நாவுக்கரசர் திருப்புகலூரிலே திருத்தொண்டு செய்து பெருங்காதலுடன் வைகும் நாளில் மொழிந்த எண்ணிறந்த வண்டமிழ் மாலைகளுள் ஒன்று, பேரருளின் கடல் அளிக்கும் பெருமானைப் பாடிய இத்திருப்பதிகம். (தி.12 பெரிய பு. 415).
×
இக்கோயிலின் படம்
×
இக்கோயிலின் காணொலி
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001. 0425 2333535, 5370535. தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
அடியேன் மருளுகின்ற மயக்கமும் ஆசையும் உடைய மனத்தை உடையேனாய் அறிவில்லாதேனாய் மயங்கினேன். அஞ்ஞானத்தைப் போக்கும் எம்பெருமானுடைய திருவடி நிழல் என்னும் விரும்பிப் பெறவேண்டிய அருளைப் பெறாமல் பயந்து அஞ்சினேனாக, அத்தகைய அடியேனுக்கு எம் பெருமான் மெய்ப் பொருளிடத்து ஆசையை நல்கிய அளவில் அஞ்ஞான இருட்பொழுது நீங்கி ஞானஒளிபரவும் பகற்பொழுது தோன்றிவிட்டது.
குறிப்புரை:
நான் மருளும் அவாவும் உடைய மனத்தினேன் ஆகி, அம் மருளால் விளைவதும் அவ் வவாவை விளைப்பதுமான மயக்கத்தை உற்றேன். மருளும் மயக்கமும் அவாவும் முறையே ஒன்றற்கொன்று ஏதுவும் பயனுமாகும். மயக்கத்திற்கு ஏது மருள். அவாவிற்கு ஏது மயக்கம். மருளின் பயன் மயக்கம். அதன் பயன் அவா. அவா, மயக்கம், மருள் மூன்றும் மதியிலார் பால் நீங்கா திருப்பன. மதியுடையார்பால் ஒழிதற்பாலன. மருள் x தெருள்; இறுள் x ஒளி, தெருள் - தெளிவு. அருள், அறிவு, உணர்வு என்பன ஒரு பொருளன. சிவப்பிரகாசம் 70.75 பார்க்க. மருள் இருள் மயக்கம் என்பன வெவ்வேறு பொருளனவாயிருந்தும், ஒரு பொருளனவாக ஆளப்படுகின்றன. மருள வாமனம் அருளவாவுயிர். மனத்திற்கு மருள் இயல்பு. சார்ந்ததன் வண்ண மாதற்கண் உயிர்க்கு எய்தும் பேரா வியற்கையே அருள். அருளவாப்பேறு. மருளவா வியல்பு. எந்தை யிணையடி நீழல் வேறு அருள் வேறு அன்று. `அடிநீழல் என்னும் அருள்` என்னும் தொடரை நன்குணர்வார்க்குத் திருவடி நிழல் என்பது விளங்காதிராது. அத்திருவடி இருளவாவை அறுக்கும். இருளவா - பாசப்பற்றும் பசுப்பற்றும். அறுக்கும். அடி:- `பற்றை அறுப்பதோர் பற்று`; அறுக்கும் அடி. அறுக்கும் அருள். அருளை அவாவுதல் அருளவா. அவாவைப் பெறுதல் - அவாப் பெறுதல். பெறுதல் இன்றி - பெறாது. நான் அருளவாப் பெறுதல் இன்றி அஞ்சி அலமந்தேன். அலமந்தேற்கு = அலமந்தேனுக்கு. அலமந்த எற்கு என்றதன் மரூஉவு மாம். பொருள் அவா - பொருட்பற்று. தந்தவாறே - கொடுத்த வண்ணமே. போது - பொழுது; மரூஉ. போய்ப் புலர்ந்தது - சென்று விடிந்தது. அஞ்சி அலமந்தேன். அலமந்தேனுக்குப் பொருளவாத் தந்த வாறே போழ்து போய்ப் புலர்ந்தது. `இணையடி நீழலென்னும் அருள்` என்றதால் அடியும் அருளும் ஒன்றாமாறு புலனாகும்.
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
×
తెలుగు / தெலுங்க
నేను మరులుకొను మనసుతో ఆశకు లోబడి బుద్ధిహీనుడైతి
జ్ఞానమౌ శివుపదముల నీడ చేరక భయభ్రాంతుడైతి
నను చేరదీసి దాసునిగా చేకొని స్వామి అజ్ఞానమును పోగొట్టగ
తన దయతో చీకటి పోయి జ్ఞాన వెలుగులు ప్రసరించినవి
అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
मैं मोह-माया से पीडि़त हूँ।
इस कारण मदहोष मतिभ्रष्ट पड़ा हूँ।
अज्ञान रूपी अंधकार में पड़ा हँू।
प्रभु इस अज्ञान-अंधकार को,
मोह-लालच को दूर करने वाले हैं।
मैं प्रभु के श्रीचरणों की छाया मंे
कृपा पाने में असमर्थ होकर
डर से दुःखी हो रहा हूँ।
तब शाष्वत उस परब्रह्म स्वरूप प्रभु ने ही
मुझे अपना कर कृपा प्रदान की।
मैं गद्गद् हो गया।
रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
×
संस्कृत / வடமொழி
Under construction. Contributions welcome.
×
German/ யேர்மன்
Under construction. Contributions welcome.
×
français / பிரஞ்சு
Under construction. Contributions welcome.
×
Burmese/ பர்மியம்
Under construction. Contributions welcome.
×
Assamese/ அசாமியம்
Under construction. Contributions welcome.
×
English / ஆங்கிலம்
I who had no discerhment
was confused having a mind filled with ignorance and hankering after wordly pleasure.
without desiring the grace which is the protection afforded by the twin feet of our father who completed destroys ignorance and desires.
for me who feared and reeled in my mind.
as he gave me the desire for real things, the night passed off and the day dawned.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)
マルラヴァー マナタ・タ ナーキ マヤニ・キネーニ・ マティヤ ラーテーニ・
イルラヴァー ヴァルク・ク メニ・タイ ヤナイヤティ ニーラレ ニ・ヌミ・
アルラヴァーピ・ ペルタ リニ・リ ヤニ・チナー ナラマニ・ テーリ・クピ・
ポルラヴァータ・ タニ・タ ヴァーレー ポートゥポーヤ・ピ・ プラリ・ニ・タ タニ・レー
Open the Japanese Section in a New Tab
×
Chinese Pinyin / சீனம் பின்யின்
marulafa manadda nahi mayangginen madiyi laden
irulafa faruggu mendai yinaiyadi nilale nnuM
arulafab beruda lindri yandina nalaman dergub
borulafad danda fare boduboyb bularnda dandre
Open the Pinyin Section in a New Tab