தேனின் தெளிவானவனே! சிவபிரானே! திருப் பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவனே! அளவு இல்லாத பதவிகள் எல்லாவற்றையும் கடந்து நின்ற ஆனந்தமே! என்னுடைய அன்பு உருவமே! பகைத்து, என்னை மயக்கச் செய்யும் வஞ்சனையைச் செய்கின்ற ஐம்புலன்களின், வாயில்களையும் அடைத்து அமுதமே சுரந்து நின்று என்னகத்தே தோன்றுகின்ற ஒளியே! உன்னை நான் உள்ளவாறு காணும்படி வந்தருள்வாயாக.
குறிப்புரை:
மாறிநின்று - தம்முள் ஒன்றோடு மற்றொன்று மாறுபட்டு நின்று; என்றது, `ஒன்று வந்து பற்றும்பொழுது, மற்றொன்று அதனை விலக்கி வந்து இவ்வாறு இடையறாது சூழ்ந்து` என்றபடி. இதற்கு இவ் வாறன்றி, `என்னோடு பகைத்து நின்று` என உரைப்பின், ``மயக்கிடும்`` எனவும் ``வஞ்சம்`` எனவும் வருவனவற்றாற் பெறப்படுவதற்கு வேறாய்ப் பெறப்படுவது ஒன்று இன்மை அறிக. வஞ்சம், அற்றம் பார்த்து வருதல். ``ஒருவனை வஞ்சிப்பதோரும் அவா`` (குறள்-366) என்றதும் காண்க. ``வழி`` என்றது, பொறிகளை; ``பொறிவாயில் ஐந்து`` என்றது காண்க (குறள்-6). ``அமுது`` என்றது, அதன் இன்பம் போலும் இன்பத்தை. ``அமுதே`` என்ற ஏகாரம், பிரிநிலை. ``ஊறி நின்று`` என்றதனை, `ஊறி நிற்க` எனத் திரிக்க. எழுதல் - தோன்றி வளர்தல். ஆசான் மூர்த்தியாய் வந்து ஆட்கொண்ட கோலம், இறைவனது இயற்கைக் கோலம் அன்றாதலின், இயற்கைக் கோலத்தில் காணுதலை, ``உள்ளவா காணுதல்`` என்றார். இக்காட்சி, சிவலோகத்தே காணப்படும்.
`சிவலோகம் அல்லது சிவபுரம்` என்பது, சுத்த தத்துவ புவனங்கள், அனைத்திற்கும் பெயர். இப்புவனங்கள் ஏனைய அசுத்த தத்துவ புவனங்கட்கு உள்ளீடாய் அவற்றோடு உடன் நிற்பனவும், அவை அனைத்திற்கும் மேலாய் அவற்றைக் கடந்து நிற்பனவும் என இரு கூறுபட்டு நிற்கும். அவ் இருகூற்றுள், அசுத்த தத்துவ புவனங் களோடு உடனாய் நிற்கும் சிவலோகம், `பதமுத்தித் தானம்` என்றும், அவற்றிக்கு அப்பாற்பட்டு நிற்கும் சிவலோகம், `அபரமுத்தித் தானம்` என்றும் சொல்லப்படும். அவற்றுள் பதமுத்தித்தானம், `சரியை, கிரியை, யோகம்` என்னும் மூன்று நிலைகளின் நின்றோர் சென்று அடையும் இடமும், அபரமுத்தித்தானம், ஞானத்தில், `கேட்டல், சிந்தித்தல், தெளிதல்` என்னும் நிலைகளில் நின்றோர் சென்று அடையும் இடமுமாம். நிட்டையை அடைந்து மீளாது நின்றோர், இவை அனைத்தையும் கடந்து சிவனோடு இரண்டறக் கலப்பர்.
