சைவாகமங்களின் உளவாகிய நாற்பாதங்களுள் வைத்து ஞானபாதத்தோதிய பொருள்களை ஆராயும் ஆராய்ச்சி இந்நூலின்கண்எடுத்துக்கொள்ளப்பட்டது.இது கேட்டலுறுவார்க்கு இதனாற் போந்த பயன் யாதோவெனவும், இது கேட்டற்குரியார் யாவரெனவும், இதனால் நுதலப்படும் பொருள் யாதெனவும், இதனைப் பயப்பிக்குங் கருவியாய் இதற்குமுன் ஒருதலையான் உணர்தற்பாலது யாதெனவும், இதனை வழங்குதற்கிட்டபெயர் யாதெனவும், இஃது யாண்டு வழங்குவதெனவும், இதன் முதனூல் யாதெனவும், இந்நூல் செய்தார் யாவரெனவும், பலவாற்றான் ஆசங்கை நிகழுமன்றே; அவ்வாசங்கை நீங்கி மனவெழுச்சி சேறற்பொருட்டு இந் நூன்முகத் துரைக்கப் படுவதாகிய சிறப்புப் பாயிரம் :