திருப்புகலூர்


பண் :

பாடல் எண் : 1

தன்னைச் சரணென்று தாளடைந் தேன்றன் னடியடையப்
புன்னைப் பொழிற்புக லூரண்ணல் செய்வன  கேண்மின்களோ
என்னைப் பிறப்பறுத் தென்வினை கட்டறுத் தேழ்நரகத்
தென்னைக் கிடக்கலொட் டான்சிவ லோகத் திருத்திடுமே. 

பொழிப்புரை :

புன்னை மரங்கள் நிறைந்த சோலைகளை உடைய திருப்புகலூர்ப் பெருமானை அடைக்கலமாகப் பற்றி அவன் திருவடிகளை அடைந்தேன். தன் திருவடிகளை அடைக்கலமாக அடைந்த அளவில் அவன் செய்வனவற்றைக் கேளுங்கள். என் பிறவிப் பிணியைப் போக்கி என் வினையாகிய கட்டினை அறுத்து நீக்கி எழு வகைப்பட்ட நரகத்தில் என்னைக் கிடக்குமாறு விடாமல் சிவலோகத்தில் கொண்டு சேர்த்து விடுவான்.

குறிப்புரை :

புன்னைப்பொழில் புகலூர் அண்ணல் தன்னைச் சரண் என்று (அவ்வண்ணலின்) தாள் அடைந்தேன். தன்னடியை (யான் அடையப் புகலூரண்ணல் செய்வன கேண்மின்கள். 1. என்னைப் பிறப்பறுத்து; 2. என் வினைக்கட்டறுத்து 3. ஏழ் நரகத்து என்னைக் கிடக்கலொட்டான்; 4. சிவலோகத்து இருத்திடும் திருப்புகலூர்த் தலவிருட்சம் புன்னை. பொழில் - சோலை. பிறப்பறுத்தலும் அதற்கேதுவாய வினைக்கட்டறுத்தலும், அதனால் நரகத்துக்கிடக்க லொட்டாமையும், சிவலோகத்திருத்தலும் அண்ணல் செய்வன. திருநாவுக்கரசு நாயனார் பேரின்ப வுருவான தலம் திருப்புகலூரே. பயன் இரண்டு:- பாசவீடும் சிவப்பேறும். முன்னைய மூன்றும் பாசவீடு. பின்னை யொன்று சிவப்பேறு. `வினைக்கட்டு` என்ற பாடமே சிறந்தது. `கள்ளப் புலக் குரம்பைக் கட்டழிக்க வல்லான்` (தி.8 திருவாசகம்) என்புழியும் ஒற்றில்லாதது பிழை. வினைக்கட்டு (கர்மபந்தம்).

பண் :

பாடல் எண் : 2

பொன்னை வகுத்தன்ன மேனிய னேபுணர் மென்முலையாள்
தன்னை வகுத்தன்ன பாகத்த னேதமி யேற்கிரங்காய்
புன்னை மலர்த்தலை வண்டுறங் கும்புக லூரரசே
என்னை வகுத்திலை யேலிடும் பைக்கிடம் யாதுசொல்லே. 

பொழிப்புரை :

பொன்னார் மேனியனே! பார்வதி பாகனே! தனித்து வருந்தும் அடியேனுக்குக் கருணை செய்வாயாக. புன்னை மலர்களிலே வண்டுகள் உறங்கும் புகலூர்த் தலைவனே! யான் இல்லேனாயின் துன்பம் தங்குவதற்கு வேறு இடம் யாது உள்ளது?

குறிப்புரை :

பொன்னை வகுத்தன்ன மேனியனே:- `பொன்னே போற்றிருமேனி யுடையான் கண்டாய்` `பொன்போல மிளிர் வதோர்மேனியினீர்` `பொன்னியலுந் திருமேனியனே போற்றி போற்றி` `பொன்னியலுந் திருமேனியுடையான் கண்டாய்` `பொன்னார் மேனியனே` என்பவை முதலிய பலவற்றினும், பொன்னை வகுத்தாலொத்த மேனியன் என்றது மிக்கநயமுடையது. அதனினும், அம்மேனியனைப் பாகம் பண்ணி அதில் ஒரு பாகத்தை நம் அன்னைக்குத் தந்த அருளை `மென்முலையாள் தன்னை வகுத்தன்ன பாகத்தனே` என்றது மிக்க இனிமை விளைக்கின்றது. இரக்கத்திற்குத் தக்க பொற்றிரு மேனியும் மங்கை பங்கும் உடைய நீ இரங்காதொழியாய், உனக்கிடமான திருப்புகலூர்ப் புன்னை மலரில் வண்டுறங்கி இன்புறும் அதுவே, நீ இரக்கம் கொண்டு செய்யும் அருளைப்பெற்று இன்புறுவேன் யான் என்பதைக் குறிப்பதாகும். திருமேனியைத் தோற்றும் ஓர் ஒப்புப்பொருளாகப் பொன்னை வகுத்தாய். திருமேனிப் பாதியை நின் கருணையுருவாகத் தோற்றும் பொருட்டு எந்தாயை வகுத்தாய். யான் இல்லேன் ஆயின், அவ்விடும்பைக்குத் தான் வேறு இடம் யாதுளது? யான் அன்றி வேறு இடம் இடும்பைக்கில்லை என்க. `யாதேனுங்காரணத்தால் எவ்வுலகில் எத்திறமும் மாதேயும் பாகன் இலச்சினையே ஆதலினால்` (திருக்களிறு 82) நீயும் என்தாயும் எங்கும் பொங்கும் இன்ப நிறைவா யென்றும் இருப்பது மேலோர் அறிந்த உண்மை. ஈறில்லாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பத்தின் உருவமே நீ. துன்பத்துக்கு இடம் நான். எனக்கு இரங்கித் துன்பம் தொலைத்து இன்பம் அளிப்பாய்.

