दानकर्ता दान कीजिए
12. நெஞ்சுவிடுதூது
001 कलिवॆण्बा
 
इस मन्दिर का चलचित्र                                                                                                                   बंद करो / खोलो

 

Get Flash to see this player.


 
काणॊलित् तॊहुप्पै अऩ्बळिप्पाहत् तन्दवर्गळ्
इराम्चि नाट्टुबुऱप् पाडल् आय्वु मैयम्,
५१/२३, पाण्डिय वेळाळर् तॆरु, मदुरै ६२५ ००१.
0425 2333535, 5370535.
तेवारत् तलङ्गळुक्कु इक् काणॊलिक् काट्चिहळ् कुऱुन्दट्टाह विऱ्पऩैक्कु उण्डु.


 
पद्य : 1
पद्य संख्या : 1

பூமேவும் உந்திப் புயல்வண்ணன் பொற்பதுமத்
தார்மேவும் மார்பன் சதுமுகத்தோன் - தாம்மேவிப்
பன்றியும் அன்னமுமாய்ப் பாரிடந்தும் வான்பறந்தும்
என்றும் அறியா இயல்பினான் - அன்றியும்
இந்திரனும் வானோரும் ஏனோரும் எப்புவியும்
மந்தர வெற்பும் மறிகடலும் - மந்திரமும்
வேதமும் வேத *முடிவின்விளை விந்துவுடன்
நாதமுங் காணா நலத்தினான் - ஓத
அரியான் எளியான் அளவிறந்து நின்ற 5
பெரியான் சிறியான்பெண் பாகன் - தெரியா
அருவான் உருவான் அருவுருவ மல்லான்
மரியான் மரிப்பார் மனத்தான் - பரிவான
மெய்யர்க்கு மெய்யன் வினைக்குவினை யாயினான்
பொய்யர்க்குப் பொய்யாய பொய்யினான் - ஐயன்
படநாகம் பூண்ட பரமன் பசுவி
னிடமாய் நிறைந்த இறைவன் - சுடரொளியான்
என்றுமுளன் அன்றளவும் யானும் உளனாகி
நின்றநிலை யிற்றரித்து நில்லாமற் - சென்றுசென்று
தோற்றியிடும் அண்டசஞ் சுவேதசங்கள் பாரின்மேற் 10
சாற்றும்உற் பீசஞ் சராயுசங்கட் - கேற்றபிறப்
பெல்லாம் பிறந்தும் இறந்தும் இருவினையின்
பொல்லாங்கு துய்க்கும் பொறியிலியேன் - கல்லா
உணர்வின் மிசையோ டுலகா யதனைப்
புணர்வதொரு புல்லறிவு பூண்டு - கணையிற்
கொடிதெனவே சென்று * குடிப்பழியே செய்து
கடிய கொலைகளவு காமம் - படியின்மிசைத்
தேடி யுழன்று தெரிவைத் தெரியாமல்
வாடி இடையும் மனந்தனக்கும் - நாடிஅது
போன வழிபோகும் புந்திக்கும் புந்தியுடன் 15
ஆன திறலார் அகந்தைக்கும் - மேனி
அயர அயர அழிய அழியும்
உயிரின் துயரம் உரையேன் - வயிரமே
கொண்டதொரு காமனுக்குங் கோபனுக்கும் மோகனுக்கும்
மண்டு மதமாச் சரியனுக்குந் - திண்டிறல்சேர்
இந்திரியம் பத்துக்கும் ஈரைந்து மாத்திரைக்கும்
அந்தமிலாப் பூதங்கள் ஐந்துக்குஞ் சிந்தைகவர்
மூன்றுகுற்றம் மூன்றுகுணம் மூன்றுமலம் மூன்றவத்தை
ஏன்றுநின்று செய்யும் இருவினைக்குந் - தோன்றாத
வாயுஒரு பத்துக்கும் மாறாத வல்வினையே 20
யாய கிளைக்கும் அருநிதிக்கும் - நேயமாம்
இச்சை கிரியை யிவைதரித்தங் கெண்ணிலா
அச்சங் கொடுமை யவைபூண்டு - கச்சரவன்
சீரில்நிலை நில்லாது திண்டாடும் பல்கருவி
வாரில்அகப் பட்டு மயங்கினேன் - தேருங்கால்
உன்னை ஒழிய உறவில்லை என்னுமது
தன்னை அறிவை தனியறிவை - முன்னந்
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றையவ ரென்று - நிலைத்தமிழின்
தெய்வப் புலமைத் திருவள் ளுவர்உரைத்த 25
மெய்வைத்த சொல்லை விரும்பாமல் - ஐவர்க்கும்
ஆவதுவே செய்தங் கவர்வழியைத் தப்பாமற்
பாவமெனும் பௌவப் பரப்பழுந்திப் - பூவையர்தம்
கண்வலையிற் பட்டுக் கலவிக் கலைபயின்றங்(கு)
உண்மை நிலையுணர்ச்சி ஓராமல் - திண்மையினால்
நாவிற் கொடுமை பலபிதற்றி நாடோறுஞ்
சாவிற் பிறப்பில் தலைப்பட்டிங் - காவிநிலை
