உன்னை அன்றி வேறு ஒரு பொருள் இல்லையாக. பிற எல்லாப் பொருளையும் விட்டுவிட்டு அணு அளவாய்க் குறுகிக் கூட்டப்படுகின்ற திருப்பெருந்துறை சிவனே! காணப்படுகின்ற ஒரு பொருளும் நீ அல்லை; உன்னை அல்லாது பிற பொருளும் இல்லை. யாவர் உன்னை அறிய வல்லவர்? இப்பொழுது எனக்கு அருள் புரிந்து அறியாமை இருளைப் போக்கி, மனத்தே தோன்றுகின்ற சூரியனே போல வெளிவந்து நின்ற உன்னுடைய இயல்பை, தற்போதத் தினையே எதிரிட்டு நினையாமல் அருள் வழியிலே நின்று நினைந்தேன்.
குறிப்புரை:
``சென்று சென்று`` என்பது முதலிய பகுதிகளை முதலிற் கூட்டி, `சிவனே, ஒன்றும் நீயல்லை; அன்றி ஒன்றில்லை; ஆதலின், உன்னை அறியகிற்பார் யார்? ஆயினும், நீ இன்று எனக்கு அருளி என் உள்ளத்து நின்ற நின்தன்மையால், நீயலால் பிறிது இன்மையை யான் நினைப்பற நினைந்து நின்றேன்` என வினை முடிக்க.
இன்று - எனக்கு அருளும் காலம் எய்திய இந்நாளில். எனக்கு அருளி - என்மேல் கருணைகூர்ந்து. ``இருள் கடிந்து`` என்றதனை, ``நின்ற`` என்பதற்கு முன்னே கூட்டுக. ``எழுகின்ற ஞாயிறு`` என்றமையால், பொருட்கண்ணும், `எழுந்து` என்பது பெறப்படும்.
முன்னைத் திருப்பாட்டில், இறைவன் தன் அடியார்களது உள்ளத்தில் தோன்றுகின்ற முறையை விளக்கியவாற்றிற் கேற்பவே இங்கும், `ஞாயிறே` என்னாது, ``எழுகின்ற ஞாயிறே போன்று`` எனக் காலையில் முளைத்தெழுந்து மேலே செல்லுகின்ற கதிரவனையே உவமையாகக் கூறினார். ``மன்னும் இருளை மதிதுரந்தவாறு`` என்னும் சிவஞானபோதத்தையும், (சூ.11.அதி.2.) அதன் உரையையும் காண்க. `உள்ளத்து எழுந்து நின்ற` என இயையும். ``தன்மை`` என்றது செயலை. `தன்மையால்` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. நினைப்பு அற - கருவிகளின்வழியும், தற்போதத்தின்வழியும் உணர்தல் அற்றுப் போக. நினைந்தேன் - உனது திருவருளின் வழியே உணரப் பெற் றேன். பிறிது - வேறொருபொருள். மற்று, அசைநிலை. ``இன்மை`` என்றவிடத்து இரண்டாம் வேற்றுமை இறுதிக் கண் தொக்கது. `நீயலால் பிறிது இன்மையை உணர்ந்தேன்` என்றது, உன்னையன்றிப் பிறிதொரு பொருளும் மெய்ப்பொருளாகாமையை உணர்ந்தேன்; அஃதாவது உண்மை ஞானத்தைப் பெற்றேன்` என்றவாறு. எனவே, ``காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே`` (தி.6 ப.95 பா.3) என்றதுபோல, இதுவும், `நீ கருணை கூர்ந்து என் உள்ளத்தில் தோன்றி அறியாமையைப் போக்கி நீங்காது நிலைபெற்றமையால், யான் நினது மெய்ம்மையை உணர்ந்தேனல்லாது, வேறு எவ்வாற்றான் உணர் வேன்` என்று அருளிச்செய்ததாம், `பிறிதொருபொருள் இல்லை` எனப் பொதுப்படக் கூறப்பட்டதாயினும், ``பொருளல்லவற்றைப் பொருள் என்றுணரும் - மருள்`` (குறள்-351.) என்புழிப்போல, `பிறிதொரு மெய்ப்பொருள்` என்று சிறப்பு வகையாகவே கொள்ளப்படும். அல்லாக்கால், ``எனக்கு அருளி`` ``இருள் கடிந்து``, ``நின்தன்மையை நான் நினைந்தேன்`` என்றற்றொடக்கத்துத் திருமொழிகள் பலவும் மாறுகொளக் கூறலாய் முடியும்.
