிவன் தார் அருளானாயினும், மங்கை, தனது பண்பால் அவனுக்கு அடிமை செய்ய வேண்டி, உயிர் தன் அழகு கெட மயங்குகின்றாள்` என்றபடி. இது தலைவியது ஆற்றாமை கண்டு செவிலி கவன்றுரைத்தது.

பண் :

பாடல் எண் : 95

சிவன்மாட் டுகவெழுதும் நாணும் நகுமென்னும்
சிவன்மேய செங்குன்றூர் என்னும் சிவன்மாட்டங்
காலிங் கனம்நினையும் ஆயிழைஈர் அங்கொன்றை
யாலிங் கனம்நினையு மாறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஆயிழை`` என்பதை முதலிலும், ``சிவன் மாட்டுக எழுதும்`` என்பதை இறுதியிலும் வைத்து உரைக்க. ``நாணும்`` என்பதன் இறுதி ஒற்று சந்தி வகையாற் கெட்டது. நாணும் - நாணுவாள். `நகும்` என்னும் - (ஊர்) `சிரிக்கும்` என்பாள், செங்குன்றூர். கொடி மாடச் செங்குன்றூர்; ஒரு தலம், அங்குச் சிவன்மாட்டு ஆலிங்கனம் நினையும் - அவ்விடத்தில் சிவனிடத்தில் தங்கித் தழுவுதலை நினைவாள். இங்ஙனம் நினையும் ஆறு - இவள் இவ்வாறெல்லாம் எண்ணுகின்ற முறைமை. ஈர் அம் கொன்றையால் - குளிர்ந்த அழகிய கொன்றை மாலை காரணமாகலாம். (ஆகையால் இவளை) சிவன் மாட்டு உக எழுதும் - சிவபெருமானிடத்தில் கொண்டுபோய் விட்டுவிடப் புறப்படுவோம். இதில் ``சிவன்`` என்பது சொற்பொருட் பின்வரு நிலையாகவே வந்தது. இதுவும் மேலைத் துறை.

பண் :

பாடல் எண் : 96

ஆறாவெங் கூற்றுதைத் தானைத்தோல் போர்த்துகந்தங்
காறார் சடையீர்க் கமையாதே ஆறாத
ஆனினர்தார் தாந்தம் அணியிழையி னார்க்கடிமை
ஆனினத்தார் தாந்தவிர்ந்த ஆட்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியை, ``ஆறாத`` என்பதற்கு முன்னே கூட்டி, அது முதலாகத் தொடங்கியுரைக்க. ஆனின் அத்தார் தாம் ஆட்டுத் தவிர்ந்த பசுக்களின் கழுத்தில் உள்ள மாலைகள் (மணிகட்டிய வடங்கள்) அசைதலை ஒழிந்தன. (`பசுக்கள் கொட்டில்களில் சென்று அடங்கின; இரவுப் பொழுதாயிற்று என்றபடி. அதனால்) ஆனினத்தார் - ஆயர்கள். தாம் தம் அணியிழையினார்க்கு அடிமை களாயினர். `ஆயினும், இஃது ஆறு ஆர்சடையீர்க்கு அமையாதே; பொருந்தாதோ` என்க. இஃது இரவின்கண் தனிப்படர் மிகுதியால் ஆற்றாத தலைவி தலைவனை எதிர்பெய்துகொண்டு கழறியுரைத்தது. எனவே, இது ``மிக்க காமத்து மிடல்`` * பெருந்திணைத் துறையாம். முதற்கண் உள்ள ஆறு ஆ - முறைமை உண்டாக. முறைமை யாவது சிவனடியார்மேல் கூற்றுவன் செல்லாது தவிர்தல். தனிச் சீரில், ஆறாத சினமும் கன்றைப் பிரிந்த துயரமும் தணியாத ஆன் இனம் என்க. சினம், ஆனேற்றுக்கு உரியது.

பண் :

பாடல் எண் : 97

ஆட்டும் அரவர் அழிந்தார் எலும்பணிவார்
ஆட்டும் இடுபலிகொண் டார்அமரர் ஆட்டுமோர்
போரேற்றான் கொன்றையான் போந்தான் பலிக்கென்று
போரேற்றான் போந்தான் புறம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரண்டாம் அடியில், `அட்டும்` என்பது நீண்டு, ``ஆட்டும்`` என வந்தது. அட்டும் நிரப்புகின்ற அமரரை ஆட்டும் ஓர் போர் ஏறு - தேவர்களை தன் இச்சைப்படி நடத்துகின்ற திருமாலாகிய போர் விடை. சொல்லளவில் `பலிக்கு என்று` சொல்லிப் போந்தானா யினும் உண்மையில் மகளிர்மேற் செய்யும் போரினை ஏற்றானாகியே புறம் போந்தான் - என்க. இதுவும் கைக்கிளைத் தலைவி தன் தோழிக்கு கூறியது.

பண் :

பாடல் எண் : 98

புறந்தாழ் குழலார் புறனுரையஞ் சாதே
புறந்தாழ் புலிப்பொதுவுள் ஆடி புறந்தாழ்பொன்
மேற்றளிக்கோன் வெண்பிறையான் வெண்டுடர்போல் மேனியான்
மேற்றளிக்கோன் என்றுரையான் மெய்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

புறந்தாழ் புலிப் பொதுவுள் ஆடி - நகர்க்குப் புறத்தே தங்குகின்ற புலிக்கு (வியாக்கிர பாதருக்கு) உரித்தாகிய மன்றினுள் நடனம் செய்பவனும், வெண்பிறையானும், வெண்சுடர்போல் மேனியானும் ஆகிய சிவபெருமான், புறம் தாழ் புரிகுழலாய் - பின்புறத்தே நீண்டு தொங்குகின்ற கூந்தலை உடைய ஊர்ப் பெண்கள் சொல்கின்ற. புறன் உரை அஞ்சாதே - புறங்கூற்று மொழிக்கு அஞ்சாமலே புல் தந்து - தழுவுதலாகிய புணர்ச்சியைக் கொடுத்து. (`புற்றந்து` என்பது இடைக் குறைந்து நின்றது.) ஆழ் பொன்மேற்று அளிக்கோன் - துன்பத்துள் ஆழ்கின்ற, திருமகள் போல்பவளாகிய இவள்மேலதாகிய அன்பையுடைய தலைவனாயினும். `மேற்றளிக் கோன்` என்று மெய் உரையான் - `தான் இத்திருமேற்றளித் தலத்தில் உறைகின்ற தலைவன்தான்` என்னும் உண்மையைக் கூறிற்றிலன், `கூறியிருந்தால், இவள் இவ்வாறு செயலனும் நிலையை அடைதற்கு முன்பே கொண்டுபோய் அவனிடம் சேர்த்திருக்கலாம்` என்பது கருத்து. திருமேற்றளி, காஞ்சியின் கண்ணதாய ஒருதலம். அப்பெருமான் இத்தலைவியைப் புல்லியதிலனாயினும் இவளது நிலைமையை வைத்துப் புல்லினானாகச் செவிலி கருதி இரங்கினாள் என்க. எனவே, இது கைக்கிளைத் தலைவியது கையற்ற நிலையைக் கண்டு செவிலி இரங்கிக் கூறியதாம். மெய்யுரையாமை, தலைவி அவனை அறிந்து கூறாமையாலும், தோழியர் அறிந்து கூறினமையாலும் அறியப்பட்டதாம். வெண்சுடர் - சந்திரன். சிவபெருமானுக்கு வெண்சுடர் போல் மேனி திருநீற்றால் அமைந்தது.

பண் :

பாடல் எண் : 99

மெய்யன் பகலாத வேதியன் வெண்புரிநூல்
மெய்யன் விரும்புவார்க் கெஞ்ஞான்றும் வெய்ய
துணையகலான் நோக்கலான் போற்றிகலா நெஞ்சே
துணையிகலா கூறுவான் நூறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மெய் அன்பாவது, பயன் கருதாது செய்யப்படும் அன்பு. `அன்பினின்றும்` என ஐந்தாவது விரிக்க. வேதியன் - வேதம் ஓதுபவன். `வேதப் பொருளாய் உள்ளவன்` என்றும் ஆம், புரி நூல் மெய்யன். புரிநூல் பொருந்திய திருமேனியை உடையவன். வெய்ய துணை அகலான் - விரும்பத்தக்க துணையாய் இருத்தலை நீங்கான். நோக்கு அகலான் - அருட் பார்வையை விடான். இகலா நெஞ்சு - மாறு படாத நல்ல மனம், `வான் நூறு கூறு துணை இகலா` - என மாற்றி, (அவனது பெருமைக்கு) அண்டங்கள் நூற்றில் ஒரு கூற்றளவு ஒவ்வா என உரைக்க. இகலுதல் - ஒத்தல் `நெஞ்சே, வேதியனும், நூல் மெய்ய னும், விரும்புவார்க்கு அகலாதவனும் ஆகிய அவனை அண்டங்கள் நூற்றில் ஒரு கூறு ஒவ்வா; அவனைப் போற்று` என இயைத்து முடிக்க. `அகலா` என்பன பாடம் அல்ல.

பண் :

பாடல் எண் : 100

நூறான் பயன்ஆட்டி நூறு மலர்சொரிந்து
நூறா நொடிவதனின் மிக்கதே நூறா
உடையான் பரித்தவெரி உத்தமனை வெள்ளே
றுடையானைப் பாடலால் ஒன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நூறு ஆன் பயன் - நூறு பசுக்களின் பால். நொடிவது - சொல்வது. நூறா நொடிவது - பெயர்கள் `நூறு` என்னும் எண் படச் சொல்வது. ``நூறா உடையான்`` என்பதில் `நூறு` என்பது அளவின்மையைக் குறித்து, அத்தகையவான குணங்களைக் குறித்தது. இறைவன் செய்யும் தொழில், வகையால் ஐந்தாயினும் விரியால் எண்ணிலவாகலின், அவற்றிற்கு ஏற்பக் குணங்களும் எண்ணிலவாம். இதனை,
எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி
என்னும் திருவாசகத்தாலும் அறிக. `நூறு` ஆன் பயன் ஆட்டுதல் முதலியவற்றினும் ஒன்று மிக்கது` என இயைத்து முடிக்க. ``பாடல்`` என்றதனால் ``ஒன்று`` - என்றது `பாட்டு` என்பது போந்தது. ஆல், அசை, இதனால், பொதுப்படப் பாமாலை சாத்துதற் பயன் கூறிய துடன், இவ்வந்தாதியால் துதிப்பார்க்கு வரும் பயனும் கூறப்பட்டதாம். ஈற்றில் நின்ற ``ஒன்று`` என்பது முதற்பாட்டின் முதலிற் சென்று மண்டலித்தல் காண்க.

பண் :

பாடல் எண் : 1

ஒன்றுரைப்பீர் போலப் பல உரைத்திட் டோயாதே
ஒன்றுரைப்பீர் ஆயின் உறுதுணையாம் ஒன்றுரைத்துப்
பேரரவம் பூண்டு பெருந்தலையில் உண்டுழலும்
பேரரவும் பூணும் பிரான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`உலகீர்` என்பதை முதற்கண் வருவித்து, தனிச் சீரில் உள்ள ``ஒன்றுரைத்து`` என்பதை, ``உறுதுணையாம்`` என்பதற்கு முன்னே கூட்டி, அவ்விரண்டையும் இறுதிக்கண் வைத்து உரைக்க.
``ஒன்று`` மூன்றில் முதற்கண்ணது, ஒருபொருள்.
இடையது, யாம் சொல்கின்ற ஒன்று.
அது சிவபெருமானது திருப்பெயர்.
ஈற்றில் உள்ளது.
பிறழ்தல் இல்லாத ஒரு சொல்.
அது, `நீவிர் விரும்பியதைத் தருகின்றோம்` என அருளிச் செய்வது.
``அரவம்`` இரண்டில் முன்னது, பாம்பு; பின்னது ஆரவாரம்; பழிச்சொல்.
அவை, `பாம்பை அணிகின்றான், தலையோட்டில் பிச்சை ஏற்று உண்கின்றான்` என்றாற் போல்வன.
`உலகீர் அவனது பெருமையை யறியாமல் அறிவலாதாரால் இகழப்படுகின்ற சிவபிரானது திருப்பெயரைச் சொல்வீராயின், அவன் நீவிர் விரும்பியதைத் தப்பாமல் பெறும் வரத்தை அருளுவான்`.
பல பொருள்களை உரைத்தல், உண்மையை உணராது அலமருதலாலாம்.
ஓயாது - மெலியாமல்.

பண் :

பாடல் எண் : 2

பிரானிடபம் மால்பெரிய மந்தாரம் வில்லுப்
பிரானிடபம் பேரொலிநா ணாகம் பிரானிடபம்
பேணும் உமைபெரிய புன்சடையின் மேலமர்ந்து
பேணும் உமையிடவம் பெற்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றில், `உம்மை` என்பது இடைக் குறைந்து, ``உமை`` என வருதலால் அதற்கேற்பப் ``பிரான்`` என்பவற்றை அண்மை விளியாக்கி, `உமது இடபம் மால்` எனவும், `உமது வில் மந்தரம்` எனவும், நீர் இட; பம் - பேரொலி நாண் நாகம்` எனவும், `உமது இட அம் உமை பேணும்` எனவும், `நீர் இட, அம், பெரிய புன்சடைமேல் அமர்ந்து உம்மைப் பேணும்` எனவும் உரைக்க.
மால் - விட்டுணு.
`மந்தரம்` என்பது நீட்டல் பெற்றது.
இரண்டாம் அடியில், ``பம்`` என்பது ஒலிக்குறிப்பு.
நாண் - வில் நாண்.
தனிச்சீரில், அம், அழகு.
அதன் முதல் வகர உடம்படுமெய் பெற்று `வம்` என வந்தது.
எதுகை நோக்கி, ``பம்`` எனத் திரிந்தது.
அழகு ஆகுபெயராய் உடம்பைக் குறித்தது.
ஈற்றடியில் அம் - நீர்; கங்கை.

பண் :

பாடல் எண் : 3

பெற்றும் பிறவி பிறந்திட் டொழியாதே
பெற்றும் பிறவி பிறந்தொழிமின் பெற்றும்
குழையணிந்த கோளரவக் கூற்றுதைத்தான் தன்னைக்
குழையணிந்த கோளரவ நீ.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதல் அடியில், `பிறவி பெற்றும்` என மாற்றி, ``பிறந் திட்டு`` என்பதற்குப் `பிறந்ததனோடு` என உரைக்க.
``பிறவி`` என்பது சிறப்புப் பற்றி, மக்கட் பிறவியையே குறித்தது.
இரண்டாம் அடியில் பெற்றும் பிறவி - பெருகி வரும் பிறவிகள்.
பெற்று - பெருக்கம்.
அதனை , `ஏ பெற்றாகும்`` * என்னும் தொல்காப்பியத்தால் அறிக.
பின்னர் வந்த ``பிறந்து`` என்பது அனுவாதம் ஆகலான் அதற்கு, `அது செய்து` என உரைக்க.
`பிறவியை ஒழிமின்` என்க.
மூன்றாம் அடியில் ``குழை`` என்பதில் `குழையாக` என ஆக்கம் விரிக்க.
``கோள் அரவம்`` இரண்டில் முன்னது கொடிய பாம்பு; பின்னது, சில கொள்கைகளோடு கூடிய ஆரவாரம்.
பெற்றும் குழை - குழைய (திருவுளம் இரங்க)ப் பண்ணு.
அண் - (அவனையே) அணுகு.
நீ - நீத்துவிடு.
`இந்த` என்னும் சுட்டின்முன் ககர ஒற்று தொகுத்தலாயிற்று.
இவற்றிற்கெல்லாம் முன்னிலையாக.
`நெஞ்சமே` என்பது வருவிக்க.

பண் :

பாடல் எண் : 4

நீயேயா ளாவாயும் நின்மலற்கு நன்னெஞ்சே
நீயேயா ளாவாயும் நீள்வாளின் நீயேயேய்
ஏறூர் புனற்சடையா எங்கள் இடைமருதா
ஏறூர் புனற்சடையா என்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நன்னெஞ்சே`` என்பதை முதலிற் கொள்க.
கொண்டு அதன்பின், பின் இரண்டடிகளைக் கூட்டி, `நீ ஏய்; (ஏய்ந்தால்) நின்மலற்கு ஆள் ஆவாயும் நீயே; (மற்றும்) யாவாயும் நீள்வாளின் நீயே ஆள்` என முடிக்க.
`ஆள் ஆவாய்` என்றது.
`அடியார்களுள் சிறந்தனை ஆவாய்` என்றபடி.
யா வாயும் - எந்த இடத்தையும், ``வாள்`` என்றது படைக்கலப் பொது.
அது நெற்றியைக் குறிக்கும் குறிப்பாயிற்று.
ஏய் - பொருந்து.
``ஏறூர் புனற் சடையா`` என வந்த இரண்டினுள் ஒன்றை, `உயர்தல் மிகுந்த நீரை அணிந்த நல்ல சடையவனே` என்னும் பொருட்டாகவும், மற்றொன்றைப் புல் ஏறு ஊர் நல் சடையா (புல்லை உண்கின்ற இடபத்தை ஊர்கின்ற, நல்ல `சடை` என்னும் அத்தியயனத்தை விரும்புபவனே) என்னும் பொருட்டாகவும் கொள்க.
`யா வாய்` என்பதில், `யா` என்னும் வினா எழுத்து யகர மெய் கெட்டு.
``ஆ`` என நின்றது.

பண் :

பாடல் எண் : 5

என்றும் மலர்தூவி ஈசன் திருநாமம்
என்றும் அலர்தூற்றி யேயிருந்தும் என்றும்
* * * * * *
புகலூரா புண்ணியனே என்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(இந்தப் பாடல் முழுமையாகக் கிடைக்கவில்லை.
அதனால் பொருள் காணவும் இயலவில்லை.
)

பண் :

பாடல் எண் : 6

என்னே இவளுற்ற மால்என்கொல் இன்கொன்றை
என்னே இவளொற்றி யூரென்னும் என்னே
தவளப் பொடியணிந்த சங்கரனே என்னும்
தவளப் பொடியானைச் சார்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`இவள் உற்றமால் என்னே! (இவள் உள்ள) இன்கொன்றை என்கொல்! இவள் `ஒற்றியூர்` என்னும்; என்கொல்! `தவளப் பொடி அணிந்த சங்கரனே` என்னும்; (என்கொல்!) அப் பொடியானைச் சார்ந்து, தவள் (தவம் செய்பவள் - ஆயினள்; என்கொல்!) என இயைத்தும், தொக்கு நின்ற சொற்களை விரித்தும் முடிக்க.
இது கைக்கிளைத் தலைவிதன் ஆற்றாமை கண்டு செவிலி இரங்கிக் கூறியது.
மால் - மயக்கம்; மையல், ``என்`` என்பன எல்லாம் இரக்கக் குறிப்புக்கள்.
அதனை ஈற்றிலும் வருவித்து உரைக்க.
``கொல்`` எல்லாம் அசைநிலை.
``என்கொல்`` என்பது இரக்கம் மிகுதியால் பலகாலும் சொல்லப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

சார்ந்துரைப்ப தொன்றுண்டு சாவாமூ வாப்பெருமை
சார்ந்துரைத்த தத்துவத்தின் உட்பொருளைச் சார்ந்துரைத்த
ஆதியே அம்பலவா அண்டத்தை ஆட்கொள்ளும்
ஆதிஏன் றென்பால் அருள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``சார்ந்து உரைப்பது ஒன்று உண்டு`` என்பதை ஈற்றடி யில் உள்ள ``ஆதி`` என்பதன் பின்னர்க் கூட்டி, ``சார்ந்து - உன்னை அடைந்து , உரைப்பது - யான் உரைக்க வேண்டுவது`` என உரைக்க.
``சாவா, மூவாப் பெருமை`` என்றது, `இறையில்பு` (`பதியிலக்கணம்`) என்றபடி.
மூவாமை - முதுமையடையாமை.
சார்ந்து - அதனைப் பற்றி.
உரைத்த - சிவலோகத்தில் உள்ளார்க்குச் சொல்லிய.
சார்ந்து - இவ்வுலகில் ஆல நிழலை அடைந்து.
உரைத்த - நால்வர் முனிவர் முதலியோர்க்குக் கூறிய.
ஆதியே - முதல்வனே, ``ஆட்கொள்ளும்`` என்பதன்பின் `அவன்` என்பது வருவிக்க.
ஆதி - ஆகின்றவனே; அண்மை விளி.
`என்பால் வந்து` என ஒருசொல் வருவித்து.
``ஏன்று அருள் - என்னை அடியனாக ஏற்று அருள் புரி`` - என உரைக்க.

பண் :

பாடல் எண் : 8

அருள்சேரா தார்ஊர்தீ ஆறாமல் எய்தாய்
அருள்சேரோ தாரூர்தீ யாடி அருள்சேரப்
பிச்சையேற்று உண்டு பிறர்கடையிற் கால்நிமிர்த்துப்
பிச்சையேற்று உண்டுழல்வாய் பேச்சு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி - 1 - அருள் சேராதார் ஊர் - உன்னுடைய திருவுள்ளக் கனிவை அடைய விரும்பாத அசுரர்களது திரிபுரம், அடி- 2 `அருள் சேராது எய்தாய்` என இயையும்.
இதன்கண் உள்ள அருள் - இரக்கம்.
``ஆரூரில் உள்ள தீ ஆடி` என்பது விளி.
இதனை முதற்கண் வைத்து உரைக்க.
வினையொடு தொக்க ஏழாவதன் தொகையில் வல்லினம் மிகாது, இயல்பாயிற்று.
தனிச்சீரில் உள்ள அருள் - ஞானம்.
இறை உணர்வு இல்லாதார் அவ்வுணர்வைப் பெற வேண்டி அடி-3.
பித்து, `பிச்சு` எனப் போலியாய் வந்தது.
அது பேரருளைக் குறித்தது.
`பேரருளை ஏற்று, அதனால் நலிவுண்டு` என்க.
பிச்சை ஏற்பான் போலச் சென்று இரத்தல் பெருங் கருணை காரணமாக என்றபடி.
கடை - தலைவாயில்.
``பேச்சு`` என்பதற்கு, `இஃதே எங்கும் நிகழ் கின்ற பேச்சு` என்க.
அஃது இகழ்வாய பேச்சையே குறித்தது.

பண் :

பாடல் எண் : 9

பேச்சுப் பெருக்குவதென் பெண் ஆண் அலியென்று
பேச்சுக் கடந்த பெருவெளியைப் பேச்சுக்
குரையானை ஊனுக்கு உயிரானை ஒன்றற்
குரியானை நன்நெஞ்சே உற்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பேச்சுப் பெருக்குவது என்`` என்பதை இறுதியிற் கூட்டி உரைக்க.
பேச்சுக்கு உரை - சொல்லுக்குப் பொருள்.
ஊன் - உடம்பு.
``சொல்லுக்குப் பொருள் போலவும், உடம்பிற்கு உயிர்போல வும் எப்பொருட்கும் களைகணாய் உள்ளவன்` என்றபடி.
``ஒன்றற்கு`` என்பதன் பின் `உவமையாக` என்பது வருவிக்க.
உரையான் - சொல்லப்படான்.
உற்று - அடையத் தொடங்கி.
`பேசாமை, அஃதாவது மோன நிலையாலே அடையத் தக்கவன்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 10

உற்றுரையாய் நன்நெஞ்சே ஓதக் கடல்வண்ணன்
உற்றுரையா வண்ணம்ஒன் றானானை உற்றுரையா
ஆனை உரித்தானை அப்பனை எப்பொழுதும்
ஆனையுரித் தானை அடைந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நன்னெஞ்சே`` என்பதை முதலிலும் ``உற்றுரை யாய்`` என்பதை இறுதியிலும் வைத்து உரைக்க.
உற்று உரையாய்.
அணுக நின்று நின் குறைகளைச் சொல்வாயாக.
`சொன்னால் அவைகட்குத் தீர்வு காணலாம்` என்பதாம்.
ஓதம் - அலை.
உற்று உரையா வண்ணம் - வேறிடத்திலிருந்து வந்து துதிக்க வேண்டாமல்.
ஒன்று ஆனான் - அவனோடே இயைந்து ஒன்றாயினான்.
`பிரமன், மால் இருவருமே வந்து போற்றுதற்கு உரியராயினும் மாலது அன்பு நோக்கி அவனைத் தன்னோடு ஒன்றாய் இருக்க வைத்தான்` என்றவாறு.
தனிச் சீரில், `உற்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்த லாயிற்று.
உற்ற உரை - பொருந்திய சொல், அஃது ஆகுபெயராய்ப் பொருளை உணர்த்திற்று.
`அவளைப் பொருளாக உடைய சொல்லே சொல்லத் தக்க சொல்` என்றபடி.
அடி- 3 உரித்தான் - எல்லாரும் அடையத் தக்க பொருளாய் உள்ளவன்.
`எப்பொழுதும் அடைந்து உரையாய்` என மேலதனோடு கூட்டுக.

பண் :

பாடல் எண் : 11

அடைந்துன்பால் அன்பாய் அணிமணிகொண் டர்ச்சித்
தடைந்துன்பால் மேலுகுத்த மாணிக் கடைந்துன்பால்
அவ்வமுதம் ஊட்டி அணிமலருஞ் சூழ்ந்தன்று
அவ்வமுத மாக்கினாய் காண்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அணி - பொன் அணி.
மணி - இரத்தினாபரணம்.
கொண்டு - பாவனையால் கொண்டு.
அடி - 2 ``அடைந்து`` என்ப தனை, `அடைய` எனத் திரித்து, `முழுதுமாக` என உரைக்க.
உன் பால்- சிறந்த பொருளாக எண்ணப்படுகின்ற பால்.
மாணி - பிரமசாரி; சண்டேசுரர்.
தனிச்சீரில் `அடையும்` என்னும் பெயரெச்சம் உம்மை தொகுக்கப்பட நின்றது.
அடையும் துன்பால் - தந்தையால் வந்த துன்பம் காரணமாக.
``அவ்வமுதம்`` எனச் சுட்டிக் கூறியது.
``நீ உண்ட மிச்சிலாகிய அமுதம்` என்பது தோன்றுதற்கு.
``மலர்`` என்றது மாலையை.
அணி மலர் - வினைத் தொகை.
``அவ்வமுதம்`` என்பதில் அகரம் பண்டறி சுட்டு.
பந்தத்தை `மிருத்யு` என்றும், மோட்சத்தை `அமிர்தம்` என்றும் கூறுதல் மெய்ந்நூல் வழக்கு.
``பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்``* - என மாணிக்க வாசகரும் அருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 12

காணாய் கபாலி கதிர்முடிமேல் கங்கைதனைக்
காணாயக் கார்உருவிற் சேர்உமையைக் காணா
உடைதலைகொண் டூரூர் திரிவானை நச்சி
உடைதலைகொண் டூரூர் திரி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(இதனுள் முன் இரண்டு அடிகளில் மடக்கணி வாராது, சொற்பொருட் பின்வருநிலையணியே வந்தது.
) `நெஞ்சே` - என்பதை முதலில் வருவித்துக் கொள்க.
`கங்கைதனைக் காணாய்; உமையைக் காணாய்; காணா (கண்டு).
நச்சி, திரி` என இயைத்து முடிக்க.
உடை தலை - உடைந்த தலை; வினைத் தொகை.
``ஊர் ஊர்`` என்னும் அடுக்கு இரண்டில் முன்னது பொதுவாயும், பின்னது `அவனது ஊர்` எனச் சில தலங்களைக் குறிக்கும் சிறப்பாயும் நின்றது.
இரண்டிலும் `தோறும்` என்பது வருவிக்க.
கார் உரு - நீல நிறம்.
நச்சுதல் - விரும்புதல்.
உடைதல் - நெகிழ்ந்து உருகுதல்.

பண் :

பாடல் எண் : 13

திரியும் புரம்எரித்த சேவகனார் செவ்வே
திரியும் புரம்எரியச் செய்தார் திரியும்
அரிஆன் திருக்கயிலை என்னாதார் மேனி
அரிஆன் றிருக்கயிலை யாம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திரியும் புரம் - வானத்தில் சுழலுகின்ற ஊர்கள்; முப்புரம்.
செவ்வே - முறையாக.
திரியும் - பரிணமித்து வளர்கின்ற.
புரம் - பல வகை உடம்புகளை.
எரியச் செய்தார் - அழித்தார்; ``தேவர் களையும் அழித்தார்`` என்றபடி.
திரியும் - உலாவுகின்ற.
அரி - சிங்கம்.
``ஆன்`` என்றது ஆமாவை.
என்னாதார் - என்று சொல்லாதவர்கள்.
அரி ஆன்று இருக்கை இலை - அழகு நிறைந்து இருத்தல் இல்லை.
`இருக்கை` என்பது எதுகை நோக்கிப் போலியாய் வந்தது.
ஆம், அசை.

பண் :

பாடல் எண் : 14

(இப்பாட்டில் முதல் அடி கிடைக்கவில்லை)
ஆம்பரிசே செய்தங் கழியாக்கை ஆம்பரிசே
ஏத்தித் திரிந்தானை எம்மானை அம்மானை
ஏத்தித் திரிந்தானை ஏத்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(இப்பாட்டின் முதல் அடி கிடையாமையால், பொருளை நன்குணரவும் இயலவில்லை.
)

பண் :

பாடல் எண் : 15

ஏத்துற்றுப் பார்த்தன் எழில்வான் அடைவான்போல்
ஏத்துற்றுப் பார்த்தன் இறைஞ்சுதலும் ஏத்துற்றுப்
பாசுபதம் அன்றளித்த பாசூரான் பால்நீற்றான்
பாசுபதம் இன்றளியென் பால்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதல் அடியில் உள்ள ``பார்த்தன்`` என்பதை முதலில் கூட்டுக.
பார்த்தன் - அருச்சுனன்.
ஏத்து உற்று - துதித்தலைப் பொருந்தி.
ஏ - உயரம்.
ஏத்து உயரத்திலே உற்றுப் பார்த்து` என்க.
வான் அடைவான் போல் உயரத்திலே உற்றுப் பார்த்து நிற்றல் அவனது தவ நிலையாகும்.
இதனை,
ஒருதாளின் மிசை நின்று, நின்ற தாளின் - ஊருவின்மேல்
ஒருதாளை ஊன்றி ஒன்றும்
கருதாமல் மனம் அடக்கி, விசும்பினோடு - கதிரவனைக்
கவர்வான் போல் கரங்கள் நீட்டி,
இருதாரை நெடுந்தடங்கண் இமையாது, ஓரா யிரங்கதிரும்
தாமரைப் போதென்ன நோக்க
என்னும் வில்லி பாரதச் செய்யுளாலும் அறிக.
ஏதுற்றுப் பதம் - பல வகை அம்பின் ஆற்றல்களும் ஒருங்கு நிறைந்த பாசுபதாத்திரம்.
பாசூர், ஒருதலம்.
சுபதம் - நல்ல சொற்கள்.
`பாசூரானைப் பற்றிய பாக்களாகிய நல்ல என.
அவாய் சொற்கள்.
இன்று அளியன்பால் உள என, அவாய் நிலையாய் நின்ற பயனிலையை வருவித்து முடிக்க.
அளியன் - இரங்கத் தக்கேன்; `எளியேன்` என்றபடி.
`அவனைப் பற்றிய பாக்கள் என்னிடத்தில் இருத்தலால் எனக்குக் குறை எதுவும் இல்லை` என்பது கருத்து.
சுபதம் என்பது வடசொல் ஆதலின் பண்புத் தொகைக்கண் ஒற்று மிகாதாயிற்று.

பண் :

பாடல் எண் : 16

பாலார் புனல்பாய் சடையானுக் கன்பாகிப்
பாலார் புனல்பாய் சடையானாள் பாலாடி
ஆடுவான் பைங்கண் அரவூர்வான் மேனிதீ
ஆடுவான் என்றென்றே ஆங்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரண்டாம் அடியில் உள்ள.
``பாலார் புனல் பாய் சடையானாள்`` என்பதை இறுதியிற் கூட்டுக.
பால் ஆர் புனல் பாய் சடையான் - அமுதம் போல நிறைந்த நீர் (ஆகாய கங்கை பாயப் பெற்ற சடையினை உடையவன்.
பால் ஆடி ஆடுவான் - பாலில் சிறப்பாக முழுகி மற்றைப் பொருளிலும் முழுகுவான்.
``பால்`` என விதந்தமையால் அதனது சிறப்புப் பெறப்பட்டது.
`மேனியில் அரவு ஊரப்படுவான்` என்க.
என்று என்று - அவனைப் பலவகையிலும் சொல்லிச் சொல்லி.
ஆங்கு - அவ்வாற்றால்.
பால் ஆர் புனல் பாய் சடை ஆனாள் - பல பக்கங்களிலும் நிறைந்துள்ள நீரில் பொருந்திய சடைப் பூண்டு போல இவள் ஆகிவிட்டாள்.
சடைப் பூண்டைக் `கிடை` என்பர். அதனை,
நீருட் பிறந்து நிறம் பசியவேனும்
ஈரம் கிடையகத் தில்லாகும்
என்பதனானும் அறிக.
சடைப் பூண்டு வலுவற்ற ஒரு மெல்லிய பொருள்.
`காதலால் இவள் அவ்வாறு மெலிந்து விட்டாள்` என்க.
இது தலைவியது வேறுபாடு கண்டு வினாய செவிலிக்குத் தோழி `உண்மை செப்பல்` வகையால் அறத்தொடு நின்றது.

பண் :

பாடல் எண் : 17

ஆங்குரைக்க லாம்பொன் மலர்ப்பாதம் அஃதன்றே
ஆங்குரைக்க லாம்பொன் அணிதில்லை ஆங்குரைத்த
அம்பலத்தும் அண்டத்தும் அப்பாலு மாய்நின்ற
அம்பரத்தும் அண்டத்தும் ஆம்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதனுள், ``ஆங்கு`` என்பனவற்றுள் முன் இரண்டும் அசைகள்.
ஈற்றில் உள்ளது.
`அவ்வாறு என்னும் பொருட்டு.
``மலர்ப் பாதம்`` எனப் பொதுப்படக் கூறப்பட்டதாயினும், சொல்லுவான் குறிப்பால் அது சிவபெருமானது மலர்ப் பாதத்தையே குறித்தது.
`சிவனது மலர்ப் பாதத்தை உரைத்து மாற்று அறியப்படும் - பொன் என்றே சொல்லலாம்.
அஃதன்றே, பொன் என உரைக்கலாம்.
தில்லையுள் அவ்வாறு - பொன் - என்றே சொல்லப்பட்ட அம்பலத்திலும், அண்டம் முழுவதிலும், அண்டத்திற்கு அப்பாலுமாய் உள்ள அம்பரத்திலும் (சிதம்பரத்திலும் - சிதாகாசத்திலும்), அத்தன்மையதாகிய சிவலோகத்திலும் உள்ளது! என இயைத்துக் கொள்க.
சிவபெருமானது திருவடிச் சிறப்பினைப் புகழ்ந்தவாறு.
திருவடியாவது அவனது சத்தியேயாகலின் அஃது இவ்வகையான புகழ்ச்சிகளுக்கெல்லாம் உரியதாயிற்று.
``அப்பாலுமாய்`` என்ற உம்மை.
`அண்டமும் ஆய்` என இறந்தது தழுவி நின்றது.
அண்டம் இரண்டில் பின்னது சிவலோகம் இதனுள்ளும் மடக்கணி வரவில்லை.

பண் :

பாடல் எண் : 18

மாயனைஒர் பாகம் அமர்ந்தானை வானவரும்
மாயவரும் மால்கடல்நஞ்சு உண்டானை மாய
உருவானை மாலை ஒளியானை வானின்
உருவானை ஏத்தி உணர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அமர்ந்தான் - விரும்பினான்.
மாய வரு - இறக்கும் படி வந்த.
மால் கடல் - பெரிய கடல் தனிச்சீரில் ``மாயம்`` என்றது வஞ்சனையை.
`மாயத்து` என்னும் அத்துச் சாரியை அணி நயம் நோக்கித் தொகுக்கப்பட்டது.
உருவான் - ஊடுருவிமாட்டான்; `உட்புகான்` என்றபடி.
மாலை ஒளி மாலைக் காலத்துச் செவ்வான் ஒளி.
ஒளியான் - ஒளிபோல்பவன்.
வானின் உருவான், இறைவன் ஆகாயத்தை உருவாக உடையவன்.
``ஏத்தி உணர்`` என்னும் பயனிலைக்கு `நெஞ்சே, நீ` என்னும் எழுவாய் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 19

உணரா வளைகழலா உற்றுன்பாற் சங்கம்
உணரா வளைகழல ஒட்டி உணரா
அளைந்தான மேனி அணியாரூ ரேசென்
றளைந்தானை ஆமாறு கண்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரண்டாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க.
அடி -2ல் உணராவளை அறியாமையாகிய கோட்டம்.
கழல - நீங்க தனிச் சீரில் ``உணரா`` என்னும் எச்சத்தை, `உணர` எனத் திரிக்க ஒட்டி உணர்தல் - ஒன்றி உணர்தல்.
அவ்வாறு உணரும் உணர்வில் அணைந்து ஆன மேனி கலந்து விளங்கும் உருவம்.
அவ்வுருவம் விளங்குகின்ற ஆரூரில் சென்று அணைந்தானை - புற்றுருவாயவனை அணை.
புற்று; அதனடியாக `அணைந்தான்` என்னும் பெயர் பிறந்தது.
ஆமாறு கண்டு - அவன் அங்ஙனம் ஆமாற்றைக் கண்டு.
அன்பால் உற்று - அன்பால் பொருந்தினமையால்.
வளை சங்கம் கழலா உணரா- வளையல்களாகிய சங்குகள் கையை விட்டுக் கழன்று, தம் கடமையைத் தாம் உணரவாவாயின.
கடமை - கழலாது கையிற் செறிந்து நிற்க வேண்டுவது.
இதுவும் கைக்கிளைத் தலைவியது ஆற்றாமைக் கூற்று.

பண் :

பாடல் எண் : 20

கண்டிறந்து காயெரியின் வீழ்ந்து கடிதோடிக்
கண்டிறந்து காமன் பொடியாகக் கண்டிறந்து
கானின் உகந்தாடும் கருத்தர்க்குக் காட்டினான்
கானின்உகந் தாடுங் கருத்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`காமன் (மன்மதன்) கண்டு இறந்து (தனது யோக நிலையைக் கண்டும் நெறி கடந்து) காய் எரியைக் கண்டு கடிது ஓடியும் அதன்கண் வீழ்ந்து இறந்து பொடியாகி, (தான் அங்ஙனம் ஆம்படி) கண் திறந்து (நெற்றிக் கண்ணைத் திறந்து அதன்பின்னும்) கானின் உகந்து ஆடும் கருத்தர்க்கு (முதுகாட்டில் விரும்பி ஆடுகின்ற முதல்வர் முன்) கானின் உகந்து ஆடும் கருத்துக் காட்டினான் (அவர் அங்ஙனம் ஆடுவதன் உண்மையைப் பலரும் உணரச் செய்தான்.
உண்மை யாவது, முற்றழிப்புக் காலத்தில் எல்லாரையும் அழித்துத் தன்னை அழிப்பார் இன்றித்தான் ஒருவனேயாய் நிற்றல்.
இவ்வுண்மையைக் காமனை எரித்துத் தான் அவனால் மயங்குவிக்கப்படாமல் இருந்த செயல் உணர்த்துதலால், `காமன் எரியின் வீழ்ந்து பொடியாக் காட்டி னான்` என்றார்.
``கருத்தர்க்கு`` என்னும் நான்காவதை, `கருத்தர்முன்` என ஏழாவதாகத் திரிக்க.

பண் :

பாடல் எண் : 21

கருத்துடைய ஆதி கறைமிடற்றெம் ஈசன்
கருத்துடைய கங்காள வேடன் கருத்துடைய
ஆன்ஏற்றான் நீற்றான் அனலாடி ஆமாத்தூர்
ஆனேற்றான் ஏற்றான் எரி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரண்டாம் அடியில் உள்ள, `கருத்துடைய கங்காள வேடன்`` என்பதை இறுதியிற் கூட்டுக.
அடி - 1ல் கருத்து - கருணை, தனிச்சீரில் `கறுத்து` என்பது எதுகை நோக்கி, ``கருத்து`` எனத் திரிந்து நின்றது.
கறுத்து - சினந்து.
`சின விடை` என்றபடி.
சினம், இன அடை.
ஆமாத்தூர் ஆன் ஏற்றான் - ஆமாத்தூரில் தன்னை வழிபட்ட பசுக்களைக் காக்க ஏற்றுக் கொண்டவன்.
`எரி ஏற்றான்` என மாற்றிக் கொள்க.
இதுவும் பெயர்.
அடி-2-ல் கருதுடைய - `பிறவி துடைப் புண்ணும்படி கங்காள வேடன் ஆயினான்` என்க.
`சிவபிரானது திருமேனியில் தம் உடம்பு தீண்டப் பெற்றவர் பிறப்பறுவர்` என்பது பற்றி இவ்வாறு கூறினார்.
கங்காளம் பிரம விட்டுணுக்களது எலும்புக் கூடு.
இவைகளைச் சிவபிரான் தன் தோள் மேல் தாங்கினான்.
``கங்காளம் தோள்மேலே காதலித்தான் காணேடி`` 1 என்னும் திருவாசகத்தால் அறிக.

பண் :

பாடல் எண் : 22

எரியாடி ஏகம்பம் என்னாதார் மேனி
எரியாடி யேகம்ப மாகும் எரியாடி
ஈமத் திடுங்காடு தேரும் இறைபணிப்ப
ஈமத் திடுங்காடு தான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரண்டாம் அடியில் உள்ள ஏகாரம் தேற்றம்.
அதன்பின் வந்த ``கம்பம்`` நடுக்கம் ஆதலின், அஃது இங்குச் சாம்ப லாகிச் சிந்துதலைக் குறித்தது.
தனிச்சீரில் எரியாடி - தீ எரியப்படுவ தாகிய.
`ஈ மத்தை` என்பதில் சாரியை நிற்க.
ஐ உருபு தொகுதல் இலேசினாற் 2 கொள்க.
ஈமத்தையும் இடும் காட்டையும் ஆடரங்காத் தேரும் இறை சிவபெருமான் அவன் பணிப்ப - பணித்தலால்.
ஈமம் - பிணம் சுடும் விறகு.
ஈற்றடியில் உள்ள `காடு` ஆகுபெயராய் அதன்கண் கிடக்கும் விறகைக் குறித்து.
`ஈமத்தோடு ஈமமாய் ஒழிவதேயன்றித் தன்னை எடுத்த உயிருக்கு யாதொரு பயனையும் தந்ததாகாது` என்றபடி.
முன்னர்.
``எரியாடியே கம்பம் ஆகும்`` என்பதும் தேற்றப் பொருளில் வந்தது.

பண் :

பாடல் எண் : 23

தானயன் மாலாகி நின்றான் தனித்துலகில்
தானயன் மாலாய தன்மையான் தான்அக்
கரைப்படுத்தான் நான்மறையைக் காய்புலித்தோ லாடைக்
கரைப்படுத்தான் தன்பாதஞ் சார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``காய் புலித்தோல் ஆடைக் கரைப்படுத்தான்`` என்பது.
``சிவன்`` என்னும் அளவாய் நின்றது.
அதனை முதலிற் கொள்க.
அதன்கண் ``கரை`` என்றது ஆடையில் அமைக்கப்படும் கோட்டினை; ``கொடுந் தானைக் கோட்டழகும்`` * என நாலடியாரிலும் கூறப்பட்டது.
``தான்`` என்பன பலவற்றிலும் பிரிநிலை ஏகாரம் விரிக்க.
`அயனும், மாலும் ஆகி நின்றான்` என்றது `அவர்கள் வழியாகப் படைத்தல் காத்தல்களை நிகழ்விக்கின்றான்` என்றபடி.
அடி-2ல் `அயன் உலகில் தனித்து மால் ஆய தன்மையான் - அவ்விருவரின் வேறாய் உயிர்களிடையில் தனி ஒருவனாய்ப் பெரும் பொருளான தன்மையையுடையவன்.
மால் - பெருமை.
நான்மறையை அக்கரைப்படுத்தான் - நான்கு வேதங்களை ஓரோர் வரம்பிற்கு உட்படுத்தினான்.
அவ்வரம்புகளாவன `அறம், பொருள், இன்பம், வீடு` என்பன.
இவ்வாறு நாற்பொருளைக் கூறும் நான்கு நூல்களே நான்கு வேதங்கள்` எனக் கூறுதல் தமிழ் வழக்கு.
இவைகளால் எல்லாம் இறைத் தன்மையை விதந்தவாறு.
தன் பாதம் சார் - அவனுடைய திருவடிகளையே (நெஞ்சே) புகலிடமாக அடை.

பண் :

பாடல் எண் : 24

சாராவார் தாமுளரேல் சங்கரன் தன்மேனிமேல்
சாராவார் கங்கை உமைநங்கை சார்வாம்
அரவமது செஞ்சடைமேல் அக்கொன்றை ஒற்றி
அரவமது செஞ்சடையின் மேல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``சார்வு`` என்பது முன்னர் இரண்டிடங்களில் இறுதிநிலை கெட்டு, ``சார்`` என நின்றது.
சார் ஆவார் தாம் உளரேல் சங்கரன் எவர் ஒருவர்க்கும் சார்வாக (பற்றுக் கோடாக) ஒருவர் உளர் என்றால் அவர் சிவன் ஒருவனே.
(முன்னர்ப் பொதுவாகக் கூறிப் பின்னர்ச் சிறப்பாக விதந்தமையால் பன்மை ஒருமைகள் மயங்கின.
) அஃது எங்ஙனம் எனின், கங்கையும், உமையும் முறையே அவனது செஞ்சடை மேலும், மேனிமேலும் அவைகளையே சார்வாகப் பற்றித் தங்கள் ஆரவாரத்தை அடக்கியுள்ளனர்.
பாம்பு அவனுடைய செஞ்சடைமேல் கொன்றை மாலையை ஒற்றினாற்போல் உள்ளது.
தனிச்சீரில் உள்ள ``சார்வாம்`` என்பதை இறுதியிற் சேர்க்க.
கங்கையும், உமையும், பாம்பும் அவனையே பற்றுக்கோடாகப் பற்றியுள்ள நிலைமை.
`அனைத்துயிர்கட்கும் பற்றுக் கோடு அவனே` என்பதைக் குறிக்கும் அடையாளங்களாம் - என்பது கருத்து.
``அரவம்`` இரண்டில் முன்னது ஆரவாரம்; பின்னது பாம்பு.

பண் :

பாடல் எண் : 25

மேலாய தேவர் வெருவ எழுநஞ்சம்
மேல்ஆயம் இன்றியே உண்பொழுதின் மேலாய
மங்கை உமைவந் தடுத்திலளே வான்ஆளும்
அங்கை உமைவந் தடுத்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-2ல் - ஆயம் இன்றியே - வேறு ஒருவர் துணை யில்லாமலே `நீர் உண் பொழுதின்` என்க.
இங்ஙனம் உரைத்தற்கு ஏற்ப, முதற்கண் `எங்கள் பெருமானே` என்பதை வருவித்துக் கொள்க.
வான் ஆளும் அம் கை உமை - வானுகலத்தை ஆள்கின்ற அழகிய செய்கையை உடைய உம்மை.
மேலாய மங்கை உமை வந்து அடுத்து `வம்` (என்று தடுத்திலளே; (ஏன்?) `-உம்மை நஞ்சு யாதும் செய்யாது - என்னும் கருத்தினாலோ?` என்பது குறிப்பெச்சம்.
`வம்` என்பது தடுத்தலை உணர்த்தும் குறிப்பு, `என்று` என்பது சொல்லெச்சம் சிவபெருமானது அளவில் ஆற்றலைப் புலப்படுத்ததவாறு.
ஈற்றடி எழுத்தொப்புமை மாத்திரையால் மடக்காயிற்று.

பண் :

பாடல் எண் : 26

அடுத்தபொன் அம்பலமே சார்வும் அதனுள்
அடுத்த திருநட்டம் அஃதே அடுத்ததிரு
ஆனைக்கா ஆடுவதும் மேல்என்பு பூண்பதுவும்
ஆனைக்கா வான்தன் அமைவு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அடுத்த`` மூன்றினுள் முதலது.
`அண்மையில் உள்ள` என்றும், இடையது `ஏற்புடையது` என்றும், இறுதியது, `பொருந்தியுள்ள` என்றும் பொருள் தந்தன.
சார்வு - இருப்பிடம்.
``அஃதே`` என்பதன் பின்னும், `அஃதேயும்` என எண்ணும்மை விரிக்க.
ஆன் ஐ - இடப உருவான தலைவன்; திரு - இலக்குமி.
திருவைப் பொருந்தியுள்ள தலைவன் மாயோன்.
`அவனுக்காக ஆடுவது` என்றது, அவன் மத்தளம் முழக்க அதற்கு ஏற்ப ஆடுதல்.
ஈற்றடியில் உள்ள ஆனைக்கா, தலம் அமைவு - பொருந்திய ஒழுக்கம்.

பண் :

பாடல் எண் : 27

அமைவும் பிறப்பும் இறப்புமாம் மற்றுஆங்
கமைவும் பரமான ஆதி அமையும்
திருவால வாய்சென்று சேராது மாக்கள்
திருவால வாய்சென்று சேர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அமைவு`` இரண்டில் முன்னது உலக வாழ்வு.
பின்னது (உங்கு - பிறப்பையும், இறப்பையும் கடந்த) வீடுபேறு.
பரம் ஆன ஆதி - இவை அனைத்தும் தன்மேலவாகக் கொண்ட முதல்வன்; இறைவன்.
அவன் அமைந்துள்ள திருவாலவாய்த் தலம்` என்க.
மாக்கள் - அறிவிலா மக்கள் திருவால் - செல்வத்தால்; செல்வமாகிய காரணத்தால் அவாய்ச் சென்று சேர் - மேலும் மேலும் அவாவி ஓடி.
அஃது இருக்கும் இடத்தை நாடி அடைதல்.
`இரங்கத் தக்கது` என்பது சொல்லெச்சம்.
சேர் - சேர்தல்; முதனிலைத் தொழிற் பெயர்.
`சேர்வு` என்பதே பாடம் எனினும் ஆம்.
``ஆம், ஆன`` - என்னும் பெயரெச்சங்கள் அடுக்கி, ``ஆதி`` என்னும் ஒரு பெயர் கொண்டன.

பண் :

பாடல் எண் : 28

சென்றுசெருப் புக்கால் செல்ல மலர்நீக்கிச்
சென்று திருமுடிவாய் நீர்வார்த்துச் சென்றுதன்
கண்இடந் தன்றுஅப்புங் கருத்தற்குக் காட்டினான்
கண்இடந் தப்பாமைப் பார்த்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டுக் கண்ணப்ப நாயனாருக்கு அருள் செய்தமையை விளக்குவதாதல் வெளிப்படை.
இதிலும் மடக்கணி வரவில்லை.
`காலால்` என ஆல் உருபை விரித்து ஓதுதல் பாடம் அன்று.
ஈற்றடியில் கண் - மற்றொரு கண்ணை.
இடந்து அப்பாமைப் பார்த்து - இடந்து அப்பாதபடி உற்று நோக்கி, காட்டினான் - தனது மற்றொரு கண்ணும் ஊறு இன்றி விளங்குதலைக் காட்டினான்.
கருத்து- உள்ளம்.
அஃது ஆகுபெயராய் உள்ளத்தின்கண் உள்ள அன்பைக் குறித்தது.
எனவே, ``கருத்தன்`` என்றது `அன்பன்` என்றதாயிற்று.

பண் :

பாடல் எண் : 29

பார்த்துப் பரியாதே பால்நீறு பூசாதே
பார்த்துப் பரிந்தங்கம் பூணாதே பார்த்திட்
டுடையானஞ் சோதாதே ஊனாரைக் கைவிட்
டுடையானஞ் சோதாதார் ஊண்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஊனாரைக் கைவிட்டு`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.
ஊன் - உடம்பு.
கைவிடுதல் - பற்று விடுதல்.
ஊண் - உண்ணும் தொழில்.
இதனை எழுவாயாக வைத்து, ``பரியாது``, ``பூசாது`` முதலியன, `அவைகளைச் செய்யாமலே உண்டாகும்` என்றபடி.
அதனால், `அந்த உணவு நியாயமான உணவா காது, தண்ட உணவாம்` எனக் கடிந்துரைத்ததாயிற்று பார்த்தல் - தக்கதை உணர்தல்.
பரிதல் - அன்பு செய்தல்.
அங்கம் - உடம்பு.
பூணு தற்கு, `கண்டிகை` என்னும் செயப்படுபொருள் வருவிக்க.
அஞ்சு - அஞ்செழுத்து.

பண் :

பாடல் எண் : 30

ஊணொன்றும் இல்லை உறக்கில்லை உன்மாலின்
ஊணென்று பேசவோர் சங்கிழந்தாள் ஊணென்றும்
விட்டானே வேள்வி துரந்தானே வெள்ளநீர்
விட்டானே புன்சடைமேல் வேறு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஊண் என்றும் விட்டானே`` என்பது முதலாகத் தொடங்கி, `இவள் தன்னை` என்பது வருவிக்க.
உன் மாலின் ஊணால், `ஊண் இல்லை; உறக்கு இல்லை;` என ஊரார் பேசும்படி சங்கினை இழந்தாள்` என இயைத்து முடிக்க.
ஏகாரங்கள் விளியுருபு.
`என்றும் ஊண்விட்டான்` என்பது, `அவன் உண்பதும் இல்லை; உறங்குவதும் இல்லை` என்பதைக் குறித்தது.
ஆயினும் தக்கனது அகங்காரத்தை அடக்க வேண்டி அவனது வேள்வியைத் துரந்தான்.
உறக்கு - உறக்கம்.
மால் - மயக்கம்; மையல்.
``மாலின்`` என்னும் இன் வேண்டாவழிச் சாரியை.
`மாலாகிய ஊணால்` என்க.
மையல் ஊணாக உருவகம் செய்யப்பட்டது.
ஓர் - ஒப்பற்ற; சிறந்த இதுவும் தலைவியது ஆற்றாமையைத் தோழி தலைவற்கு உரைத்து வரைவு கடாயது.

பண் :

பாடல் எண் : 31

வேறுரைப்பன் கேட்டருளும் வேதம்நான் காறங்கம்
வேறுரைத்த மேனி விரிசடையாய் வேறுரைத்த
பாதத்தாய் பைங்கண் அரவூர்வாய் பாரூரும்
பாதத்தாய் என்னும் மலர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`எம்பெருமானீர்` என்பது வருவித்து.
``வேறு உரைப்பன் கேட்டருளும்`` என முடிக்க.
வேறு - வேறாக; சிறப்பாக.
உரைக்கப்படும் பொருள் ஈற்றில் உள்ள ``அலர்`` என்பது.
அலர் - பழிச்சொல்.
அஃதாவது தலைவி, ``விரிசடையாய்`` என்றும், ``பாதத்தாய்`` என்றும், ``அரவு ஊர்வாய்`` என்றும் இங்ஙனம் பலவாறு பிதற்றும் பிதற்றுரை அஃது அவர் அருளாமையால் உண்டாவதாகலின் பழியாற்றி.
வேறு உரைத்த - பிற நூல்களினினும் மேலாய்ச் சிறந்து விளங்கச் சொல்லிய.
`மேனிமேல் விரிந்த சடையாய்` என்க.
வேறு உரைத்த பாதம் - ஏனைப் பலரது பாதங்களினின்றும் வேறு பிரித்து வேதாகமங்கள் உயர்த்துக் கூறிய பாதம்.
அவ்வுயர்வாவது, உயிர்களின் பொருட்டு ஐந்தொழிலையும் செய்தல்.
ஈற்றடியில் `பாதத்தாய்` என்பது இடைக் குறைந்து, ``பாதத்தாய்`` என நின்றது.
`அரவு பார் ஊரும் பாதத்ததாய் ஊர்வாய்` என இயைக்க.
ஊர்வாய் - ஊரப்படுவாய்.
என்னும் அலர் - என்று இவள் சொல்கின்ற பழி.
இதுவும் மேலைத் துறை - `அலர்` என்பது சந்தி வகையால் ``மலர்`` என வந்தது.
அவ் எழுத்தெல்லாம் பற்றியே ``மலர்`` என்பது அந்தாதியாயிற்று.

பண் :

பாடல் எண் : 32

மலர்அணைந்து கொண்டு மகிழ்வாய்உன் பாத
மலர்அணைந்து மால்நயன மாகும் மலர்அணைந்து
மன்சக் கரம்வேண்ட வாளா அளித்தனையால்
வன்சக்கர் அம்பரனே வாய்த்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியில் சக்கு, `சக்கர்` எனப் போலியாய் நின்றது.
சக்கு - கண்.
வன் சக்கு - நெருப்புக்கண் அம் பரன் - அழகிய முதல்வன்.
இவ்வாறான ஈற்றடியை முதலிற் கூட்டுக.
மலர் அணைந்து கொண்டு - அன்பர்கள் இடும் மலர்களை மேனிமேல் பொருந்தி ஏற்றுக்கொண்டு.
பாத மலர், உருவகம்.
மால் - திருமால்.
நயனம் ஆகும் மலர் அணைந்து - தனது கண்ணாகிய மலரைச் சாத்தி, `அணிந்து` என்பது எதுகை நோக்கி ``அணைந்து`` எனத் திரிந்து நின்றது.
இனி.
`அணைவித்து` எனினும் ஆம்.
மன் - நிலை பெற்ற.
வாள் - படைக்கலப் பொது.
ஆல், அசை.
`இது போற்றத்தக்க ஒன்று` என்பது குறிப்பெச்சம் ``வாய்த்து`` என்பதை, `வாய்ப்ப` எனத் திரித்து, ``வாளா`` என்பதன்பின் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 33

வாய்த்த அடியார் வணங்க மலரோன்மால்
வாய்த்த அடிமுடி யுங்காணார் வாய்த்த
சலந்தரனைக் கொன்றிட்டுச் சங்கரனார் என்னோ
சலந்தரனாய் நின்றவா தாம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடியார்கள் எளிதில் கண்டு வணங்க, மலரோனும், மாலும் தேடியும் காணாராயினார் என்பதும், `சலந்தரனைக் கொன்றது போலும் மறக்கருணையை உடையன் ஆயினும் கங்கையைத் தலையில் தாங்கியது போலும் அறக்கருணையை உடையன்; என்பதும் கூறியவாறு.
``சலந்தரன்`` இரண்டில் முன்னது ஓர் அசுரன், பின்னது சலத்தை (கங்கையை)த் தரித்தவன்.
`தாம் சலந்தரனாய் நின்றவா என்னோ` என்க.

பண் :

பாடல் எண் : 34

தாம்என்ன நாம்என்ன வேறில்லை தத்துறவில்
தாம்என்னை வேறாத் தனித்திருந்து தாமென்
கழிப்பாலை சேருங் கறைமிடற்றார் என்னோ
கழிப்பாலை சேருங் கடன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கழிப்பாலை`` இரண்டில் முன்னது ஒரு தலம்; சோழநாட்டில் காவிரியின் வடகரையது; கொள்ளிடக் கரையது.
பின்னது, அனைத்தையும் கழித்து நின்ற இடம்; நிலைமை.
தாமென் கழிப்பாலை - அலைகள் தாவுகின்ற ஈர நிலமாகிய திருக்கழிப்பாலை.
தாம் - கறைமிடற்றார்.
நாம் - உயிர்கள்.
தத்து உறவு - ஒருவரை ஒருவர் சார்ந்து நிற்கும் தொடர்பு - `தாமும், நாமும் பொருளால் வேறாயினும், ஒருவரை ஒருவர் சார்ந்து நிற்கும் தொடர்பில் வேறாகாது ஒன்றாவேம்; அஃதாவது, இருமையில் ஒருமையாவேம் என்றபடி.
`அவ்வாறிருக்கவும், அவர் என்னின் வேறாய்த் தனித்திருப்பது, அனைத்தையும் கழித்து நாம் தனியே நின்ற நிலையில் மட்டுமே அடைய நிற்கின்ற கடன் (முறைமை) என்னோ` என்க.
இறைவன் உயிர்களோடு உயிர்க்கு உயிராய் ஒன்றியிருப் பினும் பாசத்தடையால் உயிர்கள் அவனை அடைந்து அவனது இன்பத்தைப் பெறமாட்டாது கிடந்து, பாசத் தடை நீங்கிய பின்பே அவனையடைந்து இன்புறுதலை விதந்தவாறு.

பண் :

பாடல் எண் : 35

கடனாகக் கைதொழுமின் கைதொழவல் லீரேல்
கடல்நாகைக் காரோணம் மேயான் கடநாகம்
மாளவுரித் தாடுவான் நும்மேல் வல்வினைநோய்
மாளவிரித் தாடுவான் வந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கட நாகம் - மதத்தையுடைய யானை.
`காரோணம் மேயானும், ஆடுவானும் ஆகிய பெருமானைத் தொழுமின்; தொழ வல்லிரேல்.
அவன் வந்து உம்முடைய வல்வினை நோய் மாளும்படி இரித்து (ஓட்டி) ஆடும் (உங்களுடன் கலந்து விளங்குவான்.
) என ஏற்குமாறு இயைத்து முடிக்க.
`மேயார், ஆடுவார்` எனப் பன்மை யாகவும்.
`நம்` எனத் தன்மையாகவும் ஓதுவன பாடங்கள் அல்ல.

பண் :

பாடல் எண் : 36

வந்தார் வளைகழல்வார் வாடித் துகில்சோர்வார்
வந்தார் முலைமெலிவார் வார்குழல்கள் வந்தார்
சரிதருவார் பைங்கொன்றைத் தாராரைக் கண்டு
சரிதருவார் பைங்கொன்றத் தார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மூன்றாம் அடி சிவபெருமானைக் குறித்த தொட ராகும்.
சரிதரு - சடையில் நிரம்பி, வெளியேயும் வீழ்கின்ற தார்` என்க.
``தாரார்`` என்றாராயினும் `தாரார் முன்` என விரித்து ``வந்தார்`` என மேலே கூட்டிப் பின், `அவரைக் கண்டு வளைகழல்வார்` என உரைத்தல் கருத்து என்க.
`சுரிதருவார்`, `ஐங்கொன்றை` என்பன பாடம் அல்ல.
வந்தார் - வந்த மகளிர்.
``வந்தார்` என்பன பலவும் சொற்பொருட் பின்வருநிலையணியாய் வந்தன.
இறுதியில், `பைங் கொன்றைத் தார்போலும் வார் குழல்கள் சரிதருவார்` என இயைத்து முடிக்க.
இதன்கண் ``தார்`` என்றது, தார்போலும் காயை.
கொன்றைக் காயை மகளிரது கூந்தலுக்கு உவமையாகக் கூறுதல் வழக்கம்.
பெருமானது திருமேனியழகைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 37

தாரான் எனினும் சடைமுடியான் சங்கரன்அம்
தாரான் தசமுகனைத் தோள்நெரித்துத் தாராய
நாளுங் கொடுத்தந்த வானவர்கள் தம்முன்னே
வாளுங் கொடுத்தான் மதித்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சடை முடியான்; சங்கரன்; அம் தாரான்; (அத் தாரினை இப்பொழுது நமக்குத்) தாரான் எனினும், தசமுகனை முதலில் (சினந்து) தோள் நெரித்துப் பின்பு (நன்கு) மதித்து, அந்த வானவர்கள் தம் முன்னே வாழ்நாளும் கொடுத்துத்தார் ஆய (தூசிப் படையில் ஏற்கத் தக்கதாகிய) வாளும் கொடுத்தான்; (ஆகலின் பின்பு (தருவான்) என இயைத்து முடிக்க.
ஈற்றில் எஞ்சி நின்றது அவாய் நிலை`.
சிவபெருமான் முன்னே முனிந்தானாயினும் பின்னே திருவுளம் இரங்குபவன் என்பது அவன் இராவணனை முன்னே தோள்நெரித்துப் பின்னே அருளியவாற்றால் விளங்கும்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 38

மதியாருஞ் செஞ்சடையான் வண்கொன்றைத் தாரான்
மதியாரும் மாலுடைய பாகன் மதியாரும்
அண்ணா மலைசேரார் ஆரோடுங் கூட்டாகி
அண்ணா மலைசேர்வ ரால்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மதி`` மூன்றில் முதலது பிறை; இறுதியது நிறை நிலா.
இடையது அறிவு.
மால் சிவபிரானைப் பலமுறை வழிபட்டமை பற்றி அறிவு நிறைந்தவனாகக் கூறினார்.
அண்ணாலை - திரு அண்ணாமலை.
ஆரோடும் - மனைவி, மக்கள் முதலிய சுற்றத்தாரும், மற்றும் நண்பரும் ஆகிய யாரோடும்.
கூட்டு ஆகி.
கூடி வாழும் வாழ்க்கையராகி.
அண்ணாமல் - நெருங்காமல்; `வாழ்விழந்து` என்றபடி.
ஐசேர்வார் - மிடற்றில் கோழைவந்து சேரப் பெறுவார்.
ஆல், அசை.

பண் :

பாடல் எண் : 39

ஆல நிழற்கீழ் இருப்பதுவும் ஆய்வதறம்
ஆலம் அமுதுசெயல் ஆடுவதீ ஆலந்
துறையுடையான் ஆனை உரியுடையான் சோற்றுத்
துறையுடையான் சோராத சொல்லு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஆலந்துறை யுடையான் என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
ஆலந்துறை, அன்பில் ஆலந்துறை பாடல் பெறாது வேறு உளவேனும் கொள்க.
`அவனது சொல் சோராதன; பயனளியாது போகாதன.
அவன் இருப்பது ஆல நிழற்கீழ்; ஆய்வது அறம்; அமுது செய்வது ஆலம்.
(நஞ்சு) ஆடுவது தீ` என்க.
`ஆடுவது` என்பது ஈறு குறைந்து நின்றது.
சிவபெருமானது இயல்புகளை விதந்தவாறு.
``இருப்பதுவும்`` என்றாற்போல ஏனையவற்றிலும் இழிவு சிறப்பும்மை - உயர்ந்தவற்றைத் தாழ்ந்தனபோலக் கூறிப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 40

சொல்லாயம் இன்றித் தொலைவின்றித் தூநெறிக்கண்
சொல்லாய்ப் பெருத்த சுடரொளியாய்ச் சொல்லாய
வீரட்டத் தானை விரவார் புரம்அட்ட
வீரட்டத் தானை விரை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சொல் ஆயம் - சொற்கூட்டம்; பலவகை மொழிகள்.
`அவை இன்றி` என்றது, `அவைகளைக் கடந்து` என்றபடி.
சொற்பதத்தார் சொற்பதமும் கடந்து நின்ற சொலற்கரிய சூழலாய் * என அப்பரும் அருளிச் செய்தார்.
தொலைவு - சேய்மை.
சேய்மை யின்றியிருத்தலாவது, `அங்கு, இங்கு` எனாதபடி எங்கும் நிறைந் திருத்தல்.
தூநெறி - வீட்டு நெறி.
அந்நெறிக்கண் உள்ள சொல், நூல்கள் `அவைகளால் ஆயப்படும் பெருத்த சுடரொளி` என்க.
தனிச்சீரில் உள்ள சொல்.
`புகழ் பொருந்திய வீரட்டம்` என்க.
``வீரட்டம்` இரண்டில் முன்னது தலம்.
பின்னது வீர அட்டகாசம்.
அட்டகாசம் - பெருஞ்சிரிப்பு.
ஈற்றடியில் `வீரட்டத்தானை வணங்க` என ஒருசொல் வருவிக்க.
விரை - விரைந்து முயல்.

பண் :

பாடல் எண் : 41

விரையாரும் மத்தம் விரகாகச் சூடி
விரையாரும் வெள்ளெலும்பு பூண்டு விரையாரும்
நஞ்சுண்ட ஆதி நலங்கழல்கள் சேராதார்
நஞ்சுண்ட வாதி நலம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ரை எலும்பு - யாவரும் விரைந்து அப்பால் விலகும் எலும்பு.
தனிச் சீரில், `வீரை` என்பது முதல் குறுகி நின்றது.
வீரை - கடல்.
ஈற்றடியை, `ஆதி நலம் நஞ்சுண்ட` என மாற்றி, `முதற்கண் விதித்த நன்மைகள் மெலிந்தன` என உரைக்க.
முதற்கண் விதித்த நன்மைகள் நல்வினை செய்வார்க்கு வலுப்படுதலும், தீவினை செய்வார்க்கு மெலிவடை தலும் உளவாதல் பற்றி இவ்வாறு கூறினார்.
``சேராதார்`` என்பதில் ஆறாவது விரியாது நான்காவது விரித்தலும் ஆம்.

பண் :

பாடல் எண் : 42

நலம்பாயு மாக்க நலங்கொண்டல் என்றல்
நலம்பாயு மானன் குருவ நலம்பாய்செய்
தார்த்தார்க்கும் அண்ணா மலையா னிடந்
தார்த்தார்க்கும் அண்ணா மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(இப்பாட்டு நிரம்பக் கிடையாமல் ஒரு சீர் விடுபட்டுக் கிடைத்தலால் பொருள் காண்டல் அரிது.
)

பண் :

பாடல் எண் : 43

மலையார் கலையோட வார்ஓடக் கொங்கை
மலையார் கலைபோய்மால் ஆனாள் மலையார்
கலையுடையான் வானின் மதியுடையான் காவாத்
தலையுடையான் என்றுதொழு தாள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-1-ல் மலை ஆர் கலை - மணி வடங்கள் ஒன்றோடு ஒன்று மோதுகின்ற மேகலை.
கொங்கை மலை, உருவகம்.
அதன்மேல் உள்ள கலை, மேலாடை.
மால் - மயக்கம்.
மையல்.
மலை ஆர் கலை - மலைகளில் வாழ்கின்ற மான்.
வானின், கலை, பிறை.
`தலைகளைக் காவாக உடையான்` என்க.
கா -தோளில் சுமக்கப்படும் பொருள்.
இதுவே, `காவடி` என வழங்குகின்றது; ``கலையுடையான்`` என்பன முதலியவற்றைச் சொல்லி அவனைத் தொழுதாள்; அதன் பயனா மால் ஆனாள்` - என்க.
இதுவும் தலைவியது ஆற்றாமை கண்டு தோழி அஞ்சி உரைத்தது.

பண் :

பாடல் எண் : 44

தாளார் கமல மலரோடு தண்மலரும்
தாள்ஆர வேசொரிந்து தாமிருந்து தாளார்
சிராமலையாய் சேமத் துணையேஎன் றேத்தும்
சிராமலையார் சேமத் துளார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியில் உள்ள சிராமலை - திருச்சிராப்பள்ளிக் குன்று.
அதன் கண் உள்ள இறைவர் யாவர்க்கும் நன்மைதர இருக் கின்றார்.
சேமம் - நன்மை.
``தாள்`` மூன்றில் முதலது தாமரைத் தண்டு; இடையது திருவடி.
ஈற்றது, முயற்சி.
சிரம் அலையாய் - சிரசிலே நீரில் அலையைத் தாங்கியுற்றவனே.
சேமத் துணையே எய்ப்பில் வைப்புப் போல உதவ இருப்பவனே.
`தாளார் (வீடு அடைய முயல்பவர்) ஏத்தும் சிராமலையார்` என்க.

பண் :

பாடல் எண் : 45

ஆர்துணையா ஆங்கிருப்ப தம்பலவாஅஞ்சொலுமை
ஆர்துணையா ஆனை உரிமூடின் ஆர்துணையாம்
பூவணத்தாய் பூதப் படையாளி பொங்கொளியாய்
பூவணத்தாய் என்னின் புகல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அம்பலவா! ஆர்துணையாம் பூவணத்தாய்! பூதப் படையாளி! பொங்கொளியாய்!`` என்பன விளி.
ஆர் துணையாம் - யாவர்க்கும் நிறைந்த துணையாகின்ற பூவணம், பாண்டி நாட்டுத் தலம், ``அம் சொல் உமை `பூவணத்தாய்` எனின் - `பூப்போலும் தன்மையை தாய் என்றல்.
(நீ) யார் - யாரும்.
உமமை தொகுத்தல்.
துணையா - நிகராகாதபடி.
(யானையை உரிப்பார் வேறு ஒருவர் இல்லை.
) ஆனை உரி மூடின் - யானைத் தோலை உரித்து மூடிக்கொண்டால்,ஆங்கு ஆர் துணையா இருப்பது - அவள் (உமை) அப்பொழுது யாரைத் துணையாகப் பற்றி அஞ்சாமல் இருப்பது? சிவபிரான் யானையை உரித்த பொழுது உமை அஞ்சி அகன்றாள்` என்பது புராண வரலாறு.
புகல் - சொல்லு.
`மூடி` என்பது பாடம் அன்று.

பண் :

பாடல் எண் : 46

புகலூர் உடையாய் பொறியரவும் பூணி
புகலூர்ப் புனற்சடையெம் பொன்னே புகலூராய்
வெண்காடா வேலை விட முண்டாய் வெள்ளேற்றாய்
வெண்காடா என்பேனோ நான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``புகலூர்`` மூன்றில் முதலது திருப்புகலூர்த் தலம்.
பொறி - படத்தில் உள்ள புள்ளிகள்.
இடையது - புகுதலையுடைத் தாய்ப் பொங்குகின்ற புனல் என்க.
இறுதியது யாவரும் சிறப்பித்துச் சொல்கின்ற கயிலாயம்.
அதனை, ``ஊர்க்கோட்டம்`` என்ற சிலப்பதி காரத்தாலும் உணர்க.
``வெண்காடு`` இரண்டில் முன்னது சோழ நாட்டுத் தலம்.
பின்னது, சாம்பலால் வெண்மையைப் பெற்ற சுடுகாடு.
``புகலூர் உடையாய்.வெள்ளேற்றாய்! உன்னை நான் சுடுகாட்டில் ஆடுபவன்` என்று இகழ்வேனோ என்க.

பண் :

பாடல் எண் : 47

நானுடைய மாடே என்ஞானச் சுடர்விளக்கே
நானுடைய குன்றமே நான்மறையாய் நானுடைய
காடுடையாய் காலங்கள் ஆனார் கனலாடும்
காடுடையாய் காலமா னாய்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நானுடைய`` மூன்றும் சொற்பொருட் பின்வரு நிலை யணியாயே வந்தன.
``காடு`` இரண்டில் முன்னது, ``நானுடைய காடு`` என்றதனால் வினைக்காடாயிற்று.
பின்னது, ``கனலாடுங் காடு`` என்றதனால் முதுகாடாயிற்று.
காலங்கள் ஆனார் - தம் தம் காலம் முடியப் பெற்றார்.
`நானுடைய மாடே` என்பன முதலான விளிகள் பலவற்றையும் முன்னே வைத்து, `வினைக் காட்டை உடைத்தெறி வாயாக` என முடிக்க.
மாடு - செல்வம்.

பண் :

பாடல் எண் : 48

ஆயன் றமரர் அழியா வகைசெய்தான்
ஆயன் றமரர் அழியாமை ஆயன்
திருத்தினான் செங்கண் விடையூர்வான் மேனி
திருத்தினான் சேதுக் கரை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-1-ல் ஆயன், நந்தகோபன்.
அவனுடைய தமரர்(சுற்றத்தார்) அழியா வகை செய்தான் - இந்திரன் பெய்வித்த கல்மழையால் அழியாதபடி வகை செய்து காத்தலின்.
பின்னொரு காலத்தில் இவ்வாறு செய்தவனாகிய திருமால்.
அன்று - முன் ஒரு காலத்தில் அமரர் ஆய் அழியாமையாய் - தேவர்கள் நலம் பெற்று, இராவணனால் அழியாமைப் பொருட்டு முன்னின்று.
`அழியாமைக்கு` என உருபு விரிக்க.
(அவனை அழித்து) இருத்தினான் - இருக்கச் செய்தான்.
அவன் அன்றே விடை ஊர்வானது திருமேனியை (சிவ லிங்கத்தை) சேதுக் கரையில் திருத்தினார்.
(செம்மையாக நிறுவி வழிபட்டான்.
) இராமேச்சரத் தலத்தின் சிறப்புணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 49

கரையேனும் மாதர் கருவான சேரும்
கரையேனும் ஆது கரையாம் கரையேனும்
கோளிலியெம் மாதி குறிபரவ வல்லையேல்
கோளிலியெம் மாதி குறி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-1-ல் `கரேணுவும்` என்பது ``கரையேனும்`` என மருவி நின்றது.
கரேணு - யானை.
அடி-2ல் முதற்கண் கரை, எதுகை நோக்கித் திரிந்த கறை; அதன் பொருள் `அழுக்கு` என்பது.
இரண்டாவது கரையாம் - சொல்ல மாட்டோம்; `சொல்ல வேண்டுவ தில்லை` என்பதாம்.
அதற்குமுன் `அது` என்னும் சுட்டுப் பெயர் நீண்டு, ``ஆது`` என வந்தது.
யானையாயினும், மாதரது கருப்பைகள் அழுக்குப் பொருளாயினும்; சேரும் - அதன்கண் சேர்ந்துதான் பிறக்கும்.
அது கரையாம் - அதனை நாம் செய்ய வேண்டுவதில்லை.
யானை தெய்வத் தன்மையுடைய உயிராகக் கருதப்படுவதுடன் பெரிய உருவத்தையும் உடையது.
ஆயினும் அது பிறப்பது, என்றால் கருப் பையுள் வீழ்ந்து கிடந்துதான் பிறக்கவேண்டும்.
(ஆகவே, எத்துணைத் தூயோரும், பெரியோரும் `பிறப்பது` என்றால் கருவில் வீழ்ந்து யோனிவாய்ப் பட்டுத்தான் பிறக்கவேண்டும்.
அதனால் அதனை நீ வெறுத்தல் உண்மையாயின்.
கோளிலி எம் ஆதிதன் குறி (இலிங்கம்) கரையேனும் - எல்லைக்குட்பட்ட சிறுபொருளாயினும் (அதன் பெருமையை உணர்ந்து அதனை நீ) பரவவல்லையேல், (நீ) கோள் இலி எம் ஆதி குறி - குற்றம் இல்லாதவனாகிய எம் முதல்வனாம் சிவபெருமானால் குறிக்கப்படும் பொருளாவை.
`பிறவிக் கடலினின்றும் எடுக்கப்படுவை` என்றபடி.
இறுதிக்கண் `ஆவை`` என்னும் பயனிலை எஞ்சிநின்றது.
கோளிலி, சோழநாட்டுத் தலம்.

பண் :

பாடல் எண் : 50

குறியார் மணிமிடற்றுக் கோலஞ்சேர் ஞானக்
குறியாகி நின்ற குணமே குறியாகும்
ஆலங்கா டெய்தா அடைவேன் மேல் ஆடவரம்
ஆலங்கா டெய்தா அடை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``குறி`` மூன்றில் முதலது, உடம்பில் உளதாகின்ற `மச்சம்` என்னும் அடையாளம்.
`சிவபெருமான் திருமேனி முழுதும் சிவந்திருக்க, மிடற்றில் மட்டும் உள்ள நஞ்சுக்கறை மச்சம்போல உள்ளது` என்றபடி.
இடையது அடையாளம்.
`கறை மிடற்றோடு கூடிய திருமேனி ஞானத்தின் அடையாளமாய் உள்ளது` என்றபடி.
அவ்வாறாகி நின்ற குணமாவது அருள்.
தனிச்சீரில் உள்ள குறி, திருமேனி, ஆலங்காடு, `திருவாலங்காடு` என்னும் தலம்.
``எய்தா`` இரண்டு, `எய்தி` என்னும் பொருட்டாய வினையெச்சம்.
ஈற்றில் ஆல் - ஆலம் விழுது.
`ஆட` என்பதில் ஈற்று அகரம் தொகுக்கப்பட்டது.
`எம்பெருமானே` என்பதை முதற்கண் வருவித்து, `நீ ஞானக் குறியாகி நின்ற குணமே குறியாகியுள்ள ஆலங்காடு என்று நான் அடைவேன்.
நீ ஆடு அரவங்கள் உன் மேல் ஆலம் விழுது போல அங்கு ஆட என்முன் வந்து அடை` என முடிக்க.
`உனது திருக்காட்சியைத் தந்தருள வேண்டும்` என வேண்டியவாறு.

பண் :

பாடல் எண் : 51

அடையும் படைமழுவும் சூலமும் அங்கி
அடையும் பிறப்பறுப்ப தானால் அடைய
மறைக்காடு சேரும் மணாளர்என்பாற் சேரார்
மறைக்காடு சேர்மக்கள் தாம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சிவபெருமான் மழுப்படையையும், சூலப் படையையும், நெருப்பையும் ஏந்தியிருத்தல் தன்னை அடைந்தாரது பாசத்தை போக்குமாற்றால் அவர்களது பிற்பை நீக்குங் குறியாய் இருக்கவும், (நல் ஊழ் இன்மையால்) பிறந்து இறப்பவராகிய மக்கள் `திருமறைக்காட்டில் எழுந்தருளியிருக்கும் அழகர்` எனப்படுகின்ற அவரை அடைய மாட்டார்கள்.
(`வேறு எங்கெல்லாமோ சென்று அடைவார்கள்` என்றபடி.
) ஈற்றடியில் உள்ள ``மறைக்காடு`` - இடு காடு.

பண் :

பாடல் எண் : 52

தாமேய ஆறு சமய முதற்பரமும்
தாமேய ஆறு தழைக்கின்றார் தாமேல்
தழலுருவர் சங்கரவர் பொங்கரவம் பூண்ட
தழலுருவர் சங்காரர் என்பார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தாம் மேய ஆறு சமய முதல் பரமும் - சமயிகள் பலரும் அவரவர் விரும்பிய ஆறு சமயங்கட்கும் முதல்வர்களாய் உள்ள கடவுளர் பலரும்.
(`பரம்` என்பது ஆரியச் சொல்லாயினும் தமிழில் வடசொல்லாய், சொல் வகையால் அஃறிணை இயற்பெயராய், இங்கு பன்மை குறித்து நின்றது.
) தாம் ஏய ஆறு தழைக்கின்றார்- சிவபெருமானால் ஏவியவாற்றானே பெருமை பெற்று விளங்கு கின்றனர்.
(`தொழிற் கடவுளர் பலரும் உயிர் இனத்தவர் ஆதலின் அவர் யாவரும் சிவபெருமானது திருவருளானே கடவுள் தன்மை பெற்று அதிகாரத்தில் உள்ளனர்` என்றபடி.
) தாமேல் - இனி அவரோ (சிவபெருமானாரோ) என்றால்.
தழுவல் உருவர் - (`தழுவல்` என்பது உகரங்கெட்டு, `தழல்` என நின்றது,) உமாதேவியால் தழுவப்பட்ட உருவத்தையுடையவர்.
(`அருளாகிய சத்தியோடு கூடியவர்` என்றபடி.
) சங்க அரவர் (`சங்க` என்னும் அகரம் தொகுக்கப்பட்டது.
) அமரரும், அடியவரும் ஆகிய குழாத்தின் துதி ஆரவாரத்தை உடையவர்.
தழல் உருவர் - நெருப்புப் போலும் திருமேனியையுடையவர்.
என்பார் - எனப்படுவார்.

பண் :

பாடல் எண் : 53

பார்மேவு கின்ற பலருருவர் பண்டரங்கர்
பார்மேவு கின்ற படுதலையர் பார்மேல்
வலஞ்சுழியைச் சேர்வர் மலரடிகள் சேர்வார்
வலஞ்சுழியைச் சேரவரு வார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பார்`` மூன்றில் முதலது பல உலகங்கள்.
அவை களில் மேவும் பலராவர் மக்கள், அசுரர், இராக்கதர், நரகர், தேவர், உருத்திரர் முதலியோர்.
கலப்பினால் அவர்களேயாய் நிற்பார்` என்றவாறு.
இடையது, வாழ் நிலம், ஈற்றது, நிலவுலகம்.
வலஞ்சுழி, சோழ நாட்டுத் தலம்.
ஈற்றடியில் வலம் சூழி - வெற்றியாகிய வட்டம்.
மூன்றாம் அடியில் உள்ள ``வலஞ்சுழியைச் சேர்வார்`` என்பதனை எழுவாயாக்கி, முதலிற் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 54

வாரணிந்த கொங்கை உமையாள் மணவாளா
வாரணிந்த கொன்றை மலர்சூடி வாரணிந்த
செஞ்சடையாய் சீர்கொள் சிவலோகா சேயொளியாய்
செஞ்சடையாய் செல்ல நினை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி -2-ல் வார் அணிந்த - நீளமாகத் தொடுக்கப் பட்ட.
தனிச்சீரில் உள்ள வார் - நீர்.
ஈற்றடியில் சடை - வேர்.
`எப் பொருட்கும் செவ்விய வேராய் உள்ளவனே` என்க.
செல்ல நினை - நின் அடியார்களைக் கடைபோக நினை; `இடையிலே மறந்து விடாதே` என்றபடி.
``கடையவனேனைக் கருணையினாற் கலந்து ஆண்டுகொண்ட விடையவனே, விட்டிடுதி கண்டாய்`` * என மாணிக்கவாசகரும் விண்ணப்பித்துக் கொண்டார்.

பண் :

பாடல் எண் : 55

நினைமால் கொண்டோடி நெறியான தேடி
நினைமாலே நெஞ்சம் நினைய நினைமால்கொண்
டூர்தேடி யும்பரால் அம்பரமா காளாஎன்
டூர்தேடி என்றுரைப்பான் ஊர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-2-ல் ``மாலே`` என்றது சிவனை விளித்ததே.
மால் - பெரியோன்.
இப்பெயர் இடுகுறியாய்த் திருமாலைக் குறிப்ப தாயினும் காரணங் கருதியவழி பெருமையுடையோர் பலரையும் குறிப்பதே.
இதனை முதற்கண் கொண்டு உரைக்க.
அடி-1-ல் நினை மால் - (உன்னையே) நினைத்தலால் உண்டாகிய மையல்.
நெறி - உன்னை அடையும் வழிகள்.
`நெஞ்சம் நினை நினைய` என்க.
``நினை மால் கொண்டு`` எனப் பின்னுங் கூறியது, அடி-1-ல் கூறியதை மீட்டும் கூறிய அனுவாதம்.
அடி-3-ல் `ஊர் ஊர்` என்னும் அடுக்குக் குறைந்து நின்றது.
உம்பர் ஆர் - தேவர்கள் நிறைந்த.
அம்பர் மாகாளம்.
சோழ நாட்டுத் தலம்.
என் ஊர் தேடி - எனது ஊரைத் தேடி வந்தவனே.
`என்று இவள் உனது ஊரை (அம்பர் மாகாளத்தை)ச் சொல்வாள்` என்க.
இதில் பாடங்கள் பல திரிபுபட்டன.
இதுவும் தலைவியது ஆற்றாமை கண்டு செவிலி தலைவனை எதிர்பெய்து கொண்டு கூறியது.

பண் :

பாடல் எண் : 56

ஊர்வதுவும் ஆனேறு உடைதலையில் உண்பதுவும்
ஊர்வதுவும் மேல்லுரகம் ஊடுவர்கொல் ஊர்வதுவும்
ஏகம்பம் என்றும் இடைமருதை நேசத்தார்க்
கேகம்ப மாய்நின்ற ஏறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இடை மருதை நேசத்தார்க்கே - திருவிடை.
மருதூரை விரும்பும் விருப்பம் உடைய இறைவற்கே.
ஏகாரம் தேற்றம் இதனை முதலிற் கொண்டு, ``என்றும்`` என்பதை இதன்பின் கூட்டுக.
`உண்பதுவும் உடைதலையில்` என மாற்றுக.
`மேல் ஊர்வதும் ஊரகம்` என்க.
ஊடுதல், இங்கே வெறுத்தல்.
ஊடுவர்கொல் - இவைகளை வெறுப்பாரோ! வெறார் (ஆயினும்) ஏறு - ஆண் சிங்கம் நரசிங்கம்.
கம்பமாய் நின்றது - நடுக்கம் உடையதாய் நின்றுவிட்டது.
``நேசத்தார்க்கே`` என்னும் ஏகாரத்தால், `இவ்வாறு மிக எளியாராய்க் காணப்படுகின்றவர்க்கே` என, அவரது ஆற்றல் மிகுதி விளக்கப் பட்டது.
திருமால் கொண்ட நரசிங்க அவதாரத்தைச் சிவபெருமான் சரபமாய்த் தோன்றி அழித்தமை புராணங்களில் காணப்படுவது.

பண் :

பாடல் எண் : 57

ஏறேய வாழ்முதலே ஏகம்பா எம்பெருமான்
ஏறேறி யூரும் எரியாடி ஏறேய
ஆதிவிடங் காகாறை கண்டத்தாய் அம்மானே
ஆதிவிடங் காஉமைதன் மாட்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-1-ல் ஏறு ஏய - தேவர்களில் ஆண்சிங்கம் போல `வாழ்கின்ற முதலே` என்க.
தனிச்சீரில் ஏறு ஏய - உயர்வு பொருந்தக் `காறையை அணிந்த கண்டத்தை உடையவனே` என்க.
காரை - கழுத்தணி; அது விடக் கறையைக் குறித்தது.
`அண்டத்தாய்` என்பது பாடம் அன்று.
அடி-3-ல் ``ஆதிவிடங்கா`` என்பதைக் ``கண்டத்தாய்`` என்பதன் பின்னர்க் கூட்டுக.
ஆதி விடங்கன் முதற்கண் தோன்றிய சுயம்பு மூர்த்தி.
`ஆதி விடம் உமைதன் மாட்டுகா` என இயைத்து, `முற்காலத்தில் நீ உண்ட நஞ்சினை உமைக்குத் துன்பம் நேராதவாறு காப்பாற்று` என உரைக்க.

பண் :

பாடல் எண் : 58

மாட்டும் பொருளை உருவு வருகாலம்
வாட்டும் பொருளை மறையானை மாட்டும்
உருவானைச் சோதி உமைபங்கார் பங்காம்
உருவானைச் சோதி உரை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-1-ல் மாட்டும் பொருள் - எல்லாம் வல்ல பொருள் .
உருவு வருகாலம் - பிறப்பு வருங்காலம், அடி-2-ல் மாட்டும் பொருள் - அந்தப் பிறப்பிலே சேர்க்கும் பொருள்.
மாட்டும் உரு - நெருப்புப் போல விளங்கும் திருமேனி.
நெருப்பை வளர்த்தலை `மாட்டுதல்` என்றல் வழக்கு.
சோதி உமை - அழகிய உமாதேவி.
அடி-4-ல் உரு - திருமேனி, சோதி - (மனமே, நீ) ஆராய்; எண்ணு.
உரை - துதி.

பண் :

பாடல் எண் : 59

உரையா இருப்பதுவும் உன்னையே ஊனில்
உரையாய் உயிராய்ப் பொலிந்தாய் உரையாய
அம்பொனே சோதி அணியாரூர் சேர்கின்ற
அம்பொனே சோதியே ஆய்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உரையா - உரைத்து; துதித்து.
ஊனில் உரையாய் - உடம்பினின்றும் எழுகின்ற சொல்லாய்.
உரையாய அம்பொன் - மாற்று உரைக்குப் பொருந்திய அழகிய பொன்.
இதன்பின் உள்ள `சோதி` என்பதை இறுதியிற் கூட்டுக.
அடி-4-ல் அம் பொன் - அழகிய இலக்குமி.
ஏ சோதியே - ஏவிய ஒளிவடிவானவனே.
ஏவுதல் - இங்கு, வாழ விடுதல், திருவாரூர், இலக்குமி, வழிபட்ட தலமாகும்.
ஆய்ந்து சோதி - எனது உயிரை அலசித் தூய்மை செய்.

பண் :

பாடல் எண் : 60

ஆய்ந்துன்றன் பாதம் அடைய வரும்என்மேல்
ஆய்ந்தென்றன் பாச மலமறுத் தாய்ந்துன்றன்
பாலணையச் செய்த பரமா பரமேட்டி
பாலணையச் செய்த பரம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடைய - அடைவதற்கு.
வரும் - விரும்பி வருகின்ற.
என்மேல் ஆய்ந்து - என்னிடத்துப் படிந்துள்ள குற்றங்களை ஆராய்ந்து, அக்குற்றமாகிய, கட்டாம் மலங்களை அறுத்து.
`ஆய்ந்து அளைய` என இயையும்.
பரமேட்டடி - முன்னோனாகிய இறைவன்.
அடி-4-ல் பால் - ஊழ்; வினை - அணைய - அழியும் படி.
பரம் - உனது கடமை `நன்று` என ஒரு சொல் வருவித்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 61

பரமாய பைங்கண் சிரம்ஏயப் பூண்ட
பரமாய பைங்கண் சிரமே பரமாய
ஆறடைந்த செஞ்சடையாய் ஐந்தடைந்த மேனியாய்
ஆறுஅடைந்த செஞ்சடைஆய் அன்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பரம்`` மூன்றில் முதலது சுமை.
இடையது பரம் பொருள்.
இறுதியது மேன்மை.
முதற்கண் உள்ள ``பைங்கண் சிரம்``, இறந்தாரது குழிந்தாழ்ந்த கண்களையுடைய தலை.
`அவைகளை ஏய (பொருந்த)ப் பூண்ட ``சிரமே`` என இயைக்க.
இச் சிரம் - தலைமை இரண்டாம் அடியில் உள்ள.
``பரமய சிரமே`` என்பதற்கு.
`பரம் பொருளாக மதிக்கப்படுபவருள் தலையாயவனே` என உரைக்க.
சிவபெருமானுடைய கண்கள் திங்களும், ஞாயிறுமாய் நிற்றல் பற்றி, `பைங்கண்` எனப்படுதல் உண்டு.
பரமாய ஆறு - மேலான நதி; ஆகாய கங்கையை.
ஐந்து அடைந்த மேனி - `அயன், அரி, அரன், மகேசுரன், சதாசிவன்` என்னும் மூர்த்தங்கள்.
``அன்பு`` என்பதை `என் அன்பு` எனக்கொண்டு, ஆறு அடைந்த செஞ்சடையை ஆய் - `முறைப்படி உன்னை வந்து பற்றிய செவ்விய மூலத்தை ஆராய்` என உரைக்க.
சடை - வேர்; மூலம்.
`ஆராய்` என்றது.
`ஆராய்ந்து அருள்செய்` எனத் தன் காரியம் தோற்றி நின்றது.

பண் :

பாடல் எண் : 62

அன்பே உடைய அரனே அணையாத
அன்பே உடைய அனலாடி அன்பே
கழுமலத்துள் ஆடுங் கரியுரிபோர்த் தானே
கழுமலத்து ளாடுங் கரி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-1-ல் `அந்` என்னும் வடசொல் `அன்` எனத் திரிந்து, அச்சத்தைக் குறிக்கும் `பே` என்பதை அடுத்து நின்றது அன்பே உடைய அரன்.
வேண்டாத அச்சத்தையுடைய உருத்திரன்.
வேண்டாத அச்சமாவது, கொடுமை நன்மையாதலை உணராமையால் கொள்கின்ற அச்சம்.
இஃது உயிர்கள்பால் உள்ளது.
அணையாத - நெருங்கக் கூடாத.
வன்பேய் - வலியபேய்களை.
அன்பே உடைய - சுற்றிலும் கொண்ட அடி-3-ல் கழுமல் - நிறைதல்.
அன்பே கழுமலத்துள் - அன்பே நிறைந்துள்ள உள்ளங்களில்.
ஆடும் - நடனம் புரிகின்ற.
ஈற்றடியில் உள்ள கழுமலம் - சீகாழி.
ஆடும் கரி - பொருந்தியுள்ள சான்று.
உயிர்களின் செயல்கள் அனைத்திற்கும் சான்று.
`அரனும், அனலாடியும், கரியுரி போர்த்தானும் ஆகிய அவனே கரி` எனற்பாலதனை, ``கழுமலத்துள் ஆடும் கரி`` எனச் சிறப்பித்துக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 63

கரியார்தாம் சேருங் கலைமறிகைக் கொண்டே
கரியார்தாஞ் சேருங் கவாலி கரியாகி
நின்ற கழிப்பாலை சேரும் பிரான் நாமம்
நின்ற கழிப்பாலை சேர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கரியார்`` இரண்டில் முன்னது, `குற்றம் உடையவர்` என்னும் பொருட்டாய்த் தாருகாவன முனிவரைக் குறித்தது.
பின்னது `சான்றாவார்` என்னும் பொருட்டாய்ச் சான்றோரைக் குறித்தது.
முதல் அடியில் `சேர்த்தும்` என்னும் பிறவினைச் சொல் பிறவினை விகுதி தொகுக்கப்பட்டு, `சேரும்` என வந்தது.
கலை மறி - மான் கன்று.
தனிச்சீரில் உள்ள ``கரி`` - சான்று.
``கழிப்பாலை`` இரண்டில் முன்னது சோழநாட்டுத் தலம்.
பின்னது, ``உன்னிடத்தில் உள்ள குற்றங்களை நீக்கும் பான்மையால்`` என்றபடி.
ஐ, சாரியை.
``சேர்`` என்பதற்கு.
`நெஞ்சே, நீ` என்னும் எழுவாய் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 64

சேரும் பிரான்நாமம் சிந்திக்க வல்லீரேல்
சேரும் பிரான்நாமஞ் சிந்திக்கச் சேரும்
மலையான் மகளை மகிழ்ந்தாரூர் நின்றான்
மலையான் மகளை மகிழ்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``சேரும் பிரான்` இரண்டில் முன்னது, யாவராலும் அடையப்படும் கடவுளாகிய சிவபெருமானைக் குறித்தது.
பின்னது, `யாவரும் வந்து வணங்குகின்ற தலைவன்` எனப் பொருள் தந்தது.
இதன்பின் `என்னும்` என்னும் பண்பு உருபு விரிக்க.
`சிவபிரானுடைய பெயரைச் சிந்தித்தால் யாவராலும் வணங்கப்படும் தலைமைப் பதவி கிடைக்கும்` என்றபடி.
``சித்திக்க`` இரண்டில் முன்னது `நீவிர் சிந்தித்தால்` எனவும், பின்னது, `யாவரும் நினைக்கும்படி` எனவும் பொருள் தந்தன.
`அவ்வாறு சிந்திப்பதற்கு அவன் யாண்டுறைவன்` எனின், ``ஆரூர் நின்றான்`` என முடிக்க.
உமை, கங்கை இருவருமே மலையரையன் மகளிர் ஆதலின் மலையரையன் இரண்டும் தனித் தனி அவருள் ஒவ்வொருவரைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 65

மகிழ்ந்தன்பர் மாகாளஞ் செய்ய மகளிர்
மகிழ்ந்தம் பரமாகி நின்றார் மகிழ்ந்தங்கம்
ஒன்றாகி நின்றபங்கர் ஒற்றியூர்
ஒன்றாகி நின்ற உமை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மா காளம் - பெரிய `எக் காளம் என்னும் சின்னம்.
செய்ய - அதனை ஊத; `நீர் புறப்பட்டு வர` என்றபடி.
அம்பரம் - ஆகாயம்; வெளி `வெளியாகி நின்றார்` என்பது.
`ஆடையிழந்து நின்றார்` என்பதாம்.
அங்கம் - உடம்பு.
``உமை பங்கர்`` என்பது அண்மை விளி.
ஈற்றடியில் உள்ள ``ஒன்றாகி`` என்பது `ஒன்றுதல் உடையீராகி` என்றபடி.
உமை - உம்மை `உம்மை அன்பர் மகிழ்ந்து` என மேலே கூட்டுக.
`உமது உலாவில் மகளிர் பலர் உம்மைக் கண்டு மையல் கொண்டனர்` எனப் பெருமானது அழகைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 66

உமைகங்கை என்றிருவர் உற்ற உணர்வும்
உமைகங்கை என்றிருவர் காணார் உமைகங்கை
கார்மிடற்றம் மேனிக் கதிர்முடியான் கண்மூன்று
கார்மிடற்றம் மேனிக் கினி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-2-ல் உம்மை.
``உமை`` என இடைக் குறைந்து நின்றது.
உம்மை - முன் ஒரு காலத்தில்.
இருவர், அயனும் மாலும், அடி-2ல், கங்கு ஐ என்று - எல்லையுட்பட்ட நம்மைப் போலும் ஒருதலைவன்` எனக் கருதினமையால்.
அடி-4-ல் கார்மிடல் தம் மேனிக்கு - கரியதும் வலியதும் ஆகிய தங்கள் உடம்பினிடத்தே கரியமேனி திருமாலுடையது.
இனி - இனிக்கும் பொருளாக.
உமை, தனிச் சீரில் உ - சிவனது.
மை - யாவரும்.
`குற்றம்` எனக் கருதுகின்ற.
கம் கை - தலையை ஏந்திய கைகையும் கார் மிடற்று அம் மேனிக் கதிர் முடியான் கண் மூன்றும் - நீல கண்டத்தையுடைய அழகிய திருமேனியையும், ஒளி பொருந்திய சடை முடியையும் உடைய அவனது மூன்று கண்களையும் அடி-1 -ல் உமை, கங்கை என்ற இருவர் உற்ற உணர்வும் பொருந்தியுள்ள அன்பையும்.
காணார் - அறியாராயினர்.
`தம் மேனியில் அறியார் ஆயினர்` என்றதனானே `வேற்றுரு எடுத்தும் கண்டிலர்` என்பது குறிக்கப் பட்டது.
`இனிப்பு` என்பது இறுதிநிலை குன்றி முதனிலை மாத்திரமாய் நின்றது.

பண் :

பாடல் எண் : 67

இனியவா காணீர்கள் இப்பிறவி எல்லாம்
இனியவா ஆகாமை யற்றும் இனியவா
றாக்கை பலசெய்த ஆமாத்தூர் அம்மானை
ஆக்கை பலசெய்த அன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``இனியவா காணீர்கள்`` என்பதை இறுதிக்கண் கூட்டுக.
`இப்பிறவியில்` என ஏழாவது விரிக்க.
இனி - இனிமேலும்.
அவா ஆகாமை - ஆசை வளராமல், ஆக்கை பல - பலவகையான பிறப்புக்களை, இனியவாறு செய்த - நல்ல வகையில் படைத்த.
ஆக்கை பல செய்த அன்று அம்மானை இனியவா காணீர்கள் - உங்களுடைய உடம்பு வலுவாயிருந்து பல செயல்களை விரும்பியவாறே செய்த இளமைக் காலத்தில் பெருமானை நல்லவராகா அறிந்து வழிபாடும் செய்யாது விட்டீர்கள்.
`இன்று இரங்கி என் பயன்` என்பது குறிப்பெச்சம்.
இப்பாட்டிற்கு, `உலகீர், நீவிர்` என எழுவாய் வருவித்துக் கொள்க.
ஆமாத்தூர், நடுநாட்டுத் தலம்.

பண் :

பாடல் எண் : 68

அன்றமரர் உய்ய அமிர்தம் அவர்க்கருளி
அன்றவுணர் வீட அருள்செய் தான் அன்றவுணர்
சேராமல் நின்ற அடிகள் அடியார்க்குச்
சேராமல் நின்ற சிவம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அன்று அவுணர் - பகைத்த அசுரர்; திரிபுரத்தவர்.
வீட - அழிய.
அருள், மறக் கருணை.
தனிச்சீரில், `உணர்வு` என்பது, ``உணர்`` என முதல் நிலையளவாய் நின்றது.
உணர்வு அன்றச் சேராமல் நின்ற அடிகள் - அறிவு மாறு பாடாச் செல்லாதபடி செவ்வே நிற்கின்ற பெருமான்; ஈற்றடியிலும், `சேர்வு` என்பது, ``சேர்`` என முதனிலையளவாய் நின்றது.
மல் - வளம்.
மங்கலம் அடியார்களுக்குச் சேர்வாக (ப்புகலிட மாக) மங்கலம் நிலைபெற்ற சிவம் என்க.
அமரர்க்கு அருளித் திரிபுரத்தவர்க்கு மறக் கருணையே செய்தவனும், யாவர்க்கும் அவரது அறிவு கோட்டம் அடையாதபடி செம்மையனாய் நிற்கின்றவனும் ஆகிய பெருமான் அடியார்கட்குப் புகலிடமாய் நிற்கின்ற சிவமாய் உள்ளான்` என்க.

பண் :

பாடல் எண் : 69

சிவனந்தஞ் செல்கதிக்கோர் கண்சேர்வ தாக்கும்
சிவனந்தஞ் செல்கதிக்கோர் கண்ணாம் சிவனந்தம்
சேரும் உருவுடையீர் செங்காட் டங்குடிமேல்
சேரும் உருவுடையீர் செல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-1-ல் அந்தம் செல்கதிக்கு - முடிவில் அடையக் கூடிய கதிக்கு; முத்திக்கு.
ஓர் கண் - ஒப்பற்ற கண்; முத்தி நெறிக்கு ஒப்பற்ற கண்ணாவது ஞானம்.
`சேர்வதை ஆக்கும்` என்க.
அடி-2ல் நம்தம் கதி - நம்முடைய கதி; நாம் அடையக் கூடிய கதி.
அதற்குக் கண் ஆதலாவது, வழிகாட்டியாய் நிற்றல்.
தனிச்சீரில் அந்தம் சிவன் சேரும் உரு உடையீர் - முடிவில் சிவனை அடையும் குறிக்கோளை உடையவர்களே.
ஈற்றடியில் செல் உரு உடையீர் - நினைத்த இடத்தில் செல்லுதற்குரிய உடம்பைப் பெற்றவர்களே.
`செங்காட்டாங்குடிமேல் சேரும்` என முடிக்க.
செங்காட்டாங்குடி, சோழ நாட்டுத் தலம்.

பண் :

பாடல் எண் : 70

செல்லும் அளவும் சிதையாமல் சிந்திமின்
செல்லும் அளவும் சிவன்உம்மைச் செல்லும்
திருமீச்சூர்க் கேறவே செங்கண்ஏ றூரும்
திருமீச்சூர் ஈசன் திறம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-1-ல் செல்லும் அளவும் - இயலும் அளவும்.
அடி-2-ல் செல்லும் அளவும் - நீவிர் மேலே செல்லும் அளவும்.
``உம்மை`` என்னும் இரண்டாவதை, `உம்மொடு` என மூன்றாவதாகத் திரிக்க.
மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க.
அடி-3-ல் `திருமீயச்சூர்` என்பது ``திருமீச்சூர்`` எனக் குறைந்து நின்றது.
இது சோழ நாட்டில் உள்ள ஒருதலம்.
ஏற - இதனை அடைய.
ஏறு - இடபம்.
அடி-4-ல் திரு மீச்சு ஊர் - மங்கலம் மேற்பட்டு மிகுகின்ற `ஈசன்` என்க.

பண் :

பாடல் எண் : 71

திறமென்னும் சிந்தை தெரிந்தும்மைக் காணும்
திறமென்னும் சிந்தைக்கும் ஆமே திறமென்னும்
சித்தத்தீர் செல்வத் திருக்கடவூர் சேர்கின்ற
சித்தத்தீரே செல்லும் நீர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தனிச்சீர் முதலாகத் தொடங்கியுரைக்க.
திறத்தை யுடையது ``திறம்`` எனப்பட்டது.
திறம் - வலிமை - (இடையூறுகளை யெல்லாம் கடக்கும்) வலிமையுடைய சித்தத்தை.
(மனத்தை - அத்துச் சாரியை நிற்க ஐயுருபு தொக்கதனை இலேசினால் * கொள்க) `ஈர் திருக்கடவூர்` என இயைத்து, `ஈர்க்கின்ற திருக்கடவூர்` என வினைத் தொகை யாக்குக.
``திருக்கடவூர் சேரும் சித்தத்தீரே`` என்றது அத்தலப் பெருமானை விளித்தது.
சித்தம் - உள்ளம்.
நீர் செல்லும் - உமது விருப்பம்போல் நீர் திருக்கடவூர் செல்லும்.
அடி-1-ல் திறம் என்னும் சிந்தை - உண்மையில் வலிமையுடைய உள்ளமானது, உம்மைத் தெரிந்து காணும் - பல பொருள்களையும் விட்டு உம்மை ஆராய்ந்து அறியும்.
(அவ்வாறின்றி) திறம் என்னும் சிந்தைக்கும் ஆமே - `யான் வலிமையுடையேன் என வாளா தற்பெருமை பேசிக்கொள்கின்ற உள்ளத்திற்கும் அது கூடுமோ? (கூடாது).
`திறமையுள்ள உள்ளத்திற்கு அடையாளம் சிவபெருமானது பெருமையை உணர்ந்து அவனைப் பற்றுதலே` என்றபடி.

பண் :

பாடல் எண் : 72

நீரே எருதேறும் நின்மலனார் ஆவீரும்
நீரே நெடுவானில் நின்றீரும் நீரேய்
நெருப்பாய தோற்றத்து நீளாரம் பூண்டீர்
நெருப்பாய தோற்றம் நிலைத்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நீரேய். பூண்டீர்`` என்பதை முதலிற் கூட்டி, `எருதேறும் நின்மலனார் ஆவீரும் நீரே; நெருப்பாய தோற்றம் நிலைத்து நெடுவானில் நின்றீரும் நீரே` என இயைத்து முடிக்க.
தனிச் சீரில் `நீறு` என்பது எதுகை நோக்கி ``நீர்`` என நின்றது.
சிவபெரு மானது திருமேனி இயற்கையில் நெருப்புப் போன்றதாய், அதன்மேல் நீறு பூசப்பட்டிருத்தலின் அதற்கு நீறு பூத்த நெருப்பு உவமையாயிற்று.
`பூண்டு` என்பது பாடம் அன்று.
ஆரம், எலும்புமாலையும், தலை மாலையும்.
நிலைத்து - நிலைக்கப் பெற்று.
இறைவரது இயல்பை வருணித்தவாறு.

பண் :

பாடல் எண் : 73

நிலைத்திவ் வுலகனைத்தும் நீரேயாய் நின்றீர்
நிலைத்தில் வுலகனைத்தும் நீரே நிலைத்தீரக்
கானப்பே ரீங்கங்கை சூடினீர் கங்காளீர்
கானப்பே ரீர்கங்கை யீர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியில் உள்ள கானப்பேர் பாண்டி நாட்டுத் தலம்.
அதனடியாகப் பிறந்த, ``கானப்பேரீர்`` என்பதை முதலில் வைத்து, இவ்வுலகு அனைத்தும் நீரேயாய் நிலைத்து நின்றீர்` எனவும், நிலைத்த இவ்வுலகு அனைத்தும் நிலைத்து ஈர, நீரே கானப்பேர் ஈர்ங் கங்கை சூடினீர்; கங்காளீர்; கம் கையீர்` எனவும் இயைத்து உரைக்க.
இரண்டாம் அடி முதலில், `நிலைத்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
அதனையடுத்து வந்த ``உலகனைத்தும்`` என்பதில், `உலகனைத்திலும்` என ஏழாவது விரிக்க.
தனிச்சீரில், நிலைத்து - தேங்கி.
ஈர - அழிக்க.
இவை கங்கையின் செயல்.
`ஈரக் கண்டு` என ஒருசொல் வருவிக்க.
கானம் - காடு; கற்பகச் சோலை.
`அவ்விடத்து உள்ள பெரிய, குளிர்ந்த கங்கையை நீரே சூடினீர்` என்க.
கம் கையீர் - கபாலத்தைக் கையில் கொண்டுள்ளீர்.

பண் :

பாடல் எண் : 74

ஈரம் உடைய இளமதியம் சூடினீர்
ஈரம் உடைய சடையினீர் ஈர
வருங்காலம் ஆயினீர் இவ்வுலகம் எல்லாம்
வருங்காலம் ஆயினீர் வாழ்வு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-1-ல் ஈரம் - குளிர்ச்சி.
அடி-2-ல் ஈர் அம் - குளிர்ந்த நீர் ``சடையினீர்`` என்பதை விளியாக்கி முதற்கண் கூட்டுக.
ஈர வருங் காலம் ஆயினீர்`` என்பதை இறுதியில் வைத்து உரைக்க.
வரும் காலம் - தோன்றும் காலம்.
வாழ்வு - வாழ்தல்; நிலைத்தல்.
``வருங்காலம் ஆயினீர்`` என்பதை இதன்பின்னும் கூட்டுக.
``ஈர வருங்காலம்`` என்பதில் ஈர்தல் - பிளத்தல்; அஃதாவது அழித்தல்.
``உயிர் ஈரும் வாள்`` 1 என்றார் திருவள்ளுவரும், `உலகத்திற்கு மூன்று காலமும் நீரேயாயினீர்` - என்றபடி.
ஞாலமே, விசும்பே, இவை வந்துபோம் காலமே 2 - என மணிவாசகரும் அருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 75

வாழ்வார் மலரணைவார் வந்த அருநாகம்
வாழ்வார் மலரணைவார் வண்கங்கை வாழ்வாய
தீயாட வானாள்வான் வான்கழல்கள் சேராதார்
தீயாட வானாளு மாறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வண் கங்கை வாழ்வாய தீ - வளவிய கங்கா தேவி பொருந்தும் இடமாகிய சடைமுடி.
``தீ`` என்பது உவம ஆகுபெயராய்த் தீப்போலும் சடைமுடியைக் குறித்தது.
வான் ஆள்வான் - அண்டம் முழுதையும் ஆள்பவன்; சிவபெருமான்.
அவன் கழல்கள் சேராதார் நிலைமை பின்னர்க் கூறப்படுதலின் முன்னர்க் கூறப்பட்டவை அவன் கழல்கள் சேர்ந்தாரது நிலைமை யாயின.
இதனை, ``பிறவிப் பெருங்கடல் நீந்துவர்`` 1 என்னும் குறளில் `சேர்ந்தார்` என்பது போலக் கொள்க.
`அவன் கழல்களைச் சேர்ந்து, மலர் அணைவார்(பிரம தேவர் அப்பதவியில்) வாழ்வார்; மலர் (மலரின்கண் உள்ள திருமகளை) அணைவார் (விட்டுணு மூர்த்தி), வரு நாகம் (பாம்பணையில்) வாழ்வார்.
(இங்ஙனமாகச் சிலர்) அவர் கழல்களைச் சேராதாராய், தீ ஆட (உடம்பில் தீ மூண்டு எரிய) வான் ஆளும் ஆறு (கூற்றுவன் உலகை இடமாகக்கொள்ளும் வகை) இரங்கத்தக்கது என்க.
`இரங்கத் தக்கது` என்பது சொல்லெச்சம்.

பண் :

பாடல் எண் : 76

மாறாத ஆனையின் தோல் போர்த்து வளர்சடைமேல்
மாறாத நீருடைய மாகாளர் மாறா
இடுங்கையர் சேரும் எழிலவாய் முன்னே
இடுங்கையர் சேர்வாக ஈ.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மாகாளம்` என்னும் பெயரை உடைய தலங்கள் பல உள்ளன.
மாகாளர் அத்தலங்களில் இருக்கும் இறைவர்.
தனிச்சீரில் மாறா - நீங்காத.
அடி-3-ல் இடுங்கை - சோர்தல் வறுமையால் வாடுதல்.
வறுமையால் வாடுவோர் அறிந்து சேரும் எழிலவாய் (அழகுடையன வாய்) முன்னே இடும் கையர் - விரைவாகக் கொடுக்கும் கையை உடையவர்கள் சேர்வு - புகலிடம்.
`மாகாளரை வறியவர்க்கு இடும் கையை உடையடவர்களது புகலிடமாக, அறிந்து, (நெஞ்சே, நீ) வறிய வர்க்கு ஈதலைச் செய்` - என முடிக்க.
``இரப்பவர்க்கு ஈய வைத்தார்; அருளும் வைத்தார்`` 2 என அப்பர் அருளிச் செய்ததையும் நோக்குக.
ஈதல் தொழில் நெஞ்சுக்கு இல்லையாயினும் ஈய நினைத்தலே ஈதலைச் செய்தற்கு முதல் ஆகலின் அதனைச் செய்தலாகக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 77

ஈயும் பொருளே எமக்குச் சிவலோகம்
ஈயும் பொருளே இடுகாட்டின் ஈயும்
படநாகம் பூணும் பரலோகீர் என்னீர்
படநாகம் பூணும் படி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`உலகீர், நீவிர்` என்பதை முதலில் வருவித்துக் கொள்க.
`அடி-4-ல் பட - நீவிர் இறந்த பின்பு நாகம் பூணும்படி.
புண்ணிய போகத்தை அடையுமாற்றிற்கு.
(`படிக்கு` என நான்காவது விரிக்க.
) அடி-1-ல் பொருள் ஈயும் - உங்கள் பொருளை வறியவர்க்கு ஈயுங்கள்.
(சிவபெருமானை) எமக்குச் சிவலோகம் ஈயும் பொருளே- `எங்களுக்குச் சிவலோகத்தை ஈந்தருள்கின்ற பரம்பொருளே - `எங்களுக்குச் சிவலோகத்தை ஈந்தருள்கின்ற பரம்பொருளே` என்றும், (`தனிச் சீரில் - `ஈ உம் இடுகாட்டின்` - என மாற்றிக் கொள்க.
) ஈ - வண்டுகளின், உம் இடுகாட்டின் - உங்காரம் பொருந்தியுள்ள இடு காட்டின்கண் ஆடுகின்ற.
`பட நாகம் பூணும் பரபோகீர்` என்னீர் என்று சொல்லித் துதியுங்கள்.

பண் :

பாடல் எண் : 78

படியேறும் பார்த்துப் பரத்தோடும் கூட்டி
படியேரு பார்த்துப் பரன்இப் படிஏனைப்
பாருடையாய் பைங்கண் புலியதளாய் பால்நீற்றாய்
பாருடையாய் யானுன் பரம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``இப்படி`` என்பது முதலாகத் தொடங்கி, அடி-2-ல் (யானோ) படி பார்த்து ஏறும் பரன் - (திடீரென மேலே பறப்பவன் அல்லன்.
) படிகளைப் பார்த்து ஒவ்வொன்றாகக் கடந்து மேல் எறுகின்ற அயலான்.
(என்னை) பார்த்து படி ஏறும் பரத்தோடும் கூட்டி - உற்றுப் பார்த்துப் பார்த்துத் தாம் மிகுகின்ற உனது மேலான நிலையோடு சேர்த்தருள்.
அடைபவர் மேல் மெல்ல மெல்லச் சேர்த்தருள் - என்று ஏறும் தன்மையை அடையப்படும் பொருள்மேல் ஏற்றினார்.
``பார்த்துப் படியேறும் பரன்`` - என்றது உயிர்களின் இயல்பை விளக்கியவாறு.
`கூட்டுதி` என்னும் ஏவல் வினை முற்றின் இகர விகுதி தகர ஒற்று இன்றி, ``கூட்ட`` என வந்தது.
``நன்றுமன் அது நீ நாடாய் கூறி`` * என்பதிற்போல.

பண் :

பாடல் எண் : 79

பரமாய விட்டுநின் பாதம் பணிந்தேன்
பரமாய ஆதிப் பரனே பரமாய
நீதியே நின்மலனே நேரார் புரம்மூன்றும்
நீதியே செய்தாய் நினை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரண்டாம் அடியையும் அதன்பின் மூன்றாம் அடியில் உள்ள ``நீதியே! நின்மலனே!`` என்பதையும் முதலிற் கூட்டியுரைக்க.
``பரம்`` மூன்றில் முதலது, பாரம்; பற்றுக்கள்.
ஏனை யவை மேன்மை.
நேரார் - பகைவர்.
அடி- 4ல் `தீயே` என்பது ``தியே`` எனக் குறுகி நின்றது, ``திருத்தார்நன் றென்றென் தியேன்``* - என்பதிற் போல ``தீயே செய்தாய்; அதனை நினை` என்க.
`அமரர்கள் நின் பாதம் பணிய முப்புரத்தை எரித்ததை நினைக` என்றது, `அதுபோலப் பாதம் பணிந்து எனது மும்மலங்களை நீக்கியருள்` என்பது குறிப்பு.

பண் :

பாடல் எண் : 80

நினையடைந்தேன் சித்தம் நிலையாகும் வண்ணம்
நினையடைந்தேன் சித்த நிமலா நினையடைந்தேன்
கண்டத்தாய் காளத்தி யானே கனலாரும்
கண்டத்தாய் காவாலி கா.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சித்த நிமலா - எல்லாம் வல்ல சித்தனாகிய நிமலனே! தனிச் சீரில் அடையுந் தேன் கண்டத் தாய் - உனது திரு முன்பில் வந்த தேன் கலந்த இறைச்சித் துண்டத்தை (கண்ணப்பர் படைத்தது) ஏற்றவனே.
`அடையும்` என்னும் பெயரெச்சத்தில் உகரம் கெட்டது.
கனல் ஆரும் கண் - நெருப்பு பொருந்திய கண்ணையுடைய.
`தந்தாய்` என்னும் விளிப்பெயர் வலிந்து நின்றது.
காவாலி - கபாலியே, அடி-2ல் `நினை அடைந்தேன்;` என முன்னர்க் கூறினமை யால் அடி-1-ல் ``நினையடைந்தேன்`` என்பது `எனது` என்னும் அளவாய் நின்றது.

பண் :

பாடல் எண் : 81

காவார் பொழிற்கயிலை ஆதீ கருவேஎம்
காவாய்ப் பொலிந்த கடுவெளியே காவாய
ஏறுடையாய் என்னை இடைமருதிலேஎன்றும்
ஏறுடையாய் நீயே கரி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-1-ல் ``கா`` என்பது இளமரக் காக்களையும், ``பொழில்`` என்பது பெருமரச் சோலைகளையும் குறித்தன.
கரு - மூலப் பொருள்.
அடி-2-ல் கா - கற்பகத் தரு.
கடு வெளி - தூய்மையான ஆகாயம்.
சிதாகாசம்.
தனிச்சீரில், `அங்கா` என்பது முதல் குறைந்து ``கா`` என நின்றது.
`அங்காக்கின்ற வாயை உடைய ஏறி` (இடபம்) என்க.
வேறு - தனிச் சிறப்பையுடைய அடியவனாக .
இடை மருது - திருவிடைமருதூர்.
கரி - எல்லாவற்றுக்கும் சான்று.

பண் :

பாடல் எண் : 82

கரியானும் நான்முகனு மாய்நின்ற கண்ண
கரியாருங் கூற்றங் கனியே கரியாரும்
காடுடையாய் காலங்கள் ஆனாய் கனலாடும்
காடுடையாய் காலமா னாய்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண் - பார்வை; இங்கு அருள் நோக்கினைக் குறித்து.
`அருள் நோக்கினால் அரி, அயன் இவர்களது தொழிலை நடத்து விக்கின்றான்` என்பது கருத்து.
தனிச்சீர் ஒழித்து, இரண்டாம் அடியில் ஏனைய பகுதியை இறுதிக்கண் கூட்டுக.
அதன்கண், `கூற்று `வாக்கு` என்பது, ``கூற்றம்`` என வந்தது.
``குறித்தேன் கூற்றம்`` * எனத் தொல் காப்பியரும் கூறினார்.
கரி ஆரும் கூற்றம் - உண்மை நிறைந்த வாக்கு.
உண்மை மொழியே சான்றாகக் கொள்ளப்படும் ஆதலின் அதனைக் ``கரி ஆரும் கூற்றம்`` என்றார்.
உண்மை மொழி, ஞானோபதேசம்.
கரி யானை, அஃது ஐராவதத்தைக் குறித்தது.
ஐராவதம் வழிபட்ட காடு வெண்காடு; திருவெண்காடு, கனல் ஆடும் காடு - முதுகாடு.
ஈற்றடி யில் காலம் (காளம்) - நஞ்சு.
ஆனாய் - (கண்டத்தினின்று) நீங்காய்.

பண் :

பாடல் எண் : 83

ஆன்ஆய ஆய அடலேறே ஆரூர்க்கோன்
ஆனாய னாவமுத மேயானாய் ஆனாய்
கவர்எலும்போ டேந்தி கதநாகம் பூணி
கவலெலும்பு தாகை வளை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-1-ல் உள்ள ஏகாரத்தைப் பிரித்து, `அடல் ஏறு ஆன் ஆயனே ஆய ஆரூரன் ஆனாய்` எனக் கூட்டி, `வலிமை பொருந்திய இடபம்.
ஆன் நிரைமேய்த்த ஆயன் ஆகிய மாயோனே யாக உடைய, திருஆரூர்த் தலைவன் ஆகியவனே` என உரைக்க.
அடி-2-ல் `அன்னாய் - பல்லுயிர்க்கும் தாயே! உயிர்கட்கெல்லாம் அமுதம்போல இருப்பவனே.
தனிசீரில் உள்ள ``ஆனாய்`` என்பதை மூன்றாம் அடி இறுதியிற் கூட்டி, `இவ்விடத்தை விட்டு நீங்காய்` என உரைக்க.
அடி-3-ல் கவர் எலும்பு - பிளவுபட்ட எலும்புகள்.
ஏந்தி - ஏந்தினவனே.
பூணி - பூண்டவனே.
அடி-4 -ல் உள்ள தொடரை, `எலும்பு கையினின்றும் கவர்ந்த பிரிநிலைப் பொருளவாய் வந்த ஏகாரங்கள் உயர்வு குறித்து நின்றன.
வளையைத் தா` என இயைத்து முடிக்க.
`தடை மெலிந்து, அழகிழந்த கை` என்றற்கு `எலும்புக்கை` என்றாள்.
`தார்` என்பது பாடம் அன்று.
இதுவும் கைக்கிளைத் தலைவி ஆற்றாமையைத் தோழி இறைவற்குக் கூறிக் குறையிரந்தது.

பண் :

பாடல் எண் : 84

வளைகொண்டாய் என்னை மடவார்கள் முன்னே
வளைகொண்டாய் மாசற்ற சோதி வளைகொண்டாய்
மாற்றார் கதுவ மதில்ஆரூர் சேர்கின்ற
மாற்றார் ஊர்கின்ற மயல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மாசற்ற சோதி`` என்பதை முதலிற் கொண்டு, அதன்பின், முதல் அடியில் உள்ள தொடரை, `என்னை மடவார்கள் முன்னே வளை கொண்டாய்` என மாற்றிக் கூட்டுக.
``வளை கொண்டாய்`` என்பது, `மெலிவித்தாய்` என்னும் பொருட்டாதலின், ``என்னை`` என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று.
அடி-2-ல் வளை கொண்டாய் வளைத்துக் கொண்டாய்; அகப்படுத்திக் கொண்டாய்.
தனிச்சீரில் வளை - சங்கு; வெள்ளிச் சங்கு.
`வெற்றிச் சங்கை உடன் கொண்டு (கைப்பற்றும் முறைகளை) ஆராய்கின்ற மாற்றார் (பகைவர் கள்) கதுவும் (முற்றுகை யிடுகின்ற; ஆயினும் கைப்பற்ற இயலாத) மதில்` என்க.
ஆரூர் சேர்கின்ற (திருவாரூரைச் சென்று சேரவேண்டும் என்று எழுகின்ற) ஆர்ந்து (நிறைந்து) ஊர்கின்ற (மீதூர்கின்ற) மயல் (மையலை) மாற்று - நீக்கு.
இதுவும் மேலைத் துறை.
ஒற்றுமை பற்றித் தலைவியையே தோழி ``என்னை`` என்றார்.

பண் :

பாடல் எண் : 85

மயலான தீரும் மருந்தாகும் மற்றும்
மயலானார் ஆரூர் மயரார் மயலான்
கண்ணியர்தம் பாகர் கனியேர் கடிக்கொன்றைக்
கண்ணியன்றன் பாதமே கல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மயல், நோக்கத்தால் புலப்படுதல் இயல் பாகலின் அது கண்களை மயலை உடையன போல வைத்து, ``மயலான கண்ணியர்`` என்றார்.
இத்தொடர் மகளிரைக் குறித்தல் சொல்ல வேண்டா.
பாகு ஆர் - அவர்கட்குச் சருக்கரையை ஒத்தவன்.
கனி ஏர்- மற்றும் கனியையும் ஒப்பவன்.
கடி - நறுமணம்.
கண்ணி - முடியில் அணியும் மாலை.
``கடிக்கொன்றைக் கண்ணியான்`` என்பது, `சிவன்` என்னும் அளவாய் நின்றது, கல் - போற்றக் கற்றுக்கொள்.
(`நெஞ்சே, நீ` - என்பது வருவித்துக் கொள்க.
) ஏனெனில், அவையே மயல் ஆன- உலகத்தைப் பற்றி மயக்கங்கள் பலவும் தீர்தற்கு உரிய மருந்தாகும்.
மற்றும் - மேலும்.
மயல் ஆனார் - சிவபெருமானைப் பற்றிய ஆசை நீங்காதவர்கள்.
ஆரூர் மயரார் - அவனது திருவாரூரை மறக்க மாட்டார்கள்.

பண் :

பாடல் எண் : 86

கலைமான்கை ஏனப்பூண் காண்கயிலை மானின்
கலைமான் கறைகாண் கவாலி கலைமான
ஆடுவதும் பாடுவதும் காலனைப்பொன் அம்பலத்துள்
ஆடுவதும் ஆடான் அரன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கலை மானை ஏந்திய ஏனத்தின் (பன்றியின்) கொம்பாகிய பூண் இவற்றுடன் காணப்படுகின்ற கயிலைப் பெரியோனால் (மான் - பெரியோன்).
அடி-2ல் மான் (நின் மகள்) கலைக் கறை - ஆடைபற்றிய குற்றத்தில்.
கவாலி - அவனேயாயினார்.
(அஃதாவது, உடையில்லாதவள் ஆயினாள்.
ஆடையின் குற்றம் - ஆடை அணியாமை.
(``கவாலி`` என்பதன் பின் `ஆயினாள்` என்பது எஞ்சி நின்றது.
இனி) அரன் - அவன்.
பொன் அம்பலத்துள் கலைமான, ஆடற்கலையும் பாடற்கலையும் பெருமையுறும் வண்ணம் ஆடுவதும், பாடுவதும் (அல்லது இவளை நோக்குகின்றான் இல்லை.
நோக்காவிடினும் இவளது உயிரைக் கொள்ளாதபடி) காலனை (யமனை) ஆடுவதும் ஆடான் அழித்தலையும் செய்யான்.
(நாம் என் செய்வது!) ஈற்றடியில் `அடுவது, அடான்` என்பன முதல் நீண்டு நின்றன.
இது தலைவியது வேறுபாடு கண்டு வினவிய நற்றாய்க்குச் செவிலி அறத்தொடு நின்றது.

பண் :

பாடல் எண் : 87

அரனே அணியாரூர் மூலட்டத் தானே
அரனே அடைந்தார்தம் பாவம் அரனே
அயனார்தம் அங்கம் அடையாகக்கொண்டார்
அயனாக மாக அடை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அரன்`` மூன்றில் முதலது `சிவன்` என்னும் அளவாய் நின்றது.
இடையது `அறன்` என்பது எதுகை நோக்கித் திரிந்த பெயர்.
அறன் - அறவடிவினன்; இறுதியது, அரிப்பவன்.
மூன்று பெயர்களுமே விளி ஏற்று நின்றன.
அயனார் - பிரம தேவர்.
`அவரது அங்கம்` என்றது, தலை ஓட்டினை, அடி-3ல் `அடையாளம்` என்பது ``அடை`` எனக் குறைந்து நின்றது.
ஈற்றடியில் உள்ள தொடரை, `அயல் ஆக அடை நாகம்` என மாற்றி, `அதற்கு மேல் உனது திருமேனியில் அணியப்படும் பொருள் பாம்பு ஆகின்றது.
(`அஃது எதற்கு` என்பது குறிப்பெச்சம்.
)

பண் :

பாடல் எண் : 88

அடையுந் திசைஈசன் திண்டோளா காசம்
அடையுந் திருமேனி அண்டம் அடையும்
திருமுடிகால் பாதாளம் ஆடைகடல் அங்கி
திருமுடிநீர் கண்கள்சுடர் மூன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஈசனது திண் தோள்திசை அடையும்; திருமேனி ஆகாசம் அடையும்.
திருமுடி (சிறப்பு வாய்ந்த சிரம்) அண்டம் அடையும்.
கால் பாதாளம் (அடையும்) அவனுக்கு ஆடை கடல்.
``தூநீர் - வளைநரல் பௌவம் உடுக்கையாக, விசும்பு மெய்யாகத் திசை கையாக`` * எனப் பழம் புலவரும் கூறினார், அங்கி (அக்கினி) போலும் அழகிய சடா மகுடத்தில் நீர் (உள்ளது.
) கண்கள் மூன்று சுடர்` - என இயைத்துக் கொள்க.
பெருமானது திருவடிவைப் புகழ்ந்த வாறு.
``அடையும்`` என்பதைப் ``பாதாளம்`` என்பதோடும் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 89

மூன்றரணம் எய்தானே மூலத் தனிச்சுடரே
மூன்றரண மாய்நின்ற முக்கணனே மூன்றரண
மாய்நின்ற சோதி அணியாரூர் சேர்கின்ற
ஆய்நின்ற சோதி அறம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மூன்று அரணம்`` மூன்றில் முதலது முப்புரம், இடையது (அரணம் - பாதுகாவல்) மும்மூர்த்திகள்.
இறுதியது (அரணம் - சரீரம்) தூலம், சூக்குமம், காரணம் ஆகிய சாரங்கள்.
``சோதி`` இரண்டில் முன்னது, பொதுவில் `ஈசுரன்` என்றும், பின்னது, சிறப்பாகச் `சிவன்` என்றும் பொருள் பயந்தன.
தூல சூக்கும காரண சரீரங்களில் நின்று அறிவைப் பயப்பிக்கும் ஈசுரனை முறையே `விராட், தைசசன், மகேசுரன்` எனக் குறியிட்டு வழங்குவர் வேதாந்திகள்.
ஈற்றடியில் ஆய் நின்ற - நுணுகி நின்ற.
``சோதி`` என்பனவும் விளி களே.
`நீயே அறம்` என எழுவாய் வருவித்துரைக்க.
எனவே, `உன்னை வணங்குதலே அறம்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 90

அறமாய்வ ரேனும் அடுகாடு சேர
அறமானார் அங்கம் அணிவர் அறமாய
வல்வினைகள் வாரா வளமருக லாரென்ன
வல்வினைகள் வாராத வாறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மருகலால்`` எனப் பின்னர் வருதலால் முன் இரண்டடிகளும் அவரைப் பற்றியவேயாயின.
மருகல், சோழநாட்டுத் தலம்.
அறம் ஆய்வர் - அற நூலை ஆராய்ந்து விளக்குவார்.
அறங் களில் ஆசாரம் அல்லது தூய்மையும் ஒன்று ஆகலின், `அறம் ஆய்வ ரேனும் அங்கம் (எலும்பை) அணிவர்; இஃது அவர்க்குப் பொருந் துமோ` என ஐயுற்றார் போலக் கூறினார்.
தூய்தல்லாத பொருளைப் பற்றிய போதிலும் அதனால் நெருப்பு வாதிக்கப் படாமைபோல, அவர் எதனாலும் வாதிக்கப்படாமை கூறியவாறு.
அடு காடு - சுடு காடு.
அறம் ஆனார் - அறுதியாயினார்.
தனிச் சீரில் உள்ள அறம், சிவதருமம்.
அது செய்தற்கு அரிதாகலின், ``வல்வினைகள்`` என்றார்.
வாரா - வரப்பெற்று.
ஈற்றடியில் உள்ள வல்வினைககள், வலிய இருவினைகள், `அவை வாராதவாறு சிவதருமம் வாய்க்கப் பெற்று, வளப்பம் பொருந்திய `திருமருகலார்` எனச் சொல்லித் துதிக்க.
``என்ன`` என்பது அகர ஈற்று வியங்கோள்.
`என்க` எனப் பாடம் ஓதலும் ஆம்.

பண் :

பாடல் எண் : 91

ஆறுடையர் நஞ்சுடையர் ஆடும் அரவுடையர்
ஆறுடையர் காலம் அமைவுடையர் ஆறுடைய
சித்தத்தீர் செல்வத் திருக்கயிலை சேர்கின்ற
சித்தத்தீர் எல்லார்க்குஞ் சேர்வு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லைபொழிப்புரையை எழுதவில்லைபொழிப்புரையை எழுதவில்லைபொழிப்புரையை எழுதவில்லைபொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஆறு`` மூன்றில் முதலது கங்கை.
இடையது.
``ஆறு` என்னும் எண், இறுதியது.
ஆறுதல்; சாந்தம், காலம் ஆறு, பூசா காலங்கள்.
அமைவு - நிறைவு; திருப்தி.
இஃது எண் குணங்களில் வரம்பில் இன்பமாகும்.
`ஆறுதலுடைய சித்தத்தீர்யாவர் அவர் ``ஆறுடையர்`` முதலாகச் சொல்லப்பட்ட அவரது திருக்கயிலை சேர்கின்ற சித்தத்தீர் ஆவீர்; அத்திருக்கயிலையே எல்லார்க்கும் சேர்வு` (புகலிடம்) என முடிக்க.

பண் :

பாடல் எண் : 92

சேர்வும் உடையார் செழுங்கொன்றைத் தாரார்நஞ்
சேர்வும் உடையர் உரவடையர் சேரும்
திருச்சாய்க்காட் டாடுவரேல் செய்தக்க என்றும்
திருச்சாய்க்காட் டேநின் உருவு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``சேர்வு`` இரண்டில் முன்னது சேரும் இடம்.
அவை பல தலங்கள்.
பின்னது, அடைக்கலமாக அடைதல்.
அவர், `திருச் சாய்க்காடு` என்னும் தலத்தில் ஆடுவர் (விளங்கியிருப்பார்) ஆயின், (நெஞ்சே, நீ) செய்தக்கது என்றும் நின் உருபு (உடம்பை) திருச்சாய்க் காடு (நன்றாய வணக்கத்தில் ஏ (ஏவுதலே) பின்னுள்ள ``சாய்க்காடு`` என்பதில் உள்ள காடு, `நோக்காடு, வேக்காடு` முதலியவற்றிற் போலத் தொழிற் பெயர் விகுதி.
அது வேற்றுமைப் புணர்ச்சியில் ஒற்று இரட்டிற்று.
ஏ - ஏவுதல்; முதனிலைத் தொழிற் பெயர்.

பண் :

பாடல் எண் : 93

உருவு பலகொண் டொருவராய் நின்றார்
உருவு பலவாம் ஒருவர் உருவு
பலவல்ல ஒன்றல்ல பைஞ்ஞீலி மேயார்
பலவல்ல ஒன்றாப் பகர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பைஞ்ஞீலி மேயார்`` என்பதனை முதலிற் கொள்க.
பைஞ்ஞீலி, சோழநாட்டுத் தலம்.
அடி-1ல் `பலகொண்டும்` எனவும், அடி-3-ல் `பலவும், ஒன்றும்` எனவும் போந்த உம்மைகள் தொகுக்கப் பட்டன.
உருவு பல ஆம் ஒருவர் - பொருள்கள் பலவும் ஆகின்ற ஒருவர்.
அவரது உருவு பலவும் அல்ல; ஒன்றல்ல; (எனவே, `உருவே இல்லாதவர்` என்பதாம்) அவரைக் குறிக்கும் சொற்கள் பல அல்லவாக, ஒன்றாக (நெஞ்சே, நீ) பகர்.

பண் :

பாடல் எண் : 94

பகரப் பரியானை மேல்ஊரா தானைப்
பகரப் பரிசடைமேல் வைத்த பகரப்
பரியானைச் சேருலகம் பல்லுயிர்க ளெல்லாம்
பரியானைச் சேருகலம் பண்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-1-ல் பகர் அப் பரி யானை மேல் ஊராதான் - யாவரும் உயர்த்துச் சொல்கின்ற பருத்த யானையை ஊர்தியாகக் கொண்டு அதன்மேல் ஊர்தல் இல்லாதவன்.
`இடபத்தையே ஊர்கின்றவன்` என்பதாம்.
அடி-2-ல் விளக்கத்தை.
`பகம்` என்றல் உலக வழக்கு.
பரி சடை.
`பரிக்கின்ற சடை` என வினைத்தொகை.
தனிச்சீரில் பகம் - `ப` என்னும் எழுத்து.
அது பாம்பைக் குறிப்பால் சுட்டியது.
அடி - பரியான் - தூல நிலையைக் கொண்டவன்; `உருவு கொண்டு நின்றவன்` என்றபடி.
`விளக்கமான, கங்கை முதலிய வற்றைத் தாங்கியுள்ள சடையின்மேல் வைத்த பாம்பைக் கொண்ட உருவுகொண்டு விளங்குபவன்` என்க.
அடி-3-ல் சேர் உலகம் - பலவாய்த் திரண்டுள்ள உலகங்கள்.
அடி-4-ல் பரியான் - (அறியாமையால்) அன்பு செய்யப்படாதவன்.
அவனைச் சேர்ந்துள்ள உலகமே; சிவலோகம்; பண் - தகுதி வாய்ந்ததாகும்.
(ஆகவே, `அதனை அடையவே மக்கள் முயல வேண்டும்` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 95

பண்ணாகப் பாடிப் பலிகொண்டாய் பாரேழும்
பண்ணாகச் செய்த பரமேட்டி பண்ணா
எருத்தேறி ஊர்வாய் எழில்வஞ்சி எங்கள்
எருத்தேறி ஊர்வாய் இடம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-1ல் பண் - இசை.
பலி - பிச்சை.
அடி-2ல் பண்- தகுதி.
செய்த - ஆக்கிய; படைத்த.
அடி-3-ல் `எருது`, ``எருத்து`` என ஒற்றிரட்டி நின்றது.
தனிச் சீரில் பண்ணா - ஏறுதற்கு உரிய வகையில் அமைத்து.
`எருத்துப் பண்ணா ஊர்வாய்` என மாற்றிக் கொள்க.
அடி-4ல் எருத்து - எருத்தம்; பிடரி.
`எங்கள் எழில் வஞ்சிதன் எருத்து இடமாக ஏறி ஊர்வாய்` என மாற்றி யுரைக்க.
வஞ்சி - கொடி போன்றவள்.
இஃது எருதேறிப் பிச்சைக்கு வந்த இறைவனைத் தலைவிதன் ஆற்றாமை கண்ட தோழி குறையிரந்தது.
`எருது` என்பன பாடல் அல்ல.
``வஞ்சி எருத்தேறி ஊர்வாய்`` என்றது.
`இவளை உன்னிடத்துப் பணிகொண்டருள்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 96

இடமாய எவ்வுயிர்க்கும் ஏகம்பம் மேயார்
இடமானார்க் கீந்த இறைவர் இடமாய
ஈங்கோய் மலையார் எழிலார் சிராமலையார்
ஈங்கோய் மலையார் எமை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``எவ்வுயிர்க்கும்`` என்பதை முதலிற் கூட்டுக.
``ஏகம்பம் மேயார்`` என்பது, `இறைவர்` என ஒரு சொல் நீர்மைத்தாய் நின்று, ``இடமாய்`` என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாயிற்று.
அடி-2-ல் ஆனார் - நீங்காதவர்.
`உள்ளத்தால் நீங்காதவர்` என்க.
`தம்மை உள்ளத்தால் என்றும் நீங்காதவர்க்குத்தம்மை அண்மை யிலிருக்க இடம் ஈந்த இறைவர்` என்க.
அடி-4-ல் உள்ள தொடரை, `எமை ஈங்கு ஒய மலையார்` என மாற்றி உரைத்துக் கொள்க.
`ஒய` என்பதன் ஈற்று அகரம் தொகுத்த லாயிற்று.
ஒய - மெலியும்படி.
மலையார் - வருத்தார்; `வருத்தத்தைத் தீர்ப்பார்` என்பதாம்.
திருஈங்கோய் மலை, திருச்சிராமலை இவை சோழ நாட்டுத் தலங்கள்.

பண் :

பாடல் எண் : 97

எமையாள வந்தார் இடரான தீர
எமையாளும் எம்மை இமையோர் எமையாறும்
வீதிவிடங் கர்விடம துண்டகண் டர்விடையூர்
வீதிவிடங் கர்விடையூர் தீ.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முன்னிரண்டு அடிகளில் மடக்கணி வாராது சொற்பொருட் பின்வருநிலையணியே வந்தது.
`இடரான தீர எமை ஆள வந்தார்` எனவும், `எம்மையும் எமையாளும் இமையோர்` எனவும் மாற்றுக.
வந்தார் - எம்பால் வந்தார்.
வினைப்பெயர்.
`எம்மையும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று.
எம்மையும் - எப்பிறப்பிலும்.
``வீதி`` இரண்டில் முன்னது ஒளி, பின்னது சுயம்பு மூர்த்தி.
``விடை`` இரண்டில் முன்னது இடபம்; பின்னது விடுத்தல்; ஏவுதல் அது `ஏவப் படும் பொருள்` எனப் பொருள் தந்தது.
``ஊர்`` இரண்டில், முன்னது ஏறிச் செலுத்துதல்; வினைத்தொகையாய் வந்தது.
பின்னது நகரம்; திரிபுரம்.

பண் :

பாடல் எண் : 98

தீயான மேனியனே செம்பவளக் குன்றமே
தீயான சேராமற் செய்வானே தீயான
செம்பொற் புரிசைத் திருவாரூ ராய்என்னைச்
செம்பொற் சிவலோகஞ் சேர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``தீ`` மூன்றில் முதலது நெருப்பு; இடையது தீமை; இறுதியது ஒளி.
புரிசை - மதில்.
ஈற்றடியில் ``பொன்`` என்றது பொருளை.
செம்பொருள் - மெய்ப்பொருள்; அஃது `அழியாப் பொருள்` எனப் பொருள் தந்தது.

பண் :

பாடல் எண் : 99

சேர்கின்ற சிந்தை சிதையாமல் செய்வானே
சேர்கின்ற சிந்தை சிதையாமல் சேர்கின்றோம்
ஒற்றியூ ரானே உறவாரும் இல்லைஇனி
ஒற்றியூ ரானே உறும்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முன்னிரண்டடிகளில் சொற்பொருட் பின்வரு நிலையணியே வந்தது.
பின் வந்த ``சிதையாமல்`` என்பது, `சிதையாமைப் பொருட்டு`, ``ஒற்றியூர்`` இரண்டில் முன்னது தொண்டை நாட்டுக் கடற்கரைத் தலம்; பின்னது, பொருந்தி ஊர்கின்ற இடபம், (உன்னைத் தவிர எமக்கு) `ஆரும் உறவு இல்லை` என்க.
உறும் - பொருந்தும் `அதனால் அதன் மேல் நீ வந்து அருள்` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 100

உறுமுந்த முன்னே உடையாமல் இன்னம்
உறுமுந்த முன்னே யுடையா உறுமும்தம்
ஒரைந் துரைத்துஉற்று உணர்வோ டிருந்தொன்றை
ஒரைந் துரக்கவல்லார்க் கொன்று.

தனி வெண்பா
ஒன்றைப் பரணர் உரைத்தஅந் தாதிபல
ஒன்றைப் பகரில் ஒருகோடி ஒன்றைத்
தவிராது உரைப்பார் தளரா உலகில்
தவிரார் சிவலோகந் தான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தனிச்சீர் முதலாகத் தொடங்கி யுரைக்க.
தனிச்சீரில்- உறுமும் - சினந்து வருகின்ற.
தம் ஓர் ஐந்து - தங்கள் ஐம்புல ஆசைகளை.
உற்று - நேர்ந்து.
உரைத்து - அவைகட்கு அறிவுரை கூறி (அவை கேட்கும் தம்மையில் ஆயினும் தமக்குள் தாம் சொல்லிக் கொள்வதை அவைகள் கேட்பனபோல வைத்துக் கூறினார்.
) உணர் வோடு இருந்து - மெய்யறிவோடு அமைதியாய் இருந்து, ஒன்றை - ஒன்றாகிய செம்பொருளை.
ஓர் ஐந்து உரைக்க வல்லார்க்கு- அஞ்செழுத்தால் துதிக்க வல்லார்க்கு.
ஒன்று - அந்தச் செம்பொருள்.
அடி-1-ல் முன்னே - முதற்கண்.
உடையாமல் உந்த உறும் - அவ் வைம்புல ஆசைகட்குத் தோலாமல், அவர்களை முன்னோக்கிச் செலுத்த முற்படும்.
இன்னம் - அதற்குமேல்.
அடி-2ல் முன் உடையாமுந்த உறும் - அவர்களது ஆற்றல் (அறிவு இச்சை செயல்கள்) சலியாதபடி முற்காப்பாக எப்பொழுதும் பொருந்தியிருக்கும்.
`அஞ்செழுத்தை ஒருமித்த மனத்துடன் ஒதுபவர்க்கு முதலில் அருட் பேறும்.
பின்னர் ஆனந்தப் பேறும் உளவாம்` என்றபடி.
இவ் வெண்பாவின் ஈற்றடி ``ஒன்று`` என முடிந்து முதல் வெண்பாவின் முதலோடு சென்று மண்டலித்தல் காண்க.
தனிவெண்பா - குறிப்புரை: இறுதியிற் காணப்படும் வெண்பா நூற்பயன் சொல்வதாகப் பிற்காலப் பெரியோரால் செய்து சேர்க்கப் பெற்றது.

பண் :

பாடல் எண் : 1

முதல்வன் வகுத்த மதலை மாடத்து
இடவரை ஊன்றிய கடவுட் பாண்டிற்
பள்ளிச் செம்புயல் உள்விழு தூறீஇப்
புத்தேள் நிவந்த முத்த மாச்சுடர்
எறிவளி எடுப்பினும் சிறுநடுக் குறாநின்
அடிநிழல் அளியவோ வைத்த முடிமிசை
இலங்குவளைத் தனிபோது விரித்த
அலங்குகதிர் ஒலியல்நீ அணிந்ததென் மாறே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதல்வன் - சிற்பம் வல்லாருள் தலையாயவன். மதலை - தூண்களையுடைய `மாடம்` என்க. மாடம் - உயர்நிலை மாடம். உயர்நிலை மாடம். திருக்கோயிலின் உட்கருவறை. ஊன்றிய- அழுந்த வைத்த. கடவுட் பாண்டில். தெய்வத் தன்மை பொருந்திய வட்டம் இதனைக் `கூர்மாசனம்` என்பர். `பாண்டிலாகிய பள்ளி` என்க. பள்ளி - தங்கும் இடம். `பள்ளியின்கண்` என ஏழாவது விரிக்க. செம்புயல் - மாலைக் காலத்தில் காணப்படுகின்ற சிவந்த மேகம். `மேகம் போல` எனவும் `விழுதுபோல` எனவும் உவம உருபு விரிக்க. `விழுது போல` என்றது இலிங்க வடிவத்தை. புத்தேள் நிவந்த முத்த மாச்சுடர் - கடவுள் தன்மை மேல் எழுந்து தோன்றிய முத்தொளியே. முத்தொளி உவமையாகு பெயர். முத்து. உயர்வாகிய குறிப்புப் பற்றி வந்த உவமை. `முத்தொளி` என்றது சிவபெருமானை. சுடர், அண்மை விளி. `தலங்கள் தோறும் இலிங்க வடிவில் கோயில் கொண்டு விளங்கி அருள் புரிகின்ற பெருமான் என்றபடி. எறிவளி - பெருங்காற்று. `பெருங்காற்று அடிக்கினும் சிறிதும் அசைவுறாத உனது திருவடி அரியவோ` (எளியவோ) என்க. `எளிய அல்ல ஆயினும் அவற்றை நீ சூட்டிய எங்கள் தலைமேல் மற்றும் உனது குவளை மலர் மாலையைச் சூட்டியது எக்காரணத்தால்` என முடிக்க. ஞான தீக்கை செய்யும் காலத்துக் குவளை மாலையைச் சூட்டுதல் மரபு. ``கழுநீர் மாலைக் கடவுள் போற்றி`` - எனத் திருவாசகத்தையும் காண்க. ஒலியல்- மாலை. மாறு. மூன்றாவதன் பொருள்படுவதோர் இடைச்சொல்.

பண் :

பாடல் எண் : 2

மாறு தடுத்த மணிக்கங்கை திங்களின்
கீறு தடுப்பக் கிடக்குமே நீறடுத்த
செந்தாழ் வரையின் திரள்போல் திருமேனி
எந்தாய்நின் சென்னி இடை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தனிச்சீர் முதலாகத் தொடங்கி உரைக்க. ``செவ்வரை`` என்பதில் செம்மை, ஆகுபெயராய் நெருப்பைக் குறித்தது. நீறு அடுத்த செம்மை - நீறு பூத்த நெருப்பு. பெருமான் திருமேனி முழுதும் திருநீறு பூசப்பட்டுள்ளது.
தாழ்வன - தங்கியுள்ள (அசையாது நிற்கின்ற) மலை. திரள் - திரட்சியான வடிவம். மாறு - எதிர். `மாறாத` என ஆக்கம் விரிக்க. தடுத்த - தடுக்கப்பட்ட. உலகை அழிக்க எண்ணி வந்த எண்ணத்திற்கு எதிராகத் தடுக்கப்பட்ட கங்கை என்க. `சடையால் தடுக்கப்பட்ட கங்கை சிறிதும் கீழே ஒழுகாதபடி பிறை தடுத்து நிற்கின்றது போலும் எனத் தற்குறிப்பேற்றமாகக் கூறி வியந்தவாறு. ஒழுகும் தன்மை உடையதாகிய கங்கையை ஒழுகாது வைத்துள்ள தன்மையை.
``நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை`` * என அப்பரும் வியந்தவாறு காண்க. ஏகாரம், வினாப் பொருட்டு.

பண் :

பாடல் எண் : 3

இடைதரில் யாம்ஒன் றுணர்த்துவது உண்டிமை யோர்சிமையத்
தடைதரு மூரிமந் தாரம் விராய்நதி வெண்ணிலவின்
தொடைதரு துண்டங் கிடக்கினும் தொண்டர் ஒதுக்கியிட்ட
புடைதரு புல்லெருக் குஞ்செல்லு மோநின் புரிசடைக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இடைதரின் - வாய்ப்பு அளித்தால். `உனக்கு உணர்த்துவது` என்க. சிமையம் - கோபுரம். அஃது ஆகுபெயராய் அதனையுடைய நகரத்தைக் குறித்தது. மூரி - பெரிய மந்தாரம். தேவலோகத்துப் பஞ்ச தருக்களில் ஒன்று. அஃது இங்கு அதன் பூவைக் குறித்தது. தொடை - மாலை. நிலவின் மாலை. நிலாக் கதிர்கள். `மந்தார மலர்கள், நதி பிறை இவைகளோடு கூட, உனது அடியார்கள் இடுகின்ற புல்லிய எருக்கம் பூவும் உனது சடை முடிக்குப் பொருந்துமோ` என்க. `அன்பர் இடுவன யாதாயினும் அதுவே பெருமானுக்கு மிகு விருப்பத்தைத் தருவது என்றபடி.

பண் :

பாடல் எண் : 4

சடையே
நீரகம் ததும்பி நெருப்புக்கலிக் கும்மே
மிடறே
நஞ்சகம் துவன்றி அமிர்துபிலிற் றும்மே
வடிவே
மிளியெரி கவைஇத் தளிர்தயங் கும்மே
அடியே
மடங்கல்மதம் சீறி மலர்பழிக் கும்மே
அஃதான்று
இனையஎன் றறிகிலம் யாமே முனைதவத்
தலைமூன்று வகுத்த தனித்தாள்
கொலையூன்று குடுமி நெடுவே லோயே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றயலடி முதலாகத் தொடங்கி உரைக்க. மூன்று தலைகளையும், ஒற்றைக் காலையும் உடைய வேல் திரிசூலம். ஊன்றுதல் - சேர்த்தல். குடுமி - முனை - `சடை முதலாகச் சொல்லப் பட்டவற்றில் ஒவ்வொன்றும் தோற்றத்திலும், செயலிலும் நேர்மாறாய் உள்ளன. ஆகவே, அவைகளை எத்தன்மையுடையன - ஒரு பெற்றிய வாகத் துணிய எங்களால் இயலவில்லை` என்பதாம். முளி எரி - பிற பொருள்களையெல்லாம் உலர்த்துகின்ற நெருப்பு. கவைஇ - கவித்து. தளிர் தயங்கும் - தளிர் விளங்கப்பெறும். மடங்கல் - யமன். முனை தவ - போரை மிகுதியாக உடைய `வேல்` என்க. அஃதான்று - அது வன்றி. இதனைச் சடை முதலிய எல்லாவற்றின் பின்னும் தனித்தனிக் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 5

வேலை முகடும் விசும்பகடும் கைகலந்த
காலைநீர் எங்கே கரந்தனையால்
மாலைப் பிறைக்கீறா கண்முதலா பெண்பாகா ஐயோ
இறைக்கூறாய் எங்கட் கிது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மாலைப் பிறைக் கீறா!... போர்பாகா!` - என்பதனை முதற்கண் கூட்டியுரைக்க. `கீற்றன்` என்பது இடைக் குறைந்து `கீறன்` என நின்று விளியேற்றது. வேலை முகடு - கடலின் உச்சி. விசும்பு அகடு - வானத்தின் நடுவிடம். கை கலந்த காலை - இவை இரண்டும் ஒன்றுபடும்படி நீ ஒரு தூணாய் நின்ற காலத்தில் நீரை எங்கே கரந்தணை (உள்ளடக்கி வைத்தாய்?). ``ஐயோ`` என்றது. `இதனை அறியாது திகைக்கின்றோம்` என்னும் குறிப்பினது. இறை - சிறிது. ``இறைக் கூறாய்`` என்பதில் ககர ஒற்று விரித்தல்.

பண் :

பாடல் எண் : 6

இதுநீர் ஒழிமின் இடைதந் துமையிமை யத்தரசி
புதுநீர் மணத்தும் புலியத ளேயுடை பொங்குகங்கை
முதுநீர் கொழித்த இளமணல் முன்றில்மென் தோட்டதிங்கள்
செதுநீர் ததும்பத் திவளஞ்செய் செஞ்சடைத் தீவண்ணரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பொங்கு கங்கை`` என்பது முதலாகத் தொடங்கி, ``இடை தந்து இதுநீர் ஒழிமின்`` என்பதை இறுதியில் வைத்து உரைக்க. ``புது நீர்`` என்பதில் நீர் - நீர்மை; தன்மை. `இமையத்தரசியாகிய உமையைப் புதுமணம் கொண்ட பொழுதும் உம்முடைய உடை புலித்தோலாகவே இருந்தது. இது போன்ற தன்மையை அதற்கு ஒரு வாய்ப்புத் தந்து ஒழிப்பீர் என்க. `முன்றிலின்கண் உள்ள திங்கள்` எனவும், `திங்களின் மேல் நீர் ததும்புதலால் அத் திங்கள் திவள் அம் (துவளுகின்ற ஓர் அழகைச்) செய்கின்ற (உண்டாக்குகின்ற) சடை` எனவும் உரைக்க. தோட்ட - பூ இதழ்போல் அமைந்த. செது நீர் - அலம்புகின்ற நீர்.

பண் :

பாடல் எண் : 7

வண்ணம்
அஞ்சுதலை கவைஇப் பவள மால்வரை
மஞ்சுமின் விலகிப் பகல்செகுக் கும்மே
என்னை
பழமுடைச் சிறுகலத் திடுபலி பெய்வோள்
நெஞ்சகம் பிணிக்கும் வஞ்சமோ உடைத்தே
அஃதான்று
முளையெயிற்றுக் குருளை இன்துயில் எடுப்ப
நடுங்குதலைச் சிறுநிலா விதிர்க்கும்கொடும்பிறைத்
தேமுறு முதிர்சடை இறைவ
மாமுறு கொள்கை மாயமோ உடைத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``முளையெயிற்றுக் குருளை ... சடை இறைவ`` எனபதை முதலிலும், ``அஃதான்று`` என்பதைச் ``செகுக்கும்மே`` என்பதன் பின்னும், ``என்னை`` என்பதை ``உடைத்தே`` என்பதன் பின்னுமாகக் கூட்டியுரைக்க.
`உனது வண்ணம் (நிறம்) உனது ஐந்து தலைகளையும் கவைஇ (மூடி) பவளமால் வரையிடத்துத் தவழும் மஞ்சின் (மேகத்தின்) மின்னல் போல விலகி (இடையிடையே விளங்கி) பகல் ஒளியைச் செகுக்கும். (அழிக்கும்). `பழங்கலம், முடைக் கலம், சிறு கலம்` எனத் தனித்தனி இயைக்க. கலம் - பிச்சைப் பாத்திரம். முடை - முடை நாற்றம் உடையது. இங்ஙனமாயினும் நெஞ்சகத்தைக் கவரும் அதிசயத்தை உடையது. வஞ்சம். இங்கு அதிசயம். இங்ஙனம் ஆகலின் உமது கொள்கை மாயம் உடைத்தாகின்றது. கொள்கை, இங்குத் தன்மை. ஓகாரம் வியப்பு. முறு கொள்கை - முறுகிய (இறுகிய) கொள்கை.
குருளை, பாம்புக் குட்டி, அது சீறுதலால் திங்கள் துயிலெழுந்து நடுங்குகின்றது. `நடுங்குதலையை உடைய பிறை` என்க. நடுங்குதலை, `தலை நடுங்கல்` என்றல் வழக்கு. விதிர்க்கும் - வீசுகின்ற. கொடு - வளைந்த. பிறைத்து - பிறையை உடையது. `பிறையை உடையதாய் ஏமுறு சடை` என்க. ஏமுறு - பல பொருள் கட்கும் பாதுகாவலாகப் பொருந்திய.

பண் :

பாடல் எண் : 8

உடைதலையின் கோவை ஒருவடமோ கொங்கை
புடைமலிந்த வெள்ளெருக்கம் போதோ சடைமுடிமேல்
முன்னாள் பூத்த முகிழ்நிலவோ முக்கணா
இன்னநாள் கண்டதிவள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`முக்கணா` என்பதை முதலிற் கொள்க.இவள் - (உன்மேல் வைத்த காதலால் மெலிகின்ற) இவள். இன்ன நாள் - இன்று. கண்டது - உன்பால் கண்டது. மார்பில் உள்ள தலை மாலையையோ? வெள்ளெருக்கம் பூ மாலையையோ? சடைமேல் உள்ள முதல்நள் தோன்றும் பிறையையோ? என்க. `இவற்றுள் ஒன்றேனும் காதலை விளைக்கும் பொருளாய் இல்லையே` என்பது குறிப்பு. ``தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்`` *- என்பதில் தலைவன். தலைவியர் தம்முள் ஒருவரது இழிபை மற்றவர் தேறாமையும் அடங்கும் ஆதலின் அஃது அவ்வாற்றான் ஆய பெருந்திணைத் தலைவியது ஆற்றாமை கூறித் தோழி தலைவனைக் குறையிரந்தது. ``கொங்கை`` என்பது மார்பைக் குறித்தது. ``கண்டது`` - எனச் செயப்படுபொருள் வினை முதல் போலக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

இவள்அப் பனிமால் இமையத் தணங்குகற் றைச்சடைமேல்
அவள்அப்புத் தேளிர் உலகிற் கரசி அதுகொண்டென்னை
எவளுக்கு நீநல்ல தாரைமுன் எய்திற்றெற் றேயிதுகாண்
தவளப்பொடிச்செக்கர் மேனிமுக் கண்ணுடைச் சங்கரனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியை முதலிற் கொள்க. ``இவள்`` என்றது உமாதேவியைச் சுட்டியதும், ``அவள்`` என்றது கங்காதேவியைச் சுட்டியதும் ஆகும். கங்கையை, `புத்தேளிர் உலகிற்கு அரசி`` என்றது ஆகாய கங்கையாதல் பற்றி. ``அது கொண்டு என்னை`` என்றது, `எவள் உயர்ந்தவள். எவள் தாழ்ந்தவள் என்னும் ஆராய்ச்சியில்லை என்றபடி. எவளுக்கு நீ நல்லது? யாரை முன் எய்திற்று? எற்றே? - என்றது. எவள் உனை விரும்புபவள்? முதலிற் கொள்ளப்பட்டவள் யார்? முன்னர் ஒருத்தியிருக்கப் பின்னர் ஒருத்தியைக் கொண்டது எதற்கு என்றபடி. இவற்றின்பின் `என்னும்` என்பதை வருவித்து. `என்னும் இது கா - என்று எழுகின்ற வினா எழாதபடி பார்த்துக் கொள்` என உரைக்க. `இந்த வினா எழுந்தால் உன்னால் விடையிறுக்க இயலாது` என்பதாம். `இருவருள் ஒருத்தி தான் இவனை விரும்பு பவள்` என்றலும் ஒருத்தி முன், மற்றொருத்தி பின் எனக் கூறுதலும். இருவருள் ஒருத்தியை `மிகை` என்றலும் கூடா என்றபடி. `சிவபிரான் கொள்வன யாவும் உலக நலத்திற்கு இன்றியமையாமை கருதியே` என்பதைக் குறிப்பால் உணர்த்தியவாறு. `நல்லது` என்றது `நல்ல பொருள் என்றபடி. `நல்லை` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும்.

பண் :

பாடல் எண் : 10

கரதலம் நுழைத்த மரகதக் கபாடத்து
அயில்வழங்கு முடுமிக் கயிலை நாடநின்
அணங்குதுயில் எடுப்பிற் பிணங்குநிலாப் பிணையல்
யாமே கண்டதும் இலமே தாமா
மூவா எஃகமும் முரணும்
ஒவாது பயிற்றும் உலகம்மால் உளதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``குடுமி`` என்றது ஆகுபெயராய்ச் சூலத்தைக் குறித்தது. `கரதலம் நுழைத்த சூலம்` என்க. சிவபெருமான் ஏந்தியுள்ள சூலத்தின் மூவிலைகள் உயிர்களின் அறிவு, இச்சை, செயல் இவை களைப் பிணித்துள்ள ஆணவ மலத்தின் சத்தியைப் போக்கும் ஞானேச்சரக் கிரியைகளாகிய சத்திகள் ஆதல் பற்றி, ``மரகதக் கபாடத்து அயில் வழங்கு குடுமி`` என்றார். ``ஆணவமாகும் கபாடமும்`` 1 எனப் பிற்காலத்தில் சிவப்பிரகாச அடிகளும் கூறினார். ``நின் அணங்கு`` என்றது கங்கா தேவியை. துயில் எடுத்தல் - எழுப்பு தல். `எழுப்புதல் பிறையை` என்க. பிறையைக் கங்கை எழுப்புத லாவது மிதக்கச் செய்தல். `மிதக்கச் செய்யும்பொழுது சந்திரனது நிலா ஒளி எங்கும் விளங்குதல் வேண்டுமன்றோ? அங்ஙனம் விளங்க யாம் ஒருபோதும் கண்டதிலம் என்க. பிணையல் - மாலை. ``நிலாப் பிணையல்`` என்றது உருவகம். `இனி, நிலாவாகிய அப் பிணையல் மூவா எஃகமும் (கெடாத சூலப்படையோடு) மூரணும் - மாறுபட்டுத் தோன்றுதலும் செய்யும். ``இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தினை`` 2 - என்றபடி சூலம் கருநிறமாய் இருத்தலின் நிலவு அதனோடு மாறுபடுவ தாயிற்று. ஓவாது பயிற்றும் - உனது சடையில் உள்ள பிறையை இடைவிடாது கண்டு கொண்டிருக்கின்ற. உலகம் மால் உளது - உலகம் திகைப்பை உடையதாகின்றது. `பிறை என்றும் பிறையாகவே உள்ளதன்றி, வளரவில்லையோ என்க` என்றபடி. ``வளருமோ பிள்ளை மதி`` - என அம்மை திருவந்தாதியிலும் 3 கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

உளரொளிய கங்கை ஒலிதிரைகள் மோத
வளரொளிதேய்ந்து உள்வளைந்த தொக்கும் கிளரொளிய
பேதைக் கருங்கட் பிணாவின் மணாளனார்
கோதைப் பிறையின் கொழுந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தனிச்சீர் முதலாகத் தொடங்கியுரைக்க. பேதைப்பிணா, கருங்கட் பிணா` எனத் தனித்தனி இயைக்க. பேதை - `மடம்` என்னும் பெண்மைக் குணம். பிணா - பெண்மான். அஃது உவமையாகு பெயராய். உமா தேவியைக் குறித்தது. மானினது நோக்குப்போலும் நோக்குடைமை பற்றி மகளிரை `மான்` என்றல் வழக்கு. கோதைப் பிறை - கொன்றை மாலையை அடுத்துள்ள பிறை. `பிறையாகிய கொழுந்து` என்க. இன், வேண்டாவழிச் சாரியை. உளர் ஒளி - வீசுகின்ற ஒளி. `ஒளிய திரைகள்` என இயையும். இயல்பாகவே குறைந்த களையினையும், உள் வளைவையும் உடைய பிறைக்கு அவற்றைச் செயற்கை போலக் கூறியது தற்குறிப்பேற்றம்.

பண் :

பாடல் எண் : 12

கொழுந்திரள் தெண்ணில வஞ்சிநின் கூரிருள் வார்பளிங்கின்
செழுந்திரள் குன்றகஞ் சென்றடைந் தால்ஒக்குந் தெவ்வர்நெஞ்சத்
தழுந்திரள் கண்டத் தவளப் பொடிச்செக்கர் மேனிநின்றோர்
எழுந்திரள் சோதி பிழம்பும்என் உள்ளத் திடங்கொண்டவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டிற்கு `எங்கள் பெருமானே` என்னும் விளியை முதற்கண் வருவித்துக் கொண்டு `கூர் இருள், கொழுந்திரள் தெண்ணிலவு அஞ்சி வார் பளிங்கின் செழுந்திரட் குன்றகம் சென்று அடைந்தால் ஒக்கும் நின், தெவ்வர் நெஞ்சத்து அழுந்து கண்டத்துப் (பிழம்பும்) தவளப் பொடிப் (பிழம்பும்), செக்கர் மேனி நின்று எழும் ஓர் திரட் சோதிப் பிழம்பும் என் உள்ளத்து இடம் கொண்ட` என இயைத்து உரைத்துக் கொள்க.
நிலவு, பெருமான் முடிமேல் உள்ளது. கூர் இருள் - உலகத்தில் மிகுந்துள்ள இருள். திருநீற்றினால் பெருமானது திருமேனி பளிங்கு மலைபோல் உள்ளது. அவனது நீலகண்டம் அம்மலையின் ஒருபுடை புகுந்த இருள் போன்றுள்ளது. பெருமானது திருமேனி அவளை வெறுப்பவர்கள் உள்ளங்களில் அழுந்தி அச்சுறுத்துகின்றது. `அழுந்து` என்பது கடைக் குறைந்து நின்றது. ``பிழம்பும்`` என்ற உம்மையால் அஃது ஏனைக் கண்டம், பொடி இவற்றுடனும் சென்று இயைந்தது. ``உள்ளத்து இடம்`` என்னும் ஆறாவதன் தொகையை, `நிலத்தது அகலம்` என்பது போல ஒற்றுமைக் கிழமைப் பொருட்டாகக் கொள்க.

பண் :

பாடல் எண் : 13

கொண்டல் காரெயிற்றுச் செம்மருப் பிறாலின்
புண்படு சிமையத்துப் புலவுநாறு குடுமி
வரையோன் மருக புனலாள் கொழுந
இளையோன் தாதை முதுகாட்டுப் பொருநநின்
நீறாடு பொலங்கழல் பரவ
வேறாங்கு கவர்க்குமோ வீடுதரு நெறியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கொண்டல் - கிழக்குத் திசைக் காற்று. `இதுவே மழையைத் தரும்` என்பது தமிழ்நாட்டு வழக்கம். கார் - மேகம் எயிற்று மருப்பு - பல்லாகிய கொம்பு. மின்னல் இவ்வாறு உருவகம் செய்யப் பட்டது. எனவே, மேகத்தை யானையாக உருவகம் செய்யாமை ஏகதேச உருவகமாயிற்று. செம்மருப்பு, இல்பொருள் உவமை பற்றி வந்த உருவகம். இறால் - தேன் கூடு ``இறாலின் புண்`` எண்பதையும் ``இறாலாகிய புண்`` என விரித்து உருவகமாதல் உணர்க. `மருப்பால் ஆய புண்` என உருபு விரித்துக் கொள்க. சிமயம் - சிகரம். `மேகமாகிய யானையது எயிறாகிய மருப்பினால் உண்டாகிய இறால் ஆகிய புண் பொருந்திய சிகரங்கள்` என்றபடி. இயல்பாகப் பொருந்தியுள்ள தேன் அடையை, `யானை மருப்பால் உண்டாகிய புண்` எனச் செயற்கை யாகக் கூறியது தற்குறிப்பேற்றம். `மேகத்தினது எயிறாகிய கொம்பு` என்றது மின்னலை. `மின்னல் அடிக்கடி தோன்ற அதனிடையே தேனடை காணப்படுவது. அம்மின்னலாய் உண்டான புண்போலத் தோன்றுகின்றது` என்பதாம். சிகரங்களிடை இறந்த விலங்குகளது முடை நாற்றம் மேற்கூறிய புண்ணின் நாற்றமாகக் கூறப்பட்டது. ``குடுமி`` என்பதும் சிகரமே. `புண்படு சிகரம் ஆதலின் புலவு நாறு சிகரமாயிற்று` என்பதாம். இமயமாகிய குடுமியை உடையவரையோன், இமையமலையரசன். புனலாள் - கங்காதேவி. இளையோன் - முருகன். பொருநன் - வீரன். `முதுகாட்டில் செல்லப் பலரும் அஞ்ச, நீ அஞ்சவில்லை` என்றபடி. வேறாங்கு கவர்க்குமோ - வேறுபடுவதாய் இரண்டுபட்டு நிற்குமோ, `சிவபெருமானது திருவடியைத் துதித்தலுக்கு வேறாக வீட்டு நெறி ஒன்று உளதோ` - என்றபடி.

பண் :

பாடல் எண் : 14

நெறிவிரவு கொன்றை நெடும்படற்கீழ்க் கங்கை
எறிதிரைகள் ஈர்த்தெற்ற ஏறிப் பொறிபிதிர
ஈற்றராக் கண்படுக்கும் இண்டைச் சடைச்செங்கண்
ஏற்றரால் தீரும் இடர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நெறி விரவு - ஒழுங்காகப் பொருந்திய `மாலை` எனப் பொருள் தரும். `படலை` என்பது ஈற்று ஐகாரம் தொகுக்கப்பட்டு நின்றது. ஏற்றுதல் - மோதுதல். ஏறி - கங்கையை விட்டுக் கொன்றை மாலை மேல் ஏறி. பொறி பிதிர - புள்ளிக் விளங்கும்படி. ஈற்று அரா - சூல் கொண்ட பாம்பு. ஏற்றர் - இடப வாகனத்தையுடையவர். `ஏற்றாராலே` எனப் பிரிநிலை ஏகாரம் விரித்து. `அவராலேதான் இடர் தீரும். ஏனையோராலே தீராது` - என உரைக்க. இடர், சிறப்பாகப் பிறவித் துன்பம்.

பண் :

பாடல் எண் : 15

இடர்தரு தீவினைக் கெள் கிநை வார்க்குநின் ஈரடியின்
புடைதரு தாமரைப் போதுகொ லாம்சரண் போழருவிப்
படர்தரு கொம்பைப் பவளவண் ணாபரு மாதைமுயங்
கடைதரு செஞ்சுடர்க் கற்றையொக் குஞ்சடை அந்தணனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``போழருவி`` என்பது முதலாகத் தொடங்கி ``பவள வண்ணா`` என்பதை ஈற்றடியிறுதியில் கூட்டி உரைக்க. போழ்தல் நிலத்தை. அருவி - ஆற்று வடிவாய் உள்ள கங்காதேவி. கொம்பை அடைதரு செஞ்சுடர்க் கற்றை பருமாமுதை ஒக்கும் சடை - கங்கையைப் பொருந்தியுள்ள சுடர்க் கற்றையை உடைய, பெரிய முதிர்ந்த கட்டினை ஒக்கும் சடை. முதை - முதிர்ந்த காடு. தீவினைக்கு- தீவினை நிமித்தத்தால். எள்கி - பிறரால் இகழப்பட்டு நைவார்க்குச் சரண் நின் ஈரடியின் தாமரைப் போது கொலாம்` என முடிக்க. சரண் - புகலிடம். ஈரடியின் போது, ஈரடியாகிய மலர். இன், வேண்டாவழிச் சாரியை. புடை - பக்கத்திற் பொருந்திய `இணைந்துள்ள` என்றபடி. `கொல், ஆம்` என்பன அசைகள். `தீவினையால் வருந்துபவர்க்குப் புகலிடமாகத் தக்கன சிவபெருமானது இணையடிகளே` என்றபடி.

பண் :

பாடல் எண் : 16

அந்த ணாளர் செந்தொடை ஓழுக்கமும்
அடலோர் பயிற்றும்நின் சுடர்மொழி ஆண்மையும்
அவுணர் நன்னாட் டிறைவன் ஆகிக்
குறுநெடுந் தானை பரப்பித் தறுகண்
மால்விடை அடரத் தாள்நிமிர்ந் துக்க
காய்சின அரவுநாண் பற்றி நீயோர்
நெடுவரை நெறிய வாங்கிச்
சுடுகணை எரிநிமிர்த்துத் துரந்த ஞான்றே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டிலும் முதற்கண், `எங்கள் பெருமானே` என்னும் விளியை முதற்கண் வருவித்துக் கொண்டு, `நீ, அவுணர் நன்னாட்டு இறைவனாகிக் குறுநெடுந்தானை பரப்பிக் காய்சின அரவு நாண் பற்றி ஓர் நெடுவரை நெளிய வாங்கிச் சுடுகணை எரிநிமிர்த்துத் துரந்த ஞான்று (உனது) மால் விடை தாள் நிமிர்ந்து அடர, ஒழுக்கமும், ஆண்மையும் உக்க` என இயைத்து உரைக்க. அந்தணாளர் செந் தொடை, வேதம். அடலோர் - வீரம் உடையோர். சுடர் மொழி, வரமாக வழங்கிய சொல். அதனால் அவுணர்கள் (திரிபுரத்தவர்) அடைந்த ஆண்மை. அந்த ஆண்மை வீரர் பலராலும் பாராட்டிப் பேசப்பட்டது. `பயிற்றும் ஆண்மை` என இயைக்க. மால்விடை, திருமாலாகிய இடபம். அடர- அது தனது கால்களை நீட்டி உதைக்க. உக்க - சுக்குநூறாகி உதிர்ந்தன. `உக்கன` என்றே பாடம் ஓதுதலும் ஆம். `நீ சுடுகணை துரந்ததன்றியும், உனது விடை அடர்ந்ததனாலும் திரிபுரமும், அதன்கண் இருந்தோர் ஆண்மை உருவின்றிச் சிதறி அழிந்தன` என சிவபெருமானது ஊர்தியின் ஆற்றலைப் புகழ்ந்தவாறு. வேத நெறி பிழைத்தமை காரணமாகச் சிவபெருமான் போர் தொடுத்ததை அங்ஙனம் தொடுத்தபின் நிகழ்ந்தது போலக் கூறினார். எனினும், அஃது அதற்கு முன்பே அழிந்தது` என்பதே கருத்து. இறைவனாகி - `யான் இறைவன்` என்பதைப் புலப்படுத்தி. குறுமை பூதங்களின் உருவம் பற்றியும், நெடுமை மிகுதி பற்றியும் கூறப்பட்டன. ``நிமிர்ந்து`` என்பதை `நிமிர` எனத் திரிக்க. `சுடுகணையால் எரியை நிமிர்த்து அதனைத் துரந்த ஞான்று` என்க

பண் :

பாடல் எண் : 17

ஞான்ற புனமாலை தோளலைப்ப நாண்மதியம்
ஈன்ற நிலவோடும் இவ்வருவான் மூன்றியங்கு
மூதூர் வியன்மாடம் முன்னொருகால் துன்னருந்தீ
மீதூரக் கண்சிவந்த வேந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

புனம் - கொல்லை; முல்லை நிலம். அஃது ஆகுபெயராய்க் கொன்றைப் பூவைக் குறித்தது. `ஞான்ற மாலை` என இயையும். ஞான்ற - தொங்கிய. நாள் மதியம் - முதல் நாட்பிறை. இவ் வருவான் - இப்பொழுதே நம்முன் தோன்றுவான். `வேந்து வருவான்` என்க. மூன்றாய் இயங்கும் மூதூர் திரிபுரம். வியல் மாடம் - அவற்றில் உள்ள மாட மாளிகைகள். ``மாடத்தில்`` என ஏழாவது விரிக்க. ``கண் சிவந்த`` என்றது. `சினந்த` என்றபடி. `இப்பொழுதே வருவான்` என்றது, தமது அன்பு காரணமாக எழுந்த தெளிவினாலாகும்.

பண் :

பாடல் எண் : 18

வேந்துக்க மாக்கடற் சூரன்முன் னாள்பட வென்றிகொண்ட
சேந்தற்குத் தாதையிவ் வையம் அளந்ததெய் வத்திகிரி
ஏந்தற்கு மைத்துனத் தோழனின் தேன்மொழி வள்ளியென்னும்
கூந்தற் கொடிச்சிதன் மாமன்வெம் மால்விடைக் கொற்றவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``வேம் மால் விடைக் கொற்றவன்`` என்பதை முதலில் கூட்டியுரைக்க. `முன்னாள் சூரன் வேம் துக்க மாக்கடல் படவென்றி கொண்ட சேந்தன்` என மாற்றிக் கொள்க. சூரன் இறுதியில் மாவாகி (மாமரம் ஆகி)க் கடல் நடுவில் நின்றான்` என்பர். அஃது உண்மை யன்று. `வேகின்ற துக்கமாகிய பெரிய கடல் நடுவில் பொருந்தினான்` என்பது தான் உண்மை எனச் சொல் நயம்படக் கூறினார். சேந்தன் - முருகன். திகிரி - சக்கரம். `தெய்வத் திகிரி ஏந்தல்` என்பது `மாயோன்` என்னும் ஒரு பெயர்த் தன்மைத்தாய், ``அளந்த`` என்னும் ஒரு பெயரெச்சத்திற்கு முடிவாயிற்று. `வள்ளி என்னும் கொடிச்சி` எனவும், `கூந்தற் கொடிச்சி` எனவும் தனித் தனி முடிக்க. கொடிச்சி - குறத்தி.

பண் :

பாடல் எண் : 19

கொற்றத் துப்பின் பொற்றை ஈன்ற
சுணங்கையஞ் செல்வத் தணங்குதரு முதுகாட்டுப்
பேய்முதிர் ஆயத்துப் பிணவின் கொழுநநின்
ஏர்கழல் கவைஇ இலங்கிதழ்த் தாமம்
தவழ்தரு புனல்தலைப் படுநர்
அவல மாக்கடல் அழுந்தலோ இலரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கொற்றத் துப்பின் - வெற்றிக்கு ஏதுவான வலிமையை உடையவளும், பொற்றை ஈன்ற - மலையால் (மலை யசரசனால்) பெறப்பட்டவளும். சுணங்கு அம் செல்வத்து - தேமலின் அழகாகிய செல்வத்தை உடையவளும், (ஐ சாரியை) அணங்கு தரு முதுகாட்டு - அச்சத்தைத் தருகின்ற முதுகாட்டின்கண் வாழ்பவளும். பேய் முதிர் ஆயத்து - பேய்களாகிய முற்றிய சுற்றத்தை உடையவளும் ஆகிய பிணவின் கொழுந - மான் போன்றவளுக்குக் கணவனே. இங்ஙனம் வருணிக்கப்பட்டவள் காடுகிழாள். இவளும் சத்தியின் கூறாதல் பற்றி `மலையரையனால் பெறப்பட்டவள்` என்றார். பொற்றை - மலை. `ஒற்றை` என்பது பாடம் அன்று. ஏர் கழல்- அழகிய திருவடியை. கவைஇ - சூழ்ந்து. தாமம் தவழ் தரு புனல் - பூக்கள் மிதக்கின்ற நீர். தலைப்படுநர் - தங்கள் தலையிலே உறப் பெற்றவர்கள். ``அழுந்தலோ`` என்னும் ஓகாரம் சிறப்பு. `சிவபெருமானுடைய பாத தீர்த்தம் தலையிலே படப்பெற்றவர்களது துன்பங்கள் நீங்கியொழியும்` என்பது கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 20

இலர்கொலாம் என்றிளைஞர் ஏசப் பலிக்கென்
றுலகெலாஞ் சென்றுழல்வ ரேனும் மலர்குலாம்
திங்கட் குறுந்தெரியல் தேவர்காட் செய்வதே
எங்கட் குறும் தெரியின் ஈண்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இளைஞர் - அறிவு முதிரப் பெறாதவர்கள். இலர் என்று ஏச - `இவர் யாதோன்றும் இலராகிய நிச்சல் நிரப்புடையர்` என்று சொல்லி இகழும்படி. தெரியின் - ஆராய்ந்து பார்த்தல். குறுந் தெரியல் - சிறிய மாலைக் கண்ணி. ஈண்டு எங்கட்கு உறும் - இப்பிறப்பில் எங்கட்கு நன்மை தருவதாகும். `அறிவு முதிர்ந்தோர் இகழ்தல் கண்டு யாமும் அது செய்யோம்` என்றபடி.
புத்தரோடு பொறியில் சமணும் புறங்கூற
நெறிநில்லா
ஒத்தசொல்ல உலகம் பலிதேர்ந்து எனது
உள்ளம் கவர் கள்வன்` 1
எனவும்,
புத்தரும், சமணரும் புறன் உரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே 2
எனவும் ஞானசம்பந்தரும் அருளிச்செய்தார். கோல், ஆம் அசைகள்.

பண் :

பாடல் எண் : 21

ஈண்டுமுற் றத்தொற்றை மால்விடை ஏறியை அம்முனைநாள்
வேண்டிமுற் றத்திரிந் தெங்கும் பெறாது வெறுங்கைவந்தார்
பூண்டவொற் றைச்செங்கண் ஆரமும் கற்றைச் சடைப்புனலும்
நீண்டஒற் றைப்பிறைக் கீளும்எப் போதுமென் நெஞ்சத்தவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈண்டு முற்றத்து - `இவ்வுலகமாகிய முற்றத்திலே (வெற்ற வெளியான இடத்திலே) முற்றத் திரிந்து` என இயைக்க. `முற்றத் திரிந்து, அம் முனைநாள், விசை ஏறியை எங்கும் பெறாது வெறுங் கை வந்தார்` என்க. முனைநாள் - முன்னை நாள். பெறாது - காணப் பெறாமல். `மாலும், அயனுமாகிய இரு பெருந் தேவர்கள்` என்பதைச் சொல்லாமற் சொல்லக் கருதி அத்தொடரைத் தோன்றா எழுவாயாக வைத்தார். செங்கண் - சிவந்த கண்; நெருப்புக்கண். ஆரம் - எலும்பு மாலை. `செங்கண்` என்பதிலும் உம்மை விரித்து, `ஒற்றைச் செங்கண்ணும், பூண்ட ஆரமும் ... கீளும் எப்போதும் என நெஞ்சத்தவே` என இயைத்து முடிக்க. `மாலும், அயனும் எத்துணை முயன்று தேடியும் காணப்படாத முதல்வன் என் நெஞ்சத்தில் எப்பொழுதும் குடிகொண்டுள்ளான்` எனத் தாம் பெற்ற பேற்றினை வியந்துரைத்தவாறு.

பண் :

பாடல் எண் : 22

நெஞ்சிற் கொண்ட வஞ்சமோ உடைத்தே
மடவோர் விரும்புநின் விளையாட் டியல்போ
மருள்புரி கொள்கைநின் தெருளா மையோ
யாதா கியதோ எந்தை நீதியென்
றுடைதலை நெடுநிலா வெறியல்
கடைதலென் றருளிச் சூடிய பொருளே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``எந்தை`` என்பது முதலாகத் தொடங்கி, முதல் அடியை இறுதியில் வைத்து முடிக்க எந்தை. விளி, நீதி இங்குத் தகுதியைக் குறித்தது. வெறியல் - மாலை. கடைதல் - மார்பின்கண் அசைதல். உடை தலை மாலை மார்பின்கண் அசைதலைத் தகுதி யென்று அருளிச் சூடிய பொருள் விளையாட்டியல்போ? தெருளா மையோ? (இவ்விரண்டுமாய் இருத்தல் இயலாது. ஆகையால்) ஒரு வஞ்சமோ உடைத்து` என முடிக்க. `தலை மாலை சூடிக் கொள்ளுதலை ஒரு விளையாட்டாகக் கருதுதல் மடவோர் இயல்பாகும்` என்பார், ``மடவோர் விரும்பு விளையாட்டு`` என்றார். தெருளாமையாகிய மருள்புரி கொள்கையோ` என மாற்றியுரைத்தல் கருத்து என்க. ``அருளி`` என்றது, `உனது செயல்கள் யாவும் அருள் காரணமாகவே நிகழும் ஆதலால் இன்னதோர் அருளைக் கொண்டு` என்றபடி. பொருள் - கருத்து. பழிப்பது போலப் புகழ்தல் வேண்டி ``வஞ்சம்`` என்றார் ஆகலின், ``ஆழ்ந்ததோர் கருத்து`` என்பதே அதன் உண்மைப் பொருளாம். ஓகாரம் சிறப்பு. அக்கருத்தாவது, தனது நித்தியத் தன்மையை உயிர்கட்கு உணர்த்துதலாம்.

பண் :

பாடல் எண் : 23

பொருளாக யானிரந்தால் புல்லெருக்கின் போதும்
அருளான்மற் றல்லாதார் வேண்டின் தெருளாத
பான்மறா மான்மறிக்கைப் பைங்கண் பகட்டுரியான்
தான்மறான் பைங்கொன்றைத் தார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``தெருளாத ... பகட்டுரியான்`` என்பதை முதலிற் கொள்க. மறி - கன்று. `தெருளாத மறி, பால் மறா மறி` எனத் தனித் தனி முடிக்க. ``தெருளாத`` என்றதும், ``பால் மறா`` என்றதும் குழவிப் பருவத்தைக் குறித்தவாறு. பகடு - யானை. `பைங்கண் பகடு` என்க. பொருளாக - இன்றியமையாப் பொருளாக. மற்று. அசை. அல்லாதார்- யான் தவிர ஏனையோர். `பைங்கொன்றைத் தாரையும் தான் மறான்` என்க. உம்மை தொகுத்தலாயிற்று. மறான் - மறுக்கமாட்டான். இது தூது செல்லுமாறு வேண்டி தலைவிக்குத் தோழி தலைவனது அன்பின்மை கூறி இயற்பழித்தது.

பண் :

பாடல் எண் : 24

தாரிளங் கொன்றைநல் ஏறு கடாவித் தலைமைமிக்க
ஏரிள மென்முலைப் பொன்மலை யாட்டிக்கெற் றேயிவனோர்
பேரிளங் கொங்கைப் பிணாவொடுங் கூடிப் பிறைக்கொழுந்தின்
ஒரிளந் துண்டஞ் சுமந்தையம் வேண்டி உழிதருமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``இவன் ஓர்`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. அங்ஙனம் உரைக்குங்கால் ``நல் ஏறு கடாவி`` என்பதை ``ஐயம் வேண்டி உழிதரும்`` என்பதற்கு முன்னர்க் கூட்டுக. ``ஓர் பேரிளங் கொங்கைப் பிணா`` என்றது கங்காதேவியை. `இவன் இத்தகையனாய் இருத்தலால் தலைமை மிக்க பொன் வழங்கியதனால் என்ன பயன்? என்றபடி. பொன் மலையாட்டி, உமாதேவி. `அவரே பெருந்தேவி` என்றற்கு ``தலைமை மிக்க`` என்றார்.

பண் :

பாடல் எண் : 25

உழிதரல் மடிந்து கழுதுகண் படுக்கும்
இடருறு முதுகாட்டுச் சீரியல் பெரும
புகர்முகத் ததுளைக்கை உரவோன் தாதை
நெடியோன் பாகநின்
சுடர்மொழி ஆண்மை பயிற்று நாவலர்க்
கிடர்தரு தீவினை கெடுத்தலோ எளிதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உழிதரல் மடிந்து - அலைவதினின்றும் ஓய்வுபெற்று. கழுது - பேய். சீர் இயல் பெரும - நடனம் புரிகின்ற பெருமானே. சீர் - தாளம். `தாளத்திற்கு இசை நடனம் ஆடுபவன்` என்றபடி. புகர் முகத் துளைக்கை உரவோன். யானை முகக் கடவுள். நெடியோன் பாக - திருமாலை ஒரு பாகத்தில் உடையவனே. நின் சுடர் மொழி ஆண்மை- வேதத்தை ஆளும் தன்மை. அஃதாவது, வேத நெறிப்படி உன்னை மன மொழிமெய்களால் வழிபடுந்தன்மை. ``பயிற்றும்`` - என்பது தன் வினை பிறவினை இரண்டற்கும் பொதுவாய் நின்றது. ஓகாரம், சிறப்பு.

பண் :

பாடல் எண் : 26

எளியமென் றெள்கி இகழாது நாளும்
அளியம்ஆட் செய்தாலும் ஐயோ தெளிவரிய
வள்கயிலை நீள்பொருப்ப வான்தோய் மதிச்சடையாய்
கொள்கயிலை எம்பாற் குறை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தனிச் சீரிலிருந்து தொடங்கி, ஈற்றடியை இறுதியில் வைத்து உரைக்க. வள்ளன்மையைக் குறிக்கும் `வள்ளல்` என்பது ஈறு குறைந்து, முதனிலையளவாய் நின்றது. வள்ளன்மையைப் பொருப் பிற்கு ஏற்றினும்,பொருப்பற்கு ஏற்றினும் பொருந்தும். எளியம் என்று ஏற்கி இகழாது - `யாம் சிவனுக்கு செய்யும் அளவிற்குத் தகுதியுடையமோ` என்று `எங்களை நாங்களே இகழ்ந்துகொண்டு, அது பற்றி உனக்கு ஆட்செய்தலை ஒழியாது செய்தாலும் நீ எங்கள் பால் உள்ள குறைபாட்டினை கருத்திற் கொள்கின்றாய் இல்லை (கருத்திற் கொண்டு தீர்க்கின்றிலை) என்க. `கொள்கையிலே` என்பது, ``கொள்கயிலை`` எனப் போலியாய் வந்தது. `எம்மாற் குறை` என்ப தும் பாடம். அதற்கு, `குறை - பணி` என்பது பொருளாகும்.

பண் :

பாடல் எண் : 27

குரையாப் பலியிவை கொள்கவென் கோல்வளை யுங்கலையும்
திறையாக்கொண் டாயினிச் செய்வதென் தெய்வக்கங் கைப்புனலில்
பொறையாய் ஒருகடல் நஞ்சுண்ட கண்டா பொடியணிந்த
இறைவா இடுபிணக் காடசெம் மேனியெம் வேதியனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``தெய்வக் கங்கை`` - என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. ``கடல்`` என வருதலால், ``பொறை`` என்பது கடலில் உள்ள நீரைக் குறித்தது. ``ஆகாயத்தில் உள்ள தெய்வக் கங்கையில் தனது நீர் எழுந்து பாய்வதாகிய ஒரு கடல்`` என்க. `இறைவன்` என்பது `இறையன்` எனவும் வரும். `இறையனார்` என்பதை நினைக. விளியேற்குங்கால் `இறைவன்` என்பது `இறைவா` என வந்தது. `என் பலியாகிய இவைகளைக் கொள்க. இவற்றை விடுத்து என் வளையையும், கலையையும் கொண்டாய், என் செய்வது! என்க. பலி - பிச்சை. இது கைக்கிளைத் தலைவி தலைவனை நெருங்கிக் கூறியது

பண் :

பாடல் எண் : 28

வேதியர் பெரும விண்ணோர் தலைவ
ஆதி நான்முகத் தண்ட வாண
செக்கர் நான்மறைப் புத்தேள் நாட
காய்சின மழவிடைப் பாகநின்
மூவிலை நெடுவேல் பாடுதும்
நாவலம் பெருமை நல்குவோய் எனவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வேதியர் - நிலத் தேவர்; பூசுரர், விண்ணோர் - வானத் தேவர். நான்முகத்து அண்டம் - பிரமாண்டம். `அதன் முழு இடத்திலும் நிறைந்துள்ளாய்` என்றற்கு ``நான்முகத்து அண்டவாண``- என்றார். ``நாடு`` என்றது உலகத்தை; அது சத்திய லோகம். `அது செம்பொன் நிறத்தது` என்றற்கு. ``செக்கர் நாடு`` என்றார். விடை திருமால் ஆதலின் ``அதன் பாக`` என்றதனானே வைகுந்தத்தில் நிறைந்தமை சொல்ல வேண்டாவாயிற்று. நாவல் பெருமை - நாவால் வலியராம் பெருமை. அது தம்மால் மொழியப்படும் மொழிகள் யாவும் நிறைமொழிகளாய்ப் பயன்தருதல். எனவே, `அருளாளர்கள் மொழியும் மொழிகள் நிறைமொழிகளாய் நின்று பயன் தருதல், இறைவனது அருளாற்றல் அம் மொழிகளில் கலந்து நின்று இயக்குதலானே` என்பது அறியப்படும். ``நல்குவோய்`` என்பது முற்று.

பண் :

பாடல் எண் : 29

எனவே உலகெலாம் என்றிளைஞர் ஏச
நனவே பலிதிரிதி நாளும் சினவேங்கைக்
கார்க்கயிலை நாட களிற்றீர் உரியலாற்
போர்க்கையிலை பேசல்நீ பொய்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``சின வேங்கைக் கார்க் கயிலை நாட`` என்பதை முதலிற் கொள்க. சின வேங்கை - புலி. கார் - மேகம். `இவைகளை யுடைய கயிலை` என்க. ``நாடு`` என்றது, `இடம்` என்றபடி. எனவே இளைஞர் - எடுத்துச் சொல்லப் புகுங்கால் உலகியலில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர்கள் இகழ்ந்தே கூறும்படி `(நீ) நாளும் நனவே உலகெலாம் பலிதிரிந்து` என்க. ``நனவே`` என்றது, ``யாவரும் நன்கறியும்படி`` என்றவாறு. `அதுவன்றி, நீ போர்க்கை களிற்று உரியலால் இலை; `அங்ஙனமாக - யான் பேரைசுவரியம் உடையவன் - என்று உன்னை நீயே உயர்த்திப் பேசிக் கொள்ளுதல் வேண்டா` என்க. `ஐசுவரியம் உடையேன்` எனக் கூறிக்கொள்ளுதல் `என் பெயர் ஈசுவரன்; (இன்னும்) மகேசுரன்` என்று சொல்லிக் கொள்ளுதல். பேசல் - பேசற்க. இனி இதனைத் தொழிற் பெயராக்கி. `நீ பேசல் பொய்` என முடிக்கினும் ஆம். அன்றி, `பேசேல்` எனப் பாடம் ஓதலும் ஆம்.

பண் :

பாடல் எண் : 30

பொய்நீர் உரைசெய்தீர் பொய்யோம் பலியெனப் போனபின்னை
இந்நீள் கடைக்கென்று வந்தறி யீரினிச்
செய்வதென்னே செந்நீர் வளர்சடைத் திங்கட் பிளவொடு கங்கைவைத்த
முந்நீர்ப் பவளத் திரட்செக்கர் ஒக்கும் முதலவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``செந்நீர் வளர்சடை`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. செந்நீர் - சிவந்த நீர்மை. செந்நிறம். `வைத்த முதல்வன்` என இயையும். `திரளினது செக்கர்` என ஆறாவது விரிக்க. ``நீர்``, ``செய்தீர்``, ``அறியீர்`` என்பன எள்ளல் பற்றி வந்த பன்மையாகலின் அவை ``முதல்வனே`` என்னும் ஒருமையோடு மயங்கின. ``பொய் நீர் உரை செய்தீர்`` என்பதை, ``செய்வது என்னே`` என்பதற்கு முன்னே கூட்டுக. பல் பொய்யோம் - நாள்தோறும் பிச்சைக்கு வருதலைப் பிழையோம். இஃது ஒருநாள் பிச்சைக்கு வந்த இறைவன் கூறியது. அங்ஙனம் கூறியதை நிறைவேற்றாமையால் `நீர் பொய் உரை செய்தீர்; செய்வது என்னே` என்றாள். கடை - தலைவாயில். இது கைக்கிளைத் தலைவி ஆற்றாமையால் தலைவனை எதிர் பெய்துகொண்டு கூறியது. ``முதலவனே`` என வந்த இதன் இறுதிச் சீர் இதன் முதல் செய்யுள் முதலோடு சென்று மண்டலித்தல் காண்க. சிவபெருமான் திருமும்மணிக்கோவை முற்றிற்று.

பண் :

பாடல் எண் : 1

ஒருநெடுங் கங்கை இருங்குறும் பைம்புகர்
மும்முகச் செந்நுதி நாலிணர் வெள்நிணக்
குடற்புலவு கமழும் அடற்கழுப் படையவன்
மதலை மாமதந் துவன்றிய கதனுடைக்
கடதடக் கபோலத் தோரிட மருப்பின்
கரண்டக உதரத்து முரண்தரு குழவிதன்
சேவடி யுகளம் அல்லது
யாவையும் இலம்இனி இருநிலத் திடையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதன் முதல் மூன்று அடிகளும் சிவபெருமானைக் குறித்தன. ``இருங்குறும் பைம்புக.. கழுப்படை`` என்னும் தொடர் சிவபெருமான் ஏந்தியுள்ள சூலத்தைக் குறித்தது. இருமை - கருமை. அஃது மையீறு இன்றி நின்றமையின் மெல்லினம் மிகுந்தது. குறுமை - சிறுமை. பசுமை - ஈரம். அது பகைவர் உடலில் பாய்ந்து புலராமையால் ஆயிற்று. புகர் - அழகு. நுதி - முனை. அஃது உதிரத்தால் சிவந்து நின்றது. நாலுதல் - தொங்குதல். நுதியிலே நாறுகின்ற. இணர் - கொத்தாகிய குடல் என்க. நிணம் - கொழுப்பு. குடல் பகைவ ருடையன. கமழும் - நாறுகின்ற. இவ்வளவும் சூலத்திற்கு அடை. மதலை - மகன். துவன்றுதல் - நெருங்குதல். அஃது இங்கே மிகுந்து பாய்தலைக் குறித்தது. கதன் - கதம், கோபம். கடம் - மதநீர்; தட - பெரிய, கபோலம் - கன்னம். வல மருப்புக் கயமுகாசுரனை அழிக்க ஒடிக்கப்பட்டது. ஆகலின், ``இட மருப்பின்`` என்றார். கரண்டக உதரம் - கூடை போலும் வயிறு. ``சிற்றுண்டிகள் பலவற்றால் நிரம்பி யது` என்றபடி. `கதனுடைக் குழவி. கபோலக் குழவி, மருப்பிற்குழவி, உதரத்துக் குழவி என முடிக்க. முரண் - வலிமை. யுகளம் - இணை. யாவையும் - அனைத்துப் பொருள்களின்மேல் உள்ள பற்றுக்களும் ஆகுபெயர். இதன்கண் ஒன்று முதல் நால் அளவான எண்ணலங்காரம் வந்தது. ``செந்நுதி வெள்நிணம்`` முரண் தொடை.

பண் :

பாடல் எண் : 2

நிலந்துளங்க மேருத் துளங்க நெடுவான்
தலந்துளங்கச் சப்பாணி கொட்டும் கலந்துளங்கொள்
காமாரி ஈன்ற கருங்கைக் கடதடத்து
மாமாரி ஈன்ற மணி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தனிச்சீர் முதலாகத் தொடங்கியுரைக்க. காமாரி - காமனை அழித்தவன்; சிவபெருமான். `அன்பர்கள் உள்ளத்தில் கலந்து அவற்றை இடமாகக் கொள்கின்ற காமாரி` என்க. கருமை - பெருமை. கடம் - மதம். தட - பெருமை. `தடத்துக் கடம்` பின் முன்னாக மாற்றி யுரைக்க. கடமாகிய மாரி, உருவகம். மணி - இரத்தினம் போலும் பிள்ளை. சப்பாணி கொட்டுதல், குழந்தைகள் தங்கள் இரு கைகளையும் சேர்த்துக் கொட்டும் விளையாட்டு. `இச்சிறு பிள்ளையின் சப்பாணி கொட்டுக்கு உலகம் அதிரும்` என தன் ஆற்றலை வியந்தவாறு. `சக பாணி` ``சப்பாணி`` என மருவிற்று.

பண் :

பாடல் எண் : 3

மணிசிந்து கங்கைதன் மானக் குருளையை வாளரக்கர்
அணிசிந்த வென்றஎம் ஐயர்க்க கிளங்கன்றை அங்கரும்பின்
துனிசிந்த வாய்ப்பெய்த போதகத் தைத்தொடர்ந் தோர்பிறவித்
பிணிசிந்து கான்முனை யைப்பிடித் தோர்க்கில்லை பேதுறலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சிவபெருமானுக்கு மகனாகவே கங்கைக்கும் மகன் ஆயினான். மானம் - பெருமை. அரக்கர். திரிபுரத்து அசுரர். அவர் களது அணி படைகள். `இளங் கன்று` என்பதில் இளமை, பருவத்தைக் குறித்தது; குறையைக் குறித்த தன்று. துணி - துண்டு. போதகம் - யானை. தொடர்ந்தோர் - அன்பு செய்தோர். `தன்னைத் தொடர்ந் தோர்` என்க. பிணி சிந்து - நோயை அழிக்கின்ற. கான்முனை - பிள்ளை. பேதுறல் - மயங்கல். ``பேதுறல் இல்லை`` என்றது. `தெளிவு உண்டாகும்`` என்றபடி.

பண் :

பாடல் எண் : 4

பேதுறு தகையம் அல்லம் தீதுறச்
செக்கர்க் குஞ்சிக் கருநிறத் தொக்கன்
நாப்பண்
புக்கவண் இரும்பொறித் தடக்கையும்
முரணிய பெருந்தோள்
கொட்ட நாவி தேவிதன்
மட்டுகு தெரியல் அடிமணந் தனமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதல் அடியை, தீதுறப் பேதுறு தகையமல்லம்` என மாற்றி இறுதியில் வைத்துரைக்க. ``குஞ்சி`` என்றது சடையை. `துவக்கு` என்னும் வடசொல் `தொக்கு` எனத் திரிந்து வந்தது. `தோல்` என்பது பொருள். தோல், யானைத் தோல். தொக்கன் - அத்தோலைப் போர்த் திருப்பவன். ``நாப்பண்`` என்றது. `அவனுக்கும், உமைக்கும் நடுவில்` என்றதாம். பொறி - புள்ளி. தடக்கை - வளைந்த கை - தும்பிக்கை. முரணிய - மற்றைக் கைகளோடு மாறுபட. ``கொட்ட`` என்பதன்பின், `விளங்கும்` என ஒரு சொல் வருவிக்க. `நாபி` என்னும் வடசொல் `நாவி` எனத் திரிந்து வந்தது. நாபி - கொப்பூழ். அஃது ஆகுபெயராய் வயிற்றைக் குறித்தது. `வயிறு` என்னும் விதப்பால் `பெருவயிறு` என்பது பெறப்பட்டது. தே - கடவுள். `தேவாகிய இதன் அடி மணந் தனம்` என்க. தே, சொல்லால் அஃறிணையாதலின், ``இதன்`` என்றார். மட்டு உகு தெரியல் - தேனைச் சிந்துகின்ற பூமாலை. மணந்தனம் - கூடினோம். அதனால் `தீது அடைதலால் பேதுறு தகையமல்லமாயி னோம்` என்க. பேதுறல் - வருந்தல். `அல்லது` என்பது பாடம் அன்று.

பண் :

பாடல் எண் : 5

மேய உருமிடற்றர் வெள்ளெயிற்றர் திண்சேனை
ஒய மணியூசல் ஆடின்றே பாய
மழைசெவிக்காற் றுந்திய வாளமர்க்கண் எந்தை
தழைசெவிக்காற் றுந்தத் தளர்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வாளமர்க்கண், பாய மழை செவிக் காற்று உந்திய, எந்தை தழை செவிக் காற்று உந்த, மேய ... ... திண் சேனை தளர்ந்து ஓய ஊசலாடின்று என இயைத்துக் கொள்க. உரும் - இடி. அஃது அதனோடு ஒத்த ஓசையைக் குறித்தது. ``எயிறு`` என்றது. கோரப் பல்லை. சேனை. கயமுகாசுரனுடன் வந்தது. ஓய - போரை ஒழியும்படி. மணி ஊசல் - அழகிய ஊசல் போல. ``ஆடின்று`` என்பதில் `இன்` என்பதன் ஈற்று னகர மெய் றகர மெய்யாய்த் திரியாதே நின்றது; இது முற்கால வழக்கு. ``மழை செவி`` என்பதில் `செவ்வி` என்பது இடைக்குறையாய் வந்தது. சகர ஒற்றுத் தொகுத்தல். பா - பரவிய. `பரவிய மழைச் செவ்வியை உண்டாக்கும் இயற்கைக் காற்றை வென்ற எந்தையது தழை செவிக்காற்று உந்தியதனாலே சேனை தளர்ந்து ஓய ஊசலாடின்று` என முடிக்க.