நிற்கும்வகை பாராய் நிலையான நெஞ்சமே
பொற்பினுடன் யானே புகலக்கேள் - வெற்பின்மிசை
வந்திருக்க வல்லான் மதியாதார் வல்அரணம் 30
செந்தழலில் மூழ்கச் சிரித்தபிரான் - அந்தமிலா
வேத முடிவில் விளைவில் விளைவிலொளி
ஆதி யமலன் நிமலனருட் - போத
அறிவி லறிவை அறியு மவர்கள்
குறியுள் புகுதுங் குணவன் - நெறிகொள்
வெளியில் வெளியில் வெளியன் வெளியில்
ஒளியில் ஒளியில் ஒளியன் - ஒளியில்
அளியில் அளியில் அளியன் அளியில்
அளவில் அளவில் அளவன் - அளவிறந்து
நின்றான் அனைத்தும் நிறைந்தான் நினைப்பவர்பாற் 35
சென்றான் தெரியத் தெரியாதான் - குன்றா
விளக்காய் நிறைந்த விரிசுடரான் மண்மேல்
துளக்காமல் நின்றபெருஞ் சோதி - உளக்கண்ணுக்
கல்லாது தோன்றா அமலன் அகிலமெலாம்
நில்லாமல் நின்ற நிலையினான் - சொல்ஆரும்
ஈசன் பெருமை இருவினையேன் இன்றுனக்குப்
பேசுந் தகைமையெலாம் பேணிக்கேள் - பாசம்
பலவுங் கடந்து பரிந்தருள்சேர் பண்பாற்
குலவி விளங்குகுணக் குன்றோன் - இலகவே
செய்ய தருமச் செழுங்கிரியின் மீதிழிந்து 40
வையம் பரவ மகிழ்ந்தெழுந்தங் - கையங்
களவுபயங் காமங் கொலைகோபங் காதி
அளவில்வினை யெல்லாம் அழித்திங் - குளமகிழத்
தொம்மெனவே எங்கும் முழங்கிச் சுருதிபயில்
செம்மைதரும் ஆகமங்கள் சேர்ந்தோடி - மும்மலத்தின்
காடடங்க வேர்பறித்துக் கல்விக் கரைகடந்தங்(கு)
ஓடுபல் பூதத் துணர்வழித்து - நீடுபுகழ்
மெய்வாய்கண் மூக்குச் செவியென்னப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை யவாஅகற்றி - நையும்இயல்
வாக்குப்பா தம்பாணி பாயுருபத் தம்பலவும் 45
நீக்கிச் செறிந்து நிறைந்தோடிப் - போக்கரிய
பந்தமெனுஞ் சோலை பறித்துப் பரந்தலைக்கும்
அந்தமனம் புத்தியுடன் ஆங்காரம் - சிந்திவிழ
மோதி அருணீர்மை ஓங்கிவிறல் முக்குணமுங்
காதி உரோமமெலாங் கைகலந்து - சீதப்
புளகம் அரும்பப் புலன்மயக்கம் போக்கி
விளைவில் புலன்முட்ட மேவிக் - களபதன
மாதர் மயக்கம் அறுத்துவளர் மண்டலத்துச்
சோதியொரு மூன்றினையுஞ் சோதித்து - நீதியினால்
ஆதாரம் ஆறினுஞ்சென் றாறிஅடல் வாயுக்கள் 50
மீதான பத்தும் மிகப்பரந்து - காதிப்
பிருதிவியப் புத்தேயு வாயுஆ காய
உறுதி நிலமைந்தும் ஓடி - மறுவிலா
நான்முகன்மால் ஈசன் மகேசன் நலஞ்சிறந்த
தான்முகம் ஐந்தாஞ் சதாசிவமும் - ஆனதொரு
விந்துநா தங்கடந்து சுத்த வெறுவெளியில்
அந்தமிலாப் பாழடங்கத் தேக்கியபின் - முந்திவரும்
அவ்வறிவுக் கப்பாலுஞ் சென்றகண்டம் உள்ளடக்கிச்
செவ்வறிவே யாகித் திகைப்பொழிந்திட் - டெவ்வறிவுந்
தானாய வீடளித்துத் தன்னிற் பிறிவிலா 55
ஊனாகி எவ்வுயிர்க்கும் உள்புகுந்து - மேனியிலா
அஞ்சவத்தை யுங்கடந் தாயபெரும் பேரொளிக்கே
தஞ்சமெனச் சென்று தலைப்பட்டு - வஞ்சமறத்
தான்அந்தம் இல்லாத தண்ணளியால் ஓங்கிவரும்
ஆனந்தம் என்பதோர் ஆறுடையான் - ஆனந்தம்
பண்ணும் பயன்சுருதி ஆகமங்கள் பார்த்துணர்ந்து
நண்ண அரியதொரு நாடுடையான் - எண்ணெண்
கலையால் உணர்ந்து கருத்தழிந்து காம
நிலையான தெல்லாமும் நீத்தங் - கலைவறவே
தேட்டற்ற சிந்தை சிவஞான மோனத்தால் 60
ஓட்டற்று வீற்றிருக்கும் ஊருடையான் - நாட்டத்தால்
தெண்ணீ ரருவிவிழச் சிந்தைமயக் கந்தெளிந்(து)
உண்ணீர்மை யெய்த உரோமமெலாம் - நண்ணும்
புளகம் புனைமெய் யர்பொய் யிற்கூடாமல்
உளகம்பங் கொண்டுள் உருகி - அளவிலா