சென்று சென்று - பாசக்கூட்டங்களினின்றும் நீங்கி நீங்கி; அடுக்கு, சிறிது சிறிதாக நீங்குதல்பற்றி வந்தது. ``யாதனின் யாதனின் நீங்கியான்`` (குறள் - 341) என்றார் திருவள்ளுவ நாயனாரும். `தேய்ந்து தேய்ந்து அணுவாய் ஒன்றாம்` என மாறிக்கூட்டுக. தேய்வதும், அணுவாவதும், ஒன்றாவதும் ஆன்மாவே என்க. ஆன்மா நித்தப்பொருளாதலின், தேய்தல் முதலியன அதன் வியாபாரமாம். முத்தி நிலையில் ஆன்மா இறைவனைத்தவிர பிறிதொரு பொருளை அறிதலும், இச்சித்தலும், அநுபவித்தலும் இன்றி, இறைவனையே அறிந்து, இறைவனையே இச்சித்து, இறைவனையே அநுபவித்து நிற்குமாதலின், அவ்விடத்து அஃது உலகை மறந்திருத்தலேயன்றித் தன்னையே தான் மறந்து நிற்கும். அதனால், அந்நிலையில் அதற்கு இறை அநுபவம் ஒன்றைத் தவிர்த்து, ஏனைய வியாபாரங்களுள் ஒன்றும் இல்லையாதல் அறிக. இந்நிலையில், ``உயிர்தானும் சிவாநுபவம் ஒன்றினுக்கும் உரித்தே`` (சிவஞானசித்தி சூ.11-10.) என்கின்றார் அருணந்தி சிவாசாரியார். இவ்வாறு ஆன்மா சிவனது திருவடி வியாபகத்துள் அடங்கித் தனித்த ஒரு முதலாய்க் காணப்படாது நிற்றலே ஆன்மா சிவத்தொடு ஒன்றாதல் அல்லது இரண்டறக் கலத்தல்` எனவும், `இவ்வாறன்றி, ஆன்மா முத்தியில்தானே பிரமமாம் என்னும் ஏகான்ம வாதம் முதலியன பொருள்படுமாறில்லை` எனவும் சித்தாந்த நூல்கள் பலவிடத்தும், பலபடியாக இனிது விளங்க விளக்குதலை அறிந்துகொள்க.
``சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம்`` என்னும் தொடரை உமாபதிசிவனார், தமது சங்கற்ப நிராகரண நூலுள் சைவவாதி நிராகரணத்துள் எடுத்தோதினமையும், அதுவே, `பரம சித்தாந்தம்` எனச் சிவஞானபோதத்துப் பத்தாம் சூத்திர முதல் அதிகரண பாடியத்துள் கூறப்பட்டமையும் அவ்விடங்களிற் காண்க. இத்திருப்பாட்டுள் இங்ஙனம் பரம சித்தாந்தத்தை அருளிச் செய்தமையின், இதனை, `திருவாசகத்தின் இருதயமான பாட்டு` என்பர் அறிஞர்.
``அணு`` புலனாகாமைபற்றிக் கூறப்பட்ட உவமையாகு பெயர், சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம் நிலையை, திருவைந்தெழுத்தை மூன்றெழுத்தாகவும், பின்னர் இரண்டெழுத்தாகவும், பின்னர் ஓர் எழுத்தாகவும் கணிக்கும் முறையில் வைத்து உணருமாறு அருளப்பட்டது என்பதும் அப் பாடியத்தே கூறினமை காண்க. திருவைந்தெழுத்தை ஓர் எழுத்தாகக் கணித்தல் இங்குப் பிறர்மதம் பற்றிக் கூறப்பட்டது. ``ஆம்`` என்னும் பெயரெச்சம், ``சிவன்`` என்னும் செயப்படுபொருட் பெயர் கொண்டது. `ஒன்றாதல்` என்பது, `ஒற்றித்து நின்று உணர்தல்` என்னும் பொருட்டாகலின், அதற்குச் செயப்படுபொருள் உண்மை அறிக.
எனவே, `இவ்வாற்றானன்றி வேறாய் நின்று அறியப்படு வாயல்லை` என்பதை எடுத்தோதி, `யார் உன்னை அறிய வல்லார்` என்றதாயிற்று. `யார்` என்னும் வினா. ஒருவருமிலர் எனப் பொருள் தந்ததாயினும் பெரிதும் அரியர் என்றல் திருவுள்ள மாதல் அறிக. இங்ஙனங் கூறவே, `பெரிதும் அரிய வருள் நாயேனையும் ஒருவ னாக்கிய நின் கருணையை என்னென்று புகழ்வேன்` என்பதும் பெறப் பட்டது. ``ஒன்றும் நீயல்லை, அன்றி ஒன்று இல்லை`` என்ற இரண்டிடத் தும், `ஆயினும்` என்பது வருவித்து, `நீ இவ்வுலகப் பொருள்களுள் ஒன்றும் அல்லையாயினும், நீ இல்லாத பொருளே இல்லை; ஆயினும், உன்னை காண்பவர் எவரேனும் உளரோ` என உரைக்க.