நிட்டையிலே நிலைத்து நில்லாது மீட்சி எய்துவோர், அபரமுத்தித் தானத்திற் சென்று தடத்த சிவனை அடைந்து, அவனது அருள் வழியே பின்னர்ச் சொரூப சிவனை அடைவர், பதமுத்தித் தானத்தை அடைந்தோர் தாம் செய்த சரியை முதலியவாகிய தவத்தின் வன்மை மென்மைகட்கு ஏற்ப அங்கு நின்றே ஞானத்தை அடைந்து, அபரமுத்தி, பரமுத்திகளில் ஏற்ற பெற்றியாற் செல்லுதலும், மீள இந்நிலவுலகிற் பிறந்து ஞானத்தை அடைந்து, கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்பவற்றால் பின்னர் அபரமுத்தி, பரமுத்தி களை அவ்வாற்றான், அடைதலும் உடையராவர். அபரமுத்தித் தானத்தை அடைந்தோருள் அசுத்தவுலகை நோக்குவோர் அரியராக லின், அவர்க்குப் பிறப்பு உண்டாதல் மிகச் சிறுபான்மையே. `அபர முத்தர்க்குப் பிறப்பில்லை` என்பதும் பெரும்பான்மை பற்றியேயாம். ஆயினும் நிட்டை கூடாதவழி, அசுத்த உலகை நோக்கும் நோக்கு ஒழியாது ஆகலானும், அந்நோக்கினை, கேட்டல் முதலிய மூன்று ஞானங்களும் மெலிவித்தலும், கெடுத்தலும் பெரும்பான்மை யாயினும், சிறுபான்மை அது தப்புதலும் கூடுமாகலின், பிறத்தல் அவர்க்கும் சிறுபான்மை உளதேயாம்.
`காண அருளாய்` என இயையும். வந்து - மீளத் தோன்றி, தேறல் - தேன். தெளிவு - வடித்தெடுத்து. ஈறிலாப் பதங்கள் - அள வில்லாத உலகங்கள். ``ஈறிலா`` என்றதனை, இன்பத்திற்கு அடை யாக்குவாரும் உளர். ``யாவையும்`` என்றதனால், அபர முத்தித் தானமாகிய சுத்த மாயா புவனங்களும் அடங்கின. `இவை அனைத்தை யும் கடந்த இன்பம்` என்றதனால், அது பரமுத்தி இன்பமாதல் வெளிப்படை. இவ்வின்பத்தைப் பயக்கும் அன்பு, `காண்பான், காட்சி, காட்சிப்பொருள்` என்னும் வேற்றுமை தோன்றாது காட்சிப் பொருளாகிய சிவம் ஒன்றே தோன்ற நிற்கும் அதீத நிலைக்கண்ண தாகிய பேரன்பாகலின், அதனை இறைவனின் வேறாக அருளாது. ``என்னுடைய அன்பே`` என, ஒன்றாகவே அருளிச்செய்தார். எனவே,
அன்பு சிவம்இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவதும் ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.
(தி.10 திருமந்திரம் - 270.) என்றருளிய அன்பும் இதுவேயாதல் பெறப்பட்டது.
அடிகள் இறைவனை இவ்வாறு விளித்தமையால் அவர் விரும்பியது பரமுத்தி இன்பத்தையன்றி வேறொன்றையன்று என்பது தெள்ளிதாதலின், அவர் பலவிடத்தும் தமக்குத் தருமாறு வேண்டும். சிவலோகம் அல்லது சிவபுரம் என்பது, அபரமுத்தித்தானத்தையன்றிப் பதமுத்தித் தானத்தையன்றென்பது இனிது விளங்கும். அன்னதா யினும், அடிகள் பரமுத்தியை வேண்டாது, அபர முத்தியையே வேண்டுதல் என்னையெனின், திருப்பெருந்துறையில் தம்மோடு உடன் இருந்து அருள்பெற்ற அடியார்கள் பலரும் அடைந்தது அபர முத்தியே என்னும் கருத்தினால், தமக்கும் அதுவே தரற்பாலது என்னும் உணர்வினாற்போலும் என்க. அபரமுத்தித் தானத்தில் அடை யும் நிலைகள் வாளா, `சாலோகம், சாமீபம், சாரூபம்` எனக் கூறப் படாது, `சுத்த சாலோகம், சுத்த சாமீபம், சுத்த சாரூபம்` என வேறு வைத்துக் கூறப்படும்; அந்நிலையே அடிகளால் குறிப்பிடப்படுவது என்க. அதனை அடிகள் வேண்டுவதும் அவற்றில் உள்ள விருப் பத்தால் அன்று; அதனையடைந்துவிடின், பின்னர்ப் பிறப்பில்லையாய் ஒழியும் என்னும் துணிவினாலேயாம் என்க.