மாலா யிருக்கு மவர்மனத்தை வாங்கஅருள்
மேலாய் விளங்கலங்கல் மெய்யினான் - தோலாத
வானம் புவனம் மலைகடல்ஏழ் பாதாளம்
ஊன்ஐந்து பூதத் துயிருணர்ச்சி - ஞானமாய்
எல்லாமாய் அல்லவாய் எண்ணுவார் எண்ணத்து 65
நில்லாமல் நிற்கும்நீள் வாசியான் - சொல்ஆரும்
பாதாளம் ஊடுருவிப் பாரேழும் விண்ணேழும்
ஆதார மாகி அகண்டம்நிறைந் - தோத
அரிதாய் எளிதாய் அருமறையா றங்கத்
துருவாய் உயிராய் உணர்வாய்ப் - பெரிதாய
வெய்யதுயர்ப் பாசமற வீசியே வெம்பிறவித்
துய்ய கடலைத் துகளெழுப்பி - ஐயமுறுங்
காமக் * குரோதலோப மோகமதங் காய்ந்தடர்த்துச்
சாமத் தொழிலின் தலைமிதித்து - நாமத்தாற்
கத்துஞ் சமயக் கணக்கின்விறற் கட்டறுத்துத் 70
தத்தம் பயங்கொலைகள் ஆங்கழித்தே - தத்திவரும்
பாசக் குழாத்தைப் படஅடித்துப் பாவையர்தம்
ஆசைக் கருத்தை அறவீசி - நேசத்தால்
ஆனவே கங்கொண் டருள்மும் மதத்தினால்
ஊனையார் தத்துவங்க ளுள்புகுந்து - தேனைப்
பருகிக் களித்துயர்ந்து பன்மறைநாற் கோட்டால்
மருவித் திகழ்ஞான ஆனையான் - இருமுச்
சமையங் கடந்து தனக்கொப் பிலாது
சுமைதுன்ப நீக்குந் துவசன் - கமையொன்றித்
தம்மை மறந்து தழலொளியுள் ளேயிருத்தி 75
இம்மை மறுமை இரண்டகற்றிச் - செம்மையே
வாயுவை ஓடா வகைநிறுத்தி வானத்து
வாயுவையும் அங்கே யுறஅமைத்துத் - தேயுவால்
என்றும் ஒரு தகைமை யாயிருக்கும் இன்பருளே
நின்று முழங்கும் நெடுமுரசோன் - அன்றியும்
மாலும் அயனும் வகுத்தளித்த வையமெலாஞ்
சாலும்அதற் கப்பாலும் எப்பாலும் - மேலை
யுலகும் உலகால் உணரவொண்ணா ஊரும்
இலகி நடக்கும்எழில் ஆணையான் - அலகிறந்த
காட்சியான் காட்சிக்குங் காணான் கலைஞான 80
ஆட்சியான் ஆட்சிக்கும் ஆயினான் - சூட்சியான்
பாருந் திசையும் படரொளியா லேநிறைந்தான்
தூருந் தலையுமிலாத் தோன்றலான் - வேராகி
வித்தாகி வித்தின் விளைவாகி மேவுதனுச்
சத்தாதி பூதங்கள் தானாகிச் - சுத்த
வெறுவெளியாய் பாழாய் வெறும்பாழுக் கப்பால்
உறுபொருளாய் நின்ற ஒருவன் - பொறியிலியேன்
வெம்பும் பிறவியலை வீழாமல் வீடளித்த
சம்பந்த மாமுனியென் தம்பிரான் - அம்புவியோர்
போற்றுந் திருவடியென் புன்தலைமே லேபொறித்தோன் 85
ஏற்றின் புறத்தமைந்த எங்கோமான் - சாற்றுவார்
சாற்றும் பொருளான் தனிமுதல்வன் தானல்லான்
வேற்றின்பம் இல்லா விளங்கொளியான் - போற்றுங்
குருவேட மாகிக் குணங்குறியொன் றில்லாப்
பெருவேட மாய்நிறைந்த பெம்மான் - கருவேடங்
கட்டுமுருக் கட்டறுத்தான் கற்றவர்வாழ் தில்லையான்
எட்டுமவர்க் கெட்டா இயல்பினான் - மட்டவிழ்தார்
வானோன் பவனி வரக்கண்டு வல்வினையேன்
ஏனோரும் ஏத்துதல்கண் டேத்தினேன் - தான்என்னைப்
பார்த்தான் பழையவினைப் பஞ்சமலக் கொத்தையெல்லாம் 90
நீத்தான் நினைவுவே றாக்கினான் - ஏத்தரிய
தொண்ணூற் றறுவர்பயில் தொக்கிற் றுவக்கறுத்தான்
கண்ணூறு தேனமுதங் காட்டினான் - வெண்ணீறும்
வேடமும் பூசையுமே மெய்யென்றான் பொய்யென்றான்
மாடையும் வாழ்க்கை மனையுமே - நாடரிய
அஞ்செழுத்தின் உள்ளீ டறிவித்தான் அஞ்செழுத்தை
நெஞ்சழுத்தி நேய மயலாக்கி - அஞ்செழுத்தை
உச்சரிக்குங் கேண்மை யுணர்த்தி அதன் உச்சரிப்பு
வைச்சிருக்கும் அந்த வழியாக்கி - அச்சமறச்
சென்று விளக்கை எழத்தூண்டிச் செஞ்சுடரின் 95
ஒன்றி ஒருவிளக்கின் உள்ளொளியாய் - நின்ற
பெருவிளக்கின் பேரொளியாய் உள்ளே பிரசம்