பண் :

பாடல் எண் : 6

உந்தத் தளரா வளைத்தனம் முன்னம்மின் ஒடைநெற்றிச்
சந்தத் தளரா ஒருதனித் தெவ்வர்தந் தாளிரியூர்
விந்தத் தளரா மருங்குற் கிளிபெற்ற வேழக்கன்றின்
மந்தத் தளரா மலர்ச்சர ணங்கள் வழுத்துமினே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஊர் விந்தத்தள் - தனது இருப்பிடமாக விந்த மலையைக் கொண்டவள்; துர்க்கை - இவள் உமாதேவியின் கூறாதல் பற்றி `முருகனை இவளுக்கு மகன்` எனக் கூறுதல் போல, மூத்த பிள்ளையாரையும் `இவளுக்கு மகன்` என்றார். அரா மருங்கு - பாம்பு போலும் இடை. `இவள் பெற்ற` என்பதன்பின் ``ஓடை நெற்றிச் சந்தம்`` என்பதையும், ``தாள் இரி`` என்பதையும் கூட்டி, வேழக் கன்று`` என்பதற்கு அடையாக்குக. உந்த - வெளிப்படுத்த. தளரா வளைத்தன- தளர்ச்சியடையாது எல்லாப் பொருள்களையும் உள்ளடக்குவன வாகிய ஒளிக்கதிர்கள். முன்னம் மின் ஓடை நெற்றிச் சந்தம் - முன்னே மின்னுகின்ற பட்டத்தையுடைய நெற்றியின் அழகு. தனித் தெவ்வர் தம் தாள் இரி - ஒப்பற்ற பகைவரது முயற்சிகளைப் பின்னிட்டு ஓடும்படி ஓட்டிய. மந்தம் - மெல்ல நடக்கின்ற. (ஆயினும்) தளரா - மெலி வடையாத சரணங்கள் (பாதங்கள்) என்க. வழுத்துதல் - துதித்தல். ``வழுத்துமின்`` என்றது. `வழுத்தினால் எந்நலமும் பெறுவீர்` என்னும் குறிப்பினது.

பண் :

பாடல் எண் : 7

மின்னெடுங் கொண்டல் அந்நெடு முழக்கத்து
ஒவற விளங்கிய துளைக்கைக் கடவுளை
யாம்மிக வழுத்துவ தெவனோ அவனேல்
பிறந்ததிவ் வுலகின் பெருமூ தாதை
உரந்தரு சிரமரிந் தவற்கே வரைந்தது
மேருச் சிமையத்து மீமிசை
வாரிச் செல்வன் மகள்மகன் மொழியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மேகத்தின் முழக்கம் போலும் முழக்கத்துடன் என்றும் ஒரு பெற்றியனாய் விளங்கும் யானைமுகக் கடவுளை (எமக்கு அருளவேண்டி) யாம் மிகவும் துதிக்க வேண்டுவதில்லை. ஏனெனில், அவன் பிறந்தது, இவ்வுலகம் முழுவதையும் படைத்தவனது அகங் கரித்த தலையை அரிந்தவனுக்கு, எழுதியது. மேருமலையாகிய ஏட்டில் வலைஞர் தலைவன் மகளுக்கு மகனது மொழியை - என்பது இதன் திரண்ட பொருள். `தந்தையது ஆற்றல் இவனிடத்தும் உளதாதலும், வலைஞர் தலைவன் பெயரன் சொல்லத்தான் ஏடுஎழுதுவோனாய் இருந்து எழுதிய அருளாளன் ஆதலாலும், ஆற்றலும், அருளும் ஒருங்குடையோர் தம்மையடைந்த எளியவர்க்கு இரங்கியருளல் இயல் பாதலும் யாம் `உமக்கு அருளுக` என மிகவும் வேண்ட வேண்டுவதில்லை. அவனேயருளுவன் என்பதாம். வலைஞர் தலைவன் மகளுக்கு மகன் வியாத முனிவன்; அவன் மொழி மகாபாரதம். `மகா பாரதத்தை வியாத முனிவன் சொல்ல, விநாயகப் பெருமான் சிவபெருமானது ஆணையின் வண்ணம் தாம் முன்பே ஒடித்து வைத்திருந்த தந்தத்தை எழுத்தாணியாகவும், மகாமேரு மலையை ஏடாகவும் கொண்டு எழுதினார் என்பது இவ்விதிகாச வரலாறு.

பண் :

பாடல் எண் : 8

மொழியின் மறைமுதலே முந்நயனத் தேறே
கழிய வருபொருளே கண்ணே செழிய
கலாலயனே எங்கள் கணபதியே நின்னை
அலாலையனே சூழாதென் அன்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மறைமொழியின் முதல், பிரணவம். விநாயகர் பிரணவ வடிவாய் உள்ளவர். `அவர் தோன்றியதே பிரணவத்திலிருந்து` என்பது வரலாறு. * `மறை மொழியின் முதலே` என மாற்றியுரைக்க. முந் நயனம் - மூன்று கண். ஏறு - ஆண் சிங்கம். கழிய வரு பொருள் - பாசங்கள் யாவும் நீங்கிய பின் கிடைக்கும் பொருள்; முதற் கடவுள். கண்ணே - எங்களுக்குக் கண்போல இருந்து எல்லாவற்றையும் அறிவிப்பவனே. செழியகலாலயனே - பொருள் நிறைந்த கலைகளுக்கெல்லாம் இருப்பிடமாய் உள்ளவனே.

பண் :

பாடல் எண் : 9

அன்பு தவச்சுற்றத் தாரழல் கொண்டெயில் மூன்றெரிய
வன்புத வத்துந்தை மாட்டுகின் றான்மதஞ் சூழ்மருப்பிற்
கன்பு தவக்கரத் தாளமிட் டோடிக் கடுநடையிட்
கின்பு தவச்சென்று நீயன்று காத்த தியம்புகவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அன்பு தவச் சுற்றம் - அன்பை மிகுதியாக உடைய சுற்றம்; அது தேவர் குழாம். `அசுரர்கள் அன்பில்லாதவர்கள்` என்பது கருத்து. சுற்றத்து - சுற்றத்தால்; சுற்றம் காரணமாக. `எரிய மாட்டு கின்றான். என இயையும். `மாட்டுகின்றான்` என்றது இறந்த காலத்தில் நிகழ்காலம். எனவே, `அன்று மாட்டுகின்றான்` என்றபடி. மாட்டு கின்றான் - எரிக்கின்றான். வன்பு தவத்து - வலிமை மிகுதியால் மாட்டு கின்றான் என்க. அன்று நீ காத்தது இயம்புக - அது பொழுது (வலிமை மிகுந்த) நீ அவனுக்கு என்ன உதவி செய்தாய்? சொல்லுக. `தந்தை போரில் ஈடுபடும்பொழுது மைந்தர் அவனுக்கு உதவ வேண்டுவது முறைமையன்றோ` என்றபடி `நீ அன்று அவனுக்கு உதவியது, அவனுடைய தேரினது அச்சை முறித்ததுதானோ` எனக் குறிப்பால் பழித்தவாறு, இது பழித்தது போலப் புகழ்ந்தது. `யாவர்க்கும் முதல்வ னாகிய சிவபெருமானது தேரின் அச்சையே நீ முறித்து விட்டாய்` என்றால், உனது ஆற்றல் முன் பிறர் ஆற்றல் என்னாம் என்பதாம். கன் புதவம் - கல்லால் ஆகிய கோபுர வாயிற் கதவு. `புதவின்கண்` என ஏழாவது விரிக்க. அரசர்கள் பகைவரது ஊரை முற்றுகையிடும் பொழுது அவர்களது கோட்டை வாயிற் கதவுகளை யானைகளை ஏவி உடைக்கச் செய்வது வழக்கம். அம்முறையில் நீயே வலிய யானை யாய் இருத்தலால் திரிபுரத்தசுரன் கோட்டை வாசலின்மேல், ``கரத் தாளமிட்டுக் கடுநடையிட்டு ஓடி இன்பு உதவச் சென்று மருப்பின் உதவியது உண்டோ` என்பதும் உடன் கூறியவாறு. மருப்பு - தந்தம்.

பண் :

பாடல் எண் : 10

கவவுமணிக் கேடகக் கங்கணக் கவைவல்நா
அறைகழல் அவுணரொடு பொருத ஞான்றுநின்
புழைக்கரம் உயிர்த்த அழற்பேர் ஊதை
வரைநனி கீறி மூரி
அஞ்செறு புலர்த்தும் என்பர்
மஞ்சேறு கயிலை மலைகிழ வோயே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியை முதலிற் கொண்டு உரைக்க. மஞ்சு - மேகம். தந்தையது பொருள் தனயர்க்காதல் பற்றி விநாயகப் பெருமானை, ``கயிலை மலை கிழவோன்`` என்றார். உனது கேடகமும், கங்கணக்கவையும், வல் நாவும் அவுணரோடு பொருத ஞான்று என்க. கவவு மணி - முற்றிலும் நிறைந்த இரத்தினம். கேடகம் - வாளோடு ஏந்தும் பலகை. பூணினை, ``கங்கணம்`` என்றார். கவை - பிளவு. அது தந்தத்தைக் குறித்தது. வல் நா - வலிய நாக்கு. பகைவரை யானை தனது தந்தத்தால் குத்தும் பொழுது அதன் நாவும் அவர்களுக்கு ஊறு விளைவிக்கும், அவுணர், கயமுகாசுரன் படைஞர். அழல் - வெப்பம். பேர்ஊதை - பெருங்காற்று. மூரிச் சேறு - பெருஞ்சேறு; என்றது. கடலின் அடியில் உள்ள சேறு. என்பர் - என்று அறிந்தோர் கூறுவர். பிள்ளையாரது வலிமையை விளக்கியவாறு.

பண் :

பாடல் எண் : 11

மலைசூழ்ந் திழிகின்ற மாசுணம்பொற் பாறைத்
தலைசூழ்ந்து தானினைப்ப தொக்கும் கலைசூழ்
திரண்டகங்கொள் பேரறிவன் திண்வயிற்றின் உம்பர்க்
கரண்டகங்கொள் காலுயிர்க்குங் கை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தனிச்சீர் முதலாகத் தொடங்கியுரைக்க. கலை - உடை. கலை சூழ் திரண்டு அகங்கொள் பேரறிவன் - நூல்களின் ஆய்வுகள் யாவும் ஒருங்குகூடி தங்கள் அகத்தும் கொள்கின்ற. பெரிய அறிவு வடிவாய் உள்ளவன். உம்பர் - மேலே; உயரத்தில். கால் உயிர்க்கும் கை - மூச்சுக் காற்றை வெளிவிடும் கை; தும்பிக்கை. கரண்டகம் கொள் கால் - கூடை நிரம்பத்தக்க காற்று. `கை மாசுணம் இணைப்பது ஒக்கும்` - என முடிக்க. மலை சூழ்ந்து இழிகின்ற மாசுணம் - மலையைச் சுற்றிக் கொண்டு கீழ்நோக்கியிறங்கும் பாம்பு. பொற் பாறைத் தலை - பொற் குன்றின் உச்சி. தான். அசை. இளைப்பது - இளைப்பாறுவது. பெருமூச்சு விடுவது.

பண் :

பாடல் எண் : 12

காலது கையது கண்ணது தீயது கார்மதநீர்
மேலது கீழது நூலது வெற்பது பொற்பமைதீம்
பாலது தேனது தானது மென்மொழிப் பாவைமுப்பூண்
வேலது வாளது நான்மறைக் கின்ற விடுசுடர்க்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நான் மறைக்கின்ற - நான் உள்ளத்திலே பொதிந்து வைக்கின்ற சுடர், பிள்ளையார். இதனுள் ``கையது, நூலது, வெற்பது, வேலது வாளது`` என்பவற்றில் உள்ள ``அது`` என்பன எல்லாம் பகுதிப் பொருள் விகுதிகள். ஏனைய ``காலது`` முதலியன பலவும் `அதனை உடையது` என்னும் குறிப்பு முற்று வினையாலணையும் பெயர்கள். எனவே, ``கை காலது, (தும்பிக்கை காற்றை இடையது). கண் தீயது (தீயை உடையது) மதநீர் மேலது, நூல் (முந்நூல்) அதன் கீழது, வெற்பு (மலைபோலும் திருமேனி) ``பாவையது`` என இத னிடத்தும் துவ் விகுதி விரிக்க. பாவையது - பெண்ணை (வல்ல பையை) உடையது. ``பாலது, தேனது`` என்பவற்றில் உள்ள `அது` என்பனவும் பகுதிப் பொருள் விகுதிகளே. எனவே `அதுபால்தான், தேன்அதுதான் என்னும் மெல்லிய மொழியையுடைய பாவை` என்பதாம். `வால் முப்பூண் வேல் (சூலம்)` என்க.

பண் :

பாடல் எண் : 13

சுடர்ப்பிழம்பு தழைத்த அழற்றனி நெடுவேல்
சேய்மூ வுலகமும் வலம்வர வேஅக்
கொன்றையம் படலை துன்றுசடைக் கணிந்த
ஒங்கிருந் தாதையை வளாஅய் மாங்கனி
அள்ளல் தீஞ்சுவை அருந்திய
வள்ளற் கிங்கென் மனங்கனிந் திடுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நெடுவேற் சேய். முருகன். அவன் மூன்று உலகங் களையும் சுற்றிவருவதற்குமுன் விநாயகர் தம் தாய் தந்தையரை வலம் வந்து மாங்கனியைப் பெற்று உண்ட வரலாறு நன்கறியப்பட்டது. படலை - மாலை. வளாய் - சுற்றி வந்து. அள்ளல் - சாறு.

பண் :

பாடல் எண் : 14

இக்கயங்கொள் மூவலயஞ் சூழேழ் தடவரைகள்
திக்கயங்கள் பேர்ந்தாடச் செங்கீரை புக்கியங்கு
தேனாட வண்டாடச் செங்கீரை ஆடின்றே
வானாடன் பெற்ற வரை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியை முதலிற் கொள்க. வானாடன் - சிதாகாசத் தில் உள்ளவன்; சிவபெருமான். வரை - மலை போலும் தோற்றத்தை யுடைய பிள்ளை. ``திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்` எனத் தொடங் கும் கந்த புராணக் காப்புச் செய்யுளால் விநாயகரது பேருருவ நிலையை உணர்க. `இவ் வலயம்` என இயையும். வலயம் - பூமியை வளைந்துள்ள கடல். கயம்கொள் - ஆழத்தைக் கொண்ட. மூ வலயம். மூத்த (பழமையான) வலயம்; வினைத்தொகை. ஏழ் வரைகள். ஏழு தீவுகளிலும் உள்ள மலைகள். திக் கயங்கள் - திசை யானைகள். `தட வரைகளும், திக் கயங்களும் பேர்ந்து செங்கீரை ஆடும்படி வானாடன் பெற்ற வரை செங்கீரை யாடின்று` என இயைத்து முடிக்க. `செங்கீரை யாடின்று`` என்பதை மேல் ``ஊசலாடின்று`` என்றது போலக் கொள்க. மேல் சப்பாணி கொட்டற் சிறப்புக் கூறி, இங்குச் செங்கீரை யாடற் சிறப்புக் கூறினார். தேன் - வண்டுகளில் ஒருவகை. தேனும், வண்டும் புகுந்து ஆடுதல் தான் அணிந்த கொன்றை மாலையில் என்க.

பண் :

பாடல் எண் : 15

பெற்றமெல் லோதி சிலம்பின் மகள்பெறப் பிச்சுகந்த
மற்றவள் பிச்சன் மயங்கன்முன் னோன்பின் னிணைமைமிகக்
கற்றவன் ஐயன் புறங்காட் டிடைநடம் ஆட்டுகந்தோ
செற்றவெண் தந்தத் தவன்நம்மை ஆட்கொண்டு செய்தனவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தன்னைப் பெற்ற மெல்லோதி. மெல் ஓதி - மெல்லிய கூந்தலை உடையவள். ``சிலம்பின் மகள்`` என்றது, `மலைவாழ் சாதியினள்` என இகழ்ச்சி தோன்றக் கூறியது. மற்று, வினைமாற்று. பெற அவள் பிச்சு உகந்த பிச்சன் - தன்னைப் பெறுவதற்கு அவள் தன் கணவனாகப் பெரிதும் விரும்பப்பட்ட பித்தன். மயங்கல் முன்னோன்- பித்துக் கொள்ளியான முதியோன். (ஆயினும் அவன்) பின் இணைமை மிகக் கற்றவன் - நடனம் ஆடுதலில் வல்லவன். ஐயன் - யாவர்க்கும் தலைவன். அவன் புறங்காட்டிடை ஆடுதலையே விரும்புகின்ற காரணத்தால்தானோ, செற்ற வெண் தந்தத்தவன் (ஒடிக்கப்பட்ட தந்தத்தை உடையவன்) எங்களை இறவா நிலையினராகச் செய்தன! `தன் அடியவர்களைப் புறங்காடு அடையாவகை செய்து, `தன் தந்தை புறங்காட்டு ஆடுதலைத் தவிர்க்க நினைத்தான் போலும்!` என்றபடி. நடனங்களில் சில வகைகள் இணைந்து ஆடுவனவாகவும் இருத்தலின் ``இணைமை`` என்றார். `உகத்தலால்` என்பது `உகந்து` எனத் திரிந்தது. ``அஃது ஆற்றாது - எழுவாரையெல்லாம் பொறுத்து`` * என்பதிற்போல.

பண் :

பாடல் எண் : 16

செய்தரு பொலம்படை மொய்தரு பரூஉக்குருளை
வெள்ளெயிறு பொதிந்த வள்ளுகிர்த் திரள்வாய்ப்
பெருந்திரட் புழைக்கை
மண்முழை வழங்கும் திண்முரண் ஏற்றின்
பனையடர்ப் பாகன் றனதி ணையடி
நெடும்பொற் சரணம் ஏத்த
இடும்பைப் பௌவம் இனிநீங் கலமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பொலம் படை - பொன்னால் செய்யப்பட்ட அணிகலக் குழாம். (`ஐம்படைத் தாலி` என்றல் பொருந்தாது.) கூர்மை நோக்கித் தந்தத்தை `உகிர்` என்றார். யானையின் வாயில் சிறு பற்கள் உள்ளே நிறைந்திருக்க, அதன் தற்காப்புக் கருவியாய் இரு தந்தங்கள் முன்னே நீண்டு வளரும் `அத்தகைய தந்தத்தையுடைய திரண்ட வாய்` எண் `திரள் வாயையும், புழைக் கையையும் உடைய பாகன்` எனக் கொள்க. ``மண் முழை வழங்கும் திண் முரண் ஏற்றின் பனை`` பெருச்சாளி. ஏறு - விலங்கின் ஆண். பனை - பனந் துண்டம். `ஏறாகிய பனை` என்க. இன், வேண்டா வழிச் சாரியை. இணை அடி சரணம் - இணைந்த அடியாகிய பாதம். ஏத்த - ஏத்துதலால், `இடும்பைப் பௌவம் நோக்கி இனி நீங்கலம்` என்க. `பௌவத்திற்கு` என நான்காவது விரித்துக் கொள்க. இடும்பை. பிறவித் துன்பம்.

பண் :

பாடல் எண் : 17

அலங்கல் மணிகனகம் உந்தி அருவி
விலங்கல் மிசையிழிவ தொக்கும் பலன்கனிகள்
உண்டளைந்த கோன்மகுடத் தொண்கடுக்கைத் தாதளைந்து
வண்டணைந்து சோரும் மதம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தனிச்சீர் முதலாகத் தொடங்கியுரைக்க. பலன் - பயன். மரங்களின் பயனாகிய கனிகள். அளைந்த - திளைத்த. கடுக்கைத் தாது - கொன்றை மலரின் மகரந்தம். அளைந்து - கலந்து. அலங்கல் மணி - ஒளி வீசுதலையுடைய மணி. விலங்கல் - மலை - `கொன்றை மலரின் மகரந்தம் பொன் போலவும், வண்டுகள் நீல மணி போலவும் உள்ளன` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 18

மதந்தந்த மென்மொழி மாமலை யாட்டி மடங்கல்கொன்றை
மதந்தந்த முக்கண் ணரற்குமுன் ஈன்றவம் மாமலைபோல்
மதந்தந்த கும்பக் குழவிமந் தாரப்பொன் னாட்டிருந்து
மதந்தந்த செம்மலன் றோவையம் உய்ய வளர்கின்றதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மதம்`` நான்கில் முதலது மகிழ்ச்சி; இரண்டாவது வலிமை; மூன்றாவது மதநீர்; நான்காவது மிகுதி. மடங்கல் - நரசிங்கம். ``மடங்கல் கொன்ற`` என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகை. கும்பம் - மத்தகம். மந்தாரப் பொன் நாடு - `மந்தாரம்` என்னும் தருக்களையுடைய தேவ லோகம். `தேவலோகத்தில் இருந்து தேவர் கட்குச் செல்வ மிகுதியைத் தந்த செம்மல்` என்க. இஃது அசுரர்கட்கு இடர் இழைத்தலைக் கருத்துட் கொண்டு கூறியது. தேவலோகத்தி லிருந்து `தேவர்கட்கு அருள் புரிகின்ற அந்தச் செம்மல் வையம் உய்ய இங்கும் வளர்கின்றான்` என்றபடி, வளர்கின்றது தொழிற் பெயர். எனவே, வளர்கின்றது `போற்றுதலுக்குரியது` என்பது எஞ்சி நின்ற தாம். இதன்கண் சொற்பின்வருநிலையணி வந்தது.

பண் :

பாடல் எண் : 19

வளர்தரு கவட்டின் கிளரொளிக் கற்பகப்
பொதும்பர்த் தும்பி ஒழிவின் றோச்சும்
பாரிடைக் குறுநடைத் தோடி ஞாங்கர்
இட்ட மாங்கனி
முழுவதும் விழுங்கிய முளைப்பனைத் தடக்கை
எந்தை அல்லது மற்று யாவுள
சிந்தை செய்யும் தேவதை நமக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கவடு - மிலாறுகள். `கவட்டினது` என ஆறாவதும், பொதும்பரில்` என ஏழாவதும் விரிக்க. தும்பு - தும்பிக்கை. பாரிடை- நிலவுலகத்தில். இங்கு இது கூறப்பட்டமையால் முதற்கண் ``வானிடை`` என்பது வருவித்துக் கொள்க. `குறுநடைத்தாய்` என ஆக்கம் வருவிக்க. ஞாங்கர் - அவ்விடத்து - இட்ட - அன்பர்கள் படைத்த. ``ஓச்சும், விழுங்கிய`` என்னும் இரு பெயரெச்சங்கள் அடுக்கி, ``எந்தை`` என்னும் ஒரு பெயர் கொண்டன. `விண்ணுலகத்திலும், மண்ணுலகத்திலும் உலாவியும், இருந்தும் அருள் புரிகின்ற எந்தை என்றபடி.

பண் :

பாடல் எண் : 20

கேளுற்றி யான்தளர ஒட்டுமே கிம்புரிப்பூண்
வாளுற்ற கேயூர வாளரக்கர் தோளுற்
றறுத்தெறிந்து கொன்றழித்தவ் அங்கயங்கண் மீண்டே
இறுத்தெறிந்து கொன்றழித்த ஏறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கிம்புரிப்பூண்`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. கிம்புரிப் பூண் கேயூரம் - யானையின் தந்தங்களில் இடுகின்ற `கிம்புரி` என்னும் பூண்போலும் கேயூரம் என்க. கேயூரம் - தோள் வளை. வாள் உற்று - ஒளி பொருந்திய. வாளரக்கர் - கொடிய அசுரர்கள் - அவர்களது தோள்களை முன்னே பற்றி அறுத்தெறிந்து அவர்களைக் கொன்றழித்துப் பின்பு, அக்கயம் கண் மீண்டு அவர் களுக்குத் தலைமை பூண்டு வந்த அந்த யானையின்மேல் (கய முகாசுரன் மேல்) பார்வையைத் திருப்பி, அவனை இறுத்து எறிந்து - துண்டுகளாக்கி வீசிக் கொன்றழித்த ஏறு (ஆண் சிங்கம். கேள் - உற்று எனக்கு உறவாகப் பொருந்தினமையால் யான் தளர ஒட்டுமோ - கொன்றழித்தல், மீமிசைச் சொல்.

பண் :

பாடல் எண் : 21

ஏறு தழீஇயவெம் புத்தேள் மருகவெங் குந்தவள
நீறு தழீஇயஎண் தோளவன் செல்வவண் டுண்ணநெக்க
ஆறு தழீஇய கரதலத் தையநின் றன்னை அல்லால்
வேறு தழீஇத்தொழு மோவணங் காத வியன்சிரமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஏறு தழுவியது. நப்பின்னையை மணத்தற் பொருட்டு, வெருட்டி விடப்பட்ட காளைகளை அடக்கி வென்றது. எனவே, இங்கு, ``புத்தேள்`` எனப்பட்டவன் கண்ணபிரானாயினான். அவன் சிவபிரானுக்கு அன்புடையன் ஆகலின் அவனை ``எம்புத் தேள்`` என்றார். உமாதேவி மாயோனுக்குத் தங்கையாகச் சொல்லப் படுதலின், விநாயகரை, `அவன் அவதாரமாகிய கண்ணபிரானுக்கு மருகன்` என்றார். எண் தோளவன் சிவபிரான்.
வண்டு உண்ண நெக்க ஆறு - வண்டுகள் மொய்த்து உண்ணும் படி கசிந்து ஒழுகும் மதநீர்த் தாரை. அவை இரு காதுகளினின்றும் வீழ்ந்து தோள் வழியாகக் கைகளிலும் செல்லுதலால், `அவற்றைத் தழுவிய கரதலத்தை உடையவர்` என்றார். வணங்காத வியன் சிரம் - `யாரையும் வணங்காத பெருமையுடைய எமது தலை நின்றன்னை யல்லால் வேறொரு தெய்வத்தைப் பொருந்தி வணங்குமோ` என்க.

பண் :

பாடல் எண் : 22

சிரமே
விசும்பு போத உயரி இரண்
டசும்பு பொழி யும்மே
கரமே
வரைத்திரண் முரணிய இரைத்து விழும்மே
புயமே
திசைவிளிம்பு கிழியச் சென்று செறிக்குமே
அடியே
இடும்தொறும் இவ்வுல கம்யெபரும்மே
ஆயினும்
அஞ்சுடர்ப் பிழம்பு தழீஇ
நெஞ்சகத் தொடுங்குமோ நெடும்பணைச் சூரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நெடும் பணைச் சூர்`` என்பதை முதலில் வைத்து, அதன்பின், `அதனது` என்பது வருவித்து அதனை ``சிரம்`` முதலிய வற்றோடு இயைத்து உரைக்க. நெடும் பணைச்சூர் - நெடுக உயர்ந்த, பருத்த, அச்சம் தரும் தெய்வம் ஒன்று. விசும்பு போத உயரி - ஆகாயம் நிறையும்படி உயர்ந்து. அசும்பு - கசிவு; மதநீர். அஃது இரு காதுகள் வழி ஒழுகுதலால், ``இரண்டு அசும்பு பொழியும்`` என்றார். முரணிய- மாறுபடும்படி. ``இரைத்து விழும்`` என்றதனால், கரம், தும்பிக்கை யாயிற்று. செறிக்கும் - அடைக்கும். இடுந்தொறும் - பெயர்த்து வைக்குந்தோறும். அம் சுடர்ப்பிழம்பு தழீஇ - அழகிய தீயினது உருவம் போன்ற தோற்றத்தைப் பொருந்தி. ``அழகிய`` என்றதனால் தோற்றம் மாத்திரையே தீப்போலும் தன்மையுடையதன்றிச் சுடுதல் இன்மை பெறப்பட்டது. `அவற்றொடும் எம் நெஞ்சகத்து ஒடுங்கும்` என முடிக்க. ஓகாரம் வியப்புக் குறிப்பு. இதனால் பிள்ளையாரது பேருருவத் தோற்றம் இனிது விளங்கும்.

பண் :

பாடல் எண் : 23

சூர்தந்த பொற்குவட்டின் சூளிகையின் வானயிர்த்து
வார்தந் தெழுமதியம் மன்னுமே சீர்தந்த
மாமதலை வான்மதியங் கொம்பு வயிறுதித்த
கோமதலை வாண்மதியங் கொம்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தனிச்சீர் முதலாகத் தொடங்கியுரைக்க. சீர் தந்த மா மதலை - தந்தையாகிய மலையரையனுக்குப் புகழைத்தந்த பெருமையையுடைய மகள். வான்மதி - மிகுந்த ஞானமே வடிவானவள். அம் கொம்பு - அழகிய பூங்கொம்பு போன்றவள்; உமை. அவள் வயிற்றின்கண் உதித்த கோ மதலை - தலை மகன், விநாயகர் கடவுள். அவன் முடியில் அணிந்த வாள் மதிக்கொம்பு - ஒளி பொருந்திய பிறைக் கீற்று. சூர் தந்த பொற்குவட்டின் சூளிகையின் அயிர்த்து - `அச்தத்தைத் தரும் பொன்மலையினது சிகரத்தின் நெற்றி` என மருண்டு. வார்தந்து எழுவான் மதியம் மானும் - ஊர்தலை மேற் கொண்டு தோன்றிய வானப் பிறையை ஒக்கும். பிள்ளையார் தமது திருமுடியில் அணிந்துள்ள பிறை அம்முடியை வானத்தில் செல்லும் பிறை. `பொன்மலையின் சிகரம்` என மயங்கி வந்து பொருந்தியது போல் உள்ளது என்பதாம். இது தற்குறிப் பேற்றமும், மயக்க அணியும் சேர்ந்து வந்த சேர்வையணியாகும்.

பண் :

பாடல் எண் : 1

பூமேல் அயனறியா மோலிப் புறத்ததே
நாமே புகழ்ந்தளவை நாட்டுவோம் பாமேவும்
ஏத்துகந்தான் தில்லை இடத்துகந்தான் அம்பலத்தே
கூத்துகந்தான் கொற்றக் குடை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மோலி - மௌலி; கிரீடம்.
புறத்தது - மேலே சென்றுள்ளது.
அடிமுடி தேடிய வரலாற்றில் சிவபெருமானது முடி அயனால் அறியப்படாமை கூறப்படுதலின் சிவபெருமானது மகுடத்தை, ``அயன் அறியா மோலி`` என்றார்.
``புறத்தது`` என்பதன் பின், `ஆயின்` என்பது வருவிக்க.
``நாமே`` என்னும் வினாநிலை ஏகாரம் நாம் நாட்டுவேம் ஆகாமையைக் குறித்து நின்றது.
பா மேவும் ஏத்து - `பா` என்னும் உறுப்புப் பொருந்திய இவ்வாறான செய்யுளே.
``பாட்டு`` எனப் பெயர் பெறும்.
எனவே, துதிகளில் பாட்டாய் அமையும் துதிகளே இறைவனுக்கு மிக்க விருப்பத்தைத் தரும் துதி யாதல் பெறப்பட்டது.
``இடம்`` என்றது ஊரை, ``இடத்தை`` என்பதில் சாரியை நிற்க உருபு தொக்கது, `அந்த இடத்தில் அம்பலத்தே கூத்து உகந்தான்` என்க.
கொற்றம் - வெற்றி.
`குடை அயன் அறியா மோலிப் புறத்த தாயின், அதன் அளவை நாமே புகழ்ந்து நாட்டுவோம்` என வினை முடிக்க.
தில்லையம்பலக் கூத்தப் பெருமானது கொற்றக் குடையின் சிறப்புணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 2

குடைகொண்டிவ் வையம் எலாங்குளிர்
வித்தெரி பொற்றிகிரிப்
படைகொண் டிகல்தெறும் பார்த்திவர்
ஆவதிற் பைம்பொற்கொன்றைத்
தொடைகொண்ட வார்சடை அம்பலத்
தான்தொண்டர்க் கேவல்செய்து
கடைகொண்ட பிச்சைகொண் டுண்டிங்கு
வாழ்தல் களிப்புடைத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எரி - காய்கின்ற, பொன் - அழகு, திகிரிப் படை - சக்கராயுதம்.
இகல்தெறும் - பகைவரை அழிக்கின்ற.
பார்த்திவர் - அரசர்.
பொற்கொன்றை - பொன்போலும் கொன்றை.
தொடை - மாலை.
கடை - தலைவாயில்.
அரசர் வாழ்வாயினும் உலக வாழ்வு கவலைகள் பலவுடையதாயும், ஒன்றும் இல்லாதவராயினும் அடியவர் வாழ்வு கவலையற்ற அமைதி வாழ்வாயும் இருத்தல் பற்றி, `அடியவர் வாழ்வே மகிழ்வைத் தருவது` என்றார்.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது *
எனத் திருவள்ளுவரும் கூறினார்.

பண் :

பாடல் எண் : 3

களிவந் தமுதூறிக் கல்மனத்தை எல்லாம்
கசியும் படிசெய்து கண்டறிவார் இல்லா
வெளிவந் தடியேன் மனம்புகுந்த தென்றால்
விரிசடையும் வெண்ணீறும் செவ்வான மென்ன
ஒளிவந்த பொன்னிறமும் தொல்நடமும் காட்டும்
உடையான் உயர்தில்லை அம்பலமொன் றல்லால்
எளிவந் தினிப்பிறர்பாற் சென்றவர்க்குப் பொய்கொண்
டிடைமிடைந்த புன்மொழியால் இச்சையுரை யோமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வெளியாய்` என ஆக்கம் வருவிக்க.
கண்டறிவர் இல்லா வெளி, அருள் வெளி, ``களி வந்து`` என்பதில் ``வந்து`` என்னும் செய்தென் எச்சம் `வந்தபின்` என்பதன் திரிபு ``விரிசடையும் .
காட்டும் அம்பலம், களிவந்து.
அடியேன் மனம் புகுந்தது என்றால் (அஃது ஒன்றை உரைத்தல் அன்றி, இனிப் பிறர்பால் சென்று எளிவந்து பொய்கொண்டு.
இச்சையுரையோம்`` என இயைத்து முடிக்க.
வரையறையின்மையின் சில சீர்கள் ஓரசை குறைந்து வந்தன அன்றி, ஒற்றளபெடையாகப் பாடம் ஓதலும் ஆம்.

பண் :

பாடல் எண் : 4

உரையின் வரையும் பொருளின் அளவும்
இருவகைப் பட்ட எல்லையும் கடந்து
தம்மை மறந்து நின்னை நினைப்பவர்
செம்மை மனத்தினும் தில்லைமன் றினும்நடம்
ஆடும் அம்பல வாணா நீடு

குன்றக் கோமான் தன்திருப் பாவையை
நீல மேனி மால்திருத் தங்கையைத்
திருமணம் புணர்ந்த ஞான்று பெருமநின்
தாதவிழ் கொன்றைத் தாரும் ஏதமில்
வீர வெள்விடைக் கொடியும் போரில்

தழங்கும் தமருகப் பறையும் முழங்கொலித்
தெய்வக் கங்கை ஆறும்பொய்நீர்
விரையாக் கலியெனும் ஆணையும் நிரைநிரை
ஆயிரம் வகுத்த மாயிரு மருப்பின்
வெண்ணிறச் செங்கண் வேழமும் பண்ணியல்
வைதிகப் புரவியும் வான நாடும்
மையறு கனக மேருமால் வரையும்
செய்வயல் தில்லை யாகிய தொல்பெரும் பதியுமென்று
ஒருபதி னாயிரந் திருநெடு நாமமும்
உரிமையிற் பாடித் திருமணப் பந்தருள்

அமரர் முன்புகுந் தறுகு சாத்திநின்
தமர்பெயர் எழுதிய வரிநெடும் புத்தகத்து
என்னையும் எழுத வேண்டுவன் நின்னருள்
ஆணை வைப்பிற் காணொணா அணுவும்
வானுற நிமிர்ந்து காட்டும்
கானில்வால் நுளம்பும் கருடனா தலினே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சொல்லுலகம், பொருளுலகம்` என இருவகைப்பட்ட உலகங்களையும் கடந்தவன் இறைவன் என்பார் ``உரையின் வரையும்.
.
கடந்து`` என்றார்.
``தாம்`` என்றது உயிர்களை, நினைத்தல், இங்கு உணர்தல்.
உயிர்கள் தம்மை உணரும் உணர்வு `யான்` என்றும் `எனது` என்றும் இருவகையாக நிகழும்.
இவ்விரு வகை உணர்வு உள்ள பொழுது இறைவனை உணர்வு நிகழாது ஆகலின், ``தம்மை மறந்து நின்னை நினைப்பவர்` என்றார்.
``அவரது உணர்வே செம்மை யுணர்வு`` என்றமையால், `தம்மை நினைந்து இறைவனை மறக்கும் உணர்வு கோட்டம் உடைய உணர்வு` என்பதும், `அவர் மனத்தில் இறைவன் நிற்றல் இல்லை` என்பதும் போந்தன.
சிறைவான் புனல்தில்லைச் சிற்றம் பலத்தும் என்
சிந்தையுள்ளும்
உறைவான் *
என்றவாறே, ``செம்மை மனத்தினும், தில்லை மன்றினும் - நடம் ஆடும் அம்பலவாண`` - என்றார்.
தாது - மகரந்தம்.
தார் - மாலை.
தழங்கும்- ஒலிக்கின்ற.
தமருகம் - உடுக்கை.
சிவபெருமானது ஆணை, `விரையாக்கலி` எனப்படும்.
`இரு ஆயிரம் வகுத்த மருப்பு` என்க.
கயிலையில் இருக்கும் சிவபெருமானது யானை `அயிராவணம்` என்னும் பெயரையும், இரண்டாயிரம் தந்தங்களையும் வெள்ளை நிறத்தையும் உடையது.
வைதிகப் புரவி - வேதமாகிய குதிரை.
இவைகளே திரிபுரத்தேர் மேல் சென்ற காலத்தில் அத்தேரையிழுத்தன.
தார் - மாலை.
மாலை, கொடி, பறை, யாறு, ஆணை, யானை, குதிரை, நாடு, மலை, ஊர் - இப்பத்தும் ``தசாங்கம்`` எனப் பெயர்பெறும்.
தலைவன் ஒருவனைப் புகழ்வோர் அவனுக்கு உரிய இப்பத்தினையும் புகழ்தல் மரபு.
இதனைத் திருவாசகத்துட் காண்க.
`அமரருக்கு முன்னே புகுந்து` என்க.
``நறுமுறு தேவர் கணங்களெல்லாம் நம்மிற் பின்பல்லது எடுக்க லொட்டோம்`` என்னும் திருவாசகத்தைக் காண்க.
`அறுகு எடுத்தல்` என்பது மங்கலம் கொள்வார்க்கு அறுகம்புல் கொண்டு செய்யப்படும் ஒரு சடங்கு.
அஃது இறைவழிபாட்டின் பகுதியாய் வழங்கும்.
அருக்கியம் முதலியன கொடுத்தலும் இவ்வாறு அமையலாம்.
மேற்குறித்த அத்திருவாசகத்தில், ``அறுகெடுப்பார் அயனும், அரியும் - அன்றி மற்று இந்திரனோடு அமரர்`` என வந்தமை காண்க.
தமர் - சுற்றத்தார்; அடியவர்.
மங்கல வினை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தல், வரிசையளித்தல் முதலியன செய்தோரது பெயர்களை ஏட்டில் முறையாக எழுதிக்கொண்டு பின்பு அவர்கட்கு மங்கலம் பெற்றோர் சிறப்புச் செய்தல் வழக்கம்.
அம்முறை பற்றி, `யான், இப்பிறப்பில் இன்று உள்ளது போல அன்று இருந்திலேன் ஆயினும், ஏதோ ஒரு வகைப் பிறப்பில் அன்று நின் திருமண நிகழ்ச்சியில் இருந்துதான் இருப்பேன்; ஆகையால், என்றும் என்னை எவ்வகையிலும் அறிபவனாகிய நீ நின் திருமண நிகழ்ச்சியில் இருந்துதான் இருப்பேன்; ஆகையால், என்றும் என்னை எவ்வகையிலும் அறிபவ னாகிய நீ நின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமர் பெயர் களை எழுதிய வரி நெடும் புத்தகத்து என் பெயரையும் எழுதிக் கொள்ளல் வேண்டும்.
ஏனெனில், நினது அருளாணை தரப்படுமாயின் சிறிய அணுவும் பெரிய மலையாகிவிடும்.
தாழ்ந்த கொசுகும் உயர்ந்த கருடன் ஆகிவிடும் ஆதலின்` என்றார்.
``அணுவும் மலையாம்; கொசுகும் கருடனாம்`` என்றதனால், `அன்று நான் இழிந்த பிறப்பிலே இருந்தேனாயினும் உனது அருள்கூடின் உன் அடியார் கூட்டத்தில் ஒருவனாகியிருப்பேனன்றோ` என வினவியவாறு.
``என்`` என்றது, `என் பெயர்` என்னும் பொருட்டு ஆதலின் ஆகுபெயர்.
கானில்வாய்- காட்டில் பொருந்திய.
நுளம்பு - ஒருவகைக் கொசுகு.

பண் :

பாடல் எண் : 5

ஆதரித்த மாலும் அறிந்திலனென் றஃதறிந்தே
காதலித்த நாயேற்குங் காட்டுமே போதகத்தோற்
கம்பலத்தான் நீள்நாக கங்கணத்தான் தென்புலியூர்
அம்பலத்தான் செம்பொன் அடி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஆதரித்த மால் - அன்பு செய்து வழிபட்ட திருமால்.
அவன் அறியாது போயது, தன்முனைப்பால் காண முயன்றதனாலாம்.
`தனையறிந்தவன் ஆதலின், அன்பு மட்டுமே செய்து நிற்கின்ற நாயேற்குத் தன் அடியைக் காட்டியே தீர்வான்` என்றபடி.
இதனால், `எத்தகையோரும் தன் முனைப்புக் கொண்டவழிச் சிவனைக் காண மாட்டார்` என்பது போந்தது.
போதகம் - யானை.
`அம்பலத்தான், அஃது அறிந்து தன் செம்பொன் அடியை நாயேற்குக் காட்டும்` என இயைப்பினும் ஆம்.
இவ்வாறு இயைப்பின் யான் தன்முனைப்புக் கொண்டிலேன் என்பது குறிப்பாற் பெறப்படும்.

பண் :

பாடல் எண் : 6

அடியொன்று பாதலம் ஏழிற்கும்
அப்புறம் பட்டதிப்பால்
முடியொன்றிவ் வண்டங்கள் எல்லாம்
கடந்தது முற்றும்வெள்ளைப்
பொடியொன்று தோளெட்டுத் திக்கின்
புறத்தன பூங்கரும்பின்
செடியொன்று தில்லைச்சிற் றம்பலத்
தான்தன் திருநடமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அடி ஒன்று`` என்பதில் ``ஒன்று`` என்றது சாதி பற்றி.
செடி ஒன்று - புதர் பொருந்திய தில்லை என்க.
``நடம்`` என்பது ஆகுபெயராய் அதன் இயல்பை உணர்த்திற்று.
இதன்பின் `இது` என்னும் பயனிலை எஞ்சி நின்றது.
நடனத்தின் பெருமையை விளக்கியவாறு.

பண் :

பாடல் எண் : 7

நடமாடி ஏழுலகம் உய்யக் கொண்ட
நாயகரே நான்மறையோர் தங்க ளோடும்
திடமாட மதில்தில்லைக் கோயில் கொண்ட
செல்வரே உமதருமை தேரா விட்டீர்
இடமாடி இருந்தவளும் விலக்கா விட்டால்
என்போல்வார்க் குடன்நிற்க இயல்வ தன்று
தடமாலை முடிசாய்த்துப் பணிந்த வானோர்
தஞ்சுண்டா யங்கருநீர் நஞ்சுண்டீரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது, சிவபெருமான் நஞ்சுண்ட கருணையைப் பழிப்பதுபோலப் புகழ்ந்தது, உமது அருமையைத் தேராது (ஆராயாது) விட்டீர்.
`உமக்குப் பின் உம்மோடு ஒப்பார் பிறர் கிடைப்பரோ` என்பதை நீர் எண்ணிப் பார்க்கவில்லை - என்றபடி.
நல்ல வேளையாக உமையவள் அந்த நஞ்சினை உமது கண்டத்திலே நிறுத்தித் தடுத்திராவிட்டால் என்ன நிகழ்ந்திருக்கும்? என்னைப் போல்வார் அதனை (கண்டத்தில் தடுத்து நிறுத்துதலை)ச் செய்தல் இயல்வதன்று என்க.
தஞ்சம், அம்முக் குறைந்து, ``தஞ்சு`` என நின்றது.
தஞ்சம் - அடைக்கலம் புகுதல்.
உண்ட - அதனை உடைத்தாய் இருந்த.
ஆயம் - கூட்டம்.
கருதி - `பிழைக்க வேண்டும்` என எண்ணி.
``உண்டீரே`` என்னும் தேற்றே காரம் வெளிப்படைப் பொருளில் பழித் தலையும்.
குறிப்புப் பொருளில் புகழ்தலையும் குறிக்கும்.
தான்புக்கு நட்டம் பயன்றிலனேல் தரணியெலாம்
ஊன்புக்க வேற்காளிக்கு ஊட்டாங்காண் சாழலோ
என்றார் ஆகலின், `நடம் ஆடி ஏழ் உலகும் உய்யக் கொண்ட நாயகரே`` என்றார்.

பண் :

பாடல் எண் : 8

நஞ்சுமிழ் பகுவாய் வெஞ்சின மாசுணம்
தன்முதல் முருக்க நெல்முதற் சூழ்ந்த
நீர்ச்சிறு பாம்புதன் வாய்க்கெதிர் வந்த
தேரையை வவ்வி யாங்கி யான்முன்
கருவிடை வந்த ஒருநாள் தொடங்கி

மறவா மறலி முறைபிறழ் பேழ்வாய்
அயில்தலை அன்ன எயிற்றிடைக் கிடந்தாங்
கருள்நனி இன்றி ஒருவயி றோம்பற்குப்
பல்லுயிர் செகுத்து வல்லிதின் அருந்தி
அயர்த்தனன் இருந்த போதும் பெயர்த்துநின்று
எண்டோள் வீசிக் கண்டோர் உருகத்
தொல்லெயில் உடுத்த தில்லை மூதூர்
ஆடும் அம்பலக் கூத்தனைப்
பாடுதல் பரவுதல் பணிதலோ இலமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டின் உண்மைப் பாடம் விளங்கவில்லை.
மக்கள் யாவரும் கருவில் தோன்றியது முதலே கூற்றுவன் வாயில் இருப்பவர் ஆகின்றனர்.
அதை நினையாமல் அவர்கள் வயிறு வளர்த்தற்குப் பிற உயிர்களைக் கொல்கின்றனர்.
இது நஞ்சுடைய நாகத்தின் வாயில் தனது வால் அகப்படப்பட்ட நீர்ப்பாம்பு வயல் நீரில் வாழ்கின்ற தவளையைப் பிடித்து விழுங்க முயல்வதை ஒக்கும்.
அடி 10-ல் ``இருந்தும் போலும்`` எனக் காணப்படுவது பாடம் அன்று.
`இருந்த போதும்` என்பது பாடமாயின், ஈற்றடியில் ``பணிதலோ விலனே`` எனப் பாடம் கொண்டு, `இவைகளை யான் ஒழிந்திலேன்` எனவும், ``இருந்தேன் போலும்`` என்பது பாடமாயின் `பாடுதல் முதலியவற்றைச் செய்திலேனாய் இருந்தேன்` எனவும் பொருள் கொள்ளுதல் வேண்டும் போலும் என்பது அசையாகும்.
முருக்க - அழிக்க.
நெல் - நெற்பயிர்.
மறலி - கூற்றுவன்.
`என்னை மறவா மறலி` என்க.
அயில் தலை அன்ன எயிறு - வேலின் முனை போன்ற கூர்மையையுடைய பற்கள்.
அருள் - உயிர்களின் மேல் இரக்கம்.
``நனி`` என்பது இன்மையைச் சிறப்பித்தது.
அயர்த்தல்- மறத்தல்.

பண் :

பாடல் எண் : 9

இலவிதழ்வாய் வீழ்வார் இகழ்வார் அவர்தம்
கலவி கடைக்கணித்தும் காணேன் இலகுமொளி
ஆடகஞ்சேர் அம்பலத்தே ஆளுடையார் நின்றாடும்
நாடகங்கண் டன்பான நான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அவர்தம் கலவி கடைக் கணித்தும் காணேன்`` என்பதை இறுதிக்கண் கூட்டியுரைக்க.
இலவு இதழ் - இலவ மரத்தின் காய்போலும் சிவந்த இதழ்.
வாய், ஏழன் உருபு.
வீழ்வார் - விருப்பம் வைப்பார்.
`சிலர் வீழ்வார்; சிலர் இகழ்வார்; நான் அதைக் கடைக் கண்ணாலும் பார்க்க மாட்டேன்.
எனவே, `விரும்புவதோ, இகழ்வதோ - எதுவும் இலேன்` என்பதாம்.
இவ்வாறு இருத்தலே `புறக்கணித்தல்` எனப்படும்.
அவர் - அத்தகைய இதழினையுடைய மகளிர்.
ஆடகம் - பொன்.
`நான், கலவி கடைக்கணித்தும் காணேன்` என வினை முடிக்க.
இதனால் திருநடனத்தின் ஆனந்தத்தது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

நானே பிறந்த பயன்படைத்
தேன் அயன் நாரணனெம்
கோனே எனத்தில்லை அம்பலத்
தேநின்று கூத்துகந்த
தேனே திருவுள்ள மாகியென்
தீமையெல் லாமறுத்துத்
தானே புகுந்தடி யேன்மனத்
தேவந்து சந்திக்கவே.
1

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நானே பிறந்த பயன் படைத்தேன்`` என்பதை இறுதிக்கண் கூட்டியுரைக்க.
`எம் கோனே` என்று சொல்லித் துதிப்பவர் அயனும்,மாலும்.
என - என்று துதிக்கும்படி.
``தேன்`` என்றது சிவ பெருமானை.
``தேனே`` என்னும் பிரிநிலை ஏகாரம், `யான் வேண்டாமல் இருக்கவும் தானாகவே திருவுள்ளம் செய்தான்` எனப் பொருள் தந்தது.
`தானே திருவுள்ளம் செய்து, தானே புகுந்தான்` என்க.

பண் :

பாடல் எண் : 11

சந்து புனைய வெதும்பி மலரணை
தங்க வெருவி இலங்கு கலையொடு
சங்கு கழல நிறைந்த அயலவர்
தஞ்சொல் நலிய மெலிந்து கிளியொடு
பந்து கழல்கள் மறந்து தளிர்புரை
பண்டை நிறமும் இழந்து நிரையொடு
பண்பு தவிர அனங்கன் அவனொடு
நண்பு பெருக விளைந்த இனையன
நந்தி முழவு தழங்க மலைபெறு
நங்கை மகிழ அணிந்த அரவுகள்
நஞ்சு பிழிய முரன்று முயலகன்
நைந்து நரல அலைந்த பகிரதி
அந்தி மதியொ டணிந்து திலைநகர்
அம்பொன் அணியும் அரங்கின் நடம்நவில்
அங்கண் அரசை அடைந்து தொழுதிவள்
அன்று முதல் எதிர்இன்று வரையுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நந்தி முழவு தழங்க`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
தழங்க - ஒலிக்க.
`நஞ்சு விழிய முரன்று` என இயைத்து.
``முரன்று`` என்பதையும் ஏனையவற்றோடு இயைய, `முரல` எனத் திரிக்க.
முரல - மூச்சொலி செய்ய.
நரல - ஒலம் இட.
`முழுவு தழங்க, நங்கை மகிழ, அரவுகள் நஞ்சு பிழிய.
முரல, முயலகன் நைந்து நரல நடம் நவில் அரசு` என்க.
பிழிய - வெளிப்பட.
எதிர் இன்று - `அன்று` எனக் குறிக்கப்பட்ட அந்த நாளுக்கு எதிராய் வந்த இந்தநாள்.
`இவள் வெதும்பி, வெருவி, கழல, மெலிந்து, மறந்து, இழந்து, தவிர, பெருக நிற்றலால் விளைந்தன இனையன` என இயைத்து வினை முடிக்க.
சந்து புனைய - (உடல் வெப்பத்தைத் தணித்தற் பொருட்டு யாம் - தோழியர்) சந்தனத்தைப் பூச `அதனால் மேலும் வெதும்பி` என்க.
மலர் அணை முள்போலத் தோன்றுதலால் வெருவினார்.
கலை - உடை.
சங்கு - சங்க வளையல்.
அயலவர் சொல், அலர்.
நலிய - வருத்த, ``கிளியொடு`` என்னும் ஒடு எண் ஒடு.
நிறை - நெஞ்சுரம்.
பண்பு பெண் தன்மையாகிய நாணம், அனங்கன் - மன்மதன்.
அவனொடு நண்பு பெருகுதலாவது, `ஒன்று என்மேல் இன்சொற் சொல்லி வேண்டுதல், ``பெருக`` என்னும் வினையெச்சம் காரணப் பொருட்டாகலின், அதற்கு, `பெருக நிற்றலால்` என உரைத்தல் பொருந்துவதாயிற்று.
`இனையனவே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுக்கப்பட்டது.
அதனால் `இவை விளைந்ததைத் தவிரக் கண்ட பயன் ஏதும் இல்லை` என்பது போந்தது.
இது கைக்கிளைத் தலைவியது வேறுபாடு கண்டு வினவிய செவிலிக்குத் தோழி பட்டாங்குச் சொல்லி அறத்தொடு நின்றது.
பகிரதி - கங்கை.
`தில்லை` என்பது சந்தம் நோக்கி இடைக் குறைந்து நின்றது.
`தொழுத` என்னும் பெயரெச்சத்தின் ஈறு தொகுத்தலாயிற்று.

பண் :

பாடல் எண் : 12

வரையொன்று நிறுவி அரவொன்று பிணித்து
கடல்தட ஆகம் மிடலொடும் வாங்கித்
திண்டோள் ஆண்ட தண்டா அமரர்க்
கமிர்துணா அளித்த முதுபெருங் கடவுள்
கடையுகஞ் சென்ற காலத்து நெடுநிலம்
ஆழிப் பரப்பில் ஆழ்வது பொறாஅ
தஞ்சேல் என்று செஞ்சே லாகித்தன்
தெய்வ உதரத்துச் சிறுசெலுப் புரையில்
பௌவம் ஏழே பட்டது பௌவத்தோ
டுலகு குழைத் தொரு நாள் உண்டதும்

உலகம் மூன்றும் அளந்துழி ஆங்கவன்
ஈரடி நிரம்பிற்றும் இலவே தேரில்
உரைப்போர்க் கல்ல தவன்குறை வின்றே
இனைய னாகிய தனிமுதல் வானவன்
கேழல் திருவுரு ஆகி ஆழத்

தடுக்கிய ஏழும் எடுத்தனன் எடுத்தெடுத்து
ஊழி ஊழி கீழுறக் கிளைத்தும்
காண்பதற் கரியநின் கழலும் வேண்டுபு
நிகில லோகமும் நெடுமறைத் தொகுதியும்
அகில சராசரம் அனைத்தும் உதவிய

பொன்னிறக் கடவுள் அன்ன மாகிக்
கண்டி லாதநின் கதிர்நெடு முடியும்
ஈங்கிவை கொண்டு நீங்காது விரும்பிச்
சிறிய பொதுவின் மறுவின்றி விளங்கி
ஏவருங் காண ஆடுதி அதுவெனக்

கதிசயம் விளைக்கும் அன்றே அதிசயம்
விளையாதும் ஒழிந்த தெந்தை வளையாது
கல்லினும் வலிஅது நல்லிதிற் செல்லாது
தான்சிறி தாயினும் உள்ளிடை நிரம்ப
வான்பொய் அச்சம் மாயா ஆசை

மிடைந்தன கிடப்ப இடம்பெறல் அருமையில்
ஐவர் கள்வர் வல்லிதிற் புகுந்து
மண்மகன் திகிரியில் எண்மடங்கு கழற்ற
ஆடுபு கிடந்த பீடில் நெஞ்சத்து
நுழைந்தனை புகுந்து தழைந்தநின் சடையும்
செய்ய வாயும் மையமர் கண்டமும்
நெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும்
எடுத்த பாதமும் தடுத்தசெங்கையும்
புள்ளி ஆடையும் ஒள்ளிதின் விளங்க
நாடகம் ஆடுதி நம்ப கூடும்

வேதம் நான்கும் விழுப்பெரு முனிவரும்
ஆதி நின்திறம் ஆதலின் மொழிவது
பெரியதிற் பெரியை என்றும் அன்றே
சிறியதிற் சிறியை என்றும் அன்றே
நிறைபொருள் மறைகள் நான்கும்நின் அறைகழல்

இரண்டொடும் அறிவினில் ஆர்த்து வைத்த
மறையவர் தில்லை மன்றுகிழ வோனே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நம்ப, மன்று கிழவோனே`` என்பவற்றை முதற்கண் கூட்டுக.
``கடவுள்`` என்பதும் அவற்றை அடுத்து நிற்கும் விளி.
தட ஆகம் - விசாலித்த உடம்பு.
`ஆகத்தில்` என உருபு விரிக்க.
மிடல் - வலிமை.
ஆண்ட - பயன்படுத்திய.
தண்டா - நீங்காத.
``கடையுகஞ் சென்ற`` என்பது முதல் ``குறைவின்றே`` என்பது முடிய உள்ள பகுதி திருமாலின் சிறப்புக் கூறியது.
``கடையுகம்`` என்பதை `யுகக் கடை` என மாற்றிக் கொள்க.
சேல் - மீன்.
``செஞ்சேல்`` என்பதில் செம்மை செப்பத்தைக் குறித்தது.
``ஆகியபின்`` என்பது `ஆகி` எனத் திரிந்து நின்றது.
`ஏழும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று.
ஏகாரம் தேற்றம்.
``பட்டது`` என்னும் ஒருமை அத்தொழில் மேல் நின்றது.
`படுத்தது` என்பது விகுதிகுன்றி, ``பட்டது`` என நின்றது.
ஓர் உக முடிவில் `சோமுகன்` என்றும் அசுரன் வேதத்தைக் கவர்ந்து கொண்டு கடலுள் ஒளிந்து கொள்ள திருமால் அவனை அழித்தற்குக் கொண்ட அவதாரமாகிய மச்சத்தின் வாய்க்குள் ஏழு கடல்களும் அடங்கி விட்டன` என அதன் பெருமை கூறியவாறு.
இதன் பின் உலகம் உண்டதும், மூவுலகையும் ஈரடியாலே அளந்ததும் ஆகிய திருமால் பெருமையையே கூறினார்.
`ஒருநாள் உண்டதும் பௌவத்தோடு உலகு குழைத்து` என்க.
`இத்தகைய பெருமைகளை உடையனாயினும் பிறத்தல், இறத்தல் முதலிய குறைகளையும் அவன் உடையனாயினும் அவற்றைப் பலர் அறியார்` என்றற்கு ``உரைப்போர்க்கல்லது அவன் குறைவு இன்றே`` என்றார்.
உரைப்போர் - உணர்ந்து சொல்வோர்.
கேழல் - பன்றி.
கிளைத்தல் - தோண்டுதல்.
நிகிலம், அகிலம் - எஞ்சுதல் இன்மை.
சரம் - இயங்கியற் பொருள, அசரம் - நிலையியற் பொருள்,பொன்னிறக் கடவுள் - இரணியகருப்பன்; பிரம தேவன்; இங்குக் கூறிய பெருமைகளை யெல்லாம் உடைய பெரிய தேவர்களாகிய மாலும், அயனும் வேற்றுருக் கொண்டு ஊழி ஊழி தேடியும் அறியப்படாத, எல்லை காண்பரிய அடியும், முடியும் தில்லையில் ஒரு சிறிய மன்றினுள் ஆடுதல் எனக்கு அதிசயத்தை விளைக்கின்றது.
ஆயினும் அதிசயம் விளைக்கவும் இல்லை.
ஏனெனில், அம்மன்றினும் மிகச் சிறியதும், ஆயினும் அசுத்தப் பொருள்களை மிக உடையதும், அதனோடும் கூட, ஒருவர் அல்லர்; ஐவர் கள்வரால், ஒருவன் குயவன் சுழற்றுகின்ற அச்சக்கரத்தின் வேகம்போல எண்மடங்கு வேகத்துடன் சுழலும்படி சுழல்வதுமாகிய என் நெஞ்சினுள்ளே நுழைந்து உனது உறுப்புக்களெல்லாம் நன்கு விளங்க ஆடுகின்றாய்; (இது அதிசயம் விளையாமைக்குக் காரணம், இரண்டும் மிக மிக அதிசயமேயாகலின் அதிசயம் விளையாமற்போகவும் இல்லை.
) இதனாலன்றோ உன்னைப் ``பெரியதினும் பெரியை`` என்றும், ``சிறியதினும் சிறியை`` என்றும் வேதங்களும் சொல்கின்றன.
பெரியவர்களும் சொல்கின்றார்கள்.
``அணோரணீயாந்; மஹதோ மஹீயாந்`` என்பது கடோபநிடதம்.
வான் - பெரிய.
மாயா - கெடாத.
மிடைந்தன - நெருங்கின; இது முற்றெச்சமாய் நின்றது.
ஐவர் கள்வர்; ஐம்புல ஆசை.
மண் மகன் - குயவன்.
திகிரி - சக்கரம், தடுத்த - `அஞ்சற்க` என அபயம் தந்தகை.

பண் :

பாடல் எண் : 13

கிழவருமாய் நோய்மூப்புக் கீழ்ப்பட்டுக் காமத்
துழவரும்போய் ஒயுமா கண்டோம் மொழிதெரிய
வாயினால் இப்போதே மன்றில் நடமாடும்
நாயனார் என்றுரைப்போம் நாம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நெஞ்சே` என்பதை முதற்கண் வருவித்து, ``காமத்து உழவரும்` என்பதை அதன்பின்னும், ``நாம்`` என்பதை, ``மொழி தெரிய`` என்பதன்பின்னும் கூட்டியுரைக்க.
``கண்டோம்`` என்பதன் பின்னும், `ஆதலால்` என்பது வருவிக்க.
உழவர் -முயல்பவர்.
கிழவர்- முதியோர், நோய் மூப்பு, உம்மைத் தொகை.
அதன்பின் நான்காவது விரிக்க.
கீழ்ப் படுத்தலைக் கூறுதற்பொருட்டு ``மூப்பு`` என மீண்டு மநுவதித்தார்.
மொழி தெரிய - நமது சொல் மற்றவர்களுக்கும் விளங்கும்படி.
நாயனார் - தலைவர்.
`எப்பொழுதும் உரைப்போம்` என்றபடி.
அவ்வாறு உரையாதோர் ``வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவர்`` * நாம் அவ்வாறின்றி `மன்றில் நடம் ஆடும் நாயனார்` என்று எப்பொழுதும் சொல்லியிருப்போமானால் இவ்வுடம்பு நீங்கியபின் அவன் திருவடியை அடைவோம் - என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 14

நாமத்தி னால்என்தன் நாத்திருத்
தேன்நறை மாமலர்சேர்
தாமத்தி னாலுன் சரண்பணி
யேன்சார்வ தென்கொடுநான்
வாமத்தி லேயொரு மானைத்
தரித்தொரு மானைவைத்தாய்
சேமத்தி னாலுன் திருத்தில்லை
சேர்வதோர் செந்நெறியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மூன்றாம் அடியை முதற்கண் வைத்து உரைக்க.
``மான்`` இரண்டில் முன்னது மான் கன்று; பின்னது பெண்.
வாமம் - இடப்பக்கம் ``வைத்தாய்`` என்பது விளி, `உன்றன் நாமத்தினால்` என்க.
நாமம் - பெயர்.
அஃது அஞ்செழுத்து மந்திரம், அதனைப் பயில்கின்ற நா குற்றத்தினின்றும் நீங்கும் ஆகலின், `அவ்வாறு செய்து அதனை திருத்தாமல் இருக்கின்றேன்` என்றார்.
நறை - தேன்.
தாமம் - மாலை.
சரண் - திருவடி.
`உன்னைச் சார்வது` என்க.
சார்வது - அடைவது, என்கொடு - எதை வழியாகக் கொண்டு.
என்றது, `எதுவும் வழியாதற்கில்லை` என்றபடி.
`கொண்டு` என்பது, ``கொடு`` என மருவிற்று.
சேமம் - நம்மை `ஒன்றும் செய்யாத எனக்கு உன் திருத் தில்லையை அடைவதாகிய ஒரு வழிதான் உள்ளது` என்க.
``நெறியே`` என்னும் ஏகாரம் பிரிநிலை.
அதன்பின் `உளது` என்பது எஞ்சிநின்றது.

பண் :

பாடல் எண் : 15

நெறிதரு குழலை அறலென்பர்கள்
நிழலெழு மதியம் நுதலென்பர்கள்
நிலவினும் வெளிது நகையென்பர்கள்
நிறம்வரு கலசம் முலையென்பர்கள்
அறிகுவ திரிதிவ் விடையென்பர்கள்
அடியிணை கமல மலரென்பர்கள்
அவயவம் இனைய மடமங்கையர்
அழகியர் அமையும் அவரென்செய
மறிமழு வுடைய கரனென்கிலர்
மறலியை முனியும் அரனென்கிலர்
மதிபொதி சடில தரனென்கிலர்
மலைமகள் மருவு புயனென்கிலர்
செறிபொழில் நிலவு திலையென்கிலர்
திருநடம் நவிலும் இறையென்கிலர்
சிவகதி அருளும் அரசென்கிலர்
சிலர்நர குறுவர் அறிவின்றியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பின் வருவன பலவற்றோடும் இயையுமாறு.
``குழலை`` என்பதில் `ஐ சாரியை` என வைத்து.
`குழல் அறல்` என்பார்கள் என அங்ஙனம் கூறுவார் கூற்றாக்கியே உரைக்க.
குழல் - கூந்தல்.
அறல் - நீரோடையிற் காணப்படும் கருநுண் மணல்.
நெறி - நெறிப்பு, இங்கு உரைத்தது போலவே ``நுதல்`` முதலியன எழுவாயாக வும், மதியம் முதலியன பயனிலையாகவும் அமைந்து உரைப்பவர் கூற்றாகி வருதல் காண்க.
நிழல் - ஒளி ``மதி`` என்றது பிறையை.
`இனைய ஆன` என ஆக்கம் வருவிக்க.
`மடமங்கையர், அவர் கூறுமாறே அழகியராதல் அமையும்; `ஆயினும், அவர் என் செய உளர்! என்க.
`அவர்களால் ஆவது ஒன்றில்லை; அதனால் அவர் களது அழகைச் சொல்லிக்கொண்டிருப்பதால் பயனில்லை` என்ப தாம்.
மடமங்கையரை மேற்கூறியவாறு பலபடப் புகழ்கின்ற சிலர், தில்லைக் கூத்தப் பெருமான் தொடர்பாக ஒன்றையேனும் சொல்கின் றிலர்.
மறி - மான் கன்று.
தரன் - தரித்தவன்.
புயன் - தோள்களை யுடையவன்.
அவர் நரகிற்கு ஏதுவான செயல்களையே செய்து போவர் ஆதலின், `நரகு உறுதலைத் தவிரமாட்டார்` எனவும், `அதற்குக் காரணம் அறிவின்மையே` எனவும் கூறினார்.

பண் :

பாடல் எண் : 16

அறிவில் ஒழுக்கமும் பிறிதுபடு பொய்யும்
கடும்பிணித் தொகையும் இடும்பை ஈட்டமும்
இனையன பலசரக் கேற்றி வினையெனும்
தொல்மீ காமன் உய்ப்ப அந்நிலைக்
கருவெனும் நெடுநகர் ஒருதுறை நீத்தத்துப்
புலனெனும் கோள்மீன் அலமந்து தொடர
பிறப்பெனும் பெருங்கடல் உறப்புகுந் தலைக்கும்
துயர்த்திரை உவட்டின் பெயர்ப்பிடம் அயர்த்துக்
குடும்பம் என்னும் நெடுங்கல் வீழ்த்து
நிறையெனும் கூம்பு முரிந்து குறையா
உணர்வெனும் நெடும்பாய் கீறிப் புணரும்
மாயப் பெயர்படு காயச் சிறைக்கலம்
கலங்குபு கவிழா முன்னம் அலங்கல்
மதியுடன் அணிந்த பொதியவிழ் சடிலத்துப்
பையர வணிந்த தெய்வ நாயக
தொல்லெயில் உடுத்த தில்லை காவல
வம்பலர் தும்பை அம்பல வாண நின்
அருளெனும் நலத்தார் பூட்டித்
திருவடி நெடுங்கரை சேர்துதமா செய்யே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அலங்கல் மதியுடன் .
அம்பலவாண`` என்னும் தொடரை முதற்கண் வைத்து உரைக்க.
இடும்பை - துன்பம்.
இனையன - இவைபோல்வன.
எனவே, இங்குக் குறிக்கப்படுகின்ற மரக்கல வாணிபம் நஞ்சும், கள்ளும், கொலைக் கருவிகளும் போன்ற தீப்பொருள் வாணிபமாகின்றதேயன்றி, நற்பொருள் வாணிபமாக வில்லை.
மீகாமன் - மாலுமி.
உய்ப்ப - செலுத்த - கரு - உடம்பு தோன்றுதற்கு முதலாய் உள்ள வித்தும், நிலமும்.
அவைதாம் பலவாகலின், பல துறைமுகப்பட்டினங்களாக உருவகம் செய்யப் பட்டன.
- `அந்தத்` துறைகள் பலவற்றில் ஒருதுறைப் பிறப்பாகிய கடலில் புகுந்து` என்க.
நீத்தம் - நீர்.
புலன் - ஐம்புல ஆசை.
கோள்மீன்- முதலை.
அலமந்து - பல திசையாகச் சூழ்ந்து சூழ்ந்து.
அலைக்கும் - மனத்தைக் கவற்றுகின்ற.
துயர்த்திரை - துன்பமாகிய அலைகளின் உவட்டு - மோதல்கள்.
பெயர்ப்பு இடம் அயர்த்து - பெயர்ந்து அடைய வேண்டிய இடத்தை மறந்து.
அடைய வேண்டிய இடம் வீடு.
கல் - பாறை `கல்லில் வீழப்பண்ணி` என்க.
நிறை - மனம் ஒருநெறியில் நிற்றல்.
கூம்பு - பாய்கள் கட்டப்படும் தூண்.
கீறி - கிழிக்கப்பட்டு.
`கீறிக் கவிழா முன்னம்` என இயைக்க.
மாயப் பெயர்ப் படுகாயம் - பொய்யாய் இருந்தும், `மெய்` என வஞ்சனையான பெயரோடு பொருந்திய உடம்பு.
சிறைக் கலம் - உண்மையில் சிறையாய், தோற்றத்தில் கரைசேர்ப்பதுபோலக் காணப்படுகின்ற மரக்கலம்.
கலங்குபு - நிலைகலங்கி.
அலங்கல் - கொன்றை மலை.
வம்பு அலர் - நறுமணத்துடன் மலர்கின்ற தார் - கயிறு.
நடுக்கடலில் கவிழும் நிலையில் உள்ள மரக்கலங்களைத் தரையில் நாட்டப்பட்டுள்ள தூணில் பிணிக்கப்பட்டுள்ள கயிற்றைக் கொண்டுபோய்க் கட்டி யீர்த்துக் கரைக்குக் கொணர்வது அக்கால வழக்கம்.
இப்பாடலில் அமைந்துள்ள முற்றுருவகத்தின் சிறப்பு அறிந்து மகிழத்தக்கது.
`இவ் வுடம்பு வீழ்வதற்குள் உயிர் உன் திருவடியை அணைதலாகிய சீவன் முத்தி நிலையைத் தந்தருளல் வேண்டும்` என்பதாம்.
`அங்ஙனம் அடையாதே உடம்பு வீழுமாயின், அடுத்த பிறப்பில் செல்ல வேண்டி வரும்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 17

செய்ய திருமேனிச் சிற்றம் பலவருக்கென்
தையல் வளைகொடுத்தல் சாலுமே ஐயன்தேர்
சேயே வருமளவில் சிந்தாத மாத்திரமே
தாயே நமதுகையில் சங்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நற்றாய்க்கு மகளாயினாளை அவளோடு தனக்குள்ள கேண்மை பற்றி, ``என் தையல்`` என்றார்.
சாலும் - பொருந்தும்.
இதன்பின் `ஏனெனில்` என்பது வருவிக்க.
ஐயன் - சிற்றம்பலத்தான்.
சேயே - தொலைவில்தானே.
ஏகாரம் பிரிநிலை.
மகளைப் பெற்ற நற்றாய்க்குத் தோழியே மகளுக்குச் செவிலித்தாய் ஆதலாலும், தோழி தலைவியை, `அன்னாய்` என்றல் வழக்கு ஆதலாலும் ``தாயே`` என்றாள், ``நமது கையில் உள்ள சங்கு சிந்தாத மாத்திரமே`` என்றதனால், `சிந்துநிலையை அடைந்து விட்டன` என்றதாம்.
`உலார்ப் புறத்துத் தலைவனைக் காதலித்தாராகக் கூறப்படும் மகளிர் பொதுமகளிரே யல்லது, குல மகளிரல்லர் என்பதை.
``வழக்கொடு சிவணிய வகைமையான`` என்னும் சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் உரைத்த உரையான் உணர்க.
அங்ஙனம் ஆதலின் இங்குச் செவிலி நற்றாய்க்கு இவ்வாறு கூற அமைவதாயிற்று.
இனி, இறைவன் மேலவாய் வரும் அகத்துறைப் பாடலின் உள்ளுறைப் பொருள் தலைவியராவார் பக்குவான்மாக்களும், பிறர் அபக்குவான்மாக்களும், பாசங்களுமே யாதலாலும் அவ்வுள்ளுறை நோக்கில் இஃது அமைவுடையதேயாம்.
இது கைக்கிளைத் தலைவியது வேறுபாடு கண்டு ஐயுற்று வினவிய நற்றாய்க்குச் செவிலி அமைவு கூறும் முகத்தால் அறத்தொடு நின்றது.
`முதியராகிய நாமே அந்நிலையை அடைவோம் என்றால், இளையளாகிய நம் மகள் இந்நிலையை அடைந்தது வெகுளத் தக்கதோ` என்றபடி.

பண் :

பாடல் எண் : 18

சங்கிடத் தானிடத் தான்தன
தாகம் சமைந்தொருத்தி
அங்கிடத் தாள் தில்லை அம்பலக்
கூத்தற் கவிர்சடைமேல்
கொங்கிடத் தார்மலர்க் கொன்றையென்
றாயெங்கை நீயுமொரு
பங்கிடத் தான்வல்லை யேல்இல்லை
யேலுன் பசப்பொழியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சங்கு இடத்தான் - `பாஞ்சசன்னியம்` என்னும் சங்கினை இடக் கையிலே உடையவன்; திருமால்.
அவனை இடப் பாகத்திலே உடையவன் சிவபெருமான்; அம்பலவாணன்.
ஆகம் - திருமேனி, திருமேனியில் ஒருத்தி (உமை) அவனுக்குச் சமைந்து அந்த இடப்பாகத்தையே பற்றியிருக்கின்றார்.
இந்நிலையில் அவளுக்கு நீ தங்கையாகும்படி.
`அவ்வம்பல வாணணுடைய முடிமேல் உள்ள கொன்றைமலர் மாலை எனக்கு வேண்டும்` என்கின்றாய்.
அதனை நீ விடாப்பிடியாய் விரும்புவ தாயின், மால் உமை என்னும் அவ் இருவரைப் போல நீயும் அந்த இடப்பாகத்தை உனக்கு உரியதாகப் பற்றிக் கொள்ளும் வல்லமை யிருக்கு மாயின் விரும்பு; அஃது இல்லை யேல், உன் விருப்பத்தை விட்டொழி.
``பசப்பு ஒழி`` என்றது, `விருப்பத்தை ஒழி` என்றதே யாம்.
`திருமாலையும், உமையையும் தனது சத்திகளாக உடையவன் சிவ பெருமான்` என்பதும், `ஏனையோர்க்கு அந்நிலை கூடா` என்பதும் இங்கு மறைமுகமாக விளக்கப்பட்டது.
கொங்கு இடு அத்தார் - தேனைச் சொரிகின்ற அந்த மாலை.
``எங்கை`` என்பதன் பின் (என) என்று ஒரு சொல் வருவித்து, `அவள் உன்னை - என் தங்கை- என்று சொல்லும் படி` என உரைக்க.
இது, தன்னைத் தூது விடக் கருதிக் குறிப்பாற் சில கூறிய கைக்கிளைத் தலைவியைத் தோழி அருமை கூறி ஆற்றுவித்தது.
``கொன்றை`` என்பதன் பின் `வேண்டும்` என்பது எஞ்சி நின்றது.
``வல்லையேல்`` என்பதன்பின், `வேண்டு` என்பது வருவிக்க.

பண் :

பாடல் எண் : 19

ஒழிந்த தெங்களுற வென்கொ லோஎரியில்
ஒன்ன லார்கள்புரம் முன்னொர்நாள்
விழுந்தெ ரிந்துதுக ளாக வென்றிசெய்த
வில்லி தில்லைநகர் போலியார்
சுழிந்த உந்தியில் அழுந்தி மேகலை
தொடக்க நின்றவர் நடக்கநொந்
தழிந்த சிந்தையினும் வந்த தாகிலுமொர்
சிந்தை யாயொழிவ தல்லவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு மேற் பலவிடத்தும் வந்தன போலப் பாடாண் கைக்கிளையாகாது, ``சொல்லெதிர் பெறான் சொல்லியின் புறல்`` * என்னும் ஆண்பாற் கைக்கிளையாய அகப்பாட்டு.
இதிற் சிவ பெருமான் பாட்டுடைத் தலைவன் மட்டுமே.
கிளவித் தலைவன் வேறு கொள்ளப்பட்டான்.
``எங்கள் உறவு`` என்றது, தலைவியது கருத்து வேறானமைக்குக் காரணத்தை ஆராய்ந்தது.
வென்றி செய்த - வெற்றி படைத்த.
தில்லை நகர் போலியார் - தில்லைத் தலத்தைப் போல அருமையுடையவர்; தலைவி.
சுழிந்த - நீர்ச் சுழி போன்ற.
தொடக்க நின்று - பிணிக்கநின்று.
அழிந்த சிந்தை - கெட்டே போன மனம்.
இன்னும் வந்ததாகிலும் - ஒருகால் உயிர்த் தெழுந்து திரும்பிவந்தது என்றாலும்; அஃது ஒன்றாயிராது பலவாய்ச் சிதறுவதாம்.
`ஆகவே இனி உய்வது அரிது` என்பது குறிப்பெச்சம்.
`அழுந்தி, நின்று, நொந்து, அழிந்த சிந்தை` என்க.
``ஒழிவது`` என்பதில் ஒழி, துணிவுப் பொருண்மை விகுதி.
அல்ல என்பது ஒருமைப் பன்மை மயக்கம்.

பண் :

பாடல் எண் : 20

அல்லல் வாழ்க்கை வல்லிதின் செலுத்தற்குக்
கைத்தேர் உழந்து கார்வரும் என்று
வித்து விதைத்தும் விண்பார்த் திருந்தும்
கிளையுடன் தவிரப் பொருளுடன் கொண்டு
முளைமுதிர் பருவத்துப் பதியென வழங்கியும்
அருளா வயவர் அம்பிடை நடந்தும்
இருளுறு பவ்வத் தெந்திரங் கடாஅய்த்
துன்றுதிரைப் பரப்பிற் குன்றுபார்த் தியங்கியும்
ஆற்றல் வேந்தர்க்குச் சோற்றுக்கடன் பூண்டும்
தாள்உழந் தோடியும் வாளுழந் துண்டும்

அறியா ஒருவனைச் செறிவந்து தெருட்டியும்
சொற்பல புனைந்தும் கற்றன கழறியும்
குடும்பப் பாசம் நெடுந்தொடர்ப் பூட்டி
ஐவர் ஐந்திடத் தீர்ப்ப நொய்தில்
பிறந்தாங் கிறந்தும் இறந்தாங்கு பிறந்தும்
கணத்திடைத் தோன்றிக் கணத்திடைக் கரக்கும்
கொப்புட் செய்கை ஒப்பில் மின்போல்
உலப்பில் யோனிக் கலக்கத்து மயங்கியும்
நெய்யெரி வளர்த்துப் பெய்முகிற் பெயல்தரும்
தெய்வ வேதியர் தில்லை மூதூர்
ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும்
கடவுட் கண்ணுதல் நடம்முயன் றெடுத்த
பாதப் போதும் பாய்புலிப் பட்டும்
மீதியாத் தசைத்த வெள்ளெயிற் றரவும்
சேயுயர் அகலத் தாயிரங் குடுமி

மணிகிடந் திமைக்கும் ஒருபே ராரமும்
அருள்பொதிந் தலர்ந்த திருவாய் மலரும்
நெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும்
கங்கை வழங்கும் திங்கள் வேணியும்
கண்ணிடைப் பொறித்து மனத்திடை அழுத்தி ஆங்

குள்மகிழ்ந் துரைக்க உறுதவஞ் செய்தனன்
நான்முகன் பதத்தின் மேல்நிகழ் பதந்தான்
உறுதற் கரியதும் உண்டோ
பெறுதற் கரியதோர் பேறுபெற் றேற்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அல்லல் வாழ்க்கை, உடல் ஓம்பும் வாழ்க்கை.
வல்லிதின் - திறமையாக.
செலுத்துதற்கு - நடத்துதற் பொருட்டு மேற்கொள்ளப்படும் பலவகையான தொழில்கள் இங்குக் குறிக்கப் பட்டன.
உழந்து.
கார் - மழை.
கிளை உடன் தவிர - சுற்றத்தார் பலரும் இல்லத்திலே இருந்துவிடத் தான் மட்டும்.
`பதி` என வழங்கி, `எந்த ஊர் நல்ல ஊர்` என ஆராய்ந்து சென்று.
அருளாவயவர் - இரக்கம் காட்டாத படைவீரர்.
அம்பிடை நடத்தல் போர்க்களத்து உலவுதல்.
பவ்வம் - கடல்.
எந்திரம் - மரக்கலம்.
கடாஅய் - செலுத்தி.
குன்று - நீருள் நின்று மரக்கலத்தை உடைக்கும் மலைகள்.
சோற்றுக் கடன் - படைவீரர் தாம் போர் இல்லாது உண்டு இருக்கும் கடன்.
இது போர் வந்த காலத்தில் போர்க்களம் புகுந்து வஞ்சியாது பொருது வெல்லுதல், அல்லது உயிர்கொடுத்தலால் தீரும்.
தாள் உழந்து ஓடி - கால் கடுக்க ஓடித் தூது உரைத்தல்.
வாள் உழந்து - வாட்படை பயிற்றுவித்து.
அறியா .
தெருட்டி - கல்வி கற்பித்து புனைதல் - கவி யாத்தல்.
கற்றன கழறி - தான் அறிந்தவற்றைப் பலரும் அறிய அவைக்களத்து விரித் துரைத்து.
பாச நெடுந்தொடர் (சங்கிலி) பூட்டி ஈர்ப்பவர் ஐவர் - ஐம்புலக் குறும்பர்.
ஆங்கு, உவம உருபுகள்.
அவை, `எல்லாம் வினை களின் பயன்` என்பது பற்றி வந்தன.
கொப்புள் - நீர்க் குமிழி.
ஒப் பின்மை, கணத்தில் தோன்றி கணத்தில் மறைதலில் பிற பொருள்கள் யாவும் ஒப்பிலவாதல் பற்றி என்பது வகை, அல்லது சாதியாகலின் விரி அளவில்லனவாம்.
கலக்கம் - வேறுபாடு.
``மயங்கியும்`` என்னும் உம்மை இழிவு சிறப்பு.
`மயங்கினாலும் கண்ணிடைப் பொறித்தும், மனத்திடை அழுத்தியும், (வாக்கிடை) உரைக்க உறுதவம் (யான்) செய்தனன்.
தான் - இந்நிலைமை, நான்முகன் பதத்தினும் மேல் நிகழ் பதமாகும் (இந்தப்) பெறுதற்கரியதோர் பேறு பெற்றேற்கு உறுதற் கரியதும் உண்டோ` என முடிக்க.
``அரியதும்`` என்னும் உம்மை உயர்வு சிறப்பு.
``நெய் எரி.
வேதியர்`` - `கற்று ஆங்கு எரி ஓம்பிக் கலியைவாராமே செற்ற` தில்லைவாழந்தணர்.
புலி - புலித்தோல்; ஆகுபெயர்.
யாத்து அசைத்த - கச்சாக இறுக்கிக் கட்டிய.
ஆயிரங் குடுமிப் பேராரம், ஆதிசேடனாகிய பாம்பு.
உறுதவம் - மிக்க தவம்.

பண் :

பாடல் எண் : 21

பெற்றோர் பிடிக்கப் பிழைத்துச் செவிலியர்கள்
சுற்றோட ஓடித் தொழாநிற்கும் ஒற்றைக்கைம்
மாமறுகச் சீறியசிற் றம்பலத்தான் மான்தேர்போம்
கோமறுகிற் பேதை குழாம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பெற்றோர் - நற்றாயர்.
பிழைத்து - அவர்களுக்குத் தப்பி.
சுற்று - சுற்றிலும்.
ஒற்றைக்கை மா - தும்பிக்கையை உடைய விலங்கு; யானை.
மறுக - வருந்த.
மான் தேர் - குதிரைகள் பூட்டிய தேர்.
விதப்பினால், `வேதமாகிய குதிரைகள்` என்பது பெறப்பட்டது.
கோ மறுகு - இராச வீதி.
`பேதையர்` என்பதை, ``பேதைகள்`` - என அஃறிணையாக உபசரித்தார்.
பேதையர் - மகளிர்.
இதனால், கூத்தப் பெருமானது, தேர் விழாவின் சிறப்புக் கூறியவாறு.
பெற்றோரும், செவிலியரும் தடுத்தல், `சென்று காணின், அவனது காதல் வலையில் வீழ்ந்து, பிறிதொன்றற்கும் உதவார்` என்னும் அச்சத்தினாலேயாம், இதனால், காந்தத்தை நோக்கிச் செல்லும் இரும்புபோலக் கடவுளை நோக்கிச் செல்வதே உயிர்கட்கு இயல்பு` என்பதும், `அதனைச் செயற்கையாகிய பாசத்தளைகளே குறுக்கிட்டுத் தடுத்துத் துன்புறுத்து கின்றன` என்பதும் ஆகிய உண்மைகள் புலப்படுத்தப்பட்டவாறு அறிக.

பண் :

பாடல் எண் : 22

பேதையெங் கேயினித் தேறியுய்
வாள்பிர மன்தனக்குத்
தாதை தன் தாதையென் றேத்தும்
பிரான்தண் புலிசைப்பிரான்
கோதையந் தாமத்தண் கொன்றை
கொடான் நின்று கொல்லவெண்ணி
ஊதையும் காரும் துளியொடும்
கூடி உலாவி யவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பேதை எங்கே இனித் தேறி உய்வாள்`` என்பதை இறுதியில் வைத்து உரைக்க.
பிரமன்றனக்குத் தாதை, திருமால், அவனால் `தனக்குத் தாதை` என்று ஏத்தப்படும் பிரான் சிவபிரான்.
கோதை, தாமம் - ஒரு பொருட் சொற்கள்.
அவை தம்மில் சிறிது வேறுபாடுடைய.
ஊதை - வாடைக் காற்று.
கார் - மேகம்.
``ஊதையும், காரும் துளியொடு கூடி உலாவிய`` என்றது, `காலம் கார்காலமாயிற்று` என்றவாறு.
தலைவியரைப் பிரிந்து சென்ற தலைவர் கார்காலத்தில் வந்து கூடுவர் ஆகலின், `அவ்வாற்றால் களிப்பு எய்துகின்ற மகளிரைக் காணுந்தோறும் இவள் ஆற்றாமை மிகுவாள்` என்பது பற்றி, ``பேதை எங்கே இனித் தேறி உய்வாள்` என்றாள்.
இது கைக்கிளைத் தலைவிக்குத் தோழியாயினாள் பருவ வரவு கண்டு கவன்றுரைத்தது.

பண் :

பாடல் எண் : 23

உலவு சலதி வாழ்விடம் அமரர் தொழவு ணாவென
நுகரும் ஒருவர் ஊழியின் இறுதி யொருவர் ஆழிய
புலவு கமழ்க ரோடிகை உடைய புனிதர் பூசுரர்
புலிசை யலர்செய் போதணி பொழிலின் நிழலின் வாழ்வதோர்
கலவ மயில னார்கருள் கரிய குழலி னார்குயில்
கருதுமொழியி னார்கடை நெடிய விழியி னாரிதழ்
இலவின் அழகி யாரிடை கொடியின் விடிவி னார்வடி
வெழுதும் அருமை யாரென திதய முழுதும் ஆள்வரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது மடல் மா ஊரத் துணிந்த தலைவன் `அஃது இயலுமோ` எண்ணிக் கவன்று கூறியது.
மடல் மா ஊர்பவன் தலைவியது உருவத்தை அவளேபோலத் தோன்றும்படி நன்கு எழுதிய கிழியைக் கையில் கொண்டு ஊர்தல் வேண்டும்.
அதற்கு, `இவளது அவயவங்கள் எழுதற்கு அரியனவாய் உள்ளனவே` எனக் கவன்று கூறினான் எனவே, இதுவும் நேரே அகப்பாட்டாம்.
இங்கும் கூத்தப் பெருமான் பாட்டுடைத் தலைவர் மட்டுமே.
சலதி - கடல்.
கடலில் தோன்றிய விடத்தை அதன்கண் வாழ்வ தாகக் கூறினார்.
ஊழியின் இறுதி; சங்கார கால முடிவு.
`அது பொழுது சிவபிரானைத் தவிரப் பிறர் ஒருவரும் இல்லை` என்றற்கு, ``ஊழியில் இறுதி ஒருவர்`` என்றார்.
ஆழிய - ஆழ்ந்த.
கரோடிகை - தலைஓடு.
`புலால் கமழும் தலையோட்டை யுடையராயினும் தூயரே` என்றற்கு, ``புனிதர்`` என்றார்.
பூசுரர், தில்லைவாழந்தணர்.
`புலிசைப் பொழில்` என இயையும்.
``வாழ்வது`` என்றது மயிலை.
கலவம் - கலாபம்; தோகையை பொழிலிடத்தே கண்டான் ஆகலின், ``பொழிலின் நிழலில் வாழ்வது ஓர் மயிலை ஒத்தவர்`` என்றான்.
தனது நன்கு மதிக்கற்பாடு, தோன்ற, ஒருத்தியையே பலவிடத்தும் பன்மைச் சொல்லாற் கூறினான்.
`குயில் எனக் கருதும் மொழி` என்க.
கடை நெடியவிழி என்ற குழை அளவு செல்லும் விழி என்றவாறு.
இலவு - இலவங் காய்.
இன், உவம உருபு.
``அழகியார்`` எனச் சினைவினை முதல்மேல் ஏற்றப்பட்டது.
``வடிவினார்`` என்பதும் அது.
`ஆறு சென்ற வியர்` என்பதில் பெயரெச்சம் காரணப் பொருட்டாய் நின்று காரியப் பெயர் கொண்டாற்போல, இங்கு, ``எழுதும் அருமை`` என்பதில் பெயரெச்சம் பண்பிப் பொருட்டாய் நின்று, பண்புப் பெயர் கொண்டது.

பண் :

பாடல் எண் : 24

ஆளெனப் புதிதின்வந் தடைந்திலம் அத்தநின்
தாளின் ஏவல் தலையின் இயற்றி
வழிவழி வந்த மரபினம் மொழிவதுன்
ஐந்தெழுத் தவையெம் சிந்தையிற் கிடத்தி
நனவே போல நாடொறும் பழகிக்

கனவிலும் நவிற்றும் காதலேம் வினைகெடக்
கேட்பதும் நின்பெருங் கீர்த்தி மீட்பது
நின்னெறி அல்லாப் புன்னெறி படர்ந்த
மதியில் நெஞ்சத்தை வரைந்து நிதியென
அருத்திசெய் திடுவ துருத்திர சாதனம்

காலையும் மாலையும் கால்பெயர்த் திடுவதுன்
ஆலயம் வலம்வரு தற்கே சால்பினில்
கைகொடு குயிற்றுவ தைய நின்னது
கோயில் பல்பணி குறித்தே ஒயாது
உருகி நின்னினைந் தருவி சோரக்

கண்ணிற் காண்பதெவ் வுலகினும்காண்பனவெல்லாம்
நீயே யாகி நின்றதோர் நிலயை நாயேன்
தலைகொடு சார்வதுன் சரண்வழி அல்லால்
அலைகடல் பிறழினும் அடாதே அதனால்
பொய்த்தவ வேடம் கைத்தகப் படுத்தற்கு
வஞ்சச் சொல்லின் வார்வலை போக்கிச்
சமயப் படுகுழி சமைத்தாங் கமைவயின்
மானுட மாக்களை வலியப் புகுத்தும்
ஆனா விரதத் தகப்படுத் தாழ்த்தும்
வளைவுணர் வெனக்கு வருமோ உளர்தரு

நுரையுந் திரையும் நொப்புறு கொட்பும்
வரையில் சீகர வாரியும் குரைகடல்
பெருத்தும் சிறுத்தும் பிறங்குவ தோன்றி
எண்ணில வாகி இருங்கடல் அடங்கும்
தன்மை போலச் சராசரம் அனைத்தும்
நின்னிடைத் தோன்றி நின்னிடை அடங்கும்நீ
ஒன்றினும் தோன்றாய் ஒன்றினும் அடங்காய்
வானோர்க் கரியாய் மறைகளுக் கெட்டாய்
நான்மறை யாளர் நடுவுபுக் கடங்கிச்
செம்பொன் தில்லை மூதூர்
அம்பலத் தாடும் உம்பர்நா யகனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதனுள் ``உளர்தரும்`` என்பது முதல் ``எட்டாய்`` என்பது முடிய உள்ள பகுதி சிவபெருமானது அருமை கூறியது.
`அத் துணை அரியனாகிய நீ எளியனாய்த் தில்லை அம்பலத்தில் ஆடு கின்றாய்` என்றார்.
அதனால், ``உளர்தரும்`` என்பது முதல் இறுதி முடிய உள்ள பகுதி முதற்கண் கூட்டி உரைக்கற்பாலதாயிற்று.
அதனுடன், ``அத்த, ஐய`` என்பவற்றையும் முதலிற் கொள்க.
பின்பு, ``வழி வழி மரபினம்`` எனக் கூறுவதால், ``புதிதின் `ஆள்` என வந்து அடைந்திலம்`` என்றது தம் முன்னோரையும் உளப்படுத்துத் தம் மரபு நிலை கூறியதேயாயிற்று.
இதனால், அடிகள் வழி வழிச் சைவராதல் விளங்கும்.
இத்தகையோரையே `பழவடியார்` என்பர்.
தம் காலத்தில் சைவராகின்றவர், `புத்தடியார்` ஆவர்.
தம் பழமையை அடிகள் பின்னரும் தொடர்ந்து விளக்குதல் காண்க.
தாளின் ஏவல் - காலால் ஏவிய பணி.
ஏவல் ஏவப் பட்டதனைக் குறித்தலால் ஆகுபெயர்.
``சிந்தையிற் கிடத்தி`` என்பதை, ``மொழிவது`` என்பதன்பின் கூட்டுக.
`நாள்தோறும் பழகி நனவேபோலக் கனவிலும் நவிற்றும் காதலெம்` எனக் கூட்டுக.
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
என்று அருளிச்செய்தது.
இந்நிலையையேயாம் தொழிற் பெயர் எழுவாயாய் நிற்கும் பொழுது தொழில் முதல் நிலைகள் பயனிலை யாய் வருதல் உண்டு.
அதனை அம்முதனிலைப் பொருளவாய உருபுகளை ஏற்ற பெயர்களும் பயனிலைகளாய் வரும்.
அவ்வாற்றால் ``நெஞ்சத்தை`` என்பது போல ஏனைய ``அஞ்செழுத்தவை, கீர்த்தி, சாதனம், நிலை`` என்பவற்றிலும் இரண்டாவது விரிக்க.
கேட்டது.
``மொழிவது, செய்திடுவது, காண்பது`` என்பன தொழிற் பெயர்கள்.
நவிற்றுதலுக்கு `அவற்றை` என்னும் செயப்படுபொருள் வருவித்து அதனை வேறு தொடராக்குக.
`வரைந்து மீட்பது`` என மேலே கூட்டுக.
அருத்தி - விருப்பம்.
சாதனம் - மணி.
குயிற்றுவது - செய்வது.
`பணியாதல் குறித்தே` என ஆக்கம் வருவிக்க.
சரண் வழி - திருவடிகளை அடையும் வழி.
``மாப்பின் ஒப்பின்`` 1 என்னும் சூத்திரத்துள் ``செலவின்`` என்பதும் கூறப்பட்டமையால் வழி என்பதும் இரண்டாவதன் தொகையாம்.
அல்லால் என்பதற்கு முன்னே இவை என்பதும் பின்னை `பிறிது` என்பதும் வருவித்து, `இவையல்லால் அடாது` என்க.
அடாது - வந்து பொருந்தாது.
ஏகாரம் தேற்றம்.
`தம் கைத்தாக அகப்படுத்தற்கு` என, `தம்` என்பதும், ஆக்கமும் வருவிக்க.
``வேடர்`` என்பதும், `வேடம் உடையவர், வேடர்` என இரட்டுற் மொழிய நின்றது.
கைத்து - கைப்பொருள்.
``சொல்லின் வலை, சமயப் படுகுழி`` என்பன உருவகங்கள்.
இன், வேண்டாவழிச் சாரியை.
படுகுழி, வீழ்ந்தழியும் குழி.
அமைவயின் - வாய்ப்பு நேரும்பொழும்.
``மானுட மாக்கள்`` என்பதும் உருவகம்.
``வலியப் புகுத்தும் விரதம்`` என்றமையால் மேல், ``சமயம்`` எனப்பட்டன.
சமணமும், மீமாஞ்சகமும் ஆயின.
இவற்றுள் மீமாஞ்சக மதம்.
``கங்கை ஆடில் என்! 2 காவிரி ஆடில் என்!`` எனத் தொடங்கும் திருப்பதிகத்துள்ளும் ``விரதமே பரமாக வேதியரும் சரதமாகவே சாத்திரங் காட்டினர்`` 3 எனத் திருவாசகத்துள்ளும், ஆதிமறை ஓதி, அதன்பயன்ஒன் றும் அறியா
வேதியர்சொல் மெய்யென்று மேவாதே
எனச் சாத்திரத்துள்ளும் விலக்கப்பட்டமை காண்க.
வளைவுணர்வு - கோணலான அறிவு.
ஓகாரம்.
எதிர்மறை.
இதனுள் ``நுரையும், திரையும்`` என்பது முதலாகப் போந்த அடிகளைச் சிவஞான போதத்து இரண்டாம் சூத்திர மாபாடியத்துள் பிரம முதற்காரணவாத மறுப்பில் எடுத்துக் காட்டி இதன் உண்மைப் பொருளைத் தெளிவுபடுத்தி யிருத்தல் காண்க.
நொப்புறு கொட்பு - கலங்கலையுடைய சுழல்.
வரையின் சீகரம் - மலைபோன்ற அலைகள்.
வாரி, சங்கு முதலியன வருவாய்.
குரை - ஒலிக்கின்ற.

பண் :

பாடல் எண் : 25

நாயனைய என்னைப் பொருட்படுத்தி நன்களித்துத்
தாயனைய னாயருளும் தம்பிரான் தூயவிரை
மென்துழாய் மாலொடயன் தேட வியன்தில்லை
மன்றுளே ஆடும் மணி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மாலும், அயனும் தேடிக் காணாராயினும் மன்றுளே ஆடுகின்றான்` என்றபடி.
`தம் பிரான்` என்பது `தமக்குப் பிரான்` என்னும் பொருளதாயினும் இங்குப் பொதுப்படத் `தலைவன்` என்னும் அளவாய் நின்றது.
`மணி, என்னை அளித்து அருளும் தலைவன்` என முடிக்க.
அளித்து - காத்து.

பண் :

பாடல் எண் : 26

மணிவாய் முகிழ்ப்பத் திருமுகம்
வேர்ப்ப அம் மன்றுக்கெல்லாம்
அணிவாய் அருள்நடம் ஆடும்
பிரானை அடைந்துருகிப்
பணியாய் புலன்வழி போம்நெஞ்ச
மேயினிப் பையப்பையப்
பிணியாய்க் கடைவழி சாதியெல்
லோரும் பிணமென்னவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முகிழ்ப்ப - முறுவல் சிறிதே அரும்ப புலன் வழிப்பேர் - ஐம்புல வழியினின்றும் நீங்கு.
கடை வழி - இறுதிக் காலத்தில் பிணம் என்ன - முன்பு சொன்ன பெயராலே சுட்டாமல், பிணம் என்னும் பெயராலே சுட்டும்படி.
சாதி - சாவாய்.

பண் :

பாடல் எண் : 27

என்நாம் இனிமட வரலாய் செய்குவ
தினமாய் வண்டுகள் மலர்கிண்டித்
தென்னா எனமுரல் பொழில்சூழ் தில்லையுள்
அரனார் திருமுடி அணிதாமம்
தன்னா லல்லது தீரா தென்னிடர்
தகையா துயிர்கரு முகிலேறி
மின்னா நின்றது துளிவா டையும்வர
வீசா நின்றது பேசாயே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மடவரலாய், கருமுகில் ஏறிமின்னா நின்றது; துனி வாடையும் வர வீசாநின்றது; அரனார் திருமுடி அணி தாமந்தன் னாலல்லது என் இடர் தீராது; உயிர் தகையாது; (அவரோ அதைத் தருவதாய் இல்லை) இனி நாம் என் செயகுவது பேசாய்` என இயைத்துக் கொள்க.
இது, பருவம் கண்டு ஆற்றளாய கைக்கிளைத் தலைவி தூது விடக்கருதித் தோழியை நோக்கிக் கூறியது.
``மட வரலாய்`` என்றது தோழியை.
தகையாது - தகைக்க (தடுக்க)ப்படாது.
துனி வாடை - துன்பம் தருகின்ற வாடைக் காற்று.

பண் :

பாடல் எண் : 28

பேசு வாழி பேசு வாழி
ஆசையொடு மயங்கி மாசுறு மனமே
பேசு வாழி பேசு வாழி
கண்டன மறையும் உண்டன மலமாம்
பூசின மாசாம் புணர்ந்தன பிரியும்

நிறைந்தன குறையும் உயர்ந்தன பணியும்
பிறந்தன இறக்கும் பெரியன சிறுக்கும்
ஒன்றொன் றொருவழி நில்லா வன்றியும்
செல்வமொடு பிறந்தோர் தேசொடு திகழ்ந்தோர்
கல்வியிற் சிறந்தோர் கடுந்திறல் மிகுந்தோர்
கொடையிற் பொலிந்தோர் படையிற் பயின்றோர்
குலத்தின் உயர்ந்தோர் நலத்தினின் வந்தோர்
எனையர் எங்குலத்தினர் இறந்தோர் அனையவர்
பேரும் நின்றில போலுந் தேரின்
நீயுமஃ தறிதி யன்றே மாயப்

பேய்த் தேர் போன்றும் நீப்பரும் உறக்கத்துக்
கனவே போன்றும் நனவுப்பெயர் பெற்ற
மாய வாழ்க்கையை மதித்துக் காயத்தைக்
கல்லினும் வலிதாக் கருதிப் பொல்லாத்
தன்மயர் இழிவு சார்ந்தனை நீயும்
நன்மையில் திரிந்த புன்மையை யாதலின்
அழுக்குடைப் புலன்வழி இழுக்கத்தின் ஒழுகி
விளைவாய்த் தூண்டிலின் உள்ளிரை விழுங்கும்
பன்மீன் போலவும்
மின்னுபு விளக்கத்து விட்டில் போலவும்
ஆசையாம் பரிசத் தியானை போலவும்
ஒசையின் விளிந்த புள்ளுப் போலவும்
வீசிய மணத்தின் வண்டு போலவும்
உறுவ துணராது செறுவுழிச் சேர்ந்தனை
நுண்ணூல் நூற்றுத் தன்னகப் படுக்கும்
அறிவில் கீடத்து நுந்தழி போல
ஆசைச் சங்கிலிப் பாசத் தொடர்ப்பட்டு
இடர்கெழு மனத்தினோ டியற்றுவ தறியாது
குடர்கெவு சிறையறைக் குறங்குபு கிடத்தி
கறவை நினைந்த கன்றென இரங்கி

மறவா மனத்து மாசறும் அடியார்க்
கருள்சுரந் தளிக்கும் அற்புதக் கூத்தனை
மறையவர் தில்லை மன்று ளாடும்
இறையவன் என்கிலை என்நினைந் தனையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதனுள் முதல் மூன்று அடிகள் இரட்டைத் தொடை.
இடையே ஒருதொடர் மடுக்கப்பட்டமையால் அடுக்கு இசைநிறை யாகாது.
பொருள் நிலையாய், வலிசெய்தற் பொருட்டாயிற்று.
``வாழி`` என்பன அசை.
இவைகளை இறுதியிற் கூட்டியுரைக்க.
நான்காவது முதல் ஏழு முடிய உள்ள அடிகளில், காலம் காரணமாகப் பொருள்கள் மிக விரைவில் நேர் மாறான நிலைகளை அடைதல் கூறும் முகத்தால் அவற்றது நிலையாமை விளக்கப்பட்டது.
ஒன்று ஒன்று - அது அது.
இதில் முற்றும்மை தொகுக்கப்பட்டது.
ஒரு வழி - நிலையில்.
``அது அது`` எனப்பட்டவை அனைத்தும் தொக்குப் பன்மையாதலின் ``நில்லா`` என்றார்.
``பிறந்தோர், திகழ்ந்தோர்`` முதலிய எட்டிலும் ``ஆகியும்`` என்பதை விரித்து அவைகளை ``இறந்தோர்`` என்பதோடு முடித்து, `இறந்தோராகிய எம் குலத்தினர் எனையர்!` என்க.
தேசு - புகழ் நலத்தினின் வந்தோர் - நல்லொழுக்கத்தில் பொருந்தினோர், எனையர் - எத்துணையர்! என்றது, `எண்ணிலர்` என்றபடி.
``தேரின்`` என்பதை, ``அனையவர்`` என்பதற்கு முன்னே கூட்டுக.
``பேரும்`` என்னும் உம்மை இழிவு சிறப்பு.
``போலும்`` என்பது உரையசை.
உலகர் பலரையும் குறியாது, ``எம் குலத்தினர்`` என்றார்.
தாம் நன்குணர்ந்தமையைக் குறித்தற்கு, ``நீயும் அஃது அறிந்தனை யன்றே`` என்றது, `அறிந்தும் இழிவு சார்ந்தனை` என அதன் மடமையை `உணர்த்தற்கு.
ஆகவே, அவ்விடத்து, `அறிந்தும்` என்பது வருவிக்க.
பேய்த் தேர் - கானல், ``நனவுப் பெயர் பெற்ற`` என்றது, `அப்பெயர் நீடு நில்லாதது` என்றற்கு.
மாயம் - கடிதின் மறைவது.
`பொல்லாத் தன்மையரது இழிவினை நீயும் சார்ந்தனை என்க.
``இழிவு`` என்பது அதனை உடைய செயைல உணர்த்தலின் ஆகுபெயர்.
``சார்ந்தனை`` என்பதன்பின், `அதனால்` என்பது வருவிக்க.
ஆதலின் - ஆகிவிட்டமையால்.
இழுக்கம் - சகதி.
`புலன்வழியாகிய இழுக்கம்` என்க.
ஒழுகி - நடந்து.
தூண்டிலில் உள்ள இரையை விரும்பிச் சென்று இறக்கின்ற மீன் `சுவை` என்னும் புலனால் கெடுதற்கும், விளக்கு ஒளியை `இரை` என ஓடி வீழ்ந்து இறக்கும்` என்பர் ஆதலின் அஃது `ஊறு` என்னும் புலனால் கெடுதற்கும், புள் - அதணம்.
`இது வேடர்கள் வஞ்சனையால் இசைக்கும் இசையால் மயங்கி வந்து வலையில் விழும்` என்பர் ஆதலின் அஃது `ஓை\\\\\\\\u2970?` என்னும் புலனால் கெடுதற்கும், பூக்களின் மணத்தை நுகரச் சென்று அவற்றினுள் வீழ்கின்ற வண்டுகள் அம்மலர்கள் குவிந்த பொழுது உள்ளே கிடந்து இறத்தலின் அவை `நாற்றம்` என்னும் புலனால் கெடுதற்கும் உவமையாயின.
`அசுணம் விலங்கு` என்பாரும்.
`வண்டுகள் மலர்த்தேனில் வீழ்ந்து இறத்தல் பற்றிச் சொல்லப்படுவது` என்பாரும் உளர்.
விளக்கம் - விளங்கல்.
ஆகுபெயராய் அதனையுடைய விளக்கைக் குறித்தது.
செறு உழி - கொல்லும் இடம்.
தன் அகப்படுத்தல் - தன்னையே தான் கட்டுக்குள் அகப்படுத்திக் கொள்ளுதல் `உலண்டு` என்னும் பூச்சி தனது வாய் நூலால் தன்னையே தான் சுற்றிக் கொள்ளும் என்பது சங்க இலக்கியங்களில் சொல்லப்படுவது.
``கீடம்`` என்பது புழுவாயினும் இங்கு அது பூச்சியையே குறித்தது.
``நுந்துழி`` என்பதும் அவ்வுலண்டிற்கு ஒரு பெயர்போலும்.
குடர் கெவு சிறை - தாயின் கருப்பை.
சிறக்கு - சிறைக்கண்.
வேற்றுமை மயக்கம்.
உறங்குபு கிடத்தி - உறங்கிக் கிடக்கின்றாய்.
`ஆயினும் - இறையவன் - என்கிலை; அஃதொழிந்து, அவ் இறைவனைப் பேசு` என முடிக்க.

பண் :

பாடல் எண் : 29

நினையார் மெலியார் நிறையழியார் வாளாப்
புனைவார்க்குக் கொன்றை பொதுவோ அனைவீரும்
மெச்சியே காண வியன்தில்லை யானருளென்
பிச்சியே நாளைப் பெறும்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பிச்சி - பித்தி; பித்துக்கொண்டவள்.
அஃதாவது, `காதல் மீதூர்வால் இடையறாது நினைந்தும், அதனால் உடல் மெலிந்தும், நிறையழிந்தும் நிற்பவள்.
தில்லைப் பெருமான் அனைவர் நிலையையும் நன்கு அறிந்து அவரவர் நிலைக்கு ஏற்ப அருள்புரிபவன் ஆகலின் அவனது அருளை இவளே பெறுவாள்; அஃதாவது, அவன் தனது கொன்றை மாலையை இவளுக்கே தருவான்.
ஆகையால், இவளைப் போல அன்பில்லாதவர்கள் பலர் அவனது கொன்றை மாலையை விரும்புதற்கு அஃது என்ன.
அன்பருக்கின்றி எல்லார்க்கும் பொதுவோ` என ஒருத்தியைத் தலைவியாகக் கொண்ட தோழி பிற மகளிரைக் காமக் கிழத்தியராக வைத்து இகழ்ந்தாள்.
இதன் உள்ளுறை, `அன்பர் அல்லார்க்குத் தில்லைப் பெருமானது அருள் கிட்டாது` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 30

பெறுகின்ற எண்ணிலித் தாயரும்
பேறுறும் யானுமென்னை
உறுகின்ற துன்பங்க ளாயிர
கோடியும் ஒய்வொடுஞ்சென்
றிறுகின்ற நாள்களு மாகிக்
கிடந்த இடுக்கணெல்லாம் அறுகின் றனதில்லை யாளுடை
யான்செம்பொன் னம்பலத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பெறுகின்ற தாயர் - வரும் பிறப்புக்களில் என்னைப் பெற்றெடுக்க இருக்கின்ற தாய்மார்கள்.
பேறும் உறும் யான் - அவர்கள் பெறும் பேறாக அவர்களை அடைகின்ற யான்.
ஓய்வு - துடிப்புக்களெல்லாம் அடங்குதல்.
இறுகின்ற நாள்கள் - இறக்கின்ற நாள்கள்.
இவைகள் யாவும் துன்பங்களாய், நான் தில்லையம்பலத் திலே சென்று கூத்தப் பெருமானைக் கண்டு தொழுகின்ற இந்த நேரத்திலே அடியொடு ஒருங்கி நீங்குகின்றன.
``தாயர்`` என்னும் உயர்திணையும், ``யான்`` என்னும் தன்மையும் இடுக்கண்களாய் அடங்கினமையால், ``அறுகின்றன`` என்பதிலே முடிந்தன.

பண் :

பாடல் எண் : 31

அம்பலவர் அங்கணர் அடைந்தவர் தமக்கே
அன்புடையர் என்னுமிதென் ஆனையை யுரித்தே
கம்பலம் உவந்தருளு வீர்மதனன் வேவக்
கண்டருளு வீர்பெரிய காதலறி யாதே
வம்பலர் நிறைந்துவசை பேசவொரு மாடே
வாடையுயிர் ஈரமணி மாமையும் இழந்தென்
கொம்பல மருந்தகைமை கண்டுதக வின்றிக்
கொன்றையரு ளீர்கொடியிர் என்றருளு வீரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது கைக்கிளையாதலின் செவிலி தலைவனை மாலையிரத்தலாய் வந்தது.
`தில்லைக் கூத்தரே` என்பதை முதலில் வருவித்து, `நீர் ஆனையை உரித்து அதன் தோலைக் கமலமாகப் போர்த்துக் கொண்டு மகிழ்ச்சியடைந்தீர்; மன்மதன் எரிந்தொழியப் பார்த்தீர்; இவளது காதலின் இயல்பு அறியாமல் வம்பலர் (பிறரைத் தூற்றும் இயல்புடையோர்) நிறைந்து (தெருவில் கூடிக் கொண்டு) வசை பேசவும், மாடே (ஒருபக்கம்) வாடைக் காற்று இவளுடைய உயிரை வாங்கவும், அழகையும் இழந்து அலமருகின்ற இவளது நிலையைக் கண்டு இரக்கம் இல்லாமல், கொன்றை மாலையை, `தாரேன்` என்கின்றீர்.
அதற்கு மேல் எங்களை, `நீவிர் கொடியீர்` என வைகின்றீர்.
உம்மை அறிஞர்கள் - யாவரும் எளிதில் அடைய அம்பலத்திலே நிற்கின்றார் - என்றும், அம்கணர் (கருணை மிகுந்தவர்) - என்றும், தம்மைச் சார்ந்தவரிடத்திலே அன்பு செய்பவர்- என்றும் இவ்வாறெல்லாம் புகழ்கின்றது என்னோ!` என உரைக்க.
இதுவும் பழித்ததுபோலப் புகழ்ந்தது ``கொடியீர்`` என்பது சிலேடை.

பண் :

பாடல் எண் : 32

அருளு வாழி அருளு வாழி
புரிசடைக் கடவுள் அருளு வாழி
தோன்றுழித் தோன்றி நிலைதவக் கரக்கும்
புற்புதச் செவ்வியின் மக்கள் யாக்கைக்கு
நினைப்பினுங் கடிதே இளமை நீக்கம்

அதனினுங் கடிதே மூப்பின் தொடர்ச்சி
அதனினுங் கடிதே கதுமென மரணம்
வாணாள் பருகி உடம்பை வறிதாக்கி
நாணாள் பயின்ற நல்காக் கூற்றும்
இனைய தன்மைய திதுவே யிதனை

எனதெனக் கருதி இதற்கென்று தொடங்கிச்
செய்தன சிலவே செய்வன சிலவே
செய்யா நிற்பன சிலவே யவற்றிடை
நன்றென்ப சிலவே தீதென்ப சிலவே
ஒன்றினும் பாடதன சிலவே யென்றிவை

கணத்திடை நினைந்து களிப்பவுங் கலுழ்பவும்
கணக்கில் கோடித் தொகுதி அவைதாம்
ஒன்றொன் றுணர்வுழி வருமோ வனைத்தும்
ஒன்றா உணர்வுழி வருமோ என்றொன்று
தெளிவுழித் தேறல் செல்லேம் அளிய
மனத்தின் செய்கை மற்றிதுவே நீயே
அறியை சாலவெம் பெரும தெரிவுறில்
உண்டாய்த் தோன்றுவ யாவையும் நீயே
கண்டனை அவைநினைக் காணா அதுதான்
நின்வயின் மறைத்தோ யல்லை யுன்னை

மாயாய் மன்னினை நீயே வாழி
மன்னியுஞ் சிறுமையிற் கரந்தோ யல்லை
பெருமையிற் பெரியோய் பெயர்த்தும் நீயே
பெருகியுஞ் சேணிடை நின்றோ யல்லை
தேர்வோர்க்குத் தம்மினும் அணியை நீயே

நண்ணியும் நீயொன்றின் மறைந்தோ யல்லை
இடையிட்டு நின்னை மறைப்பது மில்லை
மறைப்பினும் அதுவும்
நீயே யாகி நின்றதோர் நிலையே அஃதான்று
நினைப்பருங் காட்சி நின்னிலை யிதுவே

நினைப்புறுங் காட்சி எம்நிலை யதுவே
இனிநனி இரப்பதொன் றுடையன் மனமருண்டு
புன்மையின் திளைத்துப் புலன்வழி நடப்பினும்
நின்வயின் நினைந்தே னாகுதல் நின்வயின்
நினைக்குமா நினைக்கப் பெறுதல் அனைத்தொன்றும்

நீயே அருளல் வேண்டும் வேய்முதிர்
கயிலை புல்லென எறிவிசும்பு வறிதாக
இம்ப ருய்ய அம்பலம் பொலியத்
திருவளர் தில்லை மூதூர்
அருநடங் குயிற்றும் ஆதிவா னவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``வேய்முதிர்.
ஆதிவானவனே`` என்னும் பகுதியை முதலிலும், அதனை அடுத்து, ``புரிசடைக் கடவுள், பெரும`` என்பவற்றையும் வைத்து, ``அருளு வாழி`` என்பவற்றை இறுதியிற் கூட்டி யுரைக்க.
வேய் - மூங்கில்.
புல்லென - `கயிலை பொலி விழக்கும்படியும், ஒளி எறிக்கின்ற வானகம் வெறுமை யாகும்படியும், இவ்வுலகம் உய்யும்படியும் அம்பலம் பொலியும் படியும் அருநடம் குயிற்றும் - செய்கின்ற.
ஆதி வானவன் - முதற் கடவுள்.
``புரிசடைக் கடவுள்`` என்பதும் விளி.
`பருகியபின்` என்பது, `பருகி` எனத் திரிந்து நின்றது.
வாழ்நாள் முடிவைக் குறிக்கொண்டு நோக்கி வருதல் பற்றிக் கூற்றுவனை வாழ்நாளைப் பருகுவோனாகக் கூறினார்.
``கூற்றம் அளந்து நும் நாள் உண்ணும்`` 1 எனப் பிறவிடத்தும் கூறப்பட்டது.
``உடம்பை வறிதாக்கி`` என்றது, `உயிரைப் பிரித்தெடுத்து`` என்றபடி.
நாள்நாள் - பல நாளும்.
பயிலுதல் - அத் தொழிலையே செய்தல்.
நல்குதல் - இரங்குதல்.
`வறிதாக்கிப் பயின்ற கூற்றம்` என்க.
``இனைய தன்மையது`` என்றது.
`இதன் இயல்பு இது ஆதலின் அஃது ஒருவ ராலும் மாற்றப்படாது` என்றபடி.
`கூற்றமாகிய இது இனைய தன்மையதே` என மாற்றிக் கொள்க.
மரணத்தின் இயல்பை விளக்கு தற்கு.
இடையே கூற்றத்தின் இயல்பு கூறினார் ஆகலின்.
பின்னர், `இதனை`` என்றது, முன்னர்க் கூறிவந்த மக்கள் யாக்கையே யாயிற்று.
``நன்று, தீது`` என்பன ஓர் இனத்துப் பல பொருள்கள் மேல் தனித்தனிச் சென்று, பன்மை யொருமை மயக்கமாய் வந்தன.
ஒன்றினும் படாது வருவன, துரும்பு கிள்ளுதல், வாளாமுகம், முடி, கால் முதலியவை களைத் தடவல் போல்வன.
இவைகளை, `நினையாது செய்வன` என்பர்.
`என்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
களித்த லும், கலுழ்தலும் விருப்பு வெறுப்புக்களைக் குறிக்க.
``களிப்ப, கலுழ்ப`` என்பன.
அவ்வச் செயப்படு பொருள்மேல் நின்றன.
`ஒன்று ஒன்றாக என ஆக்கம் விரிக்க.
எதிர் காலப் பொருளவாய `உணர` என்னும் எச்சங்கள் ``உணர்வுழி`` எனத் திரிந்து நின்றன.
ஒன்று ஒன்றாக - தனித் தனியாக.
ஒன்றாக - ஒருதொகுதியாக.
தெளிவுழி - ஆராயும் பொழுது.
`தெரிவுழி` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும்.
தேறல் செல்லேம் - தெளிய மாட்டேம்.
மற்று.
அசை `இதுவே மனத்தின் செய்கை` என்க.
``செய்கை`` என்றது தன்மையை.
`வினைகள் வந்து பயன் தரும் முறைமைகளை யெல்லாம் அறியும் ஆற்றல் மனித மனத்திற்கு இல்லை` என்றபடி.
அளிய - எளிய `மனத்தின் தன்மை இதுவாக.
உனது இயல்பை நோக்கும் பொழுது.
நீயும் யாராலும் அறிதற்கு மிக அரியை` என்பதாம்.
``உண்டு`` என்பது உண்மைத் தன்மையைக் குறித்தது.
``யாவையும்`` என்பதில் `யாவற்றையும்` என இரண்டாவது விரிக்க.
``கண்டனை`` என்பதன் பின், `ஆயினும் என்பது வருவிக்க.
``அது`` என்றது அதன் காரணத்தை.
`அவை நின்னைக் காணாமை.
அங்ஙனம் அவற்றின் கண்களை நீ மறைத்த தனாலன்று; இனி, நீ தானும் மாயாய் - மறைந்திலை.
மன்னினை - வெளிப்பட்டே நிற்கின்றாய்.
வாழி, அசை.
``மன்னியும்`` என்னும் உம்மை.
`மன்னியதன்மேலும்` என எதிரது தழுவி நின்றது.
சிறுமையிற் கரந்தோய் அல்லை - சிறியதினும் சிறியதாய் மறைத்து நிற்றல்.
மட்டும் அன்று பெயர்த்தும் - மாறாக பெருமையிற் பெரியோய் நீயே.
பெருமை - பெரியது; ஆகுபெயர்.
பெருகியும் - அவ்வாறு.
பெரிதாயினாயேனும் சேணிடை நின்றோய் அல்லை.
மிக உயரத்திலே நீ இருக்கவில்லை.
தேர்வோர்க்கு - உன்னைத் தேடுபவர்கட்கு.
தம்மினும் நீ அணியையே - அவரினும் பார்க்க நீ அண்மையில் உள்ளவனே.
அவர்கள் உயிரினுள் நிற்பவன்.
(ஆயினும் அவர்கள் உன்னைக் காணாமல் தேடுகின்றனர் ஆயினும்) நீ ஒன்றில் மறைந்து நிற்கவில்லை.
உன்னைப் புலப்பட ஒட்டாது மறைப்பதொரு பொருளும் இல்லை.
இருப்பதாயின், அதுவும் நீயே ஆகின்ற நிலைமையை உடையாய்.
நினைவைக் கடந்த தோற்றத்தையுடைய உனது நிலைமை இது ஆயினும், நினைவையே உடையேனாகிய எனது நிலைமை இது.
அதாவது நீ எத்துணை எளியனாய் இருப்பினும் உன்னைக் காணாமல் இருப்பதேயாகும்.
அதனால் உன்னிடத்தில் யான் இரந்து கேட்பது ஒன்றை உடையேன்.
அஃது யாது எனின், நான் எந்தச் செயலைச் செய்தாலும் (அவை உன்னைவிட்டுத் தனியே இல்லாமையால்) உன்னையே நினைத்துச் செய்தனவாகக் கொள்ளுதலாகிய நினைத்துச் செய்தனவாகக் கொள்லுதலாகிய நினைப்பை நீ கொள்ளப் பெறுதலாம்.
அன்னதொரு வரத்தை நீ எனக்கு அருளல் வேண்டும்.
அருளு! அருளு!! அருளு!!!` என முடிக்க.
``வாழி`` என்பன அசைகள், ``தோன்றுழி`` என்பதில் ``உழி`` காலம் உணர்த்தி நின்றது.
தவ - கெட.
`கறங்கும்` என்பது பாடம் அன்று.
புற்புதம் - நீர்க்குமிழி `உன்னை மறைப்பதொரு பொருள் இருக்குமாயின் அதுவும் நீயே` என்றது.
திரோதான சத்தியாய் நின்று மறைத்தல் பற்றி.

பண் :

பாடல் எண் : 33

வானோர் பணிய மணியா சனத்திருக்கும்
ஆனாத செல்வத் தரசன்றே மாநாகம்
பந்திப்பார் நின்றாடும் பைம்பொன்னின் அம்பலத்தே
வந்திப்பார் வேண்டாத வாழ்வு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அன்றே`` என்னும் தேற்றச் சொல்லை இறுதிக்கண் கூட்டுக.
செல்வம், இந்திர பதவிச் செல்வம்.
பந்தித்தல் - கைகள்.
கழுத்து, வயிறு இவைகளைச் சுற்றிக் கட்டுதல்.
வேண்டாத - விரும்பாத, விரும்பாமைக்குக் காரணம், நிலையாமையும், துன்பமும் மயக்கமும் நிறைந்திருத்தலுமாகும்.

பண் :

பாடல் எண் : 34

வாழ்வாக வும்தங்கள் வைப்பாக
வும்மறை யோர்வணங்க
ஆள்வாய் திருத்தில்லை அம்பலத்
தாயுன்னை அன்றியொன்றைத்
தாழ்வார் அறியார் சடிலநஞ்
சுண்டிலை யாகிலன்றே
மாள்வார் சிலரையன் றோதெய்வ
மாக வணங்குவதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மறையோர், தங்கள்`` என்பவற்றை முதலிற் கூட்டுக.
மறையோர், தில்லைவாழந்தணர்.
``ஆள்வாய், அம்பலத் தாய்`` என்பன விளிகள்.
வைப்பு - சேம நிதி.
`உன்னையன்றி ஒரு தெய்வத்தை வணங்குபவர்.
தெய்வமாகக் கொண்டு வணங்குவது, நீ நஞ்சினை உண்ணாதிருப்பின் அன்றே இறந்து போயிருப்பாரை யன்றோ? அதனை அவர் அறியார்` என இயைத்து முடிக்க.
ஆரணி துங்கன், நாரணி பங்கன், அருணேசன்
தாரணி அஞ்சும் காரண நஞ்சம் தரியானேல்,
வாரணர் எங்கே, சாரணர் எங்கே, மலர்மேவும்
பூரணர் எங்கே, நாரணர் எங்கே போவாரே.
1 என்றார் சைவ எல்லப்ப நாவலர்.
அசைவைக் குறிப்பதாகிய ``சடிலம்`` என்பது முன்னர் அலைகளையும்.
பின்னர் அவற்றையுடைய கடலையும் குறித்தலால் இருமடியாகுபெயர்.

பண் :

பாடல் எண் : 35

வணங்குமிடை யீர்வறிது வல்லியிடை யாள்மேல்
மாரசர மாரிபொழி யப்பெறு மனத்தோ
டுணங்கியிவள் தானுமெலியப் பெறும் இடர்க்கே
ஊதையெரி தூவியுல வப்பெறும் அடுத்தே
பிணங்கியர வோடுசடை ஆடநடமாடும்
பித்தெரென வும்மிதயம் இத்தனையும் ஒரீர்
அணங்குவெறி யாடுமறி யாடுமது வீரும்
மையலையும் அல்லலையும் அல்லதறி யீரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது கைக்கிளைத் தலைவிதன் தோழி ஆயத்தாரை முன்னிலைப்படுத்தி வெறிவிலக்கியது.
வணங்கும் - துவள்கின்ற.
வல்லி - கொடி.
வறிது - காரணம் இல்லாமல்.
`இவள் உணங்கி மெலிய` என மாற்றுக.
தான், உம் அசைகள், உணங்குதல் - வற்றுதல்.
மெலிதல் - வலிமை குன்றுதல்.
இடர்க்கு, துன்பத்திற்கு உறுதுணையாக.
ஊதை - வாடைக் காற்று.
எரி தூவுதல் - வெப்பத்தைத் தருதல்.
``மெலியப் பெறும், உலவப் பெறும்`` என்பன அவ்வத் தொழிலை உடையளாதலையும், உடைத்தாதலையும் குறித்தன.
அடுத்து - இவைகளைச் சார்ந்து ``சடை அரவோடு பிணங்கி ஆடும்படி நடனம் ஆடுகின்ற பித்தர், பித்தர்`` எனப் பிதற்றுகின்றாள்.
`அப்படிப் பிதற்றக் கேட்டும் உங்கள் இதயங்களில் இவள் பிதற்றலின் காரணத்தை நீவிர் அறியவில்லை.
(நீவிர் எப்படி அறிவீர்;) `தெய்வத்தைக் குறித்து வெறியாடுதற்கு வேண்டிய செம்மறியாட்டையும், மதுவால் மயக்கப்படுகின்ற மயக்கத்தையும், மற்றும் பல உழைப்பையும் அல்லது வேறு ஒன்றையும் நீவிர் அறிய மாட்டீர்` என்க.
இத்தனையும் - `இவ்வளவுதானும்` என இழிவு சிறப்பும்மை.

பண் :

பாடல் எண் : 36

ஈரவே ரித்தார் வழங்கு சடிலத்துக்
குதிகொள் கங்கை மதியின்மீ தசைய
வண்டியங்கு வரைப்பின் எண்தோள் செல்வ
ஒருபால் தோடும் ஒருபால் குழையும்
இருபாற் பட்ட மேனி எந்தை

ஒல்லொலிப் பழனத் தில்லை மூதூர்
ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும்
இமையா நாட்டத் தொருபெருங் கடவுள்
வானவர் வணங்கும் தாதை யானே
மதுமழை பொழியும் புதுமந் தாரத்துத்
தேனியங் கொருசிறைக் கானகத் தியற்றிய
தெய்வ மண்டபத் தைவகை அமளிச்
சிங்கஞ் சுமப்ப ஏறி மங்கையர்
இமையா நாட்டத் தமையா நோக்கம்
தம்மார்பு பருகச் செம்மாந் திருக்கும்

ஆனாச் செல்வத்து வானோர் இன்பம்
அதுவே எய்தினும் எய்துக கதுமெனத்
தெறுசொ லாளர் உறுசினந் திருகி
எற்றியும் ஈர்த்தும் குற்றம் கொளீஇ
ஈர்ந்தும் போழ்ந்தும் எற்றுபு குடைந்தும்

வார்ந்துங் குறைத்தும் மதநாய்க் கீந்தும்
செக்குரல் பெய்தும் தீநீர் வாக்கியும்
புழுக்குடை அழுவத் தழுக்கியல் சேற்றுப்
பன்னெடுங் காலம் அழுந்தி இன்னா
வரையில் தண்டத்து மாறாக் கடுந்துயர்

நிரயஞ் சேரினுஞ் சேர்க உரையிடை
ஏனோர் என்னை ஆனாது விரும்பி
நல்லன் எனினும் என்க அவரே
அல்லன் எனினும் என்க நில்லாத்
திருவொடு திளைத்துப் பெருவளஞ் சிதையாது

இன்பத் தழுந்தினும் அழுந்துக அல்லாத்
துன்பந் துதையினும் துதைக முன்பின்
இளமையொடு பழகிக் கழிமூப்புக் குறுகாது
என்றும் இருக்கினும் இருக்கவன்றி
இன்றே இறக்கினும் இறக்க வொன்றினும்
வேண்டலும் இலனே வெறுத்தலும் இலனே
ஆண்டகைக் குரிசில் நின் அடியரொடு குழுமித்
தெய்வக் கூத்தும்நின் செய்ய பாதமும்
அடையவும் அணுகவும் பெற்ற
கிடையாச் செல்வங் கிடைத்த லானே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வேரி வழங்கு ஈரத்தார்ச் சடிலம்` என்க.
வேரி - தேனை.
வழங்கு - ஊற்றுகின்ற - ஈரம் - குளிர்ச்சி.
வரைப்பு - எல்லை.
வண்டுகள் தோளில் புரளும் மாலையின் தேனை உண்ண வந்து இயங்குகின்றன.
தோடு பெண்பாற்கு உரியதும், குழை ஆண்பாற்கு உரியதும் ஆகலின் மேனி இருபாற்பட்டதாயிற்று.
தேன் - வண்டுவகைகளில் ஒன்று - சிறை - பக்கம்.
அமளி - அமை.
``மங்கையர் பருக`` என இயையும் `இமையா நாட்டத்து அமையா நோக்கத்தால் பருக``` என்க.
அமையா நோக்கம் - தெவிட்டாத பார்வை.
``அதுவே`` என்னும் பிரிநிலை ஏகாரம் அதன் சிறப்புணர்த்தி நின்றது கதுமென - விரைவாக.
தெறுசொலாளர் - கடுஞ்சொற்களை யுடைய கால தூதுவர்.
உறுசினம் - மிக்க கோபம் திருகி - முறுகப் பெற்று.
குற்றம் - மண்ணுலகில் செய்த குற்றங்கள்.
கொளீஇ - கொளுவி; எடுத்தெடுத்துக் கூறி.
மத நாய் - வெறி நாய்.
தீ நீர் - உலோகங்களை உருக்கிய நீர்.
அழுவம் - பள்ளம்ஓ குழி ``இன்னா`` என்பதன்பின் `செய்யும்` என ஒருசொல் வருவிக்க.
வரை இல் - எல்லையில்லாத.
``உரையிடை`` என்பதை.
``விரும்பி`` என்பதன் பின்னர்க் கூட்டுக.
திரு - இவ்வுலகச் செல்வம்.
முன்பு - வலிமை.
முன்பின் - வலிமையை உடைய.
பழகுதல் - பலநாள் வாழ்தல்.
கழி மூப்பு - இளமை.
கழிய வரும் மூப்பு - ஆண் தகைக் குரிசில் - ஆளும் தகைமையை உடைய தலைவர்.
`குரிசிலாகிய நினக்கு அடியரா யினாரோடும் குழுமி` என்க.
அடைதல் - அடைக்கலமாய் புகுதல்.
அணுகுதல் - அகலமாதிருத்தல்.
`ஒரு பெருங்கடவுளே! எனக்கு மிகப் பெரிய இன்பங்கள்வரினும் வருக; மிகப்பெரிய துன்பங்கள்வரினும் வருக.
எந்த ஒன்றிலும் விருப்போ, வெறுப்போ கொள்கிலேன், எதனால் எனின், யாவர்க்கும் கிடைத்தற்கரிய மிகப் பெரிய செல்வம் எனக்குக் கிடைத்துவிட்டதனால்` என வினை முடிவு செய்க.

பண் :

பாடல் எண் : 37

ஆனேறே போந்தால் அழிவுண்டே அன்புடைய
நானேதான் வாழ்ந்திடினும் நன்றன்றே வானோங்கு
வாமாண் பொழிற்றில்லை மன்றைப் பொலிவித்த
கோமானை இத்தெருவே கொண்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது கைக்கிளைத் தலைவியின் காமம் மிக்க கழிபடர் கிளவி.
அஃதாவது காமம் மிகுதியால் வாய்க்கு வந்தன பிதற்றல்.
கழி படர் - மிக்க துன்பம்.
`ஆனேறே! தில்லை மன்னைப் பொலிவித்த கோமான்மேல் அன்புடைய நானே (இறவாது) உயிர் வாழ்ந்தாலும் உனக்கு நல்லதுதானே? (அவ்வாறிருக்க.
நீ ஒருநாள் போந்ததுபோலப் பல நாளும் அவனை இத்தெருவே கொண்டு போந்தால் உனக்கு அழிவது (கெடுவது) ஏதேனும் உண்டோ` என உரைத்துக் கொள்க.
இஃது இறைவனது ஊர்தியை எதிர்பெய்து கொண்டு கூறியது.
``அன்புடைய`` என்பதற்குமுன், `அவன்மேல்` என ஒருசொல் வருவிக்க.
``நானே`` என்னும் பிரிநிலை ஏகாரம் அவள் தன்னை இழித்துக் கூறியதனை உணர்த்திற்று.
தான், அசை `ஏனையோர் போல நான் உயர்ந்தவள் அல்லாவிடினும், அவன்மேல் அன்புடையளேயன்றோ என்றபடி.
நன்று - அறம்; புண்ணியம்.
`வாமம்` என்பது ஈற்று அம்முக்குறைந்து நின்றது.
வாமம் - அழகு.

பண் :

பாடல் எண் : 38

கொண்டல்வண் ணத்தவன் நான்முகன்
இந்திரன் கோமகுடத்
தண்டர்மிண் டித்தொழும் அம்பலக்
கூத்தனுக் கன்பு செய்யா
மிண்டர்மிண் டித்திரி வாரெனக்
கென்னினி நானவன்றன்
தொண்டர்தொண் டர்க்குத் தொழும்பாய்த்
திரியத் தொடங்கினனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கோ - தலைமை.
மிண்டர் - நெஞ்சுரம் உடையவர் மிண்டி - நெருங்கி (கலாய்த்து)த் திரிவார்.
`நான் தொழும்பாய்த் திரியத் தொடங்கினன்.
ஆகையால் இனி எனக்கு என்ன குறை` என்க.
இதனுள் வழி எதுகை வந்தது.

பண் :

பாடல் எண் : 39

தொடர நரைத்தங்க முன்புள்ள வாயின
தொழில்கள் மறுத்தொன்று மொன்றி யிடாதொரு
களிவு தலைக்கொண்டு புன்புலை வாரிகள்
துளையொழு கக்கண்டு சிந்தனை ஒய்வொடு
நடைகெட முற்கொண்ட பெண்டிர் பொறாதொரு
நடலை நமக்கென்று வந்தன பேசிட
நலியிரு மற்கஞ்சி உண்டி வேறாவிழு
நரக உடற்கன்பு கொண்டலை வேனினி
மிடலொடி யப்பண் டிலங்கையர் கோனொரு
விரலின் அமுக்குண்டு பண்பல பாடிய
விரகு செவிக்கொண்டு முன்புள தாகிய
வெகுளி தவிர்த்தன்று பொன்றி யிடாவகை
திடமருள் வைக்குஞ் செழுஞ்சுடர் ஊறிய
தெளியமு தத்தின் கொழுஞ்சுவை நீடிய
திலைநக ரிற்செம்பொன் அம்பல மேவிய
சிவனை நினைக்குந் தவஞ்சது ராவதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``(நான்) உடற்கு அன்பு செய்து அலைவேன்; (`இதனை விடுத்துத் )தில்லை யம்பலம் மேவிய சிவனை நினைக்கும் தலமே இனி (எனக்குச்) சதுராவது`` என முடிவு கொள்க.
அங்கம் - உறுப்புக்கள்.
தொடர நரைத்து - நாள்தோறும் தொடர்ந்து நரை தோன்றப்பெற்று முன்பு - இளமைக் காலத்தில் ஒன்றும் - (அங்கம்) ஒன்றேனும், ஒன்றியிடாது - வசப்படாது.
``களிவு தலைக்கொண்டு`` என்பதை, ``கண்டு`` என்பதன்பின் கூட்டுக.
`வெறுப்பை மேற் கொண்டு` என்பது இதன் பொருல், புன்புலை வாரிகள் - அற்பமான இழிந்த நீர்கள்; கோழை, சிறுநீர் முதலியன, நடை கெட - நடத்தல் இல்லாதொழிய.
(`இடம் பெயராது கிடந்து` என்றபடி) கொண்ட பெண்டிர் - மனைவியர், `தொல்லை பொறாது` என்க.
நடலை - துன்பம்.
விழும் உடல் - இறுதியில் வீழ்ந்தொழிகின்ற உடம்பு.
நரக உடல் - இழிவாலும், துன்பத்தாலும் நரகம்போல்வதாகிய உடம்பு.
மிடல் - வலிமை.
விரகு - திறமை.
`அவன் பொன்றியிடா வகை` என்க.
திடம் - உறுதி.
`திடமாக` என ஆக்கம் வருவிக்க.
அருள்காரணமாகத் தரப்பட்ட வரத்தினது திடம்.
அதற்குக் காரணமான அருள்மேல் ஏற்றப்பட்டது.
ஊறிய - உள்ளுள் சுரக்கின்ற, ``சுடர், சுவை`` என்பன பின் வந்த ``சிவன்`` என்னும் ஒரு பொருள்மேல் வந்த பெயர்கள்.
நீடிய- `நிலை பெற்ற, அம்பலம்` என்க.
சதுர் - திறமை.

பண் :

பாடல் எண் : 40

சதுர்முகன் தந்தைக்குக் கதிர்விடு கடவுள்
ஆழி கொடுத்த பேரருள் போற்றி
முயற்சியொடு பணிந்த இயக்கர்கோ னுக்கு
மாநிதி இரண்டும் ஆனாப் பெருவளத்
தளகை ஒன்றும் தளர்வின்றி நிறுவிய
செல்வங் கொடுத்த செல்வம் போற்றி
தாள்நிழல் அடைந்த மாணிக் காக
நாண்முறை பிறழாது கோண்முறை வலித்துட்
பதைத்துவருங் கூற்றைப் படிமிசைத் தெறிக்க
உதைத்துயிர் அளித்த உதவி போற்றி

குலைகுலை குலைந்த நிலையாத் தேவர்
படுபேர் அவலம் இடையின்று விலக்கிக்
கடல்விடம் அருந்தன கருணை போற்றி
தவிராச் சீற்றத் தவுணர் மூவெயில்
ஒல்லனல் கொளுவி ஒருநொடிப் பொடிபட

வில்லொன்று வளைத்த வீரம் போற்றி
பூமென் கரும்பொடு பொடிபட நிலத்துக்
காமனைப் பார்த்த கண்ணுதல் போற்றி
தெய்வ யாளி கைமுயன்று கிழித்தெனக்
கரியொன் றுரித்த பெருவிறல் போற்றி

பண்டு பெரும்போர்ப் பார்த்தனுக் காகக்
கொண்டு நடந்த கோலம் போற்றி
விரற்பதம் ஒன்றில் வெள்ளிமலை எடுத்த
அரக்கனை நெரித்த ஆண்மை போற்றி
விலங்கல் விண்டு விழுந்தென முன்னாள்

சலந்தரற் றடிந்த தண்டம் போற்றி
தாதையை எறிந்த வேதியச் சிறுவற்குப்
பரிகலங் கொடுத்த திருவுளம் போற்றி
நின்முதல் வழிபடத் தன்மகன் தடிந்த
தொண்டர் மனையில் உண்டல் போற்றி

வெண்ணெய் உண்ண எண்ணுபு வந்து
நந்தா விளக்கை நுந்துபு பெயர்த்த
தாவுபல் எலிக்கு மூவுல காள
நொய்தினில் அளித்த கைவளம் போற்றி
பொங்குளை அழல்வாய்ப் புகைவிழி ஒருதனிச்
சிங்கங் கொன்ற சேவகம் போற்றி
வரிமிடற் றெறுழ்வலி மணியுகு பகுவாய்
உரகம் பூண்ட ஒப்பனை போற்றி
கங்கையுங் கடுக்கையுங் கலந்துழி ஒரு பால்
திங்கள் சூடிய செஞ்சடை போற்றி

கடவுளர் இருவர் அடியும் முடியும்
காண்டல் வேண்டக் கனற்பிழம் பாகி
நீண்டு நின்ற நீளம் போற்றி
ஆலம் பில்குநின் சூலம் போற்றி
கூறுதற் கரியநின் ஏறு போற்றி

ஏகல் வெற்பன் மகிழும் மகட்கிடப்
பாகங் கொடுத்த பண்பு போற்றி
தில்லை மாநகர் போற்றி தில்லையுட்
செம்பொன் அம்பலம் போற்றி அம்பலத்
தாடும் நாடகம் என்றாங்

கென்றும் போற்றினும் என்தனக் கிறைவ
ஆற்றல் இல்லை ஆயினும்
போற்றி போற்றிநின் பொலம்பூ அடிக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கடவுள் ஆழி - தெய்வத் தன்மையுடைய சக்கரம்.
இயக்கர் கோன் - யட்சர் தலைவன் குபேரன்.
மாநிதி இரண்டு சங்கநிதி, பதுமநிதி ``செல்வம்`` இரண்டில் பின்னது திருவருள் மாணி - பிரமசாரி; மார்க்கண்டேயர், கோல் முறை - பற்றிக் கொண்டு செல்லும் முறை.
வலித்து - துணிந்து தெறிக்க - துள்ளி விழும்படி.
`மாணிக்கு உயிர் அளித்த` என்க.
அரவம் - ஓசை இடையின்றி - காலம் தாழ்த் தாமல் ஒல் அனல் - வல்லதாய தீ `கரும்பொடு பூப் பொழி பட` என்க.
கிழித்தென - கிழித்தாற்போல்.
விலங்கல் விண்டு விழுந்தென - மலை பிளந்து வீழ்ந்தாற்போல; `விழ` என ஒருசொல் வருவிக்க.
பரிகலம் - உண்டகலம்; என்றது `மிச்சில்` என்றபடி முதல் - தாள்; திருவடி ``உண்டல்`` என்றது உண்ண அமர்ந்ததைக் குறித்தது.
நொய்தில் - எளிதாக.
கை வளம் - வள்ளன்மை உளை - பிடரி மயிர், சிங்கம், நரசிங்கம் சேவகம் வீரம்.
வரி - புள்ளிகள்.
எறுழ் வலி - மிக்க வலிமை.
உரகம் - பாம்பு.
ஒப்பனை - அலங்காரம், கடுக்கை - கொன்றை.
வேண்டா - விரும்பும்படி ஆலம் - நஞ்சு.
பில்குதல் - சிந்துதல்.
ஏகல் வெற்பு - மிகப் பெரிதாகிய மலை.
`முற்றக் கூறிய போற்ற ஆற்றல் இல்லை` என்க.
பொலம் பூ அடி - பொற்பூப்போலும் திருவடிகள்.
``போற்றி போற்றி`` என்னும் சொற்கள் பொருள் உணர்த்தாது, தம்மையே தாம் உணர்த்தி நின்றன.
அவற்றைச் செயப்படுபொரு ளாக்கி, அவற்றின் பயன் `ஆக்குவன்` என ஒரு சொல் வருவித்து, ``ஆயினும்`` என்பதற்கும், ``பூவடிக்கு`` என்பதற்கும் முடிபாக்கி முடிக்க.
``பூவடிக்கு`` என்பதில் `பூ` என்பது இதன் முதற் செய்யுளின் முதலோடு சென்று மண்டலித்தல் காண்க.
கோயில் நான்மணிமாலை முற்றிற்று.

பண் :

பாடல் எண் : 1

திருவளர் பவளப் பெருவரை மணந்த
மரகத வல்லி போல ஒருகூ
றிமையச் செல்வி பிரியாது விளங்கப்
பாய்திரைப் பரவை மீமிசை முகிழ்த்த
அலைகதிர்ப் பரிதி ஆயிரந் தொகுத்த

வரன்முறை திரியாது மலர்மிசை இருந்தெனக்
கதிர்விடு நின்முகங் காண்தொறுங் காண்தொறும்
முதிரா இளமுறை முற்றாக் கொழுந்தின்
திருமுகத் தாமரை செவ்வியின் மலரநின்
தையல் வாணுதல் தெய்வச் சிறுபிறை

இளநிலாக் காண்தொறும் ஒளியொடும் புணர்ந்தநின்
செவ்வாய்க் குமுதஞ் செவ்வி செய்யநின்
செங்கைக் கமலம் மங்கை வனமுலை
அமிர்த கலசம் அமைவின் ஏந்த
மலைமகள் தனாது நயனக் குவளைநின்

பொலிவினொடு மலர மறையோர்
கழுமலம் நெறிநின்று பொலிய
நாகர் நாடு மீமிசை மிதந்து
மீமிசை உலகங் கீழ்முதல் தாழ்ந்திங்
கொன்றா வந்த குன்றா வெள்ளத்

துலகம்மூன் றுக்குங் களைகண் ஆகி
முதலில் காலம் இனிதுவீற் றிருந்துழித்
தாதையொடு வந்த வேதியச் சிறுவன்
தளர்நடைப் பருவத்து வளர்பசி வருத்த
அன்னா யோவென் றழைப்பமுன் நின்று

ஞான போனகம் அருளட்டிக் குழைத்த
ஆனாத் திரளை அவன்வயின் அருள
அந்தணன் முனிந்து தந்தார் யார் என
அவனைக் காட்டுவன் அப்ப வானார்
தோஒ டுயை செவியன் என்றும்

பீஇ டுடைய பெம்மான் என்றும்
கையில் சுட்டிக் காட்ட
ஐயநீ வெளிப்பட் டருளினை ஆங்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இம்முதற் பாட்டில் தோணியப்பர் ஆளுடைய பிள்ளையார்க்கு அருள்புரிந்த வரலாறு சுருக்கமாகச் சொல்லப் படுகின்றது.
பவளப் பெருவரையைப் பற்றிப் படர்ந்த ஒரு மரகதக் கொடி போல உமையம்மை தனது ஒரு கூற்றில் விளங்கச் சிவபெருமான் விளங்குகின்றான்.
திரு - அழகு.
முகிழ்த்த - முளைத்த.
அலை கதிர் - வீசுகின்ற ஒளிக்கதிர்களையுடைய, `பரிதி ஆயிரம் இருந்தென` என இயையும்.
தொகுத்த வரல் முறை - அக்கதிர்களை முழுமையாகப் பெற்று உதயமாகி வருகின்ற முறை.
மலர் மிசை - தாமரை மலரின் மேலிடத்தில்.
உனது முகமாகிய பகலவனைக் காணுந்தோறும் உமை யம்மைதன் திருமுகமாகிய தாமரை மலரும் காலத்தைப் பொருந்தி மலரவும், (கொழுந்து - உமை) அவளது நெற்றியாகிய பிறையைக் காணுந்தோறும் உனது வாயாகிய செவ்வாம்பல் மலரவும், உனது கைகளாகிய செந்தாமரை மலர்கள் அவளது தனங்களாகிய அமிர்த கலசத்தைத் தாங்கவும், அவளது கண்களாகிய குவளை மலர்கள் உனது திருமேனியின் ஒளியாகிய நிலவினால் மலரவும் `இங்ஙனமாக நீ வீற்றிருந்துழி` என்க.
`கழுமலம்` என்னும் தலம் அன்றோடு அழிந் தொழியாது நிலைத்து நின்று வழி வழி விளங்க வேண்டிச் சிவ பெருமான் மேற்கூறியவாறு வீற்றிருந்தருளினான்.
`எப்பொழுது` எனின், நாகர் நாடும் (தேவர் உலகமும்) முதலில் மேலே மிதந்து, பின் உள்ளே மூழ்கி அடிநிலையிற்போய்விடும் படி மண்ணும், விண்ணும் வேறுவேறாகாது ஒன்றாகும்படி ஊழி வெள்ளம் பெருகிவந்த காலத்தில் அவ்வெள்ளத்தின் மேல் வீற்றிருந்தருளினார்.
உலகம் மூன்றிற்கும் களைகணாகி (பற்றுக்கோடாகி) வீற்றிருந்தருளினான்.
உலகம் முழுதும் மறைந்து போயினமையால் அக்காலம் அநாதி காலத்தோடு ஒத்தது.
முதல் இல் காலம் - அநாதி காலம்.
உலகம் நிலை தடுமாறிற்றாயினும் அவன் இனிதே வீற்றிருந்தருளினான்.
அவ்வாறு அவன் அன்று வீற்றிருந்தவாறே இன்றும் அக்கழுமல நகரில் தோணியில் தோணியப்பனாய் வீற்றிருக்கின்றான்.
வீற்றிருந்துழி - அவ்வாறு அவன் வீற்றிருக்கும் இடத்தில்.
(திருக்கோயிலில்) ``தாதை யொடு வந்த வேதியச் சிறுவன்`` என்க.
``பசி வருத்த`` என்றதும், அது காரணமாகப் பால் வேண்டித் தாயாரை மட்டுமே ``அன்னாயோ`` என அழைத்தார் என்றதும்.
`குழந்தைமையை விளக்கிய உபசார மொழி` எனக் கொண்டு, நீருள் மூழ்கிய தந்தையாரைக் காணாமையால் சுற்றும், முற்றும் பார்த்து அழுத பிள்ளையார், திருத்தோணிச் சிகரத்தைப் பார்த்து, ``அம்மே! அப்பா!!`` என்று இருவரையுமே அழைத்தருளி அழுதருளினார், என அருளிச் செய்தார் சேக்கிழார்.
இங்கு ``ஞான போனகம்`` என்றதைச் சேக்கிழார் 1 ``எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம்`` எனவும், அடிசில் எனவும் கூறி விளக்குகின்றார்.
அதுவேறாயாம்.
இங்கு அருள் என்றது திருமுலைப் பாலை.
`ஞான போனகத்தை அருளோடு அட்டிக் குழைத்த திரள்` என்க.
அட்டுதல் - கலத்தல்.
திரள்- உருண்டை.
ஆனா - நீங்காத.
`போனகத்தில் அருளை அட்டி` எனினும் ஆம்.
காட்ட - காட்டும்படி.
`பிள்ளையார் கையிற் சுட்டிக் காட்டிய போதிலும் தந்தையார் கண்டிலர் என்றே சேக்கிழார் கூறினார்.
இடையே இரண்டடி முச்சீர் பெற்று வந்தமையால், இஃது இணைக் குறள் ஆசிரியப்பா.

பண் :

பாடல் எண் : 2

அருளின் கடலடியேன் அன்பென்னும் ஆறு
பொருளின் திரள்புகலி நாதன் இருள்புகுதுங்
கண்டத்தான் என்பாரைக் காதலித்துக் கைதொழுவார்க்
கண்டத்தார் தாமார் அதற்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அடியேனுடைய அன்பாகிய ஆறாயும், பொருளின் திரளாயும் உள்ள புகலி` நாதன், - இருள் புகுதும் கண்டத்தான் - என்பாரைக் காதலித்துக் கை தொழுவார்க்கு அருளின் கடல்.
(ஆகலான்) அதற்கு அண்டத்தார்தாம் ஆர்` என இயைத்துக் கொள்க.
புகலி நாதன், சீகாழியில் எழுந்தருளியுள்ள சிவபெருமான்.
`கடல், ஆறு, திரள்` என்பன உருவகங்கள்.
பொருளாவது ஞானம்.
``ஞானத் திரளாய் நின்ற பெருமான்`` என ஞானசம்பந்தரும் அருளிச் செய்தார்.
`இருள் புகுதும் கண்டத்தான்` என்பார், `நீலகண்டன்` முதலிய பல பெயர்களைச் சொல்லிச் சீகாழிப் பெருமானைத் துதிக்கும் அடியார்கள் `அவர்களைக் கைதொழுவார்க்கே சீகாழிப் பெருமான் அருட் கடலாய் இருந்து பேரருள் புரிகின்றான்` என்பதாம்.
அதற்கு - அந்தப் பேற்றை விரும்புதற்கு.
அண்டத் தார்தாம் - தேவராயினும்.
ஆர் - என்ன உரிமையுடையர்.
`அடியார்க்கு அடியராயினார்க்கு உரித்தாகிய சீகாழிப் பெருமானது திருவருள் தேவர்களாலும் பெறுதற்கரிது` என்பதாம்.
``அருளின்`` என்பதில் இன், வேண்டா வழிச் சாரியை.

பண் :

பாடல் எண் : 3

ஆரணம் நான்கிற்கும் அப்பா
லவனறி யத்துணிந்த
நாரணன் நான்முக னுக்கரி
யான்நடு வாய்நிறைந்த
பூரணன் எந்தை புகலிப்
பிரான்பொழில் அத்தனைக்கும்
காரணன் அந்தக் கரணங்
கடந்த கருப்பொருளே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``எந்தை புகலிப்பிரான்`` என்பதை முதலிற் கொள்க.
நடுவாய் - உள்ளீடாய்.
பொழில் - உலகம்.
அந்தக்கரணம் - உட்கருவி.
அவை மனம் முதலியன.
கருப்பொருள் - உயிர் நாடியான பொருள், இது புகலிப் பிரானது மாண்பினை வகுத்தருளிச் செய்தவாறு.

பண் :

பாடல் எண் : 4

கருமுதல் தொடங்கிப் பெருநாள் எல்லாம்
காமம் வெகுளி கழிபெரும் பொய்யெனுந்
தூய்மையில் குப்பை தொலைவின்றிக் கிடந்ததை
அரிதின் இகழ்ந்து போக்கிப் பொருதிறல்
மையிருள் நிறத்து மதனுடை அடுசினத்
தைவகைக் கடாவும் யாப்பவிழ்த் தகற்றி
அன்புகொடு மெழுகி அருள்விளக் கேற்றித்
துன்ப இருளைத் துரந்து முன்புறம்
மெய்யெனும் விதானம் விரித்து நொய்ய
கீழ்மையில் தொடர்ந்து கிடந்தஎன் சிந்தைப்

பாழறை உனக்குப் பள்ளியறை யாக்கிச்
சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவி
செந்தைநீ இருக்க இட்டனன் இந்த
நெடுநில வளாகமும் அடுகதிர் வானமும்
அடையப் பரந்த ஆதிவெள் ளத்து

நுரையெனச் சிதறி இருசுடர் மிதப்ப
வரைபறித் தியங்கும் மாருதம் கடுப்ப
மாலும் பிரமனும் முதலிய வானவர்
காலம் இதுவெனக் கலங்கா நின்றுழி
மற்றவர் உய்யப் பற்றிய புணையாய்

மிகநனி மிதந்த புகலி நாயக
அருள்நனி சுரக்கும் பிரளய விடங்கநின்
செல்வச் சிலம்பு மெல்லென மிழற்ற
அமையாக் காட்சி இமயக்
கொழுந்தையும் உடனே கொண்டிங்

கெழுந்தரு ளத்தகும் எம்பெரு மானே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-11 `பாழ் அறையாய்க் கிடந்த சிந்தையை உனக்குப் பள்ளியறையாக்கி` என்க.
அடி -1 கருமுதல் தொடங்கி (தாய் வயிற்றில் கருவாய் இருந்த காலம் முதல்) அது பாழ் அறையாய்க் கிடந்தது.
`பாழ் அறை` என்றது, உதவாக் குப்பைகள் நிரம்பிக் கிடந்த இடம்.
அப்பொருள்கள் காமம், வெகுளி முதலியன.
காமம் - ஆசை.
அக்குப்பைகளை அகற்றியவாறும், பின்பு தூய்மை செய்யப்பட்டவாறும் தொடர்ந்து கூறப்பட்டன.
மை இருள் நிறம் - மைபோலும் பேரிருளை ஒத்த நிறம்.
இதைக் கடாக்களுக்குக் கூறியது இன அடை.
கடா - எருமைக் கடா.
இஃது உருவகம்.
முருட்டுக் குணம் பற்றி ஐம்புல ஆசைகள் எருமைக் கடாக்களாக உருவகிக்கப்பட்டன.
மதன் - மதம்; செருக்கு.
யாப்பு - கட்டு அருள் - ஞானம்.
இருள் - அஞ்ஞானம் துன்ப இருள் - துன்பத்திற்கு ஏதுவான இருள்.
அஞ்ஞானம் துன்பத்திற்கு ஏதுவாதல் கூறினமையின் ஞானம் இன்பத்திற்கு ஏதுவாதல் சொல்லாமே பெறப்பட்டது.
மெய் - வாய்மை.
``சிந்தை`` இரண்டில் முன்னது `சித்தம்` என்னும் அந்தக் கரணம்.
பின்னது இருதயம்.
தவிசு- ஆசனம்.
அடு கதிர் - வெங்கதிர்; ஞாயிறு.
அடைய - இடைவெளியின்றி ஒன்றாகும்படி.
ஆதி வெள்ளம் - முன்பு ஒரு பிரளயத்தில் தோன்றிய வெள்ளம்.
`இரு சுடர்களும் அந்த வெள்ளத்தில் நுரை போல மிதக்க` என்க.
வரை பறித்து இயங்கும் மாருதம் கடுப்ப - மலைகளையெல்லாம் புரட்டி வீசும் காற்று கடுவேகமாய் அடிக்க.
காலம் - முடிவு காலம்.
மற்று, அசை.
புணையாய் - புணைபோல `வானவர் பலரும் திருக்கழுமலப் பெருமானைச் சார்ந்து பிழைத் திருந்தனர்` என்பதாம்.
விடங்கன் - அழகன்.
பிரளய அழகன், தோணியப்பன்.
``உடனே கொண்டு`` என்பதில் ஏகாரத்தை மாற்றி, `உடன் கொண்டே` என உரைக்க.
`என் சித்தம் முன்பு பாழ் அறை யாய்க் கிடந்தது போல இல்லாமல் பள்ளியறையாகும்படி செய்துள்ளேன் ஆதலின் அதில் நீ உன் துணைவியுடன் வந்து இருக்கத்தகும்` என்பதாம்.
பாழ் அறையாய்க் கிடந்தது அஞ்ஞான நிலையில், பள்ளியறையானது மெய்ஞ்ஞான நிலையில்.
எனவே, இறைவன் அஞ்ஞானிகளது உள்ளத்தில் புகாது, மெய்ஞ்ஞானிகளது உள்ளத்தில் புகுதல் கூறப்பட்டதாம்.
ஈற்றயலின் அயலடியும் முச்சீராய் வந்தமையின் இதுவும் இணைக் குறளாசிரியப்பா.

பண் :

பாடல் எண் : 5

மானும் மழுவுந் திருமிடற்றில் வாழுமிருள்
தானும் பிறையுந் தரித்திருக்கும் வானவர்க்கு
வெள்ளத்தே தோன்றிக் கழுமலத்தே வீற்றிருந்தென்
உள்ளத்தே நின்ற ஒளி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``வாழும்`` என்பது `செய்யும்` என் எச்சம்.
``இருக் கும்`` என்பது `செய்யும்` என் முற்று.
தான், அசை.
ஏனைய வெளி.

பண் :

பாடல் எண் : 6

ஒளிவந்த வாபொய் மனத்திருள்
நீங்கவென் உள்ளம்வெள்ளம்
தெளிவந்த வாவந்து தித்தித்த
வாசிந்தி யாததொரு
களிவந்த வாஅன்பு கைவந்த
வாகடை சாரமையத்
தெளிவந்த வாநங் கழுமல
வாணர்தம் இன்னருளே
.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மனத்து`` என்பதனோடு பின் வரும்``என்`` என்பதைக் கூட்டி முதலிற் கொள்க.
ஒளி ஞானம்.
``ஆறு`` என்பன பலவும் செய்யுள் முடிபாய்க் கடைக் குறைந்து `ஆ` என நின்றன.
அவை அனைத்திலும் எண்ணும்மை விரித்து அவற்றை `வியப்பு` என ஒரு சொல் வருவித்து முடிக்க.
கழுமல வாணர்தம் இன்னருள் எளிவந்த வாறு`` என மாற்றிக் கொள்க.
பொய் - திரிபுணர்ச்சி.
வெள்ளத் தெளி- மிகுதியான தெளிவு.
சிந்தியாது ஒரு களி - எதிர்பாராத ஒரு பெரு மகிழ்ச்சி.
கைவருதல் - இடர்ப்பாடின்றி இனிது நிகழ்த்துதல்.
கடை சார் அமையம் - முடிவு கிட்டும் காலம்; இறுதிக் காலம்.

பண் :

பாடல் எண் : 7

அருள்பழுத் தளிந்த கருணை வான்கனி
ஆரா இன்பத் தீராக் காதல்
அடியவர்க் கமிர்த வாரி நெடுநிலை
மாடக் கோபுரத் தாடகக் குடுமி
மழைவயிறு கிழிக்கும் கழுமல வாணநின்

வழுவாக் காட்சி முதிரா இளமுலைப்
பாவையுடன் இருந்த பரம யோகி
யானொன் றுணர்த்துவான் எந்தை மேனாள்
அகில லோகமும் அனந்த யோனியும்
நிகிலமுந் தோன்றநீ நினைந்தநாள் தொடங்கி

எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்து
யாரும் யாவையும் எனக்குத் தனித்தனித்
தாய ராகியுந் தந்தைய ராகியும்
வந்தி லாதவர் இல்லை யான் அவர்
தந்தைய ராகியுந் தாய ராகியும்
வந்தி ராததும் இல்லை முந்து
பிறவா நிலனும் இல்லை அவ்வயின்
இறவா நிலனும் இல்லை பிறிதில்
என்னைத் தின்னா உயிர்களும் இல்லை
யான் அவை

தம்மைத் தின்னா தொழிந்ததும் இல்லை
அனைத்தே காலமும் சென்றது யான்இதன்
மேல்இனி
இளைக்குமா றிலனே நாயேன்
நந்தாச் சோதிநின் அஞ்செழுத்து நவிலுந்

தந்திரம் பயின்றதும் இலனே தந்திரம்
பயின்றவர்ப் பயின்றதும் இலனே ஆயினும்
இயன்றஓர் பொழுதின் இட்டது மலராச்
சொன்னது மந்திர மாக என்னையும்
இடர்ப்பிறப் பிறப்பெனும் இரண்டின்

கடற்ப டாவகை காத்தல்நின் கடனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மிகக் கனிந்த` என்றற்கு ``அருள் பழுத்து அளிந்த`` என்றும், பிறிதொருவகைக் கனியன்று`, ``கருணை வான்கனி`` என்றும் ஈரிடத்து எடுத்துக் கூறினார்.
``கனி, காதல், வாரி`` என்பனவும் ``வாண, யோகி, எந்தை`` என்பனபோல விளிகளே.
காதல் - பேரன்பு.
மாணிக்கவாசகர், ``என்னுடை அன்பே`` என்றதுபோல இவரும் இறைவனை, `தீராக் காதலே`` என விளித்தார்.
வாரி - கடல்.
குடுமி - சிகரம்.
மழை - மேகம்.
காட்சி - தோற்றம்.
``இருந்த`` என்னும் சினைவினை முதல் மேலதாய்.
``யோகி`` என்பதனோடு முடிந்தது.
பரமயோகி - மேலான யோகி.
``பாவையுடன் இருந்த யோகி`` என்றது சிவபெருமானது அதிசய நிலையை வியந்ததாம்.
``அகலம், நிகிலம்`` என்பன எஞ்சாமைப் பொருளை உணர்த்தும் வடசொற்கள்.
யோனி - பிறப்பு வகையின் உட்பிரிவுகள்.
நிகலமும் - அனைத்துப் பொருள்களும்.
இறைவன் செய்வன எல்லாம் சங்கற்ப மாத்திரையான் ஆதல் பற்றி, ``நினைந்த நாள்`` என்றார்.
``யாரும், யாவையும்`` எனத் திணை விராய் எண்ணப்பட்டன சிறப்புப்பற்றிப் பின் பல இடத்திலும் உயர் திணை முடிபு கொண்டன.
``அவர்`` என்பதிலும், ``எனக்கு`` என்பதிற் போல, `அவர்க்கு` என நான்காவது விரிக்க.
பின் வந்த ``தந்தையர், தாயர்`` என்பன பொருட்பன்மை பற்றாது இடப்பன்மை பற்றியும், காலப்பன்மையும் பற்றி வந்த பன்மை யாகலின் அவை ``யான்`` என்னும் ஒருமையோடு மயங்கின.
``நிலன்`` என்பன உலகங்கள்.
``பிறிதல்`` என்றது.
`இன்னும் கூறில்` என்றபடி.
அனைத்து - அத் தன்மைத்து.
`அனைத்தேயாம்` என ஆக்கம் விரிக்க.
``இலனே`` என்னும் ஏகார வினா எதிர்மறுத்து நின்றது.
எனவே, `திண்ணமாக இைளத்து நிற்கின்றேன்` என்றதாம்.
இதன்பின் `ஆயினும்` என்பது வருவிக்க.
நந்தா - கெடாத.
சோதி - ஒளி, ஞானம் `சோதியாகிய அஞ் செழுத்து` என்க.
சோதியின் காரணம் சோதியாக உபசரிக்கப்பட்டது.
`அஞ்செழுத்தை நவிலும் தந்திரம்` என்க.
தந்திரம் - நூல்; என்றது அதன்கண் கூறப்பட்ட நெறிமுறைகளை, `பயின்றவரொடு` என ஒடு உருபு தொகுக்கப்பட்டு.
அதனானே ``பயின்றவர்`` என்பதன்பின், பகர ஒற்று மிக்கது.
``இயன்றதோர் பொழுது`` என்றது, ``சொன்னது`` என்பதனோடும் இயையும்.
அதனால் `கட்டளையின்றி, நேர்ந்த பொழுது செய்யும் இயல்பினேன்` என்றவாறாம்.
``இட்டது மலரா`` என்றதனால், `இடப்பட்டன மலரல்லாத பிறவாம்` என்பதும், ``சொன் னது மந்திரமாக`` என்றதனால், `சொல்லப்பட்டன மந்திரம் அல்லாத பிறவாம்` என்பதும் பெறப்பட்டன.
`இரண்டாகிய கடல்` என்க.
இன், வேண்டாவழிச் சாரியை.
`நீ அருள் பழுத்து அளிந்த கனியாதல் பற்றி இதனை உனக்கு உணர்த்துவேனாயினேன் என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 8

கடலான காமத்தே கால்தாழ்வார் துன்பம்
அடலாம் உபாயம் அறியார் உடலாம்
முழுமலத்தை ஒர்கிலார் முக்கட் பெருமான்
கழுமலத்தைக் கைதொழா தார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``முக்கட் பெருமான்`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
``கடலான`` என்பதில் ஆக்கம் உவமை குறித்து நின்றது.
`துன்பத்தை அடல் ஆம் உபாயம்` என்க.
அடல் - அழித்தல், முழு மலம் - பெரிய அசுத்தம் ஓர்கிலார் - எண்ண மாட்டார்.
எனவே, `அதில் பற்றுச் செய்து துன்புறுவர்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 9

தொழுவாள் இவள்வளை தோற்பாள்
இவளிடர்க் கேஅலர்கொண்
டெழுவாள் எழுகின்ற தென்செய
வோஎன் மனத்திருந்தும்
கழுமா மணியைக் கழுமல
வாணனைக் கையிற்கொண்ட
மழுவா ளனைக் கண்டு வந்ததென்
றாலொர் வசையில்லையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கழுமல வாணன்`` எனப் பின்னர் வருதலால் முதற் கண் வாளா ``தொழுவாள்`` என்றாள்.
``இவள்`` எனப் பின்னும் கூறியது, அவளது அவல மிகுதியை உணர்த்தற்கு.
``இடர்க்கு`` என்பது போலும் நான்கன் உருபேற்ற பெயராகலின், அதற்கு, `இடர் தீர்தற் பொருட்டு` என உரைக்க.
அலர் - ஊரார் தூற்றும் பழிச்சொல், ``கொண்டு`` என்றது `தனைப் பொருட்படுத்தாது` என்றபடி.
`எழு கின்றது என் செயவோ` - என்றது, `இவள் இவ்வாறு எழுந்து செல் வதால் பயன் அடையப்போகின்றாளா` என்றபடி.
இவளது எழுச்சி கழுமல வாணனைக் கண்டு வந்ததாய் முடியுமாயின் ஓர் வசையில்லை என்க.
அஃது இயலாது ஆதலின் மேலும் வசைதான்` என்பது குறிப் பெச்சம்.
`மனந் திருந்தும்` என்பது பாடம் அன்று.
இது கைக்கிளைத் தலைவி தலைவன் உள்வழிச் சேறல்.
செவிலி இரங்கிக் கூறியது.

பண் :

பாடல் எண் : 10

வசையில் காட்சி இசைநனி விளங்க
முன்னாள் நிகழ்ந்த பன்னீ ருகத்து
வேறுவேறு பெயரின் ஊறின் றியன்ற
மையறு சிறப்பின் தெய்வத் தன்மைப்
புகலி நாயக இகல்விடைப் பாக

அமைநாண் மென்தோள் உமையாள் கொழுந
குன்று குனிவித்து வன்தோள் அவுணர்
மூவெயில் எரித்த சேவகத் தேவ
இளநிலா முகிழ்க்கும் வளர்சடைக் கடவுள்நின்
நெற்றியில் சிறந்த ஒற்றை நாட்டத்துக்
காமனை விழித்த மாமுது தலைவ
வானவர் அறியா ஆதி யானே
கல்லா மனத்துப் புல்லறிவு தொடர
மறந்து நோக்கும் வெறுங்கண்நாட் டத்துக்
காண்தொறும் காண்தொறும் எல்லாம் யாண்டை

யாயினும் பிறவும் என்னதும் பிறரதும்
ஆவன பலவும் அழிவன பலவும்
போவதும் வருவதும் நிகழ்வதும் ஆகித்
தெண்ணீர் ஞாலத்துத் திரண்ட மணலினும்
எண்ணில் கோடி எனைப்பல வாகி

இல்லன உளவாய் உள்ளன காணாப்
பன்னாள் இருள்வயிற் பட்டேன் அன்னதும்
அன்ன தாதலின் அடுக்கும் அதென்னெனின்
கட்புலன் தெரியாது கொட்புறும் ஒருவற்குக்
குழிவழி யாகி வழிகுழி யாகி

ஒழிவின் றொன்றின் ஒன்றுதடு மாற
வந்தாற் போல வந்த தெந்தைநின்
திருவருள் நாட்டம் கருணையின் பெறலும்
யாவையும் எனக்குப் பொய்யெனத் தோன்றி
மேவரும் நீயே மெய்யெனத் தோன்றினை

ஒவியப் புலவன் சாயல்பெற எழுதிய
சிற்ப விகற்பம் எல்லாம் ஒன்றித்
தவிராது தடவினர் தமக்குச்
சுவராய்த் தோன்றுங் துணிவுபோன் றனவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வசை இல் காட்சி- குற்றம் இல்லாத தோற்றம்.
அஃது என்றும் ஒடிபடித்தாய் இருத்தல்.
`காட்சியால்` என உருபு விரிக்க.
இசை - புகழ்.
சீகாழித் தலம் பன்னிரு யுகங்களில் யுகத்திற்கு ஒன்றாக பன்னிரு பெயரைப் பெற்றது.
அப்பெயர்களாவன பிரமபுரம், வேணு புரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சைவயம், கழுமலம்` என்பன.
இவை ஞான சம்பந்தர் பாடல்கள் பலவற்றில் எடுத்தோதி அருளப்பட்டிருத்தல் காண்க.
மை - குற்றம்.
அமை நாண் தோள் - மூங்கில் நாணத் தக்க தோள்.
சேவகம் - வீரம்.
மாமுது தலைவன் - பெரிய, பழைய தலைவன்.
ஆதியான் - முதற் கடவுள்.
கல்லா உளம் - கல்வியைக் கல்லாத மனம்.
`அதன்கண் தோன்றும் புல்லறிவு` என்க.
தொடர - தொடர்ந்து நிகழ்தலால்.
மறந்து - ஆன்றோர் உரைகளை மறந்து.
வெறுங் கண் - கல்வியறிவொடு கூடாத கண்.
இதனை, ``புண்`` 1 என்றார் திருவள்ளுவர்.
`தண்` என்பது பாடம் அன்று.
நாட்டம் - பார்வை.
`நாட்டத்தினால்` என மூன்றாவது விரிக்க.
`யாண்டை எல்லாமாயினும்` என மாற்றிக் கொள்க.
``பிற`` என்பதின்பின்னும் `ஆயின்` என்பது வருவித்து `பிறவாயினும்` என்க.
எனவே, `அஃது உண்மையன்று` என்றதாயிற்று.
`ஆவன ஆகிய பலவும் அழிவனவேயன்றி, ஒன்றேனும் நிலைத்திருப்பதன்று` என்பதாம்.
பின் வந்த ``பலவும்`` என்பதற்குமுன் `அவை` என்பது வருவிக்க.
``போவது`` முதலிய மூன்றும் இறப்பு, எதிர்வு, நிகழ்வு ஆகிய கால நிகழ்ச்சிகளைக் குறித்தன.
தெள் நீர், கடல் நீர்.
`நீரால்` என உருபு விரிக்க.
``ஞாலம்`` என்றது கரையை, என - என்று சொல்லும்படி இதன்பின் ``பல`` என்றது எண்ணிலியை.
உளவாதல் - தோன்றுதல்.
காணா - காணப்படாது.
துவ்விகுதி தொகுத்தலாயிற்று.
`இல்லன உள்ளன போலவும், உள்ளன இல்லனபோலவும் தோன்ற` என்க.
இருள் - அறியாமை என்றது திரிபுணர்ச்சியை அன்னதும் அன்னது - அந்தத் திரிபுணர்ச்சியும் நிலையாததே.
அடுக்கும் - பொருந்தும்.
`அஃது` என்னும் ஆய்தம் தொகுக்கப்பட்டு `அது` என நின்றது.
என் எனின் - எவ்வாறு எனின்.
கொட்புறுதல் - சுழலுதல்.
ஒன்றின் - ஒரு பொருளில்.
ஒன்று - அதனின் வேராய ஒன்றின் உணர்வு.
தடுமாற - திரிவுபட.
`ஒழிவின்று தடுமாற` என்க.
`இன்றி` என்னும் வினை யெச்சத்து ஈற்று இகரம் செய்யுளுள் உகரமாய்த் திரிந்தது.
`கட்புலன் இல்லா ஒருவனது தடுமாற்றம் அவன் கண்பெற்றுழி நீங்குதல்போல, வெறுங் கண் நாட்டத்தால் எனக் உண்டாய தடுமாற்ற.
நினது அருள் நாட்டம் பெற்றவழி நீங்குவதே` என்பார்.
``அன்னதும் அன்னதே அடுக்கும்`` என்றார்.
கருணையின் - நீ அருளுதலின்.
(வழங்கினமை யால்) மேவரும் - விரும்பத் தகும்.
விகற்பம் வேறுபாடு.
துணிவு - உண்மையுணர்வு `போன்றது என` என்பது `போன்றென` எனக் குறைந்து நின்றது.
ஓவிய வகைகள் கட்புலனுக்கு வேறு வேறு பரிமாணம் உடைய வேறு வேறு பொருள்களாய்த் தோன்றுமாயினும் மெய்ப் புலனுக்கு ஓவியந் தோன்றாது அவற்றிற்கு நிலைக்களமாகிய சுவர் ஒன்றே தோன்றுதல் போல, மருள் நாட்டத்திற்கு அவ்வப் பொருளும் தனித் தனியே நிலை பெறும் பொருள்கள் தோன்று மாயினும் திருவருள் நாட்டத்தில் திருவருளாகிய ஒன்றினையே பற்றுக் கோடாகப் பற்றி நிலைபெறுதல் தோன்றும்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 11

எனவே எழுந்திருந்தாள் என்செய்வாள் இன்னம்
சினவேறு காட்டுதிரேல் தீரும் இனவேகப்
பாம்புகலி யால்நிமிரும் பன்னாச் சடைமுடிநம்
பூம்புகலி யான்இதழிப் போது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``இன வேகம்`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.
இனம் - கூட்டம்.
வேகம் - விரைந்த செலவு.
கலியான் இமிரும் பல் நா - ஆரவாரத்தோடு ஒலிக்கின்ற பல நாக்குகள்.
`இமிரும்` என்னாது, `நிமிரும்` எனினும் ஆம் `பாம்புகளின் பல நாக்குக்களை யுடைய சடை` என்க.
பூம் புகலி - அழகிய சீகாழி, இதழிப் போது எனவே எழுந்திருந்தாள் - `கொன்றைப் பூ மாலை` என்று சொல்லிக் கொண்டே புறப்பட்ட இவள்.
என் செய்வாள் - என்ன செய்து அதனை மாட்டு அன்புடையவர்களே!) இன்னம் சின ஏறு காட்டுதிரேல் தீரும் - இனியொரு முறையும் முன்பு அப்புகலிப் பெருமானை இங்குச் சுமந்து வந்த சினவிடையைக் காட்டுவீர்களாயின் இவள் நோய் தீரும் (அஃதறியாது வேறு பரிகாரங்களை நீவிர் செய்து பயன் என!) இது கைக்கிளைத் தலைவியது வேறுபாடு கண்டு வெறியாட்டெடுத்த நற்றாய் செவிலித் தாயரை நோக்கித் தோழி அறத்தொடு நின்றது.
``எழுந்திருந்தாள்`` என்பது ஒருசொல்.

பண் :

பாடல் எண் : 12

போதும் பெறாவிடில் பச்சிலை
உண்டு புனலுண்டெங்கும்
ஏதும் பெறாவிடில் நெஞ்சுண்டன்
றேஇணை யாகச் செப்பும்
சூதும் பெறாமுலை பங்கர்தென்
தோணி புரேசர்வண்டின்
தாதும் பெறாத அடித்தா
மரைசென்று சார்வதற்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

காய் கனிகளை நோக்கப் போது (பூ) எளிதாகலின், ``போதும்`` என்னும் உம்மை இழிவு சிறப்பு.
``ஏதும்`` என்னும் உம்மையும் அப்பொருட்டு.
`எங்கும் பச்சிலை உண்டு; புனல் உண்டு` என்க.
``அன்றே`` என்பது தேற்றம்.
செப்பு - கிண்ணம்.
சூது - சூதாடு கருவி `இவை இணையாகப் பெறா முலை` என்க.
முலை.
சினையாகு பெயர்.
இணை - ஒப்பு.
`வண்டு பெறாத` என இயையும்.
இன் தாது - இனிய மகரந்தம்.
`தேனே யன்றித் தாதும் பெறாத தாமரை` என்க.
எனவே, `தாமரை போல்வது அல்லது தாமரை அன்றென்ற வாறாம்.
ஆகவே, `வண்டு தாதும் பெறாத தாமரை` என்றது விபாவனையாம் `அடித் தாமரை சென்று சார்வதற்குப் போதும் பெறாவிடில் பிற உண்டு? என்க.
(இப்பிரபந்தத்தில் இன்னும் 18 பாடல்கள் இருக்க வேண்டும்.
ஆயினும் நல்ல பதிப்புக்களில் இந்த 12 பாடல்களே உள்ளன.
ஆனூர் சிங்காரவேல் முதலியார் பதிப்பகத்தில் எஞ்சிய பாடல்கள் காணப்படுவதாகவும், அவைகளை அறிஞர்கள் `ஆசிரியர் வாக்கல்ல` என்று கருதுவதாகவும் சென்னைச் சைவ சித்தாந்த சமாஜத்து 1940 ஆம் ஆண்டுப் பதிப்பில் குறிப்புத் தரப்பட்டுள்ளது.
ஆனூர் சிங்காரவேல் முதலியார் பதிப்புக் கிடைக்கவில்லை.
) திருக்கழுமல மும்மணிக்கோவை முற்றிற்று.

பண் :

பாடல் எண் : 1

தெய்வத் தாமரைச் செவ்வியின் மலர்ந்து
வாடாப் புதுமலர்த் தோடெனச் சிவந்து
சிலம்புங் கழலும் அலம்பப் புனைந்து
கூற்றின் ஆற்றல் மாற்றிப் போற் றாது
வலம்புரி நெடுமால் ஏன மாகி

நிலம்புக்
காற்றலின் அகழத் தோற்றாது நிமிர்ந்து
பத்தி அடியவர் பச்சிலை இடினும்
முத்தி கொடுத்து முன்னின் றருளித்
திகழ்ந்துள தொருபால் திருவடி அகஞ்சேந்து

மறுவில் கற்பகத் துறுதளிர் வாங்கி
நெய்யில் தோய்த்த செவ்வித் தாகி
நூபுரங் கிடப்பினும் நொந்து தேவர்
மடவரல் மகளிர் வணங்குபு வீழ்த்த
சின்னப் பன்மலர் தீண்டிடச் சிவந்து

பஞ்சியும் அனிச்சமும் எஞ்ச எஞ்சாத்
திருவொடும் பொலியும் ஒருபால் திருவடி
நீலப் புள்ளி வாளுகிர் வேங்கைத்
தோலின் கலிங்கம் மேல்விரித் தசைத்து
நச்செயிற் றரவக் கச்சையாப் புறத்துப்
பொலிந்துள தொருபால் திருவிடை இலங்கொளி
அரத்த ஆடை விரித்துமீ துறீஇ
இரங்குமணி மேகலை ஒருங்குடன் சாத்திய
மருங்கிற் றாகும் ஒருபால் திருவிடை
செங்கண் அரவும் பைங்கண் ஆமையுங்

கேழற் கோடும் வீழ்திரன் அக்கும்
நுடங்கு நூலும் இடங்கொண்டு புனைந்து
தவளநீ றணிந்ததோர் பவளவெற் பென்ன
ஒளியுடன் திகழும் ஒருபால் ஆகம்
வாரும் வடமும் ஏர்பெறப் புனைந்து

செஞ்சாந் தணிந்து குங்குமம் எழுதிப்
பொற்றா மரையின் முற்றா முகிழென
உலகேழ் ஈன்றும் நிலையில் தளரா
முலையுடன் பொலியும் ஒருபால் ஆகம்
அயில்வாய் அரவம் வயின்வயின் அணிந்து

மூவிலை வேலும் பூவாய் மழுவுந்
தமருகப் பறையும் அமர்தரத் தாங்கிச்
சிறந்துள தொருபால் திருக்கரஞ் செறிந்த
சூடகம் விளங்கிய ஆடகக் கழங்குடன்
நொம்மென் பந்தும் அம்மென் கிள்ளையும்

தரித்தே திகழும் ஒருபால் திருக்கரம்
இரவியும் எரியும் விரவிய வெம்மையின்
ஒருபால் விளங்குந் திருநெடு நாட்டம்
நவ்வி மானின் செவ்வித் தாகிப்
பாலிற் கிடந்த நீலம் போன்று

குண்டுநீர்க் குவளையின் குளிர்ந்து நிறம்பயின்று
எம்மனோர்க் கடுத்த வெம்மைநோய்க் கிரங்கி
உலகேழ் புரக்கும் ஒருபால் நாட்டம்
நொச்சிப் பூவும் பச்சை மத்தமும்
கொன்றைப் போதும் மென்துணர்த் தும்பையும்
கங்கை யாறும் பைங்கண் தலையும்
அரவும் மதியமும் விரவத் தொடுத்த
சூடா மாலை சூடிப் பீடுகெழு
நெருப்பில் திரித்தனைய உருக்கிளர் சடிலமொடு
நான்முகம் கரந்த பால்நிற அன்னம்

காணா வண்ணங் கருத்தையுங் கடந்து
சேணிகந் துளதே ஒருபால் திருமுடி பேணிய
கடவுட் கற்பின் மடவரல் மகளிர்
கற்பக வனத்துப் பொற்பூ வாங்கிக்
கைவைத்துப் புனைந்த தெய்வமாலை

நீலக் குழல்மிசை வளைஇமேல் நிவந்து
வண்டும் தேனும் கிண்டுபு திளைப்பத்
திருவொடு பொலியும் ஒருபால் திருமுடி
இனைய வண்ணத்து நினைவருங் காட்சி
இருவயின் உருவும் ஒருவயிற்றாகி

வலப்பால் நாட்டம் இடப்பால் நோக்க
வாணுதல் பாகம் நாணுதல் செய்ய
வலப்பால் திருக்கரம் இடப்பால் வனமுலை
தைவந்து வருட மெய்ம்மயிர் பொடித்தாங்
குலகம் ஏழும் பன்முறை ஈன்று

மருதிடங் கொண்ட ஒருதனிக் கடவுள் நின்
திருவடி பரவுதும் யாமே நெடுநாள்
இறந்தும் பிறந்தும் இளைத்தனம் மறந்தும்
சிறைக்கருப் பாசயம் சேரா
மறித்தும் புகாஅ வாழ்வுபெறற் பொருட்டே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இத்திருப்பாட்டு திருவிடைமருதூர்ப் பெருமானை மாதொரு பாதி (அர்த்த நாரி) வடிவினனாக வருணித்து விளித்துக் கருத்தை விண்ணப்பிக்கின்றது.
அடி-17 ``ஒரு பால் திருவடி`` என்பதை முதலில் வைத்து, `மலர்ந்து, சிவந்து, புனைந்து, நிமிர்ந்து, அருளித் திகழ்ந்துளது` என்க.
தெய்வத் தாமரை - தேவலோகத் தாமரை.
`அதனது செவ்விபோல` என்க.
செவ்வி - மலரும் நேரம்.
அஃது ஆகுபெயராய், அப்பொழுது மலரும் மலர்ச்சியைக் குறித்தது.
`இன்` உவம உருபு.
வாடாமலர் - கற்பக மலர்.
தோடு - இதழ்.
இது பண்பு பற்றிய உவமையாய் வந்தது.
அலம்ப - ஒலிக்க; இவ் எச்சம் இதன் காலத்தை உணர்த்தி நின்றது.
எனவே `ஒலிக்கும் இடத்துத் தான் கழலைப் புனைந்து` என ஆற்றல் பற்றிக் கொள்ளப்படும்.
இரண்டும் மாறி மாறி ஒலியாது, ஒருங் கொலித்தல் பற்றி இவ்வாறு கூறினார்.
இது மற்றொருபால் திருவடிக் கும் ஒக்கும்.
கூற்று - கூற்றுவன்.
யமன்.
`நெடுமால் போற்றாது ஏனமாகி அகழ` என்க.
`திருவடி, போற்றிக் காணத் தக்கதல்லது, முயன்று காணத் தக்கதன்று` என்றற்கு, ``போற்றாது`` என்றார்.
``தொழுவார்க்கே யருளுவது சிவபெருமான் எனத் தொழார்`` 1 எனச் சேக்கிழாரும் அருளிச் செய்தார்.
நிமிர்ந்து - அப்பாற்பட்டு.
அடி- 17 ``ஒருபால் திருவடி`` என்பதை, ``மறுவில் கற்பகத்து உறு தளிர்`` என்பதற்கு முன்னே வைத்து, `சேந்து, செவ்வித்தாகி, நொந்து, சிவந்து திருவொடும் பொலியும்` என்க.
அகம் - உள்ளிடம்.
சேந்து - சிவந்து.
கற்பகத்தின்கண்` என உருபு விரிக்க.
வழுவழுப்புத் தோன்றுதற் பொருட்டு.
நெய்யில் தோய்த்தல் கூறப்பட்டது.
செவ்வி - பக்குவம்.
நூபுரம் - சிலம்பு.
``கிடப்பினும்`` என்னும் அனுவாதத்தால் கிடத்தல் பெறப்பட்டது.
மட வரல் மகளிர் - மடப்பம் (இளமை) வருதலை உடைய மகளிர்.
வீழ்த்த - தூவிய.
சின்னம் - சிறுமை.
எஞ்ச- தோற்க.
இது மென்மை மிகுதியைக் கூறியது.
எஞ்சாத் திரு - குறையாத அழகு.
பொலியும் - விளங்கும்.
அடி - 21 ``ஒருபால் திருஇடை`` என்பதை, ``நீலப் புள்ளி`` என்பதற்கு முன்னே கூட்டி, `விரித்து அசைத்து, யாப்புறுத்துப் பொலிந் துளது` என்க.
வாள் கூர்மை.
உகிர் - நகம்.
`புள்ளியையும், உகிரையும் உடைய வேங்கை` என்க.
கலிங்கம் - உடை.
அசைத்து - உடுத்தி.
யாப்பு உறுத்து - இறுகக் கட்டி.
அடி-24 ``ஒருபால் திரு இடை`` என்பதை ``இலங்கொளி`` என்பதற்கு முன்னே கூட்டி, `விரித்து, உறிஇ சாத்திய மருங்கிற்று ஆகும் என்க.
அரத்தம் - செம்மை.
ஆடை - பட்டாடை.
உறீஇ - உறுவித்து; பொருந்தப் பண்ணி.
இரங்கு - ஒலிக்கின்ற.
மணி மேகலை - இரத்தினங்களால் ஆகிய வடங்களின் தொகுதி.
மருங்கிற்று - பக்கங்களையுடையது.
அடி- 29 ``ஒருபால் ஆகம்`` என்பதை செங்கண் அரவும்`` என்பதற்கு முன்னே கூட்டி, ``இடம் கொண்டு`` என்பதை `இடம் கொள` எனத் திரித்து, `அருவம், ஆமையும், கோடும், அக்கும், நூலும் இடம் கொளப் புனைந்து வெற்பென்னத் திகழும் என்க.
ஆகம் - மார்பு.
ஆமை - ஆமை ஓடு; ஆகுபெயர் கேழல் - பன்றி, அக்கு - எலும்பு.
நுடங்குதல் - துவளுதல்.
நூல், முந்நூல்.
தவளம் - வெண்மை.
நீறணிந்தது ஓர் பவள வெற்பு, இல்பொருள் உவமை.
அடி 34 ``ஒருபால் ஆகம்`` என்பதை, ``வாரும் வடமும்`` என்பதற்கு முன்னே கூட்டி, `புனைந்து, அணிந்து, எழுதித் தளரா முலையுடன் பொலியும்` என்க.
வார் - கச்சு.
வடம் - மணி வடங்கள்.
ஏர் - அழகு ``புனைந்து`` முதலிய மூன்றும், `புனையப்பட்டு, அணியப்பட்டு, எழுதப்பட்டு` எனச் செயப்பாட்டு வினைப்பொருளவாய் நின்றன.
`குங்குமத்தால்` என மூன்றாவது விரித்து, `கோலம் எழுதி` என்க.
``பொற்றாமரை`` என்பதும் இல்பொருள் உவமை.
முகிழ் - அரும்பு.
அடி 38 ``ஒரு பால் திருக்கரம்`` என்பதை, ``அயில் வாய் அரவம்`` என்பதற்கு முன்னே கூட்டி, `அணிந்து தாங்கிச் சிறந்துளது` என்க.
அயில் - கூர்மை.
வாய் - பல்; ஆகுபெயர்.
வயின் வயின் - முன் கை.
முழங்கை, தோள் ஆகிய இடங்கள்.
அணிந்து - பூண்டு.
பூ வாய்- மெல்லிய வாய்.
கூர்மை மிகுதியால் மெல்லிதாயிற்று.
தமருகம் - உடுக்கை.
அமர்தர - பொருந்த.
அடி - 41 ``ஒருபால் திருக்கரம்`` என்பதை, ``செறிந்த`` என்ப தற்கு முன்னே கூட்டி, `விளங்கித் தரித்துத் திகழும்` என்க.
செறிந்த - அழுந்தப் பற்றிய.
சூடகம் - கங்கணம்.
``விளங்கி`` என இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது.
கழங்கு - கழற்சிக் காய் அளவாகச் செயற்கையாகச் செய்யப்பட்ட விளையாட்டுக் கருவி.
ஒம்மெனல் - உயர எறிதல்.
அம் மெல் கிள்ளை - அழகுபட மெல்லப் பேசும் கிளி.
அடி-42,43 ஒருபால் திருநெடு நாட்டம் இரவியும், எரியும் விரவிய வெம்மையின் விளங்கும்` என்க.
இரவி - சூரியன்.
எரி - அக்கினி இவையிரண்டும் சிவபெருமானுடைய இரண்டு கண்கள்.
எனவே, மேல், ``நாட்டம்`` என்றது பன்மைப் பொருட்டாய் இவ்விரு கண்களையும் குறித்தது.
இரவியும், எரியும் வெம்மையோடு கூடி விளங்கும்` என்க.
அடி - 48 ``ஒருபால் நாட்டம்`` என்பதை ``பாலிற் கிடந்த`` என்பதற்கு முன்னே கூட்டி, `நீலம் போன்று குவளையிற் குளிர்ந்து, இரங்கிப் புரக்கும்` என்க.
நவ்வி, மானின் வகை.
நீலம் - நீல மணி.
``கிடந்த`` என்றது, `தனது நிறம் வேறுபடாது கிடந்த` என்றபடி, `நீல மணியைச் சோதித்தற்கு அதனைப் பாலில் இட்டால், பாலையும் நீல நிறமாகத் தோற்றுவித்துத் தான் நிறம் மாறாதிருப்பதே முழுமையான நீலம்` என்பர்.
எனவே, ``பாலிற் கிடந்த நீலம்`` என்றது, `முழுநீலம்` என்றதாம்.
குண்டு - ஆழம்.
``நிறம் பயின்று`` என்பதை, ``நீலம் போன்று`` என்பதன் பின் கூட்டுக.
எம்மனோர் - எம்மை போலும் அடியவர்.
``இரங்கி`` என்றது, சிறப்புக் கருணை காட்டுதலை.
`ஏழும்` என்னும் முற்றும்மை தொகுக்கப்பட்டது.
ஏழுலகத்தையும் புரத்தல் பொதுக் கருணை.
அடி- 57 ``ஒருபால் திருமுடி`` என்பதை, ``நொச்சிப் பூவும்`` என்பதற்கு முன்னே கூட்டி, `பூவும், மத்தமும், போதும், தும்பையும் தொடுத்த மாலை சூடி, விரவி, சடிலமொடு கடந்து, சேண் இகந்து உளது` என்க.
மத்தம் - ஊமத்தை.
``பச்ை\\\\\\\\u2970?`` என்றது முதலுக்காகிய அடை.
மத்தமும், தும்பையும் அவற்றது பூவைக் குறித்தலால் முதலாகு பெயர்கள்.
`யாறு` முதலிய நான்கும் விரவி` என்க.
விரவி - விரவப் பட்டு.
அன்றி, `இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் ஏற்றப்பட்டது` எனினும் ஆம்.
சூடா மாலை - பிறரால் சூட்டப் பெறாத மாலை, பீடு கெழு - `பெருமை பொருந்திய சடிலம்` என்க.
நெருப்பின் - நெருப்பால்.
உருக்கிளர் - நிறம் விளங்குகின்ற.
சடிலம் - சடை.
`சடிலமொடு உளது` என்க.
கருத்தையும் - யாவர் கருத்தையும்.
சேண் இகந்து - ஆகாயத்தின் நீங்கி.
அடி-63 ``ஒருபால் திருமுடி`` என்பதை, ``பேணிய`` என்ப தற்கு முன்னே கூட்டி, `மகளிர் வாங்கி வைத்துப் புனைந்த மாலை வளைஇ, மேல் நிவந்து, திளைப்பப் பொலியும்` என்க.
பேணி.
- `போற்றிக் காத்த கற்பு` என்க.
தெய்வ மகளிர் ஆதலின் அவரது கற்பு, ``கடவுட் கற்பு`` எனப்பட்டது.
பொற்பூ - பொன்னால் ஆகிய பூ.
புனைந்த - தொடுத்த.
வளைஇ - சுற்றப்பட்டு, நிவந்து - உயர்ந்து.
`தேன்` என்பதும் ஒருவகை வண்டேயாம்.
கிண்டுபு - கிளறி.
திளைப்ப- இன்புற.
திரு - அழகு.
இதுகாறும் ``ஒருபால், ஒருபால்`` எனக் கூறிவந்தவற்றுள் முன்னவையெல்லாம் வலப்பாலையும், பின்னவையெல்லாம் இடப் பாலையும் குறித்தன.
இங்கு அடி -64-ல் `வண்ணம்` என்றது தன்மையை.
நினைவருங் காட்சி, நினைத்தற்கு இயலாத (மனத்தைக் கடந்த) தோற்றம்.
இரு வயின் உரு - இரண்டிடத்தில் வேறு வேறாய் இருத்தற்குரிய வடிவங்களை ஒரு வயிற்று ஆகி - ஓர் இடமே உடையதாம்படி ஆகி.
``வாணுதல்`` என்பது பின்னர் வருதலால் முன்னர் `ஆண்` என்பது வருவித்து, `வலப்பால் ஆண் பாகம் இடப் பால் வாணுதல் பாகத்தை நோக்க, அது நாணுதல் செய்ய` என்க.
தைவரல், வருடல் இரண்டும் ஒருபொருட் சொற்களாயினும் சிறிதே பொருள் வேற்றுமையுடையன.
`கரம் வருட, மெய்ம் மயிர் பொடித்து என்க.
மெய், இருபால் மெய்யும்.
ஆங்கு - அவ்வாறு `அவ்வாறு உலகம் ஈன்று` என்றதனால், `மேலெல்லாம் பலபடக் கூறிய வாறு, இருவயின் உருவும் ஒருவயிற்று ஆக இயைவன எல்லாம் உயிர்கள் மாட்டு வைத்த கருணை காரணமாக மேற்கொண்ட செயற்கையாவன அல்லது, தமக்கே இயல்பாக உடைய இயற்கையல்ல`` என்பது கூறப்பட்டதாம்.
போகியாய் இருந்து உயிர்க்குப்
போகத்தைப் புரிதல் ஒரார்
எனச் சாத்திரம் கூறிற்று.
சிறைக் கருப்பாசயம் - கருப்பாசயமாகிய சிறை; உருவகம்.
ஆசயம் - தங்குமிடம்.
கருப்பம் - கரு கருப்பாசயம்- கருப்பம் தங்கியிருக்குமிடம்; கருப்பப் பை.

பண் :

பாடல் எண் : 2

பொருளுங் குலனும் புகழுந் திறனும்
அருளும் அறிவும் அனைத்தும் ஒருவர்
கருதாவென் பார்க்குங் கறைமிடற்றாய் தொல்லை
மருதாவென் பார்க்கு வரும்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குலம் - குடி.
``ஒழுக்கம் உடைமை குடிமை`` 2 என்ப ஆகலின், குலமாவது ஒழுக்கமேயாம்.
திறன் - கருதியதை முடிக்கும் ஆற்றல்.
அருள் - எல்லா உயிர்களிடத்தும் காட்டும் இரக்கம்.
இதனை யுடையார்க்கு இறைவனது அருள் தானே கிடைக்கும்.
`ஒருவரும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுக்கப்பட்டது.
கருதா - விரும்பாத, என்பு ஆர்க்கும் - எலும்பைப் பூணுகின்ற.
தொல்லை - பழைமை; அநாதி.
வரும் - கிடைக்கும்.

பண் :

பாடல் எண் : 3

வருந்தேன் இறந்தும் பிறந்தும்
மயக்கும் புலன்வழிபோய்ப்
பொருந்தேன் நரகிற் புகுகின்றி
லேன்புகழ் மாமருதிற்
பெருந்தேன் முகந்துகொண் டுண்டு
பிறிதொன்றில் ஆசையின்றி
இருந்தேன் இனிச்சென் றிரவேன்
ஒருவரை யாதொன்றுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`இறந்தும், பிறந்தும் வருந்தேன்` என்க.
``புகழ் மா மருதில்.
இருந்தேன்`` என்பதை முதற்கண் வைத்து உரைக்க.

பண் :

பாடல் எண் : 4

ஒன்றினோ டொன்று சென்றுமுகில் தடவி
ஆடுகொடி நுடங்கும் பீடுகெழு மாளிகைத்
தெய்வக் கம்மியர் கைம்முயன்று வகுத்த
ஒவநூல் செம்மைப் பூவியல் வீதிக்
குயிலென மொழியும் மயிலியல் சாயல்

மான்மற விழிக்கும் மானார் செல்வத்
திடைமரு திடங்கொண் டிருந்தஎந்தை
சுடர்மழு வலங்கொண் டிருந்த தோன்றல்
ஆரணந் தொடாராப் பூரணபுராண
நாரணன் அறியாக் காரணக் கடவுள்

சோதிச் சுடரொளி ஆதித் தனிப்பொருள்
ஏக நாயக யோக நாயக
யானொன் றுணர்த்துவ துளதே யான்முன்
நனந்தலை யுலகத் தனந்த யோனியில்
பிறந்துழிப் பிறவாது கறங்கெனச் சுழன்றுழித்
தோற்றும் பொழுதின் ஈற்றுத் துன்பத்து
யாயுறு துயரமும் யானுறு துயரும்
இறக்கும் பொழுதில் அறப்பெருந் துன்பமும்
நீயல தறிகுநர் யாரே அதனால்
யானினிப் பிறத்தல் ஆற்றேன் அஃதான்

றுற்பவம் துடைத்தல் நிற்பிடித் தல்லது
பிறிதொரு நெறியின் இல்லையந் நெறிக்கு
வேண்டலும் வெறுத்தலும் ஆண்டொன்றிற் படரா
உள்ளமொன் றுடைமை வேண்டும் அஃதன்றி
ஐம்புலன் ஏவல் ஆணைவழி நின்று

தானல தொன்றைத் தானென நினையும்
இதுவென துள்ளம் ஆதலின் இதுகொடு
நின்னை நினைப்ப தெங்ஙனம் முன்னம்
கற்புணை யாகக் கடல்நீர் நீந்தினர்
எற்பிற ருளரோ இறைவ கற்பம்

கடத்தல்யான் பெறவும் வேண்டும் கடத்தற்கு
நினைத்தல்யான் பெறவும் வேண்டும் நினைத்தற்கு
நெஞ்சுநெறி நிற்கவும் வேண்டும் நஞ்சுபொதி
உரையெயிற் றுரகம் பூண்ட
கறைகெழு மிடற்றெங் கண்ணுத லோயே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி-30 ``இறைவ`` என்பதையும், அடி-33 ``நஞ்சு பொதி.
.
.
கண்ணுதலோயோ`` என்பதையும் அடி-12 யோக நாயக`` என்பதன் பின்னர்க் கூட்டியுரைக்க.
`ஒன்றினொடு ஒன்று சேர்ந்து` என ஒருசொல் வருவிக்க.
`முகிலைத் தடவி` எனவும், `மாளிகையில் வகுத்த` எனவும் கொள்க.
`செம்மை வீதி, பூ இயல் வீதி` எனத் தனித் தனி இயையும்.
பூ இயல் - அழகு விளங்குகின்ற.
``மான் ஆர்`` என்பதில் `மான்` என்னும் அஃறிணை யியற் பெயர் இங்குப் பன்மைப்பாலதாய் உவம ஆகுபெயராகி மகளிரைக் குறித்தது.
வீதி ஆர் - வீதியின்கண் நிறைந்த.
மாற - தோற்க.
புராணன் - பழையோன்.
சோதி - திரட்சியான ஒளி.
சுடர் - கதிர் ``யோகம்`` என்பது வீட்டு நெறியைக் குறித்தல் வழக்கு.
நனந்தலை - அகன்ற இடம்.
அனந்தம் - முடிவின்மை, அளவின்மை.
யோனி - பிறப்பு வகை.
``பிறந்துழிப் பிறவாது`` என்றது `எல்லா யோனிகளிலும் பிறந்து` என்றபடி.
கறங்கு - காற்றாடி.
தோற்றும் பொழுது - பிறக்கும் பொழுது.
ஈற்றுத் துன்பத்து - கருவுற்ற பொழுதில் உளவாகின்ற துன்பங்களில்.
யாய் - என் தாய்.
அறப் பெரிது - மிகப் பெரிது.
அஃதான்று - அதுவன்றி.
என்றது, `பிறவித் துன்பத்தை ஆற்றாமை யேயன்றி, வேறும் இடர்கள் உள` என்றபடி.
`பிறப்பில் பெருமானாகிய உன்னைப் பற்றும் நெறியிலல்லது.
பிறந்தும், இறந்தும் உழல்கின்ற ஏனைத் தேவரைப் பற்றும் நெறிகளில் பிறவியறுதல் கூடாது` என்பார்.
உற்பவம் துடைத்தல் நிற்பிடித் தல்லது
பிறிதொரு நெறியின் இல்லை
என்றார்.
``சிவனலால் முத்தியிற் சேர்த்துவார் இலை`` என்றார் காஞ்சிப்புராணத்திலும்.
அந்நெறிக்கு - அந்நெறியில் நிற்றற்கு.
ஆண்டு - அதனைப் பற்றுமிடத்து.
தொகுக்கப்பட்ட இழிவு சிறப் பும்மையை விரித்து, `ஒன்றிலும் வேண்டலும் வெறுத்தலும் படரா ஓர் உள்ளம் உடைமை வேண்டும்`` என்க.
அடி-27 `எனது உள்ளம் அஃதன்றி, நின்று, நினையும் இது; ஆதலின் இதுகொடு நின்னை நினைப்பது எங்ஙனம்` என்க.
`அஃது, இது` என்பன, `அன்னது, இன்னது` என்னும் பொருளவாய் நின்றன.
இன்னதாகிய உள்ளத்தைக் கொண்டு உன்னுடைய நெறியில் நிற்கக் கருதினேன் யான் ஆதலின், ``கற்புணையாகக் கடல்நீர் நீந்தினர் எற் பிறர் உளரோ`` என்றார்.
கருதினர் - கருதி முயன்றவர்.
`என்னையன்றிப் பிறர் உளரோ`` என்க.
`எனது மடமை யிருந்தவாறு இது` என்றபடி.
`இங்ஙனமாயினும் வேண்டும்; வேண்டும்; வேண்டும்` என்க.
கற்பம்- பிறந்து இறந்துவரும் நெடுங்காலம், `நின்னை நினைத்தல்` என்க.
`நெஞ்சு நிற்கவும்` என இயைக்க.
காரணம், காரியம் இரண்டனுள் காரியங்களை முன்னரும், `காரணங்களைப் பின்னருங் கூறியது முதலாவதாகிய நெஞ்சு நிலைபெறுதலே இல்லாத யான் பின்னர் விளையத் தக்கனவாகிய பயன்களைப் பெறுதல் எவ்வாறு` எனத் தமது எளிய நிலையை வெளிப்படுத்தி, `எனக்கு அருள்புரிதல் வேண்டும்` என வேண்டிக் கோடற் பொருட்டு.
உறை - துளி.
`நஞ்சு உறை பொதி எயிற்று உரகம்` என்க.

