திருத்தூங்கானைமாடம்


பண் :

பாடல் எண் : 1

பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும்
என்னாவி காப்பதற் கிச்சையுண் டேலிருங் கூற்றகல
மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவுகொண்டல்
துன்னார் கடந்தையுட் டூங்கானை மாடச்  சுடர்க்கொழுந்தே. 

பொழிப்புரை :

விரும்பி மேகங்கள் தங்குதல் பொருந்திய பெண்ணாகடத்திலுள்ள திருக்கோயிலாகிய தூங்கு ஆனை மாடத்தில் ஒளிப் பிழம்பாய் இருக்கும் பெருமானே! உன்னுடைய பொன்போன்ற திருவடிகளில் அடியேன் செய்யும் விண்ணப்பமாகிய வேண்டுகோள் ஒன்று உளது. அஃதாவது அடியேனுடைய உயிரைப் பாதுகாக்கும் விருப்பம் உனக்கு உண்டானால், யான் சமண சமயத்தில் வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கினவன் என்று மக்கள் கூறும் பழிச் சொற்கள் நீங்குமாறு, உன்னுடைய அடிமையாக அடியேனை எழுதிக் கொண்டாய் என்பது புலப்பட ஒளிவீசும் முத்தலைச் சூலப் பொறியை அடியேன் உடம்பில் பொறித்து வைப்பாயாக.

குறிப்புரை :

பொன் ஆர் திருவடி - பொன்போலும் அழகிய திருத்தாள் திருவடிக்கு விண்ணப்பம் ஒன்று உண்டு (அது கேட்டு அருள்வாய்). போற்றி செய்யும் ஆவி - வழிபடுகின்ற அடியேனை, காப்பதற்கு - உடலின் நீங்காது தடுத்து நிலைபெறச் செய்ய. இச்சை உண்டு ஏல் - திருவுள்ளம் உள்ளது ஏன் எனில், இருமை + கூற்று = இருங்கூற்று; பெருமொழி - `புன்னெறியாமமண் சமயத் தொடக்குண்டான் என்னும் பழிச்சொல்`. அகல - என்பாற் சாராது நீங்க. `தொடக்குண்டு போந்த உடல் தன்னுடனே உயிர்வாழத் தரியேன் நான்` (தி.12 சேக்கிழார் திருவாக்கு) மின் - ஒளி. ஆரும் - நிறைந்த. மூவிலைச் சூலம் - `முத்தலைச் சூலம்` `மூவிலைவேல்`. என்மேல் பொறி-; கொண்டல் துன் ஆர் கடந்தை - மேகம் பொருந்திய பெண்ணாகடம். துன் - துன்னுதல். ஆர் - பொருந்திய. மேவு கொண்டல்:- `வானோக்கி வாழும் உலகெல்லாம்` என்னும் பொருட்டு. கடந்தை சிவதலம். தூங்கானை மாடம் - சிவாலயம் `சோதிலிங்கத் தூங்கானை மாடத்தான்` (தி.6 ப.34 பா.5) `பெண்ணானை தூங்குமிடம்` `பெண்ணானை தூங்குமாடம்` என்றிருந்து, பெண்ணாகடம் என மருவியிருக்கலாம். `புள்ளிருக்குந்திருவேளூர்` எனச் சேக்கிழார் சுவாமிகள் சொல்லியருளினார். அது புள் இருக்கு வேள் ஊர் எனப் பிரித்துப் பொருள் கூறப்படுகின்றது. அதுபோலப் பெண் - தேவ கன்னியார்; ஆ - காமதேனு; கடம் - வெள்ளை யானை எனப் பிரித்துப் பொருள் கூறப்படுகின்றது இதுவும். பொறித்தல் வேறு வடுச் செய்தல் வேறு. `அயனை அநங்கனை அந்தகனைச் சந்திரனை வயனங்கண் மாயாவடுச்செய்தான் காணேடீ` (தி.8 திருவாசகம். 258) என்புழி, `பொறித்தான்` எனிற் பொருந்துமோ? `சுடர்க்கொழுந்து` இறைவன் திருப்பெயர். திரிசூலம் உடைய பெரிய கூற்றனை அஞ்சி அகலத் திரிசூலம் என்மேற் பொறி என்றதுமாம்.

பண் :

பாடல் எண் : 2

ஆவா சிறுதொண்ட னென்னினைந் தானென் றரும்பிணிநோய்
காவா தொழியிற் கலக்குமுன் மேற்பழி  காதல்செய்வார்
தேவா திருவடி நீறென்னைப் பூசுசெந் தாமரையின்
பூவார் கடந்தையுட் டூங்கானை மாடத்தெம் புண்ணியனே. 

பொழிப்புரை :

செந்தாமரைப் பூக்கள் நிறைந்த கடந்தையுள் தூங்கானைமாடத்து உறையும் எம் புண்ணியனே! `ஐயோ` இச்சிறு தொண்டன் என்னை விருப்புற்று நினைத்தான் என்று திருவுளம் பற்றிப் பெரிய பிணிகளும் நோய்களும் தாக்காதவாறு அடியேனைப் பாதுகாவாமல் விடுத்தால் புண்ணியனாகிய உனக்குப் பழி வந்து சேரும். ஆதலின் விரும்பும் அடியவர் தலைவனாகிய நீ உன் திருவடிகள் தோய்ந்த நீற்றினை அடியேன் மீது பூசுவாயாக.