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
తెలుగు / தெலுங்கு
ಕನ್ನಡ / கன்னடம்
മലയാളം / மலையாளம்
චිඞංකළමං / சிங்களம்
Malay / மலாய்
हिन्दी / இந்தி
संस्कृत / வடமொழி
German/ யேர்மன்
français / பிரஞ்சு
Burmese/ பர்மியம்
Assamese/ அசாமியம்
English / ஆங்கிலம்
తిరువాసహం-కోయిల్ తిరుప్పదిహం
తేనెవలే స్పష్టతతోకూడియుండువాడా! తిరుప్పెరుందురై దివ్యస్థలమందు వెలసియున్నవాడా! ఓ పరమేశ్వరా! ఎల్లలు లేనటువంటి పదవులన్నింటినీ వీడనాడి నిలిచియుండు ఆనందస్వరూపమే! నాయొక్క ప్రేమస్వరూపుడా! శతృత్వమువహించి నన్ను సమ్మోహనానికి లోబడునట్లుచేసి, వంచనకు గురిచేయుచున్న పంచేంద్రియముల ద్వారములను మూసివేసి, అమృతమును స్రవింపజేయుచు నిలిచియుండు తలపులతో కనిపించుచండు ఓ జ్యోతిస్వరూపమే! నిన్ను ఉన్నపళంగానే దర్శించుకొనుటకు వచ్చిన నన్ను అనుగ్రహించుము!
అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
22. ಕೋಯಿಲ್ ತಿರುಪ್ಪದಿಗಂ (*ದೇವಾಲಯದ ತಿರುಪ್ಪದಿಗಂ)
ಅನುಭೋಗ ಲಕ್ಷಣ
(* ದೇವಾಲಯವನ್ನು ಕುರಿತದ್ದನ್ನು ಹಿಂದಿನ ಪದಿಗಂನಲ್ಲಿ ಹೇಳಲಾಗಿದೆ. ಇದರಲ್ಲಿ ಭಕ್ತರ ಅನುಭವವನ್ನು ವಿವರಿಸುವುದರಿಂದ ಇದಕ್ಕೆ ಅನುಭೋಗಲಕ್ಷಣ ಎಂದು ಪುರಾತನರು ಹೇಳಿದ್ದಾರೆ. ಇದು ತಿಲ್ಲೈ ಸುಕ್ಷೇತ್ರದಲ್ಲಿ ಅನುಗ್ರಹಿಸಿ ರಚಿಸಲಾಗಿದೆ.)
ಜೇನಿಗಿಂತಲೂ ಸವಿಯಾದವನೇ! ಶಿವ ಪರಮಾತ್ಮನೇ! ಶ್ರೀ ಪೆರುಂದುರೈನಲ್ಲಿ ನೆಲೆಸಿರುವ ಶಿವನೇ! ಅಪರಿಮಿತವಾದ ಪದವಿಗಳೆಲ್ಲವನ್ನೂ ಮೀರಿ ನಿಂತ ಆನಂದವೇ! ನನ್ನ ಪ್ರೀತಿ ಸ್ವರೂಪನೇ! ನನ್ನ ಮೇಲಿನ ಹಗೆಯಿಂದ ವಂಚನೆ ಮಾಡುತಿರುವ ಪಂಚೇಂದ್ರಿಯಗಳ ಬಾಗಿಲುಗಳನ್ನು ಮುಚ್ಚಿ ಅಮೃತಧಾರೆಯ ಹರಿಸಿ ನನ್ನಂತರಂಗದಿ ಶೋಭಿಸುವ ಕಾಂತಿಯೇ; ನಿನ್ನ ದರ್ಶನವ ಎನಗೆ ನೀಡಿ ದಯೆ ತೋರು.