பண் :

பாடல் எண் : 5

கண்ணென்றும் நந்தமக்கோர் காப்பென்றும் கற்றிருக்கும்
எண்ணென்றும் மூல எழுத்தென்றும் ஒண்ணை
மருதவப்பா என்றுமுனை வாழ்த்தாரேல் மற்றுக்
கருதவப்பால் உண்டோ கதி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நந்தமக்கு, மூலம்`` என்பவற்றை முன்னருங் கூட்டிப் பொருள் கொள்க.
மூல எண் - முதற் கருத்து.
மூல எழுத்து - அக்கருத்தைத் தோற்றுவிக்கின்ற நாதம்.
மூலமாவனவற்றைக் கூறவே பின் பின் அவை வழியாகத் தொடர்ந்து தோன்றும் எண்ணும் எழுத்தும் அடங்கின.
ஒண் ஐ - எல்லாம் வல்ல தலைவன்.
`ஐயாகிய மருதவப்பன்` என்க.
அப்பால் - இவ்வுடல் நீங்கிய பின்பு.
கருத - `அடையற் பாலது இது` எனத் துணிதற்கு.

பண் :

பாடல் எண் : 6

கதியா வதுபிறி தியாதொன்றும்
இல்லை களேபரத்தின்
பொதியா வதுசுமந் தால்விழப்
போமிது போனபின்னர்
விதியாம் எனச்சிலர் நோவதல்
லாலிதை வேண்டுநர்யார்
மதியா வதுமரு தன்கழ
லேசென்று வாழ்த்துவதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கதியாவது பிறிது யாதொன்றும் இல்லை`` என்பதை மூன்றாம் அடியின் இறுதியிற் கூட்டுக.
``பிறிது`` என்பதன் முன், பின் வருகின்ற கழலைச் சுட்டுவதாகிய `அஃது` என்பது வருவித்து, `அஃதன்றிப் பிறிதியா தொன்றும் இல்லை; அதனால்` என உரைக்க.
களேபரம் - உடம்பு.
`களேபரமாகிய பொதி` என்க.
இன், வேண்டா வழிச் சாரியை.
``பொதியாவது`` என்பதில் `ஆவது` என்பது எழுவாய் வேற்றுமைச் சொல்லுருபாய் வந்தது.
``சுமந்தால் விழப்போம்`` என்பது, `நாம் விழாமல் போற்றிக் காத்துச் சுமந்தாலும் நில்லாது விழவே செய்யும்` என்றபடி.
`சுமந்தாலும்` என்னும் உயர்வு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று.
``போம்`` என்றது, `செய்யும்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 7

வாழ்ந்தனம் என்று தாழ்ந்தவர்க் குதவாது
தன்னுயிர்க் கிரங்கி மன்னுயிர்க் கிரங்கா
துண்டிப் பொருட்டாற் கண்டன வெஃகி
அவியடு நர்க்குச் சுவைபலபகர்ந்தேவி
ஆரா உண்டி அயின்றன ராகித்

தூராக் குழியைத் தூர்த்துப் பாரா
விழுப்பமும் குலனும் ஒழுக்கமும் கல்வியும்
தன்னிற் சிறந்த நன்மூ தாளரைக்
கூஉய்முன் நின்றுதன் ஏவல் கேட்குஞ்
சிறாஅர்த் தொகுதியின் உறாஅப் பேசியும்

பொய்யொடு புன்மைதன் புல்லர்க்குப் புகன்றும்
மெய்யும் மானமும் மேன்மையும் ஒரீஇத்
தன்னைத் தேறி முன்னையோர் கொடுத்த
நன்மனைக் கிழத்தி யாகிய அந்நிலைச்
சாவுழிச் சாஅந் தகைமையள் ஆயினும்

மேவுழி மேவல் செய்யாது காவலொடு
கொண்டோள் ஒருத்தி உண்டிவேட் டிருப்ப
எள்ளுக் கெண்ணெய் போலத் தள்ளாது
பொருளின் அளவைக்குப் போகம்விற் றுண்ணும்
அருளில் மடந்தையர் ஆகம் தோய்ந்தும்

ஆற்றல்செல் லாது வேற்றோர் மனைவயின்
கற்புடை மடந்தையர் பொற்புநனி வேட்டுப்
பிழைவழி பாராது நுழைவழி நோக்கியும்
நச்சி வந்த நல்கூர் மாந்தர்தம்
விச்சையிற் படைத்த வெவ்வேறு காட்சியின்

அகமலர்ந் தீவார் போல முகமலர்ந்
தினிது மொழிந்தாங் குதவுதல் இன்றி
நாளும் நாளும் நாள்பல குறித்தவர்
தாளின் ஆற்றலும் தவிர்த்துக் கேளிகழ்ந்து
இகமும் பரமும் இல்லை என்று
பயமின் றொழுகிப் பட்டிமை பயிற்றி
மின்னின் அனையதன் செல்வத்தை விரும்பித்
தன்னையும் ஒருவ ராக உன்னும்
ஏனையோர் வாழும் வாழ்க்கையும் நனைமலர்ந்து
யோசனை கமழும் உற்பல வாவியில்

பாசடைப் பரப்பில் பால்நிற அன்னம்
பார்ப்புடன் வெருவப் பகுவாய் வாளைகள்
போர்த்தொழில் புரியும் பொருகா விரியும்
மருதமும் சூழ்ந்த மருத வாண
சுருதியும் தொடராச் சுருதி நாயக

பத்தருக் கெய்ப்பினில் வைப்பென உதவும்
முத்தித் தாள மூவா முதல்வநின்
திருவடி பிடித்து வெருவரல் விட்டு
மக்களும் மனைவியும் ஒக்கலும் திருவும்
பொருளென நினையாதுன் னருளினை நினைந்து

இந்திரச் செல்வமும் எட்டுச் சித்தியும்
வந்துழி வந்துழி மறுத்தனர் ஒதுங்கிச்
சின்னச் சீரை துன்னல் கோவணம்
அறுதற் கீளொடு பெறுவது புனைந்து
சிதவல் ஓடொன் றுதவுழி எடுத்தாங்

கிடுவோர் உளரெனின் நிலையில்நின் றயின்று
படுதரைப் பாயலிற் பள்ளி மேவி ஒவாத்
தகவெனும் அரிவையைத் தழீஇ மகவெனப்
பல்லுயிர் அனைத்தையும் ஒக்கப் பார்க்கும்நின்
செல்வக் கடவுள் தொண்டர் வாழ்வும்

பற்றிப் பார்க்கின் உற்றநா யேற்குக்
குளப்படி நீரும் அளப்பருந் தன்மைப்
பிரளய சலதியும் இருவகைப் பொருளும்
ஒப்பினும் ஒவ்வாத் துப்பிற் றாதலின்
நின்சீர் அடியார் தஞ்சீர் அடியார்க்
கடிமை பூண்டு நெடுநாட் பழகி
முடலை யாக்கையொடு புடைபட் டொழுகியவர்
காற்றலை ஏவலென் நாய்த்தலை ஏற்றுக்
கண்டது காணின் அல்லதொன்
றுண்டோ மற்றெனக் குள்ளது பிறிதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, அடியரல்லார் செல்வச் செருக்கால் இறுமாந்து கண்டபடி வாழும் செல்வ வாழ்க்கையின் இழிவினையும், அடியராயினார் திருவருளில் அடங்கி நெறிநின்று வாழும் வறுமை வாழ்க்கையின் உயர்வையும் ஒப்பிட்டுத் தெரிக்கின்றது.
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.
என்பன பொது மறைத் திருமொழி.
``உயிர்`` இரண்டும் ஆகுபெயராய் அவற்றது துன்பத்தைக் குறித்தன.
வெஃகி - விரும்பி.
அவி - அடப்படுவன.
அடுநர்க்குச் சுவை பல பகர்தலாலது, `இதை இதை இன்று சமை, இப்படி இப்படிச் சமை` எனக் கட்டளையிடுதல்.
ஆரா உண்டி - வயிறு நிறையினும் சுவை மிகுதியால் மனம் நிறையாது அளவின்றி உண்ணும் உணவு.
தூராக் குழி - தூர்க்கும் பொழுது தூர்ந்து விட்டது போலத் தோன்றிப் பின் வெறிதாகி, ஒரு நாளும் தூராத குழி; வயிறு.
பாரா - பாராது இதனை, `கல்வியும்`` என்பதன்பின்னர்க் கூட்டுக.
விழுப்பம் - சில காரணங்களால் தமக்கு அமைந்த பெருமை.
குலம் - குடிப் பிறப்பு.
ஒழுக்கம் - முன்னோர் ஒழுகி வந்த நல்லொழுக்கம்.
கல்வி - பெற்றோராலும், ஆசிரியராலும் வற்புறுத்திக் கற்பிக்கப்பட்ட கல்வி.
இவைகளைப் பாராது அஃதாவது, `இவை வீணாவதை எண்ணாமல் நன்மூதாளரைஉறாப்பேசி` என்க.
உறாப் பேசுதல் - அன்பால் உளம் பொருந்துதல் இன்றிப் பேசுதல்.
எனவே கடிந்து பேசுதலாம்.
கூவுதல் - அழைத்தல்.
``கூய்`` என்பதை, `கூவ` எனத் திரிக்க.
`தொகுதியைப் பேசுதல் போலப் பேசி` என்பதாம்.
இன், உவம உருபு.
புன்மை - கீழான செய்திகள்.
தன் புல்லர் - தனக்கு நண்பராய் உள்ள அற்பர்.
`அற்பர்` என்றதனால், அத்தகையோரே அவருக்கு நண்பராதல் குறிக்கப்பட்டது.
தேறி - தெளிந்து; கைவிடாது காப்பாற்று வான் ` என நம்பி.
`அந்நிலையில்` என உருபு விரித்து, அதன்பின், ``கொண்டோள் ஒருத்தி`` என்பதைக் கூட்டுக.
கொண்டோள் - கொள்ளப்பட்டோள்.
`ஆயினும் அவள்பால் மேவுழி மேவல் செய்யாது` என்க.
மேவுழி - சொல்ல வேண்டிய காலத்தில்.
உண்டு வேட்டு இருத்தற்கு, `அவள்` என்னும் எழுவாய் வருவிக்க.
எள்ளைக் கொடுத்து, அதன் அளவுக்கு எண்ணெய் வாணிபரிடம் எண்ணெய் பெறுதல் அக்காலத்து வழக்கம்.
அவ்வாணிபர் அந்த எள்ளின் அளவுக்குச் சிறிது மிகுதியாகவும் எண்ணெய் கொடுக்க உடம்படார்.
தள்ளாது - பொருள் கொடுப்பின் யாரையும் விலக்காமல்.
`அன்பு உண்டாகக் காரணம் இல்லையாயினும், அருளேனும் உண்டாகப் பெறுவரோ எனின் அஃதும் இல்லை` என்றற்கு விலை மாதரை ``அருள் இல் மடந்தையர்`` என்றார்.
ஆற்றல் - ஆற்றுதல்; பொறுத்தல்.
பொறுக்கப்படுவது ஆசையின் வேகம்.
இதனை, ``கேட்டு`` என்பதன் பின்னர்க் கூட்டுக.
வேற்றோர் - அயலார்.
பிழை வழிபாராது- குற்றமான நெறியாதலை நோக்காமல்.
நச்சி - விரும்பி நல்கூர் - வறுமையுற்ற.
விச்சையின் படைத்த - அவர்களது அறிவில் பதியும்படி தோற்றுவித்த, காட்சி - மெய்ப்பாடுகள்.
தாளின் ஆற்றல் - நடப்பன வாகிய கால்களின் உரம்.
கேள் - சுற்றம், இகம் - இம்மை.
அது இம்மைக்கண் எய்தற்பாலதாகிய புகழைக் குறித்தது.
பரம் - மறுமை.
பயன் இன்று - பயன் இல்லாமல்.
பட்டிமை - கட்டுப்பாடின்றி வேண்டியவாறே ஒழுகும் தன்மை.
பயிற்றி - பலகாலும் மேற்கொண்டு ``ஒருவர்`` என்பது உன்னுவார் கருத்துப் பற்றி வந்ததாகலின் அது முன்னர்ப் போந்த ஒருமைச் சொற்களோடு இசையாது வேறு நின்றது.
நனை - அரும்பு.
உற்பலம் - நீலோற்பலம், பாசடை- பசுமையான இலை.
பார்ப்பு - குஞ்சு.
``மருதம்`` இரண்டில் முன்னது வயல், நிலம்.
வைப்பு - சேம நிதி.
முத்தித் தாள - முத்தியாகிய திருவடியை உடையவனே.
மூவா - அழியாத.
``மருத வாண, சுருதி நாயக, முத்தித் தாள, முதல்வ`` என்பவற்றை முதற்கண் கொண்டு உரைக்க.
ஒக்கல் - சுற்றம்.
திரு - செல்வம் ``மறுத்தனர்`` என்பது முற்றெச்சமாய் நின்றது.
சின்னம் - சிறுமை.
சீரை - மரவுரி.
துன்னல் - கீளோடு சேர்த்துத் தைத்தல்.
அறுதல் - நெய்யப்பட்ட பின் வேறாய் நீங்குதல்.
பெறுவது - கிடைத்த ஒன்று.
சிதவல் - உடைதல்.
உதவுழி - கிடைக்குமிடத்தில்.
படுதரைப் பாயல் - எதிர்ப்பட்ட நிலமாகிய பாயல்.
தகவு - தகுதி; ஒன்றிலும் பற்றின்மை.
கடவுள் - தெய்வத் தன்மை.
பிரளய சலதி - ஊழிக் காலத்தில் எங்கும் பொங்கிப்பரக்கும் கடல், இதவும் ஆகு பெயரால் நீரையே குறித்தது.
`குளப்படி நீரும், சலதி நீரும் ஆகிய இரு வகைப் பொருளும்` என்க.
துப்பிற்று - வலிமையுடையது.
முடலை யாக்கை - பல முறுக்குக்களையுடைய உடம்பு.
புடைப்பட்டு - பக்கத்தில் பொருந்தி.
கால் தலை - பாதமாகிய இடம்.
ஏவல் - ஏவப்படும் பணிகள்.
`ஏற்றுச் செய்து` என ஒரு சொல் வருவிக்க `அவர் கண்டது நான்காணின் அல்லது, எனக்கென்று பிறிது உண்டோ` என உரைக்க.
`அடியவர்க்கு அடிமையாதலிற் சிறந்த செல்வம் பிறிது இல்லை` என்பதை உணர்த்துவார், முதற்கண் அடியர் அல்லாதாரது இழிவையும், அடியாரது உயர்வையும் விரித்து ஒப்பிட்டுக் காட்டினார்.

பண் :

பாடல் எண் : 8

பிறிந்தேன் நரகம் பிறவாத வண்ணம்
அறிந்தேன் அநங்கவேள் அம்பில் செறிந்த
பொருதவட்ட வில்பிழைத்துப் போந்தேன் புராணன்
மருதவட்டம் தன்னுளே வந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அநங்க வேள் - மன்மதன்.
`செறிந்த வில், பொருத வில், அட்ட வில்` எனத் தனித்தனி இயைக்க.
பொருத - போர் செய்த.
அட்ட - கொன்ற; கொன்றது போலும் துன்பத்தைச் செய்த.
புராணன்- பழையோன்.
``புராணன் மருத வட்டம் தன்னுளே வந்து`` என்பதை முதலிற் கொள்க.

பண் :

பாடல் எண் : 9

வந்திக்கண் டாயடி யாரைக்கண்
டால்மற வாதுநெஞ்சே
சிந்திக்கண் டாயரன் செம்பொற்
கழல்திரு மாமருதைச்
சந்திக்கண் டாயில்லை யாயின்
நமன்தமர் தாங்கொடுபோய்
உந்திக்கண் டாய்நிர யத்துன்னை
வீழ்த்தி உழக்குவரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கண்டாய்`` நான்கும் முன்னிலை யசைகள்.
முதல் மூன்று அடிகளில் முதற்கண் நின்ற சீர்களில் வந்த ககர ஒற்றுக்கள் ஈற்றடியோடு எதுகை பொருந்த வேண்டி விரிக்கப்பட்டன.
``நெஞ்ே\\\\u2970?`` என்பதை முதலில் வைத்து, `அடியாரைக் கண்டால் வந்து; அரன் செம்பொற்கழல் மறவாது சிந்தி; திரு மாமருதைச் சந்தி; இல்லையேல் நமன் தமர் உன்னைக் கொடுபோய் நிரயத்து உந்தி வீழ்த்தி உழக்குவர்` என இயைத்து உரைக்க.
வந்தி - வணங்கி; சந்தி - நேர்நின்று காண்க.
தாம், அசை.
உந்தி - பின்னின்று தள்ளி.
உழக்கு வார் - அலைப்பர்.

பண் :

பாடல் எண் : 10

உழப்பின் வாரா உறுதிகள் உளவோ
கழப்பின் வாராக் கையுற வுளவோ
அதனால்
நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை
வேரற அகழ்ந்து போக்கித் தூர்வைசெய்து
அன்பென் பாத்தி கோலி முன்புற
மெய்யெனும் எருவை விரித் தாங் கையமில்
பத்தித் தனிவித் திட்டு நித்தலும்
ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சிநேர் நின்று
தடுக்குநர்க் கடங்கா திடுக்கண் செய்யும்
பட்டி அஞ்சினுக் கஞ்சியுட் சென்று
சாந்த வேலி கோலி வாய்ந்தபின்
ஞானப் பெருமுளை நந்தாது முளைத்துக்
கருணை இளந்தளிர் காட்ட அருகாக்
காமக் குரோதக் களையறக் களைந்து
சேமப் படுத்துழிச் செம்மையின் ஓங்கி
மெய்ம்மயிர்ப் புளகம் முகிழ்த்திட் டம்மெனக்
கண்ணீர் அரும்பிக் கடிமலர் மலர்ந்து.
புண்ணிய
அஞ்செழுத் தருங்காய் தோன்றி நஞ்சுபொதி
காள கண்டமும் கண்ணொரு மூன்றும்
தோளொரு நான்கும் சுடர்முகம் ஐந்தும்
பவளநிறம் பெற்றுத் தவளநீறு பூசி
அறுசுவை யதனினும் உறுசுவை உடைத்தாய்க்
காணினுங் கேட்பினுங் கருதினுங் களிதரும்

சேணுயர் மருத மாணிக்கத் தீங்கனி
பையப் பையப் பழுத்துக் கைவர
எம்ம னோர்கள் இனிதினி தருந்திச்
செம்மாந் திருப்பச் சிலர்இதின் வாராது
மனமெனும் புனத்தை வறும்பா ழாக்கிக்

காமக் காடு மூடித் தீமைசெய்
ஐம்புல வேடர் ஆறலைத் தொழுக
இன்பப் பேய்த்தேர் எட்டா தோடக்
கல்லா உணர்வெனும் புல்வாய் அலமர
இச்சைவித் துகுத்துழி யானெனப் பெயரிய

நச்சு மாமரம் நனிமிக முளைத்துப்
பொய்யென் கவடுகள் போக்கிச் செய்யும்
பாவப் பல்தழை பரப்பிப் பூவெனக்
கொடுமை அரும்பிக் கடுமை மலர்ந்து
துன்பப் பல்காய் தூக்கிப் பின்பு

மரணம் பழுத்து நரகிடை வீழ்ந்து
தமக்கும் பிறர்க்கும் உதவா
திமைப்பிற் கழியும் இயற்கையோர் உடைத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உழப்பு - முயற்சி.
உறுதி - நன்மை.
கழப்பு - நெடுநீர்மை; மடி கையறவு - துன்பம்.
``முயற்சி திருவினை யாக்கும்; முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்`` 1 என்பதனை முதல் இரண்டு, அடிகளால் வலியுறுத்திக் கூறினார்; தாம் முயற்சியால் இன்பம் எய்தி யதையும், சிலர் மடிமையால் துன்பம் எய்துதலையும் நிறுவுதற்கு.
இப் பாட்டு முழுவதும் `நன்று, தீது` என்னும் இருவகையான் ஆகிய முற்றுருவகம் ஆதலை அறிக.
அதனால் - அதனை யறிந்தமையால், `அகழ்தல் முதலியவற்றைச் செய்தோம்` என்பதாம்.
புனம் - கொல்லை.
வஞ்சக் கட்டை - பிறரை வஞ்சித்தலாகிய பெருமரம்.
மெய் - வாய்மை.
பத்தி - இறையன்பு.
ஆர்வம் - சிவானந்த வேட்கை.
பட்டி அஞ்சு, கட்டுக்கு அடங்காத ஐம்புல ஆசையாகிய யானைகள்.
சாந்தம் - பொறுமை.
ஞானம் - மெய்யுணர்வு.
நந்தாது - கெடாமல்.
கருணை - திருவருள் அருகா - பயிரின் பக்கமாய் முளைக்கின்ற காமக் குரோதங்களைக் கூறவே இனம் பற்றி உலோபம், மோகம், மதம், மாற்சரியம் ஆகிய ஏனை நான்கும் உடன் கொள்ளப்படும்.
சேமப் படுத்துழி - பாதுகாவல் செய்த பொழுது.
செம்மையின் ஓங்கி - (பத்தியாகிய மரம்) நன்றாக வளர்ந்து.
முகிழ்த்தல் - அரும்பெடுத்தல்.
அம்மென - அழகாக ``அரும்பி`` என்றது, `போதாகி` என்றபடி.
கடி - மணம்; அஃது இங்குப் பக்குவத்தைக் குறித்தது.
புண்ணியம் - சிவபுண்ணியம்.
`அதனைத் தருகின்ற அஞ்செழுத்து` என்க.
`அஞ்செழுத்துத் தானே சிவபெருமானாய்த் தோன்றி நின்றது` என்ற படி.
காள கண்டம் - கரிய மிடறு.
சுவை, அவற்றையுடைய உணவைக் குறித்தது.
``இனிது இனிது`` என்னும் அடுக்குக் காலப்பன்மை பற்றி வந்தது.
உறு - மிக்க.
``மருத மாணிக்கம்`` என்பது `சிவபிரான்` என்னும் அளவாய் நின்றது.
`இனி யருந்தி` எனப் பாடம் ஓதி, `இப் பொழுதே அருந்தி` என உரைத்தலும் ஆம்.
`பாழாக்கிக் கழியும் இயற்கைேயார் ஆகின்றனர்; அத்தகையோரையும் உடையது இவ் வுலகம்` என முடிக்க.
ஆறு அலைத்தல் - வழிப் பறி செய்தல்.
இன்பப் பேய்த்தேர் - உலக இன்பமாகிய கானல்.
புல்வாய் - மான்.
பாலை நிலத்தில் தோன்றுகின்ற கானலை நீர் என்று நினைத்து விடாய் தணியப் பருகுதற்கு ஓடி ஓடி எய்த்தல் மான்களுக்கு இயல்பு.
இச்சை - ஆசை.
உதிர்த்தல் - தூவுதல் ``யான்`` என்பதைக் கூறவே, `எனது` என்பதும் கொள்ளப்படும்.
மாமரம் - பெரிய மரம்.
பொய் - பொய் கூறுதல்.
கவடுகள் - கிளைகள்,கொடுமை - வெகுளி.
கடுமை - கடுஞ் சொல்லும், வன்செயலும்.
தூக்கி - காய்த்துத் தொங்கவிட்டு ``தூக்கி, பழுத்து`` என்னும் செய்தென் எச்சங்களை, `தூக்க, பழுத்து`` எனச் செயவென் எச்சங்களாகத் திரிக்க.
இறுதிக்கண், `இவ்வுலகம்` என ஒரு சொல் வருவித்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 11

உடைமணியின் ஓசைக் கொதுங்கி அரவம்
படமொடுங்கப் பையவே சென்றங் கிடைமருதர்
ஐயம் புகுவ தணியிழையார் மேல் அநங்கன்
கையம் புகவேண்டிக் காண்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உடை மணி - மேகலையில் உள்ள மணிகள்.
அவை மகளிர் ஐயம் இட வரும்பொழுது ஒலிக்கும்.
அவ்வொலியை! இடியின் தோற்றமோ` என ஐயுற்றுப் பிச்சைக்குச் செல்லும் பெருமான் அணிந்துள்ள பாம்புகள் தம் படங்களைச் சுருக்கிக் கொள்ளும்.
அம்பு உக - அம்புகள் சிந்த.
காண் முன்னிலை யசை.
இடை மருதர் பசிக்கு உணவு வேண்டிப் பிச்சைக்குச் செல்கிலர்.
தாருகாவனத்து முனிவர் பத்தினியர் மையற்பட வேண்டியே பிச்சைக்குச் செல்கின்றார்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 12

காணீர் கதியொன்றுங் கல்லீர்
எழுத்தஞ்சும் வல்லவண்ணம்
பேணீர் திருப்பணி பேசீர்
அவன்புகழ் ஆசைப்பட்டுப்
பூணீர் உருத்திர சாதனம்
நீறெங்கும் பூசுகிலீர்
வீணீர் எளிதோ மருதப்
பிரான்கழல் மேவுதற்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உருத்திர சாதனம் - உருத்திராக்கம்.
வீணீர் - பயனில்லாது திரிகின்றவர்களே.
இதனை முதற்கண் வைத்து, `மருதப்பிரான் கழல் மேவுதற்கு உமக்கு எளிதோ! (அன்று; ஆதலால் நீவிர்) கதி என்றும் காணீர் - காணமாட்டீர்` என்க.
`செயற்பாலன வற்றைச் செய்கிலீர்; நீவிர் பயன் பெறுதல் எங்ஙனம்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 13

மேவிய புன்மயிர்த் தொகையோ அம்மயிர்
பாவிய தோலின் பரப்போ தோலிடைப்
புகவிட்டுப் பொதிந்த புண்ணோ புண்ணிடை
ஊறும் உதிரப் புனலோ கூறுசெய்
திடையிடை நிற்கும் எலும்போ எலும்பிடை
முடைகெழு மூளை விழுதோ வழுவழுத்து
உள்ளிடை ஒழுகும் வழும்போ மெள்ளநின்
றூரும் புழுவின் ஒழுங்கோ நீரிடை
வைத்த மலத்தின் குவையோ வைத்துக்
கட்டிய நரம்பின் கயிறோ உடம்பிற்குள்

பிரியா தொறுக்கும் பிணியோ தெரியா
தின்ன தியானென் றறியேன் என்னை
ஏதினுந் தேடினன் யாதினுங் காணேன்
முன்னம்
வரைத்தனி வில்லால் புரத்தைஅழல் ஊட்டிக்

கண்படை யாகக் காமனை ஒருநாள்
நுண்பொடி யாக நோக்கியண் டத்து
வீயா அமரர் வீயவந் தெழுந்த
தீவாய் நஞ்சைத் திருவமு தாக்கி
இருவர் தேடி வெருவர நிமிர்ந்து
பாலனுக் காகக் காலனைக் காய்ந்து
சந்தன சரள சண்பக வகுள
நந்தன வனத்திடை ஞாயிறு வழங்காது
நவமணி முகிழ்த்த புதுவெயில் எறிப்ப
எண்ணருங் கோடி இருடிகணங் கட்குப்
புண்ணியம் புரக்கும் பொன்னி சூழ்ந்த
திருவிடை மருத பொருவிடைப் பாக
மங்கை பங்க கங்கைநா யகநின்
தெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின்
மாயப் படலங் கீறித் தூய

ஞான நாட்டம் பெற்றபின் யானும்
நின்பெருந் தன்மையுங் கண்டேன் காண்டலும்
என்னையுங் கண்டேன் பிறரையுங் கண்டேன்
நின்னிலை அனைத்தையும் கண்டேன் என்னே
நின்னைக் காணா மாந்தர்

தம்மையுங் காணாத் தன்மை யோரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பதியில்பை மட்டுமன்று; ஏனைப் பசு பாசங்களது இயல்பையும் உள்ளவாறு உணர்தல் திருவருள் வழியால் வரும் சிவஞானத்தாலன்றிக் கூடாது` என்பதையும், `சிவஞானத்தால் அறிகின்றுழி, முன்னர்ப் பதியில்பை உணருமாற்றானே ஏனைப் பசு பாசங்களது இயல்பும் உள்ளவாறு உணரப்படும்` என்பதையும் இப்பாடல் இனிது விளக்குகிறது.
`வரைத் தனி வில்லால்.
.
.
கங்கை நாயக! நின்னைக் காணா மாந்தர் தம்மையும் காணாத் தன்மையோரே; என்னை? (நான் ஞான நாட்டம் பெறுதற்கு) முன்னம், - மயிர்த் தொகையோ? தோலின் பரப்போ? புண்ணோ? உதிரப் புனலோ? எலும்போ? மூளை விழுதோ? வழும்போ? புழுவின் ஒழுங்கோ? மலத்தின் குவையோ? நரம்பின் கயிறோ? ஒறுக்கும் பிணியோ? - `இன்னது யான்` என்று தெரியாது ஏதினும் தேடினேன்; யாதினும் காணேன்; (அதனால்) என்னையே (யான்) அறிந்திலேன்.
நின் திருவருள் கிடைத்த பொழுது (அதனால்) மாயையாகிய திரையைக் கீறி, ஞான நாட்டம் பெற்றபின் நின் பெருந் தன்மையுங் கண்டேன்; காண்டலும் என்னையும் கண்டேன்; பிறரையும் கண்டேன்` என ஏற்குமாற்றான் இயைத்துப் பொருள் காண்க.
அடி-1: மேவிய - உடம்பு முழுதும் பொருந்திய.
புன் மயிர் - குறு உரோமங்கள்.
பாவிய - பரந்த, பொதிந்த - மூடிய புண் - சீயும், சினையும்.
கூறு - துண்டு.
முடை - முடைநாற்றம்.
விழுது - நெகிழ்ச்சி யுடையதிரள், வழும்பு - நிணம்; கொழுப்பு.
நீர் - சிறுநீரும், வெயர்வை யும்.
``மலம்`` என்பது உடல் அழுக்கையும் குறிக்கும் `நரம்பாகிய கயிறு` என்க.
இன், வேண்டாவழிச் சாரியை.
`ஏதினும்` என்பது, `யாதினும் என்பதன் மரூஉ.
வரை - மேருமலை.
தனி - ஒப்பற்ற.
புரம், திரிபுரம்.
கண் படையாக - கண்ணையே படைக்கலமாகக் கொண்டு.
பொடி - சாம்பல்.
வீயா - இறவாத `அமரர்` என்பது `மரித்தல் இல்லாதவர்` என்னும் பொருளது ஆதலின் இங்கு அது வாளா பெயராய் வந்தது.
அமுது - உண்ணும் உணவு.
`உண்டதனால் ஊறு எதுவும் நிகழ்ந்திலது` என்றற்கு `உணவாக்கி` என்றார்.
வெருவா - அச்சங் கொள்ள.
சரளம் - தேவ தாரு.
வகுளம் - மகிழ்.
முகிழ்த்த - தோற்றுவித்த.
புது வெயில் - அதிசய வெயில்.
இருடி கணங்கட்கு ஆன புண்ணியம் தவம்.
`புரக்கும் பெருமான்` என்க.
இனி, புரக்கும் இடைமருது` என்றலும் ஆம்.
தெய்வத் திருவருள் - தெய்வத் தன்மையைத் தரும் திருவருள்.
உரிமையாக்கிக் கொள்ளுதலை, `கைக்கொள்ளுதல்` என்றும் `கைப்பற்றுதல்` என்றும் கூறும் வழக்கம் பற்றி, ``கைவந்து`` என்றார்.
`கையின்கண் வந்து` என உருபு விரிக்க.
படலம் - மறைப்பு.
`பசுக்களும், பாசங்களும் பதியின்கண் வியாப்பிய மேயாகலின், வியாபகமாகிய பதியை உணரவே, அதன்கண் வியாப்பியமாகிய பசுக்களும், பாசங்களும் தாமாகவே உணரப்படும்` என்க.
அது கடலுள் மூழ்கி அதன் ஆழத்தைக் காண்பவர் அதனானே அக்கடலின்கண் உள்ள பொருள்களையும் நன்குணர்தலில் வைத்து உணர்ந்து கொள்க.
கடல் ஆழத்தைக் காண முயலாமல் கடலில் உள்ள பொருள்களை மட்டும் காண முயல்வோர் அவற்றுட் சிலவற்றை மட்டுமே பெற்றொழிதலன்றி அனைத்தையும் பெறாமைபோலப் பதியை உணர முயலாமல் பசுபாசங்களை மட்டும் உணருவோர் அவற்றது இயல்பினை ஒருபுடையாக உணர்தலன்றி முற்ற உணராமை பற்றி.
நின்னைக் காணா மாந்தர்
தம்மையுங் காணாத் தன்மை யோரே
என்றார்.
`தன்னையும்` என்பது பாடம் ஆகாமையை.
மாதவச் சிவஞான யோகிகள் சிவஞான போத மாபாடியத்துள் இதனை எடுத்துக்காட்டிய இடத்தில் 1 காணும் பாடம் பற்றியறிக.
முதற்கண் போந்த ஓகாரங்கள் தெரிநிலைப் பொருள.

பண் :

பாடல் எண் : 14

ஒராதே அஞ்செழுத்தும் உன்னாதே பச்சிலையும்
நேராதே நீரும் நிரப்பாதே யாராயோ
எண்ணுவார் உள்ளத் திடைமருதர் பொற்பாதம்
நண்ணுவாம் என்னுமது நாம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஓராது`` முதலிய நான்கும் எதிர்மறை வினையெச்சங்கள்.
அவைகளில் உள்ள ஏகாரங்கள் பிரிநிலைப் பொருள.
ஓர்தல், இங்கு அறிதல்.
அதற்கு `நூற்பொருளை` என்னும் செயப்படுபொருள் வருவிக்க.
நேர்தல் - சாத்த உடன்படுதல்.
எந்தத் திருமுழுக்கும் நீரால் நிரம்புதல் பற்றி, ``நீரும் நிரப்பாதே`` என்றார்.
யார் ஆயோ - என்ன இயைபு உடையேமாகியோ, `நண்ணுவாம் என்னும் அது யார் ஆயோ` என்க.
செயற்பாலனவற்றுள் ஒன்றையும் செய்யாமலே, `நண்ணுவாம்` எனக் கூறுதற்கு யாதோர் இயைபும் இல்லை - என்றபடி.
``அது`` என்பது, என்று சொல்லுதலாகிய அத்தொழிலையே குறித்து நிற்றலால் அஃது, `யாராய்` என்னும் வினையெச்சத்தோடு முடிந்தது.

பண் :

பாடல் எண் : 15

நாமே இடையுள்ள வாறறி
வாமினி நாங்கள்சொல்லல்
ஆமே மருதன் மருத
வனத்தன்னம் அன்னவரைப்
பூமேல் அணிந்து பிழைக்கச்செய்
தாரொரு பொட்டுமிட்டார்
தாமே தளர்பவ ரைப்பாரம்
ஏற்றுதல் தக்கதன்றே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு அகத்திணைப் பொருளில் `மெய் தொட்டுப் பயிறல்` என்னும் துறை பற்றித் தலைவன் கூற்றாய் அமைந் தது.
மருத வனத்து அன்னம் அன்னவர் தலைவி.
மேல் - தலை மேல்.
அணிந்து - அலங்கரித்து.
`மேல் பூவால் அணிந்து` என்க.
பிழைக்கச் செய்தார் - அணிந்தவர்கள் தம் செயல் குற்றாமாகும்படி செய்தார்கள்.
`அன்னம் அன்னவரது இடை எவ்வாறு உள்ளது` என்பதை (அது பூவைச் சுமக்காது என்பதை) நாம் மட்டுமே அறிவோம்.
(அவர்கள் அறியார்கள்) இனி நாங்கள் அவர்களுக்குச் சொல்லலாமோ! (கூடாது) பூவை அணிந்ததற்குமேல் நெற்றியில் ஒரு பொட்டும் முன்பே மெலிகின்றவர் மேல் மேலும் சுமையை ஏற்றல் தக்கதன்று.
(தலைவன் இவ்வாறு கூறி, `இதற்கு மேல் தலையில் உள்ள மலர்களை நாடி வண்டுகள் வருகின்றனவே` எனக் கூறி, அவைகளை ஓட்டுவான் போலத் தலைவியை நெருங்கி அவளது மெய்யைத் தீண்டுவான்.
) அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்லா படாஅ பறை (குறள், 1115)
என்னும் திருக்குறள் இங்கு நினைவுகூரத் தக்கது.
``தளர்பவரை`` என்னும் இரண்டன் உருபை ஏழன் உருபாகத் திரிக்க.

பண் :

பாடல் எண் : 16

அன்றினர் புரங்கள் அழலிடை அவியக்
குன்றுவளைத் தெய்த குன்றாக் கொற்றத்து
நுண்பொடி அணிந்த எண்தோள் செல்வ
கயிலைநடந் தனைய உயர்நிலை நோன்தாள்
பிறைசெறிந் தன்ன இருகோட் டொருதிமில்

பால்நிறச் செங்கண் மால்விடைப் பாக
சிமையச் செங்கோட் டிமையச் செல்வன்
மணியெனப் பெற்ற அணியியல் அன்னம்
வெள்ளைச் சிறுநகைக் கிள்ளைப் பிள்ளை
குயிலெனப் பேசும் மயிலிளம் பேடை

கதிரொளி நீலங் கமலத்து மலர்ந்தன்ன
மதரரி நெடுங்கண் மானின் கன்று
வருமுலை தாங்குந் திருமார்பு வல்லி
வையம் ஏழும் பன்முறை ஈன்ற
ஐய திருவயிற் றம்மைப் பிராட்டி

மறப்பருஞ் செய்கை அறப்பெருஞ் செல்வி
எமையா ளுடைய உமையாள் நங்கை
கடவுட் கற்பின் மடவரல் கொழுந
பவள மால்வரைப் பனைக்கைபோந் தனைய
தழைசெவி எண்தோள் தலைவன் தந்தை

பூவலர் குடுமிச் சேவலம் பதாகை
மலைதுளை படுத்த கொலைகெழு கூர்வேல்
அமரர்த் தாங்குங் குமரன் தாதை
பொருதிடம் பொன்னி புண்ணியம் புரக்கும்
மருதிடங் கொண்ட மருத வாண
நின்னது குற்றம் உளதோ நின்னினைந்
தெண்ணருங் கோடி இடர்ப்பகை கடந்து
கண்ணுறு சீற்றத்துக் காலனை வதையா
இறப்பையும் பிறப்பையும் இகந்து சிறப்பொடு
தேவர் ஆவின் கன்றெனத் திரியாப்

பாவிகள் தமதே பாவம் யாதெனின்
முறியாப் புழுக்கல் முப்பழங் கலந்த
அறுசுவை யடிசில் அட்டினி திருப்பப்
புசியா தொருவன் பசியால் வருந்துதல்
அயினியின் குற்றம் அன்று வெயிலின்வைத்

தாற்றிய தெண்ணீர் நாற்றமிட் டிருப்ப
மடாஅ ஒருவன் விடாஅ வேட்கை
தெண்ணீர்க் குற்றம் அன்றுகண் ணகன்று
தேன்துளி சிதறிப் பூந்துணர் துறுமி
வாலுகங் கிடந்த சோலை கிடப்ப

வெள்ளிடை வெயிலிற் புள்ளிவெயர் பொடிப்ப
அடிபெயர்த் திடுவான் ஒருவன்
நெடிது வருந்துதல் நிழல்தீங் கன்றே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அன்றினர் - பகைத்தவர்.
நுண்பொடி, தோளுக்கு அடை, ``கயிலை நடந்தனைய`` என்பது முதலியன மால்விடைக்கு அடை ``கயிலை நடந்தனைய`` இல்பொருள் உவமை.
`நடந் தனையதாள்` என்க.
எனவே, `நடந்தாற் போலும் நடையை யுடைய தாள்` என்பதாம்.
தாள் - பாதம்.
நோன் - வலிய.
உயர்நிலை - ஓங்கி நிற்கும்தாள்.
கோடு - கொம்பு.
திமில் - முசுப்பு.
சிமையம் - சிகரம்.
``செங்கோடு`` என்பதில் செம்மை ஆகுபெயராய்ப் பொன்னைக் குறித்தது.
கோடு - சிகரம்.
மணி - மாணிக்கம்.
இமயச் செல்வன் பெற்ற அன்னம், உமாதேவி `கிள்ளைப் பிள்ளை, மயில் இளம்பேடை, மானின் கன்று, வல்லி` என்பனவும் அப்பெருமாட்டியையே குறித்தன.
``வல்லி`` என்பது தவிர ஏனைய உருவகங்கள்.
``குயில் எனப் பேசும்`` என்றாரேனும் பேசுமிடத்து எழும் குரலே அங்குக் கருதப்பட்டது.
`மொழியாற் கிள்ளை, சாயலால் மயில், கண்ணால் மான்கன்று` என்க.
இடையே ``குயில் எனப் பேசும்`` என உவமையணி வந்தது.
வருமுலை - வளர்கின்ற தனம்.
``தாங்கும்`` என்பது மார்பிற்கு அடை.
வல்லி - கொடி போன்றவர், உவம ஆகுபெயர்.
நீலம் - நீலப் பூ.
கமலம் - தாமரைப் பூ.
`நீலப் பூ தாமரைப் பூமேல் பூத்தது போலும்` என்பது இல்பொருள் உவமை.
அது முகத்தின்மேல் கண் விளங்குதலுக்கு உவமை, மதர் - களிப்பு.
அரி - செவ்வரிகள்.
ஐய - அழகிய.
பணைக் கை - பருத்த துதிக்கை.
`கையொடு` என உருபுவிரிக்க.
``பவள மால் வரை பணைக் கையோடு போந்தனைய`` - என்பது இல்பொருள் உவமை.
தலைவன்; கணபதி.
சிவபெருமானுக்கு உள்ளவை விநாயகருக்கும் இருத்தல் பற்றி, `எண்தோள் தலைவன்` என்றார்.
பதாகை - கொடி.
`கூர்வேற் குமரன்` என இயையும்.
`அமரரைத் தாங்கும்` என உருபுவிரிக்க.
தாங்குதல், அசுரரால் இன்னற்படா வண்ணம் காத்தல்.
``தாங்கும்`` என்றதை இறந்த காலத்தில் வந்த நிகழ்காலமாகக் கொள்ளலும் பொருந்தும்.
பொருதல்- மோதுதல்.
`கரையைப் பொருதிடும்` என்க.
பொன்னி - காவிரி நதி.
அது பல வளங்களையும் தருதலால் புண்ணியங்களைப் புரப்பதாயிற்று.
தேவர் ஆ - காமதேனு.
`அஃது எல்லார்க்கும் எல்லாம் வழங்குவதாகலின், அதன் கன்றிற்குக் கிடையாதது ஒன்று இல்லை` என்னும் பொருட்டு.
வதையா - வதைத்து.
முறியாப் புழுக்கல் - உடைபடாத அரிசியால் ஆக்கப்பட்ட சோறு.
அயினி - உணவு; அது சோற்றைக் குறித்தது.
விளாவிய நீர் காய்ச்சப்படாத நீரில் உள்ள குற்றத்தை உடைத்தாம் ஆகலின், அக்குற்றம் இன்மையைக் குறித்தற்கு, ``ஆற்றிய தெண்ணீர்`` என்றார்.
`நெருப்பில் வைத்துக் காய்ச்சினும் குற்றம்படும்` என்றற்கு.
``வெயிலின் வைத்து`` என்றார்.
நாற்றம் - நறுநாற்றம்.
மடுத்தல் - வாய்மடுத்தல்.
வேட்கை - தாகம்.
``விடாவேட்கை`` என்றாராயினும் `வேட்கை விடாமை` என்றலே கருத்து.
கண் அகன்று - இடம் பரந்து.
துணர் - கொத்து.
துறுமி - செறிந்து.
வாலுகம் - வெண்மணல்.
`நிழலிற் செல்லாமல் வருந்துதல்` என்க.
தீங்கு - குற்றம்.
`செல்வ! பாக! கொழுந! தலைவன் தந்தை! குமரன் தாதை! மருதவாண! (உலகில் சிலர் துயர் உறுதல்) நின்னது குற்றம் யாதுமில்லை; நின் நினைந்து காலனை வதைத்துச் சிறப்பொடு திரியாப் பாவம் பாவிகள்தமதே; அஃது எத்தன்மைத்து எனின், அடிசில் அட்டு இனிதிருப்ப ஒருவன் புசியராது வருந்துதல் அயினியின் குற்றம் அன்று; தெண்ணீர் இருப்ப, ஒருவன் மடாது வேட்கை விடாமை தெண்ணீர் குற்றம் அன்று; சோலை கிடப்ப, ஒருவன் நிழலிற் புகாது வெயிலில் வருந்துதல் நிழல் தீங்கன்று` என இயைத்து, `இவை போலும் தன்மைத்து` என முடிக்க.

பண் :

பாடல் எண் : 17

அன்றென்றும் ஆமென்றும் ஆறு சமயங்கள்
ஒன்றொன்றோ டொவ்வா துரைத்தாலும் என்றும்
ஒருதனையே நோக்குவார் உள்ளத் திருக்கும்
மருதனையே நோக்கி வரும்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``உரைத்தாலும்`` என்பதன்பின், `அவ்வுரைகள் அனைத்தும்` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க.
ஒரு தனையே- ஒருவனாகிய (தன்னோடு ஒப்பது பிறிதொன்று இல்லாதவனாகிய) தன்னையே, `உண்மையான மெய்ப்பொருள் திருவிடைமருதூர்ப் பெருமானேயாகையால், மெய்ப்பொருளை ஆயப் புகுந்த சமயங்கள் பலவும் தான் தான் அறிந்த அளவில் அம்மெய்ப்பொருளைப் பற்றிக் கூறும் கூற்றுக்கள் தம்முள் ஒவ்வாது இகலியிருப்பினும் அவை அனைத்தும் அப்பெருமானைப் பற்றிக் கூறும் கூற்றாகவே அமையும்` என்பதாம்.
இஃது யானையின் ஒவ்வோர் உறுப்பை மட்டும் கையால் தடவி முடித்து, `அவ்வவ்வுறுப்புக்களே யானை` எனக் கருதிக் கொண்டு யானையின் இயல்பைப் பற்றிக் குருடர்கள் தம்முள் இகலியுரைக்கும் உரைகள் யாவும் யானையின் இயல்பேயாதல் போல்வதாம்.
``அன்று`` என்றல், எதிர்ப் பக்கத்தவர் கூறும் உரையை உடன்படுவார் கூறுவது.
ஆறு சமயங்களாவன மெய்ப்பொருளை ஆயப்புகுந்த ஆறு சமயங்கள்.
அவை `உலகாயதம், பௌத்தம், சமணம், சாங்கியம், தருக்கம், ஏகான்ம வாதம்` என்பன.
உலகாயதம், ``உலகமே மெய்ப்பொருள்`` எனவும், சமணம், ``வினையே மெய்ப் பொருள்`` எனவும், ``சாங்கியம், உயிரே மெய்ப்பொருள்`` எனவும், தருக்கம், ``உயிரினும் சிறிதே உயர்ந்தது மெய்ப்பொருள்`` எனவும் கூறும்.
பிற சமயங்களின் மெய்ம்மைகள் எல்லாம் இவற்றுள்ளே அடங்குமாற்றையும், இவை அனைத்தும் சிவநெறிமெய்ம்மையுள் அடங்குதலையும் அறிந்து கொள்க.

பண் :

பாடல் எண் : 18

நோக்கிற்றுக் காமன் உடல்பொடி
யாக நுதிவிரலால்
தாக்கிற் றரக்கன் தலைகீழ்ப்
படத்தன் சுடர்வடிவாள்
ஓக்கிற்றுத் தக்கன் தலையுருண்
டோடச் சலந்தரனைப்
போக்கிற் றுயர்பொன்னி சூழ்மரு
தாளுடைப் புண்ணியமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நோக்கிற்று, தாக்கின்று`` முதலிய நான்கும் நோக்கியது, தாக்கியது முதலிய பொருளவாய், அவ்வத் தொழிலைக் குறித்தன.
அவற்றிற்கெல்லாம் வினை முதல் இறுதிக்கண் உள்ள ``புண்ணியன்`` என்பது.
`புண்ணியம்` என்பது பாடமாயின் அதுவும் உபசார வழக்கால் புண்ணியனையே குறித்து நிற்கும்.
அரக்கன், இராவணன், ஓக்கிற்று - உயர எடுத்தது.
மருது - மருதூர்.
நுதி - நுனி.
நுதி விரல் - விரல் நுதி; இலக்கணப் போலி மொழி.
`உயிர் போக்குதல்` என்பது `அழித்தல்` என்னும் பொருட்டாய் நிற்றலின் அது, ``சலந்தரனை`` என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று.

பண் :

பாடல் எண் : 19

புண்ணிய புராதன புதுப்பூங் கொன்றைக்
கண்ணி வேய்ந்த ஆயிலை நாயக
காள கண்ட கந்தனைப் பயந்த
வாளரி நெடுங்கண் மலையாள் கொழுந
பூத நாத பொருவிடைப் பாக

வேத கீத விண்ணோர் தலைவ
முத்தி நாயக மூவா முதல்வ
பத்தியாகிப் பணைத்தமெய் யன்பொடு
நொச்சி யாயினுங் கரந்தை யாயினும்
பச்சிலை இட்டுப் பரவுந் தொண்டர்

கருவிடைப் புகாமற் காத்தருள் புரியும்
திருவிடை மருத திரிபு ராந்தக
மலர்தலை உலகத்துப் பலபல மாக்கள்
மக்களை மனைவியை ஒக்கலை ஒரீஇ
மனையும் பிறவும் துறந்து நினைவரும்

காடும் மலையும் புக்குக் கோடையில்
கைம்மேல் நிமிர்த்துக் காலொன்று முடக்கி
ஐவகை நெருப்பின் அழுவத்து நின்று
மாரி நாளிலும் வார்பனி நாளிலும்
நீரிடை மூழ்கி நெடிது கிடந்தும்

சடையைப் புனைந்துந் தலையைப் பறித்தும்
உடையைத் துறந்தும் உண்ணா துழன்றும்
காயுங் கிழங்குங் காற்றுதிர் சருகும்
வாயுவும் நீரும் வந்தன அருந்தியுங்
களரிலுங் கல்லிலுங் கண்படை கொண்டும்
தளர்வுறும் யாக்கையைத் தளர்வித்
தாங்கவர்
அம்மை முத்தி அடைவதற் காகத்
தம்மைத் தாமே சாலவும் ஒறுப்பர்
ஈங்கிவை செய்யாது யாங்கள் எல்லாம்

பழுதின் றுயர்ந்த எழுநிலை மாடத்துஞ்
செழுந்தா துதிர்ந்த நந்தன வனத்துந்
தென்றல் இயங்கும் முன்றில் அகத்துந்
தண்டாச் சித்திர மண்டப மருங்கிலும்
பூவிரி தரங்க வாரிக் கரையிலும்

மயிற்பெடை ஆலக் குயிற்றிய குன்றிலும்
வேண்டுழி வேண்டுழி ஆண்டாண் டிட்ட
மருப்பின் இயன்ற வாளரி சுமந்த
விருப்புறு கட்டில் மீமிசைப் படுத்த
ஐவகை அமளி அணைமேல் பொங்கத்

தண்மலர் கமழும் வெண்மடி விரித்துப்
பட்டின்உட் பெய்த பதநுண் பஞ்சின்
நெட்டணை யருகாக் கொட்டைகள் பரப்பிப்
பாயல் மீமிசைப் பரிபுரம் மிழற்றச்
சாயல் அன்னத்தின் தளர்நடை பயிற்றிப்
பொற்றோ ரணத்தைச் சுற்றிய துகிலென
அம்மென் குறங்கின் நொம்மென் கலிங்கம்
கண்ணும் மனமுங் கவற்றப் பண்வர
இரங்குமணி மேகலை மருங்கில் கிடப்ப
ஆடர வல்குல் அரும்பெறல் நுசுப்பு
வாட வீங்கிய வனமுலை கதிர்ப்ப
அணியியல் கமுகை அலங்கரித் ததுபோல்
மணியியல் ஆரங் கதிர்விரித் தொளிர்தர
மணிவளை தாங்கும் அணிகெழு மென்தோள்
வரித்த சாந்தின்மிசை விரித்துமீ திட்ட
உத்தரீ யப்பட் டொருபால் ஒளிர்தர
வள்ளை வாட்டிய ஒள்ளிரு காதொடு
பவளத் தருகாத் தரளம் நிரைத்தாங்
கொழுகி நீண்ட குமிழொன்று பதித்துக்
காலன் வேலும் காம பாணமும்

ஆல காலமும் அனைத்தும்இட் டமைத்த
இரண்டு நாட்டமும் புரண்டுகடை மிளிர்தர
மதியென மாசறு வதனம் விளங்கப்
புதுவிரை அலங்கல் குழன்மிசைப் பொலியும்
அஞ்சொல் மடந்தையர் ஆகந் தோய்ந்துஞ்

சின்னம் பரப்பிய பொன்னின் கலத்தில்
அறுசுவை அடிசில் வறிதினி தருந்தா
தாடினர்க் கென்றும் பாடினர்க் கென்றும்
வாடினர்க் கென்றும் வரையாது கொடுத்தும்
பூசுவன பூசியும் புனைவன புனைந்தும்

தூசின் நல்லன தொடையிற் சேர்த்தியும்
ஐந்து புலன்களும் ஆர ஆர்ந்தும்
மைந்தரும் ஒக்கலும் மனமகிழ்ந் தோங்கி
இவ்வகை இருந்தோம் ஆயினும் அவ்வகை
மந்திர எழுத்தைந்தும் வாயிடை மறவாது

சிந்தை நின்வழி செலுத்தலின் அந்த
முத்தியும் இழந்திலம் முதல்வ அத்திறம்
நின்னது பெருமை அன்றோ என்னெனின்
வல்லான் ஒருவன் கைம்முயன்று எறியினும்
மாட்டா ஒருவன் வாளா எறியினும்

நிலத்தின் வழாஅக் கல்லேபோல்
நலத்தின் வழார்நின் நாமம்நவின் றோரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி -76.
``முதல்வ`` என்பதை, ``திரிபுராந்தக`` என்பதன் பின்னர்க் கூட்டி.
`முதல்வன் - முழுமுதற் கடவுள்` என்க.
அடி-4 வாட்கண் அரிக்கண்` எனத் தனித் தனி இயைக்க.
வாட்கண் - வாள்போலும் கண்.
அரி - செவ்வரி.
அடி-7 மூவா - கெடாத, இடையே கெடும் முதல்வரின் நீக்குதற்கு மூவர் முதல்வ`` என்றார்.
ஐந்தெழுத்து ஓதலை அடி-8.
பணைத்த - பெருத்த.
அறியாமை பற்றி அம்மக்களை ``மாக்கள்`` என்றார்.
கை மேல் நிமிர்த்தல், இருகைகளையும் வானத்தை நோக்க நீட்டுதல்.
கால் ஒன்றுமுடக்குதலாவது, ஒரு கால் அடியை எடுத்து மற்றொரு காலின் துடை மேல் ஊன்றுதல்.
ஐவகை நெருப்பு - பஞ்சாக்கினி.
அவை நான்கு திசையிலும் மூட்டப்பட்ட நான்கு தீக்களோடு நடுவண் தீயாகக் கருதிக் கொள்ளப்படும் பகலவன்.
அழுவம் - பள்ளம்; குண்டம்.
வார் பனி - ஒழுகுகின்ற பனி, கண் படை- துயிலுதல்.
தளர்வுறும் யாக்கையைத் தளர்வித்து - தானே மெலிவதாகிய உடம்பைத் தாங்கள் வலிதின் மெலிவித்து.
அம்மை - மறுமை.
தம்மை ஒறுத்தலாவது, உடலை வாட்டும் முகத்தால் - உயிரை வருத்துதல்.
தாது - மகரந்தம்.
முன்றில் - இல்முன்.
தண்டா - நீங்காத.
ஆல - ஆடும்படி.
குயிற்றிய - செய்யப்பட்ட.
குயிற்றிய குன்று - செய்குன்று; கட்டு மலை, மருப்பு - யானைத் தந்தம்.
வாள் அரி - கொடிய சிங்கம்.
படுத்த.
இடப்பட்ட.
அமளி - படுக்கை.
அணை - மெத்தை.
ஐ வகை அமளி அணை - பஞ்ச சயனம்.
அவை மயிலின் மெல்லிறகு அன்னத்தின் மெல்லிறகு; இலவம் பஞ்சு, செம்பஞ்சு, வெண்பஞ்சு - இவை அடைக்கப்பட்ட மெத்தை.
`அணைமேல் விரித்து` என இயையும்.
`மலர் போலக் கமழும்` என்க.
மடி - துணி.
பட்டு - பட்டால் ஆகிய உறை.
பதப் பஞ்சு - கொட்டி எடுத்துப் பதம் ஆக்கிய பஞ்சு.
நுண் பஞ்சு, இலவம் பஞ்சு.
`பஞ்சின் கொட்டைகள்` என்க.
நெட்டணை - பஞ்ச சயனங்களைத் தாங்குகின்ற நீண்ட மெத்தை.
கொட்டைகள் - தலையணைகள்.
பாயல் - படுக்கை.
`இவ்வாறான பாயல்` என்க.
`பாயல் மீமிசைத் தோய்ந்து` என இயையும்.
பரிபுரம் - காலில் அணிந்த சிலம்பு.
அன்னத்தின் நடையைத் தாம் பயிற்றி என்க.
பயிற்றுதல் - நிகழ்வித்தல்.
தோரணம், இடைக்கு உவமை, அம் - அழகு.
மெல் - மெல்லிய.
குறங்கு - துடை.
``ஒம்`` என்பது மெல்லென ஒலிக்கும் ஒலிக் குறிப்பு.
`குறங்கின்கண் ஒண் என்னும் கலிங்கம்` என்க.
கலிங்கம் - உடை.
கவற்ற - ஏக்கறும்படி செய்ய.
பண் வர இரங்கும் - பல பண்களும் தோன்ற ஒலிக்கின்ற.
நடை வேறுபாட்டால் மேகலையின் ஒலி வேறுபடுவனவாம்.
மருங்கு - இடை; அரும் பெறல் நுசுப்பு - அரிதில் காணப்பெறும் இடை` `அல்குலின் மேலதாகிய நுசுப்பு` என்க.
வனம் - அழகு.
கதிர்ப்ப - அழகு விளங்க.
ஆரம் - கழுத்துச் சரம், வளை, இங்குத் தோள் வளை.
தோள் வரித்த சாந்து.
தோள்களை அலங்கரித்த சந்தனம்.
உத்தரியம் - மேலாடை.
வள்ளை - வள்ளைத் தண்டு; நீரிற் கிடப்பது.
இது காதிற்கு உவமையாகும்.
`வள்ளையை வாட்டிய` என்க.
வாட்டிய - தோற்கச் செய்த.
உருவக வகையால் பவளம் இதழையும், தரளம் (முத்து) பற்களையும், குமிழ் மூக்கினையும் குறித்தன.
குமிழ் - குமிழம் பூ.
நாட்டம் - கண்.
அவை காமத்தை மிகுவிக்கும் முகத்தால் ஆடவரது உயிரைப் போக்குவன போறல் பற்றிக் காலனது (கூற்றுவனது) வேல் முதலிய மூன்றும் ஒருங்கமைந்தனவாகக் கூறப்பட்டன.
மிளிர்தல் - சிவத்தல்.
அம் சொல் - அழகிய சொல்.
ஆகம் - மார்பு.
சின்னம் - ஓவியம்.
வறிது - சிறிது.
அருந்தா - அருந்தி.
சிறிதே அருந்துதல் பசியின்மையைால்.
வாடினர் - வறியவர்.
வரையாது கொடுத்தல் - `இன்னார், இனியார்` என்று வேற்றுமை பாராது எல்லார்க்கும் வழங்குதல்.
தூசு - நல் ஆடை.
`அவற்றுள்ளும் நல்லன` என்க.
தொடை - மாலை.
`தொடையின்கீழ்` எனவும்.
`மைந்தரொடும், ஒக்கலோடும்` எனவும் உருபுகள் விரிக்க.
ஆர - நிரம்ப.
ஆர்ந்து - நுகர்ந்து.
ஒக்கல் - சுற்றம்.
``இவ்வகை யிருந்தேமாயினும்`` என்பது நியமம் ஆகாமை விளங்கும்.
அந்த முத்தி - மேல் தம்மைத் தாமே ஒறுப்பவர் விரும்பியதாகக் கூறப்பட்ட முத்தி.
இனி, `முத்திகளில் எல்லாம் முடிவான பரமுத்தி` என்றலும் ஆம்.
``வாயிடை`` என்பதன் பின், `வைத்தலை` என ஒரு சொல் வருவிக்க.
``வல்லான் ஒருவன்.
.
.
கல்லே போல்`` என்பதை ``அந்த முத்தியும் இழந்திலம்`` என்பதற்கு முன்னே கூட்டுக.
அடி-29 ``யாங்கள் இவ்வகை யிருந்தேமாயினும் அந்த முத்தியும் இழந்திலம்`` என்றதனால், `தம்மைத் தாமே ஒறுப்பவர் அவ்வாறு ஒறுப்பினும் அந்த முத்தியைப் பெறுகிலர்` என்பது பெறப்பட்டது.
பல வகையிலும் உடலை வருத்தி நோற்றல் மன ஒருக்கத்தின் பொருட்டேயாம்.
அவ்வாற்றால் மனம் ஒருங்குதலின் பயன், மந்திர எழுத்து ஐந்தும் வாயிடை மறவாது சிந்தை சிவன்வழிச் செலுத்தலே யாகலின் தம்மைத் தாமே ஒறுத்தும் அது செய்யாதார் அந்த முத்தியை அடைவாரல்லர்` எனவும், `முன்னைப் புண்ணிய மிகுதியால் இம்மையில் மனம் ஒருங்கப் பெற்றோர் உடல் வருந்த நோலாதே, மாறாக, ஐந்து புலன்களும் ஆர ஆர்ந்தும் அந்த முத்தியையும் இழவாது பெறுவர்` எனவும் `எவ்வாற்றானும் சிவனை நினைதலே முத்தி சாதனம்` என்பதும், `எனவே, எதனைச் செய்யினும் அச்சா தனத்தைப் பெறாதார் முத்தியாகிய பயனைப் பெறுமாறு இல்லை` என்பதும் உணர்த்தியவாறு.
அப்பர்.
இக்கருத்தை, ``கங்கை யாடில் என், காவிரி யாடில் என்`` 1 என்பது முதலாக எடுத்துக் கூறி, ``எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே`` என நியமித்து அருளிச் செய்தார்.
அதனால் அவர் அங்குக் கங்கை ஆடுதல் முதலியவற்றையும், இங்கு இவ்வாசிரியர், ``மக்களை, மனைவியை, ஒக்கலை ஒரீஇக் காடும், மலையும் புகுந்து கடுந்தவம் புரிதலையும் இகழ்ந்தார் என்னற்க.
மற்று, எவ்வாற்றானும் சிவனை நினைத்தலே சாதனம் ஆதலையே வலியுறுத்தினர் என்க.
அவைதிகருள் சமணரும் வைதிகரும் மீமாஞ்சகரும் இங்குக் கூறியவாறு, `தம்மைத் தாம் ஒறுப்பதே முத்தி சாதனம்` என்பர்.
அது பற்றியே இங்கு வைதிகர் புரியும் தவங்களாகக் கூறிவந்தன பலவற்றுக்கு இடையே அடி-20, 21 தலையைப் பறித்தல், உடையைத் துறத்தல், உண்ணாது உழலல், கல்லில் கண் படைகொள்ளல் ஆகிய சமணர் தவங்களையும் கூறினார்.
கல் ஒன்றை வல்லான் ஒருவன் கைம் முயன்று எரிதல், மக்களை, மனைவியை, ஒக்கலை ஒருவுதல் முதலியவற்றைச் செய்வோர் ஐந்தெழுத்தை ஓதுதற்கும், மாட்டா ஒருவன் வாளா எறிதல், அவற்றைச் செய்யமட்டாது ஐம்புலன்களை ஆர நுகர்வார் ஐந்தெழுத்தை ஓதுதற்கும் உவமைகள்.
`கல்லின் இயல்பு, யாவர் உயர எறியினும் தப்பாது நிலத்தில் வீழ்தல் ஆதல் போல, ஐந்தெழுத்தின் இயல்பு, யாவர் ஓதினும் முத்தியிற் சேர்த்தல்` என்பது இவ்வுவமை களால் விளக்கப்பட்டது.
இதனை, சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று (குறள்.,307)
என்னும் குறளிற் போந்த உவமையோடு வைத்துக் காண்க.
அடி-77: அத்திறம் - ஐம்புலன்களையும் ஆர நுகர்ந்தும் அந்த முத்தியையும் யாம் இழாவது பெறுதலாகிய கூறுபாடு.
என் எனின் - எங்ஙனம் எனின் `நின் நாமம் நவின்றோர் நலத்தின் வழார் ஆகலின்` என முடிக்க.
`ஆகலின்` என்பது சொல்லெச்சம் எனவே, ``வழார்`` என்றது, `வழாதவாறு` நீ அருளுகின்றாய்` என்றதாம்.
`சிவனை நினையாது பிறவற்றையெல்லாம் செய்வோர் அச்செயலுக்கு உரிய பயன்களைப் பெறுதலோடு ஒழிவதல்லது, பிறவி நீங்குதலாகிய முத்தியைப் பெறார்` என்பது கருத்து.
இதனை, பரசிவன் உணர்ச்சி யின்றிப்
பல்லுயிர்த் தொகையும் என்றும்
விரவிய துயர்க் கீ றெய்தி
வீடுபே றடைது மென்றல்
உருவமில் விசும்பின் தோலை
உரித்துடுப் பதற்கொப்பென்றே
பெருமறை பேசிற் றென்னில்
பின்னும்ஓர் சான்றும் உண்டோ
எனக் கந்த புராணத்திலும்
மானுடன் விசும்பைத் தோல்போற்
சுருட்டுதல் வல்ல னாயின்
ஈனமில் சிவனைக் காணாது
இடும்பைதீர் வீடும் எய்தும்;
மானமார் சுருதி கூறும்
வழக்கிவை ஆத லாலே
ஆனமர் இறையைக் காணும்
உபாயமே யறிதல் வேண்டும்
எனக் காஞ்சிப் புராணத்திலும் 2 கூறப்பட்ட உபநிடதப் பொருள் பற்றி யறிக.

பண் :

பாடல் எண் : 20

நாமம் நவிற்றாய்மனனே நாரியர்கள் தோள்தோய்ந்து
காமம் நவிற்றிக் கழிந்தொழியல் ஆமோ
பொருதவனத் தானையுரி போர்த்தருளும் எங்கள்
மருதவனத் தானை வளைந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நாமம் நவிற்றாய்`` என்பதற்கு முன் `அவன்` என்பது வருவித்து, அத்தொடரை இறுதிக்கண் கூட்டுக.
நவிற்றாய் - சொல்லு.
``காமம்`` என்பது அதன்வழி நிகழ்வதாகிய கலவியைக் குறித்தது.
``தோய்ந்து நவிற்றி`` என்பது, `ஓடி வந்து` என்பதுபோல செய்யும் செயலை வகுத்துக் கூறியதாம்.
பொருத - போர் செய்த.
வனத்து ஆனை - காட்டு யானை.
வளைந்து - வலம் வந்து.

பண் :

பாடல் எண் : 21

வளையார் பசியின் வருந்தார்
பிணியின்மதன னம்புக்
கிளையார் தனங்கண் டிரங்கிநில்
லாரிப் பிறப்பினில்வந்
தளையார் நரகினுக் கென்கட
வார்பொன் னலர்ந்தகொன்றைத்
தளையார் இடைமரு தன்னடி
யார்அடி சார்ந்தவரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பொன் அலர்ந்த`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
பொன் அலர்ந்த - பொன்போல மலர்ந்த.
தளை - தளைக்கப்பட்டது; மாலை.
வளைதல் - வலிமையிழத்தல்.
`பசியின் வளையார்; பிணியின் வருந்தார்` என மாற்றிக் கொள்க.
தனம் - மகளிர் கொங்கை.
இரங்குதல் - ஆற்றாது வருந்தல், ``பொழுதுகண்டிரங்கல்``1 என்றது காண்க.
அளைதல் - உலகியலில் ஈடுபடுதல்.
என் கடவார் - என்ன கடமையுடையாராவர்! `யாதொரு கடமையும் உடையவர் ஆகார்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 22

அடிசார்ந் தவர்க்கு முடியா இன்பம்
நிறையக் கொடுப்பினுங் குறையாச் செல்வம்
மூலமும் நடுவும் முடிவும் இகந்து
காலம் மூன்றையும் கடந்த கடவுள்
உளக்கணுக் கல்லா ஊன்கணுக் கொளித்துத்

துளக்கற நிமிர்ந்த சோதித் தனிச்சுடர்
எறுப்புத் துளையின் இருசெவிக் கெட்டாது
உறுப்பில் நின் றெழுதரும் உள்ளத் தோசை
வைத்த நாவின் வழிமறுத் தகத்தே
தித்தித் தூறும் தெய்வத் தேறல்

துண்டத் துளையில் பண்டைவழி யன்றி
அறிவில் நாறும் நறிய நாற்றம்
ஏனைய தன்மையும் எய்தா தெவற்றையும்
தானே ஆகி நின்ற தத்துவ
தோற்றுவ எல்லாம் தன்னிடைத் தோற்றித்
தோற்றம் பிறிதில் தோற்றாச் சுடர்முளை
விரிசடை மீமிசை வெண்மதி கிடப்பினும்
இருள்விரி கண்டத் தேக நாயக
சுருதியும் இருவரும் தொடர்ந்துநின் றலமர
மருதிடம் கொண்ட மருதமா ணிக்க

உமையாள் கொழுந ஒருமூன் றாகிய
இமையா நாட்டத் தென்தனி நாயக
அடியேன் உறுகுறை முனியாது கேண்மதி
நின்னடி பணியாக் கல்மனக் கயவரொடு
நெடுநாட் பழகிய கொடுவினை ஈர்ப்பக்

கருப்பா சயமெனும் இருட்சிறை அறையில்
குடரெனும் சங்கிலி பூண்டுதொடர்ப்பட்டுக்
கூட்டுச் சிறைப்புழுவின் ஈட்டுமலத் தழுந்தி
உடனே வருந்தி நெடுநாட் கிடந்து
பல்பிணிப் பெயர்பெற் றல்லற் படுத்துந்

தண்ட லாளர் மிண்டவந் தலைப்ப
உதர நெருப்பில் பதைபதை பதைத்தும்
வாதமத் திகையின் மோதமொத் துண்டும்
கிடத்தல் நிற்றல் நடத்தல் செல்லா
திடங்குறை வாயிலின் முடங்கி இருந்துழிப்

பாவப் பகுதியில் இட்டுக் காவல்
கொடியோர் ஐவரை ஏவி நெடிய
ஆசைத் தளையில் என்னையும் உடலையும்
பாசப் படுத்திப் பையென விட்டபின்
யானும் போந்து தீதினுக் குழன்றும்

பெரியோர்ப் பிழைத்தும் பிறர்பொருள் வௌவியும்
பரியா தொழிந்து பல்லுயிர் செகுத்தும்
வேற்றோர் மனைவியர் தோற்றம் புகழ்ந்தும்
பொய்பல கூறியும் புல்லினம் புல்லியும்
ஐவருங் கடுப்ப அவாயது கூட்டி
ஈண்டின கொண்டு மீண்டு வந்துழி
இட்டுழி இடாது பட்டுழிப் படாஅது
இந்நாள் இடுக்கண் எய்திப் பன்னாள்
வாடுபு கிடப்பேன் வீடுநெறி காணேன்
நின்னை அடைந்த அடியார் அடியார்க்

கென்னையும் அடிமையாகக் கொண்டே
இட்டபச் சிலைகொண் டொட்டிநன் கறிவித்
திச்சிறை பிழைப்பித் தினிச்சிறை புகாமல்
காத்தருள் செய்ய வேண்டும்
தீத்திரண் டன்ன செஞ்சடை யோனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`செல்வம், சுடர், ஓசை, தேறல், நாற்றம், முளை` - என்பன உருவக வகையால் திருவிடைமருதூர் இறைவனையே குறித்தனவாய், விளியேற்று நின்றன.
``கொடுப்பினும் குறையாச் செல்வம், (திருவருள்) ஊன் கண்ணுக்கு ஒளித்து, உளக்கண்ணுக்கு விளங்கித் துளக்கற நிமிர்ந்த சுடர்.
இரு செவிக்கு எட்டாது உள்ளத்திற்குக் கேட்கும் ஓசை, நாவில்தித்தியாது மனத்தில் தித்திக்கும் தேறல், (தேன்) மூக்கிற்கு மணக்காமல் அறிவிற்கு மணக்கும் நாற்றம், அனைத்தும் தன்னினின்றும் முளைத்தலன்றித் தான் ஒன்றினின்றும் முளையாத முளை ஆகியவை அதிசய உருவகங்கள்.
அதிசய உருவகம் புறனடையாற் கொள்ளப்படும்.
1 மூலம் - முதல்.
``காலம் மூன்றையும் கடந்த கடவுள்`` என்றதனால், கால வயப்பட்டுத் தோன்றி நின்று மறையும் கடவுளரும் இருத்தல் பெறப்பட்டது.
``கடவுள்`` என்பதும் விளியே.
இகந்து - இகத்தலால்.
துளக்கற நிமிர்ந்த - அசை வில்லாது.
ஓங்கி எரிகின்ற.
`என்பு`, எற்பு` என்ற ஆய பொழுது அஃது எதுகை நோக்கி, `எருப்பு` என ஓர் உகரமும், பகர ஒற்றும் விரியப் பெற்றது.
`அங்கம்` என்னும் வடசொல்லின் மொழி பெயர்ப்பாக, உடம்பு இங்கு ``உறுப்பு`` எனப்பட்டது.
உயிரினுள்ளே எழுகின்ற ஓசையை ஒற்றுமை பற்றி உடம்பினின்றும் எழுவதாகக் கூறினார்.
உள்ளத்து ஓசை, மனத்தால் உணரப்படும் ஓசை.
வைத்த - `சுவைக்கு` என்று வைக்கப்பட்ட.
தெய்வத் தேறல் - தெய்வத்தன்மையுடைய தேன்.
துண்டம் - மூக்கு.
`வழியிலன்றி` என உருபு விரிக்க.
நறிய நாற்றம் - நறுமணம்.
ஏனைய தன்மை - ஏனைய பொருள்களின் தன்மை.
அவை மேற்கூறிய செல்வம் முதலியனபோல உள்ள பொருள்களின் தன்மை.
எய்தாது - அடையாமல்.
அடையாவிடினும் எல்லாப் பொருள்களும் தானேயாகி நின்ற.
தத்துவன் - மெய்ப் பொருளாய் உள்ளவன்.
இறைவன் சார்பு இல்லையாயின் யாதொரு பொருளும் நிலைக்கமாட்டாது.
அஃது அகர உயிர் இன்றேல் அக்கரங்கள் இல்லையாமாறு 1 போலும் அதனால் எப்பொருளும் நிலைபெறுதற் பொருட்டு அவற்றில் அவையே தானாகிக் கலந்து நிற்கின்றான்.
அங்ஙனம் அவன் கலந்து நிற்பினும் யாதொரு பொருளாலும் தாக்கப் படாமையால், ``ஏனைய தன்மையும் எய்தாது எவையும் தானேயாகி நின்ற தத்துவன்`` என்றார்.
``தானே`` என்பது வேறு முடிபு கொள்ளுதலால் இடவழுவின்று.
உம்மை இறந்தது தழுவிய எச்சம்.
தத்துவ - தத்துவனே.
``ஏனைய தன்மையும்.
.
.
.
தத்துவ`` என்பதைப் பின் வரும் ``முளை`` என்பதன் பின்னர்க் கூட்டி யுரைக்க.
இனி, `அவ்வாறு ஓதுதலே பாடம்` என்றலும் ஆம்.
தோற்றுவஎல்லாம் - தோன்றற் பாலன எல்லாவற்றையும் தோற்றி - தோற்றுவித்து.
``முளை`` என்பதற்கு `முளையாய் உள்ளவனே` என்பதே பொருளாகலானும், அங்ஙனமாகும் பொழுது `முளை` என்பது படர்க்கையேயாகலானும், `நின்னிடைத் தோற்றி` என்னாது ``தன்னிடைத் தோற்றி`` என்றார்.
``தோற்றம் தோற்றா`` என்பது ``உண்ணலும் உண்ணேன்`` 2 என்பது போல நின்றது.
சுடர் - விளங்குகின்ற.
`வெண்மதி இருக்கவும் இருள் விரிதல் வியப்பு என்றபடி, இருவர் மாலும், அயனும்.
இது தொகைக் குறிப்பு.
மாணிக்க - மாணிக்கனே! மாணிக்கம் போல்பவனே, ஈற்றடியை, ``தனி நாயக`` என்பதன்பின் கூட்டுக.
உறு குறை - உன்பால் இரக்கின்ற குறை, மதி, முன்னிலை யசை.
இருட் சிறை - இருளுக்கு இருப்பிடம்.
தொடர்ப்பட்டு - கட்டுப்பட்டு.
கூடு, தாயது வயிறாகிய கூடு.
கூட்டுச் சிறை உருவக உருவகம்.
`சிறைக்கண் புழுவினுடனே அழுந்தி வருந்தி` என இயைக்க.
`புழுவினுடனே` என்றதனால், அங்குப் புழுக்கள் மலிந்திருத்தல் பெறப்பட்டது.
பிணிப் பெயர், `வயிற்று வலி, தலைவலி, முடக்கு வாதம்` முதலிய பெயர்கள்.
`அப்பெயர்களால் வந்துவருத்தும் தண்டனாளர்` என்க.
தண்டனாளர், தலைவன் விதித்த தண்டனையைச் செய்பவர்கள்.
``தண்டனாளர்`` என்பதும் உருவகம்.
மிண்டி - நெருங்கி, அலைப்ப - துன்புறு விக்க.
உதரம் - தாயது வயிறு `பதை பதைத்தல்` என்னும் இரட்டைக் கிளவி செய்யுள் நோக்கி மிக்குவிரிந்தது.
வாதம் - பிரசூத வாயு; குழந்தையைத் தாய் வயிற்றினின்றும் வெளியேற்றும் காற்று.
மத்திகை - குதிரையை அடித்து ஓட்டும் சவுக்கு.
இதுவும் உருவகம்.
இனி இவ்வாறு வருவன பிறவும் அவை.
`அது மோத` என்க.
கிடத்தல் முதலியவற்றிற்குப் போதிய இடம் இல்லாத இல்லம்; தாய் வயிறு.
`இடம் குறைய வாய்ந்த இல்` என்க.
துன்பத்திற்குக் காரணமாதல் பற்றிய பாவத்தையே கூறினாராயினும் புண்ணியமும் உடன் கொள்ளப்படும்.
`கருவிற்றானே பாவ புண்ணியங்களாகிய பிராரத்தங்கள் அமைக்கப்படுகின்றன` என்றபடி.
காவல் ஐவர் - திருவருளிற் செல்ல ஒட்டாமல் காத்து நிற்கின்ற ஐவர்; ஐம்புலன்கள்.
தளை - விலங்கு.
பாசப்படுத்தல் - தடைப்படுத்தல்.
பையென - மெல்ல.
`தாய் வயிற்றினின்றும் வெளியில் விட்டபின்` என்க.
தீன் - தின்னப்படுவது.
உண்ணப்படுவதனையும் இழிவு பற்றித் தின்னப் படுவனவாகக் கூறினார்.
`தீதினுக்கு` என்பது பாடம் அன்று.
`பெரியோரைப் பிழைத்தல்` என இரண்டாவது விரித்து.
அதனை நான்காவதாகத் திரிக்க.
பிழைத்தல் - தவறு இழைத்தல்.
பரியாது - இரங்காமல்.
தோற்றம் - அழகு.
புகழ்தல், விரும்புதலாகிய தன் காரணம் தோற்றி நின்றது.
புல்லினம் -புல்லர் கூட்டம்.
புல்லர் - அற்பர்.
புல்லுதல் - தழுவுதல் கடுத்தல் - சினத்தல்.
அஃது சினந்து ஏவுதலாகிய காரியத்தைக் குறித்தது.
அவாயது - விரும்பியது.
இது சாதியொருமை.
`அவாவது` என்பது பாடம் அன்று.
ஈண்டின - கிடைத்தவை, மீண்டு வருதல் உறைவிடத்திற்கு.
உறைவிடம் ஒன்றால் இல்லாமல் பல ஊரும், பல நாடுமாக அலைதலால், இன்று வைத்த இடத்தில் நாளை வையாமல், இன்று இருந்த இடத்தில் நாளை இல்லாமல் ஊர் பெயர்ந்தும், நாடு பெயர்ந்தும் உழன்று, `இந்நாள் வரை` என ஒரு சொல் வருவிக்க.
வீடு நெறி - இத்துன்பம் நீங்கும் வழி.
ஒட்டி - துணையாய் நின்று.
நன்கு - நல்லது, `நன்கை அறிவித்து` என்க.
இச்சிறை - இவ்வுடம்பாகிய சிறை.
பிழைப்பித்து - தப்புவித்து, இனி இதுபோலும் சிறையில் புகாமல் காத்து அருள்செய்ய வேண்டும்` என்க.

பண் :

பாடல் எண் : 23

சடைமேல் ஒருத்தி சமைந்திருப்ப மேனிப்
புடைமேல் ஒருத்தி பொலிய இடையேபோய்ச்
சங்கே கலையே மருதற்குத் தான்கொடுப்ப
தெங்கே இருக்க இவள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, கைக்கிளைத் தலைவியது முதுக்குறை வுடைமையைத் தோழி முன்னிலைப் புறமொழியால் அவளைப் பழிப்பாள் போன்று புகழ்ந்து கூறியது.
சமைந்து - அமைந்து.
புடை - பாகம், ``இவள்`` என்பதை, ``பொழிய`` என்பதன்பின் கூட்டுக.
``சங்கே, கலையே`` என்னும் ஏகாரங்கள் எண்ணுப் பொருள.
சங்கு - சங்க வளையல், கலை - உடை.
``எங்கே இருக்க`` என, `இடம் இல்லாதவனைக் காதலிக்கின் றாள்` என இகழ்வாள்போலக் கூறினாளாயினும், `எவ்விடமும் அவன் இடமேயாதலை அறிந்தே காதலிக்கின்றாள்` என உள்ளுறையாகப் புகழ்ந்தாள் என்க.

பண் :

பாடல் எண் : 24

இருக்கும் மருதினுக் குள்ளிமை
யோர்களும் நான்மறையும்
நெருக்கும் நெருக்கத்தும் நீளகத்
துச்சென்று மீளவொட்டாத்
திருக்கும் அறுத்தைவர் தீமையுந்
தீர்த்துச்செவ் வேமனத்தை
ஒருக்கும் ஒருக்கத்தின் உள்ளே
முளைக்கின்ற ஒண்சுடரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி ``மருதினுக்குள் இருக்கும்`` என்பதை இறுதியில் வைத்து உரைக்க.
`ஓட்டாது` என்னும் எதிர்மறை வினையெச்சம் துவ்வீறு கெட்டு நின்றது.
நெருக்கம் நெருக்கத்திலும் தளராது நீளச் சென்று கருவறையை அடைந்து காண் கின்றவர்கள் அன்பர்கள்.
`அவர்களை இன்புறுத்தும் வகையால் மீண்டு போக ஒட்டாது ஒண்சுடர் வீற்றிருக்கும்` என்க.
திருக்கு - நன்மைக்கு மாறான குணம்.
செவ்வே - நேராக.
ஒருக்குதல் - ஒருமுகம் ஆக்கல்.
ஒருக்கம் - ஒருங்கிய நிலை.
முளைக்கின்ற - வெளித் தோன்றுகின்ற.

பண் :

பாடல் எண் : 25

சுடர்விடு சூலப் படையினை என்றும்
விடையுகந் தேறிய விமல என்றும்
உண்ணா நஞ்சம் உண்டனை என்றும்
கண்ணாற் காமனைக் காய்ந்தனை என்றும்
திரிபுரம் எரித்த சேவக என்றும்
கரியுரி போர்த்த கடவுள் என்றும்
உரகம் பூண்ட உரவோய் என்றும்
சிரகரம் செந்தழல் ஏந்தினை என்றும்
வலந்தரு காலனை வதைத்தனை என்றும்
சலந்தரன் உடலம் தடிந்தனை என்றும்

அயன்சிரம் ஒருநாள் அரிந்தனை என்றும்
வியந்தவாள் அரக்கனை மிதித்தனை என்றும்
தக்கன் வேள்வி தகர்த்தனை என்றும்
உக்கிரப் புலியுரி உடுத்தனை என்றும்
ஏனமும் அன்னமும் எட்டா தலமர

வானம் கீழ்ப்பட வளர்ந்தனை என்றும்
செழுநீர் ஞாலஞ் செகுத்துயிர் உண்ணும்
அழல்விழிக் குறளினை அமுக்கினை என்றும்
இனையன இனையன எண்ணிலி கோடி
நினைவருங் கீர்த்தி நின்வயின் புகழ்தல்

துளக்குறு சிந்தையேன் சொல்லள வாதலின்
அளப்பரும் பெருமைநின் அளவ தாயினும்
என்தன் வாயில் புன்மொழி கொண்டு
நின்னை நோக்குவன் ஆதலின் என்னை
இடுக்கண் களையா அல்லல் படுத்தா

தெழுநிலை மாடத்துச் செழுமுகில் உறங்க
அடித்துத் தட்டி எழுப்புவ போல
நுண்துகில் பதாகை கொண்டுகொண் டுகைப்பத்
துயிலின் நீங்கிப் பயிலும் வீதித்
திருமரு தமர்ந்த தெய்வச் செழுஞ்சுடர்
அருள்சுரந் தளிக்கும் அற்புதக் கூத்த
கல்லால் எறிந்த பொல்லாப் புத்தன்
நின்நினைந் தெறிந்த அதனால்
அன்னவன் தனக்கும் அருள்பிழைத் தின்றே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``எழுநிலை மாடத்து.
.
.
திருமரு தமர்ந்த தெய்வச் செழுஞ்சுடர் - அருள்சுரந்து அளிக்கும் அற்புதக் கூத்த`` என்பதை முதற்கண் கொண்டு உரைக்க.
ஒருவரைப் புகழுமிடத்து அவர் செய்த அருஞ்செயல்களைக் கூறிப் புகழினும் அச்செயல்களை அவர்க்கு அடையாக்கியும் வினைப் பெயராக்கி அவரை விளித்தும் புகழினும் அமைதல் பற்றி இங்கு மருதப் பிரானை அவ்வெல்லாவகையாலும் தாம் புகழ்தலைப் புலப்படுத்தினார்.
உண்ணா நஞ்சம் - ஒருவரும் உண்ணலாகாத நஞ்சம்.
சேவகம் - வீரம்.
உரகம் - பாம்பு.
உரவோய் - ஆற்றல் உடையவனே.
சிரம் ஏந்திய கரம் வேறாயினும் சாதி பற்றி ``சிரகரம் தழல் ஏந்தினை`` என்றார்.
வலம் - வெற்றி.
தரு - தனக்குத் தானே தந்துகொள்கின்ற.
வியந்த - தன்னைத் தான் வியந்து கொண்ட அரக்கன், இராவணன்.
உக்கிரம் - சினம்.
குறளன் - பூதமாகிய முயலகன்.
`நின்வயிற் சொல்லி` என ஒரு சொல் வருவிக்க.
சொல் அளவு - சொல் செல்லக் கூடிய அளவு.
`சொல்லளவே` எனப் பிரிநிலை ஏகாரம் விரிக்க.
`நின் பெருமை அளப்பரும் அளவதா யினும்` என மாற்றிவைத்து உரைக்க.
`ஆயினும் இயன்ற அளவு கொண்டு நின்னை நோக்குவன்` என்க.
நோக்குதல் மனத்தால்.
``கொண்டு`` என்பது ஆன் உருபின் பொருள்படுவதோர் இடைச் சொல்.
`என்னை அல்லற்படுத்தாது இடுக்கண்களையாய்` என மாற்றியுரைத்து, அதன்பின் `ஏன் எனில்` என்பது வருவித்து, `அவன் றனக்கும் நின் அருள் பிழைத்தின்றே` என முடிக்க.
`நின்` என்பதின்றி வாளா `அருள்` என்பது பாடம் அன்று.
``உறங்க`` என்பதன்பின் `அம்மாடம்` என்பது வருவிக்க.
உகைத்தல் - பெயர்த்தல்.
``சுடர்`` என்பதும் விளி.
பொல்லாமை, சிவவேடம் புனையாது புத்த வேடத்தோடேயிருந்தமை.

பண் :

பாடல் எண் : 26

இன்றிருந்து நாளை இறக்கும் தொழிலுடைய
புன்தலை மாக்கள் புகழ்வரோ வென்றிமழு
வாளுடையான் தெய்வ மருதுடையான் நாயேனை
ஆளுடையான் செம்பொன் அடி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`இன்று இருந்து, நாளை இறத்தல்` என்பது பொதுப்பட நிலையாமையைக் குறித்தது.
அஃது அனைவர்க்கும் பொதுவாயினும் அதற்கிடையே நிலையாய பயனைத் தேடிக் கொள்பவர் வல்லுநராய் உயர்த்துக் கூறப்படுவர்.
அப்பயனைத் தேடிக் கொள்ளாமல் இன்று இருந்து நாளை இறத்தலை மட்டுமே உடையோர் மக்களாக மதிக்கப்படார் ஆதலின் அவர்களை, ``புன்தலைய மாக்கள்`` என்றார்.
உடம்பின் புன்மையை அதன் முதன்மை உறுப்பாகிய தலைமேல் வைத்துக் கூறினார்.
அனைவர் உடம்பும் புன்மை யுடையவேயாயினும் அவ்வுடம்பு பயனுடைய உடம்பாக மாறும் பொழுது அதன் புன்மையும் மாறிவிடுகின்றது.
`பயனை எய்தாது, இருந்து இறத்தலை மட்டுமே செய்பவர்` என்பது தோன்ற, ``இன்று இருந்து நாளை இறக்கும் தொழில் உடையர்`` என்றார்.
பெயர்த்தும் செத்துப்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே
என அப்பரும் அருளிச் செய்தார்.
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது
என்னும் திருக்குறளும் இங்கு நினைக்கத்தக்கது.
வாள் - படைக்கலம்.
`மாக்கள் ஆளுடையான் அடி புகழ்வாரே` என இயைத்து முடிக்க.
`ஆளுடையான் அடி புகழ்வாரே உண்மை மக்களாவார்; அது செய்யா தார் மக்களே போல் தோன்றும் 3 மாக்களே` என்பதை இங்ஙனம் கூறினார்.

பண் :

பாடல் எண் : 27

அடியா யிரந்தொழில் ஆயின
ஆயிரம் ஆயிரம்பேர்
முடியா யிரங்கண்கள் மூவா
யிரம்முற்றும் நீறணிந்த
தொடியா யிரங்கொண்ட தோளிரண்
டாயிரம் என்றுநெஞ்சே
படியாய் இராப்பகல் தென்மரு
தாளியைப் பற்றிக்கொண்டே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நெஞ்சே! மருதாளியைப் பற்றிக் கொண்டு, (அவனுக்கு) - அடி ஆயிரம், தொழிலாயின ஆயிரம், பேர் ஆயிரம் முடி ஆயிரம், கண்கள் மூவாயிரம், தோள் (வலம் ஆயிரம், இடம் ஆயிரம் ஆக) இரண்டாயிரம் - என்றும் இராப் பகல் படியாய்` என இயைத்துரைக்க.
படித்தல் - சொல்லுதல்; `இங்ஙனம் சொல்லின், அது தோத்திரமாகிப் பயன் தரும்` என்பது கருத்து.
`ஆயிரம்` என்பது பன்மை குறித்து நின்றதாகலின் ``தோள் இரண்டாயிரம்`` என்றது இழுக்கிற்றில்லை அப்பர்பெருமானும் பின்பு,
ஆயிர ஞாயிறு போலும்
ஆயிரம் நீண்முடி யானும்
எனக் கூறுகின்றவர் அதற்கு முன்னே
ஆயிரம் பொன்வரை போலும்
ஆயிரந் தோளுடை யானும்
என அருளிச் செய்தமை காண்க.
`நீறு அணிந்த தோள், தொடி கொண்ட தோள்` எனத் தனித் தனி இயைக்க.
தொடி - வீர வளை.
இதனை,
வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்
களம் படக் கடந்த கழல்தொடித் தடக்கை
என்பதனால் அறிக.

பண் :

பாடல் எண் : 28

கொண்டலின் இருண்ட கண்டத் தெண்தோள்
செவ்வான் உருவிற் பையர வார்த்துச்
சிறுபிறை கிடந்த நெறிதரு புன்சடை
மூவா முதல்வ முக்கட் செல்வ
தேவ தேவ திருவிடை மருத
மாசறு சிறப்பின் வானவர் ஆடும்
பூசத் தீர்த்தம் புரக்கும் பொன்னி
அயிரா வணத்துறை ஆடும் அப்ப
கயிலாய வாண கௌரி நாயக
நின்னருள் சுரந்து பொன்னடி பணிந்து

பெரும்பதம் பிழையா வரம்பல பெற்றோர்
இமையா நெடுங்கண் உமையாள் நங்கையும்
மழைக்கவுட் கடத்துப் புழைக்கைப் பிள்ளையும்
அமரர்த் தாங்கும் குமர வேளும்
சுரிசங் கேந்திய திருநெடு மாலும்

வான்முறை படைத்த நான்முகத் தொருவனும்
தாருகற் செற்ற வீரக் கன்னியும்
நாவின் கிழத்தியும் பூவின் மடந்தையும்
பீடுயர் தோற்றத்துக் கோடிஉருத் திரரும்
ஆனாப் பெருந்திறல் வானோர் தலைவனும்

செயிர்தீர் நாற்கோட் டயிரா வதமும்
வாம்பரி அருக்கர் தாம்பன் னிருவரும்
சந்திரன் ஒருவனும் செந்தீக் கடவுளும்
நிருதியும் இயமனும் சுருதிகள் நான்கும்
வருணனும் வாயுவும் இருநிதிக் கிழவனும்

எட்டு நாகமும் அட்ட வசுக்களும்
மூன்று கோடி ஆன்ற முனிவரும்
வசிட்டனும் கபிலனும் அகத்தியன் தானும்
தும்புரு நாரதர் என்றிரு திறத்தரும்
வித்தகப் பாடல் முத்திறத் தடியரும்

திருந்திய அன்பின் பெருந்துறைப் பிள்ளையும்
அத்தகு செல்வம் அவமதித் தருளிய
சித்த மார்சிவ வாக்கிய தேவரும்
(1) வெள்ளை நீறு மெய்யிற் கண்டு
கள்ளன் கையிற் கட்டவிழ்ப் பித்தும்
(2) ஓடும் பல்நரி ஊளைகேட் டரனைப்
பாடின என்று படாம்பல அளித்தும்
(3) குவளைப் புனலில் தவளை அரற்ற
ஈசன் தன்னை ஏத்தின என்று
காசும் பொன்னுங் கலந்து தூவியும்

(4) வழிபடும் ஒருவன் மஞ்சனத் தியற்றிய
செழுவிதை எள்ளைத் தின்னக் கண்டு
பிடித்தலும் அவன்இப் பிறப்புக் கென்ன
இடித்துக் கொண்டவன் எச்சிலை நுகர்ந்தும்
(5) மருத வட்டத் தொருதனிக் கிடந்த

தலையைக் கண்டு தலையுற வணங்கி
உம்மைப் போல எம்இத் தலையும்
கிடத்தல் வேண்டுமென் றடுத்தடுத் திரந்தும்
(6)கோயில் முற்றத்து மீமிசைக் கிடப்ப
வாய்த்த தென்றுநாய்க் கட்டம் எடுத்தும்

(7) காம்பவிழ்த் துதிர்ந்த கனியுருக் கண்டு
வேம்புகட் கெல்லாம் விதானம் அமைத்தும்
(8)விரும்பின கொடுக்கை பரம்பரற் கென்று
புரிகுழல் தேவியைப் பரிவுடன் கொடுத்த
பெரிய அன்பின் வரகுண தேவரும்

இனைய தன்மையர் எண்ணிறந் தோரே
அனையவர் நிற்க யானும் ஒருவன்
பத்தி என்பதோர் பாடும் இன்றிச்
சுத்த னாயினும் தோன்றாக் கடையேன்
நின்னை
இறைஞ்சிலன் ஆயினும் ஏத்திலன் ஆயினும்
வருந்திலன் ஆயினும் வாழ்த்திலன் ஆயினும்
கருதி யிருப்பன் கண்டாய் பெரும
நின்னுல கனைத்தினும் நன்மை தீமை
ஆனவை நின்செய லாதலின்

நானே அமையும் நலமில் வழிக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கண்டத்திலும், தோளிலும், உருவிலும் அரவு ஆர்த்து` ஆர்த்து - ஆர்க்க (கட்ட)ப்பட்டு.
இவ் எச்சம் எண்ணுப் பொருளில் வந்தது.
நெறி தரல் - நெறிப்புக் காட்டுதல்.
மூவா - அழியாத.
பூசத் தீர்த்தம் - தைப் பூச நாளில் மூழ்கும் தீர்த்தம்.
இஃது இத்தலத்தின் சிறப்பு.
ஈசன் எம்பெரு மான்இடை மருதினில்
பூசம்நாம் புகுதும்புன லாடவே
என அப்பரும் அருளிச் செய்தார்.
புரக்கும் - தன்னிடத்தில் வைத்துக் காக்கின்ற `பொன்னி` என்க.
`பொன்னியது துறை` என ஆறாவது விரிக்க.
`அயிராவணத் துறை` என்பது பெயர்.
அயிராவணம், கயிலை யில் உள்ள யானை.
அஃது இரண்டாயிரம் தந்தங்களை உடையது.
இடைமருதீசர் இத்துறையில் ஆடுவது மேற் குறித்த பூச நாளில்.
``பெரும`` என்பதை, ``கௌரி நாயக`` என்பதன் பின் கூட்டுக.
சுரந்து- சுரத்தலால்.
பதம் - பதவி `வரம் பல பெற்றோர் அடி - இனைய தனமையராகிய எண்ணிலர்` என இயையும் கவுள் - கன்னம்; காது `கண்` என்பது பாடம் அன்று.
கடம் - மத நீர்.
புழைக் கை - தும்பிக்கை.
சுரி சங்கு - வளைந்த சங்கு.
`வானத்தை முறையாகச் சிருட்டித்த` என்க.
தாருகனைச் செற்ற வீரக் கன்னி காளி.
வானோர் தலைவன் - இந்திரன்.
அருக்கர் - சூரியர்.
இடையில் ஐராவதம், சூரியர், சந்திரன், சுருதி இவர் ஒழிய, இந்திரன் முதல் இருநிதிக் கிழவன் (குபேரன்) ஈறாகச் சொல்லப்பட்ட எழுவரும் திக்குப் பாலகர்கள், ஈசானன் உருத்திரர் வகையைச் சேர்ந்தவன் ஆதலின், மேல், ``கோடி உருத்திரர்`` எனப்பட்டோருள் அடங்கினான்.
முனிவர், மகலோக வாசிகள்.
வசிட்டன் முதலிய மூவரும் மண்ணுலக முனிவர்கள், தும்புரு, நாரதன் இருவரும் சிவபெருமான் அருகிலிருந்து வீணையிசைக்கும் பேறு பெற்றவர்.
``தும்புரு நாரதர்`` என்பது உம்மைத் தொகை.
`உமையவள் முதலாக, தும்புரு நாரதர் ஈறாகச் சொல்லப்பட்டோர் யாவரும் அடைந்த பெருமைகள் யாவும் சிவபெருமானை வழிபட்டுப் பெற்றனவே என்றபடி.
இவ்வாற்றால், `சிவபெருமான் அனைவராலும் வழிபடப்படுபவனே யன்றித் தான் ஒருவரையும் வழிபடுதல் இல்லாதவன்` என்பதும் இனிது விளக்கப்பட்டது.
இவை அனைத்தும் ஆகமப் பிரமாணத்தால் பெறப்பட்டன.
இனி நாட்டு வரலாறாகிய காட்சிப் பிரமாணத்தால் பெறப்பட்டோரையும் கூறுகின்றார்.
``வித்தகப் பாடல்`` என்றது தேவாரத் திருப்பதிகங்களை.
வித்தகம் - திறல்.
அது கல்லை மிதப்பித்தலும், எலும்பைப் பெண்ணாக்குதலும், முதலையுண்ட பாலனை மீட்டலும் போன்றன.
பிள்ளை - ஞான புத்திரன்.
சிவபெருமானே குருவாகிவந்து உப தேசிக்கப் பெற்றவர்.
இங்ஙனம் ஓரொரு சொல்லாலே சமயாசாரியர் களது வரலாறுகளைச் சுருங்கக் கூறினார்.
``அத்தகு`` என்பது பண்டறி சுட்டு.
அத்தகு செல்வம் - உலகர் பலரும் விரும்பும் பொருட் செல்வம்.
அதனை அவமதித்தமை கூறவே, அருட் செல்வத்தை மதித்தமை பெறப்பட்டது.
சிவ வாக்கியர் பதினெண் சித்தருள் தலையாயவராகச் சொல்லப்படுபவர்.
இவருக்குப்பின் இங்குச் சொல்லப்படுகின்ற வரகுணதேவர் பண்டை வரகுண பாண்டியன்.
இவனே மேல் ``பெருந் துறைப் பிள்ளை`` - எனக் குறிக்கப்பட்ட மாணிக்கவாசகரைத் தனக்கு அமைச்சராகக் கொண்டிருந்தவன்.
இவனும், மாணிக்க வாசகரும் காலத்தால் மூவர் முதலிகளுக்கு முற்பட்டவராயினும், திருமுறைகள் வகுக்கப்பட்ட காலத்திலும் திருப்பதிகங்களையே முதற்கண் கண்டெடுத்து வகுத்துப் பின்பு ஒரு சமயத்தில் பிற திருமுறைகள் வகுக்கப்பட்டமையால் மாணிக்கவாசகர் மூவருக்குப் பின் நான்காமவராக எண்ணப்பட்டு வரும் முறை பற்றி இவர்களை மூவருக்குப் பின்னர்க் கூறினார்.
அங்ஙனம் கூறுகின்றவர் வரகுணன் அரசன் ஆகலின் சித்தராகிய சிவவாக்கியரை அவனுக்கு முன் வைத்துக் கூறினார்.
`இவ்வரகுணன் பத்திப் பெருக்கால் பித்துக் கொண்டவர் செயல்போலச் சிலவற்றைச் செய்தான்` என்பது செவி வழிச் செய்தி.
இவனது பத்தி மிகுதி விளங்குதற் பொருட்டு அச்செய்தி களை இவ்வாசிரியர் தம் பாடலிற் பொறித்தார் அவை வருமாறு: (1) உண்மையாகவே களவு செய்த ஒருவனைக் காவலர் கண்டு பிடித்துக் கையில் விலங்கு பூட்டிக் கொணர்ந்த பொழுது அரசனது பத்தியை அறிந்து அவன் வழியில் இருந்த ஒரு சுடுகாட்டில் கீழே விழுந்து புரண்டு உடம்பெங்கும் சாம்பலைப் பூசிக்கொண்டவனாய்ச் சிரித்து `அரஹர` என்று சொல்லிச் செல்ல அதனைக் கண்டு இவ்வரசன், ``இவ் அடியவரைக் `கள்வன்` என்றல் தகாது`` என்று சொல்லி விடுவித்துவிட்டான்.
(2) எப்பொழுதும், `சம்போ, சங்கர, மகாதேவ` என்று சொல்கின்ற இவன் காதில் ஒரு நாள் நள்ளிரவில் காட்டில் குறுநரிகள் ஊளையிட்ட சத்தம் கேட்க.
`சம்பு` என்றும், `சம்புகம்` என்றும் பெயர் பெற்ற அவைகள் சம்புவைப் பாடித் தோத்திரிக்கின்றன - எனக் கருதி, அவைகள் பனியின் குளிரால் வருந்தாதபடி ஏவலரை ஏவிப் போர்வைகள் போர்க்கக் கட்டளையிட்டான்.
(3) ஒரு சமயம் பெருமழை பெய்து ஒய்ந்தபின் தவளைகள் பல ஒருங்கே கத்த, அந்த ஓசையை அவை `அரஹர, அரஹர!` எனச் சிவபெருமானைத் துதிப்பதாகக் கருதி அவைகளுக்குப் பரிசாக இரத்தினங்களையும், பொன்னையும் நீர் நிலைகளில் சென்று இறைக்கும்படி ஏவலர்களைக் கொண்டு செய்வித்தான்.
(4) ஒரு சமயம் சிவாலயத்தில் உள்ள சிவபெருமானது திருமஞ்சனத்திற்கு வேண்டிய எண்ணெயின் பொருட்டு அர்ச்சகன் ஒருவனிடம் செக்கில் இடும்படி அரசனது பண்ட சாலையிலிருந்து கொடுத்தனுப்பிய எள்ளில் அவ்வர்ச்சகன் சிறிது எடுத்துத் தின்னு வதைக் கண்டு சிலர் அவனைப் பிடித்துக் கொண்டுபோய் இவ்வரச னுக்குக் காட்ட, இவன் அவனை விசாரித்த பொழுது அவன், `திரு மஞ்சன எண்ணெய்க்கு வைத்த எள்ளைத் தின்றவர் அடுத்த பிறப்பில் திருமஞ்சன எண்ணெய் ஆட்டும் செக்கினை இழுக்கும் எருதுகளாகப் பிறப்பர்` என்பது சாத்திரம்.
அப்பிறப்பை நான் அடைய விரும்பி இந்த எள்ளைத் தின்றேன் - என்று சொல்ல, இவன், `நானும் அப்பிறப்பை அடைய வேண்டும்` என்று சொல்லி அவன் வாயிலிருந்து சிறிது எள்ளை எடுத்துத் தின்றான்.
(5) திருவிடைமருதூர் வீதியில் கிடந்த ஒரு தலையோட்டினை இவன் கண்டு, `இஃது இங்ஙனம் இங்குக் கிடத்தலால் இத்தலையைப் பெற்றிருந்தவர் சிவலோகத்தை அடைந்திருத்தல் திண்ணம் என்று கருதி, அத்தலையோட்டினிடம் சென்று, ``எனது தலையோடும் இவ்வாறு கிடக்க அருள்செய்வீர்` எனக் குறையிரந்தான்.
(6) சிவாலயத்தின் முன் ஓரிடத்தில் நாயின் மலம் இருக்கக் கண்டு அதனைத் தானே சென்று எடுத்து அப்புறப்படுத்தி ஆலயத்தைத் தூய்மை செய்தான்.
(7) வேப்ப மரம் ஒன்றின்கீழ் அதன் கனிகள் உதிர்ந்து கிடக்க அவை சிவலிங்கம் போலக் காணப்படுதலைக் கண்டு, `இனி வேப்பமரங்களில் எதுவும் வெயிலில் உலர்தலும், மழையில் நனை தலும் கூடா` என்று அவைகட்கெல்லாம் நல்ல பந்தல்கள் இடச் செய்தான்.
(8) திருவிடைமருதூரில் இவன் மணந்துகொண்ட பெண்ணை அவள் அழகு மிகுந்திருத்தலை நோக்கி, `இவள் மருத வாணருக்கு ஆகட்டும்` என்று சொல்லி இரவிலே திருவிடை மருதூர்க் கோயிலிலே கொண்டு போய் விட்டான்.
பெருமான் அவளைச் சிவலிங்கத்தில் மறையும்படிச் செய்து, அவன் செயலை ஊரார் அறிதற் பொருட்டு அவளது வலக்கை மட்டும்.
இலிங்கத்தில் வெளியில் காண வைத்தான்.
அதனால் இச்செய்தி ஊரெங்கும் பரவ இவன் கோயிலில் சென்று, இக் கை நான் பற்றிய கை` என்று ஏற்கவில்லையோ என்றான்.
அதனால் பெருமான் அக்கையையும் மறைத்துவிட்டான்.
இச்செவிவழிச் செய்திகள் பழைய திருவிளையாடற் புராணத்து, `வரகுணனுக்குச் சிவலோகம் காட்டிய திருவிளையாடல்` கூறுமிடத்தில் சிறிது வேறுபாடுகளுடன் கூறப்பட்டன.
இப்பாண்டிய னது வரலாறு இத்திருவிடை மருதூர்த் தலத்தோடு தொடர்புடையதாய் இருத்தலால் ஆசிரியர் இவற்றையெல்லாம் இங்கு எடுத்தோதினார்.
`இவற்றால் எல்லாம் அறியப்படுவது வரகுண பாண்டியன் பெரிய சிவபத்தன்` என்பது என்பார்.
`பெரிய அன்பின் வரகுண தேவர்` என்றார்.
இம்மன்னனை இவனது பத்தியைக் கருத்துட் கொண்டு மாணிக்கவாசகர் தமது திருக் கோவையாரில் குறித்திருக்கின்றார்.
திருமுறைகளை வகுத்தமைத்த நம்பியாண்டார் நம்பிகளும் தமது கோயில் திருப்பண்ணியர் திருவிருத்தத்துள் குறித்தார்.
மிகப் பிற்காலத்தில் கல்வெட்டுக்களில் `வரகுணன்` என்னும் பெயருடைய இருவர் பாண்டியர் குறிக்கப்பட்டுள்ளனர்.
அவருள் எவனையும் இப்பெரிய அன்பின் வரகுண தேவராகத் துணிதற்குச் சிறிதும் ஆதாரம் இல்லை.
ஆயினும் இக்கால ஆராய்ச்சியாளருள் ஒரு சிலர்.
பெயர் ஒன்றே பற்றி, `அவ் இருவருள் ஒருவனே இப் பெரிய அன்பின் வரகுண தேவர்` எனக் கூறுகின்றார்கள்.
அங்ஙனம் கூறு வோருள் ஒரு சாரார்.
`முதல் வரகுணனே இங்குக் குறிக்கப்பட்டான்` என்றும், மற்றொருசாரார், `இரண்டாம் வரகுணனே இங்குக் குறிக்கப் பட்டான்` என்றும் கூறித் தம்முள் மாறுபடுவர்.
அம்மாறுபாடுதானே, `அவ்இருவருள் எந்த ஒருவனையும், இங்குக் குறிக்கப்பட்ட வரகுண தேவர்` எனத் துணிதற்கு ஆதாரம் இன்மையைக் காட்டுவதாகும்.
`அனையவர் ஒருபால் நிற்க` என்க.
பாடு - பெருமை, ``ஓர் பாடும் இன்றி`` என்பதை, `பாடு ஒன்றும் இன்றி` என மாற்றிக் கொள்க.
ஒன்று - சிறிது.
இன்றி - இன்மையல்ல.
சுத்தன் - பரிசுத்தன்.
ஆணவமலம் நீங்கப் பெற்றவன்.
இன்னும் - அநாதி தொட்டு இன்றுகாறும்.
`இன்றும் சுத்தனாய்த் தோன்றாத கடையேனாய் உள்ளேன்` என்க.
தோன்றாத - பிறவாத, ``சுத்தனாய்த் தோன்றாத`` எனவே, அசுத்தனாய்த் தோன்றினமை பெறப்பட்டது.
படவே, `அவர் போலப் பெரும் பதம் பிழைய வரம் பெறல் கூடாதவனா கின்றேன்` என்பதாம்.
இவ்வாற்றால் யான் நின்னை இறைஞ்சுதல் முதலிய வற்றைச் செய்யேனாயினும் அவற்றைச் செய்ய விரும்பும் அளவில் உள்ளேன் என்க.
கண்டாய், முன்னிலை யசை.
உலகனைத்தும் அவனுடையன என்பது கூறுவார் ``நின் உலகனைத்தும்` என்றா ராயினும்.
`உலகனைத்தும்` என வாளா கூறிப் போதலே கருத்து.
``நன்மை தீமை`` என்னும் பண்புகள் அவற்றையுடைய பொருள்மேல் நின்றன.
``ஆனவை`` என்பது எழுவாய் உருபு.
``ஆனவை`` என்றாராயினும்.
`ஆனவை உறவாதல்` என்றலே கருத்து.
`நற்பொருளோடு தீப் பொருளையும் உண்டாக்குதல் உனது கருத்தாகின்ற நிலைமையில் தீமைக்கு இடம் நான் ஒருவனே போதும் (பிறரோ, பிறிதோ வேண்டா) என முடிக்க.
என்னை வகுத்திலையேல் இடும்பைக் கிடம்
யாது சொல்லே
என அப்பரும் அருளிச் செய்தார்.
எனது இயல்பு இதுவாயினும்.
கருதியிருத்தல் ஒன்றே பற்றி எனக்கும் அருள்புரிதல் வேண்டும் என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

வழிபிழைத்து நாமெல்லாம் வந்தவா செய்து
பழிபிழைத்த பாவங்கள் எல்லாம் பொழில்சூழ்
மருதிடத்தான் என்றொருகால் வாய்கூப்ப வேண்டா
கருதிடத்தாம் நில்லா கரந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நாமெல்லாம்`` என்பதை முதலிற் கொள்க.
வழி - நல்வழி.
பிழைத்து - தவறி.
வந்தவா - தாமாக எதிர்வந்த செயல்களை.
செய்து - நன்று தீது ஆராயாமலே செய்து, `பழியாகப் பிழைத்த` என்க.
பிழைத்த - தவறாக ஒழுகிய.
மருது - திருவிடை மருதூர்.
``கருதிடத் தான்`` என்பதில் தான் அசை.
கரந்து - மறைந்து.
`மறைந்து அருவ மாயும் நில்லாது போம்` என்க.

பண் :

பாடல் எண் : 30

கரத்தினில் மாலவன் கண்கொண்டு
நின்கழல் போற்றநல்ல
வரத்தினை ஈயும் மருதவப்
பாமதி ஒன்றுமில்லேன்
சிரத்தினு மாயென்றன் சிந்தையு
ளாகிவெண் காடனென்னும்
தரத்தினு மாயது நின்னடி
யாந்தெய்வத் தாமரையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மாலவன் கண்கரத்தினில் கொண்டு` என்க.
`கண்ணைப் பறித்தெடுத்து` என்றபடி.
`மதி ஒன்றும் இல்லேனது` என ஆறாவது விரிக்க.
ஒன்றும் - சிறிதும்.
தாம் - மேன்மை; என்றது புகழை.
`மருத அப்பா, நின் அடியாம் தாமரை சிரத்தினும் ஆய், சிந்தை யுளாகித் தரத்தினும் ஆயது` என இயைத்து முடிக்க.
`இது நின் கருணை இருந்தவாறு` என்பது குறிப்பெச்சம்.
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை முற்றிற்று.

பண் :

பாடல் எண் : 1

மெய்த்தொண்டர் செல்லும் நெறியறி
யேன்மிக நற்பணிசெய்
கைத்தொண்டர் தம்மிலும் நற்றொண்
டுவந்திலன் உண்பதற்கே
பொய்த்தொண்டு பேசிப் புறம்புற
மேயுன்னைப் போற்றுகின்ற
இத்தொண்ட னேன்பணி கொள்ளுதி
யோகச்சி ஏகம்பனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மெய்த்தொண்டர், பயன் கருதாது பணி செய்பவர்.
அவர் செல்லும் நெறி, ``தன்கடன் அடியேனையும் தாங்குதல்;- என்கடன் பணி செய்து கிடப்பதே`` 1 - எனக் கொண்டு ஒழுகுதல்.
`மனத் தொண்டு, வாய்த் தொண்டு, கைத்தொண்டு ஆதலின் அது செய்பவரை, ``மிக நற்பணி செய் கைத்தொண்டர் என்றும் `பயன் கருதியாவது அவருடன் கூடி அப்பணியைச் செய்திலேன்`` என்றும் கூறினார்.
உவத்தல் - மகிழ்தல், அது மகிழ்ச்சியோடு செய்தலாகிய தன் காரியம் தோன்ற நின்றது.
உண்பதற்கு - பயன்கொள்ளுதற் பொருட்டு.
பயன் கொள்ளுதற் பொருட்டுத் திருத்தொண்டினை உயர்த்துப் பேசுதலால், அதனைப் பொய்த் தொண்டு பேசுதலாகக் கூறினார்.
மனத்தின்கண் உள்ள பொய்ம்மை அதன் வழிச் செய்யப்படும் தொண்டினையும் சார்வதாகும்.
``புறம் புறம்`` என்னும் அடுக்குப் பன்மைப் பொருட்டாய், `எப்பொழுதும்` எனப் பொருள் தந்தது.
புறமே போற்றுதலாவது மெய்த் தொண்டிற்கு ஏதுவான மெய்யன்பு உள்ளத்தில் இன்றிப் பொதுவான அன்பினால் போற்றுதல்.
`இவ்வாறு உன்னைப் போற்றினும் யானும் உன் அடியவருள் ஒருவனே` என்பார் தம்மை, ``இத்தொண்டனேன்`` என்றும், `மெய்த்தொண்டர் செய்யும் பணியையன்றி, என்போன்ற தொண்டர் செய்யும் பணியை நீ விரும்புவாயோ` என்பார், ``இத்தொண்டனேன் பணி கொள்ளுதியோ`` என்றும் கூறினார்.
``கச்சி ஏகம்பனே`` என்பதை முதலிற் கொள்க.

பண் :

பாடல் எண் : 2

ஏகம்ப னேயென்னை ஆள்பவ
னேயிமை யோர்க்கிரங்கி
போகம்பன் னாளும் கொடுக்கின்ற நாயக
பொங்கும்ஐவாய்
நாகம்பொன் னாரம் எனப்பொலி
வுற்றுநல் நீறணியும்
ஆகம்பொன் மாமலை ஒப்பவ
னேயென்பன் ஆதரித்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஆகம் - திருமேனி.
ஆதரித்து - விரும்பி, ஏனைய வெளி.

பண் :

பாடல் எண் : 3

தரித்தேன் மனத்துன் திகழ்திரு
நாமம் தடம்பொழில்வாய்
வரித்தேன் முரல்கச்சி ஏகம்ப
னேயென்றன் வல்வினையை
அரித்தேன் உனைப்பணி யாதவர்
ஏழைமை கண்டவரைச்
சிரித்தேன் உனக்கடி யாரடி
பூணத் தெளிந்தனனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தரித்தேன் - தாங்கினேன்.
`உன்திருநாமம் மனத்துத் தரித்தேன்` என்க.
வரித்தேன் - இசைபாடும் `தேன்` என்னும் வண்டுகள்.
`தரித்தேன்; அதனால் என் வல்வினையை அரித்தேன்` என உரைக்க.
ஏழைமை - அறியாமை.
சிரித்தேன் - இகழ்ந்தேன்.

பண் :

பாடல் எண் : 4

தெளிதரு கின்றது சென்றென்
மனம்நின் திருவடிவம்
அளிதரு நின்னருட் கையம்
இனியில்லை அந்திச்செக்கர்
ஒளிதரு மேனியெம் ஏகம்ப
னேயென் றுகந்தவர்தாள்
தளிதரு தூளியென் றன்தலை
மேல்வைத்த தன்மைபெற்றே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அந்திச் செக்கர்.
.
.
தன்மை பெற்று என் மனம் நின் திருவடிவில் சென்று தெளிதருகின்றது; இனி நின் அளிதரு அருட்கு ஐயம் இல்லை` என இயைத்து முடிக்க.
``தெளிதருகின்றது`` என்பதன் பின், `அதனால்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க.
அளிதரல் - கனிதல்.
``தெளிதரு, அளிதரு`` என்பவற்றில் `தரு` துணைவினை.
அருட்கு - அருள் கிடைத்தற்கு.
`திருவடிவம்` என்பது பாடமாயின், `திருவடிவத்தின் கண்` என ஏழாவது விரித்துக் கொள்க.

பண் :

பாடல் எண் : 5

பெற்றுகந் தேனென்றும் அர்ச்சனை
செய்யப் பெருகுநின்சீர்
கற்றுகந் தேனென் கருத்தினி
தாக்கச்சி ஏகம்பத்தின்
பற்றுகந் தேறும் உகந்தவ
னேபட நாகக்கச்சின்
சுற்றுகந் தேர்விடை மேல்வரு
வாய்நின் துணையடியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கச்சி ஏகம்பத்தின்`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
கச்சி, நகரம்.
ஏகம்பம், அந்நகரத்தின்கண் உள்ள ஓர் இடம்.
பற்று - நீங்காதிருத்தல்.
உகந்து - விரும்பி.
ஏறும் - இடபமும்.
உம்மை இறந்தது தழுவியது.
இடபத்தை உகந்தமையாவது, அது செய்த பிழையைப் பொறுத்து அதற்கு அருள்செய்தது.
அது செய்த பிழை யாவது, திருமாலின் ஊர்தியாகிய கருடனது செருக்கை இறைவன் ஆணையின்றித் தானே ஒறுத்து அடக்க முயன்றது.
இவ்வரலாற்றைக் காஞ்சிப் புராணத் தழுவக் குழைந்த படலத்திற் காண்க.
இங்ஙனம் இறைவன் அருள் செய்யும்படி இடபம் வழிபட்ட ஓர் இலிங்கம் திருவேகம்பத் திருக்கோயில் தீர்த்தக் கரையில் இருத்தல் காணலாம்.
சுற்று - சுற்றிக் கட்டுதல்.
ஏர் - அழகு.
`நின் துணையடியே என்றும் அர்ச்சனை செய்யப்பெற்று உகந்தேன்; என்கருத்து இனிதாக நின் பெருகு சீர் கற்று உகந்தேன்` என இயைத்துக் கொள்க.
`இனி எனக்கு என்ன குறை` என்பது குறிப்பெச்சம்.
உகந்தேன் - மேலும் மேலும் விரும்பினேன்.
சீர் - புகழ்.

பண் :

பாடல் எண் : 6

அடிநின்ற சூழல் அகோசரம்
மாலுக் கயற்கலரின்
முடிநின்ற சூழ்முடி காண்பரி
தாயிற்றுக் கார்முகிலின்
இடிநின்ற சூழ்குரல் ஏறுடை
ஏகம்ப யாமெங்ஙனே
வடிநின்ற சூலப் படையுடை
யாயை வணங்குவதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கச்சி ஏகம்பத்தின்`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
கச்சி, நகரம்.
ஏகம்பம், அந்நகரத்தின்கண் உள்ள ஓர் இடம்.
பற்று - நீங்காதிருத்தல்.
உகந்து - விரும்பி.
ஏறும் - இடபமும்.
உம்மை இறந்தது தழுவியது.
இடபத்தை உகந்தமையாவது, அது செய்த பிழையைப் பொறுத்து அதற்கு அருள்செய்தது.
அது செய்த பிழை யாவது, திருமாலின் ஊர்தியாகிய கருடனது செருக்கை இறைவன் ஆணையின்றித் தானே ஒறுத்து அடக்க முயன்றது.
இவ்வரலாற்றைக் காஞ்சிப் புராணத் தழுவக் குழைந்த படலத்திற் காண்க.
இங்ஙனம் இறைவன் அருள் செய்யும்படி இடபம் வழிபட்ட ஓர் இலிங்கம் திருவேகம்பத் திருக்கோயில் தீர்த்தக் கரையில் இருத்தல் காணலாம்.
சுற்று - சுற்றிக் கட்டுதல்.
ஏர் - அழகு.
`நின் துணையடியே என்றும் அர்ச்சனை செய்யப்பெற்று உகந்தேன்; என்கருத்து இனிதாக நின் பெருகு சீர் கற்று உகந்தேன்` என இயைத்துக் கொள்க.
`இனி எனக்கு என்ன குறை` என்பது குறிப்பெச்சம்.
உகந்தேன் - மேலும் மேலும் விரும்பினேன்.
சீர் - புகழ்.

பண் :

பாடல் எண் : 7

வணக்கம் தலைநின் திருவடிக்
கேசெய்யும் மையல்கொண்டோர்
இணக்கன்றி மற்றோர் இணக்கறி
வோமல்லம் வல்லரவின்
குணக்குன்ற வில்லி குளிர்கச்சி
ஏகம்பம் பாடினல்லால்
கணக்கன்று மற்றொரு தேவரைப்
பாடும் கவிநலமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`(எம்) தலை வணக்கம் நின் திருவடிக்கே செய்யும்; (யாம்) மையல் கொண்டோர் இணக்கன்றி மற்றோர் இணக்கறிவோமல்லம்; (எம்) கவி நலம், வல் அரவின் குணக் குன்ற வில்லியாகிய நின் குளிர் கச்சி ஏகம்பம் பாடின் அல்லால் மற்றொரு தேவரைப் பாடும் கணக்கு அன்று` என இயைத்து உரைத்துக்கொள்க.
``மையல்`` என்றது இங்குத் திருவருட் பித்தினை.
இதனைத் தத்துவத்துறையில் `சிவராகம்` 1 என்பர்.
`இணங்கு` என்னும் முதனிலை வலித்தல் பெற்றுப் பெயராயிற்று.
மற்றோர் - பிறர்.
அரவின் குணக் குன்ற வில் - பாம்பாகிய நாணினையுடைய மலையாகிய வில்.
கணக்கு - முறைமை.
கணக்கு உடையதனை, ``கணக்கு`` என்றார்.
நலம் - இன்பம்.
இங்ஙனம் தம் அடிமைத் திறத்தை வலியுறுத்தவாறு.

பண் :

பாடல் எண் : 8

நலந்தர நானொன்று சொல்லுவன்
கேண்மின்நல் லீர்களன்பு
கலந்தர னார்கச்சி ஏகம்பம்
கண்டு கனல்திகிரி
சலந்தரன் ஆகம் ஒழிக்கவைத்
தாய்தக்கன் வேள்வியெல்லாம்
நிலந்தர மாகச்செய் தாயென்று
பூசித்து நின்மின்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நல்லீர்கள்`` என்னும் விளியை முதற்கண் கொள்க.
`உங்கள் செயல் நலம் தர` என வினைமுதல் வருவித்துக் கொள்க.
கனல் திகிரி - நெருப்புப் போலும் கொடிய சக்கரம்.
``எல்லாம்`` என்பது எஞ்சாமை குறித்து நின்றது.
நிலம் தரமாக - பூமியளவாக; தரைமட்டம் ஆகும்படி.
எதுகை கெடுதலையும் நோக்காது, `நிரந்தரமாக` என ஓதுதல் பாடம் அன்று.

பண் :

பாடல் எண் : 9

மின்களென் றார்சடை கொண்டலென்
றார்கண்டம் மேனிவண்ணம்
பொன்களென் றார்வெளிப் பாடுதம்
பொன்னடி பூண்டுகொண்ட
என்களென் றாலும் பிரிந்தறி
யார்கச்சி ஏகம்பத்தான்
தன்களென் றாருல கெல்லாம்
நிலைபெற்ற தன்மைகளே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கச்சி ஏகம்பத்தானைத் தன் பொன்னடி பூண்டு பிரிந் தறியார்` எனத் தொகுக்கப்பட்ட இரண்டன் உருபை விரித்து மாறிக் கூட்டி பின்னும்.
``தன்கண் என்றார்`` என்பதை இறுதியில் வைத்து உரைக்க.
`சடை மின்கள்` என்றார்; `கண்டம் கொண்டல்` என்றார்; `மேனி வண்ணம் புலப்பாடு பொன்கள்` என்றார்; கொண்டல் என்கள் என்றாலும், உலகெல்லாம் நிலைபெற்ற தன்மைகள் தன்கள் என்றார் என்பது இப்பாட்டின் முதன்மைப் பொருள்.
``மின்கள்`` என்பதற்கு ஏற்ப, `சடைகள்` என உரைக்க.
உறுப்பின் பன்மையால் புலப்பாடும் பலவாயின.
``பொன்கள்`` என்னும் பன்மை அதன் சாதிபற்றி வந்தது.
அச்சாதியாவன.
`எவன்` என்னும் வினாப் பெயர் `என்` என்று ஆகி, `கள்` விகுதி ஏற்று ``என்கள்`` என வந்தது.
`எவைகள்` என்பது இதன் பொருள்.
`கொண்ட எவைகள் என்றாலும்` என்றது, `அவன் கொண்ட கோலங் களை எந்த எந்தப் பொருட்கு ஒப்பாகக் கூறியபோதிலும்` என்றவாறு.
`உண்மை, - உலகம் முழுதிலும் நிலைபெற்றுள்ள தன்மைகள் எல்லாம் தன்கள்` (அவனுடைய தன்மைகளே) என்பதாம்.
`தன்னகள்` என்பதில் அகரம் தொகுக்கப்பட்டது.
தன்ன - தன்னுடையன.

பண் :

பாடல் எண் : 10

தன்மையிற் குன்றாத் தவத்தோர்
இமையவர் தாம்வணங்கும்
வன்மையிற் குன்றா மதிற்கச்சி
ஏகம்பர் வண்கயிலைப்
பொன்மயிற் சாயலுஞ் சேயரிக்
கண்ணும் புரிகுழலும்
மென்மையிற் சாயும் மருங்குலும்
காதல் விளைத்தனவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, அகப்பொருள் ஐந்திணைப் பாங்கற் கூட்டத்தில் தலைவன் பாங்கன் கழற்றெதிர் மறுத்தல் துறையது.
`தவத்தோரும், இமையவரும் ஏகம்பர்` என்க.
தாம், அசை.
வன்மையிற் குன்றாமை மதிலுக்கு அடை.
``ஏகம்பரது வண் கயிலைப் பொன்`` என்றது தலைவியை.
பொன் - திருமகள் போல்வாள்.
`பொன்னினது சாயல் முதலியன காதல் நோயை விளைத்தன` என்றான்.
மயிற் சாயல் - மயிலினது சாயல் போலும் சாயல், சேயரி - செவ்வரிகள்.
புரி - புரிந்த குழல் - கூந்தல், `மென்மையின்` என்பது எதுகை நோக்கி, `மென்மயின்` எனப் போலியாய் வந்தது.
சாய்தல் - மெலிதல்.
மருங்குல் - இடை.

பண் :

பாடல் எண் : 11

தனமிட் டுமைதழு வத்தழும்
புற்றவர் தம்மடியார்
மனம்விட் டகலா மதிற்கச்சி
ஏகம்பர் வான்கயிலைச்
சினம்விட் டகலாக் களிறு
வினாவியொர் சேயனையார்
புனம்விட் டகலார் பகலாம்
பொழுதும்நம் பூங்கொடியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதுவும் அகப் பொருள் துறையதே.
துறை, பாங்கி யிற் கூட்டத்தில் தோழி தலைவியை மெலிதாகச் சொல்லிக் குறைநயப் பித்தல்.
`கயிலையில் வந்து வினாவி` என்க.
`களிறு வினாவலாவது, கண்டீரோ` என வினாவுதல்.
இது தலைவன் தோழியோடு பேசத் தொடங்குதற்கு ஒரு வழியாகும்.
தொடர்ந்து நிகழ்த்தும் பேச்சி னிடையே கண்ட தலைவனது குறிப்பையே தோழி தலைவியிடம் ``புனம் விட்டு அகலார்`` எனக் குறித்தாள்.
``அவர்க்கு நான் என்ன சொல்வது`` என்பது குறிப்பெச்சம்.
சேய் - முருகன்.
ஆம் பொழுதும்- ``சேயனையார்`` என்பது `தலைவர்` என்னும் அளவாய் நிற்றலின், ஓர் என்பதற்கு முடிவாயிற்று.
முடியும் காலம் வரையில்.
``நம்`` என்பதை `நம் புனம்` என முன்னே கூட்டுக.

பண் :

பாடல் எண் : 12

பூங்கொத் திருந்தழை யார்பொழில்
கச்சியே கம்பர்பொற்பார்
கோங்கத் திருந்த குடுமிக்
கயிலையெம் பொன்னொருத்தி
பாங்கொத் திருந்தனை ஆரணங்
கேபடர் கல்லருவி
ஆங்கத் திருந்திழை ஆடிவந்
தாற்கண் டடிவருத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பூங்கொத்தும், இரு தழையும் ஆர் பொழில்` இரு- பெருமை.
பெரியன.
ஆர் - நிறைந்த.
`பொற்பு ஆர் கயிலை` என இயையும்.
`கோங்கத்தொடு` என உருபு விரிக்க.
கோங்கு.
ஒருவகை மரம்.
ஆர் அணங்கு - அரியளாகிய தேவ மாது.
``ஆர் அணங்கே`` என்பதை முதலிற் கொண்டு உரைக்க.
எம் பொன் ஒருத்தி பாங்கு ஒத்து இருந்தனை - எங்கள் பொன் போல்பவளாகிய மகள் ஒருத்தியின் தன்மையோடே ஒத்த தன்மையை உடையவளாய் இருக்கின்றாய்.
(ஆகையால்) `உப்பொழுது அருவி ஆடி வரச் சென்றுள்ள அவள் இங்கு வந்தபின் நீ செல்` என்க.
ஆங்கு - அம்மலையிடத்தில்.
திருந்து, இழை - திருத்தமான அணிகலன்களை யுடையவள்.
`படர் கல் அருவி ஆடி வந்தால்` என இயையும்.
படர் - ஓடுகின்ற, அருவி.
கல் - மலை.
``அடி வருத்து`` என்பது, `உன் பாதத்தை நோகச் செய்` எனப் பொருள் தந்து, `நடந்து செல்` என்னும் கருத்தை உணர்த்திற்று.
இவ்வாற்றால் இப்பாட்டுப் பாங்கி மதியுடன் பாட்டின்பின் ஒருசார் ஆசிரியர் வேண்டும் `நாண நாட்டம்` என்பதில், `வேறுபடுத்திக் கூறல்` என்னும் துறையது.
அஃதாவது, தலைவி அருவியாடும் ஆரவாரத்தில் தோழியர் கூட்டத்தினின்றும் பிரிந்து சென்று தலைவனொடு கூடி வந்தபொழுது அவள் முன்னையினும் மிக்க மகிழ்ச்சியும், பொலிவும் உடையளாய் இருத்தலைக் கண்டு அவளது செயலை நன்கு உணர்ந்து கொண்ட தோழி தான் அங்ஙனம் உணர்ந்துகொண்டதைத் தலைவிக்குக் குறிப்பால் உணர்த்துவாளாய், அவள் நாணும்படி, தெய்வமாக உணர்ந்தாள் போலக் கூறுதல்.
அங்ஙனம் கூறுதலால் தலைவி தனது புதுநலத்தினையும், அதன் காரணத்தையும் தோழி தெரிந்து கொண்டாள் என அறிந்து நாணமுற்று, ஏதேனும் கூறுவாள்.
தனது களவொழுக்கத்தைத் தோழிக்கும் மறைத்து ஒழுகிய தலைவி பின் மறையாது தோழிக்குக் கூற உடன்படுதல் இக்கூற்றிற்குப் பயன்.

பண் :

பாடல் எண் : 13

வருத்தந் தரும்மெய்யுங் கையில்
தழையும்வன் மாவினவும்
கருத்தந் தரிக்கும் நடக்கவின்
றைய கழல்நினையத்
திருத்தந் தருளும் திகழ்கச்சி
ஏகம்பர் சீர்க்கயிலைத்
துருத்தந் திருப்பதன் றிப்புனம்
காக்கும் தொழிலெமக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஐய`` என்பதை முதலிலும், ``நடக்க`` என்பதை இறுதியிலும் கூட்டியுரைக்க.
மெய் - உடம்பு.
அது வருத்தந் தருதற்குக் காரணம் வேட்டையாடி வருதல்.
தழை - பூவும், பச்சிலையும் விரவ, அழகிய மேகலாபரணம்போலக் கைவன்மையால் தொடுக்கப்பட்ட தொரு உடை வகை.
இஃது இளமகளிரது கண்ணையும், கருத்தையும் கவர்வதாய் இருக்கும்.
வேட்டையாடி வருபவன் கையில் நாணில் வைத்துத் தொடுக்கப்பட்ட வில், அல்லது ஈட்டி முதலிய கருவிகள் இருக்க வேண்டுவதுபோய், இளமகளிரது மனத்தைக் கவரும் தழை யிருத்தலைச் சுட்டி, `உம் வினா பொய்யாக வினாவும் வினாவாகும்` என்பதைத் தோழி தலைவனுக்குக் குறிப்பால் உணர்த்தி நகைப்பாள், ``வருத்தம் தரும் மெய்யும், மா வினவும் கருத்தும், (இடையே) கையில் தழையும்`` தம்முள் ஒவ்வாதனவாய் உளவே - என்பாள், ``கருத்து அந்தரிக்கும்`` என்றாள்.
``கருத்து`` என்பதிலும் `கருத்தும்` என எண்ணும்மை விரிக்க.
`வேறுபாடு` என்னும் பொருட்டாகிய `அந்தரம்` என்னும் வடமொழிப் பெயர் அடியாக, ``அந்தரிக்கும்`` என்னும், வினைமுற்றுப் பிறந்தது.
அந்தரிக்கும் - வேறுபடா நின்றன.
`இன்று அந்தரிக்கும்` என இயைக்க.
இன்று இப்பொழுது.
திரு - திருவருள் `கயிலையில் எமக்கு இப்புனம் காக்கும் தொழில் (உளது); அதைத் தவறவிடுவது எமக்குத் தொழில் அன்று; ஆதலின் நீவிர் இவ்விடம் விட்டு அப்பால் நடக்க` என ``தொழில்`` என்பதன்பின் `உளது` என்பது எஞ்சி நின்றது.
`தீமை, பிழை` முதலிய பொருள்களைத் தருவதாகிய `துர்` துர் என்னும் வடமொழி இடைச்சொல் ஈற்றில் உகரம் பெற்றுவந்தது நிர் என்பது `நிரு` என வருதல்போல.
இப்பாட்டு தலைவன் பாங்கியை மதியுடன்படுத்தலில் கெடுதி வினாதலுள் வேழம் வினாதல் துறையது.
தோழி இங்ஙனம் இகழ்ந்துரைத் தாளாயினும் தலைவியது நிலைமையைக் குறிப்பால் உணர்ந்து இருவரும் ஒரு மனத்தராயதை உணர்ந்தேவிடுவாள்.

பண் :

பாடல் எண் : 14

எம்மையும் எம்மைப் பணிகொள்ளும்
கம்பர் எழிற்கயிலை
உம்மையும் மானிடம் இப்புனத்
தேவிட்டு வந்தமைந்தர்
தம்மையும் மானையும் சிந்தையும்
நோக்கம் கவர்கவென்றோ
அம்மையும் அம்மலர்க் கண்ணும்
பெரியீர் அருளுமினே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எம்மையும் - எப்பிறப்பிலும்.
கம்பர் - ஏகம்பர்.
உம்மையும் - (எம்மோடு) உங்களையும்.
மானிடம் - மக்கட் பிறப்பு.
`மானிடமாக` என ஆக்கம் விரிக்க.
விட்ட - விட்டன.
வாழவிட்டன.
வாழ்வோர் பலராதல் பற்றி விட்டதாகிய தொழிலும் பலவாயின.
`கயிலையில் இப்புனத்தே விட்டன` என்க.
`விட்டு` என்பது பாடம் அன்று.
`இங்கு வந்த மைந்தர்தம்மையும்` என்க.
`சிந்தையைக் கவர்தல்` என்பது `வசப்படுத்துதல்` என்னும் பொருட்டாகலின் அது `தம்மை, மானை` என்னும் இரண்டாம் வேற்றுமைகட்கு முடிபாயிற்று.
மானைச் சிந்தை கவர்தல், அதன்நோக்கினும் சிறந்த நோக்கு ஆதலால்.
அம் மை - அழகிய மை.
`மையும், கண்ணும் நோக்கத்தால் கவர்க என்றோ` என இயைக்க.
``பெரியீர்`` என்றது தோழியை.
இதனை முதலிற் கொள்க.
இப்பாட்டு, பாங்கியைத் தலைவன் மதியுடம் படுத்தலில் பிற வினாதல் துறையது.

பண் :

பாடல் எண் : 15

அருளைத் தருகம்பர் அம்பொற்
கயிலைஎம் ஐயர்அம்பு
இருளைக் கரிமறிக் கும்மிவர்
ஐயர் உறுத்தியெய்ய
வெருளக் கலைகணை தன்னொடும்
போயின வில்லிமைக்கு
மருளைத் தருசொல்லி எங்கோ
விலையுண்டிவ் வையகத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டுத் தலைவன் தலைவி தோழியுடன் இருக்கும், பொழுது சென்று `கலைமான் ஒன்று கணைதைத்த உடலுடன் இவ்வழியாகச் சென்றதோ` என, அதுபற்றி அவரை நோக்கி, வினாயதற்குத் தோழி தலைவியை நோக்கிக் கூறியது.
``மருளைத் தரு சொல்லி`` என்பது தோழி தலைவியை விளித்தது.
மருள் - மயக்கம்.
சொல்லி - சொல்லை உடையவளே.
`எம் ஐயர் (தமையன் மாருடைய) அம்பு கரியை (யானையை) மறிக்கும்.
(எய்த இடத்திற்றானே மடிந்து விழச் செய்யும்; இவர் ஐயர் (இவர் அவர்களினும் மேலானவர் - வேடரினும் சிறந்த அரசர்.
இவர் தம் அம்பை ஒரு மான்மீது) உறுத்தி எய்ய, (ஆழமாகப் பாயும்படி எய்ய) அந்த மான அந்தக் கணையையும் பறித்துக்கொண்டு எங்கோ போய்விட்டது.
போயின வில்லிமைக்கு (அப்படிப் போய்விடும்படி எய்த இவரது வில் வீரத் தன்மைக்கு) இவ் வையகத்து எங்கோ விலை உண்டு` எனக் கூறித் தோழி நகையாடினாள்.
கம்பர் - ஏகம்பர்.
இரு கரி - இருள்போலும் யானை.
ஐக் கரிய - தலைமை யானை.
வெருள் - அச்சம் மிகுந்த `எம் ஐயர் அம்பு தலைமை யானையை அங்கேயே வீழ்த்தும்.
இவ்ஐயர் அம்பு எய்ய, அச்சம் மிகுந்த ஒரு மான் அந்த அம்பையும் பறித்துக்கொண்டு ஓடிவிட்டது` என்றாள்.

பண் :

பாடல் எண் : 16

வையார் மழுப்படை ஏகம்பர்
ஈங்கோய் மலைப்புனத்துள்
ஐயார் வருகலை ஏனங்
கரிதொடர் வேட்டையெல்லாம்
பொய்யான ஐயர் மனத்ததெம்
பூங்கொடி கொங்கைபொறாப்
பையார் அரவிடை ஆயிற்று
வந்து பரிணமித்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வை ஆர் - கூர்மை பொருந்திய `ஐயர்` என்பது நீட்டல் பெற்று ``ஐயார்`` என வந்தது.
`ஐயார் தொடர் வேட்டை` என இயையும்.
``ஐயார், ஐயர்`` என்றவை தலைவனை.
`கலையையும், ஏனத்தையும் கரியையும் தொடர் வேட்டை` என்க.
பொய் ஆன - பொய் ஆயின.
`ஐயர் மனத்தது ஒவ்வொன்றாகப் பரிணமித்து வந்து, முடிவில் பூங்கொடி இடையாயிற்று` என்க.
பின் வந்த ``ஐயர்`` என்பது `அவர்` என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது.
இப்பாட்டின் துறையும் முன் பாட்டின் துறையே.
இருவரும் உள்வழிச் சென்ற தலைவன் முதற்கண், `இவ்வழியாக, அம்பு தைத்த உடலுடன் மான் ஒன்று போயிற்றா` என்று அவர்களை வினவினான்; விடை யில்லை; பின்பு காட்டுப் பன்றி போயிற்றா`; என்றான் விடையில்லை; பின் `யானை போயிற்றா` என்றான்; விடையில்லை.
(அதனால் அவன் பின் அவர்களை நெருங்கிச் சென்று, `என்ன, ஒருவர் வந்து வினாவினால் யாதும் விடைசொல்லா திருக்கின்றீர்கள்? உங்களைப் பார்க்கும் பொழுது - உங்களுக்கு இடையிருக்கின்றதா என்று ஓர் ஐயம் எழுகின்றது.
இருக்கின்றதா? இல்லையா? சொல்லுங்கள்` என்றான்.
அதைக் கேட்ட தோழி மேற்காட்டியவாறு சொல்லி நகையாடினாள்.
தொடர்தல் - பின்பற்றிச் செல்லல்.
`இவர் முதற்கண் குறித்த மான் வேட்டைகள் எல்லாம் வெறும் பொய்யாகிவிட்டன.
அவ்வேட்டைகள் முதலில் மானாய் இருந்தது.
பன்றியாகப் பரிணமித்து, பின் பன்றி யானையாகப் பரிணமித்து, முடிவில் எங்கள் பூங்கொடி போல உள்ள உனது இடையாகி நிலைபெற்றது` எனக் கூறி நகைத்தாள்.
மனத்தது - மனத்தில் உள்ள கருத்து.
எனவே, `அஃதே உண்மை` என்றும், `முன்னர்க் கூறியன எல்லாம் பொய் என்றும் ஆயின.
இடை சிறிதாய், மெல்லி தாதலின் அது பெரியவாய், வலியவாய கொங்கைகளைத் தாங்கலாற்றாது வருந்திற்று.
பை ஆர் - படம் பொருந்திய அரவு.
இடை - பாம்புபோலும் இடை.

பண் :

பாடல் எண் : 17

பருமுத் துதிர்த்திடும் சீர்மத்த
யானை நுதல்பகுந்திட்
டுருமொத்த திண்குரற் சீயம்
திரிநெறி ஓங்குவைவாய்ப்
பொருமுத் தலைவேற் படைக்கம்பர்
பூங்கயி லைப்புனத்துள்
தருமுத் தனநகை தன்நசை
யால்வெற்பு சார்வரிதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``வெற்பு`` என்பதை முதலிற் கொள்க.
`முத்து உதிர்த் திடும் நுதல்` என்க.
சீர் - அழகு.
`மத யானை` என்பது, ``மத்த யானை`` என விரித்தல் பெற்றது.
நுதல் - நெற்றி.
பகுந்திட்டு, பிளந்திட்டு.
உரும் ஒத்த - இடியோடு ஒலித்த.
சீயம் - சிங்கம்.
நெறி - வழி.
ஓங்கு - மலைமேல் இருத்தலால் ஓங்கிக் காணப்படுகின்ற.
`ஓங்கு கயிலை` என இயையும்.
முத்தலை வேல் - சூலம்.
கம்பர் - ஏகம்பர்.
நகைதன் நசை - நகையினை உடையாளது விருப்பம்.
ஆல், அசை `வெற்ப, (உனக்குப் பிற யாவும் எளிய எனினும்) புனத்துள் முத்தன்ன நகையாள்மேல் நசை சார்வரிது` என முடிக்க.
நிரம்புதல் கூடாமையால் நசையும் கொள்ளுதல் கூடாதாயிற்று.
இது தன்பால் வந்து குறையிரந்த தலைவனைத் தலைவியது அருமை சொல்லி அகற்றியது.
அருமை யாவது, தோழி இச்செய்தியைத் தலைவிக்குத் தெரிவித்தற்குச் செவ்வி யருமை.
அருமை இன்றாயினும் உள்ளது போலச் சொல்லி அகற்றுதல்; அவனது காதலின் மிகுதி அறிதற்பொருட்டாம்.

பண் :

பாடல் எண் : 18

அரிதன் திருக்கண் இடநிரம்
பாயிரம் போதணிய
அரிதன் திருவடிக் கர்ச்சித்த
கண்ணுக் கருளுகம்பர்
அரிதன் திருக்கங் குலியால்
அழிந்த கயிலையல்லிங்
கரிதென் றிப்பதெம் பால்வெற்ப
எம்மையர்க் கஞ்சுதுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``வெற்ப`` என்பதை முதலிற் கொள்க.
நிரம்பு ஆயிரம் போது அணிய அரி தன் திருக்கண் இடநிரம்பு - ஆயிரம் போது அணிய திருமால் தன் கண்ணையே இட்டமையால் எண் நிரம்பிய ஆயிரம் மலரைச் சாத்த, பறித்து அரி திருவடி - வினைகளை அரித்தொழிக்கின்ற திருவடி.
`மற்றை மலருக்காக அருள்செய்யாது கண்ணாகிய மலருக்கு அருள் செய்தான்`; அஃதாவது, `கண்ணைப் பறித்து சாத்தியதற்கு மகிழ்ந்து அருள்செய்தான்` என்க.
கம்பர் - ஏகம்பர்.
மூன்றாம் அடியில் உள்ள அரி - பகைவன்; இராவணன், திருக்கு - அவனது முறையற்ற செயல்; கயிலை மலையைப் பெயர்த்தது.
அங்குலி - விரல்.
`கம்பர் திருக்கு அழித்த கயிலை` என்க.
அல் - இரவு `கயிலையில் இங்கு நீவிர் அவ்எம்பால் இருப்பது அரிது` என்று எம் ஐயர்க்கு அஞ்சுதும் என முடிக்க.
ஐயர் - தமையன்மார்.
களவொழுக்கத்தில் ஒழுகிய தலைவன், `தலைவி இற்செறிக்கப்படுதல் காரணமாக அது கூடாது` எனக் கருதி, `ஒருநாள் இரவு உங்கள் இல்லத்தில் விருந்தினனாக வருவேன்` என `அதுவேண்டா` எனத் தோழி விலக்கியது இது.
இது, `விருந்திறை விலக்கல்` எனப்படும்.
தலைவன் வேண்டுதல், `விருந்திறை விரும்பல்` எனப்படும்.
இப்பாட்டில், `மடக்கு` என்னும் சொல்லணி வந்தது.

பண் :

பாடல் எண் : 19

அஞ்சரத் தான்பொடி யாய்விழத்
தீவிழித் தன்புசெய்வோர்
நெஞ்சரத் தாழ்வுகந் தோர்கச்சி
ஏகம்பர் நீள்கயிலைக்
குஞ்சரத் தாழ்வரை வீழநுங்
கொம்புய்யக் கும்பமூழ்கும்
வெஞ்சரத் தாரன வோவல்ல
வோவிவ் வியன்முரசே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அம் சரம்`` என்றது, `பூவாகிய அம்பு` என்றபடி.
நெஞ்சு அரம் - மனமாகிய தடம்.
தாழ்வு - தங்குதல்.
தாழ் வரை - மலைச் சாரல்.
(இவ்வியன் முரசு) குஞ்சரம் வீழ, நும் கொம்பு உய்யக் கும்பம் மூழ்கும் வெஞ்சரத்தார் - யானை கீழே வீழ்ந்தொழியும் படியும், உம் பூங்கொம்புபோலும் மகள் தப்பிப் பிழைக்கும்படியும் யானையின் மத்தகத்தில் மூழ்கிய,கொடிய அம்பினையுடைய அவருடையனவோ? அல்லவோ? `குஞ்சரந் தாழ்வரை` என்பது எதுகை நோக்கி கும்பம் - யானை மத்தகம், வலிந்து நின்றது.
இது, களவொழுக்கத்தில் களிறு தரு புணர்ச்சியால் ஒருவனுக்கு உரியளாகிவிட்ட தலைவி தன் இல்லத்தில் மணமுரசு முழுங்குதலைக் கேட்டு, `இம்முரசொலி என தலைவர் மணத்தனவோ, பிறர் மணத்தனவோ` என ஐயுற்றுக் கலங்கியது.

பண் :

பாடல் எண் : 20

சேய்தந்த அம்மை உமைகண
வன்திரு ஏகம்பத்தான்
தாய்தந்தை யாயுயிர் காப்போன்
கயிலைத் தயங்கிருள்வாய்
வேய்தந்த தோளிநம் ஊச
லொடும்விரை வேங்கைதன்னைப்
பாய்தந்து பூசலுண் டாங்கொண்ட
தோசைப் பகடுவந்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``வேய் தந்த தோளி`` என்பதை முதலிற் கொள்க.
அது தோழி தலைவியை விளித்தது.
தந்த, உவம உருபு.
சேய் - முருகன்.
`சேயை` என இரண்டாவது விரிக்க.
``கைப் பகடு வந்து`` என்பதை, ``தயங்கிருள்வாய்`` என்பதன் பின்னரும், ``பூசல் உண்டாம்`` என்பதை இறுதியிலும் கூட்டியுரைக்க.
தயங்கு - நிறைந்த.
விரை - வாசனை.
வேங்கை - வேங்கை மரம்.
ஊசல் வேங்கை மரக்கிளையில் கட்டப்பட்டிருப்பதால், ``ஊசலொடும் வேங்கை தன்னைப் பாய்ந்து கொண்டதோ`` என்றாள்.
கை - தும்பிக்கை.
பகடு- யானை.
பூசல் - ஆரவாரம் உண்டாம் - உண்டாகாநின்றது.
இரவுக் குறிக்கண் தலைவன் வந்தமை யறிந்த தோழி அதனைத் தாய் அறியாவாறு தலைவிக்குக் கூறியது.
இது, வரவுணர்ந்துரைத்தல் எனப்படும்.

பண் :

பாடல் எண் : 21

வந்தும் மணம்பெறிற் பொன்னனை
யீர்மன்னும் ஏகம்பர்தம்
முந்தும் அருவிக் கயிலை
மலையுயர் தேனிழிச்சித்
தந்தும் மலர்கொய்தும் தண்தினை
மேயுங் கிளிகடிந்தும்
சிந்தும் புகர் மலை கைச்சுமிச்
சாரல் திரிகுவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பொன் அனையீர்`` என்பது, தலைவன் தோழியை விளித்தது.
அதனை முதலிற் கொள்க.
பொன் - இலக்குமி.
மனம் பெறில் - இசைவு கிடைக்குமாயின் `கயிலை மலையின்கண்` என ஏழாவது விரிக்க.
சிந்தும் - எதிர்ப்பட்ட வரை அழிக்கின்ற.
புகர் மலை - முகத்தில் புள்ளிகளையுடைய மலை போலும் யானை.
கைச்சல் - கட்டுதல்; அடக்குதல்; இது தலைவன் பாங்கியை மதியுடம் படுத்தற் கண் குறையுற்று நின்றது.

பண் :

பாடல் எண் : 22

திரியப் புரமெய்த ஏகம்ப
னார்திக ழுங்கயிலைக்
கிரியக் குறவர் பருவத் திடுதர
ளம்வினையோம்
விரியச் சுருள்முத லானும்
அடைந்தோம் விரைவிரைந்து
விரியக் கதிர்முத்தின் நீர்பெற்ற
தென்னங்குப் பேசுமினே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திரி அப்புரம் - வானத்தில் திரிகின்ற அந்த மதில்கள்.
`கயிலைக் கிரியில் உள்ள அக்குறவர்` என்க.
பருவம் - மூங்கில்கள் முதிர்ந்து முத்தினைச் சொரியும் காலம்.
இடு தரளம் - சேர்த்து வைக்கின்ற முத்து.
வினையோம் - முயற்சியுடைய யாங்கள்.
(இவ்வாறு தோழி, தலைவி முதலானவர்களைத் தன்னோடு உளப்படுத்துக் கூறினாள்.
) விரியச் சுருள் முதல் - பின் விரிதற் பொருட்டு முன்னே சுருண்டு இருக்கும் இலைகளையுடைய இள மூங்கில், `கயிலைச் சாரலில் உள்ளோர் முற்றிய மூங்கிலினின்றும் பெறுகின்றோம்` எனத் தலைவன் தலைவியை வரைதற்கு முலை விலையாகத் தருவதாகக் கூறிய முத்துத் திரளைத் தோழி, `அஃது எங்கட்கு அரியது ஒன்றன்று` என இகழ்ந்து கூறினாள்.
இவ்வாறு தோழி இகழ்ந்து கூறியதன் கருத்து, `எம் தமர்க்கு உனது (தலைவனது) குல நலம், கல்வி, பண்பு முதலியவைகளை அறிவிப்பின் அவை காரணமாக அவர் வரைவுடம்படுத்தலல்லது, விலைக்குக் கொடுப்ப தாயின் இவட்கு ஏழ் பொழிலைக் கொடுப்பினும் நிரம்பாது ஆகலின் உடன்படார்` எனக் கூறுதலாம்.
1 ``விரைவிரைந்து`` இரட்டைக் கிளவி.
நீர் பிரிய அங்குக் கதிர் முத்தின் பெற்றது என் - வரை பொருட் பிரிதலாக நீர் பிறிதற்கு அங்கு (நும் இடத்தில் - கயிலை மலை சாரலில்)ப் பெறும் முத்தினால் அடையத் தக்க பயன் யாது? `பெறுவது` எனற்பாலது, ``பெற்றது`` என் இறந்து காலமாக ஓதப்பட்டது.
இது தலைவன் வரைபொருட் பிரிதலில் தோழி தலைவற்குத் தலைவியது முலைவிலை பற்றிக் கூறியது.
`முத்துக்கள் எமக்கு அரியவல்ல` என்றற்குத் தோழி முத்தினை இளமூங்கிலே தங்கட்குத் தருவதாகக் கூறினாள்.
பிரிய - பிரிதலால்.
`பிரிதலால் கிடைக்கும் முத்து` என ஒரு சொல் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 23

பேசுக யாவர் உமைக்கணி
யாரென்று பித்தரெங்கும்
பூசுகை யார்திரு நீற்றெழில்
ஏகம்பர் பொற்கயிலைத்
தேசுகை யார்சிலை வெற்பன்
பிரியும் பரிசிலர்அக்
கூசுகை யாதுமில் லார்க்குலை
வேங்கைப் பெயர்நும்மையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`யாவர் பித்தர் (அவர்) உமை, - கணியார்- என்று பேசுக` என மாற்றி இறுதியிற் கூட்டி, அதன்பின், `யாம் அவ்வாறு பேசோம்` என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க.
`கணி` என்பது வேங்கை மரத்திற்கும், சோதிடனுக்கும் பெயர் ஆதலால், ``கணியார்` என்றது சிலேடை.
பூசிகை ஆர் - பூசுதலைப் பொருந்திய.
தேசு - அழகு.
கை ஆர் - கையில் பொருந்திய.
சிலை - வில் `தேசு சிலை, கை ஆர் சிலை` எனத் தனி தனி இயைக்க.
வெற்பர் பிரியும் பரிசு இலர் - தலைவர் இது பொழுது இவ்விடம் விட்டும் பிரிந்து போகும் தன்மையை உடையர் அல்லர் (ஆகையால் வேங்கை மரங்களே! நீங்கள், `தலைவர் பிரிவார்` எனச் சோதிடம் கூறுவதால், உம்மைப் பித்தர்கள்தாம் சிறந்த சோதிடர் என்று கூறுவார்கள்; நாங்கள் அவ்வாறு கூறமாட்டோம்.
ஆயின் `உண்மை யாது` எனில்) `கொலை செய்யக் கூசுதல் `சிறிதும் இல்லாத, நன்மையைக் குலைக்கின்ற வேங்கைகள் (புலிகள்) என்பதே உங்கள் பெயர்.
அத்தன்மையையுடைய உங்களை, `வருவதறிந்து கூறும் சோதிடர்` என்று யாவர் சொல்வார்! வேங்கை மரம் பூக்கும் காலத்தில் தினைகளும் அறுவடை செய்யும் காலத்தை அடையும்.
அதனால் வேங்கைகள் பூத்தால் தினைப் புனங் காக்கத் தினைப் புனங்களில் பரண் அமைத்துத் தங்கியிருந்த மகளிரும் ஊருக்குள் உள்ள தங்கள் இல்லத்தை அடைந்து விடுவர்.
ஆகவே, வேங்கைகள் பூத்தால் களவொழுக்கத்தில் ஒழுகுவோர் கவலையடைவர்.
மகளிர் தலைவனுக்குத் தாங்கள் தினைப்புனத்தை விட்டு இல்லம் சென்றுவிடுவதாக அறிவித்து, விரைவில் தலைவியை வரைந்துகொள்ள வற்புறுத்துவர்.
அவ்வாறு வற்புறுத்துதல் `வரைவு கடாதல்` - எனப்படும்.
அங்ஙனம் தலைவனை வரைவு கடாவ எண்ணிய தோழி தலைவன் கேட்கும் படி வேங்கை மரங்களை நோக்கி ஏதோ கூறுபவள் போல இவ்வாறு நகையுண்டாகக் கூறி வரைவு கடாயினாள்.
வேங்கைகள் காலம் அல்லாக் காலத்தில் பூத்ததுபோலக் கூறித் தினை முதிர்வுரைத்து வரைவு கடாயினாள்.
1 `வேங்கை` என்னும் பெயருடைய உங்களைப் பித்தர்கள், `கணியார்` என்று பேசட்டும்; நாங்கள் அவ்வாறு பேசோம் - என்றாள்.

பண் :

பாடல் எண் : 24

பெயரா நலத்தெழில் ஏகம்ப
னார்பிறை தோய்கயிலைப்
பெயரா திருக்கப் பெறுகிளி
காள்புன மேபிரிவின்
துயரால் வருந்தி மனமுமிங்
கோடித் தொழுதுசென்ற
தயரா துரையும்வெற் பற்கடி
யேற்கும் விடைதமினே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பெயரா நலத்து எழில் - என்றும் மாறா திருக்கும் அழகினால் உண்டாகும் எழுச்சி.
ஏகம்பனார் காலத்தைக் கடந்தவர் ஆதலின் அவரது நலம் என்றும் பெயரா நலமாம்.
`கயிலையினின்றும், தினையை அறுத்த பின்னும் அதன் தாள்களில் தங்கிப் பெயராதிருக்கப் பெறுகின்ற கிளிகளே! யான் பிரிவினால் வருந்திச் சென்றதைப் பின்பு இங்குவரும் வெற்பற்கு (தலைவற்கு) அயராது (மறவாமல்) உரையுங் கள்; அடியேனுக்கு (மறவாமல்) உரையுங்கள்; அடியேனுக்கும் விடை தாருங்கள்` என்று, தலைவன் சிறைப்புறமாகத் தோழி பிரிவருமை கூறி வரைவு கடாயினாள் 2 புனமே பிரிவின் துயர் - இப்புனத்தையே அடியோடு பிரிதலால் வரும் துன்பம்.
``மனமும்`` என்னும் உம்மை உயர்வு சிறப்பு.
இங்கு உலாவிக்கொண்டே.
``ஓடி`` எனச் சினைவினை முதல் மேல் நின்றது.
தொழுது, மீட்டும் கூட்டு விக்க வேண்டித் தெய்வத்தைத் தொழுது.
தன்னின் வேறாகாமை பற்றித் தலைவியைத் தோழி ``அடியேன்`` எனத் தான் என்றே கூறினாள்.

பண் :

பாடல் எண் : 25

தம்மைப் பிறவிக் கடல்கடப்
பிப்பவர் தாம்வணங்கும்
மும்மைத் திருக்கண் முகத்தெழில்
ஏகம்பர் மொய்கயிலை
அம்மைக் கருங்கண்ணி தன்னொடின்
பந்தருந் தண்புனமே
எம்மைக் கவலை செயச்சொல்லி
யோவல்லி எய்தியதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தம்மைத் தாம் பிறவிக் கடல் கடப்பித்துக் கொள்ள விரும்புபவர் வணங்கும் ஏகம்பர்` என்க.
எனவே, `ஒருவர் தம்மைத் தாம் பிறவிக் கடலினின்றும் கடப்பித்துக் கொள்ளுதற்கு ஏகம்பரை வணங்குதல் தவிர வேறு வழியில்லை` என்பது பெறப்பட்டது.
``மும்மை`` என்றது, `மூன்று` என்றே பொருள் தந்தது.
`கயிலையில் இன்பந்தரும் புனம்` ஏழாவதன் தொகையாகக் கொள்க.
`அ` என்னும் சுட்டுக் கருங்கண்ணியைச் சுட்டிற்று.
மை, கண்ணிற்கு அடை.
கருங் கண்ணி, தலைவி.
தன், சாரியை, `கருங்கண்ணியோடு சேர்ந்திருந்து முன்பெல்லாம் இன்பத்தைத் தந்து கொண்டிருந்த தண்புனமே` எனத் தலைவன் தினைப் புனத்தை விளித்துக் கூறினான்.
வல்லி எய்தியது - கொடிபோலும் தலைவி உன்பால் வந்தது.
எம்மைக் கவலை செயச் சொல்லியோ - (முதலில் இன்பத்தைத் தந்து பின்பு) எம்மைக் கவலைப் படுத்தச் சொல்லித்தானே? `அவ்வாறு இருத்தல் இயலாது; எம் வினைதான் இவ்வாறு ஆயிற்றுப்போலும்` என்பது குறிப்பெச்சம்.
இது தினை அறுக்கப்பட்டபின் அப்புனத்திற்குச் சென்ற தலைவன் அங்குத் தலைவி முதலானோர் இல்லாமல் புனம் வெறிச்சோடிக் கிடத்தலைப் பார்த்து வருந்திக் கூறியது.
`வறும்புனங் கண்டு வருந்தல்` - என்னும் துறை 1 `வறுங்களம் நாடி மறுகல்` எனவும் கூறுவர்.

பண் :

பாடல் எண் : 26

இயங்குந் திரிபுரம் எய்தவே
கம்பர் எழிற்கயிலைத்
தயங்கும் மலர்ப்பொழில் காள்தையல்
ஆடரு வித்தடங்காள்
முயங்கு மணியறை காள்மொழி
யீரொழி யாதுநெஞ்சம்
மயங்கும் பரிசுபொன் னார்சென்ற
சூழல் வகுத்தெமக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இயங்கும் - வானத்தில் திரிகின்ற, திரிபுரம் - மூன்று கோட்டைகள்.
தயங்கும் - விளங்குகின்ற.
(`கயிலைக் கண் தயங்கும்` என்க).
`தட அருவிகாள்` என மாற்றிக் கொள்க.
தட - பெரிய.
முயங்கும் - நாங்கள் தழுவும் இடமாகிய.
மணி அறை - அழகிய பாறை.
`நெஞ்சும் ஒழியாது மயங்கும் பரிசாக` என ஆக்கம் வருவிக்க.
பரிசு - தன்மை `எம்நெஞ்சம்` என உரைக்க.
பொன்னார் - பொன் போல்பவர்கள் பொன் - திருமகள்.
சூழல் - இடம்.
`எமக்கு வகுத்து மொழியீர்` என இயைக்க.
வகுத்து மொழிதல் - விவரமாகச் சொல்லுதல்.
இது வறும்புனம் கண்டு வருந்தும் தலைவன் கண்ட வற்றொடு கவன்றுரைத்தது.
ஆடுதலைப் பொழிலுக்கும் கூட்டுக.
`அவர் ஆடும் பொழில் ஆதலாலும், அவன் ஆடும் அருவி ஆதலாலும், யாம் முயங்கும் அறை ஆதலாலும் உம்பால் அவர்கள் சொல்லியே சென்றிருப்பர்` என்பது குறிப்பு.

பண் :

பாடல் எண் : 27

வகுப்பார் இவர்போல் மணத்துக்கு
நாள்மணந் தன்னொடின்பம்
மிகுப்பார்கள் ஆருயிர் ஒன்றாம்
இருவரை விள்ளக்கள்வாய்
நெகுப்பால் மலர்கொண்டு நின்றார்
கிடக்க நிலாவுகம்பர்
தொகுப்பால் மணிசிந் தருவிக்
கயிலையிச் சூழ்புனத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது, தோழி, `இனிக் களவொழுக்கம் வெளிப்பட்டுத் தீமை பயக்கும்` எனக் கூறி வரைவு கடாவத் தலைவன் மேலும் களவை நீட்டிப்பான் வேண்டி வரை வுடன்படாது மறுத்தது.
``கள்வாய்`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
நெகுப்பு - நெகிழ்வு, அது மலர் மலருங் காலத்தைக் குறித்தது.
ஆல் உருபைக் கண்ணுரு பாகத் திரித்துக் கொள்க.
`அருவிகள் தம்பால் மலர்களை வேண்டி நின்றார்க்கு மணிகளைச் சிந்தும் கயிலை` எனவும், `கம்பர் கயிலை` எனவும் தனித்தனி இயைக்க.
`கயிலையில் இப்புனத்தில்` என உரைக்க.
`ஆர் உயிர் ஒன்றாம் இருவரை (அஃது அறியாது) விள்ள - இருவராகிப் பிரிய வைத்து மணத்துக்கு நாள் வகுப்பவரும், மணத் தோடு கூட்டியே இன்பத்தை மிகுப்பவரும் இவரே போலும்` என இயைத்துக் கொள்க.
`உடலால் இருவர் போலத் தோன்றினும் உயிர் ஒன்றேயாய் உள்ளார்க்கு மணம் என்ன வேண்டுகின்றது? எனத் தலைவன் தங்கள் களவொழுக்கத்தின் சிறப்பைப் புலப்படுத்தி வரை வுடன்படாது மறுத்தான்.
`இவரே போலும்` என்பது ``இவர்போல்`` எனத் தொகுத்தல் பெற்றது.
`இவர்` என்றது தோழி வழியாக அன்பைப் பெற வேண்டினார்க்கு, பிறப்பிலே உண்டான அன்பைத் தருவது யாம் வாழிடம்` எனத் தலைவன் இறைச்சிப் பொருள் கூறினான்.
அங்ஙனம் கூறுதல் தலைவர்க்கும் உரித்தாகலின்.

பண் :

பாடல் எண் : 28

புனங்குழை யாதென்று மென்தினை
கொய்ததும் போகலுற்ற
கனங்குழை யாள்தற் பிரிய
நமக்குறும் கையறவால்
மனங்குழை யாவரும் கண்கனி
பண்பல பாடுந்தொண்டர்
இனங்குழை யாத்தொழும் ஏகம்பர்
இக்கயி லாயத்துள்ளே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மனங் குழையா`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
மனம் குழையா - மனம் கசிந்து.
அன்பு நீர் சிந்துதல் பற்றிக் கண்களை.
``அருங் கண்`` என்றார்.
கண் கனிதலாவது, நீரைச் சொரிதல்.
கண் கனி பண் - கண்கள் கனிதற்கு ஏதுவான இசைகள்.
முன்னர் மனம் குழைதல் கூறப்பட்டமையால், ``குழையாத் தொழும்`` என்றது, உடல் குழைந்து தொழுதலை.
`ஏகம்பரது இக்கயிலாயம்` என்க.
`புனங் குழையாது` என்று தினை கொய்தது - `புனம் இதற்கு மேல் பசுமை பெற்றுத் தழைக்க மாட்டாது` என்று அறிந்து தினைக் கதிர்களைக் குறவர்கள் கொய்தது.
கனம் குழையாள் தன் பிரியவும் - கனமாகிய குழையை அணிந்த தலைவி புனத்தை விட்டுப் பிரிந்து இல்லத்தில் இருக்கச் செய்தற்கும் ஆம்.
(உம்மை மாற்றி யுரைக்கப் பட்டது.
) குறவர் தம் இயல்பிலே தம் தொழிலைச் செய்தாராயினும் அதனால், நமக்குக் கையறவு உறும் - செயல் அறும் அளவில் துன்பம் உறாநின்றது.
(இதனை அவர்கள் அறியமாட்டார்கள்) ஆல், அசை.

பண் :

பாடல் எண் : 29

உள்ளம் பெரியரல் லாச்சிறு
மானுடர் உற்றசெல்வம்
கள்ளம் பெரிய சிறுமனத்
தார்க்கன்றிக் கங்கையென்னும்
வெள்ளம் பெரிய சடைத்திரு
ஏகம்பர் விண்ணரணம்
தள்ளம் பெரிகொண் டமைத்தார்
அடியவர் சார்வதன்றே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியின் பாடம் பிழைப்பட்டு, வேறாய்க் காணப்படுகின்றது.
தள் அம்பு - வில்லினின்றும் எய்யப்படுகின்ற அம்பினை.
விண் அரணம் எரியக் கொண்டார் - ஆகாயத்தில் உலாவிய கோட்டைகள் (திரிபுரங்கள்) எரிந்தழியும்படி கைக் கொண்டவர்.
`சிறு மானுடர் உற்ற பொருட் செல்வம் அவரைப் போலும் சிறுமனத்தை உடையவர்கட்கு அடையப்படும் பற்றுக் கோவைத் தன்றித் திரிபுரத்தை எரித்தவராகிய சிவபெருமானுக்கு அடியவராயினரால் அடையப்படுவதன்று` என முடித்துக்கொள்க.
``பொருட் செல்வம் பூரியார் கண்ணு முள`` 1 ஆதலின் அஃது ஒறையே விரும்பி, அருட் செல்வத்தை விரும்பாதாரைச் ``சிறுமானுடர்`` எனவும், ``சிறுமனத்தார்`` எனவும் கூறினார்.
கள்ளம், இரப்பார்க்கு, `இல்லை` எனக் கூறிக் கரக்கும் கரவு.
`சிவனடியார்க்குப் பொருட் செல்வம் செல்வமாய்த் தோன்றாது` என்றபடி.
எனவே, அதனைப் படைக்கவும், காக்கவும் அவர் முயலாமை கூறப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 30

அன்றும் பகையடர்க் கும்பரி
மாவும் மதவருவிக்
குன்றும் பதாதியுந் தேருங்
குலவிக் குடைநிழற்கீழ்
நின்றும் பொலியினுங் கம்பர்நன்
நீறு நுதற்கிலரேல்
என்றும் அரசும் முரசும்
பொலியா இருநிலத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அன்றும் - மாறுபடுகின்ற.
பகை - பகைவர்; ஆகுபெயர்.
அடக்கும் - வெல்கின்ற.
பரிமா - குதிரை.
மத அருவிக் குன்று - யானை - பதாதி - காலாட்படை.
நால்வகைப் படைகளும் இங்குக் கூறப்பட்டன.
கம்பர் - ஏகம்பர்.
நல் நீறு - திருநீறு.
நுதல் - நெற்றி.
திருநீறு நெற்றியில் இல்லாதவர் சிவன்பால் அன்பில்லாதவரே, அதனால் அவர் பெற்ற செல்வம் அவர் முன்செய்த பசுபுண்ணியத்தால் கிடைத்தது ஆகலானும், பசுபுண்ணியம் நிலையற்றது ஆகலானும் `அச்செல்வம் நிலையாது` என்றார்.
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று
என்பதில் கூத்தாட்டோடு உவமிக்கப்பட்டது பசுபுண்ணியங்களே.
சிவனடியார்கட்குச் சிவபுண்ணியத்தால் வரும் செல்வம் சிவ புண்ணியங்கள் நிகழ்தற் பொருட்டுச் சிவனருளால் தரப்படுவ தாகலின், `அஃது என்றும் இருநிலத்தே பொலியும்` என்பதாம்.
நீறில்லா நெற்றிபாழ்
எனவும்,
நம்ப னடியவர்க்கு நல்காத் திரவியங்கள்
பம்புக்காம்; பேய்க்காம்; பரத்தையர்க்காம் - வம்புக்காம்;
கொள்ளைக்காம்; கள்ளுக்காம்; கோவுக்காம்; சாவுக்காம்;
கள்ளர்க்காம்; தீக்காகுங் காண்
எனவும் போந்த ஔவையார் நீதி மொழிகளையும் காண்க.
நம்பன் - சிவபெருமான்.
பம்புக்கு - வாளாத் தொகை பண்ணிக் குவித்தற்கு.
பம்புதல் - நிரப்புதல், பேய்க்கு - புதைத்து வைத்தபின் பூதம் காத்தற்கு.
வம்பு - அடா வழக்கு.
கொள்ளை - கூட்டக் கொள்ளைக்காரர் செயல்.
கள்ளர் - ஒளிந்து நின்று களவு செய்பவர்.
கோ - அரசன் உரியவர் இல்லாத காரணத்தாலும், புதையலாகக் கிடைத்தலாலும் சிலரது பொருள்கள் அரசனுக்கு உரியதாகும்.
இதனை ``உறுபொருள்`` 4 - என்றார் திருவள்ளுவர்.
சாவுக்கு ஆம் - வலிந்து பறிக்கும் கள்வர் செய்யும் கொலைக்கு ஏதுவாம்.
முரசு - வெற்றி முரசு.

பண் :

பாடல் எண் : 31

நிலத்திமை யோரில் தலையாய்ப்
பிறந்து மறையொடங்கம்
வலத்திமைப் போதும் பிரியார்
எரிவளர்த் தாலும்வெற்பன்
குலத்துமை யோர்பங்கர் கச்சியுள்
ஏகம்பங் கூடித்தொழும்
நலத்தமை யாதவர் வேட்டுவர்
தம்மின் நடுப்படையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நிலத்து இமையோர் - பூசுரர்; அந்தணர்.
தலை - தலைமை; அது குடிச் சிறப்பாம்.
மறை - வேதம் அங்கம் - வேதாங்கம்.
வலத்து - வலிமை பெற்று.
`வல்லராய்` என்றபடி.
``பிரியம்`` என்பதை முற்றெச்சமாக்கி அதனை, ``வளர்த்தாலும்`` என்பதனோடு முடிக்க.
``வளர்த்தாலும்`` என்னும் உம்மை சிறப்பு.
`குலத்து உதித்த` என ஒருசொல் வருவிக்க.
ஏகம்பர் - ஏகம்பர் எழுந்தருளியிருக்கும் இடம்.
கூடி - அடைந்து.
நலம் - நன்மை; ஞானம் அஃது அதனாலாகிய செயலைக் குறித்தது.
`நலத்துக்கண்` என ஏழாவது விரிக்க.
அமையா தவர் - பொருந்தாதவர்.
`வேட்டுவர்தம் படையின் நடு` என மாறிக் கூட்டுக.
நடுவண் நிற்பவரை `நடு` என்றது ஆகுபெயர்.
`நிலத்து இமையோராயினும் ஏகம்பம் கூடித் தொழும் நலத்துக்கண் பொருந்தாதவர் வேட்டுவருள் தலையாய வேட்டுவர்` - என்பதாம்.
வைதிக அந்தணர்கள் வேள்வியிற் செய்யப்படும் கொலையை, `கொலையன்று` என விலக்குதல், சிவபெருமானை முன்னிட்டுச் செய்யின் ஒராற்றாலேனும் அமைவுடையதாம்; அவ்வாறு செய்யாத வழி அவர் வேள்விக்கண் செய்யும் கொலைக்கும், வேட்டுவர் செய்யும் கொலைக்கும் இடையே யாதும் வேறுபாடில்லை` என்பதாம்.
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்,
புன்மை தெரிவா ரகத்து
என்னும் திருக்குறளின் உரையில் பரிமேலழகர் `கொலை வினையர்`- என்றதனால், அத்திருக்குறளில் வேடரும், அவரோடு ஒப்புரவும் செய்யும் கொலை கடியப்பட்டதன்றி, வேள்விக்கண் செய்யப்படும் கொலை விலக்கப்பட்டிலது` என்பதுபட உரை கூறினார்.
அக்கருத்துச் சிவனை முன்னிட்டுச் செய்யப்படும் வேள்விக்கே ஓராற்றால் பொருந்தும்` என்பது இங்குக் கூறப்பட்டது.
பரிமேலழகர் கூறிய கருத்து அவரால் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டதாகாது, வைதிக அந்தணர்களது பழமையான கருத்தே யாதலின் அது பற்றி இவ் வாசிரியர் இங்ஙனம் அருளிச் செய்தார்.
இதனால் திருநெறியின் முறைமை இனிது விளங்குவதாம்.
``தலையாய்ப் பிறந்தும்.
.
.
.
.
.
வேட்டுவர்`` என்றதனால், ``பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்``1 என்றல் பொருந்தாது; பிறப்பு என்னும் பிறப்பே`` - என்று பிணங்கு வாரது கூற்றும் தகர்க்கப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 32

படையால் உயிர்கொன்று தின்று
பசுக்களைப் போலச்செல்லும்
நடையால் அறிவின்றி நாண்சிறி
தின்றிநகும் குலத்தில்
கடையாய்ப் பிறக்கினும் கச்சியுள்
ஏகம்பத் தெங்களையாள்
உடையான் கழற்கன்ப ரேலவர்
யாவர்க்கும் உத்தமரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, முன் பாட்டின்பொருட்கு மறுதலையாய பொருளை வற்புறுத்துகின்றது.
படை - கொலைக் கருவி ``கொன்று தின்று`` என்றது; கொல்லுதல், தின்னுதல் ஆகிய இரண்டினுள் ஒன்றே செய்யினும் பாதகமாயினும், இரண்டையுமே செய்து` என்றபடி.
பசுக்கள், ஆறாவது அறிவில்லாமை பற்றி வந்த உவமை.
`ஆறாவது அறிவு உண்டு` என வாதிக்கின், ``பிறிதின் நோய் தன் நோய்போல் போற்றமையால்`` `அஃது இருந்தும் பயனில்லை` என்பார்.
``பசுக் களைப் போலச் செல்லும் நடையால் அறிவின்றி`` என்றார்.
``மாக்களே பிறிதின் நோய் தம் நோய்போல் போற்றாது பிற உயிர்களைக் கொன்று தின்னும்` என்பது கருத்து.
அறிவுளதாயினும் இக்காரணத்தால் - அறிவிலர் - என நல்லோரால் பழிக்கப்படுதல் பற்றிச் சிறிதும் நாணம் ஊறாமல் தாம் செய்வதே செய்வர் - என்றற்கு, ``நாண் சிறிதின்றி`` என்றார்.
`சிறிதும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுக்கப்பட்டது.
`நாண் இன்மையும் மாக்களது இயல்பே` என்றபடி.
`இக்காரணங்களால் இகழப்படும் குலம்` என்றற்கு ``நகும் குலம்`` என்றும், `அவற்றுள்ளும் கடைப்பட்ட குலம்` ``கடையாய்ப் பிறக்கினும்` என்றும் கூறினார்.
யாவருக்கும் உத்தமர் - யாவரினும் மேலானவர்.
``அவர் கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே`` - என அருளிச்செய்தது காண்க.
இறுதிக்கண் ``கடையாய்ப் பிறக்கினும்`` என உம்மை கொடுத்து ஓதியதனால், `மேற் கூறப்பட்டனவெல்லாம் கடியப்படாதன அல்ல; கடியத் தக்கனவே` என்பதும், `அவற்றைக் கடிந்து, ஆளுடையான் கழற்கு அன்பாராதல் பொன்மலர் நாற்ற முடைத்தாய வழிப் பெரிதும் பயன்படுதல்போலப் பயனுடையராகச் செய்யும்` என்பதும், `அவற்றைக் கடியாது ஆளுடையான் கழற்கு அன்பராயின் பொன் மலர் நாற்றம் உடைத்தாகாதாயினும் பொலிவுடைத்தா மாறுபோல ஆவர்` என்பதும் கூறியவாறாம்.
``ஆ உரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்`` என அப்பரும் உம்மை கொடுத்தே ஓதியருளினமை காண்க.
மற்றும், கொல்வ ரேனும், குணம்பல நன்மைகள்
இல்லா ரேனும் இயம்புவ ராயிடினும்
எல்லாத் தீங்கையும் நீங்குவ ரென்பரால்
நல்லார் நாமம் நமச்சி வாயவே
குலமில ராயினுங் குலத்திற் கேற்பதோர்
நலம் மிகக் கொடுப்பது நமச்சி வாயவே
என்றாற்போல வரும் இடங்களிலும் உம்மை கொடுத்தே ஓதியருளுதல் காண்க.

பண் :

பாடல் எண் : 33

உத்துங்க யானை உரியார்
விரலால் அரக்கன்சென்னி
பத்துங்கை யான இருபதுஞ்
சோர்தர வைத்திலயம்
ஒத்துங்கை யாலவன் பாடக்
கயிலையின் ஊடுகைவாள்
எத்துங்கை யானென் றுகந்தளித்
தார்கச்சி ஏகம்பரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உத்துங்கம் - உயரம்.
உரி - தோல்.
வைத்து - அழுத்தி.
இலயம் - தாளம்.
`ஒற்றும், எற்றும்` என்பன எதுகை நோக்கி, ``ஒத்தும், எத்தும்`` எனத் திரிந்து நின்றன.
கையால் பாடியது, கைவிரலால் வீணையின் நரம்பைத் தெறித்து இசையை எழுப்பியது.
கயிலையின் ஊடு அளித்தார்` என்க, ``ஊடு`` என்பது ஏழாவதன் பொருள்பட வந்தது ``என்றது`` என்பதை, `என்ன` எனத் திரித்து, `என்று ஆகும் படி` என உரைக்க.
எற்றுதல், இங்கு வெட்டி அழித்தலைக் குறித்தது.
எனவே, ``எற்றும்`` என்பது `அழிக்கும்` என்றதாய், அத்தகைய ஆற்றல் பெற்றமையை உணர்த்திற்று.
`யாவரையும் வெல்லும் வாட் படையை அளித்தருளினான்` என்றபடி.
`புரைபற்றி ஒறுப்பினும், வழிபட்ட பின் அருள்புரிபவர் கச்சி ஏகம்பர்` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 34

அம்பரம் கால்அனல் நீர்நிலம்
திங்கள் அருக்கன்அணு
வம்பரங் கொள்வதொர் வேழத்
துரியவன் தன்னுருவாம்
எம்பரன் கச்சியுள் ஏகம்பத்
தானிடை யாதடைவான்
நம்பரன் தன்னடி யாரறி
வார்கட்கு நற்றுணையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``வம்பரம்.
வேழத்து உரியவன், அம்பரம் .
.
.
.
அணு தன் உருவாம் எம் பரன், கச்சியுள் ஏகம்பத்தான், தன் அடியார் இடையாது அடைவான், நம் பரன்` என இயைத்து, இவை அனைத்தையும் எழுவாயாக்கி, ``அறிவார்க்கு நறுந் துணை`` என முடிக்க.
முதலில் அட்ட மூர்த்தங்கள் சொல்லப்பட்டன.
அம்பரம் - வான்.
அணு - ஆன்மா.
வம்பர் - தீயோர்; அசுரர், அம் கொள் வேழம் - (அவர்கள்) அழகிதாகக் கொண்ட யானை.
`கயாசுரன்` என்றபடி.
உரி- தோல் ``எம் பரன்`` என்பதில் ``எம்`` என்றது அடியார்களையும், ``நம்பரன்`` என்பதில் ``நம்`` என்பதும் அனைத்துயிர்களையுமாகும்.
இடையாது - தளர்ச்சியடையாதபடி.
அடைவான் - முன்வந்து காப்பான்.
அறிவார்க்கு - தன்னை மெய்ப்பொருளாக அறிபவர்க்கு.
நறுந்துணை - நல்ல துணைமை; பிறவிக் கடலினின்றும் கைகொடுத்து முத்திக் கரையில் ஏற்றும் துணை.

பண் :

பாடல் எண் : 35

துணைத்தா மரையடி யும்பவ
ளத்திரள் நன்குறங்கும்
பணைத்தோள் அகலமுங் கண்டத்து
நீலமும் அண்டத்துமின்
பிணைத்தா லனசடை யுந்திரு
முக்கணும் பெண்ணொர்பக்கத்
தணைத்தார் எழிற்கம்பர் எங்கள்
பிரானார்க் கழகியவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`எங்கள் பிரானார்க்கு, துணைத் தாமரை அடியும்.
முக்கணும் அழகிய` என்க.
துணை - இணை.
குறங்கு - துடை.
பணை- பருத்த ``தோள்`` என்பதிலும் எண்ணும்மை விரிக்க.
அகலம் - மார்பு.
`மின்னலை அண்டத்தில் (வானத்தில்) பிணைத்தாலன்ன சடை` என்க.
திருச்சென்னி உயரத்தில் உருத்தலால் ``அண்டத்தில் பிணைத் தாலன்ன`` என்றார்.
அழகிய - மிக அழகாய் உள்ளன.
அழகு - தனிமையிலும், தொகைமையிலும் தோன்றுவது.

பண் :

பாடல் எண் : 36

அழகறி விற்பெரி தாகிய
ஏகம்பர் அத்தர்கொற்றம்
பழகறி விற்பெரி யோரதமைப்
பற்றலர் பற்றுமன்பின்
குழகறி வேற்பினுள் ஒன்றறி
யாரறி யாமைதெய்வம்
கிழகெறி யப்பட் டுலந்தார்
உலகிற் கிடந்தனரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அழகு அறிவினும் பெரிதாகிய`` என்றது அழகினைப் புகழ்ந்த புகழுரை.
இறைவர் அறிவிற் பெரியர் (முற்றறி வுடையவர்) என்பது நன்கறியப்பட்டதாகலின், `அஃதேபோல் அழகிலும் பெரியவர் என்பது உணர்த்தியவாறு.
``பெரிதாகிய`` என்னும் பெயரெச்சம் ``ஏகம்பர்`` என்னும் இடப்பெயர் கொண்டது என்னை? `அவனது அழகு ஆடவர் கண்ணைக் கவர்கின்றது` என்றலேயன்றி, `அவள் கண்ணதாகிய அழகு ஆடவர் கண்ணைக் கவர்கின்றது` என்றலும் வழக்காதலின்.
அத்தர் - தலைவர்.
கொற்றம்- வெற்றி.
அஃது அதனால் உண்டாகிய ``பொருள்சேர் புகழின்`` 1 மேல் நின்றது.
``கொற்றத்தின்கண்`` என ஏழாவது விரிக்க.
`பழகு பெரி யோர்` என இயைக்க.
`அன்பாகிய குழகினையுடைய அறிவு` என்க.
இன், வேண்டாவழிச் சாரியை.
குழகு - அழகு.
`அறிவுக்கு அழகு அன்பு` என்றபடி.
ஏற்பு - ஏற்கும் வழிகள்.
`இறைவனிடத்து அன்பை ஏற்கும் வழிகள் பல உளவாக அவற்றினுள் ஒன்றையும் அறியார்` என்றபடி.
`ஒன்றும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுக்கப்பட்டது.
`அறியாமையால்` என ஆல் உருபு விரிக்க.
`கீழ்` எனப் பொருள் தருவ தாகிய `குழக்கு` என்பதில் ககர ஒற்று எதுகை நோக்கிக் குறைக்கப் பட்டது.
உலந்தார் - இறந்தார்.
`பயன் இன்றி இறந்தார்` என்பதாம்.
`பற்றலரும், அறியாரும் ஆகியோர் அறியாமையால் சிவநெறியி னின்றும் அப்பால் - சிறு தெய்வங்கள் பால் - தூக்கியெறியப்பட்டுப் பயன் இன்றி உலகில் உலந்துகிடந்தார்` என வினை முடிக்க.
``உலந்தார்`` முற்றெச்சம்.

பண் :

பாடல் எண் : 37

கிடக்கும் ஒருபால் இரைக்கின்ற
பாம்பொரு பால்மதியம்
தொடக்குண் டிலங்கும் மலங்குந்
திரைக்கங்கை சூடுங்கொன்றை
வடக்குண்டு கட்டத் தலைமாலை
வாளால் மலைந்தவெம்போர்
கடக்கும் விடைத்திரு ஏகம்பர்
கற்றைச் சடைமுடியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``வாளா மலைந்த`` என்பது முதலாகத் தொடங்கி, `சடைமுடிக்கண்` என ஏழாவது விரித்து `ஒருபால் பாம்பு கிடக்கும்; ஒருபால் மதியம் இலங்கும்; கங்கை அலங்கும்; கொன்றை வடமும், தலைமாலையும் சூடப்பட்டிருக்கும்` என முடிக்க.
தொடக்குண்டு - கீழே விழாமல் சிக்குண்டு.
`பாம்பும், மதியும் பகைப்பொருளாயினும் அவரது முடியில் பகையின்றி வாழும்` என்பது கருத்து, அலங்கும் - அலையும்.
`வடங்குண்டு` என்பது, ஏதுகை நோக்கி வலிந்து நின்றது.
குண்டு கட்டு அத் தலை - ஆழ்ந்த கண்களையுடைய அந்தத் தலை; `உலந்தார் தலை` என்றபடி.
தசை முதலாயின இன்மையால் கண்கள் ஆழ்ந்து தோன்றுவ வாயின.
``கட்டு`` என்றது சாதியொருமை.
சுட்டு, உயிரின்மையைக் குறித்தது.
`குண்டு கட்டுத் தலை` எனப் பாடம் ஓதலும் ஆம்.
`வாளால் மலைந்த வெம்போரும்` எனச் சிறப்பும்மை விரிக்க.
கடக்கும் - வெல்லும்.
`போர் விடை` என்றபடி.

பண் :

பாடல் எண் : 38

கற்றைப் பவளச் சடைவலம்
பூக்கமழ் கொன்றையந்தார்
முற்றுற் றிலாமதி யின் கொழுந்
தேகம்பர் மொய்குழலாம்
மற்றைத் திசையின் மணிப்பொற்
கொழுந்தத் தரங்கழுநீர்
தெற்றிப் பொலிகின்ற சூட்டழ
காகித் திகழ்தருமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஏகம்பர்`` என்பதை ``வலம்`` என்பதற்கு முன்னே கூட்டி, அத்தொடரை முதற்கண் கொள்க.
`ஏகம்பர் வலம் கற்றைப் பவளச் சடையும் கமழ் கொன்றைப் பூ அம் தாரும், முற்றுற்றிலா மதியின் கொழுந்தும் - மணிகளாலும், பொன்னாலும் இயன்ற தளிர் களும், கழுநீர் தெற்றி அத்தரம் பொலிகின்ற - குவளை மலரை நெருங்க வைத்து அந்த அளவு சிறப்பாக விளங்குகின்ற.
சூட்டு - தலைவி சூட்டும் அழகாகித் திகழ்தரும்` என உரைக்க.
அர்த்தநாரீசுர வடிவத்தைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 39

தருமருட் டன்மை வலப்பாற்
கமலக்கண் நெற்றியின்மேல்
திருமலர்க் கண்பிள விற்றிக
ழுந்தழல் செல்வக்கம்பர்
கருமலர்க் கண்ணிடப் பாலது
நீலங் கனிமதத்து
வருநுதற் பொட்டணங் குக்குயர்ந்
தோங்கும் மலர்க்குழலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`செல்வக் கம்பர்`` என்பதை முதலிற் கொண்டு, `அணங்குக்கு இடப்பாலது மதர்த்து நீலம் கனி கருமலர்கண்ணும், மொய் குழலும் எனவும் `நுதற் பொட்டும் (திகழும்)` எனவும் இயைத்துக் கொள்க.
``அருள் தன்மை`` என்பது, எல்லா உயிர்கள் மேலும் கொள்ளும் அருள் தன்மைக்கு அடையாளமாகிய சடையைக் குறித்தது.
``அருள் தன்மையை உடைய வலப்பால்`` என உடம்பொடு புணர்த்துக் கூறியனால், வலப்பால் சடையுண்மை பெறப்பட்டது.
கமலக்கண் - செந்தாமரை மலர்போலும் கண்.
இது செங்கண் ஆதலைக் குறித்தது.
`நெற்றியின்மேல் உள்ள கண்` என இயைக்க.
பிளவின் - (கீழிருந்து மேற் செல்லும்) கீற்றுப் போல்வதாய்த் தழல் திகழும் என்க.
அணங்குக்கு இடப்பாலது - உமைக்கு உரியதாகிய இடப்பக்கத்தில் உள்ளது.
மதர்த்து நீலம் கனி மருமலர்க் கண்ட களிப்புடையதாய் நீலம் மிகுந்த நீலமலர் போலும் கண்ணும்.
மலர்க் குழலும்.
மற்றும் நுதலிற் பொட்டும் திகழும் என்க.
முன்னர்ப் போந்த ``திகழும்`` என்பதை பொட்டிற்கும் கூட்டுக.
`இடப்பாலது` என்பதை `கண், குழல்` என்ப வற்றோடு தனித்தனி இயைக்க.
இப்பாட்டின் கருத்தும் முன்பாட்டின் கருத்தேயாம்.

பண் :

பாடல் எண் : 40

மலர்ந்த படத்துச்சி ஐந்தினுஞ்
செஞ்சுடர் மாமணிவிட்
டலர்ந்த மணிக்குண் டலம்வலக்
காதினில் ஆடிவரும்
நலந்திரு நீல்வயி ரம்வெயிற்
பாய நகுமணிகள்
கலந்தசெம் பொன்மக ரக்குழை
ஏகம்பர் காதிடமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``வலக் காதினில்`` என்பதுபோல, ``காதிடம்`` என்பதை மாற்றி, `இடக் காதினில்`` என விரித்துக் கொள்க.
படம், பாம்பின் படம்.
``வயிரம் வெயிற் பாய`` எனச் சினைவினை முதல் மேல் நின்றது.
நகும் - ஒளிவீசுகின்ற.
``குண்டலம், மகரக்குழை`` என்னும் இரண்டிற்கும் தனித்தனி, `உள்ளது` பயனிலை அவாய் நிலை யாய் நின்றன.
`ஆடி வரும் நலம்` என இயையும்.
மகரக் குழை மகளிர் அணிவதாதலை, ``மகரப் பகுவாய் தாழ மண்ணுறுத்து`` என்னும் திருமுருகாற்றுப்படையாலும் 1 உணர்க.
`நலத்திரு` என்பது மெலிந்து நின்றது.

பண் :

பாடல் எண் : 41

காதலைக் கும்வலத் தோள்பவ
ளக்குன்றம் அங்குயர்ந்து
போதலைக் கும்பனிப் பொன்மலை
நீற்றின் பொலியகலம்
தாதலைக் குங்குழல் சேர்பணைத்
தோள்நறுஞ் சாந்தணிந்து
சூதலைக் கும்முலை மார்பிடம்
ஏகம்பர் சுந்தரமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``வலம்`` என்பதை முதலிலும், ``இடம்`` என்பதை, ``தாதலைக்கும்`` என்பதற்கு முன்னும் கூட்டுக.
காது குண்டலத்தால் தோளை அலைக்கின்றது.
பவளக் குன்றம், பொன்மலை இவற்றின் பின், `போல` என உவம உருபு விரிக்க.
போது - பகலவன்.
அவனை அலைத்தலாவது, சுற்றிவரச் செய்தல்.
`போது அலைக்கும் பொன் மலை` என்க.
பனி, நீற்றுக்கு உவமை, ``உயர்ந்து`` என்பதன்பின் `நிற்கும்` என்பதும், `அகலம்` என்பதன்பின் `விளங்கும்` என்பதும் எஞ்சி நின்றன.
அகலம் - மார்பு.
``பொன்மலை`` என்றது அதன் அகலத்தை.
பணை - மூங்கில்.
``அணிந்து`` என்பதன்பின் `விளங்க` என்பது வருவிக்க.
சூது - சூதாடு கருவி `முலை சூது அலைக்கும்` என்க.
அலைத்தல் - வருத்துதல்.
சுந்தரம் - அழகு.
சுந்தரம் `ஏகம்பர் சுந்தரம், வலத் தோள் பவளக் குன்றம்போல உயர்ந்து விளங்கும்; வல மார்பு பனிப் பொன்மலை அகலம்போல் நீற்றின் விளங்கும் மூங்கில் போலும் இடத்தோள் சாந்தணிந்து விளங்கும்; இடமார்பு முலை சூது அலைக்கும்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 42

தரம்பொற் பழியும் உலகட்டி
எய்த்துத் தரந்தளரா
உரம்பொற் புடைய திருவயி
றாம்வலம் உம்பர்மும்மைப்
புரம்பொற் பழித்தகம் பர்க்குத்
தரத்திடு பூண்முலையும்
நிரம்பப் பொறாது தளரிள
வஞ்சியும் நேர்வுடைத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`உம்பர் மும்மைப்புரம் பொற்பு அழித்த கம்பர்க்கு வலம்` என மாற்றி, முதற்கண் வைக்க.
உம்பர்ப் புரம் - வானத்தில் உலாவும் கோட்டைகள்.
தரம் - தகுதி.
பொற்பு அழிதல் - அழகு அழிதல்.
`அட்டு` என்பது, `அட்டி` எனத் திரிந்து நின்றது.
அட்டு - அழித்து.
`எய்த்துத் தளரா உரம்` என்க.
உரம் - மார்பு.
``தரம் தளரா`` எனக் குணவினை குணிமேல் நின்றது.
`உரம் வயிறாம்` என்க.
வயிறாதலாவது, வயிறோடு ஒப்பதாம்.
உத்தரத்து - இடப்பக்கத்தில்.
இடு பூண் - இடப்பட்ட அணிகலங்களையுடைய.
நிரம்பப் பொறுத்தல் - கடைப்போகத் தாங்குதல்.
வஞ்சி - கொடி.
இஃது உவம ஆகுபெயராய், இடையைக் குறித்தது.
`உத்தரத்தில் முலையும், வஞ்சியும் நேர்தலை உடைத்து அவரது அழகு` என ஒரு சொல் வரு வித்து முடிக்க என்க.
நேர்தல் - பொருந்துதல்.

பண் :

பாடல் எண் : 43

உடைப்புலி ஆடையின் மேலுர
கக்கச்சு வீக்கிமுஞ்சி
வடத்தொரு கோவணந் தோன்றும்
அரைவலம் மற்றையல்குல்
தொடக்குறு காஞ்சித் தொடுத்த
அரசிலை தூநுண்துகில்
அடல்பொலி ஏறுடை ஏகம்பம்
மேய அடிகளுக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அடை`` என்பது, `துணி` என்னும் அளவாய் நின்றது.
ஈற்றடியை முதலிற் கூட்டி, அதன்பின் ``வலம்`` என்பதில் `வலத்தின்கண்` என ஏழாவது விரித்துச் சேர்க்க.
புலி - புலித்தோல்.
உரகம் - பாம்பு.
வீக்கி - இறுகக் கட்டி.
கட்டி - கட்டப்பட்டு.
முஞ்சி வடம் - தருப்பைக் கயிறு.
மற்றை அல்குல் - இடப்பக்கத்தில் உள்ள பிருட்டத்தில்.
காஞ்சி - பலவாகிய மணிவடங்களின் தொங்கல்கள்.
`காஞ்சியின்கண் தொடுத்த` என்க.
அரசிலை - அரசிலை வடிவாகச் செய்து கோக்கப்பட்டவை.
``கோவணம்`` என்பதன் பின் உள்ள ``தோன்றும்`` என்பதை, ``துகில்`` என்பதன் பின்னும் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 44

அடிவலப் பாலது செந்தா
மரையொத் ததிர்கழல்சூழ்ந்
திடிகுரற் கூற்றின் எருத்திற
வைத்த திளந்தளிரின்
அடியிடப் பாலது பஞ்சுற
அஞ்சுஞ் சிலம்பணிந்த
வடிவுடைத் தார்கச்சி ஏகம்பம்
மேய வரதருக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கச்சி ஏகம்பம் மேய வரதருக்கு வலப்பாலது ஆகிய அடி.
கழல் சூழ்ந்து, கூற்றின் எருத்து இற வைத்தது; இடப்பாலது ஆகிய அடி பஞ்சு உற இளந்தளிரின் அஞ்சும்; மற்றும் சிலம்பு அணிந்த வடிவுடைத்து` என இயைத்துக் கொள்க.
அதிர் கழல் - ஒலிக்கின்ற வீரக்கழல்.
சூழ்ந்து - சூழப்பட்டு.
இடி குரல் - இடிக்கின்ற குரல்.
எருத்து - பிடரி.
இற - ஒடியும்படி.
``வைத்தது`` எனச் செயப்படுபொருள் வினை முதல்போலக் கூறப் பட்டது.
வடிவு - அழகு.
ஆர் கச்சி - பல வளங்களும் நிறைந்த கச்சி.
வரதர் - வரத்தைக் கொடுப்பவர்.
``கற்றைப் பவளச் சடை`` என்னும் பாட்டு முதலாக இதுகாறும் இறைவரது மாதொரு பாதி வடிவமே புகழப்பட்டது.

பண் :

பாடல் எண் : 45

தருக்கவற் றான் மிக்க முப்புரம்
எய்தயன் தன்தலையை
நெருக்கவற் றோட மழுவாள்
விசைத்தது நெற்களென்றும்
பருக்கவற் றாங்கச்சி ஏகம்பர்
அத்தர்தம் பாம்புகளின்
திருக்கவற் றாலிட் டருளும்
கடகத் திருக்கரமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`திருக்கரம் முப்புரம் எய்து, மழு வாள் விசைத்தது` என வினை முடிக்க.
தருக்கிற்கு ஏதுவாம் பொருள்களின் பன்மை பற்றித் தருக்கினை, ``தருக்கு அவற்றால்`` எனப் பன்மையாற் கூறினார்.
``தலை ஐ`` என்பதை `ஐந்தலை` என மாற்றிக்கொள்க.
`நெருக்கு அவற்றின்றும் ஓட` என ஐந்தாவது விரித்து, ``ஓட`` என்பதற்கு, `சில` என்னும் வினை முதல் வருவித்துக் கொள்க.
`தக்கன் வேள்வியில் பிரமனும் தலை வெட்டப்பட்டான்` என வரலாறு உண்டு.
``அரி அயன் தலை வெட்டி வட்டாடினார்`` 1 என்னும் அப்பர் திருமொழியில் அரியது தலையும் வெட்டப்பட்டதாக வந்துள்ளது.
தக்கன் வேள்விப் பொழுதில் அயன் ஐந்தலையுடன் இருந்ததாகக் கொள்க.
அன்றி, `ஐ-அழகு` எனினும் ஆம், மழு வாள் - மழுவாகிய படைக்கலம்.
விசைத்தது - வீசிற்று.
நெற்கள் - நெற்பயிர்கள் `பருப் பிக்க` என்பதில் பிறவினை விகுதி தொகுக்கப்பட்டு, ``பருக்க`` என வந்தது.
அன்றி, `பருத்தற்கு ஏதுவாய் வலியுடைத்து` எனினும் ஆம்.
`பாம்புகளின் திருக்கு அவற்றால் ஆக்கி` என ஒரு சொல் வருவித்துக் கொள்க.
கடகம் - தோள்வளை.
மழுவை வீசும் வலிமை தோளுக்கு ஆதல் பற்றிக் கடகத்தையே கூறினார்.

பண் :

பாடல் எண் : 46

கரத்தத் தமருகத் தோசை
கடுத்தண்டம் மீபிளப்ப
அரத்தத்த பாதம் நெரித்திட்
டவனி தலம்நெரியத்
தரத்தத் திசைகளுக் கப்புறம்
போர்ப்பச் சடைவிரித்து
வரத்தைத் தருகம்பர்
ஆடுவர் எல்லியும் மாநடமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வரத்தைத் தரு கம்பர் தமருகத்து ஓசை அண்ட மீப் பிளப்ப, பாதம் அவனி தலம் நெறிய நெரித்திட்டு, திசைகளுக்கு அப்புறம் போர்ப்பச் சடை விரித்து எல்லியும் மா நடம் ஆடுவர்` என இயைத்து முடிக்க.
அவ்வோசை - தமருகத்தினின்றும் எழுந்த அந்த ஓசை.
கடுத்து - மிகுந்து.
மீ - மேலிடம்.
அரத்தம் - சிவப்பு.
அரத்தத்தை - சிவந்த நிறத்தை யுடைய.
அவனி தலம் - பூ தலம்.
`தரத்து ஆக` என ஒரு சொல் வருவிக்க.
தாம் - மேன்மை எல்லி - இரவு `பகலே அன்றி இரவும்` என உம்மை இறந்தது தழுவிற்று.
எனவே, `எப்பொழுதும்` என்றதாம்.
திருநடனத்தை வியந்தவாறு.

