மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் திருமறைக் காட்டில் பாலறாவாயர் எழுந்தருளியிருப்பதை அறிந்து விடுத்த ஏவலர் போற்றிச் செய்துகொண்ட விண்ணப்பத்திற்கு அவர் இசைந்தார் . புகலிமன்னர் , மொழிமன்னர்க்குத் , தென்னாடுற்ற செயலையும் அதைப் பாண்டிமா தேவியாரும் அமைச்சரும் உரைத்துவிட்ட வார்த்தையையும் புகன்றருளிக்கன்னி நாட்டிற்கு எழுந்தருளத் துணிந்தார் . அப்பொழுது நாவரசப் பெருந் தகையார் ` பிள்ளாய் ` அந்த அமண் கையர் வஞ்சனைக்கு ஓர் அவதி ( எல்லை ) இல்லை . உரை செய்வது உளது . உறுகோள் தாமும் தீய . எழுந்தருள உடன்படுவது ஒண்ணாது என்றருளி னார் . அது கேட்ட புகலிவேந்தர் , ` பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால் . பழுது அணையாது ` எனப் பகர்ந்து பரமர் தாள்போற்றி வேயுறு தோளியை விளம்பியது இத்திருப்பதிகம் .