இசைஞானியார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

ஒழியாப் பெருமைச் சடையனார்
உரிமைச் செல்வத் திருமனையார்
அழியாப் புரங்கள் எய்தழித்தார்
ஆண்ட நம்பி தனைப்பயந்தார்
இழியாக் குலத்தின் இசைஞானிப்
பிராட்டி யாரை என்சிறுபுன்
மொழியால் புகழ முடியுமோ
முடியா தெவர்க்கும் முடியாதால்.

பொழிப்புரை :

குறைவில்லாத பெருமையுடைய சடையனாரின் செல்வம்பொருந்திய மனைவியாரும், யாரானும் எவ்வாற்றானும் அழிக்க இயலாத வலிமையுடைய முப்புரங்களை அழித்த சிவபெரு மானால் ஆட்கொள்ளப்பெற்ற நம்பியாரூரரைப் பெற்றவருமாகிய, உயர்வுடைய குலமான சிவவேதியரின் குலத்தில் வந்த இசைஞானிப் பிராட்டியாரை, என்னுடைய இழிந்த சொற்களால் புகழமுடியுமோ? எனக்கு முடியாமையே அன்றி மற்று எவர்க்கும் முடியாதாம்.

குறிப்புரை :

குறைவில்லாத பெருமையுடைய சடையனாரின் செல்வம்பொருந்திய மனைவியாரும், யாரானும் எவ்வாற்றானும் அழிக்க இயலாத வலிமையுடைய முப்புரங்களை அழித்த சிவபெரு மானால் ஆட்கொள்ளப்பெற்ற நம்பியாரூரரைப் பெற்றவருமாகிய, உயர்வுடைய குலமான சிவவேதியரின் குலத்தில் வந்த இசைஞானிப் பிராட்டியாரை, என்னுடைய இழிந்த சொற்களால் புகழமுடியுமோ? எனக்கு முடியாமையே அன்றி மற்று எவர்க்கும் முடியாதாம்.
சிற்பி