திருப்பாண்டிக்கொடுமுடி


பண் :

பாடல் எண் : 1

சிட்ட னைச்சிவ னைச்செழுஞ் சோதியை
அட்ட மூர்த்தியை ஆல நிழலமர்
பட்ட னைத்திருப் பாண்டிக் கொடுமுடி
நட்ட னைத்தொழ நம்வினை நாசமே.

பொழிப்புரை :

உயர்ந்தவனை , சிவனை , செழுஞ்சோதி வடிவானவனை , எட்டு மூர்த்தியை , கல்லாலநிழற்கீழ் அமரும் ஆசாரியனை , திருப்பாண்டிக்கொடுமுடிக் கூத்தனைத் தொழுதால் நம்வினை நாசமாம்

குறிப்புரை :

சிட்டன் - சிஷ்டாசாரமுடையவன் . செழும் - வளவிய . அட்ட மூர்த்தியை - எட்டு வடிவமாக எழுந்தருளியவனை . ஆல நிழல் - கல்லால மர நிழலின்கண் . பட்டன் - ஆசாரியன் ; ஞானி . நட்டன் - நடனமாடுபவன் . நாசம் - அழியும் .

பண் :

பாடல் எண் : 2

பிரமன் மாலறி யாத பெருமையன்
தரும மாகிய தத்துவ னெம்பிரான்
பரம னாருறை பாண்டிக் கொடுமுடி
கரும மாகத் தொழுமட நெஞ்சமே.

பொழிப்புரை :

அறிவற்ற நெஞ்சமே ! பிரமனும் மாலும் அறியாத பெருமையனும் , தருமவடிவாகிய தத்துவ வடிவினனும் , எம்பிரானும் , பரமனும் ஆகிய பெருமான் உறைகின்ற திருப்பாண்டிக் கொடு முடியைத் தொழுவதே கருமமாகக் கொண்டு பணிவாயாக .

குறிப்புரை :

தருமமாகியதத்துவன் - அறவடிவாகியதத்துவன் . கருமம் - செய்யவேண்டிய அவசியச் செயல் .

பண் :

பாடல் எண் : 3

ஊச லாளல்லள் ஒண்கழ லாளல்லள்
தேச மாந்திருப் பாண்டிக் கொடுமுடி
ஈச னேயெனு மித்தனை யல்லது
பேசு மாறறி யாளொரு பேதையே.

பொழிப்புரை :

ஒரு பெண் ஊசல் விளையாட்டும் கொண்டிலள் ; ஒள்ளிய கழல் அணிவாளுமல்லள் ; தேசமாம் திருப்பாண்டிக் கொடு முடி ஈசனே என்னும் இத்தனையேயல்லது வேறு பேசுமாறு ஒன்றும் அறியாதவள் ஆயினள் .

குறிப்புரை :

ஊசலாள் அல்லள் - ஊஞ்சல் ஆடுபவளாக இல்லை . ஒண்கழலாள் அல்லள் - ஒளிபொருந்திய சிலம்பு முதலிய அணிகலன்கள் அணிந்துகொள்ளுபவளாகவும் இல்லை . தேசமாம் - சிறந்த ஊராகிய . எனும் - என்று சொல்வாள் . இத்தனையல்லது - இந்த வார்த்தைகளேயல்லாமல் .

பண் :

பாடல் எண் : 4

தூண்டி யசுடர் போலொக்குஞ் சோதியான்
காண்டலுமெளி யன்னடி யார்கட்குப்
பாண்டிக் கொடுமுடி மேய பரமனைக்
காண்டு மென்பவர்க் கேதுங் கருத்தொணான்.

பொழிப்புரை :

தூண்டிய சுடர்போல் ஒக்கின்ற சோதிவடிவினனாகிய பெருமான் அடியார்களுக்குக் காண்டல் எளியவன் ; பாண்டிக் கொடுமுடி மேவிய பரமனைக் காண்போம் என்று கூறுவார்க்கு ஏதும் கருதவொண்ணா இயல்பினோன் .

குறிப்புரை :

தூண்டிய சுடர்போல் ஒக்கும் - தூண்டப்பட்ட விளக்குப்போல என்று உவமை சொல்லத்தகும் . காண்டலும் எளியன் - காட்சிக்கும் எளியன் . அடியார்களுக்குக் காண்டலும் எளியன் என்க . காண்டும் என்பவர்க்கு - எப்படியேனும் கண்டே தீருவேன் என்று செருக்கோடு காண்பார்க்கு . ஏதும் கருத்தொணான் - எந்த அளவிலும் கருத்தின்கண் புலப்படமாட்டாதவன் .

பண் :

பாடல் எண் : 5

நெருக்கி யம்முடி நின்றிசை வானவர்
இருக்கொ டும்பணிந் தேத்த விருந்தவன்
திருக்கொ டும்முடி யென்றலுந் தீவினைக்
கருக்கெ டும்மிது கைகண்ட யோகமே.

பொழிப்புரை :

புகழை உடைய வானவர், ஒருவர் முடியோடு மற்றொருவர் முடி நெருக்கும் கூட்டமாக நின்று, இருக்கு வேதம் உரைத்து, பணிந்து ஏத்த இருந்தவனுடைய ஊர், `திருக்கொடுமுடி` என்றலும் தீவினையின் கருக் கெடும்; இது கைகண்ட யோக நெறியாகும் .

குறிப்புரை :

அம்முடி நெருக்கிநின்று - கூட்டமாய் ஒருவர் முடியோடு மற்றொருவர் நெருக்கிக்கொண்டு நின்று . இசை - பொருந்திய இருக்குவேதமொழி . கரு - பிறவி . * * * * * * 6, 7, 8, 9, 10 6, 7, 8, 9, 10. * * * * * * *
சிற்பி