மருவும் மலர்போல் மதித்தங் - கருவினுருக்
கொள்ளா அருளைக் கொளுத்திக் குணங்குறியொன்
றில்லா இடத்தே இளைப்பாற்றி - விள்ளாத
உள்ளம் முதலாக உள்ளதெலாம் வாங்கஅருள்
வெள்ள மயலளித்து மேவினான் - கள்ளம்
மறப்பித்தான் மெய்ஞ்ஞான மாக்கிமன மெல்லாம்
இறப்பித்தான் என்பிறவி ஈர்த்தான் - விறற்சொல்லுக்
கெட்டானை யார்க்கும் எழுதா இயற்குணங்க 100
ளெட்டானை ஆற்றா எழுத்தினான் - மட்டாரும்
பாடலார் ஆடலார் பண்பலார் நண்பலார்
ஆடலா ராடல் அகன்பதியாம் - கூடலார்
காணக் கிடையாதான் காண்பார்க்குக் காட்சியான்
பாணர்க் கிலகு பலகையிட்டான் - சேணிற்
சிறந்த உருவான் திருமாலுக் கெட்டான்
நிறைந்த திருவுருவில் நிற்போன் - கறங்குடனே
சூறைசுழல் வண்டு சுழல்கொள்ளி வட்டமெனு
மாறு கருணையினால் மாற்றினான் - நீறணிந்த
மெய்யன் நிமலன் அமலன்அருள் வீடளிக்கும் 105
ஐயன் அறிவுக்கறி வாயினான் - பொய்யர்பாற்
பொய்மையாய் நின்றான் புரிந்தவர்தம் நெஞ்சத்து
மெய்மையாய் நின்று விளங்கினான் - கைமழுவன்
அத்தன்பால் நீசென் றடையும் இடத்தையெலாஞ்
சித்தஞ்சேர் நெஞ்சமே செப்பக்கேள் - நித்தலுமே
பூசிமுடித் துண்டுடுத்துப் பூங்குழலார் தங்கலவி
ஆசைதனிற் பட்டின்ப ஆர்கலிக்குள் - நேசமுற
நின்று திளைக்கும் இதுமுத்தி யல்லதுவே
றொன்று திளைக்கும் அதுமுத்தி - யன்றென்(று)
இலகா இருளலகை போல்இகலே பேசும் 110
உலகா யதன்பால் உறாதே - பலகாலும்
தாம்பிரமங் கண்டவர்போல் தம்மைக்கண் டாங்கதுவே
நான்பிரமம் என்பவர்பால் நண்ணாதே - ஊன்தனக்குக்
கொன்றிடுவ தெல்லாங் கொலையல்ல என்றுகுறித்(து)
என்றும்அற மேதெய்வம் என்றென்று - வென்றிப்
பொறையே யெனும்புத்தன் பொல்லாத புன்சொல்
மிறையே விரும்பி விழாதே - நிறைமேவி
வாழ்பவர்போல் மன்னுடம்பில் மன்னும்உரோ மம்பறித்துத்
தாழ்வுநினை யாதுதுகில் தான்அகற்றி - ஆழ்விக்கும்
அஞ்சும் அகற்றும் அதுமுத்தி என்றுரைக்கும் 115
வஞ்சமணன் பாழி மருவாதே - செஞ்சொல்புனை
ஆதிமறை ஓதி அதன்பயன்ஒன் றும்அறியா
வேதியர்சொல் மெய்யென்று மேவாதே - ஆதியின்மேல்
உற்றதிரு நீறுஞ் சிவாலயமும் உள்ளத்துச்
செற்ற புலையர்பாற் செல்லாதே - நற்றவஞ்சேர்
வேடமுடன் பூசைஅருள் மெய்ஞ்ஞான மில்லாத
மூடருடன் கூடி முயங்காதே - நீட
அழித்துப் பிறப்ப தறியா தரனைப்
பழித்துத் திரிபவரைப் பாராதே - விழித்தருளைத்
தந்தெம்மை ஆண்டருளுஞ் சம்பந்த மாமுனிவன் 120
அந்தங் கடந்தப்பா லாய்நின்றோன் - எந்தைபிரான்
வீற்றிருக்கும் ஓலக்கம் எய்திஅடி வீழ்ந்திறைஞ்சிப்
போற்றி சயசய போற்றியென - ஆர்த்தகரி
அன்றுரித்தாய் நின்பவனி ஆதரித்தா ரெல்லாரும்
வென்றிமதன் அம்புபட வீழ்வரோ - நின்றிடத்து
நில்லாத செல்வம் நிலையென் றுனைநீங்கிப்
பொல்லா நரகிற் புகுவரோ - பல்லோரும்
கத்துஞ் சமயக் கணக்கிற் படுவரோ
சித்தம் பலகால் திகைப்பரோ - முத்தம்
பொருத நகைமடவார் புன்கலவி யின்பம் 125
மருவி மயங்கி வருவரோ - இருபொழுதும்
நாள்இருபத் தேழும் நவக்கிரக மும்நலியுங்
கோள்இதுவென் றெண்ணிக் குறிப்பரோ - வேளை
எரித்த விழியாய்நின் இன்பக் கடற்கே
தரித்து மதிமறந்த தையல் - வருத்தமெலாந்
தீராய் எனஉரைத்துச் செங்கமலப் பூந்திருத்தாள்
தாராய் எனப்பலகால் தாழ்ந்திறைஞ்சி - ஏர்ஆரும்
பூங்கொன்றை வாங்கிப் புகழ்ந்துபுரி நெஞ்சமே
ஈங்கொன்ற வாராய் இனி.