பண் :

பாடல் எண் : 47

நடனம் பிரானுகந் துய்யக்கொண்
டானென்று நான்மறையோர்
உடன்வந்து மூவா யிரவர்
இறைஞ்சி நிறைந்தஉண்மைக்
கடனன்றி மற்றறி யாத்தில்லை
அம்பலங் காளத்தியாம்
இடமெம் பிரான்கச்சி ஏகம்பம்
மேயாற் கினியனவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கச்சி ஏகம்பம் மேயாற்கும் இனியனவான இடம் மூவாயிரவர் இறைஞ்சி, (காரணம்) அன்பு அன்றி மற்று அறியாத தில்லையம்பலமும், (அத்தன்மைத்தாகிய) காளத்தியுமே` என்க - `நம் பிரான் (உலகம்) உய்ய நடன் உகந்து கொண்டான்` - என்று இறைஞ்சி` என இயைக்க.
`நம் பெருமான் உலகம் உய்ய நடனம் ஆடுதற்கு இத் தில்லையம்பலத்தையே இடமாக உகந்து கொண்டான்` என்று அவ்வருளை நினைந்து மூவாயிரவர்.
பிறிது காரணம் இன்றி அன்பே காரணமாக அப்பெருமானை இறைஞ்சுகின்றனர் என்றபடி.
உலக நலம் கருதினாராயினும் அது தந்நலம் கருதல் அன்மையின் `அன்பே காரணமாக` என்றார்.
கண்ணப்ப நாயனாரது வழிபாட்டிற்கு அன்பன்றிப் பிறிது காரணம் இல்லாமை உலகம் அறிந்ததாகலின் அதனை எடுத்தோதாது, குறிப்பால் தோன்ற வைத்து, வாளா, ``காளத்தி`` என்றார்.
`அம்பலமும், காளத்தியும்` என எண்ணும்மை விரிக்க.
`உமை யம்மை வழிபாட்டிற்கு அன்பன்றி வேறு காரணம் உண்டுகொலோ` என்னும் ஐயத்திற்கே இடம் இல்லாமையால், அங்ஙனம் அன்பே காரணமாக ``என்றும் ஏத்தி வழிபடப்படும்`` 1 பெருமான் கச்சி ஏகம்பப் பெருமான் என்பது உடம்பொடு புணர்த்தலால் தோன்ற, ``ஏகம்பம் மேயாற்கு இனியனவான இடம் அன்பின் கடன் அன்றி மற்று அறியாத் தில்லையம்பலமும், காளத்தியுமே`` என்றார்.
இதனால் பயன் கருதாது செய்யும் நிட்காமிய வழிபாடே சிறப்புடைத் தாதல் குறித்தவாறு.
நடன் - நடம்.
மகரத்திற்கு னகரம் போலி.

பண் :

பாடல் எண் : 48

இனியவர் இன்னார் அவரையொப்
பார்பிறர் என்னவொண்ணாத்
தனியவர் தையல் உடனாம்
உருவர் அறம்பணித்த
முனியவர் ஏறும் உகந்தமுக்
கண்ணவர் சண்டியன்புக்
கினியவர் காய்மழு வாட்படை
யார்கச்சி ஏகம்பரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கச்சி ஏகம்பர்`` என்பதை முதலிற் கூட்டி, அதன் பின், ``அவரை ஒப்பார் பிறர்`` என்பதையும் சேர்க்க ``இன்னார்`` என்பது, `இன்ன சிறப்பியல்பை உடையவர்` என்னும் பொருட்டாய், ஒருவரையே வரைந்துணர்த்தும் குறிப்பு வினைப் பெயர்.
தனியர் - ஒப்பற்றவர்.
``முனியவர்`` என்பது, `முனிவர்` என்பதில் ஓர் அகரம் விரிந்து நின்ற பெயர்.
சண்டி - சண்டேசுர நாயனார்.
``மழுவாள்`` என்பது ஒரு பெயராய், ``படை`` என்பதனோடு இருபெயரொட்டாய்த் தொக்கது, ``இடைச்சொற் கிளவி`` 2 என்பதுபோல, ``தையல் உடனாம் உருவர்`` என்றதனால், `அருள் உடையர்` என்பதும், ``அறம் பணித்த முனியவர்`` என்பதனால் ``யாவர்க்கும் முதல் ஆசிரியர்`` என்பதும், ``ஏறும் உகந்தவர்`` என்பதனால், தாம்பணித்த அறத்தை நடத்துபவரும் தாமே`` என்பதும், (ஏறு - அறவிடை.
``ஏறும்`` என்னும் சிறப்பும்மை ``உகந்தவர்`` என்பதனோடே இயையும்.
``உகந்த`` என்றாராயினும் `உகந்தவர்` என்பதே கருத்து என்க.
) ``முக்கண்ணர்`` என்பதனால், `உலகிற்கு முச்சுடரானும் ஒளி வழங்குபவர்` என்பதும், ``சண்டீசர் அன்புக்கு இனியவர்`` என்பதனால், `தம்மையே உண்மை உறவாகக் கொள்பவர்க்கு இனியர்` என்பதும் குறிக்கப்பட்டன.
``மழுவாட் படையார்`` என்றது சண்டிக்கு உதவியவாற்றைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 49

பரவித் தனைநினை யக்கச்சி
ஏகம்பர் பண்ணும்மையல்
வரவித் தனைஉள்ள எங்கறிந்
தேன்முன் அவர்மகனார்
புரவித் தனையடிக் கக்கொடி
தாய்விடி யாவிரவில்
அரவித் தனையுங்கொண் டார்மட
வார்முன்றில் ஆட்டிடவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``இத்தனை`` என்பன மூன்றும், `மிகுதி` என்னும் பொருளையே குறித்தன.
தனை - தன்னை; இது பன்மை யொருமை மயக்கம்.
வரவு - வருகை.
``எங்கு அறிந்தேன்`` என்றது, `எங்கும் அறிந்திலேன்` என்னும் பொருளைக் குறிப்பால் உணர்த்தின.
அவர் மகனார் முருகப் பெருமான்.
அவர் புரவு - அவரால் புரக்கப்படுவ தொன்று; அஃது அவர் கொடியாகிய கோழி.
அடித்தல் - அழைத்தல்.
அழித்தலை, `அடித்துக்கொண்டேன்` என்றல் வழக்கு.
அழைத்தல் பகலவனை.
`இரவில் மடவார் முன்றிலில் ஆட்டிட அரவு இத்தனை யும் கொண்டார்` என்க.
`ஆடும் பாம்பை ஆட்டுவார் இனிய இசை வழியாக ஆட்டுவர் ஆதலின், ஏகம்பர் அரவம் பூண்டதும் அவற்றை ஆட்டுவார்போல இசையால் மடவாரை மயக்குதற்கே` என, அவர்பால் மையல் கொண்டாள் ஒருத்தி மயங்கிக் கூறினாள்.
அவர் ஆடுவது இரவிலேயாகலின், `ஆட்டுவதும் இரவிலே` என்றாள்.

பண் :

பாடல் எண் : 50

இடவம் கறுக்கெனப் பாயுமுஞ்
சென்னி நகுதலைகண்
டிடவஞ் சுவர்மட வாரிரி
கின்றனர் ஏகம்பத்தீர்
படமஞ்சு வாயது நாகம்
இரைக்கும் அதனுக்குமுற்
படமஞ் சுவரெங்ங னேபலி
வந்திடும் பாங்குகளே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பிச்சைக்குச் செல்லும் பொழுது முருட்டுக் காளை மேல் ஏறி, வெற்றெலும்பாய் உள்ள தலையை அணிந்து, ஐந்தலை நாகத்தை மேலெல்லாம் பூண்டு கொண்டு சென்றால் பெண்கள் எப்படி அஞ்சாது வந்துஇடுவர்` என்பது இதன் திரண்ட பொருள்.
இடவம் - இடபம்.
`கறுக்கென` என்பது காலை.
விரைவு உணர்த்துவதோர் `என` என் எச்சம்.
இரிகின்றனர் - ஓடுகின்றார்கள்.
`படத்தின்கண் அஞ்சு வாய்களை உடையதாகிய நாகம்` என்க.
`அதனுக்கு அஞ்சுவர்` என இயையும்.
பாங்குகள் - தன்மைகள்.
`எங்ஙன் உளவாகும்` என ஒரு சொல் வருவித்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 51

பாங்குடை கோள்புலி யின்னதள்
கொண்டீர்நும் பாரிடங்கள்
தாங்குடை கொள்ளப் பலிகொள்ள
வந்தீர் தடக்கமலம்
பூங்குடை கொள்ளப் புனற்கச்சி
ஏகம்பம் கோயில்கொண்டீர்
ஈங்கிடை கொள்ளக் கலைகொள்ள
வந்தீர் இடைகுமின்றே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது திருவேகம்பரது பலியேல் கோலத்தைக் கண்டு மையல் உற்றாள் ஒருத்தியது கூற்று.
``கொண்டீர்`` என்பன விளிகள்.
பாங்கு உடை கோள் புலி அதள் கொண்டீர் - பக்கங்களில் பொருந்தும் உடையைக் கொள்ளுதலைப் புலித் தோலாகக் கொண்டவரே.
பாரிடங்கள் - பூதங்கள்.
தாம், அசை.
குடை கொள்ள - குடையை ஏந்திப் பிடிக்க.
தடக் கமலம் - பொய்கையில் உள்ள தாமரைக் கொடி.
பூங்குடை கொள்ள - பூவாகிய குடையைப் பிடிக்க.
இஃது உருவகம்.
`பலிகொள்ள வந்தீர்போல வந்தீர்; (ஆயினும் உண்மை அதுவன்று;) இடை கொள் அக்கலை கொள்ளவே ஈங்கு வந்தீர்` என்க.
கலை - உடை `கலைகொள்ளவே` எனப் பிரிநிலை ஏகாரம் விரிக்க, இன்று இடைக்கும் - இன்று யாம் உமக்குத் தோற்கின்றோம்.
`ஆதலின் திருவுளம் இரங்கிக் கலையினைத் தாரும்` என்பது குறிப்பெச்சம்.
`தடங்கமலம், இடைக்கும்` என்பன பாடம் அல்ல.

பண் :

பாடல் எண் : 52

இடைக்குமின் தோற்கும் இணைமுலை
யாய்முதியார்கள் தஞ்சொல்
கடைக்கண்நன் றாங்கச்சி
ஏகம்பர் ஐயங் கொளக்கடவும்
விடைக்குமுன் தோற்றநில் லேநின்
றினியிந்த மொய்குழலார்
கிடைக்குமுன் தோற்றநஞ் சங்கிது
வோதங் கிறித்துவமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது, கைக்கிளைக்கண் தலைவி தலைவனை எய்த மாட்டாமையைத் தோழி கூறி அவளை விலக்கியது.
இஃது அகப் புறக் கைக்கிளையாகாது, பாடான் திணையில் வரும் புறப்புறக் கைக்கிளை யாதலின் இதன்கண் இன்னோரன்ன துறைகள் வரப்பெறும் என்க.
மின் - மின்னல்.
முதியோர்கள்தம் சொல் கடைக்கண் நன்றாம் - பெரியோர்கள் சொல்லும் சொல்லின் பயன் காரிய முடிவில் விளங்கும் (தொடக்கத்தில் தெரியாது; செய்து பார்த்தால் தெரியும்.
) ஐயம் - பிச்சை.
கடவும் விடை - செலுத்தி வரும் இடபம்.
தோற்ற - அவர் கண் காண.
நில்லேல் - நிற்காதே.
(ஏனெனில்,) இந்த மொய்குழலார் இனிமுன் நின்று சங்க வளையல்களை இழந்தனர்.
தம் கிறித்துவம் - அவரது பொய்த் தன்மை; வஞ்சனை ஓ இது - ஆ! இது.
கிடைத்தல் - எதிர்ப்படுதல்.
`கிடைக்கும் முன் தோற்றனர்` என்றது.
`அம்பு படும் முன் தலை துணிந்தது என்றல்போல.
`காரியம் முந்துறூஉம் காரண நிலை` என்னும் அதிசய அணி.

பண் :

பாடல் எண் : 53

கிறிபல பேசிச் சதிரால்
நடந்து விடங்குபடக்
குறிபல பாடிக் குளிர்கச்சி
ஏகம்பர் ஐயங்கொள்ள
நெறிபல வார்குழ லார்மெலி
வுற்ற நெடுந்தெருவில்
செறிபல வெள்வளை போயின
தாயர்கள் தேடுவரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கிறி - பொய்; வஞ்சனை.
அது, `பலியிடுமின்; பலியிடுமின்` எனக் கூறுதல்.
சதிரால் - பெருமையுடன்` மிடுக்குடன்.
கருத்து, விடங்கு பட - அழகு உண்டாக.
குறி - தாள அறுதி.
`குறி பல வற்றொடு` என ஒடு உருபு விரிக்க.
அன்றி, ``குறி`` என்பது ஆகு பெய ராய் அதனையுடைய பாட்டைக் குறித்தது என்றலும் ஆம்.
`ஏகம்பர் பிச்சை யேற்றுக் கொண்டு வர குழலார் மெலிவுற்றனர்` என்க.
நெறி - நெறிப்பு.
`நெறி குழல், பல குழல், வார் குழல்` எனத் தனி இயையும்.
வெள் வளை - சங்கவளையல்.
தாயர்கள் - செவிலித் தாயர்.
தெருவில் சிந்திப்போன வளையல்களைத் தாயர் தேடுதல்.
தம் மகளிர் முதலியோரது மானத்தைக் காத்தற் பொருட்டாம்.
இது, கண்டோர் கூற்று.

பண் :

பாடல் எண் : 54

தேடுற் றிலகள்ள நோக்கந்
தெரிந்தில சொற்கள்முடி
கூடுற் றிலகுழல் கொங்கை
பொடித்தில கூறுமிவள்
மாடுற் றிலமணி யின்மட
வல்குலும் மற்றிவள்பால்
நாடுற் றிலவெழில் ஏகம்ப
னார்க்குள்ளம் நல்கிடத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது, காமம் சாலாப் பெதும்பைப் பருவத்தளாயினும் கச்சி ஏகம்பர்பால் காதல் கொண்டாள் ஒருத்திதன் செவிலித் தாய், `இவளது பருவம் இன்மை காரணமாக அப்பெருமான் இவளை நினை யான் ஆகலின், இவள் ஆற்றுமாறு என்னை` எனக் கவன்று கூறியது.
இஃது உண்மையில், சத்தி நிபாதம் இன்மையால் உலகியலின் நீங்கப் பெறாதவரும் சில வேளைகளில் அவ்வியலிற்றானே ஞான வேட்கை உடையராதலையும், ஆயினும் அது கடைபோகாமையும் குறிக்கும்.
``தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால்`` 1 என்றார் திருவள்ளுவரும்.
``இவள்`` என்பதை நோக்கம் முதலியவற்றிற்கும் வருவிக்க.
நோக்கம் - பார்வை.
கள்ளம் தேடுற்றில - உள்ளக் குறிப்பை மறைக்கும் நிலைமை பிறரால் ஆராயப்படும் தன்மையை அடைய வில்லை.
சொற்கள் தெரிந்தில - பேசும் சொற்கள் பொருள் இனிது விளங்கவில்லை.
முடி - தலையில், குழல் கூடிற்றில - மயிர்கள் யாவும் நீண்டு வளர்ந்து முனை ஒக்க ஒன்று கூடவில்லை.
கொங்கை பொடித் தில - கொங்கைகள் புளகம் கொள்ளும் அளவிற்கு வளரவில்லை.
``மணி`` என்றது இவளையே.
மடம் - இளமை.
அல்குல் - பிருட்டங்கள்.
இவள் மாடு உற்றில - இவளது இரண்டு பக்கங்களிலும் உயர வளரவில்லை.
`பருவம் எய்தின் இவையெல்லாம் உளவாம்` என்றபடி.
மற்று, அசை.
நல்கு இடத்து - அருள் பண்ணும் பொழுது.
`ஏகம்பனார்க்கு இவள்பால் உள்ளம் நாடிற்றில` என்க.
உள்ளம் - உள்ளத்தில் எழும் எண்ணங்கள்; ஆகுபெயர்.
`இனி என் செய்வது` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 55

நல்கும் புகழ்க்கட வூர்நன்
மறையவன் உய்யநண்ணிக்
கொல்கின்ற கூற்றைக் குமைத்தவெங்
கூற்றம் குளிர்திரைகள்
மல்கும் திருமறைக் காட்டமிர்
தென்றும் மலைமகள்தான்
புல்கும் பொழிற்கச்சி ஏகம்பம்
மேவிய பொன்மலையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மறையவன், மார்க்கண்டேயர்.
``கூற்றைக் குமைத்த கூற்றம்`` என்றது, `கால காலன்` என்றபடி.
பொன், வெண் பொன், `திருக்கடவூர்க் கால காலனும், திருமறைக்காட்டு அமிர்தும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கும் கயிலை மலையாவது, மலைமகள் என்றும் புல்கும் கச்சி ஏகம்பம்` என இயைத்து முடிக்க.
திருவேகம்பத்தின் சிறப்புணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 56

மலையத் தகத்தியன் அர்ச்சிக்க
மன்னி வடகயிலை
நிலையத் தமரர் தொழவிருந்
தான்நெடு மேருவென்னும்
சிலையத்தன் பைம்பொன் மதில்திரு
ஏகம்பத் தான்திகழ்நீர்
அலையத் தடம்பொன்னி சூழ்திரு
வையாற் றருமணியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மலயம், `மலையம்` எனப் போலியாயிற்று.
`மன்னித் தொழ இருந்தான்` என இயையும்.
மலயம் - பொதிய மலை.
`நந்தி பெருமான் காரணத்தால் திருஐயாறும், அம்மை வழிபடும் ஏகம்பத்தோடு ஒத்ததாகும்` என்றற்கு.
``திருஐயாற்று அருமணி` என்பதையும் உடன் கூறினார்.
`வடகயிலை நிலையத்து இருந்தானே ஏகம்பத்தானும், ஐயாற்று அருமணியுமாய் இருந்தான்` என்னாது, `ஏகம்பத்தானும், ஐயாற்று அருமணியும் ஆனவனே வடகயிலை நிலையத்து இருந்தான்` என்றது, தெளிவு மிகுதற் பொருட்டு.

பண் :

பாடல் எண் : 57

மணியார் அருவித் தடமிம
யங்குடக் கொல்லிகல்லின்
திணியார் அருவியின் ஆர்த்த
சிராமலை ஐவனங்கள்
அணியார் அருவி கவர்கிளி
ஒப்பும்இன் சாரல்விந்தம்
பணிவார் அருவினை தீர்க்குமே
கம்பர் பருப்பதமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஏகம்பர் பருப்பதம் இமயம், கொல்லி, சிராமலை, விந்தம்` என்க.
இறைவர் எழுந்தருளியுள்ள சிறந்த சில மலைகளைக் குறித்தவாறு.
தட - பெரிய `குடக்கு` என்பது ஈறு கெட்டுப் புணர்ந்தது.
குடக்கு - மேற்கு.
ஐவனம் - மூங்கில் நெல் `ஐவனங்களையும், அருவியையும் உடைய சாரல்` எனவும், `கிளி ஒப்பு சாரல்` எனவும் இயைத்துக் கொள்க.
`தினையைக் கவர்கின்ற கிளியை மடவார் ஓப்பும்` வேண்டும் சொற்கள் வருவித்துக்கொள்க.
பருப்பதம் - மலை.

பண் :

பாடல் எண் : 58

பருப்பதம் சார்தவழ் மந்தரம்
இந்திர நீலம்வெள்ளை
மருப்பதங் கார்கருங் குன்றியங்
கும்பரங் குன்றம்வில்லார்
நெருப்பதங் காகுதி நாறும்
மகேந்திரம் என்றிவற்றில்
இருப்பதங் காவுகந் தான்கச்சி
ஏகம்பத் தெம்மிறையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பருப்பதம் - திருப்பருப்பதம் (ஷ்ரீ சைலம்) இந்திர நீலம் - இந்திர நீலப் பருப்பதம், இவற்றோடு திருப்பரங்குன்றம் இவை மூன்றும் தேவாரம் பெற்றவை.
மகேந்திரமலை திருவாசகத்தில் சொல்லப்பட்டது.
மந்தர மலை புராணங்களால் புகழப்பட்டது.
இப்பாட்டும் முன்னைப் பாட்டோடு ஓத்தது.
மருப்பு - தந்தம் ``மருப்பது, நெருப்பது`` என்பவற்றில் ``அது``, பகுதிப்பொருள் விகுதி.
அவற்றை அடுத்துள்ள `அங்கு` என்பன.
ஆர் - பொருந்திய.
வெள்ளைத் தந்தம் பொருந்திய கருங் குன்று, யானை, வில் ஆர் - ஒளி பொருந்திய.
ஆகுதி, வேள்வித் தீயில் சொரியப்படும் பொருள்கள்.
இருப்பது - இருக்கும் இடம்.
`ஏகம்பத்து எம் இறை பருப்பதம் முதலிய மலைகளில் இருப்பிடம் அவ்விடத்ததாக உகந்தான்` என வினை முடிக்க.

பண் :

பாடல் எண் : 59

இறைத்தார் புரமெய்த வில்லிமை
நல்லிம வான்மகட்கு
மறைத்தார் கருங்குன்றம் வெண்குன்றம்
செங்குன்ற மன்னற்குன்றம்
நிறைத்தார் நெடுங்குன்றம் நீள்கழுக்
குன்றமென் தீவினைகள்
குறைத்தார் முதுகுன்றம் ஏகம்பர்
குன்றென்று கூறுமினே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``இறைத்தார்.
.
.
மறைத்தார்`` என்பதை ``ஏகம்பர்`` என்பதற்கு முன்னே கூட்டுக.
இறைத்து ஆர் வில் இமை.
மிகுதியாக விசைத்து நிறைந்த வில்லின்தொடுப்பு; அம்புக் கூட்டம், `அதனை இமவான்மகட்கு மறைத்தார்` என்றது தாம் தனியே சென்று போர் செய்தார்` என்றபடி.
``கருங்குன்றம்`` முதலிய நான்கும் ஏனைக் கழுக்குன்றம், முதுகுன்றம் போலச் சில தலங்கள் போலும்! `குன்று` எனப் பெயர் பெற்ற தலங்களைக் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 60

கூறுமின் தொண்டர்குற் றாலம்நெய்த்
தானம் துருத்தியம்பேர்
தேறுமின் வேள்விக் குடிதிருத்
தோணி புரம்பழனம்
ஆறுமின் போல்சடை வைத்தவன்
ஆரூர் இடைமருதென்
றேறுமின் நீரெம் பிரான்கச்சி
ஏகம்பம் முன்நினைந்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`முன் ஏகம்பம் நினைந்து, (பின்) திருக்குற்றாலம் முதலிய தலங்களை அடைந்து வணங்குங்கள்; துதியுங்கள்; தெளியுங்கள்` என்க.
``தொண்டர்``, விளி.
``என்று`` எண்ணிடைச் சொல்.

பண் :

பாடல் எண் : 61

நினைவார்க் கருளும் பிரான்திருச்
சோற்றுத் துறைநியமம்
புனைவார் சடையோன் புகலூர்
புறம்பயம் பூவணம்நீர்ப்
பனைவார் பொழில்திரு வெண்காடு
பாச்சில் அதிகையென்று
நினைவார் தருநெஞ்சி னீர்கச்சி
ஏகம்பம் நண்ணுமினே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நியமம் - பரி தியம்.
நீர்ப் பனை வார் பொழில் - கடற் கரையில் பனை மரங்கள் நீள்கின்ற பொழிலையுடைய.
பாச்சில் திருப்பாச்சிலாசிராமம்.
அதிகை - திருவதிகை.
நினைவு ஆர் தரு நெஞ்சின் - நினைதல் பொருந்திய நெஞ்சினோடு.
நீர் - நீவிர்.

பண் :

பாடல் எண் : 62

நண்ணிப் பரவுந் திருவா
வடுதுறை நல்லம்நல்லூர்
மண்ணில் பொலிகடம் பூர்கடம்
பந்துறை மன்னுபுன்கூர்
எண்ணற் கரிய பராய்த்துறை
ஏர்கொள் எதிர்கொள்பாடி
கண்ணிப் பிறைச்சடை யோன்கச்சி
ஏகம்பம் காண்மின்சென்றே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

பண் :

பாடல் எண் : 63

சென்றே விண்ணுறும் அண்ணா
மலைதிகழ் வல்லம்மென்பூ
வின்தேறல் பாய்திரு மாற்பேறு
பாசூர் எழிலழுந்தூர்
வன்தே ரவன்திரு விற்பெரும்
பேறு மதிலொற்றியூர்
நின்றேர் தருகச்சி ஏகம்பம்
மேயார் நிலாவியவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நின்று - என்றும் நிலைபெற்று நின்று.
ஏர் தரு கச்சி.
அழகைத் தருகின்ற கச்சி.
நிலாவிய - விளங்குகின்ற தலங்கள் அண்ணாமலை முதலியன என்க.
தேறல் - தேன் அழுந்தூர் - திருவழுந்தூர்.
இஃது இப்பொழுது `தேரழுந்தூர்` என வழங்குகின்றது.
வன் தேரவன் - திரிபுரத்தை எரித்தற்கு ஏறிச் சென்ற வலிய தேரை உடையவன்.
திருவில் பெரும் பேறு - `திருவில்` என்னும் பெயராகிய பெரிய பேற்றைப் பெற்ற தலம்; திருவிற்கோலம் இஃது இப்பொழுது கூவம்` என வழங்குகின்றது.
ஒற்றியூர் - திருஒற்றியூர்.

பண் :

பாடல் எண் : 64

நிலாவு புகழ்த்திரு வோத்தூர்
திருஆமாத் தூர்நிறைநீர்
சுலாவு சடையோன் புலிவலம்
வில்வலம் கொச்சைதொண்டர்
குலாவு திருப்பனங் காடுநன்
மாகறல் கூற்றம்வந்தால்
அலாயென் றடியார்க் கருள்புரி
ஏகம்பர் ஆலயமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திருப்புலிவலம், வில்வலம் இவை வைப்புத் தலங்கள்.
கொச்சை - சீகாழி.
இது முன்பு `திருத் தோணிபுரம்` எனச் சொல்லப்பட்டது.
(60) திருப்பனங்காடு - பனங்காட்டூர்.
`புறவார் பனங்காட்டூர் வன்பார்த்தான் பனங்காட்டூர்` என இரண்டு தலங்கள் உள்ளன.
`அலாய்` என்று - `நீ அணுகற்பாலை அல்லை` என்று.
`ஏகம்பர் ஆலயம் திருஓத்தூர் முதலியன என்க.

பண் :

பாடல் எண் : 65

ஆலையங் கார்கரு காவைகச்
சூர்திருக் காரிகரை
வேலையங் கேறு திருவான்மி
யூர்திரு ஊறல்மிக்க
சோலையங் கார்திருப் போந்தைமுக்
கோணம் தொடர்கடுக்கை
மாலையன் வாழ்திரு வாலங்கா
டேகம்பம் வாழ்த்துமினே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அங்கு` என்பன யாவும் அசைகள்.
ஆலை ஆர் - கரும்பு ஆலைகள் நிறைந்த.
கருகாவை - திருக்கருகாவூர், திருக் காரிகரை ஒரு வைப்புத் தலம்.
வேலை - கடல்.
திருஊறல் இப்பொழுது `தக்கோலம்` என வழங்குகின்றது.
திருப்போந்தை - திருப்பனந்தாள்.
முக்கோணம் - திரிகோண மலை; இலங்கைத் தலம்.
கடுக்கை - கொன்றை.

பண் :

பாடல் எண் : 66

வாழப் பெரிதெமக் கின்னருள்
செய்யும் மலர்க்கழலோர்
தாழச் சடைத்திரு ஏகம்பர்
தம்மைத் தொழாதவர்போய்
வாழப் பரற்சுரம் ஆற்றா
தளிரடி பூங்குழலெம்
ஏழைக் கிடையிறுக் குங்குய
பாரம் இயக்குறினே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு உடன் போக்கில், செவிலி புலம்பல் துறையது, பூங்குழல் எம் ஏழை - பூவை யணிந்த கூந்தலை யுடைய எங்கள் பெண்ணை.
இயக்குறின் - தலைவன் நடத்திச் சென்றால்.
ஏகம்ப நாதரை வணங்காதவரே சென்று வாழ்தற்குரிய அந்தப் பரற்கற்கள் நிறைந்த பாலை நிலத்தின் கொடுமையை அவளது மாந்தளிர் போலும் பாதங்கள் பொறுக்க மாட்டா.
குயபாரம் (தன பாரம்) இடையை ஒடித்து விடும்.
`நாங்கள் எங்ஙனம் ஆற்றுவோம்` என்பது குறிப்பெச்சம்.
தாழ் - நீண்டு தொங்குகின்ற, தம், சாரியை.
சுரம் - பாலை.
பரல் - பரற் கற்கள்.

பண் :

பாடல் எண் : 67

உறுகின்ற வெவ்வழல் அக்கடம்
இக்கொடிக் குன்பின்வரப்
பெறுகின்ற வண்மையி னாலைய
பேரருள் ஏகம்பனார்
துறுகின்ற மென்மலர்த் தண்பொழிற்
கச்சியைச் சூழ்ந்திளையோர்
குறுகின்ற பூங்குவ ளைக்குறுந்
தண்பணை என்றுகொளே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டுத் தோழி தலைவனைப் போக்கு உடன் படுவித்தது.
``ஐய`` என்பதை முதலிற் கொள்க.
அக் கடம் - அந்தப் பாலைநிலம்.
உன்பின் வரப்பெறுகின்ற வன்மையினால், இக் கொடிக்கு (கொடி போன்றவளாகிய இவளுக்கு) ஏகம்பனார் கச்சியைச் சூழ்ந்து உறும் தண் பணை என்று கொள்` என முடிக்க.
துறுகின்ற - நெருங்குகின்ற.
இளையோர் - இளம் பெண்கள்.
குறுகின்ற- பறிக்கின்ற.
தண்பனை - குளிர்ந்த மருத நிலம்.

பண் :

பாடல் எண் : 68

கொள்ளுங் கடுங்கதி ரிற்கள்ளி
தீச்சில வேயுலறி
விள்ளும் வெடிபடும் பாலையென்
பாவை விடலைபின்னே
தெள்ளும் புனற்கச்சி யுற்திரு
ஏகம்பர் சேவடியை
உள்ளும் அதுமறந் தாரெனப்
போவ துரைப்பரிதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதுவும் உடன் போக்கில் செவிலி புலம்பல் துறையது.
`பாலை தீச்சில (உடையது;) வேய் வெடி படும்` என இயைக்க.
கடுங் கதிரின் - கடுமையான பகலவனது கிரணங்களால், கள்ளித் தீ - கள்ளிச் செடிகள் காய்ந்து எரிகின்ற தீ.
(அத்தீயால்) வேய்- மூங்கில்.
உலறி - காய்ந்து விள்ளும்.
வெடி படும் - பிளக்கின்ற வெடியோசை முழங்கும்.
``பாலை படும்`` என, இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் ஏற்றபட்டது.
`அதில் என் பாவை போவது உரைப்பரிது` என முடிக்க.
விடலை - காளைப் பருவத்தன்.
`ஏகம்பர் சேவடியை உள்ளும் அது (நினைக்கின்ற அந்தச் செயலை) மறந்தவர்கள் போவது போலப் போவது` என்க.
உரைப்ப அரிது - சொல்ல ஒண்ணாது.
`ஆயினும் நிகழ்ந்து விட்டதே! என்ன செய்ய! என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 69

பரிப்பருந் திண்மைப் படையது
கானர் எனிற்சிறகு
விரிப்பருந் துக்கிரை ஆக்கும்வெய்
யேன்அஞ்சல் செஞ்சடைமேல்
தரிப்பருந் திண்கங்கை யார்திரு
வேகம்பம் அன்னபொன்னே
வரிப்பருந் திண்சிலை யேயும
ராயின் மறைகுவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு உடன் போக்கில் இடைச் சுரமருங்கில் தலைவி தமரைக் கண்டு கலங்கத் தலைவன் தேற்றியது.
``செஞ்சடை மேல்.
.
.
அன்ன பொன்னே`` என்பதை முதலிற் கொள்க.
பரிப்பரு - தாங்குதற்கரிய.
``படையது`` என்பதில் அது பகுதிப்பொருள் விகுதி.
``கானர் எனில் - இந்நிலத்து மாக்கள் எனில், பருந்துக்கு இரையாக்கும் கொடியேனாவேன்.
உமர் எனின் மறைகுவன்; அஞ்சல்`` என முடிக்க.

பண் :

பாடல் எண் : 70

வனவரித் திண்புலி யின்னதள்
ஏகம்ப மன்னருளே
எனவரு பொன்னணங் கென்னணங்
கிற்கென் எழிற்கழங்கும்
தனவரிப் பந்துங் கெடுத்தெனைப்
புல்லியும் இற்பிரிந்தே
இனவரிக்கல்லதர் செல்வதெங்
கேயொல்லும் ஏழைநெஞ்சே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பொன் அணங்காகிய என் அணங்கு` என்க.
பொன் அணங்கு - அழகிய பொன்.
என் அணங்கு - என் பெண்.
தன வரிப் பந்து - தனம் போன்றுள்ள, வரிந்து செய்யப்பட்ட பந்து.
தலைவி தான் அன்று பின்மாலையில் தலைவனுடன் போக முடிசெய்து விட்டமை யால் முன் மாலையில் செவிலியிடம் கழங்கும், பந்தும் கொடுத்து ஆசை தீர அவளைக் கட்டியணைத்துக் கொண்டாள்.
அதனை அப் பொழுது செவிலி அறியாமையால் விடிந்த பின் நினைத்துப் புலம்பி னாள்.
இற் பிரிந்து - இலத்தினின்றும் பிரிந்து.
எங்கே ஒல்லும் - எப்படி இயலும்! `ஒல்கும்` என்பது பாடமன்று.
எனவே, இதுவும் செவிலி புலம்பல் துறை.

பண் :

பாடல் எண் : 71

நெஞ்சார் தரவின்பம் செய்கழல்
ஏகம்பர் கச்சியன்னாள்
பஞ்சார் அடிவைத்த பாங்கிவை
ஆங்கவள் பெற்றெடுத்த
வெஞ்சார் வொழியத்தன் பின்செல
முன்செல் வெடுவெடென்ற
அஞ்சா அடுதிறற் காளைதன்
போக்கிவை அந்தத்திலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இஃது உடன் போக்கில், செவிலி பின் தேடிச் சேறலில் `சுவடுகண்டிரங்கல்` துறை.
பஞ்சு ஆர் அடி - பஞ்சு நிறைந்த பாதம்.
பாங்கு - இடம்.
ஆங்கு - அவ்விடம்.
`அவள் பின் செல முன் செல் காளை போக்கு இவை` என முடிக்க.
`அந்தத்தில் உள` என வேறு முடிபாக்குக.
வெம் சார்வு - விருப்பம் உள்ள சுற்றம்.
வெடுவெடு என்றல், விரைவுக் குறிப்பு.

பண் :

பாடல் எண் : 72

இலவவெங் கான்உனை யல்லால்
தொழேஞ்சரண் ஏகம்பனார்
நிலவுஞ் சுடரொளி வெய்யவ
னேதண் மலர்மிதித்துச்
செலவும் பருக்கை குளிரத்
தளிரடி செல்கரத்துன்
உலவுங் கதிர்தணி வித்தருள்
செய்யுன் உறுதுணைக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஏகம்பனார் நிலவும் சுடரொளி வெய்யவனே` என்பதை முதலிற் கூட்டி, அதன்பின், `உனை அல்லால் சரண் தொழேம்; செல்சுரத்துள் தளிரடி செலவும், வெங்கான்பருக்கை குளிர உறு துணைக்கு உன் உலவும் கதிர் தணிவித்தருள்` என இயைத்து முடிக்க.
இது, உடன் போக்கில் `நற்றாய் சுடரோடு இரத்தல் (அல்லது) சுரம் தணிவித்தல்` என்னும் துறை.
இலவம் - இலவ மரம்.
வெய்ய வன் - பகலோன்.
`ஏகம்பரனாரது சுடர் ஒளிபோலும் ஒளியையுடைய வெய்யோன்` என்க.
`மலர்போல் மிதித்துச் செல்ல` என உவம உருபு விரிக்க.
பருக்கை - பருக்கைக் கற்கள்.
`அவை சுடாது குளிரும்படி உன் கதிர் தணிவித்தருள்` என்க.
தலைவியை, `தாமரை மலரில் உள்ள திருமகள் போன்றவள்` எனக் கூறும் கருத்தால் தாமரை மலர்மேல் விருப்பமுடைய பகலவனுக்குத் துணை` என்றாள்.
`வன் துணைக்கு - உன் துணையை வேண்டி` என உரைத்து அதனை உனையல்லால் சரண் தொழேம்` என முடிப்பினும் ஆம்.

பண் :

பாடல் எண் : 73

துணையொத்த கோவையும் போலெழில்
பேதையும் தொன்றலுமுன்
இணையொத்த கொங்கையொ டேயொத்த
காதலொ டேகினரே
அணையத்தர் ஏறொத்த காளையைக்
கண்டனம் மற்றவரேல்
பிணையொத்த நோக்குடைப் பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டை, ``மீண்டார் என உவந்தேன் கண்டு நும்மை`` என்னும் திருக்கோவையார்ப் பாட்டோடு 1 ஒப்பு நோக்கிக் காண்க.
``துணை`` என்பதிலும் எண்ணும்மை விரித்து, `துணையும், ஒத்த கோவையும்போல் பேதையும், தோன்றலும் முன் ஏகினரே` என நிரல் நிறையாக இயைத்துக் கொள்க.
துணை - செவிலியால் காணப் பட்ட தலைவி.
கோ - அவள் தலைவன்.
பேதை - செவிலிதன் பெண் ணாகிய தலைவி.
தோன்றல் - அவள் தலைவன்.
``ஏகினரே`` என்றது வினா.
இருவரது காதலும் இணையொத்ததாய் இருந்ததைச் செவிலி தன் பெண்ணின் இரு கொங்கைகளும் இமையொத்திருப்பது போல் இருந்தது` என விளக்கினாள்.
``கொங்கையொடே`` என்பதை ``ஒத்த`` என்பதனோடே முடிக்க.
முன் இரண்டடிகளும் செவிலிதன் வினா.
பின் இரண்டடிகளும் எதிர் வந்த தலைவன் கூற்று.
அத்தர் - ஏகம்பர்.
ஏறு - அவரது ஊர்தியாகிய இடபம்.
``இவள்`` என்றது, எதிர் வந்த தலைவன் தன் தலைவியைச் சுட்டியது.
``காளையைக் கண்டனம்; நீவிர் சொல்கின்ற மற்றொருவரைப் பற்றி இவளைக் கேட்டுப் பாருங்கள்`` என்றான் எதிர் வந்த தலைவன், இதனால், எதிர் வந்த தலைவன் தன்னைப் போல வந்த தலைவனை மட்டும் நோக்கியதன்றி, அவளுடன் வந்த தலைவியை நோக்கவில்லை` என்பது புலனாகி, அவன் தன் தலைவியை யன்றிப் பிறிதொரு பெண்ணின் முகத்தை நோக்காத பெருந்தன்மையை விளக்கிநிற்கின்றது.
பிணை - பெண் மான்.

பண் :

பாடல் எண் : 74

மின்நலிக் கும்வணக் கத்திடை
யாளையும் மீளியையும்
நென்னலிப் பாக்கைவந் தெய்தின
ரேலெம் மனையிற்கண்டீர்
பின்னரிப் போக்கருங் குன்று
கடந்தவர் இன்றுகம்பர்
மன்அரி தேர்ந்து தொழுங்கச்சி
நாட்டிடை வைகுவரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டுப் புணர்ந்துடன் வந்தோரை வினவிய செவிலித் தாயை அவர்கள் மீள (திரும்பிச் செல்லும்படி.
) உரைத்தது.
மின் நலிக்கும் இடை - மின்னலைத் தோற்றத்தால் நலிவிக்கும் இடை.
வணக்கத்து இடை - துவளுதலையுடைய இடை.
இடையாள் - செவிலியால் தேடப்படும் தலைவி.
மீளி, அவள் தலைவன்.
நென்னல்- நேற்று.
பாக்கை - பாக்கம்.
`எந்த மனையில் (இல்லத்தில்) கண்டீர்` எனச் செவிலி வினாவினாள்.
பின்னர் - இங்குத் தங்கிய பின்பு, போக்கரு - செல்லுதற்கரிய.
அவர், செவிலியால் தேடப்பட்ட இருவர், அரி - திருமால்.
``சென்று வைகுவர்`` என்றதனால், `நீவிர் மீளுக` என்பது குறிப்பெச்ச மாயிற்று.

பண் :

பாடல் எண் : 75

உவரச்சொல் வேடுடைக் காடுகந்
தாடிய ஏகம்பனார்
அவரக்கன் போன விமானத்தை
ஆயிரம் உண்மைசுற்றும்
துவரச் சிகரச் சிவாலயம்
சூலம் துலங்குவிண்மேல்
கவரக் கொடிதிளைக் குங்கச்சி
காணினுங் கார்மயிலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கார் மயிலே! ஏகமபனார் சிவாலயம் துவரத் துலங்கு விண்மேல கவரச் சூலம் துலங்கு கொடி திளைக்கும் கச்சி இன்னும் காண்` என இயைத்து முடிக்க.
இப்பாட்டு, தலைவியை உடன்கொண்டு சென்ற தலைவன் அவளுக்குத் தன் நகர் காட்டியது.
உவரச் சொல் வேடு - வெறுக்கப் பேசும் வேடர் இனம்.
அவ்வரக்கன், இராவணன்.
இஃது இடைக் குறைந்து நின்றது.
இராவணன் வான்வழியாகச் சென்றது புட்பக விமானம்.
அது குபேரனுடையது.
அதன் சுற்றளவுபோல ஆயிர மடங்கு சுற்றளவுடையது ஏகம்பனார் ஆலயத்தின் சிகரம், `அச்சிகரத்தை யடைய ஆலயத்தின் மேல் சூலம் துலங்கு கொடி திளைக்கும் கச்சி` என்க.
சிவாலயத்தின் மேல் பறக்கும் கொடியில் இடபத்தோடு சூலமும் எழுதப்பட்டிருக்கும்.
``இன்னும்`` என்றது, `நன்றாக` என்றபடி.
துவர - மிகவும் கார் மயில் - கார் காலத்தில் ஆடும் மயில்.
இஃது உவம ஆகுபெயர்.

பண் :

பாடல் எண் : 76

கார்மிக்க கண்டத் தெழில்திரு
ஏகம்பர் கச்சியின்வாய்
ஏர்மிக்க சேற்றெழில் நெல்நடு
வோரொலி பொன்மலைபோல்
போர்மிக்க செந்நெல் குவிப்போர்
ஒலிகருப் பாலையொலி
நீர்மிக்க மாக்கட லின்னொலி
யேயொக்கும் நேரிழையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, முன்பாட்டின் துறையை அடுத்து வரும் பதிபரிசு உரைத்தல் துறையது.
பதி - நகர்.
பரிசு - அதன் தன்மை.
உரைத்தவன் தலைவன்.
`கச்சியின் வாய்நெல் நடுவோர் ஒலியும், நெல் குவிப்போர் ஒலியும், கரும்பு ஆலையில் ஒலியும் கடலின் ஒலியே ஒக்கும்` என்க.

பண் :

பாடல் எண் : 77

நேர்த்தமை யாமை விறற்கொடு
வேடர் நெடுஞ்சுரத்தைப்
பார்த்தமை யாலிமை தீந்தகண்
பொன்னே பகட்டுரிவை
போர்த்தமை யாலுமை நோக்கருங்
கம்பர்கச் சிப்பொழிலுள்
சேர்த்தமை யாலிமைப் போதணி
சீதஞ் சிறந்தனவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது, தலைமகளை உடன்கொண்டு சுரத்திடைச் சென்ற தலைமகன் அப்பால் தன் நகர்ப்பொழில் கண்டு உவந்து கூறியது.
நேர்த்து அமையாமை விறல் - தன்னோடு ஒத்தது பிறிதில்லாத வெற்றி.
`விறலை உடைய, கொடிய வேடரது சுரம்` என்க.
`வேடரது சுரம்` என்பதில் ஆறாவது வாழ்ச்சிக் கிழமைக் கண் வந்தது, `நுமதூர், எமதூர்` முதலியனபோல, `கண்ணின் இமை தீந்தன` என்க.
``பொன்னே`` என்பது, தலைவன் தன் தலைவியை விளித்தது.
பகடு - யானை.
`சிவபெருமான் யானையை உரித்துப் போர்த்த காலத்தில் அதனைப் பார்க்க அஞ்சி உமையவளே அப்பால் ஓடினாள்` என்பது புராணம்.
`நம் நல் ஊழ் கொணர்ந்து சேர்த்தமையால்` என்க.
இமைப் போது - இமைகளாகிய இதழ்கள்.
போது, ஆகுபெயர்.
அணி - அழகு `அணியோடு` என ஒடு உருபு விரிக்க.
சீதம் - குளிர்ச்சி.
சிறந்தன - மிக்கன.
`தீந்துபோன இமைகள் குளிர்ச்சி மிகுந்தன` என்பதாம்.
`கண் தீந்த, சீதம் சிறந்தன` எனச் சினைவினை முதல்மேல் நின்றன.

பண் :

பாடல் எண் : 78

சிறைவண்டு பாடுங் கமலம்
கிடங்கிவை செம்பழுக்காய்
நிறைகொண்ட பாளைக் கமுகின்
பொழிலிவை தீங்கனியின்
பொறைகொண்ட வாழைப் பொதும்புவை
புன்சடை ஏகம்பனார்
நறைகொண்ட பூங்கச்சி நாடெங்கும்
இவ்வண்ணம் நன்னுதலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதுவும் முன் போந்த, ``கார் மிக்க கண்டத்து`` என்னும் பாட்டோடு ஒத்தது.
``நன்னுதலை`` என்னும் விளியை முதலிற் கொண்டு, `இவை கமலக் கிடங்கு; இவை கமுகின் பொழில்; உவை வாழைப் பொதும்பு; ஏகம்பனார் கச்சி நாடு எங்கணும் இவ் வண்ணமாம்` என முடிக்க.
கிடங்கு - அகழி.
பழுக்காய் - பாக்கு மரக் காய்.
பொறை - சுமை.
பொதும்பு - பொதும்பர்; சோலை, நறை - தேன்.

பண் :

பாடல் எண் : 79

நன்னுத லார்கருங் கண்ணுஞ்செவ்
வாயுமிவ் வாறெனப்போய்
மன்னித ழார்திரு நீலமும்
ஆம்பலும் பூப்பவள்ளை
என்னவெ லாமொப்புக் காதென்று
வீறிடும் ஏகம்பனார்
பொன்னுத லார்விழி யார்கச்சி
நாட்டுள்இப் பொய்கையுளே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டுக் கச்சி மாநகரின் பொய்கைச் சிறப்பைப் புகழ்ந்தது.
``ஏகம்பனார்.
.
.
.
இப்பொய்கையுள்`` என்பதை முதலிற் கொண்டு, `நீலமும், ஆம்பலும் `நன்னுதலார் கண்ணும், வாயும் இவ்வாறு` எனப் போய்ப் பூப்ப, வள்ளை என்று எல்லாம் காது ஒப்பு என்ன வீறிடும் என இயைத்து முடிக்க.
நன்னுதலார் - மகளிர்.
`இவ்வாறு ஆவன` என ஒரு சொல் வருவிக்க.
போய் - வளர்ந்து, ``மன் இதழ் ஆர்`` என்பது நீலத்திற்கு அடை.
`வள்ளை யென்று` என்பதில் ``என்று`` பெயர்ப்பட வந்த எச்சம், `மங்கலம் என்று ஓர் ஊர்` வீறிடும் - சிறந்து நிற்கும்.
``பொன்`` என்பது உவம ஆகுபெயராய் நெருப்பைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 80

உள்வார் குளிர நெருங்கிக்
கருங்கிடங் கிட்டநன்னீர்
வள்வா ளைகளொடு செங்கயல்
மேய்கின்ற எங்களையாட்
கொள்வார் பிறவி கொடாதவே
கம்பர் குளிர்குவளை
கள்வார் தருகச்சி நாட்டெழில்
ஏரிக் களப்பரப்பே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``எங்களைஆட் கொள்வார்.
.
.
.
ஏரி களப் பரப்பிலும், கிடங்கு இட்ட நன்னீரிலும் வாளைகளொடு கயல் மேய்கின்றன` என முடிக்க.
உள் வார் - உள்ளே நீண்டு செல்கின்ற இடம்.
நெருங்குதல் - நிரம்புதல்.
கிடங்கு - அகழி.
`கிடங்கில் இட்ட` என உருபு விரிக்க.
இடுதல் - நிரப்புதல்.
வள் - கூரிய.
தலையும்.
வாலும், `ஆட் கொள்வாரும், (எமக்குப்) பிறவியைக் கொடாதவரும் ஆகிய ஏகம்பரது கச்சி` என்க.
கள் வார் - தேனை ஒழுக்கின்ற.
`ஏரியது களம்` என்க.
களம் - இடம்.
ஏரி - பெரிய நீர்நிலை.
`இப்பெயர் இப் பொருளில் வருமிடத்தில் வேற்றுமைப் புணர்ச்சியிலும் வல்லெழுத்து மிகுதி இல்லை` என்பர்.

பண் :

பாடல் எண் : 81

பரப்பார் விசும்பிற் படிந்த
கருமுகில் அன்னநன்னீர்
தரப்பா சிகள்மிகு பண்பொடு
சேம்படர் தண்பணைவாய்ச்
சுரப்பார் எருமை மலர்தின்னத்
துன்னு கராவொருத்தல்
பொரப்பார் பொலிநுத லாய்செல்வக்
கம்பர்தம் பூங்கச்சியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பொலி நுதலாய்`` என வந்தமையால் இப் பாட்டினைத் தலைவன் தலைவிக்குப் பதி பரிசு உரைத்ததாகவே கொள்க.
பொலி - விளங்குகின்ற.
பணை - வயல்கள்.
வயல்களில் பாசியும், நீர்ச் சேம்பும் அடர்ந்திருத்தல் வானத்தில் கருமுகில் படிந்தது போலக் காணப்படுகின்றது.
கரா ஒருத்தல் - ஆண் முதலை.
பொருதல் - தாக்குதல்.
`பொருவதாக, அதனைப் பார்` என்க.
`கச்சியின்கண்` என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது.

பண் :

பாடல் எண் : 82

கச்சார் முலைமலை மங்கைகண்
ணாரஎண் ணான்கறமும்
வைச்சார் மகிழ்திரு ஏகம்பர்
தேவி மகிழவிண்ணோர்
விச்சா தரர்தொழு கின்ற
விமானமுந் தன்மமறா
அச்சா லையும்பரப் பாங்கணி
மாடங்கள் ஓங்கினவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மகிழ் திரு ஏகம்பர் தேவி மகிழ`` என்பதை முதலிற் கொள்க.
`ஏகம்பர் மலைமகளுக்கு அருள் புரிந்து, - மகிழ் தம் தேவி - என்னும் அன்பு பற்றி` என்றற்கு, ``தேவி மகிழ`` என்றார்.
``மலைமகள் கண்`` என்பதில் கண், ஏழனுருபு.
ஆர - பொருந்த.
`வைத்தார்` என்பது ஏதுகை நோக்கி, ``வைச்சார்`` என மருவிற்று.
`விண்ணோரும், விச்சா தாரும் தொழுகின்ற அவள் விமானமும்` என்க.
பரப்பு - நிலப்பரப்பு.
ஆங்கு - அப்பரப்பின்மேல் மாடங்கள் - மேல் மாடங்கள்.
இதனால் கச்சிக் காமக் கோட்டத்தது சிறப்பு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 83

ஓங்கின ஊரகம் உள்ளகம்
உம்பர் உருகிடமாம்
பாங்கினில் நின்ற தரியுறை
பாடகம் தெவ்இரிய
வாங்கின வாட்கண்ணி மற்றவர்
மைத்துனி வான்கவிகள்
தாங்கின நாட்டிருந் தாளது
தன்மனை ஆயிழையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஊரகம் - உலகளந்த பெருமாள் கோயில்.
பாடகம் - பாண்டவ தூதப் பெருமான் கோயில், இவை கச்சியில் உள்ளவை.
தெவ் - பகை; பகைவர்; அசுரர்.
இரிய - தோற்று ஓட.
கன்னி - துற்கை.
மற்று, அசை.
அவர் - மேலெல்லாம் சொல்லி வருகின்ற கம்பர்.
வான் கவிகள் - தெய்வப் புலவர்கள்.
தாங்கிய நாடு - உயர்த்துக் கூறிய உலகம்அது சத்தி தத்துவ புவனம்.
அதில் இருந்தவள் சத்தி.
``அரி`` என்பதை ``ஓங்கின`` என்பதனோடும் கூட்டுக.
`அரி ஓங்கின (நின்ற கோலமாய் உள்ள) ஊரகம் (அவர் கச்சியில்) உள்ளகம்; ஓர் உட்பகுதி, அரி உறைகின்ற (இருந்த கோலமாய் உள்ள) பாடகம் உம்பர் உருகிட மாம்.
பாங்கினில் (கச்சியில் ஒருபக்கத்தில்) நின்றது.
தெவ் இரிய வாங்கின வாளையுடைய கன்னி அவர் மைத்துனி.
(மனைவிதன் தங்கை) எல்லாப் புவனங்கட்கும் மேலதாகிய சத்தி தத்துவ புனத்தில் உள்ள சத்தி அவருக்கு மனைவி.
(அவர் சத்தி தத்துவத்திற்குமேல் உள்ள சிவ தத்துவ புவனத்தில் இருப்பவர்.
) இங்ஙனம் திருவேகம்பரது பெருமை விளக்கப்பட்டது.
சத்தியை `மனைவி` என்றதனால் அவர் அத்தத்துவத்திற்கு மேலேயிருத்தல் குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 84

இழையார் அரவணி ஏகம்பர்
நெற்றி விழியின்வந்த
பிழையா அருள்நம் பிராட்டிய
தின்ன பிறங்கலுன்னும்
நுழையா வருதிரி சூலத்தள்
நோக்கரும் பொன்கடுக்கைத்
தழையார் பொழில்உது பொன்னே
நமக்குத் தளர்வில்லையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதுவும் உடன் போக்கு.
இறுதியில் தலைவன் பதிபரிசு உரைத்தது ``பொன்னே`` என்பதை முதலிற் கொள்க.
பொன் இலக்குமி.
இஃது உவமையாகு பெயராய்த் தலைவியைக் குறித்தது.
`இன்ன பிறங்கல் நம் பிராட்டியது; உது சூலத்தள் பொழில்; (தளர்) நமக்குத் தளர்வில்லை` என முடிக்க.
இழை - அணிகலம்.
ஆர் - நிறைந்த.
`இழையாக அணி` என ஆக்கம் வருவிக்க.
சத்திக்குச் சொல்வதும்போலச் சிவனுக்கும் வலக்கண்ணில் திருமகளையும், இடக்கண்ணில் கலைமகளையும், நெற்றிக் கண்ணில் ஞானமகளையும் தருதல் கூறப்படும்.
ஞானமகள் சத்தியின் கூறே ஆதலாலும், சத்தி மலைமகளாகச் சொல்லப்படுதலாலும் ``இன்ன பிறங்கல்`` என மலையை, ``நம் பிராட்டியது`` எனவும், `காடுகிழாள் மாயோன் தங்கை` என வைத்து `மாயோள்` எனப்படுதலின் கடுக்கைப் பொழிலை, (கொன்றைச் சோலையை) ``திரிசூலத்தள் பொழில்`` என்றும் கூறினான்.
பிறங்கல் - மலை.

பண் :

பாடல் எண் : 85

தளரா மிகுவெள்ளம் கண்டுமை
ஓடித் தமைத்ததழுவக்
கிளையார் வளைக்கை வடுப்படும்
ஈங்கோர் கிறிபடுத்தார்
வளமாப் பொழில்திரு ஏகம்பம்
மற்றிது வந்திறைஞ்சி
உளரா வதுபடைத் தோம்மட
வாயிவ் வுலகத்துளே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டும் முன் பாட்டின் துறையதே.
``ஈங்கு`` என்பதை ``மடவாய்`` என்பதன் பின்னர்க் கூட்டி, அவ்விரண்டையும் முதலிற் கொள்க.
கிறி படுத்தார் - பொய்யை உண்டாக்கினார்.
தடத்தங்க ளெல்லாம் இறைவனது நாடகமாகக் கூறுதல் பற்றி ஏகம்பர் உமையது வளைத் தழும்பைப் பெற்றதைத் தலைவன் ``கிறி`` வென்றான் கிளை - இனம்.
`கிறிபடுத்தாரது ஏகம்பம் இது.
இங்கு வந்து இதனை இறைஞ்சினமையால் நாம் இவ்வுலகத்துள்ளே உளர் ஆவதன் (வாழ்வதன்) பயனைப் படைத்தோம்` என முடிக்க.
மற்று, அசை.

பண் :

பாடல் எண் : 86

உலவிய மின்வடம் வீசி
உருமதிர் வுள்முழங்கி
வலவிய மாமதம் பாய்முகில்
யானைகள் வானில்வந்தால்
சுலவிய வார்குழல் பின்னரென்
பாரிர் எனநினைந்து
நிலவிய ஏகம்பர் கோயிற்
கொடியன்ன நீர்மையனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைவன் கார் கண்டு தன்னுட் கூறியது.
``முகிலாகிய மத யானைகள் இடியாகிய பிளிறுதலைச் செய்து, மின்னலாகிய பாசத்தை அறுத்துத் தள்ளி, வானமாகிய களத்தில் வருமாயின், பின்னர்த் தலைவி என்னாவாள்` என்பதை நினைத்துப் பார்மின் - எனத் தோழி கூறியதை நினைந்து, ஏகம்பர் கோயில் வாசலில் உள்ள கொடி அலைவதுபோல மனம் அலமரும் நீர்மையை யுடையனானேன் யான் என இயைத்து முடிக்க.
வானத்தைக் `களம்` என்னாமை ஏகதேச உருவகம்.
முகில்களைப் போர்க்களத்து யானைகள் போல்வனவாகக் கண்டு தலைவி இறந்து படும் நிலைமையை அடைவாள் என்பதாம்.
``வலவிய யானைகள்`` என இயையும்.
வார் குழல் - நீண்ட கூந்தலை யுடையவள்.
``யானை`` என வருதலின் முழங்குதல் பிளிறுதலாயிற்று.

பண் :

பாடல் எண் : 87

நீரென்னி லும்அழுங் கண்முகில்
காள்நெஞ்சம் அஞ்சலையென்
றாரென்னி லுந்தம ராயுரைப்
பார்அம ராவதிக்கு
நேரென்னி லுந்தகும் கச்சியுள்
ஏகம்பர் நீள்மதில்வாய்ச்
சேரென்னி லுந்தங்கும் வாட்கண்ணி
தானன்பர் தேர்வரவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது கார்ப் பருவம் கண்டு ஆற்றாளாய தலைமகளை, `தலைவனது தேர் இனி வருதல் தப்பாது` எனக் கூறி வற்புறுத்தும் தோழி அதனை முகில்கள் முன்னிலையாகக் கூறியது.
` (நீவிர் பெய்வது மழையேயாயினும்) தலைவியது அழும் கண்கள் போலும் முகில்காள்! - கச்சியுள் ஏகம்பர் நீள் மதில் வாய்ச்சேர் - (சேர்ந்திருப்பன) என்னும் தகுவனவாகிய வாள்போலும் கண்களை யுடைய இவள், - நெஞ்சம் அஞ்சலை - என்று அன்பர் தேர்வரவு உரைப்பார் ஆர் என்னிலும் - தமர் - (என்பாள் - என இயைத்து, `ஆதலின், நீவிர் அதனைக் கூறுவீர்` என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க.
அமராவதி - இந்திரன் நகர்.

பண் :

பாடல் எண் : 88

வரங்கொண் டிமையோர் நலங்கொள்ளும்
ஏகம்பர் கச்சியன்னாய்
பரங்கொங்கை தூவன்மின் நீர்முத்தம்
அன்பர்தம் தேரின்முன்னே
தரங்கொண்டு பூக்கொண்டு கொன்றைபொன்
னாகத்தண் காந்தட்கொத்தின்
கரங்கொண்டு பொற்சுண்ணம் ஏந்தவும்
போந்தன கார்முகிலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது, தோழி பருவங் காட்டித் தலைவியை வற்புறுத்தது.
``கச்சி அன்னாய்`` என்றது தோழி தலைவியை விளித்தது.
``பரங்கொங்கை தூவல்`` என்பதை இறுதியில் வைத்து, `கார் முகில், நீராகிய முத்தினைத் தாரமாகக் கொண்டு, கொன்றை மரப் பூக்களைக் கொண்டு பொன்னாய் நிற்க, காந்தட் பூவின் கொத்தாகிய கைகளில் அன்பர் தேரின்முன் பொற்சுண்ணம் ஏந்த வேண்டிப் போந்தன.
ஆகவே, நீ நின் கொங்கைகளைப் பரமாக (சுமையாக)ச் சுமக்க வேண்டா` என முடிக்க.
`பரமாக தரமாக` என ஆக்கம் வருவிக்க.
தூவல் - தாங்கற்க; சுமவற்க.
`மின்னலின்கண் நீர்` என ஏழாவது விரிக்க.
``ஏந்தவும்` என்னும் உம்மை சிறப்பு.
`கார் முகில் போந்தன; கொங்கை சுமவல் எனப் பருவங் காட்டி வற்புறுத்தினாள்.
`சுமவல்` என்றது `தனிமை காரணமாகச் சுமையாக எண்ண வேண்டா` என்றபடி.
இயற்கையாய் வந்த கார்ப் பருவத்தை அன்பர் தேரின்முன் சென்று வரவேற்க வந்ததாகக் கூறியது தற்குறிப்பேற்ற அணி.

பண் :

பாடல் எண் : 89

கார்முகம் ஆரவண் கைக்கொண்ட
கம்பர் கழல்தொழுது
போர்முக மாப்பகை வெல்லச்சென்
றார்நினை யார்புணரி
நீர்முக மாக இருண்டு
சுரந்தது நேரிழைநாம்
ஆர்முக மாக வினைக்கடல்
நீந்தும் அயர்வுயிர்ப்பே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது, பகைவயிற் பிரிவின்கண் தலைமகள் கார்ப் பருவம் கண்டு ஆற்றாது தோழியொடு புலம்பியது.
``நேரிழை`` என்றது தலைவி தோழியை விளித்தது; அதனை முதலிற் கொள்க.
கார்முகம் - வில்.
`கை ஆரக் கொண்டு` என்க.
சென்றார் - சென்ற தலைவர்.
`நம்மை நினையார்` என்க.
புணரி - கடல்.
`அது மேகமாகி இருண்டு சுரந்தது` என்க.
நீர் முகமாக - யார் ஆற்றுவிப்பாராய் நிற்க.
வினை - தீவினையின் விளைவு; ஆகுபெயர்.
அயர்வுயிர்பு - இளைப்பாறுதல்.
`வினைக் கடலை நீந்துதலாகிய அயர்வுயிர்ப்பை ஆர்முகமாகப் பெறுவேம்` என ஒரு சொல் வருவித்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 90

உயிரா யினவன்பர் தேர்வரக்
கேட்டுமுன் வாட்டமுற்ற
பயிரார் புயல்பெற்ற தென்னநம்
பல்வளை பான்மைகளாம்
தயிரார்பால் நெய்யொடும் ஆடிய
ஏகம்பர் தம்மருள்போல்
கையிரா வளையழுந் தக்கச்
சிறுத்தன கார்மயிலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது வரைவொடு வந்த தலைமகனது தேர்வரவு கேட்டுத் தலைவி மகிழ்ந்த மகிழ்ச்சியைத் தோழி செவிலிக்கு உணர்த்தியது.
புயல் - மேகம்.
இஃது ஆகுபெயராய் மழையைக் குறித்தது.
பல் வளை - பலவாகிய வளையலை யணிந்த தலைவி.
`பல் வளைக்கு` என்னும் நான்கன் உருபு தொகுக்கப்பட்டது.
`தயிரையும், பாலையும் நெய்யோடு ஆடிய ஏகம்பர்` என்க.
`நம் பல் விலைக்கு முன்பு கையில் இராது கழன்ற வளையல்கள் அழுத்தமாகிவிடத் தனங்கள் கச்சினை இறப் பண்ணும்.
பான்மைகள் ஏகம்பர் அருள் போல் கார் மயில் ஆம்` என இயைத்து முடிக்க.
`இறுக்கும்` என்பதில் சாரியை தொகுக்கப்பட்டு ``இறும்`` என நின்றது.
``அருள்`` என்பது ஆகுபெயராக அதன் பயனைக் குறிக்க.
கார் மயில் பண்பு பற்றிய உவமையாய் நிற்றலின் அவை தம்முள் வேறாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 91

கார்விடை வண்ணத்தன் அன்றேழ்
தழுவினும் இன்றுதனிப்
போர்விடை பெற்றெதிர் மாண்டார்
எனவண்டர் போதவிட்டார்
தார்விடை ஏகம்பர் கச்சிப்
புறவிடைத் தம்பொன்நன்பூண்
மார்விடை வைகல் பெறுவார்
தழுவ மழவிடையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது, முல்லை, நிலத்துக் கைக்கிளையாகிய `ஏறு தழுவிக் கோடல்` என்னும் ஆசுர மணத்தில் தழுவவிடப்பட்ட ஏற்றினைக் கண்டோர் கூறியது.
`அன்று கார் வண்ணத்தன் விடை ஏழ் தழுவினும், இன்று அண்டர் தனி விடை ஏகம்பர் கச்சிப் புறவிடை போதவிட்டார்; போர் விடை பெற்று எதிர் (சென்று) மாண்டார் என அம் மழவிடையை (எவரேனும்) தழுவினால் ( அவர்) அண்டரது பொன்னின் பூண் மார்பிடை வைகப் பெறுவார்` என்பது புராணம்.
அண்டர் - ஆயர்.
தனி - ஒற்றை.
புறவு - முல்லை நிலம்.
போத விட்டார் - வர விட்டார்.
போர், இங்கு ஏறுதழுவல் விடை - அதற்கு ஆயர்தரும் ஆணை.
தார் விடை - மணி யணிந்த இடபம்.
தன் பொன்- ஆயர்களுக்கு மகளாகிய இலக்குமி போல்பவள்.
மார்வு - அவளது மார்பு.
வைகல் - தங்குதல்.

பண் :

பாடல் எண் : 92

விடைபாய் கொடுமையெண் ணாதுமே
லாங்கன்னி வேல்கருங்கண்
கடைபாய் மனத்திளங் காளையர்
புல்கொலி கம்பர்கச்சி
மடைபாய் வயலிள முல்லையின்
மான்கன்றொ டான்கன்றினம்
கடைபாய் தொறும்பதி மன்றில்
கடல்போற் கலந்தெழுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதுவும் முன்பாட்டின் துறையதே.
விடை - ஆயர் வரவிட்ட ஏறு.
அது தன் கொம்பால் தம் மார்பிற் பாய இருக்கின்ற கொடுமையை நினையாமல், மேலான ஆயர் கன்னியது வேல்போலும் கரிய கண்ணின் கடை பாய்கின்ற மனத்தினையுடைய காளையர் இனம், முல்லை நிலத்தின் பதியில் (ஊரில்) உள்ள மன்றின்கண் கடல் போற் கலந்து எழும்` என்க.
புல் - புலி.
கொலி - கொல்லி; கொன்றவன்; பன்மை யொருமை மயக்கம்.
கச்சி முல்லை - அடையடுத்த ஆகுபெயர்.
முல்லைக் கொடி வளரும் பாத்தியை ``வயல்`` என்றார்.
கடைதொறும் பாய் - வாயில்கள் தோறும் துள்ளுகின்ற.
`காளையர் இனம்` என மாற்றிக் கொள்க.

பண் :

பாடல் எண் : 93

எழுமலர்த் தண்பொழில் ஏகம்பர்
கச்சி இருங்கடல்வாய்க்
கொழுமணப் புன்னைத் துணர்மணற்
குன்றில் பரதர்கொம்பே
செழுமலர்ச் சேலல்ல வாளல்ல
வேலல்ல நீலமல்ல
முழுமலர்க் கூரம்பின் ஓரிரண்
டாலும் முகத்தனவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது நெய்தல் நிலத்துக் களவியலில் தலைவன் இயற்கைப் புணர்ச்சிப்பின் தலைவியைப் புகழ்ந்தது.
இது `நலம் புனைந்துரைத்தல்` எனப்படும்.
துணர் - பூங்கொத்துக்களையுடைய.
`மணற்குன்றில் நிற்கும் பரதர் கொம்பே` என்க.
பரதர் - வலைஞர்.
`உன் முகத்தன சேல் முதலியன அல்ல; கூரிய இரண்டு அம்புபோல ஆலும்`, (பிறழும்) என்க.
ஆவதாக உணர்ந்தன்றி `அன்று` என்றல் கூடாமையின், `சேல் முதலியன அல்ல` என்றானாயினும் இது கண்ணுக்கு அவன் சொல்லிய பலபொருளுவமையேயாம்.
``செழு மலர்`` என்பதில் மலர் தாமரை மலர்.
`செழுமலரின்கண் பிறழும் சேல்` என்க.
``முழுமலர்`` என்பதில் மலர், மன்மதன் அன்பு.

பண் :

பாடல் எண் : 94

முகம்பாகம் பண்டமும் பாகமென்
றோதிய மூதுரையை
உகம்பார்த் திரேலென் நலமுயர்
ஏகம்பர் கச்சிமுன்நீர்
அகம்பாக ஆர்வின் அளவில்லை
என்னின் பவளச்செவ்வாய்
நகம்பால் பொழில்பெற்ற நாமுற்ற
வர்கொள்க நன்மயலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது, காட்சியின் பின் தலைவியை ஐயுற்று.
மானுடமகளே எனத் துணிந்த தலைவியது குறிப்பை உணர்கின்றுழிக் கூறியது.
``உயர் ஏகம்பர் கச்சி மூன்னீர்`` என்பதை முதலிற் கொள்க.
கச்சி மூன்னீர் - கச்சிப் புறத்தில் நிற்கின்றவரே.
தலைவியைத் தலைவன் இங்ஙனம் முன்னிலைப் படுத்தனாயினும் அவள் கேட்ப இங்ஙனம் கூறாது தன்னுள்ளே இங்ஙனம் கூறினான்.
பாகம் - பாதி.
``முகம் பாதி; பண்டம் பாதி`` 1 - என்பது ஒரு பழமொழி - என்பது இப்பாட்டால் அறியப்படுகின்றது.
`ஒருவருக்கு ஒன்றைக் கொடுத்து உதவி கொடுப்பவரது முகத்தாற் பாதியும், கொடுக்கப்படும் பொருளாற் பாதியுமாக முழுமை பெறுகின்றது` என்பது இதன் பொருளாகும்.
முகமாவது, தம்பால் வருபவரைத் தொலைவிற் கண்டபொழுதே இன்முகங் காட்டி வரவேற்றல்.
பண்டமாவது, அவர் பின் அணுகியவழி அவர் விரும்பும் பொருளை நல்லனவாகக் கொடுத்தல்.
இன்சொல் முகத்திலே அடங்கிற்று ``சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அது பற்றி நண்ணியவழி இன்சொல்லும் அது பற்றி உடன்பட்ட வழி நன்றாற்றலும் என, விருந்தோம்புவார்க்கு இன்றியமையாதன மூன்று`` 2 என்னும் பரிமேலழகர் உரையாலும் அம்மூன்றனுள் ஒன்று இவ்வழியும் உதவி முழுமை யடையாமை விளங்கும்.
ஆகவே, `பொழிலின் கண் பவளச் செவ்வாயைப் பெற்ற நாம் உற்றவர் (நம்மால் உறப்பட்டவர் - விரும்பப்பட்டவர்; தலைவி) தம் உள்ளத்திலும் நம் போலக் காமத்தை உடையராதல் வேண்டும்` என்றான்.
பவளச் செவ்வாயைப் பெற்றமையாவது, ``நோக்கினாள் நோக்கெதிர் நோக்கப் பெற்றது 3 அந்நோக்கு அன்பை மட்டுமே வெளிப்படுத்தியல்லது காமக் குறிப்பினை வெளிப்படுத் தாமையின், ``நாம் உற்றவர் நன் மயல் கொள்க` என்றான், ``கொள்க`` என்பது, வேண்டுதற் பொருட்டு, ``வினைகலந்து வென்றீக வேந்தன்`` 4 என்பதில், ``வென்றீக`` என்பது போல.
``உற்றவர்`` என்பது தன்னுட் சொல்லிய சொல்லிடத்து என முன்னிலைக்கண் படர்க்கை மயங்கிற்று.
மூதுரை - பழமொழி.
உகம் - ஊழி, இது புனைந்துரை வகையால் காலத்தின் நெடுமையைக் குறித்தது.
`மூதுரையை நெடுங்காலமாக உணர்ந்தீராயினும் அதனால் பயன் என் என்பான்.
``மூதுரையை உகம் பார்த்திரேல் நலம் என்`` என்றான்.
`பார்த்திரேனும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று.
அகம் பாக ஆர்வு - முகம்போல் அகத்தின் பாகமாகிய நிறைவு.
நிறைவு - காம நிறைவு.
அளவு இல்லை - அதன் அளவு வரையறைப் படவில்லை.
`முகத்தால் இயைந்த இவர் அகத் தாலும் இயைதல் வேண்டும்` என்றபடி.
`அகத்தால் இயைந்தமை- கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் 1- அறியப்படும், அதனை யான் இன்னும் பெற்றிலேன் என்பதாம்.
நகம் - மலை `நகப்பால்` என்பது மெலிந்து நின்றது.

பண் :

பாடல் எண் : 95

மயக்கத்த நல்லிருள் கொல்லும்
சுறவோ டெறிமகரம்
இயக்கத் திடுசுழி ஓதம்
கழிகிளர் அக்கழித்தார்
துயக்கத் தவர்க்கரு ளாக்கம்பர்
கச்சிக் கடலபொன்னூல்
முயக்கத் தகல்வு பொறாள்கொண்க
நீர்வரும் ஊர்க்கஞ்சுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது, `களவு நீக்கி வரைதல் வேண்டும்` எனக் கூறுந்தோழி அதனைக் கூறாமல் இரவுக் குறி விலக்கியது.
தலைவன் இரவுக் குறி நீக்கிப் பகற் குறி வேண்டுவானாயின் அதனையும் எவை யேனும் சொல்லித் தோழி விலக்குவாள்.
கொண்கன் - நெய்தல் நிலத் தலைவன், கொண்க! கடல் பொன் உன் முயக்கத்து அகல்வு பொருள்; (ஆயினும்) நீ இரவில் வரும் இவ்வூர்க்கு (இவ்வூரின் இயல்பிற்கு) அஞ்சும்.
இவ்வூரின் இயல்பு மயக்கத்த நள்ளிருளில் உப்பங்கழியில் கொல்லும் சுறாவோடு முதலைகள் வெளிப்போதும்.
இயக்கத்துக் கழி கிளர் ஓதம் இடு சுழிகள் மிகுதியாம்.
அக்கழியே முடிவில்லாத நீட்சியது` என்பது குறிப்பெச்சமாம்.
கடல், ஆகுபெயர் அதன் கரைக் கண் உள்ள பாக்கத்தைக் குறித்தது.
அதன்கண் உள்ள பொன்.
நெய்தல் நிலத் தலைவி.
முயக்கத்து அகல்வு - தழுவலின் நீக்கம் - மகரம், இங்கு முதலையைக் குறித்தது.
`சுறாவும் மகரமும் வெளிப்போதும்` என ஒரு சொல் வருவிக்க.
இயக்கம் - வழி, துறை.
ஓதம் - அலை.
``சுழி`` என்னும் எழுவாய்க்கு, `மிகுதி` என்னும் பயனிலை வருவிக்க.
தார் மாலையாகலின் அது நீட்சியைக் குறித்தது.
தார் உடைதனை, ``தார்`` என்றல் உபசாரம்.
துயக்கத்தவர் - அறிவு கலங்கியவர்.

பண் :

பாடல் எண் : 96

மேயிரை வைகஅக் குருகுண
ராமது உண்டுபுன்னை
மீயிரை வண்டோ தமர்புக்
கடிய விரிகடல்வாய்ப்
பாயிரை நாகம்கொண் டோன்தொழும்
கம்பர்கச் சிப்பவ்வநீர்
தூயிரை கானல்மற் றாரறி வார்நந்
துறைவர்பொய்யே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது தலைவன் வரைவிடை வைத்துப் பொருல் வயிற் பிரிந்த காலத்துப் பிரிவு நீட்டிப்பத் தலைவி தலைவனைத் தெரியாது தலைவனை இயற்பழித்துக் கூறியது.
இது நொதுமலர் வரைவு கேட்டுக் கூறியதுமாம்.
``தினைத்தா ளன்ன சிறுபசுங் கால`` என்னும் குறுந்தொகைப் பாட்டு, ``யானுந் தோழியும் ஆயமு ஆடுந் துறை நண்ணி`` என்னும் பழம்பாட்டு முதலியவற்றோடும் இதனை ஒப்பிட்டுக் காண்க.
இரைமேய் வைகு அக்குருகு உணரா - இரையையே விரும்பி அதன் வரவு பார்த்திருத்தலின் கொக்குகளும் பார்த்திருக்கமாட்டா.
புன்னை மீ மது உண்டு (ஒலிக்கின்ற) வண்டு களோ எனின் அமர்பு கடிய - மதுவிலே படிந்து எழமாட்டா.
எனவே, அவைகளும் பார்த்திருத்தற்கில்லை.
பாய் இரை கடல் வாய் நாகம் கொண்டோன் - பரந்துபட்டு ஒலிக்கின்ற கடலிடத்து பாம்பணையைக் கொண்டோன்; திருமால், பவ்வம் நீர் தூய் இரை கானல் - கடல் நீரைத்தூவி ஒலிக்கின்ற கரையிடத்து.
நம் துறைவர்பொய் மற்று ஆர் அறிவார் - நமது நெய்தல் நிலத்துத் தலைவர் `உன்னைப் பிரியேன்` என்று சூளுரைத்து அதனைப் பொய்த்தமைக்குச் சான்று சொல்வார் வேறுயாவர்! ``குருகு`` எனவும், ``புன்னை மீ வண்டு`` எனவும்.
``கானல்`` எனவும் கூறினமையால் தலைவன் கூடிப் பிரிந்தது கடற் கரைக் கண்ணே என்பதும், `மற்று ஆர் அறிவார்`` என்றதனால், `கூடியது களவினால்` என்பதும் குறிக்கப்பட்டன.

பண் :

பாடல் எண் : 97

பொய்வரு நெஞ்சினர் வஞ்சனை
யாரையும் போகவிடா
மெய்வரும் பேரருள் ஏகம்பர்
கச்சி விரையினவாய்க்
கைவரும் புள்ளொடு சங்கினம்
ஆர்ப்பநம் சேர்ப்பர்திண்தேர்
அவ்வரு தாமங் களினம்வந்
தார்ப்ப அணைகின்றதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது, வரைவிடை வைத்துப் பிரிந்த தலைவன் நீட்டிப்பபு பற்றி வருந்திய தலைவிக்குத் தோழி தலைவனது தேர்வரவைக் கூறியது.
பொய் வரு நெஞ்சினர் - பொய் சொல்லும் எண்ணம் வருகின்ற நெஞ்சையுடையவர்.
`நெஞ்சினரொடு` என்னும் எண்ணொடு தொகுத்தலாயிற்று.
உம்மை - இறந்தது தவிய எச்சம்.
போக விடாமை - தப்ப விடாமை அஃதாவது, `தப்பாது ஒறுப்பவர்` என்பதாம்.
`கச்சியின் கண் அணைகின்றது` என்க.
விரையின - விரைவாகப் பறப்பன.
கை வருதல் - எப் பக்கத்திலும் வருதல்.
`புள்ளினம் வானத்திலும் சங்கு கடலினும் ஆர்ப்ப` என்க.
அதிர்வு கேட்டு இவை ஆர்க்கின்றனவாம்.
புள் - நீர்ப் பறவை.
தாமங்கள் இனம் - தேரிலும், குதிரைகளிடத்திலும் உள்ள மணி ஒழுங்கின் இனம்.

பண் :

பாடல் எண் : 98

இன்றுசெய் வோமித னில்திரு
ஏகம்பர்க் கெத்தனையும்
நன்றுசெய் வோம்பணி நாளையென்
றுள்ளிநெஞ் சேயுடலில்
சென்றுசெ யாரை விடும்துணை
நாளும் விடாதடிமை
நின்றுசெய் வாரவர் தங்களின்
நீள்நெறி காட்டுவரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நெஞ்சே`` என்பதை முதலிற் கொள்க.
திரு ஏகம்பர்க்கு நாளும் விடாது அடிமை நின்று செய்வார் அவர்பால் நின்று நீள்நெறிகாட்டுவர்.
எத்தனையும் (மிகச் சிறிதாயினும் பணி) இன்று செய்வோம் (இன்றே செய்வோம்.
இதனில் நீங்கி, - பணி நாளை நன்று செய்வோம் (மிகுதியாகச் செய்வோம்) - என்று உள்ளி (நினைத்து) உடலில் (உடல் வளர்க்கும் செயலிலே) சென்று, ஒரு நாளும், ஒன்றும் செய்யாரைத் துணை விடு` என இயைத்து முடிக்க.
(பணி சிறிதளவாயினும் அப்பொழுதே செய்தல் வேண்டும்.
`நாளை மிகுதியாகச் செய்வோம்` என்று விடுதல் கூடாது என்பதாம்!

பண் :

பாடல் எண் : 99

காட்டிவைத் தார்தம்மை யாம்கடிப்
பூப்பெய்யக் காதல்வெள்ளம்
ஈட்டிவைத் தார்தொழும் ஏகம்பர்
ஏதும் இலாதவெம்மைப்
பூட்டிவைத் தார்தமக் கன்பது
பெற்றுப் பதிற்றுப்பத்துப்
பாட்டிவைத் தார்பர வித்தொழு
வாமவர் பாதங்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது ஆசிரியர் திருவேகம்பர் தமக்குச் செய்த திருவருளை வியந்து போற்றியது.
`காதல் வெல்ளம் ஈட்டி வைத்தார் தொழும் ஏகம்பர், ஏதும் இலாத எம்மை, யாம் தம்மைக் கடிப் பூப் பெய்யக் காட்டி வைத்தார்; அன்பு பூட்டி வைத்தார்; அது பெற்றுப் பதிற்றுப் பத்துப் பாட்டு இவைத் தார்ப் பரவி அவர்பாதங்கள் தொழு தாம்` என இயைத்துக் கொள்க.
காதல் வெள்ளம் ஈட்டி வைத்தார், திருத்தொண்டர்கள்.
ஏதும் இலாத - நல்லது ஒன்றும் இல்லாத கடி - நறுமணம்.
``பூப்பெய்ய`` என்பது `பூசிக்க` என்னும் பொருட்டாகலின் அது.
``தம்மை`` என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று.
காட்டி - அறி வித்து.
பூட்டி - பூண்பித்து.
அது - அவ்வன்பை ``பதிற்றுப் பத்து`` என்பது `நூறு` என்னும் பொருட்டு.
நூறு பாட்டாகிய இவையாகிய தாரால் (மாலையால்) அவர் பாதங்களை யாம் பரவி (துதித்து)த் தொழுதாம்` என்க.
`யாம் அறிவையும், அன்பையும் பெற்று அவரைப் பூசித்ததும், நூறு பாடல்களாலாகிய பாமாலையால் அவர் பாதங் களைப் பரவித் தொழுததும் எல்லாம் அவர் செய்விக்கவே` என்றபடி.
`வைத்தல்` என்பது துணை வினையாகலின், ``காட்டி வைத்தார்`` முதலிய மூன்றும் ஒரு சொல் நீர்மைய!

பண் :

பாடல் எண் : 100

பாதம் பரவியொர் பித்துப்
பிதற்றினும் பல்பணியும்
ஏதம் புகுதா வகையருள்
ஏகம்பர் ஏத்தெனவே
போதம் பொருளால் பொலியாத
புன்சொல் பனுவல்களும்
வேதம் பொலியும் பொருளாம்
எனக்கொள்வர் மெய்த்தொண்டரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, `இப்பிரபந்தத்தை அடியார்கள் ஏற்றருள வேண்டும்` என அவையடக்கம் கூறியது, அடியார் ஏற்ற பின்பே ஆண்டான் ஏற்பன் ஆகலின்.
பாதம் பரவி- தமது பாதங்களைத் துதிக்கும் துதியாக.
ஓர் பித்துப் பிதற்றினும் - பித்தன் ஒருவன் பிதற்றுதல் போலச் சிலவற்றைப் பிதற்றினாலும், `அது குற்றம் ஆகாதபடி அருள்செய்பவர் திருவேகம்பர்` என்பதாம்.
இதனை, ``முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்போன்`` 1 என்ப தனோடு, ஒப்பிட்டுக் காண்க.
இதனால், இத்தகைய ஏகம்பரது ஏத்து (துதி) என்பது, ஞானம் பொருளாய் நிற்க விளங்கும் இல்லாத புன் சொற்கள் நிறைந்த பாத் தொடையாயினும் அதனை மெய்த் தொண்டர்கள் வேதப் பொருள் பொலிகின்ற பாத் தொடையாகவே மதித்து ஏற்றுக்கொள்வார்` என்பதாம்.
எனவே, `எனது புன்சொற் பனுவலாகிய இதனையும் அவர்கள் அவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள்` என்பது குறிப்பெச்சமாயிற்று.
``வகையருள் ஏகம்பர்`` என்றதனால், `வகையருள்பவர் ஏகம்பர்` என்பது அனுவாதத்தால் பெறப்பட்டது.
``போதம் பொருளால் பொலியாத`` என்றது, `போதம் பொருளாக, அதனாற் பொலியாத` எனப் பொருள் தந்தது.
திருஏகம்பமுடையார் திருவந்தாதி முற்றிற்று

பண் :

பாடல் எண் : 1

இருநில மடந்தை இயல்பினின் உடுத்த
பொருகடல் மேகலை முகமெனப் பொலிந்த
ஒற்றி மாநகர் உடையோய் உருவின்
பெற்றியொன் றாகப் பெற்றோர் யாரே
மின்னின் பிறக்கம் துன்னும்நின் சடையே

மன்னிய அண்டம்நின் சென்னியின் வடிவே
பாவகன் பரிதி பனிமதி தன்னொடும்
மூவகைச் சுடரும்நின் நுதல்நேர் நாட்டம்
தண்ணொளி ஆரம் தாரா கணமே
விண்ணவர் முதலா வேறோர் இடமாக்

கொண்டுறை விசும்பே கோலநின் ஆகம்
எண்திசை திண்தோள் இருங்கடல் உடையே
அணியுடை அல்குல் அவனிமண் டலமே
மணிமுடிப் பாந்தள்நின் தாளிணை வழக்கே
ஒழியா தோடிய மாருதம் உயிர்ப்பே

வழுவா ஓசை முழுதும்நின் வாய்மொழி
வானவர் முதலா மன்னுயிர் பரந்த
ஊனமில் ஞானத் தொகுதிநின் உணர்வே
நெருங்கிய உலகினில் நீர்மையும் நிற்றலும்
சுருங்கலும் விரிதலும் தோற்றல்நின் தொழிலே

அமைத்தலும் அழித்தலும் ஆங்கதன் முயற்சியும்
இமைத்தலும் விழித்தலும் ஆகும்நின் இயல்பே
என்றிவை முதலாம் இயல்புடை வடிவினோ
டொன்றிய துப்புரு இருவகை ஆகி
முத்திறக் குணத்து நால்வகைப் பிறவி

அத்திறத் தைம்பொறி அறுவகைச் சமயமோ
டேழுல காகி எண்வகை மூர்த்தியோ
டூழிதோ றூழி எண்ணிறந் தோங்கி
எவ்வகை அளவினில் கூடிநின்று
அவ்வகைப் பொருளும்நீ ஆகிய இடத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அகவல் ஆகிய ஒருவகைப்பாவே அந்தாதியாய் வரப் பத்துப் பாடல்களால் செய்யப்படுவது `ஒருபா ஒருபஃது` என்னும் பிரபந்தமாகும்.
`பொரு கடலாகிய மேகலையை இயல்பினின் உடைய இருநில மடந்தை முகம் எனப் பொலிந்த ஒற்றி மாநகர்` என இயைக்க.
``உருவின் பெற்றி ஒன்றாகப் பெற்றோர் யாரே`` என்பதனை இறுதியிற் கொள்க.
துன்னும் - நெருங்கிய.
`நின் சடை மின்னின் பிறக்கம்; நின் சென்னியில் வடிவு அண்டம்.
நின் நுதல் நேர் நாட்டம் மூவகைச் சுடரும்; ஆரம் தாராகணம்; நின் ஆகம் விசும்பே; தோள் எண்டிசை; உடை கடல்; அல்குல் அவனி மண்டலம்; தாள் இணை வழக்குப் பாந்தள்; உயிர்ப்பு மாருதமே; நின் வாய்மொழி ஓசை முழுதும்; நின் உணர்வு ஞானத் தொகுதியே; நின தெழிவின் விளைவுகள் உலகு நிற்றலும் சுருங்கலும், விரிதலுமே, நின் இயல்பு அவற்றின் முயற்சியே.
அதுவும் இமைத்தலும் விழித்தலுமே; என்று இவை முதலாம் இயல்புடை வடிவினோடு உரு இருவகை ஆகி, எண்வகை மூர்த்தியோடு முத்திறக் குணம் முதலிய ஆகி, எண் இறந்து ஓங்கி, எவ்வகை அளவினும் காடு நின்று அவ்வகைப் பொருளும் நீ ஆகிய இடத்து (நின்) உருவம் ஒன்றாகப் பெற்றார் யாரே` என இயைத்து முடிக்க.
`சடை ஒரு வகையது, சென்னி ஒரு வகையது, கண்கள் ஒரு வகையன, மற்றும் பலவும் பலப்பல வகையன முழுமையாகப் பார்க்கும் பொழுதும் ஒரு கூறு ஆண், ஒரு கூறு பெண் என்றால் உனது திருமேனியை உலகில் உள்ள என் இனத்து உடம்பிலும் வைத்து ஒருதலையாக உணர்ந்தோர் ஒருவரும் இலர்` என்பதாம்.
இவற்றிடையே, `இயல்பு களும் உலகில் உள்ள ஒத்த உயிர் இனத்தின் இயல்பாகவும் இல்லை` என்பது கூறப்பட்டது.
இதனால், `இறைவன் சேதனம், அசேதனம் என்னும் இரு கூற்றுப் பிரபஞ்சத்துள் ஒன்றும் அல்லன்` என்பது அவனது தடத்த இயல்பானே உணரப்படுதல் கூறப்பட்டது.
பிறக்கம் - விளக்கம்.
பாலகன் - அக்கினி.
நுதல் நேர் - முகத்தில் பொருந்திய.
நுதல், ஆகுபெயர்.
தண் ஒளி - வெள் ஒளி.
வெள் ஒளி ஆரம், தலை மாலை.
``விண்ணவர் முதலா`` என்பதில் ``முதலா`` என்பது முனிவர், பிரமன், விட்டுணு ஆகியோரைக் குறித்தது.
வேறு, மக்கள் உலகின் வேறு.
கோலம் - அழகு.
ஆகம் - உடம்பு.
இருங்கடல் - கரிய கடல்.
அல்குல் - பிருட்டம்.
இதுபோலும் உயர்ந்தோர் செய்யுட்கள் பலவற்றிலும் `அல்குல்` என்பது ஆடவர்க்கும் உரிய உறுப்பாதல் வெளிப்படையாகவே சொல்லப்படவும் அதற்கு இக்காலத்துச் சிலர் இடக்கர்ப் பொருள் கொண்டு பழித்துரை கூறுதல் இரங்கற்குரியது.
அவனி மண்டலம் - பூ மண்டலம்; நிலத்தது அகலம்.
பாந்தள் - ஆதிசேடன்.
வழக்கு - இயக்கம்.
மாருதம் - காற்று.
உயிர்ப்பு - மூச்சு.
இறைவனது உணர்வு உள்நின்று உணர்த்தவே உயிர்களின் உணர்வு எதனையும் உணர்தல் பற்றி `அவனது உணர்வு உயிர்களின் உணர்வுத் தொகுதியே` என்றார்.
`முயற்சியே, முயற்சியும்` என `முயற்சி` என்பதை இரட்டித்துக் கொள்க.
``அதன்`` என்பதைத் தனித் தனிக் கூட்டுக.
அமைத்தல் - ஆக்குதல்.
தொழில் - தொழிலின் விளைவு; ஆகுபெயர்.
``இமைத்தல்`` என்பது கண்ணை மூடுதலைக் குறித்தது.
`கண்ணை மூடிக் கொள்ளுதல்` என்பது ஒன்றையும் நினையாமையையும், `விழித்தல்` என்பது நினைவு எழுதலையும் இலக்கணை வழக்காற் குறித்தன.
`இறைவன் நினைவை ஒடுக்கலால் உலகம் ஒடுங்குதலும், நினைவு கொள்ளுதலால் உலகம் தோன்றுதலும் உளவாகும்` என்றபடி.
இமைத்தல் விழித்தல்களை அமைத்தல் அழித்தல்களோடு எதிர்நிரல் நிறையாக இயைக்க.
``என்று``, எண்ணிடைச் சொல்.
துப்பு உரு - தூயதாகிய திருமேனி.
எண்வகை மூர்த்தி - அட்ட மூர்த்தம்.
``எண் இறந்த`` என்பதை `எண் இறப்ப` எனத் திரிக்க.
எவ்வகை அளவு - சிறுமை பெருமைகள்.
கூடி நிற்றல் - மிகுந்து நிற்றல்.
அவையாவன சிறியவற்றிற்கெல்லாம் சிறியர் ஆதலும், பெரியவற்றிற்கெல்லாம் பெரியன் ஆதலும்.
``இடத்து`` என்பது வினையெச்ச விகுதி.
`நீ இவ்வாறானவிடத்து, நின் உருவின் பெற்றி ஒன்றாகப் பெற்றார் யார்` என மேலே கூட்டி முடிக்க.

பண் :

பாடல் எண் : 2

இடத்துறை மாதரோ டீருடம் பென்றும்
நடத்தினை நள்ளிருள் நவிற்றினை என்றும்
புலியதள் என்பொடு புனைந்தோய் என்றும்
பலிதிரி வாழ்க்கை பயின்றோய் என்றும்
அருவமும் உருவமும் ஆனாய் என்றும்

திருவமர் மாலொடு திசைமுகன் என்றும்
உளனே என்றும் இலனே என்றும்
தளரான் என்றும் தளர்வோன் என்றும்
ஆதி என்றும் அசோகினன் என்றும்
போதியிற் பொலிந்த புராணன் என்றும்

இன்னவை முதலாத் தாமறி அளவையின்
மன்னிய நூலின் பன்மையுள் மயங்கிப்
பிணங்கும் மாந்தர் பெற்றிமை நோக்கி
அணங்கிய அவ்வவர்க் கவ்வவை ஆகிப்
பற்றிய அடையின் பளிங்கு போலும்

ஒற்றி மாநகர் உடையோய் உருவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஒற்றி மாநகர் உடையோய்! (நின்) உரு, பன்னிய நூலின் பன்மையுள் தாம் அறி அளவையில் மயங்கி என்றும், என்றும்.
பிணங்கும் மாந்தர் பெற்றிமை நோக்கி அவ்வவர்க்கு அவ்வவையாகிப் பற்றிய அடையின் பளிங்கு போலும்` என இயைத்து முடிக்க.
முதல் நான்கு அடிகளில் கூறப்பட்டன சைவ புராணங்களையே பற்றி மாகேசுர மூர்த்தங்களுள் ஒவ்வொன்றையே சிவபெருமானது உண்மையியல்பாகக் கூறிப் பிணங்கும் பௌராணிகரும், அகப்புறச் சமயிகளும்.
`அருவம் ஆனாய்` என்றும், `உருவம் ஆனாய்` என்றும் எனக் கொண்டு கூட்டிக் கொள்க.
`இறைவன் உருவம் உடையனாயின் உயிர் வருக்கத்தவனாவன் ஆதலின் இறைவனுக்கு எவ்வாற்றானும் உருவமில்லை; அவன் அருவனே என்பார் மேற்கூறிய இருமதத்தவருள் ஒவ்வொரு சாரார்.
இனி, `இறைவன் உருவன் ஆகாவிடில் உயிர்களுக்குக் காட்சி வழங்குமாறில்லை.
அதனால் இறைவனுக்கு உருவமும், அவனுக்கென இடமும் உள்ளன` என்பாரும் மேற்கூறிய இரு மதத்தவருள் ஓரொரு சாரார்.
`திருமாலே இறைவன்` என்பார் பாஞ்சராத்திரிகள்.
`திசைமுகனே இறைவன்` என்பார் இரணிய கருப்ப மதத்தினர்.
`இறைவன் உளன்; ஆயினும் அவனை இன்னன் - எனக்கூற இயலாது` என்பார் மாயாவாதிகள்.
`இறைவன் இல்லை` என்பார் உலகாயதரும், மீமாஞ்சரரும், நிரீச்சுர சாங்கியரும்.
தளர்தல் நெகிழ்தல், அருளுதல், தளராமை இரங்காது ஒறுத்தலே செய்தல் தளர்தல் ஒறுத்தல் இன்றி அருளலே செய்தல்.
எட்டாம் அடியிற் கூறிய இரண்டும் சமணர் கூற்றுக்கள்.
ஆதி - ஆதி முத்தன்.
அசோகினன் - அசோக மரத்தின்கீழ் இருப்பவன்.
போதி - அரச மரம்.
புராணன் - பழையோன்.
`போதி நிழலில் இருப்போன் இறைவன்` என்பார் புத்த மதத்தினர்.
நூல் - வேறுபட்ட சமய நூல்கள்.
இவைகளையே உணர்ந்து வேத சிவாகமங்களை உணராதாரும், உணரினும் தெளியாதாரும் ஆசிரியராய் மெய்யுணர்வு கொளுத்தப் புகுதலால் இவை போலும் பிணக்குகள் உளவாகின்றன.
அதனையே திருமூல நாயனார், குருடுங் குருடுங் குருட்டாட்ட மாடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே
என்று அருளிச்செய்தார்.
``செய்பவர் செய்திப் பயன் விளைக்கும் செய்யேபோல்`` 2 அவரவரது அறிவு செயல்களுக்குத் தக இறைவன் பயன் அளிப்பவனேயல்லது, அவரது செயலையும் வீணாக்குபவன் அல்லன் ஆதலின் அவரவர் கருதுமாறே நின்று அவரவர்க்குப் பயன் தருவன் என்பது பற்றி ``அவ்வவர்க்கு அவ்வவை யாகி`` என்றார்.
அணங்கிய - துன்புற்ற.
அடை - அடைக்கப்பட்ட பொருள்.
பளிங்கு தன்னால் அடையப்பட்ட பொருளின் தன்மையாய் நிற்றல்போல, `இறைவன் தான் தனது அருள் காரணமாகத் துணையாய் அடையப்பட்டாரது கருத்திற்கேற்ற இயல்பினை உடையனாவன்` என்பதாம்.
பொன்மை நீலாதி வன்னம்
பொருந்திடப் பளிங்கு அவற்றின்
தன்மையாற் நிற்கு மாபோல்
என்றார் சிவஞான சித்தியிலும் 3 இடத்து - இடப்பாகத்தில் உரு, இங்கு `இயல்பு` என்னும் பொருட்டு.

பண் :

பாடல் எண் : 3

உருவாம் உலகுக் கொருவன் ஆகிய
பெரியோய் வடிவிற் பிறிதிங் கின்மையின்
எப்பொரு ளாயினும் இங்குள தாமெனின்
அப்பொருள் உனக்கே அவயவம் ஆதலின்
முன்னிய மூவெயில் முழங்கெரி ஊட்டித்

தொன்னீர் வையகம் துயர்கெடச் சூழ்ந்ததும்
வேள்வி மூர்த்திதன் தலையினை விடுத்ததும்
நீள்விசும் பாளிதன் தோளினை நெரித்ததும்
ஓங்கிய மறையோர்க் கொருமுகம் ஒழித்ததும்
பூங்கணை வேளைப் பொடிபட விழித்ததும்

திறல்கெட அரக்கனைத் திருவிரல் உறுத்ததும்
குறைபடக் கூற்றினைக் குறிப்பினில் அடர்த்ததும்
என்றிவை முதலா ஆள்வினை எல்லாம்
நின்றுழிச் செறிந்தவை நின்செய லாதனின்
உலவாத் தொல்புகழ் ஒற்றி யூர

பகர்வோர் நினக்குவே றின்மை கண்டவர்
நிகழ்ச்சியின் நிகழின் அல்லது
புகழ்ச்சியிற் படுப்பரோ பொருளுணர்ந் தோரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சிவபெருமான் செய்த வீரச் செயல்களாகப் புராணங்களில் சொல்லப்படுவன பல.
அவை திரிபுரம் எரித்தது, தக்கன் வேள்வியில் எச்சனது தலையைத் தடிந்தது, இந்திரன் தோளை ஒரு காலத்தில் முறித்தது, பிரமன் தலைகளுள் ஒன்றைக் கிள்ளியது, காமனை எரித்தது, இராவணனை மலைக்கீழ் அகப்படுத்தி நெரித்தது.
யமனை உதைத்தது முதலியன.
சிவபெருமானது வியாபகத்துள் அடங்காதது எப்பொருளும் இல்லை.
அஃதே எல்லாப் பொருளையும் அவன் தனக்கு வடிவாக உடைமையின் எப்பொருளும் அவனது உறுப்பே.
ஆகவே, பொது மக்களேயன்றி, `எப் பொருளும் இறைவன் வடிவே` என உணர்ந்தோரும் மேற்கூறிய செயல்களைச் சிறப்பாக எடுத்துக் கூறுவார்களாயின் அது நீ ஓரோர் காலத்து நிகழ்த்திய நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறுவதாகுமேயன்றி, உன்னைப் புகழ்ந்த தாகுமோ? (ஆகாது.
ஏனெனில், ஒருவன் தனது உறுப்புக்களைத் தான் பலவகையில் இயக்குதல் அவனுக்குப் புகழாகுமோ? ஆகாமை போல என்பதாம்.)
உருவாம் உலகு - பருப்பொருளாய் உள்ள உலகு.
ஒருவன் - ஒப்பற்ற தலைவன்.
``வடிவு`` என்றது வியாபகத்தை.
சூழ்தல் - எண்ணுதல்.
வேள்வி மூர்த்தி - எச்சன்; யாக தேவன்.
விசும்பு ஆளி - இந்திரன்.
மறையோன் - பிரமன்.
ஆள்வினை - வீரம்.
``கண்டவர்`` என்பதன் பின் `ஆயின்` என ஒரு சொல் வருவிக்க.
படுப்பரோ - படுத்து உணர்வரோ.
``உலவாத் தொல் புகழ் ஒற்றியூர்`` என்பதை முதலிற் கொள்க.

பண் :

பாடல் எண் : 4

பொருளுணர்ந் தோங்கிய பூமகன் முதலா
இருள்துணை யாக்கையில் இயங்கு மன்னுயிர்
உருவினும் உணர்வினும் உயர்வினும் பணியினும்
திருவினும் திறலினுஞ் செய்தொழில் வகையினும்
வெவ்வே றாகி வினையொடும் பிரியாது

ஒவ்வாப் பன்மையுள் மற்றவர் ஒழுக்கம்
மன்னிய வேலையுள் வான்திரை போல
நின்னிடை எழுந்து நின்னிடை ஆகி
பெருகியும் சுருங்கியும் பெயர்ந்தும் தோன்றியும்
விரவியும் வேறாய் நின்றனை விளக்கும்

ஓவாத் தொல்புகழ் ஒற்றி யூர
மூவா மேனி முதல்வ நின்னருள்
பெற்றவர் அறியின் அல்லது
மற்றவர் அறிவரோ நின்னிடை மயக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஓவாத் தொல் புகழ் .
முதல்வ`` என்பதை முதலிற்கொள்க.
பொருள் - வேதப் பொருள்.
பூ மகன் - மாயோனது உந்திக் கமலத்தில் தோன்றிய பிரமன்.
முதல் தொழிலாகிய படைத் தலைச் செய்தல் பற்றிப் பிரமனையே முதல்வனாகக் கூறினார்.
எனினும் அவனுக்கு மேலும் உயர் இனத்தவர் உளர் என்க.
இருள் - அறியாமை.
துணை - அவ் இருளைச் சிறிதே போக்கி உதவுவது.
எனவே, அத்தகைய யாக்கையின்றி இயங்கும் மன்னுயிர்`` - என்றார்.
`மன்னுயிர் வினையொடும் பிரியாது` என இயையும்.
வினை காரண மாக அவையடையும் மாற்றங்கள் உருவொடு உணர்வும், உயர்வொடு தாழ்வும், திருவொடு தெளிவுமாம்.
உரு - உடம்பு.
இது பருப்பொருள்.
உடம்பினின்றும்.
தோன்றும் உணர்வுகள் நுட்பப்பொருள்.
பணி - தாழ்வு.
திரு - செல்வம்.
திறல் - வெற்றி.
இன் உருபுகள் ஏதுப் பொருளவாய், ``வெவ்வேறாகி`` என்பதனோடு முடிந்தன.
``பிரியாது`` என்னும் எதிர்மறை வினையெச்சம், `நின்று` என்னும் பொருட்டாய், ``வினை யொடும்`` என்பதற்கு முடிபாயிற்று.
அவ் எச்சம், `ஒழுக்கம்`` என்னும் தொழிற் பெயர் கொண்டது.
உண்மை சிறப்பு.
ஒவ்வா - ஒன்றுக்கொன்று மாறுபட்ட.
``பன்மையுள்`` என்பதில் உள்ள ``உள்`` என்பதை இன்னாகத் திரிக்க.
`நின்னிடையாகியும்` என உம்மை கொடுத்து ஓதுதல் பாடம் அன்று.
பெயர்தல் - மறைதல்.
``பெருகி`` முதலிய நான்கு வினை யெச்சங்களும் ``விரவி`` என்பதனோடு முடிந்தன.
``விரவியும்`` என்னும் உம்மை சிறப்பு.
`விளக்கம்` வேறாய் நின்றன` என மாற்றிக் கொள்க.
``நின்னிடையதாகிய இம் மயக்கினை நின் அருள் பெற்றவர் அறியினல்லது, மற்றவர் அறிவரோ`` என முடிக்க.
மயக்காவது, உண்மை மாத்திரையால் பொதுப் படத் தோன்றி, `இன்னது` எனச் சிறப்புற விளங்காமை.
மயக்கு உடையதனை ``மயக்கு`` என்றது உபசாரம்.
``ஒற்றியூர்ப் பெருமானே பலவாகிய உயிர்கள் தம் வினை காரணமாக அடையும் அளவிறந்த மாற்றங்கள் பலவற்றிற்கும் நீயே இடமாய் நின்றும் அவற்றுள் ஒரு மாற்றத்தினையும் நீ சிறிதும் எய்தாது, மாற்றம் இல் செம் பொருளாயே நிற்கின்றாய்; இஃது எவ்வாறு` என்னும் அருள் பொருளை உனது அருளைப் பெற்றோர் உணர்வதன்றி, மற்றவர் உணர வல்லுநரல்லர்` என்பது இப்பாட்டின் திரண்ட பொருள்.
இஃது எல்லாப் பொருட்கும் இடமாய் நிற்பது ஆகாயமேயாயினும், அப் பொருள்களின் மாற்றங்களுள் ஒன்றை யேனும் அவ் ஆகாயம் எய்தாதது போல்வது.
இதனையே, `கலப்பினால் எல்லாமாய் நிற்கின்ற இறைவன் பொருள் தன்மையால் அவற்றின் வேறாகியும் நிற்கின்றான்` எனச் சித்தாந்த நூல்கள் கூறுகின்றன.

பண் :

பாடல் எண் : 5

மயக்கமில் சொல்நீ ஆயினும் மற்றவை
துயக்க நின்திறம் அறியாச் சூழலும்
உறைவிடம் உள்ளம் ஆயினும் மற்றது
கறைபட ஆங்கே கரந்த கள்ளமும்
செய்வினை உலகினிற் செய்வோய் எனினும்
அவ்வினைப் பயன்நீ அணுகா அணிமையும்
இனத்திடை இன்பம் வேண்டிநின் பணிவோர்
மனத்திடை வாரி ஆகிய வனப்பும்
அன்பின் அடைந்தவர்க் கணிமையும் அல்லவர்ச்
சேய்மையும் நாள்தோறும்

என்பினை உருக்கும் இயற்கைய ஆதலின்
கண்டவர் தமக்கே ஊனுடல் அழிதல்
உண்டென உணர்ந்தனம் ஒற்றி யூர
மன்னிய பெரும்புகழ் மாதவத்
துன்னிய செஞ்சடைத் தூமதி யோயே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஒற்றி யூர! செஞ்சடை மாதவன் துன்னிய தூ மதியோய்! `சொற்கள் யாவும் நீ` என்பது உண்மையாய் இருக்கவும் அவை உனது இயல்பை அறிய இயலாத நிலைமையை நீ உயிர்களின் உள்ளங்கள் யாவும் உனது உறைவிடங்களேயாதல் உண்மையாய் இருக்கவும், அவ்வுள்ளங்கள் அறியாதவாறு கரந்து நிற்கும் கள்வன் ஆகின்றனை நீ.
உலகில் நிகழும் தொழில்களையெல்லாம் செய்பவன் நீயேயாதல் உண்மையாய் இருக்கவும், அத் தொழில்களால் விளையும் பயன்களுள் ஒன்றும் உன்னைப் பற்றாதவாறே அவற்றிற்குப் பற்றாகின்றனை நீ.
அடியார் கூட்டத்துள் நின்று உனது இன்பத்தினை விரும்பி உன்னை வணங்குகின்றவர்களது உள்ளங்களில் அந்த இன்பமாகவே விளைகின்றவன் நீ.
உயிர்கள் யாவும் இனத்தால் ஒன்றாயிருந்த போதிலும் உன்னை அடைந்தவர்க்கு அண்மையனாயும், அடையாதவர்க்குச் சேய்மையனாயும் இருக்கின்றவன் நீ.
இத் தன்மைகளை எண்ணிப் பார்க்கின் இவை அங்ஙனம் எண்ணிப் பார்ப்பவரது எலும்பையும் உருக்கும்.
ஆகவே, இத் தன்மைகளை உணர்ந்தவர்கட்கே ஊன் உடம்பு அற்றொழியும் நிலைமை, (பிறவா நிலைமை) உண்டாகும் என யாம் உணர்ந்தேம்` என்பது இப்பாட்டின் பொருள்.
மற்று இரண்டும் அசைகள்.
துயக்கம் - கலக்கம்.
சூழல் - சூழ்நிலை.
கனற்பட - குற்றம் உண்டாக.
இனம் - அடியார் கூட்டம்.
வாரி - வெள்ளம்; அல்லது கடல்.
வனப்பு, இங்கே சிறப்பு.
அணிமையனை ``அணிமை`` என்றும், சேய்மையனை ``சேய்மை`` என்றும் கூறியன உபசார வழக்கு.
காண்டல் - உணர்தல்.
``மன்னிய பெரும் புகழ்`` என்பது மதியணிந்தவ னாகிய இறைவனைச் சிறப்பித்தது.
சந்திரன் இறைவன் திருமுடிமேல் இருக்கப்பெற்றது தவத்தினால் ஆகலின் ``மாதவம் துன்னிய தூமதி`` என்றார்.
`செஞ்சடைக் கண் மாதவன் துன்னிய தூமதியோய்` என்க.

பண் :

பாடல் எண் : 6

தூமதி சடைமிசைச் சூடுதல் தூநெறி
ஆமதி யானென அமைத்த வாறே
அறனுரு வாகிய ஆனே றேறுதல்
இறைவன் யானென இயற்று மாறே
அதுஅவள் அவனென நின்றமை யார்க்கும்

பொதுநிலை யானென உணர்த்திய பொருளே
முக்கணன் என்பது முத்தீ வேள்வியில்
தொக்க தென்னிடை என்பதோர் சுருக்கே
வேத மான்மறி ஏந்துதல் மற்றதன்
நாதன் நானென நவிற்று மாறே

மூவிலை ஒருதாள் சூலம் ஏந்துதல்
மூவரும் யானென மொழிந்த வாறே
எண்வகை மூர்த்தி என்பதிவ் வுலகினில்
உண்மை யானென உணர்த்திய வாறே
நிலம்நீர் தீவளி உயர்வான் என்றும்

உலவாத் தொல்புகழ் உடையோய் என்றும்
பொருநற் பூதப் படையோய் என்றும்
தெருளநின் றுககினில் தெருட்டு மாறே
ஈங்கிவை முதலா வண்ணமும் வடிவும்
ஓங்குநின் பெருமை உணர்த்தவும் உணராத்

தற்கொலி மாந்தர் தம்மிடைப் பிறந்த
சொற்பொருள் வன்மையின் சுழலும் மாந்தர்க்
காதி ஆகிய அறுதொழி லாளர்
ஓதல் ஒவா ஒற்றி யூர
சிறுவர்தம் செய்கையிற் படுத்து
முறுவலித் திருத்திநீ முகப்படு மளவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதற்கண் `நீ` என்னும் தோன்றா யெழுவாய் வருவித்துக் கொள்க.
நீ சடைமிசைத் தூமதி சூடுதல், `யான் தூநெறியை உணரும் அறிவு வடிவானவன்` என்பதைக் குறிக்கும் குறிப்பாம்.
நீ அறக்கடவுளாகிய ஆன் ஏறு (இடபம்) ஊர்தல், அறத்தின் வழி உலகை நடத்தும் முதல்வன் யான்` என அறிவிக்கும் குறிப்பாம்.
(தனி ஒரு பொருளேயாகிய நீதானே) ஒருகால் `சிவம்` என அஃறிணையாயும், ஒருகால் `சிவன்` என உயர்திணை ஆடூவாயும் ஒருகால், `சிவை` என உயர்திணை மகடூவாயும் சொல்ல நிற்றல், `உலகப் பொருள் அனைத்திலும் ஒருபடித்தாக நிறைந்து நின்று அவற்றை அவ்வவ் வழியில் இயக்குபவன் யான்` என்பதை அறிவிப்பதாம்.
மதி, கதிர், தீ (சோம சூரியாக்கினி) மூன்றையும் மூன்று கண்களாகக் கொண்டது `அந்தணர்கள் வேட்கும் முத்தீயும் உனது கண்ணொளிக்கூறே` என்பதை உணர்த்துவதாம்.
நான்கு கால்களை உடையதாய், ஒலிக்கும் தன்மையுடைய மான் கன்றைக் கையில் பிடித்துள்ளது, `நான்கு பகுதியதாய `வேதத்திற்குக் கருத்தா யான்` என்பதைத் தெரிவிப்பதாம்.
முனை மூன்றாய், அடி ஒன்றாய் உள்ள சூலத்தை ஏந்தியிருப்பது, `மூவர் மூர்த்திகட்கும் முதலாய் உள்ள ஒருவனாகிய இறைவன் நான்` என்பதை அறிவுறுத்துவதாம்.
அட்ட மூர்த்தியாய் இருத்தல், `மாற்றம் உடைய அனைத்து உலகப் பொருட்கும் மாற்றம் இன்றி நிற்கும் அடிநிலைப் பொருள் நான்` என்பதைத் தெளிவுபடுத்துவதாம்.
ஈங்கு இவை முதலாம் வண்ணமும், வடிவும் `நிலம் முதலிய ஐம்பெரும் பூதங்களும் தானேயாய், மற்றும் முதற் பொருளின் இயல்புகள் பலவற்றையும் உடைய இறைவன் நீயே` என்றும், `அது, பூத நாதனாய் நிற்குமாற்றானே அறியப்படும் என்றும் தெளிவுபட வேதம் முதலிய நூல்கள் பலவும் ஒருபடித்தாக வெளிப்பட எடுத்துக் கூறுகின்றபடியே உனது பெருமைகளை உணர்த்தும் சிறப்பு அடையாளங்களாய் நின்று உணர்த்தவும் உணராது பிணங்கி நிற்போர், தமக்குத் தாமே கேடு சூழ்ந்து கொள்ளும் தற்கேடரே யாவர்.
அவர் தாம் (நல்ல போலவும், நயவ போலவும்) கூறும் சொல்லிலும், பொருளிலும் அகப்பட்டு மயங்குவார் மயங்காதபடி வேதத்தை வன்மையாக உணர்ந்த அந்தணர்கள் பலர்க்கும் தெளிவுபட ஓதும் வேத முழக்கம் என்றும் நீங்காது ஒலிக்கின்ற திருவொற்றியூரில் உள்ள பெருமானே! (நீ மேற்கூறிய பிணக்குரையாளர்கள்) பிணக்குரையை உன் முன்னே கூறும்பொழுது, நீ (நடை வழியை `சிறந்த மாட மாளிகை` என்றும், மணலை `சோறு` என்றும் சொல்லிக் களிக்கின்ற) `சிறுவர் செயலோடு ஒப்பது` என்று கருதிப் புன்முறுவல் பூத்திருக் கின்றாய் போலும்! என்பது இப்பாட்டின் திரண்ட பொருள்.
``ஓதி ஓர்க்கப்படாப் பொருளை ஓர்விப்பன`` 1 என்று அருளிச்செய்த ஆளுடைய பிள்ளையார் அருள்மொழியின்படி, வேதாகமங்களை ஓதியுணர மாட்டாத எளியோர்க்கும், வேதாகமங் களை ஓதிய போதிலும் அதன் உண்மையுணர மாட்டாதவர்க்கும் சிவபெருமானது பெருமைகளை இனிது விளக்கி நிற்பனவே அவனது திருமேனியிற் காணப்படும் சிறப்பு அடையாளங்கள்.
ஆயினும் சில மயக்க நூல்களால் மயங்குவோர் அவற்றின் உண்மையை உணராது தோற்ற மாத்திரத்தையே கண்டு அவரை இகழ்ந்தேபோவர் - என்பதைக் காரைக்காலம்மையார், இவரைப் பொருள் உணர மாட்டாதா ரெல்லாம்
இவரை இகழ்வதே கண்டீர்
என்று அருளிச் செய்தார்.
காணிலும் உருப்பொலார்; செவிக்கினாத காட்சியார் 3 என்பது முதலியவைகளில் அவ்வாறான இகழுரைகளைக் காணலாம்.
அறக்கடவுளே ஆனேற்றுருவாய் வந்து சிவபெருமானைச் சுமந்த வரலாற்றைக் கந்த புராணத்துத் தட்ச காண்டத்துத் ததீசி உத்தரப் படலத்துட் காண்க.
முத்தீக்கள் வட்டம், வில், முக்கோணம் ஆகி இம்மூவகை வடிவில் அமைக்கப்படும் குண்டங்களில் வளர்க்கப்படும் வேள்வித் தீக்கள்.
அவை முறையே சூரியன், சந்திரன், அக்கினி வடிவங்களைக் குறிக்கும்.
சதுரமும் வட்டத்தில் அடங்குவதாகும்.
வேதமான் - வேதம் போலும் மான்.
வேதம் போலும், நான்கு கால்களை உடைமையும், ஒலித்தலும்.
`பூத நாதன்` என்பது வெளிப் படைப் பொருளில் ``பூத கணங்கட்குத் தலைவன்`` எனப் பொருள் தரினும் உள்ளுறைப் பொருளில் `உயிர்கட்குத் தலைவன்` (பசுபதி) எனப் பொருள் தரும்.
``தெருட்டுமாற்றானே` என உருபு விரிக்க.
``தற்கொலி`` என்பது சாதிப் பெயராய் நின்றது.
``சொல்வன்மை, பொருள் வன்மை`` எனத் தனித் தனிக் கூட்டுக.
பொருள் வன்மை யாவது வெளிப்படைப் பொருள் இகழ்ச்சியா அமைதல்.

பண் :

பாடல் எண் : 7

அளவினில் இறந்த பெருமையை ஆயினும்
எனதுளம் அகலா தொடுங்கிநின் றுளையே
மெய்யினை இறந்த மெய்யினை ஆயினும்
வையகம் முழுதும்நின் வடிவெனப் படுமே
கைவலத் திலைநீ எனினும் காதல்

செய்வோர் வேண்டும் சிறப்பொழி யாயே
சொல்லிய வகையால் துணையலை ஆயினும்
நல்லுயிர்க் கூட்ட நாயகன் நீயே
எங்கும் உள்ளோய் எனினும் வஞ்சனை
தங்கிய அவரைச் சாராய் நீயே

அஃதான்று
பிறவாப் பிறவியை பெருகாப் பெருமையை
துறவாத் துறவியை தொடராத் தொடர்ச்சியை
நுகரா நுகர்ச்சியை நுணுகா நுணுக்கினை
அகலா அகற்சியை அணுகா அணிமையை

செய்யாச் செய்கையை சிறவாச் சிறப்பினை
வெய்யை தணியை விழுமியை நொய்யை
செய்யை பசியை வெளியை கரியை
ஆக்குதி அழித்தி ஆன பல்பொருள்
நீக்குதி தொகுத்தி நீங்குதி அடைதி
ஏனைய வாகிய எண்ணில் பல்குணம்
நினைதொறும் மயக்கும் நீர்மைய ஆதலின்
ஓங்குகடல் உடுத்த ஒற்றி யூர
ஈங்கிது மொழிவார் யாஅர் தாஅம்
சொல்நிலை சுருங்கின் அல்லது

நின்னியல் அறிவோர் யார்இரு நிலத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஓங்கு கடல் உடுத்த ஒற்றி யூர`` என்பதை முதலிற் கொள்க.
அளவு - அளவை வகைகள்.
அவை யனைத்தையும் கடந்த பெருமை - பரப்பு.
`யாதோர் அளவைக்கும் உட்படாத நீ என்னுடைய சிறிய உள்ளத்தினுள் ஒடுங்கி நிற்கின்றாய்.
``இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்`` 1 என ஔவையாரும் கூறினார்.
மெய் - உயிர்கள் பெறுகின்ற பலவகையான உடம்புகள்.
அத்தகைய உடம்பு எதுவும் உனக்கு இல்லையாயினும் உலகம் முழுதும் உனக்கு உடம்பாகச் சொல்லப்படுகின்றது.
(``விசுவ ரூபி`` என்பது வேத மொழி) ``கைவலம்`` என்பதில் வலம், ஏழனுருபு.
நீ ஒருவர் கைக்கும் உட்படாதவனாயினும், காதல் செய்வோர் (அன்பர்கள்) செய்யும் சிறப்பு - பூசையும், விழாவும் போல்வனவற்றில் நீங்காது நிற்கின்றாய்.
முற்படக் கூறிய வகைகளால் நீ ஒருவர் பக்கத்திலும் உள்ளாயில்லை யாயினும் உயிர்த் தொகுதிக்கு நீயே தலைவனாகின்றாய்.
நீ இவ்விடத்திலும் ஒழிவின்றி நிற்பவனாயினும் வஞ்சனையாளரை அணுகாதவனாகின்றாய்.
இவ்வாறன்றியும் பிறவாமலே பிறந்த பிறவியை உடையாய்; (இயற்கைப் பொருள், அனாதிப் பொருள்` என்பதாம்.
படிமுறையால் பெருகாத (வளராத - இயல்பிலே) விரிந்து நிற்கின்ற விரிவை உடையாய்; துறவாமலே துறந்த துறவை உடையாய்; (`முன்னே பற்றுக் கொண்டிருந்தது, பின்பு அப்பற்றைத் துறவாமல் இயல்பாகவே பற்றற்றவனாய் இருக்கின்றாய்` என்பதாம்.)
பிறப்பை, `பிறவி` என்றல் போலத் துறவை, `துறவி` என்றலும் வழக்கு.
தொடர்ச்சி - இயைபு.
முன்பு வேறாய் இருந்து, பின்பு பிற பொருள்களோடு தொடர்பு கொள்ளாமல் அனாதியே எல்லாப் பொருளிலும் இயைந்து நிற்கின்றாய்; யாதொரு நுகர்ச்சியையும் உயிர்கள் நுகர்தற் பொருட்டு அவைகளோடு உடனாய் நின்று, அவை நுகர்வனவற்றை நீயும் நுகர்கின்றாய் எனினும், அந்நுகர்ச்சியால் நீ தாக்கப்படாது நினது இயல்பிலே நிற்கின்றாய்.
படி முறையால் வளர்ச்சியடையாது இயல்பாக விரிந்த விரிவினை உடையையாதல் போலச் சிறிது சிறிதாகத் தேய்ந்து நுணுகாது இயல்பிலே அணுவினும் அணுவாய் நுணுகி நிற்கின்றாய்; உயிர்களின் மன வாக்குக் காயங்களுக்கு முன்னர் அகப்படும் பொருளாய் இருந்து, பின் அகப்படாமல் நீங்கினையாகாது, இயல்பிலே அவற்றைக் கடந்து நிற்கின்றாய்.
அஃதேபோல, முன்பு சேய்மைப் பொருளாய் இருந்து, பின்பு அண்மைப் பொருள் ஆகாது இயல்பிலே அண்மைப் பொருளாய் நிற்கின்றாய்.
இவ்வாறே நீ ஒன்றையும் செய்யாமலே எல்லாவற்றையும் செய்தலையும், ஒரு காலைக்கொருகால் சிறந்து நில்லாது இயல்பாகவே எல்லாப் பொருளினும் மேலாகச் சிறந்த சிறப்பினையும் உடையவன் ஆகின்றாய்.
வெப்பத்தை உடையனாய், அதுபொழுது தட்பத்தை உடையவனாயும், திண்மையுடையவனாய், அதுபொழுதே நொய்ம்மையை உடையவனாயும் இருக்கின்றாய்; இன்னும் எப்பொருளையும் படைக்கின்றாய்; பின்பு அழித்து விடுகின்றாய்.
கூடியிருக்கும் பல பொருள்களை வேறு வேறாக்கி நீக்கச் செய்கின்றாய்; அதனோடு வேறு வேறாய் நீங்கி நிற்கின்ற பொருளை ஒன்றாய்த் தொகுக்கின்றாய்.
நின்ற பொருளினின்றும் நீங்குகின்றாய்; (இஃது அப்பொருள் கேடுறுதற் பொருட்டு.
``கடலின் நஞ்சமுது உண்டவர் கைவிட்டால் - உடலினார் கிடந்து ஊர்முனி பண்டமே`` 1 என்னும் அப்பர் வாக்காலும் அறியப்படும்.)
நீங்கிநின்ற பொருளோடு சேர்கின்றாய்.
இஃது அப்பொருள் ஆக்கம் பெறுதற் பொருட்டு.
எண்ணில் பல்குணம் - ஓர் இனப்படுத்த இயலாத பல்வேறான தன்மைகள்.
மயக்குதல் - ஐயத்தைத் தோற்றுதல்.
உணர்வு ஒருதலைப் படாது பலதலைப்படச் செய்தல்.
ஈங்கிது - இத்தன்மைத்தாய இது.
மொழிவார் யார் - ஒருதலைப்பட அறுதியிட்டுச் சொல்பவர் யாவர்? `ஒருவரும் இலர்` என்றபடி வந்தது.
இவ்வாறெல்லாம் `மெய்ப் பொருள் இன்னது எனச் சொல்ல வாராத அநிர்வசனப் பொருள்` என்பது கருத்தன்று - என்றற்கு,
சொல்நிலை சுருங்கி னல்லது
நின்னிலை அறிவோர் யார் இருநிலத்தே
என்றார்.
சொல்நிலை - `அது இன்னது` எனத் தம்மின் வேறாய்ச் சுட்டியுணர்ந்து சொல்லும் நிலை.
அது நீங்குதலாவது, தான் அதனின் வேறாய் நில்லாது அதுவேயாய் ஒட்டியுணரும் நிலை.
அந்நிலை உணர்வார் உணர்வதாய் நிற்பதல்லது, வேறாய்ப் பிறர்க்கு உணர்த்த வருவதன்று.
அதனையே,
இங்ங னிருந்ததென் றெவ்வண்ணம் சொல்லுகேன்
அங்ங னிருந்ததென் றுந்தீபற
அறியும் அறிவதன் றுந்தீபற
எனத் திருவுந்தியார் கூறிற்று.
``எவ்வண்ணம் சொல்லுவேன்`` என்றதனால் அட்டியுணர்த்தப்படாமை கூறினாராயினும் ``அங்ஙன் இருந்தது`` என்றமையால் அஃது அனுபவப் பொருளாயினமை கூறினாராதலின், `மெய்ப்பொருள் அநிர்வசனீயம்` என்றல் பொருந்தாதாம்.
விழுப்பம், இங்குத் திட்பத்தைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 8

நிலத்திடைப் பொறையாய் அவாவினில் நீண்டு
சொலத்தகு பெருமைத் தூரா ஆக்கை
மெய்வளி ஐயொடு பித்தொன் றாக
ஐவகை நெடுங்காற் றாங்குடன் அடிப்ப
நரையெனும் நுரையே நாடொறும் வெளுப்பத்

திரையுடைத் தோலே செழுந்திரை யாகக்
கூடிய குருதி நீரினுள் நிறைந்து
மூடிய இருமல் ஓசையின் முழங்கிச்
சுடுபசி வெகுளிச் சுறவினம் எறியக்
குடரெனும் அரவக் கூட்டம்வந் தொலிப்ப

ஊன்தடி எலும்பின் உள்திடல் அடைந்து
தோன்றிய பல்பிணிப் பின்னகம் சுழலக்
கால்கையின் நரம்பே கண்ட மாக
மேதகு நிணமே மெய்ச்சா லாக
முழக்குடைத் துளையே முகங்க ளாக
வழுக்குடை மூக்கா றோதம்வந் தொலிப்ப
இப்பரி சியற்றிய உடலிருங் கடலுள்
துப்புர வென்னும் சுழித்தலைப் பட்டிங்
காவா என்றுநின் அருளினைப் பெற்றவர்
நாவா யாகிய நாதநின் பாதம்

முந்திச் சென்று முறைமையின் வணங்கிச்
சிந்தைக் கூம்பினைச் செவ்விதின் நிறுத்தி
உருகிய ஆர்வப் பாய்விரித் தார்த்துப்
பெருகிய நிறையெனுங் கயிற்றிடைப் பிணித்துத்
துன்னிய சுற்றத் தொடர்க்கயி றறுத்து

மன்னிய ஒருமைப் பொறியினை முறுக்கிக்
காமப் பாரெனுங் கடுவெளி அற்றத்
தூமச் சோதிச் சுடருற நிறுத்திச்
சுருங்கா உணர்ச்சித் துடுப்பினைத் துழாவி
நெருங்கா அளவில் நீள்கரை ஏற்ற

ஆங்கவ் யாத்திரை போக்குதி போலும்
ஓங்குகடல் உடுத்த ஒற்றியூ ரோயே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியை முதலிற் கொள்க.
இப் பாட்டினுள் உடம்பு கடலாகவும், இறைவன் திருவடி அக்கடலைக் கடப்பிக்கும் மரக்கல மாகவும், இறைவன் திருவருளைப் பெற்றோரே அம்மரக்கலத்தைப் பற்றிக் கடலைக் கடக்கும் பயணிகளாகவும் உருவகம் செய்யப்படுதல் அறியத் தக்கது.
`பாதத்தில் சிந்தையை நிறுத்தி` என்க.
பொறை - சுமை.
`உடம்பை பூமியோடு பொருத்திக் காணின் உடம்பு பூமிக்குச் சுமையாகும்` எனவும், `ஆசையோடு பொருத்திப் பார்க்கின், எல்லை யின்றி நீள்வதாகும்.
(ஆசைக்கு அளவில்லை என்பதாம்.)
சிறுமையைப் `பெருமை` என்றது இகழ்ச்சிக்குறிப்பு.
``ஆக்கை`` என்னும் ஐகார ஈற்றுத் தொழிற்பெயர் ஆகுபெயராய் ஆக்கப்பட்ட குழியைக் குறித்தது.
குழி - பள்ளம்; ஆழம் என்றது வயிற்றை.
`பொறையாய், நீண்டு, தூர்க்கப்படாத ஆழத்தையுடைய இருங்கடல்` என்க.
வளி - வாதம்.
ஐ - சிலேத்துமம்.
வாதம் முதலிய மூன்று முதல் நிலைப் பொருள்களில் தலையாயது வாதமேயாதலின் அதனை, ``மெய் வளி`` என்றார்.
``ஓடு`` என்பதை வளி, பித்து இவற்றிற்கும் கூட்டுக.
`வளி முதலிய மூன்றனோடுங் கூடி, ஐவகைக் காற்று அடிப்ப` என்க.
தச வாயுக்களில் பிராணன், அபானன், உதானன், சமானன், வியானன் என்னும் ஐந்தே சிறப்புடைமை பற்றி ``ஐவகைக் காற்று அடிப்ப`` என்றார்.
கடலில் பல திசையான காற்றுக்கள் அடித்தல் இயல்பு.
வெளுப்ப - வெளிதாய்த் தோன்ற.
மெலிந்து தொங்கும் தோல், `திரை` எனப்படும்.
கடல் அலைகளுக்கும், `திரை` என்பது பெயர்.
மூடிய இருமல் - பேசுதலைத் தடுக்கும் இருமல்.
`பசியும், வெகுளியுமாகிய சுறவினம்` என்க.
அரவம் - பாம்பு; கடல் வாழ் பாம்பு.
ஒலிப்ப - இரைய.
ஊன் - இறைச்சி.
தடி - தசை.
திடல் - கடல் களில் சிறு தீவுகள்.
எதிர்பாராத தீவு எதிர்ப்படின் மரக்கலத்தைப் பின்னோக்கிச் செலுத்துவர்.
சுழல - திரும்ப.
முழக்குடைத் துளை, நவத்துவாரங்கள்.
கண்டம் - திசை திருப்பும் கருவிகள்.
சால் - உள் அமைப்பு.
முகம் - முன்னோக்கும் பகுதி.
மூக்கு ஆறு - மூக்கின் வழியாக விட்டு வாங்கும் மூச்சு.
ஓதம் - அலை; அஃது ஆருபெயராய், தன் ஓசையைக் குறித்தது.
இப்பரிசு இயற்றிய - `இத் தன்மைத்தாக இயற்றப்பட்ட உடல்` என்க.
துப்புரவு - நுகர்ச்சிப் பொருள்.
கூம்பு - பாய்மரம்.
ஆர்த்து - பொருத்தி, ``கயிற்றிடை`` என்பதை, `கயிற்றினால்` எனத் திரிக்க.
அறுக்கப்படுவதாகிய கயிறு, நின்று நீக்கப் படும் துறையின்கண் பிணித்து வைத்துள்ள கயிறு.
ஒருமை - மன ஒருமை.
பொறி - மரக்கலத்தை வேகமாகச் செலுத்தும் யந்திரம்.
பார்- பாறை; கடலுள் இருப்பவை.
கடுவெளி - கொடிய இடம்.
இது மரக்கலம் உடைதற்கு ஏதுவாம் ஆதலின், இஃது உள்ள இடம் `கொடிது` எனப்பட்டது.
அகற்ற - இந்த இடத்தைத் தெரிந்து மரக் கலத்தை அப்பாற்படுத்தற் பொருட்டு தூமம் - நறும் புகை.
சோதி - விளக்கு.
இவை வழிபாட்டுப் பொருள்கள்.
`தூமத்தோடு கூடிய சோதி என்க.
மரக்கலத்தை வழி தெரிந்து இயக்க அதன்கண் விளக்கு ஏற்றப்படும்.
உணர்ச்சி - மெய்யுணர்வு.
துழாவுதல் - தண்ணீரை ஒரு முகமாகத் தள்ளுதல்.
``அளவில் கரை`` என்றது `அளவின்றி நீண்ட கரை` எனப் பொருள் தந்தது.
``கரை`` என்றது `வீடு` என்பது தோன்ற அளவின்றி நீள்கரை`` என்றமையின், இது குறிப்புருவகம் `துடுப்பினைத் துழாவி நெருங்கிச் சென்று உயிரைக் கரை ஏற்றும்படி ஆங்கு அவ் யாத்திரை போக்குதி போலும்!` என முடிக்க.
போக்குதி - நிறைவேற்றுவாய்.
போலும், உரையசை.
`ஆகி`` என்னும் செய்தென் எச்சம் ``அடிப்ப`` என்பதனோடும், ``அடிப்ப, வெளுப்ப`` முதலிய செயவென் எச்சங்கள் பலவும் ``இயற்றிய`` என்பதனோடும், ``நிறைந்து, முழங்கி`` என்னும் செய்தென் எச்சங்கள் எண்ணுப் பொருளவாய், ``எறிய`` என்பதனோடும், ``அடைந்து`` என்னும் செய் தென் எச்சம் ``சுழல`` என்பதனோடும், ``வணங்கி, நிறுத்தி`` முதலிய செய்தென் எச்சங்கள், ``நெருங்கா`` என்னும் செய்யா என் எச்சத் தோடும், அது ``ஏற்ற`` என்னும் காரியப் பொருட்டாய செயவென் எச்சத்தோடும், அது ``போக்குதி`` என்பதனோடும் முடிந்தன.
இடையில், ``தலைப்பட்டு`` என்பதில், `தலைப்பட்டும்` என இழிவு சிறப்பும்மை விரித்து, அதனை, ``பெற்றவர்`` என்பதனோடு முடிக்க.
இவ்வாற்றால், `இடர்ப்பாடு மிக்க உடம்பினுள் தங்கி, இடர்ப் பாடான வாழ்வில் நின்றும் இறைவனது திருவருளைப் பெற்றவர் அவனது திருவடியைத் துணையாகப் பற்றி அவனது பணியிலே நின்று தம் உயிரை வீடுபேற்றிற்கு உரித்தாக ஆக்கிக் கொள்ள முயல்வர்`` என்பதும், `அவர்கட்கு இறைவன் துணை நின்று அவர்களது முயற்சி வெற்றிபெறச் செய்வன்` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 9

ஒற்றி யூர உலவா நின்குணம்
பற்றி யாரப் பரவுதல் பொருட்டா
என்னிடைப் பிறந்த இன்னாப் புன்மொழி
நின்னிடை அணுகா நீர்மைய ஆதலின்
ஆவலித் தழுதல் அகன்ற அம்மனை

கேவலம் சேய்மையிற் கேளான் ஆயினும்
பிரித்தற் கரிய பெற்றிய தாகிக்
குறைவினில் ஆர்த்தும் குழவிய தியல்பினை
அறியா தெண்ணில் ஊழிப் பிறவியின்
மயங்கிக் கண்ணிலர் கண்பெற் றாங்கு

தாய்தலைப் படநின் தாளிணை வணக்கம்
வாய்தலை அறியா மயக்குறும் வினையேன்
மல்கிய இன்பத் தோடுடன் கூடிய
எல்லையில் அவாவினில் இயற்றிய வாகக்
கட்டிய நீயே அவிழ்க்கின் அல்லது

எட்டனை யாயினும் யான்அவிழ்க் கறியேன்
துன்னிடை இருளெனும் தூற்றிடை ஒதுங்கி
வெள்ளிடை காண விருப்புறு வினையேன்
தந்தையுந் தாயுஞ் சாதியும் அறிவும்நம்
சிந்தையுந் திருவுஞ் செல்கதித் திறனும்

துன்பமுந் துறவுந் தூய்மையும் அறிவும்
இன்பமும் புகழும் இவைபல பிறவும்
சுவைஒளி ஊறோசை நாற்றத் தோற்றமும்
என்றிவை முதலா விளங்குவ எல்லாம்
ஒன்றநின் அடிக்கே ஒருங்குடன் வைத்து
நின்றனன் தமியேன் நின்னடி அல்லது
சார்வுமற் றின்மையின் தளர்ந்தோர் காட்சிச்
சேர்விட மதனைத் திறப்பட நாடி
எய்துதற் கரியோய் யானினிச்
செய்வதும் அறிவனோ தெரியுங் காலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பொருட்டு - நிமித்தம்.
`பொருட்டாக` என ஆக்கம் வருவிக்க.
இன்னாமை - துன்பம்; செவிக்குத் துன்பமாகுவன.
புன்மை - சிறப்பிலாப் பொருள்களையுடைமை.
நீர்மை - தன்மை.
``என்னிடைப் பிறந்த இன்னாப் புன்மொழி - நின்னிடையணுகா நீர்மைய`` என்றமையால், `அருளாளரிடைப் பிறந்த நன்மொழி நின்னிடையணுகுதல் நீர்மைய` என்பது அருத்தாபத்தியாற் பெறப்பட்டது.
ஆவலித்தல் - வாய்விட்டுக் கதறுதல்.
அம்மனை - தாய்.
கேவலம் - தனிமை.
`சேய்மைக் கேவலத்தின்` என மொழி மாற்றிக் கொள்க.
குறைவினில் - தன் மனக்குறை காரணமாக.
ஆர்க்கும் - ஓசை செய்கின்ற.
அறியாது - உன்னை அடையும் நெறியை அறியாமல்.
`ஊழில்` என ஏழாவது விரிக்க.
மயங்கி மயக்குறும்` என இயையும்.
``தலைப்பட`` என்பதனையும், `தலைப்பட்டாற்போல` என்க.
`கண் இலர் கண்பெற்றாற் போலவும், முன்னர்க் கூறிய குழவி தாயைத் தலைப்பட்டாற் போலவும் வணக்கம் வாய்ந்து இன்புறுதலை அறியாமல், மேலும் மேலும் மயக்கத்திலே கிடக்கும் வினையேன் இயற்றிய ஆக` என்க.
இன்பம் - ஐம்புல இன்பம்.
கூடிய - கூடுதற்கு; `செய்யிய` என்னும் எச்சம்.
அவாவினில் - ஆசையால்.
இயற்றிய - இயற்றிவரும் செயல்கள்.
ஆக - நிகழும் நிலையில் நீயே அவிழ்க்கின் அல்லது` என்க.
துன்னிய இருள் - செறிந்த இருள்.
இருள் - அறியாமை.
தூறு - புதர்.
ஒதுங்கி - மறைந்து.
வெள்ளிடை - ஒளி பரந்த இடம்.
``வினையேன்`` என்பதற்குப் பின், ``நின்னடி யல்லது சார்வுமற் றின்மையின்`` என்பதைக் கூட்டுக.
(நீ) `தளர்ந்தோர் காட்சிச் சேர்விடமாகின்ற அதனை நாடி எய்துதற்கு அரியோய் ஆகலின் தெரியுங்கால் யான் இனிச் செய்வதும் அறிவனோ` என முடிக்க.

பண் :

பாடல் எண் : 10

காலற் சீறிய கழலோய் போற்றி
மூலத் தொகுதி முதல்வ போற்றி
ஒற்றி மாநகர் உடையோய் போற்றி
முற்றும் ஆகிய முதல்வ போற்றி
அணைதொறுஞ் சிறக்கும் அமிர்தே போற்றி
இணைபிறி தில்லா ஈச போற்றி
ஆர்வஞ் செய்பவர்க் கணியோய் போற்றி
தீர்வில் இன்சுவைத் தேனே போற்றி
வஞ்சனை மாந்தரை மறந்தோய் போற்றி
நஞ்சினை அமிர்தாய் நயந்தோய் போற்றி

விரிகடல் வையக வித்தே போற்றி
புரிவுடை வனமாய்ப் புணர்ந்தோய் போற்றி
காண முன்பொருள் கருத்துறை செம்மைக்
காணி யாகிய அரனே போற்றி
வெம்மை தண்மையென் றிவைகுணம் உடைமையின்

பெண்ணோ டாணெனும் பெயரோய் போற்றி
மேவிய அவர்தமை வீட்டினிற் படுக்கும்
தீப மாகிய சிவனே போற்றி
மாலோய் போற்றி மறையோய் போற்றி
மேலோய் போற்றி வேதிய போற்றி

சந்திர போற்றி தழலோய் போற்றி
இந்திர போற்றி இறைவ போற்றி
அமரா போற்றி அழகா போற்றி
குமரா போற்றி கூத்தா போற்றி
பொருளே போற்றி போற்றி என்றுனை

நாத்தழும் பிருக்க நவிற்றின் அல்லது
ஏத்துதற் குரியோர் யாரிரு நிலத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முன் பாட்டிற் போந்த, ``ஒற்றி யூர`` என்பதை இப்பாட்டின் முதலிலும் வருவித்து, `என்று இங்ஙனம் நவிற்றின் அல்லது, உன்னை ஏத்துதற்குரியோர் இருநிலத்து யார்` என முடிக்க.
நவிற்றுதல் - இயன்ற அளவு சொல்லுதல்.
ஏத்துதல் - புகழ்கள் அனைத்தையும் முற்ற எடுத்துக் கூறுதல்.
மூலம் - உலகத்திற்கு முதற் காரணம்; சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை.
அவை பல்வேறு வகை ஆற்றல்களின் திரட்சியாய் இருத்தலின் அவற்றைத் ``தொகுதி`` என்றார்.
முதல்வன், அதனை ஆக்கப்படுத்துபவன்.
அணைதல் - பற்றுதல்.
சிறத்தல் - சுவை மிகுதல்.
வையகம் - நிலம்.
வனம் - நீர்.
முன்னுதல் - நினைத்தல்.
காணவிரும்பி நினைக்கப் படுகின்ற பொருள், மெய்ப்பொருள்.
அது கருத்தில் உற வேண்டு மாயின் கருத்துச் செம்மை பெற வேண்டும்.
செம்மையுள் நிற்பராகில்
சிவகதி விளையு மன்றே
என அப்பரும் அருளிச் செய்தார்.
ஆணி - நிலைபெறுத்தும் பொருள்.
வெம்மையாவது அறத்திற்கு மாறானவற்றைக் காய்தல்.
தண்மையாவது அறம் உடையார்க்கு அருளல்.
`காய்தலும், அருளலும் ஆகிய மாறுபட்ட இரு தன்மைகளை இறைவன் உடையன்` என்பதை உணர்த்தவே அவன் ஆணும் பெண்ணுமாகிய மாறுபட்ட இரு கூறுகளை ஓர் உடம்பில் கொண்டு விளங்குகின்றான் என்றபடி மேவுதல் - விரும்புதல்.
தீபம் - விளக்கு.
மாலோன் - திருமால்.
மறையோன் - பிரமன்.
`இவர்கள்பால் இவர்களேயாய்க் கலந்து நின்று காத்தல் படைத்தல்களைச் செய்கின்றான்` என்பதாம்.
மேலோன் - அனைவர்க்கும் மேலானவன்.
வேதியன் - வேதத்தை அருளிச் செய்தவன்.
தழலோன் - அக்கினி.
இறைவன், இங்கு உருத்திரன்.
அமரன் - அனைத்துத் தேவரும் ஆயவன்.
குமரன் - இளையன்.
சிவனை `முதியன்` என்றல் உலக வழக்கிலும் காணப்படுவது.
பொருள் - அடையத்தக்க பொருள்.
திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது முற்றிற்று

பண் :

பாடல் எண் : 1

என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத்
தன்னை நினையத் தருகின்றான் - புன்னை
விரசுமகிழ் சோலை வியன்நாரை யூர்முக்கண்
அரசுமகிழ் அத்திமுகத் தான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

விரசு - நெருங்கி.
``மகிழ்`` இரண்டில் முன்னது மகிழ மரம்; பின்னது மகிழ்ச்சி.
அத்தி - யானை.
அரசு, `அரசமரம்` எனவும், அத்தி, `அத்தி மரம்` எனவும் வேறொரு பொருளைத் தோற்றுவித்த லாகிய நயத்தைப் பயந்தது.
அந்நயம் முரண் தொடையாம்.
`நாரையூர் அத்தி முகத்தான்` என இயைக்க.
இவ்விநாயகர், `பொல்லாப் பிள்ளையார்` என்னும் பெயர் உடையர்.
இப் பெயர்ப் பொருளைச் சிவஞான போத மங்கல வாழ்த்து உரையிற் காண்க.
`இப்பெரு மானுக்கு யான் அடியன் ஆனதும் அவன் என்னை நினைந்து அடிமை கொண்டதனாலும், பின்பும் நான் அவனை மறவாது நினைதலும் அவன் நினப்பிப்பத னாலுமே` என்பதாம்.
`இப்பெருமானுக்கு யான் செய்யும் கைம்மாறு யாது? என்பது குறிப்பெச்சம்.
இதனால், `இவ்வாசிரியர் விநாயகப் பெருமானது திருவருளை எய்திய அருளாளர்` என்பது போந்தது.

பண் :

பாடல் எண் : 2

முகத்தாற் கரியனென் றாலும்
தனையே முயன்றவர்க்கு
மிகத்தான் வெளியனென் றேமெய்ம்மை
உன்னும் விரும்படியார்
அகத்தான் திகழ்தரு நாரையூர்
அம்மான் பயந்தவெம்மான்
உகத்தா னவன்தன் னுடலம்
பிளந்த ஒருகொம்பனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கரியன் - யானையாகியவன்.
வெளியன் - வெளிப்பட்டு நிற்பவன்.
இவை இரண்டும் முறையே `கருநிறத்தை உடையவன், வெண்ணிறத்தையுடையவன்` எனப் பிறிதுமோர் பொருள்தந்து, முரண்தொடையாயும் நின்றன.
முயலுதல், இங்குப் பணிதல், அகத்தான் - மனத்தில் இருப்பவன்.
திருநாரையூர் பாடல் பெற்ற சிவத்தலம் ஆதல் அறியத் தக்கது.
அம்மான் - அப்பெரியோன்; சிவபெருமான்.
எம்மான் - எங்கள் இறைவன்.
தானவன், கயா முகாசுரன்.
`அவன் உடலம் உகப் பிளந்த ஒரு கொம்பன்` என்க.
உக - சிதைந்து சிந்த.
யாதொரு படைக்கலத்தாலும் அழியா வரம் பெற்ற கயாமுகாசுரனை விநாயகப் பெருமான் தனது இரு தந்தங்களுள் வலத் தந்தத்தை ஒடித்து அதனாலே கொன்று, ஒற்றைக் கொம்பன் ஆகியதைக் கந்த புராணக் கயமுகன் உற்பத்திப் படலத்துக் காண்க.
இதன் முன்னிரண்டு அடிகளில் ஆசிரியர் தம் அனுபவத்தைக் குறிப் பாற் புலப்படுத்தியிருத்தலை உன்னுக.

பண் :

பாடல் எண் : 3

கொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமே
வம்பனைய மாங்கனியை நாரையூர் - நம்பனையே
தன்னவலம் செய்துகொளும் தாழ்தடக்கை யாயென்நோய்
பின்னவலம் செய்வதென்னோ பேசு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டிற்கு `நெஞ்சே` என்னும் முன்னிலை வருவித்துக் கொள்க.
கொம்பு, பூங்கொம்பு.
குறுகாமே - வந்து அடையும் முன்.
வம்பு அனைய - புதிதாகிய அந்த; இது பண்டறி சுட்டு.
தன்னம் - சிறுமை.
உலகை வலம் வருதலினும் அன்னை தந்தையரை வலம் வருதல் எளிதாதல் பற்றி ``தன்ன வலம்`` என்றார்.
மாங்கனியின் பொருட்டுச் சிவபெருமான் வைத்த ஓட்டத்துள் விநாயகர் முருகனை வென்று மாங்கனியைப் பெற்ற வரலாறு நன்கறியப்பட்டது.
என் - என்று சொல்.
`சொன்னால், பின் நோய் (வினைகள்) அவலம் (துன்பம்) செய்வது என் உளது? பேசு` என முடிக்க.

பண் :

பாடல் எண் : 4

பேசத் தகாதெனப் பேயெரு
தும்பெருச் சாளியுமென்
றேசத் தகும்படி ஏறுவ
தேயிமை யாதமுக்கட்
கூசத் தகுந்தொழில் நுங்கையும்
நுந்தையும் நீயுமிந்தத்
தேசத் தவர்தொழும் நாரைப்
பதியுட் சிவக்களிறே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``இந்தத் தேசத்தவர் .
.
.
சிவக்களிறே! நுங்கையும், நுந்தையும், நீயும் - பேசத் தகாது - என ஏசத் தகும்படி பேயும், எருதும், பெருச்சாளியும் என்று இவற்றை ஏறுவதே`` என இயைத்து முடிக்க.
நுங்கை - உன் தங்கை.
துர்க்கையை உமை அம்சமாதல் பற்றி `அவள் தங்கை` என்பதேயன்றி மகளாகவும் கூறுவர்.
அதை வைத்து இங்கு ``நுங்கை`` என்றார்.
கூசத்தகும் தொழில் கொலை.
அசுரனை யழித்தல்.
``பேய்`` என்பதிலும் எண்ணும்மை விரிக்க.

பண் :

பாடல் எண் : 5

களிறு முகத்தவனாய்க் காயம்செந் தீயின்
ஒளிரும் உருக்கொண்ட தென்னே - அளறுதொறும்
பின்நாரை ஊர்ஆரல் ஆரும் பெரும்படுகர்
மன்நாரை யூரான் மகன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அளறுதொறும்`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
அளறு - சேறு.
அஃது ஆகுபெயராய் அவற்றையுடைய வயல்களைக் குறித்தது.
`ஊர் ஆரலை அவ்வூர்தலின் பின்னாகப் பற்றி நாரை ஆரும் (உண்கின்ற) படுகர்` என்க.
ஆரல், மீன் வகை.
படுகர் - நீர் நிலை.
மன் - நிலை பெற்ற.
நாரையூரான் - திருநாரையூர்ச் சிவபெருமான்.
``களிறு முகத்தவனாய்`` என்பதை, `முகம் களிறவனாய்` என மாற்றிக் கொள்க.
`முகம் யானை யாகியவன், காயம் (திருமேனி மேகம் போலாது) செந்தீயைப்போல ஒளிறும் (ஒளிவிடுகின்ற) நிறத்தைக் கொண்டிருப்பது என்ன வியப்பு` என்றபடி.

பண் :

பாடல் எண் : 6

மகத்தினில் வானவர் பல்கண்
சிரம்தோள் நெரித்தருளும்
சுகத்தினில் நீள்பொழில் நாரைப்
பதியுட் சுரன்மகற்கு
முகத்தது கையந்தக் கையது
மூக்கந்த மூக்கதனின்
அகத்தது வாய்அந்த வாயது
போலும் அடுமருப்பே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மகம் - வேள்வி.
தக்கன் செய்தது.
அதில் பல் உதிர்க்கப்பட்டவன் `பூடா` என்னும் சூரியன்.
கண் பறிக்கப்பட்டவன் `பகன்` என்னும் சூரியன்.
சிரம் அறுக்கப்பட்டவன் எச்சன்.
(யாக தேவன்) தோள் நெரிக்கப்பட்டவன் இந்திரன்.
`நெரித்தருளும் சுரன்` என்க.
சுரன் - தேவன்.
சுகம் - கிளி.
``சுகத்தினில்`` என்பதை `சுகத் தொடு` எனத் திரிக்க.
பின்னிரண்டடிகள் தும்பிக்கையின் அமைப்பை வியந்து கூறியன.

பண் :

பாடல் எண் : 7

மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்
பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை
அருந்தவெண்ணு கின்றவெறும் பன்றே அவரை
வருந்தவெண்ணு கின்ற மலம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மருப்பை`` என்பது, இசையெச்சத்தால் `ஒரு காலத்தில் ஒடிக்கப்பட்ட மருப்பை` எனவும், ``கொண்டு`` என்பது, `எப்பொழுதும் கொண்டு` எனவும் பொருள் தந்தது.
மருப்பு - தந்தம்.
``பொருப்பு`` என்பது `பொருப்புப் போன்றவன்` எனவும், ``எறும்பு`` என்பது எறும்பு போல்வது எனவும் பொருள் தருதலால் உவமையாகு பெயர்கள்.
பொருப்பு, வடிவு பற்றியும், எறும்பு, மடமையாகிய பண்பு பற்றியும் உவமையாயின.
``நெருப்பை.
.
.
எறும்பன்றே`` என்பதை இறுதியிற் கூட்டுக.
`வருத்த` என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது.
மலம் மூல மலமும், பின் அது பற்றி வரும் கன்ம மாயா மலங் களும், `அவை வருத்தா` எனவே, வீடு உளதாதல் அமைந்தது.

பண் :

பாடல் எண் : 8

மலஞ்செய்த வல்வினை நோக்கி
உலகை வலம்வருமப்
புலஞ்செய்த காட்சிக் குமரற்கு
முன்னே புரிசடைமேற்
சலஞ்செய்த நாரைப் பதியரன்
தன்னைக் கனிதரவே
வலஞ்செய்து கொண்ட மதக்களி
றேயுன்னை வாழ்த்துவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மலம் செய்த வல்வினை நோக்கி`` என்பதை, ``உன்னை வாழ்த்துவன்`` என்பதற்கு முன்னே கூட்டியுரைக்க.
மலம் செய்த - ஆணவத்தால் வருவிக்கப்பட்ட ``வல்வினை`` என்பது அதன் நீக்கத்தைக் குறித்தது.
``நோக்கி`` என்றது, `அது நிமித்தமாகக் கருதி` என்றபடி.
புலம் செய்த - எவ்விடத்தும் நின்ற.
காட்சி - தோற்றம்.
சலம் - நீர்; கங்கை.

பண் :

பாடல் எண் : 9

வனஞ்சாய வல்வினைநோய் நீக்கி வனசத்
தனஞ்சாய லைத்தருவா னன்றோ - இனஞ்சாயத்
தேரையூர் நம்பர்மகன் திண்தோள் நெரித்தருளும்
நாரையூர் நம்பர்மக னாம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``இனம் சாய`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.
இனம் - அசுரர் சுற்றம்.
அசுரர், முப்புரத்து அசுரர்.
``நம்பர்`` என்பது சிவபெருமானைக் குறித்து இரு முறையாற் கூறப்பட்டது.
மகன் - மகவான்; இந்திரன்.
சிவபெருமான் இந்திரனைத் தோள் நெரித்தமை மேல், ``மகத்தினில் வானவர்`` என்னும் பாட்டிலும் சொல்லப்பட்டது.
`நோய் நீக்கி அலை தருவானன்றே` என இயைக்க.
வனம் - காடு.
உருவகம், `வினையாகிய வனம்` என வருதல் பெரும்பான்மைத் தாயினும் சிறுபான்மை `வனமாகிய வினை` என வருதலும் உண்டு என்பதைத் தொல்காப்பிய உவம இயலில் கண்டுணர்க.
`வனமாகிய வல்வினை சாய, அதனானே அவற்றால் வரும் நோயை (துன்பத்தை) நீக்கி` என்க.
வனசத்தன் - தாமரை மலரில் உள்ளவன்; பிரமன்.
அவனது அம் - அழகு; அழகிய எழுத்து.
இனி, `அழகாவது அவனது திறல்` எனினும் ஆம்.
திறலாவது இங்குப் படைக்கும் திறன்.
இதனையடுத்து நின்ற `சாய` என்பதில் ஈற்று அகரம் தொகுக்கப்பட்டது.
அலை - அலைத் தலை; அழித்தலை.
`நாம் இனி வினைகாரணமாகப் பிரமனால் படைக்கப்படுதலை ஒழிக்கும் நிலையை நமக்குத் தருவான்` என்பதாம்.
``நம்பர்மகன்`` இரண்டிலும் ரகர ஒற்று அலகு பெறாது நின்றது.

பண் :

பாடல் எண் : 10

நாரணன் முன்பணிந் தேத்தநின்
றெல்லை நடாவியவத்
தேரண வும்திரு நாரையூர்
மன்னு சிவன்மகனே
காரண னேயெம் கணபதி
யேநற் கரிவதனா
ஆரண நுண்பொரு ளேயென்
பவர்க்கில்லை அல்லல்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஏத்த நின்று மன்னும் சிவன்` என்க.
எல்லை நடாவிய அததேர் அணவும் - நாற்பாங்கு எல்லையளவும் நடத்தப்படுகின்ற தேர் பொருந்திய.
காரணன் - எப்பொருட்கும் காரணன்.
கரி வதனன் - யானைமுகன்.
என்பவர் - என்று துதிப்பவர்.
இப்பாட்டின் முதலாகிய ``நாரணன்`` என்பது முன்பாட்டு இறுதியில் உள்ள `நாரையூர்` என்பதை ஓராற்றால் அந்தாதியாகக் கொண்டதாம்.

பண் :

பாடல் எண் : 11

அல்லல் களைந்தான்தன் அம்பொன் உலகத்தின்
எல்லை புகுவிப்பான் ஈண்டுழவர் - நெல்லல்களை
செங்கழுநீர் கட்கும் திருநாரை யூர்ச்சிவன்சேய்
கொங்கெழுதார் ஐங்கரத்த கோ.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஈண்டு உழவர்`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
ஈண்டு - நெருங்கிய.
நெல் அல்களை - நெற் பயிருக்கு வேண்டத்தகாத களை.
`செங்கழு நீரைக் களையாகக் கட்கும்` என்க.
கட்டல் - களைதல்.
`அரிய செங்கழுநீர் மலர்களை எளியவாகக் கருதிக் களையோடு சேர்த்து எறிகின்றனர்` என்பது அதன் மிகுதி கூறியவாறு.
இதனை `வீறுகோளணி` அல்லது `உதாத்த அணி` என்பர்.
கொங்கு - நறுமணம்.
தார் - மாலை.
அவை கொன்றை மலர் முதலியவற்றால் ஆயவை.
``அவன்`` என்பதை, ``கோ`` என்பதன் பின்னர்க் கூட்டி, `சேயும், கோவுமாகிய அவன் தன் அடியார்க்கு` என உரைக்க.
`தன் அடியார்க்கு` என்பது இசையெச்சம்.
தன் உலகம் - கண லோகம்.
கணம், சிவகணம்.
`எல்லையும்` என உருபு விரிக்க.

பண் :

பாடல் எண் : 12

கோவிற் கொடிய நமன்தமர்
கூடா வகைவிடுவன்
காவில் திகழ்தரு நாரைப்
பதியிற் கரும்பனைக்கை
மேவற் கரிய இருமதத்
தொற்றை மருப்பின்முக்கண்
ஏவிற் புருவத் திமையவள்
தான்பெற்ற யானையையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதல் அடியில் `நமன் தமர் வரின் அவர் கூடாவகை யான் விடுவேன்` என வேண்டும் சொற்கள் வருவித்து விரித்து, அதனை இறுதியிற் கூட்டுக.
கோவில் - கோக்களில்; அரசர்களில்.
புண்ணியரை அளித்தல் செய்யாது, பாவிகளை `கோக்களில் கொடிய வன்` என்றார்.
விடுவன் - எதிர் சென்று துரக்குமாறு அனுப்புவேன்.
`அனுப்புதல், குறையிரத்தல் வாயிலாக` என்க.
`யான் குறையிரந்தால் அவன் அருளாதோழியான்` என்பதாம்.
காவின் - காவினால்.
கா - சோலை.
கரு, பனைக் கை, இரு மதம், ஒற்றை மருப்பு.
முக்கண் இவை யனைத்தும் யானையைச் சிறப்பித்தன.
இரு மதம் - கரிய மதம்.
ஏ வில் புருவம் - அம்பையுடைய வில்போலும் புருவம்.
`கண்கள் அம்பு போலும்` என்பது குறிப்பு.
கண் இமையாதவளை ``இமையவள்`` என்றது எதிர்மறை இலக்கணையாய், `தேவி` என்னும் கருத்துடைய தாயிற்று.
தேவி உமா தேவி.
தான், அசை.

பண் :

பாடல் எண் : 13

யானேத் தியவெண்பா என்னை நினைந்தடிமை
தானேச னார்த்தனற்கு நல்கினான் - தேனே
தொடுத்தபொழில் நாரையூர்ச் சூலம் வலனேந்தி
எடுத்த மதமுகத்த ஏறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`யான் ஏத்திய வெண்பாக்கள் (யான் ஏத்திய அல்ல; மற்று,) நாரையூர் விநாயகப் பெருமான் தானே தனக்கு நல்கிக் கொண்டவை` என்க.
``வெண்பா`` என்பது, இங்கு, `வெளிற்றுப் பொருள்களையுடைய பாக்கள்` எனப் பொருள் தந்தது.
`இவைகளைத் தாமும் அவனது அருள் இன்றி, யானே இயற்றுதல் இயலாது` என்றபடி.
என்னை நினைந்து அருள் காரணமாக என்னையும் ஒருவனாகத் திருவுளத்து அடைத்து.
`தலைவனாகிய அவன் அடிமை நேசனாகிய யானாகவேயிருந்து நல்கிக் கொண்டான்` என்க.
இதனால் இப் பிரபந்தம் சீவபோதத்தின் வழிப் பொந்ததாகாது, சிவபோதத்தின் வழிப் போந்தாததால் விளங்கும் ``சூலம் வலனேந்தி`` என்றது, `சிவபெருமான்` என்றபடி.
``ஏந்தி`` என்பது பெயர்.
எடுத்த - ஈன்றெடுத்த.
மதம் - கன்ன மதம்.
`அது முகத்தின் வழியாகப் பாய்கின்றது` என்றபடி.
ஏறு - சிங்க ஏறு.
உவம ஆகுபெயர்.
இது நடையாகிய தொழில் பற்றி வந்த உவமம்.
``ஏறுபோற் பீடு நடை`` 1 என்றார் திருவள்ளுவரும்.
``நல்கினான்`` என உயர் திணையால் முடித்தமையின் ``ஏறு`` என்பது உபசாரமும், உருவகமும் ஆகாமை உணர்க.
இங்கும் ``சூலம்வலன்`` என்பதில் மகர ஒற்று அலகுபெறாதாயிற்று.

பண் :

பாடல் எண் : 14

ஏறிய சீர்வீ ரணக்குடி
ஏந்திழைக் கும்இருந்தேன்
நாறிய பூந்தார்க் குமரற்கும்
முன்னினை நண்ணலரைச்
சீறிய வெம்பணைச் சிங்கத்தி
னுக்கிளை யானைவிண்ணோர்
வேறியல் பால்தொழும் நாரைப்
பதியுள் விநாயகனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வீரணக் குடி ஏந்திழை - வீரர்களால் வெற்றி வேண்டி வழிபடப்படும் கொற்றவை; துர்க்கை.
இவளை மேல் 2 ``நுங்கை`` என்றதுபோல இங்கு `அவளுக்கு முன்` (முன்னோன் - தமையன்) என்றார்.
முன்னினை - தமையனை; இன், சாரியை.
நண்ணலர் - பகைவர்.
இங்குத் தக்கனும், அவன் சார்பாக அவனது வேள்வியை ஏற்றவரும் வெம்பணை - போர் முரசு.
`அதனையுடைய சிங்கம்` என்றது வீரபத்திரரை.
அவர் உமை மலையரையன் மகளாதற்கு முன்னர்த் தோன்றினமையால் விநாயகரை `அவருக்கு இளையோன்` என்றார்.
``விநாயகன்`` என்பதிலும் தொகுக்கப்பட்ட இரண்டனுருபை விரித்து அதனை, ``இளையானை`` என்பதன் பின்னர்க் கூட்டுக.
விண் - தேவலோகம்.
`அது வேறு ஓர் இயல்பால் தொழும்` என்க.
வேறு - தனி - தனி ஓர் இயல்பால் தொழுதலாவது.
விரும்பிய செயலை இடையூறின்றி இனிது முற்றுவிக்க வேண்டித் தொழுதல்.
`முன்னவனும், இளையானும் ஆகிய நாரைப் பதியுள் விநாயகனை விண் வேறு இயல்பால் தொழும்` - என வினை முடிக்க.

பண் :

பாடல் எண் : 15

கனமதில்சூழ் நாரையூர் மேவிக் கசிந்தார்
மனமருவி னான்பயந்த வாய்ந்த - சினமருவு
கூசாரம் பூண்டமுகக் குஞ்சரக்கன் றென்றார்க்கு
மாசார மோசொல்லு வான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கனம் - மேகம், `கனம் மதிலின்கண் சூழ் நாரையூர்` என்க.
கசிந்தார் - அன்பால் மனம் உருகினவர்.
அவர்தம் மனம் மருவினான் சிவபெருமான்.
`பயந்த கன்று` என இயையும்.
வாய்ந்த - `அவனுக்குப் பொருந்திய ஆரம்` என்க.
சினம் மருவியதும், தீண்டுதற்கும் பிறர் கூசுவதும் ஆகிய ஆரம்; அதுபாம்பாகிய மாலை.
`குஞ்சர முகக் கன்று` என மாறுக.
முகம் யானையாயினமை பற்றிப் பிள்ளையாரையே `யானை` என்றலும் ஆம் என்றற்கு, `பிள்ளை` என்னாது, ``கன்று`` என்றார்.
என்றார்க்கு - என்று சொல்லித் துதித்த வர்க்கு.
`வான் மா சாரமோ? சொல்லு` என்க.
வான் - சுவர்க்க லோகம்.
மா சாரம் - பெரிய பயன்.
``சொல்லு`` என்றது நெஞ்சை நோக்கி.
எனவே, `நீயும் அவ்வாறு சொல்` என்பது குறிப்பெச்சமாயிற்று.

பண் :

பாடல் எண் : 16

வானிற் பிறந்த மதிதவ
ழும்பொழில் மாட்டளிசூழ்
தேனிற் பிறந்த மலர்த்திரு
நாரைப் பதிதிகழும்
கோனிற் பிறந்த கணபதி
தன்னைக் குலமலையின்
மானிற் பிறந்த களிறென்
றுரைப்பரிவ் வையகத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``தேனின் பிறந்த`` என்பதில் இன்னுருபை ஒடு உருபாகத் திரித்துக் கொள்க.
மலர், அவை மலரும் பொய்கையைக் குறித்தலால் தானியாகுபெயர்.
கோனின் - கோனால்.
குலம் சிறப்பு.
``மலையின் மான்`` என்பது இலக்கணை (சார்பு) வழக்கால் `மலை யரையன் மகள்` எனப் பொருள்படுவதை `மலையில் வாழ்கின்ற மான்` எனப் பொருள்படுகின்ற இயல்பு வழக்காகக் காட்டி, அதிசயம் தோற்றுவித்தவாறு.

பண் :

பாடல் எண் : 17

வையகத்தோர் ஏத்த மதில்நாரை யூர்மகிழ்ந்து
பொய்கத்தார் உள்ளம் புகலொழிந்து - கையகத்தோர்
மாங்கனிதன் கொம்பண்டம் பாசமழு மல்குவித்தான்
ஆங்கனிநஞ் சிந்தையமர் வான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நம் சிந்தை அமர்வான்`` என்பதை முதலில் வைத்து உரைக்க.
கை ஐந்து ஆகலின் ஐந்திலும் ஐந்து பொருள்கள் இருத்தல் கூறப்பட்டது.
மாங்கனி இடப்புறக் கீழ்க்கை.
கொம்பு - தந்தம்; வலப் புறக் கீழ்க்கை.
அண்டம் - ஆகாயம்; தும்பிக்கை; `ஆகாயத்தைக் தடவு கின்றது` என்றபடி.
பாசம் இடப்புற மேற்கை.
``மழு`` என்பது `படைக் கலம்`` எனப் பொருள் தந்து, அங்குசத்தைக் குறித்தது.
வலப்புற மேற்கை.
மல்குதல் - நிறைதல்.
``மல்குவித்தான்`` என்பது வினைப் பெயர்.
ஆம் அசை.
கனி சிந்தை வினைத்தொகை.
அமர்வான் - விரும்புவான்.
``நம் சிந்தை அமர்வான்`` என்பது, `புலி கொல் யானை` என்பதுபோலத் தடுமாறு தொழிற்பெயர்.

பண் :

பாடல் எண் : 18

அமரா அமரர் தொழுஞ்சரண்
நாரைப் பதியமர்ந்த
குமரா குமரற்கு முன்னவ
னேகொடித் தேரவுணர்
தமரா சறுத்தவன் தன்னுழைத்
தோன்றின னேயெனநின்
றமரா மனத்தவர் ஆழ்நர
கத்தில் அழுந்துவரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அமரா - தேவனே.
குமரன் - பிள்ளை.
சரண் - பாதம்.
குமரற்கு முன்னவன் - முருகனுக்குத் தமையன்.
தமர் - சுற்றத்தார்.
ஆசு - குற்றம்; அவணர் தமராகிய ஆசு` என்க.
அவுணர் இங்கு முப்புரத்து அசுரர்.
``என நின்று அமரர் மனத்தவர்`` என்பதை `என அமர்ந்து நில்லாதவர்`` என மாற்றி கொள்க.
அமர்தல் - விரும்புதல்.
`என` என் எச்சத்தால், `துதித்து நில்லாதவர்` எனக் கொள்க.

பண் :

பாடல் எண் : 19

அவம்தியா துள்ளமே அல்லற நல்ல
தவமதியால் ஏத்திச் சதுர்த்தோம் - நவமதியாம்
கொம்பன் விநாயகன்கொங் கார்பொழில்சூழ் நாரையூர்
நம்பன் சிறுவன்சீர் நாம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``உள்ளமே`` என்பதை முதலிற் கூட்டுக.
தவமதி - தவத்தால் உண்டாகிய ஞானம்.
தவமாவன, சரியை கிரியா யோகங்கள்.
சதுர்த்தோம் - பெருமை பெற்றோம்.
நவ மதியாம் கொம்பு - புதிதாகத் தோன்றுகின்ற பிறைபோலும் தந்தம்.
நம்பன் - சிவபெருமான்.
சிறுவன் - மகன் ``அவமதி யாது`` என்பது, முன் பாட்டில், ``மனத்தவர்`` என்ற அந்தத்தை ஆதியாகக் கொண்டதாம்.

பண் :

பாடல் எண் : 20

நாந்தன மாமனம் ஏத்துகண்
டாயென்றும் நாண்மலரால்
தாந்தனமாக இருந்தனன்
நாரைப் பதிதன்னுளே
சேர்ந்தன னேயைந்து செங்கைய
னேநின் திரள்மருப்பை
ஏந்தின னேயென்னை ஆண்ட
னேயெனக் கென்னையனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மனம் - மனமே.
இதனை முதலிற் கொள்க.
`நம் தனம்` என்பது ``நாம் தனம்`` என நீட்டல் பெற்றது.
தாம் தனம் - தாவும் (இவ்வுலகத்தைக் கடந்து பற்றும்) செல்வம்.
`இருந்தனனே` என இதுவும் விளி.
எனக்கு என் - `எனக்கு` என்று இருக்கின்ற.
ஐயன் - தலைவன்.
`மனமே! தாம் தனமாக இருத்தனனே!.
.
.
.
.
என் ஐயனே! என்று நாள் மலரால், நம் தனமாக ஏத்து` என வினை முடிக்க.
கண்டாய், முன்னிலையசை.
திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலை முற்றிற்று.

பண் :

பாடல் எண் : 1

நெஞ்சந் திருவடிக் கீழ்வைத்து
நீள்மலர்க் கண்பனிப்ப
வஞ்சம் கடிந்துன்னை வந்திக்கி
லேன்அன்று வானருய்ய
நஞ்சங் கருந்து பெருந்தகை
யேநல்ல தில்லைநின்ற
அஞ்செம் பவளவண் ணா வருட்
கியானினி யாரென்பனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நஞ்சு அங்கு அருந்து`` என்பதில் அங்கு, அசை.
``அன்று வானர் உய்ய.
பவள வண்ணா`` - என்பதை முதலிற் கொள்க.
மலர்க் கண் - மலர்போலும் கண்கள்.
பனிப்ப - நீரைத் துளிக்க.
``உன்னை வந்திக்கிலேன்; இனி (உன்) அருட்கு `யார்` ``என்பன்`` என வினை முடிக்க.
அருட்கு - அருளைப் பெறுதற்கு.
யார் உயர்திணை முப்பாற்கும் உரித்தாகலானும், `தன்மைச் சொல் உயர் திணையது` என்றல் பழைய வழக்கு ஆதலாலும் அது ``நான் ஆர்`` 1 என்றாற் போல வருதல் இலக்கணமேயாதலின் இங்கு ``யான் யார்`` என வந்தது.
``என் உள்ளம் ஆர்`` 2 என்பது உயர்திணையாயினாரது உள்ளமேயாதலின் அது, ``எம் கோதைகூட்டுண்ணிய தான் யார்மன்``- என்பதிற் திணைவழுவமைதியாம் - `என்பர்` என்பது பாடமன்று.

பண் :

பாடல் எண் : 2

என்பும் தழுவிய ஊனும்
நெகஅக மேயெழுந்த
அன்பின் வழிவந்த வாரமிர்
தேயடி யேனுரைத்த
வன்புன் மொழிகள் பொறுத்திகொ
லாம்வளர் தில்லைதன்னுள்
மின்புன் மிளிர்சடை வீசிநின்
றாடிய விண்ணவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வளர் தில்லைதன்னுள்.
விண்ணவனே`` என்பதை, ``ஆரமிர்தே`` என்பதன் பின்னர்க் கூட்டுக.
என்பும், `அதனைத் தழுவிய ஊனும்` என்க.
நெக - நெகிழ்ந்து உருகும்படி.
இறைவனை ``அமிர்து`` என்றதற்கு ஏற்ப, அன்பை, `கடல்` என உருவகம் செய்யாமையால் இஃது ஏகதேச உருவகம்.
``அன்பினில் விளைந்த ஆரமுதே`` 1 என்பது காண்க.
வன்மை - செவி பொறுக்க ஒண்ணாமை.
புன்மை - பொருட் சிறப்பு இன்மை.
கொல், அசை.
ஆம்.
உரையசை.
`போதும்` என்றபடி.
``அகமே எழுந்த அன்பின் வழி வந்த ஆரமிர்தே`` என்றமையால் `அன்பர் சொல்லை ஏற்கின்ற நீ அன்பில்லாத என் சொல்லையும் கருணையினால் ஏற்பாய் போலும்` என்பது குறிப்பாயிற்று.

பண் :

பாடல் எண் : 3

அவநெறிக் கேவிழப் புக்கவிந்
தியான்அழுந் தாமைவாங்கித்
தவநெறிக் கேயிட்ட தத்துவ
னேஅத் தவப்பயனாம்
சிவநெறிக் கேயென்னை உய்ப்பவ
னேசென னந்தொறுஞ்செய்
பவமறுத் தாள்வதற் கோதில்லை
நட்டம் பயில்கின்றதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நெறிக்கே - நெறிக்கண்ணே; உருபு மயக்கம்.
புக்கு - சென்று.
அவிந்து - (வீணே) இறந்து.
அழுந்தாமை - பின்பு நகரத்தில் அழுந்தாதபடி.
வாங்கி - மீட்டு.
தவநெறி - பசு புண்ணிய வழி.
பசு புண்ணியங்கட்கு இடையே நிகழும் அபுத்தி பூர்வ சிவ புண்ணியங் களே புத்தி பூர்வ சிவ புண்ணியமாகிய சிவ நெறியிற் சேர்க்குமாயினும் சிவநெறியை அத்தகைய அவ்வவபுத்தி பூர்வ புண்ணியங்கட்குத் துணையாகும் பசு புண்ணியங்களின் பயனாகவே கூறினார்.
தத்துவன் - மெய்ப்பொருளாய் உள்ளவன்.
`நீ நடம் பயில்கின்றது (உயிர்களை அவை) செய்பவம் அறுத்து ஆள்வதற்கோ` என்க.
பவம் - பாவம்.
ஓகாரம் சிறப்பு.
எனவே, `பவம் அறுத்து ஆள்வதற்கே` என்பதாம்.
`தில்லைப் பெருமான் திருநடம் புரிதல் உயிர்களுக்கு வீடுபேற்றைத் தருதற் பொருட்டே` என்பதாம்.
இதனானே, தில்லை, காண முத்தி தரும் தலம்` எனப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 4

பயில்கின் றிலேன்நின் திறத்திரு
நாமம் பனிமலர்த்தார்
முயல்கின் றிலேன்நின் திருவடிக்
கேயப்ப முன்னுதில்லை
இயல்கின்ற நாடகச் சிற்றம்
பலத்துளெந் தாய்இங்ஙனே
அயர்கின்ற நானெங்ங னேபெறு
மாறுநின் னாரருளே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அப்புதல், இங்குச் சாத்துதலைக் குறித்தது.
`பனி மலர்த்தார் அப்ப முயல்கின்றிலேன்` என்க.
அயர்தல் - இளைத்தல்.
எந்தாய் - என் தந்தையே.

பண் :

பாடல் எண் : 5

அருதிக்கு விம்ம நிவந்ததோ
வெள்ளிக் குவடதஞ்சு
பருதிக் குழவி யுமிழ்கின்றதே
யொக்கும் பற்றுவிட்டோர்
கருதித் தொழுகழற் பாதமும்
கைத்தலம் நான்கும் மெய்த்த
சுருதிப் பதமுழங் குந்தில்லை
மேய சுடரிருட்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பற்று விட்டோர்`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
மெய்த்த - திருமேனியால் அமைந்த.
சுருதி முழங்கும் சுடர் என இயைக்க.
சுருதி - வேதம்.
அதுவே கூத்தப் பெருமான் காலில் அணியும் சிலம்பு ஆதலின், `சுருதி பதத்தின்கண் முழங்கும் சுடர்` என்றார்.
``சுருதிப்பதம்`` என்பதில் பகர ஒற்று, எதுகை நோக்கி விரிக்கப்பட்டது.
`பதத்தின்கண்` என ஏழாவது விரிக்க.
சுடர், கூத்தப் பெருமான்.
இருட்கு - இருளை நீக்குதற்கு.
`தில்லை மேயசுடர், இருட்டு மஞ்சி பருதிக் குழவியை உமிழ்கின்றதே ஒக்கும்` என இயைத்து முடிக்க.
பருதிக் குழவி, இள ஞாயிறு.
மஞ்சு - மேகம்.
சிவபெருமானது திருநீறு நிறைந்த திருமேனிமேல் யானைத் தோற் போர்வையிருத்தலால், `அத்தோல் வெள்ளி மலைமேல் கவிந்த மேகம் போலவும், யானைத் தோற் போர்வையின் ஊடே ஊடே வெளிப் படுகின்ற சிவபெருமானது திருமேனியின் ஒளி, இளஞாயிறு வீசும் கதிர்கள்போலவும் உள்ளன` என்பதாம்.
`சுடரினுக்கே` என்பது பாடமன்று.
`அருந்திக்கு` என்பதில் நகர ஒற்று எதுகை நோக்கித் தொகுக்கப்பட்டது.
திக்கு - திசைகள்.
விம்ம - நிறையும்படி.
நிவந்தது- ஓங்கியது.

பண் :

பாடல் எண் : 6

சுடலைப் பொடியும் படுதலை
மாலையும் சூழ்ந்தவென்பும்
மடலைப் பொலிமலர் மாலைமென்
தோள்மேல் மயிர்க்கயிறும்
அடலைப் பொலிஅயில் மூவிலை
வேலும் அணிகொள்தில்லை
விடலைக்கென் ஆனைக் கழகிது
வேத வினோதத்தையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மடலை, அடலை என்பவற்றில் ஐகாரம் சாரியை.
அடல் - வெற்றி.
அயில் - கூர்மை.
மயிர்க்கயிறு.
பஞ்ச வடம்.
இதனை மாவிரதிகள் சிறப்பாக அணிவர்.
`அணியாக` என ஆக்கம் விரிக்க.
`குரிசில்` என்பதுபோல `விடலை` என்பதும் தலைவருக்கு உரிய பெயர்.
வினோதம் - பொழுது போக்கு.
``செலியரத்தை நின் வெகுளி``1 என்பதிற்போல இப்பாட்டின் ஈற்றில் வந்த ``அத்தை`` என்னும் அசைநிலையிடைச்சொல்.
``அத்தின் அகரம் அகரமுனை யில்லை`` 2 எனச் சாரியைஇடைச்சொற்கு ஓதிய முறையானே முதலில் உள்ள அகரம் கெட்டு நின்றது.

பண் :

பாடல் எண் : 7

வேத முதல்வன் தலையும்
தலையாய வேள்விதன்னுள்
நாத னவனெச்சன் நற்றலை
யும் தக்க னார்தலையுங்
காதிய தில்லைச்சிற் றம்பலத்
தான்கழல் சூழ்ந்துநின்று
மாதவ ரென்னோ மறைமொழி
யாலே வழுத்துவதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வேதமுதல்வன், பிரமன்.
எச்சன் - யாக தெய்வம்.
காதிய - அழித்த.
``வேள்வி வேத ஒழுக்கம் ஆயினும் வேள்வியில் வேத முதல்வன் தலையையும், வேள்வித் தேவன் தலையையும், வேட்டோன் தலையையும் அறுத்த சிவபெருமானை அந்தணர்கள் வேத மந்திரங்களைச் சொல்லித் துதித்தல் ஏன்`` என வியப்புத் தோன்றக் கூறிக் குறிப்பால், `உண்மை வேத ஒழுக்கம் இன்னது` என்பதைத் தோன்ற வைத்தமையின், இது விபாவனையணி, உண்மை வேத ஒழுக்கமாவது சிவபிரானைப் போற்றுதலன்றி இகழ்தலன்று என்பதாம்.
நாதன் - தலைவன்.
அவன், பகுதிப் பொருள் விகுதி.

பண் :

பாடல் எண் : 8

வழுத்திய சீர்த்திரு மாலுல
குண்டுவன் பாம்புதன்னின்
கழுத்தரு கேதுயின் றான்உட்கப்
பாந்தளைக் கங்கணமாச்
செழுந்திரள் நீர்த்திருச் சிற்றம்
பலத்தான் திருக்கையிட
அழுத்திய கல்லொத் தன்ஆய
னாகிய மாயவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(``உண்ட களைப்புத் தொண்டருக்கும் உண்டு`` என்னும் முறையில்) `திருமால் உலகை உண்டபின் ஆதிசேடனாகிய பாம்பின் கழுத்தில் படுத்துச் சிறிதே உறங்கினான்.
அப்பொழுது அப்பாம்பினைத் திருச்சிற்றம்பலத்து இறைவன் தனது கையில் கங்கணமாக இட, அக் கங்கணத்தில் அழுத்திய நீலமணிபோல அவன் விளங்கினான்` என்பதாம்.
உட்கு - அஞ்சத் தக்க.
`துயின்றனுக்கு` என்பது பாடமன்று.
பாந்தள் - பாம்பு.
`திருக்கையில் இட` என்க.
`அம் மாயவன்` எனச் சுட்டு வருவிக்க.
வழுத்திய சீர் - பலராலும் துகிக்கப் படும் புகழையுடைய.
`செழுந்திரள்` என்பது எதுகை நோக்கி வலிந்து நின்றது.
இடத்துக்குரிய, `செழுந்திரள் நீர்`` என்னும் அடை ஒற்றுமை பற்றி இடத்தின்கண் உள்ள பொருட்குக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

மாயவன் முந்நீர்த் துயின்றவன்
அன்று மருதிடையே
போயவன் காணாத பூங்கழல்
நல்ல புலத்தினர்நெஞ்
சேயவன் சிற்றம் பலத்துள்நின்
றாடுங் கழலெவர்க்குந்
தாயவன் தன்பொற் கழலென்
தலைமறை நன்னிழலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நல்ல புலத்தினர் நெஞ்சு ஏய் அவன்.
.
.
ஆடும் கழல்`` என்பதை முதலிற் கூட்டியுரைக்க.
புலம் - அறிவு.
ஞானம் ஏய்தல் - பொருந்துதல்.
தாயவன் - தாயாகியவன்.
மறைத்தல் - தீங்கைத் தடுத்துக் காத்தல்.
``நிழல்`` என்றதனால், தடுக்கப்படுவது வெயிலா யிற்று.
எனவே, `வெயிலைத் தடுத்துத் தலையைக் காக்கின்ற நிழல் போல, வினையைத் தடுத்துக் காக்கும் காப்பு` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 10

நிழல்படு பூண்நெடு மாலயன்
காணாமை நீண்டவரே
தழல்படு பொன்னக லேந்தித்
தமருகம் தாடித்தமைத்
தெழில்பட வீசிக் கரமெறி
நீர்த்தில்லை யம்பலத்தே
குழல்படு சொல்வழி யாடுவர்
யாவர்க்குங் கூத்தினையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நிழல் - ஒளி பூண் - அணிகலன்; இங்குச் சிறப்பாகக் கௌத்துவ மணியைக் குறித்தது.
`நீண்டவரே யாவர்க்கும் கூத்தினை ஆடுவன்` என இயைத்து முடிக்க.
``யாவர்க்கும்`` எனச் சிறப்புடைய உயர்திணை மேல் வைத்துக் கூறினாராயினும், `எவ்வுயிர்க்கும்` என்றலே கருத்து.
`யாவர்க்கும் ஆக` என ஆக்கம் வருவிக்க.
ஆதல் - நன்மை பயத்தல்.
`தழலை அகலில் ஏந்தி என்க.
படு - பொருந்திய.
பொன் - அழகு.
தமருகம் - உடுக்கை.
தாடமை என்னும் வடசொல், தாடித்தல் எனத் திரிக்கப்பட்டது.
`தாடனம் - அடித்தல்.
`கரத்தை எழில்பட வீசி` என மாறுக.
தில்லை - தில்லை நகர்.
நிறத்தொடுபட்ட இசையை.
``சொல்`` என்றார்.
நிறத்தை, `வானம்` என்பர்.
``நீண்ட வரே`` என்னும் பிரிநிலை ஏகாரத்தால், `பிறர் அது செய்கின்றிலர்` என்பது போந்தது.

பண் :

பாடல் எண் : 11

கூத்தனென் றுந்தில்லை வாணனென்
றுங்குழு மிட்டிமையோர்
ஏத்தனென் றுஞ்செவி மாட்டிசை
யாதே யிடுதுணங்கை
மூத்தவன் பெண்டிர் குணலையிட்
டாலும் முகில்நிறத்த
சாத்தனென் றாலும் வருமோ
இவளுக்குத் தண்ணெனவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டுத் தில்லை பெருமானைக் காதலித்தாள் ஒருத்தியது வேறுபாடு கண்டு, `இது தெய்வத்தான் ஆயது` எனக் கருதி எடுக்கப்பட்ட வெறியாட்டினைத் தோழி விலக்கி, அறத்தொடு நின்றது.
`குழுமியிட்டு` என்பது இடைக் குறைந்து நின்றது.
ஏத்தன் - துதிகளை உடையவன்.
செவிமாட்டு இசைத்தல் - செவியிற் செல்லும் படி கூறுதல்.
`அதனைச் செய்யாமல் பலவகை ஆடல்களை ஆடினால் பயன் தருமோ` என்றாள்.
துணங்கை, குணலை சில கூத்தின் வகைகள்.
பின்னர் `சாத்தன்` என வருதலால், ``மூத்தவன்`` என்றது.
அவனுக்கு முன்னோனாகிய முருகனை.
குறிஞ்சிக் கிழவனாய உரிமை பற்றிக் குறிஞ்சி நிலப் பெண்களை முருகன் பெண்டிராகக் கூறினார்.
`பெண்டீர்` என்பது பாடமாயின் அதனை முதற்கண் கூட்டியுரைக்க.
சாத்தன் - ஐயனார்.
குறிஞ்சி நிலப் பெண்களை முருகன் பற்றுவதாகக் கூறுதலும் உண்டு` என்பது இதனால் அறிகின்றோம்.
தண்ணென வருமோ - குளிர்ச்சி உண்டாகுமோ; உண்டாகாது; வெம்மையே உண்டாகும் என்பதாம்.

பண் :

பாடல் எண் : 12

தண்ணார் புனல்தில்லைச் சிற்றம்
பலந்தன்னின் மன்னிநின்ற
விண்ணாள னைக்கண்ட நாள்விருப்
பாயென் னுடல்முழுதும்
கண்ணாங் கிலோதொழக் கையாங்
கிலோதிரு நாமங்கள் கற்
றெண்ணாம் பரிசெங்கும் வாயாங்கி
லோவெனக் கிப்பிறப்பே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இறுதிக்கண் தொக்க ஏழாவதனை, `எனக்கு இப் பிறப்பின்கண்` என விரித்து, ``கண்ட நாள்`` என்பதன் பின்னர்க் கூட்டுக.
இவ்வாறன்றி இன்மையை உடைமையின் மறுதலையாக்கி, இயல்பாகவே கொள்ள அம் ஆம், கண்ணிற்குக் கூறிய ``உடல் முழுதும்`` என்பதனை ஏனைக் கை, வாய் இவற்றிற்கும் இயைக்க.
கைக்கும், வாய்க்கும் முறையே ``தொழ`` எனவும், ``எண் ஆம் பரிசு`` எனவும் கூறினாற்போலக் கண்ணிற்கும், `காண` என்பது வருவிக்க.
``விருப்பாய்`` என்னும் எச்சம், `காண, தொழ, எண் ஆம் பரிசு` என்ப வற்றோடு முடிந்தது.
``ஆங்கு`` மூன்று அசை நிலைகள்.
ஓகாரங்கள் இரக்கப் பொருள்.
எண் - எண்ணல்; உருவேற்றுதல்.
முதனிலைத் தொழிற்பெயர்.
``அக்கு மாலைகொடு அங்கையில் எண்ணுவார்`` 1 என்று அருளிச் செய்தது காண்க.
பரிசு - வகை.

பண் :

பாடல் எண் : 13

பிறவியிற் பெற்ற பயனொன்று
கண்டிலம் பேரொலிநீர்
நறவியல் பூம்பொழில் தில்லையுள்
நாடக மாடுகின்ற
துறவியல் சோதியைச் சுந்தரக்
கூத்தனைத் தொண்டர்தொண்டர்
உறவியல் வாற்கண்கள் கண்டுகண்
டின்பத்தை உண்டிடவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பிறவியில்.
கண்டிலம்`` - என்பதை இறுதிக்கண் கூட்டுக.
ஒன்று - வேறொன்று.
`ஒன்றும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுக்கப்பட்டது.
நறவு - தேன்.
துறவு இயல் - துறவு வேடம்.
அவை சடை முடியும் கல்லாடையும்.
உறவு இயல்வால் - கூட்டுறவு நிகழ் தலால்.
`தொண்டர் உறவே கூத்தனைக் காண வாய்ப்பளித்தது` என்ற படி.
`உண்டபின்` என்பது ``உண்டிட`` எனத் திரிந்து நின்றது.
`உண்ட பின்` என்பதும், `உண்ணுதலைப் பெற்றபின்` என்றதேயாம்.
``கண்டிலம்`` என்றது ``கருதிற்றிலம்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 14

உண்டேன் அவரரு ளாரமிர்
தத்தினை வுண்டலுமே
கண்டேன் எடுத்த கழலுங்
கனலுங் கவித்தகையும்
ஒண்டேன் மொழியினை நோக்கிய
நோக்கு மொளிநகையும்
வண்டேன் மலர்த்தில்லை யம்பலத்
தாடும் மணியினையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அருளாகிய அமிர்தத்தை உண்டதாவது, அருள் கைவரப் பெற்றமை.
`அருள் உண்டாய வழியே அம்பலத்து ஆடும் மணியினைக் காண்டல் கூடும்.
அஃது இல்லையாயின் அது கூடாது` என்றபடி.
செய்யுட்கண் முதற்கண் வந்த ``அவர்`` என்னும் சுட்டுப் பெயர் ஒருமைப் பன்மை மயக்கமாய்ப் பின் `மணி` எனப் பட்டவனையே சுட்டிற்று.
எடுத்த கழல் - தூக்கிய திருவடி.
``கனல்`` என்றே போயினா ராயினும், ஏனையவற்றோடு இயைய, `கனற் கையும்` என உரைக்க.
கவித்த கை, தூக்கிய திருவடியின்மேல் உள்ள கை.
தேன்மொழி - தேன்மொழியாள்; சிவகாம சுந்தரி.
முதற்சினைக் கிளவிக்கு அதுஎன் வேற்றுமை
முதற்கண் வரினே சினைக்கு ஐயாகும்
என்பது இலக்கணமாயினும், `அவனைக் கையைப் பிடித்தான்` என்ற வழி, `கையைப் பிடித்தான்` என்னும் தொடர் மொழி, `தீண்டினான்` எனப் பொருள் தந்து ஒரு சொல் தன்மைப்படுத்தலின் இவை போல் வனவற்றில் இரட்டித்து ஐயுருபு வருதல் சிறுபான்மை வழக்காய் அமைதல் பற்றி, இங்கு `மணியினைக் கழலையும், கையையும், நோக்கையும், நகையையும் கண்டேன்` என்றார்.
இரண்டன் உருபுகள் இறுதிக்கண் தொக்கன.
இனி இவ்வாறன்றி, ``மணியினை`` என்றது உருபு மயக்கம் எனினுமாம்.

பண் :

பாடல் எண் : 15

மணியொப் பனதிரு மால்மகு
டத்து மலர்க்கமலத்
தணியொப் பனவவன் தன்முடி
மேலடி யேனிடர்க்குத்
துணியச் சமைத்தநல் ஈர்வா
ளனையன சூழ்பொழில்கள்
திணியத் திகழ்தில்லை யம்பலத்
தான்தன் திருந்தடியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``சூழ் பொழில்கள் என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
`அம்பலத்தான்றன் அடி திருமாலது முடியின்மேல் அதன் மணியும், அதில் அணியப்பட்ட கமல மலரும் ஒப்பன` என ஒரு தொடராகத் தொகுத்தோதற் பாலதனை இருதொடராக வகுத் தோதினார்.
இரண்டனையும் நன்கு வலியுறுத்தற்கு.
துணிய - துண்டு பட்டு விழும்படி என்றது, `விழுந்ததுபோலக் கெடும்படி` என்றவாறு.
ஈர் வாள் - அறுக்கின்ற வாள்.
``துணிய`` எனவும், ``ஈர் வாள்`` எனவும் போந்தவற்றிற்கு ஏற்ப, `வலிய பெருமரம் ஒத்த இடர்`` என வருவித் துரைக்க.
இங்கு.
பல பொருள் உவமை வந்தது.
``இடர்`` என்பது காரியவாகுபெயராய், அவற்றை விளைக்கும் வினைகளைக் குறித்து.
``இருவினை மாமரம்`` 1 என திருவாசகத்தும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

அடியிட்ட கண்ணினுக் கோஅவ
னன்பினுக் கோ அவுணர்
செடியிட்ட வான்துயர் சேர்வதற்
கோ தில்லை யம்பலத்து
முடியிட்ட கொன்றை நன் முக்கட்
பிரான்அன்று மூவுலகும்
அடியிட்ட கண்ணனுக் கீந்தது
வாய்ந்த அரும்படையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி இட்ட - திருவடியில் சாத்திய, செடி இட்டி - கீழ்மை பொருந்திய வான் துயர் - மிக்க துன்பம்.
கண்ணன் - திருமால்.
`திருமால் சிவபிரானை நாள்தோறும் ஆயிரந்தாமரை மலரால் அருச் சித்து வழிபட்டிருக்கும் நாள்களில் ஒருநாள் சிவபிரான் ஒரு மலரை மறைத்துவிட, அதற்கு ஈடாகத் திருமால் தனது கண் ஒன்றைப் பறித்துப் பெருமான் திருவடியில் சாத்திடப் பெருமான் மகிழ்ந்து தன்னிடம் இருந்த வலிய சக்கரப் படையை அளித்தருள, திருமால் அதைக் கொண்டு அசுரர்களை அழித்து உலகிற்கு நன்மை தந்து வருகின்றான்` என்பது புராண வரலாறு.
`அறத்திற்கோ, புகழுக்கோ பொருள் கொடுக்கின்றீர்` என வினவினால், `இரண்டிற்குந்தான்` என்பது பொது விடையாயினும் சிலர், அவற்றுள் ஒன்றையே சிறப்பாகக் கருதுவர்; அது போலவே, இங்கு, `கண்ணினுக்கோ, அன்பினுக்கோ, அவுணர் துயர் சேர்வதற்கோ அரும்படை ஈந்தது` என எழுப்பப்பட்ட வினா விற்கு, `மூன்றிற்குந்தான்` என்பது பொது விடையாயினும், `அன்பிற்கு` என்பதே இங்குச் சிறப்பாகக் கருதப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

படைபடு கண்ணிதன் பங்கதென்
தில்லைப் பரம்பரவல்
விடைபடு கேதுக விண்ணப்பங்
கேளென் விதிவசத்தால்
கடைபடு சாதி பிறக்கினும்
நீவைத் தருளூகண்டாய்
புடைபடு கிங்கிணித் தாட்செய்ய
பாதமென் னுள்புகவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

படை, இங்கு வாள், படு, உவம உருபு.
வல்விடை - விரைந்து செல்லும் இடபம்.
கேதுகன் - விருது கொடியை உடையவன்.
தரைதனிதல் கீழை விட்டுத் தவம்செய் சாதியினில் வந்து
எனச் சாத்திரம் கூறுதலின்,
சாதி யிரண்டொழிய வேறில்லை. இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
என்றாற்போல இங்கும், `தவம் செய் சாதி, தவம் செயாச் சாதி என இரு சாதிகளே கொள்ளப்பட்டு, அவற்றுள் `தவம் செய் சாதி மேற் சாதி, தவம் செயாச் சாதி கீழ்ச் சாதி` எனக் கொள்ளப்படுதல் அறியப்படுத லால் இங்கு ``கடை படு சாதி`` என்றது தவம் செயாச் சாதியையே யாயிற்று.
`வேறு சில வினை வயத்தால் அடியேன் அச்சாதியில் பிறக்கினும், இப்பொழுது செய்யும் இவ்விண்ணப்பத்தைத் திருச்செவி சாத்தி நீ அடியேனுக்கு அருளல் வேண்டும்` என்றபடி.
கண்டாய், முன்னிலையசை.
`கிங்கிணியை அணிந்தனவும், செம்மையான நிறத்தை உடையனவும் ஆகிய பாதம்` என்றல் கருத்து என்க.

பண் :

பாடல் எண் : 18

புகவிகிர் வாளெயிற் றானிலங்
கீண்டு பொறிகலங்கி
மிகவுகும் மாற்கரும் பாதத்த
னேல்வியன் தில்லைதன்னுள்
நகவு குலாமதிக் கண்ணியற்
கங்கண னென்றனன்றும்
தகவு கொலாம்தக வன்று
கொலாமென்று சங்கிப்பனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

புக - தான் உள்ளே செல்லுதற் பொருட்டு `உகிராலும், எயிற்றாலும் நிலத்தைக் கீண்டு` என்க.
பொறி - ஐம்பொறி.
கலங்கி - நிலை கலங்கி.
``கலங்கி`` எனச் சினைவினை முதல்மேல் ஏற்றப்பட்டது.
உகும் - மெலிந்த.
மாற்கு - திருமாலுக்கு.
அரு - காணு தற்கு அரிய.
`நகு` என்னும் முதனிலை `ஐ` என்னும் இறுதி நிலை பெற்று `நகை` என வருதல் பெரும்பான்மை.
அதற்கு `வு` இறுதி நிலை புணர்த்து, இடையே அகரச் சாரியை சேர்த்து, ``நகவு`` என்றார்.
``ஒளி` என்பது அதன் பொருள்.
அதற்கு - இருளைப் போக்குதற்கு.
அம் கணன் - அழகிய கண்களை உடையவன்.
அஃதாவது, சூரிய சந்தி ரனைக் கண்களாக உடையவன்.
நன்றும் - மிகவும், ``கொல்`` இரண் டும் ஐயப் பொருள்.
``ஆம்`` இரண்டும் அசைகள்.
சங்கிப்பன் - ஐயுறு வேன்.
``சிவபெருமான், திருமால் பாதங்களை உடையவன் - என்றல் உண்மையானால், - அவன் தில்லைத் தலத்தில் தனது முழுத் திரு மேனியையும் யாவரும் காண ஆடுகின்றான் - என்பது உண்மையா, அன்றா? என்று நான் பொருள்கட்கெல்லாம் பெரிய பொருளாய், அதே சமயத்தில் சிறிய பொருள்கட்கெல்லாம் சிறிய பொருளாய் நிற்கும் ஓர் அதிசய நிலையே பரம்பொருளது நிலை` என்பதை இங்ஙனம் குறிப்பால் உணர்த்தியவாறு.
எனவே, `இப்பாட்டிற் குறித்த இரண்டுமே உண்மைகள்தாம்` என்பதே விடையாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 19

சங்கோர் கரத்தன் மகன்தக்கன்
தானவர் நான்முகத்தோன்
செங்கோல விந்திரன் தோள்தலை
யூர்வேள்வி சீருடலம்
அங்கோல வெவ்வழ லாயிட்
டழிந்தெரிந் தற்றனவால்
எங்கோன் எழில்தில்லைக் கூத்தன்
கடைக்கண் சிவந்திடவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சங்கு ஓர் கரத்தன், திருமால். அவன் மகன் மன்மதன். தானவர்.திரிபுரத்து அசுரர்.
செங்கோல - செங்கோலை (வானுலக ஆட்சியை) உடைய - மன்மதன் முதலாகக் கூறப்பட்ட ஐவர்கட்கும், `தோள், தலை, ஊர், வேள்வி, உடலம்` என்பவற்றை எதிர்நிரல் நிறையாக இயைக்க. சீர் - அழகு. அம் கோலம் - அழகிய தோற்றம்.
``ஆயிட்டு`` என்பதில் இட்டு, அசை. கண் சிவத்தல், கோலக் குறிப்பு. `கடைக்கண் சிறிதே சிவந்த அளவில் இத்தனையும் சாம்பலாயின` என்றது குணக்குறை பற்றி வந்த விசேட அணி.

பண் :

பாடல் எண் : 20

ஏவுசெய் மேருத் தடக்கை
யெழில்தில்லை யம்பலத்து
மேவுசெய் மேனிப் பிரானன்றி
யங்கணர் மிக்குளரே
காவுசெய் காளத்திக் கண்ணுதல்
வேண்டும் வரங்கொடுத்துத்
தேவுசெய் வான்வாய்ப் புனலாட்
டியதிறல் வேடுவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஏ - அம்பு.
இஃது ஏவப்படும் காரணம் பற்றி வந்த பெயர்.
அஃது ஈற்றில் லகர உகரம் பெற்று, `ஏவு` என வந்தது.
எனவே, அஃது இரட்டுற மொழிதலாய், `அம்பை ஏவுதல் செய்கின்ற` எனப் பொருள் தந்தது.
இதனால், ``மேரு`` என்பதும் ``மேருவாகிய வில்`` என்னும் பொருட்டாயிற்று.
``அம்பலம்`` என்பது ஆகுபெயராய் அதன் கண் இயற்றப்படும் கூத்தைக் குறித்தது.
அம் கண்ணர் - அழகிய கண்ணையுடையவர்.
``கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்`` 1 என்ப ஆகலின், அதனையுடைய கண் `அழகிய கண்` எனப்பட்டது.
ஆகவே, ``அங்கணர்`` என்பது `கருணையுடையவர்` என்னும் கருத்தினதாம்.
``மிக்கு உளரே`` என்றாராயினும் `மிக்க கருணை யுடையவர் உளரே` என்பதே கருத்தென்க.
ஏகாரம் வினாப் பொருட்டாய், எதிர் மறுத்தலையுணர்த்திற்று.
`காளத்திக் கண்ணுதலாய்` என ஆக்கம் வருவித்து, `வாய்ப் புனல் ஆட்டிய வேடுவனை` எனத் தொகுக்கப் பட்ட இரண்டாவதை வருவித்து, `வேண்டும் வரங் கொடுத்துத் தேவு செய்வான்` என முடிக்க.
தேவு செய்தது ஒரு காலத்தேயாயினும், `அஃது அவற்கு என்றும் உள்ள இயல்பு` என்றற்கு ``செய்வான்`` என எதிர்காலத்தாற் கூறினார்.
காவு - கா; சோலை.
வாய்ப்புனல் ஆட்டிய வேடுவன், கண்ணப்ப நாயனார் என்பது வெளிப்படை.

பண் :

பாடல் எண் : 21

வேடனென் றாள்வில் விசயற்கு
வெங்கணை யன்றளித்த
கோடனென் றாள்குழைக் காதனென்
றாள்இடக் காதிலிட்ட
தோடனென் றாள்தொகு சீர்த்தில்லை
யம்பலத் தாடுகின்ற
சேடனென் றாள்மங்கை யங்கைச்
சரிவளை சிந்தினவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு தலைவியது வேறுபாடு கண்டு வினவிய நற்றாய்க்குச் செவிலி அறத்தொடு நின்றது.
கோடன் - கோஷன்.
ஆரவாரத்தையுடையவன்.
ஆரவாரம் - போர்காரணமாக எழுந்தது.
சேடன் - பெருமையுடையவன்.
`அவ்வளை, கைவளை` எனத் தனித் தனி இயைக்க.
அம் - அழகு.
அது `வளை` என்பதனோடு புணருங் கால் ஈறுகெட்டு லகர ஒற்று மிக்கது.
சரி - வளையல்களில் ஒருவகை.
``மங்கை`` என்பதின்பின், `அதுபொழுது` என்பது வருவிக்க.
இவ் வாற்றால், `இவளது வேறுபாட்டிற்குக் காரணம் தில்லைக் கூத்தினைக் காதலித்த காதலே` என்பதைக் குறிப்பால் உணர்த்தினாளாம்.