பண் :

பாடல் எண் : 3

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *

பண் :

பாடல் எண் : 4

பொன்னள வார்சடைக் கொன்றையி னாய்புக லூரரசே
மன்னுள தேவர்கள் தேடு மருந்தே வலஞ்சுழியாய்
என்னள வேயுனக் காட்பட் டிடைக்கலத் தேகிடப்பார்
உன்னள வேயெனக் கொன்று மிரங்காத வுத்தமனே.

பொழிப்புரை :

பொன்னை ஒத்த நீண்ட சடைக்கண் கொன்றைப் பூவை அணிந்தவனே! புகலூருக்கு அரசனே! பெருமையை உடைய தேவர்கள் தேடும் அமுதமே! திருவலஞ்சுழிப்பெருமானே! எனக்குச் சிறிதும் இரக்கம் காட்டாத மேம்பட்ட பண்பினனே! உனக்கு அடிமையாக அமைந்தும் கட்டுக்கும் வீட்டுக்கும் இடையே கிடப்பவர் என்னைத் தவிர உன் அடியவருள் வேறு யாவர் உளர்?

குறிப்புரை :

பொன் அளவு ஆர் சடைக் கொன்றையினாய்:- `பொன்னிசையும் புரிசடை` `பொன்னவில் புன்சடையான்` `பொன்னக்கன்ன சடைப்புகலூரர்` `புகலூரரசே`, `புகலூரண்ணல்` (தி.4 ப.105 பா.1, 2) மன் - பெருமை. உள - உள்ள. தேவர்கள் - திருமால், பிரமன் முதலோர். தேடும் - சரியையிலும் முதலிய இறப்பில் தவத்தின் நெறியிலும் பிற அகந்தை நெறியிலும் அறியா நெறியிலும் தேடிப் பெற முயலும். மருந்தே - பிறவிப் பிணியைத் தீர்க்கும் ஞானானந்த மருந்தே. வலஞ்சுழியாய் - திருவலஞ்சுழியிற்றிருக்கோயில் கொண்டெழுந்தருளிய தேவதேவா. எனக்கு ஒன்றும் இரங்காத உத்தமன் வேறுயாரும் இன்றாம்படி நீயே ஆனாய். உன் திருவடிக்கு ஆட்பட்டும் (தொண்டு பூண்டும்) இடைக்கலத்தே கிடப்பவர் வேறு எவரும் இலராம்படி யானொருவனே ஆனேன். அளவில்லா வுயிர்களை ஆட்கொண்டிரங்கியருள்செய்து எனக்கு மட்டும் இரங்காது உள்ளாய். ஆட்பட்ட உயிர்களுள் யான்மட்டும் மீளா ஆளாதலும் ஆளாகாமையும் இன்றி இடையே கிடக்கின்றேன். கட்டுக்கும் வீட்டுக்கும் இடைக்கலத்தே கிடப்பார் யான் அன்றிப் பிறர் யாருமிலர். `தமியேற்கு இரங்காய்` (தி.4 ப.105 பா.2.) என்று வேண்டியும், சிறிதும் இரங்காத உத்தமன் பிறர் ஆவார் இன்றி நீயே ஆனாய். ஒன்று - சிறிதும். `உத்தமன்` இவண் எதிர்மறைக்குறிப்பு `இடைக்கலம் அல்லேன் எழுபிறப்பும் உனக்கு ஆட் செய்கின்றேன்` (தி.4 ப.81 பா.8.) என்றதன் உரையை நோக்குக.