पूमेवुम् उन्दिप् पुयल्वण्णऩ् पॊऱ्पदुमत्
तार्मेवुम् मार्बऩ् सदुमुहत्तोऩ् - ताम्मेविप्
पण्ड्रियुम् अऩ्ऩमुमाय्प् पारिडन्दुम् वाऩ्बऱन्दुम्
ऎण्ड्रुम् अऱिया इयल्बिऩाऩ् - अण्ड्रियुम्
इन्दिरऩुम् वाऩोरुम् एऩोरुम् ऎप्पुवियुम्
मन्दर वॆऱ्पुम् मऱिहडलुम् - मन्दिरमुम्
वेदमुम् वेद *मुडिविऩ्विळै विन्दुवुडऩ्
नादमुङ् काणा नलत्तिऩाऩ् - ओद
अरियाऩ् ऎळियाऩ् अळविऱन्दु निण्ड्र ५
पॆरियाऩ् सिऱियाऩ्बॆण् पाहऩ् - तॆरिया
अरुवाऩ् उरुवाऩ् अरुवुरुव मल्लाऩ्
मरियाऩ् मरिप्पार् मऩत्ताऩ् - परिवाऩ
मॆय्यर्क्कु मॆय्यऩ् विऩैक्कुविऩै यायिऩाऩ्
पॊय्यर्क्कुप् पॊय्याय पॊय्यिऩाऩ् - ऐयऩ्
पडनाहम् पूण्ड परमऩ् पसुवि
ऩिडमाय् निऱैन्द इऱैवऩ् - सुडरॊळियाऩ्
ऎण्ड्रुमुळऩ् अण्ड्रळवुम् याऩुम् उळऩाहि
निण्ड्रनिलै यिट्ररित्तु निल्लामऱ् - सॆण्ड्रुसॆण्ड्रु
तोट्रियिडुम् अण्डसञ् सुवेदसङ्गळ् पारिऩ्मेऱ् १०
साट्रुम्उऱ् पीसञ् सरायुसङ्गट् - केट्रबिऱप्
पॆल्लाम् पिऱन्दुम् इऱन्दुम् इरुविऩैयिऩ्
पॊल्लाङ्गु तुय्क्कुम् पॊऱियिलियेऩ् - कल्ला
उणर्विऩ् मिसैयो टुलहा यदऩैप्
पुणर्वदॊरु पुल्लऱिवु पूण्डु - कणैयिऱ्
कॊडिदॆऩवे सॆण्ड्रु * कुडिप्पऴिये सॆय्दु
कडिय कॊलैहळवु कामम् - पडियिऩ्मिसैत्
तेडि युऴण्ड्रु तॆरिवैत् तॆरियामल्
वाडि इडैयुम् मऩन्दऩक्कुम् - नाडिअदु
पोऩ वऴिबोहुम् पुन्दिक्कुम् पुन्दियुडऩ् १५
आऩ तिऱलार् अहन्दैक्कुम् - मेऩि
अयर अयर अऴिय अऴियुम्
उयिरिऩ् तुयरम् उरैयेऩ् - वयिरमे
कॊण्डदॊरु कामऩुक्कुङ् कोबऩुक्कुम् मोहऩुक्कुम्
मण्डु मदमाच् चरियऩुक्कुन् - तिण्डिऱल्सेर्
इन्दिरियम् पत्तुक्कुम् ईरैन्दु मात्तिरैक्कुम्
अन्दमिलाप् पूदङ्गळ् ऐन्दुक्कुञ् सिन्दैहवर्
मूण्ड्रुहुट्रम् मूण्ड्रुहुणम् मूण्ड्रुमलम् मूण्ड्रवत्तै
एण्ड्रुनिण्ड्रु सॆय्युम् इरुविऩैक्कुन् - तोण्ड्राद
वायुऒरु पत्तुक्कुम् माऱाद वल्विऩैये २०
याय किळैक्कुम् अरुनिदिक्कुम् - नेयमाम्
इच्चै किरियै यिवैदरित्तङ् कॆण्णिला
अच्चङ् कॊडुमै यवैबूण्डु - कच्चरवऩ्
सीरिल्निलै निल्लादु तिण्डाडुम् पल्गरुवि
वारिल्अहप् पट्टु मयङ्गिऩेऩ् - तेरुङ्गाल्
उऩ्ऩै ऒऴिय उऱविल्लै ऎऩ्ऩुमदु
तऩ्ऩै अऱिवै तऩियऱिवै - मुऩ्ऩन्
तलैप्पट्टार् तीरत् तुऱन्दार् मयङ्गि
वलैप्पट्टार् मट्रैयव रॆण्ड्रु - निलैत्तमिऴिऩ्
तॆय्वप् पुलमैत् तिरुवळ् ळुवर्उरैत्त २५
मॆय्वैत्त सॊल्लै विरुम्बामल् - ऐवर्क्कुम्
आवदुवे सॆय्दङ् कवर्वऴियैत् तप्पामऱ्
पावमॆऩुम् पौवप् परप्पऴुन्दिप् - पूवैयर्दम्
कण्वलैयिऱ् पट्टुक् कलविक् कलैबयिण्ड्रङ्(कु)
उण्मै निलैयुणर्स्चि ओरामल् - तिण्मैयिऩाल्
नाविऱ् कॊडुमै पलबिदट्रि नाडोऱुञ्
साविऱ् पिऱप्पिल् तलैप्पट्टिङ् - काविनिलै
निऱ्कुम्वहै पाराय् निलैयाऩ नॆञ्जमे
पॊऱ्पिऩुडऩ् याऩे पुहलक्केळ् - वॆऱ्पिऩ्मिसै
वन्दिरुक्क वल्लाऩ् मदियादार् वल्अरणम् ३०
सॆन्दऴलिल् मूऴ्गच् चिरित्तबिराऩ् - अन्दमिला
वेद मुडिविल् विळैविल् विळैविलॊळि
आदि यमलऩ् निमलऩरुट् - पोद
अऱिवि लऱिवै अऱियु मवर्गळ्
कुऱियुळ् पुहुदुङ् कुणवऩ् - नॆऱिहॊळ्
वॆळियिल् वॆळियिल् वॆळियऩ् वॆळियिल्
ऒळियिल् ऒळियिल् ऒळियऩ् - ऒळियिल्
अळियिल् अळियिल् अळियऩ् अळियिल्
अळविल् अळविल् अळवऩ् - अळविऱन्दु
निण्ड्राऩ् अऩैत्तुम् निऱैन्दाऩ् निऩैप्पवर्बाऱ् ३५
