அருள்மிகு திருநிலைநாயகி உடனுறை தோணியப்பர்
மரம்: பவழமல்லி
குளம்: பிரம தீர்த்தம்
பதிகங்கள்: தோடுடையசெவி -1 -1 திருஞானசம்பந்தர்
மைம்மரு -1 -4 திருஞானசம்பந்தர்
வண்டார் -1 -9 திருஞானசம்பந்தர்
பிறையணி -1 -19 திருஞானசம்பந்தர்
பூவார்கொன் -1 -24 திருஞானசம்பந்தர்
விதியாய் -1 -30 திருஞானசம்பந்தர்
பல்லடைந்த -1 -47 திருஞானசம்பந்தர்
வண்டரங்க -1 -60 திருஞானசம்பந்தர்
எரியார்மழு -1 -63 திருஞானசம்பந்தர்
பங்கமேறு -1 -66 திருஞானசம்பந்தர்
நறவநிறை -1 -74 திருஞானசம்பந்தர்
காலைநன் -1 -75 திருஞானசம்பந்தர்
அயிலுறுபடையினர் -1 -79 திருஞானசம்பந்தர்
நல்லார்தீமேவு -1 -81 திருஞானசம்பந்தர்
அரனையுள்குவீர் -1 -90 திருஞானசம்பந்தர்
எய்யாவென்றி -1 -97 திருஞானசம்பந்தர்
உரவார்கலை -1 -102 திருஞானசம்பந்தர்
ஆடலரவசைத்தான் -1 -104 திருஞானசம்பந்தர்
வாருறுவன -1 -109 திருஞானசம்பந்தர்
காடதணி -1 -117 திருஞானசம்பந்தர்
பந்தத்தால் -1 -126 திருஞானசம்பந்தர்
பிரமபுரத் -1 -127 திருஞானசம்பந்தர்
சேவுயருந் -1 -129 திருஞானசம்பந்தர்
செந்நெலங்கழ -2 -1 திருஞானசம்பந்தர்
நல்லானை -2 -11 திருஞானசம்பந்தர்
நிலவும்புன -2 -17 திருஞானசம்பந்தர்
உகலியாழ்கட -2 -25 திருஞானசம்பந்தர்
முன்னியகலைப் -2 -29 திருஞானசம்பந்தர்
எம்பிரான் -2 -40 திருஞானசம்பந்தர்
பண்ணினேர் -2 -49 திருஞானசம்பந்தர்
உருவார்ந்த -2 -54 திருஞானசம்பந்தர்
நலங்கொள்முத் -2 -59 திருஞானசம்பந்தர்
கறையணிவே -2 -65 திருஞானசம்பந்தர்
பிரமனூர் -2 -70 திருஞானசம்பந்தர்
விளங்கியசீர்ப் -2 -73 திருஞானசம்பந்தர்
பூமகனூர் -2 -74 திருஞானசம்பந்தர்
விண்ணியங்கும் -2 -75 திருஞானசம்பந்தர்
பூதத்தின் -2 -81 திருஞானசம்பந்தர்
நீலநன்மா -2 -83 திருஞானசம்பந்தர்
அறையும்பூம் -2 -89 திருஞானசம்பந்தர்
பொங்குவெண்புரி -2 -96 திருஞானசம்பந்தர்
நம்பொருள் -2 -97 திருஞானசம்பந்தர்
அன்னமென் -2 -102 திருஞானசம்பந்தர்
பொடியிலங்குந் -2 -113 திருஞானசம்பந்தர்
விடையதேறி -2 -122 திருஞானசம்பந்தர்
பந்துசேர் -3 -2 திருஞானசம்பந்தர்
இயலிசையெனு -3 -3 திருஞானசம்பந்தர்
தக்கன்வேள்விதகர்த்த -3 -5 திருஞானசம்பந்தர்
கண்ணுதலானும் -3 -7 திருஞானசம்பந்தர்
மின்னன -3 -13 திருஞானசம்பந்தர்
மண்ணிநல்ல -3 -24 திருஞானசம்பந்தர்
கரமுனம்மலராற் -3 -37 திருஞானசம்பந்தர்
சந்தமார்முலை -3 -43 திருஞானசம்பந்தர்
இறையவனீ -3 -56 திருஞானசம்பந்தர்
சுரருலகு -3 -67 திருஞானசம்பந்தர்
எந்தமது -3 -75 திருஞானசம்பந்தர்
சங்கமருமுன் -3 -81 திருஞானசம்பந்தர்
பெண்ணியலு -3 -84 திருஞானசம்பந்தர்
விண்ணவர்தொழு -3 -94 திருஞானசம்பந்தர்
கரும்பமர் -3 -100 திருஞானசம்பந்தர்
வரமதே -3 -110 திருஞானசம்பந்தர்
உற்றுமைசேர் -3 -113 திருஞானசம்பந்தர்
யாமாமாநீ -3 -117 திருஞானசம்பந்தர்
மின்னியவர -3 -118 திருஞானசம்பந்தர்
பார்கொண்டு -4 -82 திருநாவுக்கரசர்
மாதியன்று -5 -45 திருநாவுக்கரசர்
சாதலும்பிறத் -7 -58 சுந்தரர்
திருவளர் பவளப் -11 -27 பட்டினத்தடிகள்
முகவரி: சீர்காழி அஞ்சல்
சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609110
தொபே. 04364 270235
மயிலாடுதுறை - சிதம்பரம் பாதையில் சீகாழி தொடர்வண்டி நிலையத்திற்குக் கிழக்கே சுமார் 1.5.கி.மீ தூரத்தில் இருக்கின்றது.