பண் :

பாடல் எண் : 22

சிந்திக் கவும்உரை யாடவும்
செம்மல ராற்கழல்கள்
வந்திக் கவும்மனம் வாய்கர
மென்னும் வழிகள்பெற்றுஞ்
சந்திக் கிலர்சிலர் தெண்ணர்தண்
ணார்தில்லை யம்பலத்துள்
அந்திக் கமர்திரு மேனியெம்
மான்ற னருள்பெறவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சிந்திக்க மனம், உரையாட வாய், மலரால் கழல்கள் வந்திக்கக் கரம்` - என நிரல்நிறையாக இயைத்துக்கொள்க.
சந்தித்தல்- சென்று அடைதல்.
தெண்ணர் - அறவிலிகள்.
அமர் - ஒத்த; உவம உருபு.

பண் :

பாடல் எண் : 23

அருள்தரு சீர்த்தில்லை யம்பலத்
தான்தன் அருளினன்றிப்
பொருள்தரு வானத் தரசாத
லிற்புழு வாதல்நன்றாம்
சுருள்தரு செஞ்சடை யோனரு
ளேல்துற விக்குநன்றாம்
இருள்தரு கீழேழ் நரகத்து
வீழும் இருஞ்சிறையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அருளின் அன்றி - அருள்வழியாக அல்லாமல் பிறவாற்றால்.
அருளேல் - அருள் வழியாக வருமாயின் துறவிக்குப் புழுவாதலும் நன்றாம், நரகத்து வீழும் இருஞ் சிறையும் நன்றாம்` என்க.
``நரகம் புகினும் எள்ளேன் திருவருளாலே இருக்கப்பெறில் இறைவா`` 1 என மாணிக்கவாசகரும் அருளிச்செய்தார்.
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே
வழுவா திருக்க வரந்தர வேண்டும்.
2 என்பதும் இக்கருத்தே பற்றி எழுந்தது.
இன்பமாவது திருவருளோடு கூடியிருத்தலும், துன்பமாவது அதனொடு கூடாதிருத்தலுமே என்னும் உண்மை இவ்வாறு எங்கும் விளக்கப்படுகின்றது.
துறவி - உலகப் பற்றை விட்டவன்.

பண் :

பாடல் எண் : 24

சிறைப்புள வாம்புனல் சூழ்வயல்
தில்லைச் சிற் றம்பலத்துப்
பிறைப்பிள வார்சடை யோன்திரு
நாமங்க ளேபிதற்ற
மிறைப்புள வாகிவெண் ணீறணிந்
தோடேந்தும் வித்தகர்தம்
உரைப்புள வோவயன் மாலினொ
டும்பர்தம் நாயகற்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சிறைப் புள் - சிறகையுடைய பறவை.
அவாம் - விரும்புகின்ற.
`பிறையாகிய பிளவு` என்க.
பிதற்றுதல் - அன்பால் பலகாலும் சொல்லுதல்.
மிறைப்பு - மன உறுதி.
உறைப்பு - வலிமை; யாதொன்றிற்கும் அஞ்சாமையும், எதனையும் வெல்லுதலும்.
அயன், மால், இந்திரனாகியோர் ஒவ்வொருவரையும் நோக்க வலிமை பலவாதலின், ``உளவோ`` என்றார்.
ஓடேந்துதலைக் கூறியது, வறுமையை உணர்த்த.

பண் :

பாடல் எண் : 25

அகழ்சூழ் மதில்தில்லை யம்பலக்
கூத்த அடியமிட்ட
முகிழ்சூ ழிலையும் முகைகளு
மேயுங்கொல் கற்பகத்தின்
திகழ்சூழ் மலர்மழை தூவித்
திறம்பயில் சிந்தையராய்ப்
புகழ்சூ ழிமையவர் போற்றித்
தொழுநின் பூங்கழற்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முகிழ் - அரும்பு.
`அவை சூழ் இலை` என்றது, `இடையே அரும்புகளையுடைய இலைக் கொத்து` என்றபடி.
ஏயும் - பொருந்தும்.
கொல், ஐயம்.
`தேவர் தூவும் கற்பக மலர் மழையை யன்றி, யாம் இடும் நிலவுலக இலையையும், அரும்பையும் விரும்பு வையோ என வினாவிய படி.
`யாம் இடும் இலையையும்.
அரும்பை யுமே நீ விரும்புவாய்` என்பது இதன் உட்கருத்து.
ஏன் எனில், `யாம் அன்பே காரணமாக இடுகின்றோம்; இமையவரோ தாம் தம் நிலையிலே நிலைத்து வாழ்தல் வேண்டியிடுகின்றனர்` என்பதாம்.
வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் 1 என்று அருளியது காண்க.
இங்கு, ``திறம் பயில்`` என்றது அதனையே.

பண் :

பாடல் எண் : 26

பூந்தண் பொழில்சூழ் புலியூர்ப்
பொலிசெம்பொ னம்பலத்து
வேந்தன் தனக்கன்றி யாட்செய்வ
தென்னே விரிதுணிமேல்
ஆந்தண் பழைய அவிழைஅன்
பாகிய பண்டைப்பறைச்
சேந்தன் கொடுக்க அதுவும்
திருவமிர் தாகியதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சேந்தனார்` என்னும் அடியவர் பாடிய பாடல்கள் திருவிசைப்பாவில் இருத்தலுடன், திருப்பல்லாண்டு பதிகம் 9-ஆம் திருமுறையிறுதியில் தனியே உள்ளது.
`இப்பதிகத்தைப் பாடி இவர், செல்லாது நின்ற கூத்தப் பெருமான் தேரினைச் செல்லச் செய்தார்` என்பர்.
`இவர் குலத்தால் தாழ்ந்தவர்` என்பது இப்பாட்டில், ``பறைச் சேந்தன்` என்பதனால் குறிக்கப்பட்டது.
திருவாதிரை நாளில் கூத்தப் பெருமானுக்கு அன்பர்கள் களி செய்து படைத்து வழிபடுதல் வழக்கம்.
கோயிலிலும் இது செய்யப்படும்.
`அம்முறையில் செய்ய அரிசி கிடையாமையால் சேந்தனார் தவிட்டுக் களி செய்து துணியில் இட்டுப் படைத்தார்` என்பதும் `அது மறுநாள் விடியலில் திருச்சிற்றம்பலக் கூத்தப்பெருமான் திருமேனியில் காணப்பட்டது` என்பதும் இவரைப் பற்றி வழங்கும் வரலாறுகள்.
அது இப்பாட்டின், பின் இரண்டு அடிகளில் குறிக்கப்பட்டது.
அவிழ்ந்த துணியில் அவிந்த அவிழை
அவிந்த மனத்தால் அவிழ்க்க - அவிழ்ந்த சடை
வேந்தனார்க் கின்னமுத மாயிற்றே மெய்யன்பின்
சேந்தனார் செய்த செயல்
என இது திருக்களிற்றுப்படியாரிலும் கூறப்பட்டது.
தனிப்பாடல் ஒன்றில், ``தவிட்டமுதம் சேந்தன் இட உண்டனை`` - எனச் சிவஞான யோகிகள் கூறினார்.
இப்பாட்டில் அவிழ் - உணவு.
``தண் பழைய`` என்றது `மிகவும் ஆறிப்போன` என்றபடி.
`குலத்தால் தாழ்ந்த ஒருவர் சுவையற்ற ஓர் எளிய உணவைப் படைக்க, அதனை மிக இனியதாக ஏற்றருளிய அந்தப் பெருமானுக்கு ஆட் செய்யாமல் பிறருக்கு ஆட் செய்வது என்ன அறியாமை` என்பது இப்பாட்டின் திரண்ட பொருள்.
இதனால் இவ்வாசிரியர் சேந்தனாருக்குப் பின்னர் வாழ்ந்தவராதல் அறியப்படும்.

பண் :

பாடல் எண் : 27

ஆகங் கனகனைக் கீறிய
கோளரிக் கஞ்சிவிண்ணோர்
பாகங் கனங்குழை யாய்அரு
ளாயெனத் தில்லைப்பிரான்
வேகம் தருஞ்சிம்புள் விட்டரி
வெங்கதஞ் செற்றிலனேல்
மோகங் கலந்தன் றுலந்ததன்
றோவிந்த மூவுலகே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கனகன் - இரணியன்.
ஆகம் - மார்பு.
``கனகனை ஆகம் கீறிய`` என்றதை, `யானையைக் காலை வெட்டினான்` என்பது போலக் கொள்க.
கோளரி, இங்கு நரசிங்கம்.
`நரசிங்கமாகத் தோன்றி இரணியன் மார்பை நகத்தாற் பிளந்து, அவனது வரத்திற்கு அஞ்சி, அவனது உதிரம் ஒரு துளியும் கீழே விழாதபடி குடித்த திருமால் அந்த உதிர வெறியால் மூவுலகத்தையும் தாக்கிபொழுது தேவர்கள் சிவ பெருமானைத் துதித்து முறையிட, அவர் சரபமாய்ச் சென்று நரசிங்கத்தை அழித்தமையால், திருமால் முன் நிலைமையை அடைந்து அருள் உடையரானார் என்பது பண்டை வரலாறு.
குழை - குழையை உடையவளை ஒரு பாகத்தில் உடையவனே` என்க.
சிம்புள்- சரபம்.
இதனை `எண்காற் பறவை` என்பர்.
``சிம்புளை விட்டுச் செற்றியனேல்`` என்றமையால், சிம்புளைச் சிவபெருமான் தமது உருவினின்றும் தோற்றினனேல்`` என்றமையால், சிம்புளைச் சிவபெருமான் தமது உருவினின்றும் தோற்றுவித்து விடுத்தமை பெறப்படும்.
அரி - திருமால்.
கதம் - கோபம்.
மோகம், இங்குத் திகைப்பு.
உலந்தது - அழிந்தது.
`அழிந்திருக்கும்` என்பதில் `இருக்கும்` என்பது எதிர்கால முற்றாதலின், அதனொடு முடிந்த `அழிந்து` என்னும் செய்தென் எச்சம்.
செய்தென் எச்சத்து இறந்த காலம்
எய்திட னுடைத்தே வாராக் காலம்.
1 என்னும் விதியினால் எதிர்காலத்து இறந்த காலமாய்த் தனி இறந்த காலத்தில் அது நிகழாமையைக் குறிக்கும்.
மூவுலகு - முப்பகுதியை உலகும்.

பண் :

பாடல் எண் : 28

மூவுலக கத்தவ ரேத்தித்
தொழுதில்லை முக்கட்பிராற்
கேவு தொழில்செய்யப் பெற்றவர்
யாரெனில் ஏர்விடையாய்த்
தாவு தொழிற்பட் டெடுத்தனன்
மாலயன் சாரதியா
மேவிர தத்தொடு பூண்டதொன்
மாமிக்க வேதங்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஏவு தொழில் - அப்பெருமானால் குறிப்பிட்டு ஏவப் பட்ட தொழில்.
தாவு தொழில்பட்டு - குறித்த இடத்திற்குத் தாவிச் செல்லுகின்ற தொழிலிலே பொருந்தி.
சாரதியா - சாரதியாய் இருக்க.
`மால் விடையாய்த் தாவு தொழிற்பட்டு எடுத்தனன்.
அயன் சாரதியாக, வேதங்கள் இரதத்தொடு பூண்ட மா ஆயின` - என முடிக்க.
எடுத்தல் - தாங்குதல்; சுமத்தல்.
``சாரதியாக`` என்ற அனுவாதத்தானே, `சாரதி ஆயினான்` என்பது பெறப்பட்டது.
மா - குதிரை.
இதன்பின் `ஆயின` என்பது தொகுத்தலாயிற்று.
``இரதத்தொடு`` என்பதை, `இரதத்தை` எனத் திரிக்க.
அனைவரும் `தில்லைப் பிரானுக்கு ஏவலாளர்களே` என்றபடி.

பண் :

பாடல் எண் : 29

வேதகச் சிந்தை விரும்பிய
வன்தில்லை யம்பலத்து
மேதகக் கோயில்கொண் டோன்சேய
வன்வீ ரணக்குடிவாய்ப்
போதகப் போர்வைப் பொறிவா
ளரவரைப் பொங்குசினச்
சாதகப் பெண்பிளை தன்ஐயன்
தந்த தலைமகனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வேதம் - இரச வாதத்தால் பொன்னாக மாறிய பிற உலோகங்கள் அவைபோலும் சிந்தையாவது, திருவருளால் அஞ்ஞானம் நீங்கி மெய்ஞ்ஞானத்தை அடைந்த சிந்தை.
அறிவு அதனை விரும்பியவன் என்றும், `அதனால் விரும்பப்பட்டவன்` என்றும் இருபொருளும் கொள்க.
``தந்த தலைமகன்`` என்பதைக் ``கோயில் கொண்டோன்`` - என்பதன் பின்னர்க் கூட்டுக.
தலைமகன்- விநாயகக் கடவுள்.
சேயவன் - முருகன்.
``வீரணக் குடிவாய்.
.
.
பெண் பிள்ளை`` துற்கை `இவ்விருவர்க்கும் ஐயன்; தமையன்` என்க.
`திருநாரையூர் விநாயகர் இரட்டைமணி மாலை` 14-ஆம் பாடலைக் காண்க.
போதம் - யானை; அதன் தோல்; ஆகுபெயர்.
பொறி - புள்ளிகள்.
வாளரவு - கொடிய பாம்பு.
பெற்ற மக்களது சிறப்புக் கூறு முகத்தால், பெற்றோனது சிறப்பு உணர்த்தியவாறு.
சாதகம் - பேய்க் கூட்டம்.

பண் :

பாடல் எண் : 30

தலையவன் பின்னவன் தாய்தந்தை
யிந்தத் தராதலத்து
நிலையவம் நீக்கு தொழில்புரிந்
தோன்அடு வாகிநின்ற
கொலையவன் சூலப் படையவன்
ஆலத் தெழுகொழுந்தின்
இலையவன் காண்டற் கருந்தில்லை
யம்பலத் துள்ளிறையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஆலத்தெழு`` என்பது முதலாகத் தொடங்கி, ``இந்தத் தராதலத்து`` என்பதை முதலிற் கூட்டியுரைக்க.
ஆலத்து எழுகொழுந்தின் இலையவன் - ஆல் இலையில் பள்ளி கொள்பவன்; மாயோன்.
தலையவன் - முன்னோன்; முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருள் பின்னவன் - பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியன்.
1 ``தாய், தந்தை`` என்றதனால் தோற்று வித்தல் குறிக்கப்பட்டது.
நிலையவன் - நிலைக்கச் செய்பவன்.
நீக்கு தொழில் - அழிக்கும் தொழில்.
நடுவாகி நிற்றல் - இரு முனையோடு நடுவண் ஒரு முனையுடையதாய் இருத்தல்.
``கொலைய`` என்பது தொழிலடியாகப் பிறந்த குறிப்புப் பெயரெச்சம்.

பண் :

பாடல் எண் : 31

இறையும் தெளிகிலர் கண்டும்
எழில்தில்லை யம்பலத்துள்
அறையும் புனல்சென்னி யோனரு
ளாலன் றடுகரிமேல்
நிறையும் புகழ்த்திரு வாரூ
ரனும்நிறை தார்ப்பரிமேல்
நறையும் கமழ்தொங்கல் வில்லவ
னும்புக்க நல்வழியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடு கரி - கொல்லும் யானை.
``கொல்லும்`` என்றது இன அடை.
ஆரூரன், சுந்தர மூர்த்தி நாயனார்.
தார்ப் பரி- மணிக் கோவையணிந்த குதிரை.
வில்லவன் - வீற்கொடியையுடைய சேரன்; சேரமான் பெருமாள் நாயனார்.
சுந்தரர் யானைமீது ஏறிக் கயிலாயம் செல்கையில் வழியில் சிவபெருமானைக் குறித்து,
மண்ணுல கிற்பிறந்து நும்மை
வாழ்த்தும் வழியடியார்
பொன்னுல கம்பெறுதல்
தொண்ட னேன்இன்று கண்டொழிந்தேன்
என அருளிச் செய்தார்.
அங்ஙனம் ``மண்ணுலகத்தில் மக்களாய்ப் பிறந்தோர் சிவபெருமானை வாழ்த்தி வணங்கினால் அவர்கள் பின்பு அப்பெருமானுடைய உலகத்தை அடைவர்`` என்னும் ஆகமப் பிரமாணம் காட்சிப் பிரமாணம் ஆனதையறிந்தும் மண்ணுலகில் மக்களாய்ப் பிறந்தோர் சிலர் அவ்ஆகமப் பிரமாணத்தைச் சிறிதும் தெளிகின்றிலர் என்பதாம்.
இறையும் - சிறிதும்.
அறையும் - ஒலிக்கின்ற.
சுந்தரர் யானைமேற் கயிலை சென்றபொழுது அவர்க்குத் தோழனாய் இருந்த சேரமான் பெருமாள் நாயனாரும் குதிரைமேல் உடன் சென்றதையறிக.

பண் :

பாடல் எண் : 32

நல்வழி நின்றார் பகைநன்று
நொய்ய ருறவிலென்னும்
சொல்வழி கண்டனம் யாம்தொகு
சீர்த்தில்லை யம்பலத்து
வில்வழி தானவ ரூரெரித்
தோன்வியன் சாக்கியனார்
கல்வழி நேர்நின் றளித்தனன்
காண்க சிவகதியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நொய்யார் - சிறியார்.
``நொய்யார் உறவில் நல்வழி நின்றார் பகை நன்று`` என்னும் சொல்லாவது,
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்
என்னும் குறள்.
சாக்கிய நாயனார் சிவலிங்கத்தைக் கல்லால் எறிதலை நியமமாகக் கொண்டு செய்து முத்தி பெற்றார்.
கல்லால் எறிதல் பகைமைச் செயலாயினும் அன்பு காரணமாகச் செய்யப்பட்டது.
இங்ஙனமே கண்ணப்ப நாயனார் தமது செருப்புக் காலைச் சிவலிங்கத் தின்மேல் வைத்ததும் இதனால், `நல்வழியில் நிற்கும் நல்லோர் பிறர்க்குத் தீங்குபோல எவற்றையேனும் செய்வாராயினும் அச் செயற்குக் காரணம் பகைமையாகாது, அன்பேயாய் இருக்கும்` என்ற படி.
`வில்வழியாக` என ஆக்கம் விரிக்க.
தானவர் - அசுரர்; முப்புரத் தவர்.
கல்வழி - கல்லை எறிந்ததே வழியாக.
நேர் நின்று - நேரே காட்சி யளித்து ``காண்க`` என்பது அசை.

பண் :

பாடல் எண் : 33

கதியே யடியவர் எய்ப்பினில்
வைப்பாக் கருதிவைத்த
நிதியே நிமிர்புன் சடையமிர்
தேநின்னை யென்னுள்வைத்த
மதியே வளர்தில்லை யம்பலத்
தாய்மகிழ் மாமலையாள்
பதியே பொறுத்தரு ளாய்கொடி
யேன்செய்த பல்பிழையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கதியே`` முதலிய நான்கும் விளிகள்.
கதி - புகலிடம்.
`அனைத்துயிர்க்கும் கதியே` எனவும், `கருத்தினுள் வைத்த நிதியே` எனவும் உரைக்க.
மதியே - ஞான வடிவினனே.
பதி - கணவன்.
இங்ஙனம் பலவாறு விளித்துப் பிழை பொறுக்க வேண்டி விண்ணப்பித்தபடி.

பண் :

பாடல் எண் : 34

பிழையா யினவே பெருக்கிநின்
பெய்கழற் கன்புதன்னில்
நுழையாத சிந்தையி னேனையும்
மந்தா கினித்துவலை
முழையார் தருதலை மாலை
முடித்த முழுமுதலே
புழையார் கரியுரித் தோய் தில்லை
நாத பொறுத்தருளே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மந்தாகினி.
தில்லை நாத! பிழையாயினவே.
பொறுத்தருள்`` என இயைத்து முடிக்க.
மந்தாகினி - கங்கை.
துவலை- திவலை; துளி.
`கங்கையினது துளிகள் தனது முழையின்கண் வந்து ஆரப் பெறுகின்ற (நிரம்பப் பெறுகின்ற தலை` என்க.
தலை, வெண்டலை.
புழை - உள்ளாற் செல்லும் துளை.
``புழை ஆர்`` என்பதில் உள்ள `ஆர், ``கரி`` என்பதன் முதனிலையோடு முடிந்தது.
கரம் + இ = கரி.
இதன் முதலிரண்டடிகளை.
பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்குமன்பின்
வெற்றடி யேனை விடுதிகண்டாய்
வெறுப்பனவே செய்யு மென்சிறுமை நின்
பெருமையினால் - பொறுப்பவனே.
என்னும் திருவாசகப் பகுதிகளோடு ஒப்பிட்டுக் காண்க.

பண் :

பாடல் எண் : 35

பொறுத்தில னேனும்பல் நஞ்சினைப்
பொங்கெரி வெங்கதத்தைச்
செறுத்தில னேனும்நந் தில்லைப்
பிரானத் திரிபுரங்கள்
கறுத்தில னேனுங் கமலத்
தயன்கதிர் மாமுடியை
அறுத்தில னேனும் அமரருக்
கென்கொல் அடுப்பனவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நம் தில்லைப்பிரான்`` என்பதை முதலிற் கூட்டியும், `நஞ்சினைப் பொறுத்திலனேனும்` எனவும் அமரருக்கு அடுப்பன என்கொல்` எனவும் மொழி மாற்றியும் உரைக்க.
எரி.
தாருகாவன முனிவர் சிவபிரான்மேல் ஏவிய வேள்வித்தீ.
அஃது அப்பெருமானை யாதும் செய்யமாட்டாது.
ஆயினும் ஆபிசார மந்திர ஆற்றலோடு கூடிய அத்தீத் தன்னை விட்டுச் சென்று பலரை இரையாக்கிக் கொள்ளாதபடி.
அப்பெருமான் அதனைத் தன் கையில் ஏந்திக் கொண்டான்.
அயன் - பிரமன்.
அவன் செருக்கு மிகுதியால் சிவ பெருமானை, ``என் மகனே! வா`` என்றான்.
`அவன் கூறிய சொல் பொல்லாச் செருக்குச் சொல்லேயன்றி, உண்மையன்று` என்பதை உணர்த்தச் சிவபெருமான் தன்னை அங்ஙனம் அழைத்த அவனது உச்சி தலையைக் கிள்ளி எடுத்தார்.
பிரமன் சிவபெருமானைப் படைக்கும் அளவிற்கு ஆற்றல் உடையனாயின், அவரால் பறிக்கப் பட்ட அத்தலையை உடனே முன்போலத் தோற்றுவித்துக் கொள்வான் அல்லனோ? பிரமன் படைப்பதும், மாயோன் காப்பதும், பிறவும் எல்லாம் சிவபிரானது சங்கற்பத்தின்படியல்லது, தங்கள் சங்கற்பத்தின் படியல்ல` என்பதையே இத்தகைய புராண வரலாறுகள் விளக்கு கின்றன.
பித்தன்உனது ஒர்தலை பிடுங்கிஎறி போதில்
அத்தலை நமக்கென அமைக்கவிதி யில்லாய்
எத்தலைவன் என்பதுனை? இத்தகைமை கொண்டோ
பைத்தலை அராமுடிகொள் பாரிடம் விதித்தாய்?
எனப் பிற்காலத்து ஆன்றோரும் 1 கூறினார்.
அயன்றனை யாதி யாக
அரனுரு என்ப தென்னை?
பயந்திடும் சத்தி யாதி பதிதலால்
எனவும்,
சத்திதான் பலவோ என்னில்
தான்ஒன்றே அநேக மாக
வைத்திடும் காரியத்தால்
மந்திரி யாதிக் கெல்லாம்
உய்த்திடும் ஒருவன் சத்திபோல்
அரனுடைய தாகிப்
புத்தி முத்திகளை யெல்லாம்
புரிந்து அவன் நினைந்தவாறாம்
என்னும் சிவஞான சித்திச் செய்யுள்களைக் காண்க.
1 `ஒரு கற்பத்தில் உண்டாக்கப்பட்ட பிரம தேவனுக்குப் படைத்தல் தொழிலைக் கற்பித்தற் பொருட்டுச் சிவபெருமானது சங்கற்பத்தின்படி அவனது நெற்றியினின்றும் நீலலோகிதன் முதலிய உருத்திரர் பதினொருவர் தோன்றினர்` என்பது புராண வரலாறு.
இஃதே பற்றி, பிரமன் உருத்திரனைப் படைத்தான்` என வைணவர்கள் சிவபெருமானைப் பிரமனிலும் தாழ்ந்தவனாகக் கூறிக் கொள்கின் றார்கள்.
`உருத்திரன்` எனச் சிறப்பாகக் கூறப்படுபவர், அயல், மால் இருவர்க்கும் மேலாய் நின்று, பிரகிருதி மாயா உலகங்களை அழித்தல் தொழிலைச் செய்யும் சீகண்ட உருத்திரர்.
இவரைப் பிரமனிலும் தாழ்வாகக் கூறுதல் தத்துவ முறையோடு மாறுபடுவதாகும்.
பிரமனது செருக்கினால் உண்மை மறைக்கப்பட்டதுடன், அவனது படைத்தல் தொழிலும் தாறுமாறாய் நிகழ, உலகத்திற்குப் பல தீமைகள் உளவா மாகலின், `அவையெல்லாம் நிகழாமைப் பொருட்டு அவனது தலையைச் சிவபெருமான் கிள்ளினார்` என்றபடி.
அடுப்பன - விளைவன.
இஃது இறந்த காலத்தில் எதிர்காலம்.
பன்னுதல் - சொல்லுதல்.
அஃதாவது, தேவர் `உண்டருள்க` என்றது.
கதம் - கோபம்.
செறுத்தல் - அடக்குதல்.
கறுத்தல் - கோபித்தல்.
அஃது இங்கு அழித்தலாகிய தன் காரியத்தைத் தோற்றி நின்றது.
கொல், ஐயப் பொருட்டு.

பண் :

பாடல் எண் : 36

அடுக்கிய சீலைய ராய்அக
லேந்தித் தசையெலும்பில்
ஒடுக்கிய மேனியோ டூணிரப்
பாரொள் ளிரணியனை
நடுக்கிய மாநர சிங்கனைச்
சிம்புள தாய்நரல
இடுக்கிய பாதன்றன் தில்லை
தொழாவிட்ட ஏழையரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடுக்கிய சீலை - கிழிந்த துளைகள் தோன்ற ஒட்டா மல் பல மடிப்புக்களாக மடிக்கப்பட்ட சீலை.
அகல் - மண்டை; மட் பாத்திரம்.
`எலும்பில் தசை ஒடுக்கிய மேனி` என்க.
அஃதாவது எலும்புகள் நன்கு தோன்றும் உடம்பு.
நடுக்கிய - நடுங்கச் செய்த.
நரல் - (சிங்கன்) அலறும்படி.
ஏழையர் - அறிவிலிகள் (முற்பிறப்பில்) தில்லை தொழாத ஏழையர்கள் (இப்பிறப்பில்).
வறியராய் ஊண் இரப் பார்கள்` என்க.

பண் :

பாடல் எண் : 37

ஏழையென் புன்மை கருதா
திடையறா அன்பெனக்கு
வாழிநின் பாத மலர்க்கே
மருவ அருளுகண்டாய்
மாழைமென் நோக்கிதன் பங்க
வளர்தில்லை யம்பலத்துப்
போழிளந் திங்கள் சடைமுடி
மேல்வைத்த புண்ணியனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை வாழி.
அசை மாழை - மாவடு.

பண் :

பாடல் எண் : 38

புண்ணிய னேயென்று போற்றி
செயாது புலன்வழியே
நண்ணிய னேற்கினி யாதுகொ லாம்புகல்
என்னுள் வந்திட்
டண்ணிய னேதில்லை யம்பல வாஅலர்
திங்கள் வைத்த
கண்ணிய னேசெய்ய காமன்
வெளுப்பக் கறுத்தவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

புகல் - கதி.
அண்ணியன் - இனிப்பவன்.
கண்ணி - முடியிலணியும் மாலை.
அன்றி, `கண்ணியமானவன்` என்றலும் ஆம்.
செய்ய - எல்லாரையும் ஒருபடித்தாக வருத்துகின்ற.
காமன் - மன்மதன்.
வெளுப்ப - சாம்பலாகும்படி.
கறுத்தவன் - கோபித்தவன்.

பண் :

பாடல் எண் : 39

கறுத்தகண் டாஅண்ட வாணா
வருபுனற் கங்கைசடை
செறுத்தசிந் தாமணி யேதில்லை
யாயென்னைத் தீவினைகள்
ஒறுத்தல்கண் டாற்சிரி யாரோ
பிறர்என் னுறுதுயரை
அறுத்தல்செய் யாவிடி னார்க்கோ
வருஞ்சொ லரும்பழியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கறுத்த கண்டன் - நீல கண்டன்.
அண்ட வாணன் - ஆகாயத்தில் இருப்பவன்.
செறுத்த - அடக்கிய.
உறுதுயர் - மிக்க துன்பம்.
`அரும்பழி ஆர்க்கு வரும்?` சொல் என்க.
ஓகாரம் சிறப்பு.
`உனக்குத்தான் வரும்` என்பது குறிப்பு.

பண் :

பாடல் எண் : 40

பழித்தக் கவுமிக ழான்தில்லை
யான்பண்டு வேட்டுவனும்
அழித்திட் டிறைச்சி கலைய
னளித்த விருக்குழங்கன்
மொழித்தக்க சீரதி பத்தன்
படுத்திட்ட மீன்முழுதும்
இழித்தக்க வென்னா தமிர்துசெய்
தானென் றியம்புவரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டில் ``அழித்திட்டிறைச்சி புலையன் அளித்த அவிழ்க் குழங்கல்`` என இவ்வாறு இருக்க வேண்டிய பாடம் மிகவும் திரிபு பட்டுள்ளது.
கண்ணப்ப நாயனாரை ``வேட்டுவன்`` எனச் சாதிப் பெயராற் கூறியது போலவே, சேந்தனாரையும் `புலையன்` எனச் சாதிப் பெயராற் கூறினார்.
சேந்தனார் இட்ட தவிட்டுக் களி திருவமுதா யினமை மேல், ``பூந்தண் பொழில்சூழ்`` என்னும் பாடலிலும் குறிப்பிடப்பட்டது.
அதிபத்தன் - அதிபத்த நாயனார்.
இவர் வலைஞர்.
அழித்து - விலங்குகளைக் கொன்று.
`இட்ட` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.

பண் :

பாடல் எண் : 41

வரந்தரு மாறிதன் மேலுமுண்
டோவயல் தில்லைதன்னுள்
புரந்தரன் மால்தொழ நின்ற
பிரான்புலைப் பொய்ம்மையிலே
நிரந்தர மாய்நின்ற வென்னையும்
மெய்ம்மையின் தன்னடியார்
தரந்தரு வான்செல்வத் தாழ்த்தினன்
பேசருந் தன்மையிதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

புலைப் பொய்மை - கீழான நிலையாப் பொருள்கள்.
அவை உலகத் துப்புரவுகள்.
நிரந்தரம் - இடையறாமை.
`தன் அடியார், மெய்ம்மையில் தரம் தரு செல்வம்` என்க.
தரம் தருதல் - மேன்மை யடைதல்.
தன்மையுடையதை, ``தன்மை`` என்றார்.
`இது பேசருந் தன்மையுடையது ஆதலின், இதன்மேலும் (எனக்கு அவன்) வரம் (மேன்மை) தருமாறு உண்டோ` என முடிக்க.

பண் :

பாடல் எண் : 42

தன்தாள் தரித்தார் யாவர்க்கும்
மீளா வழிதருவான்
குன்றா மதில்தில்லை மூதூர்க்
கொடிமேல் விடையுடையோன்
மன்றா டவும்பின்னும் மற்றவன்
பாதம் வணங்கியங்கே
ஒன்றார் இரண்டில் விழுவரந்
தோசில வூமர்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``சில ஊமர்கள்`` - என்பதை முதலிற் கூட்டியுரைக்க.
ஊமர் - பேச அறியாதவர்.
ஒழுகும் நெறியறியாதவரை இங்ஙனம் `பேச அறியாதவர்` என்றல் வழக்கு, ``கோடி மேல் விடையுடையான்`` என்பது, `சிவன்` என ஒரு சொல் தன்மைப்பட்டு நின்று, ``தில்லை மூதூர்`` என்பது ஏழாவதன் பொருள்படத் தொக்கு நின்றது.
``ஆடவும்`` என்னும் உம்மை எளிமையை உணர்த்தி நிற்றலின் இழிவு சிறப்பும்மை.
`மன்றில் ஆடவும் வணங்கி ஒன்றார்` என்க.
மற்று, அசை.
அங்கே - அம்மன்றிலே.
ஒன்றுதல் - மனம் ஒருங்குதல்.
இரண்டு, பிறப்பும் இறப்பும் இது தொகைக் குறிப்பு.

பண் :

பாடல் எண் : 43

களைக கணிலாமையுந் தன்பொற்
கழல்துணை யாந்தன்மையும்
துளைக ணிலாம்முகக் கைக்கரிப்
போர்வைச் சுரம்நினையாம்
தளைக ணிலாமலர்க் கொன்றையன்
தண்புலி யூரனென்றேன்
வளைக ணிலாமை வணங்கும்
அநங்கன் வரிசிலையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டுத் தலைவி தோழிக்கு அறத்தொடு நின்றது.
மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க.
தளைகள் நிலா மலர் - கட்டு (முறுக்கு - அரும்பாய் இருக்கும் நிலை) நில்லாத, (நிலா, இடைக்குறை) எனவே, நன்கு மலர்ந்த மலர்.
`கொன்றையன்` என்றும், `புலியூரன்` என்றும் ஒருமுறை சொன்னேன்.
அது காரணமாகக் கையில் வளைகள் நில்லாது கழன்று வீழும்படி அநங்கனது (மன்மத னது) வரிந்து கட்டப்பட்ட வில் என்னை நோக்கி வளையா நின்றது.
இது பற்றி அச்சுரன் (தேவன், சிவபெருமான்) நினைகின்றானில்லை.
`அதுவே என் வேறுபாட்டிற்குக் காரணம்` என்பது குறிப்பெச்சம்.
கணைகள் - பற்றுக்கோடு.
`கழலே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று.
`கண் நிலாவும் முகத்தையும்.
துளை நிலாவும் கையையும் உடைய கரி` என எதிர்நிரல் நிறையாக இயைத்துரைக்க.
``நிலாமை`` என்பது எதிர்மறை வினையெச்சம்.
`சுரம் நினையான்` என்பது பாடமன்று.

பண் :

பாடல் எண் : 44

வரித்தடந் திண்சிலை மன்மத
னாதலும் ஆழிவட்டம்
தரித்தவன் தன்மக னென்பதோர்
பொற்புந் தவநெறிகள்
தெரித்தவன் தில்லையுட் சிற்றம்
பலவன் திருப்புருவம்
நெரித்தலும் கண்டது வெண்பொடி
யேயன்றி நின்றிலவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சிற்றம்பலவன் (மன்மதனை நோக்கித்) திருப்புருவம் நெரித்த மாத்திரத்தில் கண்டது சாம்பலேயன்றி, அவனது பேரழகும், `திருமால் பெற்ற மகன்` என்னும் புகழும் சிறிதும் நின்றில என்க.
`மன்தனை நோக்கி` என்பது முன்னர்ப் போந்த சொற்களின் குறிப்பால் வந்து இயைந்த இசையெச்சம்.
தவநெறிகள் - சிவதன்ம வழிகள்.

பண் :

பாடல் எண் : 45

நின்றில வேவிச யன்னொடுஞ்
சிந்தை களிப்புறநீள்
தென்தில்லை மாநட மாடும்
பிரான்தன் திருமலைமேல்
தன்தலை யால்நடந் தேறிச்
சரங்கொண் டிழிந்ததென்பர்
கன்றினை யேவிள மேலெறிந்
தார்த்த கரியவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பாரத - இதிகாசத்துள், `பதின்மூன்றாம் நாட்போர் முடிந்தபின் இரவில் கிருட்டினன் அருச்சுனனை அவனது சூக்கும தேகத்தோடு மட்டும் உடன் கொண்டு கயிலாயத்தை அடைந்து, சிவபெருமானைத் தரிசிப்பித்து, அப்பெருமான் முன்பு அவனுக்கு வழங்கிய பாசுபதாத்திரம் இந்திரன் பொருட்டு அவனால் `நிவாத கவச காலகேயர்` என்னும் அசுரர் மேல் ஏவப்பட்டமையால் அஃது அவ்வசுரர்களையழித்துவிட்டுக் கயிலாயத்துள் சென்றிருந்ததைத் திரும்பப் பெற்றுக்கொள்ளச் செய்து மீண்டு குருச்சேத்திரத்தை அடையச் செய்தான்` எனக் கூறப்பட்டது.
அப்பொழுது கிருட்டினன் கயிலாய மலைமேல் `காலால் நடத்தல் கூடாது` எனத் தலையால் நடந்து ஏறினமை இப்பாட்டால் அறியப்படுகின்றது.
இப்பாட்டு அந்தாதியாய் அமைதற் பொருட்டு, ``நின்றிலவே`` என்பது பாடமாகக் காணப்பட்ட போதிலும் ``நின்றிரவே`` என்பதே பாடமாகும்.
அப்பாடம் அந்தாதிக்கு மாறாவதன்று.
``நின்று`` என்பதை ``ஏறி`` என்பதன் பின்னர் கூட்டுக.
`கரியவன் இரவே விசயன்னொடும் திருமலைமேல் சரம் கொண்டு இழிந்தது தலையால் நடந்து ஏறி நின்று` என இயைத்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 46

கருப்புரு வத்திரு வார்த்தைகள்
கேட்டலும் கண்பனியேன்
விருப்புரு வத்தினொ டுள்ளம்
உருகேன் விதிர்விதிரேன்
இருப்புரு வச்சிந்தை யென்னைவந்
தாண்டது மெவ்வணமோ
பொருப்புரு வப்புரி சைத்தில்லை
யாடல் புரிந்தவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கரும்பு + உருவம் = கருப்புருவம்.
`கரும்பு போலும் உருவம்` என்க.
கரும்பு போலுவதாவது கண்டார்க்கு இனிதாதல்.
`அவ்வுருவத்தைக் குறிக்கின்ற திருவார்த்தைகள்` என்க.
விருப்பு உருவம் - அன்பே வடிவான உடம்பு.
இரும்பு + உருவம் = இருப் புருவம்.
இங்கு ``உருவம்`` என்றது தன்மையை.
பொருப்பு உருவப் புரிசை -மலை போலும் உருவத்தையுடைய மதில்.

பண் :

பாடல் எண் : 47

புரிந்தஅன் பின்றியும் பொய்மையி
லேயும் திசைவழியே
விரிந்தகங் கைம்மலர் சென்னியில்
கூப்பின் வியன்நமனார்
பரிந்தவ னூர்புக லில்லை
பதிமூன் றெரியவம்பு
தெரிந்தவெங் கோன்தன் திரையார்
புனல்வயற் சேண்தில்லையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டிற்கு முதற்கண் `ஒருவன்` என்னும் எழுவாய் வருவிக்க.
பொய்ம்மையிலே - பொய்யாகவே; அஃதாவது மனம் பற்றாது மற்றவர் செய்வது போலச் செய்பவனாய்.
திசை வழியே - ஒருதிசை நோக்கிச் செல்லும் வழியில்.
அகங்கைம்மலர்- உள்ளங்கையாகிய மலர்கள்.
``விரிந்து`` என்பதனை, `விரிய` எனத் திரிக்க.
`முன்னே விரியப் பின்னே கூம்பின்` என்க.
அகங்கை இரண் டனையும் விரித்தல் ஒருவகை ஆவாகன முத்திரை.
இறைவனிடம் ஒன்றை வேண்டுதற்கும் இம்முத்திரை பயன்படும்.
`அவன்பால் மட்டு மன்று; அவனது ஊர்க்குள்ளும் நமனார் புகலில்லை` என்பதாம்.
`ஒருவன் தில்லையை நோக்கிச் சென்னியிற் கைகூப்பினால் அவனது ஊர்க்குள்ளும் நமனார் புகலில்லை` என்க.
பரிந்து - விரைந்து.
பதிமூன்று - முப்புரம்.

பண் :

பாடல் எண் : 48

சேண்தில்லை மாநகர்த் திப்பியக்
கூத்தனைக் கண்டுமன்பு
பூண்டிலை நின்னை மறந்திலை
யாங்கவன் பூங்கழற்கே
மாண்டிலை யின்னம் புலன்வழி
யேவந்து வாழ்ந்திடுவான்
மீண்டனை யென்னையென் செய்திட
வோசிந்தை நீவிளம்பே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சேண் - அகன்ற இடம்.
`திவ்வியம்` என்பது ``திப்பியம்`` எனத் திரிந்து வந்தது.
திவ்வியம் - தெய்வத் தன்மை சந்தை அடங்குதலை `அது தன்னை மறத்தல்` என்றார்.
கழற்கு - கழற் கண்; உருபு மயக்கம்.
மாறாதல் - ஒடுங்குதல்.
மீண்டனை - கழலிற் சென்றும் திரும்பினாய்.
`என்னை என் செய்திட மீண்டனை` என ஓகாரம் வினாப் பொருட்டு.
``சிந்தை`` என்பதை முதலிற் கூட்டுக.
அதனைப் பின்னும் கூட்டுக.
சிந்தை, அண்மை விளி.

பண் :

பாடல் எண் : 49

விளவைத் தளர்வித்த விண்டுவுந்
தாமரை மேலயனும்
அளவிற்கு அறியா வகைநின்ற
வன்றும் அடுக்கல்பெற்ற
தளர்வில் திருநகை யாளும்நின்
பாகங்கொல் தண்புலியூர்க்
களவிற் கனிபுரை யுங்கண்ட
வார்சடைக் கங்கையனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியை முதலில் வைத்து உரைக்க.
களா, ``கள`` எனச் செய்யுளில் ஈறு குறுகி நின்றது.
களா, ஒருவகைச் செடி.
`அதில் உள்ள கனி` என்க.
புரையும் - போலும்.
`கற்ற வார்சடை` என்பது பாட மன்று.
`வார்சடையிற் கங்கையை உடையவனே` என்க.
விளாவைத் தளர்வித்த - (கண்ணனாய் இருந்த நிலைமையில்) விளாங்கனியை (கன்று குணிலா) எறிந்து உதிர்த்த.
விண்டு - விட்டுணு; அடுக்கல் பெற்ற - மலையரையன் பெற்ற.
தளவின் திரு நகையாள் - முல்லையரும்பு போன்ற நகையை உடைய உமாதேவி.
`சடைக் கங்கையனே! நீ மாலும், அயனும் அடி முடிதேட அனற்பிழம் பாய் நின்ற அப்பொழுதும் மலைமகள் உன் இடப்பாகத்தில் இருந் தாளோ` என்க.
கொல, ஐயம்.
`என்றுமே உமை பாகம் பிரியாய்` எனப் படுகின்ற நீ நெருப்புருவாய் நின்ற காலத்தில் அவளைப் பிரியா திருத்தல் எங்ஙனம் கூடிற்று என்றபடி.
``எத்திறம் நின்றான் ஈசன், அத் திறம் அவளும் நிற்பள் 1 என்பது அவன் இயல்பாகலின் நீ நெருப்பாய் நின்றபொழுது, அவன் அதன் சூடாய் இருந்தாள் போலும்`` என்பது குறிப்பு.

பண் :

பாடல் எண் : 50

கங்கை வலம்இடம் பூவலங்
குண்டலம் தோடிடப்பால்
தங்குங் கரம்வலம் வெம்மழு
வீயிடம் பாந்தள்வலம்
சங்க மிடம்வலம் தோலிட
மாடை வலம்அக்கிடம்
அங்கஞ் சரிஅம் பலவன் வலங்கா
ணிடமணங்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு மாதொரு கூறாம் வடிவத்தை வருணித் தது.
`வலம் கரம் மழுதங்கும்` என இயைக்க.
வீ - பூச் செண்டு.
பாந்தள் - பாம்பு.
சங்கம் - சங்க வளையல்.
அங்கு, அசை.
அக்கு - எலும்பு மாலை.
அம்சரி - அழகிய சரிவு.
(தொங்கல்) பொன்னரி மாலை முதலியன.
காண், அசை.
`வலம் அம்பலவன்; இடம் அணங்கு.
(பெண்) இந்நிலைமைக்கு ஏற்ப, தலையில் வலம் கங்கை; இடம் பூ முதலியனவாம்` என்க.

பண் :

பாடல் எண் : 51

அணங் காடகக்குன்ற மாதற
ஆட்டிய வாலமர்ந்தாட்
கிணங்கா யவன்தில்லை யெல்லை
மிதித்தலு மென்புருகா
வணங்கா வழுத்தா விழாவெழும்
பாவைத் தவாமதர்த்த
குணங்காண் இவளென்ன வென்றுகொ
லாம்வந்து கூடுவதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது தலைவியது கைக்கிளைக் காதல் ஆற்றாமை கண்டு தோழி மனமழிந்து கூறியது.
ஆல் - திருஆலங்காடு தலம்.
அதில் அமர்ந்தவள் காளி.
அவளை ``அணங்கு`` என்றதனோடு, சத்தி கூறாதல் பற்றி, ``ஆடகக் குன்ற மாது`` என்றார்.
`பொன்மலை மகள்` என்பது அதன் பொருள்.
அற ஆட்டிய - தன்னை (சிவபெருமானை) என முற்கால ஆசிரியரும் கூறினார்.
அவளை ஒறுத்து அடக்காமல், இனிய நடனத்தினாலே வென்று அடக்கினமை பற்றிச் சிவபெருமானை ``அவளுக்கு இணங்கியவன்`` என்றார்.
தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம் பயலுமது என்னேடீ?
தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெலாம்
ஊன்புக்கு வேற்காளிக்கு ஊட்டாங்காண் சாழலோ
என்னும் திருவாசகத்தைக் காண்க.
வழுத்தல் - துதித்தல்.
பாவை, தலைவி.
`பாவை, தில்லை எல்லை மிதித்தலும் என்பு உருகா.
.
.
.
எழும்; (ஆகவே, தில்லைப்பிரான் இவளை) - இவள் மதர்த்த குணம் - என்ன (இரங்கி) என்று வந்து கூடுவது` என இயைத்து முடிக்க.
தவா - நீங்காத; மதர்த்த - களித்த; பித்துக் கொண்ட.
குணம் உடையவளை, ``குணம்`` என்றார்.
காண், கொல், ஆம் அசைகள் ``உருகா`` என்பது முதலாக எண்ணின்கண் வந்த வினையெச்சங்கள் யாவும் ``எழும்`` என்னும் முற்றொடு முடிந்தன.

பண் :

பாடல் எண் : 52

கூடுவ தம்பலக் கூத்த
னடியார் குழுவுதொறும்
தேடுவ தாங்கவ னாக்கமச்
செவ்வழி யவ்வழியே
ஓடுவ துள்ளத் திருத்துவ
தொண்டசுட ரைப்பிறவி
வீடுவ தாக நினையவல்
லோர்செய்யும் வித்தகமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பிறவி வீடுவதாக நினைய வல்லோர் செய்யும் வித்தகம் அடியார் குழுவு தொறும் கூடுவதும், அவன் ஆக்கம் செவ்வழி தேடுவதும், அவ்வழியே ஓடுவதும், ஒண் சுடரை உள்ளத்து இருத்துவதும் `ஆம்` என இயைத்து முடிக்க.
``ஆக்கும்`` என்பது இறந்த காலத்தில் வந்தது.
சிவபெருமான் ஆக்கிய செவ்விய வழியாவது சிவாகம நெறி.
அதனை அடுத்துவரும் பாட்டாலும் அறியலாம்.
``கூடுவது`` முதலிய நான்கு தொழிற் பெயர்களும் செவ்வெண்.
அவற்றது இறுதியில் அவற்றின் தொகை தொகுக்கப்பட்டு நின்றது.
`அவ்வழிக்கண்ணே` - என ஏழாவது விரிக்க.
ஒண்சுடர் - ஞானம்; என்றது சிவஞானத்தை.
``வீடுவது ஆக`` என்றது, `உண்டாகும்படி` என்றவாறு.
வித்தகம் - திறல்.
திறலால் செய்யப்படும் செயல்களை, `திறல்` என்றார்.
`பிறவாறு செய்யும் செயல்கள் பிறவியை நீக்க மாட்டா` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 53

வித்தகச் செஞ்சடை வெண்மதிக்
கார்நிறக் கண்டத்தெண்தோள்
மத்தகக் கைம்மலைப் போர்வை
மதில்தில்லை மன்னனைத்தம்
சித்தகக் கோயில் இருத்தும்
திறத்தா கமியர்க்கல்லால்
புத்தகப் பேய்களுக் கெங்குத்த
தோஅரன் பொன்னடியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வித்தகம், வெண்மதி, கார்நிறக் கண்டம், எண் தோள், கைம்மலைப் போர்வை - இவை அனைத்தும் தில்லை மன்னனாகிய ஒருவனையே சிறப்பித்தன.
வித்தகம் - திறல்.
`செஞ்சடைக் கண் வெண்மதியை உடைய` என்க.
கார் - மேகம்; கருமையுமாம்.
கை மலை - யானை.
இஃது ஆகு பெயராய், அதன் தோலைக் குறித்தது.
சித்தம் - மனம்.
`சித்த` என்பதன் ஈற்று அகரம் குறைந்து நின்றது.
`சித்த மாகிய அகக் கோயில்` என்க.
`கோயிலின்கண்` என ஏழாவது விரிக்க.
ஆகமியர் - சிவாகம நெறியில் நிற்பவர்கள்.
``காருறு கண்ணியர்`` என்றாற் போல்வன வற்றில் ஒருமையுணர்த்தும் இகர விகுதி சாரியை யாய்விட `அர்` என்னும் பன்மை விகுதிபுணர்ந்து பன்மையை உணர்த்தும்.
இவ்வாறு வருதல் அஃறிணைப் பெயர்கள் இன்மையாலும், இன்னோரன்னவை உயர்வு பற்றி வந்த பன்னைப் பெயராகாது, பொருட்பன்மை பற்றிய பெயர்களே ஆதலாலும் இவை தனி மொழிகளில் ஒட்டுப் பெயர் ஆக்கத்தில் உள்ள சில வேறுபாடுகளேயாம்.
ஆசிரியர் தொல்காப்பி யனார் தனிமொழியாக்கத்தைக் கூற முற்படாமையின் இன்னோரன்ன வற்றை அவர் விரித்திலர்.
``புத்தகப் பேய்கள்`` - சுவடிகளைக் காத்தல் மாத்திரத்தையே உடையவர்கள்.
புத்தகமே சாலத் தொகுத்தும் பொருளறியார்
உய்த்தக மெல்லாம் நிரப்பினும் - மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே; பொருள்தெரிந்து
தேற்றும் புலவரும் வேறு.
1 என்னும் நாலடிச் செய்யுளைக் காண்க.
இதில் `போற்றுதல்` என்றது.
``ஊரா மிலைக்கக் குருட்டா மிலைத்தல்`` 2 போல, மற்றவர்கள் உயர்த்துப் பேசுதலைக் கேட்டுத் தாங்களும் உயர்த்துப் பேசுதல், `சிவாகமப் பொருளை அறியாதவர்கட்குப் பிற நூல்களின் உண்மைப் பொருள் விளங்காது` என்பதாம்.
அசிக்க ஆரியங்கள் ஓதும்
ஆதரைப் பேத வாதப்
பிசுக்கரைப் காணாகண், வாய்
பேசாதப் பேய்க ளோடே
எனவும்,
ஆரியப் புத்தகப் பேய்கொண்டு புலம்புற்று
வட்டணை பேசுவர்
எனவும் போந்தனவும், இக்கருத்தே பற்றி எழுந்தனவாம்.
`எங்குள் ளதோ` என்பதை, `எங்கித்ததோ` என்றல் ஒரு வட்டார வழக்கு.
``எங் கிருந்தோ`` என்றது, `அறிய வாராது` என்றபடி.

பண் :

பாடல் எண் : 54

பொன்னம் பலத்துறை புண்ணிய
னென்பர் புயல்மறந்த
கன்னன்மை தீரப் புனிற்றுக்
கலிக்காமற் கன்றுபுன்கூர்
மன்னு மழைபொழிந் தீரறு
வேலிகொண் டாங்கவற்கே
பின்னும் மழைதவிர்த் தீரறு
வேலிகொள் பிஞ்ஞகனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பொன்னம்பலத்துறை புண்ணியன் என்பர்`` என்பதனை இறுதியிற் கூட்டுக.
புயல் - மேகம்.
அஃது இங்கு மழையைக் குறித்தது.
கன்னல் - நாழிகை; அஃது இங்குப் பொதுவாக, `காலம்` எனப் பொருள் தந்து நின்றது.
மை - குற்றம்.
அது மழை பெய்யாமைக்குக் காரணமாகிய குற்றம்.
தீர - தீர்ந்தமையால் `தீர்ந்தது பிரார்த்தனையினால்` என்க.
நீற்றுக் கலிக்காமன் திருநீற்றை யணிந்த (அஃதாவது பிரார்த்தித்து அணிந்த) ஏயர்கோன் கலிக்காம நாயனார்.
`புன்கூர் - அந்நாயனாருக்கு உரியதாய் இருந்த திருப்புன்கூர்.
`புன்கூரில்` என ஏழாவது விரிக்க.
கலிக்காம நாயனார்.
தாமும், தம்மைச் சார்ந்த மக்களும் ஏதோ பிழை செய்தமையால் மழை பெய்யா தொழிந்தது` எனக் கருதி, அப்பிழை தீர்த்தற்குப் பன்னிரண்டு வேலி நிலத்தைத் திருப்புன்கூர் இறைவருக்குத் தேவதானமாகக் கொடுப்பது` என்று பிரார்த்தித்துக் கொண்டமையால் மழை பெய்யத் தொடங்கியது.
தொடங்கிய மழை விடாது பொழிந்தமையால் மழை நின்றால், மற்றும் பன்னிரு வேலி தேவதானம் செய்வதாகப் பிரார்த்தித்தமையால் மழை நின்றது.
இச் செய்தியைச் சுந்தரமூர்த்தி நாயனார் தமது திருப்புன்கூர்த் தலப் பதிகத்து இரண்டாம் பாடலில் குறித்தருளினார்.
அஃதே இப்பாட்டிற் கூறப்பட்டது.
`பொழிவித்து` என்பதில் பிறவினை விகுதி தொகுக்கப்பட்டது.
ஈற்றடியில், பின்னும் பிழை தவிர்த்து என்பது பாடமன்று.
ஈற்றில் தொகுக்கப்பட்ட `பிஞ்ஞகனை` என்னும் இரண்டாம் வேற்றுமையை விரிக்க.

பண் :

பாடல் எண் : 55

நேசனல் லேன்நினை யேன்வினை
தீர்க்குந் திருவடிக்கீழ்
வாசநன் மாமல ரிட்டிறைஞ்
சேனென்தன் வாயதனால்
தேசனென் னானைபொன் னார்திருச்
சிற்றம் பலம்நிலவும்
ஈசனென் னேன்பிறப் பென்னாய்க்
கழியுங்கொல் என்தனக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நேசன் - அன்பன்.
`வினை நீக்கும்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும்.
தேசன் ஒளியுடையவன்.
`ஆனை` என்பது காதற் சொல்.
என்னேன் - என்று துதியேன்.
`இப்பிறப்பு` எனச் சுட்டு வருவிக்க.
என் ஆய் - என்ன பயன் தந்ததாய்.
`யாதொரு பயனையும் தந்ததாகாது வீணாய்க் கழியும் போலும்` என்பதாம்.
கொல், ஐயம் `என்றனக்கு என் ஆய்` எனக் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 56

தனந்தலை சக்கரம் வானத் தலைமை
குபேரன் தக்கன்
வனந்தலை ஏறடர்த் தோன்வா
சவன்உயிர் பல்லுடலூர்
சினந்தலை காலன் பகல்காமன்
தானவர் தில்லைவிண்ணோர்
இனந்தலை வன்னரு ளால்முனி
வால்பெற் றிகந்தவரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தில்லைத் தலைவன் அருளால் தனமும், தலையும், சக்கரமும், வானத் தலைமையும் பெற்றவர் முறையே குபேரனும், தக்கனும் ஏறடர்த்தோனும், வாசவனும்` எனவும், `அவன் முனிவால் உயிரையும், பல்லையும், உடலையும், ஊரையும் இகந்தவர் முறையே காலனும், பகலவனும், காமனும், தானவரும்` எனவும் இயைத்துப் பொருள் கொள்க.
இது நிரல்நிறையணி.
`தில்லைப் பெருமான் அன்பர்கட்கு அருளையும், வன்பர்கட்கு ஒறுப்பையும் அளிக்க வல்லவன்` என்பதாம்.
தனம் - செல்வம்.
வானத்தலைமை - வானுலக ஆட்சி.
ஏறு அடர்த்தான், நப்பின்னையை மணப்பதற்காகக் காளை களைத் தழுவிக் கொன்றவன்.
கண்ணன், திருமால்.
வனந்தலை ஏறு - காட்டில் சென்று மேயும் காளைகள்.
சினந்து அலை காலன் - உயிர்கள்மேல் கோபித்துத் திரிகின்ற யமன்.
பகலைச் செய்பவனைப் ``பகல்`` என்றார்.
`இனத் தலைவன்` என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது.
``பெற்று இகந்தவர்`` என்பதில் ``பெற்று`` என்னும் எச்சம் எண்ணின்கண் வந்ததாகலின், `பெற்றவர், இகந்தவர்` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 57

அவமதித் தாழ்நர கத்தில்
இடப்படும் ஆதர்களும்
தவமதித் தொப்பில ரென்னவிண்
ணாளுந் தகைமையரும்
நவநிதித் தில்லையுட் சிற்றம்
பலத்து நடம்பயிலும்
சிவநிதிக் கேநினை யாரும்
நினைந்திட்ட செல்வருமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அவமதித்து - (கூற்றுவனால்) இகழப் பட்டு.
ஆதர்- அறிவிலிகள்.
தவம் மதித்து - தவத்தை மேன்மையாக மதித்துச் செய்து.
சிவ நிதி - சிவனாகிய செல்வம்.
`நிதிக்கே` என்னும் நான்காம் உருபை இரண்டாம் உருபாகத் திரிக்க.
ஈற்றில் `ஆவர்` என்னும் பயனிலை வருவித்து முடிக்க.
`நினையாதவர் நரகம் புகுவர்` எனவும், `நினைந் தவர் சிவலோகம் பெறுவர்` எனவும் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 58

வருவா சகத்தினில் முற்றுணர்ந்
தோனைவண் தில்லைமன்னைத்
திருவாத வூர்ச்சிவ பாத்தியன்
செய்திருச் சிற்றம்பலப்
பொருளார் தருதிருக் கோவைகண்
டேயுமற் றப்பொருளைத்
தெருளாத வுள்ளத் தவர்கவி
பாடிச் சிரிப்பிப்பரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வரு வாசகத்தினில் செய்` என இயையும்.
வரு வாசகம் - திருவருளின் வழித் தமது நாவில் வந்த சொற்கள்.
இவை `திருவாசகம்` - எனப் பெற்றன.
சிவ பாத்தியன் - சிவனது பாத சம்பந்தத்தை (திருவடி தீட்சையை)ப் பெற்றவன்; திருவாதவூரடிகள்.
`திருவாசகம் மாணிக்கம் போன்றது` என்னும் கருத்தால் அவ்வாசகத்தை வெளியிட்ட அடிகள் `மாணிக்க வாசகர்` எனப் பெயர் பெற்றார்.
இவரை `ஆதிசைவ அந்தணர்` என அறிஞர் கருதுவர்.
இவர் தில்லைப் பெருமானைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து அருளிச் செய்த கோவைப் பிரபந்தம், `திருச்சிற்றம்பலக் கோவையார்` என்றும், `திருக்கோவையார்` என்றும் சொல்லப்படுதல் இப்பாட்டில் குறிக்கப்பட்டமை காண்க.
``வருவாசகத்தினில் செய்`` என்றதனால் இதுவும் திருவாசகமேயாக குறிக்கப்பட்டது.
இதனைக் `கோவைத் திரு வாசகம்` என்பர்.
இக்கோவையாரை இவ்வாசிரியர் (நம்பியாண்டார் நம்பி) எட்டாம் திருமுறையகைச் சேர்த்திருத்தல் வெளிப்படை.
அப் பொருள், அதில் சொல்லப்பட்டுள்ள உலகியற் பொருள், அறிவான் நூற் பொருள் `கவியாற் பாடி` என மூன்றாவது விரிக்க.
`அப் பெருமானைச் சிரிக்கச் செய்வர்` என்க.
சிரித்தல் - எள்ளி நகையாடுதல்.
`அருள்வழியால் வந்த சொற் பிரபந்தத்திற்கு அஃது இன்றி, மலவழியால் வரும் சொற்பிரபந்தங்கள் ஒவ்வா` என்பது கருத்து.
இதனால் இவ்வாசிரியர் காலத்தில் சிவபிரான் மீது பாடப்பட்ட வேறு சில கோவைகளும் இருந்தமை அறியப்படும்.

பண் :

பாடல் எண் : 59

சிரித்திட்ட செம்பவ ளத்தின்
திரளும் செழுஞ்சடைமேல்
விரித்திட்ட பைங்கதிர்த் திங்களும்
வெங்கதப் பாந்தளும் தீத்
தரித்திட்ட வங்கையும் சங்கச்
சுருளுமென் நெஞ்சினுள்ளே
தெரித்திட்ட வாதில்லை சிற்றம்
பலத்துத் திருநடனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``தில்லைச் சிற்றம்பலத்துத் திருநடன்`` என்பதை முதலிற் கொள்க.
சிரித்திட்ட - ஒளிவீசுகின்ற.
பவளம் - பவளத்தின் நிறம்; ஆகுபெயர்.
திரள் - திரள் போலும் திருவுருவம்.
கதம் - கோபம்.
சங்கச் சுருள் காதில் உள்ளது.
தெரித்திட்டவா - தோற்றுவித்தவாறு; `வியப் பினது` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க.
நடன் - நடனத்தைச் செய்பவன்.

பண் :

பாடல் எண் : 60

நடஞ்செய்சிற் றம்பலத் தான்முனி
வென்செயும் காமனன்று
கொடுஞ்சினத் தீவிழித் தாற்குக்
குளிர்ந்தனன் விற்கொடும்பூண்
விடுஞ்சினத் தானவர் வெந்திலர்
வெய்தென வெங்கதத்தை
ஒடுங்கிய காலனந் நாள்நின்
றுதையுணா விட்டனனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு நிந்தாத்துதி, அஃதாவது, பழித்ததுபோலப் புகழ் புலப்படுத்தியது.
மிக்க சினத்தோடு தீ எழப் பார்த்த அவன்முன் மன்மதன் குளிர்ந்து எழுந்தான்.
திரிபுரத்தை எரித்தபொழுது அதில் இருந்த அசுரர்கள் எரிந்தொழியவில்லை.
(முன்போலவே இருந் தார்கள்.
) அவனால் உதைக்கப்பட்ட பின்பும் யமன் முன்போல இருந்து கொண்டுதான் இருக்கின்றான் என்றால் தில்லையம்பலத்தில் நடனம் புரியும் பெருமான் கோபித்தால், அக்கோபம் யாரை, என்ன செய்யும்? (ரதிதேவி தன் வேண்டுகோளுக்கு இரங்கிச் சிவபெருமான் முன்பு எரிந்துபோன மன்மதனை எழுப்பித் தந்து, அவளுக்கு மட்டும் முன்போலத் தோன்றியிருக்கும்படி செய்தார்.
திரிபுரத்தை எரித்த பொழுது புத்தன் போதனையால் மயங்கிப் பத்தியை விட்டுவிடாமல் முன்போலவே இருந்த ஒரு மூவர் அசுரரை எரியாது பிழைத்திருக்கச் செய்தார்.
யமனை உதைத்த பின்பு எழுப்பி `எம் அடியவர்பாற் செல்லாதே` என்று அறிவுரை கூறி விடுத்தார்.
இவைகளையெல்லாம் குறிப்பிடாமல் பொதுவாக நகைச்சுவை தோன்றக் கூறினார்.
``தீமைக்குத் தீமையைத் தருதல் மட்டுமன்றி, நன்மைக்கு நன்மையும் தருபவன் சிவன்`` என்பதைக் குறிப்பால் உணர்த்தியவாறு.
``விழித்தாற்கு`` என்னும் குவ்வுருபை, `முன்` என்னும் பொருட்டாகிய கண்ணுருபாகத் திரிக்க.
வில் - ஒளி.
`விற் பூண்` என இயையும்.
கொடுமை - வளைவு.
பூண் - அணிகலம்.
விடும் சினத்தானவர் - சினத்தை விட்டொழித்த அசுரர்.
வெய்தென - விளைவாக.
`ஒடுக்கிய` என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது.
``நின்று`` என்பது ஐந்தாம் வேற்றுமைச் சொல்லுருபு.
`அந்நாள் முதலாக` என்பது.

பண் :

பாடல் எண் : 61

விட்டங் கொளிமணிப் பூண்திகழ்
வன்மதன் மெய்யுரைக்கில்
இட்டங் கரியன்நல் லானல்லன்
அம்பலத் தெம்பரன்மேல்
கட்டங் கியகணை யெய்தலுந்
தன்னைப்பொன் னார்முடிமேல்
புட்டங்கி னான்மக னாமென்று
பார்க்கப் பொடிந்தனனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மதன் - மன்மதன்.
மெய் - உடம்பு.
கரியன் - கருமை நிறமானவன்.
இட்டம் - விருப்பம்.
இதனை, `கரியன்` என்பதன் பின்னர்க்கூட்டி, ``இட்டம் நல்லனல்லன்` என குணவினை குணிமேல் நின்றதாக உரைக்க.
``நல்லனல்லன்`` என்பதன்பின், அதனால் என்னும் சொல்லெச்சம் வருவிக்க.
கள் - தேன்.
கள் தங்கிய கணை, மலர்க் கணை.
தன்னை - அவனை.
புள் மேல் தங்கினான் - கருட வாகனத்தின் மேல் வருபவன்; திருமால்.
`அவன் பொன்னார் முடியை உடையவன் ``திருமால் மகன்`` என்பது, ``மன்மதன்`` என்னும் பெயரளவாய் நின்றது.
என்று - என்று தெரிந்து.
பார்க்க - நெற்றிக் கண்ணைத் திறந்து பார்க்க.
பொடிந்தனன் - சாம்பலாயினான்.
`சிவபெருமான் ஒறுப்பது தீயோரையே` என்றபடி.

பண் :

பாடல் எண் : 62

பொடிஏர் தருமே னியனாகிப்
பூசல் புகவடிக்கே
கடிசேர் கணைகுளிப் பக்கண்டு
கோயிற் கருவியில்லா
வடியே படவமை யுங்கணை
யென்ற வரகுணன்தன்
முடி ஏர்தருகழ லம்பலத்
தாடிதன் மொய்கழலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அம்பலத்து ஆடிதன் மொய்கழல்`` என்பதை முதலில் வைத்து உரைக்க.
`வரகுணன்` என்னும் பாண்டியன் மிகுந்த சிவபத்தனாய் இருந்த நிலையில் பகைவர்கள் படையெடுத்து வந்து அவன்மேல் போர் தொடுக்க.
அவன் திருநீற்றையே கவசமாகப் பூசிக்கொண்டு நிராயுதனாய்ப் போர்க்களத்தில் சென்று நிற்கப் பகைவர்கள் விட்ட அம்புகள் அவனை ஒன்றும் செய்யாமல், அவன் காலடியிலே வீழ்ந்தன` என்பது இப்பாட்டுள் கூறப்பட்டது.
இதுவும், இதுபோல இவனது பத்தி மிகுதியை விளக்குவனவாக பதினொன்றாம் திருமுறையில் உள்ள பட்டினத்து அடிகள் பாடலும், திருவிளையாடற் புராணங்களும் கூறும் செய்திகளும் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்ட இருவர் வரகுணருள் ஒருவனுக்கும் அக்கல்வெட்டுக்கள் கூறாமை யால் `கல்வெட்டுக்கள் கூறும் வரகுணர் இருவருள் இப்பாட்டில் குறிக்கப்பட் வரகுணன்` எனச் சிலர் கூறுதல் ஏற்புடையதாய் இல்லை.
எனவே, இவ்வரகுணன் தமிழ் நாட்டில் கல்வெட்டுக்கள் தோன்றுதற்கு முன்னே வாழ்ந்த வரகுணனாவன்.
பொடி - திருநீறு.
ஏர்தரு - அழகைத் தருகின்ற.
பூசல் - போர்; போர்க்களம்.
``அடிக்கு`` என்னும் நான்காவதை ஏழாவதாகத் திரிக்க.
கடி, வடி - கூர்மை.
கோயிற் கருவி - அரண்மனையில் உள்ள படைக் கலங்கள்.
`அவை யில்லாமல்` என்றது.
`அவைகளை எடாமலே` என்றபடி.
அமையும் - ஏற்கும்.
`முடியின் கண்` என ஏழாவது விரிக்க.

பண் :

பாடல் எண் : 63

கழலும் பசுபாசர் ஆம்இமை
யோர்தங் கழல்பணிந்திட்
டழலு மிருக்குந் தருக்குடை
யோர்இடப் பால்வலப்பால்
தழலும் தமருக மும்பிடித்
தாடிசிற் றம்பலத்தைச்
சுழலு மொருகா லிருகால்
வரவல்ல தோன்றல்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``இடப்பால் வலப்பால்`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.
`இடப்பால் தழலும், வலப்பால் தமருகமும்` என நிரல் நிறையாக இயைக்க.
சுழல் வரல் - சுற்றி வருதல், ``சுழலும்`` என்னும் உம்மை `வீழ்ந்து பறிந்து` என இறந்தது தழுவிற்று.
தோன்றல் கள் - பெருமையுடையவர்கள்.
கழலும் பசு பாசம் - பசுக்களைக் கட்டி யுள்ள பாசம் கழலுபவர்.
ஆம் இமையோர் - மக்களின் மேலான வராகிய தேவர்கள்.
தம் கழல் - தமது (சுற்றி வந்தவர்களது) பாதங்கள்.
அழல் - அன்பினால் கண்ணீர் வார நிற்றல்.
``அழல்`` என்னும் தொழிற் பெயர் `அழ` என்னும் செயலென் எச்சப் பொருட்டாய் நின்றது.
உம்மை சிறப்பு.
தருக்கு - பெருமிதம்.
`தில்லையம்பலத்தை வணங்கினோர், தம்மைத் தேவர் வணங்க இருப்பார்கள்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 64

தோன்றலை வெண்மதி தாங்கியைத்
துள்ளிய மாலயற்குத்
தான்தலை பாதங்கள் சார்எரி
யோன்றன்னைச் சார்ந்தவர்க்குத்
தேன்றலை யான்பா லதுகலந்
தாலன்ன சீரனைச்சீர்
வான்தலை நாதனைக் காண்பதென்
றோதில்லை மன்றிடையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தோன்றல் - பெருமையுடையவன்.
துள்ளிய - அகங்கரித்த.
தோன்றல், தாங்கி, சார்வரியோன், சீரன், நாதன் - இவை ஒரு பொருள்மேல் வந்த பல பெயர்கள்.
தேன்தலை - தேனின்கண்.
ஆன்பால் - பசுவின்பால்.
சீர் - தன்மை.
வான் - வானுலகத்திற்கு, தலை நாதன் - மேலான தலைவன்.
``காண்பது`` என்பதற்கு, `இடை விடாது காண்பது` என உரைக்க.

பண் :

பாடல் எண் : 65

மன்றங் கமர்திருச் சிற்றம்
பலவ வடவனத்து
மின்றங் கிடைக் குந்தி நாடக
மாடக்கொல் வெண்தரங்கம்
துன்றங் கிளர்கங்கை யாளைச்
சுடுசினத் தீயரவக்
கன்றங் கடைசடை மேலடை
யாவிட்ட கைதவமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மன்று அங்கு, கன்று அங்கு` என்பவற்றில் வந்த `அங்கு` என்பன அசைகள்.
வட வனம் - திருவாலங்காடு.
`மின் தங்கு இடை` என்றது காளியை.
`இடைக்கு எதிராக` என ஒரு சொல் வருவிக்க.
உந்தி - எழும்பி.
கொல், ஐயம்.
தரங்கம் - அலை.
அம் - அழகு கங்கையாற்றை வெளியில் இருக்கவிடாமல் சடைக்குள் மறைத்து வைத்த கைதவம் (கரவு) காளி எதிரில் நடனம் ஆடுதற் பொருட்டோ` என்றபடி.
இளம் பாம்புகளை, ``கன்று`` என்றது மரபு வழுவமைதி.
``இளநாகமொடு என முளைக்கொம்பவை பூண்டு`` 1 எனத் திருஞானசம்பந்தரும் அருளிச் செய்தார்.
அடைத்தல் - மறைத்தல்.
அடையா இட்ட - அடைத்து வைத்த.
கைதவம் - வஞ் சனை.
சிவபெருமான் திருவாலங்காட்டில் நடனப்போர் செய்தமை மேல்`` அணங்காடகக் குன்ற மாது 1என்னும் பாட்டிலும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 66

தவனைத் தவத்தவர்க் கன்பனைத்
தன்னடி யெற்குதவும்
சிவனைச் சிவக்கத் திரிபுரத்
தைச்சிவந் தானைச்செய்ய
அவனைத் தவளத் திருநீ
றனைப்பெரு நீர்கரந்த
பவனைப் பணியுமின் நும்பண்டை
வல்வினை பற்றறவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`உலகீர்` - என்னும் முன்னிலை வருவித்து, ``நும் வினை பற்றற என எடுத்துக்கொண்டு உரைக்க.
தவன் - தவக்கோலம் உடையன்.
``சிவக்க`` என்றது, `தீயால் சிவந்து தோன்ற` என்றபடி.
சிவந்தான் - கோபித்தான்.
``பெறலின், இழவின், காதலின், வெகுளி யின்`` 2 என்றதனால், வெகுளுதல் இரண்டாம் வேர்றுமை பெறுதலை உணர்க.
`திரிபுரத்தை அவை சிவக்கச் சிவந்தான்` என மாற்றிக் கொள்க.
செய்ய - சிவந்த நிறத்தையுடைய.
பவன் - கருதுவார் கருதும் இடத்தில் தோன்றுபவன்.
``கடி சொல் இல்லைக் காலத்துப் படினே`` 3 என்பதனால் முன்னிலைக்கண் வந்த உம், விகுதியின் பின் `மின்` என்பது விகுதிமேல் விகுதியாய் வந்து, ``பணியுமின்`` என்றாயிற்று.

பண் :

பாடல் எண் : 67

பற்றற முப்புரம் வெந்தது
பைம்பொழில் தில்லைதன்னுள்
செற்றறு மாமணிக் கோயிலின்
நின்றது தேவர்கணம்
சுற்றரு நின்புக ழேத்தித்
திரிவது சூழ்சடையோய்
புற்றர வாட்டித் திரியும்
அதுவொரு புல்லனவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``சூழ் சடையோய்`` என்பதை முதலிற் கொள்க.
சூழ்தல் - சுற்றிலும் சுழலுதல்.
``உனது வெகுளியால் முப்புரம் வெந்தது.
நீ உயர்ந்த மாணிக்கக் கோயிலிலே இருப்பது, தேவர் கூட்டம் உன்னையே புகழ்ந்து திரிவது இவையெல்லாம் உனக்குப் பெருமையைத் தருகின்றன.
ஆயினும், நீ எங்கும் பாம்பாட்டித் திரிவது ஒன்று மட்டும் உனக்குச் சிறுமையைத் தருகின்றது` என்பது இப்பாட்டின் பொருள்.
``திரிவது`` என்பதன், பின் `இவை பெருமைய` என்பது வருவிக்க.
`ஆகையால் அதனை நீ விட்டொழிக` என்பது குறிப்பெச்சம்.
சிவபெருமானுக்கு இவற்றால் எல்லாம் பெருமையோ, சிறுமையோ உண்டாதல் இல்லை` என்பது இதன் உள்ளுறைப் பொருள்.
செல்தரு உயரத்தால் மேகங்களைத் தடுத்து நிறுத்துகின்ற.
சுற்று - எங்கும் பரவிய.
அரு - அருமையான.

பண் :

பாடல் எண் : 68

புல்லறி வின்மற்றைத் தேவரும்
பூம்புலி யூருள்நின்ற
அல்லெறி மாமதிக்
கண்ணியனைப் போலருளுவரே
கல்லெறிந் தானுந்தன்
வாய்நீர் கதிர்முடி மேலுகுத்த
நல்லறி வாளனும் மீளா
வழிசென்று நண்ணினரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி யுரைக்க.
சிவலிங்கத்தின் மேல் மறவாது கல்லெறிந்தவர் சாக்கிய நாயனார்.
சிவலிங்கத்தின் மேல் வாய்நீரை உமிழ்ந்தவர் கண்ணப்ப நாயனார்.
இவ்விருவரும் இச் செயல்களால் தீக்ததியடையாது உள்ளத்து அன்பே காரணமாக, மீளா வழியாகிய வீட்டு நெறியிற் சென்று முத்தியை அடைந்தார்கள்.
செயலை நோக்காது உள்ளத்தை நோக்கி இவ்வாறு அருள்செய்த தேவர் பிறர் இருக்கின்றனரா? என வினவுகின்றார்.
`செயலை விடுத்து உள்ளத்தையறிதல் முற்றறிவுடையானுக்கே கூடும்` என்பதாம்.
அவ் எறி மதி - இராக் காலத்தில் ஒளி வீசுகின்ற திங்கள்.

பண் :

பாடல் எண் : 69

நண்ணிய தீவினை நாசஞ்
செலுத்தி நமனுலகத்
தெண்ணினை நீக்கி இமையோ
ருகலத் திருக்கலுற்றீர்
பெண்ணினொர் பாகத்தன் சிற்றம்
பலத்துப் பெருநடனைக்
கண்ணினை யார்தரக் கண்டுகை
யாரத் தொழுமின்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நாசத்திற் செலுத்து` என ஏழாவது விரிக்க.
நமன் உலகத்து எண் - யமனது உலகத்தைப் பற்றிய நினைவு.
அது விடாத ஆகுபெயராய், அதுபொழுது நிகழும் அச்சத்தைக் குறித்தது.
இருக்கல் உற்றீர் - இருக்க விரும்புபவர்களே! `உங்கள் விருப்பம் நிறைவேற வேண்டுமாயின் நீங்கள் பெருநடனைக் கண்டு தொழுமின்கள்` என்க.
ஆர்தல் - நிரம்புதல்.
அஃதாவது இன்பம் நிரம்புதல்.
`பெண்ணினை` என்பதில் சாரியை நிற்க இரண்டன் உருபு தொகுதல் இலேசினாற் கொள்க.
1 இனி, `பெண்ணினது பாகத்தன்` என ஆறாவது விரித்தலும் அமைவுடையதே.
நடன் - நடனம் ஆடுபவன்.

பண் :

பாடல் எண் : 70

கைச்செல்வ மெய்திட லாமென்று
பின்சென்று கண்குழியல்
பொய்ச்செல்வர் செய்திடும் புன்மைகட்
கேயென்றும் பொன்றலில்லா
அச்செல்வ மெய்திட வேண்டுதி
யேல்தில்லை யம்பலத்துள்
இச்செல்வன் பாதங் கருதிரந்
தேனுன்னை யென்னெஞ்சமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கைச் செல்வம் - கைப் பொருள்.
கருத்து நோக்கி, `பொய்ச் செல்வர் பின் சென்று அவர் செய்திடும் புன்மைகட்குக் கண் குழியல்` என உரைக்க.
கண் குழியல் - கண் குழியற்க.
கண் குழிதல் - பட்டினியால் `கண் குழித்தல்` என்பது பாடம் அன்று.
புன்மைகள் - அற்பச் செயல்.
அவை `இல்லை` எனக் கரத்தலோடு, இகழ்தலையும் செய்தல்.
`புன்மைகட்கு` என்னும் நான்காம் வேற்றுமை உருபை, `புன்மையால்` என மூன்றாவதாகத் திரிக்க.
``வேண்டுதியே`` என்னும் ஏகாரம் தேற்றம்.
இதன்பின், `அதற்கு` என்பது வருவிக்க.
இப் பாட்டின் இறுதியை முதற்பாட்டின் முதலோடு மண்டலிக்க வைத்தமை யின் இவ் அந்தாதி எழுபது பாட்டுக்களோடே முடிக்கப்பட்டதாம்.
அந்தாதிகள் சில இவ்வாறு எழுபது பாட்டோடே முடிதலும் மரபே.
கோயில் திருப்பண்ணியர் விருத்தம் முற்றிற்று.

பண் :

பாடல் எண் : 1

பொன்னி வடகரை சேர்நாரை
யூரிற் புழைக்கைமுக
மன்னன் அறுபத்து மூவர்
பதிதேம் மரபுசெயல்
பன்னஅத் தொண்டத் தொகைவகை
பல்குமந் தாதிதனைச்
சொன்ன மறைக்குல நம்பிபொற்
பாதத் துணைதுணையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டுப் பிற்காலத்தவரால் சிறப்புப் பாயிரமாகச் செய்து சேர்க்கப்பட்டது.
திருத்தொண்டர்களாகிய நாயன்மார்களது வரலாற்றைப் பொதுவாகச் சுட்டும் முறையில் சுந்தர மூர்த்தி நாயனார் பெயரளவாக ஒரு திருப்பதிகத்தில் தொகுத்து அருளிச் செய்தார்.
அதனால் திருத்தொண்டர்களது வரலாற்றுத் தொகையாயிற்று.
அத்திருப்பதிகத்தில் சுட்டப்பட்ட நாயன்மார்களது நாடு, ஊர், குலம், அவர்கள் செய்த தொண்டு இவைகளை ஓரொரு சொல்லால் கூறி ஒருவருக்கு ஒருபாட்டினை அந்தாதியாகச் செய்தமையால் `திருத்தொண்டர் திருவந்தாதி` எனப் பெயர்பெற்ற இவ்வந்தாதி நாயன்மார்களது வரலாற்று வகையாயிற்று.
இவைகளையும், `இதை அருளிச் செய்தவர் திருநாரையூர் நம்பிகள் என்பதையும், இவர் அத்தலத்து விநாயகர் திருவருளைப் பெற்ற திருவருட் செல்வர்` என்பதையும் இப்பாட்டுக் கூறிற்று.
`ஆண்டார்` என்பது ஒரு காலத்தில் ஆதி சைவர்களைக் குறிக்கும் சிறப்புப் பெயராய் வழங்கிற்று ஆகலின், `நம்பியாண்டார்` என்பதே இவரது பெயராயிற்று.
இதற்கு மேலும் இவரது சிறப்பைக் குறிப்பதாக `நம்பி` என்பதைச் சேர்த்து, `நம்பியாண்டார் நம்பிகள்` என வழங்குவர்.
`நாயன்மார்களது ஊர், குலம், தொண்டு இவைகளைத் திருநாரையூர் விநாயகர் சொல்ல இவர் பாடினார்` என இப்பாட்டுக் கூறுகின்றது.
இதனை வைத்துத் திருமுறை கண்ட புராணமும் இவ்வாறே கூறிற்று.
1 இதனை ஆராய்ச்சியாளர் `நம்பிகள் விநாயகப் பெருமானது திருவருளைப் பெற்ற திருவட்செல்வர்` - என்னும் அளவில் கொள் கின்றனர்.
`இத் திருவந்தாதியைச் சேக்கிழார் திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகத்தோடு ஒத்த அருளாசிரியத் திருமொழியாகக் கொண்டே திருத்தொண்டர் வரலாற்று விரியைத் தாம் அருளிச் செய்தார்` என்பதை, அந்த மெய்ப்பதி கத்து அடி யார்களை
நந்தம் நாதனாம் நம்பியாண் டார்நம்பி
புந்தி யாரப் புகன்ற வகையினால்
வந்த வாறு வழாமல் இயம்புவாம்
எனக் கூறியவாற்றால் அறிகின்றோம்.
`நாதன்` என்பது அருளா சிரியரைக் குறிக்கும் சொல்.
இதன்கண் சேக்கிழார், ``புந்தி ஆரப்புகன்ற வகை`` என்றதன்றி, `விநாயகர் சொல்லிய வகைப்படி`` எனக் கூறாமை நோக்கத் தக்கது.
வகை நூலாகிய இதன் விரியே திருத்தொண்டர் புராணம் ஆகலின், இவ்வந்தாதிப் பாடல்களின் விரி பொருள் அப்புராணத் திலே காணத்தக்கது.
இங்கு அவற்றைத் தந்துரைத்தல் மிகையாகும்.

பண் :

பாடல் எண் : 2

செப்பத் தகுபுகழ்த் தில்லைப்
பதியிற் செழுமறையோர்
ஒப்பப் புவனங்கள் மூன்றினும்
உம்பரின் ஊர்எரித்த
அப்பர்க் கமுதத் திருநடர்க்
கந்திப் பிறையணிந்த
துப்பர்க் குரிமைத் தொழில்புரி
வோர்தமைச் சொல்லுதுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

புவனங்கள் மூன்றினும் ஒப்ப உம்பரின் ஊர் - மூவுலகங்களிலும் ஒருபடித்தாக மேலே திரிந்த ஊர்கள்; திரிபுரம்.
அமுதத் திருநடம் - அமுதம்போல இறப்பினை நீக்கிப் பேரானந் தத்தைத் தருகின்ற நடனம்.
நடர் - நடனமாடுபவர்.
துப்பர் - தூயவர்.
உரிமைத்தொழில் - அகம்படித் தொண்டு; அணுக்கத் தொண்டு; வழிபாடு.
சொல்லுதும் - துதிப்போம்.

பண் :

பாடல் எண் : 3

சொல்லச் சிவன்திரு வாணைதன்
தூமொழி தோள்நசையை
ஒல்லைத் துறந்துரு மூத்தர்
பின்னுமை கோனருளால்
வில்லை புரைநுத லாளோ
டிளமைபெற் றின்பமிக்கான்
தில்லைத் திருநீல கண்டக்
குயவனாம் செய்தவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சிவன் திரு ஆணை சொல்ல` எனக் கூட்டுக.
சிவன் ஆணை - சிவன்மேல் ஆணை.
`தூய மொழியினையுடையாள்` என்னும் பொருட்டாகிய ``தூமொழி`` என்பது ``துணைவி`` என்னும் பொருட்டாய் நின்றது.
நசை - விருப்பம்.
ஒல்லை - விரைவாக; அப்பொழுதே.

பண் :

பாடல் எண் : 4

செய்தவர் வேண்டிய தியாதுங்
கொடுப்பச் சிவன் தவனாய்க்
கைதவம் பேசிநின் காதலி
யைத்தரு கென்றலுமே
மைதிகழ் கண்ணியை யீந்தவன்
வாய்ந்த பெரும்புகழ்வந்
தெய்திய காவிரிப் பூம்பட்டி
னத்துள் இயற்பகையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

செய் தவர் - தவம் செய்பவர்; சிவனடியார்கள் கொடுப்ப - கொடுத்துவரும் நாட்களில்.
கைதவம் - வஞ்சனை; தூர்த்தர் பேசுவது போலப் பேசியது.
``காவிரிப்பூம்பட்டினம்`` என்றதனானே `வணிகர்` என்பது பெறப்படும் என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 5

இயலா விடைச் சென்ற மாதவற்
கின்னமு தாவிதைத்த
வயலார் முளைவித்து வாரி
மனையலக் கால்வறுத்துச்
செயலார் பயிர்விழுத் தீங்கறி
யாக்குமவன் செழுநீர்க்
கயலார் இளையான் குடியுடை
மாறனெங் கற்பகமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இயலா இடை - யாதும் செய்ய இயலாத காலம்.
அது வறுமை நிலையும் பாதி இரவும், மழைப் பெயலும் ஆகிய காலம்.
மாதவன் - சிவனடியான்.
வித்து- விதை.
மனை அலக்கு - வீட்டுக் கூரையாயிருந்த கழிகள்.
செயல் ஆர் பயிர் - வீட்டுப் புழைக்கடையில் அப்பொழுது தான் சிறிதே வளர்ந்த கீரைப்பயிர்.
விழு - விழுப்பம்; மேன்மை.
தீ - இனிமை; இளையான்குடி, ஊர்.
இஃது எந்த நாட்டில் உள்ள என்பது துணியப்படவில்லை.

பண் :

பாடல் எண் : 6

கற்றநன் மெய்த்தவன் போலொரு
பொய்த்தவன் காய்சினத்தால்
செற்றவன் தன்னை யவனைச்
செறப்புக லுந்திருவாய்
மற்றவன் தத்தாநமரே
யெனச் சொல்லி வானுலகம்
பெற்றவன் சேதிபன் மெயப்பொரு
ளாமென்று பேசுவரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தன்னைக் காய் சினத்தால் செற்றவன் நன்மெய்த் தவன் போல் ஒரு பொய்த்தவன்.
அவனை எனக் கூட்டுக.
``போல் பொய்த்தவன்`` என்பது, `போல்கின்ற பொய்த்தவன்` என வினைத் தொகை.
இவன் `முத்த நாதன்` என்னும் பெயரினனாகிய பகையரசன்.
செற- கொல்ல - புகுந்தவன் `தத்தன்` என்னும் காவலாளி - என்பது பின்பு, `தத்தா` என்றதனால் விளங்குகின்றது.
`திருவாயால்` எனவும், `மற்று அவனை` எனவும் உருபுகள் விரித்து, ``சொல்லி`` என்பதன்பின் `தடுத்து` என ஒரு சொல் வருவிக்க.
மற்று, வினை மாற்று.
சேதிபன் - சேதி நாட்டு அரசன்.
சேதிநாடு - திருமுனைப்பாடி நாடாகிய மலையமான் நாடு.

பண் :

பாடல் எண் : 7

பேசும் பெருமையவ் வாரூ
ரனையும் பிரானவனாம்
ஈசன் தனையும் புறகுதட்
டென்றவ னீசனுக்கே
நேச னெனக்கும் பிரான்மனைக்
கேபுக நீடுதென்றல்
வீசும் பொழில்திருச் செங்குன்றம்
மேய விறன்மிண்டேனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஆரூரன், சுந்தரமூர்த்தி நாயனார்.
பிரான், திருவாரூர்ச் சிவபெருமான்.
தட்டு - தடை; தடுக்கப்பட்ட இடம்.
புறகு தட்டு - புறம்பாகிய தடுக்கப்பட்ட இடம்.
புறகாகிய இடத்தில் உள்ளவர்களை, ``புறகு தட்டு`` என்றது உபசாரம்.
`புறம்பாகிய இடத்தில் உள்ளவர்களை` என்றது `எம்மவரன்றி, அயலார்` என்றபடி.
`புறகு தட்டு` என்று சொல்லியே ஈசனுக்கு நேசன் ஆயினான்; எனக்கும் பிரான் (தலைவன்) ஆயினான் என்பதாம்.
திருச்செங் குன்றம், மலை நாட்டில் உள்ளது.

பண் :

பாடல் எண் : 8

மிண்டும் பொழில்பழை யாறை
அமர்நீதி வெண்பொடியின்
முண்டந் தரித்த பிராற்குநல்
லூரின்முன் கோவணம்நேர்
கொண்டிங் கருளென்று தன்பெருஞ்
செல்வமுந் தன்னையுந்தன்
துண்ட மதிநுத லாளையும்
ஈந்த தொழிலினனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மிண்டு - நெருங்கிய.
பொழில் - சோலை.
பழையாறை ஒரு பெருநகரம்.
இஃது இடைக் காலத்தில் பல ஆண்டுகள் சோழர்களுக்கு உறைவிடமாய் இருந்தது.
வெண்பொடி - திருநீறு.
முண்டம் - நெற்றி.
தரித்த - தாங்கிய .
வெண்பொடியணிந்த முண்டத்தைத் தரித்த பிரான் சிவன்.
நல்லூர் பழையாறைப்பெருநகரின் ஒரு பகுதி.
கோவணம் நேர் கொண்டு - கோவணத்திற்குச் சம எடையாக ஏற்று.
இங்கு அருள் - இப்பொழுது அருள் புரிவாயாக, `மதிநுதலார்` என்பது, `துணைவி` எனப் பொருள்தந்து நின்றது.
`தொழில்` என்பது,தொண்டினைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 9

தொழுதும் வணங்கியும் மாலயன்
தேடருஞ் சோதிசென்றாங்
கெழுதுந் தமிழ்ப்பழ வாவணங்
காட்டி யெனக்குன்குடி
முழுதும் அடிமைவந் தாட்செ
யெனப்பெற்ற வன்முரல்தேன்
ஒழுகும் மலரின்நற் றாரெம்பி
ரான்நம்பி யாரூரனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகத்தின் வகை யாகிய இவ்வாந்தாதியில் அத்திருப்பதிகத்தின் ஒவ்வொரு பாட்டிலும் சுந்தர மூர்த்தி நாயனார் தம்மைக் குறித்தருளினார் ஆகலின் அவரது வரலாற்றிற்குத் தனி ஒரு பாட்டே அமைத்துப் போகாமல், ஒவ்வொரு பாட்டிலும் சொல்லப்பட்ட அடியார்களைப் பற்றிக் கூறி முடித்தபின், சுந்தரரைப் பற்றிய பாட்டுக்களை அமைத்தருளினார்.
பின்பு இதன் விரிபாடிய சேக்கிழார் நாயனார் ஒரு பாட்டில் உள்ள நாயன்மார்களது வரலாறுகளை ஒரு சருக்கமாகத் தொகுத்தருளினார்.
தொழுதல் - கும்பிடுதல்.
வணங்கல் - வீழ்ந்து வணங்குதல்.
`வணங்கியும் அருஞ் சோதி` என வேறாக்கி முடிக்க.
முரலுதற்கு `வண்டு` என்னும் எழுவாய் வருவிக்க.
ஒழுகும் - ஒழுகுதற்கு முதலாகிய.
மலர், தாமரை மலர்.
தார் - மாலை.

பண் :

பாடல் எண் : 10

ஊர்மதில் மூன்றட்ட வுத்தமற்
கென் றோருயர்தவத்தோன்
தார்மலர் கொய்யா வருபவன்
தண்டின் மலர்பறித்த
ஊர்மலை மேற்கொள்ளும் பாக
ருடல்துணி யாக்குமவன்
ஏர்மலி மாமதில் சூழ்கரு
வூரில் எறிபத்தனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஊர் மதில் - வானத்தில் திரிகின்ற கோட்டைகள்.
உயர் தவத்தோன் `சிவகாமியாண்டார்` என்பவர்.
உத்தமற்கு - என்று மலர் கொய்யா (கொய்து) வருபவன்` என்க.
ஊர் - ஊரத்தக்க மலைபோலும் யானை.
மலையினதும், பாகரதும் ஆகிய உடல்களைத் துணி ஆக்கும் அவன் என உரைக்க.
இவரது மரபு அறியப்படவில்லை.

பண் :

பாடல் எண் : 11

பத்தனை யேனாதி நாதனைப்
பார்நீ டெயினைதன்னுள்
அத்தனைத் தன்னோ டமர்மலைந்
தான்நெற்றி நீறுகண்டு
கைத்தனி வாள்வீ டொழிந்தவன்
கண்டிப்ப நின்றருளும்
நித்தனை யீழக் குலதீப
னென்பரிந் நீள்நிலத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எயினை - எயினனூர்.
`ஒழிந்து, அவன் கண்டிப்ப நின்றருளும் நித்தன்` என்க.
ஈழக் குலம் - ஈழச் சான்றார் குலம்.

பண் :

பாடல் எண் : 12

நிலத்தில் திகழ்திருக் காளத்தி
யார்திரு நெற்றியின்மேல்
நலத்தில் பொழிதரு கண்ணில்
குருதிகண் டுள்நடுங்கி
வலத்திற் கடுங்கணை யால்தன்
மலர்க்கண் ணிடந்தப்பினான்
குலத்திற் கிராதன்நங் கண்ணப்ப
னாமென்று கூறுவரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இந்நாயனார் வரலாறு மேற்போந்த இரு திருக்கண்ணப்ப தேவர் திருமறங்களிலும் சொல்லப்பட்டது

பண் :

பாடல் எண் : 13

ஏய்ந்த கயிறுதன் கண்டத்திற்
பூட்டி எழிற்பனந்தாள்
சாய்ந்த சிவன்நிலைத் தானென்பர்
காதலி தாலிகொடுத்
தாய்ந்தநற் குங்குலி யங்கொண்
டனற்புகை காலனைமுன்
காய்ந்த அரற்கிட்ட தென்கட
வூரிர் கலயனையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்டம் - கழுத்து.
`சிவனை நிலைப்பித்தான்` என்ப தில் இரண்டன் உருபும், பிறவினை விகுதியும் தொகுக்கப்பட்டன.
`கொடுத்துக்கொண்டு` என இயையும்.
காலனைக் காய்ந்த அரன்.
திருக்கடவூர்ப் பெருமான்.

பண் :

பாடல் எண் : 14

கலச முலைக்கன்னி காதற்
புதல்வி கமழ்குழலை
நலசெய் தவத்தவன் பஞ்ச
வடிக்கிவை நல்கெனலும்
அலசு மெனக்கரு தாதவள்
கூந்தல் அரிந்தளித்தான்
மலைசெய் மதிற்கஞ்சை மானக்கஞ்
சாற னென்னும் வள்ளலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கன்னியாகிய புதல்வி` என்க.
`நல்ல` என்பது இடைக்குறைந்து நின்றது.
பஞ்சவடி.
மாவிரத மதத்தினர் மார்பில் அணியும் மயிர்க்கயிறு.
அலசும் - (மகள்) வருந்துவாள்.
கஞ்சை - கஞ்சாறூர்.

பண் :

பாடல் எண் : 15

வள்ளற் பிராற்கமு தேந்தி
வருவோ னுகலுமிங்கே
வெள்ளச் சடையா யமுதுசெய்
யாவிடி லென்தலையைத்
தள்ளத் தகுமென்று வாட்பூட்
டியதடங் கையினன்காண்
அள்ளற் பழனக் கணமங்
கலத்தரி வாட்டாயனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வள்ளற் பிரான் - சிவபெருமான்.
அமுது - நிவேதன அமுது.
உகலும் - தவறிக் கீழ் கொட்டிப்போன பொழுது.
கண மங்கலம்.
ஊர்.

பண் :

பாடல் எண் : 16

தாயவன் யாவுக்கும் தாழ்சடை
மேல்தனித் திங்கள்வைத்த
தூயவன் பாதம் தொடர்ந்து
தொல்சீர்த்துளை யாற்பரவும்
வேயவன் மேல்மழ நாட்டு
விரிபுனல் மங்கலக்கோன்
ஆயவன் ஆனாய னென்னை
யுவந்தாண் டருளினனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தாயவர் - தாய்போன்றவன்.
துளை - துளைக் கருவி.
வேய் - மூங்கில்.
`துளையால் தொடர்ந்து பரவும் வேயவன்` என்க.
பரவுதல் - துதித்தல்.
மங்கலம், ஊர்.
`ஆன் ஆயன் - பசுக்களை மேய்க்கும் இடையன்.

பண் :

பாடல் எண் : 17

அருட்டுறை யத்தற் கடிமைபட்
டேனினி யல்லனென்னும்
பொருட்டுறை யாவதென் னேயென்ன
வல்லவன் பூங்குவளை
இருட்டுறை நீர்வயல் நாவற்
பதிக்கும் பிரானடைந்தோர்
மருட்டுறை நீக்கிநல் வான்வழி
காட்டிட வல்லவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதன் முதல் இரண்டடிகள் ``பித்தா பிறை சூடி`` எனத் தொடங்கும் திருப்பதிகத்தின் பொருளை உணர்த்தி நின்றன.
குவளை மலர்கள் கருநிறத்தன ஆகலின் அவற்றை இருட்டாக உருவகம் செய்தார்.
நாவல், திருநாவலூர்.

பண் :

பாடல் எண் : 18

அவந்திரி குண்டம ணாவதின்
மாள்வனென் றன்றாலவாய்ச்
சிவன்திரு மேனிக்குச் செஞ்சந்
தனமாச் செழுமுழங்கை
உவந்தொளிர் பறையில் தேய்த்துல
காண்டவொண் மூர்த்திதன்னூர்
நிவந்தபொன் மாட மதுரா
புரியென்னும் நீள்பதியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குண்டு அமண் ஆவதில் மாள்வன் - கீழான சமண் சமயத்து அரசன் வழிபட்டு எனது பணியை ஒழிப்பதைவிட இறந்துபடுவேன்.
நிவந்த - ஓங்கிய.

பண் :

பாடல் எண் : 19

பதிகந் திகழ்தரு பஞ்சாக்
கரம்பயில் நாவினன்சீர்
மதியஞ் சடையாற் கலர்தொட்
டணிபவன் யான்மகிழ்ந்து
துதியங் கழல்சண்பை நாதற்குத்
தோழன்வன் றொண்டனம்பொன்
அதிகம் பெறும்புக லூர்முரு
கன்னெனும் அந்தணனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பதிகம் - திருமுறைத் திருப்பதிகங்கள்.
பதிகந்திகழ்தரு பஞ்சாக்கரம் என்க.
மலர் தொட்டு - பூக்களை மாலையாகத் தொடுத்து.
சண்பை நாதன், திருஞானசம்பந்தர்.
வன்றொண்டன், சுந்தரமூர்த்தி நாயனார், இவர் திருப்புகலூரில் பொன் பெற்ற வரலாற்றைப் பெரியபுராணத்துட் காண்க.

பண் :

பாடல் எண் : 20

அந்தாழ் புனல்தன்னி லல்லும்
பகலும்நின் றாதரத்தால்
உந்தாத அன்பொடு ருத்திரஞ்
சொல்லிக் கருத்தமைந்த
பைந்தா ருருத்ர பசுபதி
தன்னற் பதிவயற்கே
நந்தார் திருத்தலை யூரென்
றுரைப்பரிந் நானிலத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அம் - அழகிய.
தாழ்புனல் - ஆழமான நீர்.
ஆதரம்- விருப்பம்; உந்தாத - வெளிப்போக்காத.
உருத்திரம் - சீருத்திரம்.
இஃது எசுர் வேதத்தின் ஒரு பகுதியாய் உள்ளது.
இன்றும் சிவாலயங்களில் சிறப்பாக ஓதப்பட்டு வருவது.
வயற்கு - வயல்களில்.
நந்து ஆர் - சங்குகள் நிறைந்த.

பண் :

பாடல் எண் : 21

நாவார் புகழ்த்தில்லை யம்பலத்
தானருள் பெற்றுநாளைப்
போவா னாவனாம் புறத்திருத்
தொண்டன்தன் புன்புலைபோய்
மூவா யிரவர்கை கூப்ப
முனியா யவன்பதிதான்
மாவார் பொழில்திக ழாதனூ
ரென்பரிம் மண்டலத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

புறம் - நான்கு வருணங்கட்கும் புறமான சாதி.
அதனால் கோயில்களிலும் புறத்தே நிற்பவர்.
புன்புலை - கீழான புலைச் சாதியில் பிறந்த உடம்பு.
``போய்`` என்பதை, `போக` எனத் திரிக்க.
பதி - ஊர்.

பண் :

பாடல் எண் : 22

மண்டும் புனற்சடை யாந்தமர்
தூசெற்றி வாட்டுவகை
விண்டு மழைமுகில் வீடா
தொழியின்யான் வீவனென்னா
முண்டம் படர்பாறை முட்டு
மெழிலார் திருக்குறிப்புத்
தொண்டன் குலங்கச்சி யேகா
லியர்தங்கள் தொல்குலமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மண்டும் - நிறைந்த.
தமர் - அடியார்.
தூசு - ஆடை.
எற்றுதல் - அழுக்குப் போகத் துவைத்தல்.
வாட்டும் வகை - உலர்த்தும் படி.
விண்டு - நீங்கி.
`மழை முகில் விண்டு வீடாது எனின்` மாற்றுக.
`விண்டு வீடாது` ஒருபொருட் பன்மொழி.
வீவன் - இறப்பன்.
முண்டம் - நெற்றி.
படர் - அகன்ற.
முட்டும் - மோதிய.

பண் :

பாடல் எண் : 23

குலமே றியசேய்ஞலூரிற்
குரிசில் குரைகடல்சூழ்
தலமே றியவிறற் சண்டிகண்
டீர்தந்தை தாளிரண்டும்
வலமே றியமழு வாலெறிந்
தீசன் மணிமுடிமேல்
நலமே றியபால் சொரிந்தலர்
சூட்டிய நன்னிதியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குலம் ஏறிய - குலத்தால் உயர்ந்த; `அந்தணன் ஆகிய` குரிசில் என்க.
குரிசில் - தலைவன்.
விறல் - வெற்றி.
இஃது இதனால் உண்டாகிய புகழைக் குறித்தது.
கண்டீர், முன்னிலையசை.
வலம் - வலக்கை.
`எறிந்தும்` என உம்மை விரித்து, `எறிந்த பின்னும்` என உரைக்க.

பண் :

பாடல் எண் : 24

நிதியார் துருத்திதென் வேள்விக்
குடியாய் நினைமறந்த
மதியேற் கறிகுறி வைத்த
புகர்பின்னை மாற்றிடென்று
துதியா வருள்சொன்ன வாறறி
வாரிடைப் பெற்றவன்காண்
நதியார் புனல்வயல் நாவலர்
கோனென்னும் நற்றவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

துருத்தி, வேள்விக்குடி இவையிரண்டும் சோழ நாட்டு இரண்டு தலங்கள்.
இவைகளில் துருத்தி, இப்பொழுது `குத்தாலம்` என வழங்குகின்றது.
இதில் உள்ள சிவபெருமான் பெயரே, `சொன்னவாறறிவார்` என்பது.
வேள்விக்குடியாய் - வேள்விக்குடியில் எழுந்தருளியுள்ளவனே.
அறிகுறி வைத்த புகர்.
அடையாளமாக நீ உண்டாக்கிய உடல்நோய்.
துதியா - துதித்து.
`அருள் பெற்றவன்` என இயைக்க.
காண்.
முன்னிலையசை.
`வைத்து` என்பது பாடமன்று.

பண் :

பாடல் எண் : 25

நற்றவன் நல்லூர்ச் சிவன்திருப்
பாதந்தன் சென்னிவைக்கப்
பெற்றவன் மற்றிப் பிறப்பற
வீரட்டர் பெய்கழற்றாள்
உற்றவ னுற்ற விடம்அடை
யாரிட வொள்ளமுதாத்
துற்றவன் ஆமூரில் நாவுக்
கரசெனுந் தூமணியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஆமூரில் நாவுக்கரசெனும் தூமணி` என்பதை ``நற்றவன்`` என்பதன் பின்னர்க் கூட்டி, செய்யுள் பற்றி முறை பிறழ வைக்கப்பட்ட நல்லூர்ச் சிவன் திருப்பாதம் தன் சென்னி வைக்கப் பெற்றவன்`` என்பது ``துற்றவன்`` என்பதன் பின்னர் வைத்து உரைக்க.
நல்லூர், தலம்.
உற்ற விடம் - சமணர் கருத்தில பொருந்திய நஞ்சு.
அடையார் - பகைவர்; சமணர்.
`நிறைதல்` எனப் பொருள் தரும் `துறு` என்னும் முதனிலை உண்டலையும் குறிக்குமாதலின், ``துற்றவன்`` என்பது, `உண்டவன்` எனப் பொருள்தந்தது.
``அமுதா உண்டவன்`` என்றதனால் அவ்விடத்தால் தீங்கின்றியிருந்தமை கூறப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 26

மணியினை மாமறைக் காட்டு
மருந்தினை வண்மொழியால்
திணியன நீள்கத வந்திறப்
பித்தன தெண்கடலில்
பிணியன கல்மிதப் பித்தன
சைவப் பெருநெறிக்கே
அணியன நாவுக் கரையர்
பிரான்தன் அருந்தமிழே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மணி`` என்றதும், ``மருந்து`` என்றதும் திருமறைக் காட்டுப் பெருமானை.
திறப்பித்தன - திறக்க வைத்தன.
பிணி கல், `பிணிக்கப்பட்ட கல்` எனச் செயப்படுபொருள்மேல் தொக்க வினைத் தொகை.
`அந்த` என்னும் கூட்டுப் பொருளைத் தரும் `அன்ன` என்பது இடைக்குறைந்து நின்றது.
`கல்லை` என இரண்டாவது விரிக்க.
அணி- அணிகலம்.
அணியன - அணிபோல்வன.
`பலரது உள்ளங்களையும் கவரச் செய்வன` என்றபடி.
நாயனாரை, ``நாவுக்கரையர் பிரான்`` எனப் போற்றி, வரலாற்றுக்கிடையே அவரது திருப்பதிகங்களை ``சைவப் பெருநெறிக்கு அணி`` எனவும், `செயற்கரியவற்றைச் செய்த அருந்தமிழ்` எனவும் எடுத்தோதியருளிய அருமை அறியற்பாலது.

பண் :

பாடல் எண் : 27

அருந்தமி ழாகரன் வாதி
லமணைக் கழுநுதிமேல்
இருந்தமிழ் நாட்டிடை யேற்றுவித்
தோனெழிற் சங்கம்வைத்த
பெரும்தமிழ் மீனவன் தன்அதி
காரி பிரசமல்கு
குருந்தவிழ் சாரல் மணமேற்
குடிமன் குலச்சிறையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஆகரம் - இருப்பிடம், தமிழ் ஆகரன் - தமிழுக்கு இருப்பிடமானவர்; திருஞானசம்பந்தர்.
`அவர் செய்த வாதில் என்க` வாது என்றது வாதத்தின் முடிவை.
அமண் - சமணக் கூட்டம்.
நுதி - நுனி.
இருந்தமிழ் - பெருமைமிக்க தமிழ்; செந்தமிழ் ``தமிழ் நாட்டடை ஏற்றுவித்தோன்`` என்றாராயினும் `தமிழ் நாட்டிடை யிருந்த அமணை ஏற்று வித்தான்` என்றலே கருத்து என்க.
ஏற்றுவித்தது, அரசன் ஆணையால் ஏவலரைக் கொண்டு நிறைவேற்றியது.
பாண்டியன் இந்நாயனார் காலத்துப் பாண்டியன் நெல்வேலி வென்ற நெடுமாறன்.
`கூன் பாண்டியன்` என்றும் சொல்லப் படுவான்.
முன்னோர் சங்கம் வைத்த செயலை அவர் மரபின் வந்த உரிமை பற்றி இவன்மேல் வைத்துக் கூறினார்.
``மதுரைத் தொகை ஆக்கினான்`` 1 என இவ்வாறே ஞானசம்பந்தரும் அருளிச்செய்தார்.
சங்கம் புதிதாக வையாவிடினும் சங்கத்தைப் புரந்த செயல் இவனுக்கும் உண்டு என்க.
``அதிகாரி`` என்றது அமைச்சனை.
ஒட்டக்கூத்தரது தக்க யாகப் பரணியில் ``அதிகாரி`` என்னும் சொல் மட்டுமே காணப் படுகின்றது.
மணமேற் குடி - ஊர்.
மன் - தலைவன்.
இந்நாயனாரது மரபு அறியப் படவில்லை.

பண் :

பாடல் எண் : 28

சிறைநன் புனல்திரு நாவலூ
ராளி செழுங்கயிலைக்
கிறைநன் கழல்நாளை யெய்து
மிவனருள் போற்றவின்றே
பிறைநன் முடிய னடியடை
வேனென் றுடல்பிரிந்தான்
பிறைநன் மலர்த்தார் மிழலைக்
குறும்ப னெனுநம்பியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நாவலூராளி, சுந்தரமூர்த்தி நாயனார்.
`அவர் நாளைக் கயிலை செல்லப்போகிறார்` என்பதை இவர் தம் யோகக் காட்சியால் அறிந்து முன்னாளே யோகத்தால் உடலை விட்டுப் பிரிந்து கயிலை சேர்ந்தார்.
பெருமிழலை, ஊர்.
குறும்பர் - சிற்றரசர்.
`குறும்பர்` என்பது `சிற்றரசர்` எனப் பொருள் தரும்.
எனினும், `சிர்றசராய் இருப்போர் தனியொரு மரபினர் அல்லர் என்பதனாற்போலும் இந்நாயனாரும் மரபறியா அடியார்களுள் ஒருவராகச் சொல்லப் பட்டார்.

பண் :

பாடல் எண் : 29

நம்பன் திருமலை நான்மிதி
யேனென்று தாளிரண்டும்
உம்பர் மிசைத்தலை யால்நடந்
தேற வுமைநகலும்
செம்பொன் னுருவனெ ன்அம்மை
யெனப்பெற் றவள்செழுந்தேன்
கொம்பி னுகுகாரைக் காலினின்
மேய குலதனமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``செழுந்தேன்`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.
காரைக்கால் ஊர்.
குலம் தனம் - பிறந்த குலத்திற்குச் செல்வம் போன்றவள்.
நம்பன், செம்பொன் உருவன் - சிவபெருமான்.
உம்பர்- ஆகாயம்.
மிசை, ஏழன் உருபு.
`மிசையாக` என ஆக்கம் வருவிக்க.
தலைகீழாக நடந்து வருவதைப் பார்த்து உமாதேவி சிரித்தாள்.
அம்மை - தாய்.
தாய்போல அன்பு செலுத்தி உபசரிப்பவள்.
உபசரித்தல் சங்கம வடிவில்.
எனப் பெற்றவள் - என்று சொல்லும் பேற்றினைப் பெற்றவள்.

பண் :

பாடல் எண் : 30

தனமா வதுதிரு நாவுக்கரசின்
சரண மென்னா
மனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத்
தாங்கவன் வண்டமிழ்க்கே
இனமாத் தனது பெயரிடப் பெற்றவ
னெங்கள் பிரான்
அனமார் வயல்திங்க ளூரினில்
வேதியன் அப்பூதியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

புனற் பந்தர் - தண்ணீர்ப் பந்தல் ``வாழ்த்தி`` என்பதை, ``என்னா`` என்பதன் பின்னர்க் கூட்டுக.
இனம் - அடிமையினம்.
`திங்களூர்` ஊர்ப்பெயர்.
தனது பெயர் - திருநாவுகரசரது பெயர்.
இடப் பெற்றவன் - இட்டப் பேற்றினைப் பெற்றவன்.

பண் :

பாடல் எண் : 31

பூதிப் புயத்தர் புயத்தில்
சிலந்தி புகலுமஞ்சி
ஊதித் துமிந்த மனைவியை
நீப்பவுப் பாலவெல்லாம்
பேதித் தெழுந்தன காணென்று
பிஞ்ஞகன் கேட்டுமவன்
நீதித் திகழ்சாத்தை நீலநக்
கன்னெனும் வேதியனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பூதி - விபூதி.
பூதிப்புயத்தர், விபூதியையணிந்த தோள்களையுடையவர் சிவபெருமான் என்றது சிவலிங்கத்தை.
புயம்- தோள்; மேல் இடம்.
`உடம்பின்மேல் சிலந்தி விழுந்தால், அது விழுந்த இடத்தில் கொப்புளம் உண்டாகிவிடும்` என்பர்.
அப்படிக் கொப்புளம் உண்டாகாதிருக்க உடனே வாய் எச்சிலைத் துமிந்து கையால் தேய்ப்பது வழக்கம்.
அப்படி மனைவியார் செய்தார்.
`அஃது அநுசிதம்` என்று நாயனார் அவரைத் துறந்தார்.
உப்பால - துமியப்படாத இடங்கள்.
பேதித்தல் - வேறுபடுதல்.
``பேதித்து`` என்பதை `பேதிக்க` எனத் திரிக்க.
`கொப்புளம் எழுந்தனவற்றைக் காண்க` என உணரக் காட்டியது கனவில்.
சாத்தை - சாத்த மங்கலம்; ஊர்.

பண் :

பாடல் எண் : 32

வேத மறிகரத் தாரூர்
அரற்குவிளக்கு நெய்யைத்
தீது செறியமண் கையரட்
டாவிடத் தெண்புனலால்
ஏத முறுக வருகரென்
றன்று விளக்கெரித்தான்
நாதன் எழிலேமப் பேறூ
ரதிபன் நமிநந்தியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மறி - மான் கன்று.
சிவபெருமானது சாங்க உபாங் கங்களை வேதமாக உபசரித்தல் மரபாதல் பற்றி, ``வேதமறி`` என்றார்.
வேதத்தை அரனுக்கு அடையாக்கலும் ஆம்.
கையர் - வஞ்சகர்; உள்ளதை `இல்லை` எனக் கரந்தவர்.
அட்டாவிட - வார்க்காமல் மறுக்க.
ஏதம் - குற்றம்; பாவம்.
நாதன் நமிநந்தி எம் தலைவனாகிய நமிநந்தி.
ஏமப்பேறூர், ஊர்.

பண் :

பாடல் எண் : 33

நந்திக்கும் நம்பெரு மாற்குநல்
லாரூரில் நாயகற்குப்
பந்திப் பரியன செந்தமிழ்
பாடிப் படர்புனலில்
சிந்திப் பரியன சேவடி
பெற்றவன் சேவடியே
வந்திப் பவன்பெயர் வன்றொண்ட
னென்பரிவ் வையகத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நந்தி` என்பதும் சிவபெருமானுக்கே பெயர்.
பந்திப் பரியன - செய்யுளாக யாத்தற்கு அரியன.
செந்தமிழ்.
அதனாலாகிய பாடல்களுக்கு ஆகுபெயர்.
படல் புனல், காவிரியாற்றில் ஓடிய வெள்ளம்.
சேவடி, திருஐயாற்றுப் பெருமானது திருவடிகள்.
அவற்றைப் பெற்றமையாவது, வெள்ளம் இருபாலும் ஒதுங்கி வழி விடப் பெற்றமை.
`சேவடி பெற்று, அவன் சேவடியே வந்திருப்பவன்` என்க.

பண் :

பாடல் எண் : 34

வைய மகிழயாம் வாழ
வமணர்வலி தொலைய
ஐயன் பிரம புரத்தரற் கம்மென்
குதலைச் செவ்வாய்
பைய மிழற்றும் பருவத்துப்
பாடப் பருப்பதத்தின்
தைய லருள்பெற் றனனென்பர்
ஞானசம் பந்தனையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

யாம் - சைவர்கள்.
பிரமபுரம் - சீகாழி.
`அரற்கு பாட என இயையும்.
பாட - பாடும் படி.
`அம் வாய், குதலை வாய், செவ்வாய்` எனத் தனித்தனி இயைக்க.
அம் - அழகு.
பருவம், குழவிப் பருவம்.
``குழிப் பருவத்தில் தையல் அருள் பெற்றனன்`` என்றதனால், `திருமுலைப் பால் அருளப் பெற்றான்` என்றதாயிற்று.

பண் :

பாடல் எண் : 35

பந்தார் விரலியர் வேள்செங்கட்
சோழன் முருகன்நல்ல
சந்தா ரகலத்து நீலநக்
கன்பெயர் தான்மொழிந்து
கொந்தார் சடையர் பதிகத்தி
லிட்டடி யேன்கொடுத்த
அந்தாதி கொண்ட பிரானருட்
காழியர் கொற்றவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பந்தார் விரலியர் - மகளிர்.
அவர்கட்கு வேள் (மன்மதன்) போன்றவன் கோச்செங்கட் சோழன், முருகன் - முருக நாயனார்.
நீல நக்கன் - திருநீல நக்க நாயனார்.
இவர்கள் பெயர்களை ஞானசம்பந்தர்.
தமது பதிகத்தில் இட்டுப் பாடியன முறையே, ``மழை யார் மிடறா`` எனத் தொடங்கும் திருவானைக்காப் பதிகத்திலும், ``பட்டம் பால் நிற மதியம்`` எனத் தொடங்கும் திருப்புகலூர் வர்த்த மானீச்சரப் பதிகத்திலும், ``திருமலர்க் கொன்றை மாலை`` எனத் தொடங்கும் திருச்சாத்தமங்கை பதிகத்திலும் ஆகும்.
இவர்களோடு சிறுத்தொண்ட நாயனாரது பெயரை இட்டுப் பாடிய திருப்பதிகம், ``நறைகொண்ட மலர்தூவி`` எனவும், ``பைங்கோட்டு மலர்ப்புன்னை`` எனவும் தொடங்கும் திருச்செங்காட்டங்குடித் திருப்பதிகங்களாகும்.
இவைகளில் பின்னர்க்கூறிய பதிகத்தின் எல்லாம் சிறுத்தொண்டர் பெயர் இடப்பட்டுள்ளது.
இதனை இவர் பின்வரும் திருவந்தாதி 72-ஆம் பாட்டில் குறிப்பால் உணர்த்தினார்.
``அடியேன் தொடுத்த அந்தாதி கொண்டவன்`` என்றதனால், `அவ்வந்தாதிக்குப் பின்பே இவ்வந்தாதி பாடப்பட்டது` எனக் கருதலாம்.

பண் :

பாடல் எண் : 36

கொற்றத் திறலெந்தை தந்தைதன்
தந்தையெம் கூட்டமெல்லாம்
தெற்றச் சடையாய் நினதடி
யேம்திகழ் வன்றொண்டனே
மற்றிப் பிணிதவிர்ப் பானென்
றுடைவாள்உருவி யந்நோய்
செற்றுத் தவிர்கலிக் காமன்
குடியேயர் சீர்க்குடியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தெற்றம் - தெற்றுதல்; பின்னுதல்.
கூட்டம் - கூட்டத்தினர்; ஆகுபெயர்.
``நினது அடியேம்`` என உயர்திணைக்கண் அது உருபு வந்தது பிற்கால வழக்கு.
வன்றொண்டன் - வன்மை பேசி எதிர்வழக்கிட்டு ஆட்பட்டவன்.
ஏகாரம், வினா.
மற்று, அசை.
அந் நோய், சூலை நோய்.

பண் :

பாடல் எண் : 37

குடிமன்னு சாத்தனூர்க் கோக்குலம்
மேய்ப்போன் குரம்பைபுக்கு
முடிமன்னு கூனற் பிறையாளன்
தன்னை முழுத்தமிழின்
படிமன்னு வேதத்தின் சொற்படி
யேபர விட்டெனுச்சி
அடிமன்ன வைத்த பிரான்மூல
னாகின்ற வங்கணனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சாத்தனூர், திருவாவடுதுறை அருகில் உள்ள ஓர் ஊர்.
கோக்குலம் - பசுக்கூட்டம்.
குரம்பை - உடம்பு.
படி - அமைப்பு வகை.
``படி`` இரண்டில் முன்னதாகிய `படியால்` என உருபு விரிக்க.
பரவுதல் - துதித்தல்.
``பரவவிட்டு`` என்பதில், `இட்டு` என்பது அசை.
அம்கணன் - அழகிய கண்களையுடையவன்.
கண்ணுக்கு அழகு கருணை.

பண் :

பாடல் எண் : 38

கண்ணார் மணியொன்று மின்றிக்
கயிறு பிடித்தரற்குத்
தண்ணார் புனல்தடம் தொட்டலுந்
தன்னை நகுமமணர்
கண்ணாங் கிழப்ப வமணர்
கலக்கங்கண் டம்மலர்க்கண்
விண்ணா யகனிடைப் பெற்றவ
னாரூர் விறல்தண்டியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஒன்றும்`` என்னும் உம்மை இழிவு சிறப்பு.
`தொடலும்` என்பது விரித்தல் பெற்றது.
தொடுதல் - தோண்டுதல்.
இந்நாயனாரது மரபும் அரியப்படவில்லை.

பண் :

பாடல் எண் : 39

தண்டலை சூழ்திரு வேற்காட்டூர்
மன்னன் தகுகவற்றால்
கொண்டவல் லாயம்வன் சூதரை
வென்றுமுன் கொண்டபொருள்
முண்டநல் நீற்ற னடியவர்க்
கீபவன் மூர்க்கனென்பர்
நண்டலை நீரொண் குடந்தையில்
மேவுநற் சூதனையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திருவேற்காடு, தொண்டைநாட்டுத் தலம்.
கவறு - சூதாடு கருவி.
வல் ஆயம் - வலிய தொகை; பந்தயக் கணக்கு.
நண்டு அலை நீர் - நண்டுகள் உலாவுகின்ற நீர்.
குடந்தை.
இப்பொழுது `கும்பகோணம்` என வழங்குகின்றது.
இந்நாயனார் இறுதியில் அங்குச் சென்று தங்கினார்.

பண் :

பாடல் எண் : 40

சூதப்பொழி லம்ப ரந்தணன்
சோமாசி மாறனென்பான்
வேதப் பொருளஞ் செழுத்தும்
விளம்பியல் லால்மொழியான்
நீதிப் பரன்மன்னு நித்த
நியமன் பரவையென்னும்
மாதுக்குக் காந்தன்வன் றொண்டன்
தனக்கு மகிழ்துணையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சூதம் - மாமரம்.
அம்பர், அம்பர் மாகாளம்; சோழநாட்டுத் தலம்.
`மாறன்` என்பது இயற்பெயர்.
`சோமாசி` என்பது சிறப்பு பெயர்.
`சோமா யாஜி` என்பது `சோமாசி` எனத் திரிந்தது.
இப்பெயரே `இவர் வைதிக அந்தணர்` என்பதைக் காட்டும்.
`வேதப் பொருளை அஞ்செழுத்தாய மந்திரத்தை விளம்பியல்லால் விளம் பான்` என்க.
இதனால் இவர் ``வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது - நாதன் நாமம் நமச்சி வாயவே`` என்னும் துணிவினராய் இருந்தமை விளங்கும்.
`பரன்பால்` என ஏழாவது விரிக்க.
நித்த நியமம், நித்தியாக்கினி யோம்புதல்.
அதனை, `பரன்பால் மன்னு நியமம்` என்றதனால், சிவாக்கினியாக வளர்த்தமை அறியப்படும்.
`காந்தனாகிய வன்றொண்டன்` என்க.
மேற்கூறிய கொள்கையும், ஒழுக்கமும் உடையவராய் இருத்தமையால் சுந்தர மூர்த்தி நாயனாரைத் தமக்கு ஆசிரியராகக் கொண்டு ஒழுகின்றார் என்க.
இவரது வரலாறு வேறு புராணங்களில் சில பொருள்கள் கூடுதலாகச் சொல்லப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 41

துணையு மளவுமில் லாதவன்
தன்னரு ளேதுணையாக்
கணையுங் கதிர்நெடு வேலுங்
கறுத்த கயலிணையும்
பிணையும் நிகர்த்தகண் சங்கிலி
பேரமைத் தோளிரண்டும்
அணையும் மவன்திரு வாரூர
னாகின்ற அற்புதனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

துணை - ஒப்பு.
பிணை - பெண் மான் என்றது அதன் பார்வையை.
சங்கிலி, சங்கிலி நாச்சியார்.
அமைத்தோள் - மூங்கில் போலும் தோள்.

பண் :

பாடல் எண் : 42

தகடன வாடையன் சாக்கியன்
மாக்கல் தடவரையின்
மகள்தனம் தாக்கக் குழைந்ததிண்
டோளர்வண் கம்பர்செம்பொன்
திகழ்தரு மேனியில் செங்க
லெறிந்து சிவபுரத்துப்
புகழ்தரப் புக்கவ னூர்சங்க
மங்கை புவனியிலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சாக்கியன் - பௌத்த மத வேடத்தை மாற்றிக் கொள்ளாதவன்.
அவ்வேடத்தையுடையவர் மருதம் துவம் தோய்ந்த ஆடையை அணிவர் ஆதலாலும், அந்த ஆடைகெட்டியாய்த் துவ ளாது நிற்கும் ஆதலாலும், `தகடு அன்ன ஆடையன்` என்றார்.
மாக்கல் - பெருங்கல்.
பெருங்கல்லாகிய வரை இமய மலை.
``தென் குமரி வடபெருங்கல்`` 1 என்றார் சங்கப் புலவரும்.
கம்பர் - திரு வேகம்பப் பெருமான்.
புவனி - பூமி.

பண் :

பாடல் எண் : 43

புவனியில் பூதியும் சாதன
மும்பொலி வார்ந்துவந்த
தவநிய மற்குச் சிறப்புச்செய்
தத்துவ காரணனாம்
அவனியில் கீர்த்தித்தெ
னாக்கூ ரதிப னருமறையோன்
சிவனிய மந்தலை நின்றதொல்
சீர்நஞ் சிறப்புலியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பூதி - விபூதி; திருநீறு.
சாதனம் - உருத்திராக்கம்; இது சைவ மரபுப் பெயர்.
``ஆர்ந்து`` என்பதை `ஆர` எனத் திரிக்க.
தவ நியமம் - தவமாகிய, தப்பாக் கடமை.
இஃது இங்கு சைவாசாரத்தின் மேல் நின்றது.
சிறப்பு, மேல்நிலையில் வைத்து வழிபடுதல்.
தத்துவம்- மெய்ம்மை; அஃதாவது, உளமார நேர்ந்து செய்தல்.
காரணன் - செய்பவன்; கருத்தா.
தலை நிற்றல் - பற்றி நிற்றல்.
`சிறப்புலி` என்பது பெயர்.

பண் :

பாடல் எண் : 44

புலியி னதளுடைப் புண்ணியற்
கின்னமு தாத்தனதோர்
ஒலியின் சதங்கைக் குதலைப்
புதல்வ னுடல் துணித்துக்
கலியின் வலிகெடுத் தோங்கும்
புகழ்ச்சிறுத் தொண்டன்கண்டீர்
மலியும் பொழிலொண்செங் காட்டங்
குடியவர் மன்னவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கலி, பிள்ளைக்கலி.
அதைத் தொலைத்தமை, கறியாகச் சமைக்கப்பட்ட மகன் திருவருளால் மீண்டும் முன்போல உயிர்பெற்று எழுந்து வரப் பெற்றமை.
கண்டீர், முன்னிலையசை.
``தனது புதல்வன்`` என்பதற்கு, மேல் 1 ``நினது அடியேம்`` என்றதற்கு உரைத்ததை உரைக்க.

பண் :

பாடல் எண் : 45

மன்னர் பிரானெதிர் வண்ணா
னுடலுவ ரூறிநீறார்
தன்னர் பிரான்தமர் போல
வருதலுந் தான்வணங்க
என்னர் பிரானடி வண்ணா
னெனவடிச் சேரனென்னுந்
தென்னர் பிரான்கழ றிற்றறி
வானெனும் சேரலனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மன்னர்பிரான், தென்னர்பிரான், சேரலன்` என்பன ஒரு பொருள்மேல் வந்த பல பெயர்கள்.
உவர் - உவர் மண்.
ஊறி - ஊறியதனால்.
நீறு - திருநீறு.
தன்னர்பிரான் தமர் போல - தம்மைப் போல்பவர்களுக்குத் தலைவனாகிய சிவபெருமானுக்குத் தொண்ட ராயினார்போல.
என்னர்பிரான் - என்போன்ற குடி மக்கட்குத் தலைவரே; அண்மை விளி.
``அடி வண்ணான், அடிச்சேரன்`` என்னும் பயனிலைகட்கு `யான்` என்னும் எழுவாய் தனித்தனி வருவிக்க.
``தென்னர்`` என்பது `தமிழர்` எனப் பொதுப் பொருள் தந்தது.
சொல் வாரது குறிப்பினால் சேரநாட்டுத் தமிழரைக் குறித்தது.
கழறிற்று அறி வான், எந்த உயிரும் தன்தன் மொழியில் கூறுவதை அறிய வல்லவன்.

பண் :

பாடல் எண் : 46

சேரற்குத் தென்னா வலர்பெரு
மாற்குச் சிவனளித்த
வீரக் கடகரி முன்புதன்
பந்தி யிவுளிவைத்த
வீரற்கு வென்றிக் கருப்புவில்
வீரனை வெற்றிகொண்ட
சூரற் கெனதுள்ளம் நன்றுசெய்
தாயின்று தொண்டுபட்டே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``எனது உள்ளம்`` என்பது விளி; அதனை முதற்கண் வைத்து உரைக்க.
``சேரற்கு, வீரற்கு, சூரற்கு`` என்பன ஒரு பொருள் மேல் வந்த பல பெயர்கள்.
தென்னாவலர் பெருமான், தென்னாட்டில் உள்ள திருநாவலூரில் உள்ளவர்க்குத் தலைவர்; சுந்தரமூர்த்தி நாயனார்.
கட கரி - மத யானை; இது வெள்ளை யானை.
பந்தி, குதிரைப் பந்தி.
இவுளி - குதிரை.
``வைத்த`` என்றது, `ஓட்டிய` என்ற படி.
கருப்பு வில் வீரன், மன்மதன்.
அவனை வெற்றி கொண்டமை யாவது, தமக்கு உரிமைத் தேவியரான பலருள் ஒருவரையும் நினை யாது ஒரு கணத்திலே துறந்து கயிலை சென்றமை.
சூரன் - ஆண்மையுடையவன்.
`ஏனையோரை வெல்லும் ஆண்மைகள் எல்லா வற்றினும் மேலான ஆண்மை மன்மதனை வெல்லும் ஆண்மையே` என்பதாம்.
`சூரற்கு இன்று தொண்டுபட்டு நன்று செய்தாய்` என்க.

பண் :

பாடல் எண் : 47

தொண்டரை யாக்கி யவரவர்க்
கேற்ற தொழில்கள்செய்வித்
தண்டர்தங் கோனக் கணத்துக்கு
நாயகம் பெற்றவன்காண்
கொண்டல்கொண் டேறிய மின்னுக்குக்
கோல மடல்கள்தொறும்
கண்டல்வெண் சோறளிக் குங்கடல்
காழிக் கணநாதனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தொண்டரை ஆக்குதலாவது, பிற வழிகளில் முயல் பவர்கள் சிவனது தொண்டு முயற்சியில் திருப்பிடுதல்.
`அம் முயற்சி களுள் அவரவருக்கு ஏற்புடைய பணி இது இது` எனத் தெரிந்து அப் பணியில் அவர்களை ஈடுபடுத்தியவர் இந்நாயனார் என்க.
அப்பணி களுள், திருமுறைகளை ஏட்டில் எழுதல் ஒரு சிறந்த திருப்பணியாகும் `திருமுறை` என்பது பழங்காலத்தில் இறைவணக்கப் பாடல்கள் வரையப்பட்ட ஏடுகளுக்கு வழங்கிய பெயர்.
அண்டர் - தேவர்.
கோணம், வரையறுக்கப்பட்ட இடம்.
கணம் - கூட்டம்; இது சிவ கணத்தையேயன்றிப் பதினெண் கணங்களையும் குறித்தது.
கணத்துக்கு நாயகம் பெற்றது பின்னர் என்க.
காண், முன்னிலையசை.
கண்டல் - தாழம் பூ.
சோறு - சோற்றி.
இஃது, `உணவு` என வேறொரு பொருளையும் நயம்படக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 48

நாதன் திருவடி யேமுடி
யாகக் கவித்துநல்ல
போதங் கருத்திற் பொறித்தமை
யாலது கைகொடுப்ப
ஒதந் தழுவிய ஞாலமெல்
லாமொரு கோலின்வைத்தான்
கோதை நெடுவேற் களப்பாள
னாகிய கூற்றுவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நாதன் திருவடியே முடியாக - வேறு முடி புனையாமல் தில்லைப் பெருமான் திருவடியே முடியாக.
போதம் - ஞானம்.
பொறித்தல் - பதித்தல்.
அது - அத்திருவடி.
கைகொடுத்தல் - உற்றுழி உதவுதல்.
ஓதம் - அலை; கடல் அலை.
கோதை - மாலை.
இதனை வேலுக்கும், நாயனாருக்கும் கொள்க.
களப்பாளன்.

பண் :

பாடல் எண் : 49

கூற்றுக் கெவனோ புகல்திரு
வாரூரன் பொன்முடிமேல்
ஏற்றுத் தொடையலு மின்னடைக்
காயு மிடுதருமக்
கோற்றொத்து கூனனுங் கூன்போய்க்
குருடனுங் கண்பெற்றமை
சாற்றித் திரியும் பழமொழி
யாமித் தரணியிலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

புகல் - நம்பால் வருதல்.
எவன் - எக் காரணம் பற்றி உண்டாகும்? `உண்டாகாது` என்பதாம்.
`கூற்றுக்கு புகல் எவன்` என மாற்றி, இறுதியில் கூட்டி யுரைக்க.
ஓகாரம் அசை.
திருஆரூரன் - சுந்தர மூர்த்தி நாயனார்.
பிற்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் இரட்டையரைப் போல அக்காலத்தில், நடக்க மாட்டாத கூனன் ஒருவனைக் குருடன் ஒருவன் சுமந்து செல்லக் கூனன் பூக்களைப் பறித்து மாலையாகத் தொடுத்தும், வெற்றிலைப் பாக்குத் தேடிக் கொணர்ந்தும் நாள்தோறும் சுந்தரருக்குக் கொடுத்து வந்தமையால் அவர் பரவையாரது ஊடலை இறைவன் தூது சென்று தீர்த்தபின் இல்லத்தில் புக்கபொழுது அவ் இவருடைய கூனையும், குருட்டையும் நீக்கி நல்லுடல் பெறச் செய்தமை இப்பாட்டில் குறிக்கப்பட்டது.
இதனைச் சேக்கிழாரும் கூற்றுவ நாயனார் புராணத்து இறுதிப்பாட்டில் கூறியருளினார்.
அடைக்காய் - வெற்றிலைப்பாக்கு.
கோல் - நெறி.
தொத்துதல் - பற்றி நிற்றல்.
`தருமக் கோலில் தொத்து கூனனும், குருடனும்` என்க.
``போய்`` என்னும் எச்சம் எண்ணின்கண் வந்தது.
``திரியும்`` என்னும் பெயரெச்சம், ``பழமொழி`` என்னும் பிற பெயர் கொண்டது.
`குற்றே வலுள் ஒன்றிரண்டைச் செய்த கூனனும், குருடனும் நீக்கலாகாத கூனும், குருடும் நீங்கி நலம் பெற்றார்கள் என்றால் அவ் ஆரூரரையே தலைவராகக் கொண்டு அவர்க்கு முழுதும் ஆட்பட்ட நம்பால் கூற்றுவன் வாராது நீங்குதல் அரிதன்று` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 50

தரணியில் பொய்ம்மை இலாத்தமிழ்ச்
சங்கம் அதில்கபிலர்
பரணர்நக் கீரர் முதல்நாற்பத்
தொன்பது பல்புலவோர்
அருள்நமக் கீயுந் திருவால
வாயரன் சேவடிக்கே
பொருளமைத் தின்பக் கவிபல
பாடும் புலவர்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பொய்ம்மை இலாத் தமிழ்ச் சங்கம் - உலகியலை நோக்காத தமிழ்ச் சங்கம்.
இது சைவத் தமிழ்ச் சங்கம்.
`தலை, இடை, கடை` என்னும் மூன்று தமிழ்ச் சங்கங்களும் பெரும்பான்மையும் அறம், பொருள், இன்பங்களையே நெறிப்படுத்தினவாக, இச்சங்கம் வீடு ஒன்றனையே நோக்கி அமைந்தமையால், ``பொய்ம்மையிலாத தமிழ்ச் சங்கம்`` என்றார்.
இது திருவாதவூரடிகளை அமைச்சராகக் கொண்டு விளங்கிய, ``பெரிய அன்பின் வரகுண தேவன்`` எனப்பட்ட பழைய வரகுண பாண்டியனுக்குப் பின் வந்த பாண்டியன் காலம் முதலாகத் தொடங்கி நடைபெற்றது.
எனவே, `இதில் இருந்த கபிலர், பரணர், நக்கீரர் முதலிய புலவர்கள் பெயரால் ஒன்றுபட்டுக் காணப் பட்ட போதிலும் பழைய உலகியற் சங்கத்தில் இருந்த கபிலர், பரணர், நக்கீரர் முதலியோரின் வேறுபட்டோர்` என்பது உணரற்பாலது.
இவர்களும் முன்னோரைப் போற்றும் வகையில் அவர்களது பெயரைப் பூண்டு விளங்கினர்.
நாற்பத்தொன்பது புலவோர்; மற்றும் பல்புலவோர்` எனத் தனித்தனி இயைக்க.
நாற்பத்தொன்பதின்மர் சிறப்புடையோர் என்க.
`நாற்பத் தொன்பதின்மர்` என்பதும் ஒரு பாடும் புலவர்கள்`` என்றதனால், `இவர்கள் மக்களைப் பாடாத நெறிமையுடையவராதல் விளங்கும்.
இவர்கள் பாடிய பாடல்கள் 11-ஆம் திருமுறையாகக் கோக்கப்பட்டன.

பண் :

பாடல் எண் : 51

புலமன் னியமன்னைச் சிங்கள
நாடு பொடுபடுத்த
குலமன் னியபுகழ்க் கோகன
நாதன் குலமுதலோன்
நலமன் னியபுகழ்ச் சோழன
தென்பர் நகுசுடர்வாள்
வலமன் னியவெறி பத்தனுக்
கீந்ததொர் வண்புகழே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

புலம் மன்னிய மன் - ஞானம் நிலைபெறப் பெற்ற தலைவன்.
கோகன நாதன் குலமுதலோன் - சூரிய குலத்தின் (சோழர் மரபின்) மூதாதை.
இவையிரண்டும் ``புகழ்ச் சோழன்`` எனப்பட்ட அவரையே குறித்தன.
ஐ - அழகு.
`சிங்கள நாட்டைப் பொடிபடுத்த கோகன நாதன் குலம்` என்க.
கரிகாலன் முதலாக அவ்வப்பொழுது வந்த சோழர்கள் சிங்கள நாட்டின்மேற் படைகளை ஏவிப் பலமுறை வென்றார்கள் ஆதலின் அவ்வெற்றியை ஒருவனுக்கே உரித்தாக்கிக் கூறாது, குலம் முழுவதற்குமாக ஆக்கிக் கூறினார்.
குலம் மன்னிய புகழ்க் குலம் - தொன்றுதொட்டு வழி வழியாக நிலைபெற்று வரும் புகழையுடைய குலம்.

பண் :

பாடல் எண் : 52

புகழும் படியெம் பரமே தவர்க்குநற் பொன்னிடுவோன்
இகழும் படியோர் தவன்மட
வார்புனை கோலமெங்கும்
நிகழும் படிகண் டவனுக்
கிரட்டிபொன் இட்டவன்நீள்
திகழு முடிநர சிங்க
முனையர சன்திறமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எம் பரமே - எம் அளவினதோ.
ஏகாரம், வினா.
இத்தொடரை இறுதியிற் கூட்டியுரைக்க.
தவர் - சிவனடியார்கள்.
அவர்கட்கு இந்நாயனார் திருவாதிரைத் திருநாளன்று திருவமுது படைத்து, ஒவ்வொருவர்க்கு ஒவ்வொரு நூறு பொன் நன்கொடையாக அளித்து வந்தார்.
மடவார் புனை வேடம்.
`மடவார்க்கு` என நான்காம் உருபு விரிக்க.
இவ்வேடத்திற்கு இடையே அவன் தானும் பொன் பெற வேண்டி திருநீறு கண்டிகைகளையும் அணிந்துகொண்டு அடியார்களோடு சேர்ந்து வந்தான்.
அவனைப் பிறர் எல்லாரும் இகழ்ந்த போதிலும் இந்நாயனார் அவனுக்கு இருநூறு பொன்னை நன்கொடையாக அளித்தார்.
அதற்குக் காரணம், `அவையிகழ்ந்தால், திருநீறு உருத்திராக்கங்களை நாம் போற்றாதவர் ஆவோம்` எனக் கருதியதே யாம்.

பண் :

பாடல் எண் : 53

திறமமர் மீன்படுக் கும்பொழு
தாங்கொரு மீன்சிவற்கென்
றுறவமர் மாகடற் கேவிடு
வோனொரு நாட்கனக
நிறமமர் மீன்பட நின்மலற்
கென்றுவிட் டோன்கமலம்
புறமமர் நாகை யதிபத்த
னாகிய பொய்யிலியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கடலில் வலையை வீசி மீன் பிடிக்கும் பொழுது மீன் ஒன்றே ஒன்று தனியாக வலையில் அகப்பட்டுக் கிடைக்குமாயின் அந்த மீனை, `இந்த மீன் சிவனுக்கு உரிய மீன்` என்று அதனை மீண்டும் கடலிலே விடுபவர் இந் நாயனார்.
இவருக்குச் சோதனையாகப் பல நாட்களில் வலையில் ஒவ்வொரு மீனே அகப்பட்டு வந்தது.
அதைக் கடலிலே விட்டமையால் உணவின்றிக் குடும்பத்துடன் மெலியும் நாளில் ஒரு நாள் தனி ஒரு மீன் பொன்னும், இரத்தினமுமே உருவாகி, உலகம் விலை பெறும் அளவினதாய் அகப்பட, அதனையும் கடலிலே விடுத்தார்.
உடனே பெருமான் காட்சி தந்து அழைத்துச் செல்ல, முத்தி பெற்றார்.
இந் நாயனார் பத்தருட் சிறந்த `அதிபத்தர்` எனப் பெயர் பெற்றமை உணரற்பாற்று.
அமர் - அந்த மீன் வாழ்கின்ற.
புறம் - புறத்துச் சூழ்ந்த பொய்கைகள்; ஆகுபெயர்.
நாகை - நாகப்பட்டினம்.

பண் :

பாடல் எண் : 54

பொய்யைக் கடிந்துநம் புண்ணியர்க்
காட்பட்டுத் தன்னடியான்
சைவத் திருவுரு வாய்வரத்
தானவன் தாள்கழுவ
வையத் தவர்முன்பு வெள்கிநீர்
வாரா விடமனைவி
கையைத் தடிந்தவன் பெண்ணா
கடத்துக் கலிக்கம்பனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தன் அடியான் - தனக்கு அடிமையாய்த் தனக்குப் பணிசெய்து இருந்தவன்.
சைவம் - சிவ வேடம்.
`கடிந்து, ஆட்பட்டு, கழுவ, நீர் வாரா மனைவி கையைத் தடிந்தவன் கலிக்கம்பன்` என இயைத்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 55

கம்பக் கரிக்குஞ் சிலந்திக்கும்
நல்கிய கண்ணுதலோன்
உம்பர்க்கு நாதற் கொளிவிளக்
கேற்றற் குடலிலனாய்க்
கும்பத் தயிலம்விற் றுஞ்செக்
குழன்றுங்கொள் கூலியினால்
நம்பற் கெரித்த கலியொற்றி
மாநகர்ச் சக்கிரியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கம்பக் கரி - எப்பொழுதும் அசைந்து கொண்டே யிருக்கும் யானை.
சிவபெருமான் யானைக்கும், சிலந்திக்கும் அருள் புரிந்தது திருவானைக்காத் தலத்தில்.
`கண்ணுதலோன் ஆகிய நாதற்கு` என்க.
உடல் - பொன்; காசு.
தயிலம் - எண்ணெய்.
சக்கிரி - செக்கான்; செக்காடும் தொழிலை உடையவன்.
சக்கிரம் - செக்கு.

பண் :

பாடல் எண் : 56

கிரிவில் லவர்தம் மடியரைத்
தன்முன்பு கீழ்மைசொன்ன
திருவில் லவரையந் நாவரி
வோன்திருந் தாரைவெல்லும்
வரிவில் லவன்வயல் செங்கழு
நீரின் மருவுதென்றல்
தெருவில் விரைமக ழுந்தென்
வரிஞ்சைத் திகழ்சத்தியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கிரி வில்லவர் - மகாமேரு மலையாகிய வில்லை உடையவர்; சிவபெருமான்.
கீழ்மை சொல்லுதல் - இழித்துரைத்தல்.
திரு இல்லவர் - நல் ஊழ் இல்லாதவர்; பாவிகள்.
வரி வில்லவர் - வரிந்து கட்டப்பட்ட வில்லை ஏந்தியவர்.
விரை - நறுமணம்.
வரிஞ்சை - வரிஞ்சையூர்.

பண் :

பாடல் எண் : 57

சத்தித் தடக்கைக் குமரன்நற்
றாதைதன் தானமெல்லாம்
முத்திப் பதமொரொர் வெண்பா
மொழிந்து முடியரசா
மத்திற்கு மும்மைநன் தாளரற்
காயயம் ஏற்றலென்னும்
பத்திக் கடல் ஐயடிகளா
கின்றநம் பல்லவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சத்தித் தடக்கைக் குமரன் - முருகக் கடவுள்.
அவனுக்குத் தாதை சிவபெருமான்.
தானம் - தலங்கள்.
`தானம் எல்லாம் சென்று, என ஒரு சொல் வருவிக்க.
முத்திப் பதம் - மோட்ச மாகிய அந்த ஒரு பதவியின் பெருமையைப் பற்றியே.
முடி அரசு ஆம் அத்தில் - முடிபுனைந்து ஆள்கின்ற அதைவிட.
அரற்கு ஆள் ஆய் ஐயம் ஏற்றல் மும்மை நன்று என்னும் - சிவபெருமானுக்கு ஆளாகிப் பிச்சை ஏற்று உண்டல் மும்மடங்கு நன்றாகும்` என்று அருளிச்செய்த.
இவர் அருளிச் செய்த தனி வெண்பாக்கள் கிடைத்த அளவில் `சேத்திரத் திருவெண்பா` - எனப் பதினொன்றாம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன.
பல்லவர்கள் தமிழ் நாட்டிற்குப் புதியரானமை பற்றி அவர்களைச் சேக்கிழார் புராணம் ``குறுநில மன்னர்`` என்றது.

பண் :

பாடல் எண் : 58

பல்லவை செங்கதி ரோனைப்
பறித்தவன் பாதம்புகழ்
சொல்லவன் தென்புக லூரரன்
பால்துய்ய செம்பொன்கொள்ள
வல்லவன் நாட்டியத் தான்குடி
மாணிக்க வண்ணனுக்கு
நல்லவன் தன்பதி நாவலூ
ராகின்ற நன்னகரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தக்கன் வேள்வியில் சூரியன் பல் உதிர்க்கப்பட்டான்` என்பது புராணம்.
செங்கதிரோன் - சூரியன்.
வீரபத்திரர் செயல் இங்குச் சிவபெருமான் செயலாகக் கூறப்பட்டது.
சொல்லவன்- சொற்களை உடையவன்.
நாட்டியத்தான் குடி.
கோட்புலி நாயனாரது ஊர்.
``மாணிக்க வண்ணன்`` என்றது இங்குள்ள சிவபெருமானையே.

பண் :

பாடல் எண் : 59

நன்னக ராய விருக்குவே
ளூர்தனில் நல்குரவாய்ப்
பொன்னக ராயநல் தில்லை
புகுந்து புலீச்சரத்து
மன்னவ ராய வரற்குநற்
புல்லால் விளக்கெரித்தான்
கன்னவில் தோளெந்தை தந்தை
பிரானெம் கணம்புல்லனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நற் புல் - `கணம்புல்` என்னும் ஒருவகைப் புல்.
கல் நவில்தோள் - கல்போலும் தோள்.
இந்நாயனார் மரபு அறியப்படவில்லை.
``எந்தை தந்தை பிரான்`` என்றது, `எம் குடி முழுதையும் ஆட் கொண்டவன்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 60

புல்லன வாகா வகையுல
கத்துப் புணர்ந்தனவும்
சொல்லின வுந்நய மாக்கிச்
சுடர்பொற் குவடுதனி
வில்லனை வாழ்த்தி விளங்கும்
கயிலைப்புக் கானென்பரால்
கல்லன மாமதில் சூழ்கட
வூரினில் காரியையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`உலகத்துப் புணர்ந்தனவும் புல்லன ஆகா வகை ஆக்கி` என இயைக்க.
உலகத்துப் புணர்ந்தன, பொருளிலக்கணத்தில் சொல்லப்பட்ட `முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்` என்னும் மூவகைப் பொருள்கள்.
வெளிக்கு அவைகளைப் பாடுவது போலத் தோன்றும்படி பாடல்களைப் பாடி.
அவற்றினுள்ளே சிவனது பெருமை உள்ளுறையாக அமையச் செய்தவர் இந்நாயனார்.
அதனால், `` உலகத்துப் புணர்ந்தனவும் புல்லன ஆகா வகை நய மாக்கி`` என்றார்.
`சொல்லின உள் நயமாக்கி` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும்.
புல்லன - கீழான தன்மையை உடையன.
அவை உலக நிகழ்ச்சிகள்.
இவ்வாறான பாடல்களால் மூவேந்தர்களைப் பாடி மகிழ்வித்து, அவர் தந்த பரிசுப் பொருளைக் கொண்டு சிவத் தொண்டும், சிவனடியார் தொண்டும் செய்தவர் இந் நாயனார்.
இவரது மரபு அறியப்படவில்லை.
இவர் சங்கப் புலவராகிய காரிகிழாராயின் வேளாண் மரபினராவர்.

பண் :

பாடல் எண் : 61

கார்த்தண் முகிற்கைக் கடற்காழி
யர்பெரு மாற்கெதிராய்
ஆர்த்த வமண ரழிந்தது
கண்டுமற் றாங்கவரைக்
கூர்த்த கழுவின் நுதிவைத்த
பஞ்சவ னென்றுரைக்கும்
வார்த்தை யதுபண்டு நெல்வேலி
யில்வென்ற மாறனுக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கை - பக்கங்கள் ``முகிற் கை`` என்பது கடலுக்கு அடை.
காழியர் பெருமான் - திருஞானசம்பந்தர்.
அழிந்தது - தோற்றது.
பஞ்சவன் - பாண்டியன்.
வார்த்தை - புகழ்.
அது, பகுதிப் பொருள் விகுதி.
`மாறனுக்கு உரியது` என ஈற்றில் ஒருசொல் வருவித்து முடிக்க.
இவ்வாறு உரையாது `வார்த்தை யதுவுண்டு` எனப் பாடம் ஓதலும் ஆம்.
`பகைவரை வென்ற` எனவும் ஒரு சொல் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 62

மாறா வருளரன் தன்னை
மனவா லயத்திருத்தி
ஆறா வறிவா மொளி விளக்
கேற்றி யகமலர்வாம்
வீறா மலரளித் தன்பெனும்
மெய்யமிர் தங்கொடுத்தான்
வீறார் மயிலையுள் வாயிலா
னென்று விளம்புவரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஆறா விளக்கு` என இயையும்.
ஆறா விளக்கு - அணையா விளக்கு அக மலர்வு - நெஞ்சில் எழுகின்ற சிவ நினைவுகள்.
அமிர்தம் - நிவேதனம்.

பண் :

பாடல் எண் : 63

என்று விளம்புவர் நீடூ
ரதிபன் முனையடுவோன்
என்று மமரு ளழிந்தவர்க்
காக்கூலி யேற்றெறிந்து
வென்று பெருஞ்செல்வ மெல்லாங்
கனகநன் மேருவென்னுங்
குன்று வளைத்த சிலையான்
தமர்க்குக் கொடுத்தனனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``என்று விளம்புவர்`` என்பதை இறுதியிற் கூட்டியுரைக்க.
அழிந்தவர் - தோற்றவர்.
எறிந்து - கூலி கொடுத்தவரை எதிர்த்து நின்றோரைத் தாக்கி பெருஞ்செல்வம் - படைக்கூலியாகப் பெற்றதனால் வந்த பெருஞ்செல்வம்.
சிலை - வில்.
தமர் - அடியார்.

பண் :

பாடல் எண் : 64

கொடுத்தான் முதலைகொள் பிள்ளைக்
குயிரன்று புக்கொளியூர்த்
தொடுத்தான் மதுர கவியவி
நாசியை வேடர்சுற்றம்
படுத்தான் திருமுரு கன்பூண்
டியினில் பராபரத்தேன்
மடுத்தா னவனென்பர் வன்றொண்ட
னாகின்ற மாதவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அன்று புக்கொளியூரில், முதலை கொள்பிள்ளைக்கு உயிர் கொடுத்தான்` என்றும், `அவிநாசியை மதுர கவி தொடுத்தான்` என்றும், `திருமுருகன் பூண்டியினில் வேடர் சுற்றம் படுத்தான்` என்றும் கூட்டுக.
மதுரம் - இனிமை.
`கவியால் தொடுத்தான்` என உருபு விரிக்க.
தொடுத்தான் - தொடுத்துப் பாடினான்.
புக்கொளியூர், ஊர்ப் பெயர்.
அவிநாசி.
அவ்வூரில் எழுந்தருளியுள்ள இறைவன் பெயர்.
அவிநாசி - விநாசம் (அழிவு) இல்லாதவன்.
படுத்தான் - வென்றான்.
பராபரம் - மேனவும், கீழனவும் ஆகிய அனைத்துப் பொருள்களுமாய் உள்ள பொருள்; பரம்பொருள்.
இஃது ஆகுபெயராய், அதன்பால் உள்ள இன்பத்தைக் குறித்தது.
மடுத்தான்- உண்டான்.

பண் :

பாடல் எண் : 65

மாதவத் தோர்தங்கள் வைப்பினுக்
காரூர் மணிக்குவைத்த
போதினைத் தான்மோந்த தேவிதன்
மூக்கை யரியப்பொற்கை
காதிவைத் தன்றோ வரிவதென்
றாங்கவள் கைதடிந்தான்
நாதமொய்த் தார்வண்டு கிண்டுபைங்
கோதைக் கழற்சிங்கனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஆரூர் மணி, திருவாரூரில் எழுந்தருளியுள்ள இறைவன்.
``மாதவத்தோர் - தங்கள் வைப்பு`` ஆவானும் அவனே.
போது - மலர்.
தேவி - பட்டத்துத் தேவி.
`அவனது மூக்கை அரிந்தவர் செருத்துணை நாயனார்` என்பது பின்னர் வரும் பாட்டால் விளங்கும்.
காதி - வெட்டி.
``வைத்து`` என்பது, `முன்னர்ச் செய்து` எனப் பொருள் தந்து நின்றது.
எனவே, அரிவது, பின்னர்ச் செயற்பாலதாயிற்று.
``மொய்த்து ஆர் நாத வண்டு`` எனக் கூட்டுக.
ஆர்த்தல் - ஒலித்தல்.
நாதம் இசை.
இந்நாயனாரைச் சுந்தரர் ``கடல் சூழ்ந்த உலகெலாம் எனப் புகழ்ந்திருக்கவும் சேக்கிழார் புராணம் இவரை ``குறுநில மன்னர்`` என்றே கூறிற்று.

பண் :

பாடல் எண் : 66

சிங்கத் துருவனைச் செற்றவன்
சிற்றம் பலமுகடு
கொங்கிற் கனக மணிந்தவா
தித்தன் குலமுதலோன்
திங்கட் சடையர் தமரதென்
செல்வ மெனப்பறைபோக்
கெங்கட் கிறைவ னிருக்குவே
ளூர்மன் இடங்கழியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சிங்கத்து உருவன் - இரணியாசுரனை அழித்தற் பொருட்டுக் கொண்டே நரசிங்கமாகிய உருவத்தையுடையவன்.
செற்றவன் - (சரபமாய்த் தோன்றி) அழித்தவன்; சிவபெருமான்.
கொங்கிற் கனம் - கொங்கம் நாட்டினை வென்று கொணர்ந்த பொன்.
ஆதித்தன் - முதல் ஆதித்த சோழன்.
`இவன் குலத்து முன்னோராய் இருந்தவர் இந் நாயனார்` என்பதாம்.
சிற்றம்பலம் பொன் வேய்ந்தமை பற்றி ஆதித்த சோழன் புகழ்ச்சி மிக்கவனாய் இருந்தமையின், `அத் தகையோன் இந்நாயனார் வழியில் வந்தவனே` என்பது உணர்த்து முகத்தால் இந் நாயனாரது பெருமையைப் புலப்படுத்தினார்` இஃதே பற்றி இந்நூலாசிரியரை அவ் ஆதித்த சோழன் காலத்தவராகக் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை.
பறை போக்குதல் - பறை சாற்றுவித்தல்.
`பறை போக்கு இறைவன்` என இயையும்.
``இவரது ஊர் இருக்கு வேளூர்`` எனப்பட்ட போதிலும், ``ஆதித்தன் குல முதலோன்`` எனப் பட்டமையால், சேக்கிழார் புராணம் இவரை ``முடி மன்னர்`` எனக் கூறிற்று.

பண் :

பாடல் எண் : 67

கழிநீள் கடல்நஞ் சயின்றார்க்
கிருந்த கடிமலரை
மொழிநீள் புகழ்க்கழற் சிங்கன்தன்
தேவிமுன் மோத்தலுமே
எழில்நீள் குமிழ்மலர் மூக்கரிந்
தானென் றியம்புவரால்
செழுநீர் மருகல்நன் னாட்டமர்
தஞ்சைச் செருத்துணையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டின் பொருளை மேல் கழற்சிங்க நாய னாரைப் பற்றிப் போந்த.
``மாதவத்தோர் தங்கள்`` என்னும் பாட்டின் பொருள் பற்றி அறிக.
குமிழ் மலர் மூக்கு - குமிழம்பூப் போன்ற மூக்கு.

பண் :

பாடல் எண் : 68

செருவிலி புத்தூர்ப் புகழ்த்துணை
வையம் சிறுவிலைத்தா
வுருவலி கெட்டுண வின்றி
யுமைகோனை மஞ்சனஞ்செய்
தருவதோர் போதுகை சோர்ந்து
கலசம் விழத்தரியா
தருவரை வில்லி யருளும்
நிதியது பெற்றனனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

செருவிலிபுத்தூர் அரிசில் ஆற்றங்கரையில் இருத்த லால் `அரிசிற்கரைப் புத்தூர்` எனப்பட்டது.
தேவாரம் பெற்ற தலம்.
சிறுவிலை - பஞ்சம்.
வையம் சிறு விலையை உடையதாய்விட.
உரு - உடம்பு.
வலி கெட்டது உணவின்மையால் ஆகலின், `உணவின்றி உரு வலி கெட்டு` என மாற்றியுரைக்க.
``செய்தருவது`` என்பதில், `தரு` துணைவினை.
`தரியாது நடுங்கி` என ஒரு சொல் வருவிக்க.
நிதி, படிக் காசு.
இவ்வரலாற்றை இத்தலச் சுந்தரர் தேவாரத் திருப்பதிகத்து 6-ஆம் திருப்பாட்டால் அறிக.

பண் :

பாடல் எண் : 69

பெற்ற முயர்த்தோன் விரையாக்
கலிபிழைத் தோர்தமது
சுற்ற மறுக்குந் தொழில்திரு
நாட்டியத் தான்குடிக்கோன்
குற்ற மறுக்கும்நங் கோட்புலி
நாவற் குரிசிலருள்
பெற்ற வருட்கட் லென்றுல
கேத்தும் பெருந்தகையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

விரையாக் கலி - ஒருவராலும் கடக்கலாகாத ஆணை.
இது சிவபெருமான் மேல் இடப்படும் ஆணைக்கே பெயராய் வழங்கும்.
``தனது`` என்பதில் `தன்` சாரியை.
`தமது` என்பது பாட மன்று.
`பிழைத்தோராகிய தனது சுற்றம்` என்க.
பிழைத்தோர் - கடந் தோர்.
சுற்றத்தாரை, ``சுற்றம்`` என்றது உபசார வழக்கு.
திருநாட்டியத் தான்குடி, ஊர்ப்பெயர்.
குற்றம் அறுக்கும் - ஏனையயோரது குற்றங் களையும் நீக்கவல்ல.
நாவல் - நாவலூர்.
குரிசில் - தலைவன்.
நாவலூர்த் தலைவன் சுந்தரமூர்த்தி நாயனார்.
அவரது அருளாவது, ``கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற கொடிறன் கோட்புலி`` எனப் புகழ்ந்தருளிய புகழ்த்தொடர்.

பண் :

பாடல் எண் : 70

தகுமகட் பேசினோன் வீயவே
நூல்போன சங்கிலிபால்
புகுமணக் காதலி னாலொற்றி
யூருறை புண்ணியன்தன்
மிகுமலர்ப் பாதம் பணிந்தரு
ளாலிவ் வியனுலகம்
நகும்வழக் கேநன்மை யாப்புணர்ந்
தான்நாவ லூரரசே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நூல்போன`` என்றது சிலேடை நயம்.
`மங்கல நாணை இழந்த என்பது மேற்போக்குப் பொருள்.
ஒருவன் மகட் பேசியதன்றி, பேசப்பட்ட மகளோ, அவன் தன் இருமுது குரவரோ மணத்திற்கு இசையாத நிலைமையில் மகட் பேசினோன் இறந்தமை பற்றி அவனால் பேசப்பட்ட மகளை, ``மங்கல நாணை இழந்தவள்`` என எவரும் கூற ஒருப்படார் ஆதலின் ``நூல் போன`` என்றது சிலேடை நயமேயாம்.
``நூல்`` என்பது விடாத ஆகுபெயராய் அதனைத் தரும் மண வினையைக் குறிக்க, மகட் பேசினோன் உடனே இறந்தமை கேட்டு அவளைமணம் பேச நினைவார் ஒருவரும் இல்லாது போயினர்` என்பதே அத்தொடரின் உட்பொருள்.
இனி உலகம் நகும் வழக்காவது, மகட் பேசினான் உடனே இறந்ததை அறிந்த பின்பு அவ் இறப்பிற்கு ஏதுவாய் நின்ற மகளை மணக்க எவன் ஒருவன் விரும்பினும் `அவன் விளக்கைப் பிடித்துக் கொண்டே கிணற் றில் வீழ்வான்போலும் அறிவிலி` என உலகம் இகழத் தொடங்கிய வழக்கு.
உலகத்தில் அத்தன்மைத்தாகிய வழக்குச் சுந்தரர்பால் பொய்த்துப் போய் இன்பம் பயந்ததையே ``உலகம் நகும் வழக்கே நன்மையாக`` என்றார்.
இச்சிலேடை நயம் உணர மாட்டாதார் இந் நூலாசிரியர் ``உலகம் `இழுக்கு` எனக் கடிந்த பழியொழுக்கத்தையே சுந்தரர் `நன்று என மேற்கொண்டதாகக் கூறினார்`` என்று இகழ்வர்.
இவரெல்லாம்,
மோகம் அறுத்தவர்க்கே முத்தி கொடுப்பமென
ஆகமங்கள் சொன்ன அவர்தம்மைத் - தோகையார்பால்
தூதாகப் போகவிடும் வன்றொண்டன்
என்றதில், ``விளங்கிழையார் இருவரோடும் முயங்கிய போதிலும் 2 வன்றொண்டர், தம் அறிவு மோக மயத்ததாகாது, சிவனை மறவாத சிந்தையால் சிவஞான மயமாகவே இருந்தார் என்னும் உண்மை உணர்த்தப்பட்டமையை அறியாது, சிவன் வன்றொண்டர் பொருட்டுத் தான் வகுத்த நெறியினைத் தானே அழித்தானாகக் கூறி மகிழ்பவரோடு ஒரு பெற்றியர் ஆவர்.
இன்னோரைத் தெருட்டுதல் அரிது.

பண் :

பாடல் எண் : 71

அரசினை யாரூ ரமரர்
பிரானை அடிபணிந்திட்
டுரைசெய்த வாய்தடு மாறி
யுரோம புளகம்வந்து
கரசர ணாதி யவயவங்
கம்பித்துக் கண்ணருவி
சொரிதரு மங்கத்தி னோர்பத்த
ரென்று தொகுத்தவரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உடல் நிலத்திற்படிய வீழ்ந்து சிவபெருமானது திருவடிகளை வணங்குதல், அன்பினால் நாக்குழற அப்பெருமானது புகழ்தனை எடுத்தோதுதல், உடம்பெங்கும் மயிர்க்கூச் செறிதல், கை, கால் முதலிய உறுப்புக்கள் யாவும் அன்பினால் நடுங்கல், கண்களி னின்றும் அன்புக் கண்ணீர் அருவிபோல் உடம்பெங்கும் ஒழுகப் பெறுதல் இவை முதலியவற்றை உடையோர் பத்தராய்ப் பணிவா ராவார்.
கம்பித்தல் - நடுங்குதல்.
அங்கம் - உடம்பு.
தொகுத்தவர் - தொகுக்கப்பட்டவர்.
எனவே, இவரைப் போல ஒருவராகச் சொல்லப்படாமல், பலராகச் சொல்லப்படுவார் `தொகையடியார்கள்` என்பது போந்தது.
போதவே, `ஒவ்வொருவராகச் சொல்லப்பட்டோர் தனியடியாராவர்` என்பதும் பெறப்பட்டது.
``சொரிதரும்`` என்னும் பெயரெச்சம் ``அங்கம்`` என்னும் இடப்பெயர் கொண்டது.

பண் :

பாடல் எண் : 72

தொகுத்த வடமொழி தென்மொழி
யாதொன்று தோன்றியதே
மிகுத்த வியலிசை வல்ல
வகையில்விண் தோயுநெற்றி
வகுத்த மதில்தில்லை யம்பலத்
தான்மலர்ப் பாதங்கள்மேல்
உகுத்த மனத்தொடும் பாடவல்
லோரென்ப ருத்தமரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``தொகுத்த`` என்னும் பெயரெச்சம் ``இயல், இை\\\\u2970?`` என்னும் செயப்படு பொருட் பெயர்களைக் கொண்டது.
``வடமொழி தென்மொழி`` என்பது உம்மைத்தொகை.
அதன் ஈற்றில் ஏழன் உருபு விரிக்க.
தோன்றியது - கைவந்தது.
``வடமொழி தென் மொழிகளில் யாதொன்று தோன்றியது`` எனக் கூறினமையால்.
நாயன்மார் நெறியில் மொழிவேற்றுமை கொள்ளப்படாமை விளங்கிற்று.
இவற்றுடன், ``தேசிகம்`` எனச் சேக்கிழார் பிறமொழிகளையும் சேர்த்துக்கூறினார்.
``வடமொழியும், தென்தமிழும், மறைகள் நான்கும் - ஆனவன்காண்`` எனவும், ``ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்`` 1 எனவும் அப்பர் பெருமானும், ``தமிழ்ச் சொலும் வட சொலும் தாள்நிழற் சேர`` 2 எனத் திருஞானசம்பந்தரும், ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக் காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.
தமிழ்ச்சொல் வடசொல் இரண்டும் அவனை உணர்த்தும்.
3 எனத் திருமூலரும் அருளினமை காண்க.
செய்யுள்கள் இயலிலும் உண்டு.
அவை `பா` எனவும், `பாவினம்` எனவும் கூறப்படும்.
அவை களிலும் ஓரளவு இசை உண்டு.
``இயல், இை\\\\u2970?`` எனவும், இனம் பற்றி நாடகச் செய்யுளும் கொள்ளப்படும்.
வல்ல வகையில் - இயன்ற அளவில், கோழைமிட றாககவி கோளுமில வாக இசை கூடும் வகையால்
ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொல்மகிழும்
ஈசன் 4
எனச் சம்பந்தப் பெருமான் அருளிச் செய்தார்.
வல்ல வகையில் பாட வல்லோர்` - என இயையும்.
வல்லோர் - மன நிலை கொண்டவர்.
நெற்றி - மதிலின் நெற்றி.
உகுத்த மனம் - உருக்கிச் சேர்த்த மனம்.
``பாடவல்லோர் உத்தமர் என்பர்` என மாற்றியுரைக்க.
``என்பர்`` என்பதற்கு, ``உயர்ந்தோர்`` என்னும் எழுவாய் வருவித்துக்கொள்க.

பண் :

பாடல் எண் : 73

உத்தமத் தானத் தறம்பொரு
ளின்ப மொடியெறிந்து
வித்தகத் தானத் தொருவழிக்
கொண்டு விளங்கச்சென்னி
மத்தம்வைத் தான்திருப் பாத
கமல மலரிணைக்கீழ்ச்
சித்தம்வைத் தாரென்பர் வீடுபே
றெய்திய செல்வர்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இங்கு, ``உத்தமத்தானம்`` எனப்பட்டவற்றைச் சேக்கிழார், ``காரண பங்கயம் ஐந்து`` 1 என்றார்.
அவை மூலாதாரத் திற்கு மேல் உள்ள ஐந்து ஆதாரங்கள்.
அவற்றில் கீழ் இருந்து பிரமன் விட்டுணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன் ஆகிய காரணக் கடவுளர் வீற்றிருப்பராகலின் அவற்றைச் சேக்கிழார், ``காரண பங்கயம் ஐந்து`` என்றார்.
அந்த ஐவரும் முறையே படைத்தல் முதலிய ஐந்து தொழில் களைச் செய்வர் ஆதலானும் அவ் ஐந்தொழில்களில் உயிர்கள் பெறு வன வீடுதவிர, அறம் முதலிய ஏனை மூன்று பயன்களே ஆதலாலும் அம் முப்பயன்களுக்கு மேலான வீடு பெற நின்றாரை, ``அறம், பொருள், இன்பம் ஒடி எறிந்து`` என இவ்வாசிரியர் இங்குக் கூறினார்.
`ஒடிய` என்பது கடைக் குறைந்து நின்றது.
ஒடிய - அழிய.
அறம் முதலிய மூன்றும் பிறப்பையே பயப்பனவாம்.
``அறம், பொருள், இன்பம்`` என்பன ஆகுபெயரால் அவற்றின்மேற் செல்லும் ஆசை களைக் குறித்தன.
வித்தகம் - ஞானம்.
மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களை `யோகத் தானம்` என வைத்து, ஆஞ்ஞைக்கு மேல் உள்ள ஏழாம் தானமாகிய நிராதாரத்தையும், அதற்குப் பன்னிரு விரற் கடை கடந்துள்ள துவாதசாந்தத்தையும் `ஞானத் தானம்` என்பார், ``வித்தகத்தானம்`` என்றார்.
`ஆஞ்ஞையோடு நிற்கும் ஆதார யோகமும் பிறப்பை அறுக்காது` என்பதை ``யோகில் - தருவதோர் சமாதி தானும் தாழ்ந்து பின் சனனம் சாரும்`` என்னும் சித்தியார் மொழியால்2 உணர்க.
நிராதாரம் நாதத் தானமாகவும், துவாசாந்தம் நாதாந்தமாகவும் சொல்லப்படுதல் பற்றியும், அதுவே சிவம் விளங்கும் இடமாதல் பற்றியும் சித்தத்தைத் துவாதசாந்தத்தில் செலுத்தியவரைச் சேக்கிழார், ``நாதாந்தர் - தாரணையால் சிவத்த உரைத்த சித்தத்தார்`` என்றார்.
எனவே அதனையே இவ்வாசிரியர் இங்கு வித்தகத் தானத்து ஒருவழிக் கொண்டு சிவன் திருப்பாத மலர்க்கீழ்ச் சித்தம் வைத்தார்`` என்றார் என்க.
ஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று
மீதானத் தேசெல்க; உந்தீபற
விமலற்கு இடம் அது என்று உந்தீபற
என்றே சாத்திரத்திலும் கூறப்பட்டது.
நிராதாரம் - ஏழாம் தானம்.
மீதானம் - துவாதசாந்தம்.
சென்னி மத்தம் வைத்தான் - திருமுடியில் ஊமத்தைப் பூவைச் சூடியிருப்பவன்; சிவன்.
`நிராதார, மீதான யோகங்களே ஞானயோகம்` என்பது உணர்த்துதற்கு அதனையுடைய வர்களை ``வீடுபேறு எய்திய செல்வர்கள்`` என்றார்.
எனவே, பிற் காலத்துச் சாத்திரங்களில் `சிவயோகிகள்` என குறிக்கப்படுவார் இந்த ஞான யோகிகளே என்பது உணர்க.
`சித்தம்` வைத்தாரே வீடுபேறு எய்திய செல்வர்கள் என்பர்` என முடிக்க.

பண் :

பாடல் எண் : 74

செல்வம் திகழ்திரு வாரூர்
மதில்வட்டத் துட்பிறந்தார்
செல்வன் திருக்கணத் துள்ளவ
ரேயத னால்திகழச்
செல்வம் பெருகுதென் னாரூர்ப்
பிறந்தவர் சேவடியே
செல்வ நெறியுறு வார்க்கணித்
தாய செழுநெறியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`திருவாரூரில் வந்து பிறப்பவர்கள் முன்பு சிவகணத்துள் இருந்தவர்களே` என்பதும், `அவர்கள் முன்னை யுணர்வு முதிரப்பெற்றுச் சிவனடி சேர்தற்கே அங்கு வந்து பிறக் கின்றனர்` என்பதும் அருளாளர் மரபு.
அதனால் அவர்கள் யாவரும் திருத்தொண்டராவர் என்க.
`திருவாரூர்ப் பிறந்தார் யாவரும் சிவ கணத்தவரே` என்பது பெரிய புராணத்துள் நமிநந்தியடிகள் புராணத் துள்ளும் விளக்கப்பட்டது.
`சேவடியே செழுநெறி` என இயைத்து முடிக்க.
செல்வ நெறி திருவருளாகிய செல்வத்தையுடைய நெறி.
அணித்து - அண்மையில் உள்ளது.
மதில் வட்டம் - முதற் காலத்திலே `திருவாரூர்` என வரையறுக்கப்பட்ட எல்லை வட்டம்.
செல்வன் - சிவன்.

பண் :

பாடல் எண் : 75

நெறிவார் சடையரைத் தீண்டிமுப்
போதும்நீ டாகமத்தின்
அறிவால் வணங்கியர்ச் சிப்பவர்
நம்மையு மாண்டமரர்க்
கிறையாய்முக் கண்ணுமெண் தோளும்
தரித்தீறில் செல்வத்தொடும்
உறைவார் சிவபெரு மாற்குறை
வாய வுலகினிலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நெறிசடை, வார்சடை` - எனத் தனித் தனி இயைக்க.
நெறி - நெறித்த; நெறிப்பில்லாத - தலைமயிர் `கோரை மயிர்` என இகழப்பட்டும் வார் - நீண்ட ``சடையர்`` என்றது, திருக்கோயிலில் எழுந்தருளிருப்பவரையே என உணர்க.
முப்போது - மூன்று காலம்; காலை, பகல் இரவு என்பன.
காலைக்குமுன் வைகறையும், பிற் பகலாகிய அந்தியும், இரவுக்குமுன் மாலையும் வேறுபடுத்துக்கூறி, `காலம் ஆறு` எனப்படும்.
``தீண்டி`` என விதந்து ஓதினமையால் தீண்டும் உரிமை சிலர்க்கே உரித்தாதல் பெறப்பட்டு இவ்வுரிமை யுடையாரைச் சேக்கிழார் ``முதற் சைவர்`` எனவும், ``சிவ வேதியர்`` என்றும் குறித்தருளினார்.
1 இவர்களை யுள்ளிட்ட திருத்தொண்டர் களைத் தொகுத்தோதியருளிய சுந்தரமூர்த்தி நாயனாரும் இவ்வாசிரியரும் அம்மரபினரேயாவர்.
ஆகமம், சைவாகமம்.
அர்ச்சிப்பவர் - வழிபடுபவர்.
`முப்போதும் சடையாரைத் தீண்டி அர்ச்சிப்பவர்` என்க.
``நம்மையும் ஆண்டு`` என்றதனால், அவரது ஆசிரியத் தன்மை குறிக்கப்பட்டது.
முதற் சைவர்கள் தந்தை, மகன், பெயரன் என இவ்வாறு குடி வழியானே ஆசிரியராய் இருத்தலால் அவரவரும் தம் தம் மக்கட்குத் தாமே ஆசிரியராயும் விளங்குவர்.
ஏனையோர்க்கு அவர் ஆசிரியராதல் சொல்ல வேண்டா.
இங்கு ``அமரர்`` என்றது இந்திரன், அயன், மால் உலகத்து உள்ளாரையும், வித்தியசேசுர, மகேசுர உலகத்து உள்ளாரையும்.
மால் உலகத்தவர் ஈறாயினார்க்கு இறைவராதல் உருத்திர புவனங்களில் இருந்தும், ஏனையிருவர்க்கும் இறைவராதல் சுத்த வித்தியா தத்துவ ஈசுர தத்துவ புவனங்களில் இருந்துமாகும்.
ஈசுர தத்துவ புவனத்தில் தலைவ ராயினார் `மந்திர மகேசுரர்` எனப்படுவர்.
எனவே, உருத்திர புவனங்களையும் இங்கு, ``சிவபெருமாற்கு உறைவாய உலகம்`` என்றல் உபசாரமாம்.
இங்ஙனம் வேறுபட்ட உலகத்திற் சென்று இறைவராதல் அவரவர் பத்தி நிலை வேறுபாட்டினாலாம்.
``இறை`` என்றது பன்மையொருமை மயக்கம்.
இவர்கள் சிவலோகத்தில் முக்கண், எண்தோள் முதலாகச் சிவபெருமானது உருவத்தைப் பெறுதல், கிரியையில் யோகமாகிய அகவழிபாட்டில் சிவோகம் பாவனையை மிகச் செய்தலினாலேயாம்.
தில்லைவாழ் அந்தணருட் சிறந்தார் சிலரும் சிவசாரூபிகளாய் நின்றமையைத் திருஞானசம்பந்தர் அவரது புராணத்தால் உணர்க.
ஈறு இல் செல்வம் - தாம் வீடு பெற்ற பின்பும் நீங்காது இருந்தாங்கிருக்கும் செல்வம்.
இவை சுத்த தத்துவ புவனப் பொருள்களாம்.
ஆகவே, இவற்றைப் புசிக்கும் போகமும் சுத்த போகமேயாம்

பண் :

பாடல் எண் : 76

உலகு கலங்கினும் மூழி திரியினு முள்ளொருகால்
விலகுத லில்லா விதியது
பெற்றநல வித்தகர்காண்
அலகில் பெருங்குணத் தாரூ
ரமர்ந்த வரனடிக்கீழ்
இலகுவெண் ணீறுதம் மேனிக்
கணியு மிறைவர்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``முழு நீறு`` என்பதில் முழுமையை இலக்கண நிறைவு, உடல் நிறைவு இரண்டுமாகக் கொள்க.
இவ் இரு பொருளும் இப்பாட்டில் ``இங்கு`` என்பதனாலும், ``மேனிக்கு`` என்பதனாலும் குறிக்கப்பட்டன.
திரிதல் - மாறி வருதல்.
விலகுதல் - கைவிட்டு நீங்குதல்.
வித்தகர் - திறல் உடையார்.
காண், முன்னிலையசை.
அலகு இல் பெருங்குணம், இறைமைக் குணம்.
`குணத்து அரன்` என்க.
``ஆரூர் அமர்ந்த அரன்`` என்றது எங்கும் உள்ளவனை ஓரிடத்தில் வைத்துக் கூறியவாறு.
`அரன் அடிக்கீழ் நின்று` என ஒரு சொல் வருவிக்க.
இறைவர்கள், கட்புலன் ஆகும் இறைவர்கள்.
``நடமாடக் கோயில் நம்பர்`` 1 எனத் திருமுறையிலும், `பராவு சிவர்`` எனச் சாத்திரத்திலும் 2 சொல்லப்பட்டன.

பண் :

பாடல் எண் : 77

வருக்க மடைத்துநன் னாவலூர்
மன்னவன் வண்டமிழால்
பெருக்கு மதுரத் தொகையிற்
பிறைசூடி பெய்கழற்கே
ஒருக்கு மனத்தொடப் பாலடிச்
சார்ந்தவ ரென்றுலகில்
தெரிக்கு மவர்சிவன் பல்கணத்
தோர்நஞ் செழுந்தவரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``வருக்கம் அடைத்து`` என்பதை, ``மதுரத் தொகை யில்`` என்பதன் பின்னர்க் கூட்டுக.
வருக்கம் - இனம்; அடியார் இனம் ``அடைத்து`` என்பதை `அடைக்க` எனத் திரித்து, ``அப்பால்`` என்பதை அதன்பின்னர்க் கூட்டுக.
அடைத்தல் - நிரப்புதல்.
அப்பால் இடத்திற்கு அப்பாலும், காலத்திற்கு அப்பாலும்.
இவற்றுள் காலத்திற்கு அப்பாலாவன முன்னும், பின்னும்.
திருத்தொண்டத் தொகையில் சொல்லப்பட்ட அடியார்கள் வாழ்ந்த இடம் தமிழ் நாடே.
காலங்கள் பலவாயினும் அவைகளை ஒருங்கு இணைத்து நோக்கினால் அவை ஒரு கட்டமாய் அமையும்.
`இவ்வாறு உள்ள இடம், காலங்களில்` வாழ்ந்த, வாழும் அடியார்களை யான் அறியேனாயினும் அவர் கட்கும், அவர்தம் அடியார்க்கும் யான் அடியேன்` என நாவலூர் நம்பிகள் அருளிச் செய்தார்.
எனவே அவ்விடம், காலங்களில் முன்பு வாழ்ந்தவர்களுள்ளும், இனி வந்து வாழ்பவர்களுள்ளும் வேத சிவாகமங்களை உணர்ந்தும், உணர்ந்து ஒவுகுவோரைப் பின்பற்றியும் பிறை சூடிதன் பெய் கழற்கே ஒருக்கு மனத்தொடு அவ்வடிக்கே சார்ந்தாரும் திருத்தொண்டராதல் பெறப்பட்டது.
எனவே, ``அப்பாலும் அடிச் சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்`` என நம்பியாரூரர் அருளிச் செய்தது திருத்தொண்டத் தொகைக்குப் புறனடையாயிற்று.
பலவகைப் புறனடைகளில் இஃது ஒழிபாய புனடையாம்.
இவ்வாறு கூறுதல் ``அறியாது உடம்படல்`` என்னும் உத்திவகை.
அஃதாவது ஒரு பொருளைத் தான் சிறப்பு வகையால் அறியாவிடினும் பொதுவகையால் அறிந்த மாத்திரத்தானே அதனை உடம்பட்டுக் கொள்ளுதல் தெரிக்கும் - தெரிக்கப்படும்.
கணம் - குழாம்.
பல்கணம், இனத்தாலும் வாழ்க்கை நெறியாலும் வேறுபட்ட பல குழாத்தினர் எனினும் சிவபெருமானுக்குத் தொண்டுபட்ட வகையில் ஓர் இனத்தவராயினோர்.
`பல்கணத்தவராகிய செழுந்தவர்` என்க.

பண் :

பாடல் எண் : 78

செழுநீர் வயல்முது குன்றினில்
செந்தமிழ் பாடிவெய்ய
மழுநீள் தடக்கைய னீந்தபொன்
னாங்குக்கொள் ளாதுவந்தப்
பொழில்நீ டருதிரு வாரூரில்
வாசியும் பொன்னுங்கொண்டோன்
கெழுநீள் புகழ்த்திரு வாரூர
னென்றுநாம் கேட்பதுவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டின் பொருளைப் பெரிய புராணத்தில் ஏயர்கோன் கலிக்காமப் புராணத்துட் போந்த சுந்தரர் வரலாற்றால் அறிக.
இதனுள், ``என்று`` என்னும் இடைச் சொல், `என்பது` எனப் பெயர்ப்பொருள் தந்தது.
அன்றி, `நாம் கேட்பது ஒன்று` என ஒரு சொல்வருவித்து முடித்தலும் ஆம்.

பண் :

பாடல் எண் : 79

பதுமநற் போதன்ன பாதத்
தரற்கொரு கோயிலையான்
கதுமெனச் செய்குவ தென்றுகொலா
லாமென்று கண்துயிலா
ததுமனத் தேயெல்லி தோறும்
நினைந்தருள் பெற்றதென்பர்
புதுமணத் தென்றல் உலாநின்ற
வூர்தனிற் பூசலையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கதுமென - விரைவாக, எல்லி - இருள்.
இரவு உறங்காமை கூறவே, பகல் உறங்காமை சொல்ல வேண்டவாயிற்று.
`அருள்பெற்ற நினைந்து` என மாற்றிக் கொள்க.
எழுவாய் தொழிற்பெயராய வழி பயனிலை வினையெச்சமாய் வருதல் உண்டு.
என்பர் - என்று புகழ்வர்.

பண் :

பாடல் எண் : 80

பூச லயில்தென்ன னார்க்கன
லாகப் பொறாமையினால்
வாச மலர்க்குழல் பாண்டிமா
தேவியாம் மானிகண்டீர்
தேசம் விளங்கத் தமிழா
கரர்க்கறி வித்தவரால்
நாசம் விளைத்தா ளருகந்
தருக்குத்தென் னாட்டகத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பூசல் அயில் தென்னனார் - போரை வெல்லும் வேற்படையையுடைய பாண்டியர்.
``தென்னவனார்`` எனக் குடிப் பெயர் ஈற்று `அன்`னின் முன்னும், `ஆர்` விகுதி வந்தது.
அனல் - சமணர் திருஞானசம்பந்தரது திருமடத்தில் இட்டது.
ஆக - வந்து பற்ற.
`அவர் (பாண்டியர்) பொறாமையினால்` என்க.
``கண்டீர்`` என்னும் முன்னிலை அசையை, ``நாசம் விளைத்தாள்`` என்பதன் பின்னர்க் கூட்டி முடிக்க.
தமிழாகரர் - திருஞானசம்பந்தர்.

பண் :

பாடல் எண் : 81

நாட்டமிட்ட டன்ரி வந்திப்ப
வெல்படை நல்கினர்தந்
தாட்டரிக் கப்பெற் றவனென்பர்
சைவத் தவரரையில்
கூட்டுமக் கப்படம் கோவணம்
நெய்து கொடுத்துநன்மை
ஈட்டுமக் காம்பீலிச் சாலிய
நேசனை இம்மையிலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நாட்டம் - கண்.
இட்டு - மலராக இட்டு - அரி - திருமால்.
வந்திப்ப - வழிபட.
வெல்படை, இங்குச் சக்கரம்.
தாள் தரிக்கப்பெற்றவன் - திருவடியைத் தலையிலே சூட்டிக் கொள்ளப் பெற்றவன்.
சைவத்தர் - சைவ சந்நியாசிகள்.
அக்கம் + படம் = அக்கப்படம்.
அக்கம் - கண்.
படம் - துணி.
அக்கப்படம் - கண் போலக் காக்கும் துணி; என்றது கிழியினை.
நன்மையாவது சிவபுண்ணியம்.
காம்பீலி நகரம்.
`நேசனை.
`இம்மையில் தாள் தரிக்கப் பெற்றவன்` என்பர் எனக் கூட்டுக.
`மறுமையில் அடையற்பாலதாகிய சிவனடி நிழலை இம்மையிலே அடைந்தவன்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 82

மைவைத்த கண்டன் நெறியன்றி
மற்றோர் நெறிகருதாத்
தெய்வக் குடிச்சோழன் முன்பு
சிலந்தியாய்ப் பந்தர்செய்து
சைவத் துருவெய்தி வந்து
தரணிநீ டாலயங்கள்
செய்வித்த வந்திருக் கோச்செங்க
ணானென்னுஞ் செம்பியனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மற்றோர் நெறி கருதாத் தெய்வக் குடியில் பிறந்த சோழன்` என்க.
`சோழன்` என்பது குடிப்பெயர் ஆதலின் ``தெய்வக் குடி`` என்றது அக்குடியையேயாதல் தெளிவு.
முன்பு - முற்பிறப்பு.
பந்தர் செய்தது, வாய் நூலால் திருவானைக்காவல் இறைவற்கு.
எய்தி- வந்து.
சைவத்து உரு எய்தி - சைவ சமயியாய்ப் பிறந்து.
தரணி, சோழ நாடு.
நீடு ஆலயங்கள் - உயர்ந்த மாடக் கோயில்கள்.
செம்பியன் - சோழன்.
இந் நாயனார் சிவபெருமான் அருளால் தமது முற்பிறப்பின் நிலையை அறிந்திருந்தார்.

பண் :

பாடல் எண் : 83

செம்பொ னணிந்துசிற் றம்பலத்
தைச்சிவ லோகமெய்தி
நம்பன் கழற்கீ ழிருந்தோன்
குலமுத லென்பர்நல்ல
வம்பு மலர்த்தில்லை யீசனைச்
சூழ மறைவளர்த்தான்
நிம்ப நறுந்தொங்கல் கோச்செங்க
ணானென்னும் நித்தனையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சிற்றம்பலத்தைச் செம்பொன் அணிந்தவன் ஆதித்த சோழன்` என்பதை மேலே 1 கூறினார்.
முதல் - மூதாதை.
வம்பு - வாசனை.
மறை வளர்த்தது, தில்லை வாழ்அந்தணர்களுக்கு மாளிகைகளை அமைத்துக் கொடுத்து அவர்களால் வேதத்தை நியமமாக ஓதச் செய்தமையாலாம்.
நிம்ப நறுந்தொங்கல் - வேப்பம்பூ மாலை.
பாண்டியர்க்கு உரிய இதனை இவர்க்குக் கூறியது பாண்டிய நாட்டைப் பற்றினமை பற்றியாம்.
இவர் சேரரை வென்றமை சங்க இலக்கியத்தால் அறியப்படுகின்றது.
பாண்டியரை வென்றதை இதனால் அறிகின்றோம்.
நித்தன் - என்றும் அழியாத புகழ்உடம்பைப் பெற்றவன்.

பண் :

பாடல் எண் : 84

தனையொப் பருமெருக் கத்தம்
பூலியூர்த் தகும்புகழோன்
நினையொப் பருந்திரு நீலகண்
டப்பெரும் பாணனைநீள்
சினையொப் பலர்பொழில் சண்பையர்
கோன்செந் தமிழொடிசை
புனையப் பரனருள் பெற்றவ
னென்பரிப் பூதலத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நினைய`` என்பதன் இறுதி நிலை தொகுக்கப் பட்டது.
சினை - கிளை.
`சினை ஒப்ப` என்பதில் ``ஒப்ப`` என்பதும் அவ்வாறு நின்றது.
ஒப்ப அலர்தல் - யாவும் ஒன்றுபோல மலர்களைப் பூத்தல்.
சண்பை - சீகாழி.
சண்பையர் கோன், திருஞானசம்பந்தர்.
`அவரது செந்தமிழோடு` என்க.

பண் :

பாடல் எண் : 85

தலம்விளங் குந்திரு நாவலூர்
தன்னில் சடையனென்னுங்
குலம்விளங் கும்புக ழோனை
யுரைப்பர் குவலயத்தில்
நலம்விளங் கும்படி நாம்விளங்
கும்படி நற்றவத்தின்
பலம்விளங் கும்படி யாரூ
ரனைமுன் பயந்தமையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதற்கண் உள்ள ``விளங்கும்`` என்னும் பெய ரெச்சம், ``திருநாவலூர்`` என்னும் ஏதுபெயர் கொண்டது.
உரைப்பர் - புகழ்வர்.
ஆரூரன், நம்பியாரூரன்.
சுந்தர மூர்த்தி நாயனார்.
`பயந்தமை சொல்லி` என ஒருசொல் வருவித்து, ``உரைப்பர்`` என்பதனோடு முடிக்க.
குவலயம் - நில வட்டம்.
அதன் நலமாவது, முற்செய்தவத்தோரும் அதன் பயனைப் பெற நிற்பது.
``நாம்`` என்றது தம்மையும் உளப்படுத்துச் சிவனடியார்களை.
பலம் - பயன்.
நற்றவத்தின் பயன் அடியார் பெருமையை அறிதல்.
அதனை அறிதலானே மக்கள் மக்களாய் விளங்குவர் ஆதலின் அது பற்றியே ``நாம் விளங்குபடி`` என்றார்.
``இவையெல்லாம் நம்பியாரூரர் திருநாவலூரில் சடையனார் பால் அவதரித்துத் திருத்தொண்டத் தொகையை அருளிச்செய்தமை யாலே` என்றபடி.

பண் :

பாடல் எண் : 86

பயந்தாள் கறுவுடைச் செங்கண்வெள்
ளைப்பொள்ளல் நீள்பனைக்கைக்
கயந்தா னுகைத்தநற் காளையை
யென்றுங் கபாலங்கைக்கொண்
டயந்தான் புகுமர னாரூர்ப்
புனிதன் அரன்திருத்தாள்
நயந்தாள் தனதுள்ளத் தென்று
முரைப்பது ஞானியையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வெள்ளைக் கயந்தான் உகைத்த நற் காளையைப் பயந்தாள்` என்றும், `அரன் புனிதனவன் திருத்தாள் தனது உள்ளத்து நயந்தாள் என்றும் (அறிந்தோர்) உரைப்பது ஞானியையே - எனக் கூட்டி முடிக்க.
கறுவி - பிறர் செய்த தீமையை மறவாது உட் கொண்டிருத்தல்; இஃது இன அடை.
பொள்ளல் - புழை.
கயம் - யானை.
உகைத்தது - ஊர்ந்தது ``யானையை `காளை` என்றல் சுந்தரர்க்கு ஏற்புடையதே.
அவர் வெள்ளை யானையை ஊர்ந்த காளை`` என்றது நயம்.
ஊர்ந்தது கயிலை செல்லுங்கால்.
ஐயம், `அயம்` எனப் போலியாயிற்று.
ஐயம் - பிச்சை.
``அவன்``, பகுதிப் பொருள் விகுதி.
உரைத்தற்கு வினைமுதல் வருவித்துக் கொள்க.
உரைப்பது, தொழிற் பெயர்.
`உரைப்பது தெளிவு` எனப் பயனிலையை வருவித்துக் கொள்க.
தொழிற்பெயர் எழுவாயாய் நிற்குமிடத்துப் பயனிலையை இவ்வாறு சொல்லெச்சமாக வைத்துப் போதல் ஒரு நடை.
இசை ஞானியை `ஞானி` எனச் சுருங்கச் கூறினார்.
`இவரது (`இசைஞானியாரது) பிறந்தகம் திருவாரூர் ஆதல் வேண்டும்` என ஆராய்ச்சியாளர் கருதுவர்.
இங்கு, ``ஆரூர்ப் புனிதனவன் திருத்தாள் தனது உள்ளத்து நயந்தாள்`` எனக் கூறி யிருப்பது அக்கருத்திற்கு அரண் செய்வதாய் உள்ளது.
இன்னும் அக் கூற்றினாலே, `ஆரூர்ப் பெருமானை நோக்கி இவர் செய்த தவத்தானே திருக்கயிலையில் இந்த ஆலால சுந்தரரைத் தமக்கு மகனாகப் பெறும் பேற்றைப் பெற்றார்` எனவும், அதனானே அந்த ஆரூர்ப் பெருமான் பெயரே இவருக்குப் பெயராக இடப்பட்டது` எனவும் கருத இடம் உண்டு.

பண் :

பாடல் எண் : 87

ஞானவா ரூரரைச் சேரரை
யல்லது நாமறியோம்
மானவ வாக்கை யொடும்புக்
கவரை வளரொளிப்பூண்
வானவ ராலும் மருவற்
கரிய வடகயிலைக்
கோனவன் கோயில் பெருந்தவத்
தோர்தங்கள் கூட்டத்திலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மாலை யாக்கையொடும் புக்கவரை`` என்பதை முன்னே கூட்டி, அதனோடும் முதல் அடியை ஈற்றிற் கூட்டுக.
``புக்கவர்`` என்றதும் பின்வரும் இருவரையே ``வடகயிலை`` எனப் பின்னர் வருதலின் வாளா, ``புக்கவரை`` என்றார்.
மானவ யாக்கை - உடல்.
மனித உடலை நீக்காமலே கயிலை அடைந்தவர்கள் சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் தவிரப் பிறர் ஒருவரும் சொல்லப்படவில்லை.
கயிலையை அடைந்த பின்னர் அவர்களது உடம்பு வேற்றியல்பைப் பெற்றிருக்கலாம்.
இது, களையா உடலொடு சேரமான், ஆரூரன்
விளையா மதமாறா வெள்ளானை மேல்கொள்ள 1 என ஒன்பதாம் திருமுறையிலும் எடுத்தோதப்பட்டது.
இனிச் சண்டேசுர நாயனாரைச் சேக்கிழார்,
அந்த உடம்பு தன்னுடனே
அரனார் மகனா ராயினார்
எனக் கூறியது,
செங்கண் விடையார் திருமலர்க்கை
தீண்டப் பெற்ற சிறுவனார்
அங்கண் மாயை யாக்கையின்மேல்
அளவின் றுயர்ந்த சிவமயமாய்
எனச் சிவபெருமான் செய்த பரிச தீக்கையால் என்பதை விளக்கினார்.
சேரரும், ஆரூரரும் அது செய்யப்படவில்லை.
``பெறுமவற்றுள் யாம் அறிவதில்லை`` என்பதிற் போல, அறிதல், இங்கு நன்கு மதித்தல்.

பண் :

பாடல் எண் : 88

கூட்டமொன் பானொ டறுபத்து
மூன்று தனிப்பெயரா
ஈட்டும் பெருந்தவத்தோரெழு
பத்திரண் டாம்வினையை
வாட்டுந் தவத்திருத் தொண்டத்
தொகைபதி னொன்றின்வகைப்
பாட்டுந் திகழ்திரு நாவலூ
ராளி பணித்தனனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கூட்டம் - தொகை.
எனவே, `திருத்தொண்டத் தொகையிற் சொல்லப்பட்ட நாயன்மார்களில் ஒன்பதின்மர் தொகை யடியார்கள்` எனவும் கூறியதாயிற்று.
`பதினொன்று` என்றது பாடல் தொகை.
எனவே, `பாட்டுப் பதினொன்றின் வகை, ஒன்பானொடு, தனிப்பெயர் எழுபத்திரண்டாப் பணித்தனன்` என்பது கொண்டு கூட்டாயிற்று.
``வினையை`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.
``பாட்டும்`` என்னும் உம்மும், மேற்போந்த ஒன்பது, அறுபத்தொன் றாய்ப் பாகுபட்டமையைத் தழுவிற்று.

பண் :

பாடல் எண் : 89

பணித்தநல் தொண்டத் தொகைமுதல்
தில்லை யிலைமலிந்த
அணித்திகழ் மும்மை திருநின்ற
வம்பறா வார்கொண்டசீர்
இணைத்தநல் பொய்யடி மைகறைக்
கண்டன் கடல்சூழ்ந்தபின்
மணித்திகழ் சொற்பத்தர் மன்னிய
சீர்மறை நாவனொடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அணிதிகழ், சீர் இணைத்தல், பின் மணித்திகழ் சொல் - இவை செய்யுள் நோக்கி அடைமொழிகளாய் வந்தன.
இதனுள் பதினொரு முதல் நினைப்புக்கள் கூறப்பட்டமை காண்க.
இப் பாட்டுத் திருத்தொண்டத் தொகையை மனப்பாடம் செய்து சொல்வார்க்குப் பயன் தரும்.
``அணித்திகழ்`` என்பதில் தகர ஒற்று விரித்தல் மணித்திகழ் - மணிபோலத் திகழ்கின்ற.

பண் :

பாடல் எண் : 90

ஓடிடும் பஞ்சேந் திரிய
மொடுக்கியென் னூழ்வினைகள்
வாடிடும் வண்ணம்நின் றெத்தவம்
செய்தனன் வானினுள்ளோர்
சூடிடுஞ் சீர்த்திருப் பாதத்தர்
தொண்டத் தொகையினுள்ள
சேடர்தஞ் செல்வப் பெரும்புக
ழந்தாதி செப்பிடவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``எத்தவம் செய்தனன்`` என்பதற்கு, `யான்` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க.
சேடர் - பெருமையுடையவர்.
இப் பாட்டே இவ்வந்தாதியின் முதற் செய்யுள் முதற் சொல்லால் முடிந்தமை யின் ஈற்று மூன்று பாடல்களுங்கூட ஆசிரியர் அருளிச் செய்தனவே என்க.
திருத்தொண்டர் திருவந்தாதி முற்றிற்று.

பண் :

பாடல் எண் : 1

பார்மண் டலத்தினிற் பன்னிரு
பேரொடு மன்னிநின்ற
நீர்மண் டலப்படப் பைப்பிர
மாபுரம் நீறணிந்த
கார்மண் டலக்கண்டத் தெண்தடந்
தோளான் கருணைபெற்ற
தார்மண் டலமணி சம்பந்தன்
மேவிய தண்பதியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஆளுடைய பிள்ளையார், திருஞானசம்பந்தர்.
பார் மண்டலம் - நிலவட்டம்.
சீகாழியின் பன்னிரு பெயர்களாவன, பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சை, கழுமலம்` என்பன.
இவைகளைத் திருஞானசம்பந்தர் திருப்பதிகங்களால் அறிக.
படப்பை - தோட்டம்.
கார் மண்டலக் கண்டம் - கறுத்த வட்டத்தையுடைய கழுத்து.
தார் மண்டலம் - மார்பிலணியும் மாலை வட்டம்.
மேவிய - அவதரித்த.
பதி - நகரம் எண்தோளன் கருணை பெற்ற சம்பந்தன் மேவிய தண்பதி பிரமபுரம்` என முடிக்க.
எண்தோளன் - சிவபெருமான்.

பண் :

பாடல் எண் : 2

பதிகப் பெருவழி காட்டிப்
பருப்பதக் கோன்பயந்த
மதியத் திருநுதல் பங்க
னருள்பெற வைத்தஎங்கள்
நிதியைப் பிரமா புரநகர்
மன்னனை யென்னுடைய
கதியைக் கருதவல் லோரம
ராவதி காவலரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பெருவழி, பல சிறுவழிகள் வந்து (குறுகிய தூர வழிகள்) வந்து சேரும் நெருந்தூர வழி சமயத் துறையில் பெருவழி, சைவம் பிற சமயங்கள் யாவும் அதனுள் அடங்கும்.
ஓதுசமயங்கள், பொருள் உணரும் நூல்கள்
ஒன்றோ டொன்று ஒவ்வாமல் உளபலவும்;
யாது சமயம்? பொருள்மூள் யாது இங்கு? என்னில்,
இவற்றுள்
`இது ஆகும்; இது அல்லது; எனும் பிணக்கது இன்றி,
நீதியினால் இவையாவும் ஓரிடத்தே காண
நின்றது யாது, அதுசமயம், பொருள் நூல்;
ஆதலினால் இவையிரண்டும் அருமறை, ஆகமத்தே
அடங்கியிடும்; இவையிரண்டும் அரனடிக்கீழ் அடங்கும்.
என்னும் சிவஞான சித்தியைக் காண்க.
பதிகப் பெருவழி - பதிகமாகிய பெருவழி.
வழிகாட்டும் கருவியை, ``வழி`` என்றது கருவியாகு பெயர்.
மதியத் திரு நுதல் - பிறைபோலும் அழகிய நெற்றியை உடைய மகள்.
``பங்கனது அருளை நாங்கள் பெற வைத்த (பெறுதற்கு வாய்ப்பு அளித்த) நிதி`` என்க.
நிதி, உருவகம்.
கதி - சென்று அடையும் இடம்.
அமராவதி - தேவேந்திரன் நகர்.
`அதைக் காப்பவர்`, என்றது, `இந்திரன் ஆவர்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 3

காப்பயில் காழிக் கவுணியர்
தீபற்கென் காரணமா
மாப்பழி வாரா வகையிருப்
பேன்என்ன, மாரனென்னே!
பூப்பயில் வாளிக ளஞ்சுமென்
நெஞ்சுரங் கப்புகுந்த;
வேப்பயில் வார்சிலை கால்வளை
யாநிற்கும் மீண்டிரவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டுக் கைக்கிளைத் தலைவி காதலால் ஆற்றாது கூறியது.
கா பயில் - சோலைகள் மிகுந்த.
கவுணியர் தீபன் - கவுணிய கோத்தரத்தவர்கட்கு ஒரு விளக்காக வந்தவர், ஞானசம்பந்தர்.
`அவருக்கு, நான் இறந்துபட்டால் பெண் பழி வரும்; அது கூடாது` என்று நான் எவ்வளவோ ஆற்றி யிருந்தாலும் மாரன் வாளிகள் அஞ்சும் என் நெஞ்சு அரங்கம் புகுந்தன; மீண்டும் அவன் இந்த அரவிலே தனது வில்லை வளைக்கின்றான் - என்பதாம்.
``என்னே`` என்பதை இறுதியிற் கூட்டி `நான் என் செய்வேன்` என உரைக்க.
மாப் பழி - பெரும் பழி; பெண் பழி என்ன - என்று நான் கருதியிருக்க.
வாளிகள் - அம்புகள்.
வேப் பயில் சிலை - வெப்பம் மிகுந்த வில்.
கால் - முனைகள்.
`மீண்டும் சிலை கால் விளயாநிற்கும்? என இயைத்து முடிக்க.
இரவு - இரவின்கண்.

பண் :

பாடல் எண் : 4

இரவும் பகலும்நின் பாதத்
தலரென் வழிமுழுதும்
பரவும் பரிசே யருளுகண்
டாயிந்தப் பாரகத்தே
விரவும் பரமத கோளரி
யே!குட வெள்வளைகள்
தரளஞ் சொரியுங் கடல்புடை
சூழ்ந்த தராய்மன்னனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``இந்தப் பராகத்தே`` முதலாகத் தொடங்கி உரைக்க, ``பாதத்து`` என்பதில் அத்து, வேண்டா வழிச் சாரியை.
`பாரகத்தே விரவும்` என்க.
பாத அலர், உருவகம்.
வழி - சந்ததி.
விரவும் பரமதம்- பலவாகக் கூடுகின்ற வேற்றுச் சமயங்கள்.
கோளரி - சிங்கம்.
`வேற்றுச் சமயங்களாகிய யானைகட்குச் சிங்கமாய் உள்ளவர்` என்பது பொருள் ஆகலான் இஃது ஏகதேச உருவகம்.
இது `பரசமய கோளரி` என்றும் வரும்.
குடவளைகள் - குடம் போன்ற சங்குகள்.
தரளம் - முதாது.
`பூந்தராய்` என்பதை, ``தராய்`` என்றது தலைக் குறை.