सॆण्ड्राऩ् तॆरियत् तॆरियादाऩ् - कुण्ड्रा
विळक्काय् निऱैन्द विरिसुडराऩ् मण्मेल्
तुळक्कामल् निण्ड्रबॆरुञ् सोदि - उळक्कण्णुक्
कल्लादु तोण्ड्रा अमलऩ् अहिलमॆलाम्
निल्लामल् निण्ड्र निलैयिऩाऩ् - सॊल्आरुम्
ईसऩ् पॆरुमै इरुविऩैयेऩ् इण्ड्रुऩक्कुप्
पेसुन् दहैमैयॆलाम् पेणिक्केळ् - पासम्
पलवुङ् कडन्दु परिन्दरुळ्सेर् पण्बाऱ्
कुलवि विळङ्गुहुणक् कुण्ड्रोऩ् - इलहवे
सॆय्य तरुमच् चॆऴुङ्गिरियिऩ् मीदिऴिन्दु ४०
वैयम् परव महिऴ्न्दॆऴुन्दङ् - कैयङ्
कळवुबयङ् कामङ् कॊलैहोबङ् कादि
अळविल्विऩै यॆल्लाम् अऴित्तिङ् - कुळमहिऴत्
तॊम्मॆऩवे ऎङ्गुम् मुऴङ्गिच् चुरुदिबयिल्
सॆम्मैदरुम् आहमङ्गळ् सेर्न्दोडि - मुम्मलत्तिऩ्
काडडङ्ग वेर्बऱित्तुक् कल्विक् करैहडन्दङ्(कु)
ओडुबल् पूदत् तुणर्वऴित्तु - नीडुबुहऴ्
मॆय्वाय्गण् मूक्कुच् चॆवियॆऩ्ऩप् पेर्बॆट्र
ऐवाय वेट्कै यवाअहट्रि - नैयुम्इयल्
वाक्कुप्पा तम्बाणि पायुरुबत् तम्बलवुम् ४५
नीक्किच् चॆऱिन्दु निऱैन्दोडिप् - पोक्करिय
पन्दमॆऩुञ् सोलै पऱित्तुप् परन्दलैक्कुम्
अन्दमऩम् पुत्तियुडऩ् आङ्गारम् - सिन्दिविऴ
मोदि अरुणीर्मै ओङ्गिविऱल् मुक्कुणमुङ्
कादि उरोममॆलाङ् कैहलन्दु - सीदप्
पुळहम् अरुम्बप् पुलऩ्मयक्कम् पोक्कि
विळैविल् पुलऩ्मुट्ट मेविक् - कळबदऩ
मादर् मयक्कम् अऱुत्तुवळर् मण्डलत्तुच्
सोदियॊरु मूण्ड्रिऩैयुञ् सोदित्तु - नीदियिऩाल्
आदारम् आऱिऩुञ्जॆऩ् ऱाऱिअडल् वायुक्कळ् ५०
मीदाऩ पत्तुम् मिहप्परन्दु - कादिप्
पिरुदिवियप् पुत्तेयु वायुआ काय
उऱुदि निलमैन्दुम् ओडि - मऱुविला
नाऩ्मुहऩ्माल् ईसऩ् महेसऩ् नलञ्जिऱन्द
ताऩ्मुहम् ऐन्दाञ् सदासिवमुम् - आऩदॊरु
विन्दुना तङ्गडन्दु सुत्त वॆऱुवॆळियिल्
अन्दमिलाप् पाऴडङ्गत् तेक्कियबिऩ् - मुन्दिवरुम्
अव्वऱिवुक् कप्पालुञ् सॆण्ड्रहण्डम् उळ्ळडक्किच्
सॆव्वऱिवे याहित् तिहैप्पॊऴिन्दिट् - टॆव्वऱिवुन्
ताऩाय वीडळित्तुत् तऩ्ऩिऱ् पिऱिविला ५५
ऊऩाहि ऎव्वुयिर्क्कुम् उळ्बुहुन्दु - मेऩियिला
अञ्जवत्तै युङ्गडन् दायबॆरुम् पेरॊळिक्के
तञ्जमॆऩच् चॆण्ड्रु तलैप्पट्टु - वञ्जमऱत्
ताऩ्अन्दम् इल्लाद तण्णळियाल् ओङ्गिवरुम्
आऩन्दम् ऎऩ्बदोर् आऱुडैयाऩ् - आऩन्दम्
पण्णुम् पयऩ्चुरुदि आहमङ्गळ् पार्त्तुणर्न्दु
नण्ण अरियदॊरु नाडुडैयाऩ् - ऎण्णॆण्
कलैयाल् उणर्न्दु करुत्तऴिन्दु काम
निलैयाऩ तॆल्लामुम् नीत्तङ् - कलैवऱवे
तेट्टट्र सिन्दै सिवञाऩ मोऩत्ताल् ६०
ओट्टट्रु वीट्रिरुक्कुम् ऊरुडैयाऩ् - नाट्टत्ताल्
तॆण्णी ररुविविऴच् चिन्दैमयक् कन्दॆळिन्(तु)
उण्णीर्मै यॆय्द उरोममॆलाम् - नण्णुम्
पुळहम् पुऩैमॆय् यर्बॊय् यिऱ्कूडामल्
उळहम्बङ् कॊण्डुळ् उरुहि - अळविला
माला यिरुक्कु मवर्मऩत्तै वाङ्गअरुळ्
मेलाय् विळङ्गलङ्गल् मॆय्यिऩाऩ् - तोलाद
वाऩम् पुवऩम् मलैहडल्एऴ् पादाळम्
ऊऩ्ऐन्दु पूदत् तुयिरुणर्स्चि - ञाऩमाय्
ऎल्लामाय् अल्लवाय् ऎण्णुवार् ऎण्णत्तु ६५
निल्लामल् निऱ्कुम्नीळ् वासियाऩ् - सॊल्आरुम्
पादाळम् ऊडुरुविप् पारेऴुम् विण्णेऴुम्
आदार माहि अहण्डम्निऱैन् - तोद
अरिदाय् ऎळिदाय् अरुमऱैया ऱङ्गत्
तुरुवाय् उयिराय् उणर्वाय्प् - पॆरिदाय
वॆय्यदुयर्प् पासमऱ वीसिये वॆम्बिऱवित्
तुय्य कडलैत् तुहळॆऴुप्पि - ऐयमुऱुङ्