குறிப்புரை :

ஆ ஆ:- `ஆவா` என்னும் ஆட்சி திருமுறையிற் பயின்றுளது. சிறு தொண்டன் - தொண்டருட் சிறியேன்; சிறு தொண்டு புரிவேன் எனலுமாம். என் நினைந்தான் - யாது கருதினான். அரும் பிணி நோய் - அகற்றுதற்கு அரிய பிணியையும் நோயையும். பிணியாகிய நோயை என்றுமாம். காவாது ஒழியின் - தடுக்காமல் நின்றால். ஒழிதல் - நிற்றல். தொல். உன்மேல் பழி கலக்கும்:- `பூவார் அடிச்சுவடு என்மேற் பொறித்துவை போகவிடில் மூவா முழுப்பழி மூடுங்கண்டாய்`. (தி.4 ப.96 பா.1) காதல் செய்வார்:- `காதல் செய்யில்` (தி.4 ப.108 பா.2). செய்வார்க்குத் தேவா. தேவன் - திவ்வியன். திருவடி நீறு என்னைப் பூசு:- `பூவாரடிச்சுவடு என் மேல் பொறித்தலுமே தேவானவாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. (தி.8 திருவாசகம். 241). செந்தாமரையின் பூ ஆர்கடந்தை - செந்தாமரை மலர்கள் நிறைந்த பெண்ணாகடம்; நீர் நிலவளக் குறிப்பு. கடந்தையுள் தூங்கானை மாடம்:- ஊரும் கோயிலும் எல்லாத் திருவிருத்தத்திலும் கூறப்பட்டன. எம் புண்ணியனே - எமது சிவபுண்ணியப் பயனாயுள்ளவனே. புண்ணியனே காவா தொழியிற் பழி உன்மேற் கலக்கும். திருவடி நீறு பூசு. பூசிக் காத்தருள், என்னை.

பண் :

பாடல் எண் : 3

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :

பாடல் எண் : 4

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :

பாடல் எண் : 5

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :

பாடல் எண் : 6

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :

பாடல் எண் : 7

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :

பாடல் எண் : 8

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :

பாடல் எண் : 9

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :

பாடல் எண் : 10

கடவுந் திகிரி கடவா தொழியக் கயிலையுற்றான்
படவுந் திருவிர லொன்றுவைத் தாய்பனி மால்வரைபோல்
இடவம் பொறித்தென்னை யேன்றுகொள் ளாயிருஞ் சோலைதிங்கள்
தடவுங் கடந்தையுட் டூங்கானை மாடத்தெந்  தத்துவனே. 

பொழிப்புரை :

பெரிய சோலைகளிலே சந்திரன் பொருந்தி உலவும் கடந்தைத் தலத்தில் உள்ள தூங்கானை மாடத்தில் உறையும் எம் மெய்ப்பொருளே! செலுத்திய தேர்ச்சக்கரம் மேல் உருளாது தடைப்படக் கயிலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணன் உடல் நெரியுமாறு அழகிய கால்விரல் ஒன்றால் அழுத்தியவனே! பெரிய இமய மலைபோன்ற வெண்ணிறமுடைய காளை வடிவப் பொறியை அடியேன் உடலில் பொறித்து அடியேனை உன் தொண்டனாக ஏற்றுக் கொள்வாயாக.

குறிப்புரை :

கடவும் - செலுத்தும். திகிரி - தேர். கடவாது ஒழிய - செலுத்தப்படாது நிற்க. கயிலை உற்றான் - திருக்கயிலை மலையை எடுக்கலுற்றான். அதை எடுக்கலுற்ற காரணம் அவன் தேர் செல்ல அம் மலை இடையூறாயிற்றென்பது குறித்தது இது. படவும் - அவன் வருத்தப்படவும். திருவடி அவன் மேற் படவும். அவன் உடல் அம் மலையிற்படவும் (பட்டவுடனே) திருவிரல் - திருக்காற் பெருவிரல். ஒன்று வைத்தாய்:- ஐந்தும் வைத்திருந்தால் ஆகும் கதி சொல்லொணாது என்ற குறிப்பு. பனிமால்வரை - இமாசலம் என்றதன் தமிழ் மால்வரை போல் இடவம். பெரிய மலை போலும் விடை பெரிய விடை` ஈடலிடபம்` `மற்றொன்று இணையில் வலியமாகில் வெள்ளி மலைபோல் பெற்று ஒன்று ஏறிவருவார் அவர் எம்பெருமானடிகளே` (சம்பந்தர்) என்னும் திருக்கடவூர் மயானத்துத் திருப்பாடலை நினைக. இடபம் - இடவம்:- `வபயோரபேதம்`, இடவம் பொறித்து என்னை ஏன்று கொள்ளாய். திங்களை இருஞ்சோலை தடவும் கடந்தை:- `வண்கொண்டல் மதி முட்டுவன மாடம்`. (கம்பரா.) தத்துவன் - மெய்ப்பொருள். ஏன்று கொள்:- `திருப்பாதிரிப்புலியூர் இருந்தாய் அடியேன் இனிப் பிறவாமல் வந்து ஏன்றுகொள்ளே`. (தி.4 ப.94 பா.10.)
சிற்பி