பண் :

பாடல் எண் : 5

மன்னிய மோகச் சுவையொளி
யூறோசை நாற்றமென்றிப்
பன்னிய ஐந்தின் பதங்கடந்
தோர்க்குந் தொடர்வரிய
பொன்னியல் பாடகம் கிங்கிணிப்
பாத நிழல்புகுவோர்
துன்னிய காஅமர் சண்பையர்
நாதற்குத் தொண்டர்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மோகம் - மயக்கம்.
மோக ஐந்து - மயக்கத்தைத்தரும் ஐம்புலன்கள்.
பதம் - அவற்றின் ஆற்றல்.
ஐம்புல ஆற்றலைக் கடந்தோர், `துறவிகள், எல்லா நெறிகளிலும் துறவு நிலை உள்ளது எனினும், ஞானசம்பந்தருக்குத் தொண்டர் ஆகியவர்களே அவர் அடைந்த பேற்றினை அடைவர்` என்பதாம்.
அவர் அடைந்த பேறுசிவ சாயுச்சியம் அதனை,
போதநிலை முடிந்த வழிப்
புக்கு ஒன்றி உடன் ஆனார் 1 என்றதனால் உணர்க.
பாதம், ஞானசம்பந்தருடையன.
அவை சென்றது இறைவர் திருவடி நிழலில்.
பாத நிழல் புகுவோர் - அடியொற்றிச் சொல்பவர்.
துன்னிய கா அமர் சண்பையர் நாதன் - நெருங்கிய சோலைகள் பொருந்திய சீகாழியில் உள்ள அந்தணர் கட்குத் தலைவன்; ஞானசம்பந்தர்.

பண் :

பாடல் எண் : 6

தொண்டினஞ் சூழச் சுரிகுழ
லார்தம் மனந்தொடர,
வண்டினஞ் சூழ வருமிவன்
போலும், மயிலுகுத்த
கண்டினஞ் சூழ்ந்த வளைபிரம்
போக்கழு வாவுடலம்
விண்டினஞ் சூழக் கழுவின
ஆக்கிய வித்தகனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, ஞானசம்பந்தரது வீதி யுலாவைக் கண்டாள் ஒருத்தி கூறியது.
தொண்டு இனம் - அடியார் கூட்டம்.
இஃது அவரைச் சூழ்ந்து செல்கின்றது.
அவரைக் கண்ட மகளிரது மனங்களோ அக்கூட்டத்தைப் பின் தொடர்ந்து செல்கின்றன.
அவர் அணிந்துள்ள தாமரை மலரை விரும்பி வண்டுக் கூட்டமும் சூழ்கின்து.
``கண்டினம்`` என்பதை, `கண்+தினம்` எனப் பிரித்து, `மயில் தினம் உகுத்த கண்` என்க.
`கண்` என்பது ஆகுபெயராய் அதற்கு இடமாகி தோகையைக் குறித்ததும் தானியாகுபெயர்.
கண் வளை பிரம்போர் - மயில் தோகைகளை வளைத்துக் கட்டிய பிரம்பை உடைய சமணர்கள், `மயிலைக் கொன்று எடுக்காமல், அது தானாக உகுத்த தோகையைக் கொள்வர்` என்க.
நீராடாமை அவர் நோன்பு ஆகலின், ``கழுவா உடலம்`` என்றார், கழுவின - கழுவில் ஏறியிருப்பன.
``கழுவா உடலம் கழுவின ஆக்கின`` என்றது நயம்.
குருதியால் கழுவப்பட்டது என்க.
இனம் விண்டு சூழ - கழுவில் ஏறினார்க்கு இனமாய் உள்ளவர்கள் கழு மரங்களைச் சூழ்ந்து நிற்க.
வித்தகம் - சதுரப்பாடு உடையவன்.
`வாதில் வென்றவன்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 7

வித்தகம் பேசி,நம் வேணுத்
தலைவனை வாள்நிகர்த்து
முத்தகங் காட்டும் முறுவல்நல்
லார்தம் மனம்அணைய,
உய்த்தகம் போந்திருந் துள்ளவும்
இல்லா தனவுமுறு
பொத்தகம் போலும்! முதுமுலைப்
பாணன் புணர்க்கின்றதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, அகன் ஐந்திணையுள் மருதத் திணைய தாய், வாயில் வேண்டிய பாணனைக் கழறித் தலைவி வாயில் மறுத்தது.
`பாணன் முது முலை புணர்க்கின்றது, (அவன் பேசுகின்ற) உள்ளவும், இல்லாதனவும் உறும் பொத்தகம் - அவ் இருசொற்களும் பொதிந்து உள்ள புத்தகம்.
தலைவி புதல்வனைப் பெற்றுள்ளாள் ஆகலின் தனது கொங்கைகளை ``முதுமுலை`` என்றாள்.
இங்ஙனம் கூறவே `நம்மை விரும்பாமல் இளையராகிய பரத்தையரைத் தேடி அவர் சேரியில் சென்று இரவெல்லாம் தங்கிவிட்டு, இங்குத் தங்குதல் மாத்திரைக்கு விடியலில் வர விரும்புகின்ற தலைவனை நம் இல்லத்துள் விடுத்தற்கு இப்பாணன் உள்ளதும், இல்லதுமாக ஏதேதோ சொல்லிக் கதைக் கின்றான்` எனத் தலைவி பாணனைக் கழறி வாயில் மறுத்தாளாம்.
``பரத்தையர் சேரியிலும் சென்று இப்படியே அவர்களிடம் பொய்யும், புனைவும் கூறி நம் தலைவனை அவர்கள் இல்லினுட் புகவிடுவதே இவனது தொழில்; அந்த தொழிலை நம் முன்பும் செய்ய வந்திருக்கின்றான்; ஆயினும் அது பலிக்காது`` என்றற்கு, ``பாணன் நம் முலை புணர்க் கின்றது, உள்ளவும், இல்லாதனவும் உறு பொத்தகம் போலும்`` என்றாள்.
புணர்க்கின்றது - புணர்ப்பதற்குக் கூறும் சொல், பொத்தகம் - இவன் கற்ற புத்தகத்தில் உள்ள சொற்கள்; ஆகுபெயர்.
`பாணன் தலைவனை முதுமுலை புணர்க்கின்ற சொல் பொத்தகம் போலும்` என்க.
வேணு - மூங்கில்.
இது முத்துக் களைப் பிறப்பிக்கும்.
`அது போல நம் தலைவன் பரத்தையரது வாய்களில் முத்துப் போலும் பற்களை வெளித்தோன்றி விளங்கச் செய்கின்றான்` என்பாள், ``நம் வேணுத்தலைவனை`` என்றும், `முத்து அகம் காட்டும் முறுவல் நல்லார்`` என்றும் கூறினார்.
வாள் - ஒளி நிகர்ந்து - நிகர்ப்ப; ஒரு படித்தாய் விளங்க.
வேணுத் தலைவன், உவமத் தொகை.
தலைவனை அவர்களது அகத்தில் வித்தகம் பேசி உய்த்து, தானும் போந்து இருந்து, அவர்தம் மனம் தலைவன்பால் அணைதற்குப் பேசுகின்ற` உள்ளவும் இல்லாதனவும் பொருந்திய பொத்தகம் எனக் கொள்க.
``முத்து அகம்`` என்பதில் அகம் - செப்பு.
வாய் இங்ஙனம் உருவகிக்கப்பட்டது.
``காட்டும்`` என்றது, `திறந்து காட்டு` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 8

புணர்ந்தநன் மேகச் சிறுநுண்
துளியின் சிறகொதுக்கி
உணர்ந்தனர் போல விருந்தனை
யால்உல கம்பரசும்
குணந்திகழ் ஞானசம் பந்தன்
கொடிமதில் கொச்சையின்வாய்
மணந்தவர் போயின ரோசொல்லு,
வாழி! மடக்குருகே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, தலைவன் பிரிவால் ஆற்றாமை மிக்க தலைவி குருகோடு சொல்லி இரங்கியது இது, ``காமம் மிக்க கழிபடர் கிளவி`` எனப்படும்.
`குருகே! (நீயும்) மேகச் சிறு நுண் துளியில் சிறகை உதறி, ஆற்றியிருந்தவரைப் போல இருந்தனை.
(எனினும் உனது ஆற்றாமை தெரிகின்றது.
) இக்கொச்சையில் (என்னை மணந்தவரைப் போல) உன்னை மணந்தவரும் உன்னைத் தனியே விட்டுப் போயினரோ? சொல்லு` என உரைக்க.
``மேகத் துளியில்`` என்றதனால் அவர் சொல்லிச் சென்ற கார் காலம் வந்தமையைக் குறித்தாள்.
உணர்தல் - இங்கே, மெலியாது ஆற்றியிருத்தல்.
பரசுதல் - துதித்தல்.
குணம், பத்தி நெறிப் பண்பு.
கொச்சை - சீகாழி.
வாய், ஏழன் உருபு.
வாழி, அசை.
மடம் - இளமை.
குருகு - நீர்ப் பறவைப் பொது.

பண் :

பாடல் எண் : 9

குருந்தலர் முல்லையங் கோவல
ரேற்றின் கொலைமருப்பால்
அருந்திற லாகத் துழுதசெஞ்
சேற்றரு காசனிதன்
பெருந்திற மாமதில் சண்பை
நகரன்ன பேரமைத்தோள்
திருந்திழை ஆர்வம்
. . . . . . . . . முரசே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(இப்பாட்டின் ஈற்றடி ஏடு சிதலமாகி முழுமையாகக் கிடைக்காமையால் இதன் முழுப் பொருளை அறிதல் அரிதாகின்றது.
) இப்பாட்டு முல்லைத் திணைத் துறையை உடையதாகத் தெரி கின்றது.
ஏறு தழுவள் குறிப்பு உள்ளது.
அருக - அசனி = அருகாசனி; சமணர்கிளாகிய பாம்புகளுக்கு இடிபோன்றவன்; ஞானசம்பந்தர்.
சண்பை நகர் - சீகாழி - அமை - மூங்கில்.

பண் :

பாடல் எண் : 10

முரசம் கரைய,முன் தோரணம்
நீட, முழுநிதியின்
பரிசங் கொணர்வா னமைகின்
றனர்பலர்; பார்த்தினிநீ
அரிசங் கணைதலென் னாமுன்
கருது, அரு காசனிதன்
சுரிசங் கணைவயல் தந்த
நகரன்ன தூமொழிக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(இப்பாட்டு, தலைவியது நொதுமலர் வரைவு முடுக்கம் கண்டு தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.
) `அங்கு முரசு அறைய` என மாற்றி யுரைக்க.
முன் - தங்கள் வருகையின் முன்னால்.
பரிசம், பெண்ணை மணம் கொள்ளுதற்குத் தரும் விலை.
அமைகின்றனர் - இசைகின்றனர்.
``பலர்`` என்றதனால், `இன்னும் இருமுது குரவர் மகட் கொடை நேர்திலர்` என்பது பெறப் படும்.
``நீ`` என்பதற்கு முன் ``தாயே`` என்பது வருவிக்க.
`சங்கு, மணவினைச் சங்கு` என்பது தோன்றுதற்கு, ``அரி சங்கு`` என்றாள்.
அரி - திருமால்.
அவன் காத்தற் கடவுள் ஆதலின் அவன் சங்கு மங்கலச் சங்காம்.
அணைதல் - அணைக; வியங்கோள்.
என்னாமுன்- என்று இருமுது குரவர் கூறுதற்கு முன்.
அஃதாவது, மணத்திற்கு இசைவதற்கு முன் தூமொழி, தலைவி.
நான்கன் உருபை ஏழன் உருபாகத் திரித்து, `தூமெழிக்கண் நிகழ்ந்துள்ளதை கருது` என ஒரு சொல் வருவித்து முடிக்க.
நிகழ்ந்துள்ளது, தலைவன் ஒருவனோடு களவிற் கூடிய கூட்டம்.
அணை வயல் - நீர் மடைகளை உடைய வயல்.
`வயல் சுரிசங்கினைத் தந்த நகர்` என்க.
`அருகாசனிதன் நகர் அடைதற்கு அரிதாதல் போல இவள் அடைதற்கு அரியள்` என்பாள், ``அருகாசனிதன் நகர் அன்ன தூமொழி`` என்றாள்.

பண் :

பாடல் எண் : 11

மொழிவது, சைவ சிகாமணி
மூரித் தடவரைத்தோள்
தொழுவது, மற்றவன் தூமலர்ப்
பாதங்கள்; தாமங்கமழ்ந்
தெழுவது, கூந்தல் பூந்தா
மரையினி யாதுகொலோ!
மொழிவது, சேரி முப்புதை
மாதர் முறுவலித்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தொழிற் பெயர் எழுவாய்கள் வினைகொண்டு முடியும் உருவுகளைப் பயனிலையாக ஏற்றல் இயல்பாகலின், ``மொழிவது, தொழுவது`` என்னும் தொழிற் பெயர்கள், ``தோளை, பாதங்களை`` என்னும் இரண்டன் உருபோடு முடிந்தன.
இரண்டன் உருபுகள் இங்கு இறுதிக்கண் தொக்கன.
எழுவது என்னும் எழுவாய், ``தாமரை`` என்னும் பெயர்ப் பயனிலை கொண்டு முடிந்தது.
ஈற்றில் நின்ற ``மொழிவது`` என்னும் எழுவாய், ``யாது`` என்னும் வினாப் பயனிலை கொண்டு முடிந்தது.
கொல், ஓ அசைகள்.
மொழிவது - புகழ்வது.
மூரித் தடவரைத் தோள் - பெரிய, அகன்ற மலைபோலும் தோள்கள்.
மற்று, வினைமாற்று.
தாமம் - மாலை.
`தாமமாய்` என ஆக்கம் வருவிக்க.
அகரச் சுட்டு `அவன் அணிந்த` எனப் பொருள் தந்தது.
முரி - மாறுபாடு.
புதைத்தல் - மறைத்தல் `சேரி மாதர்` என இயையும்.
முறுவலித்து - தமக்குள் எள்ளி நகையாடி.
`நாம் விரும்பிப் புகழ்வது சைவ சிகாமணி தோள்களையும், தொழுவது அவனது பாதங்களையும், கூந்தலில் மணங்கமழ அணிவது அவனது நினைவாக அவனுக்கு அடையாளமாகிய தாமரை மலர்மாலையுமாக ஆய்விட்டபொழுது சேரிப் பெண்டிர் நம்மை நகைத்துப் பேசுவதற்கு என்ன கிடக்கின்றது` என்பது இதன் திரண்ட பொருள்.
இப்பாட்டு, தன்னைத் தூதுவிடக் கருதிய கைக்கிளைத் தலைவிக்கு, ``இஃது அம்பல் அலராதற்கு ஏதுவாய்விடும்`` வன்புறை கூறியது.

பண் :

பாடல் எண் : 12

வலிகெழு குண்டர்க்கு வைகைக்
கரையன்று வான்கொடுத்த
கலிகெழு திண்தோள் கவுணியர்
தீபன், கடலுடுத்த
ஒலிதரு நீர்வை யகத்தை
யுறையிட்ட தொத்துதிரு
மலிதரு வார்பனி யாம்,மட
மாதினை வாட்டுவதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, ஒருவழித் தணந்து வந்த தலைமகனைத் தோழி குறியிடத்தில் நேர்ந்து வரைவு கடாயது.
`மாதினை வாட்டுவது வார்பனியாம்` என முடிக்க.
`உன்னைப் புல்லிக் கிடத்தலால் தலைவிக்கு மிக இனிதாதற்கு உரிய பனிக்காலம், நீ தணந்தமையால் மிக இன்னதாயிற்று` என்றபடி.
இதன் பயன் தலைவன் தலைவியை வரைந்தெய்து வானாதல், `கவுணியர் தீபன் (தனது திருவருள் வலியால்) வையகத்தை உறையிட்டது.
(மூடி மறைத்தது) ஒத்து உதிரும் பனி` என்க.
`வைகைக் கரையில்` என ஏழாவது விரிக்க.
கலி - ஆரவாரம்; புகழ் ஆரவாரம்.
கெழு - பொருந்திய.
`உதிரும் பனி, மலிதரு பனி, வார் பனி` எனத் தனித்தனி முடிக்க.
வார்தல் - ஒழுகுதல்.
`சில வேளை உதிர்ந்தும், சில வேளை ஒழுகியும் விழும் பனி` என்றபடி.
குறிஞ்சித் திணைக்கு முன்பனிக் காலமாகிய பெரும்பொழுது உரித்தாக ஓதப்பட்டமை நினைக.

பண் :

பாடல் எண் : 13

வாட்டுவர் தத்தந் துயரை;வன்
கேழலின் பின்புசென்ற
வேட்டுவர் கோலத்து வேதத்
தலைவனை மெல்விரலால்,
தோட்டியல் காத னிவனென்று
தாதைக்குச் சூழ்விசும்பில்
காட்டிய கன்றின் கழல்திற
மானவை கற்றவரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.
வன் கேழல் - காட்டுப் பன்றி.
சிவபெருமான் பன்றிப்பின் சென்றது.
அருச்சுனனுக்காக.
``கழல் திறம்`` என்று, `திருவருள் ஆற்றல்` என்றபடி.
ஆற்றல், அதனால் விளைந்த அற்புதங்களைக் குறித்து.
``கற்றவர்`` என்பது, கேட்டவர், பயின்றவர் ஆகியோரையும் தழுவி நின்ற உபலக்கணம்.
``கன்று`` என்றது குறிப்புருவகம் ஆதலின், `யானைக் கன்று` எனக் காதற் சொல்லாயிற்று.

பண் :

பாடல் எண் : 14

அவர்சென் றணுகுவர்; மீள்வதிங்கு
அன்னை யருகர்தம்மைத்
தவர்கின்ற தண்டமிழ்ச் சைவ
சிகாமணி சண்பையென்னப்
பவர்கின்ற நீள்கொடிக் கோபுரம்
பல்கதி ரோன்பரியைக்
கவர்கின்ற சூலத் தொடுநின்று
தோன்றுங் கடிநகரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, உடன்போக்கால் பிரிந்த தலைவியைத் தேடிப் பின் சென்ற செவிலிக்கு, முன் சென்ற வரைக்கண்டோர் கூறியது.
`அன்னை! அவர் சென்று கடிநகர் அணுகுவர்; (ஆகவே, நீ இனிச் செய்யத்தக்கது) மீள்வதே` என இயைத்து முடிக்க.
அவர் - தலைவன்.
தலைவியர் `தவல்விக்கின்ற` என்பது இவ்விகுதி தொகுக்கப்பட்டு, ஏதுகை நோக்கி லகரம் ரகரமாய்த் திரிந்து நின்றது.
தவல்வித்தல் - அழித்தல்.
`சண்பை என்னக் கோபுரம் சூலத் தொடு தோன்றும் கடி நகர் என்க.
கடி - காவல்.
இந்நகர் தலைவன் உடையது.
பவர்தல் - படர்தல்.
`கொடி` என்னும் பெயர் ஒருமை பற்றி, ``படர்கின்ற`` என்றார்.
பல் கதிரோன் - சூரியன்.
`அவனது தேர்க் குதிரைகளைச் சூலம் தனது உயர்ச்சியால் கவர்கின்றது` என்பதாம்.
கவர்தல், இங்கே தடுத்தல்.

பண் :

பாடல் எண் : 15

நகரங் கெடப்பண்டு திண்தேர்
மிசைநின்று, நான்மறைகள்
பகரங் கழலவ னைப்பதி
னாறா யிரம்பதிகம்
மகரங் கிளர்கடல் வையம்
துயர்கெட வாய்மொழிந்த
நிகரங் கிலிகலிக் காழிப்
பிரானென்பர், நீணிலத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நகரம், திரிபுரங்கள்.
``நின்று`` என்னும் செய்தென் எச்சம் எண்ணின்கண் வந்தது.
எனவே, `ஒரு காலத்தில் நான்மறை களைப் பகர்ந்தவனும், அழகிய கழல்களை உடையவனும் ஆகிய அவனை மொழிந்த நிகர் இலி` என்பது பொருளாயிற்று.
ஒரு காலத்தில் நான்மறை பகர்ந்தது, படைப்புக் காலத்தில் ஆல்நிழலில் ``அவனை`` என்பதை, `அவன்மேல்` எனத் திரித்துக் கொள்க.
``வாய்`` என்ற வேண்டாக் கூற்று, `ஞானப் பால் உண்ட` என்னும் சிறப்பினைத் தோற்றுவித்தது.
மகரம் - சுறாமீன்.
அங்கு, அசை.
நிகர்இலி - தனக்கு நிகராவார் ஒருவரையும் இல்லாதவன்.
கவிக் காழி - ஆரவாரம் மிக்க சீகாழி.
`அம் கழலவனைப் பதினாறாயிரப் பதிகம் வாய் மொழிந்த நிகர் இலியாவான் காழிப் பிரான் என்பர்` என முடிக்க.
``நீள் நிலத்து`` என்றது.
`நிலத்துள்ளார் யாவரும்` என்பது தோன்றுதற்கு.

பண் :

பாடல் எண் : 16

நிலம் ஏறியமருப் பின்திரு
மாலும், நிலம்படைத்த
குலம் ஏறியமலர்க் கோகனை
தத்தய னுங்கொழிக்குஞ்
சலம் ஏறியமுடி தாள்கண்
டிலர்,தந்தை காணவன்று
நலம் ஏறியபுகழ்ச் சம்பந்தன்
காட்டிய நாதனையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நிலம் ஏறிய மருப்பின் திருமால் - வராக அவதாரத்தில் பூமி ஏறி நின்ற கொம்பினை உடைய மாயோன்.
குலம் ஏறிய - சிறப்பு மிகுந்த.
கோகனம் - தாமரை.
அது `கோகனதம்` என்றும் மருவி வரும்.
சலம் - கங்கை.
`முடியும், தாளும் கண்டிலர்` என்க.
இவையிரண்டும் ``திருமாலும், அயனும்`` என்பவற்றோடு எதிர்நிரல் நிறையாய் இயைந்தன.
சம்பந்தன் அன்று தந்தை
காணக் காட்டிய நாதனைத்
திருமாலும், அயனும் தாள்,
முடி கண்டிலர்.
என இயைத்து முடிக்க.
``நாதனைத் தாள் முடி கண்டிலர்`` என்பதில், ``யானையைக் கோட்டைக் குறைத்தான்`` என்பது போலச் சிறுபான்மை முதல், சினை இரண்டிலும் இரண்டன் உருபு வந்தது.

பண் :

பாடல் எண் : 17

நாதன் நனிபள்ளி சூழ்நகர்
கானக மாக்கிஃதே
போதின் மலிவய லாக்கிய
கோனமர் பொற்புகலி
மேதை நெடுங்கடல் வாருங்
கயலோ? விலைக்குளது
காதி னளவும் மிளிர்கய
லோ?சொல்லு; காரிகையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு,
காமஞ் சாலா இளமையோளாகிய
நெய்தல் நிலத் தலைவி பால் அந்நிலத்
தலைவன் ஏமம் சாலா இடும்பை
யாகிய கைக்கிளைப் பட்டுச்
சொல் எதிர் பெறான், சொல்லி இன்புற்றது.
2 `காரிகையே! விலைக்கு உள்ளது (நீ விற்பது) கடலினின்றும் வாரிய கயலோ? அல்லது (உனது முகத்தில்) காதளவும் சென்று மிளிர்கின்ற கயலோ? (ஏது?) சொல்லு` என `மீன் விற்கின்ற நீ உன் கண்ணால் என்னை வாட்டுகின்றாய்` என்பதாம்.
நாதன் நனி பள்ளி நகர் - சிவபெருமானது `திருநனி பள்ளி` என்னும் தலம்.
``சூழ்`` என்னும் முதலனிலைத் தொழிற் பெயர் ஆகுபெயராய், அத்தொழிலை உடைய இடத்தைக் குறித்தது.
`முன்பு கானகம் ஆக்கிப் பின்பு அதனையே வயல் ஆக்கிய கோன்` என்க.
`கானகம்` என்பது முல்லை நிலமும், `வயல்` என்பது மருத நிலமும் ஆவன ஆயினும் அவை சிறு பான்மை பற்றி ஓதப்பட்டனவேயாகும்.
ஏனெனில், இது பாலை நெய்தல் பாடியதாகவே பிற இடங்களிலும் சொல்லப்படுதலாலும், இவ் ஆசிரியர்தாமே.
நனிபள்ளியது - பாலைதனை
நெய்தல் ஆக்கியும்
எனக் கூறுதலாலும் என்க.
மேதை - புகலிக் கடல் - சீகாழியைச் சார்ந்து நிற்கும் கடல்.

பண் :

பாடல் எண் : 18

கைம்மையி னால்நின் கழல்பர
வாது,கண் டார்க்(கு)இவனோர்
வன்மைய னேயென்னும் வண்ணம்
நடித்து, விழுப்பொருளோ(டு)
இம்மையில் யானெய்து மின்பங்
கருதித் திரிதருமத்
தன்மையி னேற்கும் அருளுதி
யோ!சொல்லு சம்பந்தனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கைம்மை - சிறுமை.
இஃது இப்பொருட்டாயின் பரவாமைக்கு காரணமாகும்.
இவ்வாறன்றி, `கைம்மை - கைத் தொண்டு` எனின், அது `கைத்தொண்டினால் பரவுதலைச் செய்யாமை` எனப் பரவுதலின் வகையைக் குறிக்கும்.
வன்மையன் - வல்லமை யுடையவன்; அஃதாவது, `வீடு பேற்றைப் பெற வல்லவன்` என்பதாம்.
விழுப்பம் - மேன்மை.
``திறன் அறிந்து தீதின்றி வந்து பொருள் அறம், இன்பம் இரண்டையும் தரும் 2 ஆதலின், ``விழுப் பொருள்`` எனப்பட்டது.
ஓடு, எண்ணிடைச் சொல்.

பண் :

பாடல் எண் : 19

பந்தார் அணிவிரற் பங்கயக்
கொங்கைப் பவளச்செவ்வாய்க்
கொந்தார் நறுங்குழல் கோமள
வல்லியைக் கூறருஞ்சீர்
நந்தா விளக்கினைக் கண்டது
நானெப்பொழுது முன்னுஞ்
சந்தார் அகலத் தருகா
சனிதன் தடவரையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, குறிஞ்சித் திணையில் `வறுங்களம் நாடி மறுகல்` என்னும் துறையது.
அஃதாவது தலைவியைத் தமர் இற்செறிக்கத் தினைப்புனமும் கொய்யப்பட்ட பின்னர்த் தலைவன் அவண் சென்று வெற்றிடத்தைக் கண்டு வருந்தித் தன்னுள்ளே கூறியது.
பந்து ஆர் விரவு - ஆடுவதற்கான பந்து சேர்ந்திருக்கும் விரல்களை உடையவள்.
சிலர், `பந்தவாது, அகங்கை புறங்கைகளின் திரட்சி` என்பர்.
அதனை எடுத்துக் கூறுதலால் பயன் யாதும் இல்லை யாகலானும், அஃது ஆடவர்கட்கும் உள்ளதே யாகவனும், அது பொருந்தா உரையாம்.
பங்கயம் - தாமரை, அஃது ஆகுபெயராய், அதன் அரும்பைக் குறித்தது.
பங்கயக் கொங்கை, பவள வாய்.
உவமத் தொகைகள்.
கோமள வல்லி - அழகிய கொடி போன்றவள்; உவமையாகுபெயர்.
நந்தா விளக்கு - அணையா விளக்கு.
இதுவும் உவமையாகுபெயரே.
`நான் கண்டது எப்பொழுது` என வருத்தத்தால் அண்மைக் காலத்தை மிகக் கடந்த சேய்மைக் காலமாக மயங்கி நினைவு கூர்வானாய் வருந்திக் கூறினான்.
`அருகாசனிதன் தடவரைக் கண்` என ஏழாவது இறுதிக்கண் தொக்கது.
முன்னும் - நினைக்கப் படுகின்ற.
`முன்னும் அருகாசனி` என்க.
சந்து ஆர் அகலத்து - சந்தனம் பொருந்திய மார்பினை உடைய.

பண் :

பாடல் எண் : 20

வரைகொண்ட மாமதில் சண்பைத்
தலைவனை வாழ்த்தலர்போல்
நிரைகொண்டு வானோர் கடைந்ததின்
நஞ்ச நிகழக்கொலாம்,
நுரைகொண்டு மெய்ப்பரத் துள்ளஞ்
சுழலநொந் தோரிரவும்
திரைகொண் டலமரு மிவ்வகல்
ஞாலஞ் செறிகடலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டும் தனிமை மிக்க தலைவி கடல் ஒலிக்கு ஆற்றாது இரங்கியது.
`ஆற்றாமையால் இரவில் துயில் வருதல் அரிதாய் இருக்க, அதன்மேல் கடலும் இரவு முழுதும் ஒலித்துத் துயிலைத் தடுக்கின்றது` என்பதாம்.
``கொண்ட`` என்பது உவம உருபு.
`வாழ்த்தாதவர்கள் துன்புற்று அரற்றுதல்போலக் கடல் திரை கொண்டு அலமரும்` என வினைமுடிக்க.
திரைகொண்டு - அலைகளைப் பெற்று.
அலமரும் - அலையும்.
`அலையும்` என்பது தன் காரியத்தின் மேலதாய், `ஒலிக்கும்` எனப் பொருள் தந்தது.
`கடல் இன்று அலமருதல், முன்பு தேவர்கள் கடைந்த காலத்தில் அவர்கள் விருப்பத்திற்கு மாறாக நஞ்சைத் தோற்றுவித்ததுபோலத் தோற்றுவிக்கவோ` என அஞ்சிய வாறாம்.
இது தற்குறிப்பேற்ற அணி.
கொல், ஐயம், ஆம், அசை.
``கடைந்தது`` என்பது அத்தொழிலைக் குறித்தது.
நிரை - வரிசை.
இன், உவமப் பொருள்கண் வந்த ஐந்தன் உருபு.
``நுரை கொண்டு`` என்பதைத் ``திரைகொண்டு`` என்பதன் பின்னர்க் கூட்டுக.
மெய் - உடம்பு.
பரம் - சுமை.
`உடற் சுமையோடு உள்ளம் சுழல நொந்தோர்` என்க.
`சுமையோடு` என்பது, `சுமையாக` அதனுடன் என்றவாறு.
நோதல், தனிமையினால், கூடினார்க்கு இனியதாகின்ற இரவு இன்னாது ஆதல் பிரிந்தோர்க்கே யாதலின் கடல் வருத்தம் செய்யும் இராக் காலத்தை ``நொந்தோர் இரவு`` என அவர்க்கே உரித்தாக் கினாள்.
ஞாலம் செறி கடல் - நிலத்தை உள்ளடக்கிய கடல்.

பண் :

பாடல் எண் : 21

கடலன்ன பொய்மைகள் செய்யினும்
வெய்ய கடுநரகத்
திடநம னேவுதற் கெவ்விடத்
தானிருஞ் செந்தமிழால்
திடமன்னு மாமதில் சண்பைத்
தலைவன்செந் தாமரையின்
வடமன்னு நீள்முடி யானடிப்
போதவை வாழ்த்தினமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.
வடம் - மாலை.
தாமரை மலர் மாலை அந்தணர்களுக்கு அடையாள மாலையாகும்.

பண் :

பாடல் எண் : 22

வாழ்த்துவ தெம்பர மேயாகும்,
அந்தத்து வையமுந்நீர்
ஆழ்த்திய காலத்து மாழா
தது,வரன் சேவடியே
ஏத்திய ஞானசம் பந்தற்
கிடமிசைத் தும்பிகொம்பர்க்
காத்திகழ் கேதகம், போதக
மீனுங் கழுமலமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கழுமலத்தையே வாழ்த்துதல் எம் பரமே யாகும்` என வினை முடிக்க.
பரம் - கடமை.
அந்தம் - யுக முடிவு.
முந்நீர் - கடலில் உள்ள மூன்று நீர்.
(ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர்).
`நீர் - நீர்மை` எனக் கொண்டு, ``படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தன்மைகளையுடைய கடல்`` என்பர் நச்சினார்க்கினியர்.
`முந்நீர், வையத்தை ஆழ்த்திய காலத்தும் ஆழாததும், சம்பந்தர்க்கு இடமும் ஆகிய கழுமலம்` என்க.
ஏகாரம், தேற்றம்.
கா - கடற்கரைச் சோலை.
இது, `கானல்` எனப்படும்.
கேதகம் - தாழம் பூ.
போது - மற்றை மலர்கள்.
`இவைகளில் தும்பி (வண்டுகள்) அடை கிடக்கும் கழுலம்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 23

மலர்பயில் வாட்கண்ணி, கேள்;கண்ணி
நீண்முடி வண்கமலப்
பலர்மயில் கீர்த்திக் கவுணியர்
தீபன் பகைவரென்னத்
தலைபயில் பூம்புனங் கொய்திடு
மே?கணி யார்புலம்ப
அலர்பயி லாமுன் பறித்தன
மாகில் அரும்பினையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, பகற்குறியில் தினைப்புனம் வந்த தலைமகனைத் தோழி கண்டு வரைவு கடாவுவாளாய், `வேங்கை மரம் பூத்தது, இதனைக் காணின் எமர் தினைப் புனத்தைக் கொய்து விடுவார்கள்.
அப்பால் தலைவி இற் சொறிக்கப்படுவாள்; இனி நீவிர் இங்கு வாரற்க` என்றாட்குத் தலைவன் வரைவு மறுத்தது.
வேங்கை பூப்பின் அதுவே காலமாகத் தினையை அறுவடை செய்தல் வழக்கம்.
`வாட் கண்ணியகேணியார் அலர்பயிலா முன்னம் அரும் பினைப் பறித்தனமாகில் புனம் கொய்திடுமே?` என வினை முடிக்க.
வேங்கை மரம் பூத்து அலர்வதற்கு முன்னே நாம் அரும்புகளைக் கொய்து விடுவோம்; பின்பு எப்படி தினைப்புனம் கொய்யப்படும்` எனத் தலைவன் கூறித் தோழியை நகையாடினான்.
வேங்கை நன்கு பூத்துக் குலுங்குவது எப்பொழுது? எல்லாம் நாளையே நிகழப் போவ தாகச் சொல்லி என்னை ஏய்க்கின்றாய்` என்பது தோன்றத் தலைவன் இயலாத ஒன்றை இயல்வதுபோலக் கூறி அவளது விலக்குரையை இகழ்ந்தான்.
இஃது, `எள்ளல் பற்றி நகை` என்னும் மெய்ப்பாடு.
``மலர் பயில்`` என்பதில் `பயில்`, உவம உருபு.
`நீள் முடியில் கமலப் பூவை யுடைய தீபன்` என்க.
பின் வந்த `கண்ணி` முடியில் அணியும் மாலை.
`கீர்த்தியை` உடையவன்.
என்பதும் தீபனையே சிறப்பித்தது.
`தீபனுக்குப் பகையாயினார் புலம்புவது போல வேங்கை புலம்ப` என்க.
கணி - வேங்கை மரம், இகழ்ச்சி தோன்ற அதனை உயர் திணையாக்கிக் கூறினார்.
புலம்புதல் - தனிமைப்படுதல்.
அஃதாவது பொலிவை இழந்து நிற்றல்.
பகைவர்க்கும் இது பொருந்தும்.
`இத்தலை பயில்` எனச் சுட்டு வருவிக்க.
தலை - இடம் கொய்திடும் - கொய்யப் படும்.
ஏகாரம், வினாப் பொருட்டாய் கொய்யப்படாமையைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 24

அரும்பின அன்பில்லை யர்ச்சனை
யில்லை யரன்நெறியே
விரும்பின மாந்தர்க்கு மெய்ப்பணி
செய்கிலன் பொய்க்கமைந்த
இரும்பன வுள்ளத்தி னேற்கெங்ங
னேவந்து நேர்பட்டதால்
கரும்பன நீள்வயல் சூழ்காழி
நாதன் கழலடியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அரும்பின அன்பு - மெய்ம்மயிர் பெடித்தற்கு ஏதுவான அன்பு.
``அரும்பின்`` என்னும் பெயரெச்சம் காரணப் பெயர் கொண்டு முடிந்தது.
`அரன் நெறியே விரும்பின மாந்தர் சிவன் அடியார்கள்.
மெய் - உண்மை உடம்பு இருபொருளும் கொள்க.
நேர்பட்டது - கிடைத்தது.
ஆல், அசை கரும்பன - கரும்புகளை உடைய `நல்வியல்புகள் பலவும் உடைய அன்புள்ளத்தார்க்கும் கிடையாத கழலடி, நல்லியல்பு ஒன்றும் இல்லாத வன்புள்ளத்தேனுக்கு எங்ஙனம் வந்து கிடைத்தது` என வியந்து கூறியவாறு.
`இப் பிறப்பில் யாதும் செய்யாவிடினும், முற்பிறப்பில் நல்வினை செய்தேன்போலும்` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 25

அடியால் அலர்மிதித் தாலரத்
தம்பில் கமிர்தமின்(று)இக்
கொடியா னொடும்பின் நடந்ததெவ்
வா(று)அலர் கோகனதக்
கடியார் நறுங்கண்ணி ஞானசம்
பந்தன் கருதலர்போல்
வெடியா விடுவெம் பரல்சுறு
நாறு வியன்கரத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, தலைவியது உடன்போக்குப் போயதை அறிந்த நற்றாய் வருந்தியது.
`மிதித்தாலும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுக்கப் பட்டது.
அரத்தம் பிலகு - இரத்தம் சிந்துகின்ற.
அமிர்தம் - அமிர்தம் போல்வாள்.
அவளது மென்மையறியாமற் சுரத்து உய்த்தமை பற்றித் தலைவனை, ``கொடியான்`` என்றாள்.
கடி - விளக்கம்; அடையாள மாய் விளங்குவது.
``கருதலர்`` என்பது, `பகைவர்` என்னும் அளவில் நின்று, `ஞானசம்பந்தனுக்கு` எனத் தொக்கு நின்ற நான்காவதற்கு முடிபாயிற்று.
வெடியா விடு - நிலம் வெடித்து வெளித் தள்ளுகின்ற.
பரல் - பரற்கற்கள்.
சுரம் - பாலை நிலம்.
பின்னர், ``இன்று`` என்றமையால், முன்பு `இயல்பாக` என்பது வருவிக்க.
`இயல்பாக அடியால் அலர்மிதித்தாலும் (அடிகளில்) அரத்தம் பில்குபவளாகிய ளாகிய என்மகள் இன்று பரல் நாறும் சுரத்துக்கண் கொடியானொடும் பின் நடந்தது எவ்வாறு` என வினை முடிக்க.
இது, `தன் கண் தோன்றிய இழவு பற்றி பற்றி வந்த அழுகை` என்னும் மெய்ப்பாடு.

பண் :

பாடல் எண் : 26

சுரபுரத் தார்தம் துயருக்
கிரங்கிச் சுரர்கள்தங்கள்
பரபுரத் தார்தந் துயர்கண்
டருளும் பரமன்மன்னும்
அரபுரத் தானடி எய்துவ
னென்ப, அவனடிசேர்
சிரபுரத் தானடி யாரடி
யேனென்றும் திண்ணனவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`(யான்) - பரமன் மன்னும் மரபு உரத்தான் (அவன்) அடி எய்துவான் - என்ப, அவன் அடி சேர் சிரபுரத்தான் அடியார் அடி வான் என்னும் திண்ணனவே` என வினை முடிக்க.
(அடைதற்கு) உரிய மரபுகளாவன, சரியை முதலிய நான்கு, `அவைகளைச் செய்து பெற்ற உரத்தால் (வலிமையால்) நான் அவன் அடி அடைவேன்` என்று எண்ணுவன எல்லாம், `சிரபுரத்தான் அடியார்க்கு அடியான்` என்னும் பேற்றினை நான் பெற்ற வன்மையினாலேயாம்` என வினை முடிக்க.
சுரபுரம் - தேவ லோகம்.
தேவர்கட்குப் பரராய (வேற்றவ ராகிய) அசுரர்புரம், திரிபுரம்.
``மரபு உரத்தான்`` என்பதில் `ஆன்` மூன்றனுருபு.
சிரபுரம் - சீகாழி.
திண்ணன - திண்மையை உடையன.
`ஞானசம்பந்தருக்கு அடியார்க்கு அடியரானவரும் சிவனடியைச் சேர்வர்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 27

திண்ணென வார்சென்ற நாட்டிடை
யில்லைகொல்! தீந்தமிழோர்
கண்ணென வோங்கும் கவுணியர்
தீபன்கை போல்பொழிந்து
விண்ணின வாய்முல்லை மெல்லரும்
பீன,மற் றியாம்மெலிய
எண்ணின நாள்வழு வா(து)இரைத்(து)
ஓடி எழுமுகிலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, பொருள் மேற் சென்ற தலைவன் வரவு நீட்டிப்பத் தலைவி கார் கண்டு இரங்கியது.
`விண்ணினவாய், முல்லை அரும்பு ஈனவும், யாம் மெலிய வும், எண்ணின நாள் வழுவாது இரைத்து ஓடித் தீபன் கைபோல் பொழிந்து எழு முகில் அவர் சென்ற நாட்டிடை இல்லை கொல்` என இயைத்து முடிக்க.
திண் என் அவர் - உள்ளம் இளகுதல் இன்றி வல்லென்றி இருக்கும் அவர்; தலைவர்.
`கண் பொருள்களைக் காட்டுதல் போலப் பாடுபொருளைத் தெரிவிப்பவன்` என்பதாம்.
இது சிறப்பு நிலைக் களனாக வந்து உவமை.
விண்ணினவாய் - வானம் முழுதும் பரந்தன வாய்.
எண்ணின நாள், ``இன்ன நாளில் வரும்`` என்று நாள் தோறும் எண்ணால் எண்ணிக் கொண்டு வந்த நாள்.
`அந்த நாள் வழுவாது முகில்கள் என்று சொல்லிச் சென்ற சொற்படி வந்திலர்` என்பது குறிப்பு.
`இந்நாட்டில் எழு முகில் அவர் சென்ற நாட்டில் இல்லையோ என்றதும் வழுவினதைக் குறிப்பாற் கூறியதே.
`கார் காலம் வந்தவுடன் வருவேன்` என்று சொல்லி வேனிற் காலத்தில் பிரிந்து செல்லுதலும், பின்பு கார் காலம் வந்தவுடன் வந்து சேர்தலும் தலைவரது இயல்பு.
இரைத்து - ஒலித்து.

பண் :

பாடல் எண் : 28

எழுவாள் மதியால் வெதுப்புண்(டு)
அலமந் தெழுந்துவிம்மித்
தொழுவாள், தனக்கின் றருளுங்
கொலாந்,தொழு நீரவைகைக்
குழுவா யெதிர்ந்த உறிகைப்
பறிதலைக் குண்டர்தங்கள்
கழுவா வுடலம் கழுவின
வாக்கிய கற்பகமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு ஞானசம்பந்தரைக் காதலித்த கைக் கிளைத் தலைவியது ஆற்றாமையைச் செவிலி சொல்லி இரங்கியது.
``எழுவாள்`` என்பது முதலியவற்றிற்கு `என் மகள்` என்னும் தோன்றா எழுவாயை முதற்கண் வருவித்துக் கொள்க.
``எழுவாள்`` என்பதை ``அலமந்து`` என்பதன் பின்னர்க் கூட்டுக.
மதி - நிலவு.
தனக்கு - அவளுக்கு; `கற்பகம் அருளுங்கொல்` எனக் கூட்டி முடிக்க.
ஆம், அசை.
தொழு நீர - வணங்கப்படும் தன்மையை உடை.
`வைகையில் குழுவாய் எத்ர்ந்த` என்க.
எதிர்ந்தது, புனல் வாதம் செய்ய வந்தது.
``கழுவா உடலம் கழுவின ஆக்கிய`` என் மேல் வந்த தனை நோக்குக.
1 கற்பகம், எண்ணிய எண்ணியாங்கு வழங்குதல் பற்றி வந்த உருவகம்.

பண் :

பாடல் எண் : 29

கற்பா நறவம் மணிகொழித்
துந்தும் அலைச்சிலம்பா!
நற்பா மொழியெழில் ஞானசம்
பந்தன் புறவமன்ன
விற்பா நுதலிதன் மென்முலை
யின்னிளம் செவ்விகண்டிட்(டு)
இற்பா விடும்வண்ண மெண்ணுகின்
றாளம்ம! வெம்மனையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, தோழி, `தலைவி இனி இச்செறிக்கப் படுவாள்` எனப் படைத்துமொழி கூறி வரைவு கடாயது.
`கல் பா மணி` எனக் கூட்டி, `கற்களில் உள்ள ஒளிக் கற்களை` என உரைக்க.
நறவம் - தேன்.
நற் பா - ஞானப் பாடல்.
மொழி சம்பந்தன்.
வினைத்தொகை.
புறவம் - சீகாழி.
முலையின் செவ்வி கண்டு எம் அன்னை இற்பாவிடும் வண்ணம் எண்ணுகின்றாள்` என இயைக்க.
அம்ம - இதுகேள்.
``அம்ம கேட்பிக்கும்`` 1 என்பது இலக்கணம்.
``கண்டிட்டு`` என்பதில் இட்டு, அசை.
`இனித் தலைவி புறத்துவாராள்` என்பதாம்.
இது கேட்டுத் தலைவன் வரைவு முடுக்கத்தில் தலைப்படுவானாதல் பயன்.

பண் :

பாடல் எண் : 30

எம்மனை யா,எந்தை யாயென்னை
யாண்டென் துயர்தவிர்த்த
செம்மலர் நீள்முடி ஞானசம்
பந்தன் புறவமன்னீர்!
வெம்முனை வேலென்ன வென்னமிளிர்ந்து
வெளுத்(து) அரியேன்(று)
உம்மன வோவல்ல வோவந்தெ
னுள்ளத் தொளிர்வனவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, தலைவியது குறிப்பு உணர்ந்த தலை மகன் பின்னும் வேட்கை மீதூர்தலை உணர்ந்த தலைமகளுக்குத் தன் நிலை உரைத்தது.
அன்னை, `அனை` என இடைக் குறைந்து நின்றது.
எண் அன்னையாய் - எம் தாய்க்குத் தாய்.
எந்தை யாய் - எம் தந்தைக்குத் தாய், `இவர்களுடன் என்னையும் ஆண்டு` என்க.
குழி முழுதாண்டமை கூறியவாறு.
மலர், தாமரை மலர்.
புறவம் - சீகாழி.
அன்னீர் - போன்றவரே.
தலைவியைத் தலைவன் பன்மைச் சொல்லால் உயர்த்துக் கூறினான்.
அவள் இன்னும் தனக்கு உரியவள் ஆகாமையின்.
அடுக்குப் பன்மை பற்றி வந்தது.
மிளிர்தல் - சுழலுதல்.
அரி - செவ்வரிகள்.
ஒளிர்வன - ஒளிரும் கண்கள்.
`எம் உள்ளத்து ஒளிர்தலால் உண்மையில் அவை உம்முடையனவோ, அல்லவோ` என்றபடி.
`உம் பார்வையின் தொடர்ச்சியால் எனது வேட்கை ஒரு காலைக்கு ஒருகொல் மிகாநின்றது` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 31

ஒளிறு மணிப்பணி நாட்டும்,
உலகத்தும் உம்பருள்ளும்
வெளிறு படச்சில நிற்பதுண்
டே?மிண்டி மீனுகளும்
அளறு பயற்சண்பை நாத
னமுதப் பதிகமென்னுங்
களிறு விடப்புகு மேல்தொண்டர்
பாடும் கவிதைகளே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சண்பை நாதன் (தனது) `பதிகம்` எனும் களிறுகளை விட, (அவை சென்று) புகுமேல், ஏனைத் தொண்டர்களது கவிதைகள் சில மூவுலகத்திலும் எதிர் நிற்பது உண்டே` எனக் கூட்டி முடிக்க.
மணி - மாணிக்கம்.
பனி நாடு - நாகலோகம்.
``உலகம்`` என்றது இவ்வுலகத்தை.
உம்பர் - வானுலகம்.
வெளிறு பட - உள்ளீடு இல்லாமை தோன்ற.
இது ஞானசம்பந்தரது பாடலின் முன் ஏனைக் கவிதைகள் பெறும் மதிப்பீடு பற்றிக் கூறியதன்றி, எப்பொழுதும் உள்ள நிலை பற்றிக் கூறியதன்று.
``உண்டே`` என்னும் ஏகாரம் வினாப் பொருட்டாய், `இன்று` என்னும் எதிர்மறைப் பொருளைத் தந்தது.
மிண்டி - வலிமை பெற்று.
அளறு - சேறு.
அமுதப் பதிகம், உவமத் தொகை.
பதிகம் என்னும் களிறு, உருவகம்.
உவமைப்பின் உருவகிக்கப்பட்டதாயினும் இது பலபொருள் உவமைப் பாலதே இரண்டிறஅகும் பொதுதன்மை வேறு வேறு ஆகலின் அமைந்தது.

பண் :

பாடல் எண் : 32

கவிக்குத் தகுவன, கண்ணுக்
கினியன, கேட்கில்இன்பம்
செவிக்குத் தருவன, சிந்தைக்
குரியன பைந்தரளம்
நவிக்கண் சிறுமியர் முற்றில்
முகந்துதம் சிற்றில்தொறும்
குவிக்கத் திரைபரக் குங்கொச்சை
நாதன் குரைகழலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.
நவ்வி, ``நவி`` என இடைக் குறைந்த நின்றது.
தாளம் - முத்து.
நவ்வி - மான்.
முற்றில் - சிறுமுறம் `சிறுமியர் தரளம் முற்றி முகந்து குவிக்க` என்க.
திரை - கடல் அலை.

பண் :

பாடல் எண் : 33

கழல்கின்ற ஐங்கணை, யந்தியும்,
அன்றிலுங் கால்பரப்பிட்(டு)
அழல்கின்ற தென்றலும் வந்திங்
கடர்ப்ப,வன் றாயிழைக்காச்
சுழல்கின்ற நஞ்சந் தணித்தவன்
தன்னைத் தொடர்ந்துபின்போய்
உழல்கின்ற நெஞ்சமிங் கென்னோ,
இனிஇன் றுறுகின்றதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதுவும் கைக்கிளைத் தலைவி தலைவன்.
அளி பெறாமையால் வருந்திக் கூறியது.
கழல்கின்ற - வில்லை விட்டுக் கழன்று வருகின்ற ஐங்கமை மாரனுடையன, அவற்றோடுகூட, அந்தி முதலிய மூன்றும் அடர்ப்ப (துன்புறுத்த) உழல்கின்ற நெஞ்சம் (அங்ஙனம் உழலுதலால் உறுகின்றது என்! (அடையப் போவது என்ன!) என்க.
ஆயிழை, வணிகப் பெண்.
அவளுக்காக ஞான சம்பந்தர் நஞ்சம் தணித்தது.
திருமருகலில், திருப்புறம்பயத்திலும் நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்றது.
`பரப்பியிட்டு` என்பது குறைந்து, ``பரப்பிட்டு`` என வந்தது.
கால் - காலுதல்; வெளிப்படுத்தல்.
`காலுதலால் பரப்பியிட்டு` என்க.
பரப்படுவது நாற்றம்.
``கால் பரப்பி`` என்பது பிறிதொரு பொருள்மேலது போலத் தோற்றுவித்தது நயம்.

பண் :

பாடல் எண் : 34

உறுகின்ற வன்பினோ(டு) ஒத்திய
தாளமு முள்ளுருகிப்
பெறுகின்ற வின்பும், பிறைநுதல்
முண்டமுங் கண்டவரைத்
தெறுகின்ற வாறென்ன செய்தவ
மோ!வந்தென் சிந்தையுள்ளே
துறுகின்ற பாதன் கழுமலம்
போலுந் துடியிடைக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, `பெருந்தமையாகிய நீ இன்னையாகுதல் தகாது` எனக் கழறிய பாங்கனுக்குத் தலைவன் தனது மெலிவைக் கூறியது.
`கழுமலம் போலும் துடி இடைக்கு அன்பினொடு, தாளமும், இன்பும், முண்டமும் கண்டவரைத் தெறுகின்ற வாறாய் உண்டாய் இருக்கை என்ன செய்தவமோ!`` எனக் கூட்டி முடிக்க.
அன்பு, ஒத்த அன்பினர்பாற் செல்லும் அன்பு.
இதுவும் ஒரு பண்பாடு.
``தாளம்`` சிறப்புருவகமாய்க் கொங்கைகளைக் குறித்தது.
`தன்னை மணப்பான் பெறுகின்ற இன்பும்` என்க.
இதனால் தலைவன் முன்பு கூட்டம் நிகழ்ந்தமையைக் குறிப்பிட்டு, அங்ஙனமாயினும் ``அறிதொறறி யாமை காணப்பட்டாற் போலக் காதலி மாட்டுச் செறிதொறும் முன்னைச் செறிவு செறிவாகா தொழிகின்றது`` 1 என்பதை உணர்த்தி னான்.
நுதல், இங்கே புருவம்.
முண்டம் - நெற்றி.
`தெறுகின்றவாறாய் அமைந்தமை அவள் முன்பு செய்த எந்தத் தவத்தின் பயனோ` என்க.
தவம், கருவியாகு பெயர்.
``கண்ட வரைத் தெறுகின்றவாறு`` என்றதனால், `நீயும் கண்டனை யாலின் இவ்வாறு கழலுகிறாய்` என்றான்.
துறுகின்ற - முழுமையாகச் செறிந்து நிற்கின்ற.

பண் :

பாடல் எண் : 35

இடையு மெழுதா தொழியலும்
ஆம்;இன வண்டுகளின்
புடையு மெழுதினும் பூங்குழ
லொக்குமப் பொன்னனையாள்
நடையும் நகையுந் தமிழா
கரன்தன் புகலிநற்றேன்
அடையும் மொழியு மெழுதிடின்,
சால அதிசயமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு ``மடல் என, மடல்மா கூறிய தலைவற்கு, ``அதற்கு அவள் வடிவை ஓவியமாக எழுதிக் கொணரல் வேண்டும்; அது நும்மால் இயலாது` எனத் தோழி கூறி நகையாடியது.
`வண்டுகள் மெய்க்கும் சூழலை நீர் எழுதிவிட்டாலும் அப்பொன்னனையாளது பூங்குழை ஒருவாறு எழுதியது போல் ஆய்விடும்.
இனி இடையையும் எழுதாது ஒழிந்தால் அதனையாரும் குறையாக நினைக்க மாட்டார்கள்.
(ஏனெனில் காண்டற்கு அரிது) ஆயினும் அவளது நடையையும், நகைப்பையும் தேன்போலும் மொழியையும் நீர் எழுதிக் கொணர்ந்தால் அது பெரிய அதிசமாகும்` என உரைக்க.
சிந்தா மணியும், திருக்கோ வையும்எழு திக்கொளினும்
நந்தா உரையை எழுதல் எவ் வாறு நவின்றருளே
எனப் பிற்கால ஆசிரியரும் கூறினார்.
தமிழாகரன் - ஞானசம்பந்தர்.
``தேன் அடையும்`` என்பதில் ``அடையும்`` என்பது `சிவணும்` என்பது போல உவம உருபு.

பண் :

பாடல் எண் : 36

மேனாட் டமரர் தொழவிருப்
பாரும், வினைப்பயன்கள்
தாநாட் டருநர கிற்றளர்
வாருந் தமிழர்தங்கள்
கோனாட்(டு) அருகர் குழாம்வென்ற
கொச்சையர் கோன்கமலப்
பூநாட்டு அடிபணிந் தாருமல்
லாத புலையருமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மேல் நாடு - விண்ணுலகம்.
``வினைப் பயன்கள் தாம்`` என்பதில் தாம், அசை.
தமிழர் தங்கள் கோன், பாண்டியன்.
பூ நாட்டு அடி - பூவின் தன்மை பொருந்திய பாதம்.
`அமலர் தொழ இருப்பாரும், அருநரகில் தளர்வாரும் (யாவர் என்னில்) கொச்சையர் கோன் அடி பணிந்தாரும், அல்லாத புலையருமே` என முடிக்க.
புலையர் - கீழ்மையர்.
ஏகாரம் பிரிநிலை.

பண் :

பாடல் எண் : 37

புலையடித் தொண்டனைப் பூசுர
னாக்கிப் பொருகயற்கண்
மலைமடப் பாவைக்கு மாநட
மாடும் மணியையென்தன்
தலையிடைப் பாதனைக் கற்றாங்
குரைத்தசம் பந்தனென்னா,
முலையிடைப் பொன்கொண்டு, சங்கிழந்
தாளென்தன் மொய்குழலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, கைக்கிளைத் தலைவி ஆற்றாமை கண்டு செவிலி இரங்கியது.
`புலைத் தொண்டன், அடித்தொண்டன்` எனத் தனித் தனி முடிக்க.
புலை - கீழ்மை; நெறிப்பா டின்மை.
ஆசிரியர் புலை அடித் தொண்டனைப் பூசுரன் ஆக்கியதாகக் கூறியது தம்மைக் குறித்தே யாயினும் அதனைச் செவிலி கூற்றாகக் கூறினமையால், ``தொண்டனை`` என்பதற்குத் `தொண்டன் ஒருவனைப் பூசுரன் ஆக்கி` எனப் பொருள் கொள்க.
ஆசிரியர் இவ்வாறு கூறியது, `யானை பூசுரனாய்ப் பிறந்தும் அதற்கேற்ற செயலை உடையனாயினேன் இல்லை` என்னும் இரக்கத்தினாலாம்.
இஃது அவர் தம் பெருமையை உணர்த்துகின்றது.
பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து
என்பஆகலின்.
பாவைக்கு - பாவை பொருட்டாக; `அவள் காணும் படி` என்பதாம்.
தலையிடைச் `சூட்டியபாதன்` என்க.
கற்றல், இங்கு, உணருமாறெல்லாம் உணர்தல்.
என்னா - என்று சொல்லிச் சொல்லி; `பிதற்றி` என்றபடி.
பொன் - பசலை.
சங்கு சங்க வளையல், ``பொன் கொண்டு சங்கு இழந்தாள்`` என்பது `பரிவருத்தனை` என்னும் அணியாம்.
சங்கைக் கொடுத்துப் பொன்னை விலையாகப் பெறும் வழக்கம் அந்நாளில் இருந்தது.

பண் :

பாடல் எண் : 38

குழலியல் இன்கவி ஞானசம்
பந்தன் குரைகழல்போல்
கழலியல் பாதம் பணிந்தே
னுனையுங் கதிரவனே!
தழலியல் வெம்மை தணித்தருள்
நீ;தணி யாதவெம்மை
அழலியல் கான்நடந் தாள்வினை
யேன்பெற்ற வாரணங்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, தலைவி தலைவனுடன் உடன் போக்காகப் போயினமை கேட்டு நற்றாய் சுரம் தணிவித்து இரங்கியது.
சுரம் - பாலை நிலம்.
`கதிரவனே! வினையேன் பெற்ற ஆரணங்கு, தணியாத வெம்மையால் அழல் இயல்பினையுடைய தான் நடந்தாள்; ஞான சம்பந்த கழலைப் பணிதல்போல உன்னையும் நான் கழலணிந்த பாதத்தைப் பணிந்தேன்; நீ அந்தத் தழல் இயல் வெம்மை தணித்தருள்` என இயைத்து முடிக்க.
குழல் இயல் இன்கவிகுழல் இசையின் இயல்பினை உடைய இனிய பாடல்கள்.
``பாதம் பணிந்தேன்`` என்பது `வணங்கினேன்` என ஒரு சொல் நீர்மைப்பட்டு, ``உனை`` என்றும் இரண்டாவதற்கு முடிபாயிற்று.

பண் :

பாடல் எண் : 39

அணங்கமர் யாழ்முரித்(து) ஆண்பனை
பெண்பனை யாக்கி,அமண்
கணங்கழு வேற்றிக் கடுவிடந்
தீர்த்துக் கதவடைத்துப்
பிணங்கலை நீரெதி ரோடஞ்
செலுத்தின, வெண்பிறையோ(டு)
இணங்கிய மாடச் சிரபுரத்
தான்தன் இருந்தமிழே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டில் ஞானசம்பந்தர் நிகழ்த்திய அற்புதங்கள் பல எடுத்துக் கூறப்பட்டன.
அவைகளைப் பெரிய புராணத்தால் அறிக.
அணங்கு - தெய்வத் தன்மை.
`இசைத் தெய்வம்` என்னுமாம்.
கணம் - கூட்டம்.
பிணங்கு அலை நீர் - எதிராக வீசிவரும் அலைகளை யுடைய நீர்.

பண் :

பாடல் எண் : 40

இருந்தண் புகலி,கோ லக்கா,
வெழிலா வடுதுறை,சீர்
பொருந்தும் அரத்துறை போனகம்,
தாளம்,நன் பொன், சிவிகை
அருந்திட ஒற்ற,முத் தீச்செய
வேற வரனளித்த
பெருந்தகை சீரினை யெம்பர
மோ!நின்று பேசுவதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``புகலியில் அருந்தப் போனகம், கோலக்காவில் ஒற்றத் தாளம், ஆவடு துறை?ல் முத்தீச் செயப் பொன், அரத்துறையில் ஏறச் சிவிகை அரன் அளித்த சீரினை நின்று பேசுவது எம் பரமோ`` என இயைத்துக் கொள்க.
பெருந்தகை, ஞானசம்பந்தர்.
``அளித்த பெருந்தகை`` என்பதில், `அரசன் ஆ கொடுத்த பார்ப்பான்` என்பது போலப் பெயரெச்சம் கோடற் பொருட் பெயர் கொண்டது.

பண் :

பாடல் எண் : 41

பேசுந் தகையதன் றேயின்று
மன்றும் தமிழ்விரகன்
தேசம் முழுதும் மழைமறந்(து)
ஊண்கெடச் செந்தழற்கை
ஈசன் திருவரு ளாலெழில்
வீழி மிழலையின்வாய்க்
காசின் மழைபொழிந் தானென்றிஞ்
ஞாலம் கவின்பெறவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தமிழ்விரகன், மழை மறந்து ஊண் கெட, வீழி மிழலையின் வாய்க்காசின் மழைபொழிந்தான் என்றுஇஞ்ஞாலம் இன்று, அன்றும் பேசும் தகையது அன்று` என இயைத்துக் கொள்க.
``பேசும்`` என்று `பேசி முற்ற முடிக்கும்` என்றபடி.
கண்கூடாக விரைவிற் காண்பது.
இன்றைய நிலையாகலின் அதனை முன்னர்க் கூறினார்.
`உலகத்தாரால் முற்ற முடியக் கூறல் இயலாது` என்பதாம்.
காசின் மழை - காசினால் உண்டான மழை.
அஃது உண்டி மழை.
``மழை மறந்து`` என்றதற்கு ஏற்ப உண்டியையும் மழையாக உருவகித்தார்.
``மறந்து`` என்னும் செய்தென் எச்சம் காரணப் பொருட்டாய் நின்றது.

பண் :

பாடல் எண் : 42

பெறுவது நிச்சயம் அஞ்சல்நெஞ்
சேபிர மாபுரத்து
மறுவறு பொற்கழல் ஞானசம்
பந்தனை வாழ்த்துதலால்
வெறியுறு கொன்றை மறியுறு
செங்கை விடையெடுத்த
பொறியுறு பொற்கொடி யெம்பெரு
மானவர் பொன்னுலகே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.
வெறி - நறுமணம்.
மறி - மான் கன்று.
`விடை எடுத்த கொடி` என்க.
பொறி - பொறித்தல்; எழுதுதல்.
பொன் - அழகு.
`ஞானசம்பந்தரை வாழ்த்தினாலே சிவலோகத்தை அடைதல் நிச்சயம்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 43

பொன்னார் மதில்சூழ் புகலிக்
கரசை, யருகர்தங்கள்
தென்னாட் டரணட்ட சிங்கத்
தினை,யெஞ் சிவனிவனென்(று)
அந்நாள் குதலைத் திருவாய்
மொழிக ளருளிச்செய்த
என்னானை யைப்பணி வார்க்கில்லை,
காண்க யமாலயமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தென்னாட்டு அரண் - பாண்டி நாடாகிய கோட்டை; என்றது அவர்கள் யாராலும் வெல்ல இயலாத அளவு வலுப் பெற்று இருந்த இடம்` என்றபடி.
அட்ட - அழித்த.
``அரண் அட்ட`` என்றது.
`அரண்போல வாழ்ந்த நிலைமையை அழித்த` என்றபடி.
``சிங்கம்`` என்றது ஏகதேச உருவகம் ஆதலின், `அருகராகிய யானைகளது` என உரைக்க.
`திருவாயால்` என மூன்றாவது விரிக்க.
``ஆணை`` என்றது காதற்சொல், ``காண்க`` என்பதும், `காண்` என்பதுபோல அசை.
யமாலயம் - எமன் உலகம்.

பண் :

பாடல் எண் : 44

மாலையொப் பாகும் பிறைமுன்பு
நின்று, மணிகுறுக்கி
வேலையைப் பாடணைத்(து) ஆங்கெழில்
மன்மதன் வில்குனித்த
கோலையெப் போதும் பிடிப்பன்
வடுப்படு கொக்கினஞ்சூழ்
சோலையைக் காழித் தலைவன்
மலரின்று சூடிடினே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, கைக்கிளைத் தலைவி தோழியைத் தூது செல்லும்படி குறையிரந்து கூறியது.
``வடுப்படு கொக்கினம் சூழ்`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
`(நீ சென்று) காழித் தலைவன் மலரை (மாலையை) (மெலிவடையாது) நிற்பேன்; (சேவினங்களின் கழுத்தில் உள்ள மணி களின் ஓசையைக் குறுகச் செய்வேன்; (அடக்குவேன்.
) வேலையை (கடலை) பாடு (ஒலியை) அணைப்பேன்; (அடக்குவேன்.
) மற்றும் மன்மதன் தனது வில்லை வளைத்து தொடுத்துள்ள கோலை ஒரு போதும் விடாமல் தடுப்பேன்` என இயைத்து இவ்வாறு பொருள் கொள்க.
பிறை முதலியன காதல் மிக்கவரை மேலும் வருத்துவன ஆதலின், `அவைகளால் யான் வருந்தி இறந்து படாது பிழைப்பேன்` என்பாள் இவ்வாறு கூறினாள்.
மாலை ஒப்பாகும் - காலம் வந்து வருத்த, அதற்கு ஒப்பாகத் தானும் உடன் கூடி வருத்து கின்ற.
``நின்று, குறுக்கி, அணைத்து`` என்னும் செய்தென் எச்சங்கள் எண்ணின்கண் வந்தன.
``மணி`` என்பது, ஏற்புழிக் கோடலால் சேவினங்களது மணியைக் குறித்து, ஆகுபெயரால் அவற்றின் ஓசையை உணர்த்திற்று.
ஆங்கு - அப்பொழுதே.
கோல் - அம்பு.
வடு - மா வடு.
கொக்கு - மா மரம்.
சோலை ஐ - சோலையினது அழகை உடைய.
``மலர்`` என்பதும் ஆகுபெயரால், மலரால் ஆகிய மாலையையே குறித்தது.
``குனித்த`` என்பது, `குனித்துத் தொடுத்த` எனப் பொருள் தந்தது.
`சூடாவிடில் ஆற்றேன்` எனச் சூடாமையைப் பிரித்தலின், ஏகாரம் பிரிநிலை.

பண் :

பாடல் எண் : 45

சூடுநற் றார்த்தமி ழாகரன்
தன்பொற் சுடர்வரைத்தோள்
கூடுதற்(கு) ஏசற்ற கொம்பினை
நீயுங் கொடும்பகைநின்(று)
ஆடுதற் கேயத்த னைக்குனை
யே,நின்னை யாடரவம்
வாடிடக் காரும் மறுவும்
படுகின்ற வாண்மதியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதுவும் கைக்கிளைத் தலைவி கங்குலில் கண்படை பெறாது வருந்துதல் கண்டு தோழி நிலவைப் பழித்துக் கூறியது.
`வாள் மதியே! ஏசற்ற கொம்பினை நீயும் கொடும் பகையாய் நின்று ஆடுதலாகிய குற்றத்திற்காகத்தான் நின்னை அரவம் வாட்டிடக் (கண்டு) காரும், மறுவும் உன்னையே அத்தனைக்குப் படுகின்றன` எனக் கூட்டி முடிக்க.
சூடு நல் தார்த் தமிழ் ஆகரன் - சிவபெருமானுக்கு அணிவிக்கின்ற நல்ல மாலையாம் தமிழுக்கு இருப்பிடமானவன்; ஞானசம்பந்தர்.
ஏசறுதல் - ஏக்கம் உறுதல்.
கொம்பு - பூங்கொம்பு போல்வாள்; தலைவி `தமிழாகரன் போல நீயும் பகையாகின்றனை` என்றமையால் உம்மை இறந்தது தழுவிய எச்சம்.
`பகையாய்` என ஆக்கம் வருவிக்க.
ஆடுதல் - வெல்லுதல்; ``ஆடாடென்ப ஒரு சாரோரே; - ஆடன் றென்ப ஒருசாரோரே`` 1 என்றது காண்க.
அரவம்- இராகு என்னும் பாம்.
`வாட்டிட` என எதுகை நோக்கி இடைக் குறைந்து நின்றது.
கார் - மேகம்; இது நிலவிற்குப் பெருங்குறையாய் நின்று இழிவை உண்டாக்குகின்றது.
அத்தனைப் படுகின்ற - அந்த அளவு பொருந்துகின்றன.

பண் :

பாடல் எண் : 46

மதிக்க தகுநுதல் மாதொடும்
எங்கள் மலையில்வைகித்
துதிக்கத் தகுசண்பை நாதன்
சுருதி கடந்துழவோர்
மிதிக்கக் கமலம் முகிழ்த்தண்
தேனுண்டு, மிண்டிவரால்
குதிக்கக் குருகிரி யுங்கொச்சை
நாடு குறுகுமினே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, களவின் கண் தோழி தலைவனை ``வேளாண் பெருநெறி வேண்டியது`` அஃதாவது தலைவனை விருந்தினனாகத் தம் இல்லத்தில் ஓர் இரவு தங்கிச் செல்ல வேண்டியது.
மதிக்கு அத்தகு நுதல் சந்திர உவமையாகின்ற அத்துணைத் தகுதி வாய்ந்த நெற்றி.
`உவமை யாகின்ற` என்பது சொல்லெச்சம்.
மாது - தலைவி மாதொடும் வைகுதல் களவினாலாம்.
``வைகி`` என்றதனால் `இராப் பொழுது` என்பதும், அதனானே, `நாடு குறுகுதல் பொழுது புலர்ந்தபின்` என்பதும் போந்தன.
சுருது - இசை.
``அதனைக் கடந்து`` என்றது.
`நகர்க்குப் புறத்தே சென்று` என்றபடி.
கமலம் தாமரை மலர்; ஆகுயெர், முகிழ்ந்த தேன் - கட்டு அவிழாமையால் தங்கியுள்ள தேன்.
அதனை உண்பது வரால் மீன்.
மிண்டி - உழவர்களையும் மோதி.
குருகு - நீர்ப் பறவை.
இரியும் - அஞ்சி ஒடுகின்ற.
``துதிக்கத் தகு.
குருகு இரியும்`` என்றது கொச்சையை (சீகாழியை)ச் சிறப்பித்தது.

பண் :

பாடல் எண் : 47

குறுமனம் உள்கல வாத்தமி
ழாகரன் கொச்சையன்ன
நறுமலர் மென்குழ லாயஞ்ச
லெம்மூர் நகுமதிசென்(று)
உறுமனை யொண்சுவ ரோவியக்
கிள்ளைக்கு நும்பதியிற்
சிறுமிகள் சென்றிருந்(து) அங்கையை
நீட்டுவர்; சேயிழையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர்த் தலைவன் பிரியக் கருதிய பொழுது தலைவி, `இவர் எவ்விடத்தார்? இவண் மீள வருவார் கொல்லே! வாரார் கொல்லோ!` என ஐயுற்று அல மருதல் கண்டு தலைவன் `எம் இடம் அணித்து` எனக் கூறித் தேற்றியது.
`மென்குழலாய்! சேயிழையே! என் ஊர்ச்சுவர் ஒவியக் கிள்ளையை (உண்மைக் கிளி என்று நினைத்து) நும் பதியில் சிறுமிகள் அருகில் சென்று அங்கையை நீட்டுவர்; அஞ்சல்` என முடிக்க.
`அத் துணை அணித்து` என்றபடி.
குறு மனம் - விரிவடையாத மனம்.
அஃதாவது, உலகப் பற்று மிக்க மனம்.
`அத்தகைய மனங்கள் தம் உள் நினைத்தறியாத தமிழாகரன்` என்க.
நகு மதி - ஒளி வீசுகின்ற சந்திரன்.
மனை - மாளிகை.

பண் :

பாடல் எண் : 48

இழைவள ராகத்து ஞான
சம்பந்த னிருஞ்சுருதிக்
கழைவளர் குன்று கடத்தலுங்
காண்பீர் கடைசியர்,நீள்
முழைவளர் நண்டு படத்தடஞ்
சாலிமுத் துக்கிளைக்கும்
மழைவளர் நீள்குடு மிப்பொழில்
சூழ்ந்த வளவளலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, உடன்போக்காகச் சென்ற தலைவன் தலைவியரை எதிர்கண்டோர் தம் ஊரில் வந்து தங்க வேண்டி அவ்வூர் அணிமை கூறியது.
இழை - நூல், ஆகம் - மார்பு.
சுருதி - போல எழுகின்ற சுருதி.
`சுருதியை உடைய கழை` என்க.
கழை - மூங்கில் மூங்கிற் புழைகளில் இயற்கையாக வீசும் காற்றால் இசை தோன்றுதல் இயல்பு.
முழை - வளை.
சாலி - நெற்பயிர்.
கிளைத்தல், இங்கே, வெளிப்படச் செய்தல்.
கடைசியர் நண்டு தங்கட்கு அகப்படுத்த பொருட்டு நெற்பயிரைச் சாய்க்கும் பொழுது அப்பயிரினின்றும் முத்துக்கள் வெளிப்படுகின்றன என்க.
முத்துக் `கிளைக்கும் வயல், பொழில் சூழ்ந்த வயல்` எனத் தனித் தனி முடிக்க.
குடுமி, அதனையுடைய குன்றினைக் குறித்த ஆகுபெயர், `இக்குன்றினைக் கடத்தலும், இதனைச் சூழ்ந்த பொழிலை அடுத்துள்ள வயல்களைக் காண்பீர்` என்க.
மழை - மேகம்.
வயலைக் கூறவே ஊர் `அவ்விடத்து உள்ளது` என்பது தானே விளங்கும்.

பண் :

பாடல் எண் : 49

வயலார் மருகல் பதிதன்னில்,
வாளர வாற்கடியுண்(டு)
அயலா விழுந்த அவனுக்
கிரங்கி யறிவழிந்த
கயலார் கருங்கண்ணி தன்துயர்
தீர்த்த கருணைவெள்ளப்
புயலார் தருகையி னைனென்னத்
தோன்றிடும் புண்ணியமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.
அயலா விழுந்த அவன் - தன்னூரிலும் இல்லாமல், மாமன் ஊரிலும் இல்லாமல் அயலூரில் இறந்த அந்த வணிகன்.
அவ்வூர் திருமருகல்.
புயல் ஆந்தரு கை - மேகத்தின் தன்மை நிறைந்த கை.
அத்தன்மையாவது, கைம்மாறு கருதாது வழங்குதல்.
இத்தன்மை திருவீழிமிழலையில் காணப்பட்டது.
`கருணையாகிய வெள்ளத்தை உணவு உருவாக்கிப் பொழிந்த கையையுடைய ஞானசம்பந்தன்` என ஒருகாற் சொல்லவே புண்ணியம் வந்து சேரும் என்பதாம்.

பண் :

பாடல் எண் : 50

புண்ணிய நாடு புகுவதற்
காகக் புலனடக்கி,
எண்ணிய செய்தொழில் நிற்ப(து)எல்
லாருமின் றியானெனக்கு
நண்ணிய செய்தொழில் ஞானசம்
பந்தனை நந்தமர்நீர்க்
கண்ணியன் மாடக் கழுமலத்
தானைக் கருதுவதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`புண்ணிய நாடு புகுவதற்காக (ப் பண்டு தொட்டு) எல்லாரும் நிற்பது, புலன்களை அடக்கி, (ஞான நூல்களில்) முறைப் பட வைத்து எண்ணிய தொழில்களில்.
இன்று யான் எனக்கு ஏற்ற தொழிலாக நண்ணிய (மேற் கொண்ட) தொழில் ஞானசம்பந்தனை நினைப்பது ஒன்றே` என்க.
புண்ணிய நாடு, இறையுலகம்.
வைணவர்கள், `திருநாடு` என்பர்.
நந்து - சங்கு.
`நீர்க் கழுமலம், மாடக் கழுமலம்` எனத் தனித் தனி முடிக்க.
கண் இயல் மாடம் - கண்ணுக்கு இயன்ற (அழகு மிக்க) மாட மாளிகைகள்.
முன்பு ``புலன் அடக்கி,`` பின்பு, `புலன் அடக்காமல்` என்பது வருவிக்கப்படும்.
இதனால், ஞானசம்பந்தரைத் தியானிக்கும் தியான பலத்தின் சிறப்புக் கூறப்பட்டதாம்.
வீடும், ஞானமும் வேண்டுதி ரேல்,
விரதங்களால்
வாடின் ஞானம் என் ஆவதும்! எந்தை
வலஞ்சுழி
நாடி, ஞானசம் பந்தன செந்தமிழ்
கொண்டுஇசை
பாடும் ஞானம் வல்லார் அடி சேர்வது
ஞானமே.
என அவர்தாமே அருளஇச் செய்தமை இங்கு அறியற்பாலது.

பண் :

பாடல் எண் : 51

கருதத் தவவருள் ஈந்தருள்
ஞானசம் பந்தன்சண்பை
இரதக் கிளிமொழி மாதே!
கலங்கல் இவருடலம்
பொருதக் கழுநிரை யாக்குவன்;
நுந்தமர் போர்ப்படையேல்
மருதச் சினையில் பொதும்பரு
ளேறி மறைகுவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தவ அருள் - தவம் வாய்ப்பதற்கான அருள்.
இனி, ``தவ`` என்பதனை, மிகுதி குறித்த உரிச் சொல்லாகக் கொள்ளலும் ஆம்.
`சண்பை மாதே` என இயையும்.
`ரசம்` என்னும் ஆரியச் சொல் தமிழில் `இரதம்` எனத் திரிந்து வரும், `சுவை` என்பது அதன் பொருள்.
சுவை உவமைக்குப் பொருட்கும் உள்ள பொதுத் தன்மை.
கலங்கல் - அஞ்சற்க.
இவர் - நம்மைத் தொடர்ந்து ``வருகின்ற இவர்கள், ஆறலை கள்வர் முதலியோராயின் கழுநிரையில் ஏற்றுவேன்; நும் தமரது போர்ப் படையாயின், பொதும்பரும் மருதச் சினை ஏறி மறைகுவன்`` என்.
`நீ அவருடன் சென்றுவிடு` என்பது குறிப்பெச்சம்.
எனவே, இப்பாட்டு உடன் போக்கில் தமர் வரவைத் தலைவி காட்டியவிடத்துத் தலைவன் தலைவிக்குக் கூறியதாம்.
சினை - கிளை.
பொதும்பர் - மரச் செறிவு.
பொருது - போர் செய்து.
`அக்கழு` என்னும் சுட்டு, சமணர் ஏறிய கழுவைச் சுட்டியது.

பண் :

பாடல் எண் : 52

மறைமுழங் குங்குழ லார்கலி
காட்ட, வயற்கடைஞர்
பறைமுழங் கும்புக லித்தமி
ழாகரன் பற்றலர்போல
துறைமுழங் குங்கரி சீறி,
மடங்கள் சுடர்ப்பளிங்கின்
அறைமுழங் கும்வழி நீவரிற்
சால வரும்பழியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, தோழி வரைவு கடாதல் வேண்டி ஆற்றினது அருமை கூறித் தலைவனைக் குறி வரல் விலக்கியது.
மறை முழங்கும் குரல், அந்தணர்களுடையது, `குழல்` என்பது பாடம் அன்று.
ஆர்கலி - கடல்.
என்றது அதன் தன்மையை.
அஃதாவது ஒலி.
பற்றலர் - வருதல்போல நீவரின்` என்க.
`தீயூழ் உடையவரே இவ்வழியில் வருவர்` என்பதாம்.
துறை - கிளை வழிகள்.
``சீறி`` என்பது, `ஞாயிறு பட்டு வந்தான் என்பது போலக் காலப் பொருள் பற்றி வந்த செயவென் எச்சத் திரிபு.
மடங்கல் - சிங்கம்.
அறை - குகை.
மலைகளில் பளிங்குப் பகுதிகள் இருத்தல் இயல்பு.
`அரும் பழி சாலவரும்` என ஒரு சொல் வருவித்து முடிக்க.
இனி, மோனை நயம் கருதாது, `பழி சால வரும்` என முடித்தலும் ஆம்.
`தலைவனே! நீ வரின்` என விளி வருவித்துக் கொள்க.

பண் :

பாடல் எண் : 53

பழிக்கே தகுகின்ற(து) இன்(று)இப்
பிறைபல் கதிர்விழுந்த
வழிக்கே திகழ்தரு செக்கரைக்
கொச்சை வயவரென்னும்
மொழிக்கே விரும்பி முளரிக்
கலமரு மோவியர்தம்
கிழிக்கே தருமுரு வத்திவள்
வாடிடக் கீள்கின்றதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, கைக்கிளைத் தலைவியது ஆற்றாமை கண்டு தோழி கங்குற் காலத்தில் பிறையைப் பழித்துக் கூறியது.
இப் பிறை, கொச்சைவயவர் எனத் தானும், பிறரும் மொழிகின்ற மொழியையே விரும்பி, (அவர் சூடியுள்ள) தாமரை மாலையைப் பெறுதற்கு அலமருகின்ற இவள் வாடும்படி கதிர் விழுந்த பின்பு விளங்குகின்ற செவ்வானத்தைக் கீள்கின்றதே; (இது) இன்று பழிக்கே தகுகின்றது` என இயைத்து முடிக்க.
`இயல்பாகவே மெலிகின்றவரை நலிதல் பெருங் கொடுமை` என்பாதம்.
தகுகின்றது - ஏற்புடைத்தா கின்றது.
``பழிக்கே`` என்னும் பிரிநிலை ஏகாரத்தால், `புகழுக்குச் சிறிது தக்க தாயிற்றில்லை` என்பது பெறப்பட்டது.
பல் கதிர் - பல கிரணங்களை யுடைய சூரியன்.
விழுந்த வழி - மறைந்த வழி.
வழிக்கே - வழியின் கண்ணே; உருபு மயக்கம்.
செக்கர் - செவ்வானம்.
கொச்சைவயம் - சீகாழி.
முளரி, இருமடி யாகுபெயர்.
`அலமரும் இவள், உருவத்து இவள்` எனத் தனித் தனி முடிக்க.
``கிழிக்கு`` என்பதும் ``வழிக்கு`` என்பதுபோல உருபு மயக்கம்.
தரும் - `எழுதி காட்டுகின்ற உருவம்`` என்பது பாடமாயின், `இவளை` என்னும் இரண்டன் உருபு தொகுக்கப்பட்ட தாம்.
கீள்கின்றது - கிழிக்கின்றது; கிழித்துக் கொண்டு புறப்படா நின்றது.
`ஏனோ` என்பதகு சொல் லெச்சம்.
இது கேட்டுத் தலைவி, `இஃது இயற்கை` என்னும் உணர்வால் ஆற்றுவாள் ஆவது பயன்.

பண் :

பாடல் எண் : 54

கீளரிக் குன்றத் தரவ
முமிழ்ந்த கிளர்மணியின்
வாளரிக் கும்வைகை மாண்டன
ரென்பர் வயற்புகலித்
தாளரிக் கும்அரி யானருள்
பெற்ற பரசமய
கோளரிக் குந்நிக ராத்தமிழ்
நாட்டுள்ள குண்டர்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பரசமயே கோளரிக்கு (ச் சற்றும்) நிகராகாத குண்டர்கள் வைகைக் கரையில் மாண்டனர் என்பர்` என இயைத்து முடிக்க.
கீள் அரிக் குன்றம் - பிற விலங்குகளைக் கிழிக்கின்ற சிங்கங் களை யுடைய மலை.
``கிளர் மணியின் வாள் அரிக்கும் வைகை`` என்பதை, `கிளர் வாளின் மணி அரிக்கும் வைகை` என மொழி மாற்றி உரைக்க.
வாள் - ஒளி.
அரித்தல் - கொழித்தல்.
தாள் அரிக்கும் அரியான் - தனது திருவடிகள் திருமாலும் காண அரியன ஆயினவன்; சிவபெருமான்.
``தாள் அரியான்`` எனச் சினைவினை முதல்மேல் நின்றது.
`நிகராக் குண்டர்கள்` என இயையும்.
``கோளரிக்கும்`` என்பதன் ஈற்று மகரமெய்கெட, நகர ஒற்று மிக்கது விரித்தல் விகாரம்.

பண் :

பாடல் எண் : 55

குண்டகழ் சூழ்தரு கொச்சைத்
தலைவன்றன் குன்றகஞ்சேர்
வண்டக மென்மலர் வல்லியன்
னீர்!வரி விற்புருவக்
கண்டக வாளி படப்புடை
வீழ்செங் கலங்கலொடும்
புண்தகக் கேழல் புகுந்ததுண்
டோ?நுங்கள் பூம்புனத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, களவியலில் தலைவன் தோழி, தலைவி இருவரும் உள்ள இடத்துச் சென்று தோழி தன் குறிப்பையறிதற் பொருட்டு கெடுதி வினாயது கெடுதி - தொலைந்து போன பொருள் அதைப் பற்றி வினாவியது என்க.
குண்டு - ஆழம், `குன்றகம் சேர் மலர் வல்லி` என்க.
வல்லி - கொடி.
அன்னீர் - போன்றவர்களே.
வரி வில் - விரிந்து கட்டப்பட்ட வில்.
அது போலும் உங்களது புருவத்தைச் சார்ந்துள்ள உங்களது, கண் தக - கண்கள் பாய்வது போல, வாளி பட - (யான் எய்த) அம்பு பட்டமையால்.
செங் கலங்கல் - குருதி.
புண் தக - புண் பொருந்த.
கேழல் - காட்டுப் பன்றி.
`வேழம்` எனப் பாடம் ஓதலும் ஆம்.

பண் :

பாடல் எண் : 56

புனத்தெழு கைம்மதக் குன்றம
தாயங்கொர் புன்கலையாய்,
வனத்தெழு சந்தனப் பைந்தழை
யாய்,வந்து வந்தடியேன்
மனத்தெழு பொற்கழல் ஞானசம்
பந்தன்வண் கொஞ்சையன்னாள்
கனத்தெழு கொங்கைக ளாயல்கு
லாய்த்திவர் கட்டுரையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, முன்பாட்டை அடுத்துப் பாங்கி, மதியுடம்பட்டது.
அஃதாவது, `தலைவன் கெடுதி வினாவ இங்கு வரவில்லை; தலைவியை அடைதற்கு என் துணையை வேண்டியே இங்கு வந்தான்` என பாங்கி உணர்ந்தது.
`இவரது கட்டுரை (பேச்சு) இவர் இழந்த பொருள் முதலில் யானையாய் இருந்து, பின்பு மானாகி, அதன்பின்பு மகளிர் உடுத்தும் சந்தனத் தழையை வழங்குவதாகி முடிவில் தலைவியது கொங்கை களாய், முடிவில் அவளது அல்குலாய்விட்டது என்க.
முதலில் இவர், `இவ் வழியாக அம்பு பட்ட ஓர் யானை வந்ததா` என்றார்; அடுத்து `மான் வந்ததா என்றார்; அடுத்து எதையும் தேடுவதை விடுத்து, `இத் தழை உங்கட்கு ஆகுமோ என்றார்.
பின்பு அப்படியும், இப்படியும் போய்த் தலைவியை முன்னும், பின்னும் நோக்கி நிற்கின்றார்; (நன்கு தெரிகின்றது இவரது எண்ணம்) என்பதாம்.
கைக் குன்றம், யானை.
காலை - மான்.
தழை - மகளிர் உடையின் மேல் அழகாகக் கட்டிக் கொள்ளுதற்குப் பூவும், பச்சிலையும் விரவத் தொடுத்து ஆக்கும் ஓர் உடைச் சிறப்பு.
இதனைத் தலைவன் `தலைவிக்கு` எனக் கொணர்ந்து, பெறும்படி பாங்கியை வேண்டுதல் ஒரு முறை.

பண் :

பாடல் எண் : 57

கட்டது வேகொண்டு கள்ளுண்டு,
நுங்கைக ளாற்துணங்கை
இட்டது வேயன்றி, யெட்டனைத்
தானிவ ளுள்ளுறுநோய்
விட்டது வே?யன்றி வெங்குரு
நாதன்றன் பங்கயத்தின்
மட்டவிழ் தார்கொண்டு சூட்டுமின்,
பேதை மகிழ்வுறவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, தலைவியது வேறுபாடு கண்டு தாயர் வேலனை வினாவி வெறியாட்டெடுக்கத் தோழி அதற்கு உடன்படாள் என்பது பற்றிச் செவிலிக்குப் பட்டாங் குரைத்து வெளிவிலக்கி அறத்தொடு நின்றது.
கட்டதுவே கொண்டு - குறிகேட்டுப் பார்த்து, அது, பகுதிப் பொருள் விகுதி.
சிறிது நெல்லை அள்ளி முறத்தில் இட்டு, இரண்டு இரண்டாக எடுத்து வைத்துக் குறிபார்ப்பதை, `கட்டு` என்றும், அப்படிப் பார்க்கும் குறித்தியை, `கட்டுவிச்சி` என்றலும் பழைய வழக்கங்கள்.
அங்ஙனம் குறிபார்த்து, `தலைவியது வேறுபாடு தெய்வத்தான் ஆயது` எனக் கொண்டு மனைக்குள் வெறியாட்டு எடுக்கப்பட்டது.
வெறி - செம்மறியாடு.
அதனைப் பலியிட்டுக் கொண்டாடுவது வெறியாட்டு.
துணங்கை - இரு கைகளாலும் விலாக் களைப் புடைத்து ஆடும் ஒருவகைக் கூத்து, வேலனைச் சார்ந்தவர்கள் ஆடிய இக்கூத்தை அதனைச் செய்வித்தோர் ஆடியதாக அவர்மேல் ஏற்றிக் கூறினாள், இகழ்ச்சி தோன்றுதற் பொருட்டு.
`சுணங்கை` என்பது பாடமன்று.
``நீங்கள் துணங்கை யாடியதைத் தவிர, இவளது நோய் நீங்கிற்றோ`` என்றாள்.
அன்றி ``இதை விடுத்து, இவள் மகிழ்வுற, வெங்குறு நாதன்றன் தார் கொண்டு சூட்டு மின்`` என முடிக்க.
ஐந்திணைகளிலன்றி கைக்கிளைக்கும் தலைவி ஆற்றாமை பற்றி வரும் இன்னோரன்ன சில துறைகள் பொதுவாம் என்க.
வெங்குரு - சீகாழி.
மட்டு அவிழ் - தேனோடு மலர்கின்ற சினைக்குரிய இவ்வினை முதல்மேல் ஏற்றப்பட்டது.
தார் - மாலை.
பேதை, தலைவி.

பண் :

பாடல் எண் : 58

உறவும், பொருளுமொண் போகமுங்
கல்வியுங் கல்வியுற்ற
துறவும், துறவிப் பயனு
மெனக்குச் சுழிந்தபுனல்
புறவும், பொழிலும் பொழில்சூழ்
பொதும்புந் ததும்பும்வண்டின்
நறவும், பொழிலெழிற் காழியர்
கோன்திரு நாமங்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`காழியர் கோன் திரு நாமங்களே எனக்கு, உறவு, பொருள் முதலிய அனைத்தும்` என்பதாம்.
`கல்வியால் உற்ற` என மூன்றாவது விரிக்க.
``துறவி`` என்பதும் ``பிறவி` என்பது போலத் தொழிற் பெயர்.
இப்பொருட்கு `வி` விகுதி.
துறந்தவனைக் குறிக்குமிடத்தில் வகர ஒற்றுப் பெயர் இடைநிலையும், இகரம் விகுதியுமாகும்.
புறவு, முல்லை நிலம், ``பொழில்`` என்றது, முல்லை நிலத்துச் சிறுகாடுகளை, அவகைளால் சூழப்பட்ட பொதும்பு, நகர்ப்புறச் சோலை.
ததும்புதல், இங்கே மிகுதியாக மொய்த்தல்.
வண்டின் - வண்டுக் கூட்டத்தில்.
நறவு - தேன்.
``நறவும்`` என்னும் உம்மை, `வண்டுக் கூட்டங்களேயன்றி, அவற்றிடையே நறவும் பொழிகின்ற காழி` என இறந்தது தழுவிய எச்சம்.

பண் :

பாடல் எண் : 59

நாமுகந் தேத்திய ஞானசம்
பந்தனை நண்ணலர்போல்
ஏமுக வெஞ்சரஞ் சிந்திவல்
இஞ்சி யிடிபடுக்கத்
தீமுகந் தோன்றிகள் தோன்றத்
தளவம் முகையரும்பக்
காமுகம் பூமுகங் காட்டிநின்
ரார்த்தன காரினமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, தலைவன் வரைவிடை வைத்துப் பொருள் பிரிந்த காலத்துக் கார்ப் பருவங் கண்டு தலைவி இரங்கியது.
`நாம், ஞானசம்பந்தனை நண்ணலர் போல் எம் உகக் கார் இனம் சரம் சிந்தி இஞ்சியை இடிக்கவும், தோன்றிகள் தீமுகம் தோன்றவும், தளவம் முகை அரும்பவும் கா முகத்தில் பூ முகத்தைக் காட்டி நின்று ஆர்த்தன` எனக் கூட்டியுரைக்க.
`ஏரம்` என்பது, `ஏம்` எனக் குறைந்து நின்றது.
ஏமம் - பாதுகாவலம்.
உக - கெடும்படி.
சரம்- சரமாரி போலும் மழை மாரி.
இஞ்சி - மதில்.
இடி படுத்தல் - இடியை வீழ்த்தும் முகத்தால் இடிபாட்டினை உண்டாக்குதல்.
தோன்றி - தோன்றிச் செடி.
இவற்றின் பூ சிவப்பாய் இருக்கும் ``தோன்ற`` எனச் சினைவினை முதல்மேல் நின்றது.
தளவம் - முல்லைக் கொடி.
கா முகம் - சோலைகளின்.
பூ முகம் காட்டுதல் - பூப் பூக்கச் செய்தல்.
தோன்றி பூத்தல் முதலியவை கார் காலத்தில் நிகழும் நிகழ்ச்சிகள்.
கார் காலம் வந்து நாள் பல ஆயினமையை இவை குறிக்கும்.
`தலைவன் இன்னும் வந்திலர்` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 60

கார்அங்(கு) அணைபொழிற்
காழிக் கவுணியர் தீபன்,நல்லூர்ச்
சீர்அங்(கு) அணைநற் பெருமணந்
தன்னில் சிவபுரத்து,
வார்அங்(கு) அணைகொங்கை
மாதொடும் புக்குறும் போது,வந்தார்
ஆர்அங்(கு) ஒழிந்தனர், பெற்றதல்
லால்,அவ் அரும்பதமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கவுணியர் தீபன், நல்லூர் பெருமணந் தன்னில் மாதொடும் சிவபுரத்துப் புக்குறும் போது, வந்தார் அவ் அரும்பதம் பெற்றதல்லால், ஆர் அங்கு ஒழிந்தனர்` எனக் கூட்டியுரைக்க.

பண் :

பாடல் எண் : 61

அரும்பத மாக்கு மடயரொ(டு)
அஞ்சலித் தார்க்கரிய
பெரும்பத மெய்தலுற் றீர்!வந்
திறைஞ்சுமின், பேரரவம்
வரும்ப நான்மறைக் காழித்
தலைவன் மலர்க்கமலத்
தரும்பத ஞானசம் பந்தனென்
னானைதன் தாளிணையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அரும் பதம் - அரிய சொல் என்றது துதிமொழியை அவைகளை ஆக்குதல், துதித்தல்.
எனவே, `துதி செய்யும் இடயரொடு, அஞ்சலி செய்தார்க்கும் அடைதற்கரிய பெரும்பதம்` என்றவாறாம்.
பெரும்பதம் - வீடு பேறு.
`பெரும்பதம் எய்தலுற்றீர்! வந்து என் ஆனை தன் தாளிணையே இறைஞ்சுமின்` என இயைத்து முடிக்க.
பேர் அரவம் வரும் பதம் - பெரிய ஆரவாரம் எழுகின்ற இடம்.
`பதமாகிய காழி` என்க.
``பை அரவு அல்குல்`` 1 என்பதில், `அரவப் பை` என்பது `பை யரவு` எனப் பின் முன்னாகி நின்றது போல, `கமல மலர்` என்பது பின் முன்னாக மாறி, ``மலர்க் கமலம்`` என நின்றது.
இலக்கணப் போலி மொழி.
`பத சம்பந்தன்` என இயையும்.
``எண் ஆனை`` என்பது காதற் சொல்.
ஏகாரம், பிரிநிலை.
`வேறு முயலல் வேண்டா` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 62

தாளின் சரணந் தருஞ்சண்பை
நாதன் தரியலர்போல்
கீளின் மலங்க விலங்கே
புகுந்திடும், கெண்டைகளும்,
வாளுந் தொலைய மதர்த்திரு
காதி னளவும்வந்து
மீளுங் கருங்கண்ணி மின்புரி
யாவைத்த மென்னகையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கெண்டைகளும்`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
இப்பாட்டு, `பாங்கன் நீ இன்னையாதற்குக் காரணம் என்னை` வினாயதற்குத் தலைவன் உற்றது உரைத்தது.
சரணம் - அடைக்கலம்.
தரியலர் - பகைவர்.
`தரியலர் போல் மலங்க` என்க.
மலங்குதல் - தலங்குதல்; ``மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி`` 1 என்பது காண்க.
கீளுதல் - கிழித்தல்; உள்ளத்தைக் கிழித்தல்.
`கீளுதலால் மலங்க` என்பதாம்.
விலங்கே - குறுக்கே.
(யான்) `கீளின் மலங்க, கருங் கண்ணி வைத்த மென்னகை விலங்கே புகுந்திடும்` என இயைத்துக் கொள்க.
தொலைய - தோற்க.
மதர்த்தல் - களித்தல்.
மின் - ஒளி புரியா - புரிந்து; வெளிப்படுத்தி.

பண் :

பாடல் எண் : 63

நகுகின்ற முல்லைநண் ணாரெரி
கண்டத்(து) அவர்கவர்ந்த
மிகுகின்ற நன்னிதி காட்டின
கொன்றை; விரவலரூர்
புகுகின்ற தீயெனப் பூத்தன
தோன்றி; புறவமன்கைத்
தகுகின்ற கோடல்கள்; அன்பரின்
றெய்துவர் கார்மயிலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, தோழி தலைவியைப் பருவம் காட்டி வற்புறுத்தியது.
`கார் மயிலே! முல்லை நகுகின்ற; கொன்றை நிதி காட்டின; தோன்றி தீயெனப் பூத்தன; கோடல் கைத் தகுகின்ற; அன்பர் இன்று எய்துவர்` என இயைத்து முடிக்க.
`கார் காலம் வந்துவிட்டது; ஆகவே அவர் வந்துவிடுவார்` என்பதாம்.
``நகுகின்ற, தகுகின்ற`` என்பன, அன் பெறா அகர ஈற்று அஃறிணைப் பன்மை வினைமுற்றுக்கள்.
நண்ணார் - பகைவர்.
கண்டம் - நாடு.
`நண்ணார் நாடு` என்க.
`அது நம் அரசனைப் பகைத்தமையால் தீப்பற்ற எரிவதாயிற்று` என்பதாம்.
செய்யுளாகலின், பின்வரும் அன்பரைச் சுட்டும்.
`அவர்` என்னும் சுட்டுப் பெயர் முன் வந்தது.
நிதி, பொன் `கொன்றை பொன் காட்டின` என்பதாம்.
விரவலர் ஊர், மேற்குறித்தவர்களது ஊர்கள்.
தோன்றி - தோன்றிச் செடி.
புறவ மன் - முல்லை நிலமாகிய அரசன்.
கோடல்கள்- காந்தட் பூக்கள்.
`அவை அரசன் கைகளைப் போலத் தோன்றுகின்ற என்பதாம்.
இவையெல்லாம் கார் கால நிகழ்ச்சிகள்.
கார் மயில் - கார் காலத்தில் ஆடும் மயில்.
மயிலே - மயில் போன்றவளே! உவமை யாகுபெயர்.

பண் :

பாடல் எண் : 64

மயிலேந் தியவள்ளல் தன்னை
யளிப்ப மதிபுணர்ந்த
எயிலேந் தியசண்பை நாத
னுலகத்(து) எதிர்பவர்யார்?
குயிலேந் தியபொழிற் கொங்கேந்
தியகொம்பி னம்புதழீஇ
அயிலேந் தியமலர் கண்டுள
னாய்வந்த அண்ணலுக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(இப்பாட்டிற்கு இரண்டு வகையாகப் பொருள் சொல்லப்படுகின்றது.
முதலாவது பொருள், ஞானசம்பந்தரை முருகன் அவதாரமாகக் குறிப்பது.
இரண்டாவது பொருள், அவ்வாறன்றிப் பொதுவாய் நிற்பது.)
முதலாவது உரையில் ``மயில் ஏந்திய வள்ளல்`` என்பதைப் பின் வருகின்ற ``தன்`` என்பதனோடு இயைக்காமல், ``அளிப்ப`` என்பதன்பின் `வந்து` என ஒருசொல் வருவித்து, `வந்த மதி புணர்ந்த சண்பை நாதன்` என இயைத்து, ``மதி புணர்ந்த - ஞானத்தைப் பெற்ற`` எனப் பொருள் உரைக்கப்படும்.
இனி, `முருகனைப் புதிதாக ஞானம் பெற்றதாக உரைத்தல் சிறப்பன்று` எனக் கொண்டு, மதியைச் சந்திர னாக்கி, `சந்திரன் தவழ்கின்ற எயில்` என எயிலுக்கு அடையாக்கியும் உரைக்கப்படும்.
இதில் `வந்து` என்பது உருவிக்கப்படாமல் `வந்த` என்பது வருவிக்கப்படும்.
மயில் ஏந்திய வள்ளல் - மயிலால் தாங்கப்பட்ட வள்ளல்; முருகன், ஐ - தந்தை.
முதல் உரையிற் கொள்ளும் பொருள், ஒரு சொல்லை வருவித்தல்.
``மதி புணர்ந்த`` என்பதை வெறும் ஓர் அடை மொழியாக்குதல் ஆகிய இடப்பாடுகள் உள்ளன.
இரண்டாவது உரையில், ``மயிலேந்திய வள்ளல் தன் ஐ`` என்பது நேரே ஒரு தொடராகி, `சிவபெருமான்` எனப் பொருள் தந்து, அவன் அளிப்ப ஞானம் பெற்ற சண்பை நாதன்` என நேரே சென்று எளிதில் விளங்குகின்றது.
முதலிற் கண்டவாறு உரை செய்கின்றவர்கள், `ஞான சம்பந்தரை முருகன் அவதாரமாக நம்பியாண்டார் நம்பிகள் சொல்லி இருப்பதைச் சேக்கிழார் சொல்லவில்லை` என்பர்.
`ஞானசம்பந்தர் முருகன் அவதாரமே` என ஒட்டக் கூத்தர் தமது தக்க யாகப் பரணியில் மிக வலியுறுத்திக் கூறினார்.
பிற் காலத்திலும் அருணகிரி நாதர், திருப்போரூர்ச் சிதம்பரசுவாமிகள் இக் கருத்தைக் கொண்டிருந்தனர்.
துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் அவ்வாறு எங்கு கூறவில்லை.
இவையெல்லாம் இப்பாட்டில் ``சண்பை நாதன்`` என்னும் அளவில் நிற்பன.
பின் உள்ளவை அகப் பொருள் துறையில் தலைவனைப் பகற்குறி விலக்கி, இரவுக்குறி நேரும் தோழி, அதற்குத் தலைவியை உடன்படுவித்தது.
கொங்கு - தேன்.
`கொம்பு போலும் அம்பு` என்க.
`கொடிய அம்பினைப் பூங்கொம்பு போலக் கொள் பவன்` எனத் தலைவனது ஆண்மையைக் குறிக்க இவ்வாறு கூறினாள்.
அயில் ஏந்திய மலர்; வேல்போலத் தோன்றும் மலர்கள், இவை கரும்பின் பூக்கள்.
தோடுகொள் வேலின் தோற்றம் போல
ஆடுகட் கரும்பின் வெண்பூ நுடங்கும்
என்றது காண்க.
`கரும்பினது வேல்போலும் பூக்களைக் கண்டுளனாய் வந்த அண்ணல்` என்றது `எதிர்ப்பவர் வேல்களையும் பூக்கள்போல் எண்ணி அழிப்பவன்` என்னும் குறிப்பினைத் தோற்றுவித்தது.
`அண்ணலுக்கு` என்னும் நான்கனுருபை இரண்டனுருபாகத் திரித்து அதனை, ``எதிர்ப்பவர் யார்`` என்பதனோடு முடிக்க.
`எதிர்பவர்` எனப் பாடம் ஓதலும் ஆம்.
நம் அண்ணலைத் தகைவார் ஒருவர் இனி இதனை, ஒருவழித் தணந்த தலைமகன் வரவு நீட்டிப்ப, `அவற்கு ஏதம் விளைந்தது கொல்லோ` என நினைந்து கவன்ற தலைவியைத் தோழி, `இஃது ஆகாது` என ஆற்றுவித்ததாகக் கொள்ளலும் ஆம்.

பண் :

பாடல் எண் : 65

அண்ணல் மணிவளைத் தோளரு
காசனி சண்பையன்ன
பெண்ணி னமிர்தநல் லாள்குழல்
நாற்றம் பெடையொடுபூஞ்
சுண்ணந் துதைந்தவண் டே!கண்ட
துண்டுகொல்? தூங்கொலிநீர்த்
தண்ணம் பொழிலெழிற் காசினி
பூத்தமென் தாதுகளே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, ``கொங்குதேர் வாழ்க்கை`` எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாட்டின் பொருளையே உடையது.
1 அப்பாட்டின் கருத்தை நச்சினார்கினியர் பலவாகக் கூறுவார்.
2 அண்ணல் - பெருமை.
பெண்ணின் அமிர்த நல்லாள் - பெண்களுக்குள்ளே அமிர்தம் போல்வளாய அழகு மிக்கவல்.
சுண்ணம், இங்கே, மகரந்தம், ``பெடையோடு பூஞ் சுண்ணம் துதைந்த வண்டே`` என்பதை முதலிற் கொள்க.
தூங்கு ஒளி - தொடர்ச்சியாய் எழுகின்ற ஒலி.
``நீர்`` என்பது ஆகுபெயராய், அதனையுடைய பொய்கையைக் குறித்தது.
`பொய்கையை யுடைய பொழில்` என்க.
காசினி - பூமி.
தாது - மகரந்தம், இதுவும் ஆகுபெயராய் அதனை யுடைய பூக்களைக் குறித்தது.
இதன்பின் `தாதுகளில்` என ஏழாவது விரித்து, `வண்டே! காசினியில் பொழில்களில் பூத்த தாதுகளில் பெண்ணின் அமிர்தநல்லாள் குழல் நாற்றம் கண்டதுண்டுகொல்` என ஐயத்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 66

தாதுகல் தோய்த்தநஞ் சந்தாந்
யார்சட லம்படுத்துத்
தூதையிற் சிக்கங் கரஞ்சேர்த்து
வாளா துலுக்குகின்றீர்;
பேதியிற் புத்தர்கள்! வம்மின்;
புகலியர் கோனன்னநாட்
காதியிட் டேற்றும் கழுத்திறம்
பாடிக் களித்திடவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`போதியிற் புத்தர்களே! நீவிர் எம் சந்நியாசியார் போலவே காவியுடுத்துச் சமணர்களைத் துன்புறுத்தும் வகையில் அவர்களது உறிகளைக் கைப்பற்றி வீணாக வம்பு செய்கின்றீர்கள்; (அவர்களை வாதத்தில் வென்றபாடில்லை.
எம்முடன் சேர்ந்து) அவர்களை அன்று புகலியர் கோன் வாதில் வென்று கழுவேற்றிய திறத்தைப் பாடுதற்கு வாருங்கள்`` என்பது இப்பாட்டின் பொருள்.
போதி - அரசமரம்.
இது புத்தர்கள் தெய்விகத் தன்மை உடையதாகக் கருதி வழிபட்டிருப்பர்.
``போதி`` என்றது அதன் நிழலைக் குறித்தது.
``போதியிற் புத்தர்கள்`` என்பதை, `பறம்பிற்பாரி` என்பது போலக் கொள்க.
புத்தர்கள், அண்மை விளி.
தாது கல் - காவிக் கல்.
`சந்நியாசியார்` என்பது `சந்நாசியார்` என மருவி வந்தது.
அஃது ஆகுபெயராய் அவர் உடுக்கும் ஆடையைக் குறித்தது.
சடலம் படுத்தல் - உடம்பிற் பொருந்த வைத்தல்.
தூதை - மட் பாண்டம்.
இதில் கஞ்சி ஊற்றி வைக்கப்படும்.
சிக்கம் - உறி.
`தூதையினை உடைய சிக்கம்` என்க.
சமண முனிவர்கள் தாம் உண்ணும் கஞ்சியை இவ்வாறு உறியில் வைத்துக் கையிலே கொண்டிருப்பர்.
கீழே புறத்தே வைத்தால் ஈ, எறும்பு முதலிய சிற்றுயிர்கள் கஞ்சியில் வீழ்ந்து மாண்டு விடுமாம்.
`சிக்கத்தில் கரம் சேர்த்து` என்க.
கரம் - புத்தர்கள் கை.
துலக்குதல் - வம்பு பேசுதல்.
`சும்மா தும்பு துலுக்குகிறான்` என்னும் வழக்கம் இப்பொழுதும் நாட்டில் உண்டு.
காதுதல் - இங்கே, காய்தல் அது வாதில் வெல்லுதலைக் குறித்தது.
சமணரும், புத்தரும் வதத்தை இகழ்தலில் ஒன்று படினும் பிற வகையில் வேறுபட்டுத் தம்முட் கலாய்ப்பர்.
அது பற்றி, ``ஞான சம்பந்தர் காலத்திற்றானே `சமண் சமயம் பொய்ச் சமயம்` என்பது நாடறிய மெய்ப்பிக்கப்பட்டு விட்டிருக்க, இன்று புத்தர்கள் ஏன் அந்தச் சமயத்தை `பயனற்றது` எனக் காட்ட முயல வேண்டும் என்கின்ற முறையில் அமைந்தது இப்பாட்டு.
துறவுக் கோலத்தால் புறத்தே சமணரைப் போல இல்லாமல் எம்மைப் போல உள்ள நீவிர், சமணரை வென்ற வெற்றியைப் பாடுவதிலும் எங்களோடு சேர்ந்து கொள்ள லாமே` என்பது தோன்ற, ``நம் சந்நாசியார் சடலம் படுத்து`` என்றார்.
பௌத்தத் துறவிகள் சிவந்த ஆடையை உடுத்துதல், பட்டைத் துவராடைப் படிமம் கொண்டாடும்
முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே
என அருளிச் செய்தமையாலும் அறியலாம்.
படிமம் - துறவுக் கோலம்.
நாம் உரை காணும் பாட்டில் ``தாதுகல் தோய்த்த`` என்பது நம் சந்நாசியார் ஆடையின் இயல்பு கூறியது.
`பௌத்தருடையது பட்டைத் துவராடையாயினும் நிறத்தால் ஒருபடை ஒக்கின்றது` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 67

களியுறு தேன்தார்க் கவுணியர்
தீபன் கருதலர்போல்
வெளியுறு ஞாலம் பகலிழுந்
தால்,விரை யார்கமலத்(து)
அளியுறு மென்மலர்த் தாதளைந்(து)
ஆழி யழைப்பவரும்
துளியுறு வாடையி தாம்மட
மானைத் துவளவிப்பதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, பிரிவுணர்த்திய தலைவனுக்குத் தோழி தலைவி ஆற்றாளாவது கூறிச் செலவழுங்குவித்தது.
கவுணியர் தீபன் கருதலர் (பகைவர்) ஞான ஒளியை இழப்பதுபோல ஞாலம் பகற் பொழுதை இழந்தால்` என்க.
களி உறு - வண்டுகள் உண்ணக் களிப்பைத் தருகின்ர.
வெளி உறு ஞாலம் - பகற் காலத்தில் ஒளியைப் பெற்று மகிழ்கின்ற உலகம் விகை - நறுமணம்.
அளி - வண்டு.
தாது அணைந்து - மகரத்தில் மூழ்கி.
ஆழி அழைப்ப - கடல் ஒளியை உண்டாக்கும்படி.
துளி உறு வாடை - மழைத் துளியோடு பொருந்தி வரும் வாடைக் காற்று.
மட மான் - தலைவி `ஞாலம் பகலை இழந்தால் (இரவில்) மட மானைத் துவள்விப்பது வாடையாகிய இதுவாம்` என இயைத்து முடிக்க.
`அதுபொழுது எனக்கு அவளை ஆற்றுவித்தல் அரிது` என்பது குறிப்பெச்சம் இதனால் தலைவன் செலவழுங்குதல் பயன்.

பண் :

பாடல் எண் : 68

தேறும் புனல்தில்லைச் சிற்றம்
பலத்துச் சிறந்துவந்துள்
ஊறு மமிர்தைப் பருகிட்
டெழுவதொ ருட்களிப்புக்
கூறும் வழிமொழி தந்தெனை
வாழ்வித் தவன்கொழுந்தேன்
நாறும் அலங்கல் தமிழா
கரனென்னும் நன்னிதியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தேறும் புனல் - தெளிவாகிய நீர் வழிமொழி ``சுரருலகு நரர்கள் பயல்`` எனத் தொடங்கும் `வழிமொழித் திருவிராக`த் திருப்பதிகம் 1 .
அலங்கல் - தாமரை மலர் மாலை.
`எந்தத் தலத்தில் உள்ளவரும் தில்லைப் பெருமானே` என்பது பற்றி, அத்திருப்பதிகத்தின் வழிப் பிரமாபுரப் பெம்மானை உள்க எழும் இன்பத்தைத் தில்லைச் சிற்றம்பலத்தினின்ரும் வந்து ஊறும் அமிர்தத்தைப் பருகுவதனால் உண்டாகும் இன்பமாகக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 69

நிதியுறு வாரற னின்பம்வீ
டெய்துவ ரென்னவேதம்
துதியுறு நீள்வயல் காழியர்
கோனைத் தொழாரினைய
நதியுறு நீர்தெளித்(து) அஞ்ச
லெனவண்ண லன்றோவெனா
மதியுறு வாணுதல் பாதம்
பணிந்தனள் மன்னனையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, தோழி செவிலிக்குப் புனல்தரு புணர்ச்சியால் அறத்தொடு நின்றது.
``-அவனைத் தொழுபவர் அறம் முதலிய நான்கையும் எய்துவா என வேதம் துதித்தலைப் பொருந்திய காழியர் கோன்`` என்க.
செய்யுள் நோக்கி நிதி முற் கூறப்பட்டது.
`நதியின் கண், தொழாதார் இனையும்படி (வருந்தும்படி) உறு நீர்` என உரைக்க.
``அந்நீரின்கண் அகப்பட்டுக் கலங்கிய உன் மகளைத் தலைவன் ஒருவன் கண்டு எடுத்துக் கரை சேர்த்துத் தெளிவித்து, `அஞ்சற்க` என்று சொல்ல, இவள், `அண்ணலே! இது நன்றோ` எனச் சொல் அவனைப் பாதம் பணிந்தால்`` எனத் தோழி கூறினாள், இதனால், ``உற்றாற்கு (மெய் தீண்டினவனுக்கு) உரியர் பொற்றொடி மகளிர்`` என்னும் முறைப்படி உன் மகள் இனி அவனுக்கே உரியள்`` என்பது குறிப்பால் தோன்றக் குறினாள்.
வாள நுதல், தலைவி.
மன்னன் - அரசகுலத்தின னாய தலைவன.
``நன்றோ`` என்றதில் ஏகாரம் எதிர்மறைப் பொருட்டாய், ``கன்னியை யுடையாள் ஒருத்தியை அரசர் குலத்தினா ராகிய நீவிர் திடுமெனப் போந்து தீண்டியது நன்றன்று`` எனவும், ஓகாரம் சிறப்புப் பொருட்டாய் ``கன்னிப் பெண்ணைத் தீண்டும் முன் அவளை மணந்து கொள்ளத் துணிந்தே நெறியுடைய ஆடவர் தீண்டுவர் ஆதலின், `நீரும் அத்துணிவினை யுடையீர்` என்பதனை அறிய நன்றா கின்றது`` எனவும் இருபொருளும் தந்தது.
இவ்வாற்றால் முதலில், `நின் மகள் நம் குடிக்குப் பழியுண்டாக ஒழுகினாள் அல்லள்` எனவும் `தெய்வத்தால் நிகழ்ந்த இந்நிலைமையால் நின்மகள் குடிப் பிறந்தார்க்கு உரிய அறத்தையே பற்றி நின்று, தன்னை அவனுக்கு உரியளாகக் கருதிவிட்டாள்` எனவும் கூறினாள்.
``மதி`` என்பதைச் சந்திரனாகக் கொண்டு நுதலுக்கு உவமை யாக்காது, `புத்தி` எனக் கொண்டு, தலைவியது முதுக் குறைவைப் புகழ்ந்ததாக உரைத்தல் சிறப்பு.

பண் :

பாடல் எண் : 70

மன்னங் கனை!செந் தமிழா
கரன்வெற்பில் வந்தொருவர்
அன்னங்கள் அஞ்சன்மி னென்றடர்
வேழத் திடைவிலங்கிப்
பொன்னங் கலைசா வகையெடுத்
தாற்கிவள் பூணழுந்தி
இன்னந் தழும்புள வாம்பெரும்
பாலுமவ் வேந்தலுக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டும் முன்னது போலவே தோழி செவிலிக்குக் களிறு தரு புணர்ச்சியால் அறத்தொடு நின்றது.
``மன்னங்கனை`` என்பதை, ``மன் அங்கு அனை`` எனப் பிரித்து, `அனை - அன்னையே என உரைத்து, ``மன் அங்கு`` என்பதை எடுத்தாற்கு என்பதன் பின்னர்க் கூட்டி, `இது நிகழ்ந்த அங்கு` என உரைக்க.
இவ்வாறன்றி, தோழி செவிலியை, `அங்கனாய்` என விளித்தல் பொருந்தாது.
அன்னங்கள் - அனங்களே! என்றது மகளிர் கூட்டத்தை.
அடர் - தாக்க வந்த வேழம் - களிறு; ஆண் யானை இடை விலங்கி - குறுக்கே தடுத்து, பொன் அம் கலை சா வகை - எடுத்தாற்கு- பொன்போலும் அழகிய ஆண், மான்தன் பெண் மானைக் காக்கத் தன் உயிரையும் விடத் துணிந்ததுபோலத் துணிந்து எடுத்துக் காத்த அவனுக்கு.
இதன் பின் `உரித்தாக` என ஒரு சொல் வருவிக்க.
இரித்தாயது, பூணின் அழுத்தம்.
உள ஆம் - உளவாகலாம், ``உள`` என்ற பன்மையால், தழும்புகள் பலவாதல் பெறப்பட்டது.
`உள` எனத் துணிந்து கூறின் பின்னரும் அவனோடு பலநாள் பழகியதாகும் ஆதலின், பெரும்பாலும் உள ஆகலாம்` என ஊகமாகக் கூறினாள்.
இதனால், தலைவி தலைவனை இறுகத் தழுவி கொண்டமை கூறினாளாயிற்று.

பண் :

பாடல் எண் : 71

ஏந்தும் உலகுறு வீரெழில்
நீலநக் கற்குமின்பப்
பூந்தண் புகலூர் முருகற்கும்
தோழனைப் போகமார்ப்பைக்
காந்துங் கனலிற் குளிர்படுத்
துக்கடற் கூடலின்வாய்
வேந்தின் துயர்தவிர்த் தானையெப்
போதும் விரும்புமினே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஏந்தும் உலகு - தாங்கும் உலகு; நிலவுலகம்.
போக மார்ப்பை - ``போகமார்த்த பூண்முலை யாள்`` என்னும் முதல் நினைப்பை யுடைய திருப்பதிகத்தை.
குளிர்படுத்து வேகாது பச்சையாகப் பண்ணி.
``மலிதேரான் கச்சியும் மாகடலும் தம்மின் ஒலியும் பெருமையும் ஒக்கும்`` 1 என்றது போலக் கடல் நகரத்தையும் கூறுதல் கூடுமாகலின், ``கடற் கூடல்`` என்பதை, `கடல் போலும் கூடல்` எனக் கொள்க.

பண் :

பாடல் எண் : 72

விரும்பும் புதல்வனை மெய்யரிந்
தாக்கிய வின்னமிர்தம்
அரும்பும் புனற்சடை யாய்உண்
டருளென் றடிபணிந்த
இரும்பின் சுடர்களிற் றான்சிறுத்
தொண்டனை யேத்துதிரேல்
சுரும்பின் மலர்த்தமி ழாகரன்
பாதம் தொடர்வெளிதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரும்பு - அங்குசம்; ஆகுபெயர்.
சுடர் - ஒளி.
யானையை அடக்க உதவுகின்ற அங்குசத்தை அதன் காதிலேயே மாட்டி வைப்பது வழக்கம்.
``இரும்பின் சுடர்க் களிற்றான்`` என்றது தளபதியாய் இருந்து வெற்றி பெற்றதைக் குறித்த குறிப்புச் சொல்.
தொடர்வு - தொடர்தல்; அடைதல்.
`பாதத் தொடர்பு` என்பதும் பாடம்.
``தொடர்வு எளிதே`` என்றது, `சிறுத்தொண்டர்பால் மிக்க நட்புக் கொண்டவர்` என்பது விளங்குதற்கு.
``அரும்பும் புனற் கடையாய்`` என்றது, `சிவபெருமானாகவே தோன்றுகின்றவரே` என்றபடி.
மலர் - தாமரை மலர் மாலை.

பண் :

பாடல் எண் : 73

எளிவந்த வா!வெழில் பூவரை
ஞாண்,மணித் தார்தழங்கத்
துளிவந்த கண்பிசைந் தேங்கலு
மெங்க ளரன்துணையாங்
கிளிவந்த சொல்லி,பொற் கிண்ணத்தின்
ஞான வமிர்தளித்த
அளிவந்த பூங்குஞ்சி யின்சொற்
சிறுக்கன்ற னாரருளே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``எளி வந்தவா`` என்பதை இறுதியிற் கூட்டி, `எளியேனுக்கு எளிவந்தவாறு வியக்கத் தக்கது` என முடிக்க.
``பூ`` இரண்டில் முன்னது அழகு; பின்னது பொற்பூ.
தார் - வடம்.
அழுங்க - ஒளி குன்றும்படி.
`அரனுக்குத் துமையாம்` என நான்காவது விரிக்க.
``கிள் வந்த`` என்பதில் `வந்த`, உவம உருபு.
``அளித்த`` என்னும் பெய ரெச்சம் ``சிறுக்கன்றனார்`` என்னும் கோடற் பொருட் பெயர் கொண்டது.
அளி - வண்டு.
``சிறுக்கன், சிறுக்கி` என்றாற் போலும் வழக்கு இருத்தலால், `சிறு` என்பது முன் வலி மிகுதல் வழக்கு நெறியாகக் கொள்ளப்படும்.
கன்று - யானைக் கன்று.
அன்னார் - போன்றவர்.

பண் :

பாடல் எண் : 74

அருளுந் தமிழா கர!நின்
னலங்கல்தந் தென்பெயரச்
சுருளுங் குழலியற் கீந்திலை
யேமுன்பு தூங்குகரத்(து)
உருளும் களிற்றினொ(டு) ஒட்டரு
வானை யருளியன்றே
மருளின் மொழிமட வாள்பெய
ரென்கண் வருவிப்பதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கைக்கிளைத் தலைவி பொருட்டாகத் தூது வந்து மாலை இரந்த தோழியை ஞானசம்பந்தர் இன்சொற் சொல்லி மறுக்க வேண்டி, அவளையே `தலைவீ` என அழைத்ததாகவும், அதனைக் கேட்டுத் தோழி மறுமொழி கூறியதாகவும் இப்பாட்டு அமைந்துள்ளது.
`பணி செய்பவளாகிய என்னை, `தொழீஇ` என அழைக்காமல், `தலைவி` என அழைக்கின்றீர்.
அப்பெயர் என் தலைவிக்கு உரியது.
அவளை நீர் ஏற்றுக் கொண்டால் பின்பு உரிமை பற்றி அவளை நீர் `தொழிஇ` என்றே அழைக்கலாம்.
அப்பொழுது நான் செய்த உதவி பற்றி எனக்கு நீர் தரும் பாராட்டாக என்னை அவன்முன் `தலைவீ` என்று கூட அழைக்கலாம்.
அவ்வாறு செய்யாமல் இப்பொழுதும் என்னை, `தலைவீ` என்று அழைத்து வெறும் இன்சொற் சொல்லி மறுக்க நினைக்கின்றீரே; இது முறையோ; என்னும் கருத்தினை இப்பாட்டு உடையது.
சுருளுங் குழல் இயல், தலைவி, ஞானசம்பந்தர் யானைமேல் பவனி வரக் கண்ட பொழுது அதன் பின்னே ஓடியதாக வைத்து, ``களிற்றினொடு ஓட்டருவாளை அருளியன்றே அவள் பெயரை என்கண் வருவிப்பது`` என்றாள், அவள் பெயர், `தலைவி` என்பது ஓடுதலை `ஓட்டருதல்` எனவும் கூறுவர்.
``ஒக்கவே ஓட்டந்தேன்`` 1 என அருளிமை காண்க.
``ஓட்டருவானை`` என்பது பாடமன்று, அலங்கல் - மாலை.
`முன்பு அருளியன்றே` என இயையும்.

பண் :

பாடல் எண் : 75

வருவார் உருவின் வழிவழி
வைத்த வனமருந்தும்
திருவார் இருந்த செழுநகரச்
செவ்வித் திருவடிக்காள்
தருவான் தமிழா கரகரம்
போற்சலம் வீசக்கண்டு
வெருவா வணங்கொண்டல்
கள்மிண்டி வானத்து மின்னியவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, ஒருவழி தணந்த தலைமகள் வரவு நீட்டிப்பத் தலைவி கார் காலம் கண்டு ஆற்றாமை மிக்க வழித்தோழி, `இஃது அவர் வரும் காலம்` எனத் தேற்றி ஆற்றுவித்தது.
வருவார் உரு - பிரிந்து சென்று மீண்டுவரும் தலைவர்களது உருவம்.
அவைகள் வரும் வழியிலே வைத்த விழியை உடையவர்கள் தலைவியர்.
விழியை அவ்வாறு வைத்த வண்ணமே உணமை அருந்துகின்ற திருவை (சிறப்பை) உடையவர்கள் தலைவியர்.
`அவர்கள் இருந்த செழு நகரத்தில் கொண்டல்கள் மிண்டி மின்னிய` என்க.
செவ்வித் திருவடி - பக்குவம் வந்த காலத்தில் உயிர்களால் அடையப்படும் திருவடி.
அவை சிவபெருமானுடையன கொண்டல்கள் முன்னே சலத்தை (மழையை) வீச, அஃது இருண்டு பெய்தலின், `வருகின்றவர்கள் வழியறியாது திகைப் பார்களோ` என்று வெருவா வண்ணம் பின்பு மின்னின` என்க.
எனவே, `மின்னலே விளக்காக வருவர்` என வற்புறுத்தியவாறு.
இதன் முதல் அடியில் பாடங்கள் பிழைபட்டுள்ளன.
மிண்டி - வலிமை யுற்று.
`தலைவர் பிரியத் `தலைவியர் ஆற்றியிருத்தல் உலகியல் ஆதலின், நீயும் அத்தன்மைய ளாதல் வேண்டும்` என்பாள், `நம் தலைவர்` எனவும், `நீ` எனவும் கூறாது பொதுப்பட, ``வருவார்`` எனவும், ``அருந்தும் திருவார்`` எனவும் கூறினாள்.

பண் :

பாடல் எண் : 76

மின்னார் குடுமி நெடுவெற்
பகங்கொங்கில் வீழ்பனிநோய்
தன்னார் வழிகெட் டழிந்தமை
சொல்லுவர் காணிறையே
மன்னார் பரிசனத் தார்மேல்
புகலு மெவர்க்குமிக்க
நன்னா வலர்பெரு மானரு
காசனி நல்கிடவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வீழ் பனிநோய் இறையே, மன் ஆர் பரிசனத்தோர் மேற் புகலும் அருகாசனி நல்கிட, வெற்பகக் கொங்கில் தன் ஆர்வழி கெட்டமை சொல்லுவர்` என இயைத்து முடிக்க.
காண், முன்னிலை யசை.
வெற்பகக் கொங்கு - மலைகள் நிறைந்த கொங்கு நாடு.
பனி நோய் - குளிர்க் காய்ச்சல்.
தன் ஆர் வழி - தனக்கு ஏற்புடைய வழி ``தன்`` என்றது பனி நோயை.
`உலகத்தார் பலரும் சொல்லிப் புகழ்வர்` என்க.
இறை - சிறிது.
மன் ஆர் - மிகுதியாகப் பொருந்திய `பதினாறாயிரம் பேர்` என்பர்.
பரிசனத்தோர், உடன் வரும் அடியார்கள்.
நல்கிட - அருள்புரிய அஃதாவது, `திருப்பதிகம் அருளிச் செய்ய` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 77

நல்கென் றடியி னிணைபணி
யார்;சண்பை நம்பெருமான்
பல்கும் பெரும்புகழ் பாடகில்
லார்சிலர் பாழ்க்கிறைத்திட்(டு)
ஒல்கு முடம்பின ராய்,வழி
தேடிட் டிடறிமுட்டிப்
பில்கு மிடமறி யார்கெடு
வாருறு பேய்த்தனமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``சிலர்`` என எடுத்துக்கொண்டு, ``சண்பை நாதன்`` என்பதை ``நல்கென்று`` என்பதன்பின் கூட்டியுரைக்க.
நல்கு - அருள் செய்; ``அடியின் இணை`` என்பதில் பின், வேண்டாவழிச் சாரியை.
ஒல்குதல் - தளர்தல், வழி, வீடு பேற்றிற்கான வழி, பில்கும் இடம் - பேரின்பம் ததும்பும் இடம்.
அறியார்; முற்றெச்சம்.
உறு - மிகுதி.
`இஃது உறு பேய்த்தனம்` என்க.
பேய்த்தனம் - பேய்த் தன்மை அஃதாவது, பித்து.

பண் :

பாடல் எண் : 78

தனமே தருபுகழ்ச் சைவ
சிகாமணி தன்னருள்போல்
மனமே புகுந்த மடக்கொடி
யே!மலர் மேலிருந்த
அனமே! யமிர்தக் குமுதச்செவ்
வாயுங்க ளாயமென்னும்
இனமே பொலியவண் டாடெழிற்
சோலையு ளெய்துகவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் தலைவன் தலைவியை ஆயத்து உய்த்தது.
தனம் தரும் புகழ் - பொருள் வழங்கியதனால் உண்டாகிய புகழ்.
அது தந்தையார் சிவபாத இருதயருக்கும், திரிவீழி மிழலையில் பஞ்ச காலத்தில் பலர்க்கும் வழங்கியது.
`அன்னம்` என்பது இடைக் குறைந்து நின்றது.
``செவ்வாய்`` என்றதும் `சிவந்த வாயை உடையவளே` என்றவாறேயாம்.
பொலிய - (நீ இல்லாமையால் இழந்த) பொலிவைப் பெற்று விளங்கும்படி.
இங்ஙனம் கூறியதனால், `நீ செலவு தாழ்ப்பின் ஆயத்தார் தேடி வருவர்` என்பது குறிப்பித்தான்.
``சைவ சிகாமணிதன் அருள் போல் மனம் புகுந்த`` என்றதனால், `அவ்வருள் போல நீ என் உயிரினும் சிறந்ததாய் ஆதலின், நீ எங்கிருப்பினும் உனை நான் இமைப் போதளவின் மறவேன்` எனத் தனது காதர் சிறப்பு உணர்த்தினான்.

பண் :

பாடல் எண் : 79

உகட்டித்து மோட்டு வராலினம்
மேதி முலையுரிஞ்ச
அகட்டிற் சொரிபால் தடம்நிறை
கொச்சை வயத்தரசைத்
தகட்டில் திகழ்மணிப் பூண்தமி
ழாகரன் தன்னையல்லால்,
பகட்டில் பொலியினும் வேண்டேன்,
ஒருவரைப் பாடுதலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``உகட்டித்து`` என்னும் பிறவினை வினைச்சொல், `உகண்டு` எனத் தன்வினையாய் நின்றது.
உகளுதல் - பிறழ்தல், எழும்பிக் குதித்தல்.
மோட்டு வரால் இனம் - பெரிய வரால் மீனின் கூட்டம்.
மேதி - எருமை.
உரிஞ்ச - உராய.
அகடு - வயிறு அஃது ஆகுபெயராய், மடியைக் குறித்தது.
`அகட்டினின்றும் சொரிபால்` என்க.
தடம் - தடாகம்.
கொச்சைவயம் சீகாழி.
தகடு - பொன் தகடு.
மணி - இரத்தினம்.
பூண் - அணிகலம்.
பகடு - யானை.
ஒருவரை - வேறு ஒருவரை `வேறு` என்பது தமிழாகரரோடு இயைபில்லாமை `யானைமேற் செல்லும் செல்வத்தைப் பெறுவதாயினும்; தமிழாகரரோடு சிறிதும் இயை பில்லாத ஒருவரைப் பாடுதலை வேண்டேன்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 80

பாடிய செந்தமி ழாற்பழங்
காசு பரிசில் பெற்ற
நீடிய சீர்த்திரு ஞானசம்
பந்தன் நிறைபுகழான்
நாடிய பூந்திரு நாவுக் கரசோ
டெழில்மிழலைக்
கூடிய கூட்டத்தி னாலுள
தாய்த்திக் குவலயமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.
`நேடிய` என்பது பாடமன்று.
ஞானசம்பந்தர் பழங் காசுபெற, நாவுக்கரசர் நல்ல காசு பெறிறமை பற்றி, ``பூந்திருநாவுக்கரசு`` என்றார்.
பூ - அழகு.
அவர் பெற்ற காசின் அழகு அவருக்கு ஆக்கிச் சொல்லப்பட்டது.
``இக் குவலயம் உளதாய்த்து`` என்றது, `உயிர்கள் பஞ்சத்தால் வாடி மடியாமல் வாழ்ந்தன` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 81

வலையத் திணிதோள் மிசைமழ
வேற்றி, மனைப்புறத்து
நிலையெத் தனைபொழு தோகண்ட(து)
ஊரனை நீதிகெட்டார்
குலையக் கழுவின் குழுக்கண்ட
வன்திகழ் கொச்சையன்ன
சிலையொத்த வாள்நுதல்! முன்போல்
மலர்க திருக்கண்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, புதல்வனை வாயிலாகப் பற்றி வந்த தலைவனைத் தலைவி வாயில் மறுக்கத் தோழி வாயில் வேண்டியது.
`நீதி கெட்டார்.
வாள் நுதல்! ஊரனைத் தோள்மிசை மழவு ஏற்றி மனைப்புறத்துக் கண்டது எத்தனைப் பொழுதோ! திருக்கண்கள் முன்போல் மலர்க` எனக் கூட்டி யுரைக்க.
வலையம் - வாகு வலயம்; தோள்வளை.
மழவு - புதல்வன்.
மனைப்புறம் - புறங்கடை.
நிலை - நிற்றல்.
`நிற்றலில் கண்டது` என ஏழாவது விரிக்க.
``எத்தனைப் பொழுதோ`` என்றது, `மிக நீண்ட நேரம்` என்றபடி.
`தலைவர் இத்தன்மையராகவும் சிவப்பு ஆறாமை குல மகளிர்க்கு அழகன்று; உனது அழகிய கண்கள் சிவப்பு ஆறி, முன்போல் குளிர்ச்சியுடன் மலர்வன வாக` என்பதாம்.
நீதி கெட்டான்.
சமணர்.
குலைய - அழிய `அவரைச் கழுக் குழுவிற் கண்டவன்` என்க.

பண் :

பாடல் எண் : 82

கண்ணார் திருநுத லோன்கோலக்
காவில் கரநொடியால்
பண்ணார் தரப்பாடு சண்பையர்
கோன்பாணி நொந்திடுமென்(று)
எண்ணா வெழுத்தஞ்சு மிட்டபொன்
தாளங்க ளீயக்கண்டும்
மண்ணார் சிலர்சண்பை நாதனை
யேத்தார் வருந்துவதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண் ஆர் திருநுதலோன், சிவபெருமான் கோலக்கா, சீகாழியை அடுத்துள்ள தலம்.
நொடி - நொடித்தல்; தட்டுதல்; தாளம் இடுதல், பாணி - கை.
எண் ஆர் - எண்ணுதல் (கணித்தல்) பொருந்திய எழுத்து அஞ்சு திருவைந்தெழுத்து மந்திரம்.
இட்ட - பொறிக்கப்பட்ட மண்ணார் - மண்ணுலகத்தில் உள்ளவர்.
`அச்சண்பை நாதனை` எனச் சுட்டு வருவிக்க.
எண்ணார், முற்றெச்சம் `எண்ணாராய் வருந்துவது என்` என ஒருசொல் வருவித்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 83

வருந்துங் கொலாங்கழல், மண்மிசை
யேகிடில் என்றுமென்றார்த்
திருந்தும் புகழ்ச்சண்பை ஞானசம்
பந்தற்குச் சீர்மணிகள்
பொருந்துஞ் சிவிகை கொடுத்தனன்
காண்;புண ரித்திகழ்நஞ்(சு)
அருந்தும் பிரான்நம் மரத்துறை
மேய வரும்பொருளே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.
மென்தார் - மெல்லிய மலர் மாலையை அணிந்த.
மணி, முத்து.
காண், அசை.
புணரி - கடல்.
`அரும் பொருளாய் உள்ளவன்` என்க.

பண் :

பாடல் எண் : 84

பொருளென வென்னைத்தன் பொற்கழல்
காட்டிப் புகுந்தெனக்கிங்(கு)
அருளிய சீர்த்திரு ஞானசம்
பந்த னருளிலர்போல்
வெருளின மானின்மென் நோக்கியை
விட்டு விழுநிதியின்
திரளினை யாதரித் தால்நன்று
சாலவென் சிந்தனைக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன், பின் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது.
`என்னைப் பொருளெனக் கொண்டு` என ஒரு சொல் வருவிக்க.
ஞானசம்பந்தன் அருள் இல்லாதவரே அருளைத் துறந்து, பொருளை விரும்புவர்` என்பதாம்.
ஆதரித்தால் - விரும்பினால், `அது நன்று` எனத் தோன்றா எழுவாய் வருவிக்க.
தீதாவதனை, ``நன்று`` என்றது இகழ்ச்சிக் குறிப்பு.
`யாம் பிரியின் தலைவி வாழாள்` என்பதை அறிந்து வைத்தும் பொருள் வலிக்கின்ற நெஞ்சம் பேதைமை யுடைத்து` என்றபடி.

பண் :

பாடல் எண் : 85

சிந்தையைத் தேனைத் திருவா
வடுதுறை யுள்திகழும்
எந்தையைப் பாட லிசைத்துத்
தொலையா நிதியமெய்தித்
தந்தையைத் தீத்தொழில் மூட்டிய
கோன்சரண் சார்விலரேல்
நிந்தையைப் பெற்(று)ஒழி யாதிரந்
தேகரம் நீட்டுவரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முன்பு `சிந்தையை` என்றதனால் பின்பு ``தேனை`` என்றதற்கு, `சிந்தையில் ஊறும் தேனை` என உரைக்க.
தொலையா நிதியம் - உலவாக் கிழி.
தீத் தொழில் மூட்டிய - வேள்வித் தொழிலில் ஈடுபடச் செய்த.
``சார்வலி ரேல்`` என்பது முதலாக வந்த பயனிலை கட்கு, `மக்கள்` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 86

நீட்டுவ ரோதத்தொ டேறிய
சங்கம் நெகுமுளரித்
தோடுவெண் முத்தம் சொரிசண்பை
நாதன் தொழாதவரின்
வேட்டுவர் வேட்டதண் ணீரினுக்(கு)
உண்ணீ ருணக்குழித்த
காட்டுவ ரூறல் பருகும்
கொலாமெம் கனங்குழையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, தலைவனுக் குறை நேர்ந்த தோழி தலைவியைக் குறை நயப்பிக்கச் சில கூறி காலத்தில் தலைவி அதனை அறியாள் போன்று குறியாள் கூறியது, அஃதாவது கூறப்பட்ட பொருளோடு தொடர்புபடாமல் பொதுவாக எதனையோ கூறியது.
இதனை, என் செய்வாம் - எனில், `பொன் செய்வாம்` - என்றல் போல்வது`` என்பர்.
``எம் கனங் குழையே`` என்பதை முதலிற் கொண்டு, இறுதியில், `பருகும் ஆம் கொல்` என மாற்றி முடிக்க.
நீட்டு உவர் ஓதத்தொடு - கரைமேல் நீட்டுகின்ற, உப்புச் சுவையை உடைய அலைகளோடு, முளரித் தோட்டு - தாமரை மலரின் இதழ்களின்மேல்.
இது நெய்தலில் மருதம் மயங்கிய திணை மயக்கம்.
வேட்ட தண்ணீர் - நீர் வேட்கையால் அதனைத் தணிக்க விரும்பிய நல்ல நீருக்கு ஈடு.
காட்டு உவர் ஊறல் பருகும் ஆம்.
கொல் - காட்டில் உள்ள உவர்க் கேணியில் ஊறுகின்ற அந்த நீரும்பருகுநீர் ஆகின்றது போலும்! இது வேடர் வாழ்க்கையின் தாழ்வினைப் புலப்படுத்தியது.
தோழி கருதிய பொருட்கும், இதற்கும் யாதோர் இயைபும் இல்லை.
தலைவி இவ்வாறு தொடர்பில்லாமல் கூறியது, தோழி கருத்தைத் தான் அறிந்து கொள்ளாதது போலக் காட்டிக் கொள்ளுதற்காம், ``தொழாதவரின்`` என்றாரேனும் `தொழா தவர்க்கு ஆவது போல` என்பதே கருத்து.
`சண்பை நாதனைத் தொழாதவரே இடப்பாடான வாழ்க்கையை உடையவர் ஆவர்` என்பதாம்.
``பருகு`` என்னும் முதனிலைத் தொழிற் பெயர் ஆகு பெயராய், பருகப்படும் நீரைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 87

குழைக்கின்ற கொன்றைபொன் போல
மலரநுங் கூட்டமெல்லாம்
அழைக்கின்ற கொண்ட லியம்புஒன்
றிலையகன் றார்வரவு
பிழைக்கின் றதுகொலென் றஞ்சியொண்
சண்பைப் பிரான்புறவத்(து)
இழைக்கின்ற கூடல் முடயஎண்
ணாத இளங்கொடிக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, தலைவன் நீடத் தலைவியது ஆற்றாமை கண்டு தலைவி முன்னிலைப் புறமொழிகளால் ஆற்று வித்தது.
கொண்டல் - மேகமே! இது மேகத்தைத் தோழி விளித்தது.
ஒன்று இலை - வேறு ஒன்றும் செய்தியில்லை.
`கொண்டலே, இழைக் கின்ற கூடல் முடிய எண்ணாத இளங்கொடிக்கு, அகன்றார் வரவு இயம்பு; வேறு ஒன்றும் செய்தியில்லை` எனக் கூட்டி முடிக்க.
கூடல் இழைத்தலாவது, கண்ணை மூடிக்கொண்டு மணலில் ஒரு வட்டம் வரைதல்.
`அவ்வட்டத்தின் இரு முனைகளும் ஒன்றாய்க் கூட, வட்டம் முழுமை பெற்று நிற்குமாயின் கருதிய பொருள் கைகூடும்` எனவும், `முனைகள் கூடாமல் வேறாய்ப் போய்விடின் கருதிய பொருள் கைகூடாது` எனவும் கொள்ளுதல் வழக்கம்.
பிரிந்து சென்ற தலைவர் வந்து சேர்தலை அறியத் தலைவியர் இவ்வாறு கூடல்களை இழைத்துப் பார்ப்பார்கள் இருமுனையும் ஒன்று கூடுதலால் இதற்குக் `கூடல்` என்பது பெயராயிற்று.
அது தலைவர் வந்து தலைவியரோடு கூடுதலையும் குறிப்பதாம்.
``கூடல் முடிய எண்ணாத இளங்கொடி`` என்றதனால், இங்குத் தலைவி பல முறை கூடல் இழைத்து அது கூடாமை கண்டு ஆற்றாமையுடைய ளாயினாளாம்.
`கொண்டலே! அகன்றார் வரவை நீ இளங்கொடிக்கு இயம்பு` என்றது, `கார் காலம் வந்தமையால் இனித் தாழ்ந்து தலைவர் வருவார்` என்பதை முன்னிலைப் புறமொழியாகக் கூறி ஆற்றுவித்தது.
குழைக்கின்ற - தளிர்க்கின்ற.
புறம் - முல்லை நிலம்.

பண் :

பாடல் எண் : 88

கொடித்தே ரவுணர் குழாமன
லூட்டிய குன்றவில்லி
அடித்தேர் கருத்தி னருகா
சனியை யணியிழையார்
முடித்தேர் கமலர் கவர்வான்,
முரிபுரு வச்சிலையால்
வடித்தேர் நயனக் கணையிணை
கோத்து வளைத்தனரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, ஞானசம்பந்தரது உலாப் புறத்தில் கண்டோர் கூறியதாக அமைந்தது.
``அடித் தேர்`` என்பதில் தகர ஒற்று, எதுகை நோக்கி விரிக்கப்பட்டது.
தேர்தல் - சிந்தித்தல்.
`முடித்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
ஏர் - அழகு.
கமலம், தாமரை மலர்க் கண்ணி; ஆகுபெயர், வடித்து - கூர்மை யாக்கப்பட்டு.
ஏர் - எழுச்சி பெற்ற.
வளைத்தனர் - முற்றுகை யிட்டனர்.

பண் :

பாடல் எண் : 89

வளைபடு தண்கடற் கொச்சை
வயவன் மலர்க்கழற்கே
வளைபடு நீண்முடி வார்புன
லூரன்தன் நீரில்அம்கு
வளைபடு கண்ணியர் தம்பொதுத்
தம்பலம் நாறுமிந்த
வளைபடு கிங்கிணிக் கால்மைந்தன்
வாயின் மணிமுத்தமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, புதல்வனை வாயிலாகக் கொண்டு போந்த தலைமகன் `யான் தவ றொன்றிலேன்` எனக் கூறியவாறே கூறிய வாயில் வேண்டிய தோழிக்குத் தலைவி வாயில் மறுத்தது.
வளை படு கடல் - சங்குகள் உண்டாகின்ற கடல்.
வளைபடும் முடி - வணங்குதல் பொருந்தும் முடி.
அம்குவளை படு கண்ணியர் - அழகிய குவளைப் பூப்போலும் கண்களை யுடைய மகளிர்; பரத்தையர் வளைபடுகிங்கிணி - வளைத்துக் கட்டப்பட்ட சதங்கை.
`மைந்தன் வாயினின்றும் பெறப்படுகின்ற முத்தத்தில் ஊரனது வாய்நீரிலே சில மகளிரது பலவாகப் பொருந்திய பொதுத் தம்பலம் நாறாநின்றது` என்க.
`அவன் தவறிலன் என்பது யாண்டையது` என்பது குறிப்பெச்சம்.
மணி - சிறப்பு.
இப்பாட்டு, `மடக்கு` என்னும் சொல்லணி பெற்று வந்தது.

பண் :

பாடல் எண் : 90

முத்தன வெண்ணகை யார்மயல்
மாற்றி, முறைவழுவா(து)
எத்தனை காலம்நின்று ஏத்து
மவரினு மென்பணிந்த
பித்தனை, யெங்கள் பிரானை,
யணைவ தெளிதுகண்டீர்;
அத்தனை, ஞானசம் பந்தனைப்
பாதம் அடைந்தவர்க்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.
`அவரினும் பாதம் அடைந்தவர்க்கு எங்கள் பிரானை அணைதல் எளிது` என முடிக்க.
கண்டீர், முன்னிலை யசை.
அத்தன் - தலைவன்.
`சம்பந்தனைப் பாதத்தை அடைந்தவர்க்கு` என முதல், சினை இரண்டிலும் இரண்டன் உருபு சிறுபான்மை வந்தது.

பண் :

பாடல் எண் : 91

அடைத்தது மாமறைக் காடர்தம்
கோயிற்கதவினை அன்று
உடைத்தது பாணன்தன் யாழின்
ஒலியை யுரகவிடம்
துடைத்தது தோணி புரத்துக்கு
இறைவன் சுடரொளிவாய்
படைத்தது தண்மையை நள்ளாற்று
அரசு பணித்திடவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``தோணிபுரத்துக்கு இறைவன்`` என்பதனை முதலிற் கொள்க.
`துடைத்தது உரக விடம்` எனவும், `நள்ளாற்றரசு வணித்திடச் சுடரொளிவாய்ப் படைத்து தண்மையை` எனவும் கூட்டுக.
ஒளி - நெருப்பு; ஆகுபெயர்.

பண் :

பாடல் எண் : 92

பணிபடு நுண்ணிடை பாதம்
பொறாபல காதமென்று
தணிபடு மின்சொற்க ளால்தவிர்த்
தேற்குத் தழலுமிழ்கான்
மணிபடு பொற்கழல் ஞானடம்
பந்தன் மருவலர்போல்
துணிபடு வேலன்ன கண்ணியென்
னோவந்து தோன்றியதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டுத தலைவன் போக்குடன் படானகவும் அதனைத் துணிந்து வந்த தலைவியைக் கண்டு அவன் தன் நெஞ்சினுள்ளே சொல்லியது.
பனிபடும் இடை - பாம்பு போலும் இடை.
இஃது அதனை உடையாளைக் குறித்தது.
`இடையது பாதம்` என்க.
`பல காதம் நடக்கப் பொறா` என ஒரு சொல் வருவிக்க.
தணிபடும் இன்சொல் - பணிவு பொருந்திய இன்சொல்.
``தவர்த்தேற்கு`` என்னும் நான்கா வதை, `தவிந்தேன்கண்` என ஏழாவதாகத் திரிக்க.
`தவிர்த்தேன்கண், வேலன்ன கண்ணி, ஞானசம்பந்தன் மருவலர்போல், தழல் உமிழ் கான் வந்து படுதற்கு ஏது வாயவேல்.
தலைவனது உடன்பாட்டைத் தலைவி பெறுதலும், தலைவன் சிறிது ஆற்றுதலும் இதன் பயன்.

பண் :

பாடல் எண் : 93

தோன்றல்தன் னோடுட னேகிய
சுந்தரப் பூண்முலையை
ஈன்றவ ரேயிந்த வேந்திழை
யார் இவ்வளவில்
வான்றவர் சூழுந் தமிழா
கரன்தன் வடவரையே
போன்றபொன் மாடக் கழுமல
நாடு பொருந்துவரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, தலைவி தலைவன் உடன் போக்கில் பின் தேடிச் சென்ற செவிலியைக் கலந்துடன் வருவோர் கண்டு தேற்றியது.
``ஈன்றவரே`` என்றது செவிலியை.
`இந்த ஏந்திழையார் பூண் முலையை ஈன்றவரே` என்று துணிந்தபின் பின்வருமாறு அவட்குக் கூறினர்.
அவர் - இவர் தேடிச் செல்கின்ற அந்த இருவர்.
வடவரை - மேருமலை, ``அவர் `இவ்வளவில் கழுமல நாடு பொருந்துவர்` என்றதனால் இனி நீவிர் மேற் செல்ல வேண்டா, மீள்வதே தக்கது` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 94

பொருந்திய ஞானத் தமிழா
கரன்பதி, பொற்புரிசை
திருந்திய தோணி புரத்துக்
கிறைவன் திருவருளால்
கருந்தடம் நீரெழு காலையிற்
காகூ கழுமலமென்(று)
இருந்திட வாமென்று வானவ
ராகி யியங்கியதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தமிழாகரன் பதி எங்கும் வானவராகி இயங்கியது தோணிபுரத்துக்கு இறைவன் திருவருளால் காலையில், கா கூகழுமலம் என்று இருந்திடவாம்` என முடிக்க.
ஈற்றடியிலும் `என்று` என ஓதுதல் பாடம் அன்று.
``தோணிபுரத்துக்கு இறைவன்`` என்றதும் ஞான சம்பந்தரை, `சீகாழியில் தங்குவதால் காலையில் அவரது பாடலை மற்றவர்களோடு நாமும் ஓதுப் பயன் பெறலாம்` என்னும் கருதினால் தான்.
சீகாழியில் தேவர்கள் குழுமுகிறார்கள் என்றபடி.
``கா கூ`` என்றது திருந்திய இசை இல்லாமையை.
காலையில் நீர்ப் பறவைகள் எழுந்து ஒலிப்பதை நீரே துயில் எழுவது போலக் கூறுதல் வழக்கம்.

பண் :

பாடல் எண் : 95

இயலா தனபல சிந்தைய ராயிய
லுங்கொலென்று
முயலா தனவே முயன்றுவன்
மோகச் சுழியழுந்திச்
செயலார் வரைமதிற் காழியர்
கோன்திரு நாமங்களுக்(கு)
அயலா ரெனப்பல காலங்கள்
போக்குவ ராதர்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இயலாதன - கைகூடாதன.
`அன்ன பலவற்றைச் சிந்தையில் உடையவராய்` என்க.
முயலாதன - முயலத் தகாதன.
செயல் ஆர் - வேலைப்பாடு அமைந்த.
வரை மதில் - மலைபோலும் மதில்.
ஆதர்கள் - அறிவிலிகள்.

பண் :

பாடல் எண் : 96

ஆதர வும்,பயப் பும்மிவ
ளெய்தின ளென்றபலார்
மாத ரவஞ்சொல்லி யென்னை
நகுவது! மாமறையின்
ஓதர வம்பொலி காழித்
தமிழா கரனொடன்றே
தீதர வம்பட வன்னையென்
னோபல செப்புவதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, கைக்கிளை தலைவியது ஆற்றாமையைச் செவிலியறிந்தமை அறியாது அலர் அஞ்சிய அவளுக்குத் தோழி கூறியது.
ஆதரவு - காதல்.
பயப்பு - பசலை.
மா தரவு - பெரிய குற்றம்.
தாவு, `தரவம்` என வந்தது.
பின் இரண்டடிகளில் உள்ள அறவம் - ஒலி, அன்னை என்னோ பல செப்புவது தமிழாகர னொடு தீது அரவம் பட அன்றே` என முடிக்க.
தீது அரவம் - குற்றமாகிய சொல், அது, `தலைவி காதல் வயப்பட்டாள்` என்பது.
என்னோ - எவைவையோ.

பண் :

பாடல் எண் : 97

செப்பிய வென்ன தவம்முயன்
ரேன்நல்ல செந்தமிழால்
ஒப்புடை மாலைத் தமிழா
கரனை, யுணர்வுடையோர்
கற்புடை வாய்மொழி யேத்தும்
படிதக றிட்டிவர
மற்படு தொல்லைக் கடல்புடை
சூழ்தரு மண்மிடையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தமிழாகரனை, உணர்வுடையோர் ஏத்தும்படி நல்ல செந்தமிழால் செப்பிய மண்ணிடை என்ன தவம் முயன்றேன்` என இயைத்து முடிக்க.
செப்பிய - செப்புதற்கு.
ஒப்புடை மாலை - ஒரு சீராக அமைக்கப்பட்ட பூமாலை.
கற்பு உடை வாய்மொழி - கற்ற கல்வியையுடைய வாயினின்றும் தோன்றும் சொற்களால்.
ஏத்தும்படி- துதிக்கின்ற முறையில்.
கதறிட்டு இவர - அலைகள் முழங்கிக் கொண்டு கரைமேல் ஏறுதலால்.
மல் படு தொல்லைக் கடல் - முத்து முதலிய செல்வங்கள் மிகுகின்ற பழைய கடல்.

பண் :

பாடல் எண் : 98

மண்ணில் திகழ்சண்பை நாதனை
வாதினில் வல்லமணைப்
பண்ணைக் கழுவின் நுதிவைத்தெம்
பந்த வினையறுக்கும்
கண்ணைக் கதியைத் தமிழா
கரனை,யெங் கற்பகத்தைத்
திண்ணற் றொடையற் கவுணியர்
தீபனைச் சேர்ந்தனமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அமண் - அமணர் குழாம்.
பண்ணைக் கழு - நிறைய நாட்டுப்பட்ட கழுமரம்.
கண் - கண் போன்றவர் கதி - யாவரலும் அடையப்படுபவர்.
திண்மை - நெருக்கம்.
தொடையல் - பூமாலை.
சேர்ந்தனம் - புகலிடமாக அடைந்தோம்.
`இனி எமக்கு யாது குறையுளது` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 99

சேரும் புகழ்த்திரு ஞானசம்
பந்தனை யானுரைத்த
பேருந் தமிழ்ப்பா வினவவல்
லவர்பெற்ற வின்புலகங்
காருந் திருமுடற் ராயரு
ளாயென்று கைதொழுவர்
நீரும் மலரும் கொளாநெடு
மாலும் பிரமனுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`-திருஞானசம்பந்தரை யான் துதிப்பாடிய இந்தத் தமிழ்ப் பாடலை ஒதி உணர்ந்தவர் பெற்ற பேரின்ப உலகத்தை எமக்கு அருள் கூர்ந்து அளித்தல் வேண்டும் - என் மாலும் பிரமனும் நீரும், மலருங் கொண்டு, சிவபெருமானைக் கும்பிடுவர்` என்பது இப்பாட்டின் திரண்ட பொருள்.
எனவே, இப்பாட்டு இப்பிரபந்தத்தின் பயன் கூறிற்றாம்.
காரும் - கறுத்த.
பேரும் பா - தொடர்ந்து நடக்கும் பாட்டுக்கள்.

பண் :

பாடல் எண் : 100

பிரமா புரம்வெங் குரு,சண்பை,
தோணி, புகலி,கொச்சை
சிரமார் புரம்,நற் புறவந்,
தராய்,காழி, வேணுபுரம்
வரமார் பொழில்திரு ஞானசம்
பந்தன் பதிக்குமிக்க
பரமார் கழுமலர் பன்னிரு
நாமமிப் பாரகத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சிரமார் புரம் - சிரபுரம், தராய் - பூந்தராய் வரம் - மேன்மை.
பரம் - மேன்மை.
`திருஞானசம்பந்தன் வரம் ஆர் பொழிற் பதிக்கு இப்பாரகத்துப் பன்னிருநாமம் பிரமாபுரம்.
.
.
.
கழுமலர்` என முடிக்க.
இப்பாட்டின் இறுதிச்சீர் - இதன் முதற்பாடலில் சென்று மண்டலித்தல் காண்க.

பண் :

பாடல் எண் : 101

பராகலத் துன்பங் கடந்தமர ரால்பணியும்
ஏரகலம் பெற்றாலு மின்னாதால் - காரகிலின்
தூமங் கமழ்மாடத் தோணி புரத்தலைவன்
நாமஞ் செவிக்கிசையா நாள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தோணிபுரத் தலைவன் நாமம் செவிக்கு இசையா நாள், பாருலகத்தைக் கடந்து அமரர்களால் வணங்கப் படும் நாளாய் இருப்பினும் இன்னாது` என்க.
ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி முற்றிற்று.

பண் :

பாடல் எண் : 1

பாலித் தெழில்தங்கு பாரகம்
உய்யப் பறிதலையோர்
மாலுற் றழுந்த அவதரித்
தோன்மணி நீர்க்கமலத்
தாலித் தலர்மிசை யன்னம்
நடப்ப, வணங்கிதென்னாச்
சாலித் தலைபணி சண்பையர்
காவலன் சம்பந்தனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சண்பையர் காவலன் சம்பந்தன், பார் முகம் உய்ய (அருள்) பாலித்து, பறி தலையோர் மால் உற்ற அழுந்த வெல்ல அவதரித்தோன்` என முடிக்க. `வெல்ல` என்பது சொல்லெச்சமாய் வந்து இயையும்.
பறி தலை - மயிர் பறிக்கப்பட்ட தலை. அ மணி நீர் - நீல மணிபோலும் நீர், ஆலித்து - அசைந்து. அலர் தாமரை மலர். அணங்கு - தெய்வம்; நாமகள். சாலி - நெற்பயிர். அது தலை வணங்குதற்கு இவ்வாறு காரணம் கற்பித்தது, தற்குறிப்பேற்ற அணி.

பண் :

பாடல் எண் : 2

கொங்குதங் குங்குஞ்சி கூடாப்
பருவத்துக் குன்றவில்லி
பங்குதங் கும்மங்கை தன்னருள்
பெற்றவன், பைம்புணரிப்
பொங்குவங் கப்புனல் சேர்த
புதுமணப் புன்னையின்கீழ்ச்
சங்குதங் கும்வயற் சண்பையர்
காவலன் சம்பந்தனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சம்பந்தன் குஞ்சி கூடாப் பருவத்துக் குன்றவில்லி பங்கு தங்கும் மங்கைதன் அருள் பெற்றவன்` எனக் கூட்டி முடிக்க.
கொங்கு - வாசனை. குஞ்சி கூடாப் பருவம் - தலை மயிர் கூட்டி முடிக்க வாராத பருவம்; குழவிப் பருவம். அருள் - ஞானப் பால். புணரி - கடல். வங்கம் - மரக்கலம். வயல் - உப்பளம்.

பண் :

பாடல் எண் : 3

குவளைக் கருங்கண் கொடியிடை
துன்பந் தவிரவன்று
துவளத் தொடுவிடந் தீர்த்த
தமிழின் தொகைசெய்தவன்
திவளக் கொடிக்குன்ற மாளிகைச்
சூளிகைச்சென்னியின் வாய்த்
தவளப் பிறைதங்கு சண்பையர்
காவலன் சம்பந்தனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குவளைக் கருங்கண் கொடியிடை யாவாள் ஒரு வணிகப் பெண். `கொடி இடை துவள` எனக் கூட்டுக.
திவளுதல் - சுண்ணத்தின் ஒளி விளங்குதல். `திவள் அம் மாளிகை` என்க. சூளிகை - மேல் மாடத்தின் முகப்பு. `சம்பந்தன், கொடியிடை துவள, அத்துன்பம் தவிர அன்று விடம் தீர்த்த தமிழின் தொகை செய்தவன்` என இயைத்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 4

கள்ளம் பொழில்நனி பள்ளித்
தடங்கட மாக்கியஃதே
வெள்ளம் பணிநெய்த லாக்கிய
வித்தகன், வெண்குருகு
புள்ளொண் தவளப் புரிசங்கொ
டலாக் கயலுகளத்
தள்ளந் தடம்புனல் சண்பையர்
காவலன் சம்பந்தனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சம்பந்தன் நனிபள்ளித் தடம் கடம் ஆக்கி, அஃதே நெய்தல் ஆக்கிய வித்தகன்` எனக் கூட்டி முடிக்க. கள் - தேன். நனிபள்ளி, ஒரு தலம். தடம் - வழி. கடம் - பாலை நிலம், வெள்ளம் பணி - மிகுந்த நீர் எங்கும் மலிகின்ற. வித்தகன் - சதுரப்பாடு உடையவன். ``வெண்குருகு புள்`` என்பது இருபெயர் ஒட்டு. ஆல ஒலிக்க. தள்- தட்டல்; தடுத்தல். ``தட்டோர் அம்ம இவண் தட்டோரே- தள்ளாதோர் இவண் தள்ளா தோரே`` என்னும் புறப்பாட்டைக் காண்க.

பண் :

பாடல் எண் : 5

ஆறதே றுஞ்சடை யானருள்
மேவ வவனியர்க்கு
வீறதே றுந்தமி ழால்வழி
கண்டவன், மென்கிளிமாந்
தேறல்கோ தித்துறு சண்பகந்
தாவிச் செழுங்கமுகின்
தாறதே றும்பொழிற் சண்பையர்
காவலன் சம்பந்தனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சம்பந்தன் அவனியர்க்குச் சடையான் அருள் மேவத் தமிழால் வழி கண்டவன்` என முடிக்க. ``ஆறது`` ``வீறது`` ``தாறது`` என்பவற்றில் அது பகுதிப் பொருள் விகுதி. வீறு - பெருமை. தேறல் - தேன், என்றது தேன்போலும் சுவையை உடைய தளிர்களை. துறு -நெருங்கிய. தாறு - குலை. `கிளி கோதி, தாவி ஏறும் பொழில்` என்க.

பண் :

பாடல் எண் : 6

அந்தமுந் தும்பிற வித்துயர்
தீர வரனடிக்கே
பந்தமுந் துந்தமிழ் செய்த
பராபரன் பைந்தடத்தேன்
வந்துமுந் தும்நந்தம் முத்தங்
கொடுப்ப வயற்கயலே
சந்தமுந் தும்பொழிற் சண்பையர்
காவலன் சம்பந்தனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சம்பந்தன் (ஓதுபவர்களைப்) பிறவித் துயர் தீர அரன் அடிக்கே உந்தும் தமிழ் செய்த பராபரன்` எனக் கூட்டி முடிக்க. அந்தம் முந்தும் பிறவி - இறப்பை முன்னிட்டுக் கொண்டு வரும் பிறப்பு. பந்தம் - சம்பந்தம்; தொடர்பு - `தொடர்பு உண்டாக உந்தும்` என ஆக்கம் வருவிக்க. `பராற் பரன்` என்பது `பராபரன்` என மருவிற்று. `மேலானவர்க் கெல்லாம் மேலானவன்` என்பது பொருள். தடம் - பொய்கை. தேன் - வண்டு, நந்தம் முந்தி முத்தம் கொடுப்ப - சங்குகள் முற்பட்டு முத்துக்களைக் கொடுக்க, ``முத்தம் கொடுப்ப`` என்பது சிலேடை. ``கொடுப்ப`` என்பதன் பின் `மீண்டு` என ஒரு சொல் வருவிக்க. சந்தம் உந்தும் - இசை பாடுகின்ற முத்தத்தைப் பெறுதல் வண்டிற்கு இல்லையாயினும் உள்ளதுபோலத் தற்குறிப்பேற்றம்.

பண் :

பாடல் எண் : 7

புண்டலைக் குஞ்சரப் போர்வையர்
கோயிற் புதவடைக்கும்
ஒண்டலைத் தண்டமிழ்க் குண்டா
சனியும்பர் பம்பிமின்னுங்
கொண்டலைக் கண்டுவண்
டாடப் பெடையொடுங்
தண்டலைக் குண்டகழ்ச் சண்பையர்
காவலன் சம்பந்தனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சம்பந்தன் குஞ்சரப் போர்வையர் கோயில் புதவு அடைக்கும் தமிழைப் பாடிய குண்டாசனி` என வினைமுடிக்க. புண் - பாகன் குத்தியதனால் உண்டான புண். ``குஞ்சரம்`` என்பது ஆகுபெயராய், அதன் தோலைக் குறித்தது. புதவு - வாயில். உம்பர்ப் பம்பி - வானத்தில் நெருங்கி. தண்டலை - சோலை. குண்டு - ஆழம்.

பண் :

பாடல் எண் : 8

எண்டலைக் குந்தலை வன்கழல்
சூடியெ னுள்ளம்வெள்ளங்
கண்டலைப் பத்தன் கழல்தந்த
வன்கதிர் முத்தநத்தம்
விண்டலைப் பத்தியி லோடும்
விரவி மிளிர்பவளம்
தண்டலைக் குங்கடற் சண்பையர்
காவலன் சம்பந்தனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சம்பந்தன், என் உள்ளம் எண் தலைக்கும் தலைவன் கழல் சூடி வெள்ளம் கண்டு அலைப்பத் தன் கழல் தந்தவன்` எனக் கூட்டி முடிக்க. எண் தலை - எட்டுத் திசை. ``வெள்ளம்`` என்பதனை, `இன்ப வெள்ளம்` என்க. அலைப்ப - அலைத்து முழுகும் படி. ``கடல் அலைத்தே ஆடுதற்குக் கைவந்து நின்றும்`` 1 என்றது காண்க. `சம்பந்தன் முன்னர்த் தன்கழலைத் தந்தமையால் பின்பு என் உள்ளம் சிவன் கழலைக் காணலாயிற்று` என்பதாம். `முத்தம் நத்தம் விண்ட அலைப் பத்தியில் பவளம் விரவித் தண்டலைக்கும் ஓடும் கடல்` என்க. நத்தம் - சங்கு. ``விண்டு`` என்பதை `விள்ள` எனத் திரிக்க. விள்ளல் - ஈனுதல். தண்டலை - கடற்கரைச் சோலை. ``தண்டலைக்கு`` என்னும் நான்காவதை, `தண்டலைக்கண்` என ஏழாவதாகத் திரிக்க. உம்மை, இறந்தது தழுவிய எச்சம்.

பண் :

பாடல் எண் : 9

ஆறுமண் டப்பண்டு செஞ்சொல்
நடாத்தி யமண்முழுதும்
பாறுமண் டக்கண்டு சைவ
சிகாமணி பைந்தடத்த
சேறுமண் டச்சங்கு செங்கயல்
தேமாங் கனிசிதறிச்
சாறுமண் டும்வயல் சண்பையர்
காவலன் சம்பந்தனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சம்பந்தன், பண்டு ஆறு மண்டச் செஞ்சொல் நடாத்தி.... சைவ சிகாமணி` எனக் கூட்டி முடிக்க. ஆறு - வையை நதி; அஃது அதன் நீரைக் குறித்தது. மண்ட - பொருந்த. ``செஞ்சொல்`` என்றது செவ்விய சொற்களை எழுதிய ஏட்டைக் குறித்தது. நடாத்தியது எதிர்முகமாக. பாறு மண்ட - பருந்துகள் நெருங்கி உண்ண. `சங்கு தடத்த சேறு மண்ட, கயல் கனியைச் சிதறி அதன் சாறு மண்டும் வயல்` என்க. தடம் - பொய்கை. மண்டுதல் - நெருங்குதல்.

பண் :

பாடல் எண் : 10

விடந்திளைக் கும்அர வல்குல்மென்
கூந்தல் பெருமணத்தின்
வடந்திளைத் குங்கொங்கை புல்கிய
மன்மதன் வண்கதலிக்
கடந்திளைத் துக்கழு நீர்புல்கி
யொல்கிக் கரும்புரிஞ்சித்
தடந்திளைக் கும்புனல் சண்பையர்
காவலன் சம்பந்தனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சம்பந்தன் பெருமணத்தில் இருந்த அழகு மிக்க ஒருத்தி உள்ளத்தால் ஆரத் தழுவிய மன்மதன் போலும் அழகினை உடையவன்` இப்பாட்டின் தெளிந்த பொருள். இதனால் பிள்ளை யாரது திருமேனி அழகைப் புகழ்ந்தவாறு. ``பெருமணம்`` என்பதை முதலிற் கொள்க. பெருமணம் - நல்லூர்ப் பெருமணம்; தலம். ``பெரு மணத்தின் கொங்கை`` என்பதை, `பறம்பிற் பாரி` என்பது என்க. கொங்கை சினையாகு பெயர். வடம் - மணி வடம், கடம் - காடு, புதரை, `காடு` என்றார். கழுநீர் - குவளை. ஒல்குதல் - அசைதல். தடம்- பொய்கை. திளைத்தல், இங்கே நிரம்பி நிற்றல். வருவித்துரைத்தன ஆற்றலாற் கொண்டவை.

பண் :

பாடல் எண் : 11

பாலித்த கொங்கு குவளைகள்
ளம்பொழில் கீழ்ப்பரந்து
வாலிப்ப வாறதே றுங்கழ
னிச்சண்பை யந்தமுந்து
மேலிட்ட புண்டலைக் குஞ்சரத்
எண்டலைக் குந்தலைவன்
கோலிட்ட வாறு விடந்திளைக்
கும்அர வல்குலையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அந்தாதியிற் போல இவ்விருத்தத்திலும் ஒரு பாடலை அகத்துறைப் பாலதாக அருளிச் செய்தார். இது கைக்கிளைத் தலைவியது வேறுபாடு கண்டு வினாவிய செவிலிக்குத் தோழி உண்மை வகையால் அறத்தொடு நின்றது.
பாலித்த - `ஒழுக விடப்பட்ட கள்` என்க. கொங்கு நறுமணம். ஆலிப்ப - ஓட. `குவளைத் தேன் பரந்து ஓடும்படி ஆற்று நீர் மிக்கெழு கின்ற கழனி` என்க. அந்தம் - திசைகளின் முடிவு. குஞ்சரம் திக்கு. `அவை அனைத்திற்கும் தலைவன் சண்பையில் தலைவன்` என்க. இவ்விடம் திளைக்கும் அரவு அல்குல்` எனச் சுட்டு வருவிக்க. `இவளை சண்பையில் தலைவன் கோல் இட்ட ஆறே இவள் வேறு பாடு` என்றபடி. கோல் - ஆணை; `தழுவி வாழப் பெறாது. தனிமை யால் மெலிக` என்பதே அவ் ஆணையாம். ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம் முற்றிற்று.

பண் :

பாடல் எண் : 1

திங்கட் கொழுந்தொடு பொங்கரவு திளைக்குங்
கங்கைப் பேரியாற்றுக் கடுவரற் கலுழியின்
இதழியின் மெம்பொ னிருகரை சிதறிப்
புதலெருக்கு மலர்த்தும் புரிபுன் சடையோன்
திருவருள் பெற்ற இருபிறப் பாளன்

முத்தீ வேள்வு நான்மறை வளர
ஐவேள் வுயர்த்த அறுதொழி லாளன்
ஏழிசை யாழை யெண்டிசை யறியத்
துண்டப் படுத்த தண்டமிழ் விரகன்
காழி நாடன் கவுணியர் தலைவன்

மாழை நோக்கி மலைமகள் புதல்வன்
திருந்திய பாடல் விரும்பினர்க் கல்லது
கடுந்துய ருட்புகக் கைவிளிக் கும்இந்
நெடும்பிற விக்கடல் நீந்துவ தரிதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``திங்கட் கொழுந்தொடு.
.
.
.
பரிபுன் சடையோன் - சிவபெருமான்.
பொங்கு அரவு- சினம் மிக்க பாம்பு.
திளைத்தல் - விளையாடுதல்.
`திங்களோடு பாம்பு விளையாடுதல் வியப்பு.
கடு வரல் கலுழி வேகமாய் வருகின்ற வெள்ளம் - வெள்ளம் இருகரை யிலும் பொன்னைச் சிதறுதலும், மலர்களை மலர்த்துதலும் இயல்பு.
`அவ்வாறு இங்கு வெள்ளத்தால் இரு கரைகளிலும் சிதறப்படும் பொன் இதழியும், (கொன்றை மலரும்) மலர்த்தப்படும் மலர் எருக்குமாம்` என்றபடி.
இதழியின் செம்பொன் உருவகம்.
`இன்` வேண்டாவழிச் சாரியை.
புதல் - புதர்.
இருபிறப்பாளனும் அருதொழிலாளனுமாகிய தமிழ் விரகன்` - என்க.
`முத்தி வேள்வியைக் கூறும் நான்மறை` என உரைக்க.
``வேள்வு`` என்பது, `வி` என்னும் விகுதி பெறாமல், `வு` என்னும் விகுதி பெற்று வந்த தொழிற் பெயர்.
மழை நோக்கி - மாவடுப் போன்ற கண்களை யுடையவள்.
`புதல்வனது பாடல்` என ஆறாவது விரிக்க.
கை விளித்தல் - கையால் அழைத்தல்.
``கூற்றத்தைக் கையால் விளித்தற்றால்`` என்றது காண்க.
இது நிலைமண்டில ஆசிரியப்பா இதனுள் எண்ணலங்காரம் வந்தது.

பண் :

பாடல் எண் : 2

அரியோடு நான்முகத்தோ னாதிசுரர்க் கெல்லாந்
தெரியாமைச் செந்தழலாய் நின்ற வொருவன்சீர்
தன்தலையின் மேல்தரித்த சம்பந்தன் தாளிணைகள்
என்தலையின் மேலிருக்க வென்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சம்பந்தன் தாளிமைகள் என்றும் என் தலைமேல் இருக்க` என முடிக்க.
`என்றும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று.
அடுத்த பாடல், ``என்றும்`` எனத் தொடங்குதல் காண்க.
சீர் - புகழ்.

பண் :

பாடல் எண் : 3

என்று மடியவ ருள்ளத்
திருப்பன விவ்வுலகோர்
நன்று மலர்கொடு தூவித்
துதிப்பன நல்லசங்கத்
தொன்றும் புலவர்கள் யாப்புக்
குரியன வொண்கலியைப்
பொன்றுங் கவுணியன் சைவ
சிகாமணி பொன்னடியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.
கல் - வறுமை, இன்மை.
ஒண்மை - ஒளி, ஞானம்.
``ஒண் கலி`` என்றது, `ஒண்மையின் கலி` என்றபடி.
அஃதாவது ஒண்மையைக் கெடுக்கும் கலி.
பொன்றுதல் - அழிதல்.
``பொன்றும்`` என்பது `பொன்றல்` என்பது `வி` என்னும் பிறவினை விகுதி தொக்கு நின்றதாகக் கொள்ளல் வேண்டும், ``குடி பொன்றிக் - குற்றமும் ஆங்கே தரும் 1 என்பதிற்போல என்றார் மாதவச் சிவஞான யோகிகள்

பண் :

பாடல் எண் : 4

அடுசினக் கடகரி யாதுபடி உரித்த
படர்சடைக் கடவுள்தன் திருவரு ளாதனால்
பிறந்தது
கழுமலம் என்னும் கடிநக ரதுவே
வளர்ந்தது 5
தேங்கமழ் வாவிச் சிலம்பரை யன்பெறு
பூங்குழல் மாதிடு போனகம் உண்டே
பெற்றது
குழகனைப் பாடிக் கோலக்காப்புக்
கழகுடைச் செம்பொன் தாளம் அவையே 10
தீர்த்தது
தாதமர் மருகற் சடையனைப் பாடிப்
பேதுறு பெண்ணின் கணவனை விடமே
அடைத்த
தரசோ டிசையா அணிமறைக் காட்டுக் 15
குரைசேர் குடுமிக் கொழுமணிக் கதவே
ஏறிற்
றத்தியும் மாவும் தவிர அரத்துறை
முத்தின் சிவிகை முன்னாட் பெற்றே
பாடிற் 20
றருமறை ஒத்தூர் ஆண்பனை யதனைப்
பெருநிறம் எய்தும் பெண்பனை யாவே
கொண்டது
பூவிடு மதுவில் பொறிவண் டுழலும்
ஆவடு துறையிற் பொன்ஆ யிரமே 25
கண்டது
உறியோடுபீலி யொருகையிற் கொள்ளும்
பறிதலைச் சமணைப் பலகழு மிசையே
நீத்த
தவிழ்ச்சுவை யேஅறிந் தரனடி பரவும் 30
தமிழ்ச்சுவை யறியாத் தம்பங் களையே
நினைந்த
தள்ளற் பழனக் கொள்ளம் பூதூர்
இக்கரை ஓடம் அக்கரைச் செலவே
மிக்கவர் 35
ஊனசம் பந்தம் அறுத்துயக் கொளவல
ஞானசம் பந்தனிந் நானிலத் திடையே. 37

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஞானசம்பந்தன் இந்நானிலத்திடை`` என்பதை முதலிற் கொள்க.
`ஞாலத்திடை` என்பது பாட மன்று என்பது, அடுத்த பாடல் ``நிலத்துக்கு`` எனத் தொடங்குவதால் விளங்கும்.
முன் பாட்டு ``அடி`` என முடிந்தமையால் இப்பாட்டின் முதல் `அரிசினம்` என்பதும் பாடமன்று.
அடு சினம் - போரில் பகைவரைக் கொல்ல எழுகின்ற சினம்.
`திருவருளதனால் பிறந்தது.
கடிநகரதுவே; வளர்ந்தது.
உண்டே; பெற்றது.
செம்பொன் தாளம் அவையே; தீர்த்தது.
விடமே; அடைத்தது.
கதவே; ஏறிற்று.
சிவிகை.
முன்னாட் பெற்றே; பாடிற்று ஆண்பனையதனைப் பெண்பனையாகவே; கொண்டது.
சமணைப் பல் கழுமிசையே; நீத்தது அரன் அடி பரவும் தமிழ்ச் சுவை யறியாத் தம்பங்களையே; நினைந்தது.
இக்கரை ஓடம் அக்கரைச் செலவே`` எனக் கூட்டி யுரைக்க.
பிறந்தது, வளர்ந்தது முதலாக வந்தன பலவும் இடம், செயப்படுபொருள் ஆகியவை வினை முதல் போலக் கூறப்பட்டனவாம்.
``நீத்தது நினைந்து`` என்பன தொழிற் பெயர்கள்.
எழுவாய் நின்று செயப்படு பொருட் பெயர்களாகிய பயனிலைகளைக் கொண்டன; ``ஏறிற்று`` என்பது ``பெற்று`` என்னும் வினையெச்சப் பயனிலை கொண்டது.
``பாடிற்று`` என்னும் ``எழுவாயும்`` பெண் பனையாக என வினையெச்சப் பயனிலை கொண்டது.
கொள வல்ல ஞானசம்பந்தன்` என்க.
மிக்கவர் - ஞானமும், அன்பும் மிகப் பெற்றவர்; மேலோர்.
`மிக்கவரது` என ஆறாவது விரிக்க.
வாவி, இங்குச் சுனை.
இனி, `மான சரோவரம்` என்னும் பொய்கையும் ஆம்.
சிலம்பு - மலை.
போனகம் - திருமுலைப் பாலில் அளைந்த அடிசில்.
பேதுறு - வருந்திய.
பெண், வணிகப் பெண் ``கணவனை`` என்பதை, `கணவனுக்கு` எனத் திரித்து ``தீர்த்தது`` என்பதனோடு இயைக்க.
அரசு - திருநாவுக்கரசர்.
இசையா - கூடி.
குரைசேர் - ஒலித்தல் பொருந்திய.
அத்தி - யானை.
மா - குதிரை.
விடு - ஒழுக விடுகின்ற.
அவிழ் - வாய் உணவு - அள்ளற் பழனம் - சேற்றையுடைய வயல்.
``கரியது, நகரது திருவருளதனால், ஆண் பனையதனை`` என்பவற்றில் அது பகுதிப் பொருள் விகுதி, ``தாளம் அவையே`` என்பதில் ``அவை`` என்றதும் அது.
இதுவும் நிலைமண்டில ஆசிரியப்பா.

பண் :

பாடல் எண் : 5

நிலத்துக்கு மேலாறு நீடுலகத் துச்சித்
தலத்துக் மேலேதா னென்பர் சொலத்தக்க
சுத்தர்கள் சேர்காழிச் சுரன்ஞான சம்பந்தன்
பத்தர்கள்போய் வாழும் பதி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``சொலத் தக்க`` என்பது முதலாக எடுத்துக் கொண்டு உரைக்க.
சொலத் தக்க - சிறப்பித்துச் சொல்லத் தக்க சுத்தர்கள் - மலம் நீங்கிய தூயோர்; முத்தர்கள்.
சுரன் - பூசுரன்.
நிலம் - பூவுலகம்.
அதற்குமேல் உள்ள ஆறு நிலையான உலகங்களாவன, `புவர் லோகம், சுவர் லோகம், மக லோகம், சன லோகம், தவ லோகம், சத்திய லோகம்` என்பன.
புவர் லோகம் சூரிய சந்திர நட்சத்திர மண்டலங்களையுடைய சுடர் உலகம்.
காற்று மண்டலம் இவற்றின் கீழாய் அடங்கும்.
சுவர் லோகம், இந்திராதி தேவர் வாழ் உலகம்.
மக லோகம் மரீசி முதலிய மகான்கள் வாழும் உலகம்.
சன லோகம், சன்னு முதலிய பொது ஞானியர் வாழும் உலகம்.
தவ லோகம், சனகர் முதலிய சிறப்பு ஞானியர் வாழும் உலகம்.
சத்திய லோகம் பிரம தேவனுடைய உலகம்.
திருமாலினுடைய வைகுந்தமும் இதனுடன் சேர்ந்து ஒன்றாக எண்ணப்பட்டது.
இவற்றிற்கெல்லாம் மேலே உள்ளது சீகண்டருத்திரர் உலகம் அதுவும் சிவலோகமாகவே எண்ணப்படும்.
இவையெல்லாம் சிவஞான மாபாடியத்துட் கண்டன.
1 இவை பல்லூழி காலம் இருத்தல் பற்றி, ``நீடுலகு`` எனப்பட்டன.
``உச்சித் தலத்துக்கு மேல்`` என்றது, `அவைகளுக்கு அப்பால்` என்றபடி.
``தான்`` என்பது தேற்றப் பொருளில் வந்தது.
என்பர் - என்று சொல்லுவர் மெய்யுணர்ந்தோர்.
`ஞான சம்பந்தருக்கு அடியவராகவே, ஞானம் எளிதில் கூடும் - என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 6

பதிகம் பலபாடி நீடிய
பிள்ளை பரசுதரற்கு
அதிக மணுக்க னமணர்க்குக்
காலன் அவதரித்த
மதியந் தவழ்மாட மாளிகைக்
காழியென் றால்வணங்கார்
ஒதியம் பணைபோல் விழுவரந்
தோசில வூமர்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஞானசம்பந்தர் அவதரிக்கப் பெற்றது காழிப்பதி` என்று சொல்லக் கேட்டால் அறிவிலிகள் சிலர் உடனே வீழ்ந்து வணங்காமலே நிற்பார்கள்.
அவர்கள் இறுதியில் ஒதிய மரத்தின் கிளை வீழ்வதுபோல யாதொரு பயனும் இல்லாமல் வீழ்வார்கள்`` என்பது இதன் திரண்ட பொருள்.
`ஞானசம்பந்தர்பால் தலையாய அன்பினை உடையர் ஆகாதார் இவ்வாறு ஆவர்` என்பதாம்.
தலையன்பினது நிலைமை.
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்;
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்;
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்;
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
என்பதில் குறிக்கப்பட்டமை காண்க.
``பதிகம் பல பாடி நீடிய பிள்ளை`` என்றது, ``பிள்ளைமைப் பருவத்திலே அளவற்ற திருப்பதிகங்களை அருளிச் செய்து அதனால் என்றும் நிலை பெற்ற புகழையுடைய சிறிய பெருந்தகையார்` என்றபடி.
`அப்புகழைக் கேட்டும் அவருக்கு அடியர் ஆகாதவரைப் பற்றி என்ன சொல்வது` என்பதாம்.
பரசு - மழு - தரன் - தரித்தவன்; சிவபெருமான்.
அணுக்கன் - நெருக்கமானவன்.
`அவதரித்தது` எனற் பாலதனை, ``அவதரித்த`` என உடம்பொடு புணர்தலாக்கிக் கூறினார்.
``பிள்ளை, அணுக்கன், காலன்`` எனப்பட்ட பெயர்களை எடுத்தல் ஓசையாற் கூறி, அவரது அவதாரச் சிறப்பினை உணர்க.
ஒதி ஒருவகை மரம், இது நிற்றலாவது சிறிது நிழலைத் தரும்; வீழ்ந்தால் எந்த ஒன்றிற்கும் பயன்படாது.
அதனால் வீழ் தலையே கூறினார்.
இது முற்காலத்தில் `உதி` - என வழங்கப்பட்டது.
அம், சாரியை.
பணை - கிளை.
அந்தோ, இரக்கக் குறிப்பு.
``பலபாடி`` என ஓர் அடியின் இடையே மூவசைசீர் வந்தது.

பண் :

பாடல் எண் : 7

தவள மாளிகைத் திவளும் யானையின்
கவுள்தலைக் கும்பத்
தும்பர் பதணத் தம்புதந் திளைக்கும்
பெருவளம் தழீஇத் திருவளர் புகலி
விளங்கப் பிறந்த வளங்கொள் சம்பந்தன்
கருதியஞ் செவ்விச் சுருதியஞ் சிலம்பில்
தேமரு தினைவளர் காமரு புனத்து
மும்மதஞ் சொரியும் வெம்முகக் கைம்மா
மூரி மருப்பின் சீரிய முத்துக்
கொடுஞ்சிலை வளைத்தே கொடுஞ்சரந் துரந்து

முற்பட வந்து முயன்றங் குதவிசெய்
வெற்பனுக் கல்லது
சுணங்கணி மென்முலைச் சுரிகுழல் மாதினை
மணஞ்செய மதிப்பது நமக்குவன் பழியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இச் செய்யுள் அகப் பொருளில் களவியலில் நொது மலர் வரைவு முயல்வறிந்து தோழி செவிலிக்கு அறத்தொடு நின்ற துறையாகச் செய்யப்பட்டது.
2 முதல் நான்கு அடிகளை,
மாளிகைப் பதணத்து
யானைத் தலைக் கும்பத்து உம்பர்
அம்புதம் திளைக்கும் பெருவளம்
எனக் கொண்டு கூட்டிப் பொருள் கொள்க.
பதணம் - மேல்மாடத்து மேடை.
`மாளிகைப் பதணம்` என இயைக்க.
பதணத்துக் கும்பம் - அம்மேடையின் மேல் அழகிற்குச் செயற்கையாகச் செய்யப்பட்ட குடம்.
(அதன்) உம்பர் - மேலே அம்புதம் திளைக்கும் பெருவளம் - மேகங்கள் தவழ்கின்ற மிக்க வளமையை.
தழீஇ - தழுவி.
திருவளர் - அழகு மிகுகின்ற.
புகலி - சீகாழி.
`கவள யானை, திவளும் யானை` - எனத் தனித் தனி இயைக்க.
கவளம் - யானை உணவு.
திவளுதல் - அசைதல்.
`யானையின் தலைபோலும் கும்பம்` என்க.
கவுள் தலை - கன்னத்தையுடைய தலை.
யானையின் கன்னம் மத நீர் ஒழுக நிற்பது ஆதலின், அஃது எடுத்துக் கூறப்பட்டது.
`சம்பந்தன் சிலம்பில்` என இயையும்.
அலம்பு- மலை.
அம் - அழகு.
கருது இயம் செவ்விச் சுருதி - அறிஞர் விரும்புகின்ற வாச்சியங்கள் இனிமை பெற எழுப்புகின்ற இசையை உடைய சிலம்பு.
இவ் இசை வண்டுகளாலும், மூங்கில்களாலும் இசைக்கப்படுவன.
`செவ்வி பெற எழுப்பும் சுருதி` என, வேண்டும் சொற்களை இசையெச்சமாக வருவித்துக் கொள்க.
`சிலம்பிற் புனம்` என இயைத்துக் கொள்க.
தேமரு தேன் + மரு.
தேன்- இனிமை.
காமரு - அழகிய.
கைம் மா - யானை.
மூரி - பெரிய; வலிய.
மருப்பு - தந்தம்.
உக - சிந்தும்படி.
``முற்பட வந்து`` என்பதை, ``புனத்து`` என்பதன் பின்னர்க் கூட்டுக.
வெற்பன் - குறிஞ்சி நிலத் தலைவன்.
சுணங்கு அணி - தேமலைக் கொண்ட.
``புகலித் தலம் விளங்கப் பிறந்த சம்பந்தனது மலையில் தினை வலர் புனத்து (ஒருநாள் எங்கள்மேல் யானை வந்த பொழுது) முன் வந்து சிலை வளைத்துச் சரம் துரந்து முயன்று அங்கு உதவி செய்த வெற்பனுக்கு அல்லது பிறருக்கு நும் மகளை மணம் செய்து கொடுக்க எண்ணுவது நம் எல்லோருக்கும் வலிய பழியாய் முடியும்`` என்பதாம்.
`அவ்வாறு செய்ய முயன்றால் தலைவி இறந்துபடுவாள்` என்பது கருத்து.
இது, தோழி செவிலிக்குக் களிறு தருபுணர்ச்சியால் அறத்தொடு நின்றது.

பண் :

பாடல் எண் : 8

பழியொன்றும் ஓராதே பாயிடுக்கி வாளா
கழியுஞ் சமண்கையர் தம்மை யழியத்
துரந்தரங்கச் செற்றான் சுரும்பரற்றும் பாதம்
நிரதந்தரம்போய் நெஞ்சே நினை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சமணர் பழி ஒன்றையும் ஓராமை (நினையாமை) வைதிக மதத்தவர்மேல் அன்று கொண்டிருந்த காழ்ப்பு உணர்ச்சியினால் ஆம்.
அதற்கு, ஞானசம்பந்தர் எழுந்தருளியிருந்த திருமடத்திற்குத் தீக்கொழுவியதே போதிய சான்றாகும், ஒன்றும் - சிறிதும் திகம்பர சமணருட் சிலர் பாயை உடுத்தாமல் கையால் இடுக்கித் திரிந்தனர்.
``வாளா`` என்றது, இருமையின்பத்தையும் இழந்தமை நோக்கியாம்.
அழிதல் - தோல்வியடைதல்.
துரந்து - ஓட்டி.
அரங்க - தாமே நசுங்க, அரங்குதல் என்னும் தன் வினையே வலித்தல் பெற்று `அரக்குதல்` என வருகின்றது.
``சுரும்பு அரற்றும்`` என்றது, `தாமரை மலர் போன்றது` என்றபடி.
நிரந்தரம் - இடை விடாமல்.
அந்தரம் - இடைவெளி.
நிர்அந்தரம் - இசை வெளியின்மை.
போய் - அருகணைந்து.
நெஞ்சு அணைதலாவது, பற்றுதல்.

பண் :

பாடல் எண் : 9

நினையா தரவெய்தி மேகலை
நெக்கு வளைசரிவாள்
தனையாவ வென்றின் றருளுதி
யேதடஞ் சாலிவயல்
கனையா வருமேதி கன்றுக்
கிரங்கித்தன் காழ்வழிபால்
நனையா வருங்காழி மேவிய
சீர்ஞான சம்பந்தனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது பாடாண் திணைக் கைக்கிளைத் துறையாகச் செய்யப்பட்டது.
இது புறப்புறக் கைக்கிளை.
``தடஞ் சாலி வயல்`` என்பது முதலாகத் தொடங்கி உரைக்க.
``நின்னை`` என்பது இடைக்குறைந்து ``நினை`` என நின்றது.
ஆதரவு - ஆதரித்தல்; விரும்புதல் நெகுதலும், சரிதலும் ஆகிய சினை வினைகள் முதல்மேல் ஏற்றிச் சொல்லப்பட்டன.
சினையொடு ஒட்டிய பொருள்களும் ஒற்றுமை பற்றிச் சினையாகவே கருதப்படும்.
சரிவாள், வினையாலணையும் பெயர்.
தன், சாரியை.
``ஆவ`` என்பது இரக்கக் குறிப்பு இடைச் சொல்.
அருளுதி - இரங்குவாய், ஏகாரம் அசை.
வினா வாக்கி உரைத்தலும் ஆகும்.
`தடவயல்` என இயையும்.
தட பெருமை யுணர்த்தும் உரிச்சொல்.
சாலி - நெற்பயிர்.
வயல் வரும் மேதி - வயல்களின் பக்கம் மேய்தற்கு வருகின்ற எருமை.
``வயல்`` என்பதன் பின், ``புடை`` என்னும் பொருட்டாய கண்ணுருபு விரிக்க.
கமையா - கனைத்து; ஒலியெழுப்பி.
கன்றுக்கு - உடைவனிடத்திலே கட்டுண் டிருக்கும் தனது கன்றை நினைந்த காரணத்தால், `நனைய` என்றதன் இறுதி நீட்டல் பெற்றது.
`எச்சத் திரிபு` என்றலும் ஆம்.

பண் :

பாடல் எண் : 10

தனமலி கமலத் திருவெனுஞ் செல்வி
விருப்பொடு திளைக்கும் வீயா வின்பத்
தாடக மாடம் நீடுதென் புகலிக்
காமரு கவினார் கவுணியர் தலைவ
பொற்பமர் தோள நற்றமிழ் விரக

மலைமகள் புதல்வ கலைபயில் நாவநினாது
பொங்கொளி மார்பில் தங்கிய திருநீ
றாதரித் திறைஞ்சிய பேதையர் கையில்
வெள்வளை வாங்கிச் செம்பொன் கொடுத்தலின்
பிள்ளை யாவது தெரிந்தது பிறர்க்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதுவும் புறப்புறக் கைக்கிளை.
தனம் மலி - பொருளை நிரம்பத் தருகின்ற.
திரு - இலக்குமி.
`அவள் திளைக்கும் மாடம், இன்பத்து மாடம், ஆடக மாடம் எனத் தனித்தனி இயைக்க.
திளைத்தல் - இன்பம் உற்று இருத்தல்.
வீயா - அழியாத.
ஆடகம் - பொன்.
நீடு - உயர்ந்திருக்கின்ற.
தென் - அழகு.
புகலி - சீகாழிப் பதி.
`புகலிக் கவுணியர்` என இயைக்க.
காமரு - விரும்பப்படுகின்ற.
கவின் ஆர் - அழகு நிறைந்த (தலைவன்).
கவுணியர் - கரவுணிய கோத்திரத்தவர்.
தலைவன் - சிறந்தவன்.
பொற்பு - அழகு.
நற்றமிழ் - ஞானத் தமிழ்.
விரகன் - வல்லவன்.
ஞானசம்பந்தரை முருகன் அவதாரமாகக் கூறுவோர் ``மலைமகள் புதல்வ`` - என்பதற்கு உண்டமை பற்றி ஞானசம்பந்தரை முருகன் அவதாரமாகக் கூறுவோர் ``மலைமகள் புதல்வ`` என்பதற்கு `முருகன்` எனப் பொருள் கொள்வர்.
அம்மையது திருமுலைப் பாலை உண்டமை பற்றி ஞானசம்பந்தரை அங்ஙனம் கூறுதல் பொருந்துவதே.
பயிலுதல் - பல முறையும் சொல்லுதல்.
ஆதரித்து - விரும்பி.
``பேதையர்`` என்பதுபொதுப் பொருட்டாய், `மகளிர்` எனப் பொருள் தந்தது.
வெள் வளை - சங்க வளையல்.
``செம்பொன்`` - என்பது உவமையாகு பெயராய், அது போலும் தேமலைக் குறித்தது.
காதல் மிகுதியால் உடல் மெலிய வளை கழலுதலும், உடம்பில் தேமல் தோன்றுதலும் இயற்கை.
இவற்றை வாங்குதலும், கொடுத்தலுமாகக் கூறியது, ஏற்றுரை (இலக்கணை) வழக்கு.
சங்கினைப் பொன்னை விலையாகக் கொடுத்து வாங்குதலால், `சிறுபிள்ளை` என்பது உண்மையாயிற்று என்பதாம்.
`பிள்ளைமைப் பருவத்திற்றானே இத்துணைப் பேரழகுடையராய் இருந்தார்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 11

பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்
துறவியெனுந் தொஃறோணி கண்டீர் நிறையுலகில்
பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன்
தன்மாலை ஞானத் தமிழ்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பொன் மாலை மார்பன்`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.
``நிறை யுலகில்`` என்பதை, ``பிறவி`` என்பதற்கு முன்னே கூட்டுக.
பிறவி - பிறத்தல்.
அது முடிவில்லாது வருதலால் பெரிய கடலாக உருவகிக்கப்பட்டது.
ஞானசம்பந்தரது தமிழ் பிறத்தல் தொழில் வாராது போக்குதல் பற்றி அஃது அக்கடலைக் கடக்க உதவும் தோணியாக உருவகிக்கப்பட்டது.
இஃது இயைபு உருவகம் பொல்லாமை - தீமை.
`துன்பத்தைத் தருவது` என்பது கருத்து.
நீந்துதல் - கடத்தல்.
துறவு; பற்றுக்களை அறவேவிடுதல்.
அவ்விடுதலை தருவதனை விடுதலாகவே கூறினார் காரணம் காரியமாக உபசரிக்கப்பட்டது.
தோல் + தோணி = தோஃறோணி.
தொன்மை - பழைமை.
`ஞான சம்பந்தரது தமிழ் பொருளால் பழைமை யுடையது` என்பது கருத்து.
`தோற்றோணி` என்பது பாடம் அன்று.
கண்டீர்; முன்னிலையசை.
நிறை உலகு - உயிர்கள் நிறைந்துள்ள உலகு.
பொன் மாலை, பிள்ளைகட்கு அணியப்படுவது.
தன், சாரியை.
`சம்பந்தன்தன் தமிழ்` என்க.
மாலைத் தமிழ் - கோவையாக (திருப்பதிகங்களாக)ச் செய்யப்பட்ட தமிழ்.
ஞானத் தமிழ் - ஞானத்தைத் தரும் தமிழ்; இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.
தமிழ், அதனால் ஆகிய பாடல்களைக் குறித்த கருவியாகுபெயர்.

பண் :

பாடல் எண் : 12

ஞானந் திரளையி லேயுண்
டனையென்று நாடறியச்
சோனந் தருகுழ லார்சொல்
லிடாமுன் சுரும்புகட்குப்
பானந் தருபங்க யத்தார்
கொடுபடைச் சால்வழியே
கூனந் துருள்வயல் சூழ்காழி
மேவிய கொற்றவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதுவும் புறப் புறக் கைக்கிளை.
``படைச் சால் வழியே`` - என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.
``திரளை`` என்பது இங்குக் கிண்ணத்தைக் குறித்தது; ஆகு பெயர்.
சோனம் - மேகம்.
தரு, உவம உருபு.
``சோனந் தரு குழலார்`` என்றது தோழிமார்களை.
எனவே, `தலைவியர் கேட்பச் சொல்லிடா முன்` என்க.
``கொற்றவனே`` (அறிவால் அறியத் தக்க ஞானத்தைக்) கிண்ணத்திலே பெற்று உண்டாய்`` - என்னும் அதிசயத்தைத் தோழியர் தம் தலைவியர் கேட்ப நாடறியச் சொல்லும் முன்னே உனது பங்கயத் தாரினை (தாமரைமலர் மாலையை)க் கழற்றிக் கொடுத்துவிடு; (ஏனெனில், அதனைக் கேட்டவுடனே தலைவியர் ஆற்றாமையால் இறந்துபடுவர்) - என்பது இதன் பொருளாகும்.
``தலைவியர் கேட்ப`` என்பது இசையெச்சம் இது `மாலையிரத்தல்` என்னும் துறை.
சுரும்புகட்குப் பானமாவது தேன்; அதனைத் தருவது பங்கயம் (தாமரை மலர்) தாமரை மாலை அந்தணருக்கு உரிய அடையாள மாலை.
படைச் சால், உழுபடை உழுது சென்ற பள்ளம், கூன் நந்து - வளைவான சங்குகள் கொற்றவன் - தலைவன்.

பண் :

பாடல் எண் : 13

அவனிதலம் நெரிய வெதிரெதிர் மலைஇச்
சொரிமதக் கறிற்று மத்தகம் போழ்ந்து
செஞ்சே றாடிச் செல்வன அரியே எஞ்சாப்
படவர வுச்சிப் பருமணி பிதுங்கப்
பிடரிடைப் பாய்வன பேழ்வாய்ப் புலியே
இடையிடைச் செறியிரு ளுருவச் சேண்விசும் பதனில்
பொறியென விழுவன பொங்கொளி மின்னே
உறுசின வரையா லுந்திய கலுழிக்
கரையா றுழல்வன கரடியின் கணனே
நிரையார் பொருகட லுதைந்த சுரிமுகச் சங்கு

செங்கயல் கிழித்த பங்கய மலரின்
செம்மடல் நிறைய வெண்முத் துதிர்க்கும்
பழனக் கழனிக் கழுமல நாடன்
வைகையி லமணரை வாதுசெய் தறுத்த
சைவ சிகாமணி சம்பந்தன் வெற்பிற்

சிறுகிடை யவள்தன் பெருமுலை புணர்வான்
நெறியினில் வரலொழி நீமலை யோனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இஃது அகப் பொருளில் களவியலில், தோழி தலைவனை வரைவுகடாதல் வேண்டி வரவு விலக்கு வாள்; ஆறின்னாமை கூறி விலக்கிய துறையாகச் செய்யப்பட்டது.
ஆறு இன்னாமை - வரும் வழி துன்பம் உடையது.
``மலையோனே`` என்றதை ``நிரையார்`` என்பதற்கு முன்னே கூட்டிப் பின்வரும் அடிகளையும் முதலில் வைத்து உரைக்க.
மலை யோன் - வெற்பன்; குறிஞ்சி நிலத் தலைவன்.
அவனி தலம் நெரிய - பூமியில் உள்ள இடங்கள் ஆங்காங்குக் குழியும்படி மலைஇ - போர் செய்து, என்பது, `செய்து கொண்டு சொரிகின்ற மதம்` என நிகழ்காலம் உணர்த்தி நின்றது.
செஞ்சேறு - இரத்தத்தோடு கூடிய சேறு.
அரி சிங்கம், எஞ்சா - இளைக்காத.
பேழ்வாய் - பெரியவாய்.
சேண் விசும்பு- உயரத்தில் உள்ள ஆகாயம்.
`விசும்பினின்றும் மின் வீழ்வன` - என்க.
அது, பகுதிப் பொருள் விகுதி.
பொறி, தீப்பொறி, வரை - மலை.
அது சினம் உடைத்தன்றாயினும் வெள்ளத்தைப் பொங்க விடுதல் பற்றிச் சினம் உடையது போலக் கூறப்பட்டது.
இக்காலத்தவரும்.
`இயற்கையின் சீற்றம்` என்பர்.
உந்திய - வெளிப்படுத்தப்பட்ட கலுழி - (கான் யாற்று) வெள்ளம், கரையால் - கரை வழியாக.
கணன் - கணம்; கூட்டம்.
இத்துணையும் ஆறின்னாமை கூறியது.
இனிச் சீகாழிச் சிறப்பு.
நிரை ஆர் - அலைகளின் வரிசை பொருந்திய கரையை
மோதுதல் பொருதல்
உதைந்த - கரையில் கொண்டு வந்து ஒதுக்கிய
சுரி முகம் - வளைந்த முகம்.
`சங்கு பங்கய மலரின் மடல் நிறைய முத்து உதிர்க்கும் கழனி` என்க.
கிழித்த - மலர்த்திய.
மடல் - இதழ்.
பழனம் - மருத நிலம்.
செம்மடல், வெண்முத்து - `சிறுகு இடை பெருமுலை` முரண் தொடைகள் `புணர்வன வரல் ஒழி நீ` என முடிக்க.
`இவ்வாறான நெறியினில்` என இசையெச்சம் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 14

மலைத்தலங்கள் மீதேறி மாதவங்கள் செய்தும்
முலைத்தடங்கள் நீத்தாலும் மூப்பர் கலைத்தலைவன்
சம்பந்தற் காளாய்த் தடங்காழி கைகூப்பித்
தம்பந்தந் தீராதார் தாம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`முலைத் தலங்கள் நீத்தாலும்`` என்றது, புறப் பற்றுக்களையெல்லாம் அறவே நீக்கினாலும்` என்றபடி.
`முலைத் தலங்கள்` என்றது, அதற்கு இனமாகிய மற்றை மணி, பொன் இவை களையும் தழுவி நின்றமையின் உபலக்கணம்.
தலைவர் துயிலும் இடமாதல் பற்றி, ``தலங்கள்`` என்றார்.
முன் வைக்கற் பாலதாய இது செய்யுள் நோக்கி ஈற்றில் வைக்கப்பட்டது.
வான் - பெருமை.
தவம், உற்ற நோய் நோன்றலும், உயிர்க்கு உறுகண் செய்யாமையும் ஆகிய அவையேயாம்.
என்னை? `நற்றவம்` என்றோ,1 ``இறப்பில் தவம்`` என்றோ சிறப்பியாது வாளா, ``தவங்கள்`` என்றமையின் ``செய்து`` என்பதனையும், ``நீத்தாலும்`` என்பதனோடு இயைய, `செய்தாலும்` திரிக்க.
``கலைத் தலைவன் சம்பந்தற்கு ஆளாய்.
.
.
தீராதார், தாம் முலைத் தலங்கள் நீத்தாலும், மலைத் தலங்கள் மீதேறி வான் தலங்கள் செய்தாலும் மூப்பர்` - என இயைத்து வினை முடிவு செய்க.
மூப்பர் - முதுமையை எய்துவர்.
என்றது, `பின் ஏனையோர் போலவே இறந்தொழிவர்` என்னும் குறிப்பினது.
நிலையாமை யுணர்வு முதலிய காரணங்களால், `எனது` என்னும் புறப் பற்றுக்களை விட்ட வழியும்.
பற்றற்றான் பற்றினைப் பற்றாதவழி, 2 `யான்` என்னும் அகப் பற்று நீங்காமையால், `ஏனை யோர் போலவே இறப்பர்` என்றார்.
ஞானசம்பந்தரை ஆசிரியராக அடைந்து அவர் சொல்வழி நில்லாதவர்க்கு, `யான்` என்பது ஒழியாது என்பது கருத்து.
``யான் - என்னும் செருக்காவது, தானல்லாத உடம்பைத் தானாகக் கருதும் மயக்கம்`` என்றார் பரிமேலழகர் 1 தன்னை உடம்பின் வேறாக உணர்தலும் பசுஞானமாவதல்லது, பதிஞானம் ஆகாமையால் அவ்வாறுணர்தல் `யான்` என்பதினின்றும் நீங்கியது ஆகாது.
மற்று, எல்லாச் செயல்களும் சிவபெருமான் செயலேயாக, அவற்றுள் சிலவற்றை ``யான் செய்தேன்; பிறர் செய்தார்`` என மயங்கியுணர்ந்து விருப்பு வெறுப்புக்களைக் கொள்ளுதலே, `யான்` என்னும் செருக்காகும்.
அச் செருக்கு, ``எல்லாம் அவனே`` என உணர்ந்து இறைவனைப் பற்றாத வழி நீங்குமாறில்லை.
எனவே, இறுதியடியில் ``தம் பந்தம்`` என்றதில் `பந்தம்` எனப்பட்டது, `யான்` என்னும் அகப் பற்றையேயாயிற்று.