பண் :

பாடல் எண் : 5

* * * * * *

பொழிப்புரை :

* * * * * *

குறிப்புரை :

* * * * * *

பண் :

பாடல் எண் : 6

* * * * * *

பொழிப்புரை :

* * * * * *

குறிப்புரை :

* * * * * *

பண் :

பாடல் எண் : 7

* * * * * *

பொழிப்புரை :

* * * * * *

குறிப்புரை :

* * * * * *

பண் :

பாடல் எண் : 8

* * * * * *

பொழிப்புரை :

* * * * * *

குறிப்புரை :

* * * * * *

பண் :

பாடல் எண் : 9

* * * * * *

பொழிப்புரை :

* * * * * *

குறிப்புரை :

* * * * * *

பண் :

பாடல் எண் : 10

ஓணப் பிரானு மொளிர்மா மலர்மிசை யுத்தமனும்
காணப் பராவியுங் காண்கின் றிலர்கர  நாலைந்துடைத்
தோணப் பிரானை வலிதொலைத் தோன்றொல்லை நீர்ப்புகலூர்க்
கோணப் பிரானைக் குறுகக் குறுகா கொடுவினையே.

பொழிப்புரை :

திருவோணநாளுக்குத் தலைவனான திருமாலும் பிரகாசிக்கும் பெரிய தாமரைமலரில் உறையும் பிரமனும் உன்னைக் காண்பதற்காக வேண்டியும் காண இயலாதவர் ஆயினர். இருபது தோள்களை உடைய மேம்பட்ட தலைவனாகச் செருக்குக் கொண்ட இராவணனுடைய வலிமையை அழித்தவனாகிய, பண்டு தொட்டு நீர்வளம் மிக்க புகலூரில் உறையும் சாய்ந்த திருமேனியை உடைய பிரானை, அணுகிய அளவில், கொடிய தீவினைகள் நம்மைத் துன்புறுத்த நெருங்கிவாரா.

குறிப்புரை :

ஓணப் பிரான் - திருமால். திருவோணம் திருமாலுக்குரிய நாள். `மாயோன் அடையும் நாள்` (சூடாமணி நிகண்டு) `அவிட்ட முதனாளவன்` (சிவஞான மாமுனிவர் பாடல்). ஒளிமாமலர் - தாமரைப்பூ. மலர் மிசை யுத்தமன் - பிரமன். உத்தமன் - சிரேட்டன். ஓணப்பிரானாகிய திருமாலும் மலர்மிசை யுத்தமனாகிய பிரமனும் பரமேசுவரனைக் காணப்பராவினர், பராவுதல் - வாழ்த்தி வணங்குதல். பராவியுங் காண்கின்றிலர். காரணம்:- சீவபோதம் அறாமை. அகந்தையை அகற்றாமை. காண்டல்:- அடிமுடி காண்டல். `பாதாள மேழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்` (தி.8 திருவாசகம். 164) `பாதம் இரண்டும் வினவிற் பாதாளம் ஏழினுக்கு அப்பால்.` (தி.8 திருவாசகம். 346) `போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே` (தி.8 திருவாசகம். 164) `சோதி மணிமுடி சொல்லின் சொல்லிறந்து நின்ற தொன்மை (தி.8 திருவாசகம். 346) என `ஏர்தரும் ஏழுலகு (ம்) ஏத்த எவ்வுருவும் தன்னுருவாய்... ...மேயபிரானைக் காண்டற்குரிய முறைமை அறியாது தேடுதல் இளைப்பைத் தருவதன்றி மற்றென்ன பயத்தது? தோள் எனப் பிரித்து உரைத்தார் பெரியார் ஒருவர். கரம் என்றதால், தோள் எனல் மிகையாகும். தோள்களையுடைய பிரான். ந - சிறப்புணர்த்துவது. `நப்பின்னை` பின்னை காரணப் பெயர். ந, சிறப்புப் பொருளுணர்த்துவதோரிடைச் சொல் என்ப. நச்செள்ளை, நப்பாலத்தன், நக்கீரன் என்றாற்போல. `நம்பின்னை` `நற்பின்னை` விகாரமுமாம். (சீவக. 482 உரை). பல பெயர் நல்லென்னும் அடை கொண்டிருத்தலையும் நோக்கின், அது மரூஉ என்றே புலப்படுகின்றது. தொலைத்தோன் - ஒழித்தவன். திருக்காற் பெருவிரலூன்றலுக்கே அவன் வலி முழுதும் பலியாயிற்று. தொல்லை - பழமை. நீர்ப்புகலூர்:- இன்றும் நீர் நடுவே திருக்கோயில் உளது. கோணப்பிரான்:- அடியார்க்காகச் சாய்ந்து கோணலான திருமேனி நிலையை இன்றும் காணலாம்.
சிற்பி