மயிலாடுதுறை - சிதம்பரம் பேருந்துச் சாலையில் உள்ளது. இது காவிரிக்கு வடகரையில் பதினான்காவது தலமாகும்.
பிரமபுரத்தில்: இறைவரது திருப்பெயர் பிரமபுரீசுவரர். இறைவியாரது திருப்பெயர் திருநிலைநாயகி.
தோணிபுரத்தில்: இறைவரது திருப்பெயர் தோணியப்பர். இறைவியாரது திருப்பெயர் பெரியநாயகி.
தீர்த்தம் பிரமதீர்த்தம். இது வடக்குக்கோபுரவாயிலுக்குத் தென்கிழக்கில், திருநிலை அம்மையார் கோயில் திருமுன்புள்ளது. திருஞானசம்பந்தப் பெருந்தகையார்க்கு ஞானப்பால் ஊட்டப் பெற்றது இத்தீர்த்தக்கரையில்தான்.
இதுவன்றி, சூலதீர்த்தம், ஆனந்ததீர்த்தம், காளிதீர்த்தம், வைணவதீர்த்தம், இராகு தீர்த்தம், ஆழிதீர்த்தம், சங்கதீர்த்தம், சுக்கிரதீர்த்தம், பராசரதீர்த்தம், அகத்தியதீர்த்தம், கௌதமதீர்த்தம், வன்னி தீர்த்தம், குமாரதீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கேதுதீர்த்தம், அண்டதீர்த்தம், பதினெண்புராணதீர்த்தம், புறவநதி, கழுமலநதி, விநாயகநதி என்னும் தீர்த்தங்கள் இருக்கின்றன.
திருஞானசம்பந்தப் பெருந்தகையார் திரு அவதாரஞ் செய்தருளப் பெற்ற பதி இது. அவர் மூன்றாம் ஆண்டில் நீராடச் சென்ற தந்தையாருடன் சென்று, பிரமதீர்த்தக்கரையில் பசித்திருக்க அம்மையப்பரால் ஞானப்பால் ஊட்டப்பெற்ற பெருமை வாய்ந்தது. ஞானசம்பந்தப் பெருந்தகையாருடைய பெருமையைக் கேள்வியுற்ற திருநாவுக்கரசு நாயனார் சீகாழிக்கு எழுந்தருளிவந்து அவரை வணங்கி அவருடைய நட்பைப் பெற்றதோடு அவரால் அப்பர் என்னும் திருநாமத்தைப் பெற்ற சிறப்புடைய பதி இது.
சுந்தரமூர்த்தி நாயனார் சீகாழிக்கு எழுந்தருளியபோது, இது ஞானசம்பந்தப் பெருந்தகையார் அவதரித்த திருப்பதி என்று மிதித்தற்கு அஞ்சி நகர்ப்புறத்து நின்று பாட இறைவர் அங்குக் காட்சி தரக்கண்ட பெருமை வாய்ந்தது.
திருநீலகண்டயாழ்ப்பாணர் எழுந்தருளி ஆளுடைய பிள்ளையாரை வணங்கி அவருடைய பதிகங்களை யாழிலிட்டு வாசித்து அவருடன் இருக்கும் பெருமை பெற்றது. கணநாத நாயனார் அவதரித்த திருப்பதியும் இதுவே.
இத்தலத்தில் திருத்தோணியப்பர் பக்குவ ஆன்மாக்களுக்கு உபதேசம் புரிந்து சிவஞானச்செல்வத்தை அளிப்பதற்குக் குரு வடிவமாய் அமைந்திருக்கின்றார். பஞ்சகிருத்தியங்களைச் செய்தருளுதற்குப் பிரமபுரீசுவரர் மூலலிங்கமாய் எழுந்தருளியிருக்கிறார்.
திருத்தோணிக்குத்தென்பால் சட்டைநாதர் பேரின்ப சித்திகளை அருளுதற்பொருட்டுச் சங்கமவடிவாய் விளங்குகின்றார். ஆதலால் இது குருலிங்கசங்கம பதியாய்ச் சிறந்து விளங்கும் பெற்றிவாய்ந்தது.
சந்திரன், முருகவேள், ஆதிசேடன் முதலானவர்களும் பூசித்துப் பேறு பெற்ற சிறப்பினையுடையது. மூவர் முதலிகள் பாடிய எழுபத்தொரு பதிகங்களை உடைய தனிச்சிறப்பு இப்பதிக்கு உரியதாகும்.
இக்காழியில் முக்கிய தெய்வமாக விளங்குகிறவர் சட்டைநாத சுவாமி. இவரது மூர்த்தம் சிவமூர்த்தங்களுள் ஒன்று. இரணியனைக் கொன்ற நரசிங்கத்தைத் தடிந்து அதன் தோலைச் சட்டையாகப் போர்த்துக்கொண்ட காரணத்தால் இவர் இப்பெயர்பெற்றார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமைதோறும் அர்த்த சாமத்தில் இவருக்குச் சிறந்த வழிபாடு நடைபெற்றுவருகிறது.
இங்கு வடுகநாதருக்கு நித்தியபூசையும், வெள்ளிக்கிழமை தோறும் நைமித்திகபூசையும், சித்திரைமாதத்துப் பரணியில் விசேட பூசைகளும் நடைபெற்றுவருகின்றன.