அருள்மிகு மங்களாம்பிகை உடனுறை பிராணநாதேசுவரர்
மரம்: கோங்கிலவு மரம்
குளம்: சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், மங்கல தீர்த்தம்
பதிகங்கள்: சீரினார்மணியும் -2 -10 திருஞானசம்பந்தர்
தங்கலப் -5 -73 திருநாவுக்கரசர்
முகவரி: திருமங்கலக்குடி அஞ்சல்
திருவிடைமருதூர் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 612102
தொபே. 0435 2470480
இது மயிலாடுதுறை கும்பகோணம் தொடர்வண்டிப் பாதையில், ஆடுதுறைப் தொடர்வண்டி நிலையத்திற்கு வடக்கே சுமார்4.5 கி.மீ. தூரத்தில் உள்ளது. ஆடுதுறையிலிருந்து - திருப்பனந்தாள் செல்லும் பேருந்துகளில் இவ்வூரை அடையலாம். காவிரி வடகரைத் தலங்களுள் ஒன்று.
இறைவரது திருப்பெயர் புராணேசுவரர். இத்திருப்பெயர், இவ்வூர்ப் பதிகம் முதல் திருப்பாட்டில்,
``நீரின் மாமுனி வன்னெடுங் கைகொடு நீர்தனைப்
பூரித்தாட்டி யர்ச்சிக்க விருந்த புராணனே``
என ஞானசம்பந்தரால் எடுத்தாளப்பட்டுள்ளது. இதிலுள்ள வரலாறு குறிப்புரையில் உணர்த்தப்பட்டது. இறைவியாரது திருப்பெயர் மங்களநாயகி.
தீர்த்தம் காவிரி.
காளி, சூரியன், திருமால், பிரமன், அகத்தியர் இவர்களால் அர்ச்சிக்கப்பெற்றது. இச்செய்தி,
``மங்க லக்குடி யீசனை மாகாளி
வெங்கதிர்ச் செல்வன் விண்ணொடு மண்ணுநேர்
சங்கு சக்கர தாரி சதுமுகன்
அங்க கத்திய னும்மர்ச்சித் தாரன்றே``
என்னும் இவ்வூர்க்கு உரிய அப்பர் பெருமானின் குறுந்தொகைப் பாடலால் தெரிகின்றது. இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று அப்பர் பதிகம் ஒன்று ஆக இரண்டு பதிகங்கள் உள்ளன.