பண் :

பாடல் எண் : 15

தாமரை மாதவி சேறிய
நான்முகன் தன்பதிபோல்
காமரு சீர்வளர் காழிநன்
னாடன் கவித்திறத்து
நாமரு வாதவர் போல்அழ
கீந்துநல் வில்லிபின்னே
நீர்மரு வாத சுரத் தெங்ங
னேகுமென் நேரிழையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இஃது அகப் பொருள் உடன்போக்கில் நற்றாய் தலைவியது மென்மைத் தன்மை நினைந்து இரங்கிய துறையாகச் செய்யப்பட்டது.
இன்னோரன்னவற்றை, `அன்னை மருட்சி` என்பர் ``நேரிழை`` என்பதை, `மருவாதவர் போல்`` என்பதன் பின் கூட்டியுரைக்க.
மா தவிசு - சிறந்த ஆசனம்.
நான்முகன் தன்பதி, சத்தியலோகம் சீகாழி `பிரமபுரம்` எனப்படுதலால் அதனை, ``நான்முகன் தன்பதி போல் சீர் வளர் காழி` என்றார்.
சீர் வளர் - சிறப்பு மிக்க.
கவித் திறத்து நா மருவாதவர் - பாடல் வகைகளில் நாப் பொருந்தாதவர்கள்; பாடாதவர்கள்.
``அவர்களே, மெய்வருந்தப் பெற்று, நீரும் நிழலும் இல்லாத பாலை வனத்தில் வாழ்வோராவர்`` என்பதாம்.
``ஈந்து`` என்றது, `நீங்கப் பெற்று` என்றபடி.
வில்லை - வில்லை ஏந்திக் காத்துக் கொண்டு போகும் தலைவன், ``நீர் மருவாத சுரம்`` என்றது, சுரத்தினது இயல்பை எடுத்துக் கூறியவாறு.
``நீர்மரு`` என்பது ஆசெதுகை.
நேர் இழை - நுணுகிய வேலைப்பாடு அமைந்த அணிகலம்.

பண் :

பாடல் எண் : 16

இழைகெழு மென்முலை யிதழிமென் மலர்கொயத்
தழைவர வொசித்த தடம்பொழி லிதுவே காமர்
கனைகுடைந் தேறித் துகிலது புனையநின்
றெனையுங் கண்டு வெள்கிட மிதுவே தினைதொறும்
பாய்கிளி யிரியப் பையவந் தேறி

ஆயவென் றிருக்கும் அணிப்பரண் இதுவே ஈதே
இன்புறு சிறுசொ லவைபல வியற்றி
அன்பு செய் தென்னை யாட்கொளு மிடமே பொன்புரை
தடமலர்க் கமலக் குடுமியி லிருந்து
நற்றொழில் புரியும் நான்முகன் நாட்டைப்

புற்கடை கழீஇப் பொங்கு சராவத்து
நெய்த்துடுப் பெடுத்த மூத்தீப் புகையால்
நாள்தொறும் மறைக்குஞ் சேடுறு காழி
எண்டிசை நிறைந்த தண்டமிழ் விரகன்
நலங்கலந் தோங்கும் விலங்கலின் மாட்டுப்

பூம்புன மதனிற் காம்பன தோளி
பஞ்சில் திருந்தடி நோவப் போய்எனை
வஞ்சித் திருந்த மணியறை யிதுவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இஃது அகப்பொருள் களவியலில் பகற் குறி இடையீட்டில் தலைவி செறிக்கப்பட்டமையின் தலைவன் குறி யிடத்துச் சென்று தலைவியைக் காணாது, களம் நோக்கி மறுகுதலாகிய, `வறுங்களம் நாடி மறுகல்` என்னும் துறையாகச் செய்யப்பட்டது.
இழை கெழு - அணிகலன்கள் பொருந்திய.
``மென்முலை`` என்பது அடையடுத்த ஆகுபெயராய்த் தலைவியைக் குறித்தது.
பின் வரும் செய்யுட்களுக்கும் கொள்க.
கொன்றை; கொன்றை மரம்.
இது முல்லை நிலக் கருப் பொருளாயினும்,
எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும்
வந்த நிலத்தின் பயத்த ஆகும்
என்பதனால் மலை நிலத்து வந்தது.
திணை மயக்கம் அன்று.
`இதழில் ஒசித்த பொழில்` என்க.
ஒசித்தல் - வளைத்தது பூவைப் பறித்தற் பொருட்டு.
தழை வர - இலைகள் நிலத்திற் படும்படி.
`என்னையும்` என்பது இடைக் குறைந்து நின்றது.
உம்மை, `காண்டல் கூடாத என்னையும்` என உயர்வு சிறப்பு.
தினை ஒட்டும் ஓசை.
சிறு சொல் - இகழ்ச்சியுரை.
இது அன்பினால் சொல்லப்படுவது.
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு
என்பது காண்க.
சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை`` தினைப் புனத்தில் வெகுளி பற்றி வந்தது.
2 `பொன்புரை குடுமி`` என இயைக்க.
குடுமி, இங்குக் கேசரம்.
தொழில், படைத்தல்.
நாடு- உலகம், புற் கடை - புல்லிய தலைவாயில்.
கழுவுதல் - தூய்மைப் படுத்தல்.
சராவம் - ஓமத்துள் நெய்யை விடும் அகப்பை.
துடுப்பு - அவ் அகப் பையை மூடுவது.
சேடு - பெருமை.
விலங்கல் - மலை, `விரகன் விலங்கள்` என்க.
காம்பு - மூங்கில்.
காம்பன தோளி, தலைவி.
இதனை, ``பொன் புரை`` என்பதற்கு முன்னே கூட்டுக.
வஞ்சித் திருத்தல் - ஒளிந் திருத்தல்.
விளையாட்டுக்களில் ஒளிந்திருப்பதும் ஒன்று.
மணி - மணிகளை உடைய.
அறை - குகை.

பண் :

பாடல் எண் : 17

வேழங்க ளெய்பவர்க்கு வில்லாவ திக்காலம்
ஆழங் கடல்முத்தம் வந்தலைக்கும் நீள்வயல்சூழ்
வாயந்ததிவண் மாட மதிற்காழிக் கோன்சிலம்பிற்
சாய்ந்தது வண்தழையோ தான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதுவும் அகப்பொருள் களவியலில் தலைவன், தலைவி, தோழி இருவரும் உள்வழிச் சென்று, ``இவ் வழியாக அச்சம் உற்று ஓடிய யானை வந்ததா`` எனப் பொய்யாக வினாவ, தோழி அவன் கருத்தறிந்து நகை உண்டாகக் கூறுவதாகிய, ``தோழி இறை வனை நகுதல்`` என்னும் துறையாகச் செய்யப்பட்டது.
``(இவர் ஏந்தியிருப்பது தழை; வினாவுவது வேட்டத்தில் தப்பிய யானை.
அதனால்,) இக்காலத்தில் யானையை எய்பவர்க்கு அம்பாய் அமைவது, சாய்ந்து துவள்கின்ற தழைதானோ`` என்பது இப் பாட்டின் பொருள்.
வில், ஆகுபெயராய், அதன்கண் தொடுக்கப்படும் அம்பைக் குறித்தது.
`ஆழ் கடல் அம் முத்தம்` என்க.
அம் - அழகு.
சீகாழி அக் காலத்தில் கடலைச் சார்ந்து இருந்தது.
அதனால் அதன் அலைகள் முத்துக்களை வயல்களில் எறிந்தன.
`வயல் சூழ் காழி, மாடக் காழி, மதிற் காழி` எனத் தனித் தனி இயைக்க.
வாய்ந்த - வாய்ப்பான (மாடம்) திவளுதல் - ஒளி வீசுதல், இதுவும் மாடத்திற்கே அடை.
காழிக் கோன், ஞானசம்பந்தர்.
சிலம்பு - மலை.
`துவள்தழை` என்பது எதுகை நோக்கிச் செய்கை வேறுபட்டது.
ஓகாரம், இழிவு சிறப்பு.
தான், அசை.

பண் :

பாடல் எண் : 18

தழைக்கின்ற சீர்மிகு ஞானசம்
பந்தன் தடமலைவாய்
அழைக்கின்ற மஞ்சைக் கலர்ந்தன
கோடலம் பெய்திடுவான்
இழைக்கின்ற தந்தரத் திந்திர
சாபம்நின் னெண்ணமொன்றும்
பிழைக்கின்ற தில்லைநற் றேர்வந்து
தோன்றிற்றுப் பெய்வளையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இஃது அகப் பொருள் கற்பியலில் ``கார் காலத்து வருவேன்`` எனக் கூறிப் பிரிந்த தலைவன் அக்காலம் வந்தும் வாரா மையால் ஆற்றாளாய தலைமகட்குத் தோழி அவன் வரவுணர்த்திய துறையாகச் செய்யப்பட்டது.
``பெய் வளையே`` என்பதை முதலிற் கொள்க.
இது தோழி தலைவியை விளித்தது.
தட மலை - பெரிய மலை.
வாய், ஏழன் உருபு.
`அழைக்கின்ற மஞ்ஞைக்கு` என்பதை, `மஞ்ஞை அழைக்கின்றதற்கு என மாற்றிக் கொள்க.
இதன்கண் உள்ள நான்கன் உருபை வினை செய்யிடப் பொருளாகிய கண்ணுருபாகத் திரித்து, `அழைக்கின்ற பொழுதாகிய இப்போது` எனப் பொருள் கொள்க.
அழைத்தல் - அகவுதல்.
மயில் அகவுதல் முகில் வருகையைத் தெரிவிக்கும்.
கோடல் - காந்தள்.
இது குறிஞ்சி நிலத்தில் மழைக் காலத்தில் பூக்கும் `கோடல் அலர்ந்தன` என்க.
`அம்பு எய்தல்` என்பது சிலேடை வகையால், மேகம், கோடையாகிய பகைவன்மேல் அம்பெய்வதாகப் பொருள் தரும்.
அம்பு - கணை; நீர், `இக் கமைக்கு ஏற்புடையவில் வானவில்` என்பது, ``அந்தரத்து இந்திர சாபம்`` என்பதனால் குறிக்கப்பட்டது.
அந்தரம் - ஆகாயம்.
சாபம் - வில்.
``இவை யெல்லாம் நிகழ்ந்து முடிவ தற்கு முன்னே நல்லவருடைய தேர் வந்து தோன்றிவிட்டது.
அதனால், இப்பருவத்தில் தலைவர் வருவார் - என்று உறுதியாக எண்ணியிருந்த உன் எண்ணம் ஒன்றும் (சிறிதும்) தவறவில்லை`` என்க.
``அம்பு எய்திடுவான் இந்திர சாபத்தை இழைக்கின்றது`` என்பதற்கு `மேகம்` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க.
எய்திடுவான், வான் ஈற்று வினையெச்சம்.

பண் :

பாடல் எண் : 19

வளைகால் மந்தி மாமரப் பொந்தில்
விளைதே னுண்டு வேணுவின் துணியால்
பாறை யில்துயில் பனைக்கை வேழத்தை
உந்தி யெழுப்பு மந்தண் சிலம்ப அஃதிங்கு
என்னைய ரிங்கு வருவர் பலரே
அன்னை காணி லலர்தூற் றும்மே பொன்னார்
சிறுபரற் கரந்த விளிகுரற் கிங்கிணி
சேவடி புல்லிச் சில்குர லியற்றி
அமுதுண் செவ்வா யருவி தூங்கத்
தாளம் பிரியாத் தடக்கை யசைத்துச்
சிறுகூத் தியற்றிச் சிவனருள் பெற்ற
நற்றமிழ் விரகன் பற்றலர் போல
இடுங்கிய மனத்தொடு மொடுங்கிய சென்று
பருதியுங் குடகடல் பாய்ந்தனன்
கருதிநிற் பதுபிழை கங்குலிப் புனத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இஃது, அகப் பொருள் களவியலில் தோழியிற் கூட்டத்தில் தலைவன் தோழியைக் குறையிரந்து நிற்கக் குறை நேரும் தோழி அதற்குத்தான் அச்சம் உற்றவளாய் தலைவனையும் அஞ்சுவித்தலாகிய அஞ்சி அச்சுறுத்தல் துறையாகச் செய்யப்பட்டது.
வளை கால் மந்தி - மரம் ஏறுதலால் வளைந்த காலையுடைய பெண் குரங்கு.
வேணுவின் துணி - மூங்கிலை முறித்துக்கொண்ட கழி.
வேழம் - யானை.
சிலம்ப - வெற்பனே.
``பெண் குரங்கு தேனை உண்ட மயக்கத்தால் மூங்கிலை முறித்துக் கொண்ட கழியால் அருகில் துயிலும் யானை எழுப்பப்படு கின்றது`` என்றதனால், ``தலைவியது இல்லில் உண்டு வாழ்ந்த கடமை உணர்ச்சியை யுடைய என்னால் என்பாள் விளைவது அறியாது மயங்கி நிற்கின்ற நீ அறிவுறுத்தப் படுபவனாயினை எனத் தோழி உள்ளுறை உவமம் கூறினாள்.
அஃது இங்கு - உனது நாட்டிற்குச் சொன்ன அந்த இயல்பு இங்கும் உள்ளது.
`அதனை நீ அறி` என்பது இசையெச்சம்.
இங்கு - இவ்விடத்தில் என் ஐயர் பலர் வருவர்.
ஐயர் - தலைவன்மார், ஏகாரம், அசை.
அலர் - வழி.
``தூற்றும்மே`` என்பதில் மகர ஒற்று விரித்தல்.
தேற்றேகாரம், அச்சத்தைக் குறித்தது.
பரல் - சதங்கையின் உள்ளிடு மணி.
``கரந்த பரல்`` என மாற்றிக் கொள்க.
விளி - விளிக்கின்ற; கூப்பிடுகின்ற.
கிங்கிணி - சதங்கை.
``கிங்கிணியைச் சேவடியில் புல்லி (பூட்டி) `` என்க.
அமுது - (பெற்ற தாயார் உண்பித்த) பால் ``அருவி`` என்றது வாய் ஊறலை.
தாளம் - சப்பாணி கொட்டுதல்.
கூத்து - குதிப்பு.
``சில் குரல் இயற்றி`` என்பது முதல் ``இயற்றி`` என்பது காறும் ஞானசம்பந்தர் தம் தந்தையார் சிவபாத இருதயரைக் காணாது அழுத அழுகைக் காட்சி விளக்கப்பட்டது.
`அவ் அழுகையானே சிவனருள் பெற்ற நற்றமிழ் விரகன்` என்க.
இறைவனை ``அழுதழைத்துக் கொண்டவர்`` 1 எனச் சேக்கிழாரும் கூறினார்.
பற்றலர் - பகைவர்.
`இடுகிய` என்பது ``இடுங்கிய`` என விரித்தல் பெற்றது.
ஒடுங்கிய - ஒடுங்குதற்கு; மறைதற்கு.
``பாய்ந்தனன்`` என்றது, விரைவு பற்றி எதிர் காலம் இறந்த காலமாகச் சொல்லப்பட்டது.
கருதி - யாதொன்றையும் நினைத்து.
`கங்குற்கண்` என ஏழாவது இறுதிக்கண் தொக்கது.

பண் :

பாடல் எண் : 20

தேம்புனமே யுன்னைத் திரிந்து தொழுகின்றேன்
வாம்புகழ்சேர் சம்பந்தன் மாற்றலர்போல் தேம்பி
அழுதகன்றா ளென்னா தணிமலையர் வந்தால்
தொழுதகன்றா ளென்றுநீ சொல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இஃது அகப் பொருள் களவியல் பகற் குறியில் தோழி தலைவன் சிறைப்புறமாகச் செறிப்பறிவுறுக்கும் வகைகளுள் ஒன்றாகிய புனம் நோக்கிக் கூறியதாகச் செய்யப்பட்டது.
தேம் புனம் - தேனை உடைய புனம்.
திரிந்து - வலம் வந்து.
``அணி மலையர் வந்தால்`` என்பதனை இதன்பின் கூட்டுக.
மலையர்- வெற்பர்.
குறிஞ்சி நிலத் தலைவன்.
வாம் புகழ் - வாவும் புகழ்; எங்கும் பரவிய புகழ்.
`வான் புகழ்` - எனப் பாடம் ஓதலும் ஆம்.
`அழுது அகன்றாள்` எனக் கூறினால்.
`உறவு இழக்கப்பட்டதாகும்` என்னும் கருத்தினால் அதனை விலக்கி, `தொழுது அகன்றாள்` எனக் கூறுமாறு கூறினாள்.
இதனால் தலைவனுக்கு ஆறுதல் உண்டாகும்.
``சொல்லு`` என்பதும் பாடம்.

பண் :

பாடல் எண் : 21

சொற்செறி நீள்கவி செய்தன்று
வைகையில் தொல்லமணர்
பற்செறி யாவண்ணங் காத்தசம்
பந்தன் பயில்சிலம்பில்
கற்செறி வார்சுனை நீர்குடைந்
தாடுங் கனங்குழையை
இற்செறி யாவண்ணம் காத்திலை
வாழி யிரும்புனமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இச் செய்யுளும் முன்னைச் செய்யுளின் துறை யாகவே செய்யப்பட்டது.
இங்கு, ``பல்`` என்றது, சொல்லைக் குறித்து, `அவன் பல் பலித்தது` என்றும், `பற்போனமையால் சொற்போயிற்று`` என்றும் வழக்கத்தில் வழங்குதல் காண்க.
செறிதல் - சேர்தல்; வெற்றி பெறுதல்.
படல் - விசாலித்த.
கல் சுனை - கற்களுக்கு இடையே உள்ள சுனை.
வார் - நீண்ட.
கனங் குழை - கனமாகிய காதணியை உடைய தலைவி.
இரும் புனம் - பெரிய புனம்.
`புனமே! கனங்குழையை (அவள் தமர்) இற் செறியா வண்ணம் காத்திலையே; நீ வாழி` என வினை முடிக்க.
காவாமை முற்றி முதிர்ந்ததால் உண்டாயிற்று.
வாழி, இகழ்ச்சிக் குறிப்பு.

பண் :

பாடல் எண் : 22

புனலற வறந்த புன்முளி சுரத்துச்
சினமலி வேடர் செஞ்சர முரீஇப்
படுகலைக் குளம்பின் முடுகு நாற்றத்
தாடு மரவி னகடு தீயப்
பாடு தகையின் பஞ்சுரங் கேட்டுக்

கள்ளியங் கவட்டிடைப் பள்ளி கொள்ளும்
பொறிவரிப் புறவே யுறவலை காண்நீ நறைகமழ்
தேம்புனல் வாவித் திருக்கழு மலத்துப்
பையர வசைத்ததெய்வ நாயகன்
தன்னருள் பெற்ற பொன்னணிக் குன்றம்

மானசம் பந்தம் மண்மிசைத் துறந்த
ஞானசம் பந்தனை நயவார் கிளைபோல்
வினையே னிருக்கும் மனைபிரி யாத
வஞ்சி மருங்கு லஞ்சொற் கிள்ளை
ஏதிலன் பின்செல விலக்கா தொழிந்தனை

ஆதலின் புறவே யுறவறலை நீயே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இஃது அகப் பொருள்.
களவியலில் உடன் போக்கின் செவிலி பின் தேடிச் செல்லுமிடத்துக் குரவொடு புலம்பல் பெரும் பான்மையாகச் சிறுபான்மை வரும் புறவொடு புலம்பலாகச் செய்யப் பட்டது.
புறவு - புறா; இது பாலை நிலப் பறவை.
வறத்தல் - வற்றுதல்.
வறந்த - வறந்தமையால்.
புல், தரையிற் பரவிய புற்கள்.
முளி - உலர்ந்த.
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது
என்றது காண்க.
சரம் உரீஇ - அம்பு பட்டு உருவியதனால்.
படு கலை - இறந்த அம் மான்.
மானை வேட்டையாடிய வேடர், அதன் குளம்பை `பயன் இல்லது` என போகட்டுப் போதலின், அது வெயிலால் உருகி மிகத் தீ நாற்றத்தை உண்டாக்கிற்று என்க.
`நாற்றத்தை யுடைய சுரம்` என்க.
ஆடும் அரவு - படம் எடுத்து ஆடும் பாம்பு.
இஃது இனம் உள்ளது அகடு - வயிறு.
வெயில் வெப்பம் மிகுதியால், தரை மேல் ஊர்ந்து செல்லும் பாம்பின் அடி உடல் தீய்வதாயிற்று.
பாலை நிலத்தில் பாடுவன பருந்தும், கழுகும், `அவற்றது குரல் `பஞ்சுரம்` என்னும் பண்போன்றன` என்க.
இப்பண் குறிஞ்சியின் உட்பிரிவாய்ப் பாலைக்கு உரிமையுடையது.
``கலைக் குறம்பின் முடுகு நாற்றமும், அரவின் வயிறு தீய்கின்ற வெப்பமும் ஆகிய இவற்றிடையே கள்ளிக் கிளைகளில் பஞ்சுரப் பண்ணைக் கேட்டு நன்கு உறங்குகின்ற புறாவே`` - என்றதனால், ``நீ என மகளைச் சுரத்திடைப் போதலை விலக்காமை வியப்பன்று`` என்பதனைக் குறிப்பால் உணர்த்தியவாறு.
`நீ (எமக்கு) உறவாவாய் அல்லை` என்க.
பொறி - புள்ளி.
காண், முன்னிலை யசை நறை - தேன்.
தேம்- இனிமை.
அசைத்த - இறுகக் கட்டிய.
அணி - அழகு `அணி பொற் குன்றம்` என மாற்றிக் கொள்க.
`பொற் குன்றம்` என்றதும் ஞான சம்பந்தரை.
உருவகம்.
மானம் - அபிமானம்; பற்று.
மண்மிசை - இவ்வுலகத்தில், ``இவ்வுலகத்தில் `பற்று` எனப்படுவது ஒன்றையும் இல்லாது விடுத்த ஞானசம்பந்தன்`` என்க.
`நயவார் கிளைபோல், வஞ்சி மருங்குற் கிள்ளை ஏதிலன் பின் (சுரத்திற்) செல்ல` என உரைக்க.
``மனை விரியாத`` என்றது, `ஒரு ஞான்றும் வெளிச் சென்று அறியாதவள்` என்பதைக் குறித்தது.
வஞ்சி - கொடி.
மருங்குல் - இடை.
`மருங்குலையும், அழகிய சொல்லையும் உடைய கிள்ளை` என்பதாம்.
கிள்ளை - கிளி; உவம ஆகுபெயர்.
ஏதிலன் - அயலான்.
ஈற்றடி முடிந்தது முடித்தல்.

பண் :

பாடல் எண் : 23

அலைகடலின் மீதோடி யந்நுளையர் வீசும்
வலைகடலில் வந்தேறு சங்கம் அலர்கடலை
வெண்முத் தவிழ்வயல்சூழ் வீங்குபுனற் காழியே
ஒண்முத் தமிழ்பயந்தா னூர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முத்தமிழ் பயந்தான், ஞானசம்பந்தர்` அவரது ஊர் காழியே` என்க.
இங்ஙனம் கூறியதனால் காழியது சிறப்பு உணர்த்தப் பட்டது.
`கடலில் வந்து ஏறு சங்கம் நுளையர் வீசும் வலையிலும், மலர்கள் தலையிலும் முத்தை அவிழ்க்கும் வயல்` என்க.
வீங்கு - மிகுந்த.

பண் :

பாடல் எண் : 24

ஊரும் பசும்புர வித்தே
ரொளித்த தொளிவிசும்பில்
கூரு மிருளொடு கோழிகண்
தூஞ்சா கொடுவினையேற்
காரு முணர்ந்திலர் ஞானசம்
பந்தனந் தாமரையின்
தாருந் தருகில னெங்ஙனம்
யான்சங்கு தாங்குவதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டுப் பிறர் கூற்றாய் வாராது; தலைவி கூற்றாய் வந்தமையின், பாடாண் கைக்கிளையாகாது, அகப்புறக் கைக் கிளையாய் ``உட்கோள்`` என்னும் துறையின தாம்.
ஊரும் - ஏறிச் செல்கின்ற.
பசும் புரவி - பச்சைக் குதிரை இவை பூட்டப்பட்ட தேர் சூரியனுடையது.
கூரும் - மிகுகின்ற இருளொடு கண் துயிலாது கூவுகின்ற கோழி யாமக் கோழி.
கொடு வினையேற்கு - கொடிய வினையை உடையேனாகிய என் பொருட்டாக.
ஆரும் உணர்த்திலர் - (தோழி உட்பட) யாரும் விழித்திருக்கவில்லை.
சங்கு - சங்க வளையல்.

பண் :

பாடல் எண் : 25

தேமலி கமலப் பூமலி படப்பைத்
தலைமுக டேறி யிளவெயிற் காயும்
கவடிச் சிறுகாற் கர்க்ட கத்தைச்
சுவடிச் சியங்கும் சூல்நரி முதுகைத்
துன்னி யெழுந்து செந்நெல் மோதுங்

காழி நாட்டுக் கவுணியர் குலத்தை
வாழத் தோன்றிய வண்டமிழ் விரகன்
தெண்டிரைக் கடல்வாய்க்
காண்தகு செவ்விக் களிறுக ளுகுத்த
முட்டைமுன் கவரும் பெட்டையங் குருகே

வாடை யடிப்ப வைகறைப் போதில்
தனிநீ போந்து பனிநீர் ஒழுகக்
கூசிக் குளிர்ந்து பேசா திருந்து
மேனி வெளுத்த காரண முரையாய்
இங்குத் தணந்தெய்தி நுமரும்

இன்னம்வந் திலரோ சொல்லிளங் குருகே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இஃது அகப் பொருட் களவியலில் ஒருவழித் தணத்தலாகப் பிரிந்த தலைவன் வரவு நீட்டிக்கத் தலைவி இரங்கிய காமம் மிக்க கழிபடர் கிளவியாகச் செய்யப்பட்டது.
கழி படர் - மிக்க துன்பம்.
துன்ப மேலீட்டால் தன் சொல் - கேட்க மாட்டாத பொருளை நோக்கியும் கூற்று நிகழும்.
இது குருகோடு இரங்கியது குருகு - நீர்ப்பறவை.
``இளங் குருகே`` என்பதை முதலிற் கொள்க.
தே மலி - தேன் நிறைந்த.
படப்பை - தோட்டம்.
தலை, ஏழன் உருபு.
முகடு - மேட்டு நிலம்.
கவடி - பலகை.
இது நண்டின் கால்களுக்கு உவமை.
கற்கடகம்- நண்டு.
சுவடித்தல் - தின்னுதல்.
`சுவடித்து` என்பது, ``சுடிச்சு`` எனப் போலியாயிற்று.
நண்டினை விரும்பித் தின்னுதல் நரிக்கு இயற்கை.
சூல் நரி - கருவுற்ற நரி.
`நரியின் முதுகைச் செந்நெறி கதிர் எழுந்து மோதும் காழி` என்க.
``குலத்தை`` என்பதில் பிறவினை விகுதி தொகுத்தலாக, ``வாழ`` என வந்தது என்றலும் ஆம்.
காழி தமிழ் விரகனுக்கு உரித்து ஆயினமையின், அதனையடுத்த கடலும் உரித் தாயிற்று.
கடல் வாய் - கடலின் அடை கரை.
`அதன் கண் பெருங் குருகு - பெரிய நீர்ப்பறவை.
உகுத்த - இட்ட.
களிறு - ஆண் சுறா.
`பெரிய நீர்ப் பறவை கடலின் அடை கரையில் இட்ட முட்டையை ஆண் சுறா முன் ஏறிக் கவர்கின்றது; (அதனை அப்பறவை நோக்காது சோர்ந்துள்ளது என்க.
) ``பனி சொரிகின்ற இவ் இரவில் நீ துணை யோடன்றித் தனியே போந்து உடல் கூசி, குளிர் உற்று வாயடைத்து உடல் வெளுத்திருக்கின்றாய்.
இவ் இரண்டிற்கும் என்ன காரணம்? சொல்.
(என்னைப் பிரிந்து சென்ற என் தலைவர் இன்னும் வாராதது போல, உங்கள் தலைவரும் உங்களைப் பிரிந்துபோய் இன்னம் வர வில்லையோ?`` என்க.
`பெருங் குருகின் முட்டையைச் சுறாமீனும் விரும்புகின்றது` அதன் பெருமை கூறப்பட்டது.
இயல்பிலே சோர் வுற்றுப் பெருங் குருகு சிறுதுயில் கொள்வதனையும், இயல்பிலே இலங்கு குருகு நிறம் வெளுத்திருப்பதையும் தலைவி தனது கழிபடர் காரணமாக ஆற்றாமையால் விளைந்தனவாகக் கருதினார்.

பண் :

பாடல் எண் : 26

குருகும் பணிலமுங் கூன்நந்துஞ் சேலும்
பெருகும் வயற்காழிப் பிள்ளை யருகந்தர்
முன்கலங்க நட்ட முடைகெழுமுமால் இன்னம்
புன்கலங்கள் வைகைப் புனல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வைகைப் புனல் இன்னம் புன்கலங்கல் தெளியா திருப்பது, முன் காழிப் பிள்ளை அருகந்தர் கலங்க நட்ட முடை கெழுமி` எனக் கூட்டி முடிக்க.
குருகு - நீர்ப்பறவை.
பணிலம் - சங்கு.
கூன் நந்து - கூன் பொருந்திய நத்தை.
கூன், முதுகில் உள்ள ஓட்டின் தோற்றம்.
சேல் - கெண்டை மீன்.
அருக முனிவர்கட்கு, `அருகந்தர்` என்பதும் பெயர்.
முடை கெழுமி - முடை நாற்றம் உடைய இரத்தம் முதலியன பொருந்தி நடப்பட்டது கழுமரம் ஆதலின் அவற்றின்கண் ஏறினாரது உடல் அழிவவாயின்.
நடுதலுக்குச் செயப்படு பொருள் வருவிக்க.
``நட்ட`` என்னும் பெயரெச்சம் காரணப் பொருட்டாய், ``முடை`` என்னும் காரியப் பெயர் கொண்டது, ``உண்ட இளைப்பு`` என்பது போல.

பண் :

பாடல் எண் : 27

புனமா மயில் சாயல் கண்டுமுன்
போகா கிளிபிரியா
இனமான் விழியொக்கும் மென்றுவிட்
டேகா விருநிலத்துக்
கனமா மதிற்காழி ஞானசம்
பந்தன் கடல்மலைவாய்த்
தினைமா திவள்காக்க வெங்கே
விளையுஞ் செழுங்கதிரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இஃது அகப்பொருள் களவியலில் பகற்குறி பற்றித் தலைவியது வேறுபாடு கண்டு ஐயுற்று, `தினைக் காவல் நன்கு போற்றப் படாதது என்னை` என வினவிய செவிலிக்கு, ஐயச்செய்கை மறுத்துப் பிறிது காரணங் கூறித் தெளிவித்த துறையாகச் செய்யப்பட்டது.
இவள் காக்க - இவள் தினைப் புனம் காக்கும் பொழுது.
``(எவ்வளவு கடிந்து ஓட்டினாலும்) மயில்கள் இவள் சாயலைக் கண்டு போகின்றில.
கிளிகள் (இவள் சொற்கேட்டுப்) போகின்றில, மான் இனம், `இவள் கண் நம் கண் ஒக்கும்` என்று இவ்விடம் விட்டுப் போகின்றில.
ஆதலின் தினை செழுங் கதிர் எங்கே விளையும்`` என்க.
கனம் - மேகம்.
`திண்மை` எனினும் ஆம்.
கடல் மலை - கடலை அடுத்துள்ள மலை.
நெய்தலொடு குறிஞ்சி மயங்கிய திணை மயக்கம்.
``எங்கே`` என்பது, ``எப்படி`` என்னும் பொருட்டு.

பண் :

பாடல் எண் : 28

கதிர்மதி நுழையும் படர்சடை மகுடத்
தொருத்தியைக் கரந்த விருத்தனைப் பாடி
முத்தின் சிவிகை முன்னாட் பெற்ற
அத்தன் காழி நாட்டுறை யணங்கோ மொய்த்தெழு
தாமரை யல்லித் தவிசிடை வளர்ந்த
காமரு செல்வக் கனங்குழை யவளோ மீமருத்
தருவளர் விசும்பில் தவநெறி கலக்கும்
உருவளர் கொங்கை யுருப்பசி தானோ
வாருணக் கொம்போ மதனன் கொடியோ
ஆரணி யத்து ளருந்தெய்வ மதுவோ

வண்டமர் குழலும் கெண்டையங் கண்ணும்
வஞ்சி மருங்குங் கிஞ்சுக வாயும்
ஏந்திள முலையுங் காந்தளங் கையும்
ஒவியர் தங்க லொண்மதி காட்டும்
வட்டிகைப் பலகை வான்துகி லிகையால்

இயக்குதற் கரியதோர் உருவுகண் டென்னை
மயக்கவந் துதித்ததோர் வடிவிது தானே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இஃது அகப் பொருள் களவியலில் தலைவன் முதற்கண் கண்ட காட்சிக்குப் பின் `இம்மகள் மானுட மகளோ, தேவ மகளோ` என ஐயுற்ற ஐயத் துறையாகச் செய்யப்பட்டது.
``வண்டமர் குழலும்`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.
கதிர் - நிலாக் கதிர்.
மதி - பிறை.
``ஒருத்தி`` என்றது கங்கா தேவியை.
விருத்தன் - மேலானவன்.
இது, `முதுமை யுடையோன் தன் தேவியறி யாதவாறு வேறொருத்தியை மறைத்து வைத்துள்ளான்` என்பதொரு நயத்தைத் தோற்றுவித்தது.
அத்தன் - தலைவன்.
நாட்டுறை அணங்கு- ஊர்த் தேவதை.
அல்லி - அக இதழ்.
தாமரை மலர் ஆசனத்தில் வளர்ந்த கனங்குழையவள் - இலக்குமி.
மீத் தரு தேவ லோகத்துப் பஞ்ச தருக்கள்.
மரு - நறுமணம் உரு - அழகு உருப்பசி; ஊர்வசி.
முனிவர் களது தவத்தைக் கெடுத்தற்கு இவள் இந்திரனால் அவ்வப் பொழுது ஏவப்படுதல் பற்றி, ``தவ நெறி கலக்கும் உருப்பசி`` என்றார்.
தான், அசை.
வாருணக் கொம்பு - நீரர மகள்.
மதனன் கொடி - மன்மதன் தேவி; இரதி.
இது காதல் கொள்ளாக் காலத்து எழும் எண்ணம் ஆதலின், ``மதனன் கொடியோ`` என ஐயுறுதல், குற்றமாகாதாயிற்று.
ஆரணியத்துள் அருள் செய்வம் - வன தேவதை.
அது, பகுதிப் பொருளே விகுதி.
மருங்கு - இடை.
கிஞ்சுகம் - சிவப்பு.
`குழல் முதலிய உறுப்புக்கள் பலவும், திறம் வாய்ந்த ஓவியரால் தீட்டப் பட்டனபோல உள்ளன` என்றற்கு, ``ஓவியர் தங்கள் ஒண்மதி காட்டும் உருவு`` என்றான்.
வட்டிகைப் பலகை - ஓவியம் தீட்டும் பலகை.
வான் - சிறந்த துகிலிகை - எழுதுகோல்.
`ஓவியர் பலகையில் துகிலி கையால் தங்கள் ஒண்மதி காட்டும் உருவு` எனக் கூட்டுக.
`ஒண்மதி காட்டும் உரு ஒவிய உரு` என்பான், ``இயக்குதற்கு அரியது ஓர் உரு`` என்றான் ``கண்டு`` என்னும் செய்தென் எச்சம் காரணப் பொருட்டாய், `காண்டலாலே` எனப் பொருள் தந்தது.
`காட்டி ஒன்றானே மயங்கிற்று` என்றதனால், `இது வியப்பு` என்பது குறிப்பெச்சமாயிற்று.
`தேவ மகள்` என்றே எண்ணாமல், `மானுட மகளே` என்னும் எண்ணம் உடன் நிகழ்தலின், மயக்கம் தோன்றிற்று.
`ஒரு வடிவாகிய இது அணங்கோ - அருந்தெய்வமாதுவோ` என முடிக்க.
ஐயக் கிளவிகளில் உயர்திணையுமாக விரவி எண்ணுவான் ஆகலின், முதற்கண் `இவள் ஒருத்தி` என்னாது ``ஓர் வடிவு இது`` என அஃறிணையாகக் கூறினான்; என்னை? திணை ஐயத்திற்கு `உருபு` முதலியன ஐயப் புலப் பொதுச் சொற்கள் ஆதலின்.

பண் :

பாடல் எண் : 29

வடிக்கண்ணி யாளையிவ் வான்சுரத்தி னூடே
கடிக்கண்ணி யானோடும் கண்டோம் வடிக்கண்ணி
மாம்பொழில்சேர் வைகை யமண்மலைந்தான் வண்காழிப்
பூம்பொழிலே சேர்ந்திருப்பார் புக்கு
.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இஃது அகப் பொருள்களவியலில் உடன் போக்கின்கண் தலைவியைச் செவிலி பின் தேடிச் செல்லுங்கால் கண்டோரை வினவ, அவர்கள் செவிலிக்குக் கூறிய துறையாகச் செய்யப்பட்டது.
வடிக் கண்ணி - மாவடுவைப் போலும் கண்களையுடையவள்; தலைவி.
கடிக் கண்ணியான் - நறுமணம் கமழும் முடி மாலையை உடையவன்; தலைவன்.
பின் வந்த ``வடிக்கண்ணி`` என்பதை - `கண்ணி வடி` என மாற்றி, `மாலை போலும் வடுக்களையுடைய மாம் பொழில்` எனப் பொழிலுக்கு அடையாக்குக.
`பொழில் சேர் வைகை` என்க.
வைகையில் அமணரை மலைந்தவர் ஞானசம்பந்தர் `பூம் பொழிலே புக்குச் சேர்ந்திருப்பார்` - என உரைக்க.
இதற்கு `அவர்கள்` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க.
எனவே, `மீளுதலே நீர் செய்யத்தக்கது` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 30

குருந்தும் தரளமும் போல்வண்ண
வெண்ணகைக் கொய்மலராள்
பொருந்தும் திரள்புயத் தண்ணல்சம்
பந்தன்பொற் றாமரைக்கா
வருந்தும் திரள்கொங்கை மங்கையை
வாட்டினை வானகத்தே
திருந்துந் திரள்முகில் முந்திவந்
தேறுதிங் கட்கொழுந்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது பாடாண் தினைக் கைக்கிளைத் துறை.
செவிலி கூற்று.
குருந்து - குருத்து ஓலை.
இதுவும் வெண்மை நிறம் பற்றி நகைப் பிற்கு உவமையாயிற்று.
தரளம் முத்து, வண்ணம் - அழகு.
கொய்தல் மலருக்கு அடை.
யாவராலும் விரும்பிக் கொய்யப்படுகின்ற மலர் செந் தாமரை மலர்.
அதில் வீற்றிருப்பவள்.
இலக்குமி.
இங்கு வீர லக்குமியைக் கொள்க.
அமணரை வென்ற வெற்றி பற்றி ஞான சம்பந்தரை வீரலக்குமி பொருந்திய புயம் உடையவராகக் கூறினார்.
தாமரைக் கா - தாமரை மாலையைப் பெறுதற்காக.
`முகில்களுக்கு முந்தி வந்து எழுகின்ற திங்கட் கொழுந்து` என்க.
`கொழுந்து`` என்றத னால் இஃது அந்திப் பிறையாயிற்று.
எனவே, தலைவியின் பொருட்டுச் செவிலி பொழுதுகண்டு இரங்கிக் கூறியதாயிற்று, ``திங்கட் கொழுந்தே! மங்கையை வாட்டினை; (இது விசும்பில் இயங்கும் உனக்கு நன்றோ``) என முடிக்க.
ஈற்றில் வருவித்த குறிப்பெச்சம்.
இப் பாட்டின் இறுதி முதற்பாட்டில் சென்று மண்டலித்தல் காண்க.
ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை முற்றிற்று.

பண் :

பாடல் எண் : 1

திருந்திய சீர்ச்செந்தா மரைத் தடத்துச் சென் றோர்
இருந் தண் இளமேதி பாயப் பொருந்திய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி 1 முதல் 58 முடியச் சீகாழித் தலச் சிறப்பே சொல்லப்படுகின்றது.
முதற் பத்துக் கண்ணிகள் சீகாழியின் வயற் சிறப்பைக் கூறும், இவ் வயல்கள் இடையிடையே சிறு குளங்களைக் கொண்டிருத்தலால், அக்குளங்களின் வளப்பங்களும் ஒன்றுபட்டு வயலின் வளப்பங்க ளாகவே காட்சியளிக்கின்றன.
(கண்ணி-1) தடம் - பெரிய குளம்.
மேதி- எருமை.

பண் :

பாடல் எண் : 2

புள் இரியப் பொங்கு கயல்வெருவப் பூங்குவளைக்
கள் இரியச் செங்கழுநீர் கால்சிதையத் துள்ளிக்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(கண்ணி -2) பொருந்தியபுள் - நீரிலே மூழ்கி வாழும் பறவைகள்

பண் :

பாடல் எண் : 3

குருகிரியக் கூன்இறவம் பாயக் கெளிறு
முருகுவிரி பொய்மையின்கண் மூழ்க வெருவுற்றக்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(கண்ணி - 3) குருகு - நீர்க் கரையில் வாழும் பறவைகள்.
இரிதல் - அஞ்சி நீங்குதல் - கால் - பூக்களின் காம்பு.
இ - இறால் மீன்.
இஃது `இறவு` என்று ஆகிப் பின் அம்முப் பெற்றது, கெளிறு - ஒருவகை மீன், `களிறு` என்பது பாடம் அன்று.
முருகு - தேன்; நறுமணமுமாம்.
`முருகோடு விரி` என மூன்றன் உருபு விரிக்க.
விரிதலுக்கு `மலர்கள்` என்னும் எழுவாய் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 4

கோட்டகத்துப் பாய்வாளை கண்டலவன் கூசிப் போய்த்
தோட்டகத்த செந்நெல் துறைஅடையச் சேட்டகத்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(கண்ணி-4) கோட்டகம் - கரை; (குளக் கரை) அலவன் - நண்டு.
தோடு - இலை.
`தோட்டின் அகத்திலே உள்ள நெல்.
நெல் - நெற்கதிர்.
`அலவன் போய் நெல் துறையை அடைய` என்க.
சேடு - அழகு.
அகம் - உள்ளிடம்.
`அழகை அகத்திலே உடைய காவி` என்க.

பண் :

பாடல் எண் : 5

காவி முகம்மலரக் கார்நீலம் கண்படுப்ப
ஆவிக்கண் நெய்தல் அலமர மேவிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(கண்ணி - 5) காவி, இங்குச் செந்நிறம்.
இஃது பெயராய்ச் செந்தாமரை மலரைக் குறித்தது.
கார் நீலம் - கரிய நீலோற்பவ மலர்.
படுப்ப - பொருத்துவித்து.
செந்தாமரை மலர் முகம் போல விளங்கு வதையும், நீலோற்பவ மலர் அம்மலரிற் பொருந்துதலையும், ``முகம் மலர்`` எனவும், ``கண்ணைப் பொருத்துவிக்க`` எனவும் கூறிய ஏற்றுறை (இலக்கணை) வழக்கு.
ஆவி - வாவி; சிறுகுளம்.

பண் :

பாடல் எண் : 6

அன்னம் துயில்இழப்ப அம்சிறைசேர் வண்டினங்கள்
துன்னும் துணைஇழப்பச் சூழ் கிடங்கின் மன்னிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(கண்ணி -6) கிடங்கு - வயலுள் அகழப்பட்ட வாய்க்கால்.

பண் :

பாடல் எண் : 7

வள்ளை நகைகாட்ட வண்குமுதல் வாய்காட்ட
தெள்ளுபுனற் பங்கயங்கள் தேன்காட்ட மெள்ள

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(கண்ணி - 7) வள்ளை - வள்ளைத் தண்டு.
இது நீரில் மிதப்பது.
இது காதிற்கு உவமையாக வருமாயினும், ஆம்பல் மலரோடு சேர்ந்தமையால் நகைப்பிற்கு உவமையாயிற்று.
``தேன் காட்ட`` என்பதில் ``காட்ட`` என்பதில் ``காட்ட`` என்பது `சொரிய` எனப் பொருள்.
தந்தமையின், சொற்பின் வருநிலை அணியாயிற்று.

பண் :

பாடல் எண் : 8

நிலவு மலணையினின்றிழிந்த சங்கம்
இலகுகதிர் நித்திலங்கள் ஈன உலவிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(கண்ணி-8) மல் - வளம்.
ஐ, சாரியை.
பழனம் - பண்ணை.
வார் பிரசம் - ஒழுகுகின்ற சாறு.
இது வாழை, கரும்பு இவற்றினின்றும் ஒழுகுவது.
ஒல்லை - வேகமாக.
வரம்பு - வரப்பு.
`பிரசம்வரம்புமீது அழிய இடறி ஓடிப் போய்ப்புல்லிய அடை` மலிக.
புல்லிய - பொருந்திய

பண் :

பாடல் எண் : 9

மல்லைப் பழனத்து வார்பிரசம் மீதழிய
ஒல்லை வரம்பிடறி ஓடிப்போய்ப் புல்லிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 10

பாசடைய செந்நெற் படர் ஒளியால் பல்கதிரோன்
தேசடைய ஓங்கும் செறுவுகளும் மாசில்நீர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(கண்ணி - 10) பசுமை + அடை = பாசடை.
பச்சையிலை, அச் செந்நெல் - மேற் கூறப்பட்ட செந்நெல், பல் கதிரோன், சூரியன், தேசு - ஒளி.
செறு - வயல், இஃது ஈற்றில் உகரம் பெற்றது.
செந்தாமரை மலர்களையுடைய பெரிய குளத்தில் இளமை வாய்ந்த எருமை சென்று பாய்ந்தமையால் அக்குளத்தின் நீரிலே வாழ்ந்திருந்த பறவைகளும், கரையிலே இருந்த பறவைகளும் அஞ்சி ஓடின.
கயல்மீன்கள் அச்சம் கொண்டும் போக வேறு வழியின்றி இருந்தன.
குவளை மலர் சிதைதலால் அதனின்றும் தேன் ஒழுகியது.
செங்கழுநீர்ப் பூத் தன் காம்பு வேறாக வேறுபட்டது.
இவை எருமை பாய்ந்தமையால் ஒருங்கு நிகழ்ந்தவை.
இனி, அவ் எருமை பாய்தலால் இறால் மீன்கள் அங்கும் இங்கும் பாய்ந்தன.
கெளிற்று மீன்கள் மேல் எழாது நீர்க்கு அடியிலே இருந்தன.
இயல்பிலே மிக மேலே துள்ளுவதாகிய வாளை மீன் துள்ளிக் கரையிலே பாய்ந்தது.
இவை மேற்கூறிய காரணத்தால் தனித்தனி நிகழ்ந்தவை.
வாளைமீன் கரையிலே பாய்ந்ததைக் கண்டு அங்கிருந்த நண்டுகள் மனம் வருந்தி நெற்பயிர் உள்ள இடத்தை அடைந்தன.
வாளை மீன் தங்கள் மேல் பாயாது கரைமேல் பாய்ந்ததைக் கண்டு அச்சம் நீங்கிச் செந்தாமரை முகம் மலர்ந்தது; நீலோற்பலம் கண் விழிந் திருந்தது.
நெய்தல் ஒன்றும் விளங்காமல் சுற்றும், முற்றும் பார்த்தது.
ஆயினும் வாளைமீன் கரையிற் பாய்ந்த அதிர்ச்சியால் அன்னம் துயில் ஒழிந்தது.
ஆண் வண்டு பெண் வண்டினை விட்டு ஓடிற்று.
இவைகளையெல்லாம் கண்டு குமுதம் சிவந்த வாயின்கண் பற்கள் தோன்ற நகைத்தது.
இவையெல்லாம் வாளை கரையிற் பாய்ந்தமையால் செயற்கையாக நிகழ்ந்தன.
இந்நிலையில் இயற்கையாகச் செந்தாமரை மலராகிய படுக்கையில் படுத்திருந்து, கரு உயிர்க்கும் வேதனையால் கீழே இறங்கி முத்தை ஈன்றது.
இங்ஙனம் உள்ள பொழுது வாழைப் பழச் சாறும் கரும்பின் சாறும் தாமாகவே வழிந்து ஓடி, வயல் வரப்புக்களை அழித்துச் சென்று வயல்களில் உள்ள தாமரையிலை மேல் தேங்கி நிற்கின்றன.
அத்தேனின்மேல் செந்நெற்களின் ஒலி வீழ்ந்தமையால் தாமரையிலை சூரியனை போல விளங்கிற்று.
இத்தகைய வளப்பங்களையுடைய காழி நகரைச் சூழ்ந்த வயல்கள்.

பண் :

பாடல் எண் : 11

நித்திலத்திற் சாயும் நிகழ்மரக தத் தோலும்
தொத்தொளி செம்பொன் தொழிற்பரிய மொய்த்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 11,12, 13 கமுக மர வருணனை:- கமுகங்காய் முற்றாது இளம் பிஞ்சாய் இருக்கும் பொழுது முத்துப் போல விளங்கும்.
இங்கு, ``காய்`` என்றது, பிஞ்சினை.
நீர், நித்திலத்திற்கு அடை.
நித்திலக் காய் உவமத் தொகை.
இன், வேண்டா வழிச் சாரியை.
மரகதம் போலும் தோல், கமுக மரத்தின் தோல்.
முற்றிப் பழுத்த கமுகங்காய் பவளம்போலச் சிவந்திருக்கும்.
தொத்து ஒலி - திரளாகிய ஒளியை உடைய (பவளம்), செம்பொன் தொழில் பரிய - செவ்விய பொன்னின் வேலைப் பாட்டோடு கூடிய பருத்த (பவளம்).
செவ்வி - அழகு.
பாங்கு - உரிய இடம்.
கொடி திவள மருங்கில் சேர்த்தி - கொடிகளை அசையும் படி நடுவிடத்திலே சேர்த்துக் கொண்டு.
துவளாமை - கொடிகள் துவளாதபடி.
பட்டு ஆடை - பட்டுப் பூச்சிகள் ஆக்கிய பட்டாகிய ஆடை.
``தோடு, குழை`` இவை அணிகல வகைகளையும், பூவிதழ், இளந்தளிர் என்பவற்றையும் குறித்துச் சிலேடையாய் நின்றன.
`அணைந்த இளங்கமுகு, கண்ணார் இளங்கமுகு` என நேரே ஒரு பொருளும், `தோடும், குழையும் அணிந்து, அவைகளில் வந்து பொருந்திய கண்களையுடைய மகளிர்போலும் இளங்கமுகு` மற்றொரு பொருளும் கொள்க.
முதற்பொருளில், `கண் ஆர் - கண்ணுக்கு நிறைந்த` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 12

பவளத்தின் செவ்வியும் பாங்கணைய ஓங்கித்
திவளக் கொடிமருங்கிற் சேர்த்தித் துவளாமைப்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 11,12, 13 கமுக மர வருணனை:- கமுகங்காய் முற்றாது இளம் பிஞ்சாய் இருக்கும் பொழுது முத்துப் போல விளங்கும்.
இங்கு, ``காய்`` என்றது, பிஞ்சினை.
நீர், நித்திலத்திற்கு அடை.
நித்திலக் காய் உவமத் தொகை.
இன், வேண்டா வழிச் சாரியை.
மரகதம் போலும் தோல், கமுக மரத்தின் தோல்.
முற்றிப் பழுத்த கமுகங்காய் பவளம்போலச் சிவந்திருக்கும்.
தொத்து ஒலி - திரளாகிய ஒளியை உடைய (பவளம்), செம்பொன் தொழில் பரிய - செவ்விய பொன்னின் வேலைப் பாட்டோடு கூடிய பருத்த (பவளம்).
செவ்வி - அழகு.
பாங்கு - உரிய இடம்.
கொடி திவள மருங்கில் சேர்த்தி - கொடிகளை அசையும் படி நடுவிடத்திலே சேர்த்துக் கொண்டு.
துவளாமை - கொடிகள் துவளாதபடி.
பட்டு ஆடை - பட்டுப் பூச்சிகள் ஆக்கிய பட்டாகிய ஆடை.
``தோடு, குழை`` இவை அணிகல வகைகளையும், பூவிதழ், இளந்தளிர் என்பவற்றையும் குறித்துச் சிலேடையாய் நின்றன.
`அணைந்த இளங்கமுகு, கண்ணார் இளங்கமுகு` என நேரே ஒரு பொருளும், `தோடும், குழையும் அணிந்து, அவைகளில் வந்து பொருந்திய கண்களையுடைய மகளிர்போலும் இளங்கமுகு` மற்றொரு பொருளும் கொள்க.
முதற்பொருளில், `கண் ஆர் - கண்ணுக்கு நிறைந்த` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 13

பட்டாடை கொண்டுடுத்துப் பைந்தோ டிலங்குகுழை
இட்டமைந்த கண்ணார் இளங்கமுகும் விட்டொளிசேர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 11,12, 13 கமுக மர வருணனை:- கமுகங்காய் முற்றாது இளம் பிஞ்சாய் இருக்கும் பொழுது முத்துப் போல விளங்கும்.
இங்கு, ``காய்`` என்றது, பிஞ்சினை.
நீர், நித்திலத்திற்கு அடை.
நித்திலக் காய் உவமத் தொகை.
இன், வேண்டா வழிச் சாரியை.
மரகதம் போலும் தோல், கமுக மரத்தின் தோல்.
முற்றிப் பழுத்த கமுகங்காய் பவளம்போலச் சிவந்திருக்கும்.
தொத்து ஒலி - திரளாகிய ஒளியை உடைய (பவளம்), செம்பொன் தொழில் பரிய - செவ்விய பொன்னின் வேலைப் பாட்டோடு கூடிய பருத்த (பவளம்).
செவ்வி - அழகு.
பாங்கு - உரிய இடம்.
கொடி திவள மருங்கில் சேர்த்தி - கொடிகளை அசையும் படி நடுவிடத்திலே சேர்த்துக் கொண்டு.
துவளாமை - கொடிகள் துவளாதபடி.
பட்டு ஆடை - பட்டுப் பூச்சிகள் ஆக்கிய பட்டாகிய ஆடை.
``தோடு, குழை`` இவை அணிகல வகைகளையும், பூவிதழ், இளந்தளிர் என்பவற்றையும் குறித்துச் சிலேடையாய் நின்றன.
`அணைந்த இளங்கமுகு, கண்ணார் இளங்கமுகு` என நேரே ஒரு பொருளும், `தோடும், குழையும் அணிந்து, அவைகளில் வந்து பொருந்திய கண்களையுடைய மகளிர்போலும் இளங்கமுகு` மற்றொரு பொருளும் கொள்க.
முதற்பொருளில், `கண் ஆர் - கண்ணுக்கு நிறைந்த` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 14

கண்கள் அழல் சிதறிக் காய்சினத்த வாய்மதத்துத்
தண்டலையின் நீழல் தறிஅணைந்து கொண்ட

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மாமர வருணனை:- மாமரம் யானையோடு உவமிக்கப்படுகின்றது.
(கண்ணி - 15) ``கொம்பு வளைத்து ஏந்து மலை`` - என்றது, `யானை` - என்றபடி.
`அந்த மலையும் மர வடிவத்தைக் கொண்டது போல விளங்குகின்றது மாமரம்` என்பதாம்.
``கண்கள்`` என்பதை ``விட்டொளி சேர்`` என்பதற்கு முன்னே கண்களில் தீப்பொறி பறக்கும்படி மிக்க சினங்கொள்ளுதல் யானைக்கு இயல்பு.
மாமரத்திலும் அதன் இளந்தளிர்கள் தீப்பொறிகள் போலக் காணப்படுகின்றது.
தீப்பொறி பறத்தலால் மதங்கொண்ட தோற்றம் உள்ளது.
தண்டலை - சோலை.
(கண்ணி - 14) தறி அணைதலும் யானைக்கு இயல்பு.
சோலை நிழல் கட்டும் கூடம் போலவும், மரங்கள் கட்டுத் தறி போலவும் உள்ளன.
`மாமரம் யானைப் போலத் தோன்று தல் பசுமையான இலை தழைத்தலால்` என்பது தோன்ற ``இலை நெருங்கு சூதம்`` என்றார்.
(கண்ணி -16) சூதம் - மாமரம்.
தோற்றத்தால் யானையை ஒத்திருப்பினும் பலர் சென்று தங்கும் நிழல் உடைமையால் (கண்ணி- 15) ``கொலை புரியா நீர்மையா`` எனப்பட்டன.
எனவே, ``இவை சில அதிசய யானைகள்`` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 15

கொலைபுரியா நீர்மையவாய்க் கொம்புவளைத் தேந்தி
மலையும் மரவடிவும் கொண்டாங் கிலை நெருங்கு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மாமர வருணனை:- மாமரம் யானையோடு உவமிக்கப்படுகின்றது.
(கண்ணி - 15) ``கொம்பு வளைத்து ஏந்து மலை`` - என்றது, `யானை` - என்றபடி.
`அந்த மலையும் மர வடிவத்தைக் கொண்டது போல விளங்குகின்றது மாமரம்` என்பதாம்.
``கண்கள்`` என்பதை ``விட்டொளி சேர்`` என்பதற்கு முன்னே கண்களில் தீப்பொறி பறக்கும்படி மிக்க சினங்கொள்ளுதல் யானைக்கு இயல்பு.
மாமரத்திலும் அதன் இளந்தளிர்கள் தீப்பொறிகள் போலக் காணப்படுகின்றது.
தீப்பொறி பறத்தலால் மதங்கொண்ட தோற்றம் உள்ளது.
தண்டலை - சோலை.
(கண்ணி - 14) தறி அணைதலும் யானைக்கு இயல்பு.
சோலை நிழல் கட்டும் கூடம் போலவும், மரங்கள் கட்டுத் தறி போலவும் உள்ளன.
`மாமரம் யானைப் போலத் தோன்று தல் பசுமையான இலை தழைத்தலால்` என்பது தோன்ற ``இலை நெருங்கு சூதம்`` என்றார்.
(கண்ணி -16) சூதம் - மாமரம்.
தோற்றத்தால் யானையை ஒத்திருப்பினும் பலர் சென்று தங்கும் நிழல் உடைமையால் (கண்ணி- 15) ``கொலை புரியா நீர்மையா`` எனப்பட்டன.
எனவே, ``இவை சில அதிசய யானைகள்`` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 16

சூதத் திரளும் கொகுகனிக ளான்நிவந்த
மேதகுசீர்த் தெங்கின் வியன்பொழிலும் போதுற்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(கண்ணி -16) தென்னஞ் சோலையின் சிறப்பு;- நிவந்த - உயர்ந்த.
``கனிகளான்`` என்னும் ஆன் உருபு ஒடு உருபின் பொருளில் வந்தது.
மேதகு - மேன்மை தக்கிருக்கின்றன.
வியன் - அகன்ற.

பண் :

பாடல் எண் : 17

றினம் ஒருங்கு செவ்வியவாய் இன்தேன் ததும்பும்
கனி நெருங்கு திண்கதலிக் காடும் நனிவிளங்கு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 17 வாழைத் தோட்டச் சிறப்பு: போது - பூ: வாழைப் பூ.
இனம் ஒருங்கு செவ்விய ஆய் - தன் இனம் முழுதும் குலையை யீனும் பருவம் உடையவாய்.
``செவ்விய`` என்னும் பன்மை இனத்துக்கண் உள்ள பொருள்நோக்கி வந்தது.
கதலி - வாழை.

பண் :

பாடல் எண் : 18

நாற்றத்தால் எண்டிசையும் வந்து நலம் சிறப்ப
ஊற்று மடுத்த உயர்பலவும் மாற்றமரு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 18 பலாத் தோப்பின் சிறப்பு:- கனி விளங்கு நாற்றம் - பழத்தினின்றும் வெளிப்படுகின்ற நறுமணம்.
ஊற்று - பலாச் சுளையின் சாற்றின் சுரப்பு.
மடுத்த - நிலத்தை மூடிய.
பலவு - பலா மரம்.

பண் :

பாடல் எண் : 19

மஞ்சள் எழில்வனமும் மாதுளையின் வார்பொழிலும்
இஞ்சி இளங்காவின் ஈட்டமும் எஞ்சாத

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 19 மஞ்சள், மாதுளை, இஞ்சி - இத்தோட்டங்களின் சிறப்பு:- மாற்றம் அரு - சொல்லுதற்கு அரிய.
இளங் கா - இளமரக் கா.
ஈட்டம் - தொகுதி.

பண் :

பாடல் எண் : 20

கூந்தற் கமுகும் குளிர்பாட லத் தெழிலும்
வாய்ந்தசீர்ச் சண்பகத்தின் வண்காடும் ஏந்தெழில்ஆர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 20 கமுகுகளில் ஒருவகை கூந்தற் கமுகு; `கூந்தற் பனை` என்பதுபோல.
இளங் காவைக் கூறியபின், பெருமரச் சோலை சொல்லப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 21

மாதவியும் புன்னையும் மன்நும் மலர்க்குரவும்
கேதையும் எங்கும் கெழீஇப் போதின்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(கண்ணி - 21, 22) இதில் பாதிரி, (பாடலம்) சண்பகம், மாதவி, (குருந்து) புன்னை, குரா இம்மரங்களுடன் தாழையும் சொல்லப்பட்டது.
கேதகை - தாழை.
இது `கேதை` என மருவிற்று.
கெழீஇ - பொருந்தி.
இவைகளைத் திணை மயக்கமாகக் கொள்க.
போதின் - உரிய நேரத்தில்.
வார் பொழில் - நீண்ட சோலை; பெருமரச் சோலை.
மாடு - பக்கம்.

பண் :

பாடல் எண் : 22

இளந்தென்றல் வந்தசைப்ப எண்டிசையும் வாசம்
வளந்துன்று வார்பொழிலின் மாடே கிளர்ந்தெங்கும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(கண்ணி - 21, 22) இதில் பாதிரி, (பாடலம்) சண்பகம், மாதவி, (குருந்து) புன்னை, குரா இம்மரங்களுடன் தாழையும் சொல்லப்பட்டது.
கேதகை - தாழை.
இது `கேதை` என மருவிற்று.
கெழீஇ - பொருந்தி.
இவைகளைத் திணை மயக்கமாகக் கொள்க.
போதின் - உரிய நேரத்தில்.
வார் பொழில் - நீண்ட சோலை; பெருமரச் சோலை.
மாடு - பக்கம்.

பண் :

பாடல் எண் : 23

ஆலை ஒலியும் அரிவார் குரல்ஒலியும்
சோலைக் கிளிமிழற்றும் சொல்லொலியும் ஆலும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 23,24 பல வகை ஒலி யெழுதல் கூறப்படுகின்றது.
ஆலை - கரும்பாலை.
அரிவார் - நெல் அரிபவர்.
ஆலும் - பறந்து அசைகின்ற.
அறு பதங்கள் - ஆறு கால்களையுடைய வண்டுகள்.
ஆன்று - நிறைந்து.
பொலிவு - விளக்கம்.
வேலை - கடல்.
``வேலை ஒலிப்ப`` என்பது, `வேலை போல ஒலிப்ப` என வினை யுவமத் தொகை.
வெறி - நறுமணம்.

பண் :

பாடல் எண் : 24

அறுபதங்கள் ஆர்ப்பொலியும் ஆன்றபொலி வெய்தி
உறுதிரைநீர் வேலை ஒலிப்ப வெறிகமழும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 23,24 பல வகை ஒலி யெழுதல் கூறப்படுகின்றது.
ஆலை - கரும்பாலை.
அரிவார் - நெல் அரிபவர்.
ஆலும் - பறந்து அசைகின்ற.
அறு பதங்கள் - ஆறு கால்களையுடைய வண்டுகள்.
ஆன்று - நிறைந்து.
பொலிவு - விளக்கம்.
வேலை - கடல்.
``வேலை ஒலிப்ப`` என்பது, `வேலை போல ஒலிப்ப` என வினை யுவமத் தொகை.
வெறி - நறுமணம்.

பண் :

பாடல் எண் : 25

நந்தா வனத்தியல்பும் நற்றவத் தோர் சார்விடமும்
அந்தமில் சீரார் அழகினால் முந்திப்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 25 புற நகர்ச் சிறப்பு:- `நந்த வனம்` என்பது நீட்டல் பெற்றது.
நந்த வனம் - பூந்தோட்டம்.
நற்றவத் தோர் சார்வு இடம் - தபோ வனம்.
அந்தம் - முடிவு சீர் ஆர் அழகு - சிறப்பு நிறைந்த அழகு.

பண் :

பாடல் எண் : 26

புகழ்வாரும் தன்மையதாய்ப் பூதலத்துள் ஓங்கி
நிகழ்கிடங்கும் சூழ்கிடப்ப நேரே திகழ

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(கண்ணி-26) வார்தல் - நீளுதல்.
தன்மையஆ - (நந்த வனமும், தபோ வனமும்) இத்தன்மையால் இருக்க.
``பூதலத்துள் ஓங்கி`` என்பதை, ``திகழ`` என்பதன் பின்னே கூட்டுக.
கிடங்கு - அகழி.

பண் :

பாடல் எண் : 27

முளைநிரைத்து மூரிச் சிறைவகுத்து மொய்த்த
புளகத்தின் பாம்புரிசூழ் போகி வளர

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 27-30 மதிலின் சிறப்பு:- முளை - வில்.
முதலியவை களை மாட்டி வைத்தற்குச் சுவரில் அடிக்கப்படும் முளைகள்.
இவை மதிலின் உட்புறத்தே இருக்கும்.
நிரைத்து - வரிசையாக அடித்து.
மூரி- பெரிய.
சிறை - சுவர்களை ஒட்டிச் சிறகுபோல உள்ள உறுப்பு.
இவை பொருள்களை வைக்கப் பயன்படுவதுடன் உயர ஏறி நிற்கவும் பயன்படும்.
பாம்பு உரி - பாம்புத் தோல்.
இது, காண்பார்க்கு அச்சம் உண்டாகத் தீட்டப்படும் ஓவியம்.
போக்கி - சுற்றிலும் எழுதி.
`பதணம், நாஞ்சில்` என்பன மதிலின் உறுப்பு வகைகள்.
அட்டாலை - வீரர்கள் இருக்கும் மண்டபம்.
தோமரம் - ஒருவகைக் கதாயுதம்.
தொல்லை - பழமை.
பொறி - பகைவர்மேல் வீசப்படும் சில சிறு யந்திரங்கள்.
வீசு யந்திரம்- தாமே பிற யந்திரங்களை எடுத்து வீசும் யந்திரம்.
இவை யெல்லாம் பாதுகாவலுக்கு மதிலின்கண் அமைக்கப்படும்.
வீசு + யந்திரம் - வீ சியந்திரம்; இகரம், குற்றிய லிகம் கா மரம் - காவடித் தண்டு.
இவை வேண்டும் பொருள்களைத் தாங்கி நிற்கும்.
ஏ - அம்பு.
ஏப்புழை அம்புக் கட்டுக்களை வைக்கும் மாடங்கள்.
கைகலத்தல் - ஒன்றோடு ஒன்று கலத்தல்.
கலந்து - கலக்கப் பெற்று.
மீ - மேல் இடம்.
வெங் கதிரோன் - சூரியன்.
விலங்கு - விலகிப் போகின்ற.
அம் - அழகு - கனகம் - பொன்.
இஞ்சி - மதில்.
அணி - அழகு.

பண் :

பாடல் எண் : 28

இரும்பதணம் சேர இருத்தி எழில் நாஞ்சில்
மருங்கணைய அட்டாலை யிட்டுப் பொருந்தியசீர்த்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 27-30 மதிலின் சிறப்பு:- முளை - வில்.
முதலியவை களை மாட்டி வைத்தற்குச் சுவரில் அடிக்கப்படும் முளைகள்.
இவை மதிலின் உட்புறத்தே இருக்கும்.
நிரைத்து - வரிசையாக அடித்து.
மூரி- பெரிய.
சிறை - சுவர்களை ஒட்டிச் சிறகுபோல உள்ள உறுப்பு.
இவை பொருள்களை வைக்கப் பயன்படுவதுடன் உயர ஏறி நிற்கவும் பயன்படும்.
பாம்பு உரி - பாம்புத் தோல்.
இது, காண்பார்க்கு அச்சம் உண்டாகத் தீட்டப்படும் ஓவியம்.
போக்கி - சுற்றிலும் எழுதி.
`பதணம், நாஞ்சில்` என்பன மதிலின் உறுப்பு வகைகள்.
அட்டாலை - வீரர்கள் இருக்கும் மண்டபம்.
தோமரம் - ஒருவகைக் கதாயுதம்.
தொல்லை - பழமை.
பொறி - பகைவர்மேல் வீசப்படும் சில சிறு யந்திரங்கள்.
வீசு யந்திரம்- தாமே பிற யந்திரங்களை எடுத்து வீசும் யந்திரம்.
இவை யெல்லாம் பாதுகாவலுக்கு மதிலின்கண் அமைக்கப்படும்.
வீசு + யந்திரம் - வீ சியந்திரம்; இகரம், குற்றிய லிகம் கா மரம் - காவடித் தண்டு.
இவை வேண்டும் பொருள்களைத் தாங்கி நிற்கும்.
ஏ - அம்பு.
ஏப்புழை அம்புக் கட்டுக்களை வைக்கும் மாடங்கள்.
கைகலத்தல் - ஒன்றோடு ஒன்று கலத்தல்.
கலந்து - கலக்கப் பெற்று.
மீ - மேல் இடம்.
வெங் கதிரோன் - சூரியன்.
விலங்கு - விலகிப் போகின்ற.
அம் - அழகு - கனகம் - பொன்.
இஞ்சி - மதில்.
அணி - அழகு.

பண் :

பாடல் எண் : 29

தோமரமும் தொல்லைப் பொறிவீசி யந்திரமும்
காமரமும் ஏப்புழையும் கைகலந்து மீ மருவும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 27-30 மதிலின் சிறப்பு:- முளை - வில்.
முதலியவை களை மாட்டி வைத்தற்குச் சுவரில் அடிக்கப்படும் முளைகள்.
இவை மதிலின் உட்புறத்தே இருக்கும்.
நிரைத்து - வரிசையாக அடித்து.
மூரி- பெரிய.
சிறை - சுவர்களை ஒட்டிச் சிறகுபோல உள்ள உறுப்பு.
இவை பொருள்களை வைக்கப் பயன்படுவதுடன் உயர ஏறி நிற்கவும் பயன்படும்.
பாம்பு உரி - பாம்புத் தோல்.
இது, காண்பார்க்கு அச்சம் உண்டாகத் தீட்டப்படும் ஓவியம்.
போக்கி - சுற்றிலும் எழுதி.
`பதணம், நாஞ்சில்` என்பன மதிலின் உறுப்பு வகைகள்.
அட்டாலை - வீரர்கள் இருக்கும் மண்டபம்.
தோமரம் - ஒருவகைக் கதாயுதம்.
தொல்லை - பழமை.
பொறி - பகைவர்மேல் வீசப்படும் சில சிறு யந்திரங்கள்.
வீசு யந்திரம்- தாமே பிற யந்திரங்களை எடுத்து வீசும் யந்திரம்.
இவை யெல்லாம் பாதுகாவலுக்கு மதிலின்கண் அமைக்கப்படும்.
வீசு + யந்திரம் - வீ சியந்திரம்; இகரம், குற்றிய லிகம் கா மரம் - காவடித் தண்டு.
இவை வேண்டும் பொருள்களைத் தாங்கி நிற்கும்.
ஏ - அம்பு.
ஏப்புழை அம்புக் கட்டுக்களை வைக்கும் மாடங்கள்.
கைகலத்தல் - ஒன்றோடு ஒன்று கலத்தல்.
கலந்து - கலக்கப் பெற்று.
மீ - மேல் இடம்.
வெங் கதிரோன் - சூரியன்.
விலங்கு - விலகிப் போகின்ற.
அம் - அழகு - கனகம் - பொன்.
இஞ்சி - மதில்.
அணி - அழகு.

பண் :

பாடல் எண் : 30

வெங்கதிரோன் தேர்விலங்க மிக் குயர்ந்த மேருப் போன்று
அங்கனகத் திஞ்சி அணிபெற்றுப் பொங்கிகொளிசேர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 27-30 மதிலின் சிறப்பு:- முளை - வில்.
முதலியவை களை மாட்டி வைத்தற்குச் சுவரில் அடிக்கப்படும் முளைகள்.
இவை மதிலின் உட்புறத்தே இருக்கும்.
நிரைத்து - வரிசையாக அடித்து.
மூரி- பெரிய.
சிறை - சுவர்களை ஒட்டிச் சிறகுபோல உள்ள உறுப்பு.
இவை பொருள்களை வைக்கப் பயன்படுவதுடன் உயர ஏறி நிற்கவும் பயன்படும்.
பாம்பு உரி - பாம்புத் தோல்.
இது, காண்பார்க்கு அச்சம் உண்டாகத் தீட்டப்படும் ஓவியம்.
போக்கி - சுற்றிலும் எழுதி.
`பதணம், நாஞ்சில்` என்பன மதிலின் உறுப்பு வகைகள்.
அட்டாலை - வீரர்கள் இருக்கும் மண்டபம்.
தோமரம் - ஒருவகைக் கதாயுதம்.
தொல்லை - பழமை.
பொறி - பகைவர்மேல் வீசப்படும் சில சிறு யந்திரங்கள்.
வீசு யந்திரம்- தாமே பிற யந்திரங்களை எடுத்து வீசும் யந்திரம்.
இவை யெல்லாம் பாதுகாவலுக்கு மதிலின்கண் அமைக்கப்படும்.
வீசு + யந்திரம் - வீ சியந்திரம்; இகரம், குற்றிய லிகம் கா மரம் - காவடித் தண்டு.
இவை வேண்டும் பொருள்களைத் தாங்கி நிற்கும்.
ஏ - அம்பு.
ஏப்புழை அம்புக் கட்டுக்களை வைக்கும் மாடங்கள்.
கைகலத்தல் - ஒன்றோடு ஒன்று கலத்தல்.
கலந்து - கலக்கப் பெற்று.
மீ - மேல் இடம்.
வெங் கதிரோன் - சூரியன்.
விலங்கு - விலகிப் போகின்ற.
அம் - அழகு - கனகம் - பொன்.
இஞ்சி - மதில்.
அணி - அழகு.

பண் :

பாடல் எண் : 31

மாளிகையும் மன்னியசீர் மண்டபமும் ஒண்தலத்த
சூளிகையும் துற்றெழுந்த தெற்றிகளும் வாளொளிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 31-34 நகரத்தில் உள்ள இடங்களின் சிறப்பு.
சூளிகை - மேல் மாடத்து நெற்றி.
இது சிறிதே நிற்றற்கும், உலவுதற்கும் பயன்படும்.
துற்று எழுந்த தெற்றிகள் - (இட்டிகையும், செங்கல்லும்) நெருங்குதலால் எழுந்த திண்ணைகள்.
கபோதகம் - மாடப் புறாக்கள் உலாவும் வகையில் அமைந்த மேல் உத்தரம்.
வீடு - பெருமை.
உருவு - அழகு.
அம்பலம் - சபை.
செய்குன்று - கட்டு மலை.
இஃது ஏறி விளையாடப் பயன்படும்.
இவை தெருக்களின் கோடியில் நின்று தெருக்களைப் பிரிப்பதால், ``தெருவு வகுத்த செங்குன்று`` சித்திரக் கா - ஆங்காங்குப் பாவைகள் நிற்கும் சோலை.
செழும் பொழில் - பாவைகள் இன்றி மரங்கள் மட்டுமே காய்களோடும் கனிக ளோடும் குளிர்ந்த நிழலையுடைய சோலை.
வாவிகள் - சிறு குளங்கள்.
நிலைக்களம் - அமர்விடம்.
துன்னி - நெருங்கி.
சோதி, மலருக்கு அடை.
மலர் மடந்தை - இலக்குமி வாய்மைத்து - உண்மையாக உடையது.
என்றது நகரத்தை (சீகாழியை)

பண் :

பாடல் எண் : 32

நாடக சாலையும் நன்பொற் கபோதகம் சேர்
பீடமைத்த மாடத்தின் பெற்றியும் கேடில்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 31-34 நகரத்தில் உள்ள இடங்களின் சிறப்பு.
சூளிகை - மேல் மாடத்து நெற்றி.
இது சிறிதே நிற்றற்கும், உலவுதற்கும் பயன்படும்.
துற்று எழுந்த தெற்றிகள் - (இட்டிகையும், செங்கல்லும்) நெருங்குதலால் எழுந்த திண்ணைகள்.
கபோதகம் - மாடப் புறாக்கள் உலாவும் வகையில் அமைந்த மேல் உத்தரம்.
வீடு - பெருமை.
உருவு - அழகு.
அம்பலம் - சபை.
செய்குன்று - கட்டு மலை.
இஃது ஏறி விளையாடப் பயன்படும்.
இவை தெருக்களின் கோடியில் நின்று தெருக்களைப் பிரிப்பதால், ``தெருவு வகுத்த செங்குன்று`` சித்திரக் கா - ஆங்காங்குப் பாவைகள் நிற்கும் சோலை.
செழும் பொழில் - பாவைகள் இன்றி மரங்கள் மட்டுமே காய்களோடும் கனிக ளோடும் குளிர்ந்த நிழலையுடைய சோலை.
வாவிகள் - சிறு குளங்கள்.
நிலைக்களம் - அமர்விடம்.
துன்னி - நெருங்கி.
சோதி, மலருக்கு அடை.
மலர் மடந்தை - இலக்குமி வாய்மைத்து - உண்மையாக உடையது.
என்றது நகரத்தை (சீகாழியை)

பண் :

பாடல் எண் : 33

உருவு பெறவகுத்த அம்பலமும்ஓங்கு
தெருவும் வகுத்தசெய் குன்றும் மருவினிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 31-34 நகரத்தில் உள்ள இடங்களின் சிறப்பு.
சூளிகை - மேல் மாடத்து நெற்றி.
இது சிறிதே நிற்றற்கும், உலவுதற்கும் பயன்படும்.
துற்று எழுந்த தெற்றிகள் - (இட்டிகையும், செங்கல்லும்) நெருங்குதலால் எழுந்த திண்ணைகள்.
கபோதகம் - மாடப் புறாக்கள் உலாவும் வகையில் அமைந்த மேல் உத்தரம்.
வீடு - பெருமை.
உருவு - அழகு.
அம்பலம் - சபை.
செய்குன்று - கட்டு மலை.
இஃது ஏறி விளையாடப் பயன்படும்.
இவை தெருக்களின் கோடியில் நின்று தெருக்களைப் பிரிப்பதால், ``தெருவு வகுத்த செங்குன்று`` சித்திரக் கா - ஆங்காங்குப் பாவைகள் நிற்கும் சோலை.
செழும் பொழில் - பாவைகள் இன்றி மரங்கள் மட்டுமே காய்களோடும் கனிக ளோடும் குளிர்ந்த நிழலையுடைய சோலை.
வாவிகள் - சிறு குளங்கள்.
நிலைக்களம் - அமர்விடம்.
துன்னி - நெருங்கி.
சோதி, மலருக்கு அடை.
மலர் மடந்தை - இலக்குமி வாய்மைத்து - உண்மையாக உடையது.
என்றது நகரத்தை (சீகாழியை)

பண் :

பாடல் எண் : 34

சித்திரக் காவும் செழும் பொழிலும் வாவிகளும்
நித்திலஞ்சேர் நீடு நிலைக்களமும் எத்திசையும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 31-34 நகரத்தில் உள்ள இடங்களின் சிறப்பு.
சூளிகை - மேல் மாடத்து நெற்றி.
இது சிறிதே நிற்றற்கும், உலவுதற்கும் பயன்படும்.
துற்று எழுந்த தெற்றிகள் - (இட்டிகையும், செங்கல்லும்) நெருங்குதலால் எழுந்த திண்ணைகள்.
கபோதகம் - மாடப் புறாக்கள் உலாவும் வகையில் அமைந்த மேல் உத்தரம்.
வீடு - பெருமை.
உருவு - அழகு.
அம்பலம் - சபை.
செய்குன்று - கட்டு மலை.
இஃது ஏறி விளையாடப் பயன்படும்.
இவை தெருக்களின் கோடியில் நின்று தெருக்களைப் பிரிப்பதால், ``தெருவு வகுத்த செங்குன்று`` சித்திரக் கா - ஆங்காங்குப் பாவைகள் நிற்கும் சோலை.
செழும் பொழில் - பாவைகள் இன்றி மரங்கள் மட்டுமே காய்களோடும் கனிக ளோடும் குளிர்ந்த நிழலையுடைய சோலை.
வாவிகள் - சிறு குளங்கள்.
நிலைக்களம் - அமர்விடம்.
துன்னி - நெருங்கி.
சோதி, மலருக்கு அடை.
மலர் மடந்தை - இலக்குமி வாய்மைத்து - உண்மையாக உடையது.
என்றது நகரத்தை (சீகாழியை)

பண் :

பாடல் எண் : 35

துன்னி எழில்சிறப்பச் சோதி மலர்மடந்தை
மன்னி மகிழ்ந்துறையும் வாய்மைத்தாய்ப் பொன்னும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி -35-38.
வாழ்வார் செய்யும் தான தருமங்களை நகரத்தின்மேல் வைத்துப் புகழ்தல்.
மாமணி - மாணிக்கம்.
கார் - மேகம்.
`கொடைவளர்க்கும் செப்பம்` என்க.
சாயாத - தளராத.
செப்பம் - நேர்மை.
புகழ் - புகழுக்கு ஏதுவான செயல்கள்; ஆகு பெயர்.
மேதக்கு - மேன்மை தக்கிருக்கப் பெற்று.

பண் :

பாடல் எண் : 36

மரகதமும் நித்திலமும் மாமணியும் பேணி
இரவலருக் கெப்போதும் ஈந்து கரவாது

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி -35-38.
வாழ்வார் செய்யும் தான தருமங்களை நகரத்தின்மேல் வைத்துப் புகழ்தல்.
மாமணி - மாணிக்கம்.
கார் - மேகம்.
`கொடைவளர்க்கும் செப்பம்` என்க.
சாயாத - தளராத.
செப்பம் - நேர்மை.
புகழ் - புகழுக்கு ஏதுவான செயல்கள்; ஆகு பெயர்.
மேதக்கு - மேன்மை தக்கிருக்கப் பெற்று.

பண் :

பாடல் எண் : 37

கற்பகமும் காருமெனக் கற்றவர்க்கும் நற்றவர்க்கும்
தப்பாக் கொடைவளர்க்கும் சாயாத செப்பத்தால்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி -35-38.
வாழ்வார் செய்யும் தான தருமங்களை நகரத்தின்மேல் வைத்துப் புகழ்தல்.
மாமணி - மாணிக்கம்.
கார் - மேகம்.
`கொடைவளர்க்கும் செப்பம்` என்க.
சாயாத - தளராத.
செப்பம் - நேர்மை.
புகழ் - புகழுக்கு ஏதுவான செயல்கள்; ஆகு பெயர்.
மேதக்கு - மேன்மை தக்கிருக்கப் பெற்று.

பண் :

பாடல் எண் : 38

பொய்மை கடிந்து புகழ்புரிந்து பூதலத்து
மெய்ம்மை தலைசிறந்து மேதக்கும் உண்மை

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி -35-38.
வாழ்வார் செய்யும் தான தருமங்களை நகரத்தின்மேல் வைத்துப் புகழ்தல்.
மாமணி - மாணிக்கம்.
கார் - மேகம்.
`கொடைவளர்க்கும் செப்பம்` என்க.
சாயாத - தளராத.
செப்பம் - நேர்மை.
புகழ் - புகழுக்கு ஏதுவான செயல்கள்; ஆகு பெயர்.
மேதக்கு - மேன்மை தக்கிருக்கப் பெற்று.

பண் :

பாடல் எண் : 39

மறைபயில்வார் மன்னும் வியாகரணக் கேள்வித்
துறைபயில்வார் தொன்னூல் பயில்வார் முறைமையால்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 39-44 சீகாழி அந்தணர்களது சிறப்பு.
``பயில்வார்`` முதலியயாவும் முற்று வினையாலணையும் பெயர்கள்.
வியாகரணம்- வடமொழி இலக்கண நூல்.
தொன்னூல் - மரபு காக்கும் நூல்கள்.
அவை வேதத்தின் ஆறங்க நூல்கள்.
கலை நூல் - அறுபத்து நான்கு கலைகளைப் பற்றிய நூல்கள் - அவை இசை.
கூத்து, ஓவியம், சிற்பம் முதலியவை பற்றியன.
ஆதரித்து - விரும்பி.
`பொருளால் போகத்தை ஒடுங்காது துய்ப்பார்` என்க.
இங்ஙனம் கூறியது, ``உடாஅதும், உண்ணாதும் தம் உடம்பைச் செற்றுப்`` 1 பொருளைக் காக்கும் இவறன்மை உடையாரைக் கடிதற் பொருட்டு.
சோகம் - துன்பம் ``இன்றி உணர்வார்`` என்பதை, `உணர்ந்து` என மாற்றிக் கொள்க.
`சோகம் - இணைப்பு` எனக் கொண்டு, கிடந்தவாறே உரைப்பினும் ஆம்.
`ஐம்புலனிலும்` என ஐந்தாம் உருபு விரிக்க.
ஆதி - வேதத்தின் முற்பகுதி.
அது பற்றிய அருங்கலை நூல் உபாசனா காண்டம்.
`இதனை நன்கு ஓதிக் கனல் வகுப்பார்` என்க.
கனல் - முத்தீ வகுத்தல் - வேறு வேறாக வளர்த்தல்.
இங்ஙனம் வளர்த்தலால் மழை பொய்யாது பொழிய, உலகில் கலி (பஞ்சம்) வாராது நீங்கும்.
கற் றாங்கு எரி ஒம்பிக்
கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லை
என அருளிச் செய்தது காண்க.
காமமும் உறுதிப் பொருகளுள் ஒன்றாகலின் அது பற்றிய நூலும் வேண்டற்பாலதாயிற்று.
கலை ஞானம் - நூல்களால் அறிவிக்கப்படும்.
மெய்யுணர்வு.
இதனை `அபரஞானம்` என்பர்.
ஓம நூல் - வேதத்தின் கரும காண்டம்.
`ஓதுவார்க்கு` என நான்கன் உருபு விரிக்க.
உத்தரிப்பார் - ஐயுற்று வினாவும் வினாக்களுக்கு விடை கூறுவார்.
இவற்றால் எல்லாம் சீகாழி அந்தணர்கள் பிரமனுக்கு நிகராவர்.
``தில்லை மூவாயிரவர், திருச்செந்தில் முந்நூற்றவர்`` என்பன போல, ``சீகாழி நானூற்றுவர்`` என்றல் மரபு எனத் தெரிகின்றது.

பண் :

பாடல் எண் : 40

ஆகமங்கள் கேட்பார் அருங்கலைநூல் ஆதரித்துப்
போகம் ஒடுங்காப் பொருள்துய்ப்பார் சோகமின்றி

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 39-44 சீகாழி அந்தணர்களது சிறப்பு.
``பயில்வார்`` முதலியயாவும் முற்று வினையாலணையும் பெயர்கள்.
வியாகரணம்- வடமொழி இலக்கண நூல்.
தொன்னூல் - மரபு காக்கும் நூல்கள்.
அவை வேதத்தின் ஆறங்க நூல்கள்.
கலை நூல் - அறுபத்து நான்கு கலைகளைப் பற்றிய நூல்கள் - அவை இசை.
கூத்து, ஓவியம், சிற்பம் முதலியவை பற்றியன.
ஆதரித்து - விரும்பி.
`பொருளால் போகத்தை ஒடுங்காது துய்ப்பார்` என்க.
இங்ஙனம் கூறியது, ``உடாஅதும், உண்ணாதும் தம் உடம்பைச் செற்றுப்`` 1 பொருளைக் காக்கும் இவறன்மை உடையாரைக் கடிதற் பொருட்டு.
சோகம் - துன்பம் ``இன்றி உணர்வார்`` என்பதை, `உணர்ந்து` என மாற்றிக் கொள்க.
`சோகம் - இணைப்பு` எனக் கொண்டு, கிடந்தவாறே உரைப்பினும் ஆம்.
`ஐம்புலனிலும்` என ஐந்தாம் உருபு விரிக்க.
ஆதி - வேதத்தின் முற்பகுதி.
அது பற்றிய அருங்கலை நூல் உபாசனா காண்டம்.
`இதனை நன்கு ஓதிக் கனல் வகுப்பார்` என்க.
கனல் - முத்தீ வகுத்தல் - வேறு வேறாக வளர்த்தல்.
இங்ஙனம் வளர்த்தலால் மழை பொய்யாது பொழிய, உலகில் கலி (பஞ்சம்) வாராது நீங்கும்.
கற் றாங்கு எரி ஒம்பிக்
கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லை
என அருளிச் செய்தது காண்க.
காமமும் உறுதிப் பொருகளுள் ஒன்றாகலின் அது பற்றிய நூலும் வேண்டற்பாலதாயிற்று.
கலை ஞானம் - நூல்களால் அறிவிக்கப்படும்.
மெய்யுணர்வு.
இதனை `அபரஞானம்` என்பர்.
ஓம நூல் - வேதத்தின் கரும காண்டம்.
`ஓதுவார்க்கு` என நான்கன் உருபு விரிக்க.
உத்தரிப்பார் - ஐயுற்று வினாவும் வினாக்களுக்கு விடை கூறுவார்.
இவற்றால் எல்லாம் சீகாழி அந்தணர்கள் பிரமனுக்கு நிகராவர்.
``தில்லை மூவாயிரவர், திருச்செந்தில் முந்நூற்றவர்`` என்பன போல, ``சீகாழி நானூற்றுவர்`` என்றல் மரபு எனத் தெரிகின்றது.

பண் :

பாடல் எண் : 41

நீதி நிலையுணர்வார் நீள் நிலத்துள் ஐம்புலனும்
காதல் விடுதவங்கள் காமுறு வார் ஆதி

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 39-44 சீகாழி அந்தணர்களது சிறப்பு.
``பயில்வார்`` முதலியயாவும் முற்று வினையாலணையும் பெயர்கள்.
வியாகரணம்- வடமொழி இலக்கண நூல்.
தொன்னூல் - மரபு காக்கும் நூல்கள்.
அவை வேதத்தின் ஆறங்க நூல்கள்.
கலை நூல் - அறுபத்து நான்கு கலைகளைப் பற்றிய நூல்கள் - அவை இசை.
கூத்து, ஓவியம், சிற்பம் முதலியவை பற்றியன.
ஆதரித்து - விரும்பி.
`பொருளால் போகத்தை ஒடுங்காது துய்ப்பார்` என்க.
இங்ஙனம் கூறியது, ``உடாஅதும், உண்ணாதும் தம் உடம்பைச் செற்றுப்`` 1 பொருளைக் காக்கும் இவறன்மை உடையாரைக் கடிதற் பொருட்டு.
சோகம் - துன்பம் ``இன்றி உணர்வார்`` என்பதை, `உணர்ந்து` என மாற்றிக் கொள்க.
`சோகம் - இணைப்பு` எனக் கொண்டு, கிடந்தவாறே உரைப்பினும் ஆம்.
`ஐம்புலனிலும்` என ஐந்தாம் உருபு விரிக்க.
ஆதி - வேதத்தின் முற்பகுதி.
அது பற்றிய அருங்கலை நூல் உபாசனா காண்டம்.
`இதனை நன்கு ஓதிக் கனல் வகுப்பார்` என்க.
கனல் - முத்தீ வகுத்தல் - வேறு வேறாக வளர்த்தல்.
இங்ஙனம் வளர்த்தலால் மழை பொய்யாது பொழிய, உலகில் கலி (பஞ்சம்) வாராது நீங்கும்.
கற் றாங்கு எரி ஒம்பிக்
கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லை
என அருளிச் செய்தது காண்க.
காமமும் உறுதிப் பொருகளுள் ஒன்றாகலின் அது பற்றிய நூலும் வேண்டற்பாலதாயிற்று.
கலை ஞானம் - நூல்களால் அறிவிக்கப்படும்.
மெய்யுணர்வு.
இதனை `அபரஞானம்` என்பர்.
ஓம நூல் - வேதத்தின் கரும காண்டம்.
`ஓதுவார்க்கு` என நான்கன் உருபு விரிக்க.
உத்தரிப்பார் - ஐயுற்று வினாவும் வினாக்களுக்கு விடை கூறுவார்.
இவற்றால் எல்லாம் சீகாழி அந்தணர்கள் பிரமனுக்கு நிகராவர்.
``தில்லை மூவாயிரவர், திருச்செந்தில் முந்நூற்றவர்`` என்பன போல, ``சீகாழி நானூற்றுவர்`` என்றல் மரபு எனத் தெரிகின்றது.

பண் :

பாடல் எண் : 42

அருங்கலைநூல் ஓதுவார் ஆதரித்து வென்றிக்
கருங்கலிநீங் கக்கனல்வ குப்பார் ஒருங்கிருந்து

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 39-44 சீகாழி அந்தணர்களது சிறப்பு.
``பயில்வார்`` முதலியயாவும் முற்று வினையாலணையும் பெயர்கள்.
வியாகரணம்- வடமொழி இலக்கண நூல்.
தொன்னூல் - மரபு காக்கும் நூல்கள்.
அவை வேதத்தின் ஆறங்க நூல்கள்.
கலை நூல் - அறுபத்து நான்கு கலைகளைப் பற்றிய நூல்கள் - அவை இசை.
கூத்து, ஓவியம், சிற்பம் முதலியவை பற்றியன.
ஆதரித்து - விரும்பி.
`பொருளால் போகத்தை ஒடுங்காது துய்ப்பார்` என்க.
இங்ஙனம் கூறியது, ``உடாஅதும், உண்ணாதும் தம் உடம்பைச் செற்றுப்`` 1 பொருளைக் காக்கும் இவறன்மை உடையாரைக் கடிதற் பொருட்டு.
சோகம் - துன்பம் ``இன்றி உணர்வார்`` என்பதை, `உணர்ந்து` என மாற்றிக் கொள்க.
`சோகம் - இணைப்பு` எனக் கொண்டு, கிடந்தவாறே உரைப்பினும் ஆம்.
`ஐம்புலனிலும்` என ஐந்தாம் உருபு விரிக்க.
ஆதி - வேதத்தின் முற்பகுதி.
அது பற்றிய அருங்கலை நூல் உபாசனா காண்டம்.
`இதனை நன்கு ஓதிக் கனல் வகுப்பார்` என்க.
கனல் - முத்தீ வகுத்தல் - வேறு வேறாக வளர்த்தல்.
இங்ஙனம் வளர்த்தலால் மழை பொய்யாது பொழிய, உலகில் கலி (பஞ்சம்) வாராது நீங்கும்.
கற் றாங்கு எரி ஒம்பிக்
கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லை
என அருளிச் செய்தது காண்க.
காமமும் உறுதிப் பொருகளுள் ஒன்றாகலின் அது பற்றிய நூலும் வேண்டற்பாலதாயிற்று.
கலை ஞானம் - நூல்களால் அறிவிக்கப்படும்.
மெய்யுணர்வு.
இதனை `அபரஞானம்` என்பர்.
ஓம நூல் - வேதத்தின் கரும காண்டம்.
`ஓதுவார்க்கு` என நான்கன் உருபு விரிக்க.
உத்தரிப்பார் - ஐயுற்று வினாவும் வினாக்களுக்கு விடை கூறுவார்.
இவற்றால் எல்லாம் சீகாழி அந்தணர்கள் பிரமனுக்கு நிகராவர்.
``தில்லை மூவாயிரவர், திருச்செந்தில் முந்நூற்றவர்`` என்பன போல, ``சீகாழி நானூற்றுவர்`` என்றல் மரபு எனத் தெரிகின்றது.

பண் :

பாடல் எண் : 43

காமநூல் கேட்பார் கலைஞானங் காதலிப்பார்
ஒமநூல் ஒதுவார்க் குத்தரிப்பார் பூமன்னும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 39-44 சீகாழி அந்தணர்களது சிறப்பு.
``பயில்வார்`` முதலியயாவும் முற்று வினையாலணையும் பெயர்கள்.
வியாகரணம்- வடமொழி இலக்கண நூல்.
தொன்னூல் - மரபு காக்கும் நூல்கள்.
அவை வேதத்தின் ஆறங்க நூல்கள்.
கலை நூல் - அறுபத்து நான்கு கலைகளைப் பற்றிய நூல்கள் - அவை இசை.
கூத்து, ஓவியம், சிற்பம் முதலியவை பற்றியன.
ஆதரித்து - விரும்பி.
`பொருளால் போகத்தை ஒடுங்காது துய்ப்பார்` என்க.
இங்ஙனம் கூறியது, ``உடாஅதும், உண்ணாதும் தம் உடம்பைச் செற்றுப்`` 1 பொருளைக் காக்கும் இவறன்மை உடையாரைக் கடிதற் பொருட்டு.
சோகம் - துன்பம் ``இன்றி உணர்வார்`` என்பதை, `உணர்ந்து` என மாற்றிக் கொள்க.
`சோகம் - இணைப்பு` எனக் கொண்டு, கிடந்தவாறே உரைப்பினும் ஆம்.
`ஐம்புலனிலும்` என ஐந்தாம் உருபு விரிக்க.
ஆதி - வேதத்தின் முற்பகுதி.
அது பற்றிய அருங்கலை நூல் உபாசனா காண்டம்.
`இதனை நன்கு ஓதிக் கனல் வகுப்பார்` என்க.
கனல் - முத்தீ வகுத்தல் - வேறு வேறாக வளர்த்தல்.
இங்ஙனம் வளர்த்தலால் மழை பொய்யாது பொழிய, உலகில் கலி (பஞ்சம்) வாராது நீங்கும்.
கற் றாங்கு எரி ஒம்பிக்
கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லை
என அருளிச் செய்தது காண்க.
காமமும் உறுதிப் பொருகளுள் ஒன்றாகலின் அது பற்றிய நூலும் வேண்டற்பாலதாயிற்று.
கலை ஞானம் - நூல்களால் அறிவிக்கப்படும்.
மெய்யுணர்வு.
இதனை `அபரஞானம்` என்பர்.
ஓம நூல் - வேதத்தின் கரும காண்டம்.
`ஓதுவார்க்கு` என நான்கன் உருபு விரிக்க.
உத்தரிப்பார் - ஐயுற்று வினாவும் வினாக்களுக்கு விடை கூறுவார்.
இவற்றால் எல்லாம் சீகாழி அந்தணர்கள் பிரமனுக்கு நிகராவர்.
``தில்லை மூவாயிரவர், திருச்செந்தில் முந்நூற்றவர்`` என்பன போல, ``சீகாழி நானூற்றுவர்`` என்றல் மரபு எனத் தெரிகின்றது.

பண் :

பாடல் எண் : 44

நான்முகனே அன்னசீர் நானூற் றுவர்மறையோர்
தாம்மன்னி வாவும் தகைமைத்தாய் நாமன்னும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 39-44 சீகாழி அந்தணர்களது சிறப்பு.
``பயில்வார்`` முதலியயாவும் முற்று வினையாலணையும் பெயர்கள்.
வியாகரணம்- வடமொழி இலக்கண நூல்.
தொன்னூல் - மரபு காக்கும் நூல்கள்.
அவை வேதத்தின் ஆறங்க நூல்கள்.
கலை நூல் - அறுபத்து நான்கு கலைகளைப் பற்றிய நூல்கள் - அவை இசை.
கூத்து, ஓவியம், சிற்பம் முதலியவை பற்றியன.
ஆதரித்து - விரும்பி.
`பொருளால் போகத்தை ஒடுங்காது துய்ப்பார்` என்க.
இங்ஙனம் கூறியது, ``உடாஅதும், உண்ணாதும் தம் உடம்பைச் செற்றுப்`` 1 பொருளைக் காக்கும் இவறன்மை உடையாரைக் கடிதற் பொருட்டு.
சோகம் - துன்பம் ``இன்றி உணர்வார்`` என்பதை, `உணர்ந்து` என மாற்றிக் கொள்க.
`சோகம் - இணைப்பு` எனக் கொண்டு, கிடந்தவாறே உரைப்பினும் ஆம்.
`ஐம்புலனிலும்` என ஐந்தாம் உருபு விரிக்க.
ஆதி - வேதத்தின் முற்பகுதி.
அது பற்றிய அருங்கலை நூல் உபாசனா காண்டம்.
`இதனை நன்கு ஓதிக் கனல் வகுப்பார்` என்க.
கனல் - முத்தீ வகுத்தல் - வேறு வேறாக வளர்த்தல்.
இங்ஙனம் வளர்த்தலால் மழை பொய்யாது பொழிய, உலகில் கலி (பஞ்சம்) வாராது நீங்கும்.
கற் றாங்கு எரி ஒம்பிக்
கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லை
என அருளிச் செய்தது காண்க.
காமமும் உறுதிப் பொருகளுள் ஒன்றாகலின் அது பற்றிய நூலும் வேண்டற்பாலதாயிற்று.
கலை ஞானம் - நூல்களால் அறிவிக்கப்படும்.
மெய்யுணர்வு.
இதனை `அபரஞானம்` என்பர்.
ஓம நூல் - வேதத்தின் கரும காண்டம்.
`ஓதுவார்க்கு` என நான்கன் உருபு விரிக்க.
உத்தரிப்பார் - ஐயுற்று வினாவும் வினாக்களுக்கு விடை கூறுவார்.
இவற்றால் எல்லாம் சீகாழி அந்தணர்கள் பிரமனுக்கு நிகராவர்.
``தில்லை மூவாயிரவர், திருச்செந்தில் முந்நூற்றவர்`` என்பன போல, ``சீகாழி நானூற்றுவர்`` என்றல் மரபு எனத் தெரிகின்றது.

பண் :

பாடல் எண் : 45

ஆரணங்கும் மற்றை அருந்ததியும் போல்மடவார்
ஏரணங்கு மாடத் தினிதிருந்து சீரணங்கு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 45-47 சீகாழியில் உள்ள மங்கையர்களது சிறப்பு.
நா மன்னும் ஆரணங்கு - நாமகள்; கலைமகள்.
கலை வன்மையால் நாமகளை ஒத்தும், கற்பின் சிறப்பால் அருந்ததியை ஒத்தும் உள்ளார் என்க.
ஏர் - எழுச்சி.
அணங்கு - அழகு சீர் அணங்கு - சிறப்பினையும், அழகினையும் உடைய.
வீணையும், யாழும் வேறுவேறு ஆதலை.
``இன்னிசை வீணையர், யாழினர் ஒருபால்` 2 என்றதனானும் அறிக.
பாணம் - நாடக வகை.
பூவை - நாகணவாய்ப் புள்.
இக் காலத்தில், `மைனா` எனப்படுகின்றது.
பாவை - பதுமை.
பண்பு - உறுவார் - அழகு பார்ப்பார்.

பண் :

பாடல் எண் : 46

வீணை பயிற்றுவார் யாழ்பயில்வார் மேவியசீர்ப்
பாணம் பயில்வார் பயன்உறுவார் பேணியசீர்ப்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 45-47 சீகாழியில் உள்ள மங்கையர்களது சிறப்பு.
நா மன்னும் ஆரணங்கு - நாமகள்; கலைமகள்.
கலை வன்மையால் நாமகளை ஒத்தும், கற்பின் சிறப்பால் அருந்ததியை ஒத்தும் உள்ளார் என்க.
ஏர் - எழுச்சி.
அணங்கு - அழகு சீர் அணங்கு - சிறப்பினையும், அழகினையும் உடைய.
வீணையும், யாழும் வேறுவேறு ஆதலை.
``இன்னிசை வீணையர், யாழினர் ஒருபால்` 2 என்றதனானும் அறிக.
பாணம் - நாடக வகை.
பூவை - நாகணவாய்ப் புள்.
இக் காலத்தில், `மைனா` எனப்படுகின்றது.
பாவை - பதுமை.
பண்பு - உறுவார் - அழகு பார்ப்பார்.

பண் :

பாடல் எண் : 47

பூவைக்குப் பாட்டுரைப்பார் பொற்கிளிக்குச் சொற் பயில்வார்
பாவைக்குப் பொன்புனைந்து பண்புறுவா ராய் எங்கும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 45-47 சீகாழியில் உள்ள மங்கையர்களது சிறப்பு.
நா மன்னும் ஆரணங்கு - நாமகள்; கலைமகள்.
கலை வன்மையால் நாமகளை ஒத்தும், கற்பின் சிறப்பால் அருந்ததியை ஒத்தும் உள்ளார் என்க.
ஏர் - எழுச்சி.
அணங்கு - அழகு சீர் அணங்கு - சிறப்பினையும், அழகினையும் உடைய.
வீணையும், யாழும் வேறுவேறு ஆதலை.
``இன்னிசை வீணையர், யாழினர் ஒருபால்` 2 என்றதனானும் அறிக.
பாணம் - நாடக வகை.
பூவை - நாகணவாய்ப் புள்.
இக் காலத்தில், `மைனா` எனப்படுகின்றது.
பாவை - பதுமை.
பண்பு - உறுவார் - அழகு பார்ப்பார்.

பண் :

பாடல் எண் : 48

மங்கையர்கள் கூட்டமும் மன்னு சிறார்குழுவும்
பொங்குலகம் எல்லாம் பொலிவடையத் தங்கிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 48; ``மன்னு`` என்பதை, ``எங்கும்`` என்பதன் பின் கூட்டுக.
சிறார் - சிறுவர் இனம் பற்றி இங்குச் சிறுமியரையும் கொள்க.
`கூட்டமும், குழுவும் ஆக` என ஒரு சொல் வருவிக்க.
(மேல் கண்ணி - 23,24இல் புற நகர் ஒலிகள் கூறப்பட்டன.
)

பண் :

பாடல் எண் : 49

வேத ஒலியும் விழாவொலியும் மெல்லியலார்
கீத ஒலியும் கிளர்ந்தோங்கும் மாதரார்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி-49-52-இல் அகநகர் ஒலிகள் கூறப்படுகின்றன.
`வேத ஒலியால் உலகம் பொலிவை அடைகின்றது` என்க.
(கண்ணி - 48) மெல்லியலார்- மகளிர்.
பாவை - பாவைப் பாட்டு.
இதனைத் திருவாசகத்துள்ளும் காணலாம்.
`பாவை நோன்புப் பாட்டு` என்பாரும் உளர், பறை - வாத்திய வகைகள்.
வியன் நகரம் - அக நகர், காவலனது பறைகள் காவலை உணர்த்தலின் அவை வேறு கூறப்பட்டன.
துடி - உடுக்கை.
இதனையும் காவலர் கொண்டிருப்பர்.
பவ்வம் - கடல்.
பவ்வப் படை- கடல் போலும் போர்ப் படைகள்.
இவற்றிடையே ஒலிப்பன போர்ப் பறைகள்.
சில வேளைகளில் படைகள் அகநகருள்ளும் அணிவகுத்துச் செல்வது உண்டு கம்பக் களிறு - அசைதலையுடைய ஆண் யானைகள்.
கார் - மேகம்.

பண் :

பாடல் எண் : 50

பாவை ஒலியும் பறைஒலியும் பல்சனங்கள்
மேவும் ஒலியும் வியன்நகரங் காவலர்கள்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி-49-52-இல் அகநகர் ஒலிகள் கூறப்படுகின்றன.
`வேத ஒலியால் உலகம் பொலிவை அடைகின்றது` என்க.
(கண்ணி - 48) மெல்லியலார்- மகளிர்.
பாவை - பாவைப் பாட்டு.
இதனைத் திருவாசகத்துள்ளும் காணலாம்.
`பாவை நோன்புப் பாட்டு` என்பாரும் உளர், பறை - வாத்திய வகைகள்.
வியன் நகரம் - அக நகர், காவலனது பறைகள் காவலை உணர்த்தலின் அவை வேறு கூறப்பட்டன.
துடி - உடுக்கை.
இதனையும் காவலர் கொண்டிருப்பர்.
பவ்வம் - கடல்.
பவ்வப் படை- கடல் போலும் போர்ப் படைகள்.
இவற்றிடையே ஒலிப்பன போர்ப் பறைகள்.
சில வேளைகளில் படைகள் அகநகருள்ளும் அணிவகுத்துச் செல்வது உண்டு கம்பக் களிறு - அசைதலையுடைய ஆண் யானைகள்.
கார் - மேகம்.

பண் :

பாடல் எண் : 51

பம்பைத் துடிஒலியும் பவ்வப் படைஒலியும்
கம்பக் களிற்றொலியும் கைகலந்து நம்பிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி-49-52-இல் அகநகர் ஒலிகள் கூறப்படுகின்றன.
`வேத ஒலியால் உலகம் பொலிவை அடைகின்றது` என்க.
(கண்ணி - 48) மெல்லியலார்- மகளிர்.
பாவை - பாவைப் பாட்டு.
இதனைத் திருவாசகத்துள்ளும் காணலாம்.
`பாவை நோன்புப் பாட்டு` என்பாரும் உளர், பறை - வாத்திய வகைகள்.
வியன் நகரம் - அக நகர், காவலனது பறைகள் காவலை உணர்த்தலின் அவை வேறு கூறப்பட்டன.
துடி - உடுக்கை.
இதனையும் காவலர் கொண்டிருப்பர்.
பவ்வம் - கடல்.
பவ்வப் படை- கடல் போலும் போர்ப் படைகள்.
இவற்றிடையே ஒலிப்பன போர்ப் பறைகள்.
சில வேளைகளில் படைகள் அகநகருள்ளும் அணிவகுத்துச் செல்வது உண்டு கம்பக் களிறு - அசைதலையுடைய ஆண் யானைகள்.
கார் - மேகம்.

பண் :

பாடல் எண் : 52

கார்முழுக்கம் மற்றைக் கடல்முழுக்கம் போற்கலந்த
சீர் முழக்கம் எங்கும் செவிடுபடப் பார்விளங்கு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி-49-52-இல் அகநகர் ஒலிகள் கூறப்படுகின்றன.
`வேத ஒலியால் உலகம் பொலிவை அடைகின்றது` என்க.
(கண்ணி - 48) மெல்லியலார்- மகளிர்.
பாவை - பாவைப் பாட்டு.
இதனைத் திருவாசகத்துள்ளும் காணலாம்.
`பாவை நோன்புப் பாட்டு` என்பாரும் உளர், பறை - வாத்திய வகைகள்.
வியன் நகரம் - அக நகர், காவலனது பறைகள் காவலை உணர்த்தலின் அவை வேறு கூறப்பட்டன.
துடி - உடுக்கை.
இதனையும் காவலர் கொண்டிருப்பர்.
பவ்வம் - கடல்.
பவ்வப் படை- கடல் போலும் போர்ப் படைகள்.
இவற்றிடையே ஒலிப்பன போர்ப் பறைகள்.
சில வேளைகளில் படைகள் அகநகருள்ளும் அணிவகுத்துச் செல்வது உண்டு கம்பக் களிறு - அசைதலையுடைய ஆண் யானைகள்.
கார் - மேகம்.

பண் :

பாடல் எண் : 53

செல்வம் நிறைந்த ஊர் சீரில் திகழ்ந்தஊர்
மல்கு மலர்மடந்தை மன்னும் ஊர் சொல்லினிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 53, 54, 55 சீகாழியின் புகழ் வகை.
ஆலித்து - மழை விடாது பொழிதலால் `இருங்கால்` என்பதில் சந்தி ஒற்றுத் தொகுத்த லாக `இருகால்` என நின்றது.
இருங்கால் - பெரிய காற்று; ஊழிக் காற்று `இருங்காலால் (அலை வீசி) வளர் வெள்ளம்` - என்க.
உம்பர் - அண்ட முகடு.
`அதனோடும் சேர மிதந்த ஊர்` என்க.
`சீகாழியின் பெயர்கள் பன்னிரண்டும் ஓரோர் ஊழியில் எய்தின` என்றற்கு, ``பன்னிருகால் மிதந்த`` என்றார்.

பண் :

பாடல் எண் : 54

ஞாலத்து மிக்கஊர் நானூற் றுவர்களூர்
வேலொத்த கண்ணார் விளங்கும் ஊர் ஆலித்து

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 53, 54, 55 சீகாழியின் புகழ் வகை.
ஆலித்து - மழை விடாது பொழிதலால் `இருங்கால்` என்பதில் சந்தி ஒற்றுத் தொகுத்த லாக `இருகால்` என நின்றது.
இருங்கால் - பெரிய காற்று; ஊழிக் காற்று `இருங்காலால் (அலை வீசி) வளர் வெள்ளம்` - என்க.
உம்பர் - அண்ட முகடு.
`அதனோடும் சேர மிதந்த ஊர்` என்க.
`சீகாழியின் பெயர்கள் பன்னிரண்டும் ஓரோர் ஊழியில் எய்தின` என்றற்கு, ``பன்னிருகால் மிதந்த`` என்றார்.

பண் :

பாடல் எண் : 55

மன்னிருகால் வேளை வளர்வெள்ளத் தும்பரொடும்
பன்னிருகால் நீரில் மிதந்தஊர் மன்னும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 53, 54, 55 சீகாழியின் புகழ் வகை.
ஆலித்து - மழை விடாது பொழிதலால் `இருங்கால்` என்பதில் சந்தி ஒற்றுத் தொகுத்த லாக `இருகால்` என நின்றது.
இருங்கால் - பெரிய காற்று; ஊழிக் காற்று `இருங்காலால் (அலை வீசி) வளர் வெள்ளம்` - என்க.
உம்பர் - அண்ட முகடு.
`அதனோடும் சேர மிதந்த ஊர்` என்க.
`சீகாழியின் பெயர்கள் பன்னிரண்டும் ஓரோர் ஊழியில் எய்தின` என்றற்கு, ``பன்னிருகால் மிதந்த`` என்றார்.

பண் :

பாடல் எண் : 56

பிரமன்ஊர் வேணுபுரம் பேரொலிநீர் சண்பை
அரன்மன்னு தண்காழி அம்பொற் சிரபுரம்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 56,57,58 சீகாழியின் பன்னிரு பெயர்கள் இவற்றுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணம் பற்றி வந்தமையை அறிந்து கொள்க.
``இற்றது`` என்பதில் உள்ள `அது` என்னும் பகுதிப் பொருள் விகுதியைப் ``பண்பு`` என்பதனோடு கூட்டி, ``பகர்கின்ற பண்பது இற்றாகி`` எனக் கொள்க.
இற்று - இன்னது.

பண் :

பாடல் எண் : 57

பூந்தராய் கொச்சைவயம் வெங்குருப் பொங்குபுனல்
வாய்ந்தநல் தோணிபுரம் மறையோர் ஏய்ந்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 56,57,58 சீகாழியின் பன்னிரு பெயர்கள் இவற்றுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணம் பற்றி வந்தமையை அறிந்து கொள்க.
``இற்றது`` என்பதில் உள்ள `அது` என்னும் பகுதிப் பொருள் விகுதியைப் ``பண்பு`` என்பதனோடு கூட்டி, ``பகர்கின்ற பண்பது இற்றாகி`` எனக் கொள்க.
இற்று - இன்னது.

பண் :

பாடல் எண் : 58

புகலி கழுமலம் பூம்புறவம் என்றிப்
பகர்கின்ற பண்புற்ற தாகித் திகழ்கின்ற

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி - 56,57,58 சீகாழியின் பன்னிரு பெயர்கள் இவற்றுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணம் பற்றி வந்தமையை அறிந்து கொள்க.
``இற்றது`` என்பதில் உள்ள `அது` என்னும் பகுதிப் பொருள் விகுதியைப் ``பண்பு`` என்பதனோடு கூட்டி, ``பகர்கின்ற பண்பது இற்றாகி`` எனக் கொள்க.
இற்று - இன்னது.

பண் :

பாடல் எண் : 59

மல்லைச் செழுநகரம் மன்னவும் வல்லமணர்
ஒல்லைக் கழுவில் உலக்கவும் எல்லையிலா

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி-59-63.
ஞானசம்பந்தர் அவதாரப் பயன்.
மல் - வளப்பம்.
அஃது ஐகாரம் பெற்று, ``மல்லை`` என வந்தது.
ஆதியாம் வென்றிக் கவி - தொன்று தொட்டு வெற்றி பெற்று வந்த அருமை நல்லார் உளரேல் மழை பொய்யாது பொழியும்; மழை பொய்யாது பொழியவே வறுமை அணுகாதாம்.
ஒன்றி - ஒற்றுமைப்பட்டு.
பனுவல் - பதிகம்.
``ஞானசம்பந்தர் பதினாறாயிரம் திருப்பதிகங்களை அருளிச் செய்தார்`` என்பர்.
கிடைத்தவை முந்நூற்றெண்பத்து மூன்று திருப்பதிகங்களே.
ஏனைய சிதலைவாய்ப்பட்டன கிடைத்த திருப் பதிகங்களிலும் ஆங்காங்குச் சில பாடல்களும், பாடல்களின் அடி களும் அவ்வாறாயின.
அப்பர் சுந்தரரது திருப்பதிகங்களில் சிதலை வாய்ப்பட்டன பல.
கவுணியர் - கவுணிய கோத்திரத்தினர்.
1 ஓர் சேய்- ஒப்புயர்வற்ற பிள்ளை.
அங்கு - அச்சீகாழித் தலத்தில்.
வள்ளல் - வீடுபேற்றினை கொள்ளை கொள்ள விட்டவர்.

பண் :

பாடல் எண் : 60

மாதவத்தோர் வாழவும் வையகத்தோர் உய்யவும்
மேதக்க வானோர் வியப்பவும் ஆதியாம்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி-59-63.
ஞானசம்பந்தர் அவதாரப் பயன்.
மல் - வளப்பம்.
அஃது ஐகாரம் பெற்று, ``மல்லை`` என வந்தது.
ஆதியாம் வென்றிக் கவி - தொன்று தொட்டு வெற்றி பெற்று வந்த அருமை நல்லார் உளரேல் மழை பொய்யாது பொழியும்; மழை பொய்யாது பொழியவே வறுமை அணுகாதாம்.
ஒன்றி - ஒற்றுமைப்பட்டு.
பனுவல் - பதிகம்.
``ஞானசம்பந்தர் பதினாறாயிரம் திருப்பதிகங்களை அருளிச் செய்தார்`` என்பர்.
கிடைத்தவை முந்நூற்றெண்பத்து மூன்று திருப்பதிகங்களே.
ஏனைய சிதலைவாய்ப்பட்டன கிடைத்த திருப் பதிகங்களிலும் ஆங்காங்குச் சில பாடல்களும், பாடல்களின் அடி களும் அவ்வாறாயின.
அப்பர் சுந்தரரது திருப்பதிகங்களில் சிதலை வாய்ப்பட்டன பல.
கவுணியர் - கவுணிய கோத்திரத்தினர்.
1 ஓர் சேய்- ஒப்புயர்வற்ற பிள்ளை.
அங்கு - அச்சீகாழித் தலத்தில்.
வள்ளல் - வீடுபேற்றினை கொள்ளை கொள்ள விட்டவர்.

பண் :

பாடல் எண் : 61

வென்றிக் கலிகெடவும் வேதத் தொலிமிகவும்
ஒன்றிச் சிவனடியார் ஒங்கவும் துன்றிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி-59-63.
ஞானசம்பந்தர் அவதாரப் பயன்.
மல் - வளப்பம்.
அஃது ஐகாரம் பெற்று, ``மல்லை`` என வந்தது.
ஆதியாம் வென்றிக் கவி - தொன்று தொட்டு வெற்றி பெற்று வந்த அருமை நல்லார் உளரேல் மழை பொய்யாது பொழியும்; மழை பொய்யாது பொழியவே வறுமை அணுகாதாம்.
ஒன்றி - ஒற்றுமைப்பட்டு.
பனுவல் - பதிகம்.
``ஞானசம்பந்தர் பதினாறாயிரம் திருப்பதிகங்களை அருளிச் செய்தார்`` என்பர்.
கிடைத்தவை முந்நூற்றெண்பத்து மூன்று திருப்பதிகங்களே.
ஏனைய சிதலைவாய்ப்பட்டன கிடைத்த திருப் பதிகங்களிலும் ஆங்காங்குச் சில பாடல்களும், பாடல்களின் அடி களும் அவ்வாறாயின.
அப்பர் சுந்தரரது திருப்பதிகங்களில் சிதலை வாய்ப்பட்டன பல.
கவுணியர் - கவுணிய கோத்திரத்தினர்.
1 ஓர் சேய்- ஒப்புயர்வற்ற பிள்ளை.
அங்கு - அச்சீகாழித் தலத்தில்.
வள்ளல் - வீடுபேற்றினை கொள்ளை கொள்ள விட்டவர்.

பண் :

பாடல் எண் : 62

பன்னு தமிழ்ப்பதினா றாயிர நற்பனுவல்
மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும் முன்னிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி-59-63.
ஞானசம்பந்தர் அவதாரப் பயன்.
மல் - வளப்பம்.
அஃது ஐகாரம் பெற்று, ``மல்லை`` என வந்தது.
ஆதியாம் வென்றிக் கவி - தொன்று தொட்டு வெற்றி பெற்று வந்த அருமை நல்லார் உளரேல் மழை பொய்யாது பொழியும்; மழை பொய்யாது பொழியவே வறுமை அணுகாதாம்.
ஒன்றி - ஒற்றுமைப்பட்டு.
பனுவல் - பதிகம்.
``ஞானசம்பந்தர் பதினாறாயிரம் திருப்பதிகங்களை அருளிச் செய்தார்`` என்பர்.
கிடைத்தவை முந்நூற்றெண்பத்து மூன்று திருப்பதிகங்களே.
ஏனைய சிதலைவாய்ப்பட்டன கிடைத்த திருப் பதிகங்களிலும் ஆங்காங்குச் சில பாடல்களும், பாடல்களின் அடி களும் அவ்வாறாயின.
அப்பர் சுந்தரரது திருப்பதிகங்களில் சிதலை வாய்ப்பட்டன பல.
கவுணியர் - கவுணிய கோத்திரத்தினர்.
1 ஓர் சேய்- ஒப்புயர்வற்ற பிள்ளை.
அங்கு - அச்சீகாழித் தலத்தில்.
வள்ளல் - வீடுபேற்றினை கொள்ளை கொள்ள விட்டவர்.

பண் :

பாடல் எண் : 63

சிந்தனையால் சீரார் கவுணியர்க்கோர் சேய்என்ன
வந்தங் கவதரித்த வள்ளலை அந்தமில் சீர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி-59-63.
ஞானசம்பந்தர் அவதாரப் பயன்.
மல் - வளப்பம்.
அஃது ஐகாரம் பெற்று, ``மல்லை`` என வந்தது.
ஆதியாம் வென்றிக் கவி - தொன்று தொட்டு வெற்றி பெற்று வந்த அருமை நல்லார் உளரேல் மழை பொய்யாது பொழியும்; மழை பொய்யாது பொழியவே வறுமை அணுகாதாம்.
ஒன்றி - ஒற்றுமைப்பட்டு.
பனுவல் - பதிகம்.
``ஞானசம்பந்தர் பதினாறாயிரம் திருப்பதிகங்களை அருளிச் செய்தார்`` என்பர்.
கிடைத்தவை முந்நூற்றெண்பத்து மூன்று திருப்பதிகங்களே.
ஏனைய சிதலைவாய்ப்பட்டன கிடைத்த திருப் பதிகங்களிலும் ஆங்காங்குச் சில பாடல்களும், பாடல்களின் அடி களும் அவ்வாறாயின.
அப்பர் சுந்தரரது திருப்பதிகங்களில் சிதலை வாய்ப்பட்டன பல.
கவுணியர் - கவுணிய கோத்திரத்தினர்.
1 ஓர் சேய்- ஒப்புயர்வற்ற பிள்ளை.
அங்கு - அச்சீகாழித் தலத்தில்.
வள்ளல் - வீடுபேற்றினை கொள்ளை கொள்ள விட்டவர்.

பண் :

பாடல் எண் : 64

ஞானச் சுடர்விளக்கை நற்றவத்தோர் கற்பகத்தை
மான மறைஅவற்றின் வான்பொருளை - ஆனசீர்த்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி-64-65: ஞான சம்பந்தரது பெருமை.
64 - கற்பகம் வேண்டுவார் வேண்டுவதை வேண்டியவாறே கொடுக்கும் தெய்வ மரம்.
அஃது இங்கு உவம ஆகுபெயராய் வந்தது.
கணவன் உயிரைப் பெற விரும்பிய வணிகப் பெண்ணிற்கு அதனை அங்ஙனமே வழங்கியது, அருமை மகளை இழந்து வருந்திய வணிகர்க்கு அவளை எழுப்பித் தந்தது முதலியவற்றை இங்கு நினைக்க.
மானம் - பெருமை.
வான் பொருள் - முடிநிலைப் பொருள்.
அது சிவஞானம் சிவஞானம் உடையவரை, உயர்வு தோன்ற, ``சிவஞானம்`` என்றே பாற்படுத்துக் கூறினார்.
``ஞானத்தின் திருஉருவை`` எனச் சேக்கிழாருங் கூறினார்.
1 65- சீர்த் தத்துவம் - சிறந்த உம்மை.
தத்துவன் - உண்மையை உபதேசித்தருள்பவன்.
நித்தன் - நிலையுடைய புகழ் உடம்பைப் பெற்றவன்.
தவர் - தவம் செய்வோர்.
வித்தகம் - சதுரப்பாடு; திறமை.
இது சமண் சமயத்தவரோடு வாதம் புரிகையில் இனிது விளங்கிற்று.
விடலை - இளங் காளை; பதினாறு வயதிற்கு உட்பட்டவன்.
தெவ்வர்- பகைமைகொண்ட சமணர்.
அடல் - வலிமை.
உரும் - இடி.
தெவ் வரை, `பாம்பு` என்னாமையால், இஃது ஏகதேச உருவகம்.
``சிங்கம், குஞ்சரம்`` என்பன காதற் சொற்கள்.

பண் :

பாடல் எண் : 65

தத்துவனை நித்தனைச் சைவத் தவர்அரசை
வித்தகத்தால் ஓங்கு விடலையை முத்தமிழின்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ணி-64-65: ஞான சம்பந்தரது பெருமை.
64 - கற்பகம் வேண்டுவார் வேண்டுவதை வேண்டியவாறே கொடுக்கும் தெய்வ மரம்.
அஃது இங்கு உவம ஆகுபெயராய் வந்தது.
கணவன் உயிரைப் பெற விரும்பிய வணிகப் பெண்ணிற்கு அதனை அங்ஙனமே வழங்கியது, அருமை மகளை இழந்து வருந்திய வணிகர்க்கு அவளை எழுப்பித் தந்தது முதலியவற்றை இங்கு நினைக்க.
மானம் - பெருமை.
வான் பொருள் - முடிநிலைப் பொருள்.
அது சிவஞானம் சிவஞானம் உடையவரை, உயர்வு தோன்ற, ``சிவஞானம்`` என்றே பாற்படுத்துக் கூறினார்.
``ஞானத்தின் திருஉருவை`` எனச் சேக்கிழாருங் கூறினார்.
1 65- சீர்த் தத்துவம் - சிறந்த உம்மை.
தத்துவன் - உண்மையை உபதேசித்தருள்பவன்.
நித்தன் - நிலையுடைய புகழ் உடம்பைப் பெற்றவன்.
தவர் - தவம் செய்வோர்.
வித்தகம் - சதுரப்பாடு; திறமை.
இது சமண் சமயத்தவரோடு வாதம் புரிகையில் இனிது விளங்கிற்று.
விடலை - இளங் காளை; பதினாறு வயதிற்கு உட்பட்டவன்.
தெவ்வர்- பகைமைகொண்ட சமணர்.
அடல் - வலிமை.
உரும் - இடி.
தெவ் வரை, `பாம்பு` என்னாமையால், இஃது ஏகதேச உருவகம்.
``சிங்கம், குஞ்சரம்`` என்பன காதற் சொற்கள்.

பண் :

பாடல் எண் : 66

செஞ்சொற் பொருள்பயந்த சிங்கத்தைத் தெவ்வருயிர்
அஞ்சத் திகழ்ந்த அடலுருமை எஞ்சாமை

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 67

ஆதிச் சிவனருளால் அம்பொன்செய் வட்டிலில்
கோதில் அமிர்தநுகர் குஞ்சரத்தைத் தீதறுசீர்க்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 68

காலத் தொகுதியும் நான்மறையின் காரணமும்
மூலப் பொருளும் முழுதுணர்ந்த சீலத்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

காலம், பொதுவாக `ஒன்று` எனச் சொல்லப்பட்டாலும் நொடி, நாழிகை முதலாகவும், இறப்பு, நிகழ்வு, எதிர்வாகவும் பல ஆதலின் ``காலத் தொகுதி`` என்றார்.
இதனால் முக்காலத்தையும் உணர்ந்தமை பெறப்பட்டது.
நான்மறையின் காரணம் நாதம்.
அதற்கு மூலம் தூமாயை.
இவற்றை உணரவே இவற்றுள் அடங்கிய அனைத்துப் பொருள்களும் உணரப்பட்டன ஆதல் பற்றி, ``முழு துணர்ந்த திருஞான சம்பந்தன்`` என்றார்.
`ஞானிகள் முழுதொருங் குணர்ந்தவர்` என்பதை இங்கு நினைவு கூர்க.
இவர்களது இயல்பை, மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியில் ஆற்றிய அறிவின் தேயமும் என்றார் தொல்காப்பியர்.

பண் :

பாடல் எண் : 69

திருஞான சம்பந்தன் என்றுலகம் சேர்ந்த
ஒரு நாமத் தால்உயர்ந்த கோவை வருபெரு நீர்ப்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 70

பொன்னிவள நாடனைப் பூம்புகலி நாயகனை
மன்னர் தொழுதிறைஞ்சும் மாமணியை முன்னே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மன்னர் - பாண்டியனும், அவனுக்கு மகட் கொடை நேர்ந்த சோழனும்,

பண் :

பாடல் எண் : 71

நிலவு முருகற்கும் நீலநக் கற்கும்
தொலைவில் புகழ்ச்சிறுத்தொண் டற்கும் குலவிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஞானசம்பந்தரோடு நட்புரிமை கொண்ட நாயன்மார் மூவர்.

பண் :

பாடல் எண் : 72

தோழமையாய்த் தொல்லைப் பிறப்பறுத்த சுந்தரனை
மாழைஒண்கண் மாதர் மதனனைச் சூழொளிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நட்புப் பூண்டமையால் அவர்கள் பிறவா நெறியை எய்தினார்.
சுந்தரன் - அழகன்.
மாதரைத் தான் காதலியா தொழியினும் அவர்களால் ஒருதலைக் காமமாகக் காதலிக்கப்படுபவன்.

பண் :

பாடல் எண் : 73

கோதைவேல் தென்னன்றன் கூடற் குலநகரில்
வாதில் அமணர் வலிதொலையக் காதலால்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கோதை - மாலை.
தென்னன் - பாண்டியன்.
கூடல் - மதுரை.
குலம் - மேன்மை.
காதல் - காதுதல்; அழித்தல்.
தொழிற் பெயர்.
அழித்தல், இங்கு ``வாதில் வென்று அழித்தல்``

பண் :

பாடல் எண் : 74

புண்கெழுவு செம்புனல்ஆ றோடப் பொரு தவரை
வண்கழுவில் வைத்த மறையோனை ஒண்கெழுவு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

செம்புனல் - செந்நீர் இரத்தம்.
`அமணர் வலி தொலை வாதில் பொருது காதலால் அவரைச் செம்புனல் ஆறு ஓடக் கழுவில் வைத்த மறையோனை என மாறிக் கூட்டுக.
வாதில் வென்றவரது வெற்றித் தூணாய் நின்றது பற்றிக் கழுமரங்களை ``வண் கழு`` என்றார்.
அவை வெற்றித் தூண்கள் ஆயினமையை, போற்றுச்சீர்ப் பிள்ளை யார்தம்
புகழ்ச்சயத் தம்ப மாகும்
என்னும் திருத்தொண்டர் புராணத்தால் 3 அறிக.

பண் :

பாடல் எண் : 75

ஞாலத் தினர்அறிய மன்னுநனி பள்ளியது
பாலை தனைநெய்த லாக்கியும் காலத்து

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஞானசம்பந்தர் நிகழ்த்திய அற்புதங்கள்;- திரு நனி பள்ளி, பிள்ளையார்க்குத் தாய்ப் பாட்டனார் ஊர்.
அஃது இப்பொழுது `புஞ்சை` என வழங்குகின்றது.
நனி பள்ளி அது - நனி பள்ளியாகிய அந்த நிலம்.
`அதனை` என இரண்டன் உருபு விரிக்க.
பாலதனை - பாலையாய் இருந்ததனை.

பண் :

பாடல் எண் : 76

நீரெதிர்ந்து சென்று நெருப்பிற் குளிர்படைத்தும்
பாரெதிர்ந்த பலவிடங்கள் தீர்த்தும் முன் நேரெழுந்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஞானசம்பந்தர் இட்ட ஏடு வெள்ளத்தில் எதிர் ஏறிச் சென்றதையும், நெருப்பில் குளிர்ச்சி பெற்றிருந்ததையும் அவரே செய்தனவாக ஏற்றிவைத்துக் கூறினார்.
பல் விடங்கள் - பாம்பின் பல்லால் வெளிவிடப்பட்ட நஞ்சுகள்.
நஞ்சு ஒன்றேயாயினும் அதன் வேகம் ஏழாகச் சொல்லப்படுதல் பற்றிப் பன்மையாற் கூறினார்.

பண் :

பாடல் எண் : 77

யாழை முரித்தும் இருங்கதவம் தான் அடைத்தும்
சூழ்புனலில் ஓடத் தொழில்புரிந்தும் தாழ்பொழில்சூழ்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஞானசம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணநாயனார் தமது யாழினைத் தாமே முறிக்க முயலும்படி யாழ் மூரிப் பதிகம் பாடினமை, திருமறைக் காட்டில் மறைக் கதவை அப்பர் திறக்கப்பாடியபின் அடைக்கப் பாடினமை

பண் :

பாடல் எண் : 78

கொங்கிற் பனிநோய் பரிசனத்தைத் தீர்ப்பித்தும்
துங்கப் புரிசை தொகுமிழலை அங்கதனில்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திருக்கொள்ளம் பூதூரில் ஆற்றில் ஓட்டுவார் இன்றியே ஓடம் ஓடப் பாடினமை, திருச்செங்கோட்டில் கால வேறு பாட்டால் வருகின்ற காய்ச்சல் நோய் வாராதிருக்கப் பாடினமை

பண் :

பாடல் எண் : 79

நித்தன் செழுங்காசு கொண்டுநிகழ் நெல்வாயில்
முத்தின் சிவிகை முதல் கொண்டு அத்தகுசீர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திருவீழி மிழலையில் இறைவன் வாசி தீர்ந்த காசு தரப் பெற்றமை, திரு நெல்வாயில் அரத்துறையில் முத்துச் சிவிகை முதலியன பெற்றமை

பண் :

பாடல் எண் : 80

மாயிரு ஞாலத்து மன்ஆ வடுதுறைபுக்
காயிரஞ் செம்பொ னதுகொண்டும் ஆய்வரிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

) திருவாவடுதுறையில் (தம் தந்தையார் செய்ய நினைத்த வேள்விக்காக) பொற்காசு ஆயிரம் நிறைந்த கிழியை இறைவன் அருளப் பெற்றமையும்

பண் :

பாடல் எண் : 81

மாண்புதிகழ் எம்பெருமான் மன்னுதிரு ஓத்தூரில்
ஆண்பனைகள் பெண்பனைக ளாக்கியும் பாண்பரிசில்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திருஓத்தூரில் ஓர் அடியவர்க்காக ஆண்பனை பெண்பனையாகப் பாடினமையும்

பண் :

பாடல் எண் : 82

கைப்பாணி ஒத்திக்கா ழிக்கோலக் காவிற்பொற்
சப்பாணி கொண்டும் தராதலத்துள் எப்பொழுதும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பாணி`` இரண்டில் முன்னது தாலம்.
`பாணர் குலத்தவரது தன்மைபோலக் கையால் தாளம் ஒத்தி` என்க.
சப்பாணி - சப்பாணி கொட்டுதல்.
அஃதாவது இரு கைகளையும் ஒன்று சேர்த்துக் கொட்டுதல்.
`சப்பாணிக்கு` என நான்கன் உருபு விரிக்க.
``பொன்`` என்பது ஆகுபெயராய்ப் பொன்னால் ஆகிய தாளத்தைக் குறித்தது.
`பொற்றாளத்தைச் சப்பாணி கொட்டுதற்குப் பெற்று` என உரைக்க.
தரா - பூமி.
தலம் - இடம்.
தராதலத்துள் - நிலத்தினிடத்துள்.

பண் :

பாடல் எண் : 83

நீக்கரிய இன்பத் திராகமிருக் குக்குறள்
நோக்கரிய பாசுரம் பல் பத்தோடு மாக்கரிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஞானசம்பந்தர் அருளிச் செய்த பதிக வகைகள்:- இராகம் - முடுகிசை.
இஃது `அராகம்` என்றும் சொல்லப் படும்.
இருக்குக் குறள் - மந்திரம் போலச் சுருக்கமான குறுகிய பாடல்கள்.
பாசுரம் - இன்றியமையாப் பொருளை அறிவுறுத்தும் பாடல்.
பல் பத்து - பல் பெயர்ப் பத்து.
இது சீகாழியின் பெயர்களை யெல்லாம் தொகுத்துக் கூறுவது.
மா - பெரிய; என்றது ``பேரியாழ்`` என்பதாம்.
கருமை, வார்க் கட்டின் கருமை.
யாழ் மூரி - யாழின் அளவைக் கடந்த பதிகம்.
மூரி - பெரியது.
சக்கர மாற்று கோமூத்திரி, எழுகூற்றிருக்கை ஆகிய ஏனைச் சித்திரக் கவிகளும், யமகம், ஏக பாதம் ஆகிய மிறைக் கவிகளும் இனம் பற்றித் தழுவிக் கொள்ளப் படும்.
இனித் தானச் சதி, ஈரடிமேல் வைப்பு, நாலடிமேல் வைப்பு ஆகியவைகளும் ஒருவகை மிறைக்கவிகளே.

பண் :

பாடல் எண் : 84

யாழ்மூரி சக்கரமாற் றீரடி முக்காலும்
பாழிமையால் பாரகத்தோர் தாம்உய்ய ஊழி

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈரடி - இரண்டடிப் பாடல்கள்.
முக்கால் - மூன்றடிப் பாடல்கள்; இவற்றில் இடையடி இடை மடக்காய் வரும்.
பாழிமை - வலிமை.

பண் :

பாடல் எண் : 85

உரைப்பமரும் பல்புகழால் ஓங்கஉமை கோனைத்
திருப்பதிகம் பாடவல்ல சேயை விருப்போடு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஊழி உரைப்ப அமரும் - (மேற் கூறிய பாடல்களை யாவரும்) நீடுழி காலம் பாடும் படி நிலைத்திருக்கின்ற காரணத்தால் `உரைப்ப` என்பதில் அகரம் தொகுத்தல்.
`பல் புகழால் ஓங்கப் பாட வல்ல சேய்` என்க.
சேய் - பிள்ளை.
இங்கு, `திருப்பதிகம்` தேவாரங் களைக் குறித்து வாளாபெயராய் நின்றது.

பண் :

பாடல் எண் : 86

நண்ணு புகழ்மறையோர் நாற்பத்தெண் ணாயிரவர்
எண்ணின் முனிவரர் ஈட்டத்துப் பண்அமரும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சீகாழி அந்தணர்களுடன் தெய்வ முனிவர் நாற்பத் தெண்ணாயிரவரும் ஞானசம்பந்தரைச் சூழ்ந்திருந்தனர்` என்பதாம்.
அம்முனிவர் விண்வெளியிலே நின்றனர், என்க.
எண்ணின் - எண்ணினையுடைய.
பண் - பண்ணுதல்; ஆயத்தப் படுத்தல்.
அமரும் பொருந்திய.
87-ஓலக்கம் - கொலு.

பண் :

பாடல் எண் : 87

ஒலக்கத் துள்இருப்ப ஒண்கோயில் வாயிலின்கண்
கோலக் கடைகுறுகிக் கும்பிட் டாங் காலும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கோ இல் - தலைவரது இல்லம்.
கோலக் கடை - அழகிய இடம்.
ஆலும் - ஆரவாரிக்கின்ற (வேதத்தை ஓதுகின்ற

பண் :

பாடல் எண் : 88

புகலி வளநகருட் பூசுரர் புக் காங்
கிகல்இல் புகழ்பரவி ஏத்திப் புகலிசேர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நகருள் வாழும் பூசுரர் கடைக் குறுகிக் கும்பிட்டு` என மேலே கூட்டுக.
இக் கும்பிடு வாயிலுக்குச் செய்தது.
``வந்து அங்கு அவதரித்த வள்ளலை`` என்பது முதல் (63) ``திருப்பதிகம் பாட வல்ல சேயை`` என்பது முடிய ஒருபொருள்மேல் வந்த பல பெயர்களும் ஏற்று நின்ற இரண்டன் உருபுகள் அனைத்தும் ஒரு தொடராய் அடுக்கி, இங்குப் போந்த, ``கும்பிட்டு`` என்பதனோடே முடிந்தன.
`ஆங்குக் கும்பிட்டு` எனவும், `ஆங்கு ஏத்தி` எனவும் முடித்துக் கொள்க.
இகல் இல் - மாறுபாடு இல்லாத.

பண் :

பாடல் எண் : 89

வீதி எழுந்தருள வேண்டும் என விண்ணப்பம்
ஆதரத்தால் செய்ய அவர்க்கருளி நீதியால்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஆதரம் - விருப்பம்.
அருளி - உடன்பட்டு.

பண் :

பாடல் எண் : 90

கேதகையும் சண்பகமும் நேர்கிடத்திக் கீழ்த்தாழ்ந்த
மாதவியின் போதை மருங்கணைத்துக் கோதில்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஞானசம்பந்தருக்குத் தலைக்கோலமாகச் சூட்டப் பெற்ற மலர் வகைகள்.
கேதகை - கைதை; செந்தாழை.
மாதவியின் போது - வனமல்லிகைப் போது.
கோதில் - குற்றம் இல்லாத.
இரு வேலி - வெட்டி வேர்.
`இரு வேரி` என்பதே பாடம் என்பாரும் உளர்.
மரு - மருக் கொழுந்து.
மல்லிகை - நாட்டு மல்லிகை.
கரு முகை - கருங்குவளை அரும்பு.
கழுநீர் - செங்கழு நீர்.
முருகு இயலும் - நறுமணம் கமழ்கின்ற.
புன்னாகம் - புன்னை மலர்.
`இருள் வாசி` என்பது மருவி, `இருவாட்சி` என வழங்கப்படுகின்றது.
`நள்ளிருள் வேளையில் மலர்ந்து வாசனை வீசுவது` என்பது `இருள்வாசி` என்பதன் பொருள்.
இது குறிஞ்சிப் பாட்டுள் ``நள்ளிருள் நாறி`` 1 எனச் சொல்லப்பட்டது.
`புன்னாகந் தன்னை இருவாட்சி புணர` என்க.
முல்லை - நாட்டு முல்லை.
மௌவல் - காட்டு முல்லை.
``செருந்தி செம்பொன் மலரும் சோலை இதுவோ திருவாரூர்`` என்னும் சுந்தரர் பாடலால் செருந்திப் பூப் பொன்னிறம் உடைத்தாதல் விளங்கும்.
இதனை, `செம்பருத்தி` என்றல் பொருந்தாது.
குருந்தம் - குருந்த மரப் பூ.
மாடு - பக்கம்.
`கமலக் கண்ணி` என இயைத்து `தாமரை மலரால் ஆகிய முடி மாலை` என உரைக்க.
தாது - மகரந்தம்.
குஞ்சி - ஆண் பிள்ளையின் (ஞானசம்பந்தரது) தலை மயிர்.
போது - பேரரும்பு.
கோலம் புனைவித்தவர்கள் முன்பு விண்ணப்பம் செய்த பூசுரர்கள்.
மேலும் ஒப்பனை செய்வோரும் அவரே.

பண் :

பாடல் எண் : 91

இருவேலி தன்னை இடையிருத்தி ஈண்டு
மருவோடு மல்லிகையை வைத் தாங் கருகே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஞானசம்பந்தருக்குத் தலைக்கோலமாகச் சூட்டப் பெற்ற மலர் வகைகள்.
கேதகை - கைதை; செந்தாழை.
மாதவியின் போது - வனமல்லிகைப் போது.
கோதில் - குற்றம் இல்லாத.
இரு வேலி - வெட்டி வேர்.
`இரு வேரி` என்பதே பாடம் என்பாரும் உளர்.
மரு - மருக் கொழுந்து.
மல்லிகை - நாட்டு மல்லிகை.
கரு முகை - கருங்குவளை அரும்பு.
கழுநீர் - செங்கழு நீர்.
முருகு இயலும் - நறுமணம் கமழ்கின்ற.
புன்னாகம் - புன்னை மலர்.
`இருள் வாசி` என்பது மருவி, `இருவாட்சி` என வழங்கப்படுகின்றது.
`நள்ளிருள் வேளையில் மலர்ந்து வாசனை வீசுவது` என்பது `இருள்வாசி` என்பதன் பொருள்.
இது குறிஞ்சிப் பாட்டுள் ``நள்ளிருள் நாறி`` 1 எனச் சொல்லப்பட்டது.
`புன்னாகந் தன்னை இருவாட்சி புணர` என்க.
முல்லை - நாட்டு முல்லை.
மௌவல் - காட்டு முல்லை.
``செருந்தி செம்பொன் மலரும் சோலை இதுவோ திருவாரூர்`` என்னும் சுந்தரர் பாடலால் செருந்திப் பூப் பொன்னிறம் உடைத்தாதல் விளங்கும்.
இதனை, `செம்பருத்தி` என்றல் பொருந்தாது.
குருந்தம் - குருந்த மரப் பூ.
மாடு - பக்கம்.
`கமலக் கண்ணி` என இயைத்து `தாமரை மலரால் ஆகிய முடி மாலை` என உரைக்க.
தாது - மகரந்தம்.
குஞ்சி - ஆண் பிள்ளையின் (ஞானசம்பந்தரது) தலை மயிர்.
போது - பேரரும்பு.
கோலம் புனைவித்தவர்கள் முன்பு விண்ணப்பம் செய்த பூசுரர்கள்.
மேலும் ஒப்பனை செய்வோரும் அவரே.

பண் :

பாடல் எண் : 92

கருமுகையைக் கைகலக்க வைத்துக் கழுநீர்ப்
பெருகு பிளவிடையே பெய்து முருகியலும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஞானசம்பந்தருக்குத் தலைக்கோலமாகச் சூட்டப் பெற்ற மலர் வகைகள்.
கேதகை - கைதை; செந்தாழை.
மாதவியின் போது - வனமல்லிகைப் போது.
கோதில் - குற்றம் இல்லாத.
இரு வேலி - வெட்டி வேர்.
`இரு வேரி` என்பதே பாடம் என்பாரும் உளர்.
மரு - மருக் கொழுந்து.
மல்லிகை - நாட்டு மல்லிகை.
கரு முகை - கருங்குவளை அரும்பு.
கழுநீர் - செங்கழு நீர்.
முருகு இயலும் - நறுமணம் கமழ்கின்ற.
புன்னாகம் - புன்னை மலர்.
`இருள் வாசி` என்பது மருவி, `இருவாட்சி` என வழங்கப்படுகின்றது.
`நள்ளிருள் வேளையில் மலர்ந்து வாசனை வீசுவது` என்பது `இருள்வாசி` என்பதன் பொருள்.
இது குறிஞ்சிப் பாட்டுள் ``நள்ளிருள் நாறி`` 1 எனச் சொல்லப்பட்டது.
`புன்னாகந் தன்னை இருவாட்சி புணர` என்க.
முல்லை - நாட்டு முல்லை.
மௌவல் - காட்டு முல்லை.
``செருந்தி செம்பொன் மலரும் சோலை இதுவோ திருவாரூர்`` என்னும் சுந்தரர் பாடலால் செருந்திப் பூப் பொன்னிறம் உடைத்தாதல் விளங்கும்.
இதனை, `செம்பருத்தி` என்றல் பொருந்தாது.
குருந்தம் - குருந்த மரப் பூ.
மாடு - பக்கம்.
`கமலக் கண்ணி` என இயைத்து `தாமரை மலரால் ஆகிய முடி மாலை` என உரைக்க.
தாது - மகரந்தம்.
குஞ்சி - ஆண் பிள்ளையின் (ஞானசம்பந்தரது) தலை மயிர்.
போது - பேரரும்பு.
கோலம் புனைவித்தவர்கள் முன்பு விண்ணப்பம் செய்த பூசுரர்கள்.
மேலும் ஒப்பனை செய்வோரும் அவரே.

பண் :

பாடல் எண் : 93

புன்னாகந் தன்னைப் புணர இருவாச்சி
தன் அயலே முல்லை தலை எடுப்ப மன்னிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஞானசம்பந்தருக்குத் தலைக்கோலமாகச் சூட்டப் பெற்ற மலர் வகைகள்.
கேதகை - கைதை; செந்தாழை.
மாதவியின் போது - வனமல்லிகைப் போது.
கோதில் - குற்றம் இல்லாத.
இரு வேலி - வெட்டி வேர்.
`இரு வேரி` என்பதே பாடம் என்பாரும் உளர்.
மரு - மருக் கொழுந்து.
மல்லிகை - நாட்டு மல்லிகை.
கரு முகை - கருங்குவளை அரும்பு.
கழுநீர் - செங்கழு நீர்.
முருகு இயலும் - நறுமணம் கமழ்கின்ற.
புன்னாகம் - புன்னை மலர்.
`இருள் வாசி` என்பது மருவி, `இருவாட்சி` என வழங்கப்படுகின்றது.
`நள்ளிருள் வேளையில் மலர்ந்து வாசனை வீசுவது` என்பது `இருள்வாசி` என்பதன் பொருள்.
இது குறிஞ்சிப் பாட்டுள் ``நள்ளிருள் நாறி`` 1 எனச் சொல்லப்பட்டது.
`புன்னாகந் தன்னை இருவாட்சி புணர` என்க.
முல்லை - நாட்டு முல்லை.
மௌவல் - காட்டு முல்லை.
``செருந்தி செம்பொன் மலரும் சோலை இதுவோ திருவாரூர்`` என்னும் சுந்தரர் பாடலால் செருந்திப் பூப் பொன்னிறம் உடைத்தாதல் விளங்கும்.
இதனை, `செம்பருத்தி` என்றல் பொருந்தாது.
குருந்தம் - குருந்த மரப் பூ.
மாடு - பக்கம்.
`கமலக் கண்ணி` என இயைத்து `தாமரை மலரால் ஆகிய முடி மாலை` என உரைக்க.
தாது - மகரந்தம்.
குஞ்சி - ஆண் பிள்ளையின் (ஞானசம்பந்தரது) தலை மயிர்.
போது - பேரரும்பு.
கோலம் புனைவித்தவர்கள் முன்பு விண்ணப்பம் செய்த பூசுரர்கள்.
மேலும் ஒப்பனை செய்வோரும் அவரே.

பண் :

பாடல் எண் : 94

வண் செருந்தி வாய்நெகிழ்ப்ப மௌவல் அலர் படைப்பத்
தண் குருந்தம் மாடே தலை இறக்க ஒண்கமலத்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஞானசம்பந்தருக்குத் தலைக்கோலமாகச் சூட்டப் பெற்ற மலர் வகைகள்.
கேதகை - கைதை; செந்தாழை.
மாதவியின் போது - வனமல்லிகைப் போது.
கோதில் - குற்றம் இல்லாத.
இரு வேலி - வெட்டி வேர்.
`இரு வேரி` என்பதே பாடம் என்பாரும் உளர்.
மரு - மருக் கொழுந்து.
மல்லிகை - நாட்டு மல்லிகை.
கரு முகை - கருங்குவளை அரும்பு.
கழுநீர் - செங்கழு நீர்.
முருகு இயலும் - நறுமணம் கமழ்கின்ற.
புன்னாகம் - புன்னை மலர்.
`இருள் வாசி` என்பது மருவி, `இருவாட்சி` என வழங்கப்படுகின்றது.
`நள்ளிருள் வேளையில் மலர்ந்து வாசனை வீசுவது` என்பது `இருள்வாசி` என்பதன் பொருள்.
இது குறிஞ்சிப் பாட்டுள் ``நள்ளிருள் நாறி`` 1 எனச் சொல்லப்பட்டது.
`புன்னாகந் தன்னை இருவாட்சி புணர` என்க.
முல்லை - நாட்டு முல்லை.
மௌவல் - காட்டு முல்லை.
``செருந்தி செம்பொன் மலரும் சோலை இதுவோ திருவாரூர்`` என்னும் சுந்தரர் பாடலால் செருந்திப் பூப் பொன்னிறம் உடைத்தாதல் விளங்கும்.
இதனை, `செம்பருத்தி` என்றல் பொருந்தாது.
குருந்தம் - குருந்த மரப் பூ.
மாடு - பக்கம்.
`கமலக் கண்ணி` என இயைத்து `தாமரை மலரால் ஆகிய முடி மாலை` என உரைக்க.
தாது - மகரந்தம்.
குஞ்சி - ஆண் பிள்ளையின் (ஞானசம்பந்தரது) தலை மயிர்.
போது - பேரரும்பு.
கோலம் புனைவித்தவர்கள் முன்பு விண்ணப்பம் செய்த பூசுரர்கள்.
மேலும் ஒப்பனை செய்வோரும் அவரே.

பண் :

பாடல் எண் : 95

தாதடுத்த கண்ணியால் தண்நறுங் குஞ்சிமேற்
போதடுத்த கோலம் புனைவித்துக் காதில்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஞானசம்பந்தருக்குத் தலைக்கோலமாகச் சூட்டப் பெற்ற மலர் வகைகள்.
கேதகை - கைதை; செந்தாழை.
மாதவியின் போது - வனமல்லிகைப் போது.
கோதில் - குற்றம் இல்லாத.
இரு வேலி - வெட்டி வேர்.
`இரு வேரி` என்பதே பாடம் என்பாரும் உளர்.
மரு - மருக் கொழுந்து.
மல்லிகை - நாட்டு மல்லிகை.
கரு முகை - கருங்குவளை அரும்பு.
கழுநீர் - செங்கழு நீர்.
முருகு இயலும் - நறுமணம் கமழ்கின்ற.
புன்னாகம் - புன்னை மலர்.
`இருள் வாசி` என்பது மருவி, `இருவாட்சி` என வழங்கப்படுகின்றது.
`நள்ளிருள் வேளையில் மலர்ந்து வாசனை வீசுவது` என்பது `இருள்வாசி` என்பதன் பொருள்.
இது குறிஞ்சிப் பாட்டுள் ``நள்ளிருள் நாறி`` 1 எனச் சொல்லப்பட்டது.
`புன்னாகந் தன்னை இருவாட்சி புணர` என்க.
முல்லை - நாட்டு முல்லை.
மௌவல் - காட்டு முல்லை.
``செருந்தி செம்பொன் மலரும் சோலை இதுவோ திருவாரூர்`` என்னும் சுந்தரர் பாடலால் செருந்திப் பூப் பொன்னிறம் உடைத்தாதல் விளங்கும்.
இதனை, `செம்பருத்தி` என்றல் பொருந்தாது.
குருந்தம் - குருந்த மரப் பூ.
மாடு - பக்கம்.
`கமலக் கண்ணி` என இயைத்து `தாமரை மலரால் ஆகிய முடி மாலை` என உரைக்க.
தாது - மகரந்தம்.
குஞ்சி - ஆண் பிள்ளையின் (ஞானசம்பந்தரது) தலை மயிர்.
போது - பேரரும்பு.
கோலம் புனைவித்தவர்கள் முன்பு விண்ணப்பம் செய்த பூசுரர்கள்.
மேலும் ஒப்பனை செய்வோரும் அவரே.

பண் :

பாடல் எண் : 96

கனவயிர குண்டலங்கள் சேர்த்திக் கழுத்தில்
இனமணியின் ஆரம் இலகப் புனை கனகத்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அணிகல வகைகளும், ஆடையும்.
மணியின் ஆரம் - இரத்தின வடம்.
கனகத் தொத்து - பொன் மணிக் கொத்து.
சுரிகை - வளைவு.
தாளிம்பம் - பதக்கம் போல்வது போலும்! பதக்கத்தில் கீழ்ப் புறத்தில் வளைவு ஒன்றில் பொன்மணிக் கொத்து தொங்கும்படி அது செய்யப்பட்டது என்க.
கண்டிகை - உருத்திராக்கம்.
`பூண்பித்து` என்பதில் பிறவினை தொகுக்கப்பட்டு, ``பூண்டு`` என வந்தது.
கேயூரம் - தோள்வளை; கடகம்.
வாய்மை பெறு நூல் - உண்மையைப் பெற்றுள்ள வேதத்தைக் குறிக்கும் நூல்; பூணூல்.
இது பஞ்சி நூலாய் இருத்தலோடு பொன்னால் செய்யப்பட்ட ஒன்று அணியப்பட்டது; இஃது உலாக் கோலத்திற்குச் சிறப்பைத் தரும்.
தமனியம் - பொன்.
தாழ்வடம் மார்பிற்குக் கீழே வழங்குகின்றது.
தரளக் கோப்பு - முத்து மாலை.
சிமய வரை - சிகரத்தை உடைய மாலை.
இஃது அடையடுத்த ஆகுபெயராய், மலையினது அகலத்தைக் குறித்தது.
`வரை போலும் மார்பு` என்க.
அமைவுற்ற வெண்ணீற்றின் ஒண்களவம் மட்டித்து - முன்பே வழிபாட்டுக் காலத்தில் அணியப் பட்டிருந்த திருவெண்ணீற்றின்மேல் இப்பொழுது சந்தனக் கலவையைப் பூசி.
ஒள் நூல் - பட்டிழை.
கலிங்கம் - ஆடை.
``புனை வித்து`` (95) என்பது முதல், ``புனைந்து`` (100) என்பது முடிய வந்து `செய்து` என் எச்சங்கள் எண்ணுப் பொருளவாய் வந்தமையின் இங்கு (100) ``புனைந்து`` என்பதை, `புனைந்தபின்` எனத் திரித்துக் கொள்க.

பண் :

பாடல் எண் : 97

தொத்தடுத்த பூஞ்சுரிகைச் சோதிசேர் தாளிம்பம்
வைத்து மணிக்கண் டிகைபூண்டு முத்தடுத்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அணிகல வகைகளும், ஆடையும்.
மணியின் ஆரம் - இரத்தின வடம்.
கனகத் தொத்து - பொன் மணிக் கொத்து.
சுரிகை - வளைவு.
தாளிம்பம் - பதக்கம் போல்வது போலும்! பதக்கத்தில் கீழ்ப் புறத்தில் வளைவு ஒன்றில் பொன்மணிக் கொத்து தொங்கும்படி அது செய்யப்பட்டது என்க.
கண்டிகை - உருத்திராக்கம்.
`பூண்பித்து` என்பதில் பிறவினை தொகுக்கப்பட்டு, ``பூண்டு`` என வந்தது.
கேயூரம் - தோள்வளை; கடகம்.
வாய்மை பெறு நூல் - உண்மையைப் பெற்றுள்ள வேதத்தைக் குறிக்கும் நூல்; பூணூல்.
இது பஞ்சி நூலாய் இருத்தலோடு பொன்னால் செய்யப்பட்ட ஒன்று அணியப்பட்டது; இஃது உலாக் கோலத்திற்குச் சிறப்பைத் தரும்.
தமனியம் - பொன்.
தாழ்வடம் மார்பிற்குக் கீழே வழங்குகின்றது.
தரளக் கோப்பு - முத்து மாலை.
சிமய வரை - சிகரத்தை உடைய மாலை.
இஃது அடையடுத்த ஆகுபெயராய், மலையினது அகலத்தைக் குறித்தது.
`வரை போலும் மார்பு` என்க.
அமைவுற்ற வெண்ணீற்றின் ஒண்களவம் மட்டித்து - முன்பே வழிபாட்டுக் காலத்தில் அணியப் பட்டிருந்த திருவெண்ணீற்றின்மேல் இப்பொழுது சந்தனக் கலவையைப் பூசி.
ஒள் நூல் - பட்டிழை.
கலிங்கம் - ஆடை.
``புனை வித்து`` (95) என்பது முதல், ``புனைந்து`` (100) என்பது முடிய வந்து `செய்து` என் எச்சங்கள் எண்ணுப் பொருளவாய் வந்தமையின் இங்கு (100) ``புனைந்து`` என்பதை, `புனைந்தபின்` எனத் திரித்துக் கொள்க.

பண் :

பாடல் எண் : 98

கேயூரம் தோள்மேல் கிடத்திக் கிளர்பொன்னின்
வாய்மை பெறுநூல் வலம்திகழ ஏயும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அணிகல வகைகளும், ஆடையும்.
மணியின் ஆரம் - இரத்தின வடம்.
கனகத் தொத்து - பொன் மணிக் கொத்து.
சுரிகை - வளைவு.
தாளிம்பம் - பதக்கம் போல்வது போலும்! பதக்கத்தில் கீழ்ப் புறத்தில் வளைவு ஒன்றில் பொன்மணிக் கொத்து தொங்கும்படி அது செய்யப்பட்டது என்க.
கண்டிகை - உருத்திராக்கம்.
`பூண்பித்து` என்பதில் பிறவினை தொகுக்கப்பட்டு, ``பூண்டு`` என வந்தது.
கேயூரம் - தோள்வளை; கடகம்.
வாய்மை பெறு நூல் - உண்மையைப் பெற்றுள்ள வேதத்தைக் குறிக்கும் நூல்; பூணூல்.
இது பஞ்சி நூலாய் இருத்தலோடு பொன்னால் செய்யப்பட்ட ஒன்று அணியப்பட்டது; இஃது உலாக் கோலத்திற்குச் சிறப்பைத் தரும்.
தமனியம் - பொன்.
தாழ்வடம் மார்பிற்குக் கீழே வழங்குகின்றது.
தரளக் கோப்பு - முத்து மாலை.
சிமய வரை - சிகரத்தை உடைய மாலை.
இஃது அடையடுத்த ஆகுபெயராய், மலையினது அகலத்தைக் குறித்தது.
`வரை போலும் மார்பு` என்க.
அமைவுற்ற வெண்ணீற்றின் ஒண்களவம் மட்டித்து - முன்பே வழிபாட்டுக் காலத்தில் அணியப் பட்டிருந்த திருவெண்ணீற்றின்மேல் இப்பொழுது சந்தனக் கலவையைப் பூசி.
ஒள் நூல் - பட்டிழை.
கலிங்கம் - ஆடை.
``புனை வித்து`` (95) என்பது முதல், ``புனைந்து`` (100) என்பது முடிய வந்து `செய்து` என் எச்சங்கள் எண்ணுப் பொருளவாய் வந்தமையின் இங்கு (100) ``புனைந்து`` என்பதை, `புனைந்தபின்` எனத் திரித்துக் கொள்க.

பண் :

பாடல் எண் : 99

தமனியத்தின் தாழ்வடமும் தண்தரளக் கோப்பும்
சிமய வரை மார்பிற் சேர்த்தி அமைவுற்ற

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அணிகல வகைகளும், ஆடையும்.
மணியின் ஆரம் - இரத்தின வடம்.
கனகத் தொத்து - பொன் மணிக் கொத்து.
சுரிகை - வளைவு.
தாளிம்பம் - பதக்கம் போல்வது போலும்! பதக்கத்தில் கீழ்ப் புறத்தில் வளைவு ஒன்றில் பொன்மணிக் கொத்து தொங்கும்படி அது செய்யப்பட்டது என்க.
கண்டிகை - உருத்திராக்கம்.
`பூண்பித்து` என்பதில் பிறவினை தொகுக்கப்பட்டு, ``பூண்டு`` என வந்தது.
கேயூரம் - தோள்வளை; கடகம்.
வாய்மை பெறு நூல் - உண்மையைப் பெற்றுள்ள வேதத்தைக் குறிக்கும் நூல்; பூணூல்.
இது பஞ்சி நூலாய் இருத்தலோடு பொன்னால் செய்யப்பட்ட ஒன்று அணியப்பட்டது; இஃது உலாக் கோலத்திற்குச் சிறப்பைத் தரும்.
தமனியம் - பொன்.
தாழ்வடம் மார்பிற்குக் கீழே வழங்குகின்றது.
தரளக் கோப்பு - முத்து மாலை.
சிமய வரை - சிகரத்தை உடைய மாலை.
இஃது அடையடுத்த ஆகுபெயராய், மலையினது அகலத்தைக் குறித்தது.
`வரை போலும் மார்பு` என்க.
அமைவுற்ற வெண்ணீற்றின் ஒண்களவம் மட்டித்து - முன்பே வழிபாட்டுக் காலத்தில் அணியப் பட்டிருந்த திருவெண்ணீற்றின்மேல் இப்பொழுது சந்தனக் கலவையைப் பூசி.
ஒள் நூல் - பட்டிழை.
கலிங்கம் - ஆடை.
``புனை வித்து`` (95) என்பது முதல், ``புனைந்து`` (100) என்பது முடிய வந்து `செய்து` என் எச்சங்கள் எண்ணுப் பொருளவாய் வந்தமையின் இங்கு (100) ``புனைந்து`` என்பதை, `புனைந்தபின்` எனத் திரித்துக் கொள்க.

பண் :

பாடல் எண் : 100

வெண்ணீற்றின் ஒண்களபம் மட்டித்து மேவுதொழில்
ஒண்ணூற் கலிங்கம் உடல்புனைந்து திண் நோக்கில்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அணிகல வகைகளும், ஆடையும்.
மணியின் ஆரம் - இரத்தின வடம்.
கனகத் தொத்து - பொன் மணிக் கொத்து.
சுரிகை - வளைவு.
தாளிம்பம் - பதக்கம் போல்வது போலும்! பதக்கத்தில் கீழ்ப் புறத்தில் வளைவு ஒன்றில் பொன்மணிக் கொத்து தொங்கும்படி அது செய்யப்பட்டது என்க.
கண்டிகை - உருத்திராக்கம்.
`பூண்பித்து` என்பதில் பிறவினை தொகுக்கப்பட்டு, ``பூண்டு`` என வந்தது.
கேயூரம் - தோள்வளை; கடகம்.
வாய்மை பெறு நூல் - உண்மையைப் பெற்றுள்ள வேதத்தைக் குறிக்கும் நூல்; பூணூல்.
இது பஞ்சி நூலாய் இருத்தலோடு பொன்னால் செய்யப்பட்ட ஒன்று அணியப்பட்டது; இஃது உலாக் கோலத்திற்குச் சிறப்பைத் தரும்.
தமனியம் - பொன்.
தாழ்வடம் மார்பிற்குக் கீழே வழங்குகின்றது.
தரளக் கோப்பு - முத்து மாலை.
சிமய வரை - சிகரத்தை உடைய மாலை.
இஃது அடையடுத்த ஆகுபெயராய், மலையினது அகலத்தைக் குறித்தது.
`வரை போலும் மார்பு` என்க.
அமைவுற்ற வெண்ணீற்றின் ஒண்களவம் மட்டித்து - முன்பே வழிபாட்டுக் காலத்தில் அணியப் பட்டிருந்த திருவெண்ணீற்றின்மேல் இப்பொழுது சந்தனக் கலவையைப் பூசி.
ஒள் நூல் - பட்டிழை.
கலிங்கம் - ஆடை.
``புனை வித்து`` (95) என்பது முதல், ``புனைந்து`` (100) என்பது முடிய வந்து `செய்து` என் எச்சங்கள் எண்ணுப் பொருளவாய் வந்தமையின் இங்கு (100) ``புனைந்து`` என்பதை, `புனைந்தபின்` எனத் திரித்துக் கொள்க.

பண் :

பாடல் எண் : 101

காற்றுருமோ குன்றோ கடலோ அடல்உருமோ
கூற்றுருவோ என்னக் கொதித்தெழுந்து சீற்றத்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உலாவின் பொருட்டுக் கொண்டு வரப்பட்ட யானையின் வருணனை:- (100) நோக்கு - இங்குத் தோற்றம்.
`நோக்கினோடு` என `ஒடு` உருபு விரிக்க.
`உரும்` இரண்டில் முன்னது ஆகு பெயராய் மேகத்தைக் குறித்தது.
நடையின் வேகம் பற்றி காற்றோடு கூடிய மேகம் ஐய உவமையாகச் சொல்லப்பட்டது.
குன்று - வடிவு பற்றியும், கடல் பரந்து தோன்றும் கருமை பற்றியும், உரும் (இடி) பிளிறும் குரல் பற்றியும், கூற்று (யமன்) கொலைத் தொழில் பற்றியும் உடன் வைத்து ஐயுறப்பட்டன.
`தழல் உண்டாக விழித்து` என ஒரு சொல் வருவிக்க.
``எதிர்ந்து`` என்று, `முன் வருபவரை எதிர்நோக்கி` என்றபடி.
தால வட்டம், யானையின் காது.
புழை - உள்ளே துளையை உடைய.
தட - பெரிய (102) ``கொண்டு`` என்பது மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு.
எறிந்து - தாக்கி மழை மதம் உவமத் தொகை.
பூத்த - பொலிவு எய்தி.
யானைக்கு அதன் மத நீர் சிறப்பைத் தரும்.
கட தடம் - மத நீர் பாயும் வாவி.
`கடத்தை உடைய காத்திரம்` என்க.
போகம் - இன்பம்.
மதம் மிக்கு ஒழுகுதலால் அதன் போக நிலை மிக்க விளங்கிற்று காத்திரம் - உடல்.
கலித்து - ஆரவாரித்து.
`எங்கும் கலித்து` என மாற்றி யுரைக்க.
கோத்த - கட்டிய.
நிகளம் - சங்கிலி.
போக்கி - அறுத்ததொழித்து.
``இடு வண்டு`` என்பதற்கு.
`தலை யிடுகின்ற வண்டுகள்` என்பது பொருளாகும்.
`யானை தனது மத நீரை நோக்கித் தன்மேல் வந்து மொய்க்கின்ற வண்டுகளைத் தும்பிக்கையால் பற்றிக் கீழே இட்டுத் தேய்த்தல் முதலியன செய்து கலிக்கின்றது - ஆர வாரித்தது` என்க.
நிலத்தை உழக்கி - பூமியைக் காலால் மிதித்துக் குழியாகவும், துகள்களாகவும் செய்து, நிகர் நீத்து - தனக்கு உவமையாக யாதொன்றும் இல்லாதபடி உயர்ந்து.
இடி பெயர - தந்தத்தால் மதில் முதலியவற்றை இடித்தல் தொழில் விட்டு விட்டு எழச் செய்தலால்.
தாளத்து இலுப்பி - தாள வரிசையில் தனது உறுப்புக்களை உழலவிட்டு.
இலுப்புதல் - இஃது ஒரு நாட்டுப் புற வழக்கு.
சில இடங்களில் இஃது, `இளுப்புதல்` என்று சொல்லப்படுகின்றது.
அடு சினம் - எதிர்ப்பட்டோரைக் கொல்லும் அளவு எழுந்த சினம்.
கன்ற - மேலும் கரிதாக.
`முகம் கன்ற` என்க.
பருக்கை யெடுத்து - பருத்த தும்பிக்கையை உயர எடுத்து.
வென்றி மருப்பு உருவ - வெற்றியைத் தரும் தந்தங்கள் ஊடுருவும்படி.
இதனை `வெய்து உயிர்த்து`` என்பதற்குப் பின் கூட்டுக.
வெய்து உயிர்த்தல் - வெப்பமாக (புகை யெழும்படி)ப் பெருமூச்சு எறிந்து.
நிகர் - ஒளி; அழகு.
முன்பு, ``உழக்கி`` எனவும், ``இலுப்பி`` எனவும் (105) எனப் பொதுவாகக் கூறியதைப் பின்பு அவ்வப் பொருள்மேல் வைத்து, ``அவித்து, குத்தி, வீசி`` எனத் தனித்தனியாக வகுத்துக் கூறினார்.
பணம் - யானையை அடக்குவார் பயன்படுத்து ஓர் ஆயும்.
`அதனை யுடைய பாகர்` என்க.
பரிந்து - கிழித்து.
நிணப் பாகும் - கொழுப்புக் குழம்பு.
ஓடை - யானையின் நெற்றிப் பட்டம்.
பரிக்காரர்கள் - யானையின் இரு பக்கத்திலும் கோலைக் கையிற் கொண்டு நடத்திச் செல்லும் பரிக்கோற்காரர்கள் ``காரர்கடாம்`` என்னும் சீரில் ரகர ஒற்று அலகு பெறாது நின்றது.

பண் :

பாடல் எண் : 102

தழல்விழித்து நின்றெதிர்ந்து தாலவட்டம் வீசிப்
புழைத் தடக்கை கொண்டெறிந்து பொங்கி மழை மதத்தால்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உலாவின் பொருட்டுக் கொண்டு வரப்பட்ட யானையின் வருணனை:- (100) நோக்கு - இங்குத் தோற்றம்.
`நோக்கினோடு` என `ஒடு` உருபு விரிக்க.
`உரும்` இரண்டில் முன்னது ஆகு பெயராய் மேகத்தைக் குறித்தது.
நடையின் வேகம் பற்றி காற்றோடு கூடிய மேகம் ஐய உவமையாகச் சொல்லப்பட்டது.
குன்று - வடிவு பற்றியும், கடல் பரந்து தோன்றும் கருமை பற்றியும், உரும் (இடி) பிளிறும் குரல் பற்றியும், கூற்று (யமன்) கொலைத் தொழில் பற்றியும் உடன் வைத்து ஐயுறப்பட்டன.
`தழல் உண்டாக விழித்து` என ஒரு சொல் வருவிக்க.
``எதிர்ந்து`` என்று, `முன் வருபவரை எதிர்நோக்கி` என்றபடி.
தால வட்டம், யானையின் காது.
புழை - உள்ளே துளையை உடைய.
தட - பெரிய (102) ``கொண்டு`` என்பது மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு.
எறிந்து - தாக்கி மழை மதம் உவமத் தொகை.
பூத்த - பொலிவு எய்தி.
யானைக்கு அதன் மத நீர் சிறப்பைத் தரும்.
கட தடம் - மத நீர் பாயும் வாவி.
`கடத்தை உடைய காத்திரம்` என்க.
போகம் - இன்பம்.
மதம் மிக்கு ஒழுகுதலால் அதன் போக நிலை மிக்க விளங்கிற்று காத்திரம் - உடல்.
கலித்து - ஆரவாரித்து.
`எங்கும் கலித்து` என மாற்றி யுரைக்க.
கோத்த - கட்டிய.
நிகளம் - சங்கிலி.
போக்கி - அறுத்ததொழித்து.
``இடு வண்டு`` என்பதற்கு.
`தலை யிடுகின்ற வண்டுகள்` என்பது பொருளாகும்.
`யானை தனது மத நீரை நோக்கித் தன்மேல் வந்து மொய்க்கின்ற வண்டுகளைத் தும்பிக்கையால் பற்றிக் கீழே இட்டுத் தேய்த்தல் முதலியன செய்து கலிக்கின்றது - ஆர வாரித்தது` என்க.
நிலத்தை உழக்கி - பூமியைக் காலால் மிதித்துக் குழியாகவும், துகள்களாகவும் செய்து, நிகர் நீத்து - தனக்கு உவமையாக யாதொன்றும் இல்லாதபடி உயர்ந்து.
இடி பெயர - தந்தத்தால் மதில் முதலியவற்றை இடித்தல் தொழில் விட்டு விட்டு எழச் செய்தலால்.
தாளத்து இலுப்பி - தாள வரிசையில் தனது உறுப்புக்களை உழலவிட்டு.
இலுப்புதல் - இஃது ஒரு நாட்டுப் புற வழக்கு.
சில இடங்களில் இஃது, `இளுப்புதல்` என்று சொல்லப்படுகின்றது.
அடு சினம் - எதிர்ப்பட்டோரைக் கொல்லும் அளவு எழுந்த சினம்.
கன்ற - மேலும் கரிதாக.
`முகம் கன்ற` என்க.
பருக்கை யெடுத்து - பருத்த தும்பிக்கையை உயர எடுத்து.
வென்றி மருப்பு உருவ - வெற்றியைத் தரும் தந்தங்கள் ஊடுருவும்படி.
இதனை `வெய்து உயிர்த்து`` என்பதற்குப் பின் கூட்டுக.
வெய்து உயிர்த்தல் - வெப்பமாக (புகை யெழும்படி)ப் பெருமூச்சு எறிந்து.
நிகர் - ஒளி; அழகு.
முன்பு, ``உழக்கி`` எனவும், ``இலுப்பி`` எனவும் (105) எனப் பொதுவாகக் கூறியதைப் பின்பு அவ்வப் பொருள்மேல் வைத்து, ``அவித்து, குத்தி, வீசி`` எனத் தனித்தனியாக வகுத்துக் கூறினார்.
பணம் - யானையை அடக்குவார் பயன்படுத்து ஓர் ஆயும்.
`அதனை யுடைய பாகர்` என்க.
பரிந்து - கிழித்து.
நிணப் பாகும் - கொழுப்புக் குழம்பு.
ஓடை - யானையின் நெற்றிப் பட்டம்.
பரிக்காரர்கள் - யானையின் இரு பக்கத்திலும் கோலைக் கையிற் கொண்டு நடத்திச் செல்லும் பரிக்கோற்காரர்கள் ``காரர்கடாம்`` என்னும் சீரில் ரகர ஒற்று அலகு பெறாது நின்றது.

பண் :

பாடல் எண் : 103

பூத்த கடதடத்துப் போகம் மிகபொலிந்த
காத்திரத்த தாகிக் கலித்தெங்கும் கோத்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உலாவின் பொருட்டுக் கொண்டு வரப்பட்ட யானையின் வருணனை:- (100) நோக்கு - இங்குத் தோற்றம்.
`நோக்கினோடு` என `ஒடு` உருபு விரிக்க.
`உரும்` இரண்டில் முன்னது ஆகு பெயராய் மேகத்தைக் குறித்தது.
நடையின் வேகம் பற்றி காற்றோடு கூடிய மேகம் ஐய உவமையாகச் சொல்லப்பட்டது.
குன்று - வடிவு பற்றியும், கடல் பரந்து தோன்றும் கருமை பற்றியும், உரும் (இடி) பிளிறும் குரல் பற்றியும், கூற்று (யமன்) கொலைத் தொழில் பற்றியும் உடன் வைத்து ஐயுறப்பட்டன.
`தழல் உண்டாக விழித்து` என ஒரு சொல் வருவிக்க.
``எதிர்ந்து`` என்று, `முன் வருபவரை எதிர்நோக்கி` என்றபடி.
தால வட்டம், யானையின் காது.
புழை - உள்ளே துளையை உடைய.
தட - பெரிய (102) ``கொண்டு`` என்பது மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு.
எறிந்து - தாக்கி மழை மதம் உவமத் தொகை.
பூத்த - பொலிவு எய்தி.
யானைக்கு அதன் மத நீர் சிறப்பைத் தரும்.
கட தடம் - மத நீர் பாயும் வாவி.
`கடத்தை உடைய காத்திரம்` என்க.
போகம் - இன்பம்.
மதம் மிக்கு ஒழுகுதலால் அதன் போக நிலை மிக்க விளங்கிற்று காத்திரம் - உடல்.
கலித்து - ஆரவாரித்து.
`எங்கும் கலித்து` என மாற்றி யுரைக்க.
கோத்த - கட்டிய.
நிகளம் - சங்கிலி.
போக்கி - அறுத்ததொழித்து.
``இடு வண்டு`` என்பதற்கு.
`தலை யிடுகின்ற வண்டுகள்` என்பது பொருளாகும்.
`யானை தனது மத நீரை நோக்கித் தன்மேல் வந்து மொய்க்கின்ற வண்டுகளைத் தும்பிக்கையால் பற்றிக் கீழே இட்டுத் தேய்த்தல் முதலியன செய்து கலிக்கின்றது - ஆர வாரித்தது` என்க.
நிலத்தை உழக்கி - பூமியைக் காலால் மிதித்துக் குழியாகவும், துகள்களாகவும் செய்து, நிகர் நீத்து - தனக்கு உவமையாக யாதொன்றும் இல்லாதபடி உயர்ந்து.
இடி பெயர - தந்தத்தால் மதில் முதலியவற்றை இடித்தல் தொழில் விட்டு விட்டு எழச் செய்தலால்.
தாளத்து இலுப்பி - தாள வரிசையில் தனது உறுப்புக்களை உழலவிட்டு.
இலுப்புதல் - இஃது ஒரு நாட்டுப் புற வழக்கு.
சில இடங்களில் இஃது, `இளுப்புதல்` என்று சொல்லப்படுகின்றது.
அடு சினம் - எதிர்ப்பட்டோரைக் கொல்லும் அளவு எழுந்த சினம்.
கன்ற - மேலும் கரிதாக.
`முகம் கன்ற` என்க.
பருக்கை யெடுத்து - பருத்த தும்பிக்கையை உயர எடுத்து.
வென்றி மருப்பு உருவ - வெற்றியைத் தரும் தந்தங்கள் ஊடுருவும்படி.
இதனை `வெய்து உயிர்த்து`` என்பதற்குப் பின் கூட்டுக.
வெய்து உயிர்த்தல் - வெப்பமாக (புகை யெழும்படி)ப் பெருமூச்சு எறிந்து.
நிகர் - ஒளி; அழகு.
முன்பு, ``உழக்கி`` எனவும், ``இலுப்பி`` எனவும் (105) எனப் பொதுவாகக் கூறியதைப் பின்பு அவ்வப் பொருள்மேல் வைத்து, ``அவித்து, குத்தி, வீசி`` எனத் தனித்தனியாக வகுத்துக் கூறினார்.
பணம் - யானையை அடக்குவார் பயன்படுத்து ஓர் ஆயும்.
`அதனை யுடைய பாகர்` என்க.
பரிந்து - கிழித்து.
நிணப் பாகும் - கொழுப்புக் குழம்பு.
ஓடை - யானையின் நெற்றிப் பட்டம்.
பரிக்காரர்கள் - யானையின் இரு பக்கத்திலும் கோலைக் கையிற் கொண்டு நடத்திச் செல்லும் பரிக்கோற்காரர்கள் ``காரர்கடாம்`` என்னும் சீரில் ரகர ஒற்று அலகு பெறாது நின்றது.

பண் :

பாடல் எண் : 104

கொடு நிகளம் போக்கி நிமிர் கொண்டெழுந்து கோபித்
திடுவண்டை இட்டுக் கலித்து முடுகி

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உலாவின் பொருட்டுக் கொண்டு வரப்பட்ட யானையின் வருணனை:- (100) நோக்கு - இங்குத் தோற்றம்.
`நோக்கினோடு` என `ஒடு` உருபு விரிக்க.
`உரும்` இரண்டில் முன்னது ஆகு பெயராய் மேகத்தைக் குறித்தது.
நடையின் வேகம் பற்றி காற்றோடு கூடிய மேகம் ஐய உவமையாகச் சொல்லப்பட்டது.
குன்று - வடிவு பற்றியும், கடல் பரந்து தோன்றும் கருமை பற்றியும், உரும் (இடி) பிளிறும் குரல் பற்றியும், கூற்று (யமன்) கொலைத் தொழில் பற்றியும் உடன் வைத்து ஐயுறப்பட்டன.
`தழல் உண்டாக விழித்து` என ஒரு சொல் வருவிக்க.
``எதிர்ந்து`` என்று, `முன் வருபவரை எதிர்நோக்கி` என்றபடி.
தால வட்டம், யானையின் காது.
புழை - உள்ளே துளையை உடைய.
தட - பெரிய (102) ``கொண்டு`` என்பது மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு.
எறிந்து - தாக்கி மழை மதம் உவமத் தொகை.
பூத்த - பொலிவு எய்தி.
யானைக்கு அதன் மத நீர் சிறப்பைத் தரும்.
கட தடம் - மத நீர் பாயும் வாவி.
`கடத்தை உடைய காத்திரம்` என்க.
போகம் - இன்பம்.
மதம் மிக்கு ஒழுகுதலால் அதன் போக நிலை மிக்க விளங்கிற்று காத்திரம் - உடல்.
கலித்து - ஆரவாரித்து.
`எங்கும் கலித்து` என மாற்றி யுரைக்க.
கோத்த - கட்டிய.
நிகளம் - சங்கிலி.
போக்கி - அறுத்ததொழித்து.
``இடு வண்டு`` என்பதற்கு.
`தலை யிடுகின்ற வண்டுகள்` என்பது பொருளாகும்.
`யானை தனது மத நீரை நோக்கித் தன்மேல் வந்து மொய்க்கின்ற வண்டுகளைத் தும்பிக்கையால் பற்றிக் கீழே இட்டுத் தேய்த்தல் முதலியன செய்து கலிக்கின்றது - ஆர வாரித்தது` என்க.
நிலத்தை உழக்கி - பூமியைக் காலால் மிதித்துக் குழியாகவும், துகள்களாகவும் செய்து, நிகர் நீத்து - தனக்கு உவமையாக யாதொன்றும் இல்லாதபடி உயர்ந்து.
இடி பெயர - தந்தத்தால் மதில் முதலியவற்றை இடித்தல் தொழில் விட்டு விட்டு எழச் செய்தலால்.
தாளத்து இலுப்பி - தாள வரிசையில் தனது உறுப்புக்களை உழலவிட்டு.
இலுப்புதல் - இஃது ஒரு நாட்டுப் புற வழக்கு.
சில இடங்களில் இஃது, `இளுப்புதல்` என்று சொல்லப்படுகின்றது.
அடு சினம் - எதிர்ப்பட்டோரைக் கொல்லும் அளவு எழுந்த சினம்.
கன்ற - மேலும் கரிதாக.
`முகம் கன்ற` என்க.
பருக்கை யெடுத்து - பருத்த தும்பிக்கையை உயர எடுத்து.
வென்றி மருப்பு உருவ - வெற்றியைத் தரும் தந்தங்கள் ஊடுருவும்படி.
இதனை `வெய்து உயிர்த்து`` என்பதற்குப் பின் கூட்டுக.
வெய்து உயிர்த்தல் - வெப்பமாக (புகை யெழும்படி)ப் பெருமூச்சு எறிந்து.
நிகர் - ஒளி; அழகு.
முன்பு, ``உழக்கி`` எனவும், ``இலுப்பி`` எனவும் (105) எனப் பொதுவாகக் கூறியதைப் பின்பு அவ்வப் பொருள்மேல் வைத்து, ``அவித்து, குத்தி, வீசி`` எனத் தனித்தனியாக வகுத்துக் கூறினார்.
பணம் - யானையை அடக்குவார் பயன்படுத்து ஓர் ஆயும்.
`அதனை யுடைய பாகர்` என்க.
பரிந்து - கிழித்து.
நிணப் பாகும் - கொழுப்புக் குழம்பு.
ஓடை - யானையின் நெற்றிப் பட்டம்.
பரிக்காரர்கள் - யானையின் இரு பக்கத்திலும் கோலைக் கையிற் கொண்டு நடத்திச் செல்லும் பரிக்கோற்காரர்கள் ``காரர்கடாம்`` என்னும் சீரில் ரகர ஒற்று அலகு பெறாது நின்றது.

பண் :

பாடல் எண் : 105

நெடுநிலத்தைத் தான்உழக்கி நின்று நிகற் நீத்
திடிபெயரத் தாளத் திலுப்பி அடுசினத்தால்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உலாவின் பொருட்டுக் கொண்டு வரப்பட்ட யானையின் வருணனை:- (100) நோக்கு - இங்குத் தோற்றம்.
`நோக்கினோடு` என `ஒடு` உருபு விரிக்க.
`உரும்` இரண்டில் முன்னது ஆகு பெயராய் மேகத்தைக் குறித்தது.
நடையின் வேகம் பற்றி காற்றோடு கூடிய மேகம் ஐய உவமையாகச் சொல்லப்பட்டது.
குன்று - வடிவு பற்றியும், கடல் பரந்து தோன்றும் கருமை பற்றியும், உரும் (இடி) பிளிறும் குரல் பற்றியும், கூற்று (யமன்) கொலைத் தொழில் பற்றியும் உடன் வைத்து ஐயுறப்பட்டன.
`தழல் உண்டாக விழித்து` என ஒரு சொல் வருவிக்க.
``எதிர்ந்து`` என்று, `முன் வருபவரை எதிர்நோக்கி` என்றபடி.
தால வட்டம், யானையின் காது.
புழை - உள்ளே துளையை உடைய.
தட - பெரிய (102) ``கொண்டு`` என்பது மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு.
எறிந்து - தாக்கி மழை மதம் உவமத் தொகை.
பூத்த - பொலிவு எய்தி.
யானைக்கு அதன் மத நீர் சிறப்பைத் தரும்.
கட தடம் - மத நீர் பாயும் வாவி.
`கடத்தை உடைய காத்திரம்` என்க.
போகம் - இன்பம்.
மதம் மிக்கு ஒழுகுதலால் அதன் போக நிலை மிக்க விளங்கிற்று காத்திரம் - உடல்.
கலித்து - ஆரவாரித்து.
`எங்கும் கலித்து` என மாற்றி யுரைக்க.
கோத்த - கட்டிய.
நிகளம் - சங்கிலி.
போக்கி - அறுத்ததொழித்து.
``இடு வண்டு`` என்பதற்கு.
`தலை யிடுகின்ற வண்டுகள்` என்பது பொருளாகும்.
`யானை தனது மத நீரை நோக்கித் தன்மேல் வந்து மொய்க்கின்ற வண்டுகளைத் தும்பிக்கையால் பற்றிக் கீழே இட்டுத் தேய்த்தல் முதலியன செய்து கலிக்கின்றது - ஆர வாரித்தது` என்க.
நிலத்தை உழக்கி - பூமியைக் காலால் மிதித்துக் குழியாகவும், துகள்களாகவும் செய்து, நிகர் நீத்து - தனக்கு உவமையாக யாதொன்றும் இல்லாதபடி உயர்ந்து.
இடி பெயர - தந்தத்தால் மதில் முதலியவற்றை இடித்தல் தொழில் விட்டு விட்டு எழச் செய்தலால்.
தாளத்து இலுப்பி - தாள வரிசையில் தனது உறுப்புக்களை உழலவிட்டு.
இலுப்புதல் - இஃது ஒரு நாட்டுப் புற வழக்கு.
சில இடங்களில் இஃது, `இளுப்புதல்` என்று சொல்லப்படுகின்றது.
அடு சினம் - எதிர்ப்பட்டோரைக் கொல்லும் அளவு எழுந்த சினம்.
கன்ற - மேலும் கரிதாக.
`முகம் கன்ற` என்க.
பருக்கை யெடுத்து - பருத்த தும்பிக்கையை உயர எடுத்து.
வென்றி மருப்பு உருவ - வெற்றியைத் தரும் தந்தங்கள் ஊடுருவும்படி.
இதனை `வெய்து உயிர்த்து`` என்பதற்குப் பின் கூட்டுக.
வெய்து உயிர்த்தல் - வெப்பமாக (புகை யெழும்படி)ப் பெருமூச்சு எறிந்து.
நிகர் - ஒளி; அழகு.
முன்பு, ``உழக்கி`` எனவும், ``இலுப்பி`` எனவும் (105) எனப் பொதுவாகக் கூறியதைப் பின்பு அவ்வப் பொருள்மேல் வைத்து, ``அவித்து, குத்தி, வீசி`` எனத் தனித்தனியாக வகுத்துக் கூறினார்.
பணம் - யானையை அடக்குவார் பயன்படுத்து ஓர் ஆயும்.
`அதனை யுடைய பாகர்` என்க.
பரிந்து - கிழித்து.
நிணப் பாகும் - கொழுப்புக் குழம்பு.
ஓடை - யானையின் நெற்றிப் பட்டம்.
பரிக்காரர்கள் - யானையின் இரு பக்கத்திலும் கோலைக் கையிற் கொண்டு நடத்திச் செல்லும் பரிக்கோற்காரர்கள் ``காரர்கடாம்`` என்னும் சீரில் ரகர ஒற்று அலகு பெறாது நின்றது.

பண் :

பாடல் எண் : 106

கன்ற முகம் பருகிக் கையெடுத் தாராய்ந்து
வென்றி மருப்புருவ வெய்துயிர்த் தொன்றிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உலாவின் பொருட்டுக் கொண்டு வரப்பட்ட யானையின் வருணனை:- (100) நோக்கு - இங்குத் தோற்றம்.
`நோக்கினோடு` என `ஒடு` உருபு விரிக்க.
`உரும்` இரண்டில் முன்னது ஆகு பெயராய் மேகத்தைக் குறித்தது.
நடையின் வேகம் பற்றி காற்றோடு கூடிய மேகம் ஐய உவமையாகச் சொல்லப்பட்டது.
குன்று - வடிவு பற்றியும், கடல் பரந்து தோன்றும் கருமை பற்றியும், உரும் (இடி) பிளிறும் குரல் பற்றியும், கூற்று (யமன்) கொலைத் தொழில் பற்றியும் உடன் வைத்து ஐயுறப்பட்டன.
`தழல் உண்டாக விழித்து` என ஒரு சொல் வருவிக்க.
``எதிர்ந்து`` என்று, `முன் வருபவரை எதிர்நோக்கி` என்றபடி.
தால வட்டம், யானையின் காது.
புழை - உள்ளே துளையை உடைய.
தட - பெரிய (102) ``கொண்டு`` என்பது மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு.
எறிந்து - தாக்கி மழை மதம் உவமத் தொகை.
பூத்த - பொலிவு எய்தி.
யானைக்கு அதன் மத நீர் சிறப்பைத் தரும்.
கட தடம் - மத நீர் பாயும் வாவி.
`கடத்தை உடைய காத்திரம்` என்க.
போகம் - இன்பம்.
மதம் மிக்கு ஒழுகுதலால் அதன் போக நிலை மிக்க விளங்கிற்று காத்திரம் - உடல்.
கலித்து - ஆரவாரித்து.
`எங்கும் கலித்து` என மாற்றி யுரைக்க.
கோத்த - கட்டிய.
நிகளம் - சங்கிலி.
போக்கி - அறுத்ததொழித்து.
``இடு வண்டு`` என்பதற்கு.
`தலை யிடுகின்ற வண்டுகள்` என்பது பொருளாகும்.
`யானை தனது மத நீரை நோக்கித் தன்மேல் வந்து மொய்க்கின்ற வண்டுகளைத் தும்பிக்கையால் பற்றிக் கீழே இட்டுத் தேய்த்தல் முதலியன செய்து கலிக்கின்றது - ஆர வாரித்தது` என்க.
நிலத்தை உழக்கி - பூமியைக் காலால் மிதித்துக் குழியாகவும், துகள்களாகவும் செய்து, நிகர் நீத்து - தனக்கு உவமையாக யாதொன்றும் இல்லாதபடி உயர்ந்து.
இடி பெயர - தந்தத்தால் மதில் முதலியவற்றை இடித்தல் தொழில் விட்டு விட்டு எழச் செய்தலால்.
தாளத்து இலுப்பி - தாள வரிசையில் தனது உறுப்புக்களை உழலவிட்டு.
இலுப்புதல் - இஃது ஒரு நாட்டுப் புற வழக்கு.
சில இடங்களில் இஃது, `இளுப்புதல்` என்று சொல்லப்படுகின்றது.
அடு சினம் - எதிர்ப்பட்டோரைக் கொல்லும் அளவு எழுந்த சினம்.
கன்ற - மேலும் கரிதாக.
`முகம் கன்ற` என்க.
பருக்கை யெடுத்து - பருத்த தும்பிக்கையை உயர எடுத்து.
வென்றி மருப்பு உருவ - வெற்றியைத் தரும் தந்தங்கள் ஊடுருவும்படி.
இதனை `வெய்து உயிர்த்து`` என்பதற்குப் பின் கூட்டுக.
வெய்து உயிர்த்தல் - வெப்பமாக (புகை யெழும்படி)ப் பெருமூச்சு எறிந்து.
நிகர் - ஒளி; அழகு.
முன்பு, ``உழக்கி`` எனவும், ``இலுப்பி`` எனவும் (105) எனப் பொதுவாகக் கூறியதைப் பின்பு அவ்வப் பொருள்மேல் வைத்து, ``அவித்து, குத்தி, வீசி`` எனத் தனித்தனியாக வகுத்துக் கூறினார்.
பணம் - யானையை அடக்குவார் பயன்படுத்து ஓர் ஆயும்.
`அதனை யுடைய பாகர்` என்க.
பரிந்து - கிழித்து.
நிணப் பாகும் - கொழுப்புக் குழம்பு.
ஓடை - யானையின் நெற்றிப் பட்டம்.
பரிக்காரர்கள் - யானையின் இரு பக்கத்திலும் கோலைக் கையிற் கொண்டு நடத்திச் செல்லும் பரிக்கோற்காரர்கள் ``காரர்கடாம்`` என்னும் சீரில் ரகர ஒற்று அலகு பெறாது நின்றது.

பண் :

பாடல் எண் : 107

கூடம் அரண்அழித்துக் கோபுரங்க ளைக்குத்தி
நீடு பொழிலை நிகர் அழித் தோடிப்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உலாவின் பொருட்டுக் கொண்டு வரப்பட்ட யானையின் வருணனை:- (100) நோக்கு - இங்குத் தோற்றம்.
`நோக்கினோடு` என `ஒடு` உருபு விரிக்க.
`உரும்` இரண்டில் முன்னது ஆகு பெயராய் மேகத்தைக் குறித்தது.
நடையின் வேகம் பற்றி காற்றோடு கூடிய மேகம் ஐய உவமையாகச் சொல்லப்பட்டது.
குன்று - வடிவு பற்றியும், கடல் பரந்து தோன்றும் கருமை பற்றியும், உரும் (இடி) பிளிறும் குரல் பற்றியும், கூற்று (யமன்) கொலைத் தொழில் பற்றியும் உடன் வைத்து ஐயுறப்பட்டன.
`தழல் உண்டாக விழித்து` என ஒரு சொல் வருவிக்க.
``எதிர்ந்து`` என்று, `முன் வருபவரை எதிர்நோக்கி` என்றபடி.
தால வட்டம், யானையின் காது.
புழை - உள்ளே துளையை உடைய.
தட - பெரிய (102) ``கொண்டு`` என்பது மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு.
எறிந்து - தாக்கி மழை மதம் உவமத் தொகை.
பூத்த - பொலிவு எய்தி.
யானைக்கு அதன் மத நீர் சிறப்பைத் தரும்.
கட தடம் - மத நீர் பாயும் வாவி.
`கடத்தை உடைய காத்திரம்` என்க.
போகம் - இன்பம்.
மதம் மிக்கு ஒழுகுதலால் அதன் போக நிலை மிக்க விளங்கிற்று காத்திரம் - உடல்.
கலித்து - ஆரவாரித்து.
`எங்கும் கலித்து` என மாற்றி யுரைக்க.
கோத்த - கட்டிய.
நிகளம் - சங்கிலி.
போக்கி - அறுத்ததொழித்து.
``இடு வண்டு`` என்பதற்கு.
`தலை யிடுகின்ற வண்டுகள்` என்பது பொருளாகும்.
`யானை தனது மத நீரை நோக்கித் தன்மேல் வந்து மொய்க்கின்ற வண்டுகளைத் தும்பிக்கையால் பற்றிக் கீழே இட்டுத் தேய்த்தல் முதலியன செய்து கலிக்கின்றது - ஆர வாரித்தது` என்க.
நிலத்தை உழக்கி - பூமியைக் காலால் மிதித்துக் குழியாகவும், துகள்களாகவும் செய்து, நிகர் நீத்து - தனக்கு உவமையாக யாதொன்றும் இல்லாதபடி உயர்ந்து.
இடி பெயர - தந்தத்தால் மதில் முதலியவற்றை இடித்தல் தொழில் விட்டு விட்டு எழச் செய்தலால்.
தாளத்து இலுப்பி - தாள வரிசையில் தனது உறுப்புக்களை உழலவிட்டு.
இலுப்புதல் - இஃது ஒரு நாட்டுப் புற வழக்கு.
சில இடங்களில் இஃது, `இளுப்புதல்` என்று சொல்லப்படுகின்றது.
அடு சினம் - எதிர்ப்பட்டோரைக் கொல்லும் அளவு எழுந்த சினம்.
கன்ற - மேலும் கரிதாக.
`முகம் கன்ற` என்க.
பருக்கை யெடுத்து - பருத்த தும்பிக்கையை உயர எடுத்து.
வென்றி மருப்பு உருவ - வெற்றியைத் தரும் தந்தங்கள் ஊடுருவும்படி.
இதனை `வெய்து உயிர்த்து`` என்பதற்குப் பின் கூட்டுக.
வெய்து உயிர்த்தல் - வெப்பமாக (புகை யெழும்படி)ப் பெருமூச்சு எறிந்து.
நிகர் - ஒளி; அழகு.
முன்பு, ``உழக்கி`` எனவும், ``இலுப்பி`` எனவும் (105) எனப் பொதுவாகக் கூறியதைப் பின்பு அவ்வப் பொருள்மேல் வைத்து, ``அவித்து, குத்தி, வீசி`` எனத் தனித்தனியாக வகுத்துக் கூறினார்.
பணம் - யானையை அடக்குவார் பயன்படுத்து ஓர் ஆயும்.
`அதனை யுடைய பாகர்` என்க.
பரிந்து - கிழித்து.
நிணப் பாகும் - கொழுப்புக் குழம்பு.
ஓடை - யானையின் நெற்றிப் பட்டம்.
பரிக்காரர்கள் - யானையின் இரு பக்கத்திலும் கோலைக் கையிற் கொண்டு நடத்திச் செல்லும் பரிக்கோற்காரர்கள் ``காரர்கடாம்`` என்னும் சீரில் ரகர ஒற்று அலகு பெறாது நின்றது.

பண் :

பாடல் எண் : 108

பணப்பா கரைப் பரிந்து குத்திப் பறித்த
நிணப்பாகை நீள்விசும்பில் வீசி அணைப்பரிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உலாவின் பொருட்டுக் கொண்டு வரப்பட்ட யானையின் வருணனை:- (100) நோக்கு - இங்குத் தோற்றம்.
`நோக்கினோடு` என `ஒடு` உருபு விரிக்க.
`உரும்` இரண்டில் முன்னது ஆகு பெயராய் மேகத்தைக் குறித்தது.
நடையின் வேகம் பற்றி காற்றோடு கூடிய மேகம் ஐய உவமையாகச் சொல்லப்பட்டது.
குன்று - வடிவு பற்றியும், கடல் பரந்து தோன்றும் கருமை பற்றியும், உரும் (இடி) பிளிறும் குரல் பற்றியும், கூற்று (யமன்) கொலைத் தொழில் பற்றியும் உடன் வைத்து ஐயுறப்பட்டன.
`தழல் உண்டாக விழித்து` என ஒரு சொல் வருவிக்க.
``எதிர்ந்து`` என்று, `முன் வருபவரை எதிர்நோக்கி` என்றபடி.
தால வட்டம், யானையின் காது.
புழை - உள்ளே துளையை உடைய.
தட - பெரிய (102) ``கொண்டு`` என்பது மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு.
எறிந்து - தாக்கி மழை மதம் உவமத் தொகை.
பூத்த - பொலிவு எய்தி.
யானைக்கு அதன் மத நீர் சிறப்பைத் தரும்.
கட தடம் - மத நீர் பாயும் வாவி.
`கடத்தை உடைய காத்திரம்` என்க.
போகம் - இன்பம்.
மதம் மிக்கு ஒழுகுதலால் அதன் போக நிலை மிக்க விளங்கிற்று காத்திரம் - உடல்.
கலித்து - ஆரவாரித்து.
`எங்கும் கலித்து` என மாற்றி யுரைக்க.
கோத்த - கட்டிய.
நிகளம் - சங்கிலி.
போக்கி - அறுத்ததொழித்து.
``இடு வண்டு`` என்பதற்கு.
`தலை யிடுகின்ற வண்டுகள்` என்பது பொருளாகும்.
`யானை தனது மத நீரை நோக்கித் தன்மேல் வந்து மொய்க்கின்ற வண்டுகளைத் தும்பிக்கையால் பற்றிக் கீழே இட்டுத் தேய்த்தல் முதலியன செய்து கலிக்கின்றது - ஆர வாரித்தது` என்க.
நிலத்தை உழக்கி - பூமியைக் காலால் மிதித்துக் குழியாகவும், துகள்களாகவும் செய்து, நிகர் நீத்து - தனக்கு உவமையாக யாதொன்றும் இல்லாதபடி உயர்ந்து.
இடி பெயர - தந்தத்தால் மதில் முதலியவற்றை இடித்தல் தொழில் விட்டு விட்டு எழச் செய்தலால்.
தாளத்து இலுப்பி - தாள வரிசையில் தனது உறுப்புக்களை உழலவிட்டு.
இலுப்புதல் - இஃது ஒரு நாட்டுப் புற வழக்கு.
சில இடங்களில் இஃது, `இளுப்புதல்` என்று சொல்லப்படுகின்றது.
அடு சினம் - எதிர்ப்பட்டோரைக் கொல்லும் அளவு எழுந்த சினம்.
கன்ற - மேலும் கரிதாக.
`முகம் கன்ற` என்க.
பருக்கை யெடுத்து - பருத்த தும்பிக்கையை உயர எடுத்து.
வென்றி மருப்பு உருவ - வெற்றியைத் தரும் தந்தங்கள் ஊடுருவும்படி.
இதனை `வெய்து உயிர்த்து`` என்பதற்குப் பின் கூட்டுக.
வெய்து உயிர்த்தல் - வெப்பமாக (புகை யெழும்படி)ப் பெருமூச்சு எறிந்து.
நிகர் - ஒளி; அழகு.
முன்பு, ``உழக்கி`` எனவும், ``இலுப்பி`` எனவும் (105) எனப் பொதுவாகக் கூறியதைப் பின்பு அவ்வப் பொருள்மேல் வைத்து, ``அவித்து, குத்தி, வீசி`` எனத் தனித்தனியாக வகுத்துக் கூறினார்.
பணம் - யானையை அடக்குவார் பயன்படுத்து ஓர் ஆயும்.
`அதனை யுடைய பாகர்` என்க.
பரிந்து - கிழித்து.
நிணப் பாகும் - கொழுப்புக் குழம்பு.
ஓடை - யானையின் நெற்றிப் பட்டம்.
பரிக்காரர்கள் - யானையின் இரு பக்கத்திலும் கோலைக் கையிற் கொண்டு நடத்திச் செல்லும் பரிக்கோற்காரர்கள் ``காரர்கடாம்`` என்னும் சீரில் ரகர ஒற்று அலகு பெறாது நின்றது.

