உயிர்கள் தத்தம் வினைப்பயனைத் துய்த்தற்கேற்ப எல்லாப் பொருள்களையும் தோற்றுவிக்கும் முதற்கடவுளாயும், அவற்றைக் காக்கும் காப்புக் கடவுளாயும், தன்னறிவாலும் (பசு ஞானம்) தன்னைச் சூழ்ந்துள்ள பொருள்களின் அறிவாலும் (பாச ஞானம்) அளந்து அறியப்படாததாயும், ஒளிப்பிழம்பாயும், உயிர்க் குயிராய் நின்று கருவி கரணங்களோடு கூட்டி அவற்றின் வழி உணரச் செய்யும் உணர்வாயும், தம்மால் தோற்றுவிக்கப்பட்ட அறிவுடைய னவும், அறிவற்றனவுமாய பொருள்களாயும், அவ்வப் பொருள்களி னின்றும் பிரித்தற்கு இயலாததாய் அவற்றுடன் கலந்து நிற்கும் பொரு ளாயும், உலகில் பிரித்துக் காண்டற்குரிய ஆண், பெண் என்னும் இரு வகை உயிரினங்களிலும் இயைந்து நிற்றல் பற்றி அவ்வாண், பெண் வடிவினதாயும் உள்ள இறை, உயிர்கட்கு எஞ்ஞான்றும் தன் குணங் களாலும் செயல்களாலும் அறிதற்குரிய அறிவினைக் கற்பித்து, தில்லை மன்றிலே நடனம் செய்கின்ற ஆடல் திறனுக்கு வணக்கம் செலுத்து கின்றேன்.
குறிப்புரை:
ஆதி - என்பது படைத்தலையும், நடுவு - என்பது காத்த லையும் குறித்தன. அளவு - உயிர் தன்னறிவாலும், தளையறிவானும் அளக்கும் அளவு. சோதி - ஒளிப்பிழம்பு. தோன்றிய பொருள் - தோற்றுவிக்கப்பட்ட பொருள்: `தோற்றிய திதியே` (சிவஞானபோ. சூ.1) என்புழிப்போல. பேதியா ஏகமாகி - வேறுபடுத்துக் காண்டற் கியலாததாயும் அவ்வப் பொருளுமாகியும் நிற்கும் நிலை. நடுவும் ஆகி என்றமையால்- இறுதியும் ஆகி என்பதும் ஈண்டுக் கொள்ளப் படும். ஆதி - அயன். நடு - மால். அளவு - இறுதியாகிய உருத்திரன். சோதியாய் உணர்வுமாகியவன் - உயிர்களுக்கு மறைப்பாற்றலைச் செய்யும் சத்தியை உடைய மகேசுவரன். தோன்றிய பொருள் - அறி வாற்றல் தோன்றுவதற்கு இடனாகிய சாதாக்கியம். சதாசிவமூர்த்தி என்று உரைப்பாரும் உளர்.
திருவைந்தெழுத்தின் இடமாக நின்று ஆடும் நடனம் மூவகை யாம். அவை 1. ஊனநடனம் 2. ஞானநடனம் 3. ஆனந்த நடனம் என்பனவாம். இம்மூவகை நடனங்களும் உயிர்கட்குப் படிப்படியாக அறிவையும், அதனாலாய அநுபவத்தையும் விளக்கி நிற்கும். ஊனநடனம் - தன்னிலையில் நிற்கும் உயிர்க்கு மலஇருள் நீங்க, கருவி, கரணங்கள், உலகு ஆகியவற்றைக் கொடுக்கச் செய்யும் நடனமாகும். ஞானநடனம் - இவ்வகையில் வளர்ந்த உயிர்கட்கு ஞானத்தை வழங்குதற்குச் செய்யும் நடனமாகும். ஆனந்த நடனம் - அக்கூட்டால் உயிர் ஞானம் பெற்று அடையும் வீடு பேற்றில், அவ்வின்பத்தில் திளைக்கச் செய்வதாம். இம்மூவகை நடனங்களாலும் உயிர்கள் ஞானம் பெற்று வீடு பேறு அடையும். இவ்வுண்மைகளை இந்நடனங்கள் கற்பித்து நிற்றலின் `போதியாநிற்கும் தில்லைப் பொதுநடம்` என்றார். இத்திறங்களை எல்லாம் உண்மை விளக்கம் என்னும் ஞான நூலால் அறியலாம். தில்லைப் பொது - தில்லை நகரில் இருக்கும் பொதுவிடம் - மன்றம்.
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
×
తెలుగు / தெலுங்க
ఆది మధ్యాంత స్వరూపుడును, గణనాతీత గణ్యుడును, జ్యోతి చైతన్య స్వరూపుడును, సమస్త వస్తు స్వరూపుడును, స్త్రీ పురుష ద్వంద్వాతీతుడును, సకల చరాచర జీవరాశికి జ్ఞాన భిక్షను అనుగ్రహిస్తున్న వాడునూ, తిల్లై చిదంబరంలో ఆనంద తాండవం చేస్తున్న వాడునూ అయిన నటరాజస్వామి తిరు చరణాలకు నమస్కరిస్తాను.
అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్
×
ಕನ್ನಡ / கன்னடம்
Under construction. Contributions welcome.
×
മലയാളം / மலையாளம்
Under construction. Contributions welcome.
×
චිඞංකළමං / சிங்களம்
Under construction. Contributions welcome.
×
Malay / மலாய்
Under construction. Contributions welcome.
×
हिन्दी / இந்தி
Under construction. Contributions welcome.
×
संस्कृत / வடமொழி
Under construction. Contributions welcome.
×
German/ யேர்மன்
Under construction. Contributions welcome.
×
français / பிரஞ்சு
Under construction. Contributions welcome.
×
Burmese/ பர்மியம்
Under construction. Contributions welcome.
×
Assamese/ அசாமியம்
Under construction. Contributions welcome.
×
English / ஆங்கிலம்
It is the beginning, the middle and the end; it is
Immeasurable by logic, and cognisable only by Gnosis;
It is light animating consciousness; it pervades all
In their manifestation as the One non-separate;
It is the male and the female; it is the illuminating Dance
Enacted in Tillai’s Court! Praise be!
ആതിയായ് നടുവു മാകി അളവിലാ അളവും ആകിച്
ചോതിയാ യുണര്വു മാകിത് തോന്റിയ പൊരുളു മാകിപ്
പേതിയാ ഏക മാകിപ് പെണ്ണുമായ് ആണു മാകിപ്
പോതിയാ നിറ്കുന് തില്ലൈപ് പൊതുനടം പോറ്റി പോറ്റി
Open the Malayalam Section in a New Tab
×
ภาษาไทย / சீயம்
อาถิยาย นะดุวุ มากิ อละวิลา อละวุม อากิจ
โจถิยา ยุณะรวุ มากิถ โถณริยะ โปะรุลุ มากิป
เปถิยา เอกะ มากิป เปะณณุมาย อาณุ มากิป
โปถิยา นิรกุน ถิลลายป โปะถุนะดะม โปรริ โปรริ
Open the Thai Section in a New Tab