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
తెలుగు / தெலுங்கு
ಕನ್ನಡ / கன்னடம்
മലയാളം / மலையாளம்
චිඞංකළමං / சிங்களம்
Malay / மலாய்
हिन्दी / இந்தி
संस्कृत / வடமொழி
German/ யேர்மன்
français / பிரஞ்சு
Burmese/ பர்மியம்
Assamese/ அசாமியம்
English / ஆங்கிலம்
నీవు మినహా వేరొక పదార్థము ఈ విశ్మమందు లేనివానివాడవు; అన్యమైన అన్ని వస్తువులను వీడనాడి, అణువు పరిమాణములో లెక్కింపదగు విధమున తిరుప్పెరుందురై దివ్యస్థలమందు వెలసిన పరమేశ్వరా! మాకు ఈ విశ్వమందు కనబడు ప్రతి వస్తువూ నీకు అతీతమైనది కాదు. నీకాంటే వేరైనదేదియూ ఈ భూమాండలమందు లేదు. నిన్ను తెలుసుకొనగల ఉన్నతులెవరు? నీయొక్క ఉనికిని కనిబెట్టగలవారెవ్వరు!? ఈ సమయమున నాకు అనుగ్రమును ప్రసాదించి, అజ్జానమనబడు చీకట్లను పారద్రోలి, మనసులోనికి చొరబడుచున్న సూర్యునివలె ఉదయించి మా ముంగిట నిలిచిన నీయొక్క సరళ స్వభావమును, vethirekanga ఎదరించ తలచక అనుగ్రహ మార్గముననే నిలిచి తలచుచున్నాను.
అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ನೀನಿಲ್ಲದೆ ಯಾವ ವಸ್ತುವೂ ಇಲ್ಲದ ಕಾರಣ ಉಳಿದೆಲ್ಲ ವಸ್ತುಗಳ ಬಿಟ್ಟು ಅಣುವಿನಂತೆ ಕುಗ್ಗಿ ಶ್ರೀ ಪೆರುಂದುರೈನಲ್ಲಿ ನೆಲೆಸಿರುವ ಶಿವನೇ! ಗೋಚರಿಸುವ ವಸ್ತುಗಳಾವುವು ನೀನಲ್ಲ. ನೀನಲ್ಲದೆ ಬೇರೆ ವಸ್ತು ಯಾವುದೂ ಇಲ್ಲ. ನಿನ್ನನ್ನು ಅರಿಯಬಲ್ಲವರು ಯಾರು? ನನಗೀಗ ದಯೆ ತೋರಿ ಅಜ್ಞಾನವೆಂಬ ಕತ್ತಲನ್ನು ನೀಗಿಸಿ, ಮನದಲ್ಲಿ ಶೋಭಿಸುವ ಸೂರ್ಯನಂತೆ ನೆಲೆಸಿದವನೇ ! ನಿನ್ನ ಸ್ವಭಾವವನ್ನು ಕರುಣೆಯ ಹಾದಿಯಲ್ಲಿ ನಿಂತು ಧ್ಯಾನಿಸುತ್ತಿರುವೆ.
अन्धकार को विनश्ट करके उदित होते हुए सूर्य सदृष मुझे
ज्ञान प्रदान कर अज्ञानांधकार को दूर कर मेरे
चित्त में प्रविश्ट हो गये हो। इस महती कृपा का
स्मरण कर गद्गद् हो जाता हूं।
तुम सूक्ष्म से भी सूक्ष्म हो। तुम सर्व व्यापी हो।
तुम्हारे सिवा दूसरा कोई मूलाधार ब्रह्म स्वरूप नहीं है।
तिरुप्पेॅरुंतुरै में विराजमान महादेव प्रभु!
तुम किसी भी वस्तु के आकार में नहीं हो।
तुम्हारे बिना किसी वस्तु का अस्तित्व नहीं है।
तुम्हें पूर्ण रूप से कौन पहचान सकता है।
Ohne daß ich es wußte,
Sann über dein Wesen ich nach,
Der du wie eine Sonne
Heut’ in mir aufgegangen
Und, mich erleuchtend, hast
Die Finsternis vertrieben.
Ohne dich, Siva, ist nichts,
Du bist das Eine, o Herr,
Das überall ist und das
Auch im Atom gegenwärtig,
Im Atom zerrieben wird!
O Siva, der du wohnest
In Tirupperunturai,
Nichts bist du, und doch gibt es nichts,
Das ohne dich. Siva, ist!
Wer könnte, o Herr, dich erkennen?
This day, gracing me, You chased away my murk,
Poised in my soul like the rising sun. On this –
Your inhering nature and there being nought else
But Youself –, I thought and thought till thought
Itself ceased. O Siva abiding at the sacred Perunturai !
Coming closer and closer to You and in the process,
Wearing away again and again, I was reduced
To my atomic self shorn of all else and got
Oned with You. You are not aught in the universe;
Yet there is nought save You.
Who can know You at all?
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995
பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration
𑀢𑀫𑀺𑀵𑀺 / தமிழி
গ্রন্থ লিপি / கிரந்தம்
வட்டெழுத்து /
Reformed Script / சீர்மை எழுத்து
देवनागरी /
தேவநாகரி
ಕನ್ನಡ / கன்னடம்
తెలుగు / தெலுங்கு
සිංහල / சிங்களம்
മലയാളം / மலையாளம்
ภาษาไทย / சீயம்
မ္ရန္မာစာ / பர்மியம்
かたかな / யப்பான்
Chinese Pinyin / சீனம் பின்யின்
عربي / அரபி
International Phonetic Alphabets / ஞால ஒலி நெடுங்கணக்கு