कामक् * कुरोदलोब मोहमदङ् काय्न्दडर्त्तुच्
सामत् तॊऴिलिऩ् तलैमिदित्तु - नामत्ताऱ्
कत्तुञ् समयक् कणक्किऩ्विऱऱ् कट्टऱुत्तुत् ७०
तत्तम् पयङ्गॊलैहळ् आङ्गऴित्ते - तत्तिवरुम्
पासक् कुऴात्तैप् पडअडित्तुप् पावैयर्दम्
आसैक् करुत्तै अऱवीसि - नेसत्ताल्
आऩवे कङ्गॊण् टरुळ्मुम् मदत्तिऩाल्
ऊऩैयार् तत्तुवङ्ग ळुळ्बुहुन्दु - तेऩैप्
परुहिक् कळित्तुयर्न्दु पऩ्मऱैनाऱ् कोट्टाल्
मरुवित् तिहऴ्ञाऩ आऩैयाऩ् - इरुमुच्
समैयङ् कडन्दु तऩक्कॊप् पिलादु
सुमैदुऩ्ब नीक्कुन् दुवसऩ् - कमैयॊण्ड्रित्
तम्मै मऱन्दु तऴलॊळियुळ् ळेयिरुत्ति ७५
इम्मै मऱुमै इरण्डहट्रिच् - सॆम्मैये
वायुवै ओडा वहैनिऱुत्ति वाऩत्तु
वायुवैयुम् अङ्गे युऱअमैत्तुत् - तेयुवाल्
ऎण्ड्रुम् ऒरु तहैमै यायिरुक्कुम् इऩ्बरुळे
निण्ड्रु मुऴङ्गुम् नॆडुमुरसोऩ् - अण्ड्रियुम्
मालुम् अयऩुम् वहुत्तळित्त वैयमॆलाञ्
सालुम्अदऱ् कप्पालुम् ऎप्पालुम् - मेलै
युलहुम् उलहाल् उणरवॊण्णा ऊरुम्
इलहि नडक्कुम्ऎऴिल् आणैयाऩ् - अलहिऱन्द
काट्चियाऩ् काट्चिक्कुङ् काणाऩ् कलैञाऩ ८०
आट्चियाऩ् आट्चिक्कुम् आयिऩाऩ् - सूट्चियाऩ्
पारुन् दिसैयुम् पडरॊळिया लेनिऱैन्दाऩ्
तूरुन् दलैयुमिलात् तोण्ड्रलाऩ् - वेराहि
वित्ताहि वित्तिऩ् विळैवाहि मेवुदऩुच्
सत्तादि पूदङ्गळ् ताऩाहिच् - सुत्त
वॆऱुवॆळियाय् पाऴाय् वॆऱुम्बाऴुक् कप्पाल्
उऱुबॊरुळाय् निण्ड्र ऒरुवऩ् - पॊऱियिलियेऩ्
वॆम्बुम् पिऱवियलै वीऴामल् वीडळित्त
सम्बन्द मामुऩियॆऩ् तम्बिराऩ् - अम्बुवियोर्
पोट्रुन् दिरुवडियॆऩ् पुऩ्तलैमे लेबॊऱित्तोऩ् ८५
एट्रिऩ् पुऱत्तमैन्द ऎङ्गोमाऩ् - साट्रुवार्
साट्रुम् पॊरुळाऩ् तऩिमुदल्वऩ् ताऩल्लाऩ्
वेट्रिऩ्बम् इल्ला विळङ्गॊळियाऩ् - पोट्रुङ्
कुरुवेड माहिक् कुणङ्गुऱियॊऩ् ऱिल्लाप्
पॆरुवेड माय्निऱैन्द पॆम्माऩ् - करुवेडङ्
कट्टुमुरुक् कट्टऱुत्ताऩ् कट्रवर्वाऴ् तिल्लैयाऩ्
ऎट्टुमवर्क् कॆट्टा इयल्बिऩाऩ् - मट्टविऴ्दार्
वाऩोऩ् पवऩि वरक्कण्डु वल्विऩैयेऩ्
एऩोरुम् एत्तुदल्गण् टेत्तिऩेऩ् - ताऩ्ऎऩ्ऩैप्
पार्त्ताऩ् पऴैयविऩैप् पञ्जमलक् कॊत्तैयॆल्लाम् ९०
नीत्ताऩ् निऩैवुवे ऱाक्किऩाऩ् - एत्तरिय
तॊण्णूऱ् ऱऱुवर्बयिल् तॊक्किऱ् ऱुवक्कऱुत्ताऩ्
कण्णूऱु तेऩमुदङ् काट्टिऩाऩ् - वॆण्णीऱुम्
वेडमुम् पूसैयुमे मॆय्यॆण्ड्राऩ् पॊय्यॆण्ड्राऩ्
माडैयुम् वाऴ्क्कै मऩैयुमे - नाडरिय
अञ्जॆऴुत्तिऩ् उळ्ळी टऱिवित्ताऩ् अञ्जॆऴुत्तै
नॆञ्जऴुत्ति नेय मयलाक्कि - अञ्जॆऴुत्तै
उच्चरिक्कुङ् केण्मै युणर्त्ति अदऩ् उच्चरिप्पु
वैच्चिरुक्कुम् अन्द वऴियाक्कि - अच्चमऱच्
सॆण्ड्रु विळक्कै ऎऴत्तूण्डिच् चॆञ्जुडरिऩ् ९५
ऒण्ड्रि ऒरुविळक्किऩ् उळ्ळॊळियाय् - निण्ड्र
पॆरुविळक्किऩ् पेरॊळियाय् उळ्ळे पिरसम्
मरुवुम् मलर्बोल् मदित्तङ् - करुविऩुरुक्
कॊळ्ळा अरुळैक् कॊळुत्तिक् कुणङ्गुऱियॊऩ्
ऱिल्ला इडत्ते इळैप्पाट्रि - विळ्ळाद
उळ्ळम् मुदलाह उळ्ळदॆलाम् वाङ्गअरुळ्
वॆळ्ळ मयलळित्तु मेविऩाऩ् - कळ्ळम्
मऱप्पित्ताऩ् मॆय्ञ्ञाऩ माक्किमऩ मॆल्लाम्
इऱप्पित्ताऩ् ऎऩ्बिऱवि ईर्त्ताऩ् - विऱऱ्चॊल्लुक्
कॆट्टाऩै यार्क्कुम् ऎऴुदा इयऱ्कुणङ्ग १००
ळॆट्टाऩै आट्रा ऎऴुत्तिऩाऩ् - मट्टारुम्
पाडलार् आडलार् पण्बलार् नण्बलार्
आडला राडल् अहऩ्बदियाम् - कूडलार्
काणक् किडैयादाऩ् काण्बार्क्कुक् काट्चियाऩ्