मधुरे मधु स्वरूप! षिव महादेव!
तिरुप्पेॅरुंतुरै में प्रतिश्ठित प्रभु!
अनन्त पार आनन्द स्वरूप! मेरे प्रियतम!
मुझे सन्मार्ग से हटाकर अन्यत्र चलने के लिए
प्रेरित करनेवाली वंचक पंचेन्द्रियों के द्वार बन्द कर
मेरे चित्त में अमृत स्त्रोत बनकर,
हृदय में स्थित परं ज्योति स्वरूप!
अपने सत्य-स्वरूप को पहचानने की कृपा प्रदान करो।
KOYIRTIRUPPATIKAM
LOBPREIS AUF DEN TEMPEL
DIE CHARAKTERISTIKA DES (SELIGKEIT) GENUSSES
Kundgegeben in Chidambaram
Versperre den Weg meinen Sinnen,
Die da trügen, die mich hassen,
Die mich in Verwirrung bringen!
O köstlicher Nektar, fließe!
O du vollkommenes Licht,
Licht meines Herzens, komm’ zu mir!
Komm’, o erleuchte mich,
Daß ich dich in Wahrheit erkenne!
Der du süßer bist als Honig,
O Šivaperumān, o Šiva,
De du wohnest, du mein Licht,
In Tirupperunturai!
O du ewige Seligkeit,
Jenseits stehest du
Von den Stufenseligkeiten
O Šiva, du meine Liebe!
O pure Essence of Honey! God Siva ! O Siva who abides
In the sacred Perunturai ! O Bliss that transcends
All the endless beatitudes ! O my Love !
Having barred the ways of the five deceptious senses
Which, in hostility, delude me, You – O Supernal
Splendour, arise from within me like unto Nectar
That wells up. May You be pleased, in all grace,
To reveal Yourself unto me as You truly are.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995
பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration
𑀢𑀫𑀺𑀵𑀺 / தமிழி
গ্রন্থ লিপি / கிரந்தம்
வட்டெழுத்து /
Reformed Script / சீர்மை எழுத்து
देवनागरी /
தேவநாகரி
ಕನ್ನಡ / கன்னடம்
తెలుగు / தெலுங்கு
සිංහල / சிங்களம்
മലയാളം / மலையாளம்
ภาษาไทย / சீயம்
မ္ရန္မာစာ / பர்மியம்
かたかな / யப்பான்
Chinese Pinyin / சீனம் பின்யின்
عربي / அரபி
International Phonetic Alphabets / ஞால ஒலி நெடுங்கணக்கு
マーリニニ・ レニ・ニイ マヤク・キトゥミ・ ヴァニ・サピ・
プラニイニ・ティニ・ ヴァリヤタイタ・ タムテー
ウーリニニ・ レニ・ヌリ・ エルパラニ・ チョーティ
ウリ・ラヴァー カーナヴァニ・ タルラアヤ・
テーラリニ・ テリヴェー チヴァペル マーネー
ティルピ・ペルニ・ トゥリイユリイ チヴァネー
イーリラーピ・ パタニ・カリ・ ヤーヴイユニ・ カタニ・タ
イニ・パメー エニ・ヌタイヤ アニ・ペー
Open the Japanese Section in a New Tab
marinindrennai mayaggiduM fandab
bulanaindin faliyadaid damude
urinindrennul elubaran sodi
ullafa ganafan darulay
deralin delife sifaberu mane
dirubberun duraiyurai sifane
irilab badanggal yafaiyung gadanda
inbame ennudaiya anbe
Open the Pinyin Section in a New Tab