பண் :

பாடல் எண் : 109

ஓடைக் கருங்களிற்றை ஒண்பரிக் காரர்கள்தாம்
மாடணையக் கொண்டு வருதலுமே கூடி

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உலாவின் பொருட்டுக் கொண்டு வரப்பட்ட யானையின் வருணனை:- (100) நோக்கு - இங்குத் தோற்றம்.
`நோக்கினோடு` என `ஒடு` உருபு விரிக்க.
`உரும்` இரண்டில் முன்னது ஆகு பெயராய் மேகத்தைக் குறித்தது.
நடையின் வேகம் பற்றி காற்றோடு கூடிய மேகம் ஐய உவமையாகச் சொல்லப்பட்டது.
குன்று - வடிவு பற்றியும், கடல் பரந்து தோன்றும் கருமை பற்றியும், உரும் (இடி) பிளிறும் குரல் பற்றியும், கூற்று (யமன்) கொலைத் தொழில் பற்றியும் உடன் வைத்து ஐயுறப்பட்டன.
`தழல் உண்டாக விழித்து` என ஒரு சொல் வருவிக்க.
``எதிர்ந்து`` என்று, `முன் வருபவரை எதிர்நோக்கி` என்றபடி.
தால வட்டம், யானையின் காது.
புழை - உள்ளே துளையை உடைய.
தட - பெரிய (102) ``கொண்டு`` என்பது மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு.
எறிந்து - தாக்கி மழை மதம் உவமத் தொகை.
பூத்த - பொலிவு எய்தி.
யானைக்கு அதன் மத நீர் சிறப்பைத் தரும்.
கட தடம் - மத நீர் பாயும் வாவி.
`கடத்தை உடைய காத்திரம்` என்க.
போகம் - இன்பம்.
மதம் மிக்கு ஒழுகுதலால் அதன் போக நிலை மிக்க விளங்கிற்று காத்திரம் - உடல்.
கலித்து - ஆரவாரித்து.
`எங்கும் கலித்து` என மாற்றி யுரைக்க.
கோத்த - கட்டிய.
நிகளம் - சங்கிலி.
போக்கி - அறுத்ததொழித்து.
``இடு வண்டு`` என்பதற்கு.
`தலை யிடுகின்ற வண்டுகள்` என்பது பொருளாகும்.
`யானை தனது மத நீரை நோக்கித் தன்மேல் வந்து மொய்க்கின்ற வண்டுகளைத் தும்பிக்கையால் பற்றிக் கீழே இட்டுத் தேய்த்தல் முதலியன செய்து கலிக்கின்றது - ஆர வாரித்தது` என்க.
நிலத்தை உழக்கி - பூமியைக் காலால் மிதித்துக் குழியாகவும், துகள்களாகவும் செய்து, நிகர் நீத்து - தனக்கு உவமையாக யாதொன்றும் இல்லாதபடி உயர்ந்து.
இடி பெயர - தந்தத்தால் மதில் முதலியவற்றை இடித்தல் தொழில் விட்டு விட்டு எழச் செய்தலால்.
தாளத்து இலுப்பி - தாள வரிசையில் தனது உறுப்புக்களை உழலவிட்டு.
இலுப்புதல் - இஃது ஒரு நாட்டுப் புற வழக்கு.
சில இடங்களில் இஃது, `இளுப்புதல்` என்று சொல்லப்படுகின்றது.
அடு சினம் - எதிர்ப்பட்டோரைக் கொல்லும் அளவு எழுந்த சினம்.
கன்ற - மேலும் கரிதாக.
`முகம் கன்ற` என்க.
பருக்கை யெடுத்து - பருத்த தும்பிக்கையை உயர எடுத்து.
வென்றி மருப்பு உருவ - வெற்றியைத் தரும் தந்தங்கள் ஊடுருவும்படி.
இதனை `வெய்து உயிர்த்து`` என்பதற்குப் பின் கூட்டுக.
வெய்து உயிர்த்தல் - வெப்பமாக (புகை யெழும்படி)ப் பெருமூச்சு எறிந்து.
நிகர் - ஒளி; அழகு.
முன்பு, ``உழக்கி`` எனவும், ``இலுப்பி`` எனவும் (105) எனப் பொதுவாகக் கூறியதைப் பின்பு அவ்வப் பொருள்மேல் வைத்து, ``அவித்து, குத்தி, வீசி`` எனத் தனித்தனியாக வகுத்துக் கூறினார்.
பணம் - யானையை அடக்குவார் பயன்படுத்து ஓர் ஆயும்.
`அதனை யுடைய பாகர்` என்க.
பரிந்து - கிழித்து.
நிணப் பாகும் - கொழுப்புக் குழம்பு.
ஓடை - யானையின் நெற்றிப் பட்டம்.
பரிக்காரர்கள் - யானையின் இரு பக்கத்திலும் கோலைக் கையிற் கொண்டு நடத்திச் செல்லும் பரிக்கோற்காரர்கள் ``காரர்கடாம்`` என்னும் சீரில் ரகர ஒற்று அலகு பெறாது நின்றது.

பண் :

பாடல் எண் : 110

நயந்து குரல்கொடுத்து நட்பளித்துச் சென்று
வியந்தணுகி வேட்டம் தணித் தாங் குயர்ந்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கூடி - பலரும் திரண்டு.
நயந்து குரல் கொடுத்து, அன்பை வெளிப்படுத்தும் முறையில் சில இனிய சொற்களைச் சொல்லி.
வேட்டம் - வேட்கை; இங்கு உணவு வேட்கை அதைத் தணித்தது `கரும்பு முதலிய வகைகளைக் கொடுத்து` என்க.
``தணித்த`` என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று.
தணித்த ஆங்கு - தணித்த அப்பொழுது.

பண் :

பாடல் எண் : 111

உடல்தூய வாசிதனைப் பற்றிமேல் கொண் டாங்
கடற்கூடற் சந்தி அணுகி அடுத்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வாசி அளவு.
இஃது யானைமீது ஏறுதற்குப் படியாக அதன் உடலில் இடப்படும் கருவியைக் குறித்தது.
உடல் தூய வாசி - யானையில் உடலில் இடப்பட்ட தூய்மையான வாசி.
மேல் கொண்டு- மேலே ஏறி, ``கொண்டு`` என்றே கூறினாராயினும் `கொள்விக்கக் கொண்டு` என்பதே கருத்து என்க.
கூடற் சந்தி - மதுரை நகரின் தெருக்கள் சந்திக்கும் இடம்.

பண் :

பாடல் எண் : 112

பயிர்பலவும் பேசிப் படுபுரசை நீக்கி
அயர்வு கெடஅணைத்த தட்டி உயர்வுதரு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பயிர் - யானையைப் பழக்கும் மொழி.
புரசை - யானையின் கழுத்தில் இடும் கயிறு.
அயர்வு - சோர்வு

பண் :

பாடல் எண் : 113

தண்டுபே ரோசையின்கண் தாள்கோத்துச் சீர்சிறுத்
தொண்டர் பிறகணையத் தோன்றுதலும் எண்டிசையும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தண்டு பேரோசை - வெளியே பரவிச் செல்லும் பெரிய ஒலி.
இஃது ஆகுபெயராய் யானையின் இரு பக்கத்திலும் தொங்கவிடப்பட்ட மணிகளைக் குறித்தது.
தாள் கோது - இரு பக்கத்திலும் இரு மணிக்களுக்குள்ளே கால்களைக் கோத்து.
``சிறுத் தொண்டர்`` என்பது இங்கே அப்பெயரை உடைய நாயனாரைக் குறியாது, காரணப் பெயராய் அடியவர் பலரையும் குறித்தது.
பிறகு அணைய - பின்னால் வர.
தோன்றுதல் - காணப்படுதல்.

பண் :

பாடல் எண் : 114

பல்சனமும் மாவும் படையும் புடைகிளர
ஒல்லொலியால் ஓங்கு கடல் கிளர மல்லற்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மா, `யானை, குதிரை` - இரண்டிற் பொது.
படை - மக்கள் திரட்சி.
புடை கிளர - நாற்புறத்திலும் மிக்குத் தோன்ற.
ஒல்லொலி - ஒல்லென் ஒலி, கடல் கிளர - கடல் பொங்கி வந்தது போலத் தோன்ற.
மல்லல் - வளப்பம்.

பண் :

பாடல் எண் : 115

பரித்தூரம் கொட்டப் படுபணிலம் ஆர்ப்பக்
கருத்தோ டிசைகவிஞர் பாட விரித்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தூரியம்` என்பது, ``தூரம்`` என மருவி வந்தது.
பரித் தூரியம் - குதிரையின்மேல் வைத்து முழக்கப்படும் வாத்தியம்.
படு பணிலம் - ஒலிக்கின்ற சங்கு.
ஆர்ப்ப - ஒலிக்க, `கவிஞர் கருத்தோடு இசைபாட, கருத்து - பொருள்

பண் :

பாடல் எண் : 116

குடைபலவும் சாமரையும் தொங்கல்களும் கூடிப்
புடைபரந்து பொக்கம் படைப்பக் கடைபடு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தொங்கல்கள் - மாலைகள்.
``தொங்கல்களும்`` என்னும் சீரில் லகர ஒற்று அலகு பெறாதாயிற்று.
பொக்கம் - பொலிவு (பொங்கு + அம் = பொக்கம்.)

பண் :

பாடல் எண் : 117

வீதி அணுகுதலும் மெல்வளையார் உள்மகிழ்ந்து
காதல் பெருகிக் கலந்தெங்கும் சோதிசேர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கடை படுவீதி - பல வாயில்கள் (பக்கங்களில்) பொருந்திய வீதி; மாட வீதி.

பண் :

பாடல் எண் : 118

ஆடரங்கின் மேலும் அணிமா ளிகைகளிலும்
சேடரங்கு நீள்மறுகும் தெற்றியிலும் பீடுடைய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஆடு அரங்கு - நடன சாலை.
சேடு அரங்கு மறுகு - பலவகை அரங்குகளை உடையதெரு.
`அரங்கின்மேல் நின்றும், மாளிகைகளின்றும் மறுகின் கண்ணும், தெற்றியின் கண்ணும் புறப் பட்டு` என்க.
தெற்றி - திண்ணை.

பண் :

பாடல் எண் : 119

பேரிளம்பெண் ஈறாகப் பேதை முதலாக
வாரிளங் கொங்கை மடநல்லார் சீர்விளங்கப்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மேல் (117) ``வெள்வளையார்`` என்றது பொது.
இங்கு ``மட நல்லார்`` என்றது அவ்வப் பரருவத்து மகளிரைச் சிறப்பாகக் குறித்து, எனவே, ``அம் மட நல்லார்`` எனச் சுட்டு வருவிக்க.
இறுதியை முன்னர்க் கூறியது காதற்கு உரிமையுடைமை பற்றி.
சீர் - அழகு.

பண் :

பாடல் எண் : 120

பேணும் சிலம்பும் பிறங்கொளிசேர் ஆரமும்
பூணும் புலம்பப் புறப்பட்டுச் சேண் மறுகில்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

புலம்ப - தனிமைப் பட; அஃதாவது, தங்களைவிட்டு நீங்கிப் போய்விட புறப்பட்டு - வெளியே வந்து வெளியே வருதல் நாண் இழந்ததன் அறிகுறியாம்.
சேண் - நீளம்.
மறுகு - தெரு.

பண் :

பாடல் எண் : 121

காண்டகைய வென்றிக் கருவரைமேல் வெண்மதிபோல்
ஈண்டு குடையின் எழில்நிழற் கீழ்க் காண்டலுமே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கரிய யானையின் மேல் தோன்றுகின்ற வெண்குடை, கரியை மலைமேல் காணப்படும் முழுநிலவை ஒத்திருந்தது.

பண் :

பாடல் எண் : 122

கைதொழுவார் நின்று கலைசரிவார் மால் கொண்டு
மெய்தளர்வார் வெள்வளைகள் போய் வீழ்வார் வெய்துயிர்த்துப்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(பிள்ளையாரைக் காண்டலும்) என்க.
கலை - ஆடை.
மால் - மயக்கம்.
மெய் - உடம்பு.
வெய்து உயிர்த்து - வெப்பமாகப் பெருமூச்சு விட்டு.

பண் :

பாடல் எண் : 123

பூம்பயலை கொள்வார் புணர்முலைகள் பொன்பயப்பார்
காம்பனைய மென்தோள் கவின்கழிவார் தாம் பயந்து

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பூம் பயலை - வெள்ளை பூப்போலும் பசலை; காதல் நோயால் உண்டாகும் நிற வேறுபாடுகளுள் வெண்ணிறமாவதை, `பசலை` எனவும், பொன்னிறமாவதை `சுணங்கு` எனவும் கூறுவர்.
சுணங்கே இங்கு ``பொன்`` எனப்பட்டது.
காம்பு - மூங்கில்.
கவின் - அழகு.
``தாம் பயந்து`` என்றது, மேல் ``பொன் பயப்பார்`` என்றதனை மீட்டும் வழி மொழிந்தது.

பண் :

பாடல் எண் : 124

வென்றிவேற் சேய் என்ன வேனில் வேள் கோ என்ன
அன் றென்ன ஆம் என்ன ஐயுற்றுச் சென்றணுகிக்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வென்றி வேல் சேய், முருகன்.
வேனில் வேள் கோ, மன்மதன்.

பண் :

பாடல் எண் : 125

காழிக் குலமதலை என்றுதம் கைசோர்ந்து
வாழி வளைசரிய நின்றயர்வார் பாழிமையால்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பலவாறாக ஐயுற்றவர்கள்.
இறுதியில் `ஆளுடைய பிள்ளையார்` என்று துணிந்தனர்.
முன்பு ஐயுற்றதற்குக் காரணம் மிக்க அழகு.
குல மதலை - சிறந்த குழந்தை.
``குழவி மருங்கினும் கிழவ தாகும்`` 1 என்றார் ஆகலின், இங்குக் குழவியிடத்தும் மகளிரது காமம் புணர்க்கப்பட்டது.
(125) ``முன்னும் பின்னும் மொழியடுத்து வருத லும்`` 2 என்றபடி.
`கை` என்னும் இடைச்சொல் இங்கு, ``சோர்ந்து`` என்னும் சொல்லைப் பின் அடுத்து வந்தது.
`வாழி`, அசை.
பாழிமை - காதலின் மிகுதி.

பண் :

பாடல் எண் : 126

உள்ளம் நிலைதளர்ந்த ஒண்ணுதலார் வெல்களிற்றை
மெள்ள நட என்று வேண்டுவார் கள்ளலங்கல்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கள் - தேன்.
அலங்கல் - மாலை.

பண் :

பாடல் எண் : 127

தாராமை யன்றியும் தையல்நல் லார்முகத்தைப்
பாராமை சாலப் பயன் என்பார் நேராக

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பாராமை சாலப் பயன்`` என்பது எழுவாய்த் தொடரா யும், ஆன் உருபின் மேல் தொக்க மூன்றாவதன் தொகையாயும் நின்று சிலேடையாயிற்று.
``சாலப் பயன்`` என்பதற்கு, `இவனது திருவருள் நிலைக்கு மிக்க பயனைத் தருவது` எனவும், `இவன் ஆண்டில் மிகச் சிறியன்` எனவும் இரு பொருள் கொள்க.
இரண்டாவது பொருட்கு, பயன் ``பயல்`` என்பதன் திரிபாகும்.

பண் :

பாடல் எண் : 128

என்னையே நோக்கினான் ஏந்திழையீர் இப்பொழுது
நன்மை நமக்குண் டெனநயப்பார் கைம்மையால்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஒவ்வொருவரும் `என்னையே நோக்கினான்` என நயப்பார் என்க.
நயத்தல் - மகிழ்தல்.
கைம்மை - கைக்கிளைத் தன்மை.

பண் :

பாடல் எண் : 129

ஒண்கலையும் நாணும் உடைத்துகிலும் தோற்றவர்கள்
வண்கமலத் தார்வலிந்து கோடும் எனப் பண்பின்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கலை`` என்றது `மேலாடை` எனவும் ``உடை`` என்றது, `இடை யில் உடுக்கப்பட்ட உடை` எனவும் கொள்க.
`தோற்ற` என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று.
இங்ஙனம் இலக்கியங்களில் தெரு விடை உடையும், நாணும் ஒருங்கிழந்தராகச் சொல்லப்படுவோர் பொது மகளிரே யன்றிக் குலமகளிர் அல்லர் என்பதை, ``வழக்கொடு சிவணிய வகைமை யான`` என்னும் தொல்காப்பிய நூற்பாவாலும், அதற்கு நச்சினார்க்கினியர் உரைத்த உரையாலும் உணர்க.
கமலத் தார் - தாமரை மலர் மாலை.
இஃது அந்தணர்க்கு அடையாளமாவது.
கோடும் - கைக்கொள்வோம்.
பண்பு - தங்கட்கு இயல்பாய் உள்ள குணம்.

பண் :

பாடல் எண் : 130

வடிக்கண் மலர்வாளி வார்புருவ வில்மேல்
தொடுத் ததரத் தொண்டை துடிப்பப் பொடித்தமுலைக்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மகளிர் பிள்ளையார் மேல் காதற் போர் தொடுக்க எண்ணும் முறை.
வடிக் கண் - மாவடுவைப் போலும் கண்கள்.
வாளி - கண்.
கண் வாளி, புருவ வில் - இவை உருவகம்.
அதரம் - கீழ் உதடு.
தொண்டை - கொவ்வை, இஃது இதன் பழத்திற்கு ஆகுபெயர்.
அதரத் தொண்டை; உருவகம்.
பொடித்தல் - புளகித்தல்.
(பூரித்தல்)

பண் :

பாடல் எண் : 131

காசைக் கருங்குழலார் காதற் கவுணியன்பால்
பூசற் கமைந்து புறப்படுவார் வாசச்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

காசை - காயா.
இஃது ஒரு செடி வகை.
`பூவை` என்னும் சொல்லப்படும்.
இங்கு இதுவும் இதன் மலருக்கு ஆகுபெயர்.
காயாம் பூ மகளிர் கூந்தலுக்கு உவமையாகும்.
மாயோனும் `காயாம் பூ வண்ணன்` என்று சொல்லப்படுவான்.
`முலையை உடைய குழலார்` என்க.
காதற் கவுணியன் - காதலை உண்டாக்கிய கவுணியன்.
பூசற்கு அமைந்து - போர் செய்யத் துணிந்து ஆடல் புரிந்தால் மயங்குவன்` என்பது மகளிர் கொண்ட எண்ணம்.

பண் :

பாடல் எண் : 132

செழுமலர்த்தார் இன்றெனக்கு நல்காதே சீரார்
கழுமலத்தார் கோவே கழல்கள் தொழுவார்கள்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஒரு சார் மகளிர் எண்ணம் மேற் கூறியவாறாக, மற்றொரு மகளிர் இங்ஙனம் இரங்கு வாராயினர்.
அம் - அழகு கோள் வளை - ஒழுங்காக இடப்பட்ட வளையல்.

பண் :

பாடல் எண் : 133

அங்கோல வளையிழக்கப் போவது நின்னுடைய
செங்கோன்மையோ என்று செப்புவார் நங்கையீர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஒரு சார் மகளிர் எண்ணம் மேற் கூறியவாறாக, மற்றொரு மகளிர் இங்ஙனம் இரங்கு வாராயினர்.
அம் - அழகு கோள் வளை - ஒழுங்காக இடப்பட்ட வளையல்.

பண் :

பாடல் எண் : 134

இன்றிவன் நலகுமே எண்பெருங் குன்றத்தின்
அன்றமணர் கூட்டத்தை ஆசழித்துப் பொன்ற

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கலந்குதல் - இரங்குதல்.
``நல்குமே`` என்னும் வினா, `நல்கான்` என்னுங் குறிப்பினது.
ஆசு பற்றுக்கோடு

பண் :

பாடல் எண் : 135

உரைகெழுவு செந்தமிழ்ப்பா ஒன்றினால் வென்றி
நிரை கழுமேல் உய்த்தானை நேர்ந்து விரைமலர்த்தார்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இங்கு, ``பா`` என்றது ஆகுபெயராய்ப் பதிகத்தைக் குறித்தது.
``ஒன்று`` என்றது, ``வாழ்க அந்தணர்`` எனத் தொடங்கும் திருப்பாசுரப் பதிகத்தை.
நேர்ந்து - எதிர்ப்பட்டு

பண் :

பாடல் எண் : 136

பெற்றிடலாம் என்றிருந்த நம்மினும் பேதையர்கள்
மற்றுளரோ என்று வகுத்துரைப்பார் மற்றிவனே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஒரு திருப்பதிகத்தால் சமணரை வென்றது திருவருளாலன்றே! ``அத்தகைய திருவருளுக்கு உரியன் ஆகிய இவன் மகளிரை விழைவான்`` எனக் கருதியது பேதைமை - என ஒரு சார் மகளிர் தங்களைத் தாங்களே நொந்து கொண்டு, `இவன் மகளிர் வயப்படான்` என்னும் துணிவினராயினர்.
``மற்று`` என்பது மேற்கூறிய கருத்தை.
மாற்றி நிற்றலால் வினை மாற்று ``இவனே`` என்பதை ``வைத்தது`` என்பதன் பின்னே கூட்டுக.

பண் :

பாடல் எண் : 137

பெண் இரக்கம் அன்றே பிறைநுதலீர் மாசுணத்தின்
நண்ணு கடுவித்தால் நாட்சென்று விண்ணுற்ற

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பிறை நுதலீர்`` என்பதை, ``வகுத்துரைப் பார்`` என்பதன் பின்னர் கூட்டுக.
இது மகளிர் ஒருவர் ஒருவரைத் தம்முள் முன்னிலைப்படுத்தியது.
பெண் இரக்க - பெண் ஒருத்தி வேண்டிக் கொள்ள.
மா சுணம் - பாம்பு.
நாட் சென்று - வாழ்நாள் முடியப் பெற்று, மருகல், ஒரு தலம்.

பண் :

பாடல் எண் : 138

ஆரூயிரை மீட் டன்று றவளை அணிமருகல்
ஊரறிய வைத்த தென உரைப்பார் பேரிடரால்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``வைத்தது`` என்னும் தொழிற் பெயராய், `வைத்தவன்` எனப் பொருள் தந்தது.
`ஒரு பெண்ணிற்கு இரங்கியவன் இங்கு நம்மில் எவருக்கேனும் இரங் காமலா போய் விடுவான்` என்றபடி.
அவளை ஊரறிய வைத்தது, பலரையும் கூட்டித் திருமணம் செய்வித்தது.
இவ்வாறு ஒருசாரர் கருத்து இருந்தது.

பண் :

பாடல் எண் : 139

ஏசுவார் தாம் உற்ற ஏசறவைத் தோழியர் முன்
பேசுவார் நின்று தம் பீடழிவார் ஆசையால்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஏசுவார் - ஒருவர் மற்றொருவரை இகழ்வார்கள்.
ஏசறவு - துன்பம்.
பீடு - பெருமை

பண் :

பாடல் எண் : 140

நைவார் நலன்அழிவார் நாணோடு பூண் இழப்பார்
மெய்வாடு வார் வெகுள்வார் வெய்துயிர்ப்பார் தையலார்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நலன் - அழகு.
மெய் - உடம்பு.

பண் :

பாடல் எண் : 141

பூந்துகிலைப் பூமாலை என்றணிவார் பூவினைமுன்
சாந்தம் என மெய்யில் தைவருவார் வாய்ந்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மகளிரது மதிமயக்கம்.
சாந்தம் - சந்தனம்.
தைவருதல் - தடவுதல்.
பாவை - கிளிபோலச் செய்யப்பட்ட பதுமை.
பயிற்றுவார் என்பதில் பிற வினை விகுதி தொகுத்தல், அளி - வண்டு.

பண் :

பாடல் எண் : 142

கிளி என்று பாவைக்குச் சொற்பயில்வார் பந்தை
ஒளிமே கலை என் றுடுப்பார் அளிமேவு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மகளிரது மதிமயக்கம்.
சாந்தம் - சந்தனம்.
தைவருதல் - தடவுதல்.
பாவை - கிளிபோலச் செய்யப்பட்ட பதுமை.
பயிற்றுவார் என்பதில் பிற வினை விகுதி தொகுத்தல், அளி - வண்டு.

பண் :

பாடல் எண் : 143

பூங்குழலார் மையலாய்க் கைதொழமுன் போதந்தான்
ஒங்கொலிசேர் வீதி உலா.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`இவ்வாறான பூங்குழலார்` என எடுத்துக் கொண்டு உரைக்க.
கை தொழுமுன் - அருகிற் சென்று கும்பிடுவதற்கு முன்னே.
உலாப் போதந்தான் - உலாப் போந்து முற்றினான்.
நெடுவெண்பாட்டாக மிக நீண்டு வந்த இப்பாட்டில் முதற் றொட்டு, ``நித்திலங்கள் ஈன`` என்பது காறும் (8) வயல்களின் நடுவில் உள்ள குளங்களில் எருமை பாய்தலால் உளவான நிகழ்ச்சிகளே சொல்லப்பட்டன.
``உலவிய`` (8) என்பது முதல் ``ஓங்கு`` (10) என்பது காறும் வயல்களின் சிறப்பே கூறப்பட்டது.
``மாசில் நீர்`` (10) என்பது முதல், ``வளம் துன்று வார்பொழிலின் மாடே`` (22) என்பது காறும் மேற் கூறிய வயல்களை அடுத்துப் பல வகை மரக் கூட்டங்களையுடைய சோலையின் சிறப்புச் சொல்லப்பட்டது.
``கிளர்ந்தெங்கும்`` (22) என்பது முதல், ``வேலை ஒலிப்ப`` (24) என்பது காறும் புற நகரில் எழும் பல வகை ஒலிகள் கூறப்பட்டன.
``வெறிகமழும்.
.
.
.
தன்மையவா`` (24 - 26) என்னும் பகுதியில் புற நகர்ச் சிறப்புக் கூறப்பட்டது.
``சூழ் கிடப்ப`` என்பது அகழிச் சிறப்பு ``முளை நிரைத்து`` (27) என்பது முதல் ``இஞ்சி அணிபெற்று`` (30) என்பது காறும் மதிலின் சிறப்பு.
``பொங்கொளி சேர்`` (30) என்பது முதல், ``எழில் சிறப்ப`` (34) என்பதுகாறும் நகரத்தில் உள்ள மாளிகை முதலியவற்றின் சிறப்பு.
``மலர் மடந்தை.
.
.
.
வாய்மைத்தாய்`` (35) என்பதனால் நகரில் திருமகள் மகிழ்ந் துறைதல் கூறப்பட்டது.
``பொன்னும், மரகதமும்`` - என்பது முதல் (36) நகரில் உள்ளாரது கொடைச் சிறப்பும், அடுத்து அவர்களது வாய்மைச் சிறப்பும் (38) கூறப்பட்டன.
``உம்மை மறை பயில்வார்`` (38,39) என்பது முதல் ``நானூற்றுவர் மறையோர்`` (44) என்பதுகாறும் சீகாழியில் உள்ள அந்தணர்களது சிறப்புக் கூறப்பட்டது.
``நா மன்னும்`` (44) என்பது முதல் ``மங்கையர்கள் கூட்டமும்`` (48) என்பது காறும் சீகாழியில் உள்ள மகளிரது சிறப்புக் கூறப்பட்டது.
அடுத்துச் சிறார் குழுக் கூறப்பட்டது.
``வேத ஒலியும்`` (52) என்பது முதல், ``மல்லைச் செழு நகரம்`` (59) என்பதுகாறும் சீகாழியின் சிறப்பு.
அதன் பன்னிரு பெயர்களோடு கூறப்பட்டது.
``மன்னவும்`` (59) முதல், ``வாய்ப்பவும்`` (62) என்பது காறும் ஞானசம்பந்தரது அவதாரப் பயன்கள் சொல்லப்பட்டன.
``அவதரித்த வள்ளலை`` (63) என்பது முதல் திருப்பதிகம் பாடவல்ல சேயை`` (85) என்பது காறும் ஞானசம்பந்தரது பெருமை களே சொல்லப்பட்டன.
அவற்றிடையே கண்ணி 75-83-ல் அவர் நிகழ்த்திய அற்புதங்களும், கண்ணி - 83-84ல் - அவர் அருளிச் செய்த பதிக வகைகளும் கூறப்பட்டன.
கண்ணி -86-89: சீகாழி அந்தணர்கள் ஞானசம்பந்தரை வணங்கி உலாவாக எழுந்தருள வேண்டுதலும், அதற்கு அவர் இசைந்தருளலும் கூறப்பட்டன.
``நீதியால்`` (89) என்பது முதல், ``கோலம் புனைவித்து`` (95) என்பது காறும் ஞானசம்பந்தருக்குச் செய்யப்பட்ட ஒப்பனைகளில் பூச் சூடுதலாகிய தலைக்கோலமே கூறப்பட்டது.
``காதில்`` (95) ``உடல் புனைந்து`` (100) என்பதுகாறும் அணி கல ஒப்பனை, திருநீறு கண்டிகை ஒப்பனை, உடை ஒப்பனை இவை கூறப்பட்டன.
``திண் நோக்கில்`` (100) ``கொண்டு வருதலும்`` (109) என்பது காறும் உலாவிற்குக் கொள்ளப்பட்ட யானை ஏற்றத்தின் சிறப்புக் கூறப்பட்டது.
``எண்டிசை`` (113) ``பொக்கம் படைப்ப`` (116) என்பது காறும் உலாவின் ஆரவாரச் சிறப்பே கூறப்பட்டது.
இதன்பின் உள்ள பகுதி முழுதும் வீதி உலாவில் ஞான சம்பந்தரைக் கண்ட, பேதை முதல் பேரிளம் பெண் ஈறான பருவ மகளிர் ஒருதலைக் காமமாகக் காதலித்து வருந்திய வருத்தமே கூறப்பட்டு முடிவெய்திற்று எனவே, ``பலவகைக் சிறப்புக்களையுடைய சீகாழித் தலத்தில் அந்தணர்களது கவுணிய கோத்திரத்தில் ஒப்புயர்வற்ற ஒரு புதல்வராய் உலகம் உய்ய அவதரித்துத் திருவருளால் பதினாறாயிரம் தமிழ்ப் பதிகங்களைப் பாடிப் பாண்டி நாட்டில் சமணர்களை வாதில் வென்றது முதலிய அற்புதங்களை நிகழ்த்திய திருஞானசம்பந்தர் சீகாழி அந்தணர்கள் விண்ணப்பித்துக் கொண்டபடி பலவகை ஒப்பனைகளுடன் யானைமீது ஏறி, விழா ஆரவாரங்களுடன், தமது அருள் நிலையை அறியாது காதல் கொண்டு ஏழு பருவத்து மகளிரும் வருந்தியே நிற்கச் சீகாழி நகர் வீதிகளில் உலாப் போந்து மீண்டருளி னார்`` என்பதே இப்பாட்டின் பொருட் சுருக்கமாகக் கொள்க.
ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை முற்றிற்று.

பண் :

பாடல் எண் : 1

அலையார்ந்த கடலுலகத்
தருந்திசைதோ றங்கங்கே
நிலையார்ந்த பலபதிகம்
நெறிமனிதர்க் கினிதியற்றி
ஈங்கருளி யெம்போல்வார்க்
கிடர்கெடுத்தல் காரணமாய்
ஓங்குபுகழ்ச் சண்பையெனு
மொண்பதியு ளுதித்தனையே
செஞ்சடைவெண் மதியணிந்த
சிவனெந்தை திருவருளால்
வஞ்சியன நுண்ணிடையாள்
மலையரையன் மடப்பாவை
நற்கண்ணி யளவிறந்த
ஞானத்தை யமிர்தாக்கிப்
பொற்கிண்ணத் தருள்புரிந்த
போனகமுன் நுகர்ந்தனையே

தோடணிகா தினனென்றுந்
தொல்லமரர்க் கெஞ்ஞான்றும்
தேடரிய பராபரனைச்
செழுமறையின் அரும்பொருள
அந்திச்செம் மேனியனை
யடையாளம் பலசொல்லி
உந்தைக்குக் காணஅர
னுவனாமென் றுரைத்தனையே
அராகம்
வளம்மலி தமிழிசை வடகலை மறைவல
முளரிநன் மலரணி தருதிரு முடியினை. (1)
கடல்படு விடமடை கறைமணி மிடறுடை
அடல்கரி யுரியனை யறிவுடை யளவினை. (2)
பெயர்த்தும் தாழிசை
கரும்பினுமிக் கினியபுகழ்க்
கண்ணுதல்விண் ணவன்அடிமேல்
பரம்பவிரும் புவியவர்க்குப்
பத்திமையை விளைத்தனையே. (1)
பன்மறையோர் செய்தொழிலும்
பரமசிவா கமவிதியும்
நன்மறையின் விதிமுழுதும்
ஒழிவின்றி நவின்றனையே. (2)
நாற்சீர் ஓரடி அம்போதரங்கம்
அணிதவத் தவர்களுக் கதிகவித் தகனும்நீ (1)
தணிமனத் தருளுடைத் தவநெறிக் கமிர்தம்நீ (2)
அமணரைக் கழுநுதிக் கணைவுறுத் தவனுநீ (3)
தமிழ்நலத் தொகையினில் தகுசுவைப் பவனும்நீ (4)
மூச்சீர் ஓரடி அம்போதரங்கம்
மறையவர்க் கொருவன் நீ(1)
மருவலர்க் குருமு நீ (2)
நிறைகுணத் தொருவன் நீ (3)
நிகரில்உத் தமனும் நீ(4)
இருசீர் ஓரடி அம்போதரங்கம் அரியை நீ (1) எளியை நீ(2)
அறவன் நீ (3) துறவன் நீ (4)
பெரியை நீ (5) உரியை நீ (6)
பிள்ளை நீ(7) வள்ளல் நீ (8)
தனிச் சொல்
என வாங்
சுரிதகம்
கருந்தமிழ் விரக நிற் பரசுதும் திருந்திய
நிரைச்செழு மாளிகை நிலைதொறும் நிலைதொறும்
உரைச்சதுர் மறையில் ஓங்கிய ஒலிசேர்
சீர்கெழு துழனித் திருமுகம் பொலிவுடைத்
தார்கெழு தண்டலை தண்பணை தழீஇ
கற்றொகு புரிசைக் காழியர் நாத
நற்றொகு சீர்த்தி ஞானசம் பந்த
நின்பெருங் கருணையை நீதியின்
அன்புடை அடியவர்க் கருளுவோய் எனவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பா நிலைக் கொச்சகம், மயங்கிசைக் கொச்சகம்` எனக் கலி இருவகைப்படும்.
``கொச்சகம்`` என்பதே முறை பிறழ்ந்து வருவதுதான்.
வெண்பா முறை பிறழ்ந்து வருவது `பாநிலைக் கொச்சகம்` எனவும், கலிப்பாவின் உறுப்புக்கள் முறை பிறழ்ந்து வருவது `மயங்கிசைக் கொச்சகம்` எனவும் சொல்லப்படும்.
இவை கடவுளரைப் பொருளாகக் கொண்டு வரின் `ஒருபோகு கலி` எனப் படும்.
கடவுளரைப் பொருளாகக் கொண்டு வரும் பாட்டுக்களை, `தேவ பாணி` - என வழங்குதல் அக்கால வழக்கம்.
அத்தேவ பாணி யில் ஒருவகை ஒருபோகு கலி.
தேவ பாணியாய் வந்து ஒருபோகாய் நின்ற இக்கலிப்பா உறுப்புப் பிறழ்ந்து வந்தமையால் மயங்கிசைக் கொச்சக் கலிப்பாவாகும்.
இப்பாட்டில் அராக உறுப்பில் உள்ள, ``தமிழிசை மறைவல்`` என்பதையும், இறுதி யுறுப்பாகிய சுரிதகத்து முதற்கண் உள்ள ``அருந் தமிழ் விரக`` என்பதையும், மற்றும், ``காழியர் நாத, ``ஞானசம்பந்த`` என்பவற்றையும் முதலிற் கொள்க.
``தமிழிசை.
.
.
மறை`` உம்மைத் தொகை.
வலன் - வல்லவன்.
தாழிசை - 1 திசை - திசைகளில் உள்ள தலங்கள்; ஆகுபெயர்.
தேவாரங்கட்கு, ``திருப்பதிகம்`` என்பதே பெயர் ஆதலால் அவற்றால் உணர்த்தப்படும் நெறியை, ``திருப்பதிக நெறி`` என்றார்.
இயற்றி - ஒழுங்காக விளக்கி.
சண்பை - சீகாழி.
`ஞானசம்பந்தர் நிலவுலகில் அவதாரம் செய்ததற்குக் காரணமே பிறவித் துன்பத்திற்கு அஞ்சுபவரது துன்பத்தை நீக்கக் கருதித்தான்`` என்பது இங்கு உணர்த்தப்பட்டது.
தாழிசை -2 நற்கண்ணி - நல்ல வகையாகப் பார்க்கும் கண்களை யுடையவள்.
நல்லவகை - அருளை வழங்குதல் மக்களுள் மகளிரைச் சிலரை அழகிய கண் உடைமை பற்றி, `நக்கண்ணையர்` - என்பது.
`சுலோசனா` - என்பது வடமொழி.
அமிர்து - உணவு; சோறு போனகம் - உண்டி.
தாழிசை -3 `உவன் அரன் ஆம்` - என மாற்றிக் கொள்க.
உவன்- நீர், ``எச்சில் மயங்கிட உனக்கு ஈது இட்டாரைக் காட்டு`` 1 என வினாவிய அவன்.
அராகம் - 1 ``மறை வல`` என்னும் குறிப்புப் பெயரெச்சத்திற்கு, ``முளரிநன் மலரணிதரு திருமுடியினை`` என்னும் தொடர்மொழி, `அந்தணன்` என ஒரு சொல் நீர்மைத்தாய் முடிபாயிற்று.
அராகம்-2: கறை - நஞ்சு.
அறி - அறிதல்.
முதனிலைத் தொழிற் பெயர்.
`உடைய` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
அளவு - பெருமை.
பெயர்த்தும் தாழிசை-1: பரம்ப - பரவுதலால் பரவியது பலவிடத்தும் சென்று பாடியதால்.
தாழிசை2: பன்மறையோர்,வைதிக அந்தணர்களும், சிவ மறையோர்களும், செய் தொழில் - செயற் பாலனவாகிய தொழில்கள்.
`ஒழுக்கம்` என்றபடி.
அகப் புற நூல்களாகிய தந்திரங்களை விலக்குதற்கு, ``பரம சிவ ஆகமம்`` என்றார்.
இஃதே பற்றிச் சேக்கிழார், வேத நெறி தழைத்தோங்க
மிகுசைவத் துறை விளங்க
புனிதவாய் மலர்ந்தழுத.
புகலி திருஞான சம்பந்தர்
என்றார்.
ஒழிவின்றி - எஞ்சாமல். நாற்சீர் ஓரடி அம்போதரங்கம் - அணி தவம் - சிவ புண்ணியம்.
`அவர்களுக்கு அறிவிக்கும்` என ஒரு சொல் வருவிக்க.
வித்தகம் - சதுரப்பாடு; திறமை.
அமிர்தம் - அமிர்தம் போல்பவன்; அழியாதபடி காப்பாற்றினவன்.
நுதி - நுனி; முனை.
`தக` என்பது இறுதிநிலை தொக்கு, ``தகு`` என நின்றது.
முச்சீர் ஓரடி அம்போதரங்கம் - மருவலர் - பகைவர்.
சிவநெறிக்குப் பகைவரே பிள்ளையார்க்குப் பகைவர்.
உரும் - இடி.
உகரம் சந்தி.
இருசீர் ஓரடி அம்போதரங்கம் - அருமை புறநெறியாளர்க்கு.
அறவன் - அறத்தை அறிவுறுத்துபவன்.
துறவன் - பற்று அற்றவன்.
தகுதியால் பெரியன்.
மற்றும் ஆசிரியனாக உரியன்.
திருமேனியால் பிள்ளை.
உறுதிப் பொருள்களை வழங்குதலால் வள்ளல்.
தனிச்சொல்: எனக் கூறியவாறு சுரிதகம்.
விரகன் - வல்லவன்.
பரசுதும் - துதிப்போம்.
துழனி - ஆரவாரம்.
முகம் - முகப்பு; புறநகர்.
தண்டலை - சோலை.
பணை - வயற் கூட்டம்.
`துழனியையும், திரு முகத்துத் தண்டலையையும், பணையையும் தழீஇக்கற்கள் தொக்கு நிற்கப் பெறும் புரிசையை யுடைய காழி` - என்க.
தார் - மலர்களின் ஒழுங்கு.
புரிசை - மதில்.
`நீதியாக` என ஆக்கம் வருவிக்க.
இஃது ஆசிரியச் சுரிதகம்.
``தமிழ் விரக! காழியர் நாத! ஞானசம்பந்த! - (நீ) நின் கருணையை நின் அடியார்க்கு நீதியாக அருளுவோய் எனக் கருதி நின்னை (யாம்) ``உதித்தனை; நுகர்ந்தனை; உரைத்தனை; திருமுடி யினை; அளவினை; விளைத்தனை; நவின்றனை; பல பெருமைகளை யுடையவன் நீ`` எனக் கூறியவாற்றால் பரவுதும் - என வினை முடிவு செய்து, `எமக்கும் நின் கருணையை வழங்கியருள்` எனக் குறிப் பெச்சம் வருவித்து முடிக்க.
ஏகாரங்கள் தேற்றப் பொருளவாய்ச் சிறப்புணர்த்தி நின்றன.
கலிப்பாவில் முதற்கண் வரற்பாலதாய தரவு இதன் கண் வரவில்லை.
முதற்கண் தாழிசை வந்ததாயினும், அராகத்தின் நாற்சீர் ஈரடி அம்போத ரங்கம் வரவில்லை; அளவெண் சிற்றெண்களே வந்தன.
இப் பிறழ்ச்சி களால் இக்கலிப்பா மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா ஆயிற்று.
ஆசிரியரைப் பொருளாகக் கொண்டமையால் ஒருபோகும் ஆயிற்று.

பண் :

பாடல் எண் : 2

எனவே இடர் அகலும் இன்பமே எய்தும்
நனவே அரன் அருளை நாடும் - புனல்மேய
செங்கமலத் தண்தார்த் திருஞான சம்பந்தன்
கொங்கமலத் தண்காழிக் கோ.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``புனல் மேய`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
எனவே - என்று வாயால் சொல்லவே.
ஏகாரம், பிரிநிலை ``சொல்லவே`` என்னும் செயவென் எச்சம் காரணப் பொருட்டு.
நனவு - விழிப்பு நிலை.
அது கால ஆகுபெயராய் அதுபொழுது நிகழும் உணர்வைக் குறித்தது.
விழிப்பு நிலையில் உணர்வு அரன் அருளை நாடுதல் உலகப் பற்று நீங்கினார்க்கல்லது இயலாது என்க.
கமல (தாமரை) மலர் மாலை அந்தணர்களுக்கு அடையாள மாலையாகும்.
கொங்கு - பொன்.
அமலம் - தூய்மை.

பண் :

பாடல் எண் : 3

கோலப் புலமணிச் சுந்தர
மாளிகைக் குந்தள வார்
ஏலப் பொழிலணி சண்பையர்
கோனை இருங்கடல் சூழ்
ஞாலத் தணிபுகழ் ஞானசம்
பந்தன நற்றமிழே
போலப் பலபுன் கவிகொண்டு
சேவடி போற்றுவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கோலம் - அழகு.
புல மணி - பல இடங்களிலும் வைத்து இழைக்கப்பட்ட இரத்தினங்கள்.
`பல மணி` என்பது பாட மாகக் கொள்ளலும் ஆம்.
குந்தளம் - கூந்தல்.
குந்தளப் பொழில், உவமத் தொகை.
`மாளிகைகட்குக் குந்தளம் போல விளங்குகின்ற பொழில்` என்க.
``ஞானசம்பந்தன்`` என்பது இங்கு `அவன்` என்னும் சுட்டுப் பெயர் அளவாய் நின்றது.
``சம்பந்தன`` என்பதில் ஈற்று அகரம் ஆறன் உருபு, `நற்றமிழே போல்வனவாக (எனது பேதைமையால்) நினைத்துக்கொண்டு` என இசையெச்சம் வருவிக்க.
`சேவடியை` என இரண்டன் உருபு விரிக்க.
`யானையைக் கோட்டைக் குறைத்தான்` என்பது போல, `சண்பையர் கோனைச் சேவடியைப் போற்றுவன்` என முதல், சினை இரண்டிலும் இரண்டன் உருபு வந்தது; முதற்கண் ஆறன் உருபு வருதல் சிறப்பு.
``கவிகொண்டு`` என்பது, ``கொண்டு`` என்பது மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு.
அணி புகழ் - அணிவிக்கப்படும் புகழ்.
``இறைவனைத் தமிழால் பாடிய ஆசிரியனை யானும் தமிழால் பாடி உவப்பிக்க நினைக்குங்கால், எனது புன்கவி களையும் யான் அவனது நன்கவிகள் போலக் கருதிக் கொள்ளும் ஓர் பேதமையை உடையேன் ஆயினேன்`` என்பதாம்.
இதனால், இக்கட்டளைக் கலித் துறை ஓராற்றால் இப்பிரபந்தத்தின் தொடக்கமாக அமைகின்றது.

பண் :

பாடல் எண் : 4

போற்று வார்இடர் பாற்றிய புனிதன்
பொழில்சு லாவிய புகலியர் பெருமான்
ஏற்ற வார் புகழ் ஞானசம் பந்தன்
எம்பி ரான் இருஞ் சுருதியங் கிரிவாய்ச்
சேற்று வார்புனம் காவல் பிரிந்தென்
சிந்தை கொள்வ தும் செயச்தொழி லானால்
மாற்றம் நீர்எமக் கின் றுரை செய்தால்
வாசி யோ குற மாதுநல் லீரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, அகப் பொருட் களவியலில், தலைவி, தோழி இருவரும் ஒருங்கு இருக்கும் அமையம் நோக்கி, அவர்கள்முன் தலைவன் சென்று அவர்களுடைய ஊரை வினாதல், பேரை வினாதல் முதலியவற்றைச் செய்யும் துறையாகச் செய்யப்பட்டது.
`ஒருநாள், இருநாள் மூன்று நாள்` என இதுகாறும் பிறர் ஒருவரும் அறியாதே களவொழுக்கத்தில் ஒழுகிய தலைவன் பின்னும் அதனை நீட்டிக்கக் கருதினால், `இனி இது துணையின்றி முடியாது` என்னும் கருத்தினால் பாங்கன் துணையையும் பாங்கியின் துணையை யும் பெறுவான்.
அத்துணைகளால் நிகழும் கூட்டம் முறையே `பாங்கற் கூட்டம்` என்றும் பாங்கியிற் கூட்டம் என்றும் சொல்லப்படும்.
அவற்றுள் இது பாங்கியிற் கூட்டத்து, `இருவரும் உள்வழி அவன் வர உணர்தல்` - என்னும் பகுதியாம்.
பாற்றிய - போக்கிய.
இடர் போக்கியதைக் கொங்கு நாட்டில் தீப்பிணி வாராமல் தடுத்தது, தந்தையார்க்கு வேள்வி செய்யப் பொன் அளித்தது முதலியவற்றால் அறிக.
வார் புகழ் - நீண்ட புகழ்.
`ஆர் புகழ்` எனலும் ஆம்.
``எம்பிரான் சம்பந்தன்`` - என்பது சுந்தரர் திருமொழி.
1 `எம்பிரானது சுருதி` எனவும், `அச்சுருதியை உடைய கிரி` (மலை) எனவும் கொள்க.
வாய், ஏழன் உருபு.
சேறு - இனிமை; தினையின் இனிமை.
காவல் புரிதலை இங்குக் கிளிகடியும் பாடலால் கவண் எறிதலாகக் கொள்க.
``புனம் காத்தல் உம் தொழிலாக எனக்குத் தெரியவில்லை; இனிய தோற்றத்தாலும், குரலாலும் என் உள்ளத்தைக் கவர்தலே உமது தொழிலாக எனக்குத் தெரிகின்றது`` என்பான்.
``சிந்தை கொள்வது உம் செய்தொழில் ஆனால்`` என்றான்.
``சிந்தை கொள்வது உம் செய்தொழில் ஆனால்`` என்றான்.
``ஆனால்`` என்பது தெளிவின்கண் வந்தது.
மாற்றம் - மறுமொழி.
`மறுமாற்றம்` என்றும் சொல்லப்படும்.
`யான் வினாய வினாவிற்கு உரிய விடை` என்பது பொருள்.
வாசி - மதிப்புக் குறைவு.
குற மாது நல்லீர் - பிறப் பால் குற மகளிராய் உள்ள, அழகுடையவர்களே.
இதனை முதலிற் கொள்க.

பண் :

பாடல் எண் : 5

நலமலி தரும்புவனி நிறைசெய்புகழ் இன்ப நனி
பனிமதி அணைந்த பொழில்சூழ்
பொலமதில் இரும்புகலி அதிபதி விதம்பெருகு
புனிதகுணன் எந்தம் இறைவன்
பலமலி தரும்தமிழின் வடகலை விடங்கன் மிகு
பரசமய வென்றி அரிதன்
சலமலி தரும்கமல சரண் நினைவன் என்றனது
தகுவினைகள் பொன்றும் வகையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

புவனி - புவனம்; உலகம் நிறை செய் - நிறைதலைச் செய்கின்ற.
அஃதாவது, நிறைந்த, புகழ், இன்பம், பொழில், மதில் இவை அனைத்தும் புகலிக்கு அடை.
பனி - குளிர்ச்சி.
மதி - சந்திரன்.
இது பொழிலுக்கு அடை.
விதம் பெருகு புனித குணன் - வகைகள் பலவாகிய தூய பண்புகளை உடையவன்.
இறைவன் - தலைவன்.
பல மலி - பலவாக நிறைந்த.
`பலம் மலி` எனப் பிரித்து, `பயன் நிறைந்த` என்றும் பொருள் கொள்ளலாம்.
`தமிழின் விடங்கன், வடகலை விடங்கன்` எனத் தனித்தனி இயைக்க.
`தமிழின்`` என்பதில் `இன்` சாரியை நிற்க, இரண்டன் உருபு தொக்கது.
விடங்கன் - அழகன்.
பரசமய அரி; (கோளரி - சிங்கம்) வென்றி - வெற்றியை உடைய.
`தன் சரண்` என இயையும்.
சரண் - திருவடி.
சலம் மலி - நீரில் நிறையப் பூக்கின்ற.
``கமல சரண்`` என்னும் உவமத் தொகை வட நூல் முடிபை ஏற்றது.
``புகலி அதிபதி`` முதலாகச் சொல்லப்பட்ட அவனது சரண் களை எனது வினைகள் பொன்றும் வகை நினைவன்` என வினை முடிக்க.
தகுதி, இங்குத் தனக்கே உரிய ஆதல்.
பொன்றுதல் - அழிதல்.
``வகையால்`` என்பதில் தொக்கு நின்ற மூன்றன் உருபு.
`இது பயனாக` என்னும் முதனிலைப் பொருளில் வந்தது.

பண் :

பாடல் எண் : 6

வகைதகு முத்தமிழ் ஆகரன் மறைபயில் திப்பிய வாசகன்
வலகலை வித்தகன் வானவில் மதிஅணை பொற்குவை மாளிகை
திகைதிகை மட்டலர் வார்பொழில் திகழ் புக லிக்கர சாகிய
திருவளர் விப்ர சிகாமணி செழுமல யத்தமிழ்க் கேசரி
மிகமத வெற்றிகொள் வாரணம் மிடைவரு டைக்குலம் யாளிகள்
விரவிரு ளில்தனி நீள்நெறி வினைதுயர் மொய்த்துள வே மணி
நகைஎழி லிற்குற மா துன தருமை நினைக்கிலள் நீ இவள்
நசையின் முழுப்பழி ஆதல்முன் நணுகல் இனிக்கிரி வாணனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அகப் பொருள் களவியலில், தலைவனை வரைவு கடாவும் தோழி அதனை நேர் முறையிற் கூறாது, இரவு வருவானை, பகல் வருக எனவும், பகல் வருவானை, `இரவு வருக` எனவும், `ஒரு பொழுதிலும் இங்கு வாரற்க` எனவும் கூறுதற்காக இஃது, ஆறின்னாமை கூறி இரவுக் குறி விலக்கலாகச் செய்யப்பட்டது.
``கிரி வாணனே`` என்பதை, ``கேசரி`` என்பதன் பின்னர்க் கூட்டுக.
கிரி வாணன் - மலை வாழ்நன்; குறிஞ்சி - நிலத் தலைவன்.
ஆகரன் - இருப்பிடம் ஆனவன்.
திப்பிய வாசகன் - தெய்வத் தன்மை வாய்ந்த மொழியை உடையவன்.
அஃதாவது, நிறைமொழி ஐயன்.
``வலகலை வித்தகன்`` என்பதை, `கலை வல வித்தகன்` என மாற்றிக் கொள்க.
`வான வில்லும், மதியும் அணைகின்ற மாளிகை, பொற்குவைகளை யுடைய மாளிகை` என்க.
திகை - திசை.
அடுக்குப் பன்மை பற்றி வந்தது.
மட்டு அலர் - தேனை உடைய மலர்களை உடைய (பொழில்) திரு - திருவருள்.
விப்ர சிகாமணி - அந்தணர்களுக்குத் தலைமணி போன்றவன்.
மலயத் தமிழ் - பொதிய மலையில் தோன்றிய தமிழ்.
தமிழ்க் கேசரி - தமிழைப் பாட வல்ல சிங்கம்.
அரனை, ``அரசு`` என்றது, கேசரி போல்வானை, ``கேசரி`` என்றதும் பான்மை வழக்குக்கள் `வாரணமும், வருடைக் குலமும், யாளிகளும் விரவுகின்ற நீள்நெறி வாரணம் - யானை.
வருடைக் குலம்.
மலையாடுகளின் கூட்டம்.
வருடை, இங்குச் சரபம் ஆகாது, அவ் இனம் கூட்டம் ஆதல் இன்மையால்.
வினை துயர் - உம்மைத் தொகை.
வினை - கொலை வினை.
`விளைதுயர்` என பாடம் கொள்ளுதலுமாம்.
``நெறி - வழி ``நெறி துயர மொய்த்துள`` என, இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது ஏகாரம், தேற்றம் மணி - முத்து மணி.
எழிலின் - அழகினையுடைய.
``குறமாது`` என்றது தலைவியை.
``உனது அருமை`` என்பதற்கு, `உனது கூட்டத்தினது அருமை` என உரைக்க.
`அதனை நினைக்கிலன்` எனவே, `வருதற்கண் உள்ள அருமையே, அஃதாவது இடர்ப்பாட்டினையே நினைக்கின்றாள்` என்பதாம்.
நசை - விருப்பம்.
நைடயின் இனி நணுகல் - விருப்பம் காரணமாக வருதலை இனித் தவிர்வாயாக (சிறிது பழி - அம்பல்) முழுப் பழி - அவர் முழுப் பழி ஆதல் முன் - (அம்பல்) அலர் ஆதற்கு முன்பே.
இவ்வாறு தோழி கூறியதற்குப் பயன், தலைவன் களவொழுக்கத்தை ஒழிந்து வரைவான் ஆதல்.

பண் :

பாடல் எண் : 7

வாணில வும் புனலும் பயில் செஞ்சடை வண்கரு ணாகரனை
மலைமா துமையொடு மிவனா வானென முன்னாளுரை செய்தோன்
சேணில வும்புகழ் மாளிகை நீடிய தென்புக லிக்கரசைத்
திருவா ளனையெழி லருகா சனிதனை
மருவா தவர்கிளைபோல்
நாணில வும்பழி யோகரு தாதய லானொரு காளையுடன்
நசைதீர் நிலைகொலை புரிவே டுவர்பயில் தருகா னதர்வெயிலிற்
கேணில வுங்கிளி பாவையொ டாயமும் யாயெனை யும்மொழியக்
கிறியா லெனதொரு மகள்போ யுறுதுயர் கெடுவேனறிகிலேனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு அகப் பொருள் உடன் போக்கில் செவிலி புலம்பல் துறையாகச் செய்யப்பட்டது.
வாள் நிலவு - ஒளியை உடைய திங்கள் (பிறை).
கருணா ஆகரன் - அருளுக்கு இருப்பிடமானவன்.
`உமையொடும் கூடிய இவன்` என ஒரு சொல் வருவிக்க.
``ஆவான்`` என்பதற்கு, `நீவிர் வினாவியவன் ஆவான்` என உரைக்க.
உரை செய்யது தந்தையார்க்கு.
திருவாளன் - திருவருள் கைவரப் பெற்றவன்.
அருக அசனி - சமணர்க்கு இடியை ஒத்தவன்.
கிளை - சுற்றம்.
`நாளும் நிலவும் பதி` என முற்றும்மை விரிக்க.
ஓகாரம், சிறப்பு, நசை - விருப்பம், இரக்கம்.
``நசை தீர் வேடுவர், கொலை புரி வேடுவர்` எனத் தனித் தனி இயைக்க, ``பயில் தரு`` என்பதில் தரு, துணைவினை.
கான் அதர் - காட்டு வழி; பாலை நில வழி.
கேள் - கேளாக; நட்பாக.
பாவை - பதுமை.
ஒடு, எண் ஒடு.
`இது கிளி, ஆயம், யாய்` என்பவற் றோடும் இயைந்தது.
ஆயம் - தோழியர் கூட்டம்.
யாய் - நற்றாய்.
`கிளி முதலாக யாய் ஈறாக உள்ளவர்களையும், எனயும் ஒழிய` என்க.
`பெற்ற தாயினும் வளர்த்ததாய் மறக்கற்பாளலல்லள்` என்பாள், ``எனையும்`` என வேறு பிரித்துக் கூறினாள்.
`ஒழியப் பண்ணி` என ஒரு சொல் வருவிக்க.
கிறி - வஞ்சனை; தலைவனை உட்கொண்டு, ``கிறியால் எனது ஒரு மகள் போய்`` என்றாள்.
போய் - போயதனால்.
``எனது மகள்`` என உயர்திணை முறைக் கிழமைக்கண் நான்காம் உருபு வாராது, ஆறாம் உருபு வந்தது கால வழக்கு.
கெடுவேன், இரக்க குறிப்பு இடைச்சொல்.
`இதனை அறிகிலேன்` என வேறு வைத்து உரைக்க.
`முன்பு அவள் செய்த குறிகளை உற்று அறியேன் ஆயினேன்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 8

அறிவாகி யின்பஞ்செய் தமிழ்வாதில் வென்றந்த
அமணான வன்குண்டர் கழுவேற முன்கண்ட
செறிமாட வண்சண்பை நகராளி யென்தந்தை
திருஞான சம்பந்த னணிநீடு திண்குன்றில்
நெறியால மண்துன்றி முனைநாள்சி னங்கொண்டு
நிறைவார் புனந்தின்று மகள்மேல் வருந்துங்க
வெறியார் மதந்தங்கு கதவா ரணங்கொன்ற
வெகுளாத நஞ்சிந்தை விறலா னுளன்பண்டே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, அகப் பொருட் களவியலில், தலைவி தலைவனை எய்தப் பெறாமை எவ்வாற்றாலோ நிகழ்ந்தமையின் வேறுபட, செவிலி, `இவள் வேறுபடக் காரணம் என்னை` என வினாவிய வழி அவட்குத் தோழி களிறு தரு புணர்ச்சியால் அறத்தொடு நின்றதுறையாகச் செய்யப்பட்டது.
அறிவாகி - ஞானமாகி.
இன்பம் செய் - வீட்டின்பத்தைத் தருகின்ற தமிழ்.
ஞானசம்பந்தரது தமிழ்ப் பாடல்கள் `தமிழால்` என முன்றாவது விரிக்க.
அமண் - சமண்; இது குழூஉப் பெயர்.
`திருஞான சம்பந்தனது குன்று` என்க.
நெறி ஆல - வழியில் உள்ளார் ஒலம் இட.
மண் - தூசு.
`துன்றுவித்து` என்பது பிறவினை விகுதி.
தொகுக்கப்பட்டு, ``துன்றி`` என வந்தது.
துன்று வித்தல் - அடரச் செய்தல்.
புனம் தின்று - காட்டை அழித்துக் கொண்டு `நின் மகள்மேல்` என்க.
தூங்க வாரணம் - உயரமான யானை.
வெறி- நாற்றம் ``கத வாரணம்`` என்பதில் கதம், இன அடை.
``வெகுளாத`` என்பது, `விரும்புகின்ற` என அதன் மறு தலைப் பொருளைக் குறித்தது.
`விரும்புகின்ற நம் சிந்தை` என்பதை, நம் சிந்தை விரும்புகின்ற` என மாற்றிக் கொள்க.
விறலான் - யானையை வென்ற வெற்றியை உடையவன்.
``நம் சித்தை விரும்பு கின்ற` என்பதனால், ``இனி அவனே நின் மகட்குத் தலைவனாக விரும்பத் தக்கவன்`` என்பதையும் தோழி உடம்பொடு புணர்த்துக் கூறினாள்.
``பண்டே உளன்`` என்றதனால், `அவ்விருவரது நட்பு உறுதியாய் விட்ட ஒன்று` எனக் குறித்தாள்.

பண் :

பாடல் எண் : 9

பண்டமுது செய்ததுமை நங்கையருள் மேவுசிவ ஞானம்
பைந்தரள நன்சிவிகை செம்பொனணி நீடுகிற தாளம்
கொண்டதர னும்பர்பர னெங்கள்பெரு மானருள் படைத்துக்
கொடுத்ததமி ழைத்தவகு லத்தவர்க ளுக்குலகி லின்பம்
கண்டதரு கந்தர்குல மொன்றிமுழு துங்ககழுவிலேறக்
கறுத்தது வினைப்பயன் மனத்திலிறை காதலது அன்றி
விண்டதுவும் வஞ்சகரை மஞ்சணவு கின்றமணி மாட
வேணுபுர நாதன்மிகு வேதியர்சி காமணி பிரானே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மஞ்சு அணவுகின்ற`` என்பது முதலாகத் தொடங்கி உரைக்க.
மஞ்சு - மேகம்.
அணவுகின்ற - பொருந்துகின்ற.
பிரான் - தலைவன்.
``வேணுபுர நாதனும், வேதியர் சிகாமணியும் ஆகிய பிரான், அமுது செய்தது.
.
.
அருள்மேவு சிவஞானம்; கொண்டது சிவிகை.
தாளம்; தமிழால் தவக் குலத்தவர்களுக்கு இன்பம் கொடுத்தது எங்கள் பெருமான் அருள் படைத்து; கண்டது அருகந்தர் குலம் கழுவில் ஏற; கறுத்தது வினைப் பயன் விண்டது மனத்தில் இறை காதல் அன்றிய வஞ்சகரை`` எனக் கூட்டி வினைமுடிவு செய்க.
``செய்தது, கொண்டது, கறுத்தது வினையாலணையும் பெயர்கள்.
இவை எழுவாயாய் நிற்க, அத்தொழில்களுக்கு உரிய செயப்படுபொருள்கள் பெயர்ப் பயனிலையாய் நின்றன.
இது செயப்படு பொருளை வினைமுதல் போலக் கூறுவதொரு வழக்காம்.
கறுத்தது - வெகுண்டது; வெகுண்டு நீக்கியது.
செய்யுளுக்கு ஏற்ப, ``கொடுத்தல்`` எனக் கூறினாரேனும் அதனையும் ஏனையவற்றோடு இயைய, `கொடுத்தது` என்றே கொள்க.
``படைத்து ஏற`` என்னும் வினையெச்சப் பயனிலையைக் கொண்டன.
``தமிழை`` என்றது, `தமிழால்` என உருபுமயக்கம்.
``விண்டது`` என்னும் தொழிற் பெயர்.
எழுவாய், ``வஞ்சகரை`` என்னும் உருபேற்ற பயனிலையைக் கொண்டது.
``விண்டதுவும்`` என்னும் உம்மை சிறப்பு.
`அன்றிய` என்பதன் அகரம் தொகுத்தலாயிற்று.
அன்றிய - நீங்கிய.
``காதல் அது`` என்னும் அது, பகுதிப் பொருள் விகுதி.

பண் :

பாடல் எண் : 10

பிரானை மெய்த்திரு ஞானசம்
பந்தனை மறையவர் பெருமானைக்
குராம லர்ப்பொழிற் கொச்சையர்
நாதனைக் குரைகழ லிணைவாழ்த்தித்
தராத லத்தினி லவனருள்
நினைவொடு தளர்வுறு தமியேனுக்
கிராவி னைக்கொடு வந்ததிவ்
அந்திமற் றினி விடி வறியேனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, கவுணியர் தலைவர்பால் காதல் கொண்டாள் ஒருத்தி கூற்றாக - பாடாண் கைக்கிளையாகச் செய்யப் பட்டது.
அக்கைக்கிளையுள் இது கண்படை பெறாது கங்குலை நோதல் `கழலிணையை` என இரண்டன் உருபு விரித்து, மேல் (பாட்டு-3) ``சண்பையர் கோனச் சேவடி போற்றுவன்`` என்றது போலக் கொள்க.
அந்தி - எற்பாட்டுப் பொழுது.
`சிவஞானமே உண்மை மெய்ஞ் ஞானம்` என்றற்கு.
``மெய்த் திரு ஞானம்`` என்றார்.

பண் :

பாடல் எண் : 11

ஏனமு கத்தவ புத்தரை யிந்திர சித்து மணம்புணர் வுற்றான்
ஈழவ னார்சொரி தொட்டி யினங்களை
வெட்டி யிசித்தனர் பட்டர்
தான மிரக்கிற சீதை மடுப்பது சாதி குடத்தொடு கண்டீர்
சக்கர வர்த்திகள் சிக்கர மட்டுவர் தத்துவம் இப்பரி சுண்டே
ஆன புகழ்ப்பயில் விப்ர சிகாமணி அத்தகு மைப்புரை யுங்கார்
ஆர்பொழில் நீடிய சண்பையர் காவலன்
வண்களி யேனெளி யேனோ
சோனக னுக்குமெ னக்குமெனத்தரை யம்மனை சூலது கொண்டாள்
தும்புரு வாலியை வென்று நிலத்திடை
நின்று துலக்குகிறாரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கலம்பக உறுப்புக்களுள் ஒன்றாகிய `களி` என்பது பற்றி வந்தது இப்பாட்டு.
களி - களிப்பு; உணர்வழிந்த மயக்கம்.
கள்ளை உண்டு இவ்வாறான மயக்கத்தை எய்தினோன் கூற்றாக வருவதே `களி` என்னும் உறுப்பு.
அது பொருளுடைக் கூற்றாகவே அமைதல் உண்டு.
ஆயினும் இங்கு இது கள்ளுண்டோன் பிதற்றும் பிதற்றுரையாகவே அமைந்துள்ளது.
அதனால் இப்பாட்டில், ``ஆன புகழ்ப் பயில்.
.
.
.
வண் களியேன் எளியேனோ`` என்னும் பகுதி தவிர, ஏனைய பகுதி முழுதும் பொருள் படாப் பிதற்றுரைகளாம்.
``அத்தகு`` என்பதில் அகரம் பண்டறி சுட்டாய், இயல்பாய் உள்ள சிறப்பினைச் சுட்டிற்று.
மைபோலும் கரிய மேகம்.

பண் :

பாடல் எண் : 12

ஆர்மலி புகலி நாத
னருளென இரவில் வந்தென்
வார்முலை பயலை தீர
மணந்தவர் தணந்து போன
தேரத ரழிய லும்மைச்
செய்பிழை யெம்ம தில்லை
கார்திரை கஞலி மோதிக்
கரைபொருங் கடலி னீரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, அகப்பொருட் களவியலில் ஒருவழித் தணந்த தலைமகன் வரவு நீட்டித்தமையால் தலைவி ஆற்றாது அஃறிணைப் பொருள்களை நோக்கிக் கூறும் காமம் மிக்க கழிபடர் கிளவிகளில் கடலை நோக்கிக் கூறியது.
ஆர் - அழகு.
புகலி நாதன், ஆளுடைய பிள்ளையார்.
வார் - கச்சு.
பயலை - பசலை தேர் அதர் - தேர் சென்ற வழி; என்றது அவ்வழியைக் காட்டும் சக்கரப் பதிவுப் பள்ளத்தை.
அழியல் - அழிக்காதே.
இது பன்மை யொருமை மயக்கம்.
கடலுக்கு மக்கள் செய்யும் பிழை அவற்றில் உள்ள முத்து முதலிய விலையுள்ள பொருள்களைக் கவர்ந்து கொள்ளுதல்.
``உம்மை`` என்னும் இரண்டன் உருபை, `உமக்கு` என நான்கன் உருபாகத் திரிக்க.
`எமது` என்பது, ``எம்மது`` என விரித்தல் பெற்றது.
கஞலி - நெருங்கி.

பண் :

பாடல் எண் : 13

கடல்மேவு புவியேறு கவிநீரர் பெருமான்றன்
தடமாடு மிகுகாழி தகுபேதை யருளாமல்
திடமாகி லணிநீறு செழுமேனி முழுதாடி
மடலேறி யெழில்வீதி வருகாத லொழியானே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, அகப்பொருட் களவியல் பாங்கியிற் கூட்டத்துள் பாங்கியை இரந்து அவள் குறை நேராமையால் `மடல் ஏறுவன்` என அச்சுறுத்தும் `மடல் மா கூறுதல்` என்னும் துறையாகச் செய்யப்பட்டது.
மடல் மா - பனை மடலால் செய்யப்பட்ட குதிரை.
தலைவன் ஒருவன் தன்னால் காதலிக்கப்பட்ட தலைவி யொருத்தியை எவ்வாற்றானும் பெற இயலாத நிலை தோன்றினால் அவன் உடலில் சாம்பலை நிறைய பூசிக்கொண்டு எருக்கம் பூ மாலை அணிந்து கொண்டு, தலைவியின் உருவம் எழுதப்பட்ட படத்துடன் பனை மடலால் செய்யப்பட்ட குதிரைமேல் ஏறி, ``இவள் மேல் யான் வைத்த காதல்` கரை இறந்தமையால் யான் இறக்கின்றேன்`` என்று சொல்லிப் பறையை அடித்துக் கொண்டு தெருக்களில் எல்லாம் சுற்றி வருதல் மடல் ஏறுதல் ஆகும்.
இவ்வாறு ஒருவன் மடல் ஏறி வருவானாயின், `காதல் மிகுதியால் அவன் இறந்து விடுவனா` என்பது பல சோதனை களால் அறியப்படுமாயின் அத்தலைவியை ஊரார் வலிந்து அவனுக்கு மணம் செய்வித்தல் அக்காலத்தில் உலக நீதியாய் இருந்தது.
அதனால், தனக்குக் குறை நேராத தோழியை, ``நின் நிலைமை இதுவாயின், மடல் ஏறுவது தவிர எனக்கு வேறு வழியில்லை`` எனத் தலைவன் கூறி அச்சுறுத்துவான் மடல் ஏறிய தலைவனை ஒருத்தி மணப்பதும், அதற்குப் பெற்றோர், தமையன்மார் இசைவதும் மானம் போனபின் செய்யும் செய்யும் செயலாகவும் அக்காலத்தில் கருதப்பட்டது.
புவி ஏறு கவி நீரர் - நிலவுலகத்தில் மேம்பட்டு விளங்குகின்ற கவிகளைப் பாடும் தன்மையுடைய புலவர்கள்.
`பெருமான்றன் காழி` என இயையும்.
தடம் - தடாகங்கள்.
மாடு - பல பக்கங்கள்.
`மாடு தடம் மிகு காழி` என இயைக்க.
`காழித் தகு பேதை` - என்பதில் சந்தி ஒற்றுச் சந்தத்தின் பொருட்டுத் தொகுக்கப்பட்டது.
பேதை - தலைவி.
அருளாமை - இரங்காமை.
திடம் - திண்ணம்.
நீறு - சாம்பல்.
ஆடி - முழுகி.
வரு காதல் - வர விரும்பும் விருப்பம்.

பண் :

பாடல் எண் : 14

ஒழியா தின்புறு பொழில்சூழ் சண்பைமன்
உயர்பார் துன்றிய தகுஞா னன்புகழ்
எழிலா ருங்கவு ணியர் தீ பன்திகழ்
இணையார் செங்கரன் நிகழ்வான் விண்குயின்
பொழியா நின்றன துளிதார் கொன்றைகள்
புலமே துன்றின கலைமா னொன்றின
பழிமேல் கொண்டது நுமர்தே ரன்பொடும்
அருகே வந்தது அதுகாண் மங்கையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு அகப்பொருள் கற்பியலில் பருவம் குறித்துப் பிரிந்து சென்ற தலைவன் வாராது நீட்டிக்கப் பருவம் கண்டு ஆற்றாளாய தலைமகளுக்குத் தோழி தலைவன் குறித்த பருவத்தே வந்தமை கூறிய துறையாகச் செய்யப்பட்டது.
மன் - தலைவன்.
உயர் பார் - உயர்ந்ததாகிய வீட்டுலகம்.
துன்றிய ஞானம் - அதனை அடைதற்கு ஏதுவாய் உள்ள உணர்வு.
``செங்கரன்`` என்பதற்கு, `தாளம் ஏந்திய சிவந்த கைகளை உடையவன்` என உரைத்து, நிகழ்வான் - இனிது வளர்தற் பொருட்டு (க் குயின் துளி பொழியா நின்றன).
குயின் - மேகம்.
`மேகம் பொய்யாது பொழிதல் நல்லவர் வாழ்தற் பொருட்டு` என்பர் ஆதலின், `ஞானன் நிகழ்வான் குயின் துளி பொழியா நின்றன` என்றார்.
தார்க் கொன்றைகள் - மாலை போலப் பூக்கின்ற கொன்றை மரங்கள் - இவை கார்க் கொன்றை.
புலம் - நிலம்; முல்லை நிலம் `புலத்தின் கண்` என ஏழாவது விரிக்க.
துன்றின - பூக்கள் நெருங்கப் பெற்றன.
`கலை மான்கள் - பிணை மான்களோடு ஒன்றின` என்க.
`இவையெல்லாம் நிகழ்ந்தும் குறித்த வண்ணம் வந்திலது` என்னும் பழியைக் கொண்டதாகிய நமரது (நம் தலைவரது) தேர் அன்பொடும் அருகே வந்தது; மங்கையே! அது காண் என்க.
``வந்தது`` என்பதன் ஈற்றுக் குற்றிய லுகரம் முற்றிய லுகரம் ஆயது செய்யுளியல்பு.

பண் :

பாடல் எண் : 15

மங்கை யிடத்தர னைக்கவி
நீரெதி ரோட மதித்தருள்செய்
தங்கு புகழ்ச்சதுர் மாமறை
நாவளர் சைவசி காமணிதன்
துங்க மதிற்பிர மாபுரம் மேவிய
சூல்பொழில் நின்றொளிர்மென்
கொங்கை யுடைக்கொடி யேரிடை
யாள்குடி கொண்டன ளெம்மனமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, அகப்பொருட் களவியலில் பாங்கற் கூட்டத்தில் தன்னை உற்றது வினாவிய பாங்கனுக்குத் தலைவன் ``உற்றது உரைத்தல்`` என்னும் துறையாகச் செய்யப்பட்டது.
`மங்கையை இடத்துக் கொண்ட அரன்` என்க.
``அருள் செய்து`` என்பது, `பாடி` என்னும் பொருட்டாய், ``அரனை`` என விரிந் தும், ``கவி`` என்பதில் தொக்கும் நின்ற இரண்டன் உருபுகட்கு முடிபாயிற்று.
மதித்து - நிச்சயித்து நீர் எதிர் ஓடக் கவி அருள் செய்தது சமணரொடு செய் வாதத்தில்.
`அருள் செய் சைவ சிகாமணி` என இயைக்க.
``கொடியேர்`` என்பதில் ஏர், உவம உருபு.

பண் :

பாடல் எண் : 16

மனங்கொண்டு நிறைகொண்டு கலையுங் கொண்டு
மணிநிறமு மிவள் செங்கை வளையுங் கொண்ட
தனங்கொண்ட பெருஞ்செல்வம் திகழுங் கீர்த்திச்
சண்பையர்கோன் திருஞான சம்பந் தற்கு
நனங்கொண்டு மெய்கொண்டு பயலை கொண்டே
நன்னுதலா ளயர்கின்றாள் நடுவே நின்றும்
இனங்கொண்டு நகைகொண்டு மடவீர் வாளா
என்செயநீ ரலர்தூற்றி எழுகின் றீரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டுப் பாடாண் கைக்கிளையில் தலைவியை ஆற்றுவிக்கும் தோழி அவர் அறிவித்தலை அயற் பெண்டிரை நோக்கிக் கூறும் முன்னிலைப் புறமொழியாகச் செய்யப்பட்டது.
``இவள் என்பதை முதலிற் கொள்க.
மனம், நிறை.
(நிலை கலங்காமை) கலை (உடை) மணி நிறம் (அழகிய நிறம்) கை வளை இவைகளைக் கவர்ந் தவன் சண்பையர் கோன்.
சண்பை நகர் தனத்தை (கைப் பொருளை)க் கொண்ட பெருஞ் செல்வத்தையும்.
கீர்த்தியையும் உடையது.
சம்பந்தன் பொருட்டாக.
நனம் கொண்டு - அகலம் பொருந்தி.
நடுவே- சண்பையர் கோனுக்கும் இவளுக்கும் இடையிலே.
``நின்றும்`` என்னும் உம்மை சிறப்பு.
இனம் - கூட்டம் ``மடவீர்`` என்பதை, ``அயர் கின்றாள்`` என்பதன் பின்னர்க் கூட்டுக.
எழுகின்றீர் - திரிகின்றீர்கள்.

பண் :

பாடல் எண் : 17

எழுகுல வெற்பிவை மிடறி லடக்குவன்
எறிகட லிற்புனல் குளறிவ யிற்றினில்
முழுது மொளித்திர வியையிந்நிலத்திடை
முடுகுவ னிப்பொழு திவையல விச்சைகள்
கழுமல நற்பதி யதிப தமிழ்க்கடல்
கவுணிய நற்குல திலக னிணைக்கழல்
தொழுது வழுத்திய பிறரொரு வர்க்குறு
துயர்வரு விப்பனி தரியதொர் விச்சையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சம்பிரதம்` - என்பது கலம்பக உறுப்புக்களில் ஒன்று.
இது `சித்து` என்றும் சொல்லப்படும்.
இஃது, `உலகர் வியக்கத் தக்க அற்புதங்களைச் செய்து காட்ட வல்லோம்` எனச் சாலவித்தை காட்டுவோர் கூறும் கூற்றாகச் செய்யப்படும்.
நிலத்தில் ஏழு தீவுகளைச் சூழ்ந்துள்ள ஏழு மலைகள் `குலாசலம்` என்று சொல்லப்படும்.
நாவலந் தீவின் எட்டுத் திசைகளில் உள்ள மலைகளும் அவ்வாறு சொல்லப்படும்.
மிடறு - கழுத்து; தொண்டை.
குளறுதல் - குழப்பிச் சேறாக்குதல்.
இரவி சூரியன்.
முடுகுவன் - விரைந்து வீழச் செய்வேன்.
விச்சைகள் - வித்தைகள்.
``ஏழு குலமலைகளையும் என் தொண்டைக்குள் அடக்கு வேன்; கடல் நீரைக் கலக்கிச் சேறாக்கிக் குடித்து, அதன்பின் கடலில் தோன்றி மறையும் சூரியனைப் பூமியிலே (கிழக்கும், மேற்குமாக) உலாவச் செய்வேன்; இப்பொழுது இவைகளை ஒரு திறமையாக நான் குறிப்பிடவில்லை.
கவுணியர் திலகன் இணைக் கழலைத் தொழுது துதித்த பின்பும் ஒருவருக்குத் துன்பம் வருவிப்பேன்.
நான் இதுதான் குறிப்பிட விரும்பிய அரிய வித்தை.
இவ்வாறு சொல்லப்படுவதை உண்மையோடு பொருந்திய சிலேடை யாகச் செய்வது உண்டு.
இங்கு அவ்வாறில்லை.
`மிடற்றில்` என இரட்டி வந்து ஒற்றுச் சந்தம் பற்றித் தொகுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

சயமி குத்தரு கரைமு ருக்கிய தமிழ்ப யிற்றிய நாவன்
வியலி யற்றிரு மருக லிற்கொடு விடம ழித்தருள் நீதன்
கயலு டைப்புனல் வயல்வ ளத்தகு கழும லப்பதி நாதன்
இயலு டைக்கழல் தொழநி னைப்பவ ரிருவி னைத்துயர் போமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முருக்கிய தமிழ் - வாதில் வென்று அழித்த தமிழ்ப் பாடல்.
வியல் இயல் - இடம் அகன்ற இயல்பை உடைய.
நீதன் - நீதியை உடையவன்.
இயல் - அழகு.

பண் :

பாடல் எண் : 19

மேதகுந் திகழ்பூக நாகசண் பகசூத
வேரிவண் டறைசோலை யாலைதுன் றியகாழி
நாதனந் தணர்கோனெ னானைவண் புகழாளி
ஞானசுந் தரன்மேவு தார்நினைந் தயர்வேனை
நீதியன் றினபேசும் யாயுமிந் துவும்வாசம்
நீடுதென் றலும்வீணை யோசையுங் கரைசேர
மோதுதெண் திரைசேவல் சேருமன் றிலும்வேயும்
மூடுதண் பனிவாடை கூடிவன் பகையாமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, பாடாண் கைக்கிளையுள் தலைவி இரவு நீடு பருவரலின் வகையாகிய திங்கள் முதலிய இனியனவற்றை இன்னாதனவாகக் கண்டு நோதல் துறையாகச் செய்யப்பட்டது.
மேதகு - மேன்மை தக்கிருக்கின்ற.
பூகம் - பாக்டு மரம்.
நாகம் - புன்னை மரம்.
சூதம் - மாமரம்.
பூகம் முதலிய நான்கும் உம்மைத் தொகை `இவைகளையுடைய சோலை` என்க.
வேரி - தேன்.
ஆலை - கரும்பு ஆலை.
துன்றிய - நெருங்கிய.
தார் - மாலை.
``அயர் வோனை`` என்னும் இரண்டன் உருபை நான்கன் உருபாகத் திரிக்க.
நீதி அன்றின - நியாயத்தோடு மாறுபட்ட சொற்கள் அவை தக்க தலைவனைக் காணின் கன்னியர்க்கு மனம் செல்லும் என்பதை அழித்துச் சொல்லும் சொற்கள்.
யாய் - என் தாய்.
இந்து - திங்கள்.
வாசம் - நறுமணம்.
திரை - கடல் அலை.
சேவல் சேரும் அன்றில் - அது, சேவலை அழைக்கும் குரலைக் குறித்தது.
ஆகுபெயர்.
வேய் - வேய்ங்குழல்.
மாலையில் இஃது ஆயரால் ஊதப்படுவது.
கூடி - இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து.
``திரை, வாடை`` என்பவற்றிலும் எண்ணும்மை விரிக்க.
தென்றலையும் வாடையையும் ஒருங்கு கூறியது, `தென்றற் காலத்தில் தென்றலும் பகையாகின்றது; வாடைக் காலத்தில் வாடையும் பகையாகின்றது` என்றபடி.

பண் :

பாடல் எண் : 20

வன்பகை யாமக் குண்டரை வென்றோய்
மாமலர் வாளிப் பொருமத வேளைத்
தன்பகை யாகச் சிந்தையுள் நையும்
தையலை யுய்யக் கொண்டருள் செய்யாய்
நின்புகழ் பாடிக் கண்பனி சோரா
நின்றெழில் ஞானா என்றகம் நெக்கிட்
டன்பக லாமெய்ச் சிந்தைய ரின்பாம்
அம்பொழில் மாடச் சண்பையர் கோவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, பாடாண் கைக்கிளையுள் தலைவிக் குரிய தூதாகிச் சென்ற தோழி கூறும் `தூதிடையாடல்` என்னும் துறை யாகச் செய்யப்பட்டது.
``நின்புகழ் பாடி`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.
``நின்புகழ் பாடி.
.
.
.
மெய்ச் சிந்தையர்`` எனப் பட்டார் ஞானசம்பந்தர்க்கு அன்பராய நல்லோர்.
`இன்பாம் கோ` என இயைத்து, `அவர் இன்புறுதற்குத் துணையாம் தலைவனே` என உரைக்க.

பண் :

பாடல் எண் : 21

கோவின்திரு முக மீதொடு வருதூதுவ ஈரக்
குளிர்பைம்பொழில் வள நாடெழில் நிதியம்பரி சம்மீ
மாவீரிய ரிவர் தங்கையென் மகுடன்திற ம் அமண
மறவெங்குல மறிகின்றிலன் பழியச்சத வரசன்
பாவேறிய மதுரத்தமிழ் விரகன்புக லியர்மன்
பயில்வண்புக ழருகாசனி பணியன்றெனின் நமர்காள்
தூவேரியை மடுமின் துடி யடிமின்படை யெழுமின்
தொகுசேனையு மவனும்பட மலையும்பரி சினியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மறம்` என்பதும் கலம்பக உறுப்புக்களுள் ஒன்று.
இது தம்மை மதியாது தம் மகளை எளிதில் தனக்குக் கொடுக்கும்படி ஓலை கொடுத்து விடுத்த தூதனைக் கண்டு மறவர் மறக் குடியில் பிறந்தோர் சினந்து கூறும் கூற்றாகச் செய்யப்படும்.
`காஞ்சி` என்னும் புறத் திணையுள் இது `மகட்பாற் காஞ்சி` என்னும் துறையாம்.
மறக் குடியாவது வழிவழியாகப் படைவீரராகும் தொழிலையுடைய குடி.
கோவின் திருமுகம் - அரசன் விடுத்த ஓலை.
மீதொடு வரு தூதுவ- அஃது உன தலை மேற் காணப்பட வருகின்ற தூதனே.
இவர் மா வீரியர் - இங்குள்ளார் பெரிய வீரர்கள் இவர் தங்கை பரிசம் - இவர்களுக்குத் தங்கையாகிய இவளுக்குப் பரிசமாவன (பரிசம் - மண் கொள்வார் அதன் பொருட்டு மணப் பெண் வீட்டாருக்குத் தரும் பொருள்) ஈரக் குளிர் பைம்பொழில்களை யுடைய வளநாடும் எழில் விளங்கும் நீதிக் குவையும் ஆகும்.
ஈ - இவைகளை நீ இப்பொழுதே கொடு.
மகுடன் திறமண அம் என் - முடியரசனாகிய உம் வேந்தன் கூற்றில் நிகழ்த்தும் மணவினையின் அழகு என்னே! (ஓர் ஓயும், தூதுவனுந் தானே?) பழிபச் சத அவ் அரசன் மற வெங்குலம் அறிகின்றிலன் - பழியை நிலையாகப் பெற்றுள்ள அரசன், `மறவர் களது கொடிய குலம் எத்தன்மையது` என்பதை அறிகின்றிலன்.
``(இவ் வோலை) தமிழ் விரகனும், அருகாசனியுமாகிய சம்பந்தனது ஆணை ஓலை அன்று என்பது தெளிவாதலால், நமர்காள்! தூ ஏரியை மடுமின் - இப்பொழுதே இவ்வரசனது நாட்டில் உள்ள தூய நீர்தேங்கும் ஏரிகளைத் தூர்மின்! துடி (பறைகளை அடிமின்! படை எழுமின்! தொகு சேனையும், அவ் அரசனும் ஒரு சேர அழியும் படி போர் புரியும் நிலைமைதான் இனி.
(வேறு எதுவும் இல்லை.
) என உரைக்க.
``பழி அச்சத அரசன்`` என்பதில் அகரச் சுட்டினை, ``அரசன்`` என்பதனோடு புணர்க்க.
சதம் - நிலைத் திருத்தல் `பழி நிலைபெற்ற அவ் அரசன்`` என்க.

பண் :

பாடல் எண் : 22

இனியின் றொழிமினிவ் வெறியும் மறியடு
தொழிலும் மிடுகுர வையுமெல்லாம்
நனிசிந் தையினிவள் மிகவன் புறுவதொர்
நசையுண் டதுநரை முதுபெண்டீர்
புனிதன் புகலியர் அதிபன் புனைதமிழ்
விரகன் புயமுறு மரவிந்தம்
பனிமென் குழலியை யணிமின் துயரொடு
மயலுங் கெடுவது சரதம்மே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, பாடாண் திணைக் கைக்கிளையுள் தலைவியது ஆற்றாமையால் தோன்றிய வேறுபாட்டினைச் செவிலி யும், நற்றாயும் தெய்வத்தான் ஆயதாகக் கருதி வேலனை வருவித்து வெறியாடுவிக்கத் தோழி உண்மை உரைப்பாளாய் வெறிவிலக்கிய துறையாகச் செய்யப்பட்டது.
``நரை முது பெண்டீர்`` என்பதை முதலிற் கொள்க.
வெறி - வெறியாடுதல்.
மறி அடு தொழில் - யாட்டைப் பலியிடும் தொழில்.
குரவை - தெய்வத்திற்குக் குரவையாடுதல்.
இதனைச் சிலப்பதிகாரத்து ஆய்ச்சியர் குரவை முதலியவற்றான் அறிக.
வெறி முதலிய ``இவைகளை இன்று இனி (இப்பொழுதே) ஒழிமின்`` எனக் கூட்டுக.
நசை - விருப்பம்.
அரவிந்தம் தாமரை.
அஃது அதன் மலரால் ஆகிய மாலையைக் குறித்தது.
இரண்டன் உருபு அணிதல் தொழிலினும் வரும் ஆதலலால், ``குழலியை அணிமின்`` என்றாள்.
சரதம் - உண்மை `இவள் உறுவது ஓர் நசை உண்டு; அது தமிழ் விரகன் புயம் உறும் அரவிந்தம் (அதனைக்) குழலியை அணிமின்` என முடிக்க.

பண் :

பாடல் எண் : 23

சரத மணமலி பரிசம் வருவன
தளர்வில் புகலிய ரதிபன் நதிதரு
வரத ணணி தமிழ் விரகன் மிகுபுகழ்
மருவு சுருதிநன் மலையி னமர்தரு
விரத முடையைநின் னிடையி னவள்மனம்
விரைசெய் குழலியை யணைவ தரிதென
இரதம் அழிதர வருதல் முனமினி
யெளிய தொருவகை கருது மலையனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு அகப் பொருட் களவியலில் தலை வனைத் தோழி வரைவு கடாதற்கண் பிறர் வரைவு உணர்த்திய துறை யாகச் செய்யப்பட்டது.
``மலையனே`` என்பதை முதலிற் கொள்க.
மலையன் - வெற்பன்; குறிஞ்சி நிலத் தலைவன் மண மலி பரிசம் வருவன சராதம் - தலைவியை வரைந்து கொள்ளுதற்கு உரிய மிகுந்த பரிசப் பொருள்கள் வருவன ஆயினமை உண்மை.
(அதனால்) தமிழ் விரகன் மலையின் அமர்தரு விரதம் உடையை நின் இடையின் அவள் மனம் - ஞானசம்பந்தனது மலையின்கண் விருப்பம் வைத்தலையே விரதமாக உடைய நின்னைப் பற்றி அவளது (தலைவியது) மனத்தில் எழுந்துள்ள எண்ணம் விரை செய் குழலியை அணைவது அரிது என- `இனித் தலைவன் தன்னைச் சேர்தல் இயலாது` என்பதாய் இருத்தலால்.
அழிதர இரதம் வருதல் முனம் எளியது ஒருவகை இனி கருது - அவள் இறந்து படும்படி அயலாரது தேர் இங்கு வந்து சேர்தற்கு முன்பு எளிதில் அதை மாற்றுதற்கு ஒரு வழியை நீ இப்பொழுதே எண்ணி முடிப் பாயாக.
அதி தரு வரதன் - மிகுதியாகத் தரும் வரத்தை உடையவன்.
சுருதி - தமிழ் மறை.
அமர் - அமர்தல்; விரும்புதல்; முதனிலைத் தொழிற் பெயர்.
``விரை செய் குழலி`` என்பது தோழி கூற்றாய் ``அவள்`` எனப்பட்டவளையே குறித்தது.
``ஞானம் தமிழ்`` என்பதில் சந்தி ஒன்றுச் சந்தம் நோக்கித் தொகுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

அயன்நெடிய மாலுமவ ரறிவரிய தாணுவரன்
அருளினொடு நீடவனி யிடர்முழுது போயகல
வயலணிதென் வீழிமிழ லையின்நிலவு காசின்மலி
மழைபொழியு மானகுண மதுரன்மதி தோய்கனக
செயநிலவு மாடம்மதில் புடை தழுவு வாசமலி
செறிபொழில்சு லாவிவளர் சிரபுரசு ரேசன்முதிர்
பயன்நிலவு ஞானதமிழ் விரகன்மறை ஞானமுணர்
பரமகுரு நாதன்மிகு பரசமய கோளரியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``சுரேசன், தமிழ் விரகன், பரம குருநாதன், பரசமய கோளரி`` என்னும் ஒரு பொருட் பல பெயர்களை எழுவாயாக வைத்து, ``மான குண மதுரன்`` என்பதைப் பயனிலையாக்கி முடிக்க.
இது, ஞானசம்பந்தர் திருவீழிமிழலையில் படிக் காசு பெற்றுப் பஞ்ச காலத்தில் மக்களுக்கு உணவு அளித்துக் காத்த சிறப்பினைக் கூறியது.
`தாணுவாகிய அரன்` என்க.
தாணு - (நெருப்புத்) தூண்.
``அருளினோடு`` என்பதில் ஒடு உருபு கருவிப் பொருளில் வந்தது.
கனம் - பொன்.
இது மாடத்திற்கும் `மதிலுக்கும் அடை` அவனி - உலகம்.
நிலவு - ஒளி வீசுகின்ற.
காசின்- பொற் காசினால்.
மலி மழை - மிக்க மழை.
மான குணம் - பெருமை வாய்ந்த பண்பு.
மதுரன் - இனியவன்.
மதி, சந்திரன் செயம் - வெற்றி சிரபுரம் - சீகாழி.
சுரேசன் - பூசுரர் தலைவன்.
`ஞானத் தமிழ்` என்பதில் சந்தித் தகர ஒற்றுச்சந்தம் நோக்கித் தொகுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

அரியாருங் கிரிநெறியெங் ஙனம் நீர் வந்தீர்
அழகிதினிப் பயமில்லை யந்திக் கப்பால்
தெரியாபுன் சிறுநெறிக ளெந்தம் வாழ்விச்
சிறுகுடியின் றிரவிங்கே சிரமம் தீர்ந்திச்
சுரியார்மென் குழலியொடும் விடியச் சென்று
தொகுபுகழ்சேர் திருஞான சம்பந் தன்றன்
வரியாரும் பொழிலுமெழில் மதிலுந் தோற்றும்
வயற்புகலிப் பதியினிது மருவ லாமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, அகப்பொருள் உடன் போக்கில் தலைவன் தலைவியரைச் சுரத்திடைக் கண்டோர் பொழுதும் வழியும் கடிய வாதலைக் கூறிச் செலவு விலக்கிய துறையாகச் செய்யப்பட்டது.
அரி ஆரும் கிரி நெறி - சிங்கங்கள் நெருங்கியுள்ள இம் மலை வழியில் ``தனித்து எங்ஙனம் வந்தீர்`` என்க.
``அழகிது`` என்றது இகழ்ச்சிக் குறிப்பு இனிப் பயம் இல்லை - இப்பொழுது அச்சம் இல்லை (ஆயினும் இனி) அந்திக்கு அப்பால் இடர் நிறைந்த சிறிய கொடி வழிகள் கண்ணிற்குப் புலப்படா.
வாழ்வு இடம் - வாழும் ஆகிய.
``இங்கே குழலியொடும் சிரமம் தீர்ந்து, விடியச் சென்று புகலிப் பதி இனிது மருவலாம்`` என முடிக்க.
விடிதலுக்கு `பொழுது` என்னும் எழுவாய் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 26

ஆமாண்பொன் கூட்டகத்த வஞ்சொ லிளம் பைங்கிளியே
பாமாலை யாழ் முரியப் பாணழியப் பண்டருள்செய்
மாமான கந்தரன்வண் சம்பந்த மாமுனியெம்
கோமான்தன் புகழொருகா லின்புறநீ கூறாயே
கொச்சையர்கோன் தன்புகழ்யா னின்புறநீ கூறாயே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டுப் பாடாண் கைக்கிளையுள் தலைவி தனது ஆற்றாமையால் அஃறிணைப் பொருள்களை நோக்கிக் கூறும் காமம் மிக்க கழிபடர் கிளவிகளுள் தான் வளர்க்கும் கிளியொடு கூறலாகச் செய்யப்பட்டது.
கிளி பேசுந் தன்மை உடையதாதல் பற்றிக் காமம் மிக்க கழிபடர் கிளவிகளுள் இது சிறிது பயன் உடையதாகக் கொள்ளப்படுகின்றது.
`மாண் பொன் ஆம் கூடு` என மாற்றி, `பொன் னால்` என ஆல் உருபு விரிக்க.
கூட்டு அகத்த - கூட்டினுள்ளே இருக் கின்ற அம்சொல் - அழகிய சொல்லைப் பேசுகின்ற.
யாழ் முரியும்படி பாணர் வருந்தும்படியும் பண்டு பாமாலை (தேவாரம்) அருளிச் செய்த மா (பெரிய) மானம் (பெருமை) உடைய சம்பந்தன்` என்க.
கொச்சை- சீகாழி.
``பாணர்`` எனற்பாலது, ``பாண்`` எனக் குடிப் பெயராகக் கூறப் பட்டது.
பாணர் - வருந்தும்படியும் பண்டு பாமாலை (தேவாரம்) அருளிச் செய்த மா (பெரிய) மானம் (பெருமை) உடைய சம்பந்தன்` என்க.
கொச்சை - சீகாழி.
``பாணர்`` எனற்பாலது, ``பாண்`` எனக் குடிப் பெயராகக் கூறப்பட்டது.
பாணர் - திருநீலகண்ட யாழ்ப்பாணர்.
இவர் தமது யாழைத் தாமே முரிக்க முயலும்படி ஞானசம்பந்தர் பாடல் பாடினமையைத் திருத்தொண்டர் புராணத்துட் காண்க.
ஈற்றடி நீண்டு வந்தமையால் இது கலித் தாழிசையாயிற்று.

பண் :

பாடல் எண் : 27

கூற தாகமெய் யடிமை தானெனை யுடைய
கொச்சையார் அதிபதி
வீற தார்தமிழ் விரகன் மேதகு புழி னானிவன் மிகுவனச்
சேற தார்தரு திரள்க ளைக்கன செழுமு லைக்குரி யவர்சினத்
தேறு தானிது தழுவி னாரென இடிகொள் மாமுர சதிருமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, அகப் பொருள் களவியலில் தலைவன் தோழியைக் குறையிரந்தவிடத்துத் தோழி அவனை மறுத்துச் சேட் படுக்கும் வகைகளுள் தலைவியது அருமை சாற்றற்கண் `இவளது பெற்றோர் இவளை ஏறு தழுவியவர்க்குக் கொடுப்பதாகச் சொல்லிய படி பறைமுழங்குகின்றது` எனப் படைத்து மொழி கூறிச் சேட்படுத் தாகச் செய்யப்பட்டது.
ஏறு தழுவியவர்க்கு மகளைக் கொடுத்தல் முல்லை நில வழக்கு.
கூறு - பங்கு.
`என்னைத் தன் பங்கில் சேரும் வண்ணம் மெய்யடிமையாக உடைய அதிபதி` என்க.
`புகழினான் ஆகிய இவனது வனத்தின்கண்` என உரைக்க.
வனம் - காடு; முல்லை நிலம்.
சேறு - சந்தனக் குழம்பு.
திரள் - திரண்ட கணை - அழகு.
``செழு முலை`` என்பது சினையாகு பெயராய்த் தலைவியைக் குறித்தது.
`செழு முலைக்கு உரியவன் ஏறு இது தழுவினார்` என முரசு அதிரும் என்க.
`அது` இரண்டும் பகுதிப் பொருள் விகுதிகள்.
`தான்` இரண்டும் அசைகள்.

பண் :

பாடல் எண் : 28

சதுரன் புகலிய ரதிபன்கூர்
தவசுந் தரகவு ணியர்தஞ்சீர்
முதல்வன் புகலிய ரதிபன்தாள்
முறைவந் தடையலர் நகரம்போல்
எதிர்வந் தனர்விறல் கெடவெம்போர்
எரிவெங் கணைசொரி புரிமின்கார்
அதிர்கின் றனஇது பருவஞ்சே ரலர்தம்
பதிமதி லிடிமின்னே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, புறப்பொருளில் உழிஞைத் திணை முற்று முதிர்வுத் துறையைப் படைத் தலைவன் கூற்றாக்கிச் செய்யப் பட்டது.
முற்று முதிர்வாவது கோட்டையை அணுகி முற்றுகையிட்ட படைகள் அம்முற்றுகையை வலுப் பெறச் செய்தலாம்.
சதுரன் - திறல் உடையன்.
கூர் தவ சுந்தரம் - மிகுந்த தவமாகிய அழகு; (குல ஒழுக்கம்) `கவுணியர்தம்` முதல்வன் என இயையும்.
தாள் முறை வந்து அடையலர், திருவடி முறையாக வந்து அடையாதவர்கள் `நகரம் போல் ஆக என ஒரு சொல் வருவிக்க.
``ஆக`` என்பது ``சேரலர்தம் பதி`` எனப்பின் வருவதைக் குறித்தது.
சேரலர் - பகைவர்.
எதிர் வந்தனர் - எதிரில் போராட வந்தவர்கள்.
விறல் வெற்றி கெட - அழியும் படி `போரில்` என ஏழாவது விரிக்க ``கமை சொரிமின்; மதில் இடமின்`` எனப் படைத் தலைவன் படைஞரை ஏவினான்.
`இடிமினே` என வரற்பாலது, சந்தம் நோக்கி ``இடமின்னே`` என விரித்து வந்தது.
கார் - மேகம்.
``இது பருவம்`` என்றது, `பருவ நிலை வந்தது.
இது வாயினும் அது பற்றிச் சோர்தல் கூடாது` என்றபடி.
மருதத்திணைக் கும், நெய்தல் திணைக்கும் பெரும்பொழுது வரைவின்மையால் மருதத்துப் புறனாகிய உழிஞைக்கு இங்குக் கார்ப் பருவம் வந்தது.
முன் பாட்டின் இறுதிச் சொல் ``அதிரும்`` என்பதேயாயினும் சந்தி வகையால் ``சதிரும்`` என வந்தமையால் அஃதே பற்றி இப்பாட்டு, ``சதுரன்`` எனத் தொடங்கிற்று.
இப்பாட்டுள் ``புகலியர் அதிபன்`` என்பது இருமுறை வந்துள்ளது.
அஃது, ஏடு பெயர்த்து எழுதினோரது நினைவுக் குறைவால் ஏற்பட்டதாகும்.

பண் :

பாடல் எண் : 29

மின்னு மாகத் தெழிலி யுஞ்சேர்
மிகுபொன் மாடப் புகலி நாதன்
துன்னும் ஞானத் தெம்பி ரான்மெய்த்
தொகைசெய் பாடற் பதிக மன்னாள்
பொன்னும் மாநல் தரள முந்தன்
பொருக யற்கண் தனம்நி றைத்தாள்
இன்னு மேகிப் பொருள் படைப்பான்
எங்ங னேநா னெண்ணு மாறே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, அகப்பொருள் கற்பியலில் பொருள் வயிற் பிரியக் கருதிய தலைவன் அதனை யறிந்து தலைவி ஆற்றா ளாயது கண்டு செலவழுங்கிக் கூறிய துறையாகச் செய்யப்பட்டது.
மாகத்து மின்னும் எழிலி - வானத்தின்கண் மின்னலை வீசுகின்ற மேகம்.
உம்மை, சிறப்பு.
தலைவியது அருமைக்கு ஞானசம்பந்தரது திருப்பதிகத்தின் அருமையை உவமையாகக் கூறினான்.
அருமை - பெறுதற்கு அருமை.
``அத்தகையாள் இறந்து பட நான் பிரிதல் எங்ஙனம்`` என்றான்.
``தலைவி தன் தனங்களில் பொன்னையும், கண்களில் தாளத்தையும் (முத்துக்களையும்) நிறைத்தாள் என்க.
பொன் - பசலை நிறம்.
முத்து - கண்ணீர்.
எதிர் நிரல் நிறை.
``பொன்னும் முத்தும் இங்கே நிரம்பக் கிடைத்துவிட்ட பின்பு, பொருள் தேட முயல்வது எற்றுக்கு`` என்பான், ``இன்னும் ஏகிப் பொருள்படைப்பான்`` என்றான் படைப்பான், பான் ஈற்று வினையெச்சம்.

பண் :

பாடல் எண் : 30

மாறி லாத பொடிநீ றேறு கோல வடிவும்
வம்புபம்பு குழலுந் துங்க கொங்கை யிணையும்
ஊறி யேறு பதிகத் தோசை நேச நுகர்வும்
ஒத்து கித்து நடையுஞ் சித்த பத்தி மிகையும்
வீற தேறும் வயல்சூழ் காழி ஞான பெருமான்
வென்றி துன்று கழலி னொன்றி நின்ற பணியும்
தேறல் போலும் மொழியும் சேல்கள் போலும் விழியும்
சிந்தை கொண்ட பரிசும் நன்றி மங்கை தவமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, அகப்பொருட் களவியல் பாங்கற் கூட்டத்துள், தலைவன், பாங்கனுக்குத் `தலைவியது இடம், இயல்பு இவை` எனக் கூறும் துறையாகச் செய்யப்பட்டது.
``வீறது ஏறும், வயல் சூழ் காழி ஞான பெருமான்`` என்பதை முதலில் வைத்து, அதனை ``நீறு, பதிகம், பத்தி கழல்`` என்பவற்றோடு இயைக்க.
மாறு இலாத பொடி - விதிகட்கு மாறு பாடாப் பொடியாக அமைக்கப்பட்ட நீறு கோலம், திரு நீற்றை அணிந்த அழகு.
வம்பு பம்பு - நறுமணம் மிகுந்த.
இந்நறு மணம் `இயற்கை நறுமணம்`` என்க.
துங்கம் - உயர்ச்சி.
``மூரி`` என்பது எதுகை நோக்கி.
``மூறி`` எனத் திரிந்து நின்றது.
மூரி - யாழ் மூரி.
ஓசை - இசை; பண் நேச நுகர்வு - விருப்பத்தோடு துய்த்தல்.
மொத்துதல் - கால் தரையிற் சேர்தல்.
கித்து - தளர் நடை; மெல்ல நடக்கும் நடை.
`கித்தாகிய நடை` என்க.
தேறல் - தேன்.
பரிசு - தன்மை இயல்பு.
`இவைகளே என் சிந்தையைக் கவர்ந்த தன்மைகள்` என்ப தாம்.
நன்றி - நன்மை.
`இவை அம்மங்கை தனது தவத்தால் பெற்ற நன்மைகளாம்` என்றபடி.
``தவம்`` என்பது காரண ஆகு பெயராய், அதனால் விளைந்த பயனைக் குறித்தது.
`ஞானப் பெரு மான்` என்பதில் சந்திப்பகர ஒற்றுச் சந்தம் நோக்கித் தொகுக்கப் பட்டது.
``திருநீற்றுக் கோலமும், திருப்பதிகத்து விருப்பமும், குரு பத்தியும், ஆசிரியப் பணியும் நான் கண்ட தலைவிக்கே உரிய சிறப்புக்கள்`` என்பான் மகளிர்க்குரிய பொது இயல்புகள் சிலவற் றுடன் இவற்றைக் கூட்டிக் கூறினான்.
``இச்சிறப்பு அடையாளங்களே என நெஞ்சு அவளிடம் சென்றமைக்குக் காரணம்`` என்பது குறிப்பு.
திருக்கோவையாரில் சொல்லப்பட்ட தலைவன் தலைவியரும் இத்தன்மையாராகக் குறிக்கப்பட்டமை நினைக்கத்தக்கது.
சுந்தரரைப் பரவையார் கண்ட பொழுது பல பொதுவியல்புகளைக் கூறி, ``மின்னோர் செஞ் சடையண்ணல் மெய்யருள் பெற்று உடைய வனோ`` என்னும் சிறப்பினைக் கூறியதாக அருளிய சேக்கிழார் திரு மொழியும் இங்கு நினைக்கத் தக்கது.

பண் :

பாடல் எண் : 31

கைதவத்தா லென்னிடைக்கு
நீவந்த தரியேனோ கலதிப் பாணா
மெய்தவத்தா ருயிரனைய
மிகுசைவ சிகாமணியைக் வேணுக் கோனைச்
செய்தவத்தால் விதிவாய்ந்த
செழுமலையா ரவனுடைய செம்பொன் திண்டோள்
எய்தவத்தால் விளிவெனக்கென்
யாதுக்கு நீபலபொய் இசைக்கின் றாயே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, அகப் பொருள் கற்பியலில் பரத்தையிற் பிரிவில் மீண்டு வந்த தலைவன் பாணனை வாயிலாக விடுத்துழித் தலைவி வாயில் மறுத்த துறையாகச் செய்யப்பட்டது.
``கலதிப் பாணா`` என்பதை முதலிற் கொள்க.
கைதவம் - வஞ்சனை.
அது `தலைவன் தவறிலன்` என வலியுறுத்தற்குக் கூறும் பல பொய் மொழிகள்.
என் இடை - எனது இடை.
அஃது இல்லம், வேணுபுரம், ``வேணு`` எனப்பட்டது.
வேணுபுரக் கோனைத் தாங்கள் முற்பிறப்பிற் செய்த தவத்தால் அத்தவத்தின் பயனாகத் தலைவனாக வாய்க்கப் பெற்றவர்கள் (இங்குள்ள) மலையார் (மலைவாணர்).
அவர்கள் அந்த வேணுபுரக் கோனது திண் தோள்களையே தங்களுக்குப் பாதுகாவ லாகக் கொண்டிருக்கின்ற காரணத்தால் அவர்கள் மகளாகிய எனக்கு எந்த ஒன்றினாலும் விளிவு (இறப்பு) உண்டாகாது.
(ஆகவே, `தலைவன் தவறுடையான்` என்பது தெரிந்தால் நான் இறந்துபடு வேன் என்று கருதி) நீ ஏன் (`தலைவன் தவறிலன்` என்பதாகப்) பல பொய்மொழிகளைச் சொல்கின்றாய் (வேண்டா; உடனே திரும்பிப் போ) என்பது.
இங்குக் கூறப்பட்ட பொருள்.
``தோள்`` என்பது வீரத்தைக் குறித்துப் பின் அதனால் உண்டாகும் பாதுகாவலைக் குறித்தது.
ஞானசம்பந்தரை புய வலிமையுடையராகக் கூறியது சமணர் பலரை வென்றமை கருதி.

பண் :

பாடல் எண் : 32

இசையை முகந்தெழு மிடறுமி திங்கிவன்
இடுகர ணங்களி னியல்பும் வளம்பொலி
திசைதிசை துன்றிய பொழில்சுல வுந்திகழ்
சிரபுர மன்றகு தமிழ்விர கன்பல
நசைமிகு வண்புகழ் பயிலும் மதங்கிதன்
நளிர்முலை செங்கயல் விழிநகை கண்டபின்
வசை,தகு மென்குல மவைமுழு துங்கொள
மதிவளர் சிந்தனை மயல்வரு கின்றதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மதங்கம் ( மிருதங்கம்) - மத்தளம், மதங்கியார் - மத்தளம் வாசிக்கும் பெண்மணியார்.
மத்தளத்தை மகளிர் வாசிக்கும் வழக்கம் ஒரு காலத்தில் இருந்தது.
இம்மகளிரும் பாணர் குலத்தவரே.
அதனால் மத்தளத்தை வாசித்துக் கொண்டு தெருக்கள் தோறும் போய்ப் பொருள் பெறுவது இவர்கட்குத் தொழிலாய் இருந்தது.
`மதங்கி` என்பது, ``மாதங்கி`` என்றும் வரும்.
இவ்வாறு தெருவிற் செல்லும் ஒருத்தியைக் கண்டு ஒருவன் கைக்கிளையாக (ஒருதலைக் காமமாகிக் காதலித்துக் கூறும் கூற்றே, கலம்பகங்களில் `மதங்கியார்` என்னும் உறுப்பாகச் சொல்லப்படும் `மதங்கியார்` என்பது உயர்வுப் பன்மை.
`இது இதிங்கிவள்` என வரற்பாலது செய்யுள் நோக்கி முற்றிய லுகரம் தொகுக்கப்பட்டு, ``இதிங்கிவள்`` என வந்து ``இங்கிவள்`` என்பது ஒருசொல் நீர்மைத்து.
மிடறு - கழுத்து.
`இசையை முகந்து எழு மிடறும் இது` என்றது, `இனிய குரலை உள்ளே உடைய கழுத்து` என்றபடி.
``இது`` என்றதும், `இத்துணை அழகிதாய் உள்ளது` என்றதே யாம்.
இடு காரணங்கள் காட்டுகின்ற - காட்டுகின்ற அபிநயங்கள்.
`பொலிவது` என்பதில் இறுதி நிலை தொகுக்கப்பட்டது.
சுலவும் - சூழ்ந்துள்ள.
சிரபுர மன் - சீகாழிப் பதிக்குத் தலைவன்.
`தமிழ் விரகனது வண்புகழைப் பயிலும் (மிகுதியாகப் பாடுகின்ற) மதங்கி` என்க.
நளிர் - குளிர்சிசியை (மகிழ்ச்சியை)த் தருகின்ற.
``இவளது கொங்கை, கண், நகைப்பு இவைகளைக் கண்டபின் தகுதிமிக்க எனது குலம் முழுவதையும் வசை கவர்ந்து கொள்ளும்படி.
அறிவு மிகுந்த என் மனத்தில் மையல் உண்டாகின்றதே; (இதற்கு என் செய்வேன்!)`` என ஒருவன் மையல் கொண்டு கூறினான் என்க.
``மதங்கிதன் குலம் தாழ்வுடையதாகலின் இவளை நான் விரும்புதல் என் குலம் முழுவதற்கும் வசையாம்`` என்றபடி.
மயங்கினவனுக்கு இயற் பெயர் சொல்லப்படாமையால் இஃது அகப்புறக் கைக்கிளையாம்.
``இவளுடைய அவயவங்கள் மிக அழகுடையனவாய் இருத்தலுடன் இவள் பாடும் பொழுது தமிழ் விரகனது வளவிய புகழையே மிகுதி யாகப் பாடுதல் குறிப்பிடத் தக்கது`` என இவன் தன் மனத்தில் மையல் உண்டாதற்குரிய சிறந்த காரணத்தைக் கூறினமை காண்க.

பண் :

பாடல் எண் : 33

வருகின் றனனென் றனதுள் ளமும்நின்
வசமே நிறுவிக் குறைகொண் டுதணித்
தருகும் புனல்வெஞ் சுரம்யா னமரும்
மதுநீ யிறையுன் னினையா தெனின்முன்
கருகும் புயல்சேர் மதில்வண் புகலிக்
கவிஞன் பயில்செந் தமிழா கரன்மெய்ப்
பெருகுந் திருவா ரருள்பே ணலர்போற்
பிழைசெய் தனைவந் ததர்பெண் கொடியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, அகப்பொருள் உடன் போக்கில் தலைவன் தலைவியது அசைவு (தளர்ச்சி) அறிந்து இருத்தல்` துறையாகச் செய்யப்பட்டது.
``பெண் கொடியே`` என்பதை முதலிற் கொள்க.
இது தலைவியைத் தலைவன் விளித்தது.
எனது உள்ளமும் நின் வசமே நிறுவி - எனது உள்ளத்தை எப்பொழுதும் உன்னிடத்திலே நிற்கும்படி நிறுத்தி.
வருகின்றவன் - வாய்ப்பு நேரும் பொழுதெல்லாம் நான் உன்பால் வந்துகொண்டே யிருக்கின்றேன்.
(அவ்வாறு இருக்கவும்) யான் - நான்.
குறை கொண்டு - உன்னோடு எப்பொழுதும் இருக்க இயலாத குறையைப் பொறுத்துக் கொண்டு.
தனித்து அமரும்.
அது - தனித்து உறைகின்ற அந்த இடம்.
அருகும் புனல் வெஞ்சுரம் நீ இறையும் நினையாது - நீர் கிடையாத பாலை நிலம் என்பதை நீ சிறிதும் நினையாமல் என்னின் முன் அதர் வந்து பிழை செய்தனை.
என்னினும் முற்பட்டு இந்த வழியிலே வந்து பிழைசெய்து விட்டாய்; (சற்றே தங்கிப் போவம்) ``தமிழாகரனது அருளைப் பேணலர் போல வந்து பிழை செய்தனை`` என்க.
தலைவன் தனது ஊர் சுரத்தை அடுத்து இருத்தலை, ``சுரம்`` என்றே கூறினான்.
``உள்ளமும்`` என்னும் உம்மை எதிரது தழுவிய எச்சம்.
புயல் - மேகம்.

பண் :

பாடல் எண் : 34

கொடிநீடு விடையுடைய பெருமானை யடிபரவு
குணமேதை கவுணியர்கள் குலதீப சுபசரிதன்
அடியேன திடர்முழுதும் அறவீசு தமிழ்விரகன்
அணியான புகலிநகர் அணையானகனை கடலின்
முடிநீடு பெருவலைகொ டலையூடு புகுவனுமர்
முறையேவு பணிபுரிவ னணிதோணி புனைவனவை
படியாரும் நிகரரிய வரியாரும் மதர்நயனி
பணைவார்மென் முலைநுளையர் மடமாதுன் அருள்பெறினே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு அகப் பொருட் களவியல் பாங்கியிற் கூட்டத்தில் தலைவன் தோழியைக் குறையுறும் துறையாகச் செய்யப்பட்டது.
``தலைவியை என் கருத்துக்கு இசையும்படி செய்வதாயின், அதன் பொருட்டு நீ எந்தப் பணியை இட்டாலும் அதை நான் செய்வேன்` என்பது இப்பாட்டின் திரண்ட பொருல்.
திருக் கோவையாரில் ``மருக்கோ கடலின் விடுதிமில்`` என்னும் பாடலோடு இதனை ஒப்பிட்டுக் காணலாம்.
`கொடியில்` என ஏழாவது விரிக்க.
மேதை - பேரறிஞர்.
சுப சரிதன் - நல்ல ஒழுக்கம் உடையவன்.
``தமிழ் விரகனது புகலி நகர்` என்க.
அணைவான் - அருகாக உள்ள.
கனை கடல் - ஒலிக்கின்ற கடல்.
``அவை`` பகுதிப் பொருள் விகுதி.
படியாரும் நிகர் அரிய - இப்பூமியில் ஒருவரும் தன்னை நிகர்ப்பவர் இல்லாத.
``வரி ஆரும் மதர் நயனி`` என்னும் தொகைச் சொல் ஒரு சொல் நீர்மைத்தாய், `தலைவி` எனப் பொருள் தந்து, ``அரிய`` என்னும் குறிப்புப் பெயர் எச்சத்திற்கு முடிபாயிற்று.
வரி ஆரும் (நயனம்) - செவ்வரி படர்ந்த (கண்கள்).
மதர் நயனம் - களப்புத் தங்கிய பார்வையை உடைய கண்கள்.
நயனி - கண்களை உடையவள்.
`நயனிக்கு` எனப் பொருட்டுப் பொருளதாகிய நான்கன் உருபு விரிக்க.
`நுளையர் பெண்ணாயினும் உனது அருளையான் வேண்டுகின்றேன்` என்பான், ``நுளையார் மடமாது உன் அருள் பெறின் யான் எப் பணியையும் புரிவேன்`` என்றான்.
இப்பாட்டு நெய்தல் திணையாதல் வெளிப்படை.

பண் :

பாடல் எண் : 35

பெறுபயன் மிகப்புவியு ளருளுவன பிற்றைமுறை
பெருநெறி யளிப்பனபல பிறவியை யொழிச்சுவன
உறுதுய ரழிப்பனமு னுமைதிரு வருட்பெருக
உடையன நதிப்புனலி னெதிர்பஃறி யுய்த்தனபுன்
நறுமுறு குறைச்சமணை நிரைகழு நிறுத்தியன
நனிகத வடைத்தனது னருவிட மகற்றியன
துறுபொழில் மதிற்புறவ முதுபதிம னொப்பரிய
தொழில்பல மிகுத்ததமிழ் விரகன கவித்தொகையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``துறுபொழில் மதிற் புறவ முதுபதி மன்`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.
இப்பாட்டுத் திருஞானசம்பந்தரது திருப்பதிகங்கள் செய்த அற்புதங்களைத் தொகுத்துக் கூறுகின்றது.
புவியுள் பெறு பயன்களை (பெற வேண்டிய பயன்களை) மிக அருளுவன.
பிற்றை முறை - அவற்றிற்குப் பின், `ஒழித்து` என்பது ``ஒழிச்சு`` என மருவி வந்தன.
`ஒழிச்சுவிடுவன` என்பதில் `விடு` என்னும் துணிவுப் பொருள் விகுதி தொகுக்கப்பட்டது.
பஃறி - ஓடம்.
உய்த்தன - செலுத்தின.
`புன் சமண்` என இயையும்.
``நறு மறு`` என்பது வெகுளியை முழுதும் காட்டாது சிறிது புலப்படுத்தும் ஒலிக்குறிப்பு.
குரை - குரைத்தல்; பேசுதலை, ``குரைத்தல்`` என்றது இகழ்ச்சி பற்றி.
சமண் - சமணக் குழாம்.
துன் அரு விடம் - பொருந்துதற்கு அரிய நஞ்சு.
துறு - நெருங்கிய.
புறவம் - சீகாழித் தலம்.
`தொழில் பல மிகுத்த தமிழ்` என இயைக்க.

பண் :

பாடல் எண் : 36

தொகுவார் பொழில்சுற் றியவான் மதிதோ யுமதிற் கனமார்
தொலையா ததிருப் பொழில்மா ளிகைமா டநெருக்கியசீர்
மிகுகா ழியன்முத் தமிழா கரன்மே தகுபொற் புனைதார்
விரையார் கமலக் கழலே துணையா கநினைப் பவர்தாம்
மகரா கரநித் திலநீர் நிலையார் புவியுத் தமராய்
வரலா றுபிழைப் பி(லர்,ஊழிதொ)றூழி இலக்கிதமாய்த்
தகுவாழ்வு நிலைத் தொழில்சே ரறமா னபயிற் றுவர்மா
சதுரால் வினைசெற் றதன்மே லணுகார் பிறவிக்கடலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, திருஞானசம்பந்தரது திருவடிகளையே துணையாகக் கொள்பவர் அடையும் பயன்களைக் கூறுகின்றது.
``பொழில் சுற்றியனவும், மதி (சந்திரன்) தோயப் பெறுவனவும் ஆகிய மதில்களினுள், கனம் ஆர் (மேகங்கள் தவழும்) திருப்பொழில்களை யுடைய மாளிகைகளும் மாடங்களும் நெருங்கியுள்ள சீர் மிகு காழி`` என்க.
``தமிழாகரனது மேதகு கழல் விரை ஆர் கழல், விரை ஆர் கழல், கமலக் கழல்`` எனத் தனித் தனி முடிக்க.
பொன் - அழகு.
புனை தார் விரை - தோளில் அணிந்த மாலை (பாதம் அளவு தூங்கிப்) புரளுத லால் உண்டாகும் நறுமணம் கமலக் கழல் தாமரை மலர் போலும் திருவடி.
மகர ஆகர நித்தில நீர் நிலை ஆர் புவி - சுறா மீன்களுக்கு வாழும் இடமாயும், முத்துக்களை உடையதாயும் உள்ள கடல் நீரின் கண் நிற்றல் பொருந்திய பூமி.
வரலாறு - பண்டு தொட்டு உயிர் வாழ்ந்து வரும் வரவு (பிழைப்பிலர் - நீங்கப் பெறாதவராய் ஊழி தொறு) ஊழி இலக்கிதமாய் - பல பல ஊழிகளிலும் பலராலும் காணப் படுபவர்களாய்) அடைப்புக் குறிக்குள் உள்ள பகுதி ஏடெழுதி னோரால் விடப்பட்டதாக எண்ண வேண்டியுள்ளது.
இலக்கிதம் - இலக்கியம்; குறிக்கொண்டு நோக்கப்படும் பொருள்.
`அறம்` என்னாது ``எழில் சேர் அறம்`` என்றமையால் அவை சிவ புண்ணியங்களாம் என்க.
பயிற்றுவர் - எப்பொழுதும் செய்வார்கள்.
சதுர் - திறல்.
இப்பாட்டினை, ``பன்னிரு சீர்க் கழிநெடிலடியை உடையது`` எனக் கொள்வாரும் உளர்; அது சிறவாமையை அறிந்து கொள்க.

பண் :

பாடல் எண் : 37

கருமங் கேண்மதி கருமங் கேண்மதி
துருமதிப் பாண கருமங் கேண்மதி
நிரம்பிய பாடல் நின்கண் ணோடும்
அரும்பசி நலிய அலக்கணுற் றிளைத்துக்
காந்திய வுதரக் கனல்தழைத் தெழுதலின்

தேய்ந்துடல் வற்றிச் சில்நரம் பெழுந்தே
இறுகுபு சுள்ளி இயற்றிய குரம்பை
உறுசெறுத் தனைய வுருவுகொண் டுள்வளைஇ
இன்னிசை நல்லி யாழ்சுமந் தன்னம்
மன்னிய வளநகர் மனைக்கடை தோறும்

சென்றுழிச் சென்றுழிச் சில்பலி பெறாது
நின்றுழி நிலாவு வன்துயர் போயொழிந்
தின்புற் றிருநிதி எய்தும் அதுநுன
துள்ளத் துள்ள தாயின் மதுமலர்
வண்டறை சோலை வளவயல் அகவ

ஒண்திறற் கோள்மீன் உலாவு குண்டகம்
உயர்தரு வரையின் இயல்தரு பதணத்துக்
கடுநுதிக் கழுக்கடை மிடைதரு வேலிக்
கனகப் பருமுரண் கணையக் கபாட
விளையக் கோபுர விளங்கெழில் வாயில்

நெகிழ்ச்சியின் வகுத்துத் திகழ்ச்சியின் ஓங்கும்
மஞ்சணை இஞ்சி வண்கொடி மிடைத்த
செஞ்சுடர்க் கனகத் திகழ்சிலம் பனைய
மாளிகை ஒளிச் சூளிகை வளாகத்து
அணியுடைப் பலபட மணிதுடைத் தழுத்திய

நல்லொளி பரந்து நயந்திகழ் இந்திர
வில்லொளி பலபல விசும்பிடைக் காட்ட
மன்னிய செல்வத்துத் துன்னிய பெருமைச்
செம்மலர் மாது சேர்ந்திறை பிரியாக்
கழுமல நாதன் கவுணியர் குலபதி
தண்டமிழ் விரகன் சைவ சிகாமணி
பண்டிதர் இன்பன் பரசமய கோளரி
என்புனை தமிழ்கொண் டிரங்கிஎன் உள்ளத்
குறைவறுத் துள்கி நிறைகடை குறுகி

நாப்பொலி நல்லிசை பாட
மாப்பெருஞ் செல்வம் மன்னுதி நீயே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டும், மேல், ``கைதவத்தால் என்னிடைக்கு நீ வந்தது`` எனப் போந்த அப்பாட்டின் துறையை உடையதே.
``திரு மதிப் பாண`` என்பதை முதலிற் கொண்டு, - கருமம் கேள்! நின்கண் (உன்னிடத்தில்) நிரம்பிய (இசையியல்பு முற்றிய) பாடல்கள் ஓடா நின்றன.
(எழுந்து சென்று எங்கும் பரவாநின்றன; ஆயினும் நீயோ,) பசி நலிய இணைத்துக் காந்திய உதரக் கனல் தழைத்து எழுதலின் உடல் வற்றி நரம்பு எழுந்து, சில சுள்ளிகளால் இயற்றப்பட்ட குரம்பையைச் செலுத்தனைய உருவத்தைக் கொண்டு, (இந்நிலைமையில்) நல் யாழைச் சுமந்து நகர் மனைக்கடை தோறும் சென்றுழிச் சென்றுழி பல பெறாது வன் துயரையே (உடையை ஆகின்றாய்) `இவ்வன்துயர் நீங்கி இரு நிதி எய்த இன்புற வேண்டும்` என்னும் எண்ணம் நுனது உள்ளத்து உள்ளதாயின் `கழுமலம்` என்னும் பதிக்குத் தலைவனும்.
.
.
ஆகிய `பரசமய கோளரி` எனச் சிறப்புப் பெற்ற அவன்மீது யான் புனைந்த தமிழ்ப் பாடலைக் கற்று, என் மீதும் சிறிது இரக்கம் கொண்டு என் உள்ளத்திலும் தன்மீது செல்லும் அன்பினை அருளிய அந்த ஆண் தகையது புகழை நிரம்ப உணர்ந்து, அவனது வாயிலில் போய் நின்று (பாடு) பாடினால் நீ மாப் பெருஞ் செல்வம் மன்னுதி - என முடிக்க.
`துர்மதி` என்னும் ஆரியச் சொல் தமிழில் உகரம் பெற்று, ``துருமதி`` என வந்தது.
துர் மதி - தீய புத்தி.
கருமம் - செய்யத் தக்க காரியம்.
அடுக்கு வலியுறுத்தற் பொருட்டு.
நீ தலைவன் ஆணையில் நின்று பரத்தையரிடம் சென்று; - தலைவன் உங்களையே விரும்பு கின்றான் - என விருப்பமொழி கூறியும், அங்ஙனமே என்னிடம் வந்து, - தலைவர் சிறிதும் தவறிலர்; அவர்மீது நீவிர் வீண் பழி சுமத்த வேண்டா - என அமைதி கூறியும் இவ்வாறு பொய்யையே பேசித் திரிவதால் நீ அடைந்த பயன் வயிற்றுப் பிழைப்பும் கிடையாத மிகு வறுமையே யன்றி வேறில்லை`` என்க, ``நிரம்பிய பாடல் நின்க ணோடும் (ஆயினும்) சில் பலி பெறாது வன்துயர்`` (உறுகின்றாய்) என்றாள்.
ஆசிரியர் தாம் புனைந்த தமிழை தலைவி புனைந்ததாகவும், தமக்கு இரங்கி அன்பை அருளியதைத் தலைவிக்கு இரங்கி அன்பை அருளியதாகவும் பிரபந்தத் துறைக்கு ஏற்பக் கூறினார்.
ஆயினும் கருத்து வேறாதல் வெளிப்படை.
`கோளரிக்கு` என உருபு விரிக்க.
`புனை என் தமிழ்` என மாற்றிக் கொள்க.
உதரக் கனல் - வயிற்றுத் தீ.
இறுகுடி - முறுக்கு ஏறி.
குரம்பை- குடி உறு செறுத்து அணைய உருவு - மிகவும் உறுதிபடச் செய்தல் ஒத்த தோற்றம்.
பலி- பிச்சை.
`சோலை அறை வண்டு வயலில் (சென்று) அகவ (ஒலிக்க) என்க.
கோள் மீன் - முதலை.
குண்டு அகழ் - ஆழமான அகழி.
`அகழியோடு உயர்தரு பதணம்` என்க.
பதணம் - மதிலின் உறுப்பு.
கடு நுதி - கொடிய முனை கழுக்கடை - சூலம்.
மிடைதல் நெருங்குதல்.
பருமுரண் கணையக் கபாடம் - பருத்த, வலிமையை உடைய கணைய மரத்தோடு கூடிய கதவு.
கணைய மரமாவது, கதவைச் சார்த்திய பின்பும் அது திறக்கப்படாதபடி குறுக்காகப் போடப்படும் மரம்.
விலைய வாயில் விலை மதிப்புடைய வாயில்.
அஃதாவது பொன்னா லும், மணிகளாலும்.
இயன்ற வாயில், மஞ்சு - மேகம்.
இஞ்சி - மதில்.
கனகச் சிலம்பு - பொன் மாலை.
ஒலி - யானை கட்டும் கூடம்.
சூளிகை - மேல் மாடத்தின் நெற்றி.
பட மணி - நாக ரத்தினம்.
துடைத்து - மாசு போகக் கழுவி.
இந்திர வில் - வானவில்.
அஃது இங்கு அதனோடு ஒத்த ஒளியுருவைக் குறித்தது.
செம்மலர் மாது - திருமகள்.
இறை - சிறிதும்.
உம்மை, தொகுத்தல் ``வண்டு அறை சோலை.
.
.
.
கழுமலம்`` என்க.
``கேள் மதி`` என்பவற்றில் மதி, முன்னிலையசை.
முன் பாட்டு இறுதியில் ``அணுகார்`` என்றதனை, `கார்` என்றே கொண்டு அதன் திரிபாக `கரு` என்பது இப்பாட்டின் முதலாயிற்று.

பண் :

பாடல் எண் : 38

நீதியின் நிறைபுகழ் மேதகு புகலிமன்
மாதமிழ் விரகனை ஓதுவ துறுதியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நீதி - நடுவு நிலைமை.
`நீதி நிலை பெறுதலால் நிறைந்த புகழை உடைய புகலி` என்க.
ஏகாரத்தை மாறிக் கூட்டி, `தமிழ் விரகனை ஓதுவதே உறுதி` உறுதி` என உரைக்க.
ஓதுவது - துதிப்பது.
உறுதி - நன்மை.
உறுதி பயப்பதனை ``உறுதி`` என்றது ஆகு பெயர்.

பண் :

பாடல் எண் : 39

உறுதிமுலை தாழ எனையிகழும் நீதி
உனதுமனம் ஆர முழுவதும்அ தாக
அறுதிபெறும் மாதர் பெயர்தருதல் தானும்
அழகிதுஇனி யான்உன் அருள்புனைவ தாகப்
பெறுதிஇவை நீஎன் அடிபணிதல் மேவு
பெருமைகெட நீடு படி றொழி பொன் மாடம்
நறைகமழும் வாச வளர்பொழில் சுலாவும்
நனிபுகலி நாத தமிழ்விரக நீயே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, அகப் பொருட் கற்பியலில் பரத்தையிற் பிரிவினின்றும் நீங்கிப் புதல்வற் பெற்று நெய்யாடியிருந்த தலைவியை அணுக, அவள் ஏலாது ஊடியிருந்தமையால், அவளது அடிமேல் வீழ்ந்து வணங்கிய அவனை அதன்பின்பும் அவள் ``இதனைக் காதல் எங்கையர் காணின் நன்று`` எனச் சொல்லி மறுத்த துறையாகச் செய்யப்பட்டது.
(எங்கையர் - என் தங்கைமார்; பரத்தையர்.
) ``அவர் காணின் `நன்று` என நின்னை ஏற்பர்; யான் ஏலேன்`` வெளிப்படுத்து கின்ற நறுமணம்.
`நனி சுலாவும்` எனக் கூட்டுக.
நாதன் - தலைவன்.
இதுவும், ``தமிழ் விரகன்`` என்பதும் இங்கு ஞானசம்பந்தரைக் குறியாமல் அகப்பொருள் தலைவனையே குறித்தது.
பிற ஊர்களைக் கூறாது புகலியைக் கூறியதே இங்கு ஞானசம்பந்தரைப் போற்றிய போற்றுதலாய் அமைந்தது.
எனவே, ``புகலி`` என்றது பாட்டுடைத் தலைவரைப் புகழ்ந்தது ஆதலின் அகப் பொருள் தலைவனை.
``புகலி நாதன்`` என்றது இயற்பெயர் கூறியதன்றாம்.
``தமிழ் விரகன்`` என்றதும், `ஏமாளிகளை இனிய சொற்களால் ஏமாற்ற வல்லவன்` என்னும் பொருட்டாய் இகழ்ச்சியே தந்தது.
``நாத! விரக! நீ எனை இகழும் நீதி உனது மனம் ஆர முழுவதும் அது ஆக.
(அப்படியே இருக்கட்டும்.
நீ) இனி மாதர்பால் பெயர்தருதல் தானும் அழகிது; யான் உன் அருள் பெறுவதாக இவை பெறுதி.
நீ என அடி பணிதல் பெருமை கெட நீடு படிறு.
(இவற்றை) ஒழி`` எனக் கூட்டி உரைக்க.
`யான் புதல்வனைப் பெற்றமையால் உன்னால் இகழப்படுகின்றேன்` என ஊடி உரைப்பாள், ``உறுதி மலைதாழ எனனை இகழும் நீதி`` என்றாள்.
``உனக்கு நான் இம்மைக்கே யன்றி, மறுமைக்கும் துணையாகின்ற நன்மையைக் கருதவில்லை` என்பது குறிப்பு.
அறுதி பெறும் மாதர் - உன்னைத் தமக்கே உரியவனாக அறுதியாகப் பெற்றுள்ள பெண்டிர்.
`மாதர்பால்` என எழாவது விரிக்க.
பெயர்தருதல் - திரும்பிச் செல்லுதல்.
தான், அசை.
உம்மை, சிறப்பு.
புனைவதாக - நான் ஏற்று மகிழ்வதாகக் கருதி.
இவை பெறுதி - இச்செயல்களைச் செய்கின்றாய்; மேவு பெருமை கெட நீடு படிறு - (உனது உண்மை யறியாதார் சிலரால் உனக்கு) உண்டாகின்ற அப்பெருமையும் கெடும்படி நிலைக்கின்ற வஞ்சனைகள் ஆகும் (இவை).
ஒழி - இவற்றை விட்டொழிப்பாயாக- `அது ஆக` என்பது முற்றியலுகரம் தொகுக்கப்பட்டு, ``அதாக`` என வந்தது.

பண் :

பாடல் எண் : 40

நீமதித் துன்னிநினை யேல்மட நெஞ்சமே
காமதிக் கார்பொழிற் காழி
நாமதிக் கும்புகழ் ஞானசம் பந்தனொடு
பூமதிக் கும்கழல் போற்றே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மட நெஞ்சமே`` என்பதை முதலிற் கொள்க.
மதித்து - (உன்னையும், உன்னின் வேறாகிய பிற பொருள்களையும்) பொருளாக மதித்து.
உன்னை நினைத்தல், ஒரு பொருட் பன்மொழி.
மதிக்கு ஆர் காபொழி - சந்திரனோடு பொருந்துகின்ற பூங்காக்களும், பலவகைச் சோலைகளும் மதிக்கு, உருபு மயக்கம்.
நாம திக்கு - அச்சம் தரும் திசைகள்.
அச்சம், எல்லை காணப்படாது நிற்றலால் உண்டா வது, திக்கு, `எட்டு` என்னும் அளவை உடையமையால், ``திக்கும்`` என்னும் உம்மை முற்றும்மை.
பூ - பூவுலகம்.
இரண்டு, நான்காம் அடிகள் சீர் குறைந்து வந்தைமையால் இஃது ஆசிரியத் துறையாயிற்று.

பண் :

பாடல் எண் : 41

போற்றி செய்தரன் பொற்கழல் பூண்டதே
புந்தி யான்உந்தம் பொற்கழல் பூண்டதே
மாற்றி யிட்டது வல்விட வாதையே
மன்னு குண்டரை வென்றது வாதையே
ஆற்றெ திர்ப்புனல் உற்றதம் தோணியே
ஆன தன்பதி யாவதம் தோணியே
நாற்றி சைக்கவி ஞானசம் பந்தனே
நல்ல நாமமும் ஞானசம் பந்தனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நால் திசைக்கவி ஞானசம்பந்தன்`` என்பதை முதலில் வைத்து, ``எத்திசையிலும் சென்று அருட்கவிகளால் ஞானத்தைத் தொடர்பு கொள்ளச் செய்த ஆசிரியன்`` எனப் பொருள் கூறுக.
போற்றி செய்து பூண்டது - வாது வெல்லும் வழிகளாக அறிவால் தேர்ந்து.
உந்து அம்பு ஒற்கு அழல் - ஓடுகின்ற நீரும், (வையை நீர்) எப்பொருளும் ஒடுங்குதல்.
விட வாதை - நஞ்சுத் துன்பம் வென்றது வாது ஐ.
ஐ இரண்டன் உருபு.
இதனை ஏழன் உருபாகத் திரிக்க.
``தோணி`` இரண்டில் முன்னது, ஓடம்; பின்னது தோணிபுரம்; சீகாழி `அவனது நல்ல நாமம்` என்க.
உம்மை, `நால் திசைகளிலும் ஞானசம்பந்தத்தை உண்டாக்கிய தன்றி` என இறந்தது தழுவி நின்றது.

பண் :

பாடல் எண் : 42

அம்புந்து கண்இமைக்கும் ஆன நுதல்வியர்க்கும்
வம்புந்து கோதை மலர்வாடும் சம்பந்தன்
காமரு கழுமலம் அனையா
ளாம்இவள் அணங்கலள் அடிநிலத் தனவே.
42 பன்னிரு சீர்க் கழிநெடிற் சந்த விருத்தம்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பல்லாற்றானும் தம்முள் ஒத்து முன்பு ஒருவரை ஒருவர் அறியாத ஒருவனும், ஒருத்தியும் ஊழ் வலியால் தனியிடத்து எதிர்ப்பட்டுக் கூடும் கூட்டத்திற்கு முன் தலைவனிடத்து நிகழும் துணிவுணர்வு ஆகலின் இஃது அகப்புறக் கைக்கிளையாம்.
``அடி நிலத்தன; கண் இமைக்கும்; நுதல் வியர்க்கும்; கோதை மலர் வாடும்; (இவையெல்லாம் தேவ மகளிர்க்கு இல்லை ஆகையால்) இவள் அணங்கு (தேவ மகள்) அல்லள்; சம்பந்தன் கழுமலம் அனையாள் ஆம்`` எனக் கூட்டி முடிக்க.
``கழுமலம் நிலவுலகத்தது ஆதலின், இவளும் நிலவுலகத்தவளே`` என்பதாம்.
காமரு - விரும்பத் தக்க.
வம்பு உந்து கோதை - மணம் வீசுகின்ற மாலை இது.
முன்னர் வெண்பாவாகத் தொடங்கிப் பின்னர் ஆசிரியப் பாவாய் முடிந்தமையின் மருட்பா ஆயிற்று.
மருட்பாவிற் குரிய பொருள்களில் இது கைக்கிளைப் பொருள் பற்றி வந்தது.
முன் பாட்டின் இறுதியில் உள்ள ``சம்பந்தன்`` என்பதில் முதலில் நின்றும் சகர ஒற்றை நீக்க `அம்பந்தன்` என்று ஆதலின்; இப்பாட்டு ``அம்புந்து`` எனத் தொடங்குவதாயிற்று.

பண் :

பாடல் எண் : 43

தனமும் துகிலும் சாலிக் குலையும் கோலக் கனமாடச்
சண்பைத் திகழ்மா மறையோர் அதிபன் தவமெய்க் குலதீபன்
கனவண் கொடைநீ டருகாசனிதன் கமலக் கழல்பாடிக்
கண்டார் நிறையக் கொள்ளப் பசியைக் கருதா தெம்பாண
புனைதண் தமிழின் இசைஆர் புகலிக் கரசைப் புகழ்பாடிப்
புலையச் சேரிக் காளை புகுந்தால் என்சொல் புதிதாக்கிச்
சினவெங் கதமாக் கலிறொன் றிந்தச் சேரிக் கொடுவந்தார்
சேரிக் குடிலும் இழந்தார் இதனைச் செய்குவ தறியாரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, `ஞானசம்பந்தரைத் துதிப்பவர் இம்மைப் பயனையும் அடைவர்` என்பதைப் பாணர் சேரிப் பெண் ணொருத்தி நகைக்குங் கூற்றாக வைத்துக் கூறுகின்றது.
தனம் - கைப்பொருள்.
துகில் - உயர்ந்த ஆடை.
சாலிக் குவை - செந்நெற் குவியல்.
`இவைகளையுடைய மாடம்` என்க.
கண்டார் - கொடை யாளர்களைக் கண்டவர்கள் ``ஞானசம்பந்தன் கழலைப் பாடியவர்களெல்லாம் நல்ல உணவுகளைப் பெற்று உண்டு களிக்க, எம் சேரிப் பாணர், `தங்களுக்கும், தங்கள் சுற்றத்திற்கும் உள்ள பசியை எப்படித் தணிப்பது` என்று எண்ணிப் பாராமல்களிறு ஒன்றை இந்தச் சேரியில் கொண்டு வந்தார்; (அதனால் அவரை நான் எங்கள் குடிலுக்குள் நுழைய விடாமல் கதவை மூடித் தாழ் இட்டேன்.
இப்போது அவர் குடிலையும் இழந்தார்; இப்பொழுது அவர் இதனை (களிற்றை) என்ன செய்வது - என்று விழித்துக் கொண்டிருக்கின்றார்`` என்பது இப்பாட்டின் திரண்ட பொருள்.
``எம் பாணர்`` என்றதில் ``பாணர்`` என்பது ஒருவரையே பலர்பாலாக உயர்த்துக் கூறியது.
இவ் உயர்வுச் சொல்லும் இங்கு நகைப்பின்கண் வந்தது.
``புலையச் சேரியில் காளை புகுந்தால் என்னாகும்`` என்பது ஒரு பழமொழி ``அந்தக்காளை உயிரோடு உரிக்கப்படும்`` என்பது கருத்து.
என் சொல் என்னும் பழ மொழி.
`அதை எம் பாணர் புதுக்குவது போல, அரிசி பெற்று வாராது களிறு பெற்று வந்தார்` எனச் சொல்லி நகையாடினாள் விறலி.
`சின வெங்கதம்` ஒருபொருட் பன்மொழி.
`சேரிக்கண்` என ஏழாவது விரிக்க.

பண் :

பாடல் எண் : 44

யாரேஎன் போல அருளுடையார் இன்கமலத்
தாரேயும் சென்னித் தமிழ்விரகன் சீரேயும்
கொச்சை வயன்றன் குரைகழற்கே மெச்சி
அடிமைசெயப் பெற்றேன் அறிந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``இன் கமல`` என்பது முதலாகத் தொடங்கி, `குரைகழற்கே, அறிந்து, மெச்சி அன்பு செயப் பெற்றேன்; (ஆதலின்) என்போல அருளுடையார் யாரே`` என இயைத்து முடிக்க.
இது முன் இரண்டடிகள் ஒரு விகற்பமாக, ஏனையடிகள் வேறு வேறு விகற்ப மாய், இரண்டாம் அடியின் மேலும் மூன்றாம் அடியில் தனிச்சொற் பெற்று வந்தமையால் இன்னிசை வெண்பா ஆயிற்று.

பண் :

பாடல் எண் : 45

அறிதரு நுண்பொருள் சேர்பதி கம் அரன் கழல்மேல்
அணிதரு சுந்தர மார்தமிழ் விரகன் பிறைதோய்
செறிதரு பைம்பொழில் மாளிகை சுலவும் திகழ்சீர்த்
திருவளர் சண்பையின் மாடலை கடல்ஒண் கழிசேர்
எறிதிரை வந்தெழு மீன்இரை நுகர்கின் றிலைபோய்
இனமும் அடைந்திலை கூர்இடரோடிருந் தனையால்
உறுதியர் சிந்தையி னூடுத வினர்எம் தமர்போல்
உமரும் அகன்றன ரோஇது உரைவண் குருகே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டும், மேல் ``ஆர்மலி புகலி நாதன்`` எனப் போந்த பாட்டுப் போலக் காமம் மிக்க கழிபடர் கிளவியில் `குருகோடு இரங்கல்` துறையாகச் செய்யப்பட்டது.
``வண் குருகே`` என்பதை முதலில் வைத்து, ``அறிதரு சண்பையின் மாடு அலைகடலை (அடுத்த) கழி சேர் திரை வந்து எழு மீன் இரையை நுகர்கின்றிலை; போய் இனமும் (சாதியையும்) அடைந்திலை; இடலோடு இருந்தனை; (என்) சிந்தையினூடு உறுதுயர் உதவின எம் தமர்போல உமரும் (உம்தமரும் உன்னை விட்டு) அகன்றனரோ? உரை`` எனக் கூட்டி முடிக்க.
மாடு - பக்கம்.
கூர் மிகுந்த.
ஆல், அசை.
உறு துயர் - மிகுந்த துன்பம்.
`உதவினராகிய எம் தமர்` என்க.
கூன்களைச் சீராகக் கொண்டு, இப் பாட்டினை, `பதின்சீர்க் கழிநெடில் விருத்தம்` என்பாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 46

குருகணி மணிமுன் கைக்கொடி யும்நல் விறலவனும்
அருகணை குவர்அப் பால்அரி தினிவழி மீள்மின்
தருகெழு முகில்வண் கைத்தகு தமிழ்விர கன்றன்
கருகெழு பொழில்மா டக்கழு மலவள நாடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு அகப் பொருள் உடன் போக்கில் தலைவனுடன் போன தலைவியைப் பின் தேடிச் செல்லும் செவிலித் தாய் நிலை கண்டோர் அவளைத் தடுத்த துறையாகச் செய்யப்பட்டது.
இதன்கண் முதலில், ``தாயீர்`` என்பது வருவித்து, `இனி வழி அப்பால் அரிது; கொடியும், விறலவனும் கழுமல வளநாடு அருகு அணைகுவர்; மீள்மின்`` எனக் கூட்டி முடிக்க.
குருகு - வளையல்.
தரு கெழு முகில் வண் கை - கொடுத்தல் பொருந்திய மேகம்போலும் வண்மையை யுடைய கை(கைஉடைய) தமிழ் விரகன்.
கருகு - இருண்ட.
எழு - ஓங்கிய.

பண் :

பாடல் எண் : 47

நாடே றும்புகழ் ஞானசம் பந்தன்வண்
சேடே றும்கொச்சை நேர்வளம் செய்துனை
மாடே றும்தையல் வாட மலர்ந்தனை
கேடே றும்கொடி யாய்கொல்லை முல்லையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, அகப் பொருட் களவியலில் தோழி தலைவனை வரைவு கடாவுவாள் அவன் சிறைப் புறத்தானாக முல்லைக் கொடியை நோக்கிக் கூறும் முன்னிலைப் புறமொழியாகச் செய்யப்பட்டது.
``கொல்லை முல்லையே`` என்பதை வளர்த்தவள் வாடிக்கிடக்க நீ மலர்ச்சி அடைகின்றாய் அதனால் கொடியாய்` என்பது இப்பாட்டின் திரண்ட பொருள்.
``கோடு ஏறும் கொடியாய்`` என்பது சிலேடை.
கோடு ஏறுதல் - கொம்பைப் பற்றிப் படர்தல்; நான் மறுத்தலை மிகச் செய்தல் இது கேட்டுத் தலைவன் வரைவான் ஆவது பயன்.
சேடு - பெருமை.
கொச்சை நேர் வளம் செய்து - சீகாழி நகர்போலும் வளப்பத்தைப் பெறச் செய்து, `உன்னை வளம் செய்து` என மாற்றிக் கொள்க.
மாடும் ஏறும் - அடிக்கடி அருகில் வந்து பழகும்.

பண் :

பாடல் எண் : 48

முல்லை நகைஉமைதன் மன்னு திருவருளை
முந்தி உறுபெரிய செந்தண் முனிவன் மிகு
நல்ல பொழில்சுலவு தொல்லை அணிபுகலி
நாதன் மறைமுதல்வன் வேத மலையதனில்
வில்லை யிலர் கணையும் இல்லை பகழிஉறு
வேழம் இரலைகலை கேழல் வினவுறுவர்
சொல்லை இலர்விரக ரல்லர் தழை கொணர்வர்
தோழி இவர்ஒருவர் ஆவ அழிதர்வரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, அகப்பொருட் களவியற் பாங்கியிற் கூட்டத்துள், தலைவன்றனக்குக் குறைநேர் பாங்கி தலைவிக்கு அவன் குறை உணர்தல் துறையாகச் செய்யப்பட்டது.
தம் நிலத்து மலையை, `புகலி முதல்வனது மலை` என்கின்றாள் ஆதலின் அதற்கேற்ப, `வேதம் வழங்கும் மலை` என்றாள்.
``வில்லைக் கையில் உடைய ரல்லர்; கையில் அம்பும் இல்லை.
(ஆயினும்) இவ்வழியாக அம்பு தைக்கப்பட்ட யானை சென்றதோ? கலைமான் சென்றதோ? காட்டுப் பன்றி சென்றதோ! - என இவ்வாறெல்ம் வினவுகின்றார்.
இவை தவிர வேறுவகையான எந்த சொல்லையும் உடையரல்லர்.
வஞ்சிக்கும் தன்மை உடையவராய்த் தோன்றவில்லை.
கையில் கொண்டு வருவதோ தழை.
தோழீ! இப்படி ஒருவர் மிகவும் துன்பந் தோய்ந் தவராய்க் காணப்படுகின்றார்.
ஆ! ஆ! (என்ன துயர்நிலை!) எனக் கூட்டி உரைக்க.
கணை, பகழி - அம்பு.
இரலை - மான்.
கலை - ஆண்.
`இரலைக் கலை` என்பதில் சந்திக் ககர ஒற்றுச் சந்தம் நோக்கித் தொகுக்கப்பட்டது.
கேழல் - பன்றி.
விரகு - இங்கு, சூழ்ச்சி ``ஆவ`` என்பது இரக்கச் சொல்.

பண் :

பாடல் எண் : 49

எழில்தருபிற வியின்உறு தொழில் அமர்துயர் கெடும்மிகு
பொழிலணி தருபுகலிமன் எழிலிணையடி இறைமினே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மிகு - பொழில் அணி`` என்பது முதலாகத் தொடங்கி உரைக்க.
வழி தரு பிறவி.
பின்னே பின்னே விடாது தொடர்ந்து வருகின்ற பிறவி.
பிறவியின் உறு தொழில் அமர் துயர் - பிறவிகளில் பொருந்துகின்ற தொழிலில் நீங்காதிருத்தலால் வருகின்ற துன்பம்.
`இறைஞ்சுமின்` என்பது ``இறைமின்`` எனக் குறைந்து நின்றது.
இனி, `மலர்கணை` என ஒருசொல் வருவித்து, `இறைமின்` தூவிப் போற்றி செய்யுங்கள்` எனவும் உரைக்கலாம்.
ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் முற்றிற்று.

பண் :

பாடல் எண் : 1

பூவார் திருநுதல்மேல் பொற்சுட்டி இட்டொளிரக்
கோவாக் குதலை சிலம்பரற்ற - ஒவா
தழுவான் பசித்தான் என்றாங் கிறைவன் காட்டத்
தொழுவான் துயர்தீர்க்கும் தோகை - வழுவாமே
முப்பத் திரண்டறமும் செய்தாள் முதிராத
செப்பொத்த கொங்கைத் திருநுதலி - அப்பன்
அருளாலே ஊட்டுதலும் அப்பொழுதே ஞானத்
திரளாகி முன்னின்ற செம்மல் - இருள்தீர்ந்த
காழி முதல்வன் கவுணியர்தம் போர்ஏறு
ஊழி முதல்வன் உவன் என்று - காட்டவலான்
வீழி மிழலைப் படிக்காசு கொண்டபிரான்
பாழி அமணைக் கழுவேற்றினான் - பாணர்
யாழை முறித்தான் எரிவாய் இடும்பதிகம்
ஆழி உலகத் தழியாமற் - காட்டினான்.
ஏழிசை வித்தகன் வந்தேனோரும் வானோரும்
தாழும் சரணச் சதங்கைப் - பருவத்தே
பாலையும் நெய்தலும் பாடவலான் சோலைத்
திருவா வடுது றையில் செம்பொற் - கிழிஒன்
றருளாலே பெற்றருளும் ஐயன் தெருளாத
தென்னவன் நாடெல்லாம் திருநீறு - பாலித்த
மன்னன் மருகல்விடம் தீர்த்த பிரான் பின்னைத்தென்
கோலக்கா வில்தாளம் பெற்றிக் - குவலயத்தில்
முத்தின் சிவிகை அரன் கொடுப்ப முன்னின்று
தித்தித்த பாடல் செவிக்களித்தான் - நித்திலங்கள்
மாடத் தொளிரும் மறைக்காட் டிறை கதவைப்
பாடி அடைப்பித்த பண்புடையான் - நீடும்
திருவோத்தூர் ஆண்பனையைப் பெண்பனைஆ கென்னும்
பெருவார்த்தை தான் உடைய பிள்ளை - மருவினிய
கொள்ளம்பூ தூர்க்குழகன் நாவா யது கொடுப்ப
உள்ளமே கோலாக ஊன்றினான் - வள்ளல்
மழவன் சிறு மதலை வான்பெருநோய் தீர்த்த
குழகன் குலமறையோர் கோமான் - நிலவிய
வைகை ஆற் றே டிட்டு வான்நீர் எதிர்ஒட்டும்
செய்கையான் மிக்க செயலுடையான் - வெய்யவிடம்
மேவி இறந்த அயில் வேற்கண் மடமகளை
வாவென் றழைப்பித் திம்மண்ணுலகில் - வாழ்வித்த
சீர்நின்ற செம்மைச் செயலுடையான் நேர்வந்த
புத்தன் தலையைப் புவிமேல் புரள்வித்த
வித்தகப் பாடல் விளம்பினான் - மொய்த்தொளிசேர்
கொச்சைச் சதுரன்தன் கோமானைத் - தான்செய்த
பச்சைப் பதிகத் துடன்பதினா றாயிரம்பா
வித்துப் பொருளை விளைக்க - வலபெருமான்
முத்திப் பகவ முதல்வன் திருவடியை
அத்திக்கும் பத்தர்எதிர் ஆணைநம - தென்னவலான்
கத்தித் திரிபிறவிச் சாகரத்துள் ஆழாமே
பத்தித் தனித்தெப்பம் பார்வாழத் - தந்தபிரான்
பத்திச் சிவம்என்று பாண்டிமா தேவியொடும்
கொற்றக் கதர்வேற் குலச்சிறையும் - கொண்டாடும்
அற்றைப் பொழுதத் தமணர்இடும் வெந்தீயைப்
பற்றிச் சுடுகபோய்ப் பாண்டியனை - என்னவல்லான்
வர்த்தமா னீசர் கழல்வணங்கி வாழ்முருகன்
பத்தியை ஈசன் பதிகத்தே - காட்டினான்
அத்தன் திருநீல நக்கற்கும் அன்புடையான்
துத்த மொழிக்குதலைத் தூயவாய் - நன்னுதலி
கொத்தார் கருங்குழற்கும் கோலச்செங் - கைம்மலர்க்கும்
அத்தா மரைஅடிக்கும் அம்மென் குறங்கினுக்கும்
சித்திரப்பொற் காஞ்சி சிறந்தபே - ரல்குலுக்கும்
முத்தமிழ்நூல் எல்லாம் முழுதுணர்ந்த பிள்ளையார்க்கு
ஒத்த மணம் இதுஎன் றோதித் - தமர்களெல்லாம்
சித்தம் களிப்பத் திருமணம்செய் காவணத்தே
அற்றைப் பொழுதத்துக் கண்டுட - னேநிற்க
பெற்றவர்க ளோடும் பெருமணம் போய்ப்புக்குத்
தன்அத்தன் அடியே அடைந்தான் அழகிதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை
1. ஞானப் பால் உண்டது
2. திருப்பதிகம் அருளிச் செய்தல்
3. படிக் காசு பெற்றது
4. சமணர் கழுவேற நின்றது
5. யாழ்மூரிப் பதிகம் பாடியது
6. நெருப்பில் ஏட்டையிட்டுப் பச்சென்றிருக்கக் காட்டியது
7. இசை வல்லான்
8. பாலை நெய்தல் பாடியது
9. பொற் கிழி பெற்றது
10. பாண்டிய நாட்டில் நீற்றொளி பரப்பியது
11. விடம் தீர்த்தது
12. பொற்றாளம் பெற்றது
13. முத்துச் சிவிகை பெற்றது
14. மறைக் கதவம் அடைத்தது
15. ஆண்பனை பெண்பனை யாக்கியது
16. ஓடம் கரையேறவிட்டது
17. முயலகன் தீர்த்தது
18. ஆற்றில் எடு எதிர்ஏற விட்டது
19. எலும்பைப் பெண்ணாக்கியது
20. புத்தன் தலையில் இடிவிழச் செய்தது
21. அமணர் இட்ட தீயைப் பாண்டியன்மேல் ஏவியது
ஆகிய 21 தலைப்புகளில் இப்பாடல்களைத் தந்ததாக எழுதுவர்.

குறிப்புரை :

அடி-1 பூ - பொலிவு.
திரு - அழல்.
நுதல்.
நெற்றிச் சுட்டி யணியும் (அடி-2) குதலை மொழியும் குழவிப் பருவத்தைக் குறித்தன.
கோவாக் குதலை - ஒழுங்குபட வாராத குதலைச்சொல்.
அஃது ஆகு பெயராய் அதனைப் பேசும் பிள்ளையைக் குறித்தது.
`குதலை (அடி-3) அழுவானை இறைவன் காட்ட` என இயைக்க.
(அடி-2) `சிலம்பு அரற்றுமாறு (காலை உதைத்துக் கொண்டு) அழுவானை`` என்க.
`அழுவானை` என்பதில் இரண்டாம் உருபு தொகுக்கப்பட்டது.
(அடி-3) தந்தையாரைக் காணாது அழுத பிள்ளையை, ``பசித்து அழுதான்`` என்றது, `பால் தருக` என்னும் குறிப்புத் தோன்றுதற் பொருட்டாம்.
குழவிப் பருவத்துப் பிள்ளைகள் எப் பொழுது பாலை ஊட்டினாலும் மறாது உண்ணுதல் இயல்பேயாம்.
(அடி-4) `தொழுவான்` என்றதும் பிள்ளையாரையே.
`முன்னை நிலையிலும் தொழுது, இனியும் தொழுவான்` என்றபடி.
(அடி-4) துயர் தீர்க்கும் - துயர் தீர்க்க இசைந்த.
தோகை, உமாதேவி.
(அடி 4,5) `முப்பத்திரண்டு அறமும் வழுவாமே செய்தாள்` என்க.
(அடி-5,6) ``முதிராத கொங்கை`` என்றது நித்திய கன்னிகை யாதலைக் குறித்தது.
செப்பு - கிண்ணம்.
`கன்னிகை யாயினும் முப்பத்திரண்டு அறங்களையும் வளர்த்த அருளாலே, அழுகின்ற பிள்ளையைக் கண்டவுடனே பால் சுரக்கப் பெற்றாள்` என்றது குறிப்பு.
(அடி-6)`கொங்கையை உடைய திருநுதலி` என்க.
`திரு நுதலி` என்பது மேற் கூறிய சொற்களின் குறிப்பால் உமாதேவியையே குறித்தது.
அப்பன் - இறைவன்.
(அடி-7) ``அருள் என்றது `ஆணை` என்றபடி.
`அவன் ஆணையின்றிச் செய்தல் கூடாமையின் அது பெற்றாள்` என்பதாம்.
(அடி-8) திரள் - திரட்சி.
``ஞானத்திரளாய் நின்ற பெருமான்`` என்று அருளிச் செய்ததும் காண்க.
இஃதே பற்றிப் பிள்ளையாரை, ``ஞானத்தின் திருஉரு`` எனச் சேக்கிழாரும் கூறினார்.
முன் நின்ற - ஞானத்தைத் திருப்பதிகங்களாகப் பரப்புதற்கு முற்பட்டு நின்ற.
செம்மல் - தலைவன்; ஞானத் தலைவன்.
இது முதலாகச் சொல்லப்படும் அற்புதங்களை யெல்லாம் பெரிய புராணத்துட் காண்க.
இருள் - புறச் சமய இருள்.
தீர்தல் - அவைகள் துச்சமாகச் தோன்றப் பெறுதல்.
``துப்புர வில்லார் துணிவு துகளாகச் சூழ்ந்தெழுந் தார்`` என்னும் சேக்கிழார் திருமொழியைக் காண்க.
``இருள் தீர்ந்த (அடி-9) முதல்வன்`` என இயைக்க.
முதன்மை - ஆசிரியத் தலைமை.
கவுணியர் - கவுணிய கோத்திரத்தார்.
`அவரிடையே வந்து அவதரித்த ஏறு` என்க.
ஏறு - ஆண் சிங்கம்.
பரசமய கோளரி.
(அடி-10) ஊழி முதல்வன் - சிவபெருமான்.
`அவன் சுட்டிக் காட்ட ஒண்ணாதவனாயினும் சுட்டிக்காட்ட வல்லவன்` என்க.
(அடி-11) பாழி - சமணப் பள்ளி.
(அடி-12) பாணர் - திருநீலகண்டப் பாணர்.
(அடி-14) `ஆழி உலகத்துக் காட்டினான்` என்க.
(அடி-15) வித்தகன் - சதுரப்பாடு உடையவன்.
(அடி-16) தாழும் - வணங்குகின்ற சரணம் - பாதம் பாதங்களில் சதங்கையணிதல் குழவிப் பருவத்தேயாம்.
(அடி-17) பாலையும் நெய்தலும் பாட வலான் - பாலை நிலத்தையும், நெய்தல் நிலத்தையும் ஒருங்கு சேர்த்துப் பாடி அதனாலே பாலை நிலத்தை நெய்தல் நிலமாகச் செய்ய வல்லவன்.
(அடி-19) அருளால் - சிவபெருமானது திருவருளால்.
ஐயன்- தலைவன்.
(அடி-20) தென்னவன் - பாண்டியன்.
வழங்குதலை.
`பாலித்தல்` என்பது மரபு.
(அடி-25) செவி - அரன் செவி.
நித்திலங்கள் - முத்துக்கள்.
(அடி-29) பெரு வார்த்தை - புகழ்.
(அடி-30) குழகன் - அழகன்; சிவபெருமான்.
நாவாய் - ஓடம் பாடவல்ல வாய்.
இருபொருள், `அது`, பகுதிப் பொருள் விகுதி.
(அடி-31) உள்ளம் - ஊக்கம்; `திருவருள் துணை செய்யும்` என்னும் உள்ளத்துறுதி.
ஊன்றுதல், இங்கே, செலுத்துதல்.
(அடி-32) மழவன் - கொல்லி மழவன்.
``சிறுமதலை`` என்பதை, `சிறுமிதனை` என ஓதுதல் சிறக்கும்.
வான் பெரு நோய் - மிகப் பெரிய நோய்.
அது `முயலகன்` எனப்படுவது.
(அடி-33) குழகன் - அழகன்; இளம் பிள்ளை.
குலம் - மேன்மை கோமான் - தலைவன்.
(அடி-36) அயில் வேல் கண் - கூர்மையான வேல் போலும் கண்களை உடைய.
மடமகள் - இளம் பெண்.
(அடி-38) சீர் நின்ற - புகழ் பெற்ற நிலைபெறப் பெற்ற.
(அடி-41) கொச்சை - சீகாழி.
அதன்கண் தோன்றி, சதுரப் பாடுடையவன் இவ் ஆளுடைய பிள்ளை.
தன் கோமான் - அவனுக்குத் தலைவனாகிய சீகாழி இறைவன்.
``செய்த`` என்பது `பாடிய` என்னும் பொருட்டாய், ``கோமானை`` என்ற இரண்டாம் உருபிற்கு முடிபாயிற்று.
(அடி-42) பச்சைப் பதிகம் திருநள்ளாற்றுப் பெருமான் மேல தாயினும், `எங்கு இருந்தும் பிள்ளையார்க்கு அருள் பிள்ளையார்க்கு அருள் புரிந்தவன் சீகாழிப் பெருமானே` என்னும் கருத்தால் அத் திருப்பதிகத்தையும், மற்றும் பல திருப்பதிகங்களையும் சீகாழிப் பெருமானுக்கு உரியவாகவே கூறினார்.
பா - பாடல்.
`பாவின்கண்` என ஏழாம் உருபு விரித்து.
அதனை (அடி-43) ``விளைக்க வல பெருமான்`` என்பதனோடு முடிக்க.
வித்துப் பொருள் - ஞானத்தின் அடி நிலைப் பொருள்கள்.
`ஆளுடைய பிள்ளையார் அருளிச்செய்த பாடல்கள் பதினாறாயிரம்` நம்பியாண்டார் நம்பிகள் தமது பிரபந்தங்களில் குறித்துள்ளார்.
எனினும் இன்று கிடைத்துள்ள பதிகங்கள், விடைவாய்ப் பதிகத்தைச் சேர்த்தாலும் `384-தாம்` என்பதைக் குறிப்பிட வேண்டியுள்ளது.
(அடி-44) `முத்திப் பேற்றை அருளுபவன் சிவபெருமா னல்லது பிறர் ஒருவரும் இல்லை` என்பது கருத்து ஆகலின் அப் பெருமானை இங்கு, ``முத்திப் பகவன்`` என்றார்.
எனவே, ``பகவன்`` என்பது முகமன் உரையாக ஏனைக் கடவுளர்க்கும் பெயராதல் பெறப் பட்டது.
``முத்திப் பகவ முதல்வன்`` என்றதனால், முத்தியொழிந்த சிலவற்றிற்கு ஏனையோரும் முதல்வராதலும் விளங்கும்.
(அடி-45) `அற்சிக்கும்` என்பது எதுகை நோக்கி, ``அத்திக் கும்`` எனத் திரிந்து நின்றது, ``ஆணை நமதே`` என்றது, சில திருப் பதிகங்களின் திருக்கடைக்காப்புக்களில், அப்பதிகங்களுக்குச் சொல்லப்பட்ட பயன் விளைதலை உறுதி செய்தற் பொருட்டு.
அங்ஙனம் சொல்லப்பட்ட பாடல்களைக் காண்க.
(அடி-47) `பத்திச் சிவம்` என்று கொண்டாடும் - `இவர் இவ் வுலகப் பிள்ளையல்லர்; பெரியோர் பலரும் பத்தி செய்து போற்றுகின்ற சிவ பரம் பொருளே` என்று சொல்லக் கொண்டாடிய.
(அடி-48) பாண்டிமாதேவி, மங்கையர்க்கரசியார்.
(அடி-49) அவர்தம் அமைச்சர் குலச்சிறையார்.
(அடி-52) வர்த்தமானீசர் - திருப்புகலூர்க் கோயில்களில் ஒன்றில் எழுந்தருளியிருக்கும் இறைவர்.
முருகன், முருக நாயனார்.
இவரைத் தமது திருப்பதிகத்துள் சிறப்பித்திருத்தலை அத்தலத் திருப் பதிகத்திற் காண்க.
(அடி-54) அத்தன் - (சிவநெறித் தலைவன்.
திருநீலநக்கன், திருநீலநக்க நாயனார்.
இந்நாயனாருடைய இல்லத்தில் பிள்ளையார் தம் திருக்கூட்டத்தோடும் எழுந்தருளி வழிபடப் பெற்றமையைப் பெரிய புராணத்தால் அறிக.
பிள்ளையாரது திருமணச் சடங்குகளை அந்நாயனாரே செய்ததையும் அதன்கண் காண்க.
(அடி-56-59) இப்பகுதியில் `பிள்ளையார்க்குத் திருமணம் செய்விப்பது` என முடிவு செய்த அவர்தம் பெற்றோர் முதலிய சுற்றத்தார் அவருக்கு ஒத்த வகையினளாக உறுதி செய்யப்பட்ட கன்னிகைதன் அழகே குறிப்பிடப்படுகின்றது.
துத்தம், ஏழிசைகளுள் ஒன்று ``குதலை`` என்றது இனிமை பற்றி `நன்னுதலியது` என ஆறாவது விரிக்க.
கோலம் - அழகு.
அம் எமன் குறங்கு - அழகி, மெத்தென்ற துடை.
சித்திரம் - அழகு.
காஞ்சி - இடையில் அணியும் மேகலை வகை களில் ஒன்று.
அல்குல் - விருட்டம்.
நான்கன் உருபுகள் பலவற்றையும் ``ஒத்த`` என்பதனோடு முடிக்க.
(அடி -60-65) ஓதி - சொல்லி.
`ஓதி` செய் காவணம்` என்க.
தமர்கள் - சுற்றத்தார்கள்.
காவணம் - பந்தல்.
``உடன் கண்டு நிற்க`` என்றது சுற்றத்தாரை.
பெருமணம், `நல்லூர்ப் பெருமணம்` என்னும் தலம்.
இத்தலமே பிள்ளையார்க்கு மகட் கொடை நேர்ந்தவர் வாழ்ந்த தலமும், பிள்ளையார் இறைவனை அடைந்த தலமும் ஆகும்.
தன் அத்தன் - தனக்கு அம்மையைக் கொண்டு ஞானப் பாலைக் கொடுப்பித்த அப்பன்; சிவபெருமான்.
``ஞானத் திரளாகி முன்னின்ற செம்மல்`` என்பன முதலாக, ``திருநீலநக்கற்கும் அன்புடையான்`` என்பது ஈறாகப் போந்த பெயர்களை எழுவாயாக வைத்து, `பெற்றவர்களோடும் பெருமணம் (தலம்) போய்ப் புக்குத் திருமணம் செய்காவணத்தே தமர்களெல்லாம் கண்டு நிற்கத் தன் அத்தன் அடியடைந்தான்; (இஃது) அழகிதே! என முடிக்க.
ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை முற்றிற்று.

பண் :

பாடல் எண் : 1

புலனொ டாடித் திரிமனத்தவர்
பொறிசெய் காமத் துரிசடக்கிய
புனித நேசத் தொடுதமக்கையர்
புணர்வி னால்உற் றுரைசெயக்குடர்
 
சுலவு சூலைப் பிணிகெ டுத்தொளிர்
சுடுவெ ணீறிட் டமண கற்றிய
துணிவி னான்முப் புரமெ ரித்தவர்
சுழலி லேபட் டிடுத வத்தினர்
 
உலகின் மாயப் பிறவி யைத்தரும்
உணர்வி லாவப் பெரும யக்கினை
ஒழிய வாய்மைக் கவிதை யிற்பல
உபரி பாகப் பொருள்ப ரப்பிய

அலகில் ஞானக் கடலி டைப்படும்
அமிர்த யோகச் சிவவொ ளிப்புக
அடிய ரேமுக் கருளி னைச்செயும்
அரைய தேவத் திருவ டிக்களே.

பொழிப்புரை :

உலகில் மாயப் பிறவியைத் தரும் பெருமயக்கினை - இவ்வுலகில் நிலையில்லாதனவாகிய பல பிறவிகளைத் தருவதான அந்தப் பெரிய திரிபினை.
உணர்வு இலா மயக்கினை - மெய்யுணர்வோடு சிறிதும் தொடர்பில்லாத திரிபினை ஒழிய - யாவரும் விட்டு அகலும்படி.
வாய்மைக் கவிதையில் - உண்மைகள் நிறைந்த பாடல்களில்.
உபரி பாகப் பொருள் பரப்பிய - கலைகளின் முடிநிலைப் பொருள்களைப் பரக்க அருளிச் செய்தவரும்.
அலகில் ஞானக் கடலிடைப்படும் அமிர்த யோகம் - அளவற்ற ஞான நூலாகிய கடலைக் கடைந்தவழித் தோன்றும் அமுத மாகிய சிவயோகத்தால்.
சிவ ஒளிப்புக அடியரேமுக்கு அருளினைச் செயும் - சிவ சோதியில் கலக்கும் பேற்றினை அடியோங்களுக்கு அருளியவரும் ஆகிய அரைய தேவத் திருவடிகள் - திருநாவுக்கரசு தேவராகிய சுவாமிகள்.
(தலைவர்) புலனொடு ஆடித் திரி மனத்தவர் - ஐம்புலன்களோடே எப்பொழுதும் பழகித் திரிகின்ற மனத்தை உடையவரது பொறி செய் காமத் துரிசு அடக்கிய புனித நேசத்தொடு - ஐம்பொறிகளின் வழிச் செல்கின்ற ஆசைகளாகிய குற்றங்களை அடக்கிய வேறொரு தூய அன்புடனே.
தமக்கையர் புணர்வினால் உற்று உரை செய - தமக்கையார் திருவருள் வழிப்பட்ட அறிவினால் அறிந்து செல்ல.
(அச்சொல் வழியே ஒழுகி.
) சுலவு சூலைப் பிணி கெடுத்து தமது வயிற்றுட் குடைந்த சூலை நோயைப் போக்கி.
ஒளிர் சுடு வெண் நீறிட்டு அமண் அகற்றிய துணி வினால் - ஒளிவீசுகின்ற, நன்கு சுடப்பட்ட வெள்ளிய திருநீற்றைப் பூசிக்கொண்டு (முன்பு கொண்ட) சமணக் கோலத்தை நீக்கிய தெளிவினால் முப்புரம் எரித்தவர் சுழலிலே பட்டிடு தவத்தினர் - திரிபுரங்களை எரித்தவராகிய சிவபெருமானது ஆணையிலே பொருந்தி செய்யும் தவநெறியில் நின்றவராவர்.

குறிப்புரை :

`பெரு மயக்கினை ஒழிய, கவிதையில் பல பொருள்கள் பரப்பியதன் விளைவாகிய` யோகத்தினால் சிவ ஒளிப்புக அருளினைச் செயும் அரைய தேவத் திருவடிகள், புலனொடு ஆடித் திரிமனத்தவர்பால் (எழுகின்ற) காமம் ஆகிய குற்றம் (தம் மனத்திலே எழாதவாறு) அடக்கியதனால் தோன்றிய தூய அன்போடு (பத்தி யோடு) கூடித் தமக்கையர் உரை செய (அவ்வழி ஒழுகி) சூலைப் பிணி கெடுத்து வெண்ணீறு இட்டு, சமணக் கோலத்தை நீக்கிய துணிவினால் முப்புரம் எரித்தவரது சுழலிலே பட்டிடு தவத்தினர் ஆவர்` எனக் கூட்டி வினை முடிவு செய்க.
செய்யுள் நோக்கி முறை பிறழக் கூறினாராயினும், ``உரை செயத் திருநீறு இட்டு அமண் அகற்றிய துணிவினால் பிணி கெடுத்து சுழிலிலே பட்டிடு தவத்தினர்`` என்பதே கருத்து என்க.
``சுழல்`` என்பது `ஆற்றல்` என்னும் பொருளதாய்த் திரு வருளைக் குறித்தது.
``தவம்`` என்றது அரசுகள் சூலை நீங்கிய பின் இறுதிகாறும் மேற்கொண்டு செய்த உழவாரப்பணியைக் குறித்தது.
``பெருமயக்கு`` என்றது சமண் சமயக் கொள்கையை.
உபரி பாகம் - முடிநிலைப் பகுதி.
கடல், அமிர்தம் இவை உருவங்கள்.
``திருவடிக்கள்`` என்பதில் ககர ஒற்று விரித்தல்.

பண் :

பாடல் எண் : 2

திருநாவுக் கரசடி யவர்நாடற் கதிநிதி
தெளிதேனொத் தினியசொல் மடவார்உர்ப் பசிமுதல்
வருவானத் தரிவையர் நடமாடிச் சிலசில
வசியாகச் சொலுமவை துகளாகக் கருதிமெய்
உருஞானத் திரள்மனம் உருகாநெக் கழுதுகண்
உழவாரப் படைகையில் உடையான்வைத் தனதமிழ்
குருவாகக் கொடுசிவ னடிசூடித் திரிபவர்
குறுகார்புக் கிடர்படு குடர்யோனிக் குழியிலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அடியவர்` நாடும் கதியாகிய நீதி என்க.
உர்ப்பசி - ஊர்வசி.
இறுதி நாளில் தேவ கணிகையர் சிலரை நாவுக்கரசர் முன் விடுத்து மயக்கச் செய்யும் முகத்தால் அவரது உள்ளத் தூய்மையை உலகறியச் செய்த வரலாற்றைப் பெரிய புராணத்துட் காண்க.
வசி - வசப்படுத்துவன.
`ஞானத் திரளாகிய உருமும், மனமும் நெக்கு உருகா, கண் அழுது` எனக் கொள்க.
உருகா, அழுது என்னும் வினையெச்சங்கள் ``உடையான்`` என்னும் குறிப்பு வினைப் பெய ரோடு முடிந்தன.
``குரு`` என்பது ஆகுபெயராய், `குரு உபதேசம்` எனப் பொருல் தந்தது.
புக்கு இடர் படு - புகுந்தபின் துன்பத்திலே அகப்படுகின்ற ``குடர் யோனிக் குழி`` என்பது உம்மைத் தொகை.
`திரிபவர் குழியில் குறுகார்` என வினை முடிக்க.

பண் :

பாடல் எண் : 3

குழிந்து சுழிபெறுநா பியின்கண் மயிர்நிரையார்
குரும்பை முலையிடையே செலுந்த கைநன்மடவார்
அழிந்தபொசியதிலே கிடந்தி ரவுபகல்நீ
அலைந்த யருமதுநீ அறிந்தி லைகொல்மனமே
கழிந்த கழிகிடுநா ளிணங்கி தயநெகவே
கசிந்தி தயமெழுநூ றரும்ப திகநிதியே
பொழிந்த ருளுதிருநா வினெங்க ளரசினையே
புரிந்து நினையிதுவே மருந்து பிறிதிலையே.

பொழிப்புரை :

முதல் அடி முழுதும் மடவாரது வருணனை.
குழிந்து- ஆழமாகி - சுழி பெறு - நீர்ச் சுழியை உவமையாகப் பெறுகின்ற.
நாவி- உந்தி.
(அதினின்றும் எழுகின்ற) மயிர் நிரையர் - மயிர் ஒழுங்கை உடையவர்.
அம்மயிர் ஒழுங்கு மேலே இரு தனங்களின் இடையே செல்கின்ற.
தகை - அழகு, அழிந்த பொசி - வெளிப்படும் சுரத நீர்க் கசிவு.
`மடவாரது பொசி` என இயைக்க.
``பொசியதில்`` என்பதில் அது, பகுதிப் பொருள் விகுதி.
மனமே நீ அணைந்து அயரும் அது - நெஞ்சே நீ அழுந்தி உன்னை நீ மறந்துவிடுகின்ற அந்த இழி நிலையை, நீ அறிந்திலை கொல்! கழிகிடு நாள் கழிந்த - இன்று கழிந்த நாள்கள் பல போயின.
(ஆயினும் இன்று தொடங்கியாவது) எழு நூறு அரும் பதிக நிதியே பொழிந்து அருளும் எங்கள் திருநாவின் அரசினையே - ஏழ் எழுநூறு திருப்பதிகங்களாகிய அருட் செல்வத்தைப் பொழிந் தருளிய எங்கள் திருநாவுக்கரசு தேவரையே, இதயம் கசிந்து புரிந்து நினை - உள்ளதும் உருகி விரும்பி நினை - பிறிது மருந்து இலை - (அதற்கு) வேறு மருந்து இல்லை.

குறிப்புரை :

`ஏழ் எழுநூறு இரும்பனுவல் ஈன்றவன் திருநாவினுக் கரையன்`` என்ற சுந்தரர் திருமொழியைக் கொண்டு ``பதிகம் ஏழ் எழுநூறு பகரும் மா சிவ யோகி`` என இவர் பின்பு அருளிச் செய்தலால் இங்கு, ``எழு நூறு`` என்றது திருப்பதிகம் ``நாலாயிரத்துத் தொளா யிரம்`` என்பதைப் பாடலாக வைத்துக் கொண்டாலுங் கூட, `பதிகம் 490` ஆகும்.
ஆயினும் `இன்று` கிடைத்துள்ள பதிகங்கள் - 312 தாம்` என்பதைக் குறிப்பிட வேண்டியுள்ளது.

பண் :

பாடல் எண் : 4

இலைமா டென்றிடர் பரியா ரிந்திர
னேயொத் துறுகுறை வற்றாலும்
நிலையா திச்செல்வம் எனவே கருதுவர்
நீள்சன் மக்கட லிடையிற்புக்
கலையார் சென்றரன் நெறியா குங்கரை
யண்ணப் பெறுவர்கள் வண்ணத்திண்
சிலைமா டந்திகழ் புகழா மூருறை
திருநா வுக்கர சென்போரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``திருநாவுக்கரசு`` என்போர் இடர் பரியார்; ``இச் செல்வம் நிலையாது`` எனவே கருதுவர்; சன்மக் கடலிடையிற் புக்கு அலையார்; அரன் நெறியாகும் கரை அண்ணப் பெறுவார்கள் - எனக் கூட்டி முடிக்க.
மாடு - செல்வம்.
பரியார் - சுமக்க மாட்டார்.
சன்மம் - பிறவி.
அரன் நெறி ஆகும் கரை - இவனது நெறியாகிய `சைவம்` என்னும் கரை.
அண்ணுதல் - அடைதல்.
வண்ணச் சிலை - சந்திர காந்தக் கற்கள்.

பண் :

பாடல் எண் : 5

என்பட்டிக் கட்டிய விந்தப்பைக் குப்பையை
இங்கிட்டுச் சுட்டபி னெங்குத்தைக் குச்செலும்
முன்பிட்டுச் சுட்டிவ ருந்திக்கெத் திக்கென
மொய்ம்புற்றுக் கற்றறி வின்றிக்கெட் டுச்சில
வன்பட்டிப் பிட்டர்கள் துன்புற்றுப் புத்தியை
வஞ்சித்துக் கத்திவி ழுந்தெச்சுத் தட்டுவர்
அன்பர்க்குப் பற்றிலர் சென்றர்ச்சிக் கிற்றிலர்
அந்தக்குக் கிக்கிரை சிந்தித்தப் பித்தரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

என்பு அட்டி - எலும்புகளை நெருங்க வைத்து ``பைக் குப்பையை`` என்பதை, `குப்பைப் பையை` என மொழி மாற்றி உரைக்க.
குப்பை - புறத்துப் போடப்படும் பொருட் குவியல்.
அவற்றையுடைய பை உடம்பு.
``குரம்பையை`` என ஓதினால் வல் லொற்று வாராமையே யன்றிச் சந்தத்தில் ஓரெழுத்து மிகையாதலையும் நோக்குக.
மேலும் உடம்பைப் பையாக உருவகம் செய்த பின்பு குரம்பையாக உருவகித்தலும் கூடாமை காண்க.
தைக்கு - அணி செய்தற்கு.
தைத்தல் - அணிதல்.
செல்லும் - உதவும் (உடம்பின் நிலை யாமை இவ்வாறு இருக்கவும்) ``சில வன்பட்டிப் பிட்டர்கள் அறி வின்றிக் கெட்டு புத்தி வஞ்சித்து.
.
.
.
எய்ச்சுத் தட்டுவர் (இன்னும்) அப் பித்தர் இவரைச் சிந்தித்து அன்பர்க்குப் பற்றிலர்; அர்ச்சிக்கிலர்`` என வினை முடிக்க.
முன்பு அருந்திக்கு எத்திக்கு என இட்டுச் சுட்டி - முதலில் தங்கள் மனத்தில், `கல்வியைத் தரும் திசை எந்தத் திசை` என ஆராய்ந்து முடிவு செய்து மொய்ம்பு உற்றுக் கற்று அறிவின்றிக் கெட்டு- அம்முடிவில் உறுதியாய் நின்று பல நூல்களைக் கற்றும் அறிவில்லாமல் கேடெய்தி புத்தியை வஞ்சித்துக் கத்தி பிறருடைய உள்ளத்தையும் குழப்பி விடும் வகையில் மிகுதியாகப் பேசி.
எய்ச்சு விழுந்து தட்டுவர் - இளைத்து விழுந்து தடுமாறுவார்கள்.
அன்பர்க்கு - சிவனடி யாரிடத்தில்.
பற்று இலர் - விருப்பம் இல்லாதவர் ஆவர்.
அர்ச்சிக்கிலர்- சிவனையும் வழி பட மாட்டார்.
`அவர் திருநாவுக்கரசரை எவ்வாறு நினைவர்` என்பது குறிப்பெச்சம்.
வன் பட்டிப் பிட்டர்கள் - வன்கண்மையால் மனம் போனவாறு ஒழும்கும் பிட்டர்கள் (பிரஷ்டர்கள்) - சான்றோரால் விலக்கப்பட்டுபவர்கள்.

பண் :

பாடல் எண் : 6

பித்தரசு பதையாத கொத்தைநிலை உளதேவு
பெட்டியுரை செய்துசோறு கட்டியுழல் சமண்வாயர்
கைத்தரசு பதையாத சித்தமொடு சிவபூசை
கற்றமதி யினனோசை யிட்டரசு புகழ்ஞாலம்
முத்திபெறு திருவாள னெற்றுணையின் மிதவாமல்
கற்றுணையில் வரும்ஆதி
பத்தரசு வசைதீர வைத்தகன தமிழ்மாலை
பற்பலவு மவையோத நற்பதிக நிதிதானே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பித்து அரசு - அறியாமையை உடைய அரசன்; பல்லவன்.
பதைத்தல், இங்கு வெறுத்தலைக் குறித்தது.
பதையாத - வெறுப்படையாத.
அஃதாவது, `விரும்பிக் கொள்கின்ற` என்பதாம்.
தேவு கடவுள் பல்லவன் விரும்பிக் கொள்கின்ற கடவுள் அருக தேவன்.
அக்கடவுளை இங்கு, ``கொத்தை நிலை உள தேவு`` என்றார்.
கொத்தை நிலை - குருட்டு நிலைமை.
`அறியாமை யுடைய ஓர் உயிர்` என்றபடி.
இங்ஙனம் கூறியது அகண்டப் பொருளாகச் சொல்லப் படாது கண்டப் பொருளாகச் சொல்லப்படுதல் பற்றியாம்.
பெட்டு - விரும்பி.
இஃது இகரச் சாரியை பெற்று.
``பெட்டி`` என நின்றது.
``சோறு`` என்றது, `வயிற்றுப் பிழைப்பு` என்னும் பொருளதாய் நின்றது.
`சோறு சுட்டி உரை செய்து உழல் வாயர்` என இயையும்.
``சமண் வாயர்`` என்பதை ``வாயராகிய சமணர்`` என மாற்றிக் கொள்க.
சமண் கைத்த அரசு - சமணரால் வெறுக்கப்பட்ட திருநாவுக் கரையன்.
அரசு புகழ் திருவாளன் - பின்பு அந்தவப் பல்லவ மன்னனே புகழ்ந்து கொண்டாடிய திருவாளன்.
ஞான முத்தி - சீவன் முத்தி நிலை.
மிதத்தல் - இங்கு நீந்துதல்.
நெல் துணையின் மிதவாமல் - ஒரு நெல்லளவு தொலைவு கூட நீரில் மிதந்து நீந்தாமல்.
கல் துணையில் வரும் ஆதி - கல்லாகிய தெப்பத்தின் மேல் வந்து கரை ஏறிய முதல்வன்; ஆசிரியன்.
``சமணரால் வெறுக்கப்பட்ட அரையனும், சிவ பூசையைக் கற்ற மதியினனும், அரசு புகழ் திருவாளனும், கல் துணையில் வந்த முதல்வனும் ஆகிய அவன் வைத்துச் சென்ற தமிழ் மாலை`` என்க.
அரசு வசை - தலையாய குற்றங்கள்; நூற்குற்றங்கள்.
``அவை பத்து`` என்பது இலக்கணம்.
``அவைகளுள் ஒன்றும் இல்லாத படி பாடி வைத்த தமிழ் மாலை`` என்க.
கனம் - பெருமை; மாட்சி.
அவை, நூற்குச் சொல்லப்பட்ட அழகு பத்தும் என்க.
ஓத - ஓதினால்.
`அந்நற்பதிகங்களே பின்னடிக்கு வைப்பு நிதியாய் உதவும்` என்பதாம்.
தான், தேற்றப் பொருட்டு.
பிரிநிலை ஏகாரத்தை, ``நற்பதிகம்`` என்பதனோடு கூட்டி யுரைக்க.
``கைத்த`` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.

பண் :

பாடல் எண் : 7

பதிக மேழெழு நூறு பகரு மாகவி யோகி
பரசு நாவர சான பரம காரண வீசன்
அதிகை மாநகர் மேவி யருளி னாலமண் மூடர்
அவர்செய் வாதைகள் தீரு மனகன் வார்கழல் சூடின்
நிதிய ராகுவர் சீர்மை யுடைய ராகுவர் வாய்மை
நெறிய ராகுவர் பாவம் வெறிய ராகுவர் சால
மதிய ராகுவ ரீச னடிய ராகுவர் வானம்
உடைய ராகுவர் பாரில் மனித ரானவர் தாமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஏழ் எழு நூறு - நாலாயிரத்துத் தொள்ளாயிரம் ``பதிகம்`` என்றதை, `பதிகப் பாடல்கள் எனக் கொள்ளுதல் பொருந்தும்.
அல்லாவிடில், `கிடையாது போன பாடல்கள் மிகப் பல` எனல் வேண்டும்.
``பரம காரண ஈசன் அதிகை மாநகர் மேவி, அமண் மூடர் அவர் செய் வாதைகள் அருளினால் தீரும் மா கவி யோகி, பரசு நாவரசான அனகன்`` என மாறிக் கூட்டுக.
கவி யோகி - யோக கவி.
யோகம், சிவ யோகம்.
பரசு - யாவராலும் துதிக்கப்படுகின்ற.
அனகன் - பாவம் இல்லாதவன்; தூயவன்.
பரம காரண ஈசன், சிவபெருமான்.
`அவன் அருளினால்` என்க.
சீர்மை - புகழ்`.
வாய்மை நெறி - மெய்ந் நெறி.
வெறியர் - இல்லாதவர்.
``பாரில் மனிதர் ஆனவர் தாமே, அனகன் வார்கழல் சூடின் நிதியர் ஆதல் முதலிய பயன்களைப் பெறுவர்`` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 8

தாமரைநகு மகவிதழ் தகுவன சாய்பெறுசிறு தளிரினை யனையன
சார்தருமடி யவரிடர் தடிவன தாயினும் நல கருணையை யுடையன
தூமதியினை யொருபது கொடுசெய்த சோதியின்மிகு கதிரினை யுடையன
தூயனதவ முனிவர்கள் தொழுவன தோமறுகுண நிலையின தலையின
ஓமரசினை மறைகளின் முடிவுகள் ஓலிடுபரி சொடுதொடர் வரியன
ஓவறுமுணர் வொடுசிவ வொளியன ஊறியகசி வொடுகவி செய்த புகழ்
ஆமரசுய ரகம்நெகு மவருளன் ஆரரசதி கையினர னருளவன்
ஆமரசுகொ ளரசெனை வழிமுழு தாளரசுத னடியிணை மலர்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஊறிய கசிவொடு`` என்பது முதலாகத் தொடங்கி உரைக்க.
``ஆம் அரசு, ஆர் அரசு, அவன் ஆம் அரசுகொள் அரசு, எனை ஆள் அரசு`` என வந்த ``அரசு`` அனைத்தும் திருநாவுக்கரசு ஒருவரையே குறித்ததன.
அந்த அரசு தன் அடியனை மலர்கள், ``தகுவன, அனையன`` என்பன முதலாகப் பேர் அறியப் புகழப் பட்டன.
தாமரை நகும் - தாமரை மலரைத் தோற்கச் செய்கின்ற.
அக இதழ் - பூக்களில் உள்ள அக இதழ்கள்.
தகுவன - போல்வன.
சாய் பெறு - நுணுகுதலைப் பெற்ற; மென்மையான.
தடிவன - போக்குவன.
மதி - சந்திரன்.
``ஒருபது`` என்றது இரு திருவடிகளிலும் உள்ள நகங்களைக் குறித்து.
தோம் - குற்றம்.
குண நிலையின - குணங்கள் பலவற்றிற்கும் இடம் ஆவன.
தலையின - அன்பர் பலரது தலைமேல் விளங்குவன.
ஓம் அரசு - ஓங்காரத்திற்குத் தலைவன் சிவபெருமான்; ``அவனை மறைகளின் முடிவுகள் ஓலம் இட்டுத் தேடுகின்ற அத்தன்மை யோடே அவைகளால் தேடி எட்ட அரியன`` என்க.
ஓவு அறும் உணர்வொடு சிவ ஒளியன - நீங்குதல் இல்லாத அருள் உணர் வோடே, சிவமாகிய ஒளிப் பொருளைக் கொண்டு விளங்குவன.
ஊறிய கசிவு - சுரந்து மிகுகின்ற அன்பு.
புகழ் ஆம் அரசு - புகழ் மிகுகின்ற உளன் - உளம்; மகர னகரப் போலி.
ஆர் - பொருந்துகின்ற.
`அருளால்` என உருபு விரிக்க.
அவன் ஆம் அரசுகொள் அரசு - அந்தச் சிவனே தானாம் தலைமையினைப் பெற்ற அரசு.
வழி - குடி வழி.
``திருநாவுக்கரசு`` என இறைவனால் சிறப்பிக்கப் பெற்ற அவர் நாவுக்கரசர் மட்டும் அல்லர்; மற்றும் பல்வேறு அரசரும் ஆவர் - என்றற்கு ``அரசு, அரசு`` எனப் பலவற்றைக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 9

அடிநாயைச் சிவிகைத் தவிசேறித் திரிவித்
தறியாமைப் பசுதைச் சிறியோரிற் செறியுங்
கொடியேனுக் கருளைத் திருநாவுக் கரசைக்
குணமேருத் தனைவிட் டெனையாமொட் டகல்விற்
பிடியாரப் பெறுதற் கரிதாகச் சொலுமப்
பிணநூலைப் பெருகப் பொருளாகக் கருதும்
செடிகாயத் துறிகைச் சமண்மூடர்க் கிழவுற்
றதுதேவர்க் கரிதச் சிவலோகக் கதியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அடி நாயை - அடிக் கீழ்க் கிடக்கும் நாய் போன்ற என்னை.
இது தன்மையைப் படர்க்கை போலக் கூறியது.
`சிவிகையில்` என ஏழாவது விரிக்க.
தவிசு - ஆசனம்.
இது சிவிகையில் இடப் பட்டிருப்பது.
சிவிகையில் ஏறித் தவிசில் வீற்றிருந்து உலாவும் படி செய்தது, ஆசிரியத் தன்மையை எய்து வித்தமையால் ஆம்.
எனவே, `அத்தகைய பேரருளை எனக்கு வழங்கிய திருநாவுக்கரசு` என்றவாறு.
இவ்வாசிரியருக்கு நாவுக்கரசர் இத்தகைய அருளை வழங்கியது இவர் அவரை நாள் தோறும் வழிபட்டு வந்த வழிபாட்டினாலாம்.
`வழி பாட்டு வழியாகவும்` ஆசிரியரது அருளைப் பெறுதல் என்னும் வேடன் கதையால் அறியலாம்.
தெய்வங்களையும், பெரியோர்களையும் வழிபடுகின்ற வழிபாடுகட்கும் பயன் தருபவன் இறைவனே யன்றோ! அறியாமைப் பசு தை சிறியோர் - ஆணவ மலத்தின் காரியமாகிய அறியாமையாகிய பசுத் தன்மை பொருந்திய சிறியோர்கள்.
`அவர் களது கூட்டத்தில் சேர்ந்து அறியாமையில் கிடந்த கொடியேனுக்கு அருள்புரிந்த திருநாவுக்கரசு` என்க.
ஐ - தலைமையை உடைய.
அஃதாவது, `ஆசிரியத் தன்மையை உடைய` என்பதாம்.
குண மேரு - நற்பண்புகளே உருவாகிய மகாமேரு மலை.
இஃது உருவகம்.
விட்டு - விட்டமை யால் ``திருநாவுக்கரசாகிய குண மேருவை அவரது பெருமையை அறிந்த பின்பு பின்பற்றாது பகைமை யுள்ளத்தோடே இருந்ததால் சமண் மூகர்க்கு சிவலோகக் கதி இழவுற்றது`` என்க.
இழவு - இழப்பு.
``திருநாவுக்கரசரைக் சமணர் சொற்கேட்டு முதலில் பல ஒறுப்புக் உள்ளாக்கிய பல்லவ மன்னன் அவர் கல்லை மிதப்பாகக் கடலைக் கடந்து கரையேறிய பின்பு அவரது பெருமையை உணர்ந்து அவரை வணங்கிச.
சைவனாகிச் சிவாலயப் பணிகளைச் செய்தான்.
அவைகளைக் கண்ட பின்பும் சமணர்கள் திருந்தவில்லை.
அதனால் யாருக்கு இழப்பு? சமணர்க்குத்தான் இழப்பு`` என்றபடி.
இது பற்றியே நாவுக்கரசரும் அவர்களை, ``திருந்தா அமணர்`` எனக் குறித்தருளினார்.
`என்னை` என்னும் வினாப் பெயர் இடைக் குறைந்து ``எனை`` என நின்றது.
ஓகாரம் இரக்கப் பொருட்டு.
மொட்டு - அரும்பு.
அகலுதல் - அது கட்டவிழ்ந்து மலர்தல்.
மொட்டுக் கட்டவிழ்ந்து மலர்தல் போல உள்ளம் அறியாமைப் பிணி நீங்க விரிவடைதலை, ``மொட்டு அகல்வு`` என்றார்.
``அத்தகைய செயலில் அதற்கு உரித்தாக ஒன்றையும் பெறுதல் இல்லாத பிண நூல்`` என்க.
பிண நூல் - உயிரற்ற நூல்.
``அதனைப் பெருக (மிகவும்)ப் பொருளாகக் கருதும் சமண் மூடர்`` என்க.
`தேவர்க்கும்` என்னும் உயர்வு சிறப்பும்மை தொகுக்கப்பட்டது.
பசு - பசுத் தன்மை.
அஃதாவது, பாசத்தால் கட்டுண்ணும் தன்மை.
தைத்தல் - பொருந்துதல்.
``தை சிறியோர்`` என்னும் வினைத் தொகையில் வல்லொற்று மிகாமை தொகுத்தல்.
``அரிது`` இரண்டும் `அரிதாயது` எனக் குறிப்பு வினையாலணையும் பெயர்.
அவற்றுள் முன்னது அருமை இன்மை குறித்து நின்றது.
செடி காயம் - (குளித்தல் இல்லாமையால்) முடி நாற்றம் பொருந்திய உடம்பு.

பண் :

பாடல் எண் : 10

சிவசம் பத்திடைத் தவஞ்செய்து
திரியும் பத்தியிற் சிறந்தவர்
திலகன் கற்றசிட் டன்வெந்தொளிர்
திகழும் பைம்பொடித் தவண்டணி
 
கவசம் புக்குவைத் தரன்கழல்
கருதுஞ் சித்தனிற் கவன்றியல்
கரணங் கட்டுதற் கடுத்துள
களகம் புக்கநற் கவந்தியன்
 
அவசம் புத்தியிற் கசிந்து கொ
டழுகண் டசத்துவைத் தளித்தனன்
அனகன் குற்றமற் றபண்டிதன்
அரசெங் கட்கொர்பற் றுவந்தறு
 
பவசங் கைப்பதைப் பரஞ்சுடர்
படிறின் றித்தனைத் தொடர்ந்தவர்
பசுபந் தத்தினைப் பரிந்தடு
பரிசொன் றப்பணிக்கும் நன்றுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சிவ சம்பத்து - சிவ நெறியாகிய செல்வம்.
(சிறந்தவர்க்கு) என நான்கவாது விரிக்க.
திலகன் - அழகு தருபவன்.
சிட்டன் - மேன்மையுடையவன்.
பொடி - திருநீறு.
``பைம் பொடி`` எனப் பசுமை கூறியது அன்போடு அணியப் படுதல் பற்றி.
`விருப்பம்` என்னும் பொருளதாகப் `பெள்` என்னும் முதனிலை `டு` என்னும் இறுதி நிலையோடு புணர்ந்து, `பெண்டு` என வருதல் போல `வெண்மை` என்னும் பொருளதாகிய `தவள்` என்னும் முதனிலை, `டு` என்னும் இறுதி நிலையோடு புணர்ந்து, ``தவண்டு`` என வந்தது.
தவண்டு அணி கவசம் - வெள்ளை நிறத்ததாய் அணியப்படும் கவசம்.
வெண்திருநீறு ``புக்கு வைத்து`` என்பதில் ``வைத்து` என்றது அசை.
சித்தன் - சித்தத்தை (மனத்தை) உடையவன்.
இல் கவன்று இயல் கரணம் - இல் வாழ்க்கையில் கவலை கூர்ந்து இயங்குகின்ற மனம் முதலிய அகப் பொறிகள்.
கட்டுதற்கு - அவைகளைக் கட்டுப் படுத்தற்கு.
அடுத்து உள - பொருத்தமாய் உள்ள.
களகம் புக்க நல் கவுந்தியன் - கழுத்தளவும் போர்த்த கந்தைப் போர்வையை உடையவன்; `பற்றுக்களை விட்டவன்` என்றபடி, ``கந்தை மிகயைாம் கருத்தும்`` 1 எனச் சேக்கிழாரும் கூறினார்.
கவந்தி - கந்தை.
களகம் - கழுத்தில் சுற்றப்படுவது.
அவசம் - வசம் இன்மை பரவசம்.
அழு கண்டம் - அன்பினால்.
விம்முகின்ற குரல்.
அளிக்கப்பட்டன திருப் பதிகங்கள் `அவைகளைத் தன் குரலில் வைத்திருந்து வெளிப் படுத்தினான்` என்பதாம்.
அனகன் - பாவம் இல்லாதவன்.
அரசு - ஆளுடைய அரசு.
`திலகன், சித்தன், கவந்தியன், அளித்தனன், அனகன், பண்டிதன் ஆகிய அரசு` என்க.
ஒர் பற்று - ஒப்பற்ற துணை.
உவந்து உறு பரஞ்சுடர் - எங்களிடத்து மகிழ்ச்சி கொண்டு வந்து பொருந்தியுள்ள பேரொளி.
பல சங்கை பதை பரஞ்சுடர் - வினைக் கூட்டம் பதைத்து அழிதற்கு ஏதுவான பேரொளி.
இத்தொடரில் மிகுந்துள்ள பகர ஒற்றுக்கள் சந்தம் நோக்கி விரித்தலாய் நின்றன.
படிறு இன்றி - வஞ்சனையின்றி.
பசு பந்தம் - உயிர்களைப் பசுத்தன்மைப் படச் செய்துள்ள கட்டு.
பரிதல் - அறுத்தல்.
அடு பரிசு ஒன்ற - வெல்லும் தன்மையைப் பொருந்தும்படி.
பணிக்கும் - திருவாய் மலர்ந்தருளுவான்; ஆசீர்வதிக்கும்.
அவனது மொழி நிறைமொழி யாதலின்.
(அவன் ஆசீர்வதித்தபடியே பசு பாசங்கள் அற்றொழியும்) நன்று - நன்றாக; முற்றாக.
உம்மை, உயர்வு சிறப்பு.

பண் :

பாடல் எண் : 11

நன்றும் ஆதரம் நாவினுக் கரைசடி
நளினம்வைத் துயினல்லால்
ஒன்றும் ஆவது கண்டிலம் உபாயம்மற்
ருள்ளன வேண்டோமால்
என்றும் ஆதியும் அந்தமும் இல்லதோர்
இகபரத் திடைப்பட்டுப்
பொன்று வார்புகும் சூழலில் புகேம்புகில்
பொறியில்ஐம் புலனோடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``என்றும் ஆதியும், அந்தமும்`` என்பது முதலாகத் தொடங்கி உரைக்க.
இகம் பரம் - இப்பிறப்பு வரும் பிறப்பு.
இத் தொடர்ச்சி முதலும் முடிவும் அறியப்படாமையின் ``என்றும் ஆதியும் அந்தமும் இல் இகம் பரம்`` என்றார்.
சூழல் - நிலைமை.
புகில் - புகலிடமாகப் புகுவதாயின்.
பொன்றுவார் பொறியில் ஐம்புலனோடே புகும் சூழலில் புகேம் - (பிறவிக் குழியில் வீழ்ந்து) கெடுவார் ஐம் பொறிகள் வழியாக ஐம்புலன்களில் புகுகின்ற அந்த நிலைமையில் யாம் புக மாட்டோம்.
``புலனோடு`` என்றது உருபு மயக்கம்.
அடி நளினம் - திருவடியாகிய தாமரை மலர்களில்.
`ஆதரம் வைத்து உயின் அல்லது ஆவது ஒன்றும் கண்டிலம்` எனக் கூட்டி யுரைக்க.
ஆவது - தக்கது.
மற்று உள்ளன.
உபாயம் - பிறவியைக் கடத் தற்குக் சொல்லப்படுகின்ற வழிகள்.
அவற்றுள் ஒன்றையும் நாம் விரும்பமாட்டோம்.
ஆல், அசை.
``மாலை`` என்றதற்கு ஏற்ப இப்பிரபந்தத்தின் இறுதிப் பாட்டின் இறுதிச் சீர் முதற் பாட்டின் முதற்சீரோடு இயைந்து மண்ட லித்து முடிந்தமை காண்க.
பதினொன்றாந் திருமுறை உரையுடன் முற்றுப் பெற்றது.
சிற்பி