पाणर्क् किलहु पलहैयिट्टाऩ् - सेणिऱ्
सिऱन्द उरुवाऩ् तिरुमालुक् कॆट्टाऩ्
निऱैन्द तिरुवुरुविल् निऱ्पोऩ् - कऱङ्गुडऩे
सूऱैसुऴल् वण्डु सुऴल्गॊळ्ळि वट्टमॆऩु
माऱु करुणैयिऩाल् माट्रिऩाऩ् - नीऱणिन्द
मॆय्यऩ् निमलऩ् अमलऩ्अरुळ् वीडळिक्कुम् १०५
ऐयऩ् अऱिवुक्कऱि वायिऩाऩ् - पॊय्यर्बाऱ्
पॊय्मैयाय् निण्ड्राऩ् पुरिन्दवर्दम् नॆञ्जत्तु
मॆय्मैयाय् निण्ड्रु विळङ्गिऩाऩ् - कैमऴुवऩ्
अत्तऩ्बाल् नीसॆऩ् ऱडैयुम् इडत्तैयॆलाञ्
सित्तञ्जेर् नॆञ्जमे सॆप्पक्केळ् - नित्तलुमे
पूसिमुडित् तुण्डुडुत्तुप् पूङ्गुऴलार् तङ्गलवि
आसैदऩिऱ् पट्टिऩ्ब आर्गलिक्कुळ् - नेसमुऱ
निण्ड्रु तिळैक्कुम् इदुमुत्ति यल्लदुवे
ऱॊण्ड्रु तिळैक्कुम् अदुमुत्ति - यण्ड्रॆऩ्(ऱु)
इलहा इरुळलहै पोल्इहले पेसुम् ११०
उलहा यदऩ्बाल् उऱादे - पलहालुम्
ताम्बिरमङ् कण्डवर्बोल् तम्मैक्कण् टाङ्गदुवे
नाऩ्बिरमम् ऎऩ्बवर्बाल् नण्णादे - ऊऩ्तऩक्कुक्
कॊण्ड्रिडुव तॆल्लाङ् कॊलैयल्ल ऎण्ड्रुहुऱित्(तु)
ऎण्ड्रुम्अऱ मेदॆय्वम् ऎण्ड्रॆण्ड्रु - वॆण्ड्रिप्
पॊऱैये यॆऩुम्बुत्तऩ् पॊल्लाद पुऩ्चॊल्
मिऱैये विरुम्बि विऴादे - निऱैमेवि
वाऴ्बवर्बोल् मऩ्ऩुडम्बिल् मऩ्ऩुम्उरो मम्बऱित्तुत्
ताऴ्वुनिऩै यादुदुहिल् ताऩ्अहट्रि - आऴ्विक्कुम्
अञ्जुम् अहट्रुम् अदुमुत्ति ऎण्ड्रुरैक्कुम् ११५
वञ्जमणऩ् पाऴि मरुवादे - सॆञ्जॊल्बुऩै
आदिमऱै ओदि अदऩ्बयऩ्ऒऩ् ऱुम्अऱिया
वेदियर्सॊल् मॆय्यॆण्ड्रु मेवादे - आदियिऩ्मेल्
उट्रदिरु नीऱुञ् सिवालयमुम् उळ्ळत्तुच्
सॆट्र पुलैयर्बाऱ् सॆल्लादे - नट्रवञ्जेर्
वेडमुडऩ् पूसैअरुळ् मॆय्ञ्ञाऩ मिल्लाद
मूडरुडऩ् कूडि मुयङ्गादे - नीड
अऴित्तुप् पिऱप्प तऱिया तरऩैप्
पऴित्तुत् तिरिबवरैप् पारादे - विऴित्तरुळैत्
तन्दॆम्मै आण्डरुळुञ् सम्बन्द मामुऩिवऩ् १२०
अन्दङ् कडन्दप्पा लाय्निण्ड्रोऩ् - ऎन्दैबिराऩ्
वीट्रिरुक्कुम् ओलक्कम् ऎय्दिअडि वीऴ्न्दिऱैञ्जिप्
पोट्रि सयसय पोट्रियॆऩ - आर्त्तहरि
अण्ड्रुरित्ताय् निऩ्बवऩि आदरित्ता रॆल्लारुम्
वॆण्ड्रिमदऩ् अम्बुबड वीऴ्वरो - निण्ड्रिडत्तु
निल्लाद सॆल्वम् निलैयॆऩ् ऱुऩैनीङ्गिप्
पॊल्ला नरहिऱ् पुहुवरो - पल्लोरुम्
कत्तुञ् समयक् कणक्किऱ् पडुवरो
सित्तम् पलहाल् तिहैप्परो - मुत्तम्
पॊरुद नहैमडवार् पुऩ्कलवि यिऩ्बम् १२५
मरुवि मयङ्गि वरुवरो - इरुबॊऴुदुम्
नाळ्इरुबत् तेऴुम् नवक्किरह मुम्नलियुङ्
कोळ्इदुवॆऩ् ऱॆण्णिक् कुऱिप्परो - वेळै
ऎरित्त विऴियाय्निऩ् इऩ्बक् कडऱ्के
तरित्तु मदिमऱन्द तैयल् - वरुत्तमॆलान्
तीराय् ऎऩउरैत्तुच् चॆङ्गमलप् पून्दिरुत्ताळ्
ताराय् ऎऩप्पलहाल् ताऴ्न्दिऱैञ्जि - एर्आरुम्
पूङ्गॊण्ड्रै वाङ्गिप् पुहऴ्न्दुबुरि नॆञ्जमे
ईङ्गॊण्ड्र वाराय् इऩि.
 
इस मन्दिर का गीत                                                                                                                     बंद करो / खोलो

Get the Flash Player to see this player.

 
इस मन्दिर का चित्र                                                                                                                                   बंद करो / खोलो
   

अनुवाद:

Under construction. Contributions welcome